புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
4 Posts - 4%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
2 Posts - 2%
Pradepa
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
18 Posts - 2%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
5 Posts - 0%
Rutu
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 6:59 pm

பூட்டப்பட்ட இரும்புச்சங்கிலிகளைக் கழற்றாமலேயே திரையர்களை வண்டியில் ஏற்றினர். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. வாக்குறுதி அளித்த கருங்கைவாணனை அதன்பின் அவர்களால் காணமுடியவில்லை. கோட்டைத்தளபதி சாகலைவன் மட்டும் வந்தான். சிறிதுநேரத்தில் தலைமை அமைச்சர் முசுகுந்தர் வந்தார்.

உட்கார்ந்திருந்த அனைவரும் எழுப்பி நிற்கவைக்கப்பட்டனர். இருவரால் எழுந்து நிற்க முடியவில்லை. முசுகுந்தர் சொன்னார், “உங்கள் குடும்பங்கள் அனைத்தையும் விடுதலை செய்யுமாறு பேரரசர் உத்தரவிட்டுள்ளார். உங்களை யவனர்களுக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.”
அனைவரும் உறைந்து நின்றனர். ‘கொடுத்த வாக்கினை மதிக்கத் தவறும் மனிதர்களிடம் பேச என்ன இருக்கிறது’ என்று காலம்பனுக்குத் தோன்றியது. “எழுந்திருக்க முடியாமல் காயங்களோடு கிடக்கும் இருவரை யவனர்களுக்குப் பரிசளிப்பது இழிவு. அவர்களை விடுதலைசெய்யப்படுபவர்களோடு சேர்த்து அனுப்பிவிடுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார் முசுகுந்தர்.

அந்த இருவரும் தனியே பிரிக்கப்பட்டனர். “விடுதலையானவர்களைப் பறம்புமலைக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள். எங்களைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்” என அவர்களிடம் காலம்பன் செய்தி சொல்லியனுப்பினான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 65p1
வண்டிகள் வைகைக்கரையோரமாகவே கீழ்க்கடல் நோக்கிப் பயணப்பட்டன. நீலனின் கண்கள் வைகையைப் பார்த்தபடி வந்தன. ஆற்றில்தழும்பி ஓடியது நீர். இருகரைகளிலும் நாணற்புதர் மண்டிக்கிடந்தது. வண்டிச்சக்கரங்கள் மண்ணில் புதைந்து உருண்டன. நெடும்பயணமாதலால் திரையர்களை நெருக்கி அடைக்காமல், அதிகப்படியான வண்டிகளில் அழைத்துச் சென்றனர். காளைகள் உன்னி இழுத்தன.

கட்டப்பட்ட இரும்புச்சங்கிலிகளைப் பார்த்தபடியே இருந்தான் காலம்பன். அடுத்து என்ன நடக்கப்போகிறது, தான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி எந்தத் திட்டமிடலும் அவன் மனதில் இல்லை. தங்களது குலம் விடுவிக்கப்பட்டு பறம்புமலைக்குச் செல்லப் போவது மனதுக்குள் அளவற்ற மகிழ்வை ஏற்படுத்தியது. குலத்தின் தலைவனாக எனது வேலை முடிந்தது, இனி அவர்களைப் பாரி பாதுகாப்பான் என்ற மகிழ்வு உடலெங்கும் பரவியது. பாரம் இறக்கப்பட்டவனாய் அயர்ந்து உட்கார்ந்திருந்தான் காலம்பன்.

நீலனும் பதற்றம் ஏதுமின்றியே இருந்தான். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வண்டியில் இருந்து வைகையைப் பார்த்தபடியே வந்தான். அது அவனுக்கு எவ்வளவோ சொன்னது. கரைபுரளும் அதன் சிற்றலைகள் அவனை அழைத்துக்கொண்டே இருந்தன. சட்டென ஒரு கணம் மொத்த வைகையும் நீண்டு நகரும் செம்மூதாயாய்க் காட்சிதந்தது. பொங்கி நகரும் குருதிகண்டு திடுக்கிட்டு அமர்ந்தான்.

அவர்களின் பயணம் அறுபட்ட காட்சிகளுடனும் குருதிபடிந்த கனவுகளுடனும் தொடர்ந்துகொண்டிருந்தது. எல்லோரின் அமைதிக்குள்ளிருந்தும் பீறிட்டுத் தெறிக்கக் காத்திருந்தது சினம்.

வைகை கடலில் கலக்கும் இடத்தில் இருப்பது வைப்பூர்த் துறைமுகம். வைகை கடல்புகும் ஊராதலால் இப்பெயர் உருவாயிற்று. அதன் அருகில்தான் அருகன்குடி என்ற சிற்றூரும் இருக்கிறது. பாண்டிய நாட்டின் முதற்பெரும் துறைமுகமாக வைப்பூர்த் துறைமுகத்தையே சொல்லலாம். காரணம் அதன் அமைவிடம்.

வைகை கடலில் முட்டும் அதன் நெற்றிப்பகுதி வில்போல் வளைந்தது. வளைந்த அந்தக்கரை சற்றே கடினமான மண்ணடுக்குகளைக் கொண்டது. வந்து சேரும் கப்பல் கடலிலிருந்து வைகைக்குள் நுழைந்து ஆற்றின் உள்ளடுக்கினில் இருக்கும் வைப்பூர்த் துறைமுகத்தை அடையும். கடலலைகள் வளைவுகள் கடந்து உள்ளேறிவராது. பெருங்காற்றும் கடற்கொந்தளிப்புங்கூட வைப்பூர்த் துறைமுகத்தைச் சேதப் படுத்தியதில்லை. இதன் பாதுகாப்பிற்கு வேறு எந்தத் துறைமுகத்தையும் இணைசொல்ல முடியாது.

வைப்பூர்த் துறைமுகம் பொருள்களை ஏற்றி இறக்கவும் கப்பல்கள் வந்து தங்கிச்செல்லவும் இயற்கையே அரணமைத்திருந்ததால்தான் யவனர்கள் எங்கும் இல்லாத அளவு பெருங்கோட்டையை இங்கு கட்டியுள்ளனர். தங்களுடைய பொருள்களைக் கொண்டு வந்து இறக்கவும் ஏற்றவும் பொருத்தமான ஏற்பாட்டினை நீண்டகாலத்துக்கு முன்பே செய்துவிட்டனர். பாண்டிய அரசும் வணிகப் பொருளினைப் பாதுகாக்கவும் வரி வாங்கவும் வசதியாகக் கோட்டை எழுப்பியுள்ளது.

வைப்பூர்த் துறைமுகத்தில் இருபெரும் கோட்டைகள் நின்றுகொண்டிருக்கின்றன. இத்திருமணத்துக்காக யவனப் பெருவணிகன் வெஸ்பானியன் தலைமையில் பலரும் அணிதிரண்டு வந்தனர். அரசபிரதிநிதிகள், வணிகர்கள், துறைமுகப் பொறுப்பாளர்கள், எண்ணற்றோர்களின் கூட்டமது. குறிப்பாக கடல்பயணத்தின் சாகசத்தளபதி ஹிப்பாலஸ் இத்திருமணத்துக்கு வந்ததுதான் வணிகர்கள் மத்தியில் பெரும்பேச்சாக இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 65p2
வந்திறங்கும்பொழுது பொருநையாற்றின் கழிமுகத்திலுள்ள கொற்கைத் துறையில் இறங்கி மதுரைக்கு வந்தார்கள். புறப்படும்பொழுது வைகையின் கழிமுகத்திலுள்ள வைப்பூர்த் துறையிலிருந்து பயணப்படத் திட்டமிட்டிருந்தனர். வளங்கொழிக்கும் பாண்டிய நாட்டின் இருபெரும் துறைமுகங் களையும் அவற்றின் உள்வாயில்களையும் நேரில் பார்த்தறியும் வாய்ப்பாக இதை அமைத்துக் கொண்டனர்.

திருமணம் முடிந்து மதுரை விட்டுப் புறப்பட்டவர்கள் வைகைக்கரையின் வழியே பயணப்பட்டு வைப்பூர்த் துறைமுகக் கோட்டையை அடைந்தனர். அங்கு அவர்களுக்குப் பெருவிருந்தும் வழியனுப்பும் நிகழ்வும் ஏற்பாடாயிருந்தன.

பேரரசின் சார்பில் இவ்வழியனுப்பும் நிகழ்வுக்கு தலைமையமைச்சர் முசுகுந்தர் வருகை தரவிருந்தார். அவர் வருவதற்கு முன் இரண்டாம்நிலைத் தளபதிகள் வந்துசேர்ந்தனர். இத்திருமணவிழாவின் பெருமகிழ்வுக்குக் காரணமாயிருந்தது வெங்கல்நாடு. அதைப் பாராட்டி மரியாதை செய்யும் பொருட்டு இளமாறனை இரண்டாம்நிலைத் தளபதிகளில் ஒருவனாக பேரரசர் நியமித்தார். மையூர்கிழார் அளவற்ற மகிழ்வில் திளைத்தார். மிக இளம்வயதில்  பேரரசரின் நம்பிகையைப் பெற்று இவ்விடத்தை அடைவது எளிதல்ல. மையூர்கிழார் தனது வாழ்வு முழுக்க பாண்டிய நாட்டின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தியவர். ஆனாலும் அரண்மனைக்குள் நுழையும்பொழுது ஆயுதம் வைத்துக்கொள்ளும் தகுதி இன்றளவும் அவருக்கு வழங்கப்படவில்லை. இக்கவலையை அவர் மகன் அகற்றிவிட்டான். இனி உறைவாளோடு அவன் அரண்மனையில் காட்சியளிப்பதை அவர் பார்க்கலாம். ஆனால், அரசரின் அவையில் வாளோடு செல்லும் உரிமை இளவரசன் உள்ளிட்ட யாருக்கும் இல்லை.

பாண்டிய நாட்டின் சட்டவிதிகள் மிகக்கடுமை யானவை. பட்டத்து யானையின் மீது போர்த்தப்படும் துணியின் வண்ணம் முதல் படுக்கை அறையில் நாள்களுக்குத் தகுந்தவாறு மலரவேண்டிய நறுமணப்புகையின் வாசம் வரை எல்லாவற்றிற்கும் விதிசெய்யப்பட்டுள்ளது. விதியால் வார்க்கப்பட்டதுதான் அரசாட்சி. அதன் உறுதிக்கு மட்டுமல்ல, இரக்கமற்ற குணத்திற்கும் அதுவே அடிப்படை.

விதிகளின் படிக்கட்டுகளில் கால்பதிக்கத் தொடங்கியவனை அதுவே அடுத்தடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். அதன்பிறகு அவனுக்குத் தகுந்ததாக விதி தன்னை மாற்றிக்கொள்ளும். இணைமீன்கள் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டு அரசமுத்திரை யுடனான கவசத்தை இளமாறன் முன்மார்பில் அணிந்ததைப் பார்த்தபொழுது மையூர்கிழாரின் கண்கள் மகிழ்வில் கரைந்தன. 

அவர் வெங்கல்நாட்டுக்குப் புறப்படும் நாளன்றுதான் அவன் வைப்பூர்க்கோட்டைக்குத் தனது ஆலாவின் மேலேறிப் பயணப்படத் தொடங்கினான். உடன்வந்த வீரர்களின் குதிரைகளால் ஆலாவின் வேகத்துக்குச் சிறிதும் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்களின் புகழ்மாலைகள் முழுவதையும் ஆலாவே சூடிக்கொண்டது.

வைப்பூர்க் கோட்டையை இளமாறன் அடைந்தபொழுது திரையர்கள் அங்கு வந்துசேர்ந்து ஒரு வாரமாகியிருந்தது. முன்புபோல் இல்லாமல் திரையர்களுக்கு நல்ல உணவு கொடுக்கப்பட்டது. யவனர்களுக்குப் பரிசாகக் கொடுக்கும்பொழுது அவர்களின் காயங்கள் ஆறி, தெளிச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக.

கோட்டையின் இடதுமூலையில் இருந்த அறையில் தனித்தனிச் சங்கிலிகளால் அவர்கள் கட்டப்பட்டிருந்தனர். கப்பலிலிருந்து இறக்கிய பொருள்கள் எங்கும் குவிக்கப்பட்டிருந்தன.  இளமாறன் கோட்டைக்கு வந்ததிலிருந்து அவனைப் பற்றிய பேச்சைவிட அவனது குதிரையைப் பற்றித்தான் பாண்டிய வீரர்கள் அதிகம் பேசினர். குதிரையின் பெயர் ஆலா என்று அறிந்ததிலிருந்து அதன் ஒவ்வோர் அசைவையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான் நீலன்.

சிலநாள்களுக்குப்பின் படைவீரர்களின் பெரும் அணிவகுப்பொன்று கோட்டைக்குள் வந்தது. தலைமை அமைச்சர் முசுகுந்தர் வரும் செய்தி தெரிவிக்கப்பட்டது. ஆனால், வந்தது அவர் மட்டுமல்லர்; பாண்டியப் பேரரசனின் பெருங்செல்வமாகக் கருதப்படும் இருபது தேவாங்குகளும் உடன் கொண்டுவரப்பட்டன.

சூல்கடல் முதுவனுக்குக் கொடுக்கப்பட்ட இருபது தேவாங்குகள் போக மீதமுள்ள இருபதினை நாம் வைத்துக்கொள்வோம் என பேரரசர் முடிவுசெய்தார். அவற்றை எங்கு வைத்திருப்பது என ஆலோசித்தபொழுது வைப்பூர்க் கோட்டையில் வைப்பதே பொருத்தம். கடல்காற்றும் கடல் உணவும் அவற்றிற்குப் பழக்கப்படவேண்டும் என்று அவையோர் கூறினர். எனவே மிகுந்த பாதுகாப்போடு அவை இங்கு எடுத்துவரப்பட்டன.

அவற்றிற்கென வடிவமைக்கப்பட்ட கலைவேலைப்பாடுகளுடனான கூண்டுகளில் அடைக்கப்பட்டு கோட்டைக்குள் வைக்கப்பட்டன. எண்ணற்ற வீரர்கள் உடன் வந்திருந்ததால் முதலில் அவற்றைக் கவனிக்க முடியவில்லை. அன்று மாலைதான் அந்தக் கூண்டுகளுக்குள் அவை இருப்பது தெரியவந்தது. தொலைவிலிருந்து அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த காலம்பனின் முகத்தில் தன்னையும் அறியாமல் புன்னகை பூத்தது. ‘உங்களைத்தேடி சிறுபடையோடு நான் வந்தேன், என்னைத்தேடி பெரும்படையோடு நீங்கள் வந்திருக்கிறீர்கள்” என மனதில் எண்ணிக் கொண்டே நீலனைப் பார்த்தான். நீலனோ அவற்றை நேர்கொண்டு பார்க்கமுடியாமல் தலைகவிழ்ந்து அவற்றிடம் மன்னிப்பு கோரிக்கொண்டிருந்தான். மலையுச்சியிலிருந்து வான்பார்த்துக் கொண்டிருந்த அவை கடலின் விளிம்புக்கு வந்து சேர்ந்ததற்கு ஏதோவொரு வகையில் தானும் காரணமாகிவிட்டோம் என்ற குற்றவுணர்வின் வழியே கலங்கிப்போய் இருந்தன அவன் கண்கள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 65p3
இரவு யவனர்களின் கோட்டையில் பெரும்விருந்து நடக்கவுள்ளது. அதில் பங்கெடுத்து, மணவிழாவுக்காக வந்தவர்களுக்கு நன்றிசொல்லி வழியனுப்பத்தான் முசுகுந்தர் வந்திருக்கிறார். நாளை காலைப்பொழுதில் யவனக்கப்பல்கள் புறப்படவுள்ளன. எனவே, இன்றிரவே திரையர்களை அவர்களிடம் அளிக்க ஏற்பாடாகிக்கொண்டிருந்தது.

யவனர்களை நேரில் சந்தித்துத் தனது நன்றியைத் தெரிவிக்க சூல்கடல் முதுவனும் வந்து சேர்ந்துள்ளார். எல்லோரும் இரவு சந்திக்கவுள்ளனர். அதற்கு முன் சூல்கடல்முதுவன் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருந்தன.

தனக்கு வழங்கப்பட்ட இருபது தேவாங்கு களைப் பத்துக் கூண்டுகளில் கொண்டுசெல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடற்பயணத்துக்கு ஏற்ப அக்கூண்டுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மிகமுக்கியமாக எந்தெந்தக் கப்பல்களில் இவற்றை அனுப்பிவைப்பது என்பதை முடிவு செய்வதில்தான் சூல்கடல் முதுவனுக்குப் பெரும்நெருக்கடி இருந்தது.

அவர் வணிக உலகின் நியதியை அறிந்தவர். எந்தக் கணத்திலும் அது என்னவாக மாறும் என்பதைத் தெளிவாக உணர்ந்தவர். அதுவும் திசைகாட்டும் ஒரு விலங்கு என்பது கடற்பயணத்துக்கு அச்சாணிபோன்றது. இதனை அறிந்து, பயன்படுத்திப் பழக்கியபின் உறுதியாகத் தன்னிடம் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். எனவே, தன்னிடம் அளவற்ற நம்பிக்கையோடு இருப்பவர்களிடம் மட்டுமே கொடுக்கவேண்டும். அதே நேரத்தில் எல்லாத் திசைகளிலும் செல்லும் கப்பல்களில் இவ்விலங்குகள் சென்றாக வேண்டும். சிறிய கலங்கள், பெரிய கலங்கள், நாவாய்கள், சீறிப்பாயும் தன்மைகொண்ட வங்கம் எனப் பலவைக்கப்பட்ட கப்பல்களில் அவற்றை அனுப்பவேண்டும். அப்பொழுதுதான் இதனை முழுமையாக நம்மால் கணிக்க முடியும். மிகத்தொலைவில் உள்ள தீவுகளுக்குப் பெருங்கலங்களே போகின்றன. ஆனால், பெருங்கலங்களை உடைய  வணிகர்கள் ஏதோவொரு வகையில் தன்னுடைய போட்டி யாளராக வரும் வாய்ப்பினைக் கொண்டவர்களாக உள்ளனர். எந்த நாட்டின் மன்னன் எந்த வணிகனை எப்பொழுது ஆதரிப்பான் என்பதனைக் கணிக்க இயலாது. அரசியல்நிலை எப்பொழுதும் கடலைவிடக் கொந்தளிப்பு மிக்கது, வணிகத்தைவிடச் சூழ்ச்சி நிறைந்தது. எனவே, எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சூல்கடல் முதுவன் திட்டமிட்டான்.

இறலித்தீவுக்கும், தெங்கின்தீவுக்கும் செல்லவிருந்த பெரிய கலங்களில் தேவாங்கின் கூண்டினை ஏற்றினான். குசையின் தீவுக்குப் பயணம் செல்ல இது பொருத்தமான காலமல்ல. அக்கடலில் அவ்வப்பொழுது வீசிச்செல்லும் காற்று கலங்களை எளிதில் திசைமாற்றம் செய்துவிடும். அதன்பின் கலங்களால் நிலைதிரும்ப முடியாது. ஆனால், இப்பொழுது தேவாங்கு இருப்பதால் அக்கவலையில்லை. காற்றால் திசை மாறினாலும் மீண்டும் திசை அறிந்துகொள்வது எளிது. எனவே நம்பிக்கையோடு பயணம் செல்லலாம் என்று சொல்லி, தன் தம்பியை அதற்குப் பொறுப்பாக்கி னான். இருப்பதிலே பெரிய வங்கத்தை எடுத்துக்கொண்டு போ என்றும் அனுமதி கொடுத்தான்.

வணிகம் எவ்வளவு சூழ்ச்சி நிறைந்தது என்பதை குலசேகரபாண்டியன் சூல்கடல் முதுவனை வைத்து சோதிப்பதும், சூல்கடல்முதுவன் தன் தம்பியை வைத்து சோதிப்பதுமாக நடந்தேறியது.

தான் பயணப்படவுள்ள நாவலந்தீவுக்கு திசையறிய எந்த வித உதவியும் தேவையில்லை. எல்லாக்காலத்திலும் கலங்கள் சென்று திரும்பும் எளிய வழிப்பயணம் அது. ஆனால், அப்பயணத்துக்கு நான்கு தேவாங்கினை எடுத்து வைத்துக்கொண்டான் சூல்கடல் முதுவன்.

யவனர்களுக்காக இன்றிரவு நடைபெறவுள்ள விருந்தில் வணிகர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்வு முடிந்தபின் நாளை காலையிலிருந்து கலங்கள் எல்லாம் வைப்பூர்த் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வெளி யேறவுள்ளன. சூல்கடல் முதுவன் விருந்தில் கவனங்கொண்டிருந்த அதேநேரத்தில் இன்னொன்றிலும் மிகக்கவனமாக இருந்தான்.

தேவாங்கினை எடுத்துச்செல்லத் தேர்வு செய்யப்பட்ட கப்பல்கள் இன்று நள்ளிரவிலேயே புறப்படுவதற்கான ஏற்பாட்டினையும் செய்திருந்தான். பேரரசர் விதித்த கட்டளைகள் மிகமுக்கியமானவையாக இருந்தன. முதற்கட்டப் பயணம் முடியும் வரை இவை பிற வணிகர்களுக்குத் தெரியாமலிருப்பது முக்கியம் என்று கூறியிருந்தார்.

இரவு நெருங்கியது. வைப்பூர்த் துறைமுகம் கணக்கில்லாத கலங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. யவனர்களின் நாவாய்கள் நாளை புறப்படுவதற்காக ஏற்பாடாகிக் கொண்டிருந்தன. பெரும்வடிவத்தில் அசைந்தாடும் யவன நாவாய்களைப் பார்ப்பதே பேரழகு. துறையின் கரையில் பாதித்தொலைவுக்கு மேல் யவன நாவாய்களே நின்றிருந்தன. அவற்றின் அகலமும் உயரமும் கரையிலிருந்து பார்ப்பவரைத் திகைக்கச் செய்யக்கூடியது. நெடுந்தொலைவு செல்லவேண்டிய பயணமாதலால், இரண்டு, மூன்று பாய்மரங்களைக் கொண்டதாக இருக்கும்.

கப்பலின் வலப்புறம் துறைமுகப்பகுதி. அதாவது துறைமுக மேடையை ஒட்டி நிறுத்த வேண்டிய பகுதி, இடப்புறம் மீகான் மேலேறி நின்று பார்க்கக்கூடிய கூம்பு வடிவ மேடை அமைக்கப்பட்டுள்ள பகுதி. பெருங்கப்பல்களில் இம்மேடையின் உயரம் பாய்மரத்தின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும். அது சிறுகலங்களில் ஏற்றப்படும் பாய்மரத்தின் உயரத்துக்கு நிகரானது. கலங்களின் முன்புறம் இருக்கும் சுக்கானின் மேடையும் அதேபோன்ற தன்மையுடையதுதான். பாய்மரத்தின் மேலிருந்து எங்கும் இழுபட்டு விடைத்திருக்கும் கயிறுகள் ஒரு கோணத்தில் மீட்டத்தயாராக இருக்கும் யாழ்நரம்புகள் போன்றே காட்சியளிக்கும். கடலும் காற்றும் மீட்டியபடி மிதக்குமொரு பயணம் தொடங்க ஏற்பாடாகிக்கொண்டிருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 65p4
யவனக்கப்பல்களைத் தொடர்ந்து சாத்துக்களின் கலங்கள் அதாவது தமிழ்பேசும் வணிகர்களின் எண்ணற்ற கலங்கள் நின்றுகொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையுடையவை. கலங்களின் முகப்பில் பொறிக்கப்பட்ட வடிவத்தைவைத்து அவற்றிற்கான பெயர்கள் அமைந்திருந்தன. யானை, சிங்கம், குதிரை போன்ற எண்ணற்ற வடிவங்களைத் தாங்கியதாக அவற்றின் முகப்புகள் இருந்தன.

வனப்பேறிய இவ்விலங்குகள் எல்லாம் சீறும் கடலலைக்குள் தலைநுழைத்து மேலெழக் காத்திருந்தன. வைப்பூர்த் துறைமுகத்தில் இவ்வளவு கலங்கள் வந்து நிற்பது இதுவரை யாரும் காணாத காட்சி. அதுவும் அவையெல்லாம் அடுத்த ஓரிரு நாள்களில் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. கலங்கள் புறப்படப்போவதாக இருந்தால் அதற்கு முன் செய்யவேண்டிய வேலைகள் எண்ணற்றன.

அருகிலிருக்கும் அருகன்குடி மக்கள்தாம் இப்பணிகளை முழுமையும் செய்பவர்கள். ஆனால், ஒரே நேரத்தில் இவ்வளவு கலங்களை அவர்கள் யாரும் பார்த்ததில்லை. பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக அது இருந்தது. கலங்களைச் சரிசெய்யும் திறன்வாய்ந்த தச்சர்களின் பணிகள் முடிந்தபின் பொருள்களை ஏற்றும்பணி தொடங்கியது. கலங்களின் தன்மைக்கு ஏற்ப ஓரிரு நாள்களோ, வாரமோகூட பொருள்கள் ஏற்றப்படும். கரையெங்கும் மனிதக்கூட்டமும் வண்டியிழுக்கும் விலங்குகளும் நெரிசலில் சிக்கித் திணறின.

கரையைவிட நெரிசல் அதிகமான பகுதியாக நீர்ப்பகுதி இருந்தது. கலங்களைச் சுற்றிச் சிறு சிறு தோணிகளும் ஓடங்களும் திறளிமரப் படகுகளும் மொய்த்துக்கிடந்தன. பட்டத்து யானைக்கு நடக்கும் ஒப்பனையைப் போன்றதுதான் பயணப்படும் முன் கலங்களை ஆயத்தம் செய்வது.
பணிசெய்ய அருகன்குடியிலிருக்கும் மக்கள் போதாததால் பக்கத்திலுள்ள பல ஊர்களிலிருந்து வந்து பணியாளர்கள் வேலைபார்த்தனர். இனிப்பு சாப்பிடும் குழந்தையின் வாய் முழுவதும் ஈக்கள் மொய்ப்பதைப்போல வைகையின் வாய் முழுவதும் கலங்கள் மொய்த்துக்கிடந்தன. இதைப் பார்க்கவே கூட்டம் நிரம்பியிருந்தது. எங்கும் தின்பண்டங்கள் விற்பதும் உற்சாகக் கொண்டாட்டமுமாக இருந்தது. அலை ஓசையும், பறவைகளின் ஓசையும், கூவி விற்கும்  மக்களின் ஓசையும் ஒன்றினை ஒன்று விஞ்சிக் கொண்டிருந்தன. வீசுங்காற்றின் உப்பஞ்சாரல் மேனிதழுவியபடி விடாது வீசியது.

யவனத்தேறல்கள் எளிய மனிதருக்கும் கிடைக்கும் வாய்ப்பு துறைமுகத்தில்தான் ஏற்படும். புறப்படப்போகும்பொழுது தமக்குச் சிறப்பாகப் பணிவிடை செய்தவர்களுக்குத் தேறல் குடுவைகளை அள்ளிவழங்கும் யவன வணிகர்கள் உள்ளனர். இருமாதம் நீண்ட மதுரையின் மணநாள் கொண்டாட்டம் தனது கடைசி விழாவை வைப்பூரில் வைத்து நிகழ்த்திக்கொண்டிருந்தது. 

திருமணவிழாவில் பங்கெடுத்த வணிகர்கள் பலருக்கும் நன்மைகள் பல கிட்டின. புதிய அறிமுகங்களும் தொடர்புகளும் அவர்களின் கலங்களை அதிகத் தொலைவிற்குப் பயணப்பட அழைத்திருந்தன. எல்லாக் கலங்களும் ஏரா எனும் அடிமரத்தின் மீதே விலாவெலும்புபோல இருபுறமும் மேல்நோக்கிக் கட்டப்படும். அக்கட்டுமானத்தை வாங்குகால் என அழைப்பார்கள். வணிகம் தன்னை இணையில்லா வேகத்துடன் பெருகிக்கொள்ளும் குணத்தையே அடிமரமாகக்கொண்டது. அவ்வடிமரத்தின் மீது வைத்துக் கட்டப்படும் எண்ணிலடங்காத வாங்குகால்கள்தான் மீதமுள்ள எல்லா நடவடிக்கைகளும்.

இத்திருமணம் பங்கெடுத்த வணிகர்களின் அடிமரத்துக்கு வலுச்சேர்க்கும் நிகழ்வாக அமைந்தது என்று மகிழ்ச்சியடையாதவர்கள் யாருமில்லை. வாங்குகால்கள் செழிப்பாக அமைந்ததை விருந்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரின் முகமும் சொல்லிக் கொண்டிருந்தது.

விருந்து தொடங்கியிருக்க வேண்டும். யவனக்கோட்டையிலிருந்து கேட்கும் ஓசை அதனைத்தான் சொல்லுகிறது. அவ்வோசை கேட்கத் தொடங்கியவுடன் துறைமுக மேடையிலிருக்கும் கலங்களின் பொறுப்பாளர்கள் தங்களை இறுதிக்கட்டத்துக்கு ஆயத்தப்படுத்தத் தொடங்கினர். ஏனென்றால், விருந்திலிருந்து எந்தக் கணமும் தங்களின் உரிமையாளர் புறப்பட்டு வரக்கூடும். அவர் வந்தவுடன் கலங்களை நகர்த்தியாக வேண்டும். பணிகள் பெரும் விறுவிறுப்போடு நடந்து கொண்டிருக்கையில் வரிசை வரிசையாகக் கொண்டுவரப்பட்ட அடிமைகள் கலங்களில் ஏற்றப்பட்டனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 65p5
அடிமைகளின் கைகால்களில் இதுநாள் வரை இருந்த இரும்புச் சங்கிலிகள் அகற்றப்பட்டு, துளையிடப்பட்ட கட்டைகளில் இருகைகளும் செருகப்பட்டிருந்தன, துடுப்புகளை இழுக்கத் தோதான வடிவமாக இதுவே இருக்கும் என்பதால். அடிமைகள் வரிசையாகக் கலங்களுக்குள்ளே அனுப்பப்பட்டனர். அவர்களை வழிநடத்தும் பொறுப்பாளர்கள் துறைமுகந்தோறும் புதுச்சாட்டைகளை மாற்றுவது வழக்கம். தோளும் விலங்கின் நரம்பும் மரத்தின் நரம்பும் பின்னியபடி நீள்சாட்டை செய்யும் தச்சுக்கூடம் அருகன்குடியில் மூன்று இருக்கின்றன. ஆனால், இப்பொழுது அங்கு ஒரு சாட்டைகூட இல்லை, எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன எனப் பேசிக்கொள்கின்றனர்.

மீன்கள் துள்ளியெழக்கூட இடைவெளியற்று கலங்கள் நின்றுகொண்டிருந்தன. ஆனால் எல்லோரின் பார்வையும் குவிந்துகிடந்தது ஒற்றைக்கலத்தின் மீதுதான். அதன் உயரமும் அகலமும் துறைமுகத்தை ஆண்டுகொண்டிருந்தன. அதற்கான வேலைகளைச் செய்ய மட்டுமே எண்ணற்ற பணியாளர்கள் இருந்தனர். அதுதான்  கடல்பயணத்தின் சாகசத்தளபதியான ஹிப்பாலஸின் நாவாய். அக்கப்பல் இத்துறைக்கு வந்து பலநாள் ஆகிவிட்டன, ஆனால் இத்தனை நாள்களும் இரவில் ஒருசில விளக்குகள்தான் அதில் ஏற்றப்பட்டிருந்தன. ஆனால், இன்று இரவு எந்தக் கணத்திலும் சாகசத்தளபதி ஹிப்பாலஸ் கப்பலுக்கு வந்துசேருவான் என்பதால் அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டிருந்தன. அந்தக் காட்சியைக் காண்பவர் யாராலும் கண்களை விலக்க முடியவில்லை. அலைகளுக்கு நடுவே ஓர் அரண்மனை மிதந்துகொண்டிருப்பதுபோல் இருந்தது. வைகை தனது மேனியெல்லாம் ஒளியைக் கொண்டு வந்து கடலில் கலப்பதுபோல் தோன்றியது.

ஹிப்பாலஸின் கப்பலில் அடிமைகள் எல்லோரும் ஏற்றப்பட்டவுடன் அக்கதவைப் பொறுப்பாளன் மூடத்தொடங்கினான். அது அடிமைகளை ஏற்றுவதற்கான கதவு. இனி அடுத்த துறைமுகத்தில்தான் அதைத் திறப்பார்கள். கதவைப் பொறுப்பாளன் மூடியபொழுது ஒருவன் வேகமாக ஓடிவந்து சொன்னான், “இப்புதிய அடிமைகளையும் உள்ளே அனுப்பு.”

அவன் திரும்பிப் பார்த்தான், கருங் கொள்ளை யர்களுக்கு இணையான உடல்வாகு கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர். வந்தவன் சொன்னான், “பாண்டிய நாட்டின் பரிசுப்பொருளாக நம் தளபதிக்கு இவ்வடிமைகளைத் தந்துள்ளனர்.”

அவன் மேலும் கீழும் பார்த்தான். கைகளில் இருந்த இரும்புச்சங்கிலி கழற்றப்பட்டு, துளை யிடப்பட்ட மரக்கட்டைகள் செருகப்பட்டிருந்தன. “போதுமான அடிமைகளை உள்ளே அனுப்பி முடித்துவிட்டேன். சரி இவர்களை மேல்தளத்துக்குக் கொண்டு போ” என்றான்.

வந்தவன் அவர்களை மேல்தளத்துக்கு அழைத்துச்சென்றான். புதிதாக வந்துள்ள அடிமைகளைச் சோதனை செய்ய எத்தனையோ வழிமுறைகள் உண்டு. கப்பல் பயணிக்கும் போது பேரலைகளுக்கு நடுவே அவர்களை மேலிருந்து தூக்கியெறிவது அதில் ஒருவகை. வீசப்பட்டவன் கடலில் மூழ்காமல் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கிறான் என்பதைப் பொறுத்து அவனை மீண்டும் கப்பலில் ஏற்றலாமா அல்லது அப்படியே கடலுக்குள் விட்டுவிடலாமா என்பதை, கூம்புவடிவக் கூண்டின் மேலிருந்து மீகான் முடிவுசெய்வான்.

திரையர்கூட்டம் நாவாயின் மேல்தளத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு மீகானின் மேடை அருகே நிறுத்தப்பட்டனர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 7:12 pm

இந்த இதழுடன் இரண்டு பாகங்கள் முடிந்து   மூன்றாம் பாகம் பாரி பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. இதுவரை பாரியைப்  பின்தொடர முடியாமல் போனவர்களுக்காக இந்த முன்கதைச் சுருக்கம்.
யானையின் பிளிறல் கரும்பாறையிற் பட்டு எதிரொலிக்கையில் அமைதி கொண்டிருந்த பறவைகள் கூவிக்குரலெழுப்பு கின்றன. பறவைகள் அலகு திறக்கும்பொழுதே சிறகசைக்கத் தொடங்கிவிடுகின்றன. அவை படபடத்துப் பறக்க, காட்டின் ஆழ்ந்த அமைதி கலைகிறது. கலைந்தெழும் ஓசையோடு ஒவ்வோர் உயிரினத்தின் ஓசையும் இணைகின்றன.

உச்சியிலிருந்து உருளும் பந்தைப்போலத்தான் காட்டில் உருவாகும் ஓசை; உருள உருள அதற்கு விசை கூடுகிறது. கண்காணாத்தொலைவு வரை பயணப்பட்டு மறைந்துபோனதா அல்லது திசை திரும்பிப்போனதா என்பதை அறிய முடியாமலே சென்றுசேருகிறது. மலைத்தொடர்களுக்கிடையில் தொட்டில் கட்டித் தொங்கும் அடர்கானகத்தின் குணம் இதுதான்.

வடக்கும் தெற்குமாக நீண்டுகிடக்கும் பச்சைமலைத்தொடரில் பரவிக்கிடக்கும் அடர்கானகம்தான் பறம்புநாடு. அந்நாட்டின் தலைவன் பாரி. வேளிர் குலத்தின் வம்சாவளி யாதலால் வேள்பாரி என்று அழைக்கப்பட்டான். மலைமனிதர்கள் பசி அறியமாட்டார்கள். கொடுங்கோடையிலும் ஏழுவகைக் கிழங்குகளை அவர்களுக்காக உள்ளங்கையில் வைத்துக் காத்திருக்கிறது காடு. உணவை விளைய வைப்பதோ, அறுப்பதோ அல்ல; சேகரிப்பது மட்டுமே வேலை. அதுவும் சேமிப்பு என்ற சிந்தனையும் சொல்லும் உருவாகாத வாழ்நிலை.

பறம்பின் தலைவன் பாரி இருக்குமிடம் எவ்வியூர். பச்சைமலைத்தொடரில் மூன்று மலைகளைக் கடந்து உச்சியிலிருக்கும் அவ்வூரிலே வசிக்கிறான் பாரி. அவனது புகழ் நிலமெங்கும் பரவிக்கிடக்கிறது. அவன் வள்ளல்தன்மையைப் பாணர்கள் காலம் முழுவதும் பாடுகிறார்கள்.
பெரும்புலவன் கபிலன், சிற்றரசன் ஒருவனின் மாளிகையில் இரவு கள்ளுண்டு மகிழ்ந்திருக்கிறான். தன்னைக் காணவந்த பாணர்களின் செயல்பற்றி அவ்வரசன் கபிலரிடம் கூறுகிறான். எல்லா மன்னர்களிடமும் பரிசில்பெற்றுத் திரும்பும் பாணர்கள் பாரியிடம் மட்டுந்தான் கருணையைப்பெற்றுத் திரும்புகின்றனர். இந்த உண்மையைத்தான் அவர்கள் பாடுகின்றனர் என்கிறான்.

இது கபிலருக்கு ஏற்புடையதாக இல்லை. பாரி விருந்தினரை நிர்வகிப்பதில் சிறந்தவனாக இருக்கலாம். ஆனால், வள்ளல்தன்மை என்பது நிர்வாகத்திறமையல்ல; அது குழந்தையின் குரல் கேட்டகணத்தில் பால்கசியும் தாயின் மார்பைப் போன்றது என்று வாதிடுகிறார். ஆனால், அந்தச் சிற்றரசன் அதனை ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில் நாளையே பறம்பு நாடு சென்று பார்க்கிறேன் என்று புறப்படுகிறார் கபிலர்.

முன்பின் போகாத அடர்காட்டுக்குள் தன்னந்தனியாக நுழைகிறார். உள்ளே நுழைந்த சிறிதுதொலைவிலேயே நீலன் என்ற வீரன் கபிலரோடு இணைகிறான். அவன் கபிலரை முதலில் தனது ஊருக்கு அழைத்துச்செல்கிறான். அங்கிருந்து காரமலை, நடுமலை, ஆதிமலை ஆகிய மூன்று மலைகளைக் கடந்து பாரியிருக்கும் எவ்வியூருக்குக் கொண்டு சேர்க்கிறான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 134p1
இந்த வழிப்பயணம் கபிலரின் பல எண்ணங்களைத் தலைகீழாக மாற்றுகிறது. காடு பற்றியும் இயற்கை பற்றியும் மலைமக்கள் பற்றியும், பாரி பற்றியும் அவரின் பார்வைகளில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது.

கபிலர் வந்துகொண்டிருக்கிறார் என அறிந்த பாரி எதிர்வந்து வணங்கி, கபிலரைத் தன் தோளிலே எவ்வியூருக்குத் தூக்கிச் செல்கிறான். கபிலரின் வரவு எவ்வியூரின் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

எவ்வியூரின் மாணவர்களைக் காடறிய அழைத்துச்செல்லும் ஆசானான தேக்கன், பாரியின் மனைவி ஆதினி, பாரியின் இரு மகள்களான அங்கவை, சங்கவை, நீலனின் காதலியான மயிலா என எல்லோரும் கபிலரின் வரவைக் கொண்டாடித் தீர்க்கின்றனர்.

அடுத்த சில நாள்களில் பறம்பின் பெரு விழாவான கொற்றவைக்கூத்து தொடங்குகிறது. சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் எத்தனையோ இனக்குழுக்களை அழித்து தங்களது ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்தி யுள்ளனர். அவ்வாறு அழித்தொழிக்கப் பட்டவர்களில் சிலர் பறம்பில் அடைக்கலம் அடைந்தனர். பறம்பு நாடு அவர்களைத் தங்களின் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டது. அழித்தொழிக்கப்பட்ட குலங்களின் வம்சாவளிகள் போர்த்தெய்வமான கொற்றவையின் முன்னால் தங்களின் குலத்தின் வரலாற்றைச் சொல்லி, அதனை அழித்தொழித்த வேந்தனின் மீது வெஞ்சினம் உரைத்துப்பாடுவர்.

பதினேழு நாள் பெருவிழா இது. கொற்றவை இருக்கும் பெரும் மரப்புதருக்குள் தெய்வவாக்கு விலங்கிருக்கிறது. அது இறங்கிவந்து முன் இலையில் வைக்கப்பட்ட பலவகையான கனிகளில் ஏதாவது ஒன்றை முதலில் எடுக்கிறது. அப்படி எடுக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட இனக்குழுக்கள் கொற்றவையின் முன் தாங்கள் அழிக்கப்பட்ட கதைகளைச் சொல்லி அருளிறங்கி ஆடுவர். கடைசியாக, பதினேழாவது நாள் பறம்பின் சார்பில் பாரி களமிறங்கி ஆடுவான். இத்தனை இனக் குழுக்களை அழித்தொழித்த மூவேந்தர்களின் பகைமுடிக்க வஞ்சினம் உரைப்பான்.

கொற்றவைக்கூத்தில் பாண்டியனால் அழிக்கப்பட்ட அகுதையின் கதை, சோழனால் அழிக்கப்பட்ட செம்பாதேவியின் கதை, சேரனால் அழிக்கப்பட்ட நாகர்குடியின் கதை என்று ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கதையைக் கேட்ட கபிலரால் அவலத்தைத் தாங்கமுடியவில்லை. அழிக்கப்பட்ட இனக்குழுக்களின் வம்சாவளிகள் இன்னும் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்ற உண்மையே அவரை நிலைகுலையச் செய்துவிட்டது. அக்கதையைப் பாடும் மனிதர்கள் வரலாற்றிலிருந்து இறங்கிவந்து பாடுவதுபோல் இருந்தனர். உண்மையின் வெக்கை தாங்காமல் நிலைகுலைந்து படுத்தார் கபிலர்.

உடல்நலம் குன்றிய கபிலரால் கொற்றவைக் கூத்தில் பாதிநாள்கள்கூடக் கலந்துகொள்ள முடியவில்லை. கூத்து முடிந்த பின்னும் கபிலரால் பலநாள்கள் அதிலிருந்து வெளிவர முடியவில்லை.

இதே காலத்தில் பாண்டியப்பெருவேந்தன் குலசேகரப்பாண்டியன் மகன் பொதியவெற்பனுக்குத் திருமண ஏற்பாடு நடக்கத்தொடங்கியது. யவனத்துக்கும் தமிழகத்துக்குமிடையில் கடல்வணிகம் மிகவும் செழிப்புற்றிருந்த அந்தக் காலத்தில் வணிகர்களின் செல்வமும் செல்வாக்கும் வேந்தர்களுக்கு இணையாக வலிமை பெற்றிருந்தன. கடல்வணிகர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட சாத்துக்கள் என்ற அமைப்பின் தலைவனாக இருந்தான் பெருவணிகன் சூழ்கடல் முதுவன். அவன் மகள் பொற்சுவையைப் பொதியவெற்பனுக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்தனர். மாமதுரை திருமண விழாவுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அப்பேரழகியின் காதல் கண்ணீரால் கரைக்கமுடியாத ஒன்றாக ஆழ்மனதில் நிலைகொண்டிருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 134p2
பறம்பு நாட்டின் மலையடிவாரத்தில் இருப்பது வெங்கல் நாடு. அந்நாட்டை ஆளும் சிற்றரசர் மையூர்க்கிழார். பாண்டிய வேந்தனுக்கு மிகவும் விசுவாசமாக நடந்து கொள்பவர். உலகமே போற்றி வியக்கப்போகும் பாண்டிய இளவரசனின் திருமணத்துக்கு யாரும் தராத சிறந்த பரிசொன்றைத் தரவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்நிலையில் மழைவெள்ளத்தில் அடித்துவரப்பட்ட ஒரு அரிய வகையான உயிரினத்தை உழவன் ஒருவன்  மையூர்க்கிழாரிடம் காட்டுகிறான்.

பார்க்கவே சற்று அருவருப்பாக இருக்கும் இது என்னவகையான உயிரினம் எனச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், அங்கிருந்த பாணர் கூட்டத்தலைவன் சொல்லுகிறான். “இதுதான் பாரியின் கொற்றவைக்கூத்தில் குறிசொல்லும் தேவவாக்கு விலங்கு.” 

மையூர்க்கிழார் பெருமகிழ்ச்சி அடைந்தார். இதற்கிடையில் மதுரையில் திருமணத்துக்காகக் கட்டப்பட்டுவரும் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க கொத்தர்களை அனுப்பச்சொல்லி பேரரசரிடமிருந்து உத்தரவு வந்தது. உத்தரவை ஏற்று, புதிய கொத்தர்களை அழைத்துச்செல்லுமாறு தன் மகன் இளமருதனிடம் சொல்லுகிறார்.

இளமருதன் புறப்படுகையில் அவனது கையில் பாரிக்குக் குறிசொல்லும் தேவவாக்கு விலங்கினைக் கொடுத்து அனுப்புகிறார் மையூர்க்கிழார். “பேரரசரிடம் கொடு. இது அவருக்கு மிகப்பெரிய மகிழ்வைக் கொடுக்கும்.”

இளமருதன் தேவவாக்கு விலங்கினை எடுத்துக்கொண்டு, கொத்தர்களையும் அழைத்துக்கொண்டு மதுரைக்குள் நுழைகிறான். அது என்ன விலங்கு என்று பலரும் கேட்க, தேவவாக்கு விலங்கென்றும் தேவாங்கு விலங்கென்றும்  அழைக்கின்றனர்.

திருமணத்துக்காக மூன்று பெரும் மாளிகைகள் கட்டப்பட்டு வந்தன. கார்காலப் பள்ளியறை, வேனிற்காலப் பள்ளியறை, அரச குடும்பத்தினர் மட்டும் ஆடிப்பாடி மகிழும் பாண்டரங்கம். இம்மூன்று மாளிகையின் மேற்கூரைகளிலும் வானியல் அமைப்புகள் ஓவியமாக வரையப்பட்டன.

கார்காலப் பள்ளியறையில் பொதியவெற்பன் பிறந்தபொழுதிருந்த வானியல் அமைப்பும் வேனிற்காலப் பள்ளியறையில் பொற்சுவை பிறந்தபொழுதிருந்த வானியல் அமைப்பும் பாண்டரங்கத்தில் வைகையில் வெள்ளப் பெருக்கெடுக்கும் காலத்தைக் குறிக்கும் வானியல் அமைப்பும் வரையப்பட்டன. அப்பணியினை அரண்மனையின் தலைமை வானியல் நிபுணன் அந்துவன் மேற்பார்வை செய்துவந்தான்.

வானியல் அறிவின் பேராசான் திசைவேழர் பொதிகைமலையிலிருந்து திருமண விழாவுக்காக மதுரைக்கு வருகை தந்தார். அவரின் மாணவர்களில் ஒருவன்தான் அந்துவன். அவனது மேற்பார்வையில் வரையப்பட்ட வானியல் அமைப்புகளைப் பார்வையிட்ட திசைவேழர் அதிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி, கடுங்கோபத்தை வெளிப்படுத்தினார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 134p6
அத்தவறுகளைச் சரிசெய்து வரைந்து முடிக்கும் வரை அந்துவன் அம்மாளிகையை விட்டு வெளியேறவில்லை. அந்தக்காலம் முழுவதும் இளமருதன் கொண்டுவந்த தேவாங்கினைத் தனது அருகிலே வைத்துக்கொண்டான். திருமணப்பரிசாகக் கொடுக்கும்வரை இது இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டான். மேற்கூரையில் புதிய ஓவியத்தை ஓவியர்கள் திரும்ப வரைந்து முடிக்கும் வரை அந்துவனின் பொழுதுபோக்காக கூண்டில் அடைக்கப்பட்ட அந்தத் தேவாங்கு விலங்கே இருந்தது.

பணி நிறைவுபெறும் பொழுதுதான் அந்தத் தேவாங்கு விலங்கின் சிறப்புத்தன்மையை அவன் கண்டறிந்தான். அவன் கண்டறிந்த உண்மையைத் தன் ஆசான் திசைவேழரிடம் சொன்னபொழுது அவர் நம்பவே இல்லை. அவரும் சோதித்து அது உண்மைதான் என்பதை அறிந்தார். அந்தத் தேவாங்கு எல்லாதிசைகளிலும் நடக்கிறது. ஆனால், உட்காரும்பொழுது மட்டும் வடதிசை நோக்கியே உட்காருகிறது. எத்தனை முறை உட்கார்ந்தாலும் வடதிசை நோக்கியே உட்காருகிறது. இது இயற்கையின் அதிசயத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
செய்தி பேரரசருக்குத் தெரிவிக்கப்பட்டது. தேவாங்கின் அதிசய ஆற்றல் கண்டு பேரரசர் திகைத்துப்போனார். குறிப்பாக கடற்பயணத்தில் திசை அறியமுடியாத சூழலில்தான் பல கலங்களை நாம் இழக்கிறோம். இந்த நிலையில் இப்படிப்பட்ட ஒரு விலங்கு கடல் பயணத்துக் கான அடிப்படைத் தடைகளைத் தகர்த்துவிடும். திசையை ஆள்பவனே கடலை ஆளமுடியும். இவ்விலங்கு திசையின் அறிவிப்பாளனாக இருக்கிறது எனச்சொல்லி, பெரும் மகிழ்வை வெளிப்படுத்தினார் சூழ்கடல் முதுவன்.

இது பாரியின் பறம்புநாட்டில் உள்ள கொற்றவைக் குறிசொல்லும் விலங்கு என்பது தெரியவந்தது. இவ்விலங்கின் முக்கியத்துவம் கடலில்தான் இருக்கிறது என்பதை பாரியிடம் பேசிப் புரியவைத்துப் பெறமுடியுமா என்று ஆலோசனை நடத்தினர். என்ன விலை கொடுத்தேனும் இதனைப் பெறவேண்டும் என்று துடித்தனர். ஆனால், பாரியிடம் வணிகம் பேசமுடியாது. பறம்பின் இலைதழைகளைக்கூட எடுத்துச்செல்ல பறம்பின் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அப்படியிருக்க கொற்றவைக் குறிசொல்லும் தேவவாக்கு விலங்கை எப்படிக் கொடுப்பார்கள். இதனைக் கொண்டுவர வாய்ப்புள்ள அனைத்து வழியையும் சிந்தித்து, கடைசியில் ஒரு வழியைக் கண்டறிகின்றனர்.

திருமணவிழாவின் தொடக்கக்கட்டத்தில் சூல்கடல் முதுவனுக்கு மிகச்சிறந்த பரிசொன்றைத் தரவேண்டுமெனப் பேரரசர் விரும்பினார். உலகம் முழுவதும் வணிகம் செய்யும் வணிகர்குலத்தலைவனுக்குக் கொடுக்கும் பரிசு ஆகச்சிறந்ததாக இருக்க வேண்டும் என்று சிந்தித்தபொழுது பாண்டிய நாட்டின் தலைமைத்தளபதி கருங்கைவாணன் ஓர் ஆலோசனை சொன்னான். சூல்கடல் முதுவனிடம் மிகச்சிறந்த கப்பல் ஒன்று இருக்கிறது. அக்கப்பலைப் பிற கப்பல்களைப் போல எல்லாத் துறைமுகத்திலும் நிறுத்தி அடிமைகளை மாற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. யவனர்கள் பயன்படுத்தும் கருங் கொள்ளையர் களைப்போன்ற ஒப்பிட முடியாத தடந்தோள் அடிமைகள் கிடைத்தால் அவர் கப்பலை எங்கும் நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டுசெலுத்த முடியும். அவ்வளவு வலிமைகொண்டவர்கள் வடக்குத்திசை மலையில் இருக்கிற திரையர்கள்; அவர்களை வென்று அடிமையாக்கி சூழ்கடல் முதுவனுக்குப் பரிசாக வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. கருங்கைவாணன் தந்திரமிக்க பெரும்போரை நடத்தி, திரையர்களை அடிமையாக்கி மதுரைக்குக் கொண்டுவந்து சேர்த்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 134p4
இந்நிலையில்தான் தேவாங்கினைப் பாரியின் பறம்பிலிருந்து கொண்டுவர என்ன வழி என்று ஆராய்ந்து ஒருவழியைக் கண்டடைந்தனர். அடிமையாக்கப்பட்ட திரையர்களின் குலத்தலைவன் காலம்பனிடம் பேரம்பேசினர். பறம்புமலையிலுள்ள தேவாங்கு விலங்கினை எடுத்துவந்தால் உன் குலத்தையும் உன்னையும் விடுதலை செய்வோம் என்றனர்.

திரையர்களும் பறம்புமலை வேளிர்களும் பல தலைமுறைக்கு முன்னர் மணவுறவு கொண்டவர்கள். ஆனால், இந்த மணவுறவு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தொடரவில்லை. காரணம், இவ்விரு மலைப்பகுதிகளும் பெருந்தொலைவு இடைவெளியோடு இருந்தன. காலம்பன் பறம்புநாட்டைக் கண்கொண்டுகூடப் பார்த்ததில்லை. ஆனாலும் ‘எம்முன்னோர் மணவுறவு கொண்டிருந்த பறம்புக்கு எதிராக நாங்கள் எதனையும் செய்யமாட்டோம்; எங்களின் உயிரே போனாலும் கவலையில்லை’ என்று உறுதியாக மறுத்தபொழுது, அந்தக் குலத்தின் பெரியமனிதர் ஒருவர் காலம்பனை சமாதானப்படுத்தினார்.

பறம்பின்மக்கள் யாரையும் தாக்கச் சொல்லவில்லை. அந்தச் சிறுவிலங்கைத்தான் எடுத்துவரச் சொல்லுகிறார்கள். அதனால் நமது குலமே விடுவிக்கப்படும் என்றால் அதைச் செய்வதில் தவறில்லை என்கிறார். வேறுவழியில்லாமல் காலம்பன் முப்பது வீரர்களை அழைத்துக்கொண்டு பறம்பின் மலைக்குள் நுழைகிறான்.

காடு பற்றிய பேரறிவுகொண்ட திரையர் கூட்டம் மூன்று மலைகளைக் கடந்து கொற்றவைக்கூத்து நடக்கும் களத்துக்குப்போய், ஐந்துகூடை நிறைய தேவாங்கு விலங்கைப் பிடிக்கின்றனர்.
காடறியச் செய்வதற்காகப் பதினொரு மாணவர்களை அழைத்துக்கொண்டு கொற்றவையை வணங்க அவ்விடம் வருகிறான் பறம்பின் ஆசான் தேக்கன். மாணவர்களின் கூருணர்வு மரக்கூட்டத்துக்குள் இருப்பவர் களைக் கண்டறிகிறது. அவர்களை விரட்டத் தொடங்குகிறான் தேக்கன். சின்னஞ்சிறு மாணவர்களை வைத்துக்கொண்டு மிகவலிமையான எதிரிகளை விரட்டி ஓடுகிறான். அவர்கள் தேக்கனை அடித்து வீழ்த்திவிட்டு ஓடுகின்றனர். தேக்கன் விடவில்லை, ஆறு மாணவர்களை எவ்வியூருக்கு அனுப்பி, பாரியை வரச்சொல்லிவிட்டு, மீதம் இருப்பவர்களை வைத்துக்கொண்டு எதிரிகளை விடாது விரட்டிச்செல்கிறான். மாணவர்கள் காடறியும் பயிற்சிக்கான கசப்புச்சாற்றினை உண்டிருப்பதால் பேசமுடியாத நிலையில் இருந்தனர். பாரியிடம் நிலைமையை விலக்கிச்சொல்ல முடியவில்லை. தேக்கன் அழைத்துவரச் சொன்னதாக நள்ளிரவு வந்துசொல்கின்றனர்.

நிலைமையைப் பாரியால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனாலும் மாணவர்களோடு சேர்ந்து அவன் தன்னந்தனியாகப் புறப்படுகிறான். மாணவர்கள் விடாது ஓடுகின்றனர். பாரி, ஆதிமலையைக் கடந்து இரண்டாங்குன்றை அடையும்பொழுது தேக்கனும் மற்ற மாணவர்களும் கடுந்தாக்கு தலுக்கு உள்ளாகியுள்ளது தெரியவருகிறது. யாரோ தேவவாக்கு விலங்கினைத் தூக்கிக் கொண்டு போவதும் தெரிகிறது. அதே மாணவர்களை வைத்துக்கொண்டு காட்டுக்குள் விரட்டி ஓடுகிறான் பாரி.

பறம்புமலையில் செடி, கொடி, பறவை, விலங்கு என அத்தனையையும் பயன்படுத்தி, முப்பது பேர் கொண்ட வலிமைமிகுந்த எதிரிகளை வீழ்த்திமுடிக்கிறான் வேள்பாரி. இறுதியில் எதிரிகளின் தலைவன் காலம்பனும் பாரியும் தனித்து மோதுகின்றனர். இருவரும் நெறிபிறழா அறத்தோடு நின்று மோதுகின்றனர். அப்பொழுது அங்கு வந்துசேரும் தேக்கன் பாரியின் பெயரைச் சொல்லி சத்தமிட்டு ஓசை எழுப்புகிறான்.
அப்பொழுதுதான் காலம்பனுக்குத் தெரியவருகிறது, நாம் இவ்வளவு நேரமும் பாரியெனும் மாமனிதனுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம் என்று. பாரி என்ற சொல்கேட்ட கணம் தாக்குதலைக் கைவிட்டு, வணங்கி மண்டியிட்டான் காலம்பன்.
தனது குலம் காக்க தவறான முடிவெடுத்து விட்டேன் எனத் தன்னையே மாய்த்துக் கொள்ளத் துணிகிறான் காலம்பன். இல்லை, நாங்கள்தான் உங்களைக் கணிக்கத் தவறிவிட்டோம் என்று அவனிடம் மன்னிப்பு கோருகிறான் பாரி. இருவரும் வேதனையால் உழன்று மீள்கின்றனர். வீழ்த்தப்பட்ட வீரர்களை உயிர்பிழைக்கச்செய்யும் ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யத் தொடங்கினர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 134p5
பாண்டியனால் சிறைப்பிடிக்கப்பட்ட திரையர் குலம் தங்களுடன் இரத்த உறவுகொண்ட குலம். எனவே அவர்களை மீட்பதைத் தனது கடமையாகக் கருதினான் பாரி. காலம்பனோடு வந்தவர்களில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகாத வர்களோடு பறம்பின் வீரன் நீலனையும், அவனோடு ஆறு வீரர்களையும் இணைத்து, தேவவாக்கு விலங்கினைக் கொடுத்தனுப்பு கிறான்.

காலம்பன் தலைமையிலான குழு தேவவாக்கு விலங்கோடு அரண்மனை திரும்பியதும் மகிழ்வு கரைபுரண்டு ஓடுகிறது. அவ்விலங்கினை எப்படிப் பயன்படுத்துவது என்று தீவிரமாகத் திட்டமிட்டனர். காலம்பனின் குலத்தை விடுதலை செய்து உத்தரவிடும் வேந்தன், பெரும்வீரர்களான காலம்பன் உள்ளிட்டவர் களை யவனர்களுக்கு அடிமைகளாகக் கொடுக்கிறான்.
விடுதலையானவர்களைப் பறம்புநாட்டுக்குப் போகச்சொல்கிறான் காலம்பன். திரையர் கூட்டத்தினர், வைகையாறு கடல்புகும் இடத்திலிருக்கும் வைப்பூர்த் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்படுகின்றனர். தேவாங்கு விலங்கும் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. மூன்று மாதத்துக்கும் மேலாக நீடித்த திருமண விழாவினை முடித்துக்கொண்டு யவன வணிகர்கள் நாடு திரும்ப வைப்பூர்த் துறைமுகத்தில் குழுமியிருந்தனர். பெரும் வணிகர்கள் பலரும் அங்கிருந்தனர். வைப்பூர்த் துறைமுகத்தில் நிற்க இடமின்றித் தத்தளித்துக்கொண்டிருந்தன கலங்கள்.
நெடும்பயணத்துக்குத் தயாராகும் யவனக்கப்பலின் மீது அடிமைகளாக்கப்பட்ட திரையர்கள் மேலேற்றப்பட்டனர். பொருத்தமான நேரத்தில் பறம்பின் வீரர்கள் தங்களின் அபார ஆற்றலால் கைவிலங்குகளை உடைத்தெறிகின்றனர். தங்களின் கைவசமிருந்த மாபெரும் ஆயுதங்களான செடிகொடிகளைக் கொண்டு கலங்களுக்குத் தீயிடத் தொடங்கினர்.

யவன வணிகர்களும் தமிழ் பெரும் வணிகர்களும் விடைபெறப்போகும் பெரும் விருந்தில் இருந்தபொழுது அவர்களின் கலங்கள் பற்றியெறியத் தொடங்கின. ஒன்றினைத்தொட்டு ஒன்றாகத் தீப்படர்ந்து மேலேறியது. ஒரு துறைமுகம் முழுமுற்றாக எரிவதை உலகின் பெருவணிகர்கள் எல்லாம் ஒன்றுகூடிப் பார்த்தனர்.

தப்பித்த திரையர் கூட்டம், தேவாங்கு விலங்கினையும் மீட்டுக்கொண்டு பறம்பு நோக்கிப் புறப்பட்டது. கலங்களில் பற்றிய நெருப்பு வானுச்சியைத் தொட்டபொழுது வெளியெங்கும் பரவிய சுடரின் ஒளிக்குள்ளிருந்து காலம்பனும் நீலனும் சீறிப்பாய்ந்து வெளியேறினர்.
தன் மைந்தர்களைக் கரம் நீட்டி அழைத்துக்கொண்டது பாரியின் பறம்பு.


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 7:31 pm

பொழுது நள்ளிரவைக் கடந்தது. துறைமுகம் மிகப்பரபரப்பாய் இருந்தது. யவனர்களின் கோட்டையிலிருந்து எழும்பிய இசைக்கருவிகளின் ஓசை திசையெங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. விருந்தின் கூச்சல் கோட்டைச்சுவர் தாண்டி வெளியெங்கும் வழிந்தது. உச்சத்தை அடைந்த யவனர்களின் இசையோசை முடிந்ததும் கூத்துப்பறையின் ஓசை தொடங்கியது. பாண்டிய அழகிகள் ஆட்டத்தில் இறங்கி விட்டனர் என்பது புரிந்தது. விருந்தில் விடைபெறும் தருணம்தான் வெறிகூட்டும் ஆட்டம் நிகழும் அல்லது அப்பொழுதுதான் மனம் புதியதாய் ஒன்றை அடைய முன்னிலும் அதிகமாய் ஏங்கி நிற்கும். அதனால்தான் விருந்துகள் பின்னிரவுக்குப் பின்னர் சூடுபிடிக்கின்றன. இரவும் இசையும் மதுவும் ஒற்றைக்கோட்டில் வடம்பிடித்து நிற்க, ஆண்களும் பெண்களும் வெளவாலென அதைப்பற்றித் தொங்கிக்கொண்டிருக்கின்றனர். மோகம் எதுவொன்றையும் தலைகீழாக மாற்றுவதில்லை. தலைகீழாக மாறும் பொழுதுதான் அது இயல்புகொள்கிறது.

ஹிப்பாலஸின் நாவாய், துறைமுகத்தில் பெருவீரனைப்போல் கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது. மீகான் நின்றுபார்க்கும் அதன் கூம்புமாடத்தின் கீழே திரையர்கள் உட்காரவைக்கப்பட்டிருந்தனர். அவர் களிடமிருந்து சற்று தள்ளி யவனக் காவல்வீரன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். காவல்வீரர்களின் கவனமெல்லாம் நாவாயில் பொருள்களை ஏற்றும் பணியாளர்களின் மீதே இருந்தது. கைகளில் பெருந்தடிகொண்டு பிணைக்கப்பட்டுள்ள திரையர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையெதுவும் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 144p1
குத்தவைத்தபடி உட்கார்ந்திருந்த நீலன் சற்றே தலைதூக்கிப் பார்த்தான். அவனுக்கு நேரெதிரே வானில் மெல்லிய மூன்றாம்பிறை நிலவு கண்சிமிட்டியது. பறம்பின் செய்தியை அது ஒளிசிந்தி அவனுக்குச் சொல்லுவதுபோல் இருந்தது. பிறைநிலவைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். நினைவுகள் எங்கெங்கோ ஓடிமறைந்தன. பிற விண்மீன்களையும் பார்த்தான். ‘எல்லோரும் இங்கே வந்து விட்டீர்களா?’ என்று மனம் கேட்டபொழுது உதட்டோரம் சிரிப்பொன்று மேலெழுந்தது.

காலம்பன் நீலனையே பார்த்துக் கொண்டிருந்தான். மூன்றாம்பிறை நிலவைப் பார்த்தபடி எழுந்தான் நீலன். காவல்வீரர்கள் வெகுதொலைவில் பொருள்கள் ஏற்றப்படு வதையே பார்த்துக்கொண்டிருந்தனர். எழுந்த நீலனின் கண்ணில் முதலிற்பட்டது வைகையின் நடுவில் அசைந்தபடி கடல்நோக்கிப் போகும் கப்பல் ஒன்று. அதைச் சற்றே கூர்ந்துபார்த்தான். விளக்கொளியால் கப்பலின் மேல்தளத்தில் இருப்பனவற்றை அவனால் துல்லியமாகப் பார்க்க முடிந்தது.

வேலையாள் ஒருவன் மீகான் நிற்கும் கூம்புமாடத்தின் மேல் கூண்டு ஒன்றினை வைத்துவிட்டுக் கீழிறங்கிக்கொண்டிருந்தான். நீலன் அதை உற்றுக் கவனித்தான். தேவவாக்கு விலங்கைக் கொண்டுசெல்ல வடிவமைக்கப் பட்ட கூண்டுதான் அது என்பது பார்த்ததும் புலப்பட்டது.
இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று முடிவு செய்தபடி கீழே அமர்ந்தான். அமர்ந்த வேகத்தில் அவனது நாக்குக் குழன்று சிற்றொலியை எழுப்பியது. அணில் எழுப்பும் ஒலிபோல் அது இருந்தது. திரையர்கள் யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தனர். காலம்பன் நீலனின் செயலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

கூட்டத்தின் நடுவில் உட்கார்ந்திருந்த பறம்பின் வீரர்கள் இருவருக்கான ஒலிக்குறிப்பு அது. அவர்கள் தங்களுக்கான உத்தரவு கிடைத்ததும் வேலையைத் தொடங்கினர். அவர்கள் கழுத்தை ஒட்டி வேர்க்கொடி ஒன்றினைக் கட்டியிருந்தனர். கீழ்த்தாடையைக் கழுத்தோடு தாழ்த்தி நாக்கை நீட்டி அவ்வேர்க்கொடியைப் பற்ற நினைத்தான் பறம்பின் வீரன். அது உள்கழுத்தில் பதிந்திருந்ததால் எளிதில் நாக்கின் நுனிக்குச் சிக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயன்றான். சிறிதுநேரத்தில் நாக்கின் நுனியில் வேர்க்கொடி சிக்கியது. மெல்ல அதனை நுனிநாக்கிலேந்தி உள்வாய்க்குக் கொண்டுவந்தான்.

இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று திரையர்களுக்குப் புரியவில்லை. உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். பறம்பின் வீரர்கள் இருவரும் கழுத்தில் சுற்றியிருந்த கொடியைப் பல்லால் கடிக்கத்தொடங்கினர். அது நத்தைச்சூரியின் காய்ந்த இலைகளைக்கொண்டு திருகிக் கட்டப்பட்ட கொடி. நத்தைச்சூரியை வாயிலிட்டு மென்ற ஒருவன் கல்லைக்கூடக் கடித்து நொறுக்கிவிடுவான். அதன் சாறு உருவாக்கும் வீரியத்துக்கு இணையில்லை.

நத்தைச்சூரியின் இலைகளை மென்று அதன் சாறு பல்லிடுக்கில் இறங்கத்தொடங்கியதும் மாற்றங்கள் தெரியத்தொடங்கின. பல் ஈறுகளில் கங்கினைக் கொட்டியதுபோல அவர்கள் துடிக்கத் தொடங்கினர். எலியின் வீறுகொண்ட வகையான செம்மூக்கனைப்போல அவர்கள் மாறினர். மேல்தாடைப் பற்கள் கீழ்த்தாடைப் பற்களை நறநறவெனக் கடித்து நொறுக்கி விடுவதுபோல் இருந்தன. கடவாய்ப் பற்கள் இலையின் கடைசிச்சாறு இறங்கும் வரை அரைத்துக்கொண்டே இருந்தன.

எந்தக்கணம் அது தொடங்கப்போகிறது என்பதைக் காண நீலனின் கண்கள் ஆர்வத் தோடு காத்திருந்தன.  ஒரு கணப்பொழுதில் அது தொடங்கியது. அவன் முதலில் தன் கைகளில் பூட்டப்பட்டிருந்த மரக்கட்டையைக் கடிக்கத் தொடங்கினான். மிகக்கடினமான மரங்களைச் சோளத்தட்டையைக் கடித்துத் துப்புவதுபோலத் துப்பினான். நிகழ்வதைக் காலம்பன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். 

செம்மூக்கனின் வேகம் கடிக்கத் தொடங்கிய பிறகுதான் பலமடங்கு அதிகமாகும். மற்ற எலிகள் மண்ணின் மேலே எவ்வளவு வேகமாக ஓடுமோ அதேபோல செம்மூக்கன் மண்ணுக்குள் கரகரவெனக் கடித்துத் துளையிட்டுக் கொண்டே ஓடும் என்பார்கள். கப்பலின் மேலே இருந்த இரு செம்மூக்கன்களும் தமக்கு விலங்காய் இடப்பட்ட கைக் கட்டைகளைக் கடித்துத் துப்பத் தொடங்கியதும் வேகம் பலமடங்கு அதிகமானது. தனது கைக்கட்டையைக் கடித்து இரு துண்டாக்கியதும் நீலனை நோக்கிப் பாய்ந்து வந்தான் ஒருவன். நீலனோ காலம்பனைக் கைகாட்டினான். வந்தவன் திரும்புவதற்குள் மற்றொருவன் காலம்பனின் கைக்கட்டையைக் கடித்துக் கொண்டிருந்தான். அவன் முடிப்பதற்குள் நீலனின் கைக்கட்டையைக் கரகரவெனக் கடித்துத் துப்பி இருகூறாக்கி முடித்தான். அடுத்தடுத்து ஒவ்வொரு வீரனின் கைக் கட்டையையும் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தனர். நத்தைச்சூரியின் வீரியம் குறையும் முன் கடித்தாக வேண்டும். நேரமாக ஆக அதன் வீரியம் குறையத்தொடங்கும். அவ்வாறு குறைந்துவிட்டால் கடிப்பவனின் பல்வலி தாங்க முடியாததாகிவிடும்.

ஆனால், இப்பொழுது இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் இக்கப்பலையே கடித்து இருகூறாக்கிவிடுவார்கள். அவர்களின் உடலில் ஏறியிருந்த வன்மம் நத்தைச்சூரியையும் விஞ்சுவதாக இருந்தது. செம்மூக்கனின் வேகம் உச்சத்தில் இருந்தது. காலம்பன் ஓர் அதிசயத்தைக் கண்முன்னால் பார்த்துக் கொண்டிருந்தான். வேலைமுடிந்தும் செம்மூக்கன்களின் வேகம் குறைய வில்லை. அவர்கள் நாவாயின் விளிம்பைக் கடித்துத் தங்களை ஆசுவாசப்படுத்த முயன்று கொண்டிருந்தனர்.

ஆனால், வேலை இனிமேல்தான் தொடங்கப்போகிறது. இப்பொழுது உடலில் ஏறிநிற்கும் வீரியத்தை எதுகொண்டும் குறைக்க முடியாது. பறம்பின் மற்ற மூன்று வீரர்களும் இடுப்புத்துணியோடு இணைத்துக் கட்டப் பட்டிருந்த நார்க்கொடியை உருவி எடுத்தனர். அவையெல்லாம் பால்கொறண்டியின் காய்ந்த சக்கைகளைக் கயிறாகத் திரித்துக் கட்டப் பட்டவை. கயிறுகள் எல்லாம் சிறு சிறு அளவாகப் பிய்க்கப்பட்டு ஆளுக்கு ஒரு பகுதி கொடுக்கப்பட்டன. ஒருவன் அருகிலிருந்த விளக்கில் ஒரு கொடியைப் பற்ற வைத்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 144p2
தீப்பற்றிப் பிடித்ததும் எல்லோர் கைப்பிடிக்கும் நெருப்பு பரவியது. நாவாயின் விளிம்புக்கட்டையைத் தாண்டி இருபது பேரும் நீருக்குள் குதித்தபொழுது எல்லோரின் கையிலும் பற்றியெரியும் பால்கொறண்டி இருந்தது. பொருள்கள் ஏற்றப்படுவதிலேயே கவனம்கொண்டிருந்த காவல் வீரர்கள் ஓசைகேட்டுத் திரும்பினர்.  கைக்கட்டையோடு நீரிலே குதிக்கும் அடிமைகளை நினைத்து பரிதாபத் தோடு எட்டிப்பார்க்க வந்தனர்.

குதிக்கும்பொழுது கையில் இருந்த பால்கொறண்டியை விட்டுவிட்டு நீரில் மூழ்கியவர்கள், மீண்டும் எழுந்தபொழுது எரிந்தபடி மிதந்துகொண்டிருந்த பால் கொறண்டியைக் கையிலேந்தினர். மற்ற மூன்று பறம்புவீரர்களும் கழுத்தில் இருந்த தாயத்தைப் பிய்த்தெடுத்து வாயில்போட்டு மென்றனர். தாயத்துக்குள் இருந்தவை எல்லாம் பொறித்துகள்கள்.

நன்றாக மென்ற பின் பால்கொறண்டியில் எரியும் நெருப்போடு சேர்த்து மூச்சிழுத்து பொறித்துகளை நாவாய்களின் மீது உமிழ்ந்தனர். பொறித்துகளில் நெருப்புப்பட்டால் போதும் அது ஒருபொழுதும் அணையாது. கங்குகளை  உருக்கிவைத்துள்ள மணல்துகள்கள் போன்றவை அவை. அது நெருப்பை எளிதில் அணையவிடாது கனன்றுகொண்டே இருக்கும். நீரில் மிதந்து ஊறிய கட்டைகள் முழுமையும் பற்றிப்பரவும் வரைகூடப் பொறித்துகளின் தழல் அணையாது. ஒருவன் மாற்றி ஒருவன் ஊதித்தள்ள, பால்கொறண்டியின் நெருப்பு கலம்தோறும் பற்ற, நீரில் ஊறிக்கிடக்கும் அடிமரங்களைத் தீயின் நாவுகள் தேடித் துழாவின. வைகையில் மிதந்த இளங்காற்று துழாவும் தழலுக்குத் தோள்கொடுத்து உள்நுழைத்தது. எல்லாக் கலங்களின் பின்புற அடிவாரங்களிலும் தீவைக்கும் பணி படுவேகமாக நடந்துகொண்டிருந்தது.

கொண்டாட்டங்களின் பேரிரைச்சலும் வேலைகளின் மும்முரமுமாக துறைமுகம் ஆட்களின் நெரிசல் தாளாமல் இருந்தபொழுது, கலங்களின் பின்புற அடிவாரங்களைக் கங்குகள் பற்றி மேலேறப் பொறித்துகள்கள் வழிசெய்து கொண்டிருந்தன. கடல் காற்று வைகை யாற்றோடு உள்நுழைந்து வீசிச்சென்ற பொழுது கலங்களின் உள்கட்டைகளில் தீயின் வேர்கள் ஆழப்பதியத் தொடங்கின.

பெரியது, சிறியது, யவனர்களுடையது, தமிழ் வணிகர்களுடையது என எந்த வேறுபாட்டுக்கும் இடமில்லை. எல்லாவற்றின் அடிக்கட்டைகளையும் பால்கொறண்டிகள் முத்தமிட்டுத் தழுவிச்சென்றன.

ழுத்தணைத்து  முத்தம் மட்டும் இட்டுவிட்டு மீள முடிவதில்லை, மீளமுடியாத காமம் உள்வாங்கி இழுத்துக்கொண்டிருந்தது. இன்றிரவு கப்பல் ஏறினால் கரைகாண மாதங்கள் பல ஆகும். எனவே யவனக் கடலோடிகள் முழுவிசையோடு இரவு முழுவதும் இயங்கினர். பாண்டியநாட்டு அழகிகள் ஆடும் இருமுகப்பறையின் அதிர்வாட்டத்தைப் பார்க்க வாய்ப்பது எளிதல்ல; ஒரு கட்டத்தில் முசுகுந்தரே மயங்கிக் கிறங்கிக் களம் புகுந்தார். மகிழ்ச்சியை வேரோடு பிய்த்தெடுக்கும் வெறிகொண்டு நிகழ்ந்தது விருந்து.

விருந்தென்பது இசையும் ஒளியும் வண்ணமும் மட்டும் கொண்டதன்று; இவை எல்லாவற்றையும் மகிழ்ந்து ரசிக்க முடியாத மயக்கமும் கொண்டது. இருமாதங்களுக்கு மேலாக நடந்து முடிந்த பேரரசின் மணவிழாவின் நிறைவை இவ்வளவு சிறப்பாக உலகில் வேறுயாரும் கொண்டாட முடியுமா என்ற ஐயம் ஹிப்பாலஸ்ஸுக்கே உருவானது. அதற்குக் காரணம், கோட்டைக்குள்ளிருந்த வெளிச்சத்தையும் ஓசையையும்விடக் கோட்டைக்கு வெளியே அதிக வெளிச்சமும் ஓசையுமாக அவ்விரவு இருந்தது. வியப்பு எல்லையற்றதானது.

நிலைகொள்ளமுடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் தங்கள் தலைவர்களிடம் செய்தியைச் சொல்ல வீரர்கள் அஞ்சினர். கோட்டைக் கதவினை முழுமையாகத் திறந்துவிட்டபொழுதுதான் நிலைமையின் விபரீதம் புரியத்தொடங்கியது.

கேட்கும் ஓசைக்குள் கதறும் குரல் மேலெழுந்தது. ஹிப்பாலஸ்ஸின் கண்ணிற்பட்ட வெளிச்சத்துக்குக் காரணம், இணையில்லாத உயரங் கொண்ட அவனது கப்பலின் பாய்மரம் சுழன்று எரிந்ததுதான். ஏறிய மயக்கம் கணப்பொழுதில் கீழிறங்கியது. பேரதிர்ச்சி கொண்டு துறைமுக மேடையை நோக்கி ஓடினான் ஹிப்பாலஸ். அப்பொழுதும் நிலைமையின் விபரீதம் முசுகுந்தருக்குப் புரியவில்லை. தேறலின் மயக்கம் எளிதில் மீளவிடாது. அதையும் மீறி ஹிப்பாலஸ் மீண்டதற்குக் காரணம் எரிந்துகொண்டிருந்தது கப்பலன்று; அவனது இன்னோர் உயிர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 144p3
எங்கும் கூக்குரல் மேலெழுந்தது. உள்ளும் புறமுமாக வீரர்கள் பதைபதைக்க ஓடினர். துறைமுகத்தின் மேடைப்பகுதியை நெருங்க முடியாதபடி தீயின்சுடர் வாரிச்சுழற்றிக் கொண்டிருந்தது. எல்லா நாவாய்களிலும் முழு அளவு பொருள்கள் ஏற்றப்பட்டுவிட்டதால் நெருப்பு இணைசொல்ல முடியாத வீச்சோடு மேலேறிப் படர்ந்தது. கடல்காற்றில் பற்றிய பாய்மரம் நெருப்போடு அசைந்தாடியது. ஒன்றினைத்தொட்டு ஒன்றாக, கிழக்கிலிருந்து மேற்குவரை எல்லாக் கலங்களிலும் தீப் பற்றிப் பரவியது.

பெரும்மரத்தின் அடிவாரத்தில் கறையான் புற்று சென்னிறச் சிறுகோடுபோலப் பற்றி மேலேறுமே, அப்படித்தான் கலங்களின் அடிவாரத்திலிருந்து ஏதோ ஒரு முனையில் தீயின் நாவுகள் மேலேறிக்கொண்டிருந்தன. மேல்தளத்துக்கு அவை வந்து சேர்ந்ததும் காற்றோடு போட்டியிட்டுப் புரண்டு எழுந்தன.  

மேல்தளமெங்கும் பெருவடக் கயிறுகள் கிடப்பதால் தீயின் அடர்வேகம் வலிமை கொண்டு உள்ளிறங்கியது. கலங்களின் ஓரப்பகுதியில் கீழிருந்து மேல்நோக்கி வந்த தீ, இப்பொழுது மையப்பகுதியில் மேலிருந்து கீழே செல்லத் தொடங்கியது. தீ சுழலத் தொடங்கியது. மண்ணுக்குள் நீர் இருப்பதுபோல, மரத்துக்குள் தீ இருக்கும். மரம் தீயாய் மாறும் ஆவேசம் அளவிட முடியாதது. அது காலகாலமாக அடக்கிவைக்கப்பட்ட ஒன்றின் வெளிப்பாடு. அளவிட முடியாத சீற்றத்துடனே இருக்கும்.

ஹிப்பாலஸ் தன் கண்முன்னால் தனது நாவாய் பற்றியெரிவதைப் பார்த்தபடி நின்றிருந்தான். யவனவீரர்கள் தங்கள் தளபதியின் நாவாயையாவது காப்பாற்றிவிடலாமெனப் பெருமுயற்சி செய்தார்கள். எதுவும் நடக்கவில்லை. கலங்களை நெருங்க முடியாமல் தவித்தவர் களுக்கு, நேரம் செல்லச்செல்ல கரையையே நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. மேல்மரங்கள் வெடிக்கத் தொடங்கின. கொடிமரங்கள் சரிந்து வீழ்ந்தன. பாய்மரத்துணி காற்றெங்கும் சாம்பலாய்ப் பறந்து கொண்டிருந்தது.

மற்றவர் அறியாவண்ணம் முன்னிரவே இரு கப்பல்களில் தேவாங்கினை ஏற்றி அனுப்பி வைத்த சூழ்கடல் முதுவன் நள்ளிரவுக்குப் பின்னர்தான் விருந்துக்கு வந்துசேர்ந்தான். கடைசியாக வந்து தேறலுக்குள் ஆழப் புதைந்தான். அவனது மகிழ்வு எல்லோரையும் விட எல்லையற்றதாக இருந்தது. அருந்தும் குவளைக்கு விளிம்புண்டு. ஆனால், தேறலுக்கு அதுவுமில்லை என நம்புபவன் அவன்.

தேவாங்குகள் இருக்கும் பிற கலங்கள் துறைமுகத்தில்தான் நிற்கின்றன. யவனர்களின் நாவாய்கள் எல்லாம் புறப்பட்ட பின் இறுதியாக அதனை நகர்த்துவோம் என்று முடிவுசெய்த சூழ்கடல் முதுவன் ஆடல் அழகிகளோடு உள்ளறைக்குப் போனான். வெளியெங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்த பெருங்கூச்சல் எதுவும் அவனை எட்டவில்லை.

இருமுகப்பறையின் இன்பத்தைத் தனித்து அவன் அனுபவித்துக்கொண்டிருந்தான். பெருங்கலங்கள் வெடிப்புற்றுத் தெறிக்கும் ஓசைகூட அவனைச்  சென்றுசேரவில்லை. எழும் கரும்புகையால் மூச்சடைத்த பொழுதுதான் வெளிவரத் துணிந்தான். அப்பொழுது அவனது கலமான கடற்கோதையை நெருப்பு முழுமையாக அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. நீரில் அசையும் கலத்தின் மீது நின்று ஆடியது நெருப்பின் சுடர்.

கிழக்கு முனையிலிருந்து ஒருவர்பின் ஒருவராக எல்லோரும் கரையேறினர். கைகளில் இருகூறாகத் தொங்கிக் கொண்டிருந்த கைக்கட்டைகளைக் காலம்பன் பிய்த்து எறிந்தான். பூட்டப்பட்ட கட்டைகளிலிருந்து விடுதலையான எல்லோரும் கைகளை வீசியபடி கரையோரத்தில் நடக்கத் தொடங்கினர். எழும் புகையால் வான்மண்டலம் மறைந்தது. மூன்றாம்பிறை நிலவினை நீலனால் பார்க்க முடியவில்லை. ஆனால், காலைக்கதிரவனின் ஒளித்தகிப்பை நீருக்குள் பார்த்துக்கொண்டிருந்தான். வைகை செம்மூதாயாய்க் கனன்றுகொண்டிருந்தது. கதைகளை மறக்காமல் காலம் அவன் கண்ணுக்குக் காட்டிக்கொண்டிருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 144p5
துறைமுகம் ஒன்று முழுமுற்றாக எரிவதை உலகின் பெரும்வணிகர்கள் எல்லோரும் ஒன்றுகூடிப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், அதனினும் வீரியத்தோடு எரிந்துகொண்டிருந்தது காலம்பனின் சினம். எரியூட்டிய வேலையைச் செய்ததெல்லாம் பறம்பின் வீரர்கள்தாம். தாங்கள் எதுவும் செய்யவில்லை என்ற கோபத்தில், மிதந்தபடி எரிந்துகொண்டிருந்த கலங்களை ஒருபுறமாகச் சாய்த்துத் தலைகுப்புறக் கவிழ்த்தலாமா என்று கேட்டபடி மீண்டும் கடலுக்குள் இறங்கினர் திரையர்கள்.

நீலன் தடுத்து மேலேற்றினான். தேவாங்கினை மீட்டுச்செல்வதே நமது நோக்கம் என்பதை நினைவுபடுத்தி அழைத்துச்சென்றான். காலம்பனின் கண்கள் கருங்கைவாணனையும், திதியனையும் விடாது தேடின. அவர்கள் இங்கு வரவில்லை. பாண்டியனின் இணைமீன் கவசத்தை மார்பில் அணிந்தபடி எவன் எதிரில் வந்தாலும் அவன் காற்றிலே வீசப்பட்டுக் கொண்டிருந்தான். காலம்பனின் கைப்பிடிக்கு நதி சிக்கினால் அதையும் சுழற்றி எறிந்துவிடுவான் என்றுதான் தோன்றியது. எரியும் நதியின் எதிர்திசை நோக்கி அவர்கள் நடந்தனர்.

எங்கும் கூக்குரல்களும் வெடித்து உமிழும் நெருப்பின் குரலுமாக இருந்தது. அருகிலிருந்த அருகன்குடியிலிருந்து மக்கள் சாரிசாரியாக ஓடிக் கொண்டிருந்தனர். திரையர்கள் மட்டும் நெருப்பைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் பாண்டியனின் கோட்டையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர். வழியில் இருந்த பெருஞ்சுவரின் ஓரத்தில் எறியுளிகள் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. விலகிப் போய்க் கொண்டிருந்த காலம்பனின் கண்களில் அவை பட்டன. ஆழ்கடல் செல்லும் மீனவர்கள் பெருஞ்சுறாக்களை எறியுளியால் எறிந்தே பிடிப்பர். இணையற்ற நீளமும் கூர்முனையுங் கொண்ட எறியுளிகளைக் கைகளில் அள்ளினான் காலம்பன். 

எரியும் நெருப்பினை விஞ்சிக்கேட்டன சில மனிதக்குரல்கள். நீலன் திரும்பிப் பார்த்தான் கடைசியாய் நின்றிருந்த கலம் ஒன்றின் மீதிருந்து கதறிய அடிமைகளின் குரல்கள் அவை. எல்லோரின் கவனமும் அப்பக்கம் திரும்பியது. கைகால்களில் விலங்கிடப்பட்டதால் யாராலும் தப்பிக்க முடியவில்லை. நெருப்பு சுற்றியபடி அவர்களை நெருங்கிக்கொண்டிருந்தது. கலங்களின் மேல்விளிம்பை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திரையர்கள் விலங்கினைப் பிய்த்தெறிந்து அவர்களை வெளியில் தூக்கி வீசினர்.

வீசப்பட்டவர்கள் யாரும் தப்பித்து ஓடாமல் மீண்டும் கலம்நோக்கியே கதறியபடி நெருங்கினர். காரணம் புரியாமல் நீலன் நின்றபொழுது, மீகான் நிற்கும் கூம்புமேடையில் ஒருவன் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது. “எம் தலைவனைக் காப்பாற்றுங்கள்” என்று அவர்கள் கதறினர். துணிந்து மேலேறிய திரையர்கள் மரம்பிளந்து அவனைத் தூக்கிவந்தனர். உடலெங்கும் செதில்செதிலாகப் பிளவுற்று இருந்த அவன் அரைமயக்கத்தில் இருந்தான். விடுவிக்கப்பட்ட அடிமைகள் அவனை உயிரெனத் தாங்கிக்கொண்டனர்.

பாண்டிய வீரர்கள் பெருங்கலங்கள் எரியும் இடத்தில் கூச்சலிட்டுக்கொண்டு கிடந்ததால் ஓரத்திலிருந்து பற்றியெரிந்த இச்சிறுகலத்தைப் பார்க்க யாருமில்லை. ஆனால், நீலனின் மனதில் இக்காட்சி நெகிழ்வை ஏற்படுத்தியது. விடுவிக்கப்பட்ட அடிமைகள் தாங்கள் உயிர்பிழைத்தால் போதுமென ஓடுவதற்கு மாறாக தம் தலைவனைக் காப்பாற்றும் வரை அந்நெருப்பை விட்டு அகலாமல் இருந்தது அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியது. மீட்கப்பட்ட அவர்கள் உடன் வந்துகொண்டிருந்தனர்.

பற்றியெரியும் கலங்கள் நோக்கிக் கோட்டை யிலிருந்த வீரர்கள் எல்லோரும் பாய்ந்து ஓடியதால் திறந்துகிடந்த கோட்டைக்குள் பறம்பின் வீரர்கள் நுழையும்பொழுது கேட்க யாருமில்லை. தேவவாக்கு விலங்கின் கூண்டருகே வந்து நின்றான் நீலன். நான்கு பெருங்கூண்டுகளுக்குள் இருந்தனவற்றை யெல்லாம் கூண்டோடு தூக்கினர் திரையர்கள். எண்ணிலடங்காத குதிரைகள் கட்டுத்தறியில் நின்று கொண்டிருந்தன.

கட்டுத்தறியில் வரிசையாய் குதிரைகள் நிற்பது போலத்தான் துறைமுகத்தில் கலங்கள் நிற்கின்றன. பின்னிரவு கழிந்ததும் துருத்தியில் ஊதுவதைப்போல இடைவிடாது வீசியது கடற்காற்று. காற்றின் வேகம் தழலை வெளியெங்கும் வீசி விளையாடியது. நெருங்க முடியாமல் போராடிக்கொண்டிருந்தனர் பாண்டிய வீரர்கள். இளமருதன் தன்னால் முடிந்ததனைத்தும் செய்துபார்த்தான். எதுவும் ஆகவில்லை. அப்பொழுதுதான் ஓடிவந்தவொரு வீரன் செய்தி சொன்னான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 144p7
நெருப்பினும் கொடுஞ்செய்தியாக அது இருந்தது. தன் வீரர்களோடு அருகிருந்த யவனக்கோட்டைக்குள் ஓடினான். அங்கு கட்டப்பட்டிருந்த குதிரைகளில் ஏறி மேற்திசையில் இருந்த பாண்டியக்கோட்டையை நோக்கி விரைந்தான். வழக்கம்போல அவனது ஆலா காற்றைக்கிழித்து சீறிப்பாய்ந்தது. மற்ற வீரர்கள் அவனைப் பின்தொடர்ந்து விரைவதற்கு நீண்ட நேரமானது.

அவன் பாண்டியர் கோட்டைக்குள் நுழைந்தபொழுது தேவாங்கினைத் தூக்கிக் கொண்டு அந்தக் கூட்டம் போய்விட்டது. இவ்விரவில் நெடுந்தொலைவு போயிருக்க முடியாது என முடிவுசெய்த இளமருதன் தனது படையோடு அவர்களை நோக்கி விரைந்தான்.

திரையர்களைச் சுமந்து செல்லும் குதிரைகளால் ஒருபொழுதும் பாய்ந்து செல்ல முடியாது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதை நீலன் உணர்ந்தான். எனவே தானும் மெதுவாகவே குதிரையைச் செலுத்தினான். விடுவிக்கப் பட்ட அடிமைகளும் குதிரையேறி இவர்களோடு வந்துகொண்டிருந்தனர். அவர்களை விலகிப்போகச் சொல்ல நீலனுக்கு மனமில்லை. தங்கள் தலைவனை ஒரு குதிரையில் தாங்கிப் பிடித்தபடி மற்றவர்கள் சூழ வந்தனர்.

அப்பொழுதுதான் எதிர்பாராமல் இருளுக்குள்ளிருந்து பாய்ந்து வந்திறங்கின ஈட்டிகள். குதிரைகள் சிதறி விலகின. மெதுவாகப் போய்க்கொண்டிருந்த தனது குதிரையை இழுத்து நிறுத்தினான் காலம்பன். கையிலேந்திய எறியுளிகொண்டு சுறாவேட்டையைத் தொடங்கினான். இருளெனும் பெருங்கடலுக்குள் காலம்பன் வீசிய எறியுளிகள், வந்துகொண்டிருந்தவர்களின் உடல்களை இடைவிடாது துளைத்து வெளியேறிக்கொண்டிருந்தன.

தாக்குதலின் கூக்குரலுக்கு நடுவே தங்கள் தலைவனைப் பாதுகாப்பாய்க் கொண்டுசெல்வதிலேயே கவனமாய் இருந்தனர் மீட்கப்பட்ட அடிமைகள். வேகமற்று நடக்கும் திரையர்களின் குதிரைகளை இடைவிடாது வந்து சூழ்ந்தவண்ணம் இருந்தனர் பாண்டிய வீரர்கள். எந்தவோர் ஆயுதத்தையும்விட மிக நீளமானவை எறியுளிகள். எனவே, புழுக்களைக் கோத்துத் தூக்கும் கீற்றோலைபோல அது மனித உடல்களைக் கோத்தெடுத்துக் கொண்டிருந்தது.

இச்சிறு படையை அழிக்க தன் வீரன் ஒருவனே போதும் எனக் காலம்பன் நினைத்தபொழுதுதான் சற்றும் எதிர்பாராதது நடந்தது. முன்னால் போய்க்கொண்டிருந்த நீலனை மறிக்க மின்னல் வேகத்தில் ஒரு குதிரை பாய்ந்து சென்றது. காலம்பன் அதை நோக்கி விரைந்து செல்ல குதிரையை இயக்கிப் பார்த்தான். ஆனால், இவனது குதிரையின் வேகம் கூடவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து சென்றது ஆலா. உருவிய வாளோடு இளமருதன் முன்னால் விரைந்ததற்குக் காரணம். நீலனின் முதுகில் கட்டப்பட்டிருந்த தேவாங்கின் கூடை. எக்காரணங் கொண்டும் அதனை எடுத்துச்செல்ல அனுமதிக்கக்கூடாது என்று வெறிகொண்டு தாக்கினான் இளமருதன்.

ஆலா பாய்ந்து சென்ற வேகம் காலம்பனை சற்றே உலுக்கியது. நீலனை நோக்கி விரைந்து செல்லத் துடித்தான். இருளுக்குள் நிகழும் மோதலில் உருவங்கள் புலப்படவில்லை. எனவே எறியுளியை வீசியெறிய முடியாத நிலை. கணநேரங்கூட காலம்பனால் தாங்கமுடியாமல் குதிரை விட்டிறங்கிப் பாய்ந்து ஓடினான்.

சற்றும் எதிர்பாராமல் வெட்டிவீசப்பட்ட தலையொன்று அவனைக் கடந்துபோய் இருளுக்குள் உருண்டது. காலம்பன் அதிர்ந்து நின்றான். இருளுக்குள்ளிருந்து சீறி வெளியேறியது ஆலா.
ஆலாவின் முதுகில் அமர்ந்திருந்தான் நீலன்.


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 7:57 pm

ளைகட்டியது கூத்து. திசையெங்குமிருந்து பறம்புமலையை நோக்கி அணியணியாய் மேலேறினர் பாணர்கள். கூத்துத் தொடங்கும்முன் தங்களின் பறைகளை நெருப்பிலே சூடேற்றினர். சூடேற்றிய பறையை இழுத்தடித்ததும் ஓசையின் வழி நெருப்பே பரவியது. வைப்பூரை எரித்த நெருப்பு, அருகன்குடியை அழித்த நெருப்பு, யவன நாவாய்களை விழுங்கிய நெருப்பு, கலங்தோறும் கனன்ற நெருப்பு. அந்நெருப்பே பாடலாய் மாறியது. நெருப்பின் பாடலே இரவெங்கும் ஒலித்தது.

பறம்பின் வீரர்கள் நால்வரின் வாயிலிருந்து உமிழப்பட்ட பொறித்துகளை இப்பொழுது நிலமெங்கும் பாணர்கள் உமிழ்ந்துகொண்டிருந்தனர். பாய்மரங்களைவிட உயரத்தில் பறந்துகொண்டிருந்த பாண்டியனின் புகழ்மீது பற்றியெறிந்தது நெருப்பு. கருகி உதிரும் புகழின் சாம்பலேந்தி வழியெங்கும் பாட்டிசைத்தனர் அகவன் மக்கள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 101p1
நீரின்மீது ஆடிய நெருப்பின் நடனத்தை நிலமெங்கும் ஆடிக்களித்தனர் கூத்தர்கள். வணிகர்களின் அச்சு ஒடிவது ஏதோ ஒரு வகையில் மக்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தது. அதனாலேயே இச்செய்தி மக்களின் செய்தியாக மாறியது. சேரனும் சோழனுங்கூட இக்கதைப்பாடலை அவையில் பாடச்சொல்லிக் கேட்டனர். வேந்தர்களில் முதல்நிலையை அடைந்துவிட்டதாகச் செருக்கிக்கொண்ட பாண்டியன் எரிந்த கதை இன்பத்தைச் சுரந்தது. 

பாண்டிய இளவரசனின் மணவிழாவில் நிகழ்ந்த கூத்துகளெல்லாம் இப்பொழுது நிலமெங்கும் கேலிக்கூத்தாய் நிகழ்ந்து கொண்டிருந்தன. செல்வத்தின் கருநிழலில் கால்மிதித்து ஆடினர் கலைஞர்கள். ஓடோடிகளும் நாடோடிகளும் தமக்கான பாடலை தமது நரம்பெடுத்து மீட்டனர்.
ஆக்கத்தில் கிடைக்கும் இன்பம் அழிவிலும் கிடைக்கும். இவ்வழிவு தற்செயல் என்றுதான் எல்லோரும் நம்பினர். ஆனால், முற்றிலும் எரிந்த தீயிலிருந்து எரியாமல் வெளிவந்தது உண்மை. இது தற்செயல் அல்ல, தாக்குதல் எனத் தெரியவந்தது. தாக்கியது திரையர் கூட்டம் என்பது அறியவந்தது. உடனிருந்தது பறம்பு மக்கள் என்பதும் புரியவந்தது. அவ்வளவு காலமும் பரவிய நெருப்பைப் பற்றிய கதை, இப்பொழுதுதான் நெருப்பாய்ப் பரவத் தொடங்கியது. வேள்பாரியின் சீற்றம் கடல்தொட்டுத் திரும்பியதெனத் தென்பறை முழங்கினர் பாணர்கள்.

நெருப்பைவிட வேகமாகப் பரவக்கூடியது கதை. நெருப்பைவிட அதிகமாகச் சுடக்கூடியது கதை. நெருப்புகொண்டும் எரிக்கமுடியாதது கதை. எனவே இக்கதை பரவுவதைத் தடுக்கவோ, எரிவதை நிறுத்தவோ, சுடுவதை மறைக்கவோ யாராலும் முடியவில்லை. இந்நெருப்பை நீர்கொண்டு அணைக்க முடியாது. ஏனென்றால் இந்நெருப்பே நீரின் மீதுதான் எரியத்தொடங்கியது. கடைசிவரை நீரின் சாட்சியாகவே எரிந்து தணிந்தது.

வெஸ்பானியனின் உடலிற்படர்ந்த தீயை அணைக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை. நதியிலே தள்ளிவிட்டுக் காப்பாற்றிவிடலாம் என நினைத்து நெருப்போடு நீருக்குள் தள்ளினர். அவன் நீரில் விழுந்த சில கணங்களில்தான் எரிந்துகொண்டிருந்த ஹிப்பால்ஸ்ஸின் நாவாய் வெடித்துச் சரிந்தது. வெஸ்பானியன் எரிந்து மூழ்கினானா, மூழ்கி எரிந்தானா என்பது தெரியாமலே போய்விட்டது.

எண்ணிலடங்காத முத்துப்பெட்டிகள் ஏற்றப்பட்ட நாவாய் அது. ஒவ்வொரு வணிகனும் பெரும்மகிழ்வோடு கணக்கிலாத பொருள்களை வாங்கிக் கலம் நிறைத்துப் புறப்படும் வேளையில் நெருப்புநடனம் நிகழ்ந்ததால், கலத்திலிருந்த பொருள்களின் அளவு கணக்கிட முடியாததாக இருந்தது.
சந்தை அழிந்த கதையை வழித்தடங்கள் மறக்காமல் எடுத்துச்சென்றுவிடுகின்றன என்பார்கள். இப்பொழுதும் அதுவே நடந்தது. ஒரு துறைமுகம் முழுமுற்றாக அழிந்த கதையை கடல்வழி பயணித்த கலங்கள் எல்லாம் எடுத்துச்சென்றன. நாவாய்கள் ஒதுங்கும் துறைமுகமெங்கும் வைப்பூரின் கரிக்கட்டைகள் கரையொதுங்கின.

கடலிருக்கும் வரை இக்கதை இருக்கும். பாம்பின் தலையை நசுக்குவதைப்போல வைகையின் தலையில் இருந்த துறைமுகத்தை நசுக்கி அழித்தான் வேள்பாரி என்ற வரலாறு நிற்கும்.

வரலாறெங்கும் கேட்டிராத கதையாக இது இருந்ததற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது, உலகம் இதுவரை கேட்டிராத செய்தி. நீரின் மீது நெருப்பு மூன்று நாள்கள் நின்று எரிந்தது என்னும் செய்தி. எனவே அது பாணர்களின் கற்பனையைத் தாண்டிய கருப்பொருளாக இருந்தது. எரிபொருளே கருப்பொருளானதால் நிற்காமல் எரிந்தது. சுடும்சொற்கள் பற்றியெரிய, எரியும் நெருப்பு சொல்லெனச் சுட்டது.

பாடும் ஒவ்வொருவனும் ஒவ்வொரு கதையைப் பாடுகிறான். உண்மையில் என்னதான் நடந்தது என்பதை அறிய அளவற்ற ஆர்வத்தோடு இருந்தான் பாரி. மழைக்காலம் முடிந்ததும் நிலமெங்குமிருந்து பாணர்கள் பறம்பிற்கு மலையேறத்தொடங்குவது வழக்கம். இவ்வாண்டும் அப்படியே.
பறம்பின் தாக்குதலை எழும் அலைகளும் வீசும் காற்றும் எங்கும் பேசிக்கொண்டிருக்க, துள்ளிக்குதித்து மலையேறினர் பாணர்கள். நாள்தவறாமல் எவ்வியூரில் கூத்து நிகழ்ந்தது. கிணைகொண்டு பாடும் கிணையர் கூட்டம்தான் வைப்பூரின் கதையை எவ்வியூருக்கு வந்து முதலில் பாடியது. இத்தாக்குதல் இவ்வளவு பெரிதாக நிகழ்ந்துள்ளது என்பதை பாரி உள்ளிட்ட அனைவரும் அன்றுதான் அறிந்தார்கள். 

கிணையர் குலத்துக் கிழவன்தான் வைப்பூரின் பெருமையை சங்கூதும் குரலில் இழுத்துப் பாடினான். வைகையின் வாய்முகப்பகுதி, கடலை முத்தமிட்டு முத்தமிட்டுப் பின்வாங்கும் அதன் அழகு, கலங்கள் வந்து நிற்கும் வரிசையை ஒருபோதும் சேதப்படுத்தாத காற்று, பாண்டியனின் மகுடத்தில் ஒளிரும் பொன்நிறக் கல் அது என்று அதன் பெருமையைச் சொல்லி முடித்ததும் இளங்கிணையன் களம் இறங்கினான்.

அவன் இறங்கியதும் கிணையர்குல ஆடுவன் கூட்டம் உள்ளிறங்கியது. ஆண்களும் பெண்களும் சூழ வலம்வந்தனர். கிணைப்பறையின் ஒலிக்குறிப்பு அவர்களுக்கான நுணுக்கங்களைச் சொல்லிக்கொண்டிருந்தது. காலம்பன், பாரியின் இடப்புறம் அமர்ந்திருந்தான். ஏதோ ஒரு கூத்தினைப் பார்க்கிறோம் என்ற எண்ணத்தில்தான் அவன் அமர்ந்திருந்தான். அந்தக் கூத்தின் நாயகன் அவன்தான் என்பது தொடக்கத்தில் புலப்படவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 101p2
நெருப்பின் அகன்றவாய் கலங்களை மென்றுதின்றபொழுது பல்லுக்குள் சிக்கிக்கொண்ட பாய்மரத்தினை ஒடித்து உள்ளே தள்ளினான் காலம்பன் என்றான் கிணையன். கேட்டுக் கொண்டிருந்த காலம்பன் அதிர்ந்து உட்கார்ந்தான். கூட்டம் எழுப்பிய உற்சாக ஒலி விண்ணைத் தொட்டது. தாங்கள் பாடும் கதையின் நாயகன் தங்களின் கண்முன்னால் உட்கார்ந்திருக்கிறான் என்பது கிணையர்களுக்குத் தெரியாது. வீரனின் வாள் கலைஞனின் சொல்லாக மாறினால் என்னவாகும் என்பதை முதன்முறையாகப் பார்த்துக்கொண்டிருந்தான் காலம்பன்.

எறியுளியால் எண்ணற்ற வீரர்களின் உடல்களைச் செருகியபடி தோளிலே தூக்கிவந்த காலம்பனின் உடல்வாகினை இளங்கிணையன் பாடியபொழுது கூத்தரங்கு அதிர்ந்தது. எழுந்த பேரோசை கிணைப்பறையின் ஓசையை விஞ்சியது. அகலவிரித்த கையால் ஒருமுகப்பறையை ஓங்கியடித்துப் பேரொலி எழுப்புவதைப்போல தனது தொடையிலடித்து ஒலியெழுப்பினான் பாரி.  

ஆடுவன் கூட்டம் தாக்குதலின் வலிமையை வர்ணிக்கத் தொடங்கியபொழுது பாரியால் இருக்கையில் உட்கார முடியவில்லை. காலம்பனின் வீரச்செயல் பறம்புக்குடிகளுக்கே பாடம் சொன்னது. இசையும் கூத்தும் உச்சியில் ஏறிநிற்க, பரிமாறப்படும் தாக்குதலின் விபரங்கள் கூத்துக்களத்தைப் போர்க்களமாக்கின. சீறியெழும் சினங்கொண்டு பகைமுடிக்கும் ஒற்றைச் சொல்லோடு பாடலை முடித்தான் இளங்கிணையன்.

கூத்துக் கேட்டவர்களின் ஆவேச உணர்ச்சி எல்லையற்றதாக இருந்தது. கூட்டத்தில் உட்கார்ந்திருந்த திரையர்கள் கண்ணீர்பெருகப் பார்த்திருந்தனர். தங்கள் குலத்தலைவனைப் பற்றிப் பாடப்படும் முதற்பாடல் அது. காலம்பன் உறைந்து நின்றபொழுது எதிரில்வந்து வணங்கி நின்றான் பாரி.
பாடிய கிணையர்களுக்கு, தங்களது கதையின் நாயகன் இவன்தான் என்று அப்பொழுதுதான் புரியத்தொடங்கியது. காலம்பனைக் கண்கொண்டு பார்த்ததும் தாங்கள் செய்த தவற்றை உணர்ந்தனர். காலம்பனை “விரிந்த மார்பன்” என்று தவறாகப் பாடிவிட்டோம். இவன் விரிந்த மார்பனல்லன், எதிரி தன் இருகையை எவ்வளவு விரித்து வந்தாலும் “அடங்காமார்பன்” என்று சொல்லி மறுபாடலைத் தொடங்கினான் இளங்கிணையன். 

இப்படித்தான் தொடங்கிய கூத்து எதுவும் விடியும் வரை முடிவதில்லை. மறுநாள் இன்னொரு பாணர்குழு வந்து சேரும். மீண்டும் வைப்பூர் பற்றியெரியும். கடலில் கலந்த நாவாய்களின் சாம்பல் கதையெங்கும் மிதக்கும். இடுக்கையும் உடுக்கையும் அந்தரியும் ஆகுளியும் உறுமியும் முழவுமாக கருவிகளின் முழக்கத்துக்கு ஏற்ப வைகையின் நெருப்பு வடிவுகொள்ளும்.

எவ்வியூர் மக்களுக்கும் வந்துசேர்ந்த திரையர் கூட்டத்துக்கும் பெருந்துன்பத்திலிருந்து மேலேற வேண்டிய தேவையிருந்தது. அந்தத் தேவையைக் கூத்துகளே இட்டு நிரப்பின.

நாள்கள் நகர்ந்தன. திரையர்குடி பறம்புக்குடியானது. திரையர்குலத்தின் மூத்த பெண்ணொருத்தி கூடை நிறைய பழங்களைக் கொண்டுவந்து கொற்றவையின் முன்னால் பரப்பினாள். வழிபாடு தொடங்கப்போகும்முன் நடக்கும் சடங்கிது. வைக்கப்பட்ட பழங்களுக் கெல்லாம் குலநாகினி கண்திறக்க முயன்றபொழுது தேக்கன் தடுத்தான். “கண்திறக்காத பழங்களே திரையர்களைக் கொண்டுவந்து சேர்த்தது” என்றான். குலநாகினிக்குப் புரிந்தது. கூட்டத்துக் குள்ளிருந்த அலவனை அருகில் வரச்சொன்னாள். ஏனென்று அவனுக்குப் புரியவில்லை. தயங்கியபடி அருகில் வந்தான். அள்ளி முத்த மிட்டாள் குலநாகினி. ஏனென்று திரையர்களுக்குப் புரியவில்லை. அலவனின் கண்ணில் நீலவளையம் பூத்து அடங்கியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 101p3
கொற்றவையை வணங்கி மண்ணெடுத்து காலம்பனின் நெற்றியில் பூசினாள் குலநாகினி. குலவையொலி பெருகி மேலேறியது. பறவைகளின் படபடப்பையும்மீறி வெளிக்கேட்டது தேவவாக்கு விலங்கின் குரல்.

ஓசைகள் அடங்கியதும் பறம்பின் ஆசான் அறிவித்தான், “வழக்கமாக பதினாறு குலங்களுக்காக நடைபெறும் கொற்றவைக்கூத்து அடுத்தமுறை பதினேழு குலங்களுக்காக நடைபெறும். ஆனால் தேவவாக்கு விலங்கு பழமெடுத்துக் கொடுத்துத் தொடங்கும் கதையல்ல திரையர்களின் கதை. தேவவாக்கு விலங்கையே எடுத்துக்கொடுத்துத் தொடங்கும் கதை” என்றான்.

கூட்டத்தின் குலவையொலி காட்டைக் கிட்டித்தது. திரையர்குலப் பெண்ணொருத்தி உடல்சிலிர்த்து ஆடத்தொடங்கினாள். தூதுவையின் நினைவோடு அருளாட்டம் தொடங்கியது. உருமிகள் நரம்பினை முறுக்கின. அவள் ஆடும் பரப்புக்கேற்ப கூட்டம் விலகிக்கொடுத்தது. நேரமாக ஆக ஆட்டத்தின் ஆவேசம் உச்சங்கொண்டது. கைகளைத் திருகி, முறுக்கி தலைசுற்றி நிமிரும் அவளின் முகம் எதிர்கொள்ள முடியாததாக இருந்தது. பொழுதாவதை உணர்ந்து ஆடுபவளை நிலைகொள்ளச்செய்ய குலநாகினி களமிறங்கினாள்.

திரையர்குலப் பெண்களின் உடல்வாகு எளிதில் அடக்கமுடியாதது. உயரத்திற்கும் உறுதிக்கும் இணையற்றது. அதுவும் அருளிறங்கி ஆடும் பெண்ணை அணைத்து நிறுத்த எவரால் முடியும்? எவ்வளவு முயன்றும் குலநாகினியால் எதுவும் செய்ய முடியவில்லை. 

கொற்றவைக் கூத்தின்பொழுது மற்ற குலப்பெண்கள் இரண்டு, மூன்று பேர் அருளிறங்கி ஆடினாலும் இறுதியில் அடக்கி நிறுத்துபவள் குலநாகினி. தோற்றத்திலும் உடல்வலுவிலும் இணையற்றவளான பறம்பின் மூதாய் குலநாகினி. திரையர்குலத்தின் ஒற்றைப்பெண்ணை எதுசெய்தும் நிறுத்த முடியவில்லை. பார்த்துக் கொண்டிருந்த வேளிர்குலப் பெண்களுக்கு வேர்த்தது.

உறுமியின் நீளோசையும் உருண்டோடும் குலவையொலியும் சூழலின் ஆவேசத்தை அதிகமாக்கிக்கொண்டே இருந்தன. நிலைமையை எப்படிக் கைக்கொள்வதென்று யாருக்கும் புரியவில்லை.

பாரியின் எண்ணங்கள் எங்கெங்கோ போய்த் திரும்பிக்கொண்டிருந்தன. குலங்கள் தாங்கள் அழிந்த கதைகளோடு களமிறங்கிவிட்டால் அவர்களை ஒருபோதும் ஆற்றல்கொண்டு நிறுத்த முடியாது. அவர்களை நிறுத்துவதற்கான வழியைக் கதைகளுக்குள்தான் கண்டறிய வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது அருகிருந்த ஆதினி சொன்னாள், “சூலிவேளினை வணங்கி ஆண்வெற்றிலையைக் கொண்டுவந்து அரங்கில் வையுங்கள். ஆவேசம் தணிந்து அமைதியடைவாள் தூதுவை.”

குரல்கேட்டு அதிர்ந்தான் பாரி. செய்வதறியாது திகைத்துக்கொண்டிருந்த அரங்கம் ஆதினியின் குரலை இறுக்கிப்பற்றியது. சிறிதுநேரத்திலே ஆண்வெற்றிலையைக் கொண்டுவந்து பாரியின் கையில் கொடுத்தனர்.

சூலிவேலினை நினைத்தபடி அரங்கின் நடுவே ஆண்வெற்றிலையை வைத்து வணங்கி நின்றான் பாரி. கொற்றவையின் முன்னால் அடங்கி அமர்ந்தாள் தூதுவை.

புதிய மரபுகள் உருவாகிக்கொண்டு தானிருக்கின்றன. குலங்கள் அழிபட்டு பறம்புக்கு வந்துசேர்ந்தபொழுது இப்படித்தானே தம் முன்னோர்கள் மரபுகளை உருவாக்கியிருப்பார்கள் என்று பெரியவர்கள் பேசிக்கொண்டனர்.

“மலைமக்களின் எந்தவொரு குடியும் இனி தனித்து வாழமுடியாது. குடிகளை இணைத்து நாடாக்காமல் விட்டுவிட்டோம். நாட்டின் அமைப்புகளை உருவாக்காமல் இனி எக்குடியும் தப்பிப்பிழைக்காது என்ற எண்ணங்கள் உருவானபொழுது தப்பிப்பிழைத்த குடிகள் எதுவுமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. பறம்பு மட்டுமே நமக்கு மிஞ்சியுள்ள ஒரே இடம். இதனை என்றென்றும் காத்து நிற்பர்  எம் குலவழியினர்” என்று ஆவேசங்கொண்டு சூளுரைத்தான் காலம்பன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 101p4
சேரனின் அவையிலும் வைப்பூர் எரிந்த கதை பாடப்பட்டது. உதியஞ்சேரலின் கன்னங்கள் பூரிப்பில் சிவக்கும் அளவிற்கு வைப்பூர் நெருப்பு சுகங்கொடுத்தது. குளிருக்காக நெருப்பை அணைத்து மகிழ்வதைப்போல, மகிழ்வுக்காக நெருப்பை இடைவிடாது அணைத்துக்கிடந்தான் உதியன்.

குரல்வாய்ப் பாணர்களின் போட்டிப் பாடல்கள் நாள்தோறும் நடந்தன. “கூலங்கள் எரிவதைப்போல கலங்கள் எரிந்தன” என்றான் ஒருவன், “நீரிலே மூழ்கும் வேழத்தின் கருமையேறிய முதுகினைப்போல கருகிய நாவாயின் அடிமரங்கள் ஆற்றிலே புதைந்தன” என்றான் மற்றொருவன். “பாண்டியனின் பதாகையில் பறந்துகொண்டிருந்த மீன்கள், எரிந்த நெருப்பின் சூடு தாங்காமல் ஆற்றுநீரிலே செத்து மிதந்துகொண்டிருந்தன” என்றான் இன்னொருவன். கடைசி ஆள் கவிதையை முடித்தான், “பாண்டியன் இனி சுடப்பட்ட மீன்”
மறுநாள் கூத்துக்கலைஞர்கள் உள்ளே நுழைந்தனர். பொருள்கள் ஏற்றப்பட்ட கலங்களில் பற்றிய நெருப்பு என்ன வாசனைகொண்டிருந்தது என்பதை ஒரு பாணன் விளக்கிப் பாடினான். கலங்களின் வடிவத்தையும் நெருப்பின் வேகத்தையும் பாடுவதைவிடுத்து எரிந்தபொருள்களை நினைவுபடுத்தியதற்காக பெரும்பொருளைப் பரிசாகக்கொடுத்தான் உதியஞ்சேரல். அதன்பின் வைப்பூரில் எரிந்த நெருப்பின் வாசனை சேரனின் அவையில்  நாள்தோறும் மணக்கத் தொடங்கியது.

சந்தனமும் அகிலும் எண்ணற்ற வாசனைப் பொருள்களும் இருந்த பிற கலங்கள் எரியும்பொழுது எழுந்த வாசனையை விவரித்துக் கூறின பல பாடல்கள். மிளகும் பாக்கும் கருகிய வாசனையைப் பாடிய கூத்தனுக்கு அள்ளிவழங்கினான் சேரன். அரிசந்தனமும் இலவங்கமும் பாதியெரிந்து மூழ்கியபொழுது எழுந்த வாசனை பற்றி மிகநுட்பமான குறிப்பை  பாடினி ஒருத்தி பாடினாள். அவளுக்கு உதியஞ்சேரல் கொடுத்த பரிசுப்பொருள்கள் பற்றித் தனிப்பாடலே உருவாயிற்று.

சேரனின் தலைநகரான வஞ்சி முழுக்க வைப்பூரின் வாசனையே மிதந்தது. ஆனாலும் உதியஞ்சேரலுக்கு ஆசை அடங்கவில்லை. ஒரு கட்டத்தில் கூத்தர்களின் வாய்மொழி சலிக்கவே, வணிகர்களின் நேரடிக்கதறல் அவனுக்குக் கூடுதல் மகிழ்வைக் கொடுத்தது. துறைமுகத்தில் வந்திறங்கும் ஒவ்வொரு வணிகனும் ஒவ்வொரு கதையோடு வந்திறங்கினான். பெருவணிகன் என்று இறுமாப்புக்கொண்ட பலரின் கதை வைப்பூரோடு முடிவுக்கு வந்தது. சாத்துக்களின் தலைவன் சூல்கடல் முதுவன் இனி எந்தத் துறையிலும் தலைநிமிர்ந்து நுழையமுடியாது. அதுமட்டுமல்ல, பாண்டியனுக்குப் பெண்கொடுத்ததால் சாத்துக்களின் தலைவனுக்கே இந்தக் கதி என்பது கடல்போல் நிலைகொண்டுவிட்டது.

அழிந்த நாவாய்களுக்கும் கலங்களுக்கும் உரிமையாளர்கள் இழப்பைப்பற்றித் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட இழப்பு அளவிடமுடியாததாக இருந்தது. எல்லாம் அழிந்தது என்று பல வணிகர்கள் கதறியபடி கடலுக்குள் சென்றனர். ஒவ்வொருவரின் கதையையும் கேட்டு உள்ளுக்குள் மகிழ்வோடு அரண்மனை திரும்பினான் உதியஞ்சேரல்.

துறைமுகம் வந்திறங்கிய வணிகர்கள் எல்லோரும் அழிந்த கதையைத்தான் சொன்னார்கள். யவனக்கப்பலில் பயணஞ்செய்த மொழிபெயர்ப்பாளன் ஒருவன், அழிந்த கதையை மட்டுமல்லாமல் அழித்தவர்களின் கதையையும் சேர்த்துச் சொன்னான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 101p5
அவன் ஹிப்பாலஸ்ஸின் நாவாயில் பணியாற்றியவன். பாண்டிய மன்னனின் பரிசாக முசுகுந்தர் கொடுத்த புதிய அடிமைகளைக் கப்பலின் மேல்தளத்தில் ஏற்றியதிலிருந்து அவன் கதையைத் தொடங்கினான். நடந்தவை எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். கதைகேட்ட உதியஞ்சேரலின் செவிகளில் பொறித்துகளை உமிழ்ந்தவன் அவன்தான்.

வாய்பிளந்து கேட்டுமகிழ்ந்த உதியஞ்சேரல் வாய்மூடி அமைதியானான். பாரிதான் இவ்வளவையும் செய்தான் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அதன்பின் உதியஞ்சேரல் யாரிடமும் கதை கேட்கவேயில்லை. ஆனாலும் அதுவரை அவன் கேட்ட கதைகள் எல்லாம் அவனைச் சும்மா விடவில்லை. வைப்பூரில் எரிந்த நெருப்பின் சூடு வஞ்சிமாநகருக்கும் பரவியது.

நெருப்பு சுடத் தொடங்கியது. பறம்புமலை இருக்குமிடத்துக்கும் வைப்பூர் இருக்குமிடத்துக்கும் எந்தத்  தொடர்புமில்லை. நிலப்பரப்பால் தொடர்பே ஏற்படுத்திக்கொள்ள முடியாத பகுதியையே முற்றிலும் அழித்துள்ளான் வேள்பாரி. அதுவும் சின்னஞ்சிறு படையை மட்டுமே அனுப்பி. நாள்தோறும் சேரன் கேட்ட கதைகள் புதிய புதிய  சான்றுகளை அவனுக்குள் இருந்தே எடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் தனக்குத்தானே எரியத் தொடங்கினான்.

பதற்றம் கூடியது. பறம்புமலை நோக்கிப் பாதையை உருவாக்கும் திட்டம் ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது.  ஒன்றிரண்டல்ல, பல முனைகளிலிருந்தும் அடர்காட்டைக் கிழித்து சேரவீரர்கள் உள்நுழைந்துள்ளனர். ஏற்கெனவே வகுத்த திட்டப்படி படைகள் புறப்படவேண்டிய நாள் மிக அருகில் இருக்கிறது. ஆனால், படுக்கையிற்கிடந்த உதியஞ்சேரலின் உடற்சூடு அளவிட முடியாததாக இருந்தது.

தைகேட்டு மகிழ்ந்தபடி இருந்தான் செங்கனச்சோழன். பேரரசர் சோழவேழனின் மகன். முதலில் அவனுக்குத்தான் பொற்சுவையைப் பெண்கேட்டனர். எல்லாம் நல்லபடியாக முடியும் என்று சோழவேழன் நம்பியிருந்த பொழுதுதான், குலசேகர பாண்டியன் முத்துக்களை உருட்டிவிட்டு விளையாடத் தொடங்கினான். சூல்கடல் முதுவனின் சொற்கள் உருளும் முத்துக்களை மிதித்துச் சரிவுகண்டது. மண ஒப்பந்தம் பாண்டியர்களோடு என்று ஆனது.

உள்ளுக்குள் அவமானத்தை உணர்ந்தபடி இருந்த சோழவேழன் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இயல்பிலேயே தங்களைவிட சேரர்களும் பாண்டியர்களும் வலிமையோடு இருக்கின்றனர் என்று அவனுக்குத் தெரியும். அந்த வலிமைக்கு முக்கியக் காரணமாக வணிகமும் இருந்தது. எனவேதான் வணிகர்குலம் நோக்கி அவன் பெண்பார்க்கத் தொடங்கினான். ஆனால், நிலைமை கைமீறிப் போய்விட்டது.

திருமணச்செய்தி வந்துகொண்டே இருந்தது. அவமானங்களைக் கடக்க பெரும் பாடுபடவேண்டியிருந்தது. மாதக்கணக்கிற்பட்ட அவமானத்தை வந்துசேர்ந்த ஒற்றைச்செய்தி துடைத்தெறிந்தது. நினைத்து நினைத்து மகிழ்ந்தான். “ஒரு துறைமுகமே அழிந்ததா?” மீண்டும் மீண்டும் கேட்டான். கேட்டுக் கேட்டு மகிழ்ந்தான். 

தந்தையின் அறைக்குள் நுழைந்தான் செங்கனச்சோழன். உடனிருந்தவர்கள் விலகி வெளியேறினர். மகிழ்ந்துகிடக்கும் தந்தையைப் பார்த்து மகன் கேட்டான், “பாண்டியன் எரிந்ததற்கே இவ்வளவு மகிழ்கிறாயே! பறம்பு எரிந்தால் எவ்வளவு மகிழ்வாய்?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 101p6
அதிர்ந்தான் சோழவேழன். மகனின் ஆற்றல் அவனுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இவ்வளவு இளம்வயதில் முடிசூட்ட வேண்டுமா என்று பலரும் தயக்கம் காட்டியபொழுதும் துணிந்து செங்கனனுக்குப் பட்டம் சூட்டினான். அதிர்ச்சியிலிருந்து மீளாமலே கேட்டான் சோழவேழன், “முடியுமா மகனே?”

“இதுநாள் வரை இவ்வினாவிற்கு  விடையின்றி இருந்தேன். இப்பொழுது அதனை அறிந்துவிட்டேன்”

“எப்படி?”

“நம்மையோ, நமது முயற்சியையோ இதுவரை பாரி அறியவில்லை. இனிமேல் அவன் அறியப்போவதேயில்லை. ஏனென்றால் அவனது முழுக்கவனமும் திசை திரும்பிவிட்டது.”

அவன் சொல்ல வருவதை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தான்.

 “ஏற்கெனவே அவமானப்பட்டு நிற்கும் சேரனும் புதிய அவமானத்தோடு நிற்கும் பாண்டியனும் இப்பொழுது ஒன்றிணைவார்கள். பறம்பின் கீழ்திசையிலிருந்தும் மேல்திசையிலிருந்தும் இவர்களின் படை நகரும். இருபெரும் பேரரசுகளின் தாக்குதலை முழுமூச்சோடு எதிர்த்து வலிமையோடு போர்புரிவான் பாரி” சொல்லி நிறுத்தினான் செங்கனச்சோழன். கண்ணிமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான் சோழவேழன்.

தலைதிரும்பி கருவிழியை உருட்டியபடி சொன்னான், “ஆளரவமற்றுக் கிடக்கும் பறம்பின் வடதிசை மலைகளுக்கிடையே நம் படைகள் நகரும் ஓசையை அவன் உணரப்போவதேயில்லை.”

கண்ணிமைக்காமல் இருந்த சோழவேழன் அப்பொழுதுதான் தலைகுலுக்கி நினைவுமீண்டான். “நான் தாக்கப்போவது பறம்பின் தலைநகரையோ, பாரியையோ அல்ல” சொல்லியபடி இருக்கை விட்டு எழுந்தான் செங்கனச்சோழன்.

அவனுடைய சொற்களால் கட்டப்பட்டிருந்த சோழவேழனும் இழுபட்டு எழுந்து அவன் பின்னே சென்றான்.

“நாட்டை ஆள்பவர்கள் காட்டை ஆள நினைக்கும் மூடத்தனத்தை சேரனும் பாண்டியனும் செய்யட்டும். நான் ஆள்வதற்குப் பறம்பில் எதுவும் இல்லை. ஆனால், அடைவதற்கு ஒன்றிருக்கிறது. அதனை அடைவேன்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 8:21 pm

பிலரின் முகம் இவ்வளவு கலக்கத்துடன் எப்பொழுதும் இருந்ததில்லை. முதிர்ந்தமரம் பட்டையை உதிர்ப்பதைப்போல அனுபவத்தை உதிர்த்தபடி வானத்தைப் பார்த்துச் செழித்திருக்கும் திருமுகம். தெளிவுகொண்ட அவரின் சொற்கள் எச்சூழலிலும் மனதைத் துவளவிடாதவை. ஆனால், இப்பொழுது பெருங்குழப்பம் அவருள் சூழ்ந்துள்ளது. சொற்களை விட்டு விலகி அமைதிகொண்டே நின்றார்.

சொற்களின் மீது தன் ஆசான் எவ்வளவு காதல்கொண்டவர் என்பதை அங்கவை அளவுக்கு உணர்ந்தவர் பறம்பில் வேறு யாருமில்லை. எழுதக்கற்கும் வரை உலகைச் சொற்களின் வழியாகப் பார்த்துப் பழகியவர்கள், எழுதக்கற்ற பின்தான் உலகை விழுங்கி நகரும் ஆற்றல் சொற்களுக்கு உண்டு என்பதை உணர்வார்கள். அவ்வாற்றலை உணர்த்திய ஆசான் சொற்களிடமிருந்து இவ்வளவு விலகி நிற்பதேன் எனக் காரணம் புரியாமல் திகைத்தாள் அங்கவை.

பிற்பகல் நேரத்தில், வேயப்பட்ட குடிலில் அவர்கள் அமர்ந்திருந்தனர். ஆசான் சொல்வதை அங்கவை எழுதிக்கொண்டிருந்தாள். மன ஈடுபாடின்றிச் சொல்லும் ஒற்றைச்சொல்கூட ஒருவரைக் காட்டிக்கொடுக்கும்; இன்னொருவரால் கண்டறியப்படும். குனிந்து எழுதிக்கொண்டிருந்த அங்கவை தலைநிமிரவில்லை. சொல்லப்பட்ட சொல்லின் வழியே ஆசானின் எண்ணத்துக்குள் போக முயன்றுகொண்டிருந்தாள். எழுத்தை விட்டு வெளியேதான் அங்கவையின் மனம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைக் கபிலரும் அறிவார். இருவரும் தெரிந்தேதான் ஒளிந்துகொண்டிருந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 83p1
குடிலின் மறைப்புக்குப் பின்னால் பறவையின் கீச்சொலி கேட்டது.  குனிந்து எழுதிக்கொண்டிருந்த அங்கவை நிமிர்ந்துபார்த்தாள். அவளால் குரலோசையைவைத்துப் பறவையைக் கணிக்க முடியவில்லை. மீண்டும் ஒருமுறை கீச்சொலி கேட்டது. கழுத்தை நீட்டிப்பார்த்தாள்; தெரியவில்லை.

“வெளிப்புறம் போனால்தான் கண்டறியமுடியும்” என்றார் கபிலர்.

ஆசான் சொல்லிமுடித்த கணத்தில் அவரது எண்ணத்தை அறிந்தாள் அங்கவை. எழுந்தவள் அப்படியே உட்கார்ந்தாள். கண் கலங்கியது. அவளால் எதுவும் பேசமுடியவில்லை.

“ஏன் போகாமல் உட்கார்ந்துவிட்டாய்?”

அங்கவையிடமிருந்து மறுமொழி வரவில்லை.

“இதைப்போல்தான் என்னாலும் போகமுடியவில்லை.”

சற்றே அமைதிக்குப்பின் மெல்லிய குரலில் கேட்டாள், “பறம்பிலிருந்துகொண்டு உங்களால் கண்டறிய முடியாத உண்மையென்ன ஆசானே?”

அவள் நிமிரவில்லை. கலங்கிய கண் ஆசானுக்குத் தெரியவேண்டாம் என நினைக்கிறாள் என்பது அவருக்குப் புரிந்தது.

“தேவவாக்கு விலங்கிற்காக இவ்வளவு பெரியமுயற்சி ஏன் செய்யப்பட்டது?”

தலைநிமிர்ந்து பார்த்தாள் அங்கவை.

“வைப்பூரும் அருகன்குடியும் எரிந்தபின் பாண்டியன் அடுத்து செய்யப்போவதென்ன?”

கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 84p3

“இதைப்போல எண்ணற்ற கேள்விகளுக்கான விடை பறம்பை விட்டு வெளியில் போனால்தான் கிடைக்கும். ஆனால், பாரியைப் பொறுத்தவரை இக்கேள்விகள் எதற்கும் விடை அறியவேண்டிய தேவையில்லை என்று கருதுகிறவன்.”

“உங்களைப் பொறுத்தவரை?”

“இக்கேள்விக்கான விடை பறம்பின் எதிர்காலத்தோடு தொடர்புடையது. இதை அறிதல் அவசியம்.”

“உங்களை நான் நன்கு அறிவேன்” என்று சொல்லிவிட்டு, சற்று இடைவெளியுடன் தொடர்ந்தாள், “கட்டாயம் என்று கருதியிருந்தால் நீங்கள் போயிருப்பீர்கள். போகாமல் இருக்க அதனினும் பெருங்காரணம் இருக்க வேண்டும்.”

வியப்போடு அங்கவையைப்  பார்த்தார் கபிலர். பார்க்கும்பொழுதே தலையசைத்துக் காரணம் உண்டு என்பதைத் தெரிவித்தார்.

“என்ன?” என்று அவள் கேட்கவில்லை. ஆசான் தன்னுள் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறார். அவர் நினைக்கும் சொற்களின் மேல் கால்பதித்து நடந்து வரட்டும் என்று காத்திருந்தாள்.

“நான் வெளியிற் போவது பறம்புக்கு நல்லதல்ல.”

எதிர்பாராத சொல்லாக இருந்தது. இந்தச் சொல்லிற்குள் இருக்கும் ஆழம் புரியவில்லை. கண்களை உருட்டியபடி அவரைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

கபிலர் சொன்னார், “பறம்பின் உள்ளடுக்கு களைப்பற்றி, எவ்வியூரைப்பற்றி, பாரியைப்பற்றி, இங்குள்ள வாழ்வைப்பற்றி வேந்தர்களுக்கு எதுவும் தெரியாது. இரவில் கூத்துநிகழ்த்திச் செல்லும் பாணர்களின் பார்வையில்தான் அவர்கள் பறம்பைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

வியந்ததை, அறிந்ததை, உணர்ந்ததைப் பாடித்திரிவதுதான் எனது தொழில். ஆனால், எனது வாழ்வு முழுக்க வியந்து, அறிந்து, உணர்ந்தவற்றைவிட, பறம்பில் நான் உணர்ந்தவைதாம் அதிகம். எனது மொழியே பறம்பின் மொழியாகிவிட்டது. எனது குரல் குறிஞ்சியின் குரலாகிவிட்டது. இனி நான் பாடும் ஒவ்வொரு பாடலும் பறம்பின் பாடல்தான். நான் என்னைப் பறம்பனாக உணர்ந்துவிட்டேன்” சொல்லி நிறுத்தினார் கபிலர். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 84p2
அங்கவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அதுதான் எனது அச்சத்திற்குக் காரணம்” கபிலரின் குரல் இறுகியது.

“பறம்பின் ஆற்றல் ஒவ்வொரு செடியிலும் கொடியிலும் மலையிலும் மடுவிலும் இருக்கிறது. நான் இங்குள்ள மனிதர்களைப் பாடாமல் இயற்கையை மட்டுமே பாடினாற்போதும், எதிரிகளுக்கு அதைவிடச் சிறந்த போர்க்குறிப்பு வேறொன்றும் இல்லை.”
அங்கவை உறைந்து நின்றிருந்தாள்.

“பறம்பின் வளமும் வாழ்வும் யாரையும் மயக்கி இழுக்கும். அவற்றோடு எனது சொல்லும் சேர்ந்தால் எழும் ஆபத்து அளவிட முடியாததாகி விடும். ஆசையின் நாக்குகள் பறம்பை நோக்கி என்றென்றும் நீள, நான் சொல் தந்துவிடக்கூடாது. அதனாலேயே நான் வெளியேறிப்போகத் துணிவற்று இருக்கிறேன்.”

சற்று முன்னே வந்து ஆசானின் கால்பற்றி அமர்ந்திருந்தாள் அங்கவை. அவளின்  தலையில் கைவைத்தபடி கபிலர் சொன்னார், “என்னை அறியாமலே எனது மொழி பறம்பைக் காட்டிக்கொடுத்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இனி பறம்பை விட்டு என்னால் வெளிச்செல்ல முடியாது மகளே”

சொல்லிமுடிக்கும் முன் தொலைவில் யாரோ வருவது அறிந்து எழுந்து பார்க்க முனைந்தாள் அங்கவை. கலக்கத்திலிருந்து மீளமுடியாமல் கண்மூடித் திறந்தார் கபிலர். எதிர்வந்து நின்றான் பாரி.

முகம் முழுவதும் அப்படி ஒரு மகிழ்ச்சி. பூத்துக்குலுங்கும் மலர்போல் புன்னகைத்தபடி உள்ளே வந்த பாரி, அமர்ந்திருந்த கபிலரைக் கைபிடித்துத் தூக்கி  “வாருங்கள் போவோம்” என்று அழைத்தான்.

பாரியின் முகத்தில் இவ்வளவு மகிழ்வைப் பார்த்து நீண்டநாள்களாகிவிட்டன. கபிலரின் முகத்தில் அளவுகடந்த கவலையைப் பார்த்துக் கொண்டிருந்த அங்கவை, அதற்கு நேரெதிராக எல்லையில்லாத மகிழ்வோடு வந்துநிற்கும் தந்தையைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.

“வாருங்கள் வேகமாக” என்று கைபிடித்து இழுத்துச் சென்றான் பாரி. அங்கவையை வரச்சொல்லிக் கூறவில்லை; எனவே அவள் குடிலிலேயே நின்றுகொண்டாள். கபிலருக்குக் காரணம் எதுவும் விளங்கவில்லை. பார்த்துக் கொண்டிருந்த அங்கவை சிறிதுநேரங் கழித்துத்தான் யோசித்தாள், ‘கபிலரை மாளிகைக்கு அழைத்துச் செல்லாமல் காட்டுக்குள் ஏன் அழைத்துச் செல்கிறார். முக்கியமான வேட்டை ஏதாவது கிடைத்திருக்கும்’ என்று எண்ணியபடி இருந்தாள்.

பாரி உற்சாகம் குறையாமல் அழைத்துச் சென்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தார் கபிலர். “முகம் ஏன் இவ்வளவு கவலைகொண்டுள்ளது?” என்று கேட்டபடி முன் நடந்து சென்றான் பாரி.

“அளவற்ற மகிழ்வோடு இருக்கும் ஒருவனிடம் கவலையை எப்படிப் பகிர்ந்துகொள்வது?”

கபிலர் சொல்லற்றவரானார். மாறுபட்ட இரண்டு உணர்ச்சிகளில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவச் சட்டென மொழி கைகொடுப்பதில்லை. மொழி வலிமையற்று இருக்குமிடத்தில் நின்று பேசுவதுதான் புலவனின் ஆற்றல். ஆனால், அவ்வாற்றலை வெளிப்படுத்தும் மனநிலையில் கபிலர் இல்லை.

அமைதியாய் வரும் கபிலரைப் பார்த்துப் பாரி கேட்டான், “பகிர்ந்துகொள்ள முடியாத கவலையா?”

“இல்லை…” என்று சொல்லிபடி நடந்தார். ஆனால், தொடராமல் சொல் நின்றிருந்தது.

எவ்வியூரின் நாகப்பச்சை வேலியைக் கடந்து உட்காட்டுக்குள் நுழைந்தனர். செடிகொடிகளை விலக்கி முன்னே நடந்து கொண்டிருந்தான் பாரி.

மெல்லிய குரலில் கபிலர் பேசத் தொடங்கினார், “நாள்தவறாமல் கூத்து நடக்கிறதே, அவற்றில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தாயா?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 84p5
“கூத்துக்களத்தில் எவ்வளவோ நடக்கிறது. நீங்கள் எதைக் கேட்கிறீர்கள்?”

கபிலர் மீண்டும் அமைதியானார். அறியாமல் பேசுபவனல்ல பாரி. ஆனால், அறிந்தவனைப்போல அவன் பேச்சில்லை. என்ன சொல்வதென்று சிந்தித்தபடியே நடந்தார்.

“பாணர் கூட்டத்துக்குள் பாடத்தெரியாதவனும் இருக்கிறான். இசைக்கருவிகளை வாசிப்ப வர்களுக்கு நடுவில் அதில் பயிற்சியே இல்லாதவனும் உடன் வருகிறான்” என்று சொல்லிய கபிலர், சற்றே தயக்கத்தோடு சொன்னார், “கூத்து நடத்த வரும் பாணர் கூட்டத்தில் ஒற்றர்கள் நிறைய வருகிறார்கள்.”

முன் நடந்தபடி பாரி சொன்னான், “பறம்பு நாட்டை இவ்வழியின்றி வேறு எவ்வழியில் அவர்களால் வேவு பார்க்க முடியும். எனவே கூத்துக்கலைஞர்களோடு ஒற்றர்கள் எல்லாக் காலங்களிலும் வந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.”

“அதனால் ஆபத்து உருவாகி விடாதா?”

“தெய்வத்தின் உருவில் எதிரிவந்தால் வணங்கித்தானே ஆகவேண்டும்.” வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 84p4

சொல்லால் சிதைவுற்றார் கபிலன். முன் நடந்து செல்லும் பாரியைப் பின்தொடர முடியவில்லை. வாழ்வின் பாதை அவ்வளவு செழிப்புற்றிருந்தது பாரிக்கு. செழிப்பேயானாலும் மறித்துக்கிடக்கும் கொடிகள் இடையூறுதானே? கபிலரின் கண்களுக்கு மறித்துக்கிடக்கும் கொடிகளே தென்பட்டன.

“கலைஞர்கள் என்ன செய்வார்கள்? அதிகாரத்துக்கு அஞ்சி அவர்களை உடனழைத்து வருகிறார்கள். ஒற்றர்களும் உடன்வருகிறார்கள் எனத் தெரிந்து தான் எம் வீரர்கள் பறம்புக்குள் அவர்களை அழைத்துவருகிறார்கள். பச்சைமலையின் எல்லா மடிப்பு களின் வழியேயும் ஒற்றர்களை எம் வீரர்கள் அழைத்து வந்திருக் கிறார்கள். அப்படியிருந்தும் எவ்வியூருக்குப் போகும் வழிக்குறிப்பைச் சொல்லப் பாண்டியனால் முடியவில்லை அல்லவா? காலம்பன் தன் முன்னோர்கள் சொன்ன குறிப்பின் வழியில்தானே வந்து சேர்ந்துள்ளான்.”

கபிலருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

பாரி சொன்னான், “நாட்டைப் பிடிக்கும்முறையில் காட்டைப் பிடித்துவிட முடியாது. நாட்டில்தான் வழித்தடம் பாதையாக இருக்கிறது. காட்டின் வழி மரமாகவும் பாறையாகவும் அருவியாகவும்தான் இருக்கிறது. மூன்று கருங்காலி மரத்தினருகே ஒரு செங்கடம்பு இருக்குமேயானால் காலடி கவட்டைகொள்ளும்; அதாவது முச்சந்தி என்று பொருள். அது யாருக்குப் புரியும்? இயற்கையாக முளைக்காத வகையில் முளைத்துள்ள தாவரங்களை இயற்கையை அறிந்த ஒருவனால்தான் கண்டறிய முடியும். வண்டிச் சாலைபற்றிய மனித அறிவு சில தலைமுறைகளுக்குத்தான் சொந்தம். ஆனால், காட்டுப்பாதை பற்றிய மனித அறிவு எண்ணிலடங்காத தலைமுறைகளின் சேர்மானம். அது ஒற்றன் வந்துபோகும் ஒற்றைப்பயணத்தில் ஒருபோதும் அடைபடாது” பேசியபடி வேகங்குறையாமல் நடந்துசென்றான் பாரி.

கபிலர் பின்தொடர்ந்தார். வேந்தர்களின் வழியே அரசாட்சியின் இலக்கணங்களையும் வழிமுறைகளையும் அறிந்த வாழ்வு கபிலரின் வாழ்வு. அதற்கு நேர்மாறாக, குலச்சமூகத்தின் மனவோட்டத்தின் வழியே புரிந்துகொள்ளுதல் எளிய முயற்சியல்ல, ஆனாலும் விடாது முயன்றார் கபிலர்.
அகில்மரத்தின் முடிச்சிட்ட வேர்கள் வழித்தடத்தின் குறுக்கே இருந்தன. அவற்றைக் கவனமாகத் தாண்டிய பாரி, கபிலரின் கால்கள் தடுக்கிவிடாமல் இருக்க நின்று உதவினான்.

அவன் தோள்களைப் பிடித்தபடி வேர்தட்டாமல் கால்தூக்கிவைத்தார் கபிலர். “இதுவரை பறம்பின் மீதான எல்லாத் தாக்குதல்களுக்கும் பின்னே கூத்துக்கு வந்துபோன ஒற்றனே இருக்கிறான். எனது முதற்போருக்கே கூத்துக்களம்தான் காரணமாக அமைந்தது” என்றான் பாரி.
பாரி முதலில் நடத்திய போர் சேரனுக்கு எதிரானது. அப்போரில்தான் உதியஞ்சேரலின் தந்தை செம்மாஞ்சேரலின் தலையை வெட்டியெறிந்தான் என்பது பலரும் சொல்லக்கேட்டுள்ளார் கபிலர். ஆனால், அப்போர் ஒரு கூத்துக்களத்திலிருந்துதான் தொடங்கியது என்பது கேட்டறியாத ஒன்றாக இருந்தது.

தோள்மீது கிடந்த கபிலரின் கை சற்றே இறுக்கிப்பிடித்தது. தோழனின் மொழியை அறியாதவனா பாரி? கூத்துக்களத்தின் கதையைச் சொல்லத் தொடங்கினான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 84p6
கதை வழக்கம்போல் முருகனிடமிருந்து தொடங்கியது. பாரி, முருகனின் பெயரை உச்சரித்தபடி முன் நடந்தான். கபிலருக்குத் தொடக்கமே வியப்பாக இருந்தது. இக்கதையில் முருகன் எப்படி வந்தான் என்று சிந்திக்கத் தொடங்கிய கணமே பாரி கேட்டான், “முருகன் தனது காதலின் பரிசாக எவ்விக்கு ஒரு பூண்டு கொடுத்தானே, அது என்ன தெரியுமா?”

கபிலர் விடையின்றி விழித்தார். நாக்கறுத்தான் புல் விளைந்துகிடந்த நிலத்தைக் கடந்தபொழுது நீலன் சொன்ன கதையது. தனைமயக்கி மூலிகையைக் கொடுத்தபடி கதையைத் தொடங்கி அவன் சொல்லிவந்தான். முருகனையும் வள்ளியையும் சந்தனவேங்கையில் அமைக்கப்பட்ட பரணில் தங்கவைத்து ஊர்வந்து சேர்ந்தான் எவ்வி. தனது கையில் இருந்த பூண்டு போன்ற ஒரு பொருளைப் பைங்குடத்தில் இட்டவுடன் அது சிறிதுசிறிதாகக் கரைந்தது. அந்நீர் பழச்சாறுபோல நுரைபொங்கியிருந்தது. அதனை அருந்தியவர்கள் வாழ்வில் அதுவரை காணாத சுகத்தைக் கண்டார்கள். மீண்டும் மீண்டும் வாங்கிப் பருகி, மயங்கிச் சரிந்தார்கள். அவர்கள் பருகியபொழுது சிந்தியதுளியின் வாசனையை நுகர்ந்தே மலையெங்கு மிருந்து பாம்புகள் அப்புதருக்கு வந்து சேர்ந்தன என்று நீலன் சொன்ன கதையைச் சொன்னார் கபிலர்.

கார்த்திகையின் கதையைச் சொல்வதற்காகச் சந்தனவேங்கையில் இருந்து மறுபகல் கீழிறங்கிய வள்ளி முருகனின் கதையைச் சொன்ன பாரி, இப்பொழுது எவ்வியின் வழியே மீதிக்கதையைத் தொடங்கினான்.

“அப்பூண்டினைப் பைங்குடத்தில் போட்டு நாட்கணக்கில் ஊரே குடித்துள்ளது. அதுவரை மனிதர்கள் அனுபவித்திராத மயக்கத்தையும் இன்பத்தையும் அப்பூண்டுப்பானம் கொடுத்துள்ளது. பைங்குடத்தில் நீர் தீரத்தீர மீண்டும் மீண்டும் நீரூற்றி அப்பானத்தை அருந்தியுள்ளனர். அப்பூண்டு சிறிது சிறிதாக நீரிற்கரைந்து மூன்று வாரங்களுக்குப் பின் முழுமுற்றாக நீருள் மறைந்துவிட்டது.

‘அது என்ன பூண்டு? அது எங்கே இருக்கிறது?’ எனக் கேட்பதற்காகவே அதன்பின் முருகன்வள்ளியைத் தேடிப் பலகாலம் அலைந்திருக்கிறான் எவ்வி. காலங்கள் ஓடியும் அவர்களைக் காணமுடியவில்லை. ஆனால், அந்தப் பூண்டுப்பானத்தை மறக்க முடியவில்லை. வாழ்வில் எப்பொழுதாவது அதுபோன்ற பானத்தை அருந்திவிட மாட்டோமா என்று எவ்வி மட்டுமல்ல, ஊரில் உள்ள ஆண், பெண் அனைவரும் ஏங்கிக் கிடந்துள்ளனர்.

எவ்வியூர் உருவாக்கப்பட்ட சிறிதுகாலத்திலேயே எவ்வி இறந்துவிட்டான். அதன்பின் ஒரு மழைக்காலம் முடியும்பொழுதுதான் இது நடந்துள்ளது. சோமக்கிழவி காட்டுக்குக் கிழங்குதேடிப் போயிருக்கிறாள். பகல் முழுவதும் அலைந்த களைப்பில் நாங்கில் மரத்தின் நிழலில் அமர்ந்து இளைப்பாறியிருக்கிறாள். உச்சிப்பொழுது.  எங்கும் வெயில் தகித்துக்கிடந்திருக்கிறது. அவள் கண்பார்வைத்தொலைவில் பன்றிகளின் கூட்டமொன்று நிலத்தை அகழ்ந்து கிழங்குகளைத் தின்றுகொண்டிருந்திருக்கிறது.

நாங்கில்மரத்தின் அடிவாரம் உட்கார்ந்து இளைப்பாறியபடி இருந்திருக்கிறாள். சிறிதுநேரத்தில் எங்கோ இருந்து மணம் வீசியிருக்கிறது. மூக்கில் நுகர்ந்தபடி அப்படியே மயங்கிக் கண்செருகியிருக்கிறாள். அந்நறுமணம் அவளை மயக்கி உள்ளிழுத்திருக்கிறது. மயக்கம் தெளியமுடியாத ஆழத்துக்கு அவளை இட்டுச்சென்றுள்ளது. சட்டெனப் பொறிதட்டி மீண்டிருக்கிறாள்.

இது ஏற்கெனவே நுகர்ந்த மணம். ஆனால், எங்கே, எப்பொழுது என்றுதான் நினைவுக்கு வரவில்லை. மீண்டும் மீண்டும் நினைவுகூர்ந்த பொழுது, அது எவ்வி கொண்டுவந்து கலக்கிக்கொடுத்த அந்தப் பூண்டுப்பானத்தின் மணம் என்பது நினைவுக்கு வந்தது. நாட்கணக்கில் ஊரே உட்கார்ந்து குடித்துக் குடித்துத் தீர்த்தோமே அந்த மணம் என்பது நினைவுக்கு வந்த கணம் சோமக்கிழவிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

அகமகிழ்ந்து எழுந்திருக்கும்பொழுது கண்களில் கண்ணீர் பெருகியது. அந்த மணத்தை மறுமுறை நுகரவேண்டுமென்று அவ்வளவு ஆசைப்பட்டான் எவ்வி! ஆனால், அவன் இப்பொழுது உயிரோடு இல்லை. ஓராண்டுக்கு முன்தான் இறந்தான். அவன் கொண்டுவந்து கொடுத்ததன் மூலம்தானே இம்மணத்தை நாம் நுகர்ந்தோம் என்று எண்ணியபடியே, எங்கிருந்து இம்மணம் வருகிறது எனத் தேடத் தொடங்கினாள். செடி, கொடி, மரம் என எல்லாவற்றையும் அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தாள். எங்கிருந்து வருகிறதென அவளால் கண்டறிய முடியவில்லை.

காற்று வீசும்பொழுது மிதந்துவரும் மணம், காற்று நிற்கவும் அறுபட்டுவிடுகிறது. சற்றுத் தொலைவிலிருந்து வருகிறது என்பதை உணர்ந்தபடி அப்பக்கம் போகலாம் என நகர்ந்திருக்கிறாள். அவ்வளவு நேரம், கிழங்குகளை மண்கிளறி மேய்ந்துகொண்டிருந்த பன்றிக்கூட்டம் இப்பொழுது அவ்விடம் இல்லை. ஆனால், தேனீக்களும் வண்டுகளும் பெருங்கூட்டமாக வந்து அவ்விடம் மொய்க்கத் தொடங்கியுள்ளன. சோமக்கிழவி அருகில் போய்ப் பார்த்திருக்கிறாள். மண்ணுக்குள் கிழங்கு வடிவத்தில் ஏதோ இருந்திருக்கிறது. கையால் கிளறி அதனை எடுத்திருக்கிறாள். அந்தப் பூண்டின் மணம், எவ்வி கொண்டுவந்து நீரில் கலக்கி ஊரே குடித்த அந்த மணம். அதே வடிவப் பூண்டு.

பல ஆண்டுகளுக்குப்பின் அதனைக் கண்டறிந்த மகிழ்வில் ஓட்டோடி வந்து ஊரிலே கொடுத்திருக்கிறாள். பைங்குடத்தினில் அதனைப் போட்டிருக்கின்றனர். நீர் கலங்கிப் பழச்சாறாகி யிருக்கிறது. ஒருவர் மாற்றி ஒருவர் குடிக்கத் தொடங்கியுள்ளனர். ஊரே நாட்கணக்கில் குடித்திருந்திருக்கிறது. இப்பானம் கிடைக்காதா என்று எவ்வி எத்தனை முறை புலம்பியிருப்பான். அதனைக் குடித்த எல்லோருமே வாழ்வில் இன்னொரு முறை குடிக்கமாட்டோமா என்று புலம்பியபடிதானே இருந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 84p8
சென்றமுறை முருகனை நினைத்து எல்லோரும் குடித்ததைப்போல இம்முறை எவ்வியை நினைத்து ஊரே குடித்தது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கிறது. சோமக்கிழவி எவ்வியின் மனங்கவர்ந்தவளாம். எவ்வி அவளிடம் மட்டும் அது கிடைக்கும் இடத்தைச் சொல்லிச்சென்றுள்ளான் என்று பேசிச் சிரித்து நாட்கணக்கில் குடித்துள்ளனர். சிறிது சிறிதாகக் கரைந்த அப்பூண்டு முற்றிலும் மறைய ஒரு மாதம் ஆகியுள்ளது.

இன்றுவரை அந்தப்பூண்டு எந்தச் செடி அல்லது கொடியின் கீழ் விளைகிறது என்று யாருக்கும் தெரியாது. கிழங்குதேடும் பன்றி அகழ்ந்துபோட அந்தப்பூண்டு வெளிவருகிறது. அதன் வாசனை பட்டவுடன் பன்றி அந்நிலம் விட்டு அகன்றுவிடுகிறது. எங்குமிருக்கும் தேனீக்களும் வண்டுகளும் அதனை மொய்த்துக்கிடக்கின்றன. மாதக்கணக்கில் ஆனாலும் தேனீக்கள் அதனை மொய்ப்பதை நிறுத்தாது. காட்டில் அலைந்து திரியும் பறம்பு மக்களின் கண்களுக்கு அது எப்படியும் பட்டுவிடுகிறது. அதன்பின் எவ்வியூர் காலநேரமின்றி  மிதந்துகொண்டுதான் இருக்கும்.

பூண்டு கிடைத்துவிட்டாற்போதும், மிதக்கும் மயக்கத்தினூடே காதல் பொங்கி மேலெழத் தொடங்குகிறது. வள்ளிமுருகனின் காதலும் எவ்விசோமாவின் காதலும் ஒன்றினையொன்று விஞ்சி மேலெழுகின்றன. இப்பூண்டினை முதலிற் கண்டறிந்தது வள்ளியா முருகனா என்று பேச்சு தொடங்குகிறது. பூண்டின் சாறு இறங்க இறங்க வள்ளியும் முருகனும் இறங்கி ஆடுவர். நாள்கள் செல்லச்செல்ல எவ்வியா சோமாவா என்று பேச்சு போகிறது. ஆட்டமும் பாட்டுமாகப் பகலிரவு பாராமல் ஊரே மிதக்கிறது. காதலின் பரிசாக வள்ளி முருகன் இருவரும் எவ்விக்குக் கொடுத்திருக்கலாம். ஆனால், தன் காதலிக்கு அதனைக் கொடுத்தது எவ்விதான். தன் காதலனின் நினைவாக அதனைக் கண்டறிந்தது சோமக்கிழவிதானே; எனவே அவளின் பெயரையே அதற்குச் சூட்டினர். அது சோமப்பூண்டு என்று அழைக்கப்பட்டது.

சோமப்பூண்டின் சாறுகுடித்து ஊரே மயங்கிக்கிடக்க, மயங்கிக்கிடப்பவனை, கிழவியின் பெயரைச்சொல்லி, சோம்பிக்கிடக்கிறான் என்று சொல்லிக்கொள்வர். எவ்வியூர்க்காரர்களுக்குத்தான் தெரியும், சோம்பல்முறிக்க மாதமாகும் என்று. முறிக்க முடியாத மயக்கத்தை முறிக்கும் ஆற்றல் எதற்கும் இல்லை. வள்ளியின் காதலும் சோமாவின் காதலும் இணைந்த மயக்கமல்லவா அது. முருகனும் எவ்வியுமே மீளமுடியாத கிறக்கமல்லவா அது. சோம்பிக்கிடக்கும் சுகம் வேறு எதில் வாய்க்கும்?”

கேள்வி எழுப்பியபடி உற்சாகம் பொங்கத் துள்ளிக்குதித்து ஓடிக்கொண்டிருந்தான் பாரி. கதையை நிறுத்திச்சொல்லாமல் இவ்வளவு வேகமாகச் சொல்லிக்கொண்டு ஓடுகிறானே என்ற பதற்றத்தில் பின்தொடர்ந்து கொண்டிருந்தார் கபிலர். கதை என்றாலே ஓட்டம் கூடும். அதுவும் வள்ளி முருகனின் கதை, அதுவும் வாழ்வில் காணாத பெருமயக்கத்தை உண்டாக்கும் கதை. ஓட்டம் கூடிக்கொண்டே இருந்தது. கபிலர் வேகங்கொள்ள கதைசொன்னால் போதும். கதையில் மயங்கும் கபிலருக்கு, மயக்கத்தின் கதையைச் சொன்னால் என்னவாகும்? அதுதான் இப்பொழுது நடந்தது. கபிலர் நடக்கவில்லை, ஓடிக்கொண்டிருந்தார்.

சற்றுத் தொலைவில் இரு பெண்களும் ஒரு பெரியவரும் நின்றிருந்தனர். அவர்களை நோக்கித்தான் பாரி சென்றுகொண்டிருந்தான். ‘யார் அவர்கள்? அங்கென்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?’ என்று சிந்தித்தபடி பின்தொடர்ந்தார் கபிலர். அருகில் செல்லச் செல்ல அவர்களைச் சுற்றித் தேனீக்களும் வண்டுகளும் இடைவிடாமல் பறப்பது தெரிந்தது.

கபிலரின் முகத்தில் வியப்பு மெல்ல படரத்தொடங்கியது. பாரிக்குச் செய்தி சொல்லி அனுப்பி அவனது வருகைக்காகக் காத்திருந்தனர். பாரி அருகில் போய் மண்ணுள் கிடந்ததைக் கிளறி முழுமையாக மேலெடுத்தான்.

இதுவரை முகர்ந்திராத மணத்தை முகர்ந்தார் கபிலர். நாசிக்குள் ஏறிய கணம் உள்ளுக்குள் ஒரு கிறக்கம் உருவானது. சட்டெனத் தலையை மறுத்து ஆட்டி, பாரியின் அருகில் போனார். நின்றிருந்தவர்கள் கபிலரை வணங்கி விலகி நின்றனர். கபிலர் அவர்களை வணங்கி நின்றார்.

முருகனும் வள்ளியும் எவ்வியின் கைகளில் கொடுத்த சோமப்பூண்டை எடுத்துக் கபிலரின் கைகளில் கொடுத்தான் பாரி.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 8:38 pm

ருபதாண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்விது. முடிவுறாத மழைக்காலத்தின் நள்ளிரவு. மழவன்குடியினர் ஆடும் கூத்தில் நெருப்புப்பொறி பறந்தது. பின்பனி கவிழ்ந்தும் குளிர்நடுக்கம் யாருக்குமில்லை. எவ்வியூர் பெருமகிழ்வை அனுபவித்துக் கிறங்கிக்கிடந்தது. கூத்தும் குளிரும் ஒன்றினையொன்று இறுகத்தழுவி, ஒன்றின் மயக்கத்தை இன்னொன்றுக்கு ஊட்டி மகிழ்ந்தன. ஆனால், இவ்விரண்டையும்விடப் பெருமயக்கமொன்று ஏற்கனவே ஊரில் நிலைகொண்டிருந்தது.

சோமப்பூண்டு கிடைத்திருந்த நேரமது. ஊரே குடித்துக் குடித்துக் கிறங்கிக்கிடந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் கிடைத்துள்ளது. யார் விடுவார்கள்? ``இன்னும் பூண்டு கரையவேயில்லை” என்று சொல்லிச்சொல்லிக் குடித்தார்கள். நீர் முகந்த குளம் வற்றிவிடப்போகிறது என்று சொல்லியும் விடாது குடித்தார்கள். இந்நிலையில்தான் மழவன்குடி கூத்துக்கலைஞர்கள் ஊருக்கு வந்தார்கள்.

பாரிக்கு அப்பொழுது மணமாகவில்லை. மேலெல்லாம் இளமை துளிர்த்துக்கிடந்த காலம். சோமப்பூண்டில் சொக்கியவர்களுக்கு மழவன்குடிக்கூத்தும் வந்து சேர்ந்தது. மழவன்குடியை, கூத்திலே மயக்கும் குடி என்பார்கள். ஆனால், அவர்கள் மயக்க இங்கு யாரும் மிச்சமில்லை. எனவே  மழவன்குடியினரை எவ்வியூர் மயக்கியது. வந்தவர்களுக்கு முதலில் ஆளுக்கொரு  குவளையைக் கொடுத்தார்கள். அவ்வளவுதான், இடைவிடாது வாங்கிக் குடித்தார்கள். எப்பொழுதெல்லாம் தெளிவடைகிறார்களோ, அப்பொழுதெல்லாம் குடித்தார்கள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 67p1
எண்ணிலடங்காத மதுவகைகளை வாழ்வெல்லாம் குடிக்கிறோம். ஆனால், எந்தவொரு மதுவுக்கும் இத்தகு மயக்கம் கிடையாது. உள்ளிறங்கிய கணத்தில் தொடங்கும் கிறக்கத்தை எதிலும் உணரமுடியாது. கிறக்கத்தை அனுபவித்தபடியே முதுகெலும்பை முறுக்கி  ‘கிர்’ரென மேலேறுவது என்னவென்பதைக் குடிக்காமல் உணரமுடியாது; குடித்தால் உணரவே முடியாது. உணர்வின் எல்லைக்கு அப்பால் மனிதனை நிறுத்தும் மயக்கம் முதல்துளியிலேயே நிகழ்ந்துவிடும். முதல்மிடறு அடுத்ததையெல்லாம் மறக்கவைக்கும். எனவே, முதலிலிருந்தே மீண்டும் மீண்டும் தொடங்க வேண்டியிருக்கும்.

சோமப்பூண்டின் கிறக்கங்கொண்டு கிடந்த மழவன்குடியினர், தங்களின் பறையைச் சூடேற்றவேயில்லை. வந்து ஒரு வாரமாகியும் அவர்களின் கால்கள் அடவுபிடிக்கவில்லை. அவர்களால் இந்த மதுமயக்கத்தை விட்டுப் பிரியமுடியவில்லை. எவ்வியூரிலுள்ள யாராலும் முடியாதது இவர்களால் எப்படி முடியும். ஏதுசெய்தும் ஆடுகளம் இறங்கமுடியாது எனக் கூட்டத்தின் தலைவன் முடிவுசெய்து, ``மறுமுறை வந்து ஆடுகிறோம்” எனச் சொல்லி, புறப்பட ஆயத்தமானான்.

செய்தி பாரிக்குச் சொல்லப்பட்டவுடன் விரைந்து அவ்விடம் வந்தான். ``மயக்குதல் பொதுவானது. அது மதுவுக்குமுண்டு, கலைக்குமுண்டு. நீ கலைஞன். சோமப்பூண்டு உன் சொற்களிலுமுண்டு என்பதை மறந்துவிட்டாயா? எதன் பொருட்டும் கலையும் கலைஞனும் தோற்கக் கூடாது. ஆடாமல் இந்நிலம் விட்டு அகலுதல் கலைக்கு இழுக்கல்லவா? பைங்குடத்தை ஆடுகளத்தின் நடுவில் வைத்து நிகழ்த்து உனதாட்டத்தை. ஆட்டம் முடியும் கணத்தில் உன் உடன்வந்தவர்களின் தலைக்கு ஒரு பானையை ஏந்தி இந்தப் பானத்தைக் கொண்டுசெல்லுங்கள்” என்றான்.

சொல்லிய கணம் தொடங்கியது ஆட்டம். பைங்குடத்தைச் சுற்றி மழவன்குடியினரின் கால்கள் சுழலத் தொடங்கிவிட்டன. அக்குடிப் பெண்களின் விழிகள் தவளைகளைப் போலத் தாவித்தாவிப் பைங்குடத்துக்குள் விழுந்தபடியிருந்தன. பாணன் பாடினான். ஒருவார காலம் தாங்கள் குடித்த குடியைப் பாடினான். ``வாழ்வெல்லாம் மதுவெனச் சொல்லிக் குடித்த எதுவும் மதுவன்று; புளித்த நுரை மூக்கடைக்காமல் மிதக்கவைக்கும் இவ்வரிய பானத்துக்கு என்ன பெயர்தான் சொல்வது பாரி?” எனக் கேட்டுத்தான் முதல்பாடலைப் பாடினான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 67p3
``பறவைகள் உடலுக்கு வெளியேதான் இறக்கைகளை விரிக்கின்றன. ஆனால், இப்பழச்சாற்றைக் குடித்தால் உடலுக்குள்ளேயே இறக்கைகள் விரிகின்றன. பறக்கும்பொழுது மயங்குகிறோமா, மயங்கும்பொழுது பறக்கிறோமா? சொல் பாரி!

வானத்தில் பறப்பதும் நீரில் மிதப்பதும் அரிதல்ல, ஆனால், இவையிரண்டையும் தன்னுள் நிகழ்த்துவதுதான் அரிதினும் அரிது. அவ்வரிய பழச்சாற்றுக்குப் பெயரென்ன பாரி?

வற்றிய குளம்போல் நாக்கு இப்பானத்துக்காக ஏங்க, வயிறோ நிறைந்தகுளம்போல் பெருகிக்கிடக்கிறது. வயிறே உடைந்தாலும் வற்றிய நாக்கின் ஏக்கம் நீங்க மறுக்கிறதே, சொல்பாரி, நாங்கள் என்ன செய்ய?”

பாரியிடமும் பைங்குடத்து மதுவிடமும் வரிக்குவரி விளக்கங்கேட்டுப் பாடலைத் தொடங்கினான் பாணன். ஆனால், அதன்பிறகு அவன் பாடிய பாடல் எதுவும் யாருக்கும் நினைவில்லை. அவன் அப்பானத்தின் மயக்கத்தை, வீரியத்தை எப்படியாவது அறிய முற்பட்டு, முற்பட்டுத் தோல்வியடைந்து பாட்டை முடித்தான். “ஒரு மிடறு குடித்தால் அச்சுவையைத் துல்லியமாக என்னால் சொல்லிவிட முடியும், பாடும் எனக்கு மட்டும் அதற்கான அனுமதியைக் கொடு பாரி” என வேண்டினான்.

அரங்கு அதிரச் சிரித்தான் பாரி. “இந்த வாரம் முழுவதும் அதிகமாக அப்பானத்தைக் குடித்தது நீதான். முதல்துளியில் கண்டறியமுடியாத சுவையைக் கடலளவு குடித்தாலுங் கண்டறிய முடியாது. உனது நினைவைத்தோண்டிக் குடித்துப்பார், ஒருவேளை உனக்கு அது பிடிபடலாம்” என்றான்.
பாடுபவன் சொன்னான், “குவளையை வாயில் கவிழ்த்தும் வரைதான் நினைவு செல்கிறது, அதன்பின் நான் கவிழ்ந்துகிடப்பதுதான் தெரிகிறது” என்றான். 

சிரித்து மகிழ்ந்தது கூட்டம். சுவையறிய முடியாமல், அறிந்த சுவையிடமிருந்து மனம் பிரியமுடியாமல் கலைஞன் படும்பாடே கலையாக நிகழ்ந்துகொண்டிருந்தது. இரவெல்லாம் பாடினான் பாணன். மதுவின் கிறக்கத்தை விஞ்சும் ஆட்டத்தை ஆடினர் ஆணும் பெண்ணும். பைங்குடம் நடுவில் இருப்பதால் அதன் வாடையை நுகர்ந்து சுழலும் ஆட்டத்தை இரவெல்லாம் பார்த்துக் களித்தனர் எவ்வியூர்க்காரர்கள்.

விடிய விடிய நிகழ்ந்தது ஆட்டம். விடிந்ததும் மழவன்குடியினர் ஒவ்வொருவரும் தங்களுக்கான பானையைத் தேர்வுசெய்தனர். மலை முழுவதும் தூக்கிச்செல்லவேண்டும் என்பது அவர்களின் நினைவிலேயே இல்லை. பானைக்குள் இருக்கப்போவது மட்டுமே அவர்களின் நினைவிலிருந்தது. அவர்கள் தேர்வுசெய்த பானை முழுவதும் பானம் நிரப்பப்பட்டது.

புறப்பட ஆயத்தமாகும்பொழுது பாரி சொன்னான், ``ஒரு மிடறுகூட இதனைக் குடிக்காமல் தூக்கிச்சென்றால் மட்டுமே உங்களின் இடம் வரை இதனைக் கொண்டுசெல்ல முடியும். எங்கேயாவது நின்று குடிப்போம் எனத் தொடங்கினால், அதன்பின் அத்தனை பானைகளும் தீர்ந்த பின்தான் அவ்விடம் விட்டு நீங்கள் அகல்வீர்கள்.”

சரியெனச் சொல்லி அவர்கள் புறப்பட்டனர். இதுவரை தாங்கள் பெற்ற பரிசினிலேயே மிகச்சிறந்த பரிசு இதுதான். இதனைத் தங்களின் குடிகள் இருக்குமிடம் வரை எப்படியாவது கொண்டுசேர்க்க வேண்டும் என்று முடிவுசெய்து அவர்கள் நடந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 67p2
மழவன்குடிக் கூட்டத்திலிருந்த மூன்றுபேர் சேர ஒற்றர்கள். அத்தனை பானைகளும் சேரனின் அரண்மனைக்குப் போய்ச்சேர்ந்தன. செம்மாஞ்சேரல் தன் அந்தப்புரப்பெண்களோடு மகிழ்ந்திருந்தபொழுதுதான், “உலகில் யாரும் அறிந்திராத பெருமயக்கத்தை உண்டாக்கும் மதுவகை ஒன்று பறம்பினில் இருக்கிறதாம். அதனை நமது ஒற்றர் கூட்டம் கொண்டுவந்து சேர்த்துள்ளது” எனச் செய்தி சொல்லப்பட்டது.

எறிந்த வேல்போல் காட்டம் உள்குத்தி நிற்கும் ஆற்றல் யவனத் தேறலுக்குத்தான் உண்டு. அதனை முதலில் அருந்தி மகிழ்ந்தவன் சேரன்தான். மிளகுக்கு ஈடாகக் கொண்டுவந்து இறக்கப்பட்ட அதிசிறந்த பொருள் அதுதான். அதன் பிறகுதான் யவனத்தேறல் பற்றி பாண்டியர்களும் சோழர்களும் அறியத் தொடங்கினர்.

இப்பொழுது மீண்டும் வரலாறு திரும்புகிறது. அதிசிறந்த மதுவகையொன்று சேரர்குடியை வந்தடைந்திருக்கிறது. ஆனால், இதனை யவனத்தேறலைவிடச் சிறந்ததெனச் சொல்லிவிட முடியுமா என்பதைக் குடித்துப்பார்த்துதானே முடிவுக்கு வரமுடியும்.

அந்தப்புரப்பெண்களை விலக்கி விரைந்துவந்தான் செம்மாஞ்சேரல். பதினாறு பெரும்பானைகள் அவையின் நடுவே வைக்கப்பட்டிருந்தன. பானைகளை விட்டு சற்றுத்தள்ளி மழவன்குடிக் கலைஞர்கள் நின்றுகொண்டிருந்தனர். அக்குழுவின் தலைவன் தலைதாழ்த்தியபடியே நின்றிருந்தான். ‘என் கூட்டத்தில் ஒற்றர்கள் இருப்பதால்தான் ஆட்டம் நிகழ்த்தாமல் மயக்கங்கொண்டே நாங்கள் புறப்படுகிறோம் என்று பாரியிடம் சொன்னேன். அவனோ, கலைஞன் தோற்கக்கூடாது என எம்மை ஆடவைத்து அப்பானத்தோடு பெரும்பரிசையும் கொடுத்து அனுப்பிவிட்டான். இனி இப்பானத்தின் ஒரு மிடறுகூட எங்களுக்குக் கிடைக்கப்போவதில்லை’ என்று அவன் எண்ணிக்கொண்டிருந்தபொழுதுதான் செம்மாஞ்சேரல் முதல்மிடற்றினை அருந்தினான்.

அதன்பிறகு அவனது நினைவில் வேறெதுவும் இடம்பெறவில்லை. பானைகள் ஒவ்வொன்றாகக் கவிழ்த்து வைக்கப்பட்டன, அவனால் நம்பமுடியவில்லை. இதன் கிறக்கமும் மயக்கமும் என்னவென்பதை அறிய பலமுயற்சிகள் செய்தான். அரசவைப் பெரியோர்கள், வணிகர்கள், கடலோடிகள் எனப் பலருக்கும் அருந்தக் கொடுத்தான். ஆனால், யாருக்கும் ஒரு குவளைக்கு மேல் கொடுக்கவில்லை.  அவர்களோ மறுகுவளை கிடைக்காதா என்று நாள்கணக்கில் ஏங்கி நின்றனர்.

இதன் மயக்கம் எவ்வளவு பெரிய மனிதனையும் தாழப் பணியவைத்துவிடுகிறது என்பதை ஒவ்வொரு நாளும் அவன் உணர்ந்தான். ஆனால், இதுவென்ன என்பதை மட்டும் யாராலும் சொல்ல முடியவில்லை. அப்பொழுதுதான் வடதேசத்து முனி ஒருவர் அவனது அரண்மனைக்கு வந்தார்.
செய்தி அவருக்கும் சொல்லப்பட்டது. “காட்டு மனிதர்கள் பல்வேறு மரப்பட்டைகளைக் கலந்து வடித்தெடுக்கும் மதுவகை வேறுபட்ட மயக்கத்தைத்தான் கொண்டிருக்கும். இதில் இவ்வளவு வியப்புற என்ன இருக்கிறது?” என்று சொல்லியபடி ஒரு குவளையை வாங்கிக் குடித்தார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 67p6
முகத்தில் எவ்வித மாற்றமும் தெரியாததால் அவையில் இருந்த பலரும் அவரைச் சற்றே வியப்போடு பார்த்தனர். முனிவரை இப்பானம் ஒன்றும் செய்துவிடவில்லை என்பதைப் போல முகக்குறிப்பு இருந்தது. செம்மாஞ்சேரனும் வியப்புற்று அவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அவரோ, “இன்னொரு குவளை கொடு” என்றார்.

ஊற்றிக்கொடுப்பவன் மன்னனைப் பார்த்தான். மன்னனைத்தவிர வேறு யாருக்கும் மறுகுவளை கொடுக்கப்படவில்லை.  செம்மாஞ்சேரன், முனிவரின் முகத்தை உற்றுப்பார்த்தான். அவர் அப்பானத்திடம் தன்னை இழந்துவிடவில்லை என்பது தெரிகிறது என்று எண்ணி மறுகுவளை தரச்சொன்னான்.

அதனையும் வாங்கிக் குடித்தார் முனி. அவரது முகத்தில் எந்தவித வியப்போ, மாற்றுதலோ தெரியவில்லை. ஆனால், எவ்வார்த்தையும் பேசவில்லை. “இன்னொரு குவளை கொடு” என்று மறுபடியும் கையை நீட்டினார். ஊற்றிக்கொடுப்பவன் அக்குவளையை வாங்கவே அச்சப்பட்டு மன்னனைப் பார்த்தான். மன்னனுக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை. ‘பாதிக்குவளை ஊற்றிக்கொடு’ என்று சொல்ல வேண்டும்போல் இருந்தது.

அப்படிச் சொல்வது தனக்கு அழகல்ல என்று அவனுக்குத் தோன்றியது. மழவன்குடித் தலைவன் தொலைவிலிருந்தபடி இக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு குவளை முகந்துகொடுக்க இவ்வளவு தயங்கும் மனிதர்கள் வாழும் உலகில்தான் பாரியெனும் பெருங்கொடையாளனும் வாழ்கிறான் என்று எண்ணியபடி பாடல் ஒன்றை முணுமுணுத்தான். அதற்குள் செம்மாஞ்சேரல் கையசைப்பது தெரிந்தது.

வேறு வழியேயில்லாமல், ‘அடுத்த குவளை ஊற்றிக்கொடு’ என்று மன்னன் சொன்னது யாவருக்கும் புரிந்தது. ஊற்றிக்கொடுப்பவன் குவளையை வாங்கிப் பானைக்குள் முகந்தான். கண்செருகியபடி இருந்த முனி இடக்கையால் தாடியைத் தடவி, கீழ்நீண்ட கடைமுடியை விரல்களால் உருட்டினான். அதைப் பார்த்த செம்மாஞ்சேரல் சொன்னான், “ஊற்றுவதை நிறுத்து.”

அரங்கு அதிர்ந்து பார்த்தது. ஊற்றுபவன் அப்படியே நிறுத்தினான். ஆனால், உள்செருகிய கண்களை முனிவன் திறக்கவேயில்லை.

“நீங்கள் இப்பானத்தால் மயங்கிவிட்டீர்கள். இனி உங்களால் இதனைக் கண்டறிய முடியாது.”

முனிவனின் முகத்தில் முழுமையான மயக்கம் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. கண்திறக்காமல் தாடியின் கடைமுடியை இடக்கையால் சுருட்டியபடியே சொன்னார்.

“இதன் பெயரென்ன?”

மன்னனும் அவையோரும் அறிந்திருக்கவில்லை. மழவன்குடியையே எல்லோரும் பார்த்தனர். மழவன்குடித்தலைவன் முன்வந்து சற்றே மெல்லிய குரலில் சொன்னான், “சோமப்பூண்டிலிருந்து உருவாகும் பானம்.”

உதட்டோரம் மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தினான் முனிவன்.

அவையோருக்குக் காரணம் புரிபடவில்லை. செம்மாஞ்சேரல் முனிவரையே பார்த்துக்கொண்டிருந்தான். முனிவர் வாய்திறந்து சொன்னார், “இதுதான் சோமபானம்.”

இதுவரை இப்பெயரை யாரும் கேள்விப்பட்டதில்லை. புதுப்பெயராக இருந்தது. அவையோர் அவர் சொல்வதைக் கூர்ந்து கவனித்தனர்.

முனிவர் சொன்னார், ``தேவர்கள் மட்டுமே அருந்தும் பானம். இது கிடைக்காதா என்று ஆண்டாண்டுக் காலமாய்க் காத்திருப்போர் பலர். இதன் சக்தியை நீ அறியமாட்டாய். மகாசக்திகொண்டது. சொர்க்கம் என்ற பேருலகுக்கு மனிதனைக் கொண்டுசேர்ப்பது” முனிவர் பேசிக்கொண்டே இருக்க, மயக்கம் எல்லா வகையிலும் நிகழ்ந்துகொண்டிருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 67p4
``அரக்கர்களிடமிருந்து இதனை மீட்கும் போரினை, தேவர்கள் எல்லாக் காலங்களிலும் நடத்துகிறார்கள்.”

செம்மாஞ்சேரல் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கண்களுக்கு இப்பொழுது பானம் இருக்கும் ஒருசில பானைகள் தெரியவில்லை. தனது அரண்மனையெங்கும் அப்பானைகள் இருப்பதாகத் தெரிந்தது. மயக்கும் பேருலகத்தை அவன் அகக்கண்ணில் பார்க்கத்தொடங்கிவிட்டான் என்பதை முனிவன் உணரத்தொடங்கினான்.

அதன்பின் முனிவன் சொல்லும் எல்லாச் சொல்லிலும் சோமபானத்தின் மயக்கம் இருந்தது.

சோமப்பூண்டை எடுத்துக்கொண்டு எவ்வியூருக்குள் வரும் வரை வேகவேகமாகக் கதையைச் சொல்லிக்கொண்டு வந்தான் பாரி. ஆனால், சோமப்பூண்டு கண்டறியப்பட்டுவிட்ட செய்தி அதற்குள் ஊர் முழுவதும் தெரிந்துவிட்டது. பாரியும் கபிலரும் ஊருக்குள் நுழைவதற்குள் ஊரே கலைகட்டியிருந்தது.

கபிலருக்கு, பாரி சொல்லிவந்த கதையை முழுவதும் கேட்கவேண்டும் என்ற பேராவல் இருந்தது. அதைவிட அதிகமான ஆவலைக் கையிலிருந்த சோமப்பூண்டு ஏற்படுத்தியிருந்தது. கரைந்துபெருகும் அதன் சாறு அவரைச் சுண்டியிழுத்துக்கொண்டிருந்தது.

கபிலரின் கையில்தான் அது இருக்குமென்பதை எவ்வியூரிலுள்ள எல்லோரும் அறிந்திருந்தனர். ஊருக்குள் நுழைந்ததும் கபிலரைத் தோளிலே தூக்கி ஆடியது ஒரு கூட்டம். ஆட்டத்துக்கு இனிமேல்தான் வேலை என்று சொல்லி ஓடியது ஒரு கூட்டம். எங்குமிருந்து சாரிசாரியாக மக்கள் திரளத் தொடங்கினர். களைகட்டியது எவ்வியூர்.

பெருந்தாழி எனச் சொல்லப்படும் பெருவட்டப்பானையை எடுத்துவந்தனர். அதில் குடம்குடமாய் நீரூற்றினர். பானை எளிதில் நிரம்புவதாக இல்லை. அவ்வளவு நேரம்கூடப் பொறுத்திருக்க யாரும் ஆயத்தமாக இல்லை. கூச்சலும் குதியாட்டமுமாக சூழல் வேகங்கொண்டது. அதனினும் வேகமாகக் குடங்கள் வந்துகொண்டிருந்தன. நீர் நிரப்பி முடித்ததும் கபிலரைப் பார்த்துப் பெருமகிழ்வோடு பாரி சொன்னான், “சோமப்பூண்டை அதற்குள் போடுங்கள்.”

அதற்குப்பின் என்ன நடந்தது என்பது துண்டுதுண்டாகத்தான் நினைவிருக்கிறது. சோமப்பூண்டை உள்ளே போட்டவுடன் எழுந்த மணம் முதல் கிறக்கத்தை உண்டாக்கியது. இழுத்து மூச்சுவிட்டு மயங்கியபொழுது ஒருவர் மாற்றி ஒருவர் இடித்துக்கொண்டிருந்தது நினைவிலிருந்தது.
அதன்பின் மேல்மாடத்தில் கையில் குவளையோடு பாரி அருகில் இருந்தான். அப்பொழுது கபிலரின் கையிலும் குவளை இருந்தது. பாரியிடம் செம்மாஞ்சேரலின் கதையைக் கேட்டார். பாரியும் அதனைச் சொன்னான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 67p8
“சோமபானம் எங்களுக்கு வேண்டும். என்ன விலை கொடுத்தும் நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என்று சொல்லி ஆட்களை அனுப்பினான் செம்மாஞ்சேரல். அது இயற்கை எங்களுக்கு வழங்கும் காதற்பரிசு. அதனை நாங்கள் கண்டறிய முடியாது. அதுவாகத்தான் எங்களைக் கண்டறியும். பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அது நிகழும் என்று சொல்லி அனுப்பினேன்’’ என்றான் பாரி.

கபிலர் நினைவு மீண்டபொழுது அவரது குடிலில் படுத்திருந்தார். பொழுது நண்பகலைக் கடந்திருந்தது. வெளிச்சத்தைப் பார்த்ததும் “விடிந்துவிட்டதா?” என்று கேட்டபடிதான் எழுந்தார். உடனிருந்த உதிரன் சொன்னான், “நண்பகல் கடந்துவிட்டது.”

“நான் எப்பொழுது குடிலுக்கு வந்தேன்?”

“நீங்கள் வரவில்லை. நான்தான் கொண்டுவந்து சேர்த்தேன்.”

அதன்பின் விளக்கம் கேட்க விரும்பவில்லை. “உணவு ஏற்பாடாகப் போகிறது. நீங்கள் தயாராகுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போனான் உதிரன்.

கபிலரும் வேகவேகமாகத் தயாரானார். இன்றாவது முழுக்கதையையும் கேட்டுவிடவேண்டும் என்று பேரார்வங்கொண்டிருந்தார். புறப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது அவருக்கே புலப்பட்டது; பெருக்கெடுக்கும் ஆர்வத்துக்குக் கதையை மீறிய காரணம் ஊற்றப்படும் குவளையில் உண்டென்று.
மாலையில் வழக்கம்போல் மேல்மாடத்துக்கு வந்து சேர்ந்தார் கபிலர். அவரின் வருகையை எதிர்பார்த்திருந்தான் பாரி. உடன் தேக்கனும் முடியனும் இருந்தனர். கபிலருடன் வந்த உதிரனை அனுப்பி, காலம்பனை அழைத்துவரச் சொன்னான் பாரி. உதிரனும் புறப்பட்டுப் போனான்.

கபிலர் வந்து உட்கார்ந்ததும் ஆர்வத்தோடு தொடங்கினார், “செம்மாஞ்சேரல் சோமபானம் கேட்டு ஆளனுப்பியதற்கு, நீ மறுமொழி சொல்லி அனுப்பினதாகக் கூறினாயே. அதன்பின் என்ன நடந்தது?”  

பாரி, கபிலரைப் பார்த்து மெல்லியதாய் ஒரு புன்முறுவல் உதிர்த்தான். கபிலருக்குக் காரணம் புரியவில்லை. “ஏன் விளக்கம் சொல்லாமல் சிரிக்கிறாய்?”

பாரி சொன்னான், “முழுக்கதையையும் நேற்று சொல்லிமுடித்தேன். நீங்கள் மறுபடி முதலிலிருந்து கேட்கிறீர்களே, அதுதான் சிரித்தேன்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 67p5
கபிலருக்குச் சற்றே வெட்கமாக இருந்தது. “முழுக்கதையையும் சொன்னாயா? நான்தான் நினைவு தவறிவிட்டேன் என நினைக்கிறேன்” என்று கூறி, மறுபடியும் கதைசொல்லச் சொன்னார்.

“பறம்பின் மறுமொழிகேட்ட செம்மாஞ்சேரல் பெருஞ்சினங்கொண்டான். சோமபானத்தைத் தங்களுக்குத் தர மறுக்கிறான் பாரி என்ற முடிவுக்குப் போனான். எதையாவது செய்து அதனைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணியவனுக்கு வடதேசத்து முனி பற்பல எடுத்துக்காட்டுகளைக்கூறி வெறியூட்டினான். சேரர்படை பறம்பின் மேற்குமுகடுகளை நோக்கி அணிவகுக்கத் தொடங்கியது.”

``கூட்டத்தின் குரல் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருப்பதுபோல் இருக்கிறது. ஆனாலும் மயங்கிக்கிடப்பவனுக்கு இவையெல்லாம் நினைவில் தங்காது. நினைவில் இவை இருக்கின்றன என்றால் நான் மயக்கங்கொள்ளவில்லை என்றுதானே பொருள். குவளையில் மது அருந்தியபடி பேசிக்கொண்டிருப்பது வாழ்வெல்லாம் உள்ள பழக்கம்தானே. இப்பொழுது மட்டும் ஏன் அந்தப் பழக்கத்தை முழுமைகொள்ள முடியவில்லை. நம்மால் மட்டும்தானா அல்லது யாராலும் முடியவில்லையா?” கேள்விகள் எழுந்தபடியே இருக்க புரண்டு படுத்தார் கபிலர்.

விழிப்புத்தட்டியது. கண்விழிக்க நினைத்தாலும் சிந்தனை விடுவதாக இல்லை. வெளியில் தெரியும் வெளிச்சத்தை உள்வாங்க முடியாமல் கண்கள் கூசித்திறந்தன. “நாம் எப்போது வந்து சேர்ந்தோம்?” என்று உதிரனிடம் கேட்டார் கபிலர்.

பதில்சொல்லத் தயங்கியபடி உதிரன் நின்றுகொண்டிருந்தான்.

“ஏன் பதில் சொல்லத் தயங்குகிறாய்?” என அவர் கேட்டுக்கொண்டிருந்தபொழுது பதில் என்னவென்று அவருக்கே புரிந்தது. அவர் மேல்மாடத்துக் கல்லிருக்கையில்தான் படுத்திருந்தார். வீடு திரும்பவேயில்லை.

மீண்டும் பகற்பொழுது கழிந்தது. குளித்துத் தயாராகி மாலைப்பொழுதில் மேல்மாடத்தை வந்தடைந்தார். ஆனால், இன்று கபிலர் வரும்முன்பே ஆட்டம் தொடங்கிவிட்டது. “காலம்பன்தான் தொடக்கிவைத்தான்” என்றான் பாரி.

“முடிக்கமுடியாத ஆட்டத்தை யார் தொடங்கினால் என்ன?” என்றார் கபிலர்.

“ஆட்டம் என்றால் அது முடியத்தான் வேண்டுமா?” எனக் கேட்டான் காலம்பன்.

“கேள்வி சரிதான், ஆனால், நான் ஆட்டத்துக்குள் வந்த பிறகுதான் இதற்கான விடையைச் சொல்ல முடியும்” என்றார்.

வீரனொருவன் நீட்டிய குவளையை வாங்கிய கபிலர் குடிக்காமல் கையில் பிடித்தபடியே பாரியிடம் கேட்டார், “இந்த ஆட்டத்தைப்பற்றிப் பின்னர் பேசுவோம். செம்மாஞ்சேரல் என்னதான் செய்தான்?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 67p7
பாரி வழக்கம்போல் சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறாய்? நேற்றும் முழுக்கதையையும் நீ சொன்னாயா?”

சிரித்தபடியே “ஆம்” என்று தலையாட்டினான்.

“கதைகேட்ட எனக்கு எதுவும் நினைவிலில்லை. கதைசொன்ன உனக்கு மட்டும் எப்படி நினைவிருக்கிறது?”

முன்பைவிடப் பெரும்சத்தத்தோடு சிரித்தான் பாரி.

கபிலருக்கு இதற்கான காரணமும் புரியவில்லை.

“கதைசொல்லி முடிக்கும் வரை குடிக்கக்கூடாது என எனது குவளையையும் வாங்கிக் குடிப்பவர் நீங்கள்தானே, அப்புறம் எனக்கு எப்படி மறக்கும்” என்றான்.

சிரிப்பில் உருண்டது மேல்மாடம். காலம்பன் காடதிரச் சிரித்தான். புரையேறித் தும்மல்கொண்டு மீண்டும் சிரித்தான். அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கண்ணில் நீர் வழிந்துகொண்டிருந்தது. விடாமல் சிரித்தனர் எல்லோரும். பாரியின் கண்ணிலும் நீர் திரண்டது. இப்படி மகிழும் காலம்பனைக் காண இத்தனை நாளானதென நினைத்துத் திரண்ட நீரது.

குவளைகள் சில நொறுங்கியிருக்கலாம். ஆனால், தனது கால்பட்டு பானை ஒன்று சரிந்து விழுந்ததும் கண்விழித்தார் கபிலர். பக்கத்தில் படுத்திருந்த உதிரன் கண்விழித்தான். “பானை காலருகில் எப்படி வந்தது உதிரா?” எனக் கேட்டார்.

உதிரன் சொன்னான். “வீட்டில் உள்ளோர் அவ்விடம் வைத்துள்ளனர்.”

பதில் கேட்டுத் திடுக்கிட்டார் கபிலர். “நாம் இருப்பது…” சரி வேண்டாம் என முடிவுசெய்து விளக்கம் ஏதும் கேட்காமல் அவ்வீட்டை விட்டு எழுந்து நடந்தனர்.

தேக்கன்தான் நேற்று கதையைச் சொன்னான். அந்தப் போரின் முடிவு மட்டும் நினைவில் இருந்தது. “ஒளி சரியப்போகும் அந்தக் கடைசிப்பொழுதில் பாரியின் வாள்வீச்சு எதிர்கொள்ள முடியாததாக இருந்தது. இருதரப்பு வீரர்களும் நிகழ்வதை உற்றுப்பார்த்துக்கொண்டிருக்க, கணநேரத்தில் செம்மாஞ்சேரலின் தலையை இடப்புறக்காட்டை நோக்கி சீவிச்சரித்தான் வேள்பாரி.”

போர் தொடங்கி, நீண்ட தாக்குதலுக்குப்பின்தானே இது நடந்திருக்கும். ஆனால், அதுவெல்லாம் சொல்லாமல் இதனை மட்டும் ஏன் சொன்னார் தேக்கன் என்று தோன்றியது. தோன்றிய மறுகணமே, “அவர் முழுமையும் சொல்லியிருப்பார். நமக்குத்தான் நினைவில் தங்கவில்லை” என நினைத்தபடி நடந்தார் கபிலர்.

“ஆனால், செம்மாஞ்சேரலின் தலையைப் பாரி சீவி எறிந்தது மட்டும் எப்படி நினைவில் இருக்கிறது?” என்ற கேள்வி எழுந்தது.

சோமபானத்தின் மீளமுடியாத மயக்கத்தில் மூழ்கினாலும் அதனைக் கிழித்து நினைவின் ஆழத்துக்குள் இறங்கும் வல்லமை பாரியின் வாளுக்கு உண்டு என்று தோன்றியபொழுது மெய்சிலிர்த்தது கபிலருக்கு.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 12, 2018 9:37 pm

12.05.2018

இதுக்கு என்னாத்துக்கு வேகமா போணும்? மெதுவாவே போலாமே.

விகடன்ல ஒவ்வொரு விசாழக் கெழமையும் வர்ற சரித்திரத் தொடர்தானே.  82 பாகங்கள் வந்திருச்சு.

ஆனா இந்த தொடரை கதைகள்ங்கற தலைப்பில எழுதுறதை விட, சரித்திரத் தொடர்னு தலைப்பு போட்டிருக்கலாம்.

உங்க முயற்சி பாராட்டுதற்குரியதே. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Heezulia


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 10:02 pm

இதுக்கு என்னாத்துக்கு வேகமா போணும்? மெதுவாவே போலாமே.

விகடன்ல ஒவ்வொரு விசாழக் கெழமையும் வர்ற சரித்திரத் தொடர்தானே.  82 பாகங்கள் வந்திருச்சு.

ஆனா இந்த தொடரை கதைகள்ங்கற தலைப்பில எழுதுறதை விட, சரித்திரத் தொடர்னு தலைப்பு போட்டிருக்கலாம்.

உங்க முயற்சி பாராட்டுதற்குரியதே. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1268862

ஆமாங்க அதே தான்... எனக்கு சில நாட்களுக்கு முன்பு தான் இந்த தொடரை பற்றி தெரிந்தது ... கால அவகாசம் சரியாக இல்லாததால் தொடர்ந்து படிக்க முடியவில்லை... நேற்று கதையில் மூழ்க ஆரம்பித்தேன் அதனால் தான் வேகமாக சென்று கொண்டு இருக்கிறேன்  ... 82  பாகங்கள் தான் வந்திருக்கிறது என்பதை நினைத்தால் தான் அடுத்த வாரம் வரை காத்து இருக்க வேண்டுமே என்ற கவலையாக இருக்கிறது... சிரி சிரி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 10:29 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 P83a
முருகனும் வள்ளியும் கொடுத்த காதற்பரிசான  சோமப்பூண்டுப்பானத்தைப் பருகும் முன்னுரிமை காதலர்களுக்கே உரியது. எவ்வியூரின் தலைவனேயானாலும் அதற்குக் கட்டுப்பட்டவன்தான். நாள்தோறும் அதிகாலை சோமப்பூண்டு  போடப்பட்ட பெருந்தாழியில் நீரெடுத்து ஊற்றும் பணியை முதுபெண்கள் செய்வர். அந்நீரில் சோமப்பூண்டு  கொஞ்சங்கொஞ்சமாகக் கரைந்து, கலங்கி, மயக்கும் மணத்தோடு பானமாகத் திரண்டிருக்கும். 

ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இணையர் இக்காதற்பரிசைக் கையிலேந்தி ஆட்டத்தைத் தொடங்கிவைப்பர். அதற்குப் பின்னர்தான் மற்றவர்களுக்குத் தரப்படும்.  சோமப்பூண்டு கிடைத்து இன்று ஐந்தாம் நாள். இன்றைய ஆட்டத்தை யார் தொடங்கப்போகிறார்கள் எனப் பலரும் காத்திருந்தபொழுது அரங்கினுள் நுழைந்தாள் அங்கவை; உடன்வந்தான் உதிரன்.
எவ்வியூர் முழுக்கத் தெரிந்த கதைதான் இது. கொற்றவைக்கூத்தின்பொழுது தீக்களி பூசிக்கொண்டு நெருப்பில் இறங்கி ஆடினாள் அங்கவை. தழலுக்குள் சுழலும் அந்தக் காதலிணையர்கள் யாரென அப்பொழுது ஊராருக்குத் தெரியவில்லை. ஆனால், பாரி பார்த்த கணமே அறிந்தான், சுடரும் நெருப்பில் சுற்றிச்சுழல்பவள் தன் மகளென. ஆனால், அங்கவையோடு இணைந்தாடும் ஆடவன் யார் என்பதுதான் பாரிக்குத் தெரியாமல் இருந்தது.

அதுவும் அடுத்த சிலநாள்களிலேயே தெரிந்துவிட்டது. பேரெலி வேட்டையின்பொழுதே உதிரன் பாரியிடம் சிக்கிவிட்டான்.  அவனது  உடல்மொழி  கண்டே உண்மையறிந்தான் பாரி.

இச்செய்தியை அறியும் முன்பே கபிலரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பினை உதிரனுக்குக் கொடுத்திருந்தான் பாரி. இயல்பாய் அமைவதைக்கூட இயல்பானது என ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தோடு இயங்கும் ஆற்றல் காலத்துக்கு உண்டு. பாரி தனது இயல்பின் வழியே  இணையருக்கான வழித்தடத்தைச் செப்பனிட்டுக் கொடுத்திருந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 P83b
கபிலரிடம் பாடங்கேட்க எந்நேரமும் அவரின் குடிலில் அங்கவை இருந்தாள். அவருக்கு உதவிசெய்ய அங்கேயே இருந்தான் உதிரன். பெரும்புலவனின் சாட்சியாகச் செழித்து வளர்ந்தது காதல். யாருக்கு யார் பாடங் கற்றுக்கொடுக்கிறார்கள் என்ற குழப்பம் குடிலில் எப்பொழுதும் நிலவியது.

அங்கவையைப் போன்ற அறிவிற்சிறந்த மாணவிக்கும் உதிரனைப் போன்ற அழகுநிறைந்த வீரனுக்கும் இடையில் மொழிகற்றுத்தரும் புலவன் சிக்கியிருந்தான். பெரும்புலவனை உருட்டியும் மறைத்தும் விழுங்கியும் விளையாடும் விளையாட்டு காலநேரமின்றி நடந்துகொண்டிருந்தது.

அவர்கள் இருவரும் காதல்கொண்டுள்ளனர் என்று கபிலரும் அறிவார். ``எனது குடிலில் இருக்கும்பொழுது கல்வியறிதல் தாண்டி, சிறு கவனச்சிதறல்கூட அங்கவையிடம் இருந்ததில்லை. அதேபோலத்தான் உதிரனும். எனக்கான பணியைச் செய்வதைத்தவிர வேறெதிலும் ஈடுபாடின்றி விலகி நிற்பான்” என்று அவர்கள் இருவரைப்பற்றியும் பெருமையோடு மற்றவர்களிடம் கூறுவார் கபிலர். 

பெரும்புலவனேயானாலும் காதலர்களின் விளையாட்டில் தான் என்னவாக இருக்கிறோம் என்பதைக் கண்டறிய முடியாதுதானே. கபிலர் பார்ப்பதை மட்டுமே உண்மையென நம்பியிருந்தார். அவர் பார்க்காத பகுதியில்தான் உண்மையின் முழுமையிருக்கிறது என்பதை அவர் அறியவில்லை.

அவர்கள் இருவரும் காதல்கொள்கிறார்களா என்ற ஐயம் பலமுறை கபிலருக்கு வந்துள்ளது. ஏனென்றால், அவர்கள் இருவரும் தங்களுக்கு இடப்பட்ட பணியினைத்தவிர வேறெதையும் செய்வதில்லை என்று அவர் நம்பினார். கபிலரைக் கண்ணைக்கட்டி விளையாட்டுக் காட்டியதுதான் அவர்களின் காதல் செழித்திருந்ததன் அடையாளம்.

புலவன் மனங்களுக்குள் ஊடுருவத்தெரிந்தவன். அங்கவையின் கண்ணைப் பார்த்தே கதையைச்சொல்லும் ஆற்றல் கபிலருக்கு உண்டு. ஆனாலும் அவரால், இவர்கள் பேசிக்கொள்ளும் மொழியைப் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 P83cபுரிந்துகொள்ளமுடியவில்லை. காரணம், அம்மொழி இயற்கையின் ஆதிரகசியங்களைக் கொண்டிருந்தது. அங்கவை தனது கூந்தலுக்குப் பூச்சூடி வருவதுதான் கபிலருக்குத் தெரிந்தது. ஆனால், விரியிதழ் மலர் சூடுவதற்கு ஒரு பொருள் உண்டு. கூம்புவடிவப் பூச்சூடினால் சொல்லும் செய்தி வேறொன்று. நான்கிதழ் மலர்சூடி வரும்போதெல்லாம் அங்கவையின் முகத்தில் இருக்கும் பூரிப்பு கபிலரால் உய்த்தறிய முடியாதது.

சமதளத்தில் மன்னர்கள் ஆநிரையைக் கவர வெட்சிப்பூ, மீட்கக் கரந்தைப்பூ, போருக்கு முனைய வஞ்சிப்பூ, தாக்கியோரை எதிர்க்கக் காஞ்சிப்பூ, வெற்றிக்கு வாகைப்பூ எனப் புறக்காரணங்களின் அடையாளங்களாகப் பூக்களைச் சூடிக்கொண்டனர்.

பூக்கள், செடிகொடிகளின் அக அடையாளம். கிளைகளுக்கும் தண்டுகளுக்கும் இலைகளுக்கும் இல்லாத வண்ணமும் வாசமும் பூக்களுக்கு இருப்பது அதனால்தான். குறிஞ்சி காதல் நிலம். அக்காதல் நிலத்தில் நிகழும் காதல் விளையாட்டுக்கு பூக்களைவிட சிறந்த தூதுவன் யாராக இருக்க முடியும். பூக்கள்தான் செய்தியைச் சொல்கின்றன; பூக்கள்தான் உயிரைக் கொல்கின்றன.

ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக, கூந்தலில் எப்பூவும் சூடாமல் வந்திருந்தாள் அங்கவை. மொழிப்பயிற்சியின் புதிய பாடத்தைத் தொடங்கும் நாள் அது. அங்கவை ஏதோ ஒரு மனச்சோர்வில் இருக்கிறாள் என்று கபிலர் புரிந்துகொண்டார். அதனால் புதிய பாடத்தைத் தொடங்கவில்லை. சிறிதுநேரம் உதிரன் வெளியே போய்வந்தான். அங்கவை உட்கார்ந்திருந்த இடத்தினருகே அத்திக்காய் இருந்தது. பாடம் முடிந்து அங்கவை போன பின்பே அதனைக் கபிலர் பார்த்தார். இது இங்கு எப்படி வந்தது எனக் குழம்பிய கபிலருக்கு அத்திக்காய் சொல்லும் செய்தி தெரியவில்லை.

அத்திக்காய் பூக்காமல் காய்ப்பது. வாழ்வின் ஒருகட்டத்தைத் தாவிக்கடப்பதன் அடையாளம் அது. அங்கவையும் உதிரனும் காதலின் அடுத்த கட்டத்தை அறிய ஆசைப்பட்டதன் வெளிப்பாடு அது. பூச்சூடாமல் அங்கவை வந்ததால் உதிரன் அத்திக்காய் கொடுத்துத் தனது எண்ணத்தைச் சொன்னானா? அல்லது பூச்சூடாமலே வந்தவள் அத்திக்காய் கொடுத்து அழைத்துவிட்டுப் போனாளா? யார் அறிவார்?

காயை அறியாத கபிலர் காதலை எப்படி அறிவார்? கண்முன் நடக்கும் உரையாடலைக் கண்கொண்டுமட்டும் பார்த்துவிட முடியாது. ஏனென்றால், இது காதலின் உரையாடல். நிகழ்த்தப்பட்ட உரையாடலின் தொடர்ச்சி இப்பொழுது என்னவாக நிகழ்ந்துகொண்டிருக்கும் என்பது தெரியாததால்தான், அத்திமரம் பற்றிய பாடலை அங்கவைக்குச் சொல்லாமல் விட்டுவிட்டோமே என்று கவலைப் பட்டுக்கொண்டிருந்தார் கபிலர். தனக்கும் பாடம் கற்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது புரியவில்லை அவருக்கு.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 P83d
காதல் விளையாட்டில் இணையற்ற இணையரான அங்கவையும் உதிரனும் சோமப்பூண்டின் பானம் பருக அரங்கினில் நுழைந்தனர். அங்கவை வழக்கத்துக்கு மாறாக சற்றே நாணத்தோடு உள்ளே நுழைந்தாள். உதிரன் அமைதியான இயல்பைக் கொண்டவன். சிறுத்த கண்களைக் கொண்ட அவனது முக அமைப்பு யாரையும் மயக்கக்கூடியது. உதட்டோரம் இருக்கும் சிறுகுழி முகத்தில் எப்பொழுதும் ஒரு சிரிப்பு மலர்ந்திருப்பதைப் போலவே தோற்றம் தரும். மகிழ்வு நீங்காத அழகன் அவன். அவன் மயங்கிக்கிடக்கும் அழகி அவள்.

உள்நுழைந்த இருவரைப் பார்த்ததும் பழச்சாற்றை ஊற்றித்தரக் குவளையை எடுத்தாள் முதுமகள். ஆனால், அங்கவையோ அவள் எடுக்கும் குவளையைப் பார்க்காமல் சற்று தள்ளி எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கு எதைப் பார்க்கிறாள் என முதுமகளும் திரும்பி அப்பக்கம் பார்த்தாள்.  நீர்கொண்டுவரும் பானை அவ்விடமிருந்தது. முதுமகள் கையிலேந்திய குவளையைக் கீழே வைத்துவிட்டு அப்பானையைப் பார்த்தபொழுது, உதிரன் பானையைக் கையிலெடுத்தான். முதுமகளுக்கு வியப்புத் தாங்கமுடியவில்லை.

``தொடங்கும்பொழுதே பானையிலா?’’ என்றாள்.

``ஆம், வேறு வழியில்லை. இப்பெருந்தாழியைத் தூக்கிச்செல்ல முடியாதல்லவா?” என்றான் உதிரன்.

முதுமகளால் சிரிப்பினை அடக்கமுடியவில்லை.

``நாங்கள் காதலர்களான பிறகு, முதன்முறையாக இப்பொழுதுதான் சோமப்பூண்டு கிடைத்திருக்கிறது. இச்சிறுகுவளையில் வாங்கி என்று தீர்க்க எமது கனவை?”

“இவ்வளவு ஆர்வங்கொண்ட நீங்கள் ஐந்து நாட்களாக ஏன் வரவில்லை?” என்று கேட்டாள் முதுமகள்.

உதிரன் சொன்னான். ``நான் கபிலருக்கு உதவியாளன். அவரை அருந்தச்செய்து மகிழ்விப்பதுதான் பாரி எனக்கு இட்டுள்ள கட்டளை. எழமுடியாத மயக்கங்கொண்டு அவர் துயிலும் நாளுக்காகக் காத்திருந்தோம். இன்றுதான் அது வாய்த்தது.”

பேசிக்கொண்டிருக்கும்பொழுதே அடுத்த இணையர் உள்ளே நுழைந்தனர். அவர்கள் நீலனும் மயிலாவும். சோமப்பூண்டு கிடைத்த  செய்தி பறம்புநாடு முழுவதும் பரவிவிட்டது. எல்லா ஊர்களிலிருக்கும் காதலர்களும் எவ்வியூர் புறப்பட்டு வந்துகொண்டிருக்கின்றனர்.  செய்தி வேட்டுவன் பாறைக்குப் போய்ச்சேர்ந்த கணத்தில் இவர்கள் புறப்பட்டு வந்துசேர்ந்துள்ளனர். அதனால்தான் ஐந்தாம் நாள் காலையிலே வர முடிந்தது. நீலனும் மயிலாவும் காதல்கொள்ளத் தொடங்கிய பிறகு முதன்முறையாக இப்பொழுதுதான் சோமப்பூண்டு கிடைத்துள்ளது. அரங்கினுள் முதலில் நுழைந்தான் நீலன், தொடர்ந்து மயிலா வந்தாள்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 P83eமயிலாவைப் பார்த்ததும் முதுமகளுக்கு உள்ளுக்குள் சிறு அச்சம் எட்டிப்பார்த்தது. நீலன் அதிசிறந்த வீரனெனப் பறம்பெங்கும் அறியப்பட்டவன். அவனை வீழ்த்திய வல்லமைகொண்டவளைப்பற்றி அதைவிட அதிகமாக அனைவருக்கும் தெரியும்.

அரங்கினுள் நுழைந்ததும் சோமப்பூண்டின் மணம் நீலனின் மூக்கில் ஏறியது. சற்றே காரத்தன்மையோடு இருக்குமோ எனத் தோன்றிய கணத்தில் அதன் தன்மை வேறொன்றாகப்பட்டது. இதுவரை உணராததாக இருக்கிறதே என்று நினைக்கும்பொழுதே அவன் கிறக்கத்தில் மூழ்கத்தொடங்கினான். அருகிருந்த மயிலா அவனது முதுகைத்தட்டினாள். விழிப்பு வந்தவனைப்போல மணம்விலகி மீண்டான்.

அங்கவையும் உதிரனும் இதுவரை பருகவில்லையே தவிர ஐந்து நாள்களாக இவ்வாடையை நுகர்ந்து பழகிவிட்டனர். ஆனால், நீலனுக்கும் மயிலாவுக்கும் அப்படியல்ல, நுகர்வதே இவ்வளவு கிறக்கங்கொடுக்குமானால் அருந்தினால் என்னவாகும்?

கிறக்கம் விலக்கி ஊற்றிக்கொடுக்கும் முதுமகளின் அருகில் வந்தனர் இருவரும். இவர்கள் இருவரும் பானையைத்தான் தூக்குவார்கள் என நினைத்த முதுமகள் குவளையை ஓரத்தில் வைத்துவிட்டு இன்னொரு பானையை எடுத்தாள்.

நீலன் முதுமகளையே பார்த்துக்கொண்டிருந்தான். ``என்ன இப்படிப் பார்க்கிறாய்? பானையைத்தானே எதிர்பார்த்தாய்? அதைத்தான் எடுக்கிறேன்” என்றாள்.

நீலனோ, ``இல்லை, நாங்கள் பானையை எதிர்பார்த்து வரவில்லை” என்றான்.

“அப்புறம் எதை எதிர்பார்த்து வந்தீர்கள்? இவர்கள் இருவரைப்போல பெருந்தாழியைத் தூக்கிப் போகலாம் என நினைத்து வந்தீர்களா?” எனக் கேட்டபடி சிரித்தாள்.

உதிரனும் அங்கவையும் உடன் சிரித்தனர். நீலன் சொன்னான், “அவர்கள் காதல்கொண்டுள்ள இடம் எவ்வியூர். எனவே அவர்களால் பெருந்தாழியைத் தூக்கிச்சென்றுவிட முடியும். ஆனால், நாங்கள் வேட்டுவன் பாறைக்கல்லவா போக வேண்டும். அவ்வளவு தொலைவு எப்படித் தூக்கிச்செல்ல முடியும்?”

சற்றே வியப்போடு முதுமகள் கேட்டாள், “அப்படியென்றால் என்ன செய்யலாமென்று வந்துள்ளீர்கள்?’

முதுமகள் சொல்லிமுடிக்கும் முன்பே மயிலா சொன்னாள், “சோமப்பூண்டை எடுத்துச்செல்லலாம் என்று...”

அதிர்ந்த முதுமகள் சட்டென அருகிருந்து கம்பைத் தூக்கினாள். பாய்ந்துவந்து அந்தக் கம்பைப் பிடித்த மயிலா சொன்னாள், “இது காதற்பரிசு. முருகன் எவ்விக்குக் கொடுத்தது பருகும் நீரையல்ல, உருகும் பூண்டினை. கொடுத்ததும் பெற்றதும் காதலர்கள் செய்துகொண்ட செயல்; இடையில் முதுமகள்கள் ஏன் நுழைந்தீர்கள்?” எனச் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே, நீலனைப் பார்த்து, “விரைவாக அதனை எடு” என்றாள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 P83f
பூண்டினை எடுக்க தாழிநோக்கிப் பாய்ந்தான் நீலன். எங்கிருந்து அப்படியொரு குரல் வந்ததெனத் தெரியாது. அரங்கமே அதிரும்படி பெருங்குரல் கொடுத்தாள் முதுமகள். குரல் கேட்டதும் வெளியில் இருந்த வீரர்களும் மற்ற முதுமகள்களும் உள்ளே நுழைந்தனர்.

என்ன நடந்துகொண்டிருக்கிறது என யாருக்கும் புரியவில்லை. யாரையும் கட்டுக்கடங்காமல் செய்யும் ஆற்றல் இப்பூண்டுப்பானத்துக்கு உண்டு. அதன் மணம் உருவாக்கிய கிறக்கமே இவ்வளவு வெறிகொள்ளச் செய்கிறது. நிலைமையை எப்படிச் சமாளிக்க எனச் சிந்தித்த முதுமகள், சிக்கலைப் பெரிதாக்க வேண்டாம் என முடிவுசெய்து, சட்டெனக் குவளையை நீட்டியபடி, “முதலில் இதனைக் குடி, என்ன செய்யலாம் என்று பின்னர் முடிவுசெய்வோம்” என நீலனை நோக்கி நீட்டினாள்.

அவனது மூக்கிற்கு மிக அருகில் ஏந்திய குவளைக்குள்ளிருந்து மேலெழுந்த மயக்கம் மூக்கினுள் ஏறி உச்சந்தலையை முட்டியது. தனக்கும் நீலனுக்கும் நடந்துகொண்டிருந்த போராட்டத்தைக் கணநேரத்தில் நீலனுக்கும் சோமப்பூண்டுக்குமான போராட்டமாக மாற்றினாள் முதுமகள்.

சற்று தள்ளி இருந்த மயிலா, முதுமகளின் தந்திரத்தை உணர்ந்தபடி, “அதனை வாங்கிக் குடிக்காதே” என்று கத்தினாள். அவளது சொல் அவன் காதில் விழும்பொழுது பருகிய முதல்மிடறு தொண்டையைக் கடந்து கீழிறங்கிக்கொண்டிருந்தது. இனி அவனைக் கையாள்வது எளிது. அவனின்றி மயிலாவால் மட்டும் இந்த உரிமைப்போரை நடத்த முடியாது என முதுமகள் அறிவாள்.

முதுமகளுக்கு வேர்த்து அடங்கியது. கணநேரத்தில் சூழலே மாறத்தெரிந்ததே எனத் தவித்துப்போனாள். 

சினம் உச்சத்திலேறியபடி ஒரு பார்வை பார்த்தாள் மயிலா. அவளது பார்வையைப் பொருட்படுத்தாதது போல அப்பக்கம் திரும்பிக்கொண்டாள் முதுமகள். சற்று நேரங்கழித்துத்தான் மீண்டும் திரும்பினாள்.
பானையை ஏந்தியபடி அரங்கை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர் நீலனும் மயிலாவும். அவர்களுக்கு முன்பே அங்கவையும் உதிரனும் வெளியேறியிருந்தனர்.

வெடத்தப்பூவின் இலை எள்ளுச்செடியின் இலையைவிட மிகச்சிறியதாகவும் ஊசியாகவும் இருக்கும். செடியின் அளவும் சிறியதுதான். ஆனால், அதன் அதிசயிக்கத்தக்க சிறப்பு பூவினில் உள்ளது. அது அரும்பும்பொழுது ஒரு நிறத்தில் இருக்கும், அரும்பு விளைந்து மொட்டாகும்பொழுது ஒரு நிறம் கொள்ளும், மொட்டு பருத்து முகையாகும்பொழுது புது நிறத்தில் ஒளிரும். இதழ்விரிந்து மலரும்பொழுது வேறொரு நிறம்காணும். நான்கு நிறங்களில் பூத்து உதிரும்.

இதன் வியப்புறும்தன்மை இத்தோடு நின்று விடுவதில்லை. நான்கு நிலைகளில் நான்கு நிறங்களைக் காணும் வெடத்தப்பூ நான்கு தன்மையிலும் நான்கு சுவைகளை உடையதாகவும் இருக்கும். அச்சுவை நான்குவிதமான நறுமணங்களை வீசும்.

சின்னஞ்சிறு செடி ஒன்று நிறம், மணம், சுவை என அனைத்தையும் விதவிதமாய் வெளிப்படுத்தி இயற்கையின் குதூகலத்தை நிகழ்த்திக்காட்டும். தும்பிகளும் வண்டுகளும் வெடத்தப்பூவைக் கண்டு சற்றே குழப்பமடைகின்றன என்பார்கள். அக்குழப்பத்துக்குக் காரணம் நிறமா, மணமா, சுவையா எனத் தெரியாது. ஆனால், அது ஒரு வியப்புறு தாவரம்.

அதனால்தான் வெடத்தப்பூவைக் காதலர்களின் பூவாக வேளிர்குலம் கருதியது. மனித வாழ்வில் இத்தனை வண்ணங்களும் வாசனைகளும் கொண்ட காலமாக காதல்கொள்ளும் காலமே இருக்கிறது. பறம்பின் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 P83gகாதலர்கள் வெடத்தப்பூவின் அருகில் அமர்ந்தே தங்களின் காதலைப் பரிமாறிக்கொள்கிறார்கள். வெடத்தப்பூவின் அருகில் அமர்ந்திருப்பவர்களை “வெடலைகள்” என்றும் அப்பருவத்தை “வெடலைப்பருவம்” என்றும் பறம்பின் மக்கள் அழைக்கின்றனர்.

மயக்கும் பழச்சாற்றைப் பானையோடு தூக்கிப்போன வெடலைகள் வெடத்தப்பூத் தேடியே அலைந்தனர். உதிரனும் அங்கவையும் எவ்வியூரின் கிழக்குப்பக்கச் சரிவில் வெடத்தப்பூவைக் கண்டு அவ்விடம் அமர்ந்தனர். ``நாம் அப்பக்கம் போகவேண்டாம்” எனச் சொல்லி வடபுறம் சென்ற நீலனும் மயிலாவும், சிற்றோடையின் ஓரம் அச்செடியைக் கண்டறிந்து அமர்ந்தனர்.

வெடத்தப்பூக்கள் சொல்லும் காதல்கதைகள்தாம் எத்தனை எத்தனை. காதல் கணந்தோறும் அழகினைச் சுவைக்கக் கொடுத்துக்கொண்டே இருக்கும் என்பதன் அடையாளம்தான் வெடத்தப்பூக்கள். குறிஞ்சி நிலமே காதல் நிலம்தான். அதிலும் வெடத்தப்பூ குறிஞ்சியின் குறியீடு. நீர்க்குமிழி, கதிரவனின் ஒளிபட்டுப் பலவண்ணங்களைக் குழைத்துக்காட்டுவதைப் போலத்தான் வெடத்தப்பூவும். அது, இயற்கை தனது எண்ணம்போல் நிறத்தையும் மணத்தையும் சுவையையும் விளையாடிப்பார்க்கும் வண்ணக்குமிழி.

வள்ளியும் முருகனும் வேங்கை மரத்தின் அடிவாரத்தில் அமர்ந்திருந்தபொழுது அருகிருந்த வெடத்தச்செடி அரும்புவிட்டிருந்தது. அரும்பின் நிறம் பச்சை. தேனை நுனிநாக்கில் தொடுவதைப்போன்றது அதன் சுவை. தொட்ட கணம் உடல் முழுவதும் பரவும். இச்சுவையும் அப்படித்தான். மணம் பரவி மூச்சுக்குழலுக்குள் சுழலச்சுழல மயங்கிக் கண்செருகத் தொடங்கும்.

முதலில் அந்த மணம் வள்ளி கூந்தலில் சூடியுள்ள பூவிலிருந்துதான் வருகிறதோ என நினைத்தானாம் முருகன். தோளிலே சாய்ந்திருந்த வள்ளிக்கோ முருகனின் தனித்த மணம் இதுதானோ என்று தோன்றியதாம். வள்ளியின் கூந்தலுக்குள்  அந்நறுமணம் தேட முருகன் முற்பட்டபொழுது, முருகனின் உடலுக்குள் அதனைத் தேடத் தொடங்கினாள் வள்ளி.

காதல் இப்படித்தான் தேடலில் தொடங்கி, தொலைவதில் முடிவடையும். அவர்கள் இருவரும் கண்டடையாமலே தொலைந்துபோயினர். இக்கதையை உதிரன் சொன்ன பொழுது அங்கவை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆனாலும் அது முழுக்கதையல்ல என அவளுக்குத் தோன்றியது.

பச்சை நிறத்துக்கு ஒரு குணம் உண்டு. குறிஞ்சியின் அடிநிறம் பச்சை. நீர் எல்லா நிறமாகவும் மாறும். ஆனாலும் நீரின் நிறம் சருகுவெண்மை. அதுபோலத்தான் குறிஞ்சியின் நிறமும். காதல்கொள்ளத் தொடங்கும் காலத்தில் இளமை செழித்துக்கிடக்கும் பச்சையம்தான் உடலெங்கும் மிதந்துகொண்டிருக்கும்.

அவ்வளவு நேரமும் அவள் சொன்னதைக் கவனித்துக்கொண்டிருந்த உதிரன் கேட்டான், ``காதலின் துளிர்ப்பருவம் பச்சை நிறத்தாலானதா?”

``ஆம்” என்றாள் அங்கவை.

யிலாவின் மடியினில் தலைவைத்து, சிற்றோடையில் கால்நீட்டிப் படுத்திருந்த நீலன் சொன்னான், ``வள்ளியையும் முருகனையும் ஒருசேர மயக்கியது வெடத்தப்பூ. அதனால்தான் கையில் இருந்த பூண்டினை எவ்வியிடம் கொடுத்தனுப்பிவிட்டனர். அப்பூண்டினைவிடப் பெருமயக்கத்தை வெடத்தப்பூ உருவாக்கியிருக்கும்.” அதனைக் கேட்டுக்கொண்டே நீலனின் தலைமுடியைக் கோதிய மயிலா சொன்னாள்,``நீரில் கரையும் பூண்டினைவிட, காற்றில் கரையும் பூவின் மயக்கம் எதிர்கொள்ள முடியாததாகத்தானே இருக்கும்.”

பதில்கேட்டு இளஞ்சிரிப்பை உதிர்த்தான் நீலன்.

``ஏன் சிரிக்கிறாய்?”

``மடியில் தலைவைத்து மயங்கிக் கிடப்பவனிடம் மயக்கத்தைப்பற்றிப் பேசுகிறாயே என்றுதான்.”

மடியோடு கிடந்தவனைக் கையோடு அள்ளினாள்.

நீலன் புரியாமல் அவளை உற்றுப் பார்த்தபடியிருந்தான்.

சிறிது நேரம் உற்றுப் பார்த்தபடியேயிருந்த மயிலா சொன்னாள், ``மயங்கிய ஒருவனின் கண்களில் இவ்வளவு துடிப்பு இருக்காது. அதுமட்டுமல்ல, மயங்கியவனின் கைகள் இந்த வேலையைச் செய்யாது.”

சட்டெனக் கையை விலக்கியபொழுது சிரிப்பு கொட்டியது. மகிழ்ந்து சிரித்தபடி நீலன் சொன்னான், ``பூவோ, மதுவோ எல்லாம் நினைவை உதிரச்செய்யும் மயக்கங்களைத்தான் உருவாக்கும். காதல் மட்டுந்தான் மயங்க மயங்க நினைவைச் செழிக்கச் செய்யும்.”

எவ்வளவு மயங்கினாலும் உணர்வுப் புலன்கள் மயங்குவதில்லை என்பதை நீலன் சொல்லிக்கொண்டிருந்தபொழுது, மயங்காத மயக்கங்கொண்டிருந்த மயிலா கேட்டாள், ``மயங்கினாலும் முடியாத விளையாட்டா இது?”

``ஆம், மன அளவில் இது முடிவுறாதது. நீர் வற்றினாலும் ஓடையின் குணம் மாறாதல்லவா? காதலும் அப்படித்தான்.”

சொல்லும்பொழுது அவள் உடல் அவன்மீது சரிந்து கீழிறங்கியது. அவள் சொன்னாள், ``வெள்ளம் ஓடினாலும் ஓடையின் குணம் மாறாதுதானே?”

இதற்கு மேல் இருவராலும் பேசிக்கொண்டிருக்க முடியவில்லை, சிற்றோடையில் பெருவெள்ளம் ஓடியது.

“காதலின் நிறம் பச்சையா?” எனக் கேட்டான் உதிரன்.

``துளிரின் நிறம் பச்சை. செழிப்பின் நிறம் பச்சை. இயற்கையின் நிறம் பச்சை. எனவே காதலின் நிறமும் தொடக்கத்தில் பச்சைதான். பின்னர்தான் வெடத்தப்பூப்போல அதுவும் மாறுகிறது” என்றாள் அங்கவை.
``செடிகொடிகளைப்போல மனிதனும் நிறம் மாறுவானா?”

அங்கவை சொன்னாள், ``மனித உடலுக்கு நிறம்மாறத் தெரியாது. ஆனால், நிறத்தைச் சுரக்கத் தெரியும்.”

விடை இன்னும் வியப்பைக் கொடுத்தது, ஆனாலும் அவனது அறிவுக்கு எட்டாததாக அது இருந்தது. ``கபிலரின் மாணவியாய்க் காதலைச் சொல்லித்தர முயலாதே, காதலியாய் உடனிணைந்து கண்டறிய முயற்சி செய்.”

அவன் சொல்வது ‘சரி’தான் என்று தோன்றியது. என்ன செய்யலாம் என்று சிந்தித்தாள்.

உதிரனின் ஆர்வம் சற்றே வேகங்கொண்டிருந்தது. ``மனித உடலுக்குள் வண்ணங்கள் சுரப்பதை அறிய வழியுண்டா?’’

``எத்தனையோ வழிகளுண்டு, ஒவ்வொரு உடலுக்குத்தகுந்து அது மாறும், மலரும்.”

உதிரனின் முகத்தில் வியப்பே தெரிந்தது. எப்படி அவனுக்கு விளங்கவைப்பது எனச் சிந்தித்த அங்கவை, சற்றே நெருங்கி உதிரனின் கன்னத்தை இரு கைகளாலும் அள்ளிப்பிடித்தாள். அவளது உள்ளங்கையின் குளுமை உச்சந்தலைக்கு ஏறியது.

சிந்தனையின் வழியே அறிய எவ்வளவு முயன்றாலும் பிடிபடாத காதல், சின்னத் தொடுதலில் எல்லாவற்றையும் அறியச் செய்துவிடுகிறது. அங்கவை,  உதிரனைத் தொடுதல் ஒன்றும் புதிதல்ல; ஆனால், காதலின் ஆழம் காணும் உரையாடலின் நடுவே உதிரனை அள்ளியெடுக்கும் பொழுது அவன் உடலும் அறிவும் ஒன்றாய்க் கிளர்ந்தெழுந்தன. உடல்முழுவதும் பூத்து அடங்கியது உதிரனுக்கு.

கைகளில் ஏந்திய உதிரனின் முகத்தை உற்றுப்பார்த்தபடி அங்கவை சொன்னாள், “காதல் மலரத் தொடங்குங்கணம் உன் கண்களின் நரம்புகளில் பச்சைநிறம் ஓடி மறைகிறது.”

இப்படியொரு விளக்கத்தை எதிர்பார்க்க வில்லை. காதலின் தொடக்க நிறம் பச்சை என்று அதனால்தான் சொன்னாளா என்று  எண்ணியபடி அங்கவையின் கன்னம் ஏந்தத் தன் கைகளை அருகில் கொண்டுசென்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 7 P83h
உதிரனின் கன்னத்திலிருந்து கைவிலக்கி, தன்னைநோக்கி வரும் அவனுடைய இரு கைகளையும் இறுகப்பற்றினாள் அங்கவை. உதிரனுக்குப் புரியவில்லை.

பிடித்த கைகளின் முனையில் சிறியதாய் உதடுகுவித்து முத்தங்கொடுத்தாள். இருவருக்குமான நெருக்கத்துக்கிடையில் காற்று புகமுடியாமல் தவித்தது. அதனைவிட அதிகத் தவிப்போடு அவள் சொன்னாள், “காமம் நுழையும் கணம் உனது விரல்களின் அடிநகம் நீலங்கொண்டு கறுக்கிறது.”

மயக்கத்தில் மூழ்கிய உதிரன் காதல் விலக்கி, சட்டெனத் தன் விரல்களின் அடிநகம் பார்க்கத் தோன்றியது. ஆனால், அவளோ அவற்றைத் தனது மார்போடு அணைத்துப் பிடித்தாள். உதிரனின் கண்கள் சுழன்று மூழ்கின.

நாணங்கொள்ளச் செய்யும்படி அவனை உற்றுப்பார்த்த அங்கவை சொன்னாள், “காமம் தழைக்கும் இக்கணம் உனது முகத்தில் மஞ்சள் பூத்துக் கலைகிறது.”

மீண்டும் அவன் தன் தரைக்கு இறங்கினான். அவளது சொல்லுக்கும் செயலுக்கும் நடுவில் உயிர் உழன்றது. காதலை இணைந்து பருகலாம். ஆனால், இணைந்து பயிலக்கூடாது என அவனுக்குத் தோன்றியபொழுது அங்கவை தொடர்ந்தாள், “காமம் பொங்கிப் பூக்கும் கணம்…” சொல்லி நிறுத்தினாள்.

கிறங்கிய உதிரனுக்கு மூச்சு நிற்பதுபோல் இருந்தது. சற்றே உயிர்பெற்று, மயங்கிய குரலில் கேட்டான் “சொல், என்ன நிறம்?”

சற்றே விட்டு விலகி, அவனது கன்னத்தில் ஓர் அடி அடித்துவிட்டுச் சொன்னாள், “பார்க்காததை எப்படியடா சொல்ல முடியும்?”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3839
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 12, 2018 10:48 pm

12.05.2018

82 வது பாகம் இந்த மாசம் 11ஆம் தேதிதானே வந்திருக்கு.

இப்படி காப்பி பேஸ்ட் செய்றதுக்கு எதுக்குங்க.................... படிக்கணும். ஒரு பாகத்துக்கு ஒரு மூணு நிமிஷம், அதிகம்னா அஞ்சு நிமிஷம் போதும். காலைல ஒரு அரை மணிநேரம், சாய்ங்காலம் அரை மணி நேரம்னு ஒரு நாளைக்கு 12 பாகம் அனுப்பிறலாமே. இன்னும் பதினஞ்சு நிமிஷம் அதிகமா செலவழிச்சா 15 பாகம் அனுப்பலாம். நீங்கதான் 55பாகம் அனுப்பிட்டீங்களே. ரெண்டே நாளைல 82ஐயும் முடிச்சிறலாம்.

இது எப்படி இருக்கு?

Heezulia மீண்டும் சந்திப்போம்


Sponsored content

PostSponsored content



Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக