புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
2 Posts - 2%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Rutu
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
1 Post - 1%
bala_t
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Pradepa
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
18 Posts - 2%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Rutu
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 10:59 am

பொழுதுவிடிந்து நீண்ட நேரமாகிவிட்டது. நண்பகல் கடந்த சிறிது நேரத்திலேயே ஒளி அகன்றுவிடும். எனவே, வேகமாக நடக்க வேண்டும் என முடிவுசெய்து குகையை விட்டு வெளியேறினர். இரவு முழுவதும் கடுமழை பெய்ததால் சரிவில் நடந்து மேலேறுவது எளிதல்ல என்பது தெரியும். கவனமாக நடந்து செல்லத் துணிந்தனர். மலையெங்குமிருந்து நீரூற்று கசிந்துகொண்டே இருந்தது. நீரோடும் பாறையை அழுத்தி மிதித்தாலும் வழுக்கும், அழுத்தாமல் மிதித்தாலும் வழுக்கும். பாறையின் செதில்கள் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்தே காலடியை முன்னெடுக்க வேண்டும்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83a_1512543161
பாறைகளைக் கடக்கும்போது பாரி முன்னால் நடந்தான். பாறையின் தன்மை அறிந்து ஆதினிக்கு வழிகாட்டிச் சென்றான். மண்ணை மிதித்து நடக்கும்போதும் அதே அளவு கவனம் தேவை. பல நேரம் ஆதினியை முன்னால் நடக்கவைத்துப் பின்னால் வந்துகொண்டிருந்தான்.

இறங்கும் நீரையும் பாறையையும் மண்ணையும் வேர்களையும் குனிந்து பார்த்தபடியே நீண்டநேரம் நடந்துகொண்டிருந்தாள் ஆதினி. எங்கும் நீர் இழுத்து ஓடியபடியே இருக்க, தொடர்ந்து நடப்பது மிகவும் கடினமாக இருந்தது. சற்றே ஓய்வு தேவைப்பட்டது. ஓரிடத்தில் நின்று இளைப்பாறியபடி பார்வையை எல்லாப் பக்கங்களிலும் ஓடவிட்டாள். அப்போதுதான் ஆபத்தின் அளவு புரிந்தது. செங்குத்தான பெருஞ்சரிவின் நடுவில் அவர்கள் நின்றுகொண்டிருந்தனர். ஆதினி அதிர்ச்சிக்குள்ளானாள்.

“இந்தச் சரிவிலா இரவில் நடந்தோம்?”

“ஆம். இந்தப் பெருஞ்சரிவில்தான் நடந்தோம். அதுவும் காதல்கொண்டே.”

பாரி சொல்வது தனது செயலைத்தான் என்பது புரிந்தது. ஆனாலும் எந்த மறுமொழியும் சொல்லவில்லை. ``இந்த இடத்தைப் பகலில் பார்த்த ஒருவர், இங்கு இரவில் நடக்கத் துணிய மாட்டார்” என்றாள்.

``இரவிலே நடந்த ஒருவர், பகலில் எளிதில் நடந்து கடப்பார்” என்றான்.

அவனது சொல் ஆதினிக்கானது. அவன் சொல்லில் இருக்கும் உண்மையை அவளது மனம் ஏற்றது. கால்கள் முன்னிலும் வீரியத்தோடு முன்னகர்ந்தன. ஒற்றைச் சொல்லால் விசை கூட்டும் வித்தையை பாரியின் அளவுக்கு அறிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எனத் தோன்றியது.

`அவனை நினைத்து மகிழத்தான் எவ்வளவு இருக்கின்றன!’ என்று எண்ணியபடியே நடந்தாள்.

``பின்னிக்கிடக்கும் வெண்சாரைகள் அந்த இடம் விட்டு விடியும் வரை நகராது. நீ அஞ்ச வேண்டாம்” என்று நேற்றிரவு அவன் கூறிய சொல்லிலிருந்துதான் எல்லாம் மாறின. `அவை இந்தப் பக்கம் திரும்பாது என்றால், நாம் ஏன் அந்தப் பக்கம் திரும்ப வேண்டும்?’ எனத் தோன்றியது. அவ்வளவு நேரமும் வெண்சாரையைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதினி, பாரியின் பக்கம் திரும்பினாள். 

மெல்லிய ஒளி அவனது முகத்தில் பூசி மறைந்தது. வெண்சாரைகள் இரண்டும் இறுக்கி முறுக்கிக்கொள்ளும்போது ஒளியின் அளவு இரு மடங்கு அதிகமானதுபோல் இருந்தது. ஆனால், அதை அவர்கள் கவனிக்கவில்லை; முறுக்கி இறுகும் வெண்சாரைகளும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. தலைக்குப் பின்புறமாக குகை விட்டு வெளியே பேரிடி விடாது விழுந்துகொண்டிருந்தது. கால்களின் கீழ்ப்புறம் வெண்சாரைகள் இறுகிப் புரண்டுகொண்டிருந்தன. மழையின் பேரோசை கூடியபடியே இருக்க, காற்றெங்கும் நீர் மிதந்துகொண்டிருந்தது. இவற்றில் எதையும் காதல் பொருட்படுத்தவில்லை.

இப்போதுதான் அவற்றை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து கொண்டே நடந்தாள்.   தங்களைச் சுற்றி எவையெல்லாம் இயங்கின என எண்ணிப் பார்த்தாள். எதை நினைத்தாலும் தாங்கள் இயங்கியதில்தான் எண்ணங்கள் முடிவடைகின்றன. `பாரிக்கும் இப்படித்தான் எண்ணங்கள் ஓடுமா? அவனது உள்மனம் இப்போது எதை நினைத்துக் கொண்டிருக்கும்?’ ஆதினியின் சிந்தனை, பாரியை நோக்கி ஓடியது. அவன் கவனமாகச் செடி கொடிகளை விலக்கி முன்நடந்து கொண்டிருந்தான்.

அவனுடைய சொற்களின் வழியே, செயல்களின் வழியே அவனது எண்ண ஓட்டத்தைக் கண்டறிய முயன்றபடியே வந்தாள். அது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஆனாலும் ஆதினி தொடர்ந்து முயன்றாள். பெரும்பள்ளம் ஒன்றின் மேலேற வசதியாக அவளைக் கைபிடித்துத் தூக்கினான். அவள் பாரியின் கண்களைப் பார்த்தபடியே முன்காலைத் தூக்கி வைத்து மேலேறினாள். அந்தக் கண்களில் எதையும் கண்டறிய முடியவில்லை. `ஆண்களின் கண்கள் மொழியற்றவையோ!’ எனத் தோன்றியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83b_1512543179
`இல்லையே, நேற்றிரவு என்ன செய்வது என அறியாத கணத்தில் அவன் பார்த்த பார்வைதானே காமத்துக்குள் கட்டற்ற வேகத்தில் நம்மை இழுத்துச்சென்றது. `பெண் கண் செருகும்போது தொடங்கும் ஆட்டம், ஆண் கண் செருகி இருக்கும்போது முடிவுறுகிறது’ எனச் சொல்லக் கேட்டுள்ளேன். ஆனால், இவை எல்லாம் யாரால் பார்த்தறிய முடியும்? மற்றவர்கள் பார்க்க முடியாது, சம்பந்தப்பட்டவர்களால் பார்க்கவே முடியாது. அப்புறம் எப்படி இவை எல்லாம் கதைகளால் சொல்லப்படுகின்றன?’ மனதுக்குள் எண்ணியபடியே நடந்தாள்.

குறுகிய பள்ளத்தில் நீரின் வேகம் சற்றே அதிகமாக இருந்தது. முதலில் அதைக் கடந்த பாரி, அவள் கடப்பதற்குக் கைகொடுத்து இழுத்தான். அவள் கடந்து வந்ததும் முன்னே நடக்கவிட்டுப் பின்தொடர்ந்தான்.
அப்போதுதான் கவனித்தான், ஆதினியின் முதுகில் சிறிய சிறிய கீறல்கள் கோடுகளாய் அங்குமிங்குமாக இருந்தன. `கற்படுக்கையால் இப்படி நேர்ந்துவிட்டதே!’ எனக் கவலை கொண்டான். மழை பெய்து குளிர் நீங்காமல் இருப்பதால் எரிச்சல் தெரியாமல் இருக்கிறது. கோடைக்காலமாக இருந்தால் கடும் எரிச்சல் இருந்திருக்கும் என எண்ணியவனுக்கு, அதன் ஆபத்து அப்போதுதான் புரியவந்தது, `இப்படியே போனால் இவள் தோழிகள் கேள்விகள் கேட்டே இவளைத் திணறடித்து விடுவார்களே!’ என்று.

என்ன நடந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். எப்படி நடந்திருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில்தான் எல்லோரின் விருப்பமும் இருக்கும். இதுபோன்ற தடயங்கள்தான் அவர்கள் பயன்படுத்தப்போகும் ஆயுதங்கள். நிலைமையை ஆதினியால் சமாளிக்க முடியாத அளவுக்கு இருக்கும். ஏனென்றால், அவளது முதுகில் இருக்கும் தடயங்கள் அவ்வளவு. இதைப் பற்றித் தெரியாமல் ஆதினி ஏதோ சிந்தனையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறாள் என்று நினைத்த பாரி, ``நீ சிறிது நேரம் இங்கே இரு. நான் அருகில் இருக்கும் செம்பாறை வரை போய் வருகிறேன்” என்றான்.

``ஏன்?” எனக் கேட்டாள் ஆதினி.

``உனது முதுகு முழுவதும் பாறையின் செதில்களால் கீறப்பட்ட கோடுகளும் தடயங்களும் நிறைய இருக்கின்றன. தோழிகள் பார்த்தால் கேலிசெய்வார்கள்” என்றான்.

அவள் முற்றிலும் எதிர்பாராத ஒன்றைப் பற்றிப் பாரி பேசினான். அவனது சொல்லில் இருப்பது அளவிட முடியாத காதல். அதனால்தான் அடுத்த கணமே அது உள்ளுக்குள் இன்பத்தைச் சுரக்கிறது. அவன் காமத்தின் தடயங்களை மறைக்கப் பார்க்கிறான். அந்தக் கணத்தைக் கற்பனையில்கூட அடுத்தவர் நெருங்கக் கூடாது எனத் தவிக்கும் ஆணின் தவிப்புதான் காதலின் ஆகச்சிறந்த பரிசு என அவளுக்குத் தோன்றியது.

அவனது சொல்லைக் கடக்க முடியாமல் நின்றிருந்த ஆதினியைப் பார்த்துப் பாரி சொன்னான், ``செம்பாறையின் ஓரம் இழுத்தோடும் நீரில் பொன்போல மின்னும் மண் துகள் படிந்திருக்கும். அந்த மண் துகளை எடுத்துவந்து முதுகில் பூசிவிடுகிறேன். அது ஒளியை மினுக்கிக்கொண்டிருக்கும். பார்ப்பவர்களுக்கு மினுக்கும் ஒளிதான் தெரியுமே தவிர, முதுகில் உள்ள கீறல்கள் எளிதில் தெரியாது” என்றான்.

நுனிநாக்கால் மேலுதடைத் தொட்டு நனைத்துக் கொண்டாள். சிரிப்பை மறைக்க அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83c_1512543194
ஆனால் பாரி கண்டறிந்தான், ``ஏன் சிரிக்கிறாய்?”

``முதுகெல்லாம் ஏன் பொன்மணல் படிந்திருக்கிறது எனக் கேட்டால்?”

``படுத்திருக்கும்போது ஒட்டியிருக்கும் எனச் சொல்.”

``அதனால்தான் பாரியின் முதுகில் பொன்மணல் ஒட்டவில்லையோ எனக் கேட்பார்கள்.”

ஒரு கணம் திகைத்துப்போனான்.

அவன் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியைக் கண்டு மகிழ்ந்து சிரித்தாள். அடுத்தடுத்து எழும் வினாக்களை நோக்கி அவள் உள்ளே போய்க்கொண்டிருந்தாள். திகைத்த இடத்திலே பாரி நின்றுவிட்டான். கேலி விளையாட்டில் பெண்கள் செல்லும் ஆழம் ஆண்களால் அறிய முடியாதது. இது, பெண்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக்கொண்ட கலையின்பம். அதனால்தான் எழப்போகும் வினா பாரிக்குத் திகைப்பை உருவாக்கிய கணமே ஆதினிக்குச் சிரிப்பை உருவாக்கியது. தோழிகள் கேட்கப்போகும் வினாக்களுக்குள் நுழைந்தபோது அவளது சிந்தனை திக்குமுக்காடியது. `வெண்சாரைகளின் நிழலில் எங்களின் காமம் நிகழ்ந்தது எனச் சொன்னால் நிலைமை என்ன ஆகும்!’ வேளிர் குலம் முழுக்க தலைமுறை தலைமுறையாக இந்தக் கதை நிலைத்துவிடும் என அவளுக்குத் தெரியும்.
 
எத்தனை தலைமுறைகளாலும் முதுகில் கீறல்கொண்ட இளம்பெண்கள் இந்த வினாவிலிருந்து தப்பவே முடியாது. காலம்காலமாகப் பாரியின் குறியீடாக பதில்கள் சொல்லப் பட்டுக்கொண்டே இருக்கும். அவன் செய்யப்போகும் செயல் எல்லா இளம்பெண்களின் முதுகிலும் படிந்துவிடும் என நினைத்தபடி பாரியின் கையைப் பிடித்து, ``பொன்மணல் துகள் வேண்டாம். தோழிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள்.
அவள் சொல்வதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. `என்ன சொல்லி சமாளிப்பாள்?’ எனச் சிந்தித்தபடியே அவன் நடந்தான். அவனுக்குள் வினாக்கள் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருந்தன. ஆனால், எண்ணங்கள் கேட்க விடாமல் தடுத்துக்கொண்டே இருந்தன. சிறுபாறையின் மேலே ஏறி அவளைக் கைபிடித்துத் தூக்கிவிட்டான்.

மேலேறியவுடன் நிமிர்ந்து பார்த்தாள் ஆதினி. எதிரில் சமவெளி விரிந்துகிடந்தது. `செங்குத்தான பெருஞ்சரிவை அதற்குள் ஏறிக் கடந்துவிட்டோமா!’ வியப்பு குறையாமல் முன்னும் பின்னுமாகத் திரும்பிப் பார்த்தாள். அவளால் நம்பவே முடியவில்லை. வியப்போடு பாரியைப் பார்த்தாள். அவன் உள்ளும் வெளியுமாக இயக்கும்விதம் மேலும் மேலும் வியப்பூட்டுவதாக இருந்தது.

கதிரவன், எதிர்க்குன்றின் பின்னால் மறையத் தொடங்கினான். இருவரும் சிறிது தொலைவு சமவெளியில் நடந்து சென்றனர். எதிரில் சிறுமேடு ஒன்று இருந்தது. ``இந்த மேடு ஏறி இறங்கினால், கீழ்த்திசையில் நாம் நிறுத்தி வந்த தேர் இருக்கும். நான் குதிரைகளைக் கண்டறிந்து வருகிறேன். அதுவரை நீ இங்கேயே இரு” என்று சொல்லி நடந்தான்.

காற்று சற்றே அதிகரிக்கத் தொடங்கியது. மாலையானதும் இன்றும் கடுமழை வரப்போகிறது எனச் சிந்தித்தபடி குதிரைகளைப் பிடித்துவர விரைந்தான்.

ஆதினி அவன் வரும் வரை மரத்தடியில் அமர்வோம் என நினைத்து, அருகில் இருந்த செங்கிளுவை மரத்தின் அருகே போய் உட்கார்ந்தாள். குதிரைகளை நோக்கி விரைந்த பாரி, ஏதோ எண்ணம் தோன்ற, திரும்பி ஆதினியைப் பார்த்தான். அவள் அப்போதுதான் செங்கிளுவையில் சாய்ந்தாள்.

``மரத்தை விட்டு விலகி வந்து ஓய்வெடு. நான் விரைந்து வருகிறேன்” என்று சொல்லியபடி ஓடினான். அவள் மரம் விட்டு நீங்கினாள். அருகில் இருந்த சிறுபாறையின் மீது உட்கார்ந்து மரத்தைப் பார்த்தாள். `ஏன் அதன் அருகே உட்கார வேண்டாம் என்று சொன்னான்?’ என்று சிந்தித்தபடியிருந்தாள்.

சற்று நேரம் கழித்து குதிரைகளோடு வந்தான் பாரி. இருவரும் பேசியபடியே குன்றின் மேல் நடந்தனர். குதிரையைத் தொட்டு வருடும் ஆசையை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. கைகூசியபடி அதனுடைய முதுகை வருடிக் கொண்டே கேட்டாள், ``ஏன் மரத்தை விட்டு அகலச் சொன்னீர்கள்?”

``காற்று பலமாக அடிக்கத் தொடங்கியது. அந்த மரம் பெருங்காற்றைத் தாங்காது. அதனால்தான் தள்ளி உட்காரச் சொன்னேன்.”

``பார்த்தால் வலிமையான மரம்போல் தெரிந்தது. அதனால்தான் அருகில் போனேன்.”

``மலையுச்சி மரங்களின் தன்மையைக் கணிப்பது சற்றே கடினம். எளிதில் நம்மை ஏமாற்றிவிடும்.”

``நீங்கள் எப்படிக் கண்டறிந்தீர்கள்?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83d_1512543217
``உதிரும் அதன் இலையை வைத்துதான்.”

``இலையை வைத்தா?”

``ஆம், இலையில்தான் மரத்தின் குறிப்பு இருக்கிறது.”

குதிரைமீதிருந்த கையை விலக்கி அவனைப் பார்த்தாள்.

பாரி சொன்னான், ``உதிரும் இலையின் நுனிப்பகுதி கீழ்நோக்கி வருகிறதா,  அடிப்பகுதி கீழ்நோக்கி வருகிறதா அல்லது சம எடையுடன் காற்றை வெட்டி வெட்டி மிதந்து வருகிறதா என்பதை இலையின் கீழ்ப்புறம் உள்ள நரம்பின் தன்மையே தீர்மானிக்கிறது. மரங்களுக்கு வயது ஆக ஆக நரம்பின் பிடிமானமும் கன அளவும் மாறும். அது மாற மாற உதிரும் இலையின் தன்மையும் மாறும். எனவே, உதிரும் இலை எந்த நிலையில் உதிர்கிறது என்பதை வைத்தே மரத்தின் வயதையும் ஆற்றலையும் சொல்லி விடலாம்.”

``வியப்பாக இருக்கிறது” என்றாள் ஆதினி.

``இதிலென்ன வியப்பு இருக்கிறது... ஓடும் நரியைப் பார்த்தவுடன் வயதைச் சொன்னார் உன் தந்தை. அதுதான் வியப்பு.”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே தொலைவில் தேர் நிற்பது தெரிந்தது. பாரி கை நீட்டி அதைக் காண்பித்தான். அதைப் பார்த்தபடியே ஆதினி கேட்டாள், ``தேரின் நேரெதிர் திசையில்தானே கீழே இறங்கினோம். இப்போது இடப்பக்கமாக ஏறி வருகிறோம்?”

``காட்டில் எதையும் நாம் தீர்மானிக்க முடியாது. காடுதான் தீர்மானிக்கும். நாம் பார்க்கப்போனது ஒன்றை; பார்த்தது வேறொன்றை. அப்படித்தான் எல்லாமும்.”

பேசியபடியே தேரை நெருங்கினர். கதிரவன் மலையில் சரிபாதி மறைந்துவிட்டான். காற்றின் வேகம் கூடியபடி இருந்தது. குதிரைகளைத் தேரில் பூட்ட முன்புறமாகப் போனான் பாரி. ஆதினி, வலப்புறமாகத் தேரை நோக்கி நடந்தாள். காற்று பலம்கொண்டு வீசியதில் குதிரை காதுவிடைத்து, கனைத்தது. அதன் கழுத்துப் பகுதியைத் தடவிக்கொடுத்து அமைதிப்படுத்த முயன்றான். அப்போது ஆதினி அழைக்கும் குரல் கேட்டது. குதிரை மீண்டும் எதிர்காற்றில் துள்ளிக் கனைத்தது. குதிரையை அருகில் இருந்த சிறு மரத்தில் கட்டிவிட்டு ஆதினியின் அருகில் வந்தான்.

அவள் தேர்ச்சக்கரத்தின் அருகில் உட்கார்ந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கு உட்கார்ந்து என்ன செய்கிறாள் என்று எண்ணியபடி அருகில் வந்தான் பாரி. தேர்ச்சக்கரத்தின் ஆரக்காலில் முல்லைக்கொடி ஒன்று முழுச்சுற்று சுற்றி, தலையை வெளிப்புறமாக நீட்டியபடி இருந்தது. இன்னொரு கொடி பக்கத்தில் இருந்த ஆரக்காலில் பாதி சுற்றி, தலை நீட்டியிருந்தது.

அருகில் வந்த பாரி அதைப் பார்த்தான். கொடியின் தளிர், காற்றுக்கு அசைந்தபடி ஆரக்காலைத் தழுவியிருந்தது. ஆதினியின் முகத்தைப் பார்த்தான். சற்றே பதற்றத்தோடு இருந்தாள். ``தேரை எடுத்தால் இரு கொடிகளும் அறுந்துவிட வாய்ப்புள்ளது. இந்த முல்லைக் கொடியைப் பக்குவமாகப் பின்னோக்கிச் சுழற்றி வெளியில் எடுத்துவிடலாமா?” எனக் கேட்டாள்.

பாரி, எதுவும் சொல்லாமல் முல்லைக் கொடிகளையே பார்த்துக்கொண்டிருந்தான். காற்று பெரும்வேகத்தோடு வீசியது. நின்றிருந்த தேர், சற்றே அசைந்துகொடுத்தது. சட்டென சக்கரத்தை இறுகப்பிடிக்க முயன்றாள் ஆதினி. ஆனால், பாரியின் கை அதைப் பிடித்துக் கொண்டிருந்தது. இது நிகழ்ந்துகொண்டிருக்கும் போது குன்றுக்குப் பின்னால் சடசடவெனப் பேரோசை கேட்டது. அதிர்ந்து திரும்பினாள்.

திரும்பாமலே பாரி சொன்னான், ``அந்தச் செங்கிளுவை விழுந்துவிட்டது.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83e_1512543316
ஆதினிக்கு, பதற்றம் இன்னும் அதிகமானது. விழுந்த மரத்தில் அடைந்திருந்த பறவைகள் கலைந்து வெளியெங்கும் ஓசையெழுப்பின. அதைக் கவனித்தபடியே ஆதினியிடம் சொன்னான், ``இலையில் மரத்தின் குறிப்பு இருந்ததைப்போல இந்த முல்லைக்கொடிகளில் இருக்கும் குறிப்பு என்னவென்று பார்.”

அவள் முல்லைக்கொடிகளை உற்றுப் பார்த்தாள். சக்கரத்தின் ஆரக்காலை முழுமையாகச் சுற்றிய கொடி, தலையாட்டியபடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது. அது ஆரத்தைச் சுற்றியிருக்கும் விதத்தைக் கவனித்தாள். எங்கோ பார்த்ததுபோல் இருந்தது. எங்கே என்று சிந்தித்தபோது வெண்சாரைகளின் நினைவு வந்தது. அதே பின்னல்கொண்டு வளைந்து மேலேற முயன்றது முல்லைக்கொடி. பக்கத்து ஆரத்தின் மீதும் அதே முயற்சியைச் செய்து கொண்டிருந்தது இன்னொரு கொடி.

கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஆதினியின் கண்கள் கலங்கின. பாரியைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கண்கள் எண்ணில்லா சொற்களைப் பேசின. ஆண்களின் கண்களைப் படித்தறிய வேறு வழியுண்டா என மனம் பதறியது. ஆனாலும் தொடர்ந்து முயன்றாள். `இடப்புறம் இருப்பதுதான் நானா?’ என்று ஆதினியின் ஆழ்மனம் கேட்க, `இல்லை வலப்புறம் இருக்கும் கொடிதான் உனது சாயலில் தலைசாய்ந்தே இருக்கிறது’ என்று பாரி சொல்ல, மனதுக்குள் நீங்கா உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. `வெண்முல்லையும் வெண்சாரையும் வடிவத்திலும் வாசனையிலும் ஒன்றே!’ என ஆழ்மனம் சொல்லியது. காற்று வீறுகொண்டு வீசியது. ஆதினி, பாரியின் கைகளை இறுக அணைத்துத் தோள் சாய்ந்தாள்.

``குகை நமக்கானதாக மாறியதுபோல, தேர் முல்லைகளுக்கானதாக மாறிவிட்டது” என்றான் பாரி.

வெட்கம் கலையாத சிரிப்போடு ஆதினி சொன்னாள், ``நேற்று நாகம் கற்றுக்கொடுத்தது. இன்று முல்லை கற்றுத்தருகிறது.”

``காடு, கணம்தோறும் நமக்குக் கற்றுத்தந்து கொண்டேதான் இருக்கும்” எனச் சொல்லியபடி தேர் விட்டு நகர்ந்தான் பாரி. தன் விரல்களால் சக்கரங்களின் ஆரங்களைத் தொட்டு வருடியபடி அந்த இடம் விட்டு எழுந்தாள் ஆதினி.

இருவரும் நடக்கத் தொடங்கினர். ஆதினி மெல்லிய குரலில், ``படர்வது குறுமுல்லை. ஒரு மலர் பூத்தால் போதும். காடே மணக்கும்” எனச் சொல்லிவிட்டு, பாரியின் முகத்தைப் பார்த்தாள்.

‘என்ன பொருள் இதற்கு?’ பாரியின் கண்கள் தடுமாறின. பெண்ணின் கண்கள் சொல்வதை முழுமையாகக் கற்க ஆண்களால் முடியுமா என்ன? ‘உதிரும் இலையின் குறிப்பு தெரிந்த உனக்கு வீசும் பார்வையின் பொருள் புரியாதா?’ என்று கேட்பதுபோல் இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83f_1512543348
இருவரும் காதல் மயக்கம் கலையாமல் நடக்கத் தொடங்கினர். பொன்மணல் துகள் மனமெல்லாம் மின்னிக்கொண்டிருந்தது. கீறல் தழும்புகளிலிருந்து குறுமுல்லையின் நறுமணம் கசியத் தொடங்கியது. பாரியின் வலக்கையைத் தனது இடக்கையால் பின்னியபடி நடந்தாள். வெண்சாரை ஒருபுறமும் குறுமுல்லை மறுபுறமுமாகப் படர்ந்து கொண்டிருந்தன. இருவரும் எவ்வியூர் நோக்கி நடந்தனர்.

இன்றும் ஐவகைக் குறிஞ்சியில் மலர்ப்படுக்கை அமைத்திருப்பர். ஆனால், மலராத முல்லையின் மணமேந்தி, சுடரின்றிப் பரவும் ஒளியேந்தி வந்துகொண்டிருக்கும் இந்தக் காதலர்களின் இரவை மற்றவர்களால் எதுகொண்டு அலங்கரிக்க முடியும்?

போகும்போது கட்டிப்போட்டிருந்த குதிரைகளைக் கையில் பிடித்துக்கொண்டு நடந்தனர். இரு குன்றுகளைத் தாண்டியபோது எதிரில் பாணர் கூட்டம் ஒன்று வந்துகொண்டிருந்தது. எவ்வியூர் வந்து திரும்பும் பாணர்களை, வீரர்கள் அழைத்துக்கொண்டு போயினர்.

``பாரி தேரில்தானே வந்ததாகச் சொன்னார்கள். இப்போது குதிரைகளைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து போவானேன்?” என்று ஒரு பாணன் கேட்க, ``அதோ, தேர் அங்கே நிற்கிறது. அருகில் போய்ப் பார்த்தால் காரணம் தெரியப் போகிறது” என்று இன்னொரு பாணன் சொன்னான்.

``முல்லைக்குத் தேரைக் கொடுத்ததாகப் பாணர்கள் பாடுகிறார்களே அது உண்மையா?” என்று கபிலர் கேட்டதற்குத்தான் இந்த முழுக் கதையையும் பாரி சொல்லி முடித்தான். கேள்வி என்னமோ முல்லைக்கொடியைப் பற்றித்தான். ஆனால், பாரி தனது திருமணக் காலத்திலிருந்து நடந்ததை விளக்கியதற்குக் காரணம், காலம்பன் அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

சோமப்பூண்டின் பானம் இருந்தும் அன்று யாரும் ஒரு குவளைகூடக் குடிக்கவில்லை. பாரி நடந்ததைச் சொல்லி முடிக்கும்போது அனைவரும் பெரும்வியப்பில் மூழ்கிப் போயிருந்தனர். முல்லைக்கொடி பற்றிக் கேட்ட கபிலரோ, இராவெரி மரம் பற்றிக் கேள்விப் பட்டதும் அதிர்ந்துபோனார். ``இதைத்தான் வடதேசத்து முனிகள் `ஜோதி விருட்சம்’ எனச் சொல்கிறார்களோ!’’ எனக் கேட்டார்.

தேக்கனின் வியப்பு வேறுவிதமாக இருந்தது. ``நீயும் ஆதினியும் வெண்சாரையைப் பார்த்தீர்களா? இதுவரை சொல்லவேயில்லையே” எனக் கேட்டார். பாரியைப் பற்றிய தேக்கனின் வியப்பு காலகாலத்துக்கு நீங்காது என்பது அவரின் பார்வையிலேயே புலப்பட்டது.

காலம்பனின் வியப்பு முல்லைக்கொடியோ, வெண்சாரையோ அல்ல; `ஆயுதங்களைக் கூர்மையாக்கும் கல் இருக்கிறதா? பல்வேறு தாதுக்களை ஆற்றலாக மாற்றத் தெரிந்த பொதினியின் பதினெட்டுக் குடிகள். அவர்கள் எதையெல்லாம் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள்?’ அடுக்கடுக்காய் மேலெழுந்தபடி இருந்தது காலம்பனின் வியப்பு.

எல்லோரும் வியந்ததைப்போல பாரியும் வியப்பு நீங்காமல்தான் இருந்தான். இந்த நிகழ்வு எப்படி வெளியில் தெரிந்திருக்கும் என எண்ணிப்பார்த்தான். ``பேசியபடி தங்களைக் கடந்துபோன பாணர்கள் தேர்ச்சக்கரத்தில் முல்லைக்கொடி பின்னிக்கிடப்பதைப் பார்த்துப் பாடல் புனைந்துள்ளனரோ?!” என்றான்.

கேள்வி, கபிலருக்கு வியப்பைக் கொடுத்தது. ``நிலமெங்கும் உனது புகழைப் பரப்பும் குறியீடு இதுதான்” என்றார் கபிலர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83g_1512543368
``படர வழியின்றிக் கொடி தவித்தால் யாராக இருந்தாலும் அதற்கு வழிசெய்துவிட்டுத்தானே போவார்கள். இதில் வியக்க என்ன இருக்கிறது?” எனக் கேட்டான் தேக்கன்.

``மலைமக்களின் வாழ்வை சமவெளி மனிதர்கள் புரிந்துகொள்வது எப்படி எளிதில்லையோ, அதேபோல்தான் சமவெளி மக்களின் எண்ண ஓட்டங்களையும் சிந்தனை நிலையையும் மலைமக்கள் புரிந்துகொள்வதும் எளிதல்ல” என்றார் கபிலர்.

தேக்கனுக்கு அவர் சொல்லவருவது விளங்கவில்லை,

``உங்களுக்கு இது வாழ்வின் பகுதி. எனவே, நின்றுபார்க்க ஒன்றுமில்லை. ஆனால், தவித்து அலையும் மக்களுக்கு இது கனவு. எனவே, கடக்க வழியின்றிப் பாடியபடியே இருக்கின்றனர்.”

கபிலரின் சொற்கள் ஆழத்துக்குப் போயின. அதைப் பற்றிய சிந்தனையும் அவ்வாறே. இரவெல்லாம் பேசினர். சோமப்பூண்டின் பானம் விட்டு மனமும் உடலும் வெளியேறிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்தனர். குடியும் இரவும் அவர்களை விட்டு அகன்றன.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 11:28 am

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P88a_1513158013
வனத்தின் சாகசத் தளபதி ஹிப்பாலஸ், வஞ்சி மாநகரத்தில் வந்திறங்கினான். வைப்பூர்த் துறைமுகம் பற்றி எரிந்து பல மாதங்களாகப்போகின்றன. நீண்டநாள்களாக வைப்பூர்க் கோட்டையிலேயே இருந்தவன், பிறகு ஓரிரு இடங்களுக்குப் பயணம் போய் இப்போது வஞ்சியை வந்தடைந்துள்ளான். அவனோடு எபிரஸ், திரேஷியன், கால்பா, பிலிப் ஆகியோர் வந்துள்ளனர்.

பெருவணிகன் வெஸ்பானியன் தலைமையில் யவனத்திலிருந்து ஆறு நாவாய்களில் பாண்டிய இளவரசனின் மணவிழாவுக்குப் புறப்பட்டனர் யவனர்கள். `மீனாள்’ என்று யவனத்தில் எழுதப்பட்ட யானை வடிவம் தாங்கிய நாற்சதுர நாணயத்தோடும் எண்ணற்ற பரிசுப்பொருள்களோடும் பாண்டிய நாட்டில் வந்திறங்கினர்.

இந்தப் பெருஞ்சிறப்பு, தமிழ்நிலத்தில் எந்த மன்னனுக்கும் தரப்பட்டதில்லை. அதற்குக் காரணம், யவன வணிகத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ள பாண்டிய நாட்டு முத்துகள். அதன்பொருட்டே யவனப் பெருவணிகன் வெஸ்பானியனும் அரச பிரதிநிதிகளும் துறைமுகப் பொறுப்பாளர்களும் வருகைபுரிந்தனர்.

இவர்கள் வருகைபுரிந்த ஆறு நாவாய்களும் வைகை ஆற்றில் சாம்பலாகக் கரைந்தன. வெஸ்பானியன் நெருப்பிலே மாண்டான். வேதனைகளையும் இழப்புகளையும் தாங்க முடியவில்லை. கடக்க முடியாத துயரங்களைக் கடக்க வழியின்றி நாள்கணக்கில் குடித்தான் ஹிப்பாலஸ். கம்பீரமிக்க தனது நாவாய் எரிந்தபடியே மூழ்கிய காட்சி, அவன் கண்களைவிட்டு எளிதில் அகல மறுத்தது.

எல்லோரையும்போல இது விபத்து என்றுதான் அவனும் முதலில் நினைத்தான். ஆனால், பிறகுதான் செய்தி தெரியவந்தது, பறம்பு வீரர்கள் பற்றவைத்த நெருப்பு என்று. ஆனாலும் காரணம் எளிதில் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. சேர அரசுகளான குட நாட்டுக்கும் குட்ட நாட்டுக்கும் பறம்போடு பன்னெடுங்காலப் பகை இருக்கிறது. பாண்டியனோடு எந்தப் பகையும் பறம்புக்கு இல்லையே. பிறகு ஏன் பறம்பு வீரர்கள் இந்தக் கொடுஞ்செயலைச் செய்ய வேண்டும் என்பது, விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.

காரணம் அறியாமல் வைப்பூர்க் கோட்டையை விட்டு வெளியேறுவதில்லை என்ற முடிவோடு இருந்தான். செய்திகள், எல்லா முனைகளிலிருந்தும் ஹிப்பாலஸுக்கு வந்துகொண்டிருந்தன. கடலோடிகள், பெருவணிகர்கள், கடற்கரைப் பணியாளர்கள், வைப்பூர் மக்கள், பாண்டிய அரண்மனைப் பணியாளர்கள், போர்வீரர்கள் என எல்லோரும் ஆளுக்கோர் உண்மையை ஹிப்பாலஸுக்குச் சொன்னார்கள். எல்லாவற்றையும் தொகுத்தபடியே இருந்த அவன், கடைசியாகக் கேள்விப்பட்டது தேவாங்கு பற்றிய செய்தியை.

அந்தக் கணத்திலிருந்து அவனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை. `திசை உணர்த்தும் ஒரு விலங்கா!’ காலம் முழுவதும் கடலிலேயே பயணப்படும் ஒருவனுக்கு, தேவாங்கு போன்ற விலங்கு நம்ப முடியாத கற்பனையாகத்தான் இருக்கும். ஆனாலும் எல்லா வகைகளிலும் அவன் அதை உறுதிப்படுத்தினான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P88b_1513158031
குலசேகரப்பாண்டியன் அந்த விலங்கைக் கைப்பற்றப் பறம்புக்குத் திரையர்களை அனுப்பிவைத்ததை அமைச்சர்கள்மூலமே தெரிந்துகொண்டான். திரையர்களோடு பறம்பு வீரர்கள் உடன் வந்துதான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஏனென்றால், விடுதலையான திரையர் குடும்பங்களும் கப்பலிலிருந்து தப்பித்த திரையர்குல வீரர்களும் பறம்புக்குள்தான் நுழைந்துள்ளனர். எனவே, எல்லாம் பாரியின் செயல்தான் என்பதைக் குலசேகரப்பாண்டியன் உறுதிசெய்துள்ளான் என்பது வரை ஹிப்பாலஸுக்குத் தெரியவந்தது.

ஆனாலும், அந்த விலங்கைப் பார்க்காமல் அவனால் நம்ப முடியவில்லை. அந்த விலங்குகள் எல்லாம் பறம்பு வீரர்களால் மீட்கப்பட்டுவிட்டதாகவும் மிஞ்சிய சில, நெருப்பிலே எரிந்துவிட்டதாகவும் சொன்னார்கள். ஒன்றிரண்டாவது எஞ்சியிருக்காதா என்று ஹிப்பாலஸ் தொடர்ந்து முயன்றான். அவன் முயற்சி வீண்போகவில்லை.

வைப்பூர்த் துறையில் நெருப்பு பற்றுவதற்கு முன்னரே இரண்டு கலங்கள் துறையை விட்டு வெளியேறியுள்ளன. இறலித்தீவுக்கும் தெங்கின்தீவுக்கும் பயணமான அவை இரண்டிலும் தேவாங்குகள் இருந்திருக்கின்றன. சூழ்கடல் முதுவன் யாரும் அறியாதபடி நள்ளிரவுக்கு முன்னதாகவே அந்தக் கலங்களை வெளியேற்றியுள்ளான் என்பதை ஹிப்பாலஸ் அறிந்தான். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P88c_1513158048
எப்படியாவது அந்தக் கலங்களில் உள்ள தேவாங்குகளைப் பார்த்துவிட வேண்டும் என்று பெருமுயற்சி செய்தான். வைப்பூரிலிருந்து கொற்கைக்கு வந்தவன் சிறிய வடிவிலான வங்கத்தை எடுத்துக்கொண்டு இறலித்தீவுக்குப் புறப்பட்டான். அங்கு போய் சூழ்கடல் முதுவனுக்கு நம்பகமான வணிகத் தோழனிடம் அதிகப்படியான விலைபேசி தேவாங்கைக் கைப்பற்றினான். அதைப் பார்த்த கணத்திலிருந்து இப்போது வரை அவனது வியப்பு நீங்கவில்லை.

`கடலின் எல்லாவித ஆபத்துகளையும் நீக்கும் தேவதை இது!’ என அவன் தேவாங்கை வர்ணித்தான். இப்படியொரு விலங்கு இருக்கும் செய்தி யவனத்தை எட்டுமானால், உலகெங்கும் இருக்கும் கடல் வணிகர்கள் அனைவரும் பாண்டிய நாட்டை முற்றுகையிடத் தொடங்கிவிடுவர். மற்றவர்கள் அறியும் முன், இந்த விலங்கை நாம் கைப்பற்ற வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தான் ஹிப்பாலஸ்.

இறலித் தீவிலிருந்து மீண்டும் கொற்கைக்குத் திரும்பிய அவன், நேராக மதுரைக்குச் சென்றான். குலசேகரப்பாண்டியனைக் கண்டு பேசிவிட்டுத்தான் இப்போது வஞ்சி மாநகருக்கு வந்துள்ளான்.

அவனது வருகை உதியஞ்சேரலுக்குத் தெரிவிக்கப்பட்டது. யவனத்தின் பெருமைமிகு வணிகர்களும் கடல் பயண சாகசத் தளபதிகளும் வந்துள்ளதை மகிழ்வோடு வரவேற்றான் உதியஞ்சேரல்.

அவனுடைய உற்சாகத்துக்கு இப்போது கூடுதல் முக்கியத்துவம் இருந்தது. வணிகப் போட்டியில் சேரனின் மிளகை, பாண்டியனின் முத்து கடந்து முன் சென்றுவிட்டது. எனவே, யவன வணிகர்களின் முதல்மரியாதை பாண்டியனை நோக்கியே கடந்த சில ஆண்டுகளாக இருப்பதை யாவரும் அறிவர். அதன்பொருட்டே பாண்டிய இளவரசனின் மணவிழாவுக்கு யவனத்திலிருந்து சிறப்பு ஏற்பாட்டோடு பலரும் வந்து பங்கெடுத்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P88d_1513158097
ஆனால், வைப்பூரில் பற்றிய தீயால் யவன வணிகர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. பாண்டியனின் நற்பெயரில் அழிக்க முடியாத கரும்புகை படிந்துவிட்டது. வைப்பூரில் ஏற்பட்ட இழப்பிலிருந்து எந்த ஒரு வணிகனும் எளிதில் மீண்டுவிட முடியாது. பாண்டியனால் ஏற்பட்ட கசப்பையும் கண்ணீரையும் கடலோடிகளால் எளிதில் கடந்துவிட முடியாது. நெருப்பின் சூட்டைக் கடல் மறக்க, நீண்ட காலமாகும். அதுவரை வஞ்சி நகரே வணிகத்தின் தலைவாசலாக இருக்கும் என்று கணித்தான் உதியஞ்சேரல்.

வைப்பூரில் பற்றிய நெருப்பு, பாண்டியப் பேரரசுக்குப் பெருங்களங்கத்தை உருவாக்கியது உண்மைதான். அதனால் யவன வணிகர்கள் கடுஞ்சினம்கொண்டிருந்ததும் உண்மைதான். ஆனால், இறலித்தீவுக்குப் போய் தேவாங்கை ஹிப்பாலஸ் நேரில் பார்த்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதனால்தான் அவன் மீண்டும் கொற்கைக்குத் திரும்பினான். மதுரைக்குப் போய் குலசேகரப்பாண்டியனைக் கண்டான்.
கடுங்குற்றச்சாட்டைப் பகிர்ந்து கொள்வதற்காகவே அவன் திரும்பி வந்திருப்பதாக குலசேகரப்பாண்டியன் நினைத்தார். ஆனால் ஹிப்பாலஸ், ``தங்களைக் கண்டு நன்றி சொல்லவே வந்தேன்”  என்றான். பேரரசருக்கு விளங்கவில்லை.

``காலம் முழுவதும் கடலிலேயே வாழ்வைக் கழிக்கும் கடல்மனிதன் நான். திசை அறியும் ஆற்றல்கொண்ட விலங்கு ஒன்று இருக்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காகவே உங்களைக் கண்டு நன்றி சொல்ல வந்தேன். பாண்டிய நாட்டு வானியல் அறிஞர்களின் ஆற்றல் பற்றி நிறையவே கேள்விப்பட்டுள்ளேன். எமது நாட்டின் மூத்த அறிஞர்கள், பாண்டியர்களைப் பற்றி எண்ணற்ற குறிப்புகளை எழுதிவைத்துள்ளனர். நாட்டை 365 பாகங்களாகப் பிரித்து, நாள்தோறும் ஒவ்வொரு பாகத்தில் குடியிருப்பவர்கள் அரசுக்குத் திறை கட்ட வேண்டும் என்று விதி செய்தவர்கள் பாண்டியர்கள். `பல தலைமுறைக்கு முன்பே ஆண்டை நாள்கணக்கில் துல்லியமாகப் பகுத்து, அதை நிர்வாகத்தோடு இணைத்த அறிவு பாண்டியர்களுடையது’ என எழுதிவைத்துள்ளனர். உங்களின் வானியல் ஆற்றலை நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், திசை காட்டும் விலங்கொன்று இருக்கிறது என்பதைக் கண்டறிந்த உங்களின் பேரறிவுக்கு, எங்களின் மரியாதையைச் செலுத்துகிறோம். நீங்கள் கண்டறிந்தது மகத்தான ஒன்று. கடல் இருக்கும் வரை இந்தக் கண்டுபிடிப்புக்காகப் பாண்டியப் பேரரசின் புகழை உலகம் பாடும்” என்றான் ஹிப்பாலஸ்.

அவமான உணர்வால் துவண்டுபோயிருந்த குலசேகரப்பாண்டியனுக்கு, மீண்டும் புத்துணர்வு ஊட்டுவதாக இருந்தது ஹிப்பாலஸின் பேச்சு. பறம்பின் மீதான பழிவாங்கும் உணர்வு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த நேரத்தில், அதற்கு இன்னொரு பரிமாணத்தை அவன் வழங்கினான்.

நீண்ட நெடுங்காலமாகத் தமிழ் நிலத்துக்கும் யவனத்துக்கும் இடையில் கடல் வணிகம் நடந்துவருகிறது. நுரைதள்ளும் கரைவழிப் பயணமாக இரு நிலத்துக் கடலோடிகளும் பல தலைமுறைகளைக் கழித்துவிட்டனர். இரு நாகரிகங்களும் எண்ணற்றவற்றைப் பரிமாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த இரு நிலப்பரப்புகளில் இருப்பவர்களும் கண்டு பெரிதும் வியக்கும் கண்டுபிடிப்பாக தேவாங்கு இருக்கிறது. `சாகசத் தளபதி’ என்று உலகெங்கும் பெயர்பெற்ற ஹிப்பாலஸ், தனது மிகப்பெரிய நாவாய் எரிந்த துயரைக் கடந்து, கண்டறியப்பட்ட தேவாங்குக்காக, தன்னை வணங்கி நிற்கிறான் என்றால் அது எளிதான ஒன்றல்ல.

ஹிப்பாலஸும் குலசேகரப்பாண்டியனும் அடுத்து நடக்க வேண்டியவற்றைப் பற்றி நிறைய பேசினர். அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது உதியஞ்சேரலைப் பார்க்க வந்துள்ளான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P88e_1513158110
பறம்பின் மீதான உதியஞ்சேரலின் போர்த் திட்டங்களைப் பற்றித்தான் அவன் உரையாடினான். ஹிப்பாலஸுடன் எபிரஸ், திரேஷியன் இருந்தனர். குடநாட்டு அமைச்சன் கோளூர் சாத்தன் கொல்லிக்காட்டு விதையைப் பெற்றுத்தருவதாகக் கூறி, பறம்புக்குச் சென்று பாரியிடம் வணிகம் பேசியதையும், அதன் பொருட்டு கை துண்டிக்கப்பட்டதையும் கூறிய அவர்கள், குடநாட்டினர் இப்போது உதியஞ்சேரலோடு இணைந்து பறம்புக்கு எதிராகச் செய்யும் முயற்சியையும் பகிர்ந்துகொண்டனர்.

யவனர்கள் இங்கு நிகழும் எல்லாவற்றையும் அறிந்துவைத்துள்ளது உதியஞ்சேரலுக்கு வியப்பளிக்கும் ஒன்றாக இல்லை. பல தலைமுறைகளாகச் செழித்தோங்கியிருக்கும் வணிகம், அரசியலுக்குள் ஆழமான வேர்களைச் செலுத்தியிருக்கும் என்பதை அவன் அறிவான்.

ஆனால், பாரியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று நீண்டநெடுங்காலமாக சிந்தித்துச் செயல்பட்டுக்கொண்டிருப்பது குட்டநாடு. உதியஞ்சேரலின் தந்தையான செம்மாஞ்சேரலைக் கொன்றழித்தவன் பாரி. அதற்குப் பல காலத்துக்கு முன்பே பகை தொடங்கிவிட்டது. உதியஞ்சேரல் பட்டமேற்ற பிறகு பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறான்.

அவனோடு முரண்பட்டு விலகியிருந்த குடநாட்டு வேந்தன் குடவர்கோவும் இப்போது இணைந்து செயல்பட முன்வந்துள்ளான். இது சூழலை மிகவும்  ஏதுவாக மாற்றியுள்ளது என்று உதியஞ்சேரல் எண்ணிக்கொண்டிருக்கும் போதுதான் வைப்பூரின் மீதான பாரியின் தாக்குதல் நடந்துள்ளது.

எதிரிகளின் எண்ணிக்கையை, பாரி போதுமான அளவுக்கு அதிகப்படுத்திக்கொண்டான். இதைவிட நல்லகாலம் இனி வாய்க்காது என்று உதியஞ்சேரல் நினைத்துக்கொண்டிருந்தபோது தான் ஹிப்பாலஸ் வந்துசேர்ந்துள்ளான். பேரியாற்றங்கரையின் நெடுவுயர் மன்றத்தில் நடந்தபடியே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

வைகையின் தென்கரைப் படித்துறையில் இருந்த நிலைமாடத்தில் தனித்திருந்தார் குலசேகரப்பாண்டியன். பொழுது கவியக் காத்திருந்தது. ஆற்றங்கரை எங்கும் கூடு திரும்பும் பறவைகளின் கீச்சொலி கேட்டுக்கொண்டிருந்தது. வைகை சீற்றமின்றி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், குலசேகரப்பாண்டியனின் எண்ணவோட்டம் அப்படியில்லை. அது கட்டுக்கடங்காமலே இருந்தது. நீண்டநெடும் அரசியல் அனுபவம், அவருடைய எண்ணங்களை வழிநடத்த முடியாமல் திணறியது. அவர் சிறிது நேரம் நடப்பதும் பிறகு உட்காருவதும் உட்கார்ந்த உடனே எழுந்து நடப்பதுமாக இருந்தார்.

தொலைவில் காவல் வீரர்கள் நின்றிருந்தனர். அவர்களைக் கடந்தே முசுகுந்தரும் மற்றவர்களும் நின்றிருந்தனர். யாரும் நெருங்க முடியாச் சீற்றம்கொண்டிருந்தார் பேரரசர். ஓடும் வைகை, மூழ்கும் கலங்களைக் கண்களுக்குக் காட்டிக் காட்டி மறைத்துக்கொண்டிருந்தது. அவர் தனிமையில் சிந்திக்கவும் ஓய்வெடுக்கவும் எவ்வளவோ இடங்கள் உண்டு. ஆற்றங்கரை மண்டபத்துக்குப் போனால் வைப்பூரின் நினைவே மீண்டும் மீண்டும் வரும். எனவே, அதைத் தவிர்க்கலாம் என்றுதான் பலரும் சொல்லிப்பார்த்தனர். ஆனால், பேரரசர் வேறு எங்கும் போகாமல் தொடர்ந்து இங்குதான் வருகைதந்தார். அதற்குக் காரணமும் இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P88f_1513158149
பாரியின் புகழ், நிலமெங்கும் பரவியிருந்தது. அது ஆள்வோருக்கு இயல்பாகப் பொறாமையை உருவாக்கியிருந்தது. இடைவிடாது பாடித் திரியும் பாணர்கள் தங்கள் குரல் நாளங்கள் விடைப்புற்று வலியெடுக்கும்போதும் பாரியைப் பற்றியே பாடுகின்றனர். சொற்களுக்குள் உருளும் பாரியின் நினைவு, குரல் நாளங்களுக்கு இதம் தருவதாக பாணர் குலமே கருதியது. தோற்பறையை நெருப்பிலே சூடேற்றி ஒலியெழுப்பும் பக்குவத்துக்குக் கொண்டுவருதல்போல பாடிக் களைத்த குரல் நாளங்களை மீண்டும் பாடும் பக்குவத்துக்குக் கொண்டுவர பாரியைப் பற்றிய பாடல்கள் உதவி செய்வதாகவும் பேசினார்கள். பாரியைப் பற்றிய பாணர்களின் பேச்சும் பாட்டும் இசையும் கூத்தும் வேந்தர்களின் ஆழ்மனதில் வெறுப்பை இடைவிடாது உமிழ்ந்துகொண்டிருந்தன. புகழைப் பழுக்கக்காய்ச்சி வேந்தர்களின் அடிநெஞ்சில் இடைவிடாமல் ஊற்றினர். அது எல்லா வகைகளிலும் வினையாற்றிக்கொண்டே இருந்தது.

பாரியின் மீது வெறுப்பும் பொறாமையும் குலசேகரப்பாண்டியனுக்கும் உண்டு. ஆனாலும் தேவாங்குக்காகப் போர் தொடுக்க வேண்டும் என்று கருங்கைவாணனும் பொதியவெற்பனும் கூறியபோதும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், பொறாமையும் வெறுப்பும் மனித மனத்தைக் குறைந்த அளவே இயக்கும் ஆற்றல்கொண்டவை. பகை மட்டும்தான் அளவற்ற வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல்கொண்டது. பாண்டிய நாட்டுக்குப் பறம்பின் மீது பகை உருவாகவேயில்லை. அதன்பொருட்டே குலசேகரப்பாண்டியன் போர்தொடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை. பெரும் மலைத்தொடருக்குள் இருக்கும் ஒரு நாட்டைக் கைப்பற்ற வளமிக்க போர்ப்படை மட்டும் போதாது; அதை வழிநடத்துபவர்களுக்கு ஆறாப்பகை இருக்க வேண்டும். அதுதான் அவர்களைச் சினம் குறையாமல் இயக்கிக்கொண்டேயிருக்கும். பகை, கணம்தோறும் ஊறிப் பெருகக்கூடியது. சூழலில் நிகழும் ஒவ்வொரு காரணத்தையும் பகை தன்னைப் பெருக்கிக்கொள்ள இயல்பாகப் பயன்படுத்திக்கொள்ளும். வெறும் பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்துவிடும். பகை மட்டுமே மூட்டியவனால்கூட அணைக்க முடியாத பெருநெருப்பு.

இப்போது பாண்டிய நாட்டுக்குப் பறம்பின் மீது தீராப்பகை உருவாகிவிட்டது. நகரும் நதிநீரை கணம்தோறும் பார்த்தவண்ணமே அந்தப் பகையைக் கொழுந்துவிட்டெழச் செய்துகொண்டிருக்கிறார் குலசேகரப்பாண்டியன்.

பேரியாற்றங்கரையின் நெடுவுயர் மன்றத்தில் நடந்தபடியே உதியஞ்சேரலும் ஹிப்பாலஸும் பேசிக்கொண்டிருந்தனர். உதியஞ்சேரல் வயதில் மிக இளையவன். ஹிப்பாலஸைப்போல நெடிய உயரம்கொண்டவன். அவனது அறிவுக் கூர்மையைப் பலரும் பாராட்டுவதை எத்தனையோ முறை கேட்டுள்ளான் ஹிப்பாலஸ். 

குலசேகரப்பாண்டியன் பறம்புக்கு எதிரான வேலைகளைத் தொடங்கிவிட்டதாக ஹிப்பாலஸ் சொன்னபோது, உதியஞ்சேரல் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

சிற்றலைகள் எழுந்தபடியிருந்த பேரியாற்றின் கரையில் கண்களை அங்குமிங்குமாக ஓடவிட்டவாறு உதியஞ்சேரல் சொன்னான், ``பகைமைகொண்டு இயங்குபவன் விரைவில் வலிமை இழப்பான். பகை, சினத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும். போருக்குத் தேவை சினமன்று. ஆனால், இதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பகை பின்னுக்குத் தள்ளிவிடும். எனவே, பாண்டியன் இப்போது எடுக்கும் முடிவால் பறம்புக்கு எந்த ஆபத்தும் நிகழப்போவதில்லை.”

உதியஞ்சேரலின் உரை கேட்டு அதிர்ச்சியானான் ஹிப்பாலஸ். பறந்துவந்த மீன்கொத்தி ஒன்று சட்டென மீனைக் கொத்தித் தூக்கியதைப் பார்த்தபடி உதியஞ்சேரல் சொன்னான், ``தேவாங்கின் ஆற்றலைக் கண்டறிந்தது பாண்டியனின் அறிவுக்கூர்மையைக் காட்டுகிறது. ஆனால், அதைப் பிடித்துவர திரையர்களை அனுப்பியது மலைமக்களைப் பற்றிய அறிவற்றதனத்தையே காட்டுகிறது.”
ஹிப்பாலஸ், புரியாமல் விழித்தான்.

``நாம்     இவ்விடம்  வந்து   இருபொழுது களாகின்றன. அந்த மீன்கொத்தி, நீண்டநேரம் நாணலில் உட்கார்ந்திருந்தது. பிறகு அந்த மரக்கிளையில் போய் உட்கார்ந்திருந்தது; காற்றிலே வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. ஏதோ ஒரு கணத்துக்காக அது காத்திருந்தது. அந்தக் கணம் வந்தவுடன் மலையின் மேலிருந்து பாய்ந்து இறங்கும் வீரனைப்போல காற்றைக் கிழித்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் மீனைக் கவ்வித் தூக்கியது.

நீருக்குள் இருக்கும் மீனை நீரைவிட்டு வெளியில் இருக்கும் ஓர் உயிரினம் வேட்டையாடுவதைப்போல சவால் நிறைந்தது வேறில்லை. நீரின் மேற்பரப்பில் நீந்திக்கொண்டிருக்கும் மீன், மீன்கொத்தியின் அலகைத் தாண்டிய ஆழத்துக்குப் போகும் முன் காற்றைக் கிழித்துக் கீழிறங்கி வரவேண்டும். அப்படியென்றால், எவ்வளவு துல்லியமான கணிப்பு தேவை. பார்வையின் கூர்மை, சிறகு அசைக்கும் வேகம், கொத்தித் தூக்கும் அலகின் துடிப்பு எல்லாம் ஒருங்கிணைய வேண்டும். ஆனால், எந்தக் காத்திருப்பும் ஆயத்தமும் இல்லாமல் கடகடவெனக் காட்டுக்குள் இறங்க முடிவெடுத்தான் பாண்டியன். அவனது அறியாமை எல்லையற்றது” என்றான் உதியஞ்சேரல்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P88g_1513158189
வயதில் மிக மூத்தவரான பேரரசர் குலசேகரப்பாண்டியனின் அரசியல் நடவடிக்கையை, சொற்களால் இடித்துத் தள்ளினான் உதியஞ்சேரல். ஹிப்பாலஸுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை.
``பறம்பின் மீது போர் தொடுப்பது என நான் முடிவெடுத்து, பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்னும் நாணலின் மீது உட்கார்ந்தும் கொப்பில் அமர்ந்தும் காற்றில் பறந்தபடியும்தான் இருக்கிறேன். நீரை நோக்கிப் பாயும் நேரம் இன்னும் கைகூடவில்லை” சொல்லும்போது அவன் கண்கள் சிவந்தன. முறுக்கேறிய கைகளின் ஆவேசத்தை அவனால் கட்டுப்படுத்த முடிந்தது.

``அந்தக் கணம் வரை நான் காத்திருப்பேன். சீவப்பட்ட என் தந்தையின் தலைக்கு ஈடாக, பாரியின் தலையை மண்ணில் சரிப்பேன்.” சொற்களிலிருந்த உறுதி ஹிப்பாலஸையே உலுக்கியது.

``குடநாடும் நீங்களும் பறம்புக்கு எதிராகப் போர்புரிய ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கியுள்ளதாக அறிகிறேன். அதேபோல பாண்டியருடனும் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கலாம் அல்லவா?”
``அதற்கான தேவையும் இல்லை. அதனால், எந்தப் பலனும் நேரப்போவதில்லை.”

``ஏன்?”

``எங்களைவிட மூன்று மடங்கு பெரும்படை பாண்டியர்களிடம் இருக்கும் என்று கருதுகிறேன். ஆனால், பாண்டிய நாட்டின் நிலவியல் அமைப்பு, பச்சைமலைத் தொடரின் தன்மை இவற்றைக்கொண்டு பார்த்தால், கீழ் திசையிலிருந்து பறம்பை எதுவும் செய்துவிட முடியாது. காரமலையைக்கூட அவர்களால் தாண்ட முடியாது. மேலேறும் பாண்டியர் படையை அழித்தொழிக்க, பாரிக்கு அதிகப்பொழுது தேவைப்படாது.”

``பேரரசின் படையை அவ்வளவு எளிதில் அழித்துவிட முடியும் என்றா சொல்கிறீர்கள்?”

``பறம்பின் ஆற்றல் என்ன என்று பத்தில் ஒரு பங்குகூட பாண்டியர்களால் உணர முடியாது. அதனால்தான் அறிவீனமான செயல்களைச் செய்துதொலைக்கிறார்கள்.”

உதியஞ்சேரலின் கோபத்துக்கான காரணத்தை ஹிப்பாலஸால் புரிந்துகொள்ள முடியவில்லை. ``குடநாடும் குட்டநாடும் பச்சைமலைத் தொடரின் பெருங்காட்டின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறோம். எங்களாலேயே அவனது ஆற்றலை இன்று வரை அளவிட முடியவில்லை. எல்லை கடந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறான் அவன். அப்படி இருக்கும்போது, எங்கோ இருந்த திரையர்களையும் அவர்களோடு சேர்த்துவிடும் மூடத்தனத்தைக் கண்டு சினம்கொள்ளாமல் என்ன செய்வது?”

உதியஞ்சேரலின் சினத்துக்கான காரணத்தை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது.

``இதுவரை பாரியின் புகழை மட்டுமே பாடிக்கொண்டிருந்த பாணர்கள், இப்போது `வேந்தர்களை மீறிய வீரம்கொண்டவன் பாரி’ எனப் பாடுகின்றனர். வேளிர்களை வேந்தர்களுக்கு இணையாகச் சொல்கின்றனர்.

இதற்கெல்லாம் தளம் அமைத்துக்கொடுத்துவிட்டான் பாண்டியன்.”

உதியஞ்சேரல் அடுக்கடுக்காக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைக் கேட்டபடி நின்றுகொண்டிருந்தான் ஹிப்பாலஸ். அடுத்து என்ன சொல்வதென அவனுக்குத் தெரியவில்லை.

பேரியாற்றைப் பார்த்துக்கொண்டே பேசிய உதியஞ்சேரலின் முகத்தில் சற்றே மாறுபட்டதன்மை வெளிப்பட்டது. இழுத்து மூச்சுவாங்கி விட்டபடி சொன்னான், ``நடந்தவை எல்லாவற்றையும் நினைத்துப்பார்க்கும்போது பாண்டியன் செய்தது எல்லாமே பிழை. ஆனால், பறம்பின் வீரர்கள் செய்த பிழையும் ஒன்று இருக்கிறது. அதைத்தான் முக்கியமாகக் கவனிக்கவேண்டியுள்ளது.”

இவ்வளவு நேரம் நிகழ்ந்த உரையாடலில் மிக முக்கியமான ஒன்றைப் பற்றி இப்போது உதியஞ்சேரல் பேசுவதாக ஹிப்பாலஸுக்குத் தோன்றியது.

சற்றே ஆர்வத்தோடு கேட்டான், ``என்ன அது?”

``இளமாறனை வெட்டி வீசியது.”

ஹிப்பாலஸ் வியப்பு நீங்காமல் பார்த்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P88h_1513158203
``மையூர்கிழாரின் மகன் இளமாறனின் தலையை வெட்டி வீழ்த்தியதன் மூலம் வெங்கல் நாட்டின் பகையைத் தேடிக்கொண்டனர். எந்தக் காரணம்கொண்டும் பறம்புக்குத் தீங்கு செய்ய மாட்டோம் என்று உறுதிபூண்ட குலம் அது. ஆனால், இன்று வெங்கல் நாட்டுத் தலைவர் மையூர்கிழார் தன் மகனின் சாவுக்குப் பழிதீர்க்கச் சூளுரைத்துள்ளார். வெங்கல் நாட்டின் பல ஊர்கள் பச்சைமலைத் தொடரில் உள்ளடங்கியுள்ளன. பறம்பின் ஊர்கள் பலவற்றோடு அந்த மக்களுக்கு நல்ல உறவு உள்ளது. இது எங்களுக்குக்கூடக் கிடைக்காத வாய்ப்பு.”

ஹிப்பாலஸின் கண்கள் அசைவற்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தன.

உதியஞ்சேரல் இறுதியாகச் சொன்னான், “குலசேகரப்பாண்டியன் சரியாகத் திட்டமிடுபவனாக இருந்தால், பாரியின் முடிவைத் தீர்மானிப்பவனாக மையூர்கிழாரை மாற்ற முடியும்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 11:44 am

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83a_1513662493
மூன்று வகையான திட்டங்களை முன்வைத்தான் கருங்கைவாணன். மழைக்காலம் முடிந்துவிட்டது; இனி நெடுங்கோடைதான். எனவே  கோடைக்காலத்துக்கேற்ப உத்திகளை வகுத்தான். பாண்டியப் பெரும்படையின் வலிமை அளவற்றது; வேறெந்தப் பேரரசுடனும் ஒப்பிட முடியாதது; தொடர்ந்து எண்ணற்ற வெற்றிகளை ஈட்டிவருவது. அறுவடைக்காலம் முடிந்ததும் இதுபோல் இன்னொரு மடங்கு வீரர்களைத் திரட்ட முடியும். எனவே, கருங்கைவாணன் வகுத்த திட்டத்தில் இடம்பெற்றிருந்த வீரர்களின் எண்ணிக்கை இந்த மண் அறியாதது.

``பாண்டியப்படை கேடயத்தோடு வாள் உரசும் ஓசையை, மூன்றாம் மலை கடந்து பாரி உணர்வான்’’ என்றான் கருங்கைவாணன். அவனது திட்டங்களையும் போர் உத்திகளையும் கண்டு பொதியவெற்பனும் முசுகுந்தரும் வாயடைத்துப்போயினர். திதியன், கருங்கைவாணனின் நிழல்போல் எந்நேரமும் உடன் இருந்தான். மலைப்பகுதியில் அமைக்கவேண்டிய உத்திகளைப் பற்றி அவன்தான் ஆலோசனைகளை வழங்கியவன். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துத்தான் திட்டங்களை வகுத்திருந்தனர்.

போரில், வழக்கமாக வெற்றியே நோக்கமாக இருக்கும். ஆனால், இந்தப் போரில் அதைக் கடந்த நோக்கங்கள் நிறைய இருந்தன. ஆறாப்பகையைத் தீர்த்துக்கொள்ளவேண்டிய தேவையிருந்தது. வாழ்வில் இதுவரை அடையாத அவமானத்தை அடைந்தவனாகக் கூனிக்குறுகிப்போயிருக்கிறான் கருங்கைவாணன். அவன் வழிநடத்திய ஒரு போரில்கூட பாண்டியர் படை தோல்வியைத் தழுவவில்லை. ஆனால், அவனது தவறுதலான கணிப்பால் நெஞ்சுக்குழிக்குள் ஈட்டியை இறக்கிவிட்டனர் திரையர்கள். பகலையும் இரவையும் கடக்க முடியாமல் துடிக்கும் ஒருவனாக அவன் இருக்கிறான். வேதனைக்கு அணுஅணுவாக முகங்கொடுக்கும் கருங்கைவாணன், எப்போதும் அரண்மனையில் தலை கவிழ்ந்தே நிற்கிறான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83b_1513662483
போருக்கான அனுமதியைப் பேரரசர்  தராமல் காலங்கடத்தும் ஒவ்வொரு நாளும் அவன் அடையும் வேதனை அளவற்றதாக இருக்கிறது. இந்த முறை வகுக்கப்பட்டுள்ள திட்டத்தைப் பேரரசர் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தான் அவன்.

நேற்று மிக நீண்டநேரம் வைகையின் தென்துறை நிலைமாடத்தில் இருந்த பேரரசர், அதன் பிறகு யாரையும் சந்திக்கவில்லை. காலையில் அவரின் வருகைக்காக இளவரசனும் முசுகுந்தரும் கருங்கை வாணனும் காத்திருந்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு பேரரசர் வருகை தந்தார். அவரது முகத்தை மகிழ்வோடு எதிர்கொள்ள இன்னும் யாருக்கும் துணிவு வரவில்லை. வணங்கி வரவேற்ற அவர்கள், குனிந்த தலையை நிமிர நீண்டநேரமானது.

கருங்கைவாணன், போருக்கான மூன்றுவிதமான திட்டங்களையும் விளக்கினான். தோல் மடிப்புகளை ஒவ்வொன்றாக விரித்து விரித்து, படை நகர்வுகளையும் தாக்குதலையும் மிகுந்த நிதானத்தோடு சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் பேரரசர், கவனமாகக் கேட்பதைப்போல்கூடக் காட்டிக்கொள்ளவில்லை. அவரின் கண்ணசைவுகள் எல்லாவற்றையும் எளிதில் கடந்து போய்க்கொண்டிருந்தன. யாராலும் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எதிர்பார்ப்புதான் என்ன என்பது விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.

அவர் அடுத்த பணிக்காக அவையை விட்டு நீங்கியபோது கருங்கைவாணனும் பொதியவெற்பனும் கூனிக்குறுகிப்போயினர். முசுகுந்தர், கலங்கிய முகத்தோடு அவருக்குப் பின்னால் போய்க் கொண்டிருந்தார்.

முன்புபோல் கலங்கிப்போயிருக்கவில்லை பொற்சுவை. அவளின் முகம் தெளிவுகொண்டிருந்தது. காலம் எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும்; கற்றுக்கொள்ளும் சுவை அறிந்தவளுக்குக் கணக்கின்றிக் கற்றுக்கொடுக்கும். வெளிமாடத்தில் நின்றபடி சக்கரவாகப் பறவை பறந்து சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே இருந்த காலம் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்தாள். தன்னுள்ளும் தன்னைச் சுற்றியும் என்னதான் நிகழ்கிறது என்பதை அறியத் தொடங்கினாள்.

வைப்பூரில் நெருப்புப் பற்றிய செய்தி வந்தபோது, அரண்மனையே அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தது. ஆனால், அவள் அதிர்ச்சியடைய அதில் ஒன்றுமில்லை. நெருப்பினும் கொடும் அழிவை அகவாழ்வில் கண்ட ஒருத்திக்கு, நெருப்பின் சூடு புதியதாகத் தாக்க என்னவிருக்கிறது? மூழ்கிய கலங்களைப் பற்றியும் மிதந்த சாம்பலைப் பற்றியும் நாள் கணக்கில் பேசினர். அதற்கு வெகுநாள்களுக்கு முன்பிருந்தே அவள் அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஏறக்குறைய அவளின் அனைத்துக் கனவுகளுக்கும் அதுதான் நிகழ்ந்தது; எந்தவித மிச்சமுமின்றி நிகழ்ந்தது. வைப்பூருக்காவது வைகை மிஞ்சியது; பொற்சுவைக்கு மிஞ்ச எதுவுமில்லை.
துயரம், தன்னுள் மட்டுமல்ல... அரண்மனையின் வெளி முழுவதும் பரவியிருக்கிறது என்பதை உணர்ந்தாள். குலசேலரப்பாண்டியனும் பொதியவெற்பனும் சூல்கடல் முதுவனும் ஒருசேர மனமொடிந்து கிடப்பதாகக் கேள்விப்பட்டாள். மேல் மாடத்தில் வீற்றிருந்த அவளை, வைகையின் இளங்காற்று தழுவிக் கடந்தது. நெருப்பும் துயரமும் தன்னை நோக்கி வர மறுப்பதை அறிந்தபோது வைகை நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தாள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83c_1513662513
அழிவு நீக்கமற நிகழ்ந்துவிட்டது. மணவிழாவின் நினைவுப்பரப்பெங்கும் துயரம் பரவிக்கொண்டிருப்பதைப் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் அமைதியுடன் கவனித்தபடி இருந்தாள். நீண்ட தனிமை அவளுக்குத் தேவைப்பட்டது. தனித்திருத்தல், அவளின் இயல்புக்கு முற்றிலும் மாறானது. ஆனாலும் அதற்குள் புகுந்தாள். நீண்டநாள்களாக சுகமதியைக் கண்டு பேசவில்லை.

மாதங்கள் சில ஓடிய பிறகு இப்போதுதான் சுகமதியை அழைத்துவரச் சொல்லி, பணிப் பெண்களை அனுப்பினாள்.  

பின்தொடர்ந்து போன முசுகுந்தர் விரைந்து நடந்து அவரை அணுகவும் முடியாமல், மிகவும் பின்தங்கியும்விடாமல் நடந்து வந்தார். அதாவது, பேரரசருக்குப் பின்னால் அமைச்சர் நடந்து வருகிறார் என்பதைப் பேரரசர் உணரக்கூடிய நிலையில் வந்துகொண்டிருந்தார்.

முசுகுந்தரின் மனம், பேரரசரைப் புரிந்து கொள்ள இடைவிடாது முயன்றுகொண்டிருந்தது. வைப்பூரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் பாண்டிய நாட்டின் புகழில் நிரந்தரமான கறை விழுந்துவிட்டது என்று பலரும் பேசுகின்றனர். அதைச் செய்தவர்களை அழித்தொழித்தால் மட்டுமே, இந்தக் கறையை அகற்ற முடியும்; பேரரசின் புகழை நிலைநாட்ட முடியும். ஆனால், பேரரசர் ஏன் தாக்குதலுக்கான அனுமதியைக் கொடுக்க மறுக்கிறார்?

``வைப்பூர்த் துறைமுகத்தைப் புதுப்பிக்கும் பணியை உடனடியாகச் செய்ய வேண்டும்; முன்னிலும் பெருந்துறைமுகமாக அதை வடிவமைக்க வேண்டும்’’ என்று வெள்ளிகொண்டார் கேட்டதற்கும் பேரரசர் அனுமதி வழங்கவில்லை.

பேரரசின் வலிமை என்பது, அழிக்கப்பட்ட ஒன்றை அதைவிடப் பல மடங்கு சிறப்போடு கட்டி எழுப்புவதில் உள்ளது. ``துறைமுகம் என்பது செல்வத்தின் கண்; நாம் அதை விரைந்து செப்பனிட வேண்டும்” என்று வெள்ளிகொண்டார் கேட்டுள்ளார்.

``எரித்தவனை அழிக்காமல், எரிக்கப்பட்ட பொருளை மீண்டும் அலங்கரிக்க நினைப்பது அவமானம்” என்று கூறியுள்ளார் பேரரசர்.

அப்படியென்றால் பாரியை வீழ்த்திவிட்டுத்தான் வைப்பூரைப் புதுப்பிக்கும் பணியைச் செய்யும் முடிவோடு இருக்கிறார் என்பது புரிகிறது. பிறகு ஏன் படையெடுப்புக்கான எந்தவித அனுமதியும் வழங்க மறுக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் முசுகுந்தரின் மனம் தவித்தது.

பேரரசர், சித்திரக்கால் மண்டபத்துக்குள் நுழைந்தார். குழம்பிய மனதோடு அவரின் பின்னாலேயே போன முசுகுந்தர், அரசரைப் பார்க்க அனுமதி கேட்டு, பணியாளனை உள்ளே அனுப்பினார்.

சுகமதி உள்ளே நுழைந்தாள்.

கார்காலப் பள்ளியறையிலிருந்து வேனிற்காலப் பள்ளியறைக்கு இளவரசி மாறப்போவதால், இங்கிருந்து அங்கு எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களைப் பணிப்பெண்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.

சுகமதியைப் பார்த்ததும் உள்ளறைக்குப் போய் செய்தி சொன்னாள் ஒருத்தி. உள்ளிருந்த பொற்சுவை, மாளிகையின் நடுமண்டபத்துக்கு வந்தாள். வேலை செய்துகொண்டிருந்த பணிப் பெண்கள் இடம் விட்டு வெளியேறினர்.

நடுவில்  இருந்த பெருங்கட்டிலில் பட்டுமெத்தைப் படுக்கையின் மீது செந்நிறப்  பட்டால் வடிவமைக்கப் பட்ட எலிமயிர்ப் போர்வை ஒழுங்கற்ற மடிப்போடு கிடந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த சுகமதியின் கண்கள் சட்டெனத் திரும்பி உள்நுழையும் பொற்சுவையைப் பார்த்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83d_1513662526
பார்த்த கணத்தில் இயல்பான பேச்சு தொடங்கியது. ``கார்காலம் முடிந்துவிட்டது. எனவே, வேனிற்காலப் பள்ளியறைக்கு இளவரசி இடம்பெயர்வது அரண்மனை வழக்கமாம். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன சுகமதி” என்றாள்.

சற்றே மெல்லிய குரலில் ``எல்லாம் வழக்கப்படி தான் நடக்கின்றனவா?” என்று கேட்டபடி இடப்புறமாகத் திரும்பி ஒழுங்கற்ற போர்வை மடிப்பைப் பார்த்தாள் சுகமதி.

அசட்டுச் சிரிப்போடு பொற்சுவை சொன்னாள், ``நானும் உன்னைப்போல்தான் நினைத்தேன். இதே கேள்வியை எனக்குள் கேட்டுக்கொண்டேன்.”

சுகமதிக்குப் புரியவில்லை.

``எல்லாம் வழக்கப்படி நடக்கின்றனவா? அப்படி நடக்கவில்லையே என முடிவுசெய்து உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், காலம் தாழ்த்திதான் உணர்ந்தேன் எல்லாம் வழக்கப்படிதான் நடக்கின்றன.”

சுகமதி கேட்டதன் பொருள் சற்றே வெளிப்படையாகத்தான் இருந்தது. ஆனால், பொற்சுவை சொல்வதற்குள் என்ன பொருள் இருக்கிறது என்பது புரியவில்லை.

`வெளிப்படையாகவே கேட்போம்’ என்று சுகமதிக்குத் தோன்றியது. படுக்கையின் அருகில் வந்தாள், எலிமயிர்ப் போர்வையை மெள்ளத் தொட்டுப் பார்த்தபடி, ``இந்தப் போர்வை உங்கள் இருவரின் உடல்களை உணர்ந்ததா?”

``அதை நீ அறியவேண்டாம் சுகமதி. என்னைப்போல் நீயும் சிக்கிக்கொள்ள நேரிடும்.”

பழைய சுகமதியென்றால் தலை கவிழ்ந்து சொற்களை உள்வாங்கி நிதானமாக அடுத்த வினாவைக் கேட்டிருப்பாள். ஆனால், இப்போது அப்படியல்ல. கவிழ்ந்த தலையைச் சட்டென நிமிர்த்திக் கேட்டாள், ``உண்மையில் நீங்கள் யாரிடம் சிக்கிக்கொண்டுள்ளீர்கள், காதலனிடமா... பொதியவெற்பனிடமா?”

``பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக்கொள்ள மாட்டாள். அவள் சிக்கிக்கொள்வது அவளிடம் மட்டும்தான்” எனக் கண நேர இடைவெளியின்றிச் சொற்களை எறிந்துவிட்டு நடந்தாள் பொற்சுவை. சுகமதிக்கு எதிர்பாராத பதிலாக இருந்தது.

பொற்சுவை தொடர்ந்தாள், ``ஆண் ஒருபோதும் பெண் மனதைக் கண்டறிய முடியாது. பெண்ணுடல், பிரித்தறிய முடியாத மர்மங்களின் சேர்மானம். ஆண்களால் கணிக்கவே முடியாத கற்பாறை. எனவே, ஆணைக் கண்டு எனக்கு எப்போதும் பயம் இல்லை. நான் சிக்கிக்கொண்டிருப்பது என்னிடம்தான்.”

``உங்களிடமே நீங்கள் சிக்கிக்கொண்டுள்ளீர்கள் என்றால், உங்களை விடுவிக்கும் ஆற்றலும் உங்களிடம் உள்ளது என்றுதானே பொருள்!”

``உனது பேச்சுமொழியே மாறிவிட்டது சுகமதி. முன்னிலும் தெளிவாகப் பேசுகிறாய்” என்று சுகமதியை வெகுவாகப் பாராட்டினாள். ஆனால், அவளின் சிக்கல் என்னவென்று மட்டும் சொல்லவில்லை.

பொற்சுவையின் பின்னால் நடந்தபடியிருந்த சுகமதி, தான் எழுப்பிய கேள்வியிடமிருந்து மட்டும் நகரவில்லை, ``பெண் மனதை ஆண் கணிக்கவே முடியாது என்றா சொல்கிறீர்கள்?”

``ஆம், அதில் என்ன ஐயம்? நதியின் ஆழத்தைப் படகு அறியாது. நீரின் போக்கில் நகர்வதே அதற்கு இன்பம் பயக்கக்கூடியது. அதன் தேவையும் அதுதான்.”

``எல்லா ஆண்களையும் அப்படிச் சொல்லிவிட முடியுமா?”

``ஆண் என்ற வடிவத்துக்கு விதிவிலக்குகள் இல்லை சுகமதி.”

அதிர்ந்தாள். அவளது முகம், பொற்சுவை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறியது.

``நீலம் என்பது வானத்தின் விதியல்ல, இயல்பு. விதியாக இருந்தால் விதிவிலக்கு இருக்கும். இயல்பாக இருந்தால்?”

சுகமதி திகைத்து நின்றாள்.

காரணம் புரியாத திகைப்பிலும் குழப்பத்திலுமிருந்து முசுகுந்தர் மீளவில்லை. உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்தார்.

பேரரசரின் அழைப்பை, பணியாளன் வந்து சொன்னான். உள்நுழைந்தார் முசுகுந்தர்.

பேரரசரைப் பார்த்துவிட்டுச் சிலர் வெளியேறினர். அவர்கள் யாரென முசுகுந்தரால் அறிந்துகொள்ள முடியவில்லை. யாராக இருக்கும் என்ற சிந்தனையிலேயே பேரரசரின் முன் வந்து நின்றார்.

வந்து நின்ற கணத்தில் பேரரசர் கேட்டார், ``நாம் செய்த பிழை என்ன அமைச்சரே?”

அழுத்திக்கொண்டிருந்த கட்டி வெடித்ததைப்போல் இருந்தது. இந்தக் கேள்வியைக்கூட இத்தனை நாள் அவர் கேட்கவில்லை. வாழ்க்கை முழுவதும் சந்தித்திராத அவமானத்தை இந்தக் காலத்தில்தான் முசுகுந்தர் சந்தித்தார். வைப்பூரின் அழிவுக்குப் பிறகு ஒற்றைக் கேள்விகூட அவர் கேட்கவில்லை. அந்தப் பெரும் அழிவை நேரில் பார்த்தவர் முசுகுந்தர்தான்.  எதையும் கேட்க மறுத்ததன்மூலம் உருவான நிராகரிப்பை, அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

`இப்போதாவது கேட்டாரே!’ என்று சற்றே ஆறுதலுடன் சொன்னார், ``தேவாங்கைக் கொண்டுவந்தவர்கள் எல்லாம் திரையர்கள்தானா என்பதைச் சோதிக்கத் தவறியது.”

``இல்லை. `திரையர்கள் வீழ்ந்து விட்டார்கள்’ என்று கருங்கைவாணன் சொல்லியதை நம்பியது.”

பேரரசரின் எண்ணம் எவ்வளவு உள்ளோடியதாக இருக்கும் என்பதை நன்கு தெரிந்த முசுகுந்தரே முதல் கேள்வியிலேயே மூச்சுமுட்ட நின்றார்.

பேரரசர் தொடர்ந்தார், ``படைவீரர்கள் தாம் தோற்றவுடன் வீழ்வார்கள். குலம் காக்கும் போராளிகள் ஒருபோதும் வீழ மாட்டார்கள்; கடைசிக் கணத்திலும் வெகுண்டெழுவார்கள்.”

பேரரசரின் சொல் முசுகுந்தருக்கு எந்தச் சொல்லையும் விட்டுவைக்க வில்லை.

``வெற்றி என்பது, போர் வீரர்களாலும் போர் உத்திகளாலும் நிகழ்வது என்று நம்புகிறான் கருங்கைவாணன். இல்லை,  இறுதியாக  அது கனிவது எதிரி தரும் வாய்ப்பில்தான். எதிரியையே நம்மால் கணிக்க முடியாதபோது, அவன் தரும் வாய்ப்பை நம்மால் எப்படி அறிய முடியும்?”
 
``இ
யல்பாக அமைந்த வாய்ப்புகள் அல்ல, திட்டமிட்டே உருவாக்கப்பட்ட வாய்ப்புகள்” என்றாள் பொற்சுவை.

சுகமதி அதிர்ச்சி நீங்காமல் அவள் சொல்வதைக் கவனித்தாள்.

``மணவிழாக் காலத்திலும், மணம் முடிந்த பிறகும் இளவரசர் நாட்டியப் பெண் நீலவல்லியுடன் மட்டுமே இருந்தார். எனது அருகில் வராதது, எனது தேவையாகவும் இருந்தது. எனவே, அந்த நாள்களை எனது விருப்ப நாள்களாக அமைத்துக்கொண்டேன். நான் நானாக இருப்பதால் கிடைக்கும் இன்பம் பறிக்கப்படாமல் இருந்தால் மகிழ்ச்சிதானே. அந்த மகிழ்ச்சி எல்லையின்றி நீடித்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83e_1513662542
ஆனாலும் உள்ளுக்குள் ஓர் ஐயம் உருவாகியபடியே இருந்தது. `எல்லாவற்றுக்கும் விதி செய்துள்ள இந்தப் பேரரசில் இதற்கு மட்டும் விதியின்றி இருக்காதே! விதியை மீறிச்செயல்பட வாய்ப்பில்லையே!’ எனத் தோன்றியது. சிறிது சிறிதாக விசாரித்தேன். அரண்மனைபோல உண்மைகள் எளிதில் ஒழுகுமிடம் வேறுண்டா என்ன? முழு உண்மையும் வெளிப்பட்டது.”

பொற்சுவை என்ன சொல்லவருகிறாள் என்பதைத் திகைப்போடு கவனித்தாள் சுகமதி.

``இளவரசனுக்கு மனைவிமீது காதல் கூடாது. அது நாணத்தக்க நடத்தை. காதல் மரியாதையை உருவாக்கும்; மரியாதை பணிவை உருவாகும். மனைவியிடம் பணிவதுபோல் இழிசெயல் இன்னொன்றில்லை. மனைவியின் அன்புக்கும் அழகுக்கும் பணிவது ஆண்மையல்ல. மனைவி மீது மோகம்கொள்ளுதல் அரச நடவடிக்கையிலிருந்து அவனது சிந்தனையை மாற்றும்.”

பொற்சுவை சொல்வதை சுகமதியால் உள்வாங்க முடியவில்லை.

அவள் தொடர்ந்தாள், ``இவை எல்லாம்தான் இளவரசனின் அகவாழ்வு பற்றி அரண்மனையில் உருவாக்கப்பட்டுள்ள விதிகள். ஆனால், காமத்தை விதிகளால் கட்டுப்படுத்த முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, காமம்கொண்டே அதை ஒழுங்கு படுத்த விதியமைத்துக்கொண்டனர்.

எலிமயிர்ப் போர்வையைச் சற்றே விலக்கி, மெத்தையில் அமர்ந்து, தலையணையில் சாய்ந்தபடி சுகமதியைப் பார்த்தாள் பொற்சுவை.

அடுத்து சொல்லப்போகும் சொல்லை நோக்கியபடி இருந்தாள் சுகமதி. பொற்சுவை தொடர்ந்தாள், ``வழக்கமான வடிவுடைய பெண்ணாக இருந்தாலே மணம் செய்யப்போகும் இளவரசன் அவளின் மீது காதல்கொண்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அரசகுலம், பேரழகு கொண்ட ஒருத்தியை மணப்பெண்ணாகத் தேர்வுசெய்துவிட்டால் எவ்வளவு கவனம்கொண்டு செயல்படும்?! எனது  வாழ்க்கையிலும் அதுதான் நடந்துள்ளது.

மணப்பெண்ணாக என்னைத் தேர்வுசெய்த உடனே முடிவுசெய்துள்ளனர், ‘இவ்வளவு அறிவும் அழகும் படைத்த ஒருத்தியிடம் இளவரசன் எக்காரணம்கொண்டும் மயங்கிவிடக் கூடாது’ என்று. எனவே என்னைவிட அழகுவாய்ந்த ஒருத்தியைத் தேடத் தொடங்கியுள்ளனர்.”

சுகமதி, இமை மூடாத வியப்பில் உறைந்து நின்றாள்.

``அழகுக்கலையின் பேரழகி என்று வர்ணிக்கப்பட்ட வேணாட்டு மங்கை நீலவல்லியைக் கண்டறிந்துள்ளனர். மணவிழாவுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு பெருவிருந்தின் நடன அரங்கில் இளவரசரின் முன் அவளது அரங்கேற்றம் நிகழ்ந்துள்ளது. கலையின் உச்ச சுழற்சியில் காமத்தின் கனியைப் பொதியவெற்பனுக்குப் பரிமாறியுள்ளாள் நீலவல்லி.

திருமணத்துக்கு முன் விருந்தினரோடு நாட்டியம் காண அரசியார் என்னை அழைத்ததாக நீ வந்து சொன்னாய் அல்லவா? அதை இயல்பான நிகழ்வாக நாம் நினைத்தோம். அது இயல்பாக நடந்ததன்று; முன்னேற்பாட்டோடு இளவரசனுக்கும் தெரியாமல் நடத்தப்பட்டது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83f_1513662555
கலையின் வழியாக ஆணுக்குள் இறங்குபவள், இயல்பாகவே அடியாழம் வரை இறங்க முடியும். அப்படித்தான் அவள் அவனுக்குள் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளாள். அரண்மனையில் மணவிழா என்பது மணப்பெண்ணைச் சுற்றி மட்டும் நடப்பதல்ல; அதற்கு எதிர் திசையில் இன்னொரு பெண்ணைச் சுற்றியும் நடக்குமாம்.

மணப்பெண்ணின் வாசனையை நுகர்வதற்குச் சற்றுமுன் இன்னொருத்தியின் வாசனையில் அவன் கரைக்கப்படுகிறான். அந்த வாசனையிலிருந்து அவன் மீள நெடுங்காலமாகும். அக்கால இடைவெளி இயல்பாகவே மணப்பெண்ணின் மீதான புதுமையை உள்ளுக்குள் உதிரச்செய்துவிடும்.”

கேட்டுக்கொண்டிருக்கும் சுகமதி என்ன ஆகிறாள் என்பதைக்கூடப் பார்க்க பொற்சுவை ஆயத்தமாகவில்லை. அவள் பேசியபடியே இருந்தாள்.

பேச்சை இழந்து நின்றார் முசுகுந்தர்.

``போர் என்பது, எதிரியின் மீது தொடுக்கும் ஓர் ஆயுதம்தான். அதுபோல வலிமையுடைய வேறு பல ஆயுதங்களும் இருக்கின்றன.  நான்   அவற்றை      உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றார் பேரரசர்
பேரரசரின் அமைதிக்குக் காரணம், சிறிது சிறிதாக முசுகுந்தருக்குப் புரியத் தொடங்கியது. அவர் பல வழிகளில் இயங்கிக்கொண்டிருக்கிறார். புதிய வழிமுறைகளையும் அதற்கான மனிதர்களையும் அவர் கண்டறிந்துவிட்டார் என்பது தெரிகிறது. ஒருமுறை பாதிப்பை உருவாக்கிவிட்டால் அனைவரின் மீதிருக்கும் நம்பிக்கை எப்படிப் பொய்த்துப் போகிறது என்பதை வெட்கத்தோடு ஏற்றுக்கொள்பவராக முசுகுந்தர் தலைகவிழ்ந்து நின்றார்.

பேரரசர் தொடர்ந்தார், ``இம்மண் காணாத பெரும் படையோடு நிற்கும் கருங்கைவாணன், நான் ஏவப்போகும் ஒற்றை ஆயுதம்தான். அதைப் பொருத்தமான நேரத்தில் பயன்படுத்துவேன். ஆனால், மற்ற ஆயுதங்களை உருவாக்க சற்றே காலம் தேவைப்படுகிறது.”

``அதன் பொருள், நான் தேவைப்படவே இல்லை என்பதல்ல. எப்போது என்பதை அவர்கள் முடிவுசெய்கிறார்கள்.”

கலங்கிப்போய் இருந்த சுகமதி, அவள் பேச்சை உள்வாங்கும் வலிமையற்று நின்றாள். வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83g_1513662566

``பொருத்தமான நேரத்தில் பயன்படுத்தச் சொல்லி உத்தரவிடப்பட்டதால் சில நாள்களுக்கு முன் அவர் இங்கு வந்தார்.” சொல்லி நிறுத்தினாள் பொற்சுவை.

`என்ன நடந்தது?’ எனக் கேட்க சுகமதிக்குத் துணிவு வரவில்லை, அமைதியானாள். ஆனால், பொற்சுவை யிடமிருந்தும் எந்தச் சொல்லும் வரவில்லை. அமைதியே நீடித்தது. கொடும் அமைதியைப் பொறுக்க முடியாமல் பொற்சுவையை நிமிர்ந்து பார்த்தாள். அவளோ படுக்கையில் படுத்தபடி மாளிகையின் மேற்கூரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

`ஏன் திடீரெனப் பேச்சை நிறுத்திவிட்டாள்?’ என்று எண்ணியபடி சுகமதியும் அண்ணாந்து மேற்கூரையைப் பார்த்தாள். அமைதி நீடித்தபடியே இருந்தது.

மெல்லிய குரலில் பொற்சுவை கேட்டாள், ``மேலே வரையப்பட்டுள்ளது என்ன தெரியுமா?”

அண்ணாந்து பார்த்தபடியே சுகமதி சொன்னாள், ``விண்மீன்களும் கோள்மீன்களும் வரையப்பட்டுள்ளன.”

மெத்தையில் சாய்ந்துபடுத்து நிலைகொத்தி அதைப் பார்த்தபடி பொற்சுவை சொன்னாள், ``அது பொதியவெற்பன் பிறந்தபோதிருந்த வானியல் அமைப்பு. இந்த அமைப்பு கொண்டவன் தனது வழித்தோன்றல்களை உருவாக்குவதற்கான காலக்குறிப்பு உள்ளதாம். அதைக் கணித்தே அவன் இந்த அறைக்கு அனுப்பப்பட்டான்.”

அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத சுகமதி, எலிமயிர்ப் போர்வையிலிருந்து மெள்ள கைகளை விலக்கினாள்.

அசைவறிந்து அதைப் பார்த்தபடி பொற்சுவை சொன்னாள், ``அப்படி என்னால் விலகிவிட முடியாதே சுகமதி.”

கதறவேண்டும் எனத் தோன்றியது. கட்டுப்படுத்த முயன்றாலும் கண்கள் பீறிடத் தொடங்கின.

``வேட்டை விலங்கைக் கண்டு எந்த விலங்கும் அழுவதில்லை சுகமதி. வேட்டையின் ஒரே விதி போராடுதல் மட்டும்தான்.”

சொல்லியபடி படுக்கையிலிருந்து எழுந்தாள். ``நள்ளிரவுக்குப் பிறகு திடீரென எனது அறைக்குள் அரண்மனையின் முதுபெண்கள் நுழைந்தனர். விளக்குகள் எல்லாம் ஏற்றப்பட்டன. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான் திடுக்கிட்டு எழுந்தேன். விளக்கொளியில் கண்கள் கூசின. எனது உடலை அவர்கள் சடங்குப்பொருளாக்கினர். முதலில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் புரிந்துகொண்டேன். முற்றிய தேறலின் கடிமணம் காற்றில் மிதந்து வந்தபோது அவர்கள் எல்லோரும் அறையைவிட்டு வெளியேறினர்.

எனது உடலை இவர்கள் என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை, குனிந்து இங்கும் அங்குமாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போது மூச்சுக்காற்று எனது முகத்தில் பட்டது.”

பேரரசர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அடுத்தடுத்து வந்து முகத்தில் அறைந்து கொண்டிருந்தது.

``இதுவரை கருங்கைவாணன் நடத்திய அனைத்துப் போர்களிலும் பாண்டிய நாடு வெற்றிபெற்றது என்பது உண்மை. ஆனால், அவை அனைத்தும் படையின் வலிமையால் அடையப் பெற்ற வெற்றியே. தளபதியின் வலிமையாலும் தந்திரத்தாலும் அடைந்த வெற்றி என எதுவுமில்லை. திரையர்களை வெற்றிகொண்டதற்குத் திதியனே காரணம்.”

பேரரசர் இதைச் சொல்வது எதற்காக என, முசுகுந்தரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், சொல்லை அத்துடன் நிறுத்திய பேரரசர் எழுந்து முசுகுந்தரை ஒரு பார்வை பார்த்தபடி அவை விட்டு அகன்றார்.

`இந்தச் சொல்லுக்கு என்ன பொருள்? இந்தப் பார்வைக்கு என்ன பொருள்? கருங்கைவாணன் போதிய திறமைகொண்டவனல்லன் என்று சொல்கிறாரா அல்லது அவனை மட்டுமே நம்பி படை நடத்த முடியாது என்று சொல்கிறாரா? திதியனின் தந்திரத்தைப் பாராட்டுகிறாரா? அவர் பயன்படுத்திய இந்தச் சொற்களின் வழியாக நான் புரிந்துகொள்ளவேண்டியது என்ன? மற்றவர்களுக்கு நான் சொல்லவேண்டிய செய்தி என்ன? இப்போது தீட்டப்பட்டுள்ள எந்தத் திட்டமும் குறைந்த அளவுகூடத் தகுதியான திட்டமில்லை என்பதைத்தான் அவர் சொல்லிச் செல்கிறாரா?’

சிந்தித்தபடியே நீண்ட நேரம் அந்த இடம் விட்டு அகலாமல் அப்படியே நின்றார் முசுகுந்தர்.

``எவ்வளவு நேரம்தான் அப்படியே நிற்பாய்? வா” என்று கைபிடித்து இழுத்தாள் பொற்சுவை.

உயிரற்ற ஒருத்தியாய் அவளின் இழுவைக்கு உடன்போனாள் சுகமதி.

``பரவிக்கிடப்பது அடர் இருளென்றாலும் அதிகாலையில் செவ்வொளி பரவத்தானே செய்யும். முழுமையாக வேட்டையாடப்பட்டதாக உணர்ந்த பிறகுதான் இன்னொன்றையும் உணர்ந்தேன்.”

சுகமதியின் உயிரற்ற கண்கள் அவளை நோக்கி மெள்ளப் புருவம் உயர்த்தின.

``எவ்வளவு வேட்டையாடப்பட்டாலும் என்னிடமிருக்கும் எதையும் எடுத்துச் சென்றுவிட முடியாதல்லவா? மறுநாள் காலை நிலைக்கண்ணாடி முன் வெகுநேரம் நின்றேன். மெள்ளப் புன்னகைத்துப் பார்த்தேன். எனது புன்னகை என்னிடம்தான் இருந்தது. நான் எதையும் இழக்கவில்லை என்று உணர்ந்தபோதுதான், என்னை வேட்டையாட முடியாது என்பதையும் உணர்ந்தேன்.”

பேசியபடியே கைபிடித்து இழுத்துக்கொண்டே படிகளில் ஏறினாள். `எங்கே அழைத்துச் செல்கிறாள்?’ என்ற குழப்பத்திலே வந்தாள் சுகமதி.  மேல்நிலையில் இருக்கும் ஓர் அறைக்குள் நுழைந்ததும் சொன்னாள், ``இதுதான் வேனிற்காலப் பள்ளியறை.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83h_1513662584
பொற்சுவை சொன்னதும் சட்டெனத் தலை நிமிர்த்தி மேற்கூரையைப் பார்த்தாள் சுகமதி. அங்கேயும் வானியல் காட்சிகள் வரையப்பட்டிருந்தன. நெற்றியில் வடிந்த வியர்வையைத் துடைத்தபடி பொற்சுவையைப் பார்த்தாள்.

``இது, நான் பிறந்த வானியல் அமைப்பைக் குறிக்கும் ஓவியம்.”

மூர்ச்சைகொண்டு நின்றாள் சுகமதி.

மெல்லிய சிரிப்போடு சொன்னாள் பொற்சுவை, ``ஒருவேளை, இனி எனது வேட்டைக்கான காலமாக இருக்குமோ!”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 12:00 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P139a_1514366293
வாய்நிறைய வெற்றிலையை மென்றபடி கபிலரின் குடிலுக்கு வந்தார் வாரிக்கையன். காலையிலேயே பெரியவர் வந்துள்ளாரே என வேகமாக வெளியில் வந்து திண்ணையில் உட்கார்ந்தார் கபிலர்.

உள்ளிறங்கும் வெற்றிலையின் சாற்றுக்கு இடையூறில்லாமல் பேச்சைத் தொடங்கினார். “எதிரிநாட்டு அரசன் வீழ்ந்துவிட்டான் என்பதன் குறியீடாக அவன் நாட்டுக் காவல்மரத்தை வெட்டியெடுத்துச் செல்வார்கள். பறம்பின் காவல்மரம் எதுவெனத் தெரியாது. அதனால் பறம்பைக் காக்கும் கொற்றவையின் குழந்தையான தேவவாக்கு விலங்கினை எடுத்துச்சென்றால் பறம்பை வென்றதாகப் பொருள். அதனால்தான் காலம்பன் கூட்டத்தை அனுப்பி தேவவாக்கு விலங்கினை எடுத்துவரச் சொல்லியுள்ளான் பாண்டியன் என்று நீங்கள் சொன்னதாக வீரர்கள் சொல்கிறார்களே அது உண்மையா?”

மெல்லும் வெற்றிலையை இடப்புறமாகவும் வலப்புறமாகவும் ஒதுக்கியபடியே பக்குவமாய்ப் பேசினார் வாரிக்கையன். வெற்றிலையின் சிறப்பு, மெல்லுகிறவரின் வாயில் எவ்வளவு ஊறுமோ அதே அளவு அருகில் இருப்பவரின் வாயிலும் ஊறும். கபிலர் கைநீட்டும்பொழுதே வாய் அசையத் தொடங்கிவிட்டது.  

வாரிக்கையன் ஒவ்வொரு வெற்றிலையாய் எடுத்துக் கொடுத்தார். வாங்கி, தடம்பார்த்து மடித்தபடியே கபிலர் சொன்னார், “இதுவும் காரணமாக இருக்கலாம் என்றுதான் சொன்னேன். இதுதான் காரணம் என்று சொல்லவில்லை.”

“இது காரணமாக இல்லாமலிருக்கவும் வாய்ப்பிருக்கிறதா?”

“இருக்கிறது.”

மூன்று வெற்றிலைகளை ஒன்றாக மடித்து இடதுகடவாயின் கடைசிப்பல்லுக்குக் கொடுத்தபடி வாரிக்கையன் கேட்டார் “என்ன அது?”

“இந்தக் காரணத்துக்காக எடுத்துச்செல்லப்பட்டிருந்தால், அவற்றை ஏன் துறைமுகத்துக்கும் கலங்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும்? யவனர்கள் விலங்குகளையும் பறவைகளையும் அவர்களின் நாட்டுக்கு வாங்கிச்செல்வர். சற்றே வேறுபட்டு இருக்கிறது என்பதால் இதனை வாங்கியிருக்கலாம் என்றுகூடத் தோன்றும். ஆனால், நம் வீரர்கள் சொல்லும் குறிப்பைப் பார்த்தால் தேவவாக்கு விலங்குகளை யவன நாவாய்களில் ஏற்றியதாகத் தெரியவில்லையே. தமிழ்வணிகர்களின் கலங்களில்தான் ஏற்றுப்பட்டுள்ளன.”

“எப்படி அவையெல்லாம் யவன நாவாய்கள் இல்லையென உங்களால் சொல்ல முடிகிறது?”

“எல்லாம் பட்டறிவுக்கணக்குதான். உங்கள் வாய்க்குள் போகும் வெற்றிலைகள் மட்டும் ஆண்வெற்றிலைகளாக இருக்கின்றன அல்லவா? அதுபோல அறிவைத்  தன்னியல்பாக்கிக்கொள்வதுதான்.”

“கண்டறிகிறானடா கபிலன்” என்று சிறுவனைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டுவதுபோல கபிலரைப் பாராட்டிய வாரிக்கையன் தொடர்ந்து கேட்டார், “பின்னர் எதற்குத்தான் அவர்கள் இதனை எடுத்துச்சென்றனர்?”

“இந்தக் கேள்வி ஏன் உனக்குத் தோன்ற மறுக்கிறது எனப் பாரியிடம் கேட்டால், அவன் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிடுகிறான். ‘வேந்தர்கள் எந்தச் செயல் செய்தாலும் அது அவர்களின் அதிகாரத்துக்கானது. மனிதருக்கும் இயற்கைக்கும் எதிரானது. அதில் கூடுதலாகச் சிந்திக்க என்ன இருக்கிறது?’ என்று.”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே பாரியும் தேக்கனும் வேகமாக நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. “எங்கே போகிறார்கள்?” எனக் கேட்டார் கபிலர்.

இடப்பக்கமாகத் திரும்பி உதடுகுவித்து வெற்றிலை எச்சிலைத் துப்பியபடி வாரிக்கையன் சொன்னார், “வாயில் வெற்றிலை இருக்கும்பொழுது அதற்கு மட்டுந்தான் வாயசைக்க வேண்டும். சாறு உள்ளிறங்கும்போது ஓசையை வேகமாக வெளியேற்றக் கூடாது, அருகில்போய்க் கேளுங்கள்.”

புறப்பட்டுப் போனார் கபிலர். பாரியும் தேக்கனும் நாகப்பச்சை வேலியினருகே இருந்த காலம்பனை நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர். காலம்பனோடு திரையர்குல வீரர்கள் ஏழுபேர் இருந்தனர். அறுவர் இளம் வீரர்கள்; ஒருவர் மிகவும் வயதான கிழவர். அவரது பெயர் ஏதோ சொன்னார்களே என்று நினைவுகூர்ந்தபடியே போனார் கபிலர். அருகில் போனவுடன் நினைவிற்கு வந்தது. அவரது பெயர் அணங்கன்.

திரையர்குல வீரர்கள் நீண்ட பயணத்துக்கான ஆயத்தத்தோடு இருப்பதை அறியமுடிந்தது. பெரியவர் அணங்கன் எதையோ துணியிற்சுற்றிக் கையில் வைத்திருந்தார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P139b_1514366314
பார்த்தபடி தேக்கன் கேட்டான், “எங்கே புறப்பட்டுவிட்டீர்கள்?”

“நான் போகவில்லை. இவர்கள் அறுவர்தான் போகப்போகிறார்கள். நானும் செதிலனும் இவர்களை அனுப்பிவைத்துவிட்டு வந்துவிடுவோம்” என்றான் காலம்பன்.


“அதுதான், எங்கே போகப்போகிறார்கள்?” என்று தேக்கன் கேட்டுக்கொண்டிருக்கும்பொழுதே பாரி சொன்னான், “பறம்பின் காட்டுக்குள் இவர்கள் மட்டும் ஏன் தனியாகப் போகவேண்டும். பறம்பு வீரர்களும் உடன்போகட்டும்.”

பாரி சொல்லி முடிக்கும்முன் சற்றுத் தள்ளி நின்றிருந்த பறம்பு வீரர்கள் சிலர் திரையர்களோடு இணைந்து நின்றனர்.

அவர்களைப் பார்த்தபடி காலம்பன் சொன்னான், “பறம்பு வீரர்கள் உடன்செல்ல வேண்டாமே.”

“ஏன் வேண்டாம் என்று சொல்கிறாய்?” என்றார் தேக்கன்.

“இவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது” என்றான் காலம்பன்.

பாரிக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது.

“காடறியும் பயிற்சி முடித்த சிறந்த வீரர்கள் இவர்கள்” என்றான் தேக்கன்.

காலம்பன் மீண்டும் சொன்னான், “செய்யப்போகும் வேலைக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியாது, அதனால்தான் வேண்டாம் என்கிறேன்.”

“என்ன வேலைக்குத்தான் போகிறார்கள்?” சற்றே வேகமாக இருந்தது தேக்கனின் குரல்.

“காட்டெருமைகளின் மந்தைக்குள் நுழையப்போகிறார்கள்.”

மறுமொழி எதிர்பாராததாக இருந்தது. வியப்பைக் கடந்து ஐயமே மேலெழுந்தது.  “காட்டெருமைகளின் மந்தைக்குள் எப்படிப் போகமுடியும்? அங்கு போய் என்ன செய்யப்போகிறார்கள்?” என்றான் தேக்கன்.
 
“காட்டெருமையின் மந்தைக்குள் பல்வேறு குணங்களைக்கொண்ட காட்டெருமைகள் உண்டு. அவற்றில் மந்தையை வழிநடத்தும் காட்டெருமையைக் கண்டறியப் போகிறார்கள்.”

காலம்பன் சொல்வது கேள்விப்பட்டிராததாக இருந்தது. “காட்டெருமைகளின் குணங்களைக் கண்டறிய முடியுமா? அவற்றின் பின்கால் நரம்பில் அடித்து அதனை அசையவிடாமற்செய்ய திரையர்களால் முடியும் என்றுதானே கேள்விப்பட்டுள்ளோம். நீ புதிதாகச் சொல்லுகிறாயே?”

“அதுவெல்லாம் சூலிவேள் காலத்தில் செய்யப்பட்ட வேலைகள். அதன்பின் இத்தனை தலைமுறையாக நாங்கள் வேறு என்னதான் கற்றோம்? காட்டெருமையுடனேதான் கிடந்தோம்” என்று சொன்ன காலம்பன், செய்யப்போகும் வேலையைப்பற்றிச் சொன்னான்.

``மந்தைகளை வழிநடத்தும் காட்டெருமையை இனங்காணுவதுதான் முக்கியமான வேலை. ஒவ்வொரு வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P139c_1514366326மந்தைக்கும் தலைமையெருமை ஒன்று இருக்கும். அது தான்தான் மந்தைக்குப் பெரிய ஆள் என்பதை நாள்தோறும் செயல்மூலம் காட்டிக்கொண்டே இருக்கும். அதனைத் தவிர அதற்கு வேறு வேலையில்லை. ஆனால், மந்தையை வழிநடத்துவது வேறொன்றாக இருக்கும். அதுதான் ஓசைகளின் மூலமான உத்தரவைக் கூட்டத்துக்கு வழங்கும். அதனைக் கண்டறிந்து நமது கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும். அதன்பின் அந்த மந்தையின் வழித்தடத்தை நம்மால் அறிய முடியும்.”

காலம்பன் சொல்லுவது நம்பமுடியாததாக இருந்தது. “நீ சொல்லுவது உண்மையா?” எனக் கேட்டான் தேக்கன்.

“எலியை நோக்கிப் பூனையைப் பாயவிடாமல் நிறுத்தும் ஆற்றல் பொதினி வேளிர்களிடம் இருந்திருக்கிறது. விலங்குகளின் குருதியிலிருக்கும் வெறியையும் பசியையும் குணத்தையும் அவர்களால் கட்டுப்படுத்த முடிகிறது. பாம்பின் வலிமையே அதன் நஞ்சுதான். ஆனால், அதற்கே தெரியாமல் அதன் நஞ்சை உருவியெடுத்துப் பயன்படுத்தும் ஆற்றல் பறம்பு வேளிர்களுக்கு இருக்கிறது. இவற்றோடு ஒப்பிட்டால் திரையர்களாகிய நாங்கள் கற்றுள்ளது மிகக்குறைவுதான்” என்றான் காலம்பன்.

தேக்கன் சற்றே தாழ்வுணர்ச்சியுடன் அவனது தோளிலே தட்டிச் சொன்னான். “நீங்கள் எவ்வளவு குறைவாகக் கற்றிருக்கிறீர்கள் என்பது, உடல்முழுக்க வாங்கிய எனக்குத்தானே தெரியும்.”

அனைவரும் சிரித்தனர். “அவர்களை அனுப்பும் வரை நாங்களும் உடன்வருகிறோம்” என்று சொல்லி பாரியும் தேக்கனும் காலம்பனுடன் புறப்பட்டபொழுது கபிலரும் உடன் நடந்துகொண்டிருந்தார்.

திரையர் கூட்டத்திலே மிகவயதான மனிதராக அணங்கன்தான் இருக்கிறார். வந்த புதிதில் கபிலர் அவரோடு பேச முயன்றார். அவர் பேசும்முறையும் மொழி உச்சரிப்பும் புரிந்துகொள்ள மிகக்கடுமையாக இருந்தன. இவர் தமிழ்தான் பேசுகிறாரா அல்லது வேறுமொழி பேசுகிறாரா என்று அவ்வப்பொழுது குழப்பமாக இருக்கும். ஆனால், திரையர் கூட்டத்தில் மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் சிக்கல் எதுவுமில்லை. அணங்கனுக்கு மிகவும் வயதாகிவிட்டதால் சொற்கள் தெளிவாக இல்லையோ எனத் தோன்றியது. பொதுவாக மலைமக்கள் சொற்களை நீட்டி இழுத்தே உச்சரிப்பர். ஆனால், அணங்கனின் உச்சரிப்பு நேரெதிராக சிறிது சிறிதாக வெட்டி வெட்டி இருக்கும். இவர் ஓசையை ஏதேதோ செய்யப்பார்க்கிறார் என்று தோன்றும். மறுகணமே வயதாகிவிட்டதால் உருவாகும் நிலையிது என்று முடிவுக்குப் போவார் கபிலர். பேசவே அவ்வளவு தடுமாறும் அணங்கனை இவ்வளவு கடினமான வேலைக்கு ஏன் கூட்டிப்போகிறார்கள் என்று எண்ணியபடி நடந்தார் கபிலர்.

காலம்பன் காட்டெருமைகளின் மந்தைக்குள் போவதைப் பற்றிக் கூறினான். “ஒரு மந்தையைக் கண்டறிந்து அதற்குத் தெரியாமலேயே அதைப் பின்தொடர வேண்டும். அந்த மந்தையில் உத்தரவு பிறப்பிக்கும் எருமை எதுவெனக் கண்டறிய வேண்டும். இதற்கே வாரக்கணக்கில் ஆகும். அதுவரை காடுமலைகளில் அதன் கண்ணிற்படாமல் கொம்புகளுக்குத் தப்பி, வாலின் வாசம் பிடித்துக்கொண்டே போகவேண்டும்.
உத்தரவு பிறப்பிக்கும் எருமையைக் கண்டுபிடிப்பதுதான் மிகமிக முக்கியம். அதன் செருமலும் கனைப்பும் தலையாட்டலும் தனித்துவமிக்கதாக இருக்கும். அதனைக் கண்டுபிடித்து, கனைப்போசையை மடக்கி எதிர்கனைப்பை வெளியிட வேண்டும். அது எளிய செயலல்ல; மாமனிதர்களால் மட்டுமே முடியக்கூடியது. இப்பொழுது அதனைச் செய்யக்கூடிய ஒரே மனிதராக அணங்கன் மட்டுமே இருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் போரிலே இறந்துவிட்டனர்” என்று பெரியவரைக் கைகாட்டிச் சொன்னான் காலம்பன்.

தேக்கனும் பாரியும் அணங்கனை பெருவியப்போடு பார்த்தனர். கபிலருக்கு இப்பொழுதுதான் அவர் பேசும்முறையின் காரணம் புரிந்தது. ஓசையைக்கொண்டு வேறோர் உயிரினத்துக்குள் புகமுடியும் மாமனிதனான அணங்கன் அமைதியாக முன்நடந்துகொண்டிருந்தார்.

காலம்பன் தொடர்ந்தான். “அந்தக் குறிப்பிட்ட காட்டெருமை கண்டறியப்பட்டுவிட்டாற்போதும், அதன்பின் நடக்கவேண்டியவற்றையெல்லாம் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.”

‘இவ்வளவு எளிதாகச் சொல்கிறானே!’ என்கிற வியப்போடு பார்த்தான் தேக்கன். முன்னால் போகிற அறுவரும் யார் என்பது இப்பொழுதுதான் புரியத் தொடங்கியது.

காலம்பன் சொன்னான், “காட்டெருமை யானையைவிட வலிமைவாய்ந்தது. ஆனால், யானையைப்போலக் கூருணர்ச்சி கொண்டதன்று. எளிதில் ஏமாறக்கூடியது. ஒருபோதும் அச்சத்தோடு அவற்றை அணுகக்கூடாது. சிறுபூச்சி ஒன்றை நசுக்கி அழிக்கும் ஆணவத்தோடுதான் அதனை அணுகவேண்டும். அதன் முன்புற நெற்றி இரும்பினைவிட வலிமையானது. அதனை மட்டுமே அது நம்பியிருக்கும். ஆனால் அதைத்தவிர முழுவுடலும் மிச்சமிருக்கிறதே!”

காட்டில் இதுவரை கேள்விப்பட்டிராதவற்றைக் கேட்கும் புதிய மனிதர்களைப்போல பாரியும் தேக்கனும் காலம்பனின் குரலை கவனித்துக்கொண்டிருந்தனர். கபிலரோ மூவரையும் ஒருசேர கவனித்துக்கொண்டிருந்தார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P139d_1514366349
காலம்பன் தொடர்ந்தான். “ஆண் காட்டெருமை விரைவில் காதுகேட்கும் ஆற்றலை இழந்துவிடும்.”

பறம்பின் ஆசான், பறம்பின் தலைவன், பறம்பின் விருந்தினன் ஆகிய மூவரையும் எந்த வேறுபாடும் இல்லாமல் வியப்பின் விளிம்பில் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தின காலம்பனின் சொற்கள்.

அவன் சொன்னான், “ஆண் காட்டெருமையின் காது மடல்களுக்குள் மயிர்க்கால்கள் அடர்ந்து முளைக்கும். அவற்றுள் சிறுகொடுக்குவகைப் பூச்சியினம் அதிகம் அடையும். அதனைக் காட்டெருமையால் ஒன்றுமே செய்யமுடியாது. பூச்சியினம் கட்டும் கூடு காதுகளை அடைத்துக்கொள்வதாலோ, அல்லது தொடர்ந்து உள்ளுக்குள் கொத்திக்கொண்டேயிருப்பதாலோ ஆண்காட்டெருமை கேட்கும் ஆற்றலை முழுமையும் இழந்துவிடுகிறது. ஆனால் பெண் காட்டெருமையின் காது மடல்களில் மயிர்க்கால்கள் முளைப்பதில்லை. எனவே அது காதுகேட்கும் ஆற்றலை இழப்பதில்லை.

குட்டியோடு நகரும் பெண் காட்டெருமைகளைச் சுற்றியேதான் ஆண் காட்டெருமைகளின் நடவடிக்கைகள் இருக்கின்றன. பெண் காட்டெருமைகள் மிகக்கட்டுப்பாடுகொண்டவை. அவை, வழிநடத்தும் தலைமையின் கனைப்பொலிகொண்டே செயல்படுபவை. மந்தைகளை வழிநடத்தும் பெண் காட்டெருமை வயதானதாகத்தான் இருக்கும். அதனை அறிந்து பின்னங்கால் நரம்பைச் சரிக்க வேண்டும். அதன் வேகத்தை முழுமுற்றாகக் கட்டுப்படுத்தியபின் நம்முடைய வேலையைத் தொடங்கவேண்டும். சீண்டலின் மூலமும் செருமலின் மூலமும் நாம் அதனை முன்னகர்த்திச் செல்லலாம். மந்தை முழுமையையும் அது நகர்த்திக்கொண்டு வந்துவிடும்.

ஆனால், இந்தக் கட்டத்தை அடைவது எளிதன்று. வேலையைச் செய்யப்போன ஆறுபேரையும் ஒரேநாளில் முட்டித்தூக்கிக் கொன்ற நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. காட்டெருமைகள் நாள்முழுவதும் இளைக்காமல் ஓடக்கூடியவை. எந்த மேட்டிலும் பள்ளத்திலும் விடாது ஓடுபவை. அவற்றின் ஓட்டத்துக்கு முழுநாளும் தாக்குப்பிடிக்கக்கூடியவன்தான் இந்தப் பணிக்குள்ளே இறங்கமுடியும். காட்டுக்குள் எங்களின் ஓட்டங்களைக் காட்டெருமைகளிடம் இருந்துதான் தொடங்குகிறோம். அவையே எங்களின் ஆசான்கள்” என்றான் காலம்பன்.

ஏறக்குறைய பேச்சற்று இருந்தனர் மூவரும். தேக்கனுக்கு நிறைய கேள்விகள் உருவாயின. ஆனால், அவையெல்லாம் மிக எளிதான கேள்விகள். ‘காட்டெருமைகளின் காதுமடல்களுக்குள் நுழைந்து காலம்பன் பேசிக்கொண்டிருக்கிறான்; அவனிடம்போய் இதனையா கேட்பது?’ என்று தோன்றியதால் எதையும் கேட்கவில்லை. அமைதியே நீடித்தது.

அமைதியைக் குலைத்து, சற்றே குரலுயர்த்தி காலம்பன் சொன்னான், “மலைமக்களுக்குப் பகைகொள்ளத் தெரிவதில்லை. ஆனால், பகை வளர்க்காமல் குலம் காக்கமுடியாது.”

காலம்பனின் ஆவேசமிகுந்த சொற்களால் தன்னிலைக்கு வந்தான் தேக்கன். ‘இப்பொழுது இதனைச் சொல்லும் காரணமென்ன?’ என்று சிந்தித்தான்.

காலம்பன் தொடர்ந்தான், “எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் நாங்கள் அவர்களை அழிக்காமல், எங்களைக் காத்துக்கொள்ளும் போரினை மட்டுமே நடத்தினோம். அதனாலேயே அழிக்கப்பட்டோம். இனியும் நாம் அப்படி இருந்துவிடக்கூடாது.”

குரலில் ஆவேசம் உச்சத்தில் இருந்தது.

“என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்?” எனக் கேட்டான் பாரி.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P139e_1514366384
“பச்சமலையின் நான்கு திசைகளிலும் நான்கு காட்டெருமை மந்தைகளை வழிநடத்தும் ஆற்றலை நாம் பெற்றாக வேண்டும்.அதற்கு இணையான ஆற்றல்கொண்ட படை இவ்வுலகில் இல்லை.”

தேக்கன் வியந்து நின்றபோது காலம்பன் சொன்னான், “யானைப் படைகளேயானாலும் அவை பழக்கப்படுத்தப்பட்டவைதான். காட்டெருமைகளைப் பழக்கப்படுத்த முடியாது. அவற்றின்  சீற்றம்    யானைக் கூட்டத்தை நடுங்கச்செய்துவிடும். அதுவும் பழக்கப்படுத்தப்பட்ட யானைகளைவிட வலிமைகுன்றிய உயிரினம் காட்டில் வேறெதுவும் இல்லை. விலங்குகளின் இயற்கையான ஆற்றலை எதிரிகளை நோக்கிப் பாயவிடும்பொழுது மிஞ்சுவது எதுவும் இருக்காது” சொல்லிய வேகத்தில் பாரியைப் பார்த்தான்; சுண்டாப்பூனையை ஏவி திரையர்குல வீரர்கள் எட்டுப்பேரை வீழ்த்தியவன் பாரி.

பேச்சு நின்ற கணத்தில் பாரியின் சிந்தனையிலும் சுண்டாப்பூனையே வந்து சென்றது. காலம்பன் தொடர்ந்தான், “நாங்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டோம். பாண்டியர்படை அடர்மழைநாளில் எங்கள் குடில்களைச் சூழ்ந்தபொழுது அணங்கன் ஒருவன் மட்டும் வெளியில் இருந்திருந்தாற்கூடப் போதும். காட்டெருமை மந்தையைக்கொண்டு அவர்களின் யானைப்படையை முழுமுற்றாக அழித்திருப்பான்.”

காலம்பன் சொல்லிக்கொண்டிருந்தபொழுது சற்றே மெலிந்த உடலோடு அந்தக் கிழவன் காட்டெருமையின் வாசத்தை நுகர்ந்தபடி முன்னே போய்க்கொண்டிருந்தான்.

வலிமையைவிட நுட்பமே ஆற்றல் வாய்ந்தது என்பதைக் காலம் மீண்டும் மீண்டும் சொல்லித்தருகிறது என்று எண்ணியபடி பின்தொடர்ந்தான் பாரி.

இரண்டு நாள் நடந்து ஆறாம்குன்றை அடைந்தனர். இங்குள்ள மக்கள் எதிரிலுள்ள வெளவால் மலையின் பின்புறச்சரிவில் ஒரு மந்தை மேய்வதாகச் சொன்னார்கள். ஆபத்தான சரிவுப்பகுதி அது. அதில் இறங்கிப்போவது கபிலருக்கு நல்லதன்று: அவரை மட்டும் விட்டுவிட்டுப் போகமுடியாத நிலையில் பாரி சொன்னான், “அருகில் வந்தாகிவிட்டதல்லவா? நீங்கள் மந்தையைக் கண்டறிந்து அந்த அறுவரையும் அனுப்பிவைத்துவிட்டு வாருங்கள். நான் கபிலரை அழைத்துக்கொண்டு எவ்வியூர் திரும்புகிறேன்.”

தேக்கனும் காலம்பனும் “சரி” என்று சொல்லி, இருவரையும் அனுப்பிவைத்தனர். 

பாரியும் கபிலரும் எவ்வியூர் நோக்கி நடக்கத் தொடங்கினர். பேச்சு காலம்பன் சொன்னதைப் பற்றியதாக இருந்தது. “பகை வளர்க்காமல் குலங்காக்க முடியாது என்று காலம்பன் சொல்கிறானே, அது சரிதானா?” எனக் கேட்டான் பாரி.

“பகை, காட்டினில் விளையும் நெருப்புபோல...   பரவிக்கொண்டும் ஆற்றலைப் பெருக்கிக்கொண்டும் இருக்கும்” என்று கபிலர் சொல்லி முடிக்கும் முன் பாரி சொன்னான், “ஆனால் அழித்துக்கொண்டே இருக்கும்.”

“அழித்தல் எல்லாவிதத்திலும் தவறானதா என்ன?”

“எல்லாவிதத்திலும் தவறன்று; ஆனால், எல்லாவற்றையும் அழிக்கும். ஒரு கட்டத்தில் உங்களால் பிரித்தறிய முடியாது.”

அவனது சொல்லின் ஆழத்தைப்பற்றிச் சிந்திக்கும்போதே நிறுத்தாமல் தொடர்ந்தான் பாரி, “காட்டெருமையின் காதுமடல்களில் உள்நுழைய முடியா ஓசையைக் கணிக்க முடிந்த திரையர்களால், அடர்மழையின் ஓசையில் யானைப்படை வருவதைக் கணிக்கமுடியாமற் போயிருக்கிறது. கவனம்கொள்ளுதல்தான் முக்கியம். பகைவளர்த்தல் அன்று.”

“நீ சொல்வது சரிதான். கவனம்கொள்ளுதல்தான் முக்கியம். ஆனால், அழிக்கப்பட்டவனின் குரல் அப்படித்தானே இருக்கும். நிலம் இழந்தவன், குலம் இழந்தவன் உயிர்வாழ ஒரே காரணம் பகைமுடிக்கத்தானே?”

“அதனால்தான் நானும் சொல்கிறேன். அபகரித்துக்கொண்டவன் நம்முடைய வளங்களையும் சேர்த்து மேலும் வலிமையடைவான். இழந்தவர்கள் பகை மட்டும் வளர்த்துக்கொண்டிருந்தால் வலிமை கூடாது. இருப்பது ஒரேயோர் அணங்கன். அவன் இறந்துவிட்டால் திரையர்களின் வலிமை இன்னும் குறையும்.”

பாரியின் சொற்கள் பாறைகள் உருள்வதைப் போலத்தான் எந்தக் கணத்திலும் மேலேபோட்டு அமுக்கும். அமுக்கிய சொல்லிலிருந்து மீண்டெழ கபிலர் நினைத்துக்கொண்டிருந்தபொழுது பாரி சொன்னான், “நான் உங்களை அழைத்துக்கொண்டு எவ்வியூர் திரும்புகிறேன் என்று சொன்னதுக்கு அதுதான் காரணம். தேக்கனை காலம்பனிடம் பேசச்சொல்லியிருக்கிறேன். இப்போது பயிற்சி தேவைப்படுவது மந்தையை வழிநடத்தும் காட்டெருமைக்கன்று. உடன்செல்லும் மனிதர்களுக்குத்தான். அணங்கனைப்போல அதிதிறமையுள்ள ஆசானிடம் எவ்விதப் பயிற்சியும் பெறாமல் மாதக்கணக்கில் நாம் வீணடித்துள்ளோம். பகை நெருப்பைப்போலப் பரவும் என்று சொன்னீர்கள் அல்லவா, இங்கு என்ன நடந்துள்ளது? ஒற்றைக்குச்சியில் மட்டுமே எரியும் நெருப்பை அடுத்தகுச்சிக்குக்கூடப் பரவாமல் வைத்திருக்கிறது.”

கபிலர் சொன்ன உவமை எப்படித் தவறானது என்பதை, கபிலருக்கு பாரி சொல்லிக்கொண்டிருந்தான். அதைக் கேட்டபடி சற்றே அமைதியாய் கபிலர் வந்துகொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப்பின் பாரி கேட்டான், “ஏன் ஏதும் பேசாமல் வருகிறீர்கள்?”

எவ்வியூரிலிருந்து புறப்படும்பொழுது வாரிக்கையன் சொன்னார், “கற்றுக்கொண்டான் கபிலன்” என்று, இப்பொழுது நீ கல்லாத கபிலனை எவ்வியூருக்கு மீண்டும் அழைத்துச்செல்கிறாய்.”

மெல்லிய சிரிப்போடு பாரி மறுமொழி சொன்னான், “நீண்ட ஒலிக்குறிப்போடு பேசும் மலைமக்களுக்கு நடுவில் வெட்டி வெட்டி ஒலியைப் பயன்படுத்துகிறாரே என்று அணங்கனைக் கண்டறிய முயன்றது நீங்கள் மட்டுந்தான். அதைக்கூடக் கண்டறிய முடியாதவர்களாகத்தான் நாங்கள் இருந்துள்ளோம்.” பேசியபடியே குன்றின் உச்சியிலிருந்து இடப்புறமாக இறங்கத் தொடங்கினர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P139f_1514366399
உச்சிப்பொழுது. மலைமடிப்புகளை நின்று பார்க்கத்தோன்றியது. சிறிதுநேரம் குன்றின் உச்சியிலே நின்றார் கபிலர். தென்கிழக்குத் திசையைப் பார்த்தபடி சொன்னார், “அந்த மூன்றாங்குன்றைக் கடந்தால் எவ்வியூரை அடையலாம். சரிதானே.”

“இல்லை” என்றான் பாரி. எவ்வியூர் இருப்பது இடப்புறத்தில்.

“அப்படியென்றால் நாம் ஏன் தென்கிழக்குத் திசையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். இடப்புறக்காட்டை அல்லவா ஊடறுத்துப் போகவேண்டும்.”

“சரியான திசையில் போவதாக இருந்தால் அப்படித்தான் போகவேண்டும். ஆனால், இக்காட்டுக்குள் பறம்பு மக்கள் யாரும் காலடி எடுத்துவைக்கமாட்டோம்.”

“ஏன்?”

“இது ஆளிக்காடு.”

“ஆளியா… கொடூர விலங்கு என்று சொல்வார்களே, அதுவா?’

“ஆம். அது ஈன்ற குட்டியின் முதல்வேட்டையே யானைதான். யானையின் தந்தத்தைப் பிய்த்து அதன் குருத்தைத்தான் விரும்பி உண்ணும் என்பார்கள்.”

``அவ்விலங்கு இன்னும் இருக்கிறதா?”

“இல்லை, எப்பொழுதோ அழிந்துவிட்டது.”

சிறிதுநேரம் பேச்சின்றி நடந்த கபிலர், “அப்படியொரு விலங்கு உண்மையாய் இருந்திருக்கும் என்று நீ நம்புகிறாயா?”

“இருந்திருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“நான் அவ்விலங்கைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எதுவும் நம்பும்படியாக இல்லை. மிகைப்படுத்தப்பட்ட கதையாக இருக்கலாம் அல்லவா?”

மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தியபடி பாரி சொன்னான், “வெறும் கதைகளை நம்ப நாங்கள் குழந்தைகள் இல்லை.”

“அப்படியென்றால் வேறு எதைவைத்துச் சொல்கிறாய்? குகைப்பாறைகளில் முன்னோர்கள் வரைந்த ஓவியம் எதுவும் இருக்கிறதா?”

“இல்லை, அவற்றைவிடப் பெரிய சான்று இருக்கிறது.”

“என்ன?”

“இம்மலைத்தொடர் முழுவதும் எறும்புக் கூட்டங்கள்போல அலைந்து திரியும் யானைகள் எதுவும் இன்றுவரை ஆளிக்காட்டுக்குள் நுழைவதில்லை.”

கபிலர் மிரண்டு நின்றார்.

“உயிரினங்களிலே அதிக நினைவாற்றல் கொண்டது யானைதான்.”

“ஆம்” என்று தலையசைத்தார் கபிலர்.

“அதுமட்டுமன்று, யானைகளுக்கு மனிதர் சொல்லும் கதைகள் தெரியாது.”

பாரியின் சொற்கேட்டு மீளமுடியாமல் நின்ற கபிலர் சற்று நேரங்கழித்துக் கேட்டார். “உங்களைப் பொறுத்தவரை. ஆளி இருந்தது வியப்பன்று, அழிந்ததுதான் வியப்பு?”

“இல்லை” என்றான் பாரி. ``எங்களைப் பொறுத்தவரை ஆளி அழிந்ததில் வியப்பேதுமில்லை.”

“ஏன்?”

“அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் காட்டில் நிலைத்து வாழமுடியாது. ஏனென்றால், அது இயற்கைக்கு எதிரானது.”

கபிலர் நிற்கும் இடம்நோக்கி மேலேறினான் பாரி, “விதையை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது.”

கண்ணுருட்டிப் பார்த்துக்கொண்டிருந்த கபிலரின் தோளிலே கையை வைத்து பாரி சொன்னான், “இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்”.

 - பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 12:13 pm

 
 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P85a_1514720863
பாரியும்  கபிலரும் எவ்வியூருக்கு வந்து சேர்ந்தபோது இரவாகிவிட்டது. தொடர்ந்து நான்கு நாள்கள் நடந்ததால், கபிலரின் கால்கள் துவண்டுபோய் இருந்தன. நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது என்ற எண்ணத்தோடு எவ்வியூருக்குள் நுழைந்தார். `இந்த எண்ணம் வரும்போதெல்லாம், அணங்கன் நினைவுக்கு வந்துவிடுகிறான். இந்த வயதிலும் காட்டெருமை மந்தைக்குள் நுழைய என்ன ஒரு தினவு வேண்டும்! நுழைந்துவிட்டால், எந்தக் கணமும் பல மடங்கு வேகத்தோடு ஓட வேண்டும். அந்த ஓட்டம் என்றைக்கு முடியும் எனச் சொல்ல முடியாது. எப்படி இதுவெல்லாம் அணங்கனால் முடிகிறது?’ என்று எண்ணிக்கொண்டே உள்நுழைந்தார் கபிலர்.

`தேவவாக்கு விலங்கை எடுத்துக்கொண்டு, பறம்பின் அடர்காட்டுக்குள் தொடர்ந்து அத்தனை நாள்கள் எப்படி திரையர்களால் ஓட முடிந்தது?’ என்ற கேள்விக்கான முடிச்சுகள் எல்லாம் தன்போக்கில் அவிழ்ந்துவிட்டன.

பாரி வந்ததை அறிந்து, முடியன் அவர்களை நோக்கி வேகமாக வந்தான். ஏதோ ஒரு செய்தி அவனுக்காகக் காத்திருக்கிறது என்பதைக் கபிலர் உணர்ந்தார். வேட்டுவன் பாறையிலிருந்து நீலன் அனுப்பியுள்ள வீரர்கள் வந்துள்ளதாக அவன் சொன்னான்.

`நீலன் வராமல் ஏன் வீரர்களை அனுப்பியுள்ளான்?’ என்று எண்ணிய கபிலர், ``சரி, நான் போய் ஓய்வெடுக்கிறேன்” என்று சொல்லி விடைபெற முயன்றார்.

``வந்துள்ள செய்தி, உங்களோடு தொடர்புடையது” என்றான் முடியன்.

கபிலர் சற்றே வியப்படைந்தார். ``எனக்கு என்ன செய்தி வந்திருக்கப்போகிறது?!” என்று சொல்லிக்கொண்டிருக்க, வீரர்கள் இருவர் அறைக்குள் வந்தனர்.

பாரியையும் கபிலரையும் வணங்கிவிட்டு, ``உங்களைப் பார்க்க மூவர் வந்துள்ளனர்” என்று கபிலரைப் பார்த்தபடி சொன்னார்கள்.

``என்னைப் பார்க்கவா?!” என்று திகைப்புற்றுக் கேட்டார் கபிலர்.

கபிலர் கேட்டு முடிக்கும் முன் பாரி சொன்னான், ``கபிலரைப் பார்க்க வந்துள்ளவர்களை அழைத்து வந்திருக்கலாமே. ஏன் நிறுத்திவைத்து வந்தீர்கள்?”

வீரர்கள் சொன்னார்கள், ``அவர்களில் ஒருவர் மிக வயதானவர். அவரால் மலையேற முடியாது.”

வியப்பும் குழப்பமுமாக இருந்தது. `யாராக இருக்கும்?’ என்று கபிலர் சிந்தித்துக்கொண்டிருக்கையில் வீரர்கள் சொன்னார்கள், `` `எனது பெயரைச் சொன்னால் அவரே இங்கு வந்துவிடுவார்; போய்ச் சொல்லுங்கள்’ என்று எங்களை அனுப்பிவைத்தார்.”

கபிலருக்கு இன்னும் வியப்பு கூடியது. `நாம் இங்கு இருப்பதை அறிந்து இவ்வளவு உரிமையோடு வீரர்களை அனுப்பிவைத்தது யார்?’ என எண்ணிக்கொண்டிருக்கையில் வீரன் சொன்னான், ``அவரின் பெயர் திசைவேழர்.”

பெயர் சொல்லப்பட்ட கணத்தில் கபிலரின் முகத்தில் ஏற்பட்ட வியப்பைப் பார்த்தபடி கேட்டான் பாரி ``யார் இந்தப் பெரியவர்?’’

அகலத் திறந்திருந்த கபிலரின் கண்கள், ஒளியை உமிழ்ந்தன. வியப்பை உதிர்க்க முடியாமல் திணறியது முகம். கைகளை உயர்த்திக் காட்டி ``வானியல் பேராசான்” என்றார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P85b_1514720944
சொல்லை உச்சரித்த விதத்திலேயே அவரின்பாலுள்ள வாஞ்சையும் மதிப்பும் வெளிப்பட்டன. அதைப் பார்த்து மகிழ்ந்தபடி பாரி சொன்னான், ``அவரை, சிவிகையில் வைத்துச் சுமந்து வரச் சொல்லிவிடலாமா?”

``வேண்டாம் பாரி. அவர் மிக வயதானவர். என் பொருட்டு அவருக்குச் சிறு தொந்தரவுகூட வந்துவிடக் கூடாது. நானே போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்.”

``சரி” என்று ஏற்றுக்கொண்ட பாரி, ``தொடர்ந்து நான்கு நாள்கள் நடந்திருக்கிறீர்கள், மிகவும் களைப்பாக இருக்கும். ஒருநாள் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு புறப்படுங்கள்.”

``வந்துள்ளது பேராசான். எனது மனம் எப்படி ஓய்வெடுக்கும் பாரி? தாயைத் தேடும் கன்று எத்தனை மலைகளைக் கடந்தாலும் துவண்டுவிடவா செய்யும்?”

அவரது உணர்ச்சிக்குள் இருக்கும் உண்மையைப் பாரியால் உணர முடிந்தது. `தேக்கன் இருந்தால் உடன் அனுப்பிவைக்கலாம். அவனோ காலம்பனோடு இருக்கிறான்’ என்று சிந்தித்தபடியே உதிரனையே அழைத்துக்கொண்டு போகச் சொன்னான். ``சரி’’ என்று ஏற்றுக்கொண்டு விடைபெற்றுக் குடிலுக்குப் போனார் கபிலர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P85c_1514720963
மறுநாள் காலை எழுந்ததும், ``கபிலர் புறப்பட்டுவிட்டாரா?” எனப் பாரி கேட்டான்.

``அவர் இந்நேரம் ஆதி மலையில் பாதித் தொலைவைக் கடந்திருப்பார்’’ என்றனர் வீரர்கள்.

பிலர் வேட்டுவன் பாறைக்கு வந்தபோது திசைவேழர் வந்து ஐந்து நாள்களுக்குமேல் ஆகியிருந்தது. அவரைக் காணும் பொழுதைக் கனவுபோலச் சுமந்து வந்தார் கபிலர். `எத்தனை ஆண்டுகளாகிவிட்டன? விரிவடங்கா வானத்தின் விந்தைகளைப் பேசி முடியாத நாள்கள்தான் எத்தனை... எத்தனை!! காலம் கரைகிறதா... நகர்கிறதா?’ என முடிவுறாத பேச்சுகளை எண்ணியபடி திசைவேழர் இருந்த குடில் அருகே வந்தார் கபிலர்.

முதன்முறையாகக் கபிலர், வேட்டுவன் பாறைக்கு வந்த அன்று, அவரைத் தங்கவைத்திருந்த குடில் அது. விரிந்து நீண்ட திறளி மரத்தாலான பலகையில் உட்கார்ந்திருந்தார் திசைவேழர். கபிலர் வருவது தொலைவிலேயே தெரிந்தது. அங்கு இருந்தவர்கள் எழுந்து அவரை வரவேற்றனர். அளவுகடந்த மகிழ்வோடு வந்த கபிலர், திசைவேழரை வணங்கி மகிழ்ந்தார். பெருங்கவியை ஆரத்தழுவிக்கொண்டார் திசைவேழர். கண்களில் கசிந்தது பேரன்பு.

கபிலர் வந்தது அறிந்து வேட்டூர் பழையனும் நீலனும் குடிலுக்கு வந்தனர். வந்து ஐந்து நாள்களாகிவிட்டதால், இவர்கள் அனைவரையும் திசைவேழர் அறிவார். ஆனாலும் பெயர் சொல்லிப் புகழ்ந்தார் கபிலர். நீலனை `மகன்போல்’ எனச் சொல்லி அறிமுகப்படுத்தினார். பேசிக்கொண்டிருக்கும்போது பெண் ஒருத்தி சிறு கூடையில் நாவற்பழம் கொண்டுவந்து வைத்தாள். யார் எனப் பார்த்தார் கபிலர். தனக்கு மகர வாழையில் காரத்துவையல் கொடுத்தவள். கபிலரை வணங்கியபடி அதே சிரிப்போடு அந்த இடம் விட்டு நகர்ந்தாள். இப்போது கைக்குழந்தையோடு இருந்தாள்.

திசைவேழர், கூடையில் வைக்கப்பட்ட நாவல் ஒன்றை உண்பதற்காக எடுத்தார். அதைக் கவனித்த கபிலர், ``வேண்டாம். அதை வைத்துவிடுங்கள்’’ எனச் சொல்லி, இன்னொரு பழத்தை எடுத்து அவருக்குக் கொடுத்தார்.

``உண்பதற்கேற்ப கனிந்துதான் இருக்கிறது. இதை ஏன் வேண்டாம் என்கிறீர்?” எனக் கேட்டார் திசைவேழர்.

கபிலர் சொன்னார், ``அது குழிநாவல்; கார்ப்புச் சுவை அதிகமாக இருக்கும். அதன் பிறகு எந்த நாவலைத் தின்றாலும் கார்ப்புச் சுவை போகாது. எனவே, அதை எடுத்தவுடன் உண்ணக் கூடாது. இதோ சிறுநாவல். இதிலிருந்து தொடங்கலாம். இதற்கடுத்து உண்ணவேண்டியது...” என்று சொல்லி, கூடையைக் கிளறியபடியே சற்றே பெருத்த வெண்ணாவலை எடுத்தார். திசைவேழர் வியப்போடு பார்த்தார்.

கபிலர் ஒவ்வொரு நாவலாக எடுத்து திசைவேழருக்குக் கொடுத்துக்கொண்டே அதன் பெயர், தன்மை, சுவைநுட்பம் என, பழத்தின் சிறப்புகளைக் கூறி மகிழ்ந்தார். கூடையில் இருந்த அனைத்துப் பழங்களைப் பற்றியும் அவரால் விளக்க முடிந்தது. அருகில் இருந்த வேட்டூர் பழையனும் நீலனும் வியப்பேறிய விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.

பழத்தை உண்டபடி நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர். ``சிறிது நேரம் நடந்துகொண்டே பேசுவோம்’’ எனச் சொல்லிப் புறப்பட்டனர். வலக்கையை ஊன்றுகோலில் அழுத்தி, இடக்கையைத் தோதாகப் பிடித்து அழுத்தி எழுந்தார் திசைவேழர். வலதுகாலை மடக்கி நீட்ட முடியாத நிலையைப் பற்றிப் பேசியபடியே இருவரும் சிறிது தொலைவு நடந்தனர். அவர்கள் தனியாகப் பேச விரும்புவது அனைவருக்கும் புரிந்தது. எனவே, மற்றவர்கள் குடிலிலேயே இருந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P85d_1514720980
கோல் ஊன்றி நடந்தபடியே திசைவேழர் கேட்டார், ``பறம்பில் வாழ்வனுபவம் எப்படி இருக்கிறது?”

``இதுதான் வாழ்வு எனத் தோன்றுகிறது.”

முதல் சொல்லே முழுமைகொண்டிருந்தது. சற்றே திகைப்புற்றார் திசைவேழர். கபிலர் உச்சரிக்கும் சொற்களின் வலிமையை நன்கு உணர்ந்தவர் அவர்.

கபிலர் தொடர்ந்தார், ``இயற்கையைப் பற்றிய மனிதப் பேரறிவு இங்குதான் சேமிக்கப்பட்டிருக்கிறது. வாழ்வு முழுவதும் நான் கற்றுக்கொண்டவற்றை வந்த முதல் நாளே என்னை எடைபோட்டுப் பார்க்கவைத்தவர்கள் பறம்பு மக்கள்.’’

கபிலர் உணர்ச்சி மேலிட்டவராக இருக்கிறார் என திசைவேழருக்குத் தோன்றியது.

``எண்ணற்ற செடிகொடிகளுக்கும் எண்ணிலடங்காத பூக்களுக்கும் இவர்கள் பெயரிட்டு அடையாளப்படுத்தியுள்ளனர். இத்தனை வகையான பூக்களையும் அதன் பெயர்களையும் நாம் எங்கேயும் காண முடியாது” என்று சொன்ன கபிலர், மிக மகிழ்வோடு சொன்னார், ``கடந்த வாரம், நாங்கள் அடர்காட்டுக்குள் மிக முக்கியமான வேலைக்காகச் சென்றுகொண்டிருந்தோம். அப்போது என்னுடன் வந்த பாரி, ஓர் இடத்தில் அப்படியே நின்றான். என்ன காரணம் எனப் புரியாமல் உடன் வந்த அனைவரும் நின்றோம். பாரி எதைக் கவனிக்கிறான் என்பதை, அனைவரின் கண்களும் உற்றுநோக்கின.

பாறையின் மீது வேர்போல தேன் நிறத்தில் படர்ந்து இருந்த சிறு கொடியில் மலர்ந்திருந்தது பூ. அதன் இதழ்கள், காற்றடிக்கும்போது சாய்ந்து எரியும் சுடர்போல இருந்தது. அதைப் பார்த்தபடி பாரி சொன்னான், ``இந்த வகைப் பூவை, இதுவரை நான் பார்த்ததில்லை.’’

``ஆம். இது புதுவகையான செடியாக இருக்கிறது’’ என்றனர் மற்றவர்கள்.

உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த பாரி, ``இந்தப் பூவுக்கு நீங்களே ஒரு பெயர் சூட்டுங்கள்’’ என்றான்.

`பூவுக்கு எப்படிப் பெயர் சூட்டுவது... நிறம்கொண்டா, மணம்கொண்டா... அதன் தனிச்சிறப்பு அறிந்தா?’ என்று எண்ணங்கள் ஓடியபடியே இருந்தன.

கபிலர் உற்சாகத்தோடு பேசுவதைக் கேட்டபடி நடந்துகொண்டிருந்த திசைவேழர், ``என்னதான் பெயர் சூட்டினீர்?” என்றார்.

``அந்தப் பூவைப் பார்த்த கணமே பாரியின் எண்ணத்தில் பெயர் தோன்றியிருக்கும். அந்தப் பெயர், பூவின் வேரிலிருந்து விளைந்ததாக இருக்கும். அதேபோன்ற தோற்றம்கொண்ட பூக்களுக்கு என்ன பெயர் உள்ளது என அனைத்தையும் ஒப்பிட்டு, பெயரைச் சிந்தித்திருப்பான் பாரி. எனவே, நான் உடனடியாக ஒரு பெயரைச் சொல்லிவிட முடியாது அல்லவா? `சிந்தித்துச் சொல்கிறேன்!’ என்று கூறியுள்ளேன்” என்றார்.

``நீங்கள் பெயர்வைக்கும் வரை அது பெயரற்ற `பூ’தானா?”

திசைவேழரின் சொல்லுக்குள் சற்றே எள்ளல் இருப்பதுபோல் கபிலருக்குத் தோன்றியது.

திசைவேழர் தொடர்ந்தார், ``அந்தச் செடி வேறு இடத்திலும் இருக்குமல்லவா? அங்கு அதற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் அல்லவா?”

``இருக்கலாம். வேறு எங்கேயாவது அந்தச் செடி இருக்கலாம். அதற்கு மனிதர்கள் பெயரிட்டிருக்கலாம்” என்றார் கபிலர்.

தலையை நிமிர்த்தாமலேயே மெல்லிய குரலில் திசைவேழர் கேட்டார், ``அப்படியென்றால், அறியாதவர்களுக்கு நடுவில் இருப்பதை அறிவென்று ஏற்க முடியுமா?”

திசைவேழர் சொல் அதிர்ச்சியைக் கொடுத்தது. ``அறியாதவர்கள் என்று, பறம்பு மக்களையா சொல்கிறார்?’’ நம்ப முடியாமல் கேட்டார், ``எப்படி இப்படியொரு சொல்லைச் சொன்னீர்கள்?”

``நீங்கள் ஒன்றை அறிய நினைக்கும்போது உங்களின் அறியாமையை மற்றவர்கள் அறிந்துகொள்ளுதல் இயற்கைதானே?”

திசைவேழரின் சொற்கேட்டுத் திகைத்து நின்றார் கபிலர். அவருக்குள் இந்தச் சொல் உருத்திரண்டு வர, பூ மட்டும் காரணமல்ல என்பது புரியத் தொடங்கியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P85e_1514720996
திசைவேழர் சொன்னார், ``இயற்கை பற்றிய மனிதப் பேரறிவு இங்குதான் சேமிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்களே, அது சரிதானா?”

பதற்றம், உடலெங்கும் பரவியதை உணர முடிந்தது. பறம்பே தனது உடலாக மாறிவிட்டதைப்போல் இருந்தது. அதன்மீது சொல்கொண்டு எறிவதைக்கூட உடல் ஏற்க மறுக்கிறது, ஆனாலும் தன்னை நிதானப்படுத்தியபடி கபிலர் கேட்டார், ``சரியில்லை என்று எப்படித் தோன்றியது உங்களுக்கு?’’

``தனது உள்ளங்கையில் இருக்கும் ஒன்றின் ஆற்றலையே மதிப்பிட முடியாதவர்களாக இவர்கள் இருப்பதால்.”

``எதைச் சொல்கிறீர்கள்?”

``தேவாங்கு விலங்கைச் சொல்கிறேன்.”

புதுப் பெயராக இருக்கிறதே என நினைத்த கபிலர், தேவவாக்கு விலங்கைத்தான் இப்படிச் சொல்கிறார் எனப் புரிந்துகொண்டார். ``அதன் ஆற்றலைப் பறம்பு மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றா சொல்கிறீர்கள்?”
``ஆம். அதன் ஆற்றலை இப்போது வரை பாரியும் பறம்பு மக்களும் புரிந்துகொள்ளவில்லை.”

கபிலருக்குள் விடை தெரியாமல் உருண்டுகொண்டிருந்த கேள்வி, இப்போது திசைவேழரின் சொல் முனையில் வந்து நின்றது. புருவம் உயர்த்தியபடி திசைவேழரைப் பார்த்து ``என்ன அதன் ஆற்றல்?”

``அது கடலை வெல்லும் ஆற்றல்கொண்ட உயிரினம்.”

கபிலர் அதிர்ந்து நின்றார். அவரின் முகக்குறிப்பு அறிந்து திசைவேழர் தேவாங்கின் சிறப்பைப் பற்றிப் பேசத் தொடங்கினார். எப்போது உட்கார்ந்தாலும் வடதிசை நோக்கியே உட்காரும் அதன் ஆற்றலை, மெய்சிலிர்த்தபடி விளக்கினார். ``பொதிகை மலையில் இதைப் போன்ற உடல் அமைப்பைக்கொண்ட விலங்கு உண்டு. ஆனால், அதற்கு இத்தகைய ஆற்றல் இல்லை. இது ஒருமரத்து விலங்கு. நீண்ட நெடுங்காலம் குறிப்பிட்டதொரு மரத்திலே வாழக்கூடியதால், குறிப்பிட்ட திசை நோக்கி உட்காரும் இயற்கையின் அதிசிறந்த ஆற்றலைப் பெற்றுள்ளது” என்றார்.

கபிலர் மெய்மறந்து கேட்டார். இந்த விலங்குக்காகப் பாண்டியன் ஏன் இவ்வளவு முயன்றான் என்ற விடையின்றித் தத்தளித்த கேள்விக்கு, விடை தெரிந்தது. நூற்றாண்டுகளாகத் தொடரும் யவன வணிகத்துக்கு இதுபோன்ற ஒரு விலங்கு எவ்வளவு முக்கியமான பங்காற்றும் என்பதை, கபிலரால் எளிதில் விளங்கிக்கொள்ள முடிந்தது. பாண்டியனின் பெருமுயற்சிக்குப் பின்னிருந்த உண்மை வெளிவந்தது.

நடையை நிறுத்தி அருகில் இருந்த சிறு பாறையில் சாய்ந்து நின்றார் கபிலர். கோல் ஊன்றியபடி நின்றுகொண்டிருந்த திசைவேழர் சொன்னார், ``கடலையும் வானையும் இணைக்கும் பேராற்றல்கொண்ட உயிரினமாக இது இருக்கிறது. இதைப் பெற வேறு வழியே இன்றிதான் திரையர்களை அனுப்பிவைத்தார் குலசேகரபாண்டியன். நீங்கள் பறம்பில் இருப்பது அப்போது தெரிந்திருந்தால் உங்கள் மூலமே முயன்றிருப்பார் பேரரசர்.”
கபிலர் அசைவின்றி உட்கார்ந்திருந்தார். குலசேகரபாண்டியனின் முயற்சி தொடர்வதை அவரால் உணர முடிந்தது.

திசைவேழர் சொன்னார், ``அந்த அரிய உயிரினத்தால் பறம்புக்கு எந்த நன்மையும் கிட்டப்போவதில்லை. அதன் ஆற்றல் வெளிப்படப்போவது கடலில்தான். எனவே, அதைக் கொடுத்து உதவ, பாரிக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.’’

கபிலரின் அமைதி நீடித்தது.

சிறிது நேரத்துக்குப் பிறகு திசைவேழர் கேட்டார், ``ஏன் பேச்சின்றி நிற்கிறீர்?”

``பாரி எப்போதும் வியப்புக்குரிய தோழன்தான். ஆனால், இப்போது அந்த வியப்பு மேலும் அதிகரிக்கிறது.”

கபிலரின் சொல்லுக்குப் பொருள் புரியவில்லை. கண்களை உருட்டியபடி பார்த்தார் திசைவேழர்.

கபிலர் சொன்னார், `` `தேவவாக்கு விலங்கை இவ்வளவு முயன்று எடுத்துச் செல்லவேண்டிய தேவை என்ன?’ என்று பலமுறை நான் கேள்வி எழுப்பியுள்ளேன். ஆனால், இந்தக் கேள்விக்கு விடையறிய பாரி ஒருபோதும் முயன்றதே இல்லை. எனக்கு அது பெருவியப்பைக் கொடுத்தது. வற்புறுத்திக் காரணம் கேட்டால் சொல்வான், `வேந்தர்கள் எதைச் செய்தாலும் அது அவர்களின் அதிகார நலனுக்கானது; மனிதருக்கும் இயற்கைக்கும் எதிரானது. அதில் கூடுதலாகச் சிந்திக்க என்ன இருக்கிறது?’ என்று. மிக வேகமாக அவன் முடிவுக்கு வந்துவிடுகிறானோ என அப்போது தோன்றியது. ஆனால், இப்போது தெரிகிறது, அவனுடைய சொற்கள் எவ்வளவு ஆழமானவை என்று.”

பாறையை விட்டு எழுந்து, திசைவேழரைப் பார்த்தபடி கபிலர் மேலும் சொன்னார், ``இயற்கையைப் பற்றிய பேரறிவு மட்டுமல்ல, மனிதர்களைப் பற்றிய பேரறிவும் சேகரிக்கப்பட்டுள்ள இடமாக `பறம்பு’ இருக்கிறது.”
தனது சொல்லைத் தனக்கு எதிரானதாக்கிக்கொண்டிருக்கிறார் கபிலர் என்பது திசைவேழருக்குப் புரிந்தது. இருவரும் சிறிது நேரம் பேச்சின்றி நின்றனர்.

நேர்முகம் பார்ப்பதைத் தவிர்க்க எழுந்து நடந்தபடி திசைவேழர் சொன்னார், ``ஆற்றலை அறிவதும் பயன்படுத்துவதும்தான் மனிதனை வெல்லற்கரியவனாக மாற்றியுள்ளன.”

``மனிதன் வெல்லற்கரியவனாக மாறவேண்டியது யாருடைய தேவை?” என்றார் கபிலர்.

சற்றும் இடைவெளியின்றி திசைவேழர் சொன்னார், ``இயற்கையின் தேவை.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P85f_1514721012
இளக்காரமானதொரு சிரிப்போடு கபிலர் சொன்னார், ``இல்லை. ஆசைக்கு அடிமைப்பட்ட கணத்தில் மனிதன் எடுத்துக்கொண்ட உறுதி அது.”

``அது ஆசையல்ல, இயல்பு. இயற்கையின் தன்மை அதுதான். ஆற்றல்கொண்டதை மட்டுமே அது அரவணைத்துக்கொள்ளும். எனவே, மனிதன் ஆற்றலைப் பெருக்கவே வாழ்வை அமைத்துக்கொள்கிறான்.”

``அது, மனிதன் இயற்கைக்குக் கொடுத்துள்ள விளக்கம்.”

``தேவாங்கு விலங்கு கடலிலே இருக்கும்போது கிடைக்கும் பயன் எல்லையற்றது. அதன் ஆற்றல் துலங்குமிடம் அதுதான். அந்த இடத்திலே அதைப் பயன்படுத்துதல் அனைவருக்கும் நன்மை செய்வதுதானே?”

``இதைப் பாரியிடம் கேட்டால், என்ன சொல்வான் தெரியுமா?”

``என்ன சொல்வான்?”

`` `அதைப் பயன்படுத்த மனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று கேட்பான்.”

திசைவேழரின் நடையின் வேகம் கூடியது. ``இந்தக் கேள்வியை எப்போதோ கடந்து வந்துவிட்டனர் நம் முன்னோர்கள். மலைக்காடுகளில் மட்டுமே விளைந்த தானியக்கதிரின் விதைகளைச் சேகரித்து நதிக்கரையில் நட்டுவைத்தபோதே இதைப் போன்ற கேள்விகளெல்லாம் இறந்துவிட்டன. பயனளிக்கும் இடத்தை நோக்கிப் பாய்ந்து செல்லுதலே வாழ்தலின் விதி” என்று கூறிய திசைவேழர், சற்றே சினத்தோடு குரல் உயர்த்திச் சொன்னார், ``நீங்கள் எழுப்புவது இயற்கையின் மீதான உரிமை பற்றிய கேள்வியல்ல; இயற்கையின் இயங்கு விசையைப் புரிந்துகொள்ளாத அறியாமையிலிருந்து எழும் கேள்வி.”

திசைவேழரின் சினத்தை சற்றே எள்ளலோடு எதிர்கொண்ட கபிலர் கூறினார் ``நீங்கள்தான் முதலிலேயே சொல்லிவிட்டீர்களே, `அறிவுதான் அறியாமையின் அடையாளம்’ என்று.”

சினம் மேலேறாமல் கட்டுப்படுத்த முயன்றார் திசைவேழர். கபிலரை இணங்கவைப்பதுதான் முக்கியமானது. அந்தச் செயலை வெற்றிகரமாகச் செய்தாக வேண்டும். அதற்கு ஒரே வழி அவரை கருத்துகள்மூலம் வெல்வது மட்டும்தான். எண்ணங்கள் உள்ளுக்குள் ஓடியபடியிருக்க திசைவேழர் சொன்னார், ``வளைய மறுக்கும் கிளை ஒடிவதும், வளைந்துகொடுக்கும் கிளை நீண்டு தழைப்பதும்தான் இயற்கையின் அமைப்பு.”

சொற்களின் வலிமை அறிந்த இருவர், எதிரெதிர் திசையிலிருந்து அதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தேவாங்கில் தொடங்கி அதைத் தர மறுக்கும் பாரியை நோக்கி உருண்டன சொற்கள். அதை எதிர்கொள்ள, கபிலருக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆனால், இப்படியொரு பணிக்கு திசைவேழர் எப்படி இணங்கினார் என்பதே அவரின் சிந்தனையாக இருந்தது.

``ஒரு தவளை இடும் முட்டையிலிருந்து பல்லாயிரம் தலைப்பிரட்டைகள் உருவாகின்றன. அவை எல்லாம் உயிர்வாழுமேயானால், இந்தப் பூமியில் தவளையைத் தவிர வேறு உயிரினமே இருக்காது. ஒரேயொரு கொக்கு, நாள் ஒன்றுக்கு எண்ணாயிரம் தலைப்பிரட்டைகளை விழுங்கி வாழ்கிறது. இந்த அழிவுகளின் மூலம்தான் இயற்கை சமநிலையைப் பேணுகிறது.”

திசைவேழரின் சொற்களைக் கேட்டபடி கபிலர் அமைதியாக நடந்தார். அழிவுகளின் நியாயத்தைப் பேசத் தொடங்கி, அடுத்து அழித்தலின் அவசியத்தில் வந்து பேச்சு முடியும். திசைவேழர் எதை நோக்கி வருகிறார் என்பதை, கபிலரால் கணிக்க முடிந்தது.

``வலதுகையால் ஊன்றுகோலை இறுகப்பிடித்து இடதுகையால் அழுத்திக்கொடுத்துதான் உங்களால் எழுந்திருக்க முடிந்தது. இவ்வளவு தளர்ந்த நிலையிலும் நெடுந்தொலைவு பயணித்து என்னைக் காண வந்துள்ளீர்கள் எனப் பெருமகிழ்வடைந்தேன். ஆனால், உங்களின் நோக்கம் எனது மகிழ்வை உதிரச்செய்துவிட்டது” என்று சொன்ன கபிலர், சற்றே தயக்கத்தோடு அதேசமயம் உறுதியான குரலில் கேட்டார், ``உங்களுக்கு உடன்பாடற்ற செயலை ஒருபோதும் நீங்கள் செய்ய மாட்டீர்கள். அப்படியிருக்க, எதன் பொருட்டு இந்தச் செயலில் உங்களுக்கு உடன்பாடு ஏற்பட்டது?”

திசைவேழர் சொன்னார், ``சான்றோர் போற்றும் பெருங்கவி பறம்பில் உள்ளான் என்ற பெருமகிழ்வுடனே இங்கு வந்தேன். என் கால்கள் இதனினும் தளர்ந்துபோயிருப்பினும் நான் இங்கு வந்திருப்பேன் அல்லது உன்னால் மலையிலிருந்து இறங்கி வர முடியாத நிலை ஏற்பட்டிருப்பினும் நான் மலையேறி அங்கு வந்திருப்பேன். ஏனென்றால், வாழ்வு முழுவதும் நான் பயணித்த பாதையில் இப்படியோர் ஆற்றல்கொண்ட உயிரினத்தைக் கண்டதில்லை.”

திசைவேழரின் குரலில் உணர்ச்சி மேலேறிக் கொண்டிருந்தது. ``எனது இளம்பருவத்தில் நாடியைத் தூக்கி அண்ணாந்து வானத்தை உற்றுப்பார்க்கவைத்தார் என் தந்தை. அன்றிலிருந்து இன்று வரை வானக்கோடுகளின் ஊடேதான் நான் வளைந்தும் நெளிந்தும் போய்க் கொண்டிருக்கிறேன். ஒளி அண்டங்களின் மடிப்புகளுக்குள் பேதலித்து நின்ற காலங்கள் எத்தனையோ! முன்னோருக்கு முன்னோர் என எத்தனை தலைமுறைகளாக வானியலின் வியப்புகளுக்குள் மூழ்கிக்கிடக்கிறோம். கதிரவனும் விண்மீன்களும் இன்றி மூடப்பட்ட அறைக்குள் நம்மால் திசை அறிய முடியும் என்று ஒருவன் சொன்னால், அவனை `மூடன்’ என்று சொல்லியிருப்பேன். ஆனால், தேவாங்கு என்ற இந்தச் சின்னஞ்சிறு உயிரினம் நம் அறியாமையைத் தகர்த்துவிட்டது. எல்லையில்லாத அகண்ட வானத்தைத் துளையிட்டுப் பார்ப்பதைப்போல இருக்கிறது, அது வடதிசை நோக்கி உட்கார்ந்திருப்பது.

இனி நம் பாய்மரங்களுக்கு, கடலும் காற்றும் பொருட்டல்ல. நடந்துகொண்டிருக்கும் தேவாங்கு உட்காரும் கணத்தில் திசைகள் தாமே வந்து மீகானின் சொல் கேட்க உள்ளன. இந்த ஆற்றல், வேந்தர்களுக்கு மட்டுமல்ல... மனிதர்கள் அத்தனை பேருக்கும் பயனளிக்கப்போகும் ஒன்று. இதை நாம் தவறவிட்டுவிடக் கூடாது. இந்த அறிவின் அவசியத்தை உன்னால் புரிந்துகொள்ள முடியும். மலைமக்கள், வாழ்வின் இயக்கத்தைப் பிடித்து அடுத்த கட்டத்துக்கு நகர முடியாத மந்தநிலைகொண்டவர்கள். நீதான் பாரியிடம் இதை எடுத்துச்சொல்ல வேண்டும். அதற்காகத்தான் வந்தேன்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P85g_1514721031
நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்தபடி மறுமொழியின்றிக் கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர்.

வேகம் குறையாமல் திசைவேழர் கேட்டார், ``ஏன் பேச்சின்றி நிற்கிறீர்?”

``நீங்கள் சொல்வது எல்லாமே எனக்குப் புரிகிறது. ஆனால், நான் சொல்வது மட்டும் உங்களுக்குப் புரியவில்லை. நீங்கள் தேவாங்கினால் ஏற்படும் பயனைப் பற்றிப் பேசுகிறீர்கள். அது தேவாங்குக்கான பயன் அல்ல என்பது உங்களுக்குப் புரியவில்லை. உங்களின் பயனுக்காக அதைப் பயன்படுத்த உங்களுக்கு உரிமை இல்லாததைப்போல, அனுமதி கொடுக்கும் உரிமை பாரிக்கும் இல்லை. இழக்கக்கூடிய வாழ்விடத்தில் எந்த உயிரையும் இயற்கை உருவாக்கவில்லை. எனவே, தனது வாழ்விடத்தை ஓர் உயிர் இழப்பது இயற்கையுடனான ஆணிவேரை அறுத்துக்கொள்வதற்கு நிகர். பயன்பாட்டுக் கணக்குகளும் பண்டமாற்றுக் கணக்குகளும் எல்லாவற்றுக்கும் எப்படிப் பொருந்தும்? நாடியைத் தூக்கி வானத்தைப் பார்த்தபடி உங்கள் தந்தை விதைத்த கனவுக்கு விலை சொல்ல முடியுமா உங்களால்?”

கபிலரின் குரல் திடமாக ஒலித்தது. சொற்களைச் செங்குத்தாகக் கீழ்நோக்கித் தள்ள புலவனுக்குத் தெரியும். ஆசானாக மதிக்கும் ஒருவரின் மீது அந்தச் செயலைச் செய்யக் கூடாது என நினைத்தார். ஆனால், எண்ணங்களை மீறிச் சொற்கள் உருண்டன.

``தேவாங்கு மட்டுமல்ல, பாரியும் அப்படித்தான். என்ன விலை கொடுத்தாலும் சினம்கொண்டாலும் வீழ்ந்து பணிந்தாலும் திசை மாற மாட்டான்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 12:28 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P77a_1515567331
வ்வியூரிலிருந்து கபிலரை அழைத்துவந்த உதிரன், வேட்டுவன் பாறையில் உள்ள எல்லோருடனும் பேசி நலம் விசாரித்துக்கொண்டிருந்தான். திசைவேழரும் கபிலரும் தனியே பேச எழுந்து சென்றபோது, நீலனும் உதிரனும் இன்னொரு திசை நோக்கி நடந்து சென்றனர். இரு திசைகளையும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் வேட்டூர் பழையன். கற்றறிந்த அறிஞர்கள் இருவர் வலப்புறம் மெதுவாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, பறம்பின் இணையற்ற வீரர்கள் இருவர் இடப்புறமாகப் பேசியபடி நடந்துகொண்டிருந்தனர்.

உதிரனிடம் நீலன் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன. ``எவ்வியூருக்குக் கூழையனிடமிருந்து நாள் தவறாமல் செய்தி வந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்களே..?” என்று தொடங்கினான்.

``ஆம், சேரகுடியினர் இருவரும் போருக்கான வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்தச் செய்திகளைக் கூழையன் நாள்தோறும் அனுப்பிக்கொண்டிருக்கிறான். உதியஞ்சேரலைவிடக் குடநாட்டினரிடம்தான் நாம் கூடுதல் விழிப்பு உணர்வுடன் இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. அவர்கள் தளபதி எஃகல்மாடன் பற்றி மிகக் கொடுமையான கதைகள் மக்களிடம் பரவியிருக்கின்றன. பிடிபட்ட எதிரி நாட்டு வீரர்கள் யாரையும் கண நேரம்கூட அவன் உயிரோடு வைத்திருப்பதில்லையாம். உடல்களைச் சிதைத்துக் கொல்வதை அவன் வழக்கமாக வைத்திருக்கிறானாம். `கோளூர்சாத்தனின் கைகளை வெட்டிய முடியனின் தலையை எடுக்காமல் நான் ஓய மாட்டேன்’ எனச் சூளுரைத்தபடி அலைகிறானாம்” என்றான் உதிரன்.

அவன் சொல்லியதைப் பற்றி சிந்தித்தபடி வந்துகொண்டிருந்தான் நீலன். ``பறம்பினைச் சுற்றியுள்ள வேறெந்த நாட்டினருக்கும் இல்லாத வாய்ப்பு குடநாட்டினருக்குத்தான் உண்டு. நில அமைப்பின் தன்மையைக் கணக்கில் கொண்டால் அவர்களால் பச்சைமலையின் நடுப்பகுதி வரை வந்து சேர முடியும். இந்தச் சாதகமான வாய்ப்பைப் பயன்படுத்துவதாக நினைத்துதான் அவர்கள் ஏமாற்றம் அடைவர். ஏனென்றால், அதன் தொடர்ச்சியாக உள்நுழைந்தால் கரும்பாறைப் பிளவுக்குள் எளிதாகச் சூழப்பட்டு முழுமுற்றாக அழிக்கப்படுவர்” என்றான்.

அடுத்த கேள்வியை நீலன் கேட்கும் முன்னர் உதிரன் கேட்டான், ``சோமப்பூண்டின் பானம் குடிக்க வந்தபோது மீட்டுவந்த கப்பல் அடிமைகளைப் பற்றிக் கூறினாயே, அவர்களின் தலைவன் இன்னும் அப்படித்தான் இருக்கிறானா அல்லது ஏதாவது பேசுகிறானா?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P77b_1515567350
``இப்போது முழுமையாகக் குணமடைந்து விட்டான். மிகக் கொடுமையான காயங்கள் ஏற்பட்டதால் இத்தனை மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் அவன் எதையும் வாய் திறந்து பேச ஆயத்தமாக இல்லை. எவ்வளவு முயன்றும் அவன் கூட்டத்தைப் பற்றிய உண்மைகள் எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
உடன் இருக்கும் வீரர்கள் தலைவனின் உத்தரவின்றி ஒரு சொல்கூட உதிர்க்க மறுக்கிறார்கள். அவனது கண் அசைவை வைத்தே பணிபுரிகின்றனர். தேர்ந்த போர்க்குடியாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடும் உறுதியும் எளிதில் வராது” என்றான்.

``கபிலர் அவரின் ஆசானோடு ஓரிரு நாள்கள் தங்குவார். நாம் போய் அவனைப் பார்த்து வரலாமா?”

``விடிந்ததும் புறப்பட்டுப் போவோம்” என்றான் நீலன்.

பிலரும் திசைவேழரும் குடிலுக்குத் திரும்பும்போது நண்பகல் கடந்திருந்தது. அவர்களுக்கான உணவு ஏற்பாடாகியிருந்தது. திறளி மரப்பலகையில் உட்கார்ந்ததும் திசைவேழர் சொன்னார், ``உணவு அருந்தியதும் நாங்கள் புறப்படுகிறோம்.”

``உங்களின் வலதுகாலை மடக்கி எழ முடியாததைப் பற்றி நீங்கள் சொன்னதால், மருத்துவர்கள் மூலிகைகளைப் பறித்துவந்து காத்திருக்கிறார்கள். இன்னும் இரு தினங்கள் தங்குங்கள். அவர்களின் மருத்துவத்தால் முழுமையாகக் குணமடைந்து செல்வீர்கள்” என்றார் வேட்டூர் பழையன்.

மறுமொழி ஏதுமின்றி அமைதியாக இருந்தார் திசைவேழர். வந்த நோக்கம் நிறைவேறாத மனநிலை மட்டுமன்று, இதுவரை தான் கண்டிராத ஒரு கபிலரையும் அவர் கண்டுள்ளார். அவருடைய உணர்வுகள் கொந்தளிப்பாக இருந்தன. பேரரசுக்காகத் தூது வந்ததைப்போல தன்னை கபிலர் நினைத்துவிட்டாரோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை. அமைதி நீடித்தது. அதைக் கவனித்துக்கொண்டிருந்த கபிலர், ``மருத்துவம் பார்த்துக்கொண்டு குணமடைந்து செல்வதுதான் நல்லது” என்றார்.

திசைவேழரின் மனம் அதை ஏற்கவில்லை. பறம்பைப் பற்றிக் கூறிய சொற்கள் அவரைக் கூசிக்கொண்டிருந்தன. ஆனால், நீட்டி மடக்க முடியாத வலதுகால் அவரது மறுப்புச்சொல்லை மடக்கிப் பிடித்துக்கொண்டது. என்ன செய்வது என அறியாமல் திணறிக்கொண்டிருந்தவர், கபிலரின் சொல்லுக்கு இணங்கித் தலை அசைத்தார்.

மாலை நேரம் நெருங்கியதும் மருத்துவர்கள் பச்சிலைகளையும் மரப்பட்டைகளையும் கொண்டுவந்திருந்தார்கள். திறளி மரப்பலகையில் உட்கார்ந்திருந்த அவரை, வலதுகாலை மட்டும் பலகையின் மேல் நேராக நீட்டச் சொன்னார்கள்.

திசைவேழரால் செய்யவே முடியாத பெருஞ்செயலாக அது இருந்தது. வளைந்த கால் அவ்வளவு எளிதில் நீண்டுகொள்ள ஆயத்தமாக இல்லை. அவரால் எவ்வளவு முடியும் என்பதைக் கணிப்பதற்கே மருத்துவர்கள் இதைச் செய்யச் சொன்னார்கள். அவர் முடிந்தவரை கால்களை நீட்ட முயன்றார். ``அரைவட்ட விண்மீன் கூட்டம் ஒருபோதும் நேர்க்கோட்டு சாட்டைக்கம்பு வெள்ளியாக மாறாது” என்று காலை அழுத்திக்கொண்டே சொன்னார். அவரது சொல்லைக் கேட்டுச் சிரித்தார் கபிலர்.

மருத்துவர்கள் பச்சிலையையும் பட்டையையும் கைக்கருவிகளால் ஒன்றாக்கி அரைத்துக் கொண்டிருந்தனர். அடிநரம்பு, சுண்டி இழுத்துக்கொண்டிருந்தது. வலி உச்சந்தலையைத் தொட்டது. மருத்துவர்கள் அரைத்துக் கொண்டிருக்கும் மூலிகைகளைப் பார்த்தபடி, ``என்ன மருந்து இது?” எனக் கேட்டார் திசைவேழர்.

மூத்த மருத்துவர் சொன்னார், ``புலி முன் ஆடு.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P77c_1515567373
திசைவேழருக்குப் புரியவில்லை. அவர்கள் சற்றே விளக்குவார்கள் என எதிர்பார்த்தார். மருத்துவர் மூவரும் அவரவர் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். தலைமாட்டில் இருந்த கபிலரைப் பார்த்தார். அவருக்கும் அதற்கான பொருள் புரியவில்லை. மருத்துவர்களைப் பார்த்து கபிலர் கேட்டார், ``அப்படியென்றால் என்ன... மூலிகையின் பெயரா?”

``இல்லை. மருந்தின் சேர்மானத்தையும் நோயின் தன்மையையும் வைத்து நாங்கள் முடிவுசெய்வோம். எங்களின் மருந்துக்கு முன், இந்த நோயானது புலிக்கு முன் ஆடு போல கண நேரத்தில் பதுங்கி ஒடுங்கும். சில நேரத்தில் நோயும் மருந்தும் புலிக்கு முன் புலி போல சம அளவில் நிற்கும். சில நேரத்தில் மருந்தால் கட்டுப்படுத்த முடியாத அளவில் நோய் இருக்கும், புலியை வீழ்த்தும் யானைபோல” என்றார் அவர்.

திசைவேழர் வியப்புடன் பார்த்தார். `மருத்துவத்தைத் தொடங்கும் முன்னரே, புலிக்கு முன் ஆடு போல, இந்த நோயானது மருந்துக்கு முன் பதுங்கி ஒடுங்கும் என எப்படி துணிந்து சொல்ல முடிகிறது இவர்களால்?’ என்று சிந்தித்தபடியே படுத்திருந்தார். வலி உச்சந்தலையைத் தொட்டுத் திரும்பிய இடத்தில் இப்போது புலியும் ஆடும் உலவிக்கொண்டிருந்தன. மனம் வேறொன்றைக் கணித்துக்கொண்டிருக்க, வலி நினைவில் தங்க இடமின்றி மறந்தொழிந்தது.

இரவு நெடுநேரமாகியும் தூக்கம் வரவில்லை. காலில் கட்டு போடப்பட்டிருந்ததால் அசையாமல் படுத்திருக்கவேண்டியிருந்தது. மனம் அலைமோதிக்கொண்டிருந்தது. அருகில் போடப்பட்டிருந்த கட்டிலில் கபிலர் உட்கார்ந்து திசைவேழரைக் கவனித்தபடி இருந்தார். உரிமை கலந்த இயல்பான பேச்சு இருவரிடமும் இல்லை. `நாம் சற்று கடுமையாகப் பேசிவிட்டோமோ!’ என்ற எண்ணம் இருவருக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தது.

அமைதியைக் குலைக்கும் சொல்லைக் கண்டறிய முடியாமல் கபிலர் தவித்துக்கொண்டிருக்கும்போது திசைவேழரின் மெல்லிய குரல் கேட்டது, ``பல ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலையில் தற்செயலாக ஒரு பாணர் கூட்டத்தைக் கண்டேன். ஒருவார காலம் என்னோடு சேர்ந்து அவர்கள் பயணப்பட்டார்கள். அந்தப் பயணத்தின்போது நான் யார் என்பதை உடன் வந்த மாணாக்கர்கள் மூலம் அறிந்து கொண்டனர். அதன் பிறகு அந்தப் பாணர் குழுவின் தலைவன் நாஞ்சிலன் என்னிடம் வானியல் பற்றி பல ஐயங்களைக் கேட்டான். நான் அவற்றுக்கெல்லாம் விடை சொல்லியபடி வந்தேன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P77d_1515567388
பயண வழியில் விலகிச் செல்லும் இடம் வந்தது. அப்போது அவன் சொன்னான், `பச்சைமலைத்தொடரில் வியப்புறு கனியான கருநெல்லி உள்ளது. அதை உட்கொண்டால் பகலிலும் விண்மீன்களைப் பார்க்கலாம். சென்றமுறை நான் பறம்புக்குச் சென்றபோது நடுமலையின் முகட்டில் அந்த மரத்தைக் கண்டேன். பயிற்சிபெற்ற வீரர்களைத் தவிர மற்றவர்களால் ஏறிச்செல்ல முடியாத பெருமுகடு அது. அந்த அதிசயக் கனியைப் பறித்து யாருக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற எண்ணம் உருவானதால், நான் அதைப் பெரிதாகக் கருதவில்லை. உங்களைப் போன்ற வானியல் பேராசானுக்கு அந்தக் கனி உண்ணக் கிடைத்தால் எவ்வளவு நன்மைபயக்கும்! அடுத்த முறை பறம்பு செல்கிறபோது பாரியிடம் கேட்டு அந்தக் கனியைக் கொண்டுவந்து உங்களுக்குத் தருவேன்’ என்று சொல்லிச் சென்றான்.

அவன் சொல்வதை நான் உண்மை என நம்பவில்லை. பகலிலே விண்மீன் கூட்டத்தை எப்படிப் பார்க்க முடியும்? அவன் ஏதோ கற்பனையாகப் பேசுகிறான் என்று நினைத்தேன். ஆனால், திசைகாட்டும் விலங்கு ஒன்று இருக்கிறது என்பதைப் பார்த்த பிறகு, இப்போது எனது எண்ணம் வேறுவிதமாக இருக்கிறது. அந்தச் செய்தியை அறிந்த நான் அப்போதே பறம்புக்கு வந்திருக்க வேண்டும். தவறிழைத்துவிட்டேனோ எனத் தோன்றுகிறது.”

திசைவேழர் சொல்வதை வியந்து கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர். என்ன சொல்வது எனப் பிடிபடவில்லை. சற்றே திணறி மீண்டார். பேச்சற்றிருந்த கபிலரைப் பார்த்து, ``எதுவும் சொல்லாமல் இருக்கிறாய்?” எனக் கேட்டார் திசைவேழர்.

``கருநெல்லியைப் பற்றி பாரி என்னிடம் சொல்லியுள்ளான். `அதை உட்கொண்டால் பகலிலும் விண்மீன்களைப் பார்க்க முடியும். அந்த ஆற்றல் அதற்கு உண்டு என, குலநாகினிகள் சொல்வார்கள்’ என்று கூறியுள்ளான். அந்தக் கனியைப் பாரிகூடப் பார்த்ததில்லை. ஆனால், அதைப் பார்த்த ஒருவர் உங்களிடம் வந்து சொல்லியுள்ளார் என்பது எவ்வளவு முக்கியமான செய்தி! என்னால் நம்பவே முடியவில்லை” என்று வியப்பில் திணறினார் கபிலர்.

`இயற்கையைப் பற்றிய மனிதப்பேரறிவு இங்குதான் சேமிக்கப்பட்டிருக்கிறது’ என்று கபிலர் சொன்ன சொல்லின் ஆழம் காண முயன்றார் திசைவேழர்.

``பகலில் அல்ல, இரவில்கூட விண்மீன்களைப் பார்க்க முடியாத அளவுக்கு, அகந்தையும் ஆணவமும் சில நேரங்களில் கண்களை மறைத்துவிடுகின்றன” என்றார் திசைவேழர்.

இதற்கு என்ன மறுமொழி சொல்வதெனத் தெரியவில்லை. அசையும் அவரது வலதுகால் பாதத்தை மெள்ளப் பிடித்தபடி, ``அசைய வேண்டாம். எல்லாம் சரியாகும்” என்றார் கபிலர்.

பெரும்புலவனின் கைவிரல்கள் பாதத்திடம் பேசிய மொழி கேட்டு திசைவேழரின் கண்கள் கலங்கின.

திகாலையில் புறப்பட்ட நீலனும் உதிரனும் இரு குன்றுகள் தாண்டி அருவியின் அருகில் இருந்த மருத்துவக் குடிலை வந்தடைந்தனர். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவு மிகக் கடினமான காயங்கள் ஏற்பட்டிருந்ததால் இந்த இடம்வைத்தே மருத்துவம் பார்த்தனர். இப்போது அந்த வீரனின் உடல் முழுமையாகக் குணமாகிவிட்டது. நெடிய உயரமும் எல்லையற்ற வலிமையும்கொண்ட அவனது உடலை, சிதைவிலிருந்து முழுமையாக மீட்டிருந்தனர் பறம்பு மருத்துவர்கள்.

நீலனும் உதிரனும் அந்த இடம் வந்து தலைமை மருத்துவரைக் கண்டு வணங்கினர். ``எல்லா வகைகளிலும் அவன் குணமாகிவிட்டான்” என்றார் அவர்.

``ஆனால் பேசத்தான் மறுக்கிறான். அதுதான் ஏன் எனப் புரியவில்லை” என்றார் உடன் இருந்த இன்னொரு மருத்துவர்.

``மற்ற வீரர்களோ, தலைவனின் உத்தரவின்றிப் பேசுதல் முறையன்று என்று சொல்கிறார்கள்” என்றார் அருகில் இருந்த உதவியாளர்.

``அவர்களின் குலம் முழுமையாக அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களும் மரணத்தைவிடக் கொடும்வேதனையை அனுபவித்து மீண்டுள்ளனர். அதனால், அச்சம் அவர்களின் ஆழ்மனம் வரை பதிந்திருக்கும். எவரையும் எளிதில் நம்பிவிட முடியாத மனநிலையில் அவர்கள் இருக்கக்கூடும். பறம்பைப் பற்றி அவர்கள் பெரிதாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். எனவே, நம்பிக்கைகொள்ள முடியாத தயக்கமே அவர்களைப் பேசவிடாமல் செய்கிறது என நினைக்கிறேன்” என்றார் தலைமை மருத்துவர்.

எல்லாவற்றையும் கேட்ட இருவரும் புறப்பட்டு அந்த வீரனைக் காணச் சென்றனர். நாய்களை நன்கு பழக்கக்கூடியவர்களாக அந்த வீரர்கள் இருந்தனர். வேட்டைநாய்கள் அனைத்தையும் மிக அணுக்கமாக வைத்திருந்தனர். சுற்றிலும் இருந்த வீரர்கள் நீலனைக் கண்டதும் எழுந்து வணங்கி வழிவிட்டு நின்றனர். அவர்கள் தலைவன், குடிலுக்குள் தனித்திருந்தான். நீலனும் உதிரனும் உள்நுழைந்து அவன் முன் அமர்ந்தனர்.

உடல் முழுக்க வெட்டுத் தழும்புகள் இடைவெளியின்றி இருந்தன. பார்த்த கணம், உதிரனுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. `இவ்வளவு காயங்களையும் மீறி உயிர்பிழைத்து உட்கார்ந்திருக்கிறானே!’ என்ற வியப்பே ஆட்கொண்டது. சிதைந்த உடலை மீண்டும் இறுக்கிக்கட்டும் உடற்பயிற்சியைத் தொடங்கிவிட்டான் என்பதை நீலனால் உணர முடிந்தது. சென்றமுறை பார்த்ததற்கும் இந்தமுறை பார்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அவனுடைய கண்கள் கணித்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P77e_1515567406
அவனை உற்றுப்பார்த்தபடி உதிரன் சொன்னான், ``உனது குடிலுக்குப் பின்னால் இருக்கும் அருவியின் இடப்புறம் சிறிது தொலைவு நடந்தால் வீரன் ஒருவனின் நடுகல் உண்டு. அவனது பெயர் கடுவன். கடுவனின் கதையை யாவரும் அறிவர். அதைக் கேட்டுத் தெரிந்துகொள். உனக்கு இனி தேவைப்படும் மருத்துவம் அதுதான்” சொல்லிவிட்டு எழுந்தான் உதிரன்.

வந்த இருவரும் நீண்டநேரம் பேசுவார்கள் என அவன் நினைத்திருந்தான். ஆனால் அவர்களோ, ஒற்றைச் சொல்லை மட்டும் சொல்லிவிட்டுப் புறப்பட்டனர். தொலைவில் இருவரின் உருவமும் மறையும் வரை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

து ஒரு கொடும் கோடைக்காலம். மழையின்றி விளைச்சல் பாதித்ததால் சமவெளியில் இருந்த மனிதர்களின் சேமிப்புகள் எல்லாம் தீர்ந்தன. உண்ண உணவு ஏதும் இல்லாமல், மனிதர்கள், உணவு தேடி எங்கும் அலைந்துகொண்டிருந்தனர்.

எவ்வளவு கொடும்பஞ்சம் வந்தாலும் மலைவாழ் மக்களைக் கிழங்குகள் கைவிடாது. ஏழு வகைக் கிழங்குகள் மலையில் விளைகின்றன. நீரின்றிச் செடிகொடிகள் எல்லாம் செத்து மடிந்தாலும் மண்ணுக்குள் கிடக்கும் இந்தக் கிழங்குகள் மனிதனின் உணவுக்காக என்றென்றும் காத்திருப்பவை.

சித்திரவள்ளிக்கிழங்கும் காட்டுவள்ளிக் கிழங்கும் இதர கொடிகளும் மனிதர்கள் உண்ண எப்போதும் கிடைக்கக்கூடியவை. அவைகூட விளையாத கொடும்பஞ்சகாலம் என்றால் இருக்கவே இருக்கிறது நூரை, சவலன், நெடுவன், தீச்சி, நாச்சி, சம்பை, நூழி எனும் ஏழு வகையான கிழங்குகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு ஆழத்தில் விளைந்துகிடப்பவை. நிலம் அறிந்த மனிதர்கள் அந்தக் கிழங்குகள் இருக்கும் இடத்தை எளிதில் அடையாளம் கண்டு தோண்டி எடுப்பர்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P77f_1515567421

சமவெளியில் உண்ண வழியில்லாத நிலையில், பலரும் கிழங்குகளைத் தேடி மலைகளில் ஏறினர். போதன் என்பவன், பட்டினிகிடக்கும் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, கிழங்கு தேடிப் பச்சைமலையில் ஏறியுள்ளான். காலையிலிருந்து உச்சிப்பொழுது வரை தேடி அலைந்துள்ளான். மிகச்சிறிய அளவிலான இரு கிழங்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனாலும் விடாமல் தேடி அலையும்போது பாறை ஒன்றில் அமர்ந்திருந்த இளைஞனைப் பார்த்துள்ளான். இளைஞனின் காலில் ஏதோ காயம்பட்டுக் குருதி வழிந்து ஓடியது. பச்சிலைகளைப் பறித்து, காயத்தின்மீது தேய்த்தபடி உட்கார்ந்திருக்கிறான் அந்த இளைஞன். அவன் மலைமகன் என்பதை, பார்த்ததும் போதன் புரிந்துகொண்டான். `இவனிடம் கேட்டால் நமக்கு வழி பிறக்கும்!’ என நினைத்து, ``எத்திசை போனால் கிழங்கு கிடைக்கும்?” எனக் கேட்டான்.

அவன் பதில் ஏதும் சொல்லாமல் போதன் கையில் வைத்திருந்த இரு கிழங்குகளையே உற்றுப்பார்த்தான். ``கேள்விக்கு விடை சொல்லாமல், கைகளில் இருக்கும் கிழங்குகளையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டான் போதன்.

அதற்கு அந்த இளைஞன், ``நீ கையில் வைத்திருப்பது நூழிக்கிழங்கின் வகை. புதிதாகச் சாப்பிடுகிறவர்களுக்கு இது ஒவ்வாது. இதில் உள்ள கருவிதைகள் செரிமானம் ஆகாது” என்றான்.

``வீட்டில் கொடும்பட்டினியில் கிடக்கிறார்கள். அவர்களின் பசிக்கு எதுவும் உணவுதான். புதிதாகக் கிழங்குகள் கிடைக்க வழியிருந்தால் சொல்” எனக் கேட்க, இளைஞனோ அருவி விழும் பாறையைக் காட்டி, “அந்தத் திசையில் போய்ப்பாருங்கள், சித்திரவள்ளிக்கிழங்கு கிடைக்கும்” என்றான்.

``சரி” என்று கூறிப் புறப்படும்போது போதன் கேட்டான், ``நீ பறம்பைச் சேர்ந்தவனா?”

``ஆம். எனது பெயர் கடுவன்.”

“அப்படியென்றால் உன்னை நம்பலாம்” எனச் சொல்லி, கையில் வைத்திருந்த நீர்க்குடுவையையும் கிழங்குகளையும் அவனிடம் கொடுத்துவிட்டு. “இதைப் பார்த்துக்கொள். நான் அந்த இடம் சென்று கிழங்கைத் தோண்டிவந்ததும் வாங்கிக்கொள்கிறேன்” என்றான்.

அலைந்து தவித்து, மிகவும் சோர்வுற்று இருக்கும் ஒருவன் சொல்கிறானே என்று கடுவனும் அதை வாங்கிக்கொண்டு அவனை அனுப்பிவைத்தான்.

போதன் சென்ற பிறகு காயங்களில் வழியும் குருதி நின்றுவிட்டதா எனப் பார்த்தபடி கடுவன் உட்கார்ந்திருந்தான். அவன் அருகில் போதன் வைத்துவிட்டுப் போன இரு கிழங்குகளும் நீர்க்குடுவையும் இருந்தன. சிறிது நேரத்தில் பெருமுயல் ஒன்று கடுவன் உட்கார்ந்திருந்த பாறையின் வலப்புறமாகத் தவ்விப் புதருக்குள் ஓடியது.

பார்த்தவுடன் கடுவனுக்கு போதனின் உயிரற்ற குரல் நினைவுக்கு வந்தது. கொடும்பட்டினியில் குடும்பம் கிடப்பதால் நூழிக்கிழங்கை எடுத்துப் போகிறான். `இது புதியவருக்குச் சேராதே!’ என நினைத்தவன், `இந்த முயலைப் பிடித்துக்கொடுத்தால் அவன் குடும்பத்துக்கு உணவாகும்’ எனச் சிந்தித்தபடி கையில் இருந்த மூங்கில்குச்சியை எடுத்துக்கொண்டு சட்டெனப் புதரை நோக்கித் தாவினான்.

அந்தப் புதர் முழுவதும் கிண்டிப் பார்த்தான், முயல் தென்படவில்லை. எந்தத் திசையில் போயிருக்கும் எனக் கால்தடம் பார்த்தான். எதுவும் தென்படவில்லை. மழைக்காலத்தில் எளிதில் தடம் அறியலாம், கோடையில் தடம் அறிவது கடினம். எங்கே போயிருக்கும் எனக் கணித்துக் கீழ்திசை நோக்கி, புதர்களைக் கிளறியபடி போனான். நீண்ட தொலைவு கீழிறங்கிச் சென்றான். முயல் அவனது கண்ணில் படவே இல்லை. மிகவும் சோர்வடைந்து பாறை நோக்கி நடந்தான்.

புதர்களுக்குள் நுழைந்து இங்குமங்கும் தேடியதில் குச்சிகள் கிழித்து, காயத்திலிருந்து மீண்டும் குருதி வழிந்தது. `பச்சிலையைத் தேய்ப்போம்!’ என எண்ணியபடி பாறையின் மீது ஏறி அமர்ந்தான். காய்ந்த குச்சிகளின் கீறல் அளவற்றதாக இருந்தன. `எப்படியாவது பிடிக்க வேண்டுமே என்ற பதற்றத்தில், நிதானமின்றிப் புதருக்குள் ஓடியுள்ளோம்’ என நினைத்தபடி பச்சிலையை எடுத்துத் தேய்த்தான்.

காயத்தில் எரிச்சல் அதிகமாக இருக்கிறதே என்று பற்களைக் கடித்துக்கொண்டே பாறையைப் பார்த்தான். வைத்துவிட்டுப் போன இடத்தில் அந்த இரு கிழங்குகளும் இல்லை. நீர்க்குடுவை மட்டும் ஓரத்தில் உருண்டுகிடந்தது. சற்றே பதற்றமடைந்து இங்குமங்குமாகத் தேடினான். எங்கும் இல்லை. ஏதோ விலங்கு வந்து அதைத் தின்றுவிட்டுப் போய்விட்டது என்பது தெரிந்தது.

போதன் வந்து கேட்டால் என்ன செய்வது என்ற பதற்றத்தில், பாறையைச் சுற்றி எங்காவது விழுந்துகிடக்கிறதா எனத் தேடினான். எதுவும் கண்களில் படவில்லை. நேரமாகிக்கொண்டிருந்தது. `அடுத்து என்ன செய்யலாம்?’ எனச் சிந்தித்தான். எங்கிருந்தாவது வேறு கிழங்குகளைத் தோண்டி எடுத்துவந்துவிடலாமா என எண்ணிக்கொண்டிருந்தபோது தொலைவில் போதன்  வருவது தெரிந்தது.

கடுவன், பதற்றத்தோடு அவனது வரவைப் பார்த்துக்கொண்டிருந்தான். போதனின் கையில் சித்திரவள்ளிக்கிழங்குகள் சில இருந்தன. சற்று மகிழ்வோடுதான் அவன் வந்தான். “நீ சரியான இடத்தைச் சொன்னாய், உனக்கு நன்றி” என்று சொல்லியபடியே பாறையின் மீதிருந்த நீர்க்குடுவையை எடுத்துக்கொண்டு கிழங்குகளைத் தேடினான். அவற்றைக் காணவில்லை. அப்பக்கம் இருக்குமோ என நினைத்து கடுவனின் பின்திசையில் பார்த்தான். அங்கும் இல்லை. தேடியபடியே, “எங்கே கிழங்குகள்?” என்றான்.

கடுவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தயக்கத்தில் சொற்கள் வரவில்லை.

போதனின் கண்கள் தேடியபடியே “கிழங்குகள் எங்கே?” என மீண்டும்  கேட்டான்.

தயக்கத்தோடு கடுவன் சொன்னான், ``அவற்றை ஏதோ விலங்கு தின்றுவிட்டது.”

அதிர்ச்சியானான் போதன். தலையை மறுத்து ஆட்டி “என்ன சொல்கிறாய்..?” எனக் கேட்டான்.

“முயலொன்று பார்வையில் பட்டது, உங்களுக்குக் கொடுக்கலாமே என அதைப் பிடிக்க ஓடினேன். அந்த நேரத்தில் ஏதோ ஒரு விலங்கு, கிழங்குகளைத் தின்றுவிட்டது” என்றான் மிகுந்த கவலையோடு.

அதிர்ச்சியிலிருந்து மீளாத போதன், “முயல் எங்கே?” என்றான்.

``பிடிக்க முடியவில்லை. தப்பிச்சென்று விட்டது.”

``என்னை ஏமாற்றப்பார்க்கிறாய். கிழங்குகளைத் தின்றுவிட்டு, என்னிடம் மறைக்க, பொய் சொல்கிறாய்” என்றான்.

கடுவன் மிகுந்த பதற்றத்துக்குள்ளானான், “நான் பொய் சொல்லவில்லை. உங்களுக்குக் கொடுக்கத்தான் முயலைப் பிடிக்கப் போனேன், அவசரத்தில் கிழங்கை எடுத்துக்கொண்டு போகாமல் இங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டேன். அதுதான் நான் செய்த தவறு. என்னை மன்னியுங்கள்” என்றான்.

போதனோ, “நீ பறம்பைச் சேர்ந்தவன் என்பதால்தான் நம்பினேன், என்னை நீ ஏமாற்றிவிட்டாய்” என்றான்.

சொற்கள் கடுவனை நிலைகுலையச்செய்தன. அவன் மீண்டும் மீண்டும் தனது நிலையை விளக்கிச் சொல்ல முயன்றான். போதன் அவனது சொல்லை நம்பவில்லை. “கிழங்கை நீ உட்கொண்டுவிட்டு விலங்கின் மீது பழிபோடுகிறாய்” என்று உறுதியாகச் சொன்னான்.

“சரி, தின்று முடித்துவிட்டாய். இனி நான் புலம்பி என்ன ஆகப்போகிறது, கொடும்பஞ்சம் பறம்பு மக்களையும் மாற்றிவிட்டது” என்று துயருற்றுப் புலம்பியபடியே புறப்பட்டான் போதன்.

சிறு பாறையின் மீது நின்றுகொண்டிருந்த கடுவன் இடுப்பில் இருந்த குறுங்கத்தியை எடுத்தபடி, ``ஒரு கணம் நில்லுங்கள்” என்றான்.

நடக்கத் தொடங்கிய போதன் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P77g_1515567442
பாறையின் மீது இருந்த கடுவன், குறுங்கத்தியை அடிவயிற்றின் இடப்புறம் அழுத்தி உள்நுழைத்தான்.

போதனுக்கு அவன் என்ன செய்கிறான் என்பது புரியவில்லை.

அடிவயிற்றின் இடப்புறம் உள்நுழைத்த கத்தியை வலப்புற முனைவரை கண்ணிமைக்கும் நேரத்தில் இழுத்தான்.

அப்போதுதான் போதனுக்கு அவனது செயல் புரிந்தது.

கத்தியை இழுத்துக்கொண்டிருக்கும்போதே கடுவன் சொன்னான், “எனது வயிற்றில் கிழங்கேதும் இருக்கிறதா எனப் பாருங்கள். செரிமானம் ஆகாத கருவிதைகள் ஒன்றேனும் இருக்கிறதா எனவும் பாருங்கள்” என்று சொல்லியபடி வேலையை முடித்தான்.

பதறிய போதன் அவனை நோக்கி ஓடும்போது பாறையிலிருந்து சரிந்துகொண்டிருந்தான் கடுவன். “என்னை மன்னித்துக்கொள்” என போதன் கதறியபடி அவனது தலையை ஏந்திப்பிடித்தபோது கடுவன் சொன்னான், “பறம்பின் மக்கள், நம்பிக்கைக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 12:43 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69h_1516185037
ஞ்சித்துறைக்கு அதிகாலையிலேயே வந்துவிட்டான் உதியஞ்சேரல். மன்னன் வந்ததால் பிற வணிக நடவடிக்கைகள் எல்லாம் சற்றே நிறுத்திவைக்கப் பட்டிருந்தன. அரச மாளிகையில் விருந்தினராகத் தங்கியிருந்த ஹிப்பாலஸுக்குச் செய்தி தெரிந்தபோது விடிந்து நீண்ட நேரமாகியிருந்தது. உதியஞ்சேரல் அதிகாலையிலேயே எழுந்து துறைமுகத்துக்கு ஏன் போனான் என்ற காரணம் புரியாத குழப்பத்தில் வேகவேகமாகப் புறப்பட்டு, துறைமுகம் நோக்கி விரைந்தான்.

யவனக் காவல் வீரர்கள் அறுவர் சூழ அவனது வண்டி புறப்பட்டது. புறப்படும் நேரத்தில் வந்து அவனுடன் இணைந்தான் திரேஷியன். பெரும்படையையும் வழிநடத்திச் செல்லும் வல்லமைகொண்ட அவனை ஹிப்பாலஸ் எந்நேரமும் உடன்வைத்துக்கொண்டான். இருவரும் துறைமுகம் அடைந்தபோது சேர அமைச்சன் நாகரையன் இருவரையும் வரவேற்றான்.

துறைமுக மாளிகையில் அரசன் இருப்பதாகக் கூறி, இருவரையும் அங்கு அழைத்துச்சென்றான். உதியஞ்சேரல், தன் தளபதி துடும்பனோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். ஹிப்பாலஸ் இங்கு வந்து நாள்கள் பல ஆகிவிட்டன. ஆனால், குட்டநாட்டுத் தளபதியை இதுவரை பார்க்கவில்லை. அரசவையிலும் அவன் இல்லை. போர் நடவடிக்கையில் தீவிரமாக இருப்பதால் தளபதி அவைக்கு வந்து சேர நாளாகும் என, விசாரித்ததில் தெரியவந்தது. அவன் எங்கு போயிருக்கிறான் என்பது அரண்மனையில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை. இதுபோன்ற செய்திகளைப் பெறுவது யவனர்களுக்குக் கடினமில்லை. ஆனால், அரசனைத் தவிர வேறு யாருக்கும் இந்தச் செய்தி தெரியவில்லை என்பதை ஹிப்பாலஸ் உறுதிப்படுத்திக்கொண்டான். அதனால்தான் தளபதியின் நடவடிக்கையை அறியவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69i_1516185009
அரண்மனை நடவடிக்கைகளை அறிந்துகொள்வதில் பெருவணிகர்கள் எப்போதும் மிகக் கவனமாக இருப்பர். அவர்களால்கூட இந்தச் செய்தியை அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், சற்றும் எதிர்பாராமல் இன்று காலை துறைமுக மாளிகையில் அரசனோடு அமர்ந்திருந்தான் தளபதி துடும்பன். ஹிப்பாலஸும் திரேஷியனும் இன்றுதான் அவனை முதன்முதலாகப் பார்க்கின்றனர். முதல் தோற்றத்திலேயே அவன்தான் குட்டநாட்டுத் தளபதி என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது.

திரேஷியன்போல மிக உயரமான உருண்டு திரண்ட உடலமைப்போடு இருந்தான் துடும்பன். யவன விருந்தினரை எழுந்து வணங்கினான். ஹிப்பாலஸ் மன்னனுக்கு முகம்மன் கூறி இருக்கையில் அமர்ந்தான்.

``அதிகாலையிலேயே வந்துவிட்டீர்களா மன்னா?” என்று பேச்சைத் தொடங்கினான் ஹிப்பாலஸ்.

``ஆம். கப்பல்கள் வந்துவிட்ட செய்தி கிடைத்ததும் புறப்பட்டு வந்தேன்” என்றான்.

என்ன கப்பல், எங்கிருந்து வந்துள்ளது என்று எந்த விளக்கமும் இல்லாமலிருந்தது உதியஞ்சேரலின் கூற்று.

சற்று அமைதிக்குப் பிறகு ஹிப்பாலஸை அழைத்துக்கொண்டு மாளிகையின் பின்புறப் படிக்கட்டின் வழியாக மேல்மாடத்துக்கு நடந்தான் உதியஞ்சேரல். துடும்பனும் திரேஷியனும் கீழேயே இருந்தனர்.

துறைமுகத்தில் வரிசைகொண்டு நிற்கும் கப்பல்களை மேல்மாடத்திலிருந்து பார்த்தனர் இருவரும். துறைமுகம் எங்கும் படைவீரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதையும் புதிதாக நிறைய கப்பல்கள் வந்துள்ளதையும் பார்த்தபடி ஹிப்பாலஸ் நின்றுகொண்டிருந்தான்.

``நான் நீண்டகாலம் எதிர்பார்த்துக் காத்திருந்தது இன்று வந்து சேர்ந்துள்ளது” என்றான் உதியஞ்சேரல்.

``உங்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே அதை உணர்த்துகிறது” என்றான் ஹிப்பாலஸ்.

``சாலமலையைக் கடந்தே பறம்பின் எல்லைக்குள் நம்மால் நுழைய முடியும். படைகள் எளிமையாக நுழையக்கூடிய வாகான பகுதிகள் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவற்றின் வழியே உள்நுழைவதற்குத்தான் இதுவரை முயன்றுள்ளோம். அவ்வாறு முயலும்போதெல்லாம் எளிய வழியிலிருந்து அடர்காட்டு வழியே நம்மை உள்ளிழுத்துத் தாக்கும் திட்டத்தை நிறைவேற்றுவான் பாரி. இந்த முறை நமது திட்டமே அடர்காட்டு வழியே உள்நுழைவதுதான் என்று நான் முடிவுசெய்துள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் முடிவுறுவதற்காகத்தான் நான் காத்திருந்தேன்’’ என்று சொல்லியபடியே மாடத்திலிருந்து கீழிறங்கி, துறைமுகம் நோக்கி நடந்தான் உதியஞ்சேரல். அவனைப் பின்தொடர்ந்தான் ஹிப்பாலஸ்.

வந்து நிற்கும் புதிய கப்பல்களிலிருந்து பொருள்களை இறக்குவதற்கான ஆயத்தவேலைகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. எண்ணற்ற படைவீரர்கள் வரிசையாக வந்து நின்றவண்ணம் இருந்தனர். இவர்கள் என்ன பொருளை இறக்கப் போகிறார்கள் எனத் தெரியாத குழப்பத்தில் இங்கும் அங்கும் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தான் ஹிப்பாலஸ்.

`இதைத் தாண்டி அருகில் செல்ல வேண்டாம்’ என்று மன்னருக்குச் சொல்வதற்காக, குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டிருந்தான் துடும்பன். அந்த இடம் வந்ததும் உதியஞ்சேரல் நின்றான். உடன் வந்த ஹிப்பாலஸும் மன்னனோடு சேர்ந்து நின்று கொண்டான். காலை நேரக் கடற்காற்று சற்று அதிகமாக வீசியது. அலைகள் விடாது வந்து கரை மோதி ஓசை எழுப்பியபடியிருந்தன. படைவீரர்கள் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

``அப்படி என்னதான் கொண்டு வந்திருக்கிறார்கள்?’’ என்று ஹிப்பாலஸ் ஆவலோடு கலன்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென ஊளையிடும் ஓசை கேட்டது. எங்கிருந்து இந்த ஓசை வருகிறது என அவன் சிந்திப்பதற்குள் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணற்ற ஓசைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பேரோசையாக மாறி, கரையில் நிற்பவர்களை நடுங்கச் செய்தன.

உதியஞ்சேரல், ஒரு கணம் மிரண்டு நின்றான். ஹிப்பாலஸுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, அளவிட முடியாததாக இருந்தது. ``அந்தக் கப்பலுக்குள் என்னதான் இருக்கிறது? அலையை மிஞ்சும் பேரோசை நம்மை  நிலைகுலையவைக்கிறது” என்றான்.

ஏற்பட்ட அதிர்ச்சியைக் கடந்து மகிழ்ச்சியை வெளிக்காட்டத் தொடங்கினான் உதியஞ்சேரல். ``இதைக் கொண்டுவரத்தான் இவ்வளவு காலமானது. கடைசியாகக் கொண்டுவந்து சேர்த்துவிட்டான் என் தளபதி” என்று பாராட்டினான். தோள் தட்டிப் பாராட்டு பெறும் துடியனின் பக்கம் திரும்ப ஹிப்பாலஸ் முயன்றான். ஆனால், அவனுடைய கண்களோ கப்பலைவிட்டு அசையவில்லை. அங்கு தீவிரமான வேலை ஏதோ நடந்துகொண்டிருக்கிறது.

கப்பலின் அடித்தளத்திலிருந்து பெரும்மரச்சட்டங்களின் வழியிலான நாற்சதுரக் கூடுகளை இரும்புக்கம்பிகளால் கட்டி மேலேற்றிக்கொண்டிருந்தனர். ஊளையின் ஓசை பெருகியபடியே இருந்தது. அதைவிடப் பெருங்குரலில் பேசினான் உதியஞ்சேரல், ``இந்தக் கப்பல் எங்கிருந்து வந்துள்ளது தெரியுமா?”

`தெரியாது’ என்று ஹிப்பாலஸ் தலையை மறுத்து ஆட்டினான்.

``நக்கவாரத் தீவிலிருந்து.”

அதிர்ந்தான் ஹிப்பாலஸ். ``அந்தத் தீவுக்குள் மனிதக்கறி தின்னும் மனிதர்கள் மட்டுமே இருப்பதாகத்தானே கேள்விப்பட்டுள்ளேன். அங்கு எப்படி?”

அந்தத் தீவு மிக நீளமானது. அதன் கீழ்ப்புறம் மனிதக்கறி தின்னும் மனிதர்கள் உள்ளனர். மேற்புறம் இன்னொரு மனிதக்கூட்டம் உள்ளது. அவர்களுடன்தான் நாம் உறவை உருவாக்கியுள்ளோம்.”

மரச்சட்டத்தால் ஆன பெருங்கூண்டு ஒன்றை, கப்பலின் மேல்தளத்திலிருந்து கரைக்குக் கொண்டுவர முயற்சி நடந்தது. அடித்தொண்டையைக் கிழித்துக்கொண்டு அவை வெளிப்படுத்திய பேரோசை, வீரர்களை அஞ்சி நடுங்கவைத்தது. ஆனால், அந்த மரச்சட்டகங்களைக் கொண்டுவந்த அந்தத் தீவுவாசிகள் அந்த ஓசையைப் பொருட்படுத்தவேயில்லை.

கழுத்தை மேலும் உயர்த்தியபடி பார்த்துக்கொண்டிருந்த ஹிப்பாலஸின் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.

``நிலப்பரப்பெங்கும் இல்லாத புது வகையான விலங்கு இது” என்றான் உதியஞ்சேரல். ஹிப்பாலஸின் ஆர்வம் எல்லை கடந்ததாக இருந்தது. முழு விசையோடு மரச்சட்டகங்களைச் சறுக்குப்பலகையின் வழியே கப்பலின் மேலிருந்து கரைக்கு இறக்கினர். மீண்டும் ஊளையிடும் ஓசை, காற்றைக் கிழித்துக்கொண்டிருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69f_1516184995
உதியஞ்சேரல் சொன்னான், ``இவைதான் தோகைநாய்கள்.”

ஹிப்பாலஸ் கேள்விப்பட்டதில்லை. ஊளையிடும் ஓசையின் மிரட்டல் ஒருபக்கம். அவற்றை மரச்சட்டங்களின் வழியாகக் கட்டியிழுக்க வீரர்கள் படும் பாட்டைப் பார்த்தபடி, உதியஞ்சேரலின் கூற்றைக் கேட்கத் தொடர்ந்து முயன்றான் ஹிப்பாலஸ். தலையை இந்தப் பக்கம் திருப்புவதா அந்தப் பக்கம் திருப்புவதா என்ற குழப்பம் கணம்தோறும் ஏற்பட்டபடி இருந்தது.

அருகில் இருந்த துடும்பன்தான் சொன்னான், ``தீவுகளில் மிகக் கொடுமையான மனிதர்களும் விலங்குகளும் இருப்பது நக்கவாரத் தீவில்தான். அந்தத் தீவில் உள்ளதிலேயே மிகக் கொடுமையான விலங்கினம் இதுதான்.

கீரியைப்போன்ற நீள்வடிவ உடலும் வாலும் கொண்ட அமைப்பு. வால் நிறைய தோகையும் கொண்டது. நாயின் அளவு உயரம் உடையது. உடல் நீளத்தில் மூன்றில் ஒரு பங்கு அதனுடைய நீள்வாய். குதிரையின் கழுத்துப் பகுதியை ஒரே கடியில் எடுத்துவிடக்கூடியது. இதன் சிறப்பே தரையில் எவ்வளவு வேகமாக ஓடுமோ அதே அளவு வேகத்தோடு புதரின் மீதும் மரக்கொப்பின் மீதும் ஓடுவதுதான். மரத்தின் மீதிருந்து பாய்ந்து கீழிறங்கும்போது அதன் வால் பகுதி சிலிர்த்து தோகை முழுவதும் விரிந்துவிடும். பெரும் ஊளையோடு மரத்தின் மீதிருந்து விரிந்த தோகையோடு பாய்ந்து இறங்கும் இதைப் பார்த்தால் எப்படையும் சிதறித் தெறிக்கும்.

குறிப்பாக, அடர்காட்டில் எதிரியின் படையில் இருக்கும் விலங்குகளை அழிக்க,  இதற்கு இணையான இன்னொரு விலங்கு இல்லை. பாரியின் பெரும்பலமாக எல்லோரும் சொல்வது அவனது குதிரைப்படையைத்தான். தோகைநாயின் தாக்குதலால் அவனது குதிரைப்படை உருத்தெரியாமல் அழியும்” என்றான்.

ஊளையிடும் ஓசை காதடைக்கச் செய்தது. காலை வெயில் சுள்ளென அடித்துக்கொண்டிருந்தது. ஹிப்பாலஸால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. துடும்பன் விடாமல் பேசினான். பல நாள்களாகக் கடற் பயணம் செய்ததால், தோகைநாயின் ஓசை துடும்பனுக்குப் பழகிவிட்டது. ஆனால், மற்றவர்களுக்கு அப்படியல்ல. ஒவ்வொரு மரச்சட்டகத்திலும் மூன்று தோகைநாய்கள் இருப்பதுபோல வடிவமைத்திருந்தனர்.

ஹிப்பாலஸ், சட்டகங்களுக்குள் அதன் உருவத்தை உற்றுப்பார்க்க முயன்றான். ஆனால், நிற்காமல் அது உள்ளுக்குள் சுழன்றபடி பெருங்கத்தல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இதற்குமேல் இந்த இடத்தில் நிற்க வேண்டாம் என முடிவுசெய்து, ``மாளிகைக்குப் போவோமா?” எனக் கேட்டான். சரியெனச் சொல்லி அழைத்துவந்தான் உதியஞ்சேரல்.

மாளிகைக்கு வந்ததும் இருவருக்கும் பழச்சாறு கொடுக்கப்பட்டது. அருந்தியபோதுதான் சற்று தெளிச்சி வந்தது. ஆனால்,  ஊளையின் ஓசை நிற்காமல் கேட்டுக் கொண்டே இருந்தது. இந்த நாய்களைப் போரில் பயன்படுத்த, தீவிலிருந்து கொண்டுவரப்பட்ட மனிதர்களும் மரச்சட்டகங்களுக்குப் பக்கத்தில் வந்துகொண்டிருந்தனர். அவர்களின் உடலமைப்பும் உடலின் மேல் தொங்கிக்கொண்டிருக்கும் பொருள்களும் காண்போரை நடுங்கச்செய்வதாக இருந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69e_1516184961
ஹிப்பாலஸின் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருந்தன. ஆனால், உதியஞ்சேரலின் எண்ணங்கள் நிதானம்கொண்டிருந்தன. ``கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் தொடர்ந்து முயன்றுவருகிறோம். குடநாட்டினரும் அவ்வப்போது முயல்கின்றனர். அப்படியிருந்தும் பறம்புநாட்டை வீழ்த்த முடியவில்லை. அதற்கான அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா?”

மற்ற எல்லோரையும்விட பறம்பை மிக நன்கு புரிந்துவைத்துள்ளவன் உதியஞ்சேரல்தான் என்பது ஹிப்பாலஸுக்குத் தெரியும். எனவே, அவனது கேள்விக்கு சிந்தித்து விடை சொன்னான், ``அரண் அமைத்து நிற்கும் பறம்புநாட்டின் மலைகள்தான் காரணம்.”

``இல்லை” என்றான் உதியஞ்சேரல்.

தொடர்ந்து அவன் சொல்லப்போகும் சொல்லை உற்று கவனித்தான் ஹிப்பாலஸ். தோகைநாயின் நீள் ஊளை சத்தம் காதுகளுக்குள் இடைவிடாது  அறைந்துகொண்டிருந்தது.

ஓசைகளில் எத்தனையோ வகையுண்டு. அவற்றில், வெளிப்புறம் பெருக்கெடுக்கும் ஓசை ஒரு வகை. ஆனால், சில ஓசைகள் உள்ளுக்குள் கூர்மைகொண்டு இறங்கக்கூடியவை; ஆழ்மனதில் இருக்கும் அச்சங்களை எளிதில் கிளறிவிடக்கூடியவை. தோகைநாயின் ஓசை வெளிப்புறமும் பெருக்கெடுக்கிறது. அதே நேரத்தில் ஆழ்மன அச்சத்தையும் விடாமல் கிளறுகிறது. எனவே, மனதை நிலைகொள்ளச் செய்ய முடியவில்லை. அந்த ஓசை நின்ற கணத்தில் உதியஞ்சேரல் சொன்னான், ``பறம்பின் மலைகள் அல்ல, பாதைகள்தான் காரணம்.”

ஹிப்பாலஸுக்குப் புரியவில்லை. ``என்ன சொல்கிறாய்?” என்றான்.

``பறம்புநாடு முழுவதும் மனிதர்கள் உருவாக்கிய பாதைகளே கிடையாது என்பது மட்டுமல்ல, மனிதர்கள் பாதைகளை உருவாக்கக் கூடாது என்பதிலும் பாரி திடமான முடிவோடு இருக்கிறான்.’’

``பாதையை உருவாக்காதது பெரும்பலம் என்று சொல்ல முடியுமா?”

``அவன் இருப்பிடம் நோக்கி எப்படிப் போவது?” என மறுகேள்வி கேட்டான் உதியஞ்சேரல்.

ஹிப்பாலஸ் சற்றே அமைதியானான்.

``இப்பெரும் மலைத்தொடர் இயற்கையின் பேரரண். இதில் எவ்வியூர் எங்கே இருக்கிறது? போய்த் திரும்பும் ஒற்றர்களுக்கும் பாணர்களுக்கும் எவ்வியூர் எப்படி இருக்கிறது என்றுதான் சொல்லத் தெரிகிறதே தவிர, எங்கே இருக்கிறது எனச் சொல்லத் தெரியவில்லை. ஒவ்வொருவனும் ஒவ்வொரு திசையையும் குறிப்பையும் சொல்கிறான். ஒன்றுபோல் சொன்ன இரண்டு ஒற்றர்களை இதுவரை நான் காணவில்லை.”

ஹிப்பாலஸ் மலைத்துப்போய்க் கேட்டுக்கொண்டிருந்தான்.

``நாம் மலைக்குள் படை நடத்திப் போவதெல்லாம் தோராயமான கணிப்பில்தான்” என்று உதியஞ்சேரல் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஹிப்பாலஸ் கேட்டான், ``அப்படியென்றால் பறம்பு மலைத்தொடர் முழுவதும் பாதைகளே இல்லையா?”

``உண்டு. விலங்குகள் உருவாக்கிய பாதைகள் உண்டு.”

``அதைப் பயன்படுத்தி முன்னேற முடியாதா?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69d_1516184937
வலதுகையை நீட்டியவுடன் இன்னொரு குவளை பழச்சாறு கொடுக்கப்பட்டது. அதை வாங்கி அருந்தியபடியே உதியஞ்சேரல் சொன்னான், ``காடுகளில் பாதைகளை விலங்குகளே உருவாக்குகின்றன. அதிலும் குறிப்பாக, யானைகள்தான் பெரும்பாலான பாதைகளை உருவாக்கக்கூடியவை. வேறு சில விலங்குகளும் பாதைகளை உருவாக்குகின்றன.”

ஹிப்பாலஸ் இரண்டாம் குவளை பழச்சாற்றில் பாதி குடித்தபடி அவசரமாகக் கேட்டான், ``யானைப் பாதையை மனிதர்களால் பயன்படுத்த முடியுமல்லவா?”

``முடியும். காட்டு வழிகளில் அமைந்துள்ள பாதைகள் எல்லாம் விலங்குகள் உருவாக்கிய பாதைகள்தான். அதன் பிறகு மனிதர்கள் தமது தேவைக்காக அதை விரிவுபடுத்தி அமைத்துக்கொள்கின்றனர். ஆனால், பறம்பில் அந்த வேலை எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் விலங்குப் பாதைகளைத் துல்லியமாகக் கணித்து நடக்கக்கூடிய மலைமக்கள் நிறையபேர் நம்மிடம் உண்டு”.

``அவர்களை முன்களத்தில் பயன்படுத்தி, சிக்கலைத் தீர்க்க முடியாதா?’’

``முடியாது.”

``ஏன்?” என்று வேகமாகக் கேட்டான் ஹிப்பாலஸ்.

சற்றே நக்கலான சிரிப்போடு உதியஞ்சேரல் சொன்னான், ``விலங்குகளின் பாதைகள் எல்லாம் எவ்வியூருக்கா போய்ச் சேர்கின்றன? பாரி, காட்டு மனிதர்களின் கூட்டத்துக்குத்தான் தலைவன்; காட்டு விலங்குகளுக்கு அல்லவே!’’
அதிர்ந்து பார்த்தான் ஹிப்பாலஸ்.

குடித்து முடித்த குவளையைக் கீழே வைத்தபடி உதியஞ்சேரல் சொன்னான், ``விலங்குகளின் எல்லாப் பாதைகளும் இறுதியாகப் போய் முடிவது ஏதாவதொரு நீர்நிலையில்தான்.”

ஹிப்பாலஸ் கண்கள் அசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். சமவெளி மக்களின் வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பது மேய்ச்சல். ``மலைவாசிகளுக்கு மேய்ச்சல் தெரியாது. நாயைத் தவிர எதையும் வளர்த்துப் பழகாதவர்கள். மடுவிலிருந்து பால் பீச்சிக் குடிக்கத் தெரியாத அறிவிலிகள்” என்றான், சற்றே கோபத்தோடு.

`பாதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், இதை ஏன் சொல்கிறான்?’ என ஹிப்பாலஸ் சிந்தித்துக்கொண்டிருக்கையில் உதியஞ்சேரல் சொன்னான், ``மேய்ச்சல் தெரிந்த மனிதர்களாக இருந்தால் மலையில் எவ்வளவு தொலைவு ஆவினங்களை மேய்த்தாலும் இரவில் வந்து ஊரடைவார்கள். இயல்பாகவே அந்த ஊரை நோக்கிப் பல பாதைகள் உருவாகிவிடுகின்றன. ஆனால், அங்கு அதற்கும் வழியில்லை” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69c_1516184911
``எந்தப் பாதையையும் பாரி உருவாக்கிக்கொள்ளவில்லையா?”

``பெரும்பாலும் விலங்குகளின் பாதைகளையே பயன்படுத்துகிறான். தேவையான இடங்களில் மட்டும் விலகிச் செல்ல சிறுபாதைகளை உருவாக்கியுள்ளான். ஆனால், அவை மற்றவர்கள் கண்டறிய முடியாதபடி இருக்கின்றன. விலங்குகளின் பாதைகளிலிருந்து அவர்கள் எந்த இடம் பிரிந்து செல்ல வேண்டும் என்பதற்கான குறிப்பு அல்லது அடையாளம் எது என இன்று வரை தெரியவில்லை. அடையாளம் தெரியாமல் பாதையை விட்டு சற்று விலகினாலும் போதும், அடர்காட்டுக்குள் மீள முடியாமல் சிக்கிக்கொள்வோம்” என்றான்.

``அவனிடம் வலிமையான குதிரைப்படை இருக்கிறது என்கிறாய். குதிரைப்படையை வைத்துள்ள ஒருவன் எப்படி பாதைகளின் அடையாளங்களைப் பிறருக்குத் தெரியாமல் காப்பாற்ற முடியும்?”

“இன்றுவரை அவனால் முடிகிறது. நான் அறிந்தவரை பறம்பில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அந்தப் பாதை பற்றிய குறிப்பு தெரியும் என்று கருதுகிறேன்.”

``இது படை நடத்துவதற்கான அடிப்படையான சிக்கல். இதற்கு வழிவகை தெரியாமல் போர் தொடுக்க முடியாதே?”

``ஆம்” என்று மகிழ்வோடு சொன்ன உதியஞ்சேரல், ``இதற்கு வழிவகை தெரிந்ததால்தான் இப்போது போர் தொடுப்பதற்கான முயற்சியைத் தீவிரப்படுத்துகிறேன்.”

சற்றும் எதிர்பாராத பதிலாக இருந்தது. ஆர்வத்தோடு ஹிப்பாலஸ் கேட்டான், ``இந்தச் சிக்கலுக்கு என்ன வழிவகை கண்டாய்?”

பெரும் ஊளை ஓசை மீண்டும் கேட்டது. அடுத்த கப்பலிலிருந்து மரச்சட்டகங்களை இறக்கத் தொடங்கிவிட்டனர் என்பது தெரிந்தது. ஆனால், முன்பைவிட இந்த ஓசை இன்னும் கூர்மையாகக் காதின் உள்மடிப்புகளில் போய்க் குத்துவதாக இருந்தது. ஹிப்பாலஸ் தனது விரல்களால் காதுத் துளையை அடைப்பதற்காகக் கைகளைக் கொண்டுசென்றபோது, ஓசையோடு சேர்ந்து உதியஞ்சேரல் பீறிட்டான், ``தோகைநாய்கள்...”

`ஆமாம் தோகைநாய்கள்தான் கத்துகின்றன. இதை ஏன் மீண்டும் மீண்டும் சொல்கிறான்?’ என்று ஹிப்பாலஸ் எண்ணியபோது கேள்விக்கான விடையாக இதைச் சொல்கிறான் என்பது புரிந்தது.

ஆத்திரம் கலந்த ஆர்வத்தோடு முன்பல்லைக் கடித்துக்கொண்டே உதியஞ்சேரல் சொன்னான். ``முன்கள தோகைநாயை பறம்பின் குதிரைப்படையின் மீது ஏவிவிட்டால், அது குதிரைகளின் குரல்வளையை அறுத்தெரியும். இது என்ன வகை விலங்கு? இதை எப்படி வீழ்த்துவது எனத் தெரியாத குழப்பத்தில் குதிரைப்படையின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு, பின்வாங்கத் தொடங்குவார்கள் எதிரிகள். திரும்பிச் செல்லும் குதிரைகளைப் பின்தொடர்ந்து கடைசி வரை போகக்கூடியது தோகைநாய். அடர்காட்டுக்குள் மறைந்தபடி தொடரும் தோகைநாயை எளிதில் அவர்களால் வீழ்த்திவிட முடியாது. குதிரைப்படைகள் போய்ச் சேரும் கடைசி எல்லை வரை ஒரு தோகைநாய் போய்ச் சேர்ந்தால் போதும். கைவசம் இருக்கும் மீதத் தோகைநாய்கள் அதன் வாசனை பிடித்தே எந்த எல்லைக்கும் போய்விடக்கூடியவை.

குதிரைப்படையின் அழிவும் எவ்வியூர் நோக்கிய வழியும் ஒருங்கே நமக்குக் கிடைக்க உள்ளன. இந்தப் புதிய விலங்கின் எதிர்பாராத தாக்குதல் எதிரிகளை நிலைகுலையச் செய்துவிடும். அவர்களின் தாக்குதலால் தோகைநாய்கள் சில மரணிக்கலாம். ஆனால், அவர்களின் குதிரைகளை முழுமுற்றாக இவற்றால் அழிக்க முடியும். இவற்றின் குருதி தாகவேட்டை, எதையும் மிச்சம் வைக்காது.”

ஹிப்பாலஸ் வியந்தபடி கேட்டுக்கொண்டிருந்தான். தோகைநாயின் ஓசையைவிட ஆழத்தில் இறங்கிக்கொண்டிருந்தது உதியஞ்சேரலின் குரல். அவனது நுட்பமான திட்டமிடுதல், ஹிப்பாலஸை திகைப்பிலிருந்து மீள முடியாமல் செய்துகொண்டிருந்தது.

``மாலை அரண்மனைக்கு வாருங்கள், எனது முழுத்திட்டத்தையும் விளக்குகிறேன்” என்று சொல்லி விடைபெற்றான் உதியஞ்சேரல்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69b_1516184877
துறைமுகத்திலிருந்து வஞ்சி மாநகரின் விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்தான் ஹிப்பாலஸ். பகல் உணவு ஆயத்தமாக இருந்தது. ஆனால், அவனது எண்ணங்கள் உதியஞ்சேரலின் தீர்மானமான குரலிலிருந்து விடுபட முடியாதபடி இருந்தன.

நீண்ட நேரம் கழித்துதான் உணவருந்த வந்தான். அவனது வருகைக்காக திரேஷியன், எபிரஸ், கால்பா, பிலிப் ஆகிய நால்வரும் காத்திருந்தனர். உணவு மேசையிலும் அவனது வியப்பின் குரல் தொடர்ந்தது. உணவருந்திவிட்டு மீண்டும் பேசினான்.

``பாண்டியனின் செல்வச் செழிப்பையும் படையின் வலிமையையும் ஒப்பிட்டால் சேரனின் வலிமை சிறியதுதான். ஆனால், பறம்பைக் கைப்பற்றும் திட்டத்தில் சேரன் பெற்றிருக்கும் அனுபவமும் அவனது அறிவுநுட்பமும் பெரும்வியப்பில் ஆழ்த்துகின்றன. பாண்டிய பெரும்படை கீழ்த்திசையிலிருந்து முன்னேறும்போது சேர அரசர்கள் இருவரும் ஒருங்கிணைந்து தாக்குதல் திட்டத்தை முன்னெடுத்தால் பறம்பின் அரசனால் சில நாள்களுக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்றே கருதுகிறேன்” என்றான் ஹிப்பாலஸ்.

எபிரஸ் பேசத் தொடங்கினான். வழக்கமாக இதுபோன்ற பேச்சுகளில் மாலுமி கருத்து சொல்வது கிடையாது. ஆனால், இங்கு இருக்கும் யாரையும்விட, தமிழ்த் துறைமுகங்களுடனும் மன்னர்களுடனும் மிக நீண்டகாலப் பழக்கம் கொண்டவன் அவன்தான். எனவே, அவனது கருத்துக்கு ஹிப்பாலஸ் மிகுந்த மதிப்பு கொடுப்பான். எபிரஸும் எளிதில் பேசக்கூடியவன் அல்லன். ஆழ்கடலின் அமைதி எப்போதும் அவனுள் குடிகொண்டிருக்கும், மிகச்சில நேரங்களில்தான் அமைதியைக் கலைப்பான்.

``சேர அரசர்களான குடநாட்டு மன்னனும் குட்டநாட்டு மன்னனும் எத்தனையோ முறை பறம்பின் மீதான தாக்குதலை நடத்தியுள்ளனர். ஒவ்வொரு முறையும் இதுபோல புதிய உத்திகளைக் கண்டறிந்து அந்த நம்பிக்கையில்தான் தாக்குதலைத் தொடங்குகின்றனர். ஆனாலும், அவர்களால் தொடக்கக் கட்டத்தைக்கூடத் தாண்ட முடியவில்லை” என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டான் எபிரஸ்.  

``அது உண்மையாக இருக்கலாம். இப்போது முழு வீச்சில் இறுதிப்போருக்கு ஆயத்தமாகி விட்டார்கள். பாண்டியனும் பறம்பை நோக்கிப் படையைக் கிளப்பப் போகிறான் எனத் தெரிந்ததும், நிலைமையை இன்னும் தீவிரப் படுத்தியுள்ளனர். ஏனென்றால், அதன் பலன் தங்களுக்கே கிட்ட வேண்டும் என்று அவர்கள் மிக உறுதியாக உள்ளனர். இந்தப்  படையெடுப்பைப் பற்றி முழுமையாக விளக்கத்தான் இன்று இரவு என்னை அழைத்துள்ளான்” என்றான் ஹிப்பாலஸ்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69a_1516184848
அவர்கள் தொடர்ந்து பேசியபடியிருந்தனர். இரவு கவியத் தொடங்கியது. அரண்மனையின் அழைப்புக்காக ஆவலோடு காத்திருந்தான் ஹிப்பாலஸ். அதுவரை அவனோடு பேசிக்கொண்டிருந்தனர் மற்ற நால்வரும். பொழுது நீண்டுகொண்டேபோனது. அழைப்பு ஏதும் வரவில்லை. காரணமும் புரியவில்லை. ஆனாலும் காத்திருந்தான்.

`மிகுந்த உற்சாகத்தோடு உதியஞ்சேரல் சொல்லிச் சென்றானே... பிறகு ஏன் இன்னும் அழைக்காமல் இருக்கிறான்?’ என்று சிந்தித்தபடியிருந்தான் ஹிப்பாலஸ். முன்னிரவு முடியும் நேரம் நெருங்கிவிட்டது. இனி அழைப்பு வர வாய்ப்பில்லை எனத் தெரிந்து தூங்கச் சென்றனர். 

ஹிப்பாலஸால் தூங்க முடியவில்லை. உதியஞ்சேரல் சொன்ன செய்திகள் பலவும் நினைவில் வந்துகொண்டேயிருந்தன. தோகைநாய்களின் ஊளையை உதியஞ்சேரலின் குரல் விஞ்சியதை அவன் மனதுக்குள் மீட்டியபடியே இருந்தான். ஆனாலும் அவனது நினைவுப்பரப்பு எங்கும் தேவாங்கின் முகமே பரவியிருந்தது. பெருங்கடலுக்கு நடுவே நாவாய்களுக்குத் திசைகாட்டி அழைத்துச் செல்லும் அதன் ஆற்றல் அவனை விடாது தூண்டிக்கொண்டேயிருந்தது. நீலக்கடல் எங்கும் குறுக்கும் நெடுக்குமாக நாவாய்கள் கடந்து கொண்டிருக்கும் காட்சி அகல மறுத்தது. இமை மூடும்போதெல்லாம் தேவாங்கின் வட்டக்கண்கள் அவனை எட்டிப்பார்த்தபடியே இருந்தன.

பொழுது விடிந்து நெடுநேரமானபோதும் அவன் அறையிலிருந்து எழுந்து வரவில்லை. மற்ற நால்வரும் அவனுக்காகக் காத்திருந்தனர். நடுப்பகலில்தான் எழுந்து வந்தான். அப்போதுதான் அரண்மனையிலிருந்து வரச்சொல்லி அழைப்பும் வந்தது. வேகவேகமாகப் புறப்பட்டுப் போனான்.

அரசவைக்குள் நுழையும் வரை உடன் வந்த திரேஷியன், அவனுக்கான எல்லையறிந்து நின்று கொண்டான். உள்ளே போன ஹிப்பாலஸால், உதியஞ்சேரலைப் பார்த்த கணத்தில் அவனது முகத்தில் தெரிந்த குழப்பத்தை உணர முடிந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69_1516184814
சற்று அமைதிக்குப் பிறகு உதியஞ்சேரல் பேசத் தொடங்கினான். ``நேற்று மாலை என் ஒற்றர்கள் கொண்டுவந்த செய்தி என்னைப் பெருங்குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. அதனால்தான் உங்களை அழைக்க முடியவில்லை” என்றான்.
ஹிப்பாலஸ் உற்று கவனித்தான்.

``செங்கனச்சோழன் பெரும்படையோடு பறம்பின் மீதான போருக்கு ஆயத்தமாகிவிட்டான்” என்றான் உதியஞ்சேரல்.

ஹிப்பாலஸுக்குப் புரியவில்லை. ``சோழன் ஏன் பறம்பின் மீது போர் தொடுக்க வேண்டும்?”

``அதுதான் எனக்கும் புரியவில்லை. இதுவரை பறம்பின் மீது அவர்களுக்கு எந்தப் பகையும் உருவாகவில்லை. அப்படியிருக்க, அவன் ஏன் இவ்வளவு பெரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறான்?” என்று கூறிய உதியஞ்சேரல், சற்றே அமைதிக்குப் பிறகு சொன்னான், ``அவனது படையின் தன்மையையும் எண்ணிக்கைகளையும் பற்றி என் ஒற்றர்கள் சொல்லும் கணக்கை என்னால் நம்பவே முடியவில்லை.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 8:42 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83a_1516706245
ருப்பன்குடி மூதாதையர்தாம் அதைக் கண்டறிந்தனர். எத்தனை தலைமுறைகளுக்கு முன்னர் அது நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. `எண்ணிலடங்கா காலத்துக்கு முன்னர் அது நிகழ்ந்தது’ எனச் சொல்வார்கள். அந்த ஆற்றுக்கு அப்போது பெயரிடப்படவில்லை. பெயரில்லாத அந்த ஆற்றின் வலக்கரை முழுவதும் செவல்படிந்த சிறுமண் பரப்பு. அதில் புதர் மண்டிய புற்காடு.

புல்லின் வகைகள்தாம் எத்தனை எத்தனை! வடிவத்திலும் நிறத்திலும் அவை ஏற்படுத்தும் வாசனையிலும் வகைப்படுத்த முடியாதவையாகத்தானே இன்று வரை இருக்கின்றன. பறவைகளும் விலங்குகளும் மேய்ந்தறியும் புல்லைக்கொண்டே மனிதன் தனக்கானதைக் கண்டறிந்தான். ஆவினத்தை மேய்த்துக் கொண்டிருக்கையில், புதர் ஒன்றில் நீள்தோகை கொண்ட பெரும்புல் விளைந்து கிடந்திருக்கிறது. மேய்த்துக்கொண்டிருந்தவன் அது என்ன வகைப் புல் என்பதை அறிய அதன் தோகையைக் கைகளால் பறித்துப்பார்க்க முயன்றிருக்கிறான். தோகையின் பக்கவாட்டுக் கூர்மை கிழித்துவிடக்கூடியதாக இருந்தது. அதன் நீள்தண்டு சற்றே வேறுபட்டு இருந்ததையும் பார்த்திருக்கிறான்.

மேய்ச்சல்வெளிதான் மனிதன் இயற்கையின் நுட்பத்தைக் கவனிக்கக் கிடைத்த முதற்பெரும் வாய்ப்பு. பறந்து அலையும் தும்பிகள் காலூன்றாப் புற்கள் எவை என்பது தொடங்கி, நீண்டிருக்கும் புல் நுனியில் செருகி நிற்கும் பனித்துளியின் கனம் வரை அனைத்தையும் அவன் அறிவின் சேகரமாக மாற்றிக்கொண்டிருந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83b_1516706266
கருநீல நிறமும் நெடுநீள் தோகையும் உடைய அந்தப் புல்லின் தண்டுப்பகுதியை ஒருநாள் தற்செயலாகக் கடித்துப்பார்த்தான். அதன் சாறு அவன் அறிந்திராத தித்திப்பைக் கொடுத்தது. மீண்டும் கடித்தான், தித்திப்பின் அளவு குறையவேயில்லை. மீண்டும் மீண்டும் கடித்துச் சுவைத்தான். சுவை குறையாத இந்தப் புல்லைப் பற்றித் தன் கூட்டத்தார் அனைவருக்கும் போய்ச் சொன்னான். அனைவரும் வந்து கடித்துச் சுவைத்தனர். அதைச் `சுவைப்புல்’ என்றே அழைத்தனர்.

அந்தச் சுவைப்புல் தனது கணுக்களிலிருந்து முளைவிடுவது அறிந்து, கரணைகளாக அதை வெட்டிப் புதிய இடத்தில் நட்டுவைத்தனர். கணுக்கள் தழைத்துப் பெரும்புற்களாகின. பல கரணைகளை ஒரே இடத்தில் பரவலாக நட்டுவைக்க சுவைப்புல் பெருங்காடென வளரத் தொடங்கியது.

இந்த அரிய புல்லைப் பற்றி மற்றவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அறியத் தொடங்கினர். `கருப்பன் குடியினர், அரியவகை சுவைப்புல்லைப் பயிரிட்டு வளர்க்கின்றனர்’ என்ற செய்தி பரவ, பலரும் அவர்களிடம் வந்து சுவைப்புல்லைக் கேட்டு வாங்கிச் சென்றனர். நாளடைவில் `சுவைப்புல்’ என்ற பெயர் நீங்கி, அந்தக் குடியின் பெயரால் `கரும்பா புல்’லென்றும் `கரும்பெ’ன்றும் அதற்குப் பெயர் விளங்கிற்று.

தலைமுறைகள் பல கடந்தோடின. கருப்பன் குடியினர் கரும்பின் எண்ணற்ற நுட்பங்களைத் தங்களது பட்டறிவில் சேகரித்திருந்தனர். கணுக்களின் முகம் பார்த்துக் கரும்பின் சுவையைக் கணிக்கும் பேரறிவைப் பெற்றனர். புதிய நிலங்களில் எந்த வகைக் கரணைகளை நடவேண்டும் என்றும், எந்த வகைக் கரும்புகள் தித்திப்பின் உச்சம் எனவும் அவர்கள் துல்லியமாக அறிந்தனர். பனைச்சாற்றிலிருந்து காய்ச்சப்பட்ட இனிப்புக் கட்டியைப்போலக் கரும்பஞ்சாற்றிலிருந்தும் இனிப்புக் கட்டியைக் காய்ச்சி எடுத்தனர். செய்தி எங்கும் பரவியது. கரும்பென அழைக்கப்படும் சுவைப்புல் அரிதினும் அரியதொன்றாக எல்லோரும் பேசிய காலத்தில்தான், அந்தக் கொடும் தாக்குதல் நடந்தது.

பயிரிடுதலின் நுட்பத்தை அறிய தலைமுறை தலைமுறையாகத் தங்களை ஒடுக்கிக்கொண்டு மண்ணுள் புதைந்திருந்த கருப்பன் குடியினரின் மீது திடீர்த் தாக்குதல் நடந்தது. தாக்குதல் நடத்தியவர்கள் தங்களைச் `சோழர்குடி’ என முழங்கினர். இரக்கமற்ற கொடும்தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கருப்பன் குடியினர் சிதைவுற்று வீழ்ந்தனர்.

அவர்களை வெட்டி வீசி விளைநிலங்களையும் செல்வங் களையும் கைப்பற்றுவதுதான் அந்தக் காலத்து நடைமுறை. ஆனால், சோழர்குடியின் தலைவன், கருப்பன் குடியினரின் அறிவையும் ஆற்றலையும் நன்கு உணர்ந்தவனாக இருந்தான். எனவே, அந்தக் குடியினரை முழுமுற்றாக அழிக்கவில்லை. எல்லோரையும் விளை நிலங்களில் அடிமைகளாக மாற்றினான். கரும்பை எவ்வளவு அதிகமாக விளையவைக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக விளையவைத்தான்.

கரும்பின் சுவை எங்கும் பரவியது. பனைவெல்லத்தையும் ஈச்சவெல்லத்தையும் கரும்பின் வெல்லச்சுவை மிஞ்சியது. தலைமுறைகள் பல கடந்தாலும் கருப்பன் குடியின் அடிமை வாழ்வு முடிந்தபாடில்லை. அவர்கள் அளவுக்குக் கரும்பை அறிந்த மனிதக்கூட்டம் எதுவும் உருவாகவில்லை. இந்த நிலையில்தான் யவன வணிகம் தொடங்கியது. சேரனின் மிளகுதான் முதலில் யவனர்களை ஈர்த்தது. அந்த வணிகமே பெருமளவு நடந்துகொண்டிருந்தது. அப்போது இந்த நிலத்தில் வேறேதும் புதுமையாகக் கிடைக்காதா எனப் பல யவன வணிகர்கள் கடற்கரை நகரங்களுக்குத் தொடர்ந்து வரத் தொடங்கினர். அவர்களுக்குத் தரப்பட்ட விருந்தொன்றில் கரும்பு பரிமாறப்பட்டது. அதன் தித்திப்பும் தீஞ்சுவையும் அவர்களையும் மயக்கின.

கரும்பின் கெட்டிப்பாகும் விளையவைக்கக் கூடிய விதத்தில் கரும்பின் கரணைகளும் யவனம் நோக்கி நாவாய்களில் பயணப்படத் தொடங்கின. சோழ அரசனின் அவையில் யவனத்தேறலும் மினுக்கும் பாண்டங்களும் மாற்றுப்பொருளாக வந்திறங்கின. காலம் ஓடியபடி இருந்தது.

தம் குலத்தின் விடுதலையைத் தாம் பெற்றே ஆகவேண்டும் என்ற வேட்கையில் அவ்வப்போது கருப்பன்குடி வீரர்கள் முளைத்தெழுவர். ஆனால், அது எப்படியும் சோழனுக்குத் தெரிந்துவிடும். அந்தச் செயல் செய்தவர்களை அழித்தொழிப்பர். ஆனாலும் மொத்தக் குடியையும் அழிக்காமல் பாதுகாத்தனர். கரும்பின் வியப்புறும் சுவையும் நுட்பமும் சோழர்களுக்குத் தேவையாக இருந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83c_1516706280
தீஞ்சுவைப் புல்லைக் கண்டறிந்த குடி, எண்ணிலடங்கா தலைமுறைகளாகக் கண்ணீர் சிந்தியபடியே இருந்தது. முளைத்தெழும் கரும்பின் முன் பகுதியில் கருப்பன் குடியின் கண்ணீர் தேங்கியே இருக்கும் என மக்கள் கருதினர். எப்படியாவது இந்த நிலையிலிருந்து மீளவேண்டும் எனத் திட்டமிட்டது வீரர்களின் கூட்டம் ஒன்று. அதற்குத் தலைமையேற்றவன் ஈங்கையன்.

எத்தனையோ முறை அழிக்கப்பட்ட அவர்களின் போராட்டத்தை இந்தமுறை அழித்துவிட முடியாதபடி நன்கு திட்டமிட்டான். ஈங்கையன் இணையற்ற வீரனாக இருந்தான். `தனிமனிதப் போரில் அவனை வெல்லக்கூடிய மனிதர்கள் எவரும் இல்லை’ எனப் பெயரெடுத்தான். தன் தோழர்களையும் அதேபோல வளர்த்தெடுத்தான். அவனது அறிவுக்கூர்மையும் ஆற்றலின் வலிமையும் பெரும்நம்பிக்கையைக் கொடுத்தன.
ஆனால், சோழன் இப்போது சிறுகுடியன் அல்லன்; பேரரசன். தன் மகன் செங்கனச் சோழனுக்கு சோழவேலன் முடிசூட்ட நாள் குறித்திருந்தான். முடிசூட்டு விழாவுக்கு முன்னர் நடக்கும் களப்பலி சடங்குக்காக சோழர்களின் குதிரைகள் கரும்புக் காட்டுக்குள் சீறிப்பாய்ந்தன. மீண்டும் எதிர்பாராத தாக்குதல். கருப்பன்குடி வீரர்கள் சிதைந்தனர். எதிரிகளின் படையை ஈங்கையன் தன்னந்தனியாக எதிர்கொண்டான். அவனது வாள்வீச்சில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தான் சோழநாட்டுத் தளபதி உறையன்.

ஆவேசமும் அதிசிறந்த வீரமும் உடைய ஈங்கையனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கினான் உறையன். முடிசூட்டு விழாக் காலத்தில் சோழப்படை பின்வாங்கிய செய்தி பேரரசனை எட்டுமாயின் தன்னைக் கொன்றளிப்பான் என முடிவு செய்த தளபதி, இரவோடு இரவாகப் பல மடங்கு படை திரட்டினான். பின்வாங்கி ஓடியவன், விரைந்து திரும்பி வருவான் என ஈங்கையன் எதிர்பார்த்தான். ஆனால், பொழுது விடிவதற்குள்  பெரும் படையோடு வந்து நிற்பான் என எதிர்பார்க்க வில்லை. எண்ணற்ற இனக்குழுக்களை அழித்து, பேரரசாக வளர்ந்து நிற்கும் அரசாட்சிக்கு முதுகெலும்பாக இருப்பது இத்தகைய படைவளம்தான்.
எதிரிகளின் படையை முடிந்தவரை போரிட்டு அழித்தனர் ஈங்கையனின் படையினர். சோழத் தளபதி உறையன் இந்தமுறையும் பின்வாங்க நேருமோ என அஞ்சும் அளவுக்கு இருந்தது ஈங்கையனின் தாக்குதல். ஆனால், அவனது வீரர்கள் பலரால் நிலைமையை நீண்டநேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

எண்ணிக்கையில் மிகக் குறைந்த அவர்கள், கடுந்தாக்குதலுக்குப் பிறகு முழுமுற்றாகச் சூழப்பட்டனர். வீழ்ந்தவர்களை முழுமையாகக் கொன்றழிக்கத்தான் நினைத்தான் உறையன். ஆனால், இவர்களின் உடலமைப்பையும் வலிமையையும் கணித்து மிக நல்ல விலைக்கு விற்கலாம் என முடிவுசெய்து, விலங்கிட்டு இழுத்துச் சென்றான்.

அவன் கணித்ததுபோலவே, கடல் வணிகர்கள் மிக நல்ல விலைகொடுத்து இந்த அடிமைகளை வாங்கினர். புதிய அடிமைகளை அடிமைத் தொழிலுக்குப் பழக்குவது கொடூரமிக்கதொரு செயல். விலைக்கு வாங்கப்பட்டவர்களை ஊனமாக்காமல் அவர்களை உடலாலும் உள்ளத்தாலும் கூனிக்குறுகி உணர்ச்சியற்ற உயிரினமாக மாற்ற வேண்டும். இதைச் செய்து முடிக்க கப்பல் தலைவன் ஒவ்வொருவனும், ஒவ்வொரு வழிமுறையைப் பின்பற்றுவான்.

ஈங்கையன் கூட்டத்தை விலைக்கு வாங்கிய கப்பலின் தலைவனோ, அவர்களுக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் விலங்கு பூட்டி, கப்பலின் மேல் தளத்தில் அமரவைத்தான். கப்பல், புகாரிலிருந்து வைப்பூருக்கு வந்து சேர்ந்தது. வைப்பூரில் பொருள்கள் ஏற்ற இன்னும் இரண்டு நாள்களாகும் என்ற நிலையில் புதிதாக வாங்கியவர்களை முழு அடிமைகளாக மாற்றும் வேலையில் இறங்கினான். வாங்கப்பட்டவர்களின் தலைவனான ஈங்கையனை மீகானின் கூம்புமாடக் கம்பத்தில் கட்டினான். என்ன செய்யப்போகிறான் என்று மற்றவர்கள் மிரண்டு பார்த்துக்கொண்டிருந்தபோது அருகன்குடியில் வாங்கிய புதுச்சாட்டையோடு மூன்று பேர் மூன்று திசையில் நின்றனர்.

விளாசல் தொடங்கியது. விலங்கின் நரம்பிலும் மரத்தின் நரம்பிலும் செய்யப்பட்ட புதுச்சாட்டைகள் இடைவிடாமல் ஈங்கையனை வெட்டிச் சிதைத்தன. கண்கொண்டு பார்க்க முடியாத கொடுமை நடந்தேறியது. மற்ற வீரர்கள் கதறித் துடித்தனர். இழுபடும் சாட்டையின் வீச்சுக்கு ஏற்ப குருதித் துளிகள் நீண்டு சிதறின. எது செய்தும் காதுகொடுத்துக் கேட்க அங்கு யாருமில்லை. பகல் முழுவதும் அடித்தனர். உடலெங்கும் ரத்தவிளாறாக மாறிக் காலடியில் நிறைந்து நின்றது செங்குருதி. விலங்கிடப்பட்ட நிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவனும் உள்ளம் ஒடுங்கிச் சிதைவுற்று அடிமைத்தனத்துக்குள் ஆழப்புதைய வேண்டும் என்பதற்குத்தான் இந்தக் கொடுமையைச் செய்கிறார்கள்.

மாலை மங்கியபோது ஈங்கையன் முழுமையாக நினைவிழந்தான். கப்பலில் ஏற்றப்படவேண்டிய பொருள்கள் வந்து சேர்ந்தன. அவற்றைக் கப்பலில் ஏற்றும் வரை அடிப்பதை நிறுத்தி அந்தப் பணியைச் செய்யத் தொடங்கினர். கம்பத்தில் கட்டப்பட்டிருந்த ஈங்கையன் மயங்கிய நிலையில் தலை தொங்கிக்கிடந்தான். விலங்கிடப்பட்ட அவன் தோழர்கள் செய்வதறியாது துடித்துக் கிடந்தனர். இந்த நிலையில்தான் துறைமுகத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து பெருநெருப்பு எழுந்தது. கப்பலில் இருந்தவர்கள் அதை அணைக்க ஓடினர். விலங்கிடப்பட்ட அடிமைகள் தங்களையோ, தங்கள் தலைவனையோ விடுவிக்க என்ன செய்வதென்று தெரியாமல் கதறித் துடித்தனர்.

நேரம் ஆக ஆக, நெருப்பு எங்கும் பரவியது. ஒருகட்டத்தில் அவர்கள் இருக்கும் கப்பலின் விளிம்புப் பகுதியில் நெருப்பு மேலேறிக் கொண்டிருந்தது. அவர்கள் பெருங்கூச்சல் எழுப்பினர். அப்போதுதான் திரையர் கூட்டம் நெருப்பினுள் நுழைந்து அவர்களை மீட்டது. 

பிலரும் உதிரனும் வேட்டுவன் பாறையிலிருந்து மீண்டும் எவ்வியூருக்குப் புறப்பட்டனர். வழியில்தான் ஈங்கையனின் கதையை உதிரன் கபிலருக்குச் சொல்லிக் கொண்டுவந்தான். ``இத்தனை மாதங்களாகியும் ஈங்கையனும் அவன் கூட்டத்தாரும் தாங்கள் யார் என்பதை வாய் திறந்து பேசவில்லை. `சோழப் பேரரசன்தான் தங்களின் எதிரி எனத் தெரிந்தால் யாரும் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க மாட்டார்கள்’ என்று அவர்கள் நினைத்துள்ளனர். அதுமட்டுமன்று, யாரிடமும் நம்பிக்கைகொள்ளும் சூழலும் அவர்களுக்கு இல்லை. அதனால்தான் அவர்கள் பேச்சற்று இருந்துள்ளனர்.

நம்மவர்கள் அவர்களை மீட்டதும் இங்கு வந்ததிலிருந்து நல்லதொரு மருத்துவம் செய்து அவர்கள் தலைவன் ஈங்கையனைக் காப்பாற்றியதும், அவர்களுக்கு நம் மீது நல்ல எண்ணத்தை உருவாக்கியுள்ளது. ஆனாலும் நாம் யார் என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் பேச மறுத்துள்ளனர். கடுவனின் கதையை அறிந்த பிறகுதான் நம்பிப் பேசத் தொடங்கினான் ஈங்கையன். அவர்களின் குடி அடைந்த துயரம் சொல்லிமாளாது” என்றான் உதிரன்.

கேட்டுக்கொண்டே நடந்த கபிலர், ``அடிக்கரும்பின் தித்திப்புக்காக மனம் எத்தனை முறை ஏங்கியுள்ளது! ஆனால், அவையெல்லாம் இந்தக் குடியின் குருதியில்தானே விளைந்துள்ளன. `பூத்த கரும்பும் காய்த்த நெல்லும் உடையது சோழனின் கழனி’ என்று புலவர்கள் பாடுகின்றனர். ஆனால், அந்தக் கழனி கரும்பாக்குடி சிந்திய குருதியால்தான் உலராமல் இருக்கிறது” என்றார்.

உதிரன், கபிலரின் சொற்களைக் கேட்டபடி அமைதிகொண்டு நடந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83d_1516706301
``நெருப்பிலே அழிந்துவிடாமல் இவர்களை மீட்டெடுத்ததன் மூலம் வாழ்வெல்லாம் மகிழ்ந்துண்ட கரும்பஞ்சாற்றுக்கும் வெல்லத்துக்கும் கைம்மாறு செய்துள்ளோம்” என்றார் கபிலர்.

``திரையர்கள் இருந்ததால்தான் இவர்களை மீட்டெடுக்க முடிந்தது. ஈங்கையனின் உருவ அமைப்பைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். அவ்வளவு திறன்வாய்ந்த ஒருவனைக் கம்பத்திலிருந்து பிய்த்தெடுத்துத் தோளிலே போட்டுத் தூக்கிக்கொண்டு நெருப்பிலிருந்து வெளியேறுவதெல்லாம் இயலுகிற செயலன்று” என்றான் உதிரன்.

சற்றே அமைதியுடன் நடந்த கபிலர் சொன்னார், ``வெற்றிலையும் கரும்பும் மனித குலம் இருக்கும் வரை தேவைப் பட்டுக்கொண்டே இருக்கும். தமது இலையாலும் தண்டாலும் சாற்றாலும் மனிதனுக்கு அருமருந்தைத் தந்தபடியேதான் இருக்கும். அந்த அரிய பயிரினங்களைக் கண்டறிந்த ஆதிகுடிகள் எப்படியெல்லாம் வேட்டையாடப்படுகிறார்கள்! அவர்கள் கண்டறிந்த  உயிர்ச் செல்வங்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதானா?” ஏக்கப்பெருமூச்சோடு பாறையைப் பிடித்து மேலேறிக் கொண்டிருந்தார் கபிலர்.

சொல்லின் வலி, உள்ளத்தின் உறுதியைத் தளர்த்தவல்லது. இதைவிடக் கடினமான செங்குத்துப்பாறையைக்கூட குனிந்து உட்காராமல் நிமிர்ந்தபடி மேலேறிய கபிலர் இந்தச் சிறு பாறையைக் கடக்க உட்கார்ந்து நகர்கிறார். அவரின் செயலை உன்னிப்பாகக் கவனித்த உதிரன், பேச்சை மாற்றி அவரின் எண்ணங்களைத் திருப்ப முயன்றான்.

``உங்களைக் காண வந்த பெரியவரோடு இரண்டு இளைஞர்கள் உதவிக்கு வந்தார்கள் அல்லவா?” என்றான்.

பாறையைக் கவனமாய்க் கடந்த பிறகு நிமிர்ந்த கபிலர், ``ஆம், திசைவேழரோடு இருவர் வந்திருந்தனர்” என்றார்.

``அவர்களில் ஒருவனாவது படைவீரனாகவோ, ஒற்றனாகவோ இருப்பான் என நானும் நீலனும் நினைத்தோம். ஆனால் அப்படியன்று; இருவருமே அவரின் மாணவர்கள்தாம்.”

``அவர் காலத்தைக் கணிக்கும் பேராசான். இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் மாமனிதர்களைப் பயன்படுத்திவிட முடியாது. இயற்கையின் பேரியக்கத்தைக் கணித்துக் கொண்டிருப்பவர்கள் மனிதர்களின் கீழ்மைக்குத் துணை போக மாட்டார்கள்.”

கபிலர் சொல்லி முடிக்கும் முன்னர் சற்றும் இடைவெளியின்றி உதிரன் கேட்டான், ``பாண்டியப் பேரரசுக்காகத்தானே அவர் இங்கு வந்தார்?”

``இல்லை. அவர் நம்பும் உண்மைக்காக வந்தார். இயற்கையின் உள்நரம்புகள் மனிதனின் கைகளுக்கு மிக அரிதாகவே அகப்படும். அப்படியொன்று தெய்வவாக்கு விலங்கின் வடிவில் அகப்பட்டுள்ளது. அதை இழந்துவிடக் கூடாது என்ற தவிப்பில்தான் வந்துள்ளார்” என்றார்.

``அவரின் கூற்றில் உண்மை இருக்கிறதா?” எனக் கேட்டான் உதிரன்.

அடுத்த பாறையில் ஏறாமல் அப்படியே நின்றார் கபிலர்.

பாறையின் மேலேறிய உதிரனுக்கு, கபிலர் ஏன் ஏறாமல் நிற்கிறார் என்ற காரணம் புரியவில்லை.

``நான் எங்கே நிற்கிறேன்?” என்று கேட்டார் கபிலர்.

``கீழே நிற்கிறீர்கள்” என்றான் உதிரன்.

``காரமலையின் உச்சியில் நின்றாலும் நான் கீழே நிற்பதாகத்தானே உனக்குத் தோன்றுகிறது” என்றார்.

கபிலர் சொல்லவருவது உதிரனுக்குப் புரியவில்லை.

கபிலர் விளக்கினார். ``உண்மை என்பது, இருக்குமிடம் சார்ந்தது. அதனால்தான் நான் கீழே இருப்பதாக கண நேரத்தில் நீ முடிவு செய்துவிட்டாய். நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை. அதுவே முழு உண்மையாகிவிடாது. எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை. எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதேயில்லை.”

பிலரும் உதிரனும் எவ்வியூர் அடைந்தபோது தேக்கனும் காலம்பனும் ஊர் திரும்பியிருந்தனர். அனங்கனும் அவன் குழுவினரும் காட்டெருமைக் கூட்டத்தோடு எந்த மலையில் அலைகிறார்கள் என்பதைப் பற்றிப் பலரும் அவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

கபிலர் வந்து சேர்ந்ததும் விசாரிப்புகள் எல்லாம் அவர் பக்கமாகத் திரும்பின. அவரின் ஆசானைப் பற்றி அறிந்துகொள்ள எல்லோருக்கும் ஆர்வம் இருந்தது. பாட்டாப்பிறையில் பெரியவர்கள் காத்திருந்தனர். ஆனால், பாரியைப் பார்க்கப் போன கபிலர் நள்ளிரவு வரை வரவில்லை.

பாரியின் அவையில்தான் அந்த உரையாடல் நடந்தது. தனக்கும் திசைவேழருக்கும் நிகழ்ந்த சந்திப்பைப் பற்றி முழுமையாக விளக்கினார் கபிலர். உடன் தேக்கனும் முடியனும் இருந்தனர். திசைவேழர் வந்ததன் நோக்கத்தைப் பாரியால் கணிக்க முடிந்தது, ``தேவவாக்கு விலங்கு வடதிசை நோக்கித்தான் உட்காரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், அதற்கு இப்படியொரு பயன்பாட்டுக் காரணம் இருக்கும் என நினைக்கவில்லை” என்றான் பாரி.

``அது வடதிசை நோக்கி மட்டுமே உட்காரும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியுமா?” எனக் கேட்டார் கபிலர்.

``இதுகூடவா தெரியாமல் இருப்போம்?” என்றான் முடியன்.

``தேவவாக்கு விலங்கை `கொற்றவையின் குழந்தை’ என்றுதானே சொல்கிறோம். கொற்றவைக்கு `வடக்குவா செல்லி’ என்றொரு பெயர் உண்டு என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா? கொற்றவைக் கூத்தின்போது அனைத்து நாள்களும் அது கீழிறங்கி வந்துதானே பழத்தை எடுத்தது. அப்போதெல்லாம் அது உட்கார்ந்ததை நீங்கள் கவனித்து அறியவில்லையா?’’ எனக் கேட்டான் பாரி.

கபிலர் திகைத்துப்போனார். ``அவை மிகவும் அஞ்சியபடி வந்து பழத்தை எடுத்துச் செல்வதைக் கூர்ந்து கவனித்தேன். ஆனால், அவற்றின் தனித்த நடவடிக்கையைக் கவனத்தில்கொள்ளவில்லை” என்றார் கபிலர்.
உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த தேக்கன், இடுப்புத் துணியில் மடித்து வைத்திருந்த வெற்றிலையை எடுத்துக்கொண்டே சொன்னார், ``திசைவேழரின் வருகையிலும் நாம் கவனிக்கத் தவறும் தனித்த விஷயங்கள் இருந்துவிடக் கூடாது.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83e_1516706353
தேக்கனின் சொல் சற்றே கடுமையானதாகத் தான் இருந்தது. ஆனாலும் இன்முகத்தோடுதான் கபிலர் அதை எதிர்கொண்டார். ``கவனம் தவறிவிடக் கூடாது என்பதில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தேன்.’’
``பாண்டியனின் பெருந்துறைமுகமான வைப்பூர்த் துறைமுகமே நம்மவர்களின் தாக்குதலால் அழிந்திருக்கிறது. அப்படியிருந்தும் இவ்வளவு மென்மையான முயற்சியைப் பாண்டியன் ஏன் செய்கிறான்?” எனக் கேட்டார் தேக்கன்.

கபிலரிடம் இதற்கான விடை இல்லை. சிந்தித்தபடி அமைதியானார்.

``பெருந்தாக்குதலுக்கான ஆயத்த முயற்சியில் இருப்பவர்கள், நாங்கள் அப்படியல்ல எனக் காட்டிக்கொள்ள முயல்வார்கள். இந்த முயற்சி அப்படிப்பட்ட ஒன்றுதான்” என்றார் தேக்கன்.

ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ``அதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்று சற்றே மெல்லிய குரலில் சொன்னார் கபிலர்.

அதைக் கவனித்த பாரி கேட்டான், ``உங்களுக்கு ஏன் அவ்வாறு தோன்றியது?”

``முதலில் மிகுந்த சினத்தோடு பறம்பைக் குற்றம்சாட்டிப் பேசிய திசைவேழர், எனது விளக்கத்துக்குப் பிறகு சற்றே அமைதியானார். அவரின் நோக்கம், திசையறியும் ஒரு விலங்கைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். அதில் ஐயம் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாள்களில் அவரின் முகம் மிகவும் வாடியிருந்தது. நான் அவரை நன்கு அறிவேன். எளிதில் தளராத மனிதர் அவர். அவரின் கண்கள் ஒன்றுக்கு மேற்பட்டமுறை கலங்கின. அதற்குக் காரணம் உள்ளுக்குள்ளிருந்த குற்றவுணர்வு. அங்கு நடக்கும் பல முயற்சிகளை அவர் அறிவார். அதைப் பகிர்ந்துகொள்ள முடியாத நிலையில் உள்மனம் அவரைக் கலங்கச் செய்திருக்கும்” என்றார்.

அவரைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த தேக்கன், ``புலி முன் ஆடு என்பது திசைவேழருக்குச் சொல்லப்பட்ட சொல்லன்று; பாண்டியனுக்காகச் சொல்லப்பட்ட சொல். பறம்பின் முன் அவனது பெரும்படை அடங்கி ஒடுங்கும் என்பது பாண்டியனின் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்” என்றார்.

ஒரு கணம் உறைந்துபோனார் கபிலர். `அங்கு பேசிய பேச்சு அதற்குள் எப்படி இங்கு வந்து சேர்ந்தது!’ திகைத்த கண்களோடு தேக்கனைப் பார்த்தார். அவர் வெற்றிலையை மெல்வதற்கு ஏற்ப நன்றாக மடித்துக்கொண்டிருந்தார்.

``உதிரன் கரும்பாக்குடியின் கதையைச் சொன்னான். எனக்கு அவர்களைப் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. அவர்கள் யார் எனத் தெரிந்த பிறகும் ஈங்கையனை அழைக்காமல் ஏன் வந்தீர்கள் என உதிரனைத் கோபித்தேன்” என்றான் பாரி.

பேச்சின் போக்கை எவ்விடம் மாற்ற வேண்டும் என்பதைப் பாரி அளவுக்கு நன்கு உணர்ந்தவர் யாருமில்லை என்பது கபிலருக்குத் தெரியும். திசைவேழர், தனக்கு சிகிச்சை செய்த மருத்துவர்களிடம் நிறைய பேசினார். அந்தப் பேச்சுகள்   எல்லாம்   இங்கு  வந்து சேர்ந்தி ருக்கின்றன. அவர் என்னவெல்லாம் பேசினார் என்பது கபிலருக்குக்கூட முழுமையாகத் தெரியாது. அவரின் எண்ண ஓட்டங்களைக் கண்டறிய மருத்துவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு இருந்திருக்கும். அவர் சொன்ன சொற்களிலிருந்து தான் தேக்கன் இந்த முடிவுக்குப் போயுள்ளார் என்பதைக் கபிலர் உணர்ந்தபோது, அதுகுறித்த பேச்சை நீட்டிக்க வேண்டாம் என்றுதான் பாரி ஈங்கையனின் பேச்சை எடுத்தான்.

பாரியின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு கபிலர் சொன்னார், ``நாங்கள் மலை ஏறும்போது தான் ஈங்கையனின் கதையை உதிரன் என்னிடம் சொன்னான். அவர்களைப் பார்க்காமல் வந்துவிட்ட கவலை எனக்கும் உண்டு.”

வெற்றிலையை வாயில் மென்றபடி தேக்கன் கேட்டார், ``என்ன சொன்னார் வேட்டூர் பழையன்?”

`உங்களுக்குத் தெரியாமல் என்னிடம் எதுவும் சொல்லப்போகிறாரா அல்லது என்னிடம் சொல்லியது எதுவும் உங்களுக்குத் தெரியாமல் இருக்கப்போகிறதா?’ என நினைத்துக்கொண்டே, ``நான்கு நாள்கள் அல்லவா! நிறைய பேசினோம். குறிப்பாக, மயிலாவின் மணவிழா பற்றி கண்கள் பூக்கப் பேசினார் நீலன்” என்றார்.

மென்று சுவைத்த வாயின் அசைவு சட்டென நின்றது. காலம் தாழ்த்துவது அழகல்ல எனத் தோன்றியபடியேயிருந்த எண்ணத்தைக் கிளறிவிட்டது கபிலரின் சொல். திரும்பிப் பாரியைப் பார்க்க நினைத்தவர், அதைத் தவிர்த்து மீண்டும் கபிலரின் பக்கம் திரும்பினார்.

தேக்கனின் எண்ண ஓட்டத்தை மட்டுமன்று, பழையனின் எண்ண ஓட்டத்தையும் நன்கு அறிந்த பாரி சொன்னான், ``இந்தக் கார்காலத்தில் தான் மணவிழாவை முடிவுசெய்திருந்தோம். ஆனால், எதிர்பாராத பலவும் நடந்துவிட்டதால் மணவிழாவை நடத்த முடியாமல் போய்விட்டது. அதற்காக இனியும் காலம் கடத்த வேண்டாம். உப்பறைக்குப் போய் வந்த மூன்றாம் நாள் மணநாளாக முடிவுசெய்து செய்தி அனுப்புங்கள்” என்றான் பாரி.

நீண்டநாள் பேச்சு அந்தக் கணமே முடிவானது தேக்கனுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. உடனே சம்மதித்தான்.

கபிலரும் மகிழ்வடைந்தார். `உப்பறைக்குப் போய் வந்த உடன்’ என்று பாரி ஏன் சொன்னான் என்பது மட்டும் அவருக்குப் புரியவில்லை.

``உப்பறை எங்கே இருக்கிறது? போய் வர எவ்வளவு நாள்களாகும்?” எனக் கேட்டார்.

``போய் வர ஒரு மாதமாகும். ஆண்டுக்கு ஒருமுறை பறம்பின் தலைவன் அங்கு போய்த் திரும்புவது காலகாலப் பழக்கம். இந்த முறை சற்று தாமதமாகிவிட்டது” என்றான் தேக்கன்.

நீலன், மயிலாவின் மணவிழா ஏற்பாடு உறுதியான மகிழ்வில் வெற்றிலையை வேகவேகமாக மடித்து வாயில் திணித்துக் கொண்டே கேட்டான், ``நீங்கள் என்னோடு இருந்து மணவிழா வேலையில் பங்கெடுக்கிறீர்களா அல்லது பாரியோடு உப்பறைக்குப் போய் வருகிறீர்களா?”

கைநீட்டி வெற்றிலையைக் கேட்டார் கபிலர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83f_1516706376
மறுமொழியேதும் சொல்லாமல் கை நீட்டுகிறாரே எனச் சிந்தித்தபடி வெற்றிலையைக் கொடுத்தார் தேக்கன்.

வாங்கி அதைத் தோதாக மடித்துக்கொண்டே கபிலர் சொன்னார், ``இந்தக் கேள்விக்கு நான் சொல்லித்தான் விடை தெரிய வேண்டுமா உங்களுக்கு?”

சிரித்தான் பாரி.

வெற்றிலையை வாயில் மென்றபடியே முடியன் சொன்னான், ``தேவவாக்கு விலங்கு திசை மாறியா உட்கார்ந்துவிடப்போகிறது!”

மீண்டும் சிரித்தான் பாரி.

கிடைத்த வாய்ப்பைக்கொண்டு தேக்கனை நோக்கிச் சொல்லைச் சுழற்றினார் கபிலர், ``இத்தனை நாள்களாகியும் தனித்த விஷயங்களைக் கவனிக்கவில்லையா நீங்கள்?”

அறையெங்கும் பொங்கி வெடித்தது சிரிப்பு.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 9:01 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83a_1517389225
கதமலையின் முகடுகளில் குதிரைகள் பாய்ந்து போய்க்கொண்டிருந்தன. பாரி, காலம்பன், கபிலர் ஆகிய மூவரைத் தொடர்ந்து வீரனொருவன் கூடுதலாக ஒரு குதிரையைக் கையிற்பிடித்தபடி பின்தொடர்ந்தான். அக்குதிரையில் உணவுப்பொருள்களின் சிறுமூடைகள் ஏற்றப்பட்டிருந்தன. இவர்கள் எவ்வியூரிலிருந்து புறப்பட்டு மூன்று நாள்களாகி விட்டன.

கபிலர் இளைஞராய் இருந்தபொழுது குதிரையேற்றப்பயிற்சி பெற்றிருக்கிறார். ஆனால் அதன்பின் நீண்டகாலம் குதிரையேற்றத்தில் ஈடுபடவில்லை. எவ்வியூர் வந்தபின் அவ்வப்பொழுது குதிரையில் ஏற்றி ஒன்றிரண்டு மலைத்தொடருக்கு உதிரன் அழைத்துச்செல்வான். அப்பழக்கம் இருந்ததால்தான் இப்பயணத்தில் அவரால் பங்கெடுக்க முடிந்தது.

இதுவரை மூன்று மலைகளையும் இரு ஆறுகளையும் கடந்துவிட்டார்கள். ஆனால் பயணம் இன்னும் நெடுந்தொலைவு. வடக்கும் தெற்குமாக நீள்கோடெனக் கிடப்பதுதான் பச்சைமலைத்தொடர். இக்கோடு சில இடங்களில் நான்கு மடிப்புகளாகவும் சில இடங்களில் ஏழெட்டு மடிப்புகளாகவும் இருக்கிறது. ஆனாலும் பெருமடிப்புகளாக உள்ள மூன்று மடிப்புகளைத்தான் காரமலை, நடுமலை, ஆதிமலை என அழைக்கின்றனர். இம்மலைத்தொடரில் உள்ள முகடுகளும் துண்டிக்கப்பட்ட தனிக்குன்றுகளும் எண்ணிலடங்காதவை. இவற்றிற்கிடையில் வழிந்தோடும் ஆறுகளைக் கணக்கிட முடியாதுதான். ஆனாலும் பேராறுகளுக்குப் பெயர் சூட்டியிருந்தனர்.

இந்நீள்மடிப்பு மலைத்தொடரின் வடவெல்லை முதல் தென்னெல்லை வரை இருப்பவர்கள்தாம் பதினான்கு வேளிர்குடியினர். இம்மலைத் தொடரின் சிறுபகுதியில்தான் பறம்புநாடு இருக்கிறது. ஏறக்குறைய அதன் நடுவில் எவ்வியூர் உள்ளது. எவ்வியூரிலிருந்து குதிரையில் புறப்பட்டால் பறம்பின் வடக்கு எல்லையைச் சென்றடைய எட்டுநாள்களாகின்றன. ஐந்துநாள் பயணத் தொலைவில் காழகமலையுள்ளது. அதன் அடிவாரத்தில் இருப்பதுதான் உப்பறை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83b_1517389241
அதனை நோக்கிய பயணத்தின் மூன்றாம் நாள் அகதமலையில் பயணித்துக்கொண்டி ருந்தனர். கபிலர் இதுவரை பறம்பின் காடுகளை நடந்துதான் கடந்துள்ளார். முதன்முறையாக அகலவிரிந்து கிடக்கும் பெருங்காடுகளை மலைச் சரிவின் இருபக்கமும் பார்த்தபடி விரைந்து கொண்டிருக்கிறார். பறம்பின் அரண்போன்ற அமைப்பு என்னவென்பதை, காணும் காட்சிகள் உணர்த்திக்கொண்டிருந்தன. இயற்கையின் பெருவிரிப்பிலிருந்து பார்வையை விலக்க முடியாமல் கவனமாய்க் கடிவாளத்தை இழுத்துச்செல்ல வேண்டியிருந்தது.

காடுகளின் மீதான வியப்பேதும் காலம்பனின் கண்களில் இல்லை. வனத்தின் ஆதிப்பிளவு களினூடே முளைத்து வந்தவன் அவன். பாசிபடர்ந்து குளுமையேறிய ஈரப்பாறையையும் வெக்கையை உமிழ்ந்துதள்ளும் கரும்பாறையையும் இரு தோள்களெனக்கொண்டவன். அவனது வியப்பெல்லாம் முன்னால் விரைந்து சென்று கொண்டிருக்கிற பாரி எவ்வடையாளங்களைப் பாதைகளாக்கிக் கடந்துகொண்டிருக்கிறான் என்பதுதான்.
குதிரைகள் இளைப்பாற சிற்றோடையின் அருகில் நின்றான் பாரி. ஓடையில் நீர் சிறுத்து ஓடிக்கொண்டிருந்தது. “இவ்வாண்டு கோடையின் உக்கிரம் மிகக்கடுமையாக இருக்கும்” என்று சொன்னபடி நீரினை அள்ளிப்பருகினான். அப்பொழுதுதான் குதிரையை விட்டு இறங்கிய கபிலர் இடுப்பில் கைகளைவைத்து முதுகைப் பின்புறமாக வளைத்துக்கொடுத்தபடி கேட்டார், “கோடையின் கடுமை அதிகமாக இருக்குமென்றா சொல்கிறாய்?”

“ஆம். நாம் உப்பறை சென்று திரும்புகையில் இவ்வோடை முற்றிலும் வற்றியிருக்கும்.”

“எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்?”

“கோடை தொடங்கிய முதல் மாதத்திலேயே நீர்சுரப்பு குறைந்துவிட்டது. இம்மாதத்தில் நீர் இழுத்தோடவேண்டும். ஆனால் இதன் போக்கைப் பாருங்கள். உள்ளே நகரும் மீனின் வேகம்கூட நீருக்கு இல்லை. பாறை இடுக்குகள் இன்னும் பத்து நாளுக்குள் இவ்வோடையைக் குடித்துவிடக்கூடும்.”

பாரியின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு கணிப்பினைச் சொல்லிக்கொண்டிருந்தது. சிற்றோடைகள் வற்றி முடித்த வேகத்தில் ஆறுகள் காயத்தொடங்கும் என்று சொல்லியபடி ஓடையைக் கடந்து மீண்டும் குதிரையில் ஏறினான்.

“இவ்வோடைதான் அகதமலையின் எல்லை. இதனைக் கடந்தால் தொடங்குவது வெப்புமலை. சற்றே செங்குத்தாய் மேலேற வேண்டும்” என்று சொல்லியபடி சிறிது தொலைவு மேலேறியவுடன் கைநீட்டிக் காண்பித்தான். இறங்குமலையில் மிகத்தொலைவில் பாறையின்மீது வெள்ளை விழுதென சிறுத்தநீர் செங்குத்தாய் இறங்குவது தெரிந்தது. “அதோ தெரிகிறதல்லவா! அந்த அருவியில் பெருவெள்ளம் கொட்டும். ஆனால் அதனைத்தொடர்ந்து ஓடும் ஆற்றைக் கண்ணால் பார்க்க முடியாது. இவ்வடர் காட்டில் மரங்களுக்கூடே அது முழுமுற்றாக மறைந்துவிடும். எனவே இதற்கு  மறையாறு என்று பெயர்.”

குதிரையை நிறுத்தி, காலம்பனும் கபிலரும் அவ்வடர் காட்டினைப் பார்த்தனர். பாரி சொன்னான், “இக்காட்டில்தான் வேறெங்கும் இல்லாத ஓர் உயிரினம் உள்ளது. நெடுங்காது முயல்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு மட்டும்தான் எலிகளின் காதினைப்போன்ற குறுங்காது முயல் உள்ளது. அதன் குருதியில்தான் பறம்பின் வீரர்கள் பிடித்து நிற்கும் வில்லின் நாண்கள் ஊறவைக்கப்படுகின்றன.”

அருவியைப் பார்த்துக்கொண்டிருந்த காலம்பனும் கபிலரும் வியப்பு நீங்காமல் பாரியின் பக்கம் திரும்பினர்.

பாரி சொன்னான், “சமவெளி மனிதர்கள் பயன்படுத்தும் வில்லின் ஆற்றலைவிட மலைமக்கள் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83c_1517389251பயன்படுத்தும் வில்லின் ஆற்றல் மிகவலிமையானது. மலைமக்களில் மற்றவர்கள் பயன்படுத்தும் வில்லிலிருந்து அம்பு போய்ச்சேரும் தொலைவைவிட மூன்றுமடங்குத் தொலைவிற்குப் பறம்பின் வீரன் பயன்படுத்தும் அம்பு போய்ச்சேரும். அதற்கு முக்கியமான காரணத்தில் ஒன்று வில்லில் பூட்டப்படும் நாணின் இழுவைத் திறன். நாங்கள் பயன்படுத்தும் நரம்பினைக் குறுங்காது முயலின் குருதியில் ஊறவைத்துவிடுவோம். இழுத்துத் தள்ளும் அதனது விசை அளவிட முடியாததாக இருக்கிறது.”

வியப்பு நீங்காமல் பார்த்துக்கொண்டிருந்த இருவரும் இப்பொழுது குதிரையை நகர்த்தியே ஆகவேண்டியிருந்தது. ஏனென்றால், பாரி பேசியபடி முன்னால் போய்க்கொண்டிருந்தான். வெப்புமலையின் வடபுற இறக்கத்தில்தான் சூளூர் இருக்கிறது. இன்று இரவு தங்கல் அங்குதான். மூன்று நாள் பயணத்தின் வழியில் ஊர்கள் இல்லை. மிகத்தள்ளி ஒன்றிரண்டு குன்றுகளைத்தாண்டித்தான் ஊர்கள் இருந்தன. அங்கு போய்த் திரும்பினால் மிகக்காலந்தாழும் என்பதால் வழியில் உள்ள குகைத்தளங்களிலேயே தங்கினர். இன்றுதான் ஊரினில் தங்கப்போகின்றனர்.

பாரி வருகை ஊர்மக்களை மகிழ்ச்சிக்கூத்தாடச் செய்யும். வந்த மறுநாள் காலையிலேயே புறப்படுவது இயலாத செயல். ஆனால், புறப்பட்டே ஆகவேண்டிய நிலையை எடுத்துச்சொல்லிப் புரியவைப்போம் என்றுதான் பாரி அதனை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான்.

குதிரைகள் ஏற்றத்தில் மிகவும் மெதுவாக ஏறின. காலம்பனின் குதிரை ஒரு நாளில் இரண்டு முறை மாற்றப்பட்டது. பயணவழியில் நீண்டுகிடக்கும் படர்பாறை இருந்தது. குதிரையை விட்டு இறங்கினான் பாரி. அருகில் வந்ததும் மற்றவர்களும் இறங்கினர். சமதளப்பாறையாகத்தானே இருக்கிறது. இதற்கு ஏன் குதிரையை விட்டு இறங்கினான் பாரி என்ற எண்ணம் மற்ற இருவருக்கும் ஏற்பட்டது.
இறங்கி நடந்தபடி பாரி சொன்னான். “சூளூர்தான் முடியனின் ஊர். அங்குதான் அவன் குடும்பம் இருக்கிறது.”

முடியன் என்பது பெயரன்று, தேக்கனைப்போல அது ஒரு பட்டம். சமவெளி அரசுகளில் படைத்தளபதி என்ற பட்டம் இருப்பதுபோல பறம்பிலுள்ள பட்டமிது. ஆனால், இந்தச் செய்தி காலம்பனுக்குத் தெரியுமா என்று கபிலரின் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பாரி சொன்னான், “நாம் கடந்து வந்த ஓடை எழுவனாற்றில் போய்ச் சேருகிறது. அந்த ஆற்றுக்கு நீர்ப்பிடிப்பு ஓடைகள் மிகக்குறைவு. எனவே வேகமாக வற்றிவிடும். பச்சைமலையின் உள்ளிடுக்கின் வழியாகவே நீண்டதொலைவு பயணிக்கும் இவ்வாறு குறும்பியூர்க் கணவாயின் வழியாகக் கீழ்த்திசையில் திரும்பி, சமதளத்தை நோக்கிப் பாய்கிறது. கரடுமுரடற்ற பாதையாக இதன் வழித்தடம் அமைந்திருக்கிறது.”

குதிரைகள் பாறையை மிதித்து நடக்கும் ஓசையும் பாரி பேசும் ஓசையும் மட்டுந்தான் கேட்டன. இருவரும் மிக அமைதியாக பாரி பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தனர். “இயற்கையின் மாபெரும் அரணால் சூழப்பட்ட பறம்பினைத் தாக்க எதிரிகளுக்கு உள்ள ஒரே வாய்ப்பு எழுவனாறுதான்” என்றான் பாரி. காலம்பனும் கபிலரும் அதிர்ந்தனர்.

“கோடைக்காலத்தில் இவ்வாற்றின் வழித்தடத்தைப் பயணவழியாகப் பயன்படுத்த முடியும். அதற்கேற்ற தன்மையுடன்தான் இதன் அமைப்பிருக்கிறது. குறும்பியூர்க் கணவாயில் இவ்வாற்றின் வழித்தடம் பற்றி உள்ளே நுழைபவன் எவ்வியூரின் அருகிலுள்ள குன்றுவரை வந்துசேரலாம். ஆனால் அதில் மூன்று சிக்கல்கள் உண்டு. ஒன்று, பறம்புக்குள் இப்படியொரு வழித்தடம் இருக்கிறது என்பது வெளியாட்களுக்குத் தெரிய வாய்ப்பேதுமில்லை. இரண்டு, குறும்பியூர்க் கணவாயிலிருந்து இந்த வெப்புமலைவரை வந்து சேர்வதற்குள் இவ்வாற்றில் பல ஆறுகளும் ஓடைகளும் இணைகின்றன. அவற்றின் அகலமும் எழுவனாற்றின் அகலமும் ஒன்றுபோல்தான் இருக்கின்றன. எனவே மூல ஆறு எது என்பதனை எளிதில் கண்டறிய முடியாது. இணையும் ஆறுகளின் வழியே திரும்பினால் இயற்கையின் பெரும் பொறிக்குள் போய்ச் சிக்கி மீளமுடியாமல் அழிவார்கள்.

மிகச்சரியான வழியைத் துல்லியமாகக் கண்டறிந்து பலநாள் பயணப்பட்டு இந்த வெப்புமலை அடைந்து விட்டார்கள் என்று வைத்துக்கொண்டால் அதன் பிறகு இதனைக்கடந்து ஒருவன்கூட எவ்வியூரை நோக்கித் தென்திசையில் சென்றுவிட முடியாது” என்றான் பாரி.

குதிரைகள் படர்பாறையை நடந்து கடந்துவிட்டன. ``மேலேறிப் பயணத்தைத் தொடர்வோம்; பொழுதாகிக் கொண்டிருக்கிறது” என்று சொல்லி, குதிரையின் மேல் ஏறினான். காரணம் தெரியாமல் குதிரையின் மீது ஏற மற்ற இருவருக்கும் மனமே இல்லை.

முதன்முறையாக காலம்பன் பாரியின் சொல்லை மறுத்து நின்றான். குதிரையில் ஏறியபடி பின்னால் திரும்பிப்பார்த்த பாரி, கடிவாளத்தை இடதுபக்கமாக இழுத்தபடி அவர்களை நோக்கித் திருப்பினான். குதிரை கனைத்தபடி திருப்பியது. “ஏனென்றால் இங்குதான் சூளூர் இருக்கிறது. இவ்வுலகின் தலைசிறந்த வீரர்கள் இவ்வூரில்தான் பிறக்கிறார்கள்” சொல்லும்பொழுதே உரத்தது பாரியின் குரல். “பறம்பின் மாவீரனே இம்மலையைக்காக்கும் பெரும்பொறுப்பினை ஏற்று முடியனாகிறான். இதுவரை முடியன் பட்டத்தை ஏற்றவர்கள் அனைவரும் சூளூர்க்காரர்களே. பறம்பில் உள்ள மற்ற வீரர்கள் குறுங்காது முயலின் குருதியில் ஊறவைத்த நாணேற்றி எய்யும் அம்பின் தொலைவை வெறும் நரம்பில் நாணேற்றி சூளூர்க்காரர்கள் எய்துமுடிப்பர்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83d_1517389268
காலம்பனும் கபிலனும் வியந்து நிற்க, பாரி கேட்டான், “இன்றைய நிலையில் பறம்பில் வில்வித்தையில் மாவீரன் யார் தெரியுமா?”

சற்றும் எதிர்பாராத கேள்வியாக இருந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர். நீலனின் திறன் பற்றி தேக்கன் நிறைய சொல்லியுள்ளார். உதிரனின் ஆற்றலைப்பற்றிய பேச்சுவந்தபொழுது வாரிக்கையன் சொன்ன செய்திகள் மிகுந்த வியப்பினை ஏற்படுத்தின. ஆனாலும் முடியனைப்பற்றி இதுவரை யாரும் எதுவும் பேசியதில்லை. இப்பொழுது பாரி சொல்லும் குறிப்பிலிருந்து பார்த்தால் அவனாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அவர்களிடம் விடையை எதிர்பார்க்காமல் பாரி சொன்னான், “அம்மாவீரனின் பெயர் இரவாதன். முடியனின் ஒரே மகன். இன்றிரவு நமக்கான விருந்தினை ஏற்பாடு செய்து காத்திருக்கிறான்.  காலந்தாழ்த்தாமல் குதிரையேறுங்கள்.”

செம்மாஞ்சேரலிடமிருந்து விடைபெற்று வஞ்சித்துறைக்கு வந்தான் ஹிப்பாலஸ். சோழனின் படையெடுப்பு பற்றி இருவருக்கும் தெரியவேண்டிய செய்தி இருந்தது. அதனை அறியத்தான் ஹிப்பாலஸ் புறப்படுகிறான். சூழலை சாதகமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் இருவரும் மிகுந்த துடிப்போடு இருந்தனர். சோழப்படையெடுப்பின் காரணம் தெரியாவிட்டாலும் பறம்பின் மீதுதான் படையெடுக்கிறான் என்பதை அறிந்ததிலிருந்து உதிரஞ்சேரலின் மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கியபடி இருந்தது. பறம்பின் மீது யார் படையெடுத்தாலும் அதன் இறுதி வெற்றியை அடையப்போகும் வாய்ப்பு தனக்குத்தான் என்பதில் அவன்மிக உறுதியாக இருக்கிறான்.

ஹிப்பாலஸ்ஸின் நாவாய் வஞ்சியிலிருந்து புறப்பட்டது. தன்னோடு எபிரஸ்ஸையும் கால்பாவையும் அழைத்துக் கொண்டான். திரேஷியனும் பிலிப்பும் வஞ்சியிலேயே இருந்தனர். புகாரின் பெருஞ்செல்வந்தர்களும் வணிகர்களும் கால்பாவின் நட்புக்காகப் பல்லாண்டுகளாக ஏங்கிக்கிடப்பவர்கள். அவனுடைய நாவாய்கள்தாம் புகார் வணிகர்களின் செல்வங்களுக்கான வடிகாலாக இருந்தன. ஹிப்பாலஸ் அதனால்தான் கால்பாவை உடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

உதியஞ்சேரலுக்கு நன்குதெரியும், ஹிப்பாலஸ் புகாரை அடையும்பொழுது செங்கனச்சோழனின் படை பறம்புமலையின் அடிவாரத்தைச் சென்றடைந்திருக்குமென. ‘படை புறப்பட்டுவிட்டது’ என வந்த ஒற்றுச்செய்தியை ‘படை ஆயத்தமாகிறது’ என்று மட்டும் ஹிப்பாலஸ்ஸுக்குச் சொன்னான் உதியஞ்சேரல். அப்படியிருந்தும் ஹிப்பாலஸ்ஸை அனுப்பி வைப்பதற்குக் காரணம் இருக்கிறது. யவனர்களால் மட்டுமே அரசவையின் அனைத்து உண்மைகளையும் முழுமையாகவும் எளிதாகவும் அறியமுடியும். செங்கனச்சோழன் படையெடுப்பின் முழுநோக்கம் என்ன என்பதை அறிந்துகொள்ளத் திட்டமிட்டான் உதியஞ்சேரல்.

சூளூரிலிருந்து அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டனர். ஐந்தாம் நாள் மாலைக்குள் உப்பறையை அடைய வேண்டும். எனவே, இன்றைய பயணத்தொலைவை சற்று கூடுதலாகத் திட்டமிட்டான் பாரி. மற்றவர்களுக்கும் அது புரிந்து கவனமாகவும் விரைவாகவும் செயல்பட்டனர். இன்றைய நாள் முழுவதும் கபிலருக்கு இரவாதனின் நினைவே இருந்தது. வில்லடியின் மாவீரன் என்று பாரி அவனைப்பற்றிச் சொன்ன சொல்லிலிருந்தே சிந்தனை அவனைச் சூழ ஆரம்பித்தது. நேற்றிரவு அவனைப் பார்த்தகணம் முதல் எண்ணங்கள் அவனை விட்டு விலகவில்லை. அவ்விளம் வீரனின் துடிப்பும் அவனது பேரன்பும் கபிலரைக் கிறங்கவைத்தன.

குதிரைகள் விரைந்துகொண்டிருந்தன. மலையின் பக்கவாட்டுச் சரிவிலிருந்து மறுகுன்றுக்குத் திரும்பும் இடத்தில் குதிரையை இழுத்து நிறுத்தினான் பாரி.

மற்ற இருவரும் அவன் சொல்லப்போவதைக் கேட்க ஆயத்தமாயினர். “நாம் இவ்விடம் வளையாமல் நேராகப் பயணித்தால் வடதிசை நோக்கிச் செல்வோம். இத்திசையில் குன்றுகள் தவறாமல் ஊர்கள் உண்டு. ஒவ்வோர் ஊரின் தன்மையும் ஒவ்வொரு வகையானது.  ஒருநாளைக்கு ஐந்து முதல் ஆறு ஊர்களை நம்மால் பார்க்க முடியும். தொடர்ந்து பயணித்தால் மூன்று நாள் பயணத்தொலைவில் இருப்பதுதான் தந்தமுத்தம். அவ்வூரைச் சேர்ந்தவர்கள்தாம் முதன்முதலில் யானைகளுடனான மொழியை உருவாக்கியவர்கள். இன்றளவும் யானைகளைப்பற்றி அவர்களுக்கு இருக்கும் அறிவுத்திறன் வேறு யாருக்கும் இல்லை” என்று மிகச்சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குதிரையைக் கிளப்பினான்.

பாரியின் குதிரை மலையின் பக்கவாட்டுச் சரிவில் இடப்புறமாகத் திரும்பியது. எதையோ கேட்க வாயெடுத்த காலம்பன் கேட்காமல் நிறுத்திக்கொண்டான். சரிவுப்பாதையின் தன்மை மிக ஆபத்தானதாக இருப்பதை உணர்ந்ததால் பேச்சை நிறுத்திக் கவனமாகக் கடந்தான். யானைகளைப்பற்றி பாரி சொல்லத் தொடங்கியதும் காலம்பனிடமிருந்து கேள்வி எழும் என்று கணித்தார் கபிலர். எழும் கேள்வியைக் கேட்கத்தொடங்கி நிறுத்திய காலம்பன் ஆபத்தான அவ்விடம் கடந்ததும் கேட்டான். “உனது பயணத்தின் போக்கு எனக்கு இப்போது வரை புரியவில்லை.”

என்ன கேட்கிறான் என்று கபிலர் விழித்ததைப்போலவே பாரியும் திகைத்தான். காலம்பன் சொன்னான், “எவ்வடையாளத்தை வைத்து உனது குதிரை போகிறது? எதனைப் பாதையென்று யூகித்துப் பயணிக்கிறாய்? புறப்பட்டதிலிருந்து நான் அதனைத்தான் உற்றுக் கவனித்து வருகிறேன். உனது பயணப்பாதை எனக்குப் பிடிபடவேயில்லை.  ஆனால், எவ்விடமும் தயங்கி நிற்காமல் பயணித்தபடியே இருக்கிறாய்” என்றான் காலம்பன்.

பாரி சொன்னான் “மலையின் எல்லாப் பாதைகளையும் விலங்குகளே உருவாக்குகின்றன. நாங்கள் கடமான் உருவாக்கும் பாதையையே பயன்படுத்துவோம். முகடுகளின் வழியான நெடும்பயணத்துக்கு அதுவே ஏற்றது. ஆனால் அதிலும் சிக்கல்கள் உண்டு. கடமான் பாதை, பாறை மடிப்புகளில் போய்ச் சேர்ந்தபிறகு மீண்டும் எவ்விடமிருந்து தொடங்குகிறது என்பதைக் கண்டறிவது எளிதன்று. தொடங்கும் இடத்தை மிகக்கவனமாகக் கண்டறியாவிட்டால் எத்திசை போய்ச் சேருவோம் என்பதே தெரியாது. அடர்காட்டுக்குள் போய் மாட்டிக்கொண்டு வெளியேற வழியின்றி நிற்போம்.”

நேற்றைய பயணத்தின்பொழுது படர்பாறை வந்ததும் பாரி குதிரையை விட்டு ஏன் இறங்கினான் என்பது இப்பொழுதுதான் விளங்கியது. பாதை மீண்டும் தொடங்கும் இடத்தைக் கண்டறியவே இறங்கியுள்ளான் என்று காலம்பன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது கபிலர் கேட்டார், “மண்ணில் அழுத்தமற்ற இவ்வகைப்பாதைகள் எளிதில் மறைந்துவிடும் ஆபத்து இல்லையா?”

“கடமான் பாதை ஒருபொழுதும் அழியாது. அதன் காலடித்தடத்தையும் அதன் பற்கள் புற்களைக் கடிக்கும்வித்தையும் தெரிந்த ஒருவர் அதன் வழித்தடத்தைக் கண்டறிவது கடினமன்று. கொம்புகள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க முட்களையும் புதர்களையும் விட்டு விலகியே பாதையை அது உருவாக்கி வைத்திருக்கும். ஒருவகையில் குதிரைப்பயணத்துக்கு இவ்வகைப்பாதையே ஏற்றது” என்று சொன்ன பாரி, குதிரையின் கடிவாளத்தைச் சற்றே கவனப்படுத்தியபடி சொன்னான், “இதில் முக்கியமானது கடமான் பாதையிலிருந்து விலகி மீண்டும் அதன் மற்றொரு பாதையில் போய்ச் சேருவதுதான். அவ்விடைப்பட்ட தொலைவில் பாதைக்குறிப்புகளை நாம் உருவாக்கியுள்ளோம்.”

“இவ்வளவு கடினமான அமைப்புகொண்ட பாதையை எப்படி எல்லோராலும் நினைவில் கொள்ள முடியும்?” எனக் கேட்டார் கபிலர்.

“பறம்பின் அனைத்துத் திசைகளிலிருந்தும் இவ்வகைப் பாதைகள் எவ்வியூரை நோக்கி அமைந்திருக்கின்றன. அப்பாதையில் தொடர்ந்து காவல்வீரர்கள் குதிரைகளில் பயணித்தபடிதான் இருக்கின்றனர். அதுமட்டுமன்றி, அத்திசையில் உள்ள ஊர் மக்களுக்கும் இவ்வகைப்பாதையைப் பற்றிய தெளிவு உண்டு. ஆனால், எவ்வியூரில் இருந்து செல்லும் அனைத்துப் பாதைகளையும் கண்டறிந்து, அனைத்துத் திசைகளின் எல்லைவரை பயணிக்கக்கூடியவர்கள் மிகச்சிலரே. வாரிக்கையன், தேக்கன், கூழையன், முடியன் உள்ளிட்ட ஏழுபேரால் மட்டுமே அது முடியும்” என்றான் பாரி.

ஹிப்பாலஸ் புறப்பட்டுப்போன அன்றைய நாளே குடநாட்டு வேந்தனுக்கு ஓலை அனுப்பினான் உதியஞ்சேரல். ஓலை கண்டதும் குடநாட்டின் அமைச்சன் கோளூர் சாத்தனும் தளபதி எஃகல்மாடனும் வஞ்சியை நோக்கிப் புறப்பட்டனர். செப்பனிடப்பட்ட பாதை அமைப்பு இருந்ததால் விரைந்து வந்தனர்.

அவர்கள் வந்த செய்தி உதியஞ்சேரலுக்குத் தெரிவிக்கப்பட்டது. தன் தளபதி துடும்பனுடனும் அமைச்சன் நாகரையனுடன் அவைக்குள் நுழைந்தான். உள்ளே குடநாட்டின் அமைச்சன் கோளூர் சாத்தனும் தளபதி எஃகல்மாடனும் காத்திருந்தனர். வழமையான மரியாதைகள் முடிந்தவுடன் உதியஞ்சேரல் சொன்னான், “நாம் முன்பு திட்டமிட்டதைப்போல ஆளுக்கு ஒருமுனையிலிருந்து படைநடத்தி முன்செல்ல வேண்டாம். சூழல் நமக்கு மிகவும் சாதகமாக மாறியுள்ளது. பாண்டியனின் பெரும்படையும் சோழப்படையும் பறம்பினைத் தாக்க முற்பட்டுள்ளன. அத்தாக்குதல் தொடங்கும் செய்திக்காக நாம் காத்திருப்போம். அவர்களின் தாக்குதலை எதிர்கொள்வது பாரிக்கு எளிதன்று. அவனது முழுமையான ஆற்றல் பறம்பின் கிழக்கு, வடகிழக்கு முனைகளில் குவிக்கப்படும். அந்த நேரத்தில் நம் இரண்டு படைகளும் ஒரேமுனையில் பறம்புக்குள் நுழைவோம்.

நமது பெருங்தாக்குதலை எதிர்கொள்ளும் ஆற்றல் பாரியிடம் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், அவனது படைவலிமை முழுவதும் அவ்விரு எதிரிகளை நோக்கி வெகுதொலைவுக்கு அப்பால் குவிக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு அவனால் வீரர்களை நம்மை நோக்கி எளிதில் நகர்த்தி வரமுடியாது. எந்தப் பச்சைமலைத்தொடர் அவனுக்கு இதுநாள் வரை அரணாக இருந்ததோ, அதே மலைத்தொடர்தான் அவன் விரைந்து வந்துசேர முடியாத பெருந்தடையாக இருக்கப்போகிறது. கிழக்கிலும் வடகிழக்கிலும் இருக்கும் தொலைவோடு ஒப்பிட்டால் சரிபாதித் தொலைவிற்கு நாம் உள்ளே போனாலே போதும், நடுமலையில் நிலைகொண்டுவிடுவோம். அதன்பிறகு காடு நமக்கான அரணாக மாறும்.”

தாக்குதலின் திட்டத்தை உதியஞ்சேரல் விளக்கியவிதம், கேட்டுக்கொண்டிருந்தவர்களை உறைய வைத்தது. உதியஞ்சேரலின் மனதுக்குள் முழுமையாகப் போர் தொடங்கியிருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83e_1517389283
ப்பறையை அடைந்து இருநாள்களாகிவிட்டன. ஆனாலும் கபிலர் இன்னும் வியப்பின் ஆழத்திற்குள்ளிருந்து மீளவில்லை. அவரால் எளிதில் நம்பக்கூடியதாக இது இல்லை. உப்பறையென்பது பச்சைமலைத் தொடரின் கருவறை என்றே சொல்லலாம். இங்கு பெரியகுளமொன்று இருக்கிறது. எக்காலத்திலும் நீர்வற்றாத குளமது. இக்குளத்தின் நீர் உப்பேறியிருக்கும். இம்மண்ணிலும் உப்புத்தன்மை மிக அதிகமாக இருக்கும்.
குளம் நோக்கி இருவரையும் அழைத்துக் கொண்டு நடந்தான் பாரி. “வடகோடியிலிருந்து தென்கோடிவரை நீண்டுகிடக்கும் இப்பச்சை மலைத்தொடர் முழுவதும் இருக்கும் விலங்குகள் ஆண்டு தவறாமல் இவ்விடத்துக்கு வந்துவிடுகின்றன. இவ்வுப்புநீரை அருந்துவது மட்டுமன்றி, இம்மண்ணையும் தின்கின்றன. ஏன் என்பதற்கான காரணம் இன்றுவரை புரியவில்லை. விலங்குகளின் நோய்க்கான மருந்தாக இம்மண் இருக்கிறதா அல்லது ஈனும் காலத்தில் இம்மண்ணின் ஆற்றல் அதற்குத் தேவைப்படுகிறதா என்று எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், பச்சைமலைத் தொடரிலிருக்கும் எல்லா விலங்குகளும் இக்குளத்துக்கு வராமல் இருக்காது. இக்குளம் பற்றிய அறிவு அவற்றின் குருதிக்குள்ளே இருக்கும்போல. தலைமுறை தலைமுறையாக அவை இவ்விடம் வந்து இத்தண்ணீரைக் குடித்து, இம்மண்ணைத் தின்றுவிட்டுச் செல்கின்றன.”

குருதிக்குள் உறைந்திருக்கும் நினைவிலிருந்து மேலெழுந்துகொண்டிருந்தது பாரியின் சொல். அவன் மேலும் சொன்னான், “ஒருவகையில் விலங்குகளின் தாய்நிலம் இதுதான். இவ்விடத்துக்கு வந்து செல்வதற்கான பாதை எல்லா விலங்குகளுக்கும் தெரிந்திருக்கிறது. இவ்விடமிருக்கும் ஊரின் பெயர் `அறல்.’ இவ்வூர்க்காரர்கள் விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்பது காலகாலத்துப் பழக்கம். பறம்பில் உழவுசெய்து வாழ்வது இவர்கள் மட்டுந்தான். இவர்கள்தாம் ஆதியிலே உழவைக் கண்டறிந்ததாகச் சொல்லுவார்கள்” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83f_1517389297
“உழவும் வேளிர்குலம் கண்டறிந்ததுதானா?’ எனக் கேட்டார் கபிலர்.

“இதற்கான விடையை நீங்கள்தாம் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று எனக்குத் தெரியும். விலங்குகளின் தாய்நிலமான இந்த உப்பறை பறம்புக்குள் இருப்பதால்தான் பதினான்கு வேளிர்குலத்திலும் பறம்பின் வேளிர்கள் முக்கியத்துவங்கொண்டவர்களாக மாறினர்.”

“அதனால்தான் வேளிர் குலச்செல்வங்கள் அனைத்தும் பறம்பிலே கொண்டுவந்து பாதுகாக்கப்படுகின்றனவா?”

“பறம்பு அனைத்தையும் பாதுகாக்கும். இக்காட்டின் செடிகொடிகளையும், உயிரினங்களையும் காக்கும் பொறுப்பைத்தான் மனிதர்களாகிய எமக்கு இயற்கை அளித்துள்ளது” சொல்லியபடி குளக்கரையில் மண்டியிட்டான் பாரி.

என்ன செய்யப்போகிறான் எனத் தெரியாத திகைப்பில் கபிலரும் காலம்பனும் அவனைப் பார்த்திருக்க, நீரருந்தும் விலங்கினைப்போலக் குனிந்து முகத்தினை நீருக்கு அருகில் கொண்டுசென்றான்.
“இக்காட்டின் எல்லா உயிர்களைப்போல இவ்வுப்பூநீர் குடித்தே எம் வேளிர்குலமும் உயிர்வாழ்கிறது. இந்நீரையும் நிலத்தையும் விலங்கினங்களையும் செடிகொடிகளையும் காத்தல் என்பது எமது உயிரினும் மேலானது” என்று அவன் கூறிய சொற்கள் நீருள் புதைந்திருக்கும் ஆதி உப்பின் மீது படிந்துகொண்டிருந்தன. பார்த்துக்கொண்டிருந்த கபிலரும் காலம்பனும் குளத்து நீரில் வாய்வைத்துக் குடித்துக்கொண்டிருக்கிறான் பாரி என நினைத்தனர்.

முகமெங்கும் நீர் வழிய நிமிர்ந்தான் பாரி. கண்திறவாமல் வான்நோக்கி நாடியை உயர்த்தினான். அவனது தொண்டைக்குழிக்குள் இருந்த உப்புநீரின் வழியே பீறிட்டு வெளிவந்தது ஓசை.

கணநேரத்தில் காட்டை உலுக்கிய ஓசையது. ஓசை வெளிப்பட்ட கணத்தில் கபிலரும் காலம்பனும் அஞ்சி அகன்றனர். எந்த வகையான ஓசையிது என்பது இருவருக்கும் பிடிபடவில்லை. விட்டுவிட்டுத் தெறித்துக்கொண்டிருந்தது ஓசை. பாரி வேறொன்றாக மாறிக்கொண்டிருப்பது போல் தெரிந்தது. திகைத்துப்போய் நின்றபொழுது காலம்பன் கணித்தான். வேட்டையைத் தொடங்கும் கணத்தில் விலங்குகளின் உள்மூக்கிலிருந்து வெளிப்படும் உறுமலோசை இது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 9:20 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83a_1517990133
ப்பறைக்குச் சென்ற மூவரும் எவ்வியூர் வந்துசேர்ந்தனர். அவர்கள் வந்தபொழுது குலநாகினிகளைத்தவிர ஊரில் யாருமில்லை. எல்லோரும் நீலன், மயிலா மணவிழாவிற்காக வேட்டுவன் பாறைக்குச் சென்றுவிட்டனர். ஒருநாள் ஓய்விற்குப்பின் மூவரின் குதிரைகளும் எவ்வியூரிலிருந்து வேட்டுவன் பாறையை நோக்கிப் புறப்பட்டன. நீலன், மயிலா மணவிழா மகிழ்வு, பயணத்தின் வேகத்தைக் கூட்டியபடியே இருந்தது.

வேட்டுவன் பாறையில் ஆட்கள் நிரம்பி வழிந்தனர். மணவிழா உற்சாகம் களைகட்டியிருந்தது. எவ்வியூர் முழுமையாக வந்துசேர்ந்திருந்தது. பல ஊர்களிலிருந்தும் ஊர்ப்பெரியவர்கள் வந்திருந்தனர். கள்ளும் கனியுமாக மணவிருந்து தொடங்கிவிட்டது. மான்தசையைச் சுட்டுக்கருக்கும் வாசம் காடெங்கும் வீசிக்கொண்டிருந்தது. வெற்றிலைகள் வகைபிரித்து வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.

புனுகு மணமும் நாகப்பூ மணமும் மணவிழாவுக்கே உரியன. புன்னைப்பூவும் பாதிரிப்பூவும் ஆலம்பனையின் ஓலைக்கொட்டானில் குவிந்துகிடக்க வந்தவர்கள் எல்லாம் மனம்மயங்கி, கனியுண்டு கள்ளருந்தினர். மான்தசையைக் கடித்திழுத்து உண்டுவிட்டு அதனைச் செமித்து முடிக்க வெற்றிலை தின்றனர். மலைமக்களின் மணவிழா என்பது எல்லையில்லாத இன்பத்தை உணரவும் உணர்த்தவுமான விழா. உணவின் வகைகளும் ஆட்டபாட்டத்தின் வகைகளும் சொல்லிமாளாது.

மலையெங்குமிருந்து சாரிசாரியாக ஆட்கள் வந்துகொண்டிருந்தனர். வெவ்வேறு வகையான இசைக்கருவிகளின் ஓசைகள் அவர்களுடன் வந்துகொண்டிருந்தன. இசைக்கப்படும் ஓசையை வைத்தே வருவது எந்த ஊர்க்காரர்கள் எனப் பெரியவர்கள் சொன்னார்கள். சிறுவர்களின் கொண்டாட்டம் தனித்திருந்தது. காலம்பனின் மூத்த மகன் கொற்றன். அவன்தான் எவ்வியூர் சிறுவர்களின் கூட்டத்துக்குத் தலைவனாக இருந்தான். அவன் எவ்வியூர் வந்த புதிதில் மற்ற சிறுவர்கள் அவனோடு பழகத் தயங்கினர். ஏனெனில் அவனது உருவ அமைப்பு அவனைச் சிறுவனென்று ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையைக் கொண்டிருந்தது. நாளடைவில் எல்லாம் சரியானது. விளையாட்டில் அவனை யாரும் வெல்ல முடியாதது மட்டுமல்ல; எவ்வியூர் சிறுவர்களுக்குத் தெரியாத புதுவிளையாட்டுகள் நிறைய அவனுக்குத் தெரிந்திருந்தன. காட்டெருமை விளையாட்டினை அவன்தான் எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தான். ஆட்டபாட்டத்திலும் இணையற்றவனாக இருந்தான். எனவே எவ்வியூர் சிறுவர்கள் எந்நேரமும் அவனுடனே இருந்தனர்.

அலவன், முடிநாகன், குறுங்கட்டி, அவுதி, மடுவன், உளியன், வண்டன் ஆகிய எல்லோரும் இப்பொழுது சிறுவர்களாவும் இல்லாமல் இளைஞர்களோடும் சேரமுடியாமல் நடுவில் நின்று விழித்துக்கொண்டிருந்தனர். இளைஞர்கள் எல்லாம் தங்களின் இணையைப்பற்றிப் பேசிச்சிரித்து மகிழ்ந்துகொண்டிருந்தனர். இவர்கள் அருகிற்போனால் சிறுவர்களோடு விளையாடச்சொல்லி விரட்டிவிடுகிறார்கள். சிறுவர்களிடம் போனால் அவர்கள் எல்லாம் கொற்றனின் தலைமையில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். யாரும் இவர்களுடன் நின்று பேசக்கூட ஆயத்தமாக இல்லை. விளையாட்டுகள் அவ்வளவு மும்முரமாகப் போய்க்கொண்டிருந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83b_1517990147
சங்கவை, சிறுமிகளின் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு தென்புறச்சரிவில் மூங்கிற்குச்சியில் நார்ப்பந்துகளைச்செருகி அடித்து விளையாடிக்கொண்டிருந்தாள். பெண்களும் பெரியவர்களும் மணவிழா வேலையில் மூழ்கிப்போயிருந்தனர். யார்யார் எங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

பொழுதுமங்கி இருள்கவியத் தொடங்கியது. ஊரெங்கும் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. மந்தையில் அமர்ந்திருந்த பெரியவர்கள் ஒவ்வொருவரிடமும் சிறுபிள்ளைகள் வந்து வெற்றிலை கொடுத்தனர். இருப்பதிலே மிகமூத்தவர் வாரிக்கையன்தான். ஆனால் அவருக்கு வெற்றிலை கொடுக்காமல் மற்றவர்களுக்காகப் பிள்ளைகள் கொடுத்துக்கொண்டிருந்தனர். கொடுத்து விடுபவர்கள் சொல்வதைத்தானே பிள்ளைகள் கேட்பர். காலையிலிருந்து இளைஞர்களை விரட்டி விரட்டி வேலைவாங்கியதால் தம்மீது கோபமாக இருக்கிறார்கள் என்று வாரிக்கையனுக்குத் தோன்றியது. ‘சரி, என்னதான் நடக்கிறது பார்ப்போம்’ என்று வாரிக்கையன் பொறுத்திருந்தார்.

எல்லோருக்கும் கொடுத்தபின் ஒரு சிறுமி வந்து வாரிக்கையனுக்குக் கொடுத்தாள். சற்றே கோபத்தோடு அதனை வாங்கினார். ஆனால் மற்றவர்களுக்குக் கொடுத்ததைவிட இருமடங்கு வெற்றிலை அதில் இருந்ததால் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. உடனடியாக வெற்றிலையை மெல்லத்தொடங்கினார்.

மேற்புறமிருந்து காற்றுவீச மந்தையை ஒட்டியிருந்த பந்தத்தீ பாம்பைப்போலச் சீறி அடங்கியது. எல்லோரும் சீற்றத்தின் ஓசையை கவனிக்க, ஒரு பெரியவர் மட்டும் காற்றோடு மிதந்து வந்த மணத்தை மோந்தபடி “இது குளவிப்பூவின் வாசமாயிற்றே இப்பக்கம் குளவிக்கொடி இருக்கிறதா என்ன?” என்று கேட்டார்.

தேக்கனுக்குத் தெரியவில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த வாரிக்கையனிடம் கேட்போம் என்று சத்தம்போட்டுக் கேட்டார். எங்கும் பேச்சுக்குரல் கேட்டதால் தேக்கனின் குரல் காதில் விழவில்லை. எழுந்து மந்தையின் முன்பக்கமாக வந்தார் வாரிக்கையன். நொங்கு தின்ற குரங்குபோல அவரின் இருபக்கத் தாடைகளும் உப்பி இருந்தன. உள்ளுக்குள் வெற்றிலையை அடைத்து வைத்திருந்தார். அருகில் வந்துநிற்கும் வாரிக்கையனிடம் குளவிப்பூ பற்றி மீண்டும் கேட்டார் தேக்கன். வெற்றிலையைப் பக்குவமாய் அணைத்துக்கொடுத்துப் பேசக்கூடியவர் வாரிக்கையன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரும் பக்குவமாய் நாவால் ஒதுக்கிப் பேசத் தொடங்கும்பொழுது திடீரென ஏதோவொன்று உச்சிமண்டைக்குள் ‘கிர்’ரென ஏறியது. என்னவென்று புரிந்துகொள்ளும்முன் பெருந்தும்மலாக வெடித்து வெளியில் வந்தது. யானையின் துதிக்கைக்குள்ளிருந்து சீறிப்பாய்வதைப் போல மந்தையிலிருந்த எல்லோரின் மீதும் வெற்றிலை எச்சில் தெறித்துச் சிதறியது. உட்கார்ந்திருப்பவர்கள் விழித்துக்கொள்வதற்குள் ஒன்று, இரண்டு, மூன்று என்று விடாமல் தும்மினார் வாரிக்கையன்.

கீழ்ப்புறமிருந்து எதிர்காற்று அடுத்தடுத்து வீசியதுபோல் இருந்தது. பலத்த காற்றோடு சேர்ந்து நீரும் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83c_1517990160வந்ததால் மந்தையை ஒட்டியிருந்த தீப்பந்தம் முழுமுற்றாக அணைந்தது. மந்தையில் ஓராள்கூட மிச்சமில்லை. நடக்கமுடியாத பெருசுகள்கூட தாவிக்குதித்து வெளியேறியதாகச் சொன்னார்கள். விடாது தும்மிய வாரிக்கையனை அவருக்கு உற்ற தோழர்கள் இருவர் பக்குவமாய் வெளியில் கூட்டிப்போனார்கள்.

மணவிழாக்கொண்டாட்டம் களைகட்டியது. கையில் துடைப்பத்தோடு மந்தைக்கு வந்த பெண்கள் வசவுச் சொல்லை வாரி இறைத்தபடி மந்தையைப் பெருக்கித் தூய்மைப்படுத்தினர். மீசைமுடியிலும் தலைமுடியிலும் ஒட்டிய வெற்றிலையெச்சிலை எப்படி நீக்குவதெனத் தெரியாமல் பெருசுகள் இங்குமங்குமாக அலைந்துகொண்டிருந்தனர்.

மணவிழாவுக்காகத் தொடர்ந்து மூன்றுநாள்கள் விருந்து நடக்கும். விலங்கின் இறைச்சியை வெட்டியெடுக்கும் இடத்திலிருந்து துர்நாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக குளவிப்பூவின் கொடிகளைக் கொண்டுவந்து அப்பக்கம் போட்டிருந்தனர். அந்த மணத்தை அறிந்துதான் குளவிப்பூ வாசம் இங்கே எப்படி என்று பெரியவர் கேட்டார். அதுதான் இவ்வளவுக்கும் காரணமானது. இப்பொழுது குளவிப்பூக்கொடியை இருவர் கைநிறைய அள்ளிவந்து மந்தையில் போட்டனர். அப்படியும் துப்பிய நாற்றம் போகவில்லை.

வாரிக்கையனை அழைத்துக்கொண்டு போன அவர் தோழர்கள் தனியே ஓரிடத்தில் அவரை உட்காரவைத்தனர். தும்மல் கொஞ்சங்கொஞ்சமாக நின்று அமைதியடைந்தார். கண்ணிலும் மூக்கிலும் நீர்கொட்டி நின்றது. “எப்படி திடீரென இவ்வளவு தும்மல் வந்தது?” எனக் கேட்டார்.

உடனிருந்த பெரியவர்கள் இருவரும் “தும்மலுக்கெல்லாமா காரணம் சொல்ல முடியும்?” என்றனர்.

வாரிக்கையன் ஏற்கவில்லை. இடுப்புத்துணியால் முகத்தை முழுவதுமாகத் துடைத்தபடி “ஏதோ நடந்திருக்கிறது!” என்றார். உடனிருந்த பெரியவர்கள் இருவரும், “இதில் என்ன நடந்திருக்கும்?” என்றனர். வாரிக்கையன் இதனை அப்படியே விட விரும்பவில்லை.

எங்கும் வாரிக்கையன் பேச்சுதான் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. “மான்கறி, மிளாக்கறி என எவ்வளவு சுவையாகச் சமைத்துப்போட்டாலும் இந்த மணவிழாவின் பேச்சு வெற்றிலையைப் பற்றித்தான்” என அவரிடமே வந்து கேலி பேசிவிட்டுப் போயினர். அதற்கெல்லாம் அவர் கவலைப்படவில்லை. என்ன நடந்திருக்கும் என்பதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தவர் இறுதியில் அதனைக் கண்டறிந்தார்.

இளசுகளை மிகவும் கடிந்துகொண்டு, ஓயாமல் வேலைவாங்கினார். நீலனின் உற்றதோழன் புங்கனை மந்தையில் வைத்து காலையில் திட்டினார். அதனால் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து வாரிக்கையனை அதே மந்தையில் வைத்து வாரிவிடத் திட்டந்தீட்டினர்.

தும்மி இலையைப் பறித்துவந்து இவருக்குக் கொடுக்கப்பட்ட வெற்றிலைக்குள் வைத்துக்கொடுத்துள்ளனர். தும்மி இலையையோ, தும்மிப்பூண்டையோ சாப்பிட்டால் உடனடியாகத் தும்மல் வரும். கட்டுப்படுத்த முடியாதபடி வந்துகொண்டே இருக்கும். அதனால்தான் வாரிக்கையன் இந்தப் பாடுபட்டுள்ளார். 

நடந்ததைக் கண்டுபிடித்த வாரிக்கையன் தன்னுடைய வேலையைக்காட்ட முடிவுசெய்தார். மந்தைப்பக்கமே போகாமல் ஊருக்குள் நுழைந்தார். பாவை விளையாட்டும் பந்து விளையாட்டும் விளையாண்டபடி சிறுவர், சிறுமியர் எங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். தாழ்வான மரக்கிளைதோறும் ஊஞ்சல்கட்டி பலரும் ஆடினர். வாரிக்கையனின் கண்கள் தேடின. வட்டாட்டத்தையும் கழங்காட்டத்தையும் தாய்மார்களின் துணையோடு குழந்தைகள் ஆடினர். அவ்விடத்தைக் கடந்து போகையில்தான் ஓங்கூர் மருத்துவன் கண்ணிற்பட்டான். அவனை சத்தம்போட்டுக் கூப்பிட்டார் வாரிக்கையன். அவன் அருகில் வந்தான்.

தனக்கு வேண்டியதைக் கேட்டார். மருத்துவர் அதிர்ச்சியடைந்தான். ‘இதை ஏன் இவர் கேட்கிறார்?’ என்பது அவருக்குப் புரியவில்லை. வாரிக்கையன் கேட்கும்பொழுது கொடுக்காமல் இருக்க முடியாது. “சரி ஏற்பாடு செய்துதருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83d_1517990178
‘இனி மந்தைப்பக்கம் போவோம்’ என நடையைக்கட்டினார்.  மந்தைவெளி இரவு நடைபெறும் ஆட்டத்துக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. வந்துள்ளதில் மணமுடித்தவர்களும் மணமுடிக்காதவர்களும் தங்கள் இணையோடு சேர்ந்து ஆடும் குரவைக்கூத்துதான் மணவிழா நிகழ்வின் உச்சம்.  இந்த ஆட்டத்தில் பங்கெடுக்கவும் இந்தக் காதற்கொண்டாட்டத்தைக் காணவுந்தான் எல்லோரும் ஆர்வமாக இருப்பர். அதற்கான தொடக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

வாரிக்கையன் கூட்டத்தின் ஓரமாகவே நடந்து மந்தையை நோக்கி வந்துகொண்டிருந்தார். இசைக்கலைஞர்கள் இரவு ஆட்டத்துக்குத் தங்களை ஆயத்தம் செய்துகொண்டிருந்தனர். பகலில் இசைத்தது முக்கியமல்ல; இரவில் இசைக்கப்போவதுதான் முக்கியம். ஏனென்றால், இது ஆணும் பெண்ணும் இருகூறாகப் பிரிந்து தங்கள் இணையோடு ஆடும் போட்டியாட்டம். தழுவித்துள்ளும் காதலுக்கு இசையே அடிப்படையாக அமையவேண்டும். நள்ளிரவு நெருங்க நெருங்க ஆட்டத்தின் வேகத்துக்கு இசைக்கலைஞன் ஈடுகொடுத்தாக வேண்டும். அதற்கான ஆயத்தங்களில் அவர்கள் தீவிரமாயினர். 

வாரிக்கையன் மந்தை முழுவதையும் சுற்றிப்பார்த்தார். கபிலர் மந்தையின் வடபுறமிருந்த மேட்டிலே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்பதை அவரால் கண்டறிய முடியாது. எனவே அவரால் ஆபத்து ஏதுமில்லை என முடிவுசெய்த வாரிக்கையன் மந்தையின் முன்புறத் திண்ணையில் தேக்கன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தார். தூக்கிவாரிப் போட்டது.

‘தேக்கனை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. எதையும் கண்டறிவதில் கெட்டிக்காரன். எனவே இவனை மந்தையை விட்டு வெளியேற்ற என்ன வழி?’ என்று சிந்தித்தார். அப்பொழுது அவரது கண்ணில் கட்டையர்கள் இருவர் தென்பட்டனர்.

ஆதிமலையின் வடகோடி அடிவாரத்தில் வாழ்பவர்கள் கட்டையர்கள். இருப்பதிலே மிகக்குள்ளமானவர்கள். ஆனால் மகாதிறமைசாலிகள். வீரத்தால் புகழ்பெற முடியாது என உணர்ந்த அவர்கள் வித்தைகளைக் கற்றுப் பெரும்புகழடைந்தனர். அவர்கள் ஊர்த்தலைவர்கள் இருவர் மட்டும் வந்துள்ளனர். பார்த்ததும் வாரிக்கையன் அவர்களைத் தனியே அழைத்து. “திகைப்பூச்சி இருக்கிறதா? எங்கிருந்தாவது பிடிக்கமுடியுமா?” எனக் கேட்டார்.

இருவரில் மூத்தவர் சொன்னார், “இருட்டிவிட்டதே, இனி எங்கு போய்த் தேடுவது?”

இளையவன் சொன்னான், “வருகிறபொழுது அருகிருந்த குளத்தில் அது கத்தும் ஓசையைக் கேட்டேன். தீப்பந்தத்தோடு இருவரை அனுப்புங்கள் பிடித்துவருகிறோம்” என்றான். பந்தத்தோடு இரண்டு இளைஞர்களை உடனனுப்பினார் வாரிக்கையன்.

வேட்டுவன் குன்றின் பின்புறச் சரிவில் சிறுகுட்டை ஒன்று இருந்தது. கோடைக்காலமாதலால் நீர் மிகக்குறைவாகவே இருந்தது. அதை நோக்கித்தான் அவர்கள் நால்வரும் போனார்கள். திகைப்பூச்சி நண்டுவலைக்குள்தான் இருக்கும். சிறுசிலந்தியைப்போல சிறிய உடலமைப்பும் நீண்ட கால்களையும்கொண்டது. பார்த்தால் சட்டெனத் தெரியாது. ஆனால் அது ஓசையைத் தெறித்துக்கொண்டேயிருக்கும். தொலைவிலிருந்தும் கேட்கலாம்.

கட்டையர்கள் குட்டையின் அருகிற்போய் நின்றார்கள். திகைப்பூச்சியின் ஓசை வருகிறதா என உற்றுக்கேட்டார்கள். ஓசையை அறிந்து அவ்விடம் போய்க் குத்தவைத்து உட்கார்ந்தனர். குறிப்பிட்ட நண்டுவலைக்குள்ளிருந்து அவ்வோசை வந்தது. பந்த வெளிச்சத்தை நன்றாகக் காண்பிக்கச் சொன்னார்கள். குளக்கரையோரம் சிறுநண்டு ஒன்று ஓடியது. அதனைப் பிடித்து முதுகோடு ஒரு நார்க்கயிற்றைக் கட்டினர். பந்தமேந்தியவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்று உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர். பிடிபட்ட நண்டினை ஓசைவந்த வலையின் அருகே விட்டனர். அது சொளவுக்குள் குடுகுடுவென ஓடியது. சிறிதுநேரத்திலே நார்க்கயிற்றை மேலே இழுத்தனர். இரண்டுமூன்று திகைப்பூச்சிகளைக் கவ்விய கால்களோடு நண்டு மேலே வந்தது. அதனைப் பக்குவமாய் எடுத்து இடுப்பிலே இருந்த பைத்துணிக்குள் போட்டு முடிச்சிட்டுக்கொண்டனர். 

நேரமாகிக்கொண்டிருந்தது. கட்டையர்களை இன்னும் காணவில்லை என்ற பதற்றத்தில் இருந்தார் வாரிக்கையன். ஓங்கூர் மருத்துவன் அவர் கேட்டதைக் கொண்டுவந்துவிட்டான். பெருமகிழ்ச்சி. உடனிருந்த இரு பெரியவர்களையும் அழைத்து அடுத்து செய்யவேண்டிய வேலையைச் சொல்லிமுடித்தார். கட்டையர்கள் இன்னும் வந்துசேரவில்லை. சற்றே பதற்றத்தோடு மந்தையில் போய் தேக்கனுக்கு அருகில் உட்கார்ந்தார் வாரிக்கையன்.

மந்தைவெளி முழுக்க ஆட்டத்தைக்காண, பெருவட்டத்தில் மக்கள் உட்கார்ந்தனர். புங்கனின் தலைமையில் இளைஞர்கள் கூட்டமாய் களத்தை நோக்கி வந்தனர். இணையர்கள் எல்லாம் களத்துக்கு வரத் தொடங்கினர். ஆட்டம் நள்ளிரவு வரை நடக்கும். நேரமாக ஆகத்தான் வேகம் கூடும். ஆண்சுற்றில் வேகங்கூடுதலாக இருக்கும், பெண்சுற்றில் குழைவு கூடுதலாக இருக்கும். இறுதிச்சுற்றில் இணையைப் பொறுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொருமாதிரி இருக்கும். தழுவியாடும் ஆட்டமாதலால் எதையும் முன்கணிக்க முடியாது.

குரவைக்கூத்து என்பது மலைமக்களின் ஆதிநடனம். ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தொற்றி ஆடுவதால் “தொற்றியாடல்” என்றும் தழுவி ஆடுவதால் “தழுவியாடல்” என்றும் இதற்குப் பெயருண்டு. இணையர்கள் எல்லாம் களத்துக்குள் நுழைந்தனர். பார்வையாளர்கள் வழக்கம்போல் ஆண், பெண் என இருகூறாகப் பிரிந்து ஆட்டத்தினை ஆதரித்து ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். முதுபெண்களும் வேறு சிலரும் மணவிழா வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தனர். மணமகள் அவளது ஊரிலிருந்து இன்னும் அழைத்துவரப் படவில்லை. எனவே மணமகன் ஆட்டத்தைக் காணக்கூடாது.

கோடை வெக்கைக்கு தாகம் கடுமையாக இருக்கும். அதுவும் ஆடுபவர்களுக்கு விடாமல் வேர்த்துக்கொட்டும். எனவே ஆட்டக் காரர்களுக்காக ஆண்கள் பக்கமும் பெண்கள் பக்கமும் தனித்தனியாகப் பழச்சாறு கலந்து வைக்கப்பட்டிருந்தது. இசைக்கலைஞர்கள் ஒருமுகப்பறையையும் இரட்டை முகமுடைய இணைமுகப்பறையையும் முழங்கத் தொடங்கினர். கூட்டத்தினரின் ஆர்ப்பரிப்பு எழுச்சிகொண்டது. இளைஞர்கள் ஒருபக்கமும் இளைஞிகள் ஒருபக்கமுமாகக் களமிறங்கினர். புங்கனின் முகத்தில் மகிழ்வின் ஒளிவீசியது.   
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83f_1517990199
மற்ற ஆட்டத்தைப்போல மெதுவாகத் தொடங்கி சீறான வேகங்கொள்ளும் ஆட்டமல்ல இது. இணையரின் வேகத்தைப் பொறுத்து சட்டென வேகங்கூடும். ஓர் இணை நெருங்கி ஆடிவிட்டால் போதும் மற்றவர்களும் நெருங்குவதற்காக ஆட்டத்தின் வேகத்தைக் கூட்டுவர். கால்களும் கைகளும் வேகங்கொள்ள பறையிசைப்பவனின் வேகம் அதற்கு முன்னே சென்றாக வேண்டும். முதற்சுற்று எவ்வளவு வேகமாக ஆடினாலும் அது தொடக்கம்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். வாரிக்கையன் கைகளால் உத்தரவுகொடுத்து, வேலையைத் தொடங்கச்சொன்னார். ஒரு பெரியவர் ஆண்கள் குடிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த பெரும் பானைக்குள் எதையோ போட்டுவிட்டு நகர்ந்து இப்பக்கம் வந்துவிட்டார்.

எல்லோரின் கவனமும் ஆட்டக்களத்தின் மீதே இருந்தது. உள்ளே போடவேண்டியதைப் போட்டாகிவிட்டது என்பது வாரிக்கையனுக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் கட்டையர்கள் வந்துசேராதது கவலையைத் தந்தது. தேக்கன் விழிப்போடிருந்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என்ற பதற்றத்தில் இருந்தார். முதற்சுற்று ஆட்டம் முடிந்தது. ஆடியவர்கள் பானைகளில் இருந்த பழச்சாற்றை அருந்தினர். 

ஆண்களின் பக்கமிருந்த பழச்சாற்றில் வாரிக்கையன் கலக்கச்சொன்னது காமஞ்சுருக்கியை. அது இச்சையைச் சட்டென வற்றிப்போகச்செய்யும். உடலை வேகமாகக் களைப்புறச்செய்து தூக்கத்துக்குக் கொண்டு செல்லும். காமஞ்சுருக்கி கலக்கப்பட்ட பழச்சாற்றை ஆண்கள் நான்கைந்து குவளை குடித்துவிட்டு அடுத்த சுற்றுக்கு ஆயத்தமாயினர்.

இரண்டாஞ்சுற்று ஆண் இறங்கி ஆடவேண்டும். இசைக்கலைஞர்கள் ஆயத்தமானார்கள். புங்கனை நடுவில் நிறுத்திக் கைகோத்து வட்டங்கொண்டது ஆண்களின் அணி. ‘நீங்கள் ஆடி வாருங்கள், பார்ப்போம்’ என்று எதிர்பார்த்தி ருந்தனர் பெண்கள். கூட்டம் பெருமாரவாரத்தைச் செய்துகொண்டிருந்தது. அப்போதுதான் கட்டையர்கள் உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்த பின்தான் வாரிக்கையன் முகத்திலே மகிழ்ச்சி வந்தது. அவர்களைக் கையசைத்து மந்தைப்பக்கமாக வரச் சொன்னார். அவர்களும் அப்பக்கமாக வந்து யாரும் அறியாத வகையில் திகைப்பூச்சி இருக்கும் சுருக்குப்பையை வாரிக்கையனின் கைகளில் ஒப்படைத்துவிட்டு நகர்ந்தனர்.

பெருமாரவாரத்தோடு தொடங்கிய இரண்டாஞ்சுற்று நேரம் செல்லச்செல்ல வேகங்கூடுவதற்கு பதில் மந்தநிலை கொள்ளத் தொடங்கியது. மந்தையில் தேக்கனுக்கு சற்று பின்னால் உட்கார்ந்திருந்த வாரிக்கையன் ஆட்டத்தைக்கண்டு அகமகிழத் தொடங்கினார். இசைக்கலைஞர்களுக்கு சற்றே குழப்பமானது. ஏன் ஆண்கள் வேகங்கொள்ள மறுக்கின்றனர் என்று சிந்தித்தபடியே இசையின் வேகத்தைக் கூட்ட முயன்றனர்.

தேக்கனுக்குப் பின்னால் இருந்த வாரிக்கையன் சுருக்குப்பையைத் தேக்கனின் முதுக்குப் பின்புறமாக வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83e_1517990210வைத்து அவிழ்த்தார். உள்ளே இருந்த திகைப்பூச்சி தேக்கனின் முதுக்குப்புறமாக மேலே ஏறியது. கண்ணுக்குத்தெரியாத அளவுள்ள அதன் கால்கள் மேலேறுவதை மனிதனால் உணரமுடியாது. மேலேறிய அது கடித்துவிட்டு சிறிதுநேரத்தில் செத்துப்போகும். திகைப் பூச்சியால் கடிக்கப்பட்டவர்கள் சிறிதுநேரத்திலேயே திகைத்துப்போய்விடுவர். அவரால் வழக்கம்போல் செயலாற்ற முடியாது. எண்ணியதைப் பேசமுடியாது, மறுமொழி சொல்லமுடியாது. ஒருவித மந்தநிலையில் திகைப்பு மாறாமல் அவ்வப்பொழுது சிரித்தபடி தலையாட்டிக் கொண்டிருப்பர். வேறெதுவும் செய்யமாட்டார்கள். முதுகில் கடித்தவுடன் திகைப்பூச்சி சரிந்து விழுந்ததை உற்றுப்பார்த்த வாரிக்கையன் இனி சிக்கலேதுமில்லை என்ற முடிவுக்குப் போனார்.

கூட்டத்தின் ஆரவாரம் பலமடங்கு அதிகரித்தது. அதற்குக் காரணம் இளைஞர்களிடம் வேகம் போதாததால் சுற்றியுள்ள ஆண்கள் பெருங்குரலெடுத்துக் கத்தி அவர்களை உற்சாகப்படுத்த முயன்றனர். அப்பொழுது இன்னொரு பெரியவருக்குக் கையசைத்து உத்தரவு கொடுத்தார் வாரிக்கையன். அப்பெரியவர் நேராக பெண்களுக்கான பழச்சாறு கலக்கப்பட்டுள்ள பானையில் எதனையோ போட்டுவிட்டு ஒதுங்கி வந்தார். ஆண்களின் ஆட்டத்தைக்காணும் யாருக்கும் கோபம் வரும், அந்த அளவு மோசமாக ஆடிக்கொண்டிருந்தனர். இசைக்கலைஞர்கள் முடிந்த அளவு வேகத்தைக் கூட்டிப் பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை. வழக்கமாக ஆண்களின் சுற்றில் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெண்கள் சிலர் தள்ளாடிவிழுவதும் உட்கார்ந்துவிடுவதும் நடக்கும். இன்று அது எதுவும் நடக்கவில்லை. இவ்வளவு மெதுவாக எவ்வளவு நேரந்தான் ஆடுவது என்று சலித்துப்போய் நிறுத்தினான் இசைக்கலைஞன். வழக்கமாக இசையை எப்பொழுது நிறுத்தினாலும் “நிறுத்தாதே!” என்றுதான் குரல் வரும். ஆனால், இன்று விட்டால்போதும் என்ற நிலையில்தான் ஆடும் இளைஞர்கள் இருந்தனர்.

இளைஞர்கள் ஏன் இவ்வளவு களைப்பாக ஆடுகின்றனர் என்பது யாருக்கும் விளங்கவில்லை. இளைஞிகளுமே சற்று குழப்பத்துக்கு ஆளானார்கள். ‘என்னாச்சு இவனுகளுக்கு? வழக்கமாக இருக்கும் வேகத்தில் பாதிகூட இல்லையே!’ என்று சிந்தித்தபடியே இரண்டாஞ்சுற்றினை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

ஆடுபவர்கள் மீண்டும் பழச்சாறு குடிக்கப்போனார்கள். இளைஞர்களின் பக்கம் பெருங்கூட்டம். “நல்லா குடிச்சிட்டு தெம்பா ஆடுங்கப்பா” என ஆளாளுக்கு முகந்து கொடுத்தனர். சிலர் புங்கனை வசைபாடத் தொடங்கினர். இளைஞிகளின் பக்கமும் நிறைய முகந்து குடித்தனர். இசைக்கலைஞன் மறுசுற்றுக்கு ஆயத்தமானான். ஆனால் நடுத்தர ஆண்கள் சிலர் தலையிட்டு, “கொஞ்சம் நேரமாகட்டும்பா, ஆடுறவங்க மிகக் களைப்பாக இருக்காங்க” என்று சொல்லி ஆட்டத்தைக்  காலந்தாழ்த்தினர். வாரிக்கையன் இதனைப் பார்த்து அகமகிழ்ந்துகொண்டிருந்தார். அவரின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தேக்கன் அவ்வப்பொழுது சிரிக்கத் தொடங்கினார்.

``நல்லா ஆடுங்கடா! தேக்கன் உங்களப் பாத்து சிரிச்சுக்கிட்டு இருக்காரு” என்று சொல்லி மூன்றாஞ்சுற்றுக்கு இளைஞர்களை இறக்கினர் நடுத்தர ஆண்கள். இளைஞர்களைத் தொடர்ந்து இளைஞிகள் உள்ளிறங்கினர். இச்சுற்று பெண்கள் ஏறிப்பாடி ஆடும் சுற்று. களைகட்டும் கூத்து. காண்போரை ஆட்டத்தின் வழியே கிறக்கத்தை உருவாக்குவார்கள் இணையர்கள். இன்று அதே வேகத்தோடு அல்ல, வழக்கத்தைவிடப் பலமடங்கு வேகத்தோடு உள்ளிறங்கியது இளைஞிகள் கூட்டம். ஏனென்றால், அவர்கள் குடித்த பழச்சாற்றிலே வாரிக்கையன் கலக்கச்சொன்னது காமமூட்டியை. அதனை நீரில் கலந்து ஒரு குவளை குடித்தாலே காதலுணர்ச்சி உச்சத்தை அடைந்து படாத பாடுபடுத்தும். முதற்சுற்று ஆடிய களைப்பில் இளைஞிகள் ஒவ்வொருவரும் மூன்று நான்கு குவளையைக் குடித்துவிட்டு உள்ளே இறங்கியுள்ளனர். எதிர்ப்புறமோ இளைஞர்கள் முழுவதும் காமஞ்சுருக்கியை எண்ணற்ற குவளை குடித்துவிட்டு வந்து நின்றனர்.

ஆட்டம் தொடங்கியது. பறம்பு நாட்டில் எந்த ஒரு மணவிழாவிலும் நடக்காத கூத்தாக இந்தக் குரவைக்கூத்து நிகழ்ந்தது.  இளைஞிகள் தங்கள் இணைமீது தீராக்காதலோடு களமாடினர். இளைஞர்களின் பாடு பெரும்பாடானது. எவனும் எவளுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. துவளுங்கொடியாக ஆணும் நிமிரும் சுடராகப் பெண்ணும் இருந்தனர். “என்னடா ஆச்சு உனக்கு?” என்று ஒவ்வொருத்தியும் தங்கள் இணையின் காதிலே கடிந்து கேட்டனர். என்ன கேட்டும் எதுவும் நடக்கவில்லை. இசைஞன் அடுத்தடுத்து வேகத்தைக் கூட்டிக்கொண்டிருந்தான்.

கைகோத்து, நடுவிரல் பற்றி, அணிவிரல் சேர்த்து ஆடவேண்டிய ஆட்டத்தை ஆட  எவனுக்கும் தெம்பில்லை. ஆனால், எவளும் வேகத்தைக் குறைத்துக்கொள்ள முயலவில்லை. காதலையும் காமத்தையும் உயிர்கொல்லும் உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் தெய்வமகளாம் `அணங்கு’ இறங்கி ஆடும் கடைசிக்கட்டம் தொடங்கியது. ஆண்களில் எவனாலும் களத்தில் நின்றாட முடியவில்லை. புங்கன்தான் முதலில் சரிந்தான். பெண்களின் ஆர்ப்பரிப்பு விண்ணைத் தொட்டது. பார்த்துக்கொண்டிருந்த ஆண்கள் தலைகவிழ்ந்தனர். மந்தையில் உட்கார்ந்து விண்ணதிரச் சிரித்துக்கொண்டிருந்தார் வாரிக்கையன். தேக்கனோ அவ்வப்பொழுது சிரித்துக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் இறுதிக்கட்டம் வந்தபொழுது ஈடுகொடுக்க முடியாத தம் இணையை, தோளிலே தூக்கி ஆடினர் பெண்கள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83g_1517990229
“இது மயிலாவின் மணவிழா. அப்படித்தான் இருக்கும். தூக்கிச் சுத்துங்கடி இவனுகள” என்று, பார்த்திருந்த பெண்கள் கத்த, சுற்றிய சுற்றில் சுருண்டு வதங்கினர் இளைஞர்கள்.

ஆட்டம் முடிந்ததும் விருந்து தொடங்கியது. எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தபொழுது, தொலைவில் இருளில் குதிரைகள் வந்து நின்றன. விருந்து ஏற்பாட்டிலிருந்த வேட்டூர் பழையன் குதிரையின் குளம்படி கேட்டுத் திரும்பினார்.

வந்திறங்கிய குதிரை வீரர்களை நோக்கி இருளுக்குள் நடந்து போனார் வேட்டூர் பழையன். அவர்கள் கீழ்த்திசை எல்லைக்காவலர்கள். வேட்டூர் பழையனை வணங்கிவிட்டுச் சொன்னார்கள், “நெடுங்குன்றின் அடிவாரம் பாண்டிய நாட்டு வீரர்கள் படை தங்குவதற்கான பாடிவீட்டினை அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


Sponsored content

PostSponsored content



Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக