புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
3 Posts - 4%
prajai
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
1 Post - 1%
Rutu
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
1 Post - 1%
Pradepa
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
18 Posts - 2%
prajai
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
5 Posts - 0%
Rutu
குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_m10குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி


   
   

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 2:55 am

First topic message reminder :

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 1-809810
சிறப்புரை (மு. வரதராசன்)


அரவிந்தன், பூரணி என்னும் இருவரையும் நூலைப் படித்து முடித்துப் பல நாட்கள் ஆன பிறகும் மறக்க முடியவில்லை. கற்பனையில் படைக்கும் மாந்தர்கள் இவ்வாறு கற்பவரின் நெஞ்சில் நெடுங்காலம் நிற்குமாறு செய்ய வல்லவர்களே கற்பனைத் திறன்மிக்க கலைஞர்கள்.

அரவிந்தனும் பூரணியும் எய்தும் இன்ப துன்பங்கள் பல. அவை வீணில் உண்டு உறங்கி வாழும் மக்கள் எய்தும் எளிய இன்ப துன்பங்கள் அல்ல. ஆகவே அவை நம் நெஞ்சை நெக்குருகச் செய்து ஆழ்ந்து நிற்கின்றன.

நாவல் என்பது பொழுதுபோக்குக்கான வெறும் நூலாகவும் அமையலாம். வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்திக் கற்பவரின் உள்ளங்களை உயர்த்தவல்ல இலக்கியமாகவும் அமையலாம். அவ்வாறு விருப்பம் உடையதாக அமையும் போது, அது பழங்காலத்துக் காவியத்துக்கு நிகர் ஆகின்றது. காவியம் என்பது உரைநடை வளராத காலத்தில் செய்யும் வடிவில் அமைந்த கலைச் செல்வம்; நாவல் என்பது உரைநடை வளர்ச்சியால் இவ்வடிவில் அமையும் கலைச் செல்வம். இதுதான் வேறுபாடு.

புலவர் திரு. நா. பார்த்தசாரதி பழந்தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றுணர்ந்தவர். புதுத் தமிழ் இலக்கிய வளர்ச்சியையும் நன்கு அறிந்தவர். ஆதலின் இந்த நாவலை மரபு பிறழாத கலைத் திறனுடன் இயற்றியுள்ளார். குறிஞ்சி மலர் என்ற பெயர் அமைப்பிலும் இந்தத் திறன் புலனாகிறது.

இடையிடையே உள்ள இயற்கை வருணனைகளும், நகரப் பகுதிகளின் விளக்கங்களும் நன்கு அமைந்துள்ளன. இந்த நாவலாசிரியரின் கற்பனைக் கண் பண்பட்டு வளர்ந்துள்ளது. உள்ளத்து உணர்ச்சிகளையும் போராட்டங்களையும் விடாமல் விளக்கியுள்ளதோடு உயர்ந்த மாந்தரின் விழுமிய நோக்கங்களுக்கு ஏற்ப பண்பாடு குன்றாமல் காத்துள்ளார் என்பதும் பாராட்டத்தக்கது. தேர்தல் காலத்தில் நிகழும் காட்டுமிராண்டித் தன்மையான கொடுஞ்செயல்களை இவர் தக்க இடத்தில் எடுத்துக் காட்டியிருப்பது காலத்துக்கு ஏற்ற நல்ல தொண்டு ஆகும்.

'குறிஞ்சி மலர்' வெல்க!

மு. வரதராசன்





குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 3:40 am

நடக்க வேண்டியவைகள் நடந்தன. தேர்தல் வெற்றியைக் கொண்டாட வந்த ஊர்வலம், சோக ஊர்வலமாக மயானம் வரை தொடர்ந்தது. அந்த நள்ளிரவின் அமைதியில் முழுநிலா வானத்தின் கீழே வையையின் வடகரையிலே அரவிந்தன் என்னும் பேரெழில் வாழ்க்கை மண்ணில் கலந்து பொய்யாய்ப் போய்விட்டது. நிலவைப் பிடித்துச் சில க்றைகள் துடைத்துக் குறுமுறுவல் பதித்த முகத்துக்குத் திலகம் இல்லாமல் துடைத்துப் போய்விட்டான் அரவிந்தன். தரளம் மிடைத்து ஒளிதவழக் குடைந்து இருபவழமும் பதித்த இதழ்களில் சிரிப்பில்லாமல் செய்துவிட்டுப் போய்விட்டான். உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம் உடன் வரும் துணையைப் பூரணி இழந்துவிட்டாள்.

அன்றிரவு எல்லோரும் வீடும் திரும்பும்போது இரண்டு மணிக்கு மேலிருக்கும். அரவிந்தன் இருந்த அறையில் அவனுடைய குறிப்பு நோட்டுப் புத்தகங்களும், அவற்றின் மேல் அவள் இலங்கையிலிருந்து வாங்கி வந்து அவனுக்கு அன்பளிப்பாகத் தந்த கைக்கடிகாரமும் இருந்தன. அந்த கடிகாரத்தை அவனுடைய கையில் கட்டும் போது 'காலத்தை உங்கள் கையில் கட்டி ஓடவிடுகிறேன்!' என்று அவள் கூறியதற்கு 'நாம் மனிதர்கள், காலத்தின் கையில் கட்டுண்டு ஓடுபவர்கள்' என்று அரவிந்தன் புன்னகையோடு கூறிய பதிலை நினைத்தாள் பூரணி. குறிப்பு நோட்டுப் புத்தகத்தில் தன்னைக் குறிஞ்சிப் பூவாக உருவகம் செய்து அவன் எழுதியிருந்த வாக்கியங்களைப் படித்தபோது புனிதமானதொரு உணர்வை அடைந்தாள் அவள். அன்றிலிருந்து அவள் மனமே நினைவுகளின் மயானமாகிவிட்டதோ? அங்கே புதைந்த நினனவுகளின் கழிவிரக்கத்தில் அமிழ்ந்து வாடினாள் அவள். சில வாரங்கள் கழித்துச் செய்தித்தாளில் பூரணி, தான் தேர்தலில் வெற்றி பெற்றடைந்த பதவி தனக்குத் தேவையில்லை என்று விட்டுவிட்டச் செய்தி வெளியாகியிருந்தது. அதை விடுவதற்கு முன் பலர் வேண்டிக் கொண்டிருந்தும் அவள் அரசியல் தனக்குத் தேவையில்லை என்றும் சமூகத்துக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தன் வாழ்வை செலவழிக்கப் போவதாகவும் கூறி மறுத்துவிட்டாள். அவள் மறுப்பு ஏனையோரை வியப்பில் ஆழ்த்தியது.

ஈடுசெய்ய முடியாத அந்தப்புண் அவளைச் சிறிது காலம் துன்புறுத்தியது. துக்கத்தில் ஞானம் பிறந்தது. அகக்கண்கள் திறந்தன. வாழ்க்கையின் மெய்யான தத்துவம் புலப்பட்டது. பெண்மையின் பயனை வழிமாற்றிக் கொண்டு மணிமேகலை போல் அறச்செல்வியாக மேலெழுந்தாள் பூரணி. 'வாழ்க்கை அவரவருக்கும் நேர்ந்தபடி வருவது. தாயின் கையிலிருக்கும் தின்பண்டத்துக்கு அவசரப்பட்டு அடித்துக் கொண்டு குழந்தைகள் மாதிரி விதியின் கையிலுள்ள வாழ்வுக்கு நைப்பாசைப்பட்டுப் பயனில்லை' என்று அவள் உணர்ந்து ஆற்றிக் கொள்ள முயன்றாள். வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் ஞான ஒளிபரப்பும் சொற்பொழிவுகளைச் செய்தாள். பொதுப்பணிகளில் ஈடுபட்டு அலைந்தாள். உலகத்து நாடுகளில் எல்லாம் அறிவு முழக்கமிட்டு வாகை சூடினாள். கைகளில் தீபத்தை ஏந்திக் கொண்டு இருளடைந்த மனிதக் கூட்டத்தின் நடுவே ஒளி சிதறி நடந்து செல்வதாக அவள் அடிக்கடி கண்ட கனவை இப்போது நனவாக்கிக் கொண்டிருந்தாள். பூரணமான ஞானத்தோடும் பூரணமான பயன்களோடும் பூரணி பெரு வாழ்வு வாழ்ந்தாள். தான் வளர்த்து வாழவிட்ட தம்பிகளும் தங்கைகளும் இன்ப வாழ்வு வாழ்வதைக் கண்டுகொண்டே தான் வாழாமல் இழந்து விட்டதை மறக்க முயன்றாள் அவள். மறைக்க முயன்றாள் எனினும் பொருந்தும்.

ஆனால் ஊருக்கெல்லாம் ஞானத்தைப் போதித்தும் அறிவுரை கூறியும் வாழும் தனக்குள் ஏதோ ஓர் ஆறாப்புண் இருந்து வதைப்பதை மட்டும் அவளால் மறக்க இயலவில்லை. திருப்பரங்குன்றத்து மலை ஏறும் போதெல்லாம் அங்கு சாசனம் போல் பூரணி-அரவிந்தன் என்று கல்மேலிட்ட எழுத்துக்கள் தெரிந்து அவளைக் கண்கலங்க வைத்தன. அழகும் தூய்மையும் பண்பும் உள்ள தமிழ் இளைஞர்களை எங்கு கண்டாலும் அரவிந்தனின் நினைவு வந்தது அவளுக்கு. அன்று அந்தப் பெரியவர் கூறியதுபோல், அரவிந்தன் தலைமுறை தோறும் பிறக்க வேண்டுமென்று அவள் உள்ளத்தில் ஓர் ஏக்கம் புண்ணாக இருந்தது. தத்துவத்திற்கும் ஞானத்திற்கும் ஆறவில்லை அந்தப் பெரும்புண்.

காலம் ஓடுகிறது. வயது ஐம்பதுக்கு மேல் ஆகியும் தளராத உடலோடும் நரையாத குழலோடும் அழகான பல் வரிசையோடும் அவள் இருப்பதைப் பார்த்து அவளுடைய தம்பியின் சிறு பெண் குழந்தை, "எங்க அம்மா இந்த வயசிலே பல்லெல்லாம் விழுந்து தலை நரைச்சுக் கிழவி ஆகிவிட்டது. நீ மட்டும் இப்படி இருக்கிறாயே!" என்று சிரித்துக் கொண்டே மழலை மொழியில் வக்கணையாகக் கேட்கிறது!

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் உட்கார்ந்து விடுகிறாள் பூரணி. அவள் மனம் துக்கத்தை உணருகிறது. கண்கள் நீர் சிந்துகின்றன. சதா காலமும் எதற்காக அவள் மனம் மௌனமாகவே அழுது கொண்டிருந்ததோ அதற்காக வாய்விட்டே அழுகிறாள். குழந்தை அவளுடைய அழுகைக்குக் காரணம் புரியாமல் மருண்டு பார்க்கிறது, மயங்கித் திகைக்கிறது!

கால ஓட்டத்தில் எத்தனையோ பன்னிரண்டு ஆண்டுகள் கழிகின்றன. பூரணி ஏதோ பெண்கள் மாநாட்டுக்காகக் கோடைக்கானலுக்கு மீண்டும் வந்திருக்கிறாள். அந்த ஆண்டும் குறிஞ்சி பூக்கும் முறை; மலை நிறைய குறிஞ்சி பூத்திருக்கிறது. காலையில் மாநாடு முடிந்துவிட்டதனால் அன்று மாலை உடன் வந்திருக்கும் வேறு சில பெண்களோடு ஏரிக்கரைக்குச் செல்கிறாள் பூரணி. இளம்பெண்கள் எல்லோரும் படகில் சுற்றப் போய்விடுகிறார்கள். பூரணி அருகிலிருந்த வீதியில் தனியே உலவச் செல்கிறாள். அங்கே ஒரு புகைப்பட நிலையத்தின் வாயிலில் வந்ததும் எதையோ கண்டுவிட்டு இமையாமல் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். அவள் கண்களைக் கவர்ந்தது அந்தப் புகைப்பட நிலையத்தின் காட்சியறையில் இருந்த ஒரு படம். முன்பு பல ஆண்டுகளுக்கு முன் அரவிந்தனும் அவளும் எடுத்துக் கொண்ட புகைப்படம் அங்கே வைக்கப்பெற்றிருக்கிறது! நினைவுபடுத்தக்கூடாத பழைய துயரக் கனவை யாரோ நினைவு படுத்திவிட்டதுபோல் ஆறுதலணை உடைந்து வேதனை பாய்கிறது அவள் மனதில். அந்தப் படம், அந்த மாலைகள், அளவற்று பூத்திருக்கும் குறிஞ்சி மலர்கள் எல்லாம் அவள் மனத்தின் பழைய நினைவுகளைக் கிளறுகின்றன. அந்தப் பூக்களையும் அவை குலவிக் காட்சியளிக்கும் மலைத்தொடர்களின் அழகையும் இரசிக்கத் தூண்டும் எழிலுணர்ச்சியையும் தன் மனத்துக்குத் தந்துவிட்டு மறைந்தவனை எண்ணித் தவித்து நிற்கிறாள் அவள். 'படத்தில் வாழ்கிறோம்; வாழ்வில் இல்லை' என்ற தாபம் மனம் கொள்ளாமல் பெருகுகிறது. எங்காவது ஓடிப்போய்க் குமுறிக் குமுறி அழுது அந்த அழுகையின் முடிவில் இதயமே தானாக வெடித்துச் சிதறிச் செத்துப் போய்விட வேண்டும் போலிருக்கிறது அவளுக்கு. படிப்பும், புகழும், பெருமையும், வயதும் மறந்து சர்வசாதாரணமாக பேதைச் சிறு பெண் போல் அங்கே கண் கலங்கி நிற்கிறாள் அவள். துக்கத்துக்கு முன் படிப்பும் ஞானமும் என்ன செய்துவிட முடியும்?

தனியாகக் குறிஞ்சியாண்டவர் கோயிலுக்குப் போய் அங்கே தானும் அரவிந்தனும் முன்பு அமர்ந்து பேசிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு நெஞ்சில் தாங்க முடியாமல் சுமையேறிக் கிடக்கும் துக்கங்களை அழுது கரைக்க வேண்டும்போல ஒரு துடிப்பு அவளுக்கு உண்டாகிறது. உலகத்து மக்களின் துக்கத்துக்கெல்லாம் ஆறுதல் கூறி அறிவுரை வழங்கித் தன் பார்வையாலும், பேச்சாலும், பண்பட்ட தூய வாழ்வாலும், உதாரண நங்கையாயிருக்கும் அவள் அப்போது தன் இதயச்சூடு தணியாமல் அநாதைபோல் மலைத்து மயங்கி நிற்கிறாள்.

குறிஞ்சியாண்டவர் கோயில் அருகில் இருந்த மேட்டில் போய் அமர்ந்து தன்னைப் பிறரும், பிறரைத் தானும் கவனிக்காத தனிமையில் வாய்விட்டுக் கதறி அழுகிறாள், பூரணி. உலகத்தில் மனிதப் பூண்டே அடியோடு அழிந்து அமிழ்ந்து மூச்சுப் பேச்சற்று மூழ்கிப் போன தனிமையில் அந்த மலைத்தொடர்கள் மட்டும் மௌனமாய்ப் பரந்து கிடப்பது போலவும் அதனிடையே எல்லா துக்கங்களுக்கும் எல்லா ஆற்றாமைகளுக்கும் எல்லா ஏக்கங்களுக்கும் எல்லா வேதனைகளுக்கும் எஞ்சி மிஞ்சிய ஒரே ஒரு சொந்தக்காரியாய் தான் மட்டுமே உட்கார்ந்து குமுறியழுது கொண்டிருப்பது போலவும் சொற்களின் துணைகொண்டு விளக்க முடியாததொரு தவிப்பை அடைகிறாள்.

அருகே கோயில் மணியோசை கேட்கிறது! துக்கத்திலிருந்து விடுபட்டு 'இங்கே வா' என்று குறிஞ்சி ஆண்டவனாகிய முருகனே அவளை அழைக்கிறானா! கனவில் எழுந்து நடப்பது போல் தட்டுத்தடுமாறி தயங்கி நடந்து முருகன் சந்நிதிக்கு முன் போய் நின்றாள் அவள்.

அர்ச்சகர் கற்பூரச் சோதியை முருகன் முகத்தருகே தூக்கிக் காண்பிக்கிறார். பூரணிக்கு மெய் சிலிர்க்கிறது. தன் கண்கள் காண்பது மெய்யா? பொய்யா? என்று விழியகல மீண்டும் பார்க்கிறாள். முருகனுடைய முகமே அரவிந்தனின் முகமாகத் தெரிகிறது அவளுக்கு. சிறிய கற்பூரச் சோதியே பெரிய சோதியாக மாறி அரவிந்தனின் முகமாகி அழகாய் நகைக்கிறது. 'துக்கத்திலிருந்து விடுபட்டு இங்கே வா' என்ற பொருளா அந்தச் சிரிப்புக்கு? 'அரவிந்தன்! உங்களுடைய சிரிப்பில் அமுதம் இருக்கிறது, அமுதம் உயிரை வளர்க்கும் ஆற்றலுடையது' என்று பித்து பிடித்தவள் போல் முனகிக் கொள்கிறாள் அவள். அவளுடைய இதயத்தில் சோகம் நிறைந்திருந்த இடமெல்லாம் அரவிந்தனின் சிரிப்பு நிறைந்து ஒலி பரப்புகிறது.

"பிறவாமை வேண்டும்!
மீண்டும் பிறப்பு உண்டேல்
உன்னை மறவாமை வேண்டும்!"

என்று மெல்லப் பாடிக்கொண்டே கண்களில் வடிந்து கொண்டிருக்கும் நீரைத் துடைத்துக் கொள்கிறாள். கண்களில் நீரையும், மனத்தில் துயரத்தையும் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்கிற போது முருகனே அரவிந்தனாக மாறி நின்று மீண்டும் சிரிக்கிறான்! கைகூப்பி வணங்கிவிட்டு முடிவற்ற மலைத் தொடர்களின் தனி வழியே இறங்கி நடக்கிறாள் அவள். வழியின் இருபுறமும் வெள்ளம்போல் நிறைந்து விளங்கும் குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மாலைப்போது வீறுகுன்றி இருள் வீறு கொள்ளத் தொடங்குகிறது. பூரணி மெல்ல நடந்து கொண்டிருக்கிறாள். பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் வாடி உதிர்கிறது.
---------------

குறிஞ்சி மலர்
கனவு நிறைகிறது

காலமெனும் பூச்செடியில்
கனவு மலர் பூத்தாச்சு
சாலமிகும் விதிக்கொடுமை
சார்ந்துவர உதிர்ந்தாச்சு!


இந்த முடிவுரையைப் படிக்கத் தொடங்குமுன்பே வாசகர்கள் என்மேல் சீற்றமடைந்திருப்பார்கள் என்று என்னால் உய்த்துணர முடிகிறது. 'அரவிந்தன்' என்ற இலட்சிய இளைஞன் 'இறந்திருக்கக் கூடாது' என்று கடுமையாக வாதமிடுவார்கள், கண்டிப்பார்கள், கடிந்து கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இந்தக் கதையின் ஆசிரியன் ஒரே பதிலைத் தான் கூறமுடியும். அரவிந்தன் சாகவில்லை! இந்தத் தலைமுறையிலோ நாளைக்கு வரப்போகும் தலை முறையிலோ, இந்தத் தமிழ் மண்ணில் அன்பும் அருளும் பண்பும் அழகும் நிறைந்து தோன்றும் இளைஞனை - இளைஞர்களை - எங்கே கண்டாலும் அங்கே அரவிந்தன் பிறந்திருப்பதாக நினைத்து வணங்குங்கள்! வாழ்த்துக்கள்!

நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் கொண்டு ஞானப் பூங்கோதையாய் நின்று நோயும், வறுமையும் நிறைந்த மனிதர்களிடையே அருளொளி பரப்பி உயரிய வாழ்வு காண ஆசைப்படும் பெண் திலகத்தை - திலகவதிகளை எங்கே கண்டாலும் அங்கே பூரணி பிறந்திருப்பதாக நினைத்து வணங்குங்கள்! வாழ்த்துங்கள்! பூரணியும், அரவிந்தனும் வெறும் கதாபாத்திரங்களல்லர். அவர்கள் தமிழனத்து ஆண்மை, பெண்மைக்கு விளக்கமாகும் அழகிய தத்துவங்கள். மனிதர்களுக்குத் தான் அழிவு உண்டு. தத்துவங்களுக்கு அழிவில்லை. அவை உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவை, உயர்ந்தவை. இந்தக் கதையில் பூரணி இறக்கவில்லை. அவள் என்றும் அழியாதவள்.

ஞான ஒளி பரப்பித் தமிழும் தொண்டுமாக நூறு வயதுக்கு மேலும் ஔவையார் போல் தாய்த் தெய்வமாக வாழ்ந்து கொண்டே இருக்கிறாள் பூரணி. உயர்ந்த மலைச் சிகரங்களில் பல்லாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சிறப்பாக மலரும் குறிஞ்சி மலரைப் போல் காலவெள்ளத்தில் எப்போதாவது ஒரு முறைதான் அவளைப் போல் பெண்மலர் பூக்கிறது. இலக்கியங்களில் வாழ்கிற குறிஞ்சி மலரின் பெருமை போல் காவியங்களில் வாழ வேண்டிய பெண் அவள். என்னால் அவளுடைய கதையை வெறும் வசனத்தில் தான் எழுத முடிந்தது. என்ன செய்வது? அரவிந்தனைப் போல் கவியுள்ளம் எனக்கு இல்லையே!

என் பூரணி கையில் தீபத்தையும், கண்களில் நீரையும் ஏந்திக் கொண்டு இரக்கத்துக்குரிய ஆண், பெண்களின் இருண்ட வாழ்வில் ஒளி சிதறி நடந்து கொண்டே இருக்கட்டுமென்று உங்கள் சார்பில் அவளை வாழ்த்தி முடிக்கிறேன். வாழ்க பூரணி! வாழ்க அரவிந்தன்!

மணிவண்ணன்

முற்றும்




குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக