புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
manikavi
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Pampu
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
214 Posts - 42%
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
manikavi
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 11, 2018 7:13 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி ரமேஷ் .
இன்றுதான் முதல் முறையாக படிக்க ஆரம்பித்துள்ளேன்.
ஒரு புதினம் மனதை கவருவதற்கு அதன் முதல் அத்தியாயம்
கதாநாயகன் அறிமுகம் படுத்தும் விதம், உரை  நடை முதலியவை
மிகவும் முக்கியம். வெங்கடேசன் அவர்கள் நடை மிகவும் அருமை.
நீலன் --கபிலர் முகவுரை சம்பாஷணை அருமை.
நீலனின் பேச்சில் உள்ள தன்னம்பிக்கை ---வாவ் --அருமையோ அருமை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1268786
ஆமாம் ஐயா நிச்சயமாக அருமையான நடை... மீளமுடியாமல் தவிக்கிறேன் ... இக்கதையில் இருந்து ...
கல்கி அவர்களை போலவே கதை மாந்தர்களுக்குள் நம்மை உலாவ விடுகிறார்.. உலாவிக்கொண்டு இருக்கிறேன் மகிழ்ச்சியுடனும் பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1268789

ஆம் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் + வந்தியத்தேவன் அறிமுகம் நினைவுக்கு வருகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 9:43 pm

பாகம் 2







வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p1

ளமருதன், குதிரையின் மீது ஏறி அமர்ந்தான். அவனது குதிரைக்கு ‘ஆலா’ எனப் பெயர். ஆலாப்பறவை ஓய்வின்றி நாள் முழுவதும் பறந்துகொண்டிருப்பதைப்போல, அவனது குதிரையும் நாள் முழுவதும் நிற்காமல் ஓடக்கூடியது. ‘ஆலாய்ப் பறக்கிறான் இளமருதன்’ என்ற பேச்சு, எங்கும் பரவியிருந்தது.

குதிரை, தன் வேகத்தைவிட இளமருதனின் குறிப்பு அறிந்து செயல்படும்விதம்தான் வியப்பூட்டக்கூடியது. ஆலாவின் முன்தலையை விரல்களால் வருடியபடி அதனுடன் பல நேரம் பேசிக்கொண்டிருப்பான். அது தலையை மெள்ள ஆட்டிக் கேட்டுக்கொண்டிருக்கும். அவன் சொல் கேட்டுத் தலையாட்டுகிறதா அல்லது விரல்கள் நீவுவதால் இன்புற்றுத்  தலையசைக்கிறதா என்பது, காண்போருக்குப் புரியாது. அது அவர்கள் இருவரின் மனவோட்டத்தோடு தொடர்புடையது. மேலே அமர்ந்திருக்கும் வீரனின் எண்ணத்தோடு குதிரையின் மனவோட்டமும் இணையும்போதுதான் வேகத்தை ஆளும் ஆற்றலைப் பெற முடிகிறது.

இளமருதனுக்கு இந்த உலகிலேயே மிகவும் பிடித்த செயல் ஆலாவின் மீது அமர்ந்து, பாய்ந்து செல்வதுதான். நிலத்தை ஆலாவின் காலடியில் அழுத்தி விண்ணில் குதிக்கும் அந்தக் கணம் மனதில் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை இன்னொன்று ஏற்படுத்தாது. எனவே, கடிவாளத்தைச் சுண்டியதும் குதிரை பாயத் தொடங்கும் அந்த முதற்கணத்துக்காக எப்போதும் காத்திருப்பான்.

அதனாலேயே இந்த நீண்ட பயணம் அவனுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. புறப்படும் நாளுக்காக ஆவலோடு காத்திருந்தான். அவன் தந்தை மையூர்கிழார், வெங்கல்நாட்டுத் தலைவன்; பாண்டிய வேந்தனுக்குக் கட்டுப்பட்ட சிறுகுடி மன்னன்.
பாண்டிய மாவேந்தன் குலசேகரப் பாண்டியனின் ஆளுகைக்குக் கீழ் எண்ணற்ற சிறுகுடி மன்னர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் வெங்கல்நாட்டுத் தலைவனுக்குத் தனித்த ஓர் இடம் உண்டு. அதனால்தான் இளவரசர் பொதியவெற்பனின் மணவிழாவுக்கான சிறப்பு அழைப்பு அவருக்கு வந்திருக்கிறது.

பாண்டியநாட்டு இளவரசனின் மணவிழா, நான்கு நிகழ்வுகளாக இரு மாதகாலம் நடைபெறுகிறது. நிறைவாக நடக்கும் திருமாலை அணியும் விழாவுக்குத்தான் சிறுகுடி மன்னர்கள் அனைவருக்கும் அழைப்பு. மற்ற விழாக்களுக்கு அவர்களுக்கு அழைப்பில்லை. மாமன்னரின் மனதில் தனித்து இடம்பிடித்த சிறுகுடி மன்னர்கள் எண்மருக்குத்தான் இந்த முழு விழாவுக்கான அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று வெங்கல்நாடு.

புறப்படுவதற்கு இன்னும் காலம் இருந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் அரண்மனையிலிருந்து அவசர ஓலை. `மணவிழாவுக்காகப் புதிய மாளிகைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றின் பணிகளை வேகமாக முடிக்கவேண்டியுள்ளதால், தேர்ந்த சுதை வேலைகள் செய்யும் ‘மண்ணீட்டாளர்களை’ அனுப்ப வேண்டும்' என்னும் ஓலையைக் கொண்டுவந்தான் அரண்மனையின் முதன்மை அலுவலனான செவியன்.

வெங்கல்நாடு, மதுரைக்கு வெகுதொலைவில் பச்சைமலையின் தென்புற அடிவாரத்தில் உள்ளது. `பாண்டியநாட்டின் வடமேற்கு எல்லை இது' எனச் சொல்லலாம். செழிப்பான நிலப்பகுதிகளைக் கொண்டது. சரிபாதி மலை வளத்தையும் மீதிப்பாதி மருத நிலத்தையும் கொண்டது. எனவே, வனத்தின் செல்வமும் உழவின் செல்வமும் ஒருங்கே கிடைத்தன. அதனாலேயே வெங்கல்நாடு செழிப்புற்று விளங்கியது.

மரவேலைப்பாடுகளும் மண் வேலைப்பாடுகளும் சிறப்புறச் செய்யும் எண்ணற்ற கலைஞர்கள் இங்கு உள்ளனர். கட்டடங்கள் கட்டியெழுப்பும் கொற்றர்களுக்கு இது தாய்நிலம். பெரும்கட்டடங்கள், இவர்களின் கரம்கொண்டே மேலெழும்பின. அதன் தொடர்ச்சியாக, நுட்பமான சுதை வேலைப்பாடுகளைச் செய்யும் மண்ணீட்டாளர்களும் உருவாகினர். தலைநகர் மதுரையின் கட்டடத் தேவைகளுக்கான கலைஞர்களைத் தருவதில் வெங்கல்நாடு முதன்மையாக விளங்கியது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் மதுரையை இப்போதுதான் பார்க்கப்போகிறான் இளமருதன். மணவிழாவுக்கு, வெங்கல்நாட்டின் சார்பில் தரவேண்டிய சிறப்பான பரிசுப்பொருளைத் தேர்வுசெய்வதில்தான் கடந்த சில மாதங்களாக இவர்கள் மும்முரமாக இருந்தனர். நடக்கப்போவது இந்தப் புவியின் மாபெரும் விழா. இந்த விழாவில் கலந்துகொள்ள, உலகெங்கிலும் இருந்து அரசக் குடும்பத்தினர் வந்து இறங்கப்போகின்றனர். தனது வாழ்நாளில் இப்படியொரு பெருவிழாவை இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கப்போவதில்லை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் மையூர்கிழார். எனவே, தாங்கள் தரும் பரிசுப்பொருளை மாமன்னரும் இளவரசனும் கண நேரமாவது கண்கொண்டு பார்க்க வேண்டும் என்பதற்கு பெருமுயற்சி எடுத்துக்கொண்டனர்.

எத்தனையோ பொருள்கள் தயாராகிக் கொண்டிருந்தன. ஆனால், மையூர்கிழார் பெரிதும் கவனம் செலுத்திக்கொண்டிருப்பது ஒரு பொருளின் மீதுதான். அரண்மனையில் புதிதாகக் கட்டப்படும் மாளிகைகளைப் பற்றிய விவரம் மற்றவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, மையூர்கிழாருக்கு நன்கு தெரியும். ஏனென்றால், மதுரைக்கு அதிகமான கொற்றர்களை அனுப்பிவைப்பது இவர்தானே!

புதிய கட்டுமானத்தில் பேரெழிலோடு எழுப்பப்பட்டுவருவது ‘பாண்டரங்கம்’. அரசக் குலத்தினர் மட்டும் ஆடி மகிழும் கலைக்கூடம். அதுவும் இந்தப் பாண்டரங்கம், இளவரசரின் மணவிழாவுக்காகக் கட்டப்படுகிறது. பொதிய வெற்பனின் அந்தரங்க அவை அது. அங்கு கண்ணில்படும் பொருள், அதன் பிறகு ஒருபோதும் மறையாது. நாம் தரும் பரிசுப்பொருள் பாண்டரங்கத்தில் இடம்பெற வேண்டும். அதற்குச் செய்யவேண்டியது என்ன என்பதைத்தான் பல மாதங்களாகச் சிந்தித்துக்கொண்டிருந்தனர்.

மணமக்கள் பொற்காசுகளை அள்ளி எறிய, மதுரையின் வீதியெங்கும் பொன்னொளி வீசப்போகும் திருவிழா. இந்த விழாவில் சிறுகுடி மன்னன் ஒருவன் தரும் பரிசுப்பொருள் நினைவில் நிற்கவேண்டுமென்றால், அது இயலாத காரியம் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். ஆனால், மையூர்கிழார் விடாமல் முயற்சி செய்துகொண்டிருந்தார். செல்வத்தை விஞ்சும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு. செல்வத்தின் திளைப்பில் மிதக்கும் கண்களை, அதைவிட அதிகமான செல்வத்தைக் கொட்டுவதன் மூலம் கவனம் பெறவைக்க முடியாது. ஆனால், கலையின் நுணுக்கம் கண்களை அசைவற்று நிறுத்தும்.

மனிதன், கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனைக் குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது. மையூர்கிழார் பாண்டரங்கத்தில் வைப்பதற்கு ஏற்ற பொருளை ஆயத்தம்செய்வது என முடிவுக்கு வந்தார். அப்போதுதான் அதிலிருக்கும் இன்னொரு சிக்கல் தெரியவந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p2
நடக்கும் திருமணம் பாண்டியநாட்டு இளவரசருக்கு என்பதைவிட மிக முதன்மையானது, அவர்கள் பெண் எடுக்கும் இடம் பற்றியது. இந்த மணவிழாவுக்கு, உலகில் உள்ள கலைப்பொருள்கள் அனைத்தையும் கொண்டுவந்து கொட்டுவர் என்பதை எண்ணியபோதுதான் மையூர்கிழாருக்கு சற்றே அவநம்பிக்கை ஏற்பட்டது. அந்தக் கலைப்பொருள்களோடு நாம் ஈடுகொடுக்க முடியாது என்று எண்ணி சோர்வுற்றார்.

அப்போது பொற்கொல்லர் அவையில் இருந்த இளைஞன் `காராளி’ சொன்னான், ‘`வாசல் வரை வந்து வழுக்கி விழக் கூடாது. அந்த வழியிலேயே காலெடுத்து வைத்து முன் நகர்வோம்.'’

“பாண்டரங்கம் முழுவதும் இடம்பெறப்போவது, யவனர்களின் மிகச்சிறந்த கலைப் படைப்பான `பாவை விளக்கு'தான். அது இருக்கும் அவையில் வேறு எந்தப் பொருளும் கவனம்பெற முடியாது” என்று மையூர்கிழார் சோர்வடைந்தபோது காராளி சொன்னான், `‘யவன பாவை விளக்கை விஞ்சும் விளக்கொன்றை நம்மால் உருவாக்க முடியும்.”

`‘உறுதியாக முடியாது” என்று சொன்ன மையூர்கிழார், காராளியிடம் கேட்டார்

`‘நீ யவனர்களின் பாவை விளக்கைப் பார்த்திருக்கிறாயா?”

“இல்லை மன்னா.”

“அதனால்தான் எளிதில் சொல்லிவிட்டாய்.”

“நீங்கள் எவ்விடம் பார்த்தீர்கள் மன்னா?”

“வேந்தனின் அரண்மனை முழுவதும் இப்போது யவனர்களின் பாவை விளக்குகள்தானே கண்ணில்படுகின்றன. அரசவை மாடத்தில் சுடர் ஏந்தி நிற்கும் அந்த விளக்குகளைக் காண்பவர் வியந்துபோய் நிற்பர்.”

சற்றே இடைவெளிவிட்டு காராளி சொன்னான், `‘அரசவை மண்டபம், அரண்மனை மாடங்கள் என எங்கும் பார்த்துப் பழகிய ஒரு கலைப்பொருள், அந்தரங்கமான இடத்தில் கூடுதல் கவனத்தைப் பெறுமா?”

காராளியின் கேள்வி, மையூர்கிழாருக்கு வழிகாட்டத் தொடங்கியது. அவன் மேலும் சொன்னான், “அது மணமக்கள் கூடிக்குலவும் அரங்கு. அங்கே கண்களுக்குத் தேவை புதுமை. அதுவும் காதலுக்கு அப்பாற்பட்ட புதுமை அன்று; காதலுக்குள்ளே மூச்சுமுட்ட இழுத்துச் செல்லும் ஒரு புதுமை. அதை நாம் கலைவடிவாக்கலாம்.”

“என்ன செய்யலாம் என்கிறாய்?”

“காமன் விளக்கு செய்வோம்.”

பொற்கொல்லர் அவையில் இருந்த அனைவரும் வியப்புற்று நின்றனர். `மிகச் சிறப்பான சிந்தனை' என மையூர்கிழாருக்குப் பட்டது.

அவன் அடுத்துச் சொன்னான், “காமன் விளக்கு மட்டும் போதாது. நாம் வழக்கமாகச் செய்யும் நாக விளக்கு இரண்டையும் சேர்த்துச் செய்யவேண்டும். அதுதான் காமன் ஏற்படுத்தும் கனவுக்கு உருவம் கொடுக்கும்'’.

எல்லோரும் வாயடைத்துப்போனார்கள். இரண்டு நாகங்கள் பின்னியபடி மேலெழுந்து தலை நீட்ட, அதன் உச்சந்தலைச் சிறு குழியின் முன் விளக்கின் நாக்கும் நாகங்களின் நாக்குகளும் ஒன்றாக நீட்ட, சுடர் எரியும் வடிவுகொண்டது நாக விளக்கு.

நாகம் கொண்டு காமம் கவர்கிறான் இளைஞன் எனப் பூரித்து நின்ற மையூர்கிழார் கேட்டார், “வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்கள் இருக்கும் இந்த அவையில், யாருக்கும் தோன்றாத சிந்தனை உனக்கு எப்படித் தோன்றியது?”

மெல்லிய சிரிப்போடு காராளி சொன்னான், ‘`அவர்கள் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள். எனவே, அனுபவத்தின் கண்கொண்டு பார்க்கின்றனர். அனுபவம், அடைவதிலிருந்து மட்டும் ஏற்படுவதில்லை; அடையாததிலிருந்தும் ஏற்படுகிறது. நான் அடைந்திராத அனுபவத்தின் கண்கொண்டு பார்த்தேன்.”

மையூர்கிழார் வியந்துபோனார். அவனது சொல், அவரை மயக்கியது. பணிகள் தொடங்கின.

காமன் விளக்கை எப்படிச் செய்வது? காமத்துக்கு வடிவம் கொடுக்க முடியுமா? அது காட்சிவயப்பட்டதன்று, கனவு வயப்பட்டது. பூவின் மலர்தலில் வெளியேறும் மணம்போல, மனித மலர்தலில் உள்ளுருகும் நிகழ்வு அது.

கனவைக் கண்கொண்டு பார்க்க நினைப்பது அறியாமை. அது கண்ணுள் பார்க்கவேண்டியது. எனவே, தங்களுக்குள் மூழ்கும் எண்ணங்களுக்கு வாசல் திறக்கும் வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்கலானான் காராளி.

சட்டகங்களால் எல்லா திசைகளிலும் இழுத்துப்பிடிக்கப்பட்டிருக்கும் தோலில் ஓவியத்தை வரையத் தொடங்கினான். காதல் பரவசத்தில் நிற்கும் ஒரு பெண், தன் வலதுகையை பக்கவாட்டில் சற்றே உயர்த்திப் பிடித்திருக்கிறாள். அந்த உள்ளங்கையில் தீபத்துக்கான அகல் இருக்கிறது. இடதுகையை மார்போடு அணைத்தபடி வைத்திருக்கிறாள். அந்தக் கை, ஒரு மலரைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அவளின் பேரழகில் மயங்கிய காதலன், அவளின் முகம் பார்த்தபடி மிகவும் அணுக்கமாகக் கிறங்கி நிற்கிறான்.

காராளி வரைந்த இந்த ஓவியத்தைப் பார்த்தவர்களுக்கு, சற்றே ஏமாற்றம் ஏற்பட்டது. “இந்தப் படம் மிக அழகாக இருக்கிறது. ஆனால், இதில் என்ன புதுமை இருக்கிறது?” எனக் கேட்டனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p4
“ஓவியத்தைச் சிலையாக்கினால்தான் இதில் உள்ள புதுமை தெரியும்” என்றான் காராளி.

அவன் வரைந்ததுபோலவே, அழகும் உணர்வும் கொப்புளிக்கும் சிலை வடிக்கப்பட்டது. வலதுகையில் விளக்கு ஏந்தி, இடதுகையில் மலரை மார்போடு அணைத்து நின்றாள் அந்தப் பெண். காதல் பேருணர்வில் அவளின் முகத்தருகே வியந்து நின்றான் ஆண்.

பெரும் எதிர்பார்ப்புடன் வந்து வார்ப்புச்சிலையைப் பார்த்த மையூர்கிழாரின் முகம் சற்றே வாடியது, “அழகாய் இருக்கிறது. ஆனால், புதுமை இல்லையே!” என்றார்.

காராளி சொன்னான், “அவளின் கையில் இருக்கும் அகலில் விளக்கேற்றிப் பாருங்கள். புதுமை துலங்கும்.”

அந்தப் புதிய விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினர். தீச்சுடர் எரியத் தொடங்கியது. எல்லோரும் கவனமாகப் பார்த்தனர். விளக்கின் ஒளி, இருவரின் கன்னங்களிலும் பட்டுத் தெறிப்பதை கண்கள் உற்றுப்பார்க்கையில் காராளி கூறினான், “பின்புறம் நீளும் நிழலைப் பாருங்கள்.”

பக்கவாட்டில் ஏந்தி நின்ற வலதுகையில் தீபம் எரியத் தொடங்கியதும், இருவரின் நிழல்களும் ஒன்றின் மேல் ஒன்றாகப் படர்ந்து ஒற்றை நிழலாக நீண்டன. ஏந்தி நிற்கும் விளக்கின் உயரத்தையும் நிழல்கள் படரும் கோணத்தையும் அவ்வளவு துல்லியமாக வடிவமைத்திருந்தான் காராளி. அதைப் பார்த்த அனைவரும் மெய்ம்மறந்து நின்றனர்.

காராளி சொன்னான், “அந்தரங்க அவையில் காமன் விளக்கில் சுடர் ஏற்றியதும் அவர்கள் ஒளியின் வழியே நிழலுள் கரைவர். தனது நிழல் எது எனப் பிரித்தறிய முடியாத தவிப்பு, இரவு முழுவதும் அவர்களைச் சூழும். காமம், ஒளியால் அல்ல... ஒளி ஏற்படுத்தித்தரும் இருளுக்குள்தான் மலரத் தொடங்கும். நீர்மநிலையில் இருக்கும் எண்ணெய் நெருப்பாய் மாறி சுடர்வதைப் போலத்தான் தங்களுக்குள் இருக்கும் உயிர் பற்றி எறிய... ஓர் உயிராய் ஒடுங்குவர்.”

அனைவரும் வாயடைத்துப்போனார்கள். காராளி தொடர்ந்தான், ``நிழலை, இன்னும் கூர்ந்து கவனியுங்கள்.”

அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்கள், கண்களை அகலத் திறந்தபடி உற்றுப்பார்த்தனர். தீச்சுடர் அசையும்போதெல்லாம் நீண்டு கிடந்த நிழல்கள் அசைந்து நெளிந்தபடி இருந்தன. இறுக அணைத்துப் புரளும் உருவங்களை அவை நினைவுபடுத்தின. உருவ அசைவுகள் ஆளுக்கொன்றாகத் தோன்றத் தொடங்கின. கனவு ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ்ந்து கொண்டிருந்தது.

எவரும் பேசிக்கொள்ளவில்லை. ஏறக்குறைய உறைநிலையை அடைந்தனர். “காண்பவரின் கண்ணுக்குள் கனவை நிகழ்த்துவதுதான் கலை.”

காராளி, தான் முன்னர் சொன்ன சொற்களை மனதுக்குள் அசைபோட்டபடி நின்று கொண்டிருந்தான்.

பேச்சற்று நின்றிருந்த மையூர்கிழார் நேரம் கழித்துச் சொன்னார், “இந்த விளக்கு, எனது வாக்கைக் காப்பாற்றியது; உனது வாக்கை அழித்துவிட்டது.”

அவர் சொல்வதன் பொருள் யாருக்கும் புரியவில்லை. `என்ன தவறிழைத்தான் காராளி?' என, மற்றவர்கள் சிந்திக்கலாயினர்.

மையூர்கிழார் சொன்னார், “மிகச்சிறந்த பரிசுப்பொருளைக் கொண்டு செல்வேன் என்ற எனது வாக்கை, இந்தச் சிலை காப்பாற்றிவிட்டது. ஆனால், அனுபவமில்லாதவன் என்ற உனது வாக்கை இது பொய்யாக்கிவிட்டது.”

அரங்கம், சிரிப்பால் நிரம்பியது. காராளி, சற்றே தலைவணங்கி நின்றான். இந்தச் சிலையின் சிறப்பு, வலது கையில் ஏந்தி நிற்கும் விளக்கன்று; இடதுகையில் பிடித்திருக்கும் மலர்தான். ஆனால், அது யார் கண்ணுக்கும் படவில்லை. யாரும் அதைப் பொருட்படுத்திப் பார்க்கவில்லை. பெரும்படைப்பை உருவாக்கும் கலைஞனுக்கு ஏமாற்றமே மிஞ்சும். காராளிக்கும் அதுவே மிஞ்சியது. ஆனாலும் யாரேனும் ஒருவரின் கண் அந்தச் சிறப்பைக் கண்டறியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.
அகம் மகிழ்ந்து பாராட்டினார் மையூர்கிழார். ``மெருகேற்றும் பணியை விரைவில் முடியுங்கள்'' என்று உற்சாகமாகச் சொல்லிச் சென்றார். வேலைகள் முன்னிலும் வேகமாக நடந்தன.

இந்த நிலையில்தான் மதுரையிலிருந்து செவியன் ஓலை கொண்டுவந்தான். `கொற்றர்களை அழைத்துக்கொண்டு உடனே வரவேண்டும்' என்று.

ஐம்பது கொற்றர்களோடு இளமருதன் மறுநாள் புறப்படுவதாக முடிவாயிற்று. காராளி செய்துகொண்டிருக்கும் காமன் விளக்கின் பணிகள் முடிவடைய, இன்னும் ஒரு வார காலம் ஆகும். ஆனால், நாளை தனது மகன் வெறுங்கையோடு போனால் நன்றாக இருக்காது. ஏதாவது பரிசுப்பொருள் கொண்டுபோக வேண்டுமே என எண்ணினார் மையூர்கிழார். ஒன்றும் பிடிபடவில்லை. தனித்துவம் இல்லாத பொருளைக் கொடுத்துவிடுவதை மனம் ஏற்கவில்லை. ‘சரி, விடியட்டும் பார்க்கலாம்’ என முடிவுசெய்தார்.

றுநாள் அதிகாலை, மலையடிவாரத்தில் உள்ள தனது நிலத்தின் விளைச்சலைப் பார்க்க மூன்றேர் உழவன் சென்றான். காட்டாற்றின் அக்கரையில் இருந்தது அவனது விளைநிலம். இரவு கடும் மழை பெய்திருந்தது. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்க வேண்டும். இப்போது சற்றே குறைந்திருந்தது. ஆனாலும் ஆற்றைக் கடக்க முடியாது. கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அடித்துவரப்பட்ட பெரும்மரத்தின் தூர்ப்பகுதி கரையில் இருந்த பாறையின் இடுக்கில் செருகி நின்றது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனின் கண்களுக்கு, மரத்தின் மேல் ஈரத்தில் நடுங்கியபடி அமர்ந்திருந்த இரண்டு சிறு உயிரினங்கள் தெரிந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p3
அருகில் சென்று உற்றுப்பார்த்தான். அவை என்ன உயிரினம் எனப் புலப்படவில்லை. இதற்கு முன்பு இவற்றைப் போன்ற ஒன்றைப் பார்த்ததில்லை. அவை ஈரத்துக்கு நடுங்கியபடி இருந்தன. பார்க்கவே மிகவும் கவலையாக இருந்தது. அவை இரண்டும் குழந்தைகளைப்போல கண்களால் மிரண்டு பார்த்துக்கொண்டிருந்தன. நீரின் போக்கு, அவற்றை பெரும் அச்சம்கொள்ளச் செய்தது. அவற்றால் சிறிதும் நகர முடியவில்லை. சற்றே நகர்ந்தாலும் நழுவி நீருக்குள் விழுந்துவிடும் ஆபத்து இருந்தது.

உழவன், அருகில் சென்று அவற்றைக் காப்பாற்றலாம் என எண்ணினான். ஆனால், அருகில் சென்றால் கடித்துவிடுமோ என்ற அச்சம் வந்தது. அவை கொடிய நஞ்சாக இருந்தால் என்ன செய்ய முடியும்? எனவே, இறங்கிப் போய்ப் பிடிக்க வேண்டாம். அவையாகக் கரைக்கு ஏறுவதைப்போல ஒரு பெரிய கட்டையை எடுத்து கரைக்கும் அவை இருக்கும் கொப்புக்கும் இடையில் பாலம் அமைத்தான். ஆனால் அவையோ, அச்சத்தில் நடுங்கியபடி சிறிதும் நகராமல் அப்படியே ஒண்டிப்போய் நின்றன.

துணிந்து நீருக்குள் இறங்கி, அவற்றின் அருகில் சென்றான். அவை இரண்டும் பயந்து பம்மின. அவற்றைப் பிடித்துக்கொண்டு கரைக்கு வந்தான். அவை ஒன்றும் செய்யாமல் அப்படியே இருந்தன. விசித்திர வடிவம் தாங்கிய விலங்கை அவன் நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தான்.

குடித்தலைவர் மையூர்கிழாரிடம் கொண்டுபோய்க் கொடுப்போம் என முடிவுசெய்து, கிழாரின் மாளிகைக்கு வந்தான். அவரோ மகனை, கொற்றர்களுடன் மதுரைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். வாழ்த்துச் சொல்ல வந்த பாணர் கூட்டம் ஒன்று, அங்கு காத்திருந்தது.

மாளிகையின் உள்ளே வந்த உழவன், “இந்தப் புதுமையான விலங்கைப் பாருங்கள்” என்று சொல்லி, அவற்றை வெளியே எடுக்க முயன்றான்.

அவை உழவனைவிட்டு வெளியே வராமல் அவனது ஆடைக்குள் ஒடுங்கிப் பம்மின. அவன், இடுப்பைப் பிடித்து இழுத்து வெளியே விட்டான். வட்டவடிவக் கண்களால் மிரண்டு மிரண்டு விழித்தன. மையூர்கிழாரும் உடன் இருந்த அனைவரும் இந்த விலங்கை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர். யாரும் இதற்கு முன் இவற்றைப் பார்த்ததில்லை. இவை என்ன வகை விலங்கு என, ஆளுக்கொரு விளக்கத்தை அளித்துக் கொண்டிருந்தனர். சற்றுத்தள்ளி நின்ற பாணர் கூட்டத்தின் முதியோன் ஒருவன் எட்டிப்பார்த்தபடி சொன்னான், “இது பறம்புநாட்டின் தெய்வவாக்குச் சொல்லும் விலங்கு. பெரும்மழையில் அடித்து, தரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.”

பாணனின் குரல், வியப்பை ஏற்படுத்தியது. அவற்றின் மீதான வியப்பு இன்னும் அதிகமானது. அதுவரை தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த மையூர்கிழார், இப்போது அருகில் வந்து அவற்றைத் தொட்டுத் தூக்கினார். அவை அஞ்சி மிரண்டன.

புறப்படவேண்டிய நேரம் வந்துவிட்டதை நினைவுபடுத்த, அவரைத் தேடி வந்தான் இளமருதன். தந்தையின் கையில் புதுமையான விலங்குகள் இருப்பதைப் பார்த்தான். அவை என்ன விலங்கு என அவனுக்குப் புரியவில்லை. அவற்றின் தோற்றம், சற்றே அருவருப்பை ஏற்படுத்துவதுபோல் இருந்தது.

மையூர்கிழார் சொன்னார், “மகனே நீ எடுத்துச் செல்லவேண்டிய பரிசுப்பொருள்கள் தாமாக வந்து சேர்ந்திருக்கின்றன.”

“இவற்றையா… அருவருப்புக்கொண்ட இந்த விலங்குகளையா எடுத்துச்செல்லச் சொல்கிறீர்கள்?”

``ஆம். பாண்டிய வேந்தன் நிமித்தம் பார்ப்பதில் மிகுந்த நம்பிக்கையுள்ளவன். இளவரசனின் மணவிழாவின்போது பறம்புநாட்டின் தெய்வவாக்கு விலங்கு மதுரைக்கு வந்து சேர்வதை மிக நல்ல நிமித்தமாக நினைப்பான். எவராலும் கொடுக்க முடியாத பரிசுப்பொருளை இத்தனை மாதங்களாகத் தேடிக்கிடந்தோம் அல்லவா? இதோ உரிய நேரத்தில் தானாக வந்து சேர்ந்திருக்கின்றன. இவற்றை நீ கொண்டு செல். இரு வாரங்கள் கழித்து, மணவிழாவுக்கு காமன் விளக்கோடு நான் வந்து சேர்கிறேன்.”

சுற்றி இருந்த அனைவரும் வாயடைத்துப் போனார்கள். மையூர்கிழாரின் குரலில் இருந்த உற்சாகம் இளமருதனையும் தொற்றியது.

இரட்டைக் குதிரைகள் இழுத்துச் செல்லும் ஐந்து பெருவண்டிகள், மதுரையிலிருந்து வந்திருந்தன. அவற்றில் கொற்றர்கள் ஏறி அமர்ந்தனர். அவர்களுக்கு இடையில் சதுரவடிவக் கூண்டுக்குள் மிரட்சி விலகாமல் அவை இருந்தன. ஆலாவைச் சுண்டியபடி மதுரை நோக்கிப் புறப்பட்டான் இளமருதன்.

வெங்கல்நாட்டு மன்னனின் வளாகம் முழுவதும் இதுவே பேச்சாக இருந்தது. வேந்தனை வியக்கவைக்கும் பரிசுப்பொருள்களோடு மகனும், இளவரசனை வியக்கவைக்கும் பரிசுப் பொருளோடு தந்தையும் மதுரைக்குள் நுழைய உள்ளனர். இது வெங்கல்நாட்டுக்கு நல்ல பலனைத் தரும் எனக் கருதினர்.

மையூர்கிழாரைப் பார்த்துப் பாட வந்த பாணர்கள், பாடாமலேயே பெரும்பொருளைப் பரிசாகப் பெற்றனர். “நீங்கள் சொன்ன செய்தி ஏற்படுத்தியதைவிட பெரும்மகிழ்வை உங்கள் பாடலால் ஏற்படுத்திவிட முடியாது” என்று கூறியபடி மையூர்கிழார் அள்ளி வழங்கினான்.

அவர்கள், அவை நீங்கி வெளியேறினர். முகத்தில் கவலையின் ரேகை படர்ந்திருந்தது. அன்றைய பகல் முடியும் முன் வெங்கல்நாட்டின் எல்லையைக் கடந்தனர். பேச்சற்ற நெடும்பகலாக அது இருந்தது.

நீண்டபொழுதுக்குப் பிறகு இளம் பாணனைப் பார்த்து மூத்த பாணன் கேட்டான், ``பறம்புநாட்டின் தெய்வவாக்கு விலங்கு தரை வந்து சேர்ந்ததைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

``பாரி, இனி தனது ஆற்றலை இழக்கத் தொடங்குவான்.”

பதில் கேட்ட மூத்த பாணன், சற்றே அமைதியோடு நடந்தான்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்ட இளம் பாணனின் கேள்வி முடியும் முன் மூத்த பாணன் சொன்னான்,

``இறங்கி அடிக்கப்போகிறான் வேள்பாரி.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 10:24 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p1
துரைக் கோட்டையின் மேற்கு வாசலை நோக்கி சூரியக்கதிர்கள் தகதகத்து இறங்கிக்கொண்டிருந்தன. வாங்கிய ஒளியை அதைவிட வேகமாக வெளியில் உமிழ்ந்தன கதவுகள். அந்த நெடுங்கதவுகள் முழுக்க பொன்னாலான பூச்சுகொண்டவை. அவற்றின் குமிழ்களின் மேல் மணிக்கற்கள் பொதிந்திருந்தன. பச்சை நிறப் பெருங்கல் ஒன்று தன்னை நோக்கிவந்த செம்மஞ்சள் நிற ஒளியை, சூற்குடத்தில் உள்வாங்கி சுட்டுக் கருக்கி வெளியேற்றியது. அருவியில் நீர் விழுந்து தெறிப்பதைப்போல, பொன்பூச்சில் விழுந்து சிதறின செஞ்சூரியனின் ஒளிக்கதிர்கள்.

பொழுது மறையும் முன்னர் கோட்டைக்குள் நுழைந்தால்தான் உண்டு. அதன் பின்னர், கதவுகளைத் திறக்கவைப்பது எளிது அல்ல. காவல் வீரர்களின் கடுமை இரும்பினும் இறுகியது. பகற்பொழுதின் முப்பதாம் நாழிகை முடிந்ததும், நாழிகைக் கணக்கன் நிலைமாடத்தின் மணியோசையை எழுப்புவான். அந்த ஓசை கேட்டதும் நெடுங்கதவுகளின் குறுக்குத்தடிகளை யானையைக்கொண்டு தூக்கிச் செருகுவர். அதன் பின், மறுநாள் காலை மீண்டும் யானையைக் கொண்டுவந்தே குறுக்குத்தடிகளை விலக்குவர்.

கோட்டையின் கதவுகள் மூடப்பட்ட பின் அவற்றைத் திறக்கவைப்பதெல்லாம் இயலாத  செயல். அதை உணர்ந்தே விரைந்து பயணித்தான் செவியன். அவன் குதிரைதான் முன்னால் போய்க்கொண்டிருந்தது. அதை அடுத்து இளமருதனின் குதிரை. தொடர்ந்து சற்றுத் தொலைவில் ஐந்து வண்டிகள் வந்தன. இளமருதன் சிறுவயதில் பார்த்த மதுரையை இப்போது மீண்டும் பார்க்கப்போகிறான். தொலைவிலேயே கோட்டைச்சுவர் தெரியத் தொடங்கியது. மதுரையை அடைத்து நின்றது செம்பொன் நிறத்தாலான நெடுங்கோட்டை. அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து வாய் பிளந்தபடி வந்துகொண்டிருந்தனர். கோட்டை வாயிலில் வந்து அவர்கள் நிற்கும்போது முழுமையாக இருள் சூழ்ந்துவிட்டது. நெடுங்கதவுகள் அடை பட்டிருந்தன. தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் பொன்பூச்சு மின்னியது.

மேற்கு வாசலின் தளபதியை அழைத்துவரச்சொல்லி, பெருங்குரலில் கத்தினான் செவியன். கோட்டை வாயிலின் மேல்மாடத்தில் நின்றிருந்த காவலர்கள் வியந்து பார்த்தனர். வருகிறவர்கள் கோட்டைக் கதவுகளைத் திறக்கச்சொல்லி முறையிடுவார்கள். ஆனால், இவனோ தளபதியை அழைத்து வரச்சொல்லி ஆணை பிறப்பிக்கிறான். வந்திருப்பவன் மதுரையின் நிர்வாகத்தை நன்கு அறிந்துள்ளான் என்பதை அவனது குரலே சொல்கிறது. மறுசொல் கூறாமல் தளபதியை அழைக்கப் போனார்கள்.

இளமருதன் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். யானையின் மீது வீரன் அமர்ந்து கொடியைத் தாழ்த்தாமல் உள்நுழையக்கூடிய அளவு உயரம்கொண்ட கோட்டை வாயில். காற்று புகாவண்ணம் அடைப்பட்டிருக்கும் அந்த நெடுங்கதவுகளின் பொன்பூச்சில்தான் எவ்வளவு வேலைப்பாடுகள். குமிழ்களின் மேல் கால் பதித்து மயில் ஒன்று நிற்கிறது. அதன் தோகை ஒரு பாதி விரிந்திருக்க, இடப்புறமாகத் திரும்பி வாயிலில் நிற்பவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது மயில். என்ன அழகான வேலைப்பாடு. இந்தக் கதவுகள் முழுக்க எவ்வளவு நுட்பங்கள். ஒரே ஒரு பரிசுப்பொருளை உருவாக்க நமக்குப் பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், வாயிற் கதவுகளிலேயே எவ்வளவு வேலைப்பாடுகள்.

இளமருதனின் மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, மேல்மாடத்தில் வந்து நின்ற மேற்குவாசல் தளபதி மாரையனிடம், தாங்கள் யார் என செவியன் சொல்லி முடித்தான். ‘கட்டுமானப் பணிக்கு அழைத்துவரப்பட்டிருக்கும் கொற்றர்களை உடனடியாக உள்ளே அனுப்ப வேண்டும். அரண்மனையில் பணிகள் இரவு பகலாக நடக்கின்றன. இவர்களை நாளை பகல் வரை வெளியில் நிறுத்தினால், நாம் தண்டிக்கப் பட்டுவிடுவோம்’ என்பதை உணர்ந்தான் மாரையன். ஆனால், கோட்டைத் தளபதியின் உத்தரவு இல்லாமல் நெடுங்கதவைத் திறக்க இயலாது. உடனடியாக அவரைக் காண விரைந்தான். உடன் இரு வீரர்களும் சென்றனர்.

மதுரைக் கோட்டையின் நான்கு வாசல்களுக்கும், வாசலுக்கு ஒருவர் என நான்கு வாயில் தளபதிகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கோட்டைத் தளபதிக்குக் கட்டுப்பட்டவர்கள். மாலையில் கோட்டைக் கதவுகள் மூடப்பட்ட பின் கோட்டைத்தளபதி உத்தரவு இல்லாமல் அவற்றை மீண்டும் திறக்க முடியாது. பகலிலும் இந்த நெடுங்கதவை முழுமையாகத் திறந்து மூடும் அதிகாரம் அவரிடமே இருந்தது. கதவின் கீழ்ப்புறத்தில் மனிதர்கள் வந்துபோக ஏற்றதாகச் சிறிய அளவில் உள்ள ‘பிள்ளைக்கதவுகளை’த் திறந்து மூடும் அதிகாரம் தான் வாயில் தளபதிகளுக்கு உண்டு.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p2
மதுரையின் கோட்டைத் தளபதி சாகலைவன். வீரத்துக்கும் தந்திரத்துக்கும் பெயர் எடுத்தவன். அவன் கோட்டையின் எந்தத் திசையில் இருப்பான் என்பதை,   கீழ்நிலையில் இருக்கும் அதிகாரிகளால் கண்டறிந்துவிட முடியாது. அதுவும் இந்த விழாக்காலத்தில் அவனைக் கண்டறிவது எளிது அல்ல. 

மாரையனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மாலையில் கிழக்கு வாசலில் சாகலைவனைப் பார்த்ததாக ஒருவர் கூறினார். இங்கிருந்து கிழக்கு வாசலுக்குச் செல்வது மிகக் கடினம், நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுவிட்டது. யவனர்கள் இன்றிரவு வந்து இறங்கப்போகிறார்கள். வணிக வீதிகளில் எள் விழ இடம் இல்லை. எங்கும் பெருந்திரள் கூட்டம். குதிரையை விரட்டிச் செல்ல முடியாது. கூட்ட நெரிசலில் சிக்கினால் கிழக்கு வாசலை அடையும் முன்னே விடிந்துவிடும். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றான் மாரையன். அவனால் நிற்கவும் முடியவில்லை; நகரவும் முடியவில்லை.

யோசித்தபடியே கூட்டம் குறைவான தென்புற வீதியில் நுழைந்தான். அந்த வீதி திரும்பும் இடத்தில் இரு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் ஒன்று கண்ணில் பட்டது. முன்னால் நான்கும் பின்னால் நான்குமாக எட்டு குதிரை வீரர்கள் ஈட்டியை ஏந்தியபடி சென்றுகொண்டிருந்தனர். போய்க்கொண்டிருப்பது அரசின் உயர் அலுவலர் என்பது புரிந்தது. யாராக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள விரைந்து சென்றான். அவர் அரசாங்கத்தின் களஞ்சியத் தலைவர், ‘வெள்ளி கொண்டார்’. இந்தப் பேரரசின் செல்வத்தைக் கட்டிக்காக்கும் மாமனிதர்.

அவரைக் கண்டதும் குதிரையைவிட்டு இறங்கி வணங்கினான். மேற்கு வாயில் தளபதியைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டார் அவர். என்ன என்று விசாரிக்க,  சூழலை விளக்கிச் சொன்னான் மாரையன். எந்த ஒன்றையும் காதுகொடுத்துக் கேட்பது எவ்வளவு ஆபத்தானது என்பது, கேட்ட பின்புதான் புரியும். வெள்ளிகொண்டாரின் நிலைமை அதுவே. அவரைப் போன்ற உயரிய இடத்தில் இருப்பவர்களின் கவனத்துக்கு ஓர் இக்கட்டு வந்த பின், அதற்குத் தீர்வுகாணும் பொறுப்பும் இயல்பாக அவர்களையே வந்துசேருகிறது.

வெள்ளிகொண்டார் போகும் வேலைக்குக் குறுக்கே, கோட்டைத் தளபதியைக் கண்டறியும் வேலையும் வந்து நின்றது. என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். தேரோட்டி திரும்பிப் பார்த்தான். அவரின்  உத்தரவு கிடைக்காததால் தேர் அசைவற்று நின்றது. அருகில் சற்றே இளைப்பாறியபடி நின்றான் மாரையன்

“இந்தப் பெருங்கூட்டத்தில் நீ எங்கு போய்க் கண்டறிவாய். இரவு முழுவதும் தேடிக்கொண்டே இருக்க வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p3வேண்டியதாகிவிடும். எனது தேரில் வந்து உட்கார்” என்றார்.

சற்றே தயக்கத்துடன் தேரில் ஏறி அவரின் எதிரில் ஒடுங்கி உட்கார்ந்தான். தேர் புறப்பட்டது. முன்செல்லும் குதிரை வீரர்களைக் கண்டதும் கூட்டம் தானாக விலகி இடம்கொடுத்தது.

தென்புறச் சாலையில் இருந்து கிழக்கு முகமாக உள்வீதிக்குள் திரும்பியதும் திகைத்துப்போனான் தேரோட்டி.  கூட்டத்தை விலக்கி தேருக்கு வழியை அமைக்க முடியுமா என்பது ஐயமே. முன்னால் செல்லும் குதிரைவீரர்கள் நால்வரும் ஓசை எழுப்பியபடி சென்றனர். ஆனாலும், தேரின் நகர்வு மிகவும் மெதுவாகத்தான் இருந்தது.

மாரையனின் கண்களில் இருந்து மிரட்சி அகலவில்லை. “இப்போதே இப்படி என்றால் மணவிழா தொடங்க இன்னும் இரு வார காலம் இருக்கிறதே, மதுரை எப்படித் தாங்கும்?” என்றான்.

தேரின் இருக்கையை முழுவதும் அடைத்து உட்கார்ந்திருந்த அந்த அகண்ட மனிதர், வாயில் வெற்றிலை மென்றபடி, “மணவிழா என்றால் மதுரை தாங்கியிருக்கும். ஆனால், இது வெறும் மணவிழா மட்டும் அல்லவே?” என்று சொல்லி நிறுத்திக்கொண்டார். மாரையனுக்குப் புரியவில்லை.

ஆனால், அவரிடம் விளக்கம் கேட்கும் தகுதி அவனுக்கு இல்லை. அதனால் அடக்கமாக அவரது முகம் பார்த்தான். அவனது பார்வையின் பொருள் புரிந்தது. வயிறு பொருமி ஏப்பம் வந்தது. நீண்ட ஒலியோடு ஏப்பம் விட்டார். பெருத்துச் சரிந்திருந்த வயிறு சற்றே உள்வாங்கி இறங்கியது. இரவு உணவு முடித்துவருகிறார். ஆனால், தனக்கு அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று மாரையன் நினைத்தபோது, வெள்ளிகொண்டார் தனது நெஞ்சுக்கூட்டை இடதுகையால் அழுத்தித்தடவியபடி, “எல்லாம் இதுவால் வந்தது” என்று விரல்களில் சிக்கிய முத்துமாலையை தொட்டுத் தடவிக்கொண்டே சொன்னார்.

“கொற்கை முத்து இப்போது யவன தேசத்தின் கனவுப்பொருளாக மாறிவிட்டது. சேரனின் மிளகுக்கு இணையான வணிகப்போட்டிக்கு எதுவுமில்லை என்ற நிலை உடைந்துவிட்டது. மிளகும் முத்தும் யவன வணிகத்தில் இணையான இடத்தைப் பிடித்தன. அதுதான் நேற்று வரை இருந்த நிலை. ஆனால், இந்தத் திருமணம் வணிக நிகர்நிலையை உடைத்து பாண்டியனை முதல் நிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

பாண்டிய இளவரசன் பொதியவெற்பன் மணமுடிக்கப்போவது இன்னொரு வேந்தன் மகளாக இருந்திருந்தால், இந்தத் திருமணம் இரு நாடுகளின் திருவிழாவாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இன்று அப்படி அல்ல. இந்தப் புவியின் பெருவிழாவாக இது மாறிப்போனது. கடலையும் காற்றையும் அறிந்து இந்தப் புவியெங்கும் வணிகம் செய்துகொண்டிருப்பவர்கள் நூற்றியிருபது வணிகர்கள். அவர்கள் தங்களுக்கு என்று ‘சாத்துக்கள்’  என்ற அமைப்பை வைத்துள்ளனர். பேரரசுகளை விஞ்சும் செல்வத்தின் நாயகனாக சாத்துக்கள் அமைப்பின் தலைவன் இருக்கிறான். அந்தத் தலைவனை ‘சூல்கடல் முதுவன்’ என்ற பெரும்பெயர் கொண்டு அழைக்கின்றனர். அந்தச் சூல்கடல் முதுவனின் மகள்தான் மதுரையின் இளவரசனை மணக்கப்போகிறவள். அவளின் பெயர் ‘பொற்சுவை’.

ஓய்வறியா அலைகடலின் பாய்மரங்கள் வைகைக் கரை நோக்கியே வலசை வந்து கொண்டிருக்கின்றன. கடற்பரப்பு எங்கும் மிதந்துகிடக்கும் நாவாய்கள் இப்போது கொற்கைத் துறையில் நங்கூரம் இறக்கிவிட்டன. இப்படி ஒரு தகுதி இந்த மண்ணில் இதுவரை எந்தப் பேரரசுக்கும் கிடைக்கவில்லை. இந்தத் திருமணம் பாண்டியப் பேரரசு கடல் வணிகத்தில் முதல்நிலையைப் பெற்றதைப் பறைசாற்றும் அரசியல் நிகழ்வு. இதனால், இந்தப் பேரரசு காணப்போவதோ கரைபுரளும் செல்வச்செழிப்பு.

தன் இரண்டு மகன்களையும் கடற்புயலில் இழந்தவன் சூல்கடல் முதுவன். அவனின் ஒரே மகள் பொற்சுவை இப்போது மதுரைக்கு மணமகளாக வரப்போகிறாள். உலகெங்கும் இருந்து வணிகத்தால் நிரப்பபட்ட பெருஞ்செல்வம் நெடும்படி தாண்டி பாண்டியனின் கருவூலம் வந்துசேரவுள்ளது.

பொற்சக்கரங்கள் பூட்டப்பட்ட சாத்துக்களின் வண்டிகள்,  மதுரையின் பெருந்தேர் சாலைகளில் தடம்பதிக்க இருக்கின்றன. பொற்குவியலில் திணறப்போகிறது இந்த மாமதுரை. யவனம் முதல் சாவகம் வரை கண்டறியப்பட்ட அதிசிறந்த கலைப் படைப்புகள் இந்த நகரின் நெடுவீதி எங்கும் நின்று மிளிரப்போகின்றன.

வணிக சாத்துக்களின் வரைவில்லா செல்வத்தைவிட இந்தப் பேரரசே செழிப்புமிக்கது என்பதைக் காட்ட வேண்டிய தேவை நம் பேரரசருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கக் கருவூலத்தில் குவிந்துகிடக்கும் செல்வம் எல்லாம் மதுரையின் வீதிகளில் அள்ளிவீசப்பட உள்ளன.

இந்த இருவரும் இணையும்  இந்த வேளையை மிகுந்த கவனத்தோடு பயன்படுத்தக் களமிறங்கிவிட்டனர் யவனர்கள். பேரரசர் குலசேகரப்பாண்டியனையும் சூல்கடல் முதுவனையும் ஒருசேரத் திகைப்பில் ஆழ்த்த அவர்கள் தயாராகிவிட்டனர். இந்த மணவிழாவுக்கான பரிசுப்பொருள்களை கப்பல் நிறைய எடுத்து வந்துள்ளனர். யவனத் தேறல் மட்டுமே ஆறு திறளி மரப்படகில் கரை வந்து சேர்ந்தது என்று செய்தி.

இந்தத் திருமணத்தின்  வழியாக யவனர்களுக்கு ஒரு செய்தி தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. அவர்களும் அதைப் புரிந்துகொண்டார்கள். இனி யவன அரசர்கள் இந்த நாவலத்தீவின் முதற்சிறப்பை பாண்டியருக்கே செய்வார்கள். அதன் அறிகுறிகளும் தொடங்கிவிட்டன.

இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கின்றன. மதுரை விழாக்களின் நகரம். இந்த மாநகரின் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p4மண்ணடுக்கு விழாக்களில் ஏற்றப்படும் தீபப் புகையால்தான் சாம்பல் நிறம்கொண்டுள்ளதோ என்று நான் பலநேரம் நினைத்தது உண்டு. ஆனால், இப்போது நடைபெறப்போகும் இந்த மணவிழாதான் அதன் உச்சம். இந்த உச்சத்தை மதுரை இனி எந்தக் காலத்தில் எட்டும் எனத் தெரியாது. இன்று நள்ளிரவுக்குப் பிறகு விற்பனைக்கான பொருள்களை மட்டும் யவனர்கள் நகரத்தின் வணிக வீதிக்குக் கொண்டுவர உள்ளனர். அதை வாங்கத்தான் மக்கள் பெரும் ஆர்வத்தோடு திரண்டுள்ளனர். திருமணத்தை முன்னிட்டு எல்லா குடும்பங்களும் அலங்காரத்துக்குத் தயாராகி வருகின்றன. யவனர்களே அலங்காரப் பொருளின் அடையாளமாகிவிட்டார்கள்.

கோட்டையின் கிழக்கு வாசலுக்கு வெளிப்புறத்தில் இரு காதத் தொலைவில் இருக்கிறது யவனச்சேரி. இன்று மாலைதான் கொற்கையில் இருந்து பொருள்கள் எல்லாம் அங்கு வந்துசேர்ந்தன. அதில் விற்பனைக்கான பொருள்களை மட்டும் தனியே பிரித்தெடுத்து, நள்ளிரவுக்குப் பின்னர் வணிக வீதிக்குக் கொண்டுவருவார்கள். எனவே, இரவின் பதினைந்தாம் நாழிகையின்போது  கோட்டையின் கிழக்கு வாசல் திறக்க இருக்கிறது. அப்போது கோட்டைத் தளபதி சாகலைவன் அங்கிருப்பான். அதுவரை அவன் எங்கிருப்பான் என்பதுதான் கேள்வி.”
 
அவர் சொல்லியதை மாரையன் வாய்பிளந்து கேட்டுக்கொண்டு வந்தான். தேர் கிழக்குப் பக்கமாகவோ, வணிக வீதியின் பக்கமாகவோ செல்லாமல் வட திசையின் தனித்த மாளிகையை நோக்கிப் போனது. இந்தப் பக்கம் எதற்குப் போகிறது என்பது அவனுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்க முடியாமல் சுற்றும்முற்றும் பார்த்தபடி வந்துகொண்டிருந்தான்.

மாளிகையின் வாசலில் வந்து நின்றது தேர். முன்னால் இருந்த குதிரை வீரன் ஒருவன், வேகமாக வந்து அவர் தேரை விட்டு இறங்கக் கைப்பிடித்து நின்றான். தொடர்ந்து மாரையன் இறங்கினான். மாளிகை, அலங்காரத்தால் மின்னியது. எங்கும் தீபங்கள் ஏற்றப்பட்டுக் கண்சிமிட்டியபடி இருந்தன. வெள்ளிகொண்டார் வந்ததை அறிந்து உள்ளிருந்த இளம்பெண்கள் இருவர் ஓடோடி வந்து, அவரது கைப்பற்றி வாசல் படி கடந்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

மாரையன் முன்னறையில் அமரவைக்கப்பட்டான். பட்டுத் திரைச்சீலைகள் காற்றில் அசைந்தபடி இருக்க, முகங்கள் இங்குமங்குமாக நழுவி மறைந்தன. இளமஞ்சள் நிறத்தில் ஒளிரும் தீபத்தின் விளிம்பில் எப்போதும் ஒரு செந்நிறம் கலந்திருக்கும். இயற்கை எந்த ஓர் அழகையும் முழுமைகொள்ள அதன் விளிம்பில் அடர்வண்ணம் பூசுகிறது. திரைச்சீலைகளின் விளிம்பில் அடர்வண்ண முகங்கள் மறைந்து மறைந்து தெரிந்துகொண்டிருந்தன. காமக்கிழத்திகள் பற்றிய  சொல்லோவியங்களைப் பொய்யாக்கின அந்த முகங்கள். எந்தச் சொல்லாலும் இந்த அழகைச் சொல்லிவிட முடியாது என்று மாரையனுக்குத் தோன்றியது.

கோட்டையின் மேல்மாடத்திலிருந்து இரவு முழுக்க வெளிப்புற இருளை வெறித்துப்பார்த்துப் பழகிய அவனின் கண்கள், மின்னும் ஒளிவிளக்கில் பொன்முகங்கள் மிதந்துபோவதைப் பார்த்துத் தடுமாறிக்கொண்டிருந்தன.

`இந்தப் பேரழகிகளிடமிருந்து வெள்ளிகொண்டார் மீண்டு வந்து அதன் பின் நாம் தளபதியைத் தேடிப்பிடிப்பதற்குள் விடிந்துவிடும்’ என்று அவன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தபோது யானைக் கட்டுத்தறியின் தலைவனுக்கு சாகலைவன் எழுதிய ஓலையை, பெண்ணொருத்தி கொண்டுவந்து கொடுத்தாள். ஓலையை வாங்கிப் படித்த மாரையன் அதிர்ந்துபோனான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p5
“கோட்டைத் தளபதியும் இங்குதானா?”

‘குறித்த நாழிகைக்குள் எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்று கோட்டைத் தளபதி அடிக்கடி சொல்வது இதைத்தானா?’ - கேள்வியோடு அந்த இடம் விட்டு நீங்கினான்.

கோட்டை மேற்கு வாசலின் வெளிப்புறம் அவர்கள் காத்திருந்தனர். செவியன் சற்றே பொறுமையிழந்திருந்தான். இளமருதனுக்கு அங்கு வியந்துபார்க்க நிறையவே இருந்தன. அகழியில் முதலைகள் தெரிகிறதா என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் மண்ணீட்டாளர்கள். தாமரை மொட்டுகளும் ஆம்பல் மலர்களும் நீர் எங்கும் நிறைந்திருந்தன. பொழுது நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.

கோட்டைத் தளபதியிடம் வாங்கிய ஓலையைக் கட்டுத்தறியின் தலைவன் அல்லங்கீரனிடம் கொண்டுவந்தான் மாரையன். அல்லங்கீரனுக்கு வயது அறுபதைக் கடந்திருக்கும். யானைகளின் குணம் காண்பதில் இவருக்கு இணை யாரும் இல்லை. அந்த வயதான பெரியவரை எழுப்பினான் மாரையன். ‘நள்ளிரவு வந்து எழுப்புவதைக்கூட மன்னிக்கலாம். ஆனால், எழுந்தவனிடம் எழுத்தைக் காட்டிப் படிக்கச் சொல்பவனுக்கு மன்னிப்பே கிடையாது’ என்று புலம்பியபடியே ஓலையை வாங்கிப் படித்தார்.

அவருக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.

“இங்கு இருப்பவை எல்லாம் பாசறையில் இருக்கும் இளவயது யானைகள் என்று நினைத்தாயா? ஐம்பது வயதைக் கடந்த யானை களைத்தான் கட்டுத்தறிக்குக் கொண்டுவருகிறோம். இவற்றை நீங்கள் சொல்லும்போதெல்லாம் வேலைவாங்க முடியாது. அதுவும் இரவு முழுநிலை உணவு மூன்று சுற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பாரம் புல்லும் நான்கு ஆடகம் அரிசியும் அரைக் குடுபம் எண்ணெயும் பத்து பலம் வெல்லமும் பத்து பலம் உப்பும் கலந்து கொடுத்துள்ளோம். வயிறார உண்டுவிட்டு அயர்ந்திருக்கின்றன. இப்போது அவற்றை எழுப்பி வேலை வாங்குவது இயலாத செயல் மட்டுமன்று; ஆபத்தானதும்கூட.”

மாரையனுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. ஆனால், அவசர வேலைக்காக அழைத்துவரப்பட்டவர்கள் கோட்டைக்கு வெளியே காத்திருக்கிறார்கள். அவர்களை எப்படியாவது உள்ளே அனுமதிக்க வேண்டும். அதற்காகத் தொடர்ந்து வேண்டினான்.

“கோட்டைத் தளபதி எங்கே?’’ என்று கேட்டார் அல்லங்கீரன்.

மாரையன் பதில் சொன்னான்.

“அவசரத்துக்கு அவனால் எழுந்துவந்து உன்னிடம் ஓலை கொடுக்க முடியவில்லை அல்லவா? யானையை மட்டும் உடனே எழுப்பு என்றால் என்ன பொருள்?”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், பெரியவரின் கேள்வி பொருத்தமானது என்று தோன்றியது.

பிரச்னை வந்து நிற்பது மாரையனுக்கு முன்னால் நாளை விசாரிக்கப்பட்டால், அவன்தான் பதில் சொல்லவேண்டியிருக்கும்.  எனவே, அவன் அந்த இடத்தைவிட்டு அசைவதாக இல்லை. பெரியவர் அல்லங்கீரனுக்கும் வேறு வழி இல்லை. நீண்ட நேரம் கழித்து யானையை எழுப்ப பாகனுக்கு உத்தரவிட்டார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p6
மாரையன் தன்னுடன் வந்த வீரர்களோடு வெளியில் காத்திருந்தான். சிறிது நேரத்தில் யானை வெளியேறி வந்தது. பொழுது நள்ளிரவைக் கடந்தது. தனது கால் பெருவிரலால் அதனுடைய காதின் பின்பக்கத்தை ஊன்றி உந்தினான் பாகன். ஆனாலும், அது மெள்ளவே முன்னகர்ந்து சென்றது.

பக்கவாட்டில் குதிரையில் இருந்தபடியே பாகனைப் பார்த்து மாரையன் சொன்னான், “இந்த வேகத்தில் நடந்தால், வாசலை அடைவதற்குள் விடிந்துவிடும். வேகமாக நடத்து.”

பாகன் சொன்னான்... “எனது தொடை நடுக்கத்தை நீ உணர மாட்டாய். யானைக்கு மிக மோசமான வயது ஐம்பது. இளமைக்கும் முதுமைக்கும் நடுவில் இருப்பது. அது என்ன நினைக்கிறது என்பதை நாம் கணிக்க முடியாது. இந்த வயதுடைய யானைக்கு நிலையுணவு கொடுத்து, நள்ளிரவு எழுப்புவது ஆபத்தை விலைக்கு வாங்குவதைப் போன்றது. இதுவரை இல்லாத செயலை இது இப்போது வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.”

“ஒழுங்காகத்தானே போய்க்கொண்டிருக்கிறது. இதில் என்ன சிக்கல்?”

“எழுப்பியதிலிருந்து துதிக்கையைத் தந்தத்தில் சுற்றியபடியே வருவதைப் பார்த்தீரா? தந்தத்தில் அது கொடுக்கும் அழுத்தத்தை எனது அடித்தொடையில் உணர முடிகிறது.”

மாரையன் சற்றே அதிர்ந்து பார்த்தான்.

“எனக்குச் சொல்லப்பட்ட உத்தரவை நான் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். ஆனால், எனது உத்தரவை யானை எந்தக் கணமும் மறுக்கலாம்.”

மாரையன் குதிரையை வேகப்படுத்தி முன்னால் நகர்ந்தான். நள்ளிரவின் மணியோசையை நாழிகைக் கணக்கன் எழுப்பினான். கோட்டையின் கிழக்கு வாயிலில் முரசுகள் முழங்கத் தொடங்கின. வணிகவீதியில் மக்களின் ஆரவாரம் எங்கும் எதிரொலித்தது.

யானை, கோட்டையின் மேற்கு வாசல் குறுக்குக்கட்டையைத் தூக்கி எடுத்தது. அப்படியே வலதுபுறம் திரும்புவதற்காக இடதுபாத முனையால் இடப்பாக காதின் அடியை மெள்ளத் தட்டினான் பாகன். அது அசைந்து திரும்பியது.

மாரையன் மகிழ்ச்சியோடு கதவைத் திறக்க உத்தரவிட்டான். வீரர்கள் நெடுங்கதவை இழுத்துத் திறந்தனர். இளமருதன் குதிரையைவிட்டு இறங்கி தனது ஆலாவைப் பிடித்தபடி மதுரைக்குள் நுழைந்தான். வண்டிகள் ஐந்தும் ஒவ்வொன்றாக உள்நுழைந்தன. கடைசி வண்டியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கிடையில் மரச்சட்டகத்தால் ஆன கூண்டு ஒன்று இருப்பதைப் பார்த்த காவல் வீரனொருவன்  கேட்டான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p7
“என்ன அது?”

“தெய்வவாக்கு விலங்கு’’ என்றான் ஒருவன்.

இன்னொருவன், “தேவாக்கு விலங்கு’’ என்றான்.

காவல் வீரனுக்கு அவன் சொல்வது புரியவில்லை.

“என்ன பெயர் சொல்கிறீர்கள்?” என்று மீண்டும் கேட்டான்.

“தேவாங்கு” என்றான் இன்னொருவன்.

கோட்டைக்குள் நுழைந்ததும்  அவை இரண்டும் மிரண்டுபார்த்து கண்களை உருட்டின. எல்லோரும் உள்நுழைந்த உற்சாகத்தில் இருந்தனர்.

மாரையன் பெருமூச்சுவிட்டான்.

பாகனுக்கு உள்நடுக்கம் பல மடங்கு அதிகமானது. குறுக்குக்கட்டையைத் தூக்கிய பின் அது அமைதியாக நடந்துகொண்டே இருந்தது. அவனது கால்கள் இரு காதுகளுக்கு அடியில் அனைத்து உத்தரவுகளையும் கொடுத்துவிட்டன. அது எதையும் பொருட்படுத்தாமல் சென்றுகொண்டே இருந்தது. அந்தப் பெரும் குறுக்குத்தடி அதன் தந்தங்களின் மேல் வாகாக உட்கார்ந்திருந்தது. துதிக்கையை வலப்புறமும் இடப்புறமும் முழுமையாக வீசி நடந்தது. பாகன் நடுங்கினான்.

“இந்நேரம் கோட்டையின் கிழக்கு வாசலுக்குள் யவனப்பொருள்களைக் கொண்டுவந்திருப்பர்’ என்று எண்ணியபடியே நெடுங்கதவை மூட உத்தரவிட்டுவிட்டான் மாரையன். வீரர்கள் கதவை இழுத்து அடைத்தனர். குறுக்குத்தடியை பொருத்தச் சொல்வதற்காக மாரையன் திரும்பிப் பார்த்தான். தடியைச் சுமந்தபடி யானை இடப்புறம் உள்ளே போய்க்கொண்டிருந்தது. குறுந்தடியைக்கொண்டு கதவை மூடாமல் அதை எடுத்துக்கொண்டு ஏன் உள்ளே போகிறது என்று பதறிய மாரையன் அதை நோக்கி குதிரையில் விரைந்தான்.

வலப்புறம் போன வண்டியில் இருந்த தேவாங்குகள் வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசிப் பதுங்கின. கிழக்கு வாசலின் வழியே பெரும் உற்சாகத்தோடு யவன வண்டிகள் உள்நுழைந்தன. தனது உத்தரவை மறுக்கும் யானை என்ன செய்யப்போகிறது எனத் தெரியாமல் பாகன் பதைபதைத்துக்கொண்டிருந்தபோது, யானைக்குப் பின்னாலிருந்து விரைந்து வந்த மாரையன் சற்றும் எதிர்பாராமல் குறுக்கிட்டான். அதிர்ந்த பாகனின் முகத்துக்கு நேரே ஓங்கிய துதிக்கை வந்துசென்றது!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 10:40 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p1
ள்ளறை ஒன்றில் படுத்திருந்த இளமருதன் கண்விழித்தபோது, விடிந்து நெடுநேரமாகியிருந்தது. அவன் அழைத்துவந்த கொற்றர்களுக்கு வேலைகள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் தங்களுக்குரிய இடத்துக்குச் சென்றுவிட்டனர். தன்னை அழைத்துவந்த செவியன் எங்கே எனத் தேடியபடி வெளியே வந்தான் இளமருதன். அவனின் கண்கள் வியப்பில் மூழ்கின. தாமரை மொட்டுபோல அடுக்கடுக்காகக் குவிந்து நிற்கும் புதிய மாளிகைகள், கதிரவனின் ஒளிபட்டு வெண்பஞ்சுபோல் ஒளிர்ந்துகொண்டி ருந்தன. வியப்புற்று நின்ற அவனருகே வந்து தோள் தொட்டான் செவியன்.

“இந்தப் பகுதியில் மூன்று பெரும்மாளிகைகள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. கட்டட வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. மர வேலைப்பாடுகளும் ஓவியப் பணிகளும்தான் நடக்கின்றன. மாளிகைக்குப் பின்புறம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பூந்தோட்டத்தில், ஒருசில பணிகளும் நடைபாதை, சுற்றுச்சுவர் போன்ற சிறுசிறு வேலைகளும்தான் மிச்சமிருக்கின்றன. நாம் அழைத்துவந்த கொற்றர்களை அங்கு அனுப்பியாகிவிட்டது” என்றான் செவியன்.

மலைப்பில் இருந்து மீளாமல் கேட்டுக்கொண்டி ருந்தான் இளமருதன். மேல்மாடத்தின் வெளிப்புற விளிம்பில், கடல் அலைகளின் வளைவுகள் சுழன்று பொங்கியபடி இருந்தன. அதைப் பார்த்தபடி கேட்டான், “எப்படி இவ்வளவு நுணுக்கமாக வடிவமைக்க முடிந்தது?”

செவியன் சொன்னான்... “அலைகள் பொங்கும் கடல்போல் மாடத்தின் விளிம்புகள் வடிவமைக்கப்பட்டிருப்பதன் காரணம், உள்ளிருக்கும் மாளிகையின் மொத்த வடிவம் சிப்பி போன்றது. சிப்பிக்குள் இருக்கும்
ஆதி இருளுக்குள்தானே வெண்முத்து சூல்கொள்ளும்?”

புரியாமல் விழித்தான் இளமருதன்.

“இதுதான் மணமக்களின் பள்ளியறை. இந்தப் பேரரசின் வம்சக்கொடி வேர்பிடித்து மலர வேண்டிய மாளிகை.”

அசைவுறா கண்கள் திரும்ப மறுத்தன.

“வாருங்கள் உள்ளே போய்ப் பார்ப்போம்’’ எனச் சொல்லி மாளிகைக்குள் அழைத்துச் சென்றான் செவியன்.

உள்ளே மகதநாட்டு வினைஞர்கள் நெடுங்கதவுகளை இழைத்துப் பொருத்தும் பணியைச் செய்துகொண்டிருந்தார்கள்.

காற்று எங்கும் நுண்ணிய மரத்தூள்கள் மிதந்துகொண்டிருந்தன. சந்தனத்தின் வாசனை மாளிகைக்குள் நுழையும் முன்னரே இளமருதனின் மூக்கில் ஏறியது. உள்நுழைந்த இளமருதன், வடிவிலும் வாசனையிலும் வண்ணத்திலும் நிலைமறந்து நின்றான்.

பெரும் வட்டவடிவில் ஒன்பது தூண்கள் நின்றுகொண்டிருந்தன. தூண்களின் மடிப்புகளும் வேலைப்பாடுகளும் இணை சொல்ல முடியாதவை. அந்தத் தூண்களின் மேல் குவிமாடம் இருந்தது. மாடத்தின் மேற்கூரை முழுவதும் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. இரவு நேரத்து வானம். நிலவு ஒளிர்ந்துகொண்டிருக்க, எங்கும் விண்மீன்கள் மின்னிக்கொண்டிருக்கும் காட்சி அதில் இருந்தது. அண்ணாந்து பார்த்தபடி மேற்கூரையின் முழுவட்டத்தையும் நோக்கினான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p2
“ஓவியர்கள், வேலையை முடித்துவிட்டார்கள். ஆனால், குறித்துக்கொடுத்த அந்துவன் வந்து பார்த்து `சரி' எனச் சொன்னால்தான் சாரத்தைப் பிரிக்க முடியும். இன்று நற்பகல் அவர் வந்துவிடுவார்” என்று சொல்லியபடி, “வாருங்கள் இன்னொரு பள்ளியறைக்கு” என்று அழைத்தான் செவியன்.

“இன்னொரு பள்ளியறையா?”

“ஆம், இது கார்காலப் பள்ளியறை. கீழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. அடர்ந்த தூண்களும் மரவேலைகளும் இதில் அதிகம். இன்னொன்று வேனிற்காலப் பள்ளியறை. அது மேல்மாடத்தில் கட்டப்பட்டுள்ளது. வைகையின் காற்று எல்லா திசைகளிலிருந்தும் உள்நுழைவதைப்போல வடிவமைக்கப் பட்டிருக்கும்” என்று சொல்லியபடி அங்கு அழைத்துச் சென்றான். அங்கும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. வேலைசெய்பவர்கள் யவனத் தச்சர்கள். வேனிற்கால வெக்கையைக் காதலின் கவசமாக மாற்றும் வித்தையைச் செய்துகொண்டிருந்தனர். விதவிதமான கைக்கருவிகளை வைத்துப் பணியாற்றினர். இளமருதன் கண்களை எங்கும் ஓடவிட்டான். அங்கு நெருக்கமாக அமைக்கப்படாமல் விலகி நிற்கும் தூண்கள், சாளரத்திலிருந்து தன்னியல்பிலே வந்து தழுவிச்செல்லும் காற்று என, இரண்டு மாளிகைகளுக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் இருந்தன. மேற்கூரை ஓவியம் மட்டும்தான் ஒன்றுபோல இருந்தது. இரவு நேரத்து விண்மீன்களும் நிலவும் ஒளிவீசியபடி.

“இந்த இரண்டை ஒன்றுசேர்த்தாலும் ஈடாக முடியாத பெரும் மாளிகை ஒன்று கட்டப்பட்டு வருகிறது” என்று சொல்லி பாண்டரங்கத்துக்கு அழைத்துச்சென்றான் செவியன்.

அங்கே வைப்பதற்காகத்தான் அவன் தந்தை காமன்விளக்கு செய்துகொண்டிருக்கிறார் என்பதால், அந்த அரங்கு எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ஆவலுடன் போனான் இளமருதன். பளிங்குக்கற்கள் பாவப்பட்டு, நிலைச்சுவரிலும் தந்தரையிலும் பளபளப்பு ஏறியிருந்தது. ஓவியங்களும் மரவேலைப்பாடுகளும் மனிதக் கற்பனைக்கு எட்டாத பேரழகுகொண்டு விளங்கின. கலை வேலைப்பாடுகளின் உச்சம் என இந்த அரங்கைச் சொல்லலாம். நடுவில் ஆடுகளம். அதைச் சுற்றி இசைக்கவும் பாடவும், பார்த்து ரசிக்கவும் ஏற்றவாறு ஒவ்வொன்றுக்கும் தகுந்த மேடைகள். எல்லா தூண்களிலும் சிற்ப வேலைகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. சுவர்களில் சுதை வேலைப்பாட்டுக்கும் வண்ணங்கள் பூசப்பட்டுவிட்டன. மேற்கூரை ஓவியமும் முடிந்துவிட்டது. அந்துவன் வந்து பார்த்துவிட்டால் எல்லாம் முற்றுபெற்றுவிடும்.”

நிலைமறந்து பாண்டரங்கத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் இளமருதன்.

“வாருங்கள், அந்துவன் வருவதற்குள் நாம் உணவருந்திவிட்டு வந்துவிடுவோம்” என்று சொல்லி அழைத்துச்சென்றான் செவியன்.

கோட்டைக்கு தெற்கே மதுரையின் இடுகாடு இருந்தது. இறந்துபோன மேற்கு வாசலின் தளபதி மாரையனின் உடல் அங்குதான் கொண்டுவரப்பட்டது. வீரர்கள் உடலேந்தி வந்தனர். நேற்று நள்ளிரவு யானையைக் குறுக்கிட்ட மாரையனை, சற்றும் எதிர்பாராமல் துதிக்கையால் சுழற்றி அடித்தது. குதிரையின் முதுகெலும்பு நொறுங்கி, கீழே சரிந்தான் மாரையன். பின்னங்கால்களால் அவனை மிதித்துக் கடந்தது யானை. பின்புறம் வந்த வீரர்கள் நிலைமையை உணர்ந்து யானைக் கட்டுத்தறியின் தலைவன் அல்லங்கீரனிடம் செய்தி சொல்ல ஓடினர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p3
மேலே உட்கார்ந்திருந்த பாகனுக்கு, இப்போதுதான் விஷயம் பிடிபட்டது. யானைக்கு மதம்கொள்ளவில்லை. மதம் பிடித்திருந்தால் இந்நேரம் தான் உயிரோடு இருக்க மாட்டோம். தந்தத்தில் தாங்கிப் பிடித்திருக்கும் குறுக்குக்கட்டையால் இந்த இடத்தையே தகர்த்திருக்கும். முழுநிலை உணவு மூன்று சுற்று கொடுக்கப்பட்ட பிறகு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அதை எழுப்பி வேலைவாங்கியதில் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது. தளபதி மாரையன், அவசரப்பட்டு இடையில் வந்து குறுக்கிட்டுவிட்டார். `இது வேறு திசை போகாமல் வந்த வழியே கட்டுத்தறி நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது' என்று நினைத்தபடியே அதன்மேல் அமர்ந்திருந்தவன் குத்துக்கோலை (அங்குசம்) வலது காதின் பின்புறம் செருகிவிட்டு, சட்டென யானையின் மேல் இருந்து பக்கத்து மாளிகைச் சுவரின் மேல் தாவினான். அல்லங்கீரனைப் பார்த்துத் தகுந்த ஏற்பாடு செய்வதற்காக அவரை நோக்கி ஓடினான்.

மாரையனின் வீரர்கள்தான் முதலில் கட்டுத்தறியின் தலைவனை வந்தடைந்தனர். வீரர்கள் ஓடிவரும் வேகத்தைப் பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டார் அல்லங்கீரன்.

``தளபதியை மிதித்துக் கொன்றுவிட்டது'' என, பதைபதைக்கச் சொன்னார்கள். உடனடியாக மூன்றாம் தறியில் இருந்த யானைகளை எழுப்ப உத்தரவிட்டான்.

எத்தனை நூறு யானைகளைப் பழக்கியவன் அல்லங்கீரன். போர்க்களத்தில் எதிரிகளின் யானைப் படையைச் சிதைக்க எத்தனையோ முறை வழிவகுத்தவன். வயதாகிவிட்ட காரணத்தைச் சொல்லி யானைப்படை பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, வாரக்கணக்கில் உணவெடுக்காமல் பட்டினிகிடந்து துயரத்தைக் கடந்தவன். யானைகளுடனே வாழ்வைக் கழித்தவன். வயதான யானைகள் இருக்கும் கட்டுத்தறி, இப்போது இவன் வசம்.

யானைகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பொழுதுகளில் அவனது ஆளுமையைக் கண்டு வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p4நாடே நடுங்கியிருக்கிறது. இப்போது உடல் மிகவும் தளர்ந்துவிட்டது. ஆனாலும் சவாலைச் சந்திக்கத் தயாரானான்.

நிலைப்படை வீரர்கள்,  அலையலையாக யானையின் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.  அவர்கள் கோட்டையின் உள்பக்கமாகப் போகாமல் கட்டுத்தறியை நோக்கியே நடந்தனர். வீரர்கள், பாதுகாப்பான தொலைவில் பின்தொடர்ந்தனர்.

குறுக்குத் தெருக்களின் வழியாக விரைந்தோடி வந்த பாகன் கட்டுத்தறியை அடைந்தபோது அல்லங்கீரன் அங்கு இல்லை. செய்தியைக் கேட்டு யானையை மறிக்கப் போய்விட்டார் என்பதை உணர்ந்தான். அவர் போன திசை நோக்கி ஓடினான். யானைக்கு மதம் பிடிக்கவில்லை. கட்டுப்பட மறுக்கிறதே தவிர, கட்டுப்பாட்டை மீறவில்லை. வலது காலில் இருக்கும் காயங்களை நோக்கிக் கட்டுகளை வீசி இறுக்கிவிட்டால்,
அது அசையாமல் நின்றுவிடும். இதை அவரிடம் சொல்லத்தான் விரைந்து வந்தான். ஆனால், அதற்குள் எல்லோரும் போய்விட்டார்கள். அதற்கு மதம் பிடித்துவிட்டது எனக் கருதி அதை வீழ்த்தப்போகிறார்கள். எப்படியாவது அந்தச் செயலைத் தடுக்க வேண்டும் எனப் பதறியடித்து யானையை நோக்கி ஓடினான் பாகன்.

யானை வந்துகொண்டிருக்கும் வீதியை அடைந்தான் அல்லங்கீரன். கொடுக்குப்போல் மேல்தூக்கி இருந்த அதன் அடிவாலைக் கொண்டுதான் மதத்தைக் கணக்கிட முடியும். வந்தவுடன் அடிவாலைப் பார்க்க முயன்றபோது, மேலே பாகன் இல்லை என்பது தெரிந்தது. அவனை, யானை கொன்றுவிட்டது என்ற முடிவுக்கு அவர் போனதால், மேல்தூக்காமல் இருந்த அடிவாலை அவரது கண்கள் காணவில்லை.

மதயானையை எதிர்கொள்வதற்காகவே பயிற்சிபெற்ற வீரர்கள், துல்லியமான தாக்குதலை முன்னெடுத்தார்கள். பாண்டியப் பேரரசு, யானைப் போர்களிலும் மதயானையை அடக்கும் உத்திகளிலும் நிகரற்று விளங்கியது.

மதுரையில் மாபெரும்விழா நடக்கும் நேரம். சற்றே பிசகு ஏற்பட்டாலும் பெரும் இழப்பில் முடிந்துவிடும். எனவே, தாமதிக்க வேண்டாம் என முடிவெடுத்தார் அல்லங்கீரன். அதைப் போகவிட்டு சரியான ஒரு நாற்சந்தியில் யானைகளோடு மறித்தார். ஒரே நேரத்தில் யானைகள் நான்கும் பிளிறிக்கொண்டு துதிக்கையைத் தூக்கியபடி அதை நோக்கி முன்நகர்ந்தன. அவற்றின் தந்தங்களின் முனைகளில் பளிச்சிடும் பூண்களும் குத்தீட்டிகளும் மாட்டப்பட்டிருந்தன. அந்த அடர் இருட்டில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் புரியவில்லை. பிளிறலின் பேரொலி மேலெழுந்தபோது அது குறுந்தடியோடு மண்ணில் சரிந்தது.
மற்ற நாள்களில் இது நடந்திருந்தால், இந்தப் பேரோசை கேட்டு மொத்த நகரமும் விழித்திருக்கும். ஆனால், விழாக் கொண்டாட்டத்தில் நகரம் திளைத்துக்கொண்டிருந்ததால், எங்கும் எதிரொலிக்கும் பேரொலிக்கு நடுவில் யானைகளின் பிளிறல், கொண்டாட்டத்தின் பகுதியாகக் காற்றில் கரைந்தது.

தலைமை அமைச்சர் முசுகுந்தருக்கு, முதலில் செய்தி சொல்லப்பட்டது. இந்த மாநகரை வகுக்கப்பட்ட வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p5விதிகளின் வழியே கட்டிக்காப்பவர் அவர்தான். மணவிழா திருநாளுக்காக எங்கும் மங்கலப் பேரொலி நிரம்பியிருக்கும் நாளில், இப்படி ஒரு செய்தியைக் கேட்டு மனிதர் நடுங்கிப்போனார். இந்தச் செய்தி பரவாமல் உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவந்தார். விடிவதற்குள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

பெரும் மரவண்டியில் யானையை இழுத்து ஏற்றினர். முன்னும் பின்னுமாக யானைகளே அந்த வண்டியை இழுத்தும் தள்ளியும் கொண்டுசென்றன. அந்த இடத்தில் மண்ணைக் கொட்டிக் குருதியை மூழ்கடித்தனர். இரவோடு இரவாக வேலையை முடித்தனர். ஆனாலும், விதிகளின்படி விசாரணை உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.

ரண்மனையின் நாள்களையும் கோள்களையும் கணித்துச் சொல்லும் தலைமைக் கணியனின் பெயர்தான் அந்துவன். காலம் கணிக்கும் கணியனான அந்துவனின் சொல்லுக்கு மறுசொல் இல்லை இந்த மாநகரில். அவன் கணித்துச்சொல்லும் சொல்லே பேரரசின் சொல்லாகிறது. சிறுகோல் ஒன்றை எப்போதும் கையில் வைத்திருக்கும் அவன், தடித்த கோல்போலவே உடல்கொண்டவன். பொதிகை மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் பாண்டிய நாட்டின் பெருங்கணியர் திசைவேழருக்கு மாணவன்.

திருமணத்தை முன்னிட்டுப் புதிதாக மூன்று மாளிகைகள் கட்டப்படுவதை அறிந்ததும், அதன் மேற்கூரையில் என்ன ஓவியம் இருக்கலாம் என்று முடிவுசெய்ய, பொதிகை மலை சென்று பேராசான் திசைவேழரிடம் கருத்தறிந்து வந்தவன். அவர் சொன்ன அடிப்படையில் வானியல் அமைப்புகளைச் சொல்லி ஓவியர்களை வரையவைத்துள்ளான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p6
திருமணத்தை முன்னிட்டு நாளை பெருங்கணியர் திசைவேழர் அரண்மனைக்கு வரவிருக்கிறார். அவர் வருவதற்குள் ஓவியப் பணிகளை முடித்து வைக்க வேண்டும். வரையப்பட்டவை எல்லாம் சரியாக இருக்கின்றனவா எனப் பார்ப்பதற்காக அந்துவன் புதிய மாளிகையை நோக்கி வந்துகொண்டிருந்த போது, அவரது வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தனர் செவியனும் இளமருதனும்.

அந்துவன் வந்ததும் இளமருதனை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தான் செவியன். இளமருதன் அவரை வணங்கினான். அவனது வணக்கத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, தலையை மெள்ள அசைத்தபடி நடந்தார் அந்துவன்.

புதிய மாளிகைகள் குறித்து இளமருதன் தனது வியப்பை அவரிடம் வெளிப்படுத்தியபடியே உடன் நடந்தான். மூவரும் கார்காலப் பள்ளியறையை நோக்கி நடந்தனர். கட்டட அமைப்பை, மரவேலைப் பாடுகளை, கலை நுணுக்கங்களை வியந்து சொல்லிக்கொண்டே அவன் வந்தான். மேற்கூரை ஓவியத்தைப் பற்றி ஏதாவது சொல்வானா என, கணியனின் காதுகள் காத்திருந்தன.

அப்போது செவியன் சொன்னான்... “கணியரே மூன்றும் வெவ்வேறு விதமான மாளிகைகள். ஆனால், மேற்கூரை ஓவியத்தை மட்டும் ஏன் ஒன்றுபோல் வரைந்திருக்கிறீர்கள்?”

“மூன்றும் வெவ்வேறானவைதானே” என்றார் அந்துவன்.

“இல்லையே, ஒரே மாதிரிதானே இருக்கின்றன” என்றான் செவியன்.

“வானத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய, சற்றே வானறிவு வேண்டும். வாருங்கள் என்ன வேறுபாடு என்று உங்களுக்குச் சொல்கிறேன்” எனச் சொல்லிக்கொண்டே மாளிகைக்குள் நுழைந்தார் அந்துவன். பின்னாலேயே இருவரும் நுழைந்தனர்.

கார்காலத்து மாளிகையின் மேற்கூரையைக் காட்டிச் சொன்னார்... “இதில் மதி எவ்விடம் இருக்கிறது பார்த்தீர்களா?”

“மேற்கூரையின் இடது பக்கம் இருக்கிறது” என்றான் செவியன்.

“நான் இடம் எனச் சொன்னது காலத்தை, வானில் நிறைமதி எந்த விண்மீன் கூட்டத்தோடு இணைந்து வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p7நிற்கிறதோ, அந்த விண்மீன் பெயரில்தான் அந்த மாதத்தை அழைக்கிறோம். அங்கு பாருங்கள் ஆறு முத்துக்களைப்போல மின்னிக் கொண்டிருப்பவைதான் கார்த்திகை விண்மீன் கூட்டம். அதோடு மதி நிற்பதால் இது கார்த்திகை மாதம். மதி நிற்கும் இடம், விண்மீன் கூட்டம் இருக்கும் இடமும் பிற கோள்கள் நிற்கும் இடமும் வானியல் கணக்குப்படி அமைக்கப்பட்டுள்ளன. திகிரிக் கணக்கு. அதாவது, வானியல் கணக்கை அறிந்தவர்கள் இந்த ஓவியத்தைப் பார்த்தால் எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த நாளை இந்த ஓவியம் குறிக்கிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்கள். மேற்கூரையின் வட்டத்துக்குள் இருப்பது ஓவியம் அன்று, காலம்.

இளவரசர் பொதியவெற்பன் பிறந்தபோது வானத்தில் நாள்மீன்களும் கோள்மீன்களும் இருந்த அமைப்பு இதுதான். படுக்கையில் சாய்ந்து பார்க்கும்போது அவரது கண்கள் நேரடியாக இதைத்தான் பார்க்கும். மதியும் விண்மீன்களும் கோள்மீன்களும் இதே அமைப்புக்கு மறுபடி வர, அறுபது ஆண்டுகள் ஆகும். காலத்தின் முழு வட்டம், எல்லா காலங்களிலும் ஒளிவீசிக்கொண்டுதான் இருக்கப்போகின்றன. அதைப்போல் என்றென்றும் ஒளிவீசக்கூடிய வாழ்வை நீ அமைத்துக்கொள் என்று காலம் அவருக்கு ஒவ்வோர் இரவும் சொல்லும்.”

அந்துவனின் விளக்கத்தைக் கேட்டு மெய்சிலிர்த்து நின்றான் செவியன். மேற்கூரையை அண்ணாந்து பார்த்தபடி இருந்த இளமருதனுக்கு, பேச நா எழவில்லை.

சற்று நேரம் கழித்து அந்துவன் சொன்னார், “வேனிற்கால மாளிகையின் மேற்கூரையில் இருக்கும் கால அமைப்பு, இளவரசியார் ‘பொற்சுவை’ பிறந்தபோது நிலைகொண்டிருந்த வானியல் அமைப்பு.”

மூவரும் அந்த அரங்குக்குள் நுழைந்தனர். மதி முற்றிலும் வேறு ஒரு திசையில் இருந்தது. நாள்மீன்களும் கோள்மீன்களும் வெவ்வேறு இடங்களில் நிலைகொண்டிருந்தன.

மூன்றாவது மாளிகையான பாண்டரங்கத்துக்குள் நுழைந்தனர்.

“இது யார் பிறந்த கால அமைப்பு?” என்று கேட்டான் செவியன்.

“அதுதான் எனக்கும் தெரியவில்லை. நாள்களும் கோள்களும் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என திசைவேழர் குறித்துத் தந்தார். அதன்படி வரைந்துள்ளேன். `இது என்ன அமைப்பு என்று இப்போது வரை எனக்கு விளங்கவில்லை' என்றார் அந்துவன். நாளை அவர் வரவிருக்கிறார். இதில் எத்தனை குறைகள் அவர் கண்களுக்குத் தெரியப்போகின்றனவோ?” என்றவரின் குரலில் பதற்றத்தை உணர முடிந்தது.

``அரண்மனைக் கணியனின் பார்வையில் நடந்துள்ளவற்றில் குறை கண்டறிய முடியுமா என்ன?”

அசட்டையான சிரிப்போடு அந்துவன் சொன்னார்... ``வரையப்பட்ட வானில் எத்தனை விண்மீன்கள் இருக்கின்றனவோ, அத்தனை குறைகளை அவரால் கண்டறிய முடியும். ஏனென்றால், வானில் அவ்வளவு நிறைகண்டவர் அவர். அதனால்தானே பெரும்புலவர் கபிலர், திசைவேழரைப் போற்றி அத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்.”

சொல்லிக்கொண்டே அந்துவன் வெளிமாடத்தைப் பார்த்தபோது அங்கு வட்டவடிவில் செய்துவைக்கப்பட்டிருந்த திகிரி மேடையின் மேல் நாற்சதுரக் கூண்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதைப் பார்த்ததும் பதறிப்போன அவர், ``அதைத் தூக்கிக் கீழே எறியுங்கள்'' எனக் கத்தியபடி அதை நோக்கி விரைந்தார்.

அவ்வளவு நேரம் அவர் சொன்னதை வியந்து கேட்டுக் கொண்டிருந்த இளமருதன், அவர் கத்தியதால் ஓடிப்போய், “அய்யா பொறுத்துக்கொள்ளுங்கள். நான் கொண்டுவந்த கூடுதான் இது” என்று சொல்லிக்கொண்டே கூண்டைத் தூக்கி கீழே இறக்கினான்.

அந்துவனின் கண்கள் சிவந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p8
“என்ன இது அருவருப்பான விலங்கு, இதைக் கொண்டுவந்து ஏன் இதில் வைத்தாய், அது என்ன மேடை தெரியுமா, எதற்காக அமைத்திருக்கிறோம் தெரியமா?  இப்படி இதைக் கறைபடுத்தி விட்டாயே” என்று கோபப்பட்டார்.

இளமருதன் அவரை வணங்கி மீண்டும், மீண்டும் மன்னிப்புக் கேட்டான். பணியாளர்களை வரவழைத்து திகிரி மேடையைத் தூய்மைப்படுத்தச் சொன்னார். அவர்களும் வேகவேகமாகச் செய்தனர்.

செவியனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

``தேவாங்கு இருக்கும் கூண்டை எங்கு வைக்க?'' என்று  இளமருதன் கேட்டபோது, ``மாளிகையைவிட்டு வெளியே தனித்திருக்கும் அந்த மேடையின் மீது வையுங்கள்'' என்று சொன்னது அவன்தான்.

‘வெளியிலிருந்து வந்துள்ள ஒருவன் செய்துவிட்டான் என்பதால், அவரது கோபம் இந்த அளவுக்கு இருக்கிறது. இதை வைக்கச் சொன்னது நான்தான் என்பது தெரிந்தால் அவ்வளவுதான்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, பேச்சைத் திருப்ப, “இந்த அழகிய வட்டவடிவ மேடையை எதற்காக மாளிகையை விட்டு வெளியே அமைத்துள்ளார்கள்?” எனக் கேட்டார்.

சற்றே கோபம் தனிந்த அந்துவன் சொன்னார்... “இது சக்கரவாகப் பறவைக்கான மேடை. `பறவைகளின் இளவரசி சக்கரவாகப் பறவை' என்று சொல்வார்கள். வரப்போகும் பாண்டியநாட்டு இளவரசியார் பொற்சுவையின் செல்லப்பறவை அதுதானாம். இது உண்மையில் பறவைகளின் இளவரசி அன்று... வணிகர்களின் இளவரசி. ஆம்... கால மாற்றத்தைக் கணித்துச் சொல்லும் பறவை அது. கார்காலத்துக்கான காற்று தொடங்கும்போது உலகின் எந்தத் திசையிலிருந்தோ இது வந்துவிடுகிறது. இது வந்துவிட்டால், காற்றின் திசையும் மழையின் தொடக்கத்தையும் கடலில் மிதக்கும் வணிகர்கள் அறிவார்கள். மழையோடு வந்து மழைநீரை மட்டுமே அருந்தி உயிர்வாழும் வியப்புதரும் இந்தப் பறவை, மழைக்காலம் முடிந்ததும் புறப்பட்டு மீண்டும் கடலுக்குள் போய்விடுகிறது.

இளவரசியார் இந்தப் பறவையோடுதான் வந்துகொண்டிருக்கிறாராம். அந்தப் பறவைக்கான கூண்டு வைக்கும் மேடை ஒன்றைச் செய்யச் சொன்னார்கள். அது கார்காலம் முடிந்ததும் பறந்துசெல்லும் திசையை நோக்கி, ஆறு மரங்களால் வட்டவடிவில் அந்த திகிரி மேடையை அமைத்துள்ளேன். அதில் போய் இந்த விலங்கை வைத்துவிட்டீர்களே” என்று கோபப்பட்டவர், தேவாங்கைப் பார்த்தபடியே கேட்டார். “என்ன விலங்கு இது? இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லையே. எதற்கு இதைக் கொண்டு வந்துள்ளீர்கள்?”

``தேவாங்கு'' என்று அதன் பெயரைச் சொன்ன இளமருதன். இதைக் கொண்டுவந்ததன் காரணத்தைச் சொல்ல வாயெடுத்தான். ஆனால், சட்டென அதை நிறுத்திக்கொண்டான். `பாரிக்கு தெய்வவாக்குச் சொல்லும் விலங்கு இது. இதை மாமன்னருக்குப் பரிசுப்பொருளாகக் கொண்டு வந்துள்ளோம். இதைப் பார்த்ததும் மாமன்னர் அடையப்போகும் மகிழ்வு அளவற்றது. இதை மாமன்னரிடம்தான் சொல்ல வேண்டும். இடையில் இருப்பவர்களிடம் சொன்னால், எப்படியும் மாற்றிவிடுவார்கள்’ என்று நினைத்தவன் சட்டென வாயடைத்துக் கொண்டான்.

“உலகமே வியக்கப்போகும் ஒரு திருமணத்துக்கு நீ கொண்டுவந்துள்ள பரிசு இதுதானா?” என்று சொல்லிச் சிரித்தபடி, ``குறுநில மன்னன் ஒருவனின் மகனால் மாமன்னரை இந்தக் காலத்தில் கண்டுவிட முடியுமா என்ன?”

செவியன் சொன்னான்... “வெங்கல்நாட்டின் மீது பேரரசருக்கு நல்ல மதிப்பு உண்டு. எனவே, நேரம் ஒதுக்குவார் என்றுதான் நான் நினைக்கிறேன்.”

“சரி அதையும் பார்ப்போம்” என்று சொன்ன அந்துவன், “இந்த விலங்குக் கூண்டை இனி இங்கு வைக்கக் கூடாது. மாளிகைக்குள் இருக்கும் மேடையில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

இளமருதன் கூண்டை எடுத்துக்கொண்டு பாண்டரங்கத்துக்குள் நுழைந்தான். `இந்த அரங்கில் வைக்கத்தான் தந்தை காமன்விளக்கைச் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், நான் கொண்டுவந்த விலங்கு அதற்கும் முன்னே உள்நுழைந்துவிட்டது' என எண்ணியபடி, அந்தக் கலைமாடத்தின் மேல்புறம் இருக்கும் மேடை ஒன்றின் மீது வைத்தான்.

உள்ளிருந்த இரண்டு தேவாங்குகளும் வட்டக்கண்களை உருட்டி உருட்டி இங்கும் அங்கும் பார்த்தன.

முன்புபோல் இவை அச்சம்கொள்வதில்லையே என இளமருதன் எண்ணிக்கொண்டிருக்கையில், அவை இரண்டும் அண்ணாந்து மேற்கூரையைப் பார்த்தன. பார்த்த கணத்தில் கத்தியபடி மருண்டு உள்ளொடுங்கின.

முதன்முறையாக அவற்றின் கத்தலைக் கேட்ட இளமருதன், அப்படி என்ன இருக்கிறது மேற்கூரையில் என எண்ணியபடி அண்ணாந்து பார்த்தான். சிதறிக்கிடக்கும் விண்மீன்களுக்கு இடையில் ஓர் ஓரத்தில் நிலவு இருந்தது. காலம், சொல்லவேண்டியதைச் சொல்லிக்கொண்டி ருந்தது. அவனுக்கு அது புரியவில்லை!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 11:04 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p1
கார்காலத்தின் தொடக்க நாளிலேயே மழை கொட்டித்தீர்த்தது. கபிலரின் உடல், சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டது. கபிலர் இருந்த வீட்டில்தான் எந்நேரமும் பாரியின் மகள்கள் இருந்தனர். அங்கவை, சங்கவையோடு சேர்த்து எட்டுப் பேருக்கு எழுத்துகளைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கியிருந்தார் கபிலர். நடுவீட்டில் மரப்பலகையில் மணல் கொட்டி, அதன் மேல் உயிரெழுத்துகளை எழுதச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். சிறிது காலம் கபிலருக்கு உதவியாக அவரோடு இருந்துவிட்டு வருவதாகச் சொல்லி, மயிலா அங்கேயே தங்கிவிட்டாள்.

பறம்புநாட்டின் தென் பகுதி எல்லைக்காவல் பொறுப்பாளன் கூழையனிடமிருந்து தேக்கனுக்குத் தகவல் வந்திருந்தது. குடநாட்டு அமைச்சன் கோளூர் சாத்தனின் கைகளை வெட்டி அனுப்பியதற்குப் பிறகு, குட்டநாட்டு அரசவைக்குக் குடநாட்டின் தூதுவர்கள் சென்றுள்ளனர். `அடுத்து நிகழப்போவதைப் பற்றிய விழிப்போடு இருக்க வேண்டிய வேளை இது!' என அவர் நினைத்தார்.

கொற்றவைக்கூத்து முடிந்து ஒரு வாரத்துக்குப் பிறகு, கபிலரின் உடல் முற்றிலும் குணமானது. ஆனால் மனம், மிகவும் துவண்டே இருந்தது. நீலன் புறப்பட்ட பிறகு, கபிலரின் மனம் நிலைகொள்ள நாளெடுத்துக்கொண்டது. பார்த்த முதல் கணத்திலிருந்து அவனைப் பற்றிய வியப்பு பெருகிக்கொண்டே இருந்தது. வேட்டுவன் பாறையில் பார்த்தபோது, கையில் பிடித்திருந்த அதே வேற்கம்போடு கபிலரிடமிருந்து விலகி காட்டுக்குள் மறைந்தான் நீலன். கண்களைவிட்டுப் பிரியும் வரை கபிலரின் கண்கள் அசைவற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தன.

இப்போது கபிலரோடு எந்நேரமும் உடனிருந்து உதவிகள் செய்பவன் உதிரன். இவனும் நீலனைப் போலத்தான்; துடிப்பேறிய இளைஞன். கபிலரின் தேவைகளை மிகுந்த அக்கறையோடு கவனித்துவருபவன்.

ஒரு பகற்பொழுதில், கபிலரின் வலது காலை தனது தொடையின் மேல் தூக்கி வைத்துக்கொண்டு விரல்நகங்களை நறுக்கத் தொடங்கினான் உதிரன். அவரின் வலதுகால் நடுவிரல் சூம்பிப்போய் சின்னஞ்சிறியதாக இருந்தது. அந்த விரலின் அடிப்பகுதியை விரல்களால் மெள்ள நீவிவிட்டான். சற்றே உயரமான மரப்பலகையின் மேல் உட்கார்ந்திருந்தார் கபிலர். அவரின் எண்ணங்கள் வேறு எங்கோ இருந்தன. உதிரன் நகம் நறுக்குகிறான் என்பது மட்டுமே அவரின் நினைவில் இருந்தது. சூம்பிய விரலுக்கு உணர்ச்சியில்லாததால், அவன் அந்த விரலின் அடிப்பாகத்தை நீவிவிட்டுக் கொண்டிருப்பதை அவரால் உணர முடியவில்லை.

‘பறம்புநாடே ஒரு தாய்போல் இருக்கிறது. அழிந்த இனங்களை, வாழத் துடிப்பவர்களை, எங்கெங்கோ இருந்து வந்து சேர்ந்தவர்களை எல்லாம் அள்ளி அணைத்துக்கொண்டுள்ளது. சேரனின் நாடு, சோழனின் நாடு, பாண்டியனின் நாடு என, மன்னர்களால்தானே நாடுகள் அறியப் படுகின்றன. ஆனால், ஒரு தாயின் குணத்தோடு விளங்கும் நாட்டை ஏன் `தாய்நாடு' எனச் சொல்லக் கூடாது? நாட்டைத் தாயோடு ஒப்பிடும் எண்ணம் இதுவரை யாருக்கும் தோன்றியதில்லை. சில மாதங்களுக்கு முன்னால் இப்படியோர் எண்ணம் தோன்றியிருந்தால், அது எவ்வளவு பொருளற்றதாக இருந்திருக்கும். மண்ணும் நாடும் உடைமையின் குறியீடுகள். அவற்றைப்போய் தாய்க்கு உவமையாக எப்படிச் சொல்ல முடியும்? ஆனால், கொற்றவைக் கூத்தைப் பார்த்த பிறகு, திசையற்றவர்களையும் நிலமற்றவர்களையும் தலைமுறை தலைமுறையாக அள்ளி அரவணைத்து நிற்கும் பறம்புநாட்டைத் `தாய்நாடு' எனச் சொல்வதைவிட வேறென்ன சொல்ல முடியும்?’ என்று கபிலரின் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, அவரை அறியாமலே கண்கள் கலங்கின.

ஒருகணம் கண்களை மூடிச் சிந்தித்தார். தனக்குள் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? மேலெல்லாம் ஏன் சில்லிட்டு அடங்கியது? இப்போது நினைவுக்குள் என் தாய் வந்துவிட்டுப் போனாளே எப்படி? நினைவின் வழியே எதையோ கண்டறிந்துவிட நினைத்தபோதுதான் அவர் கால்விரல் நினைவுக்கு வந்தது. மெள்ளக் குனிந்து கீழே பார்த்தார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p2
அவ்வளவு நேரம் எங்கேயோ பார்த்தபடி இருந்த கபிலர், இப்போது குனிந்து தன்னைப் பார்க்கிறார் என்பதை அறிந்ததும் உதிரன் சொன்னான், “உங்கள் வலதுகால் நடுவிரலில் குருதி யோட்டத்துக்காக அடிநரம்பைச் சற்று அழுத்தி நீவிவிட்டேன். எதுவும் தொந்தரவாகிவிட்டதா?”

‘இல்லை’ என்று தலையாட்ட மட்டும் செய்தார் கபிலர்.

உதிரன் சொன்னான், “நடுவிரல் சூம்பியுள்ளதால், நடக்கும்போது சற்றே இடறினாலும் தசை பிறண்டுவிடும். கூடுமானவரை பாதடியைக் கழற்றாதீர்கள்.”

இப்போது தலையாட்டாமல் அவனையே பார்த்தார் கபிலர்.

“வேட்டுவன் பாறையில் ஏறும்போது நீலன், உங்கள் பாதடியைக் கழற்றச் சொன்னதால்தான் உடனே உங்களுக்குத் தசை பிறண்டிருக்கிறது. காட்டில் பிடித்து நடப்பதைப்போன்ற வடிவில் ஒரு பாதடியைச் செய்துதர ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லியபடி, விரலின் அடிப்பாகத்தை அழுத்தி நீவிவிட்டான் உதிரன்.

கபிலரின் கண்கள் கலங்கின.

அதைக் கவனித்த உதிரன், “வலி ஏற்படுவதுபோல மிகவும் அழுத்திவிட்டேனா?” என்று பதற்றப்பட்டுக் கேட்டான்.

“இல்லை, சிறுவயதில் என் தாய் அந்த விரலின் அடிநரம்பை இளஞ்சூட்டு எண்ணெய் தொட்டு அழுத்தி நீவிவிடுவாள். அப்போது ஏதாவது ஒருகணத்தில் அந்த விரலை நான் உணர்ந்திருக்கிறேன். மற்ற நேரங்களில் அதை நான் உணர்ந்ததேயில்லை. எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன, எவ்வளவோ நிலப்பரப்புகளை நடந்தே கடந்திருக்கிறேன். பல்லாண்டுகளுக்குப் பிறகு, சட்டென இப்போது ஒருகணம் அந்த விரலை நான் உணர்ந்தேன். உணர்ந்த அந்தக் கணம் என் தாய் நினைவுக்கு வந்துவிட்டாள். உடலெல்லாம் சிலிர்ப்பு மேலிடுகிறது” எனச் சொல்லியபடியே உதிரனின் உச்சந்தலையில் கைவைத்தார் கபிலர். ஊறிய கண்ணீர் ஒழுகாமலா இருக்கும்?

சிறிது நேரத்தில், பெண்பிள்ளைகள் மொழி கற்றுக்கொள்ள வீடு வந்தனர். நறுக்கிய நகத்துண்டுகளை எடுத்துக்கொண்டு உதிரன் வெளியேறினான். கபிலர், மொழிக்குள் நுழையத் தொடங்கினார். மழை அதிகமாகத் தொடங்கியது. வாரக்கணக்கில் விடாது கொட்டும் அடைமழை, இன்னும் சில நாள்களில் தொடங்கும். அடைமழை தொடங்கிவிட்டால், அடுத்து கடுங்குளிர்.

தந்தரையிலிருந்து வந்தவர்களால் இந்தக் குளிரைத் தாங்க முடியாது. கடுங்குளிர் தாங்க, கபிலருக்கு எலிமயிர்ப் போர்வையை நெய்யுமாறு பாரி சொன்னான். குளிரிலிருந்து காத்துக்கொள்ள எவ்வியூரில் உள்ளவர்கள் முடியுள்ள தோல் ஆடைகளைப் பயன்படுத்துவர். அது, காட்டில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்குப் போதுமானது. புதியவர்களின் உடலுக்கு அது போதுமானதாக இருக்காது.  அவர்களின் உடற்சூட்டைப் பாதுகாக்கும் மேலாடை தேவை.

காட்டின் மிக உயர்ந்த பகுதிகளில் லவங்கமும் செங்கடம்பும் அடர்ந்துகிடக்கும் இடங்களில் பேரெலி உயிர்வாழும். இது பூனையைவிட அளவில் பெரியது. பஞ்சினும் மெல்லிய மயிர்களை உடையது. பொங்கும் புகைபோல பொசுபொசுவென இருக்கும் இதன் மயிர்களால் உருவாக்கப்படும் போர்வை, உடலுக்கு மிகுந்த கதகதப்பைத் தரும். உடலின் சூட்டை வெளிவிடாமல் காத்துக்கொள்ளும்; கடுங்குளிரையும் உடலோடு அண்டவிடாது.

கபிலருக்கு எலிமயிர்ப் போர்வையை நெய்ய, தேவையான எலிகளைப் பிடித்தாக வேண்டும். உதிரன், பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். கபிலர், தானும் உடன் சென்று வருவதாக பாரியிடம் கூறினார்.

“பேரெலி, உயரமான கரும்பாறை இடுக்குகளில்தான் இருக்கும். இளைஞர்கள் மிக விரைந்து செயல்பட்டால்தான், அதைப் பிடிக்க முடியும். நீங்கள் அவர்களைப் பின்தொடர்வது கடினமாயிற்றே?” என்றான் பாரி.
“நான் என்ன விரட்டியா பிடிக்கப்போகிறேன்? பிடிக்கப்போகிறவர்களைப் பின்தொடரப் போகிறேன்.”

“முன்னேறுவதைவிடக் கடினமானது பின்தொடர்வது.”

“பின்தொடரக்கூட முடியாத அளவுக்கு நான் தளர்ந்துவிடவில்லை; எனக்கு வயதாகிவிடவும் இல்லை.”

சின்ன சிரிப்புடன் பாரி சொன்னான், “மழைக்காலம் அல்லவா, பாறைகள் வழுக்கும் எனச் சொல்லவந்தேன்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p3
“எப்படிச் சொன்னாலும் நீ சொல்லவரும் செய்தி அதுதானே?” என்றார் கபிலர்.

“நான் பதில் சொல்லவில்லை என்றால், உங்கள் வினாவே விடையாகிவிடும். என் தோழன் அவனது சொல்லாலேயே கண்டறியப்பட்டுவிடக் கூடாதல்லவா?”

“ `எந்தப் பக்கம் போய் மறித்தாலும் தப்பித்துப்போகும் வல்லமைகொண்டது' என்று உதிரன் சொன்னது, பேரெலியை மட்டும்தான் என நினைத்துவிட்டேன்.”

பாரி சிரித்துக்கொண்டே கபிலரைக் கட்டி அணைத்தான். இருவரும் புறப்பட்டனர். ஆதிமலையின் குறிப்பிட்ட திசை நோக்கி இளைஞர்கள் வேகமாகச் சென்றனர். சூரிய ஒளி, நற்பகல் வரைதான் தெரியும். அந்தப் பொழுதுக்குள் பிடித்தால்தான் உண்டு. நாளொன்றுக்கு இரண்டு பிடிப்பதே கடினம். ஒரு போர்வை செய்ய, குறைந்தது இருபது பேரெலிகளையாவது பிடித்தாக வேண்டும். உதிரன், சரசரவெனப் பாறைகளில் ஏறிப் போய்க்கொண்டிருந்தான். மிகச்சிறிய நேரம்தான் அவர்களைப் பின்தொடர்ந்தனர். அதன் பிறகு, பின்தொடர்தலுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

பாரியும் கபிலரும் பேசியபடி அவர்கள் சென்ற திசை நோக்கி மலையேறிக்கொண்டிருந்தனர். “பன்மயிர் பேரெலி என்று இந்த எலியைப் பற்றிப் பழம்புலவர் ஒருவர் பாடியுள்ளார்” என்று சொன்ன கபிலர், சட்டென நினைவு வந்தவராகச் சொன்னார், “அங்கவை, கற்றுக்கொள்வதில் அளவற்ற ஆர்வத்துடன் இருக்கிறாள்.”

பாரிக்கு இது புதிய செய்தி அல்ல. ஆனால், கபிலர் வாயால் கேட்பது மகிழ்வைத் தந்தது.

“பொதுவாக, மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காகத்தான் கேள்வி கேட்பார்கள். அங்கவையோ, அறிந்துகொள்வதற்காகக் கேள்விகள் கேட்கிறாள்.”

இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்பதைப் போலிருந்தது பாரியின் பார்வை.

“மரத்தைத் தெரிந்துகொள்ள மரத்தைப் பார்த்தால் போதும். ஆனால், மரத்தை அறிந்து கொள்ள அதன் வேரைப் பார்க்க வேண்டும் அல்லவா? அதைப்போலத்தான் ‘உயிரெழுத்து பன்னிரண்டு’ என்று நான் சொன்னபோது தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு, ‘என்னென்ன?’ எனக் கேட்பாள் என நினைத்தேன். அவளோ  ‘ஏன் பன்னிரண்டு?’ எனக் கேட்டாள்.

“வினா சரிதானே?”

``சரிதான். ஆனால், விடைக்கான இடம் வினாவில் இருக்க வேண்டுமல்லவா? எத்தனையோ தலைமுறைகளாக நமது முன்னோர்கள் ஒலியை உருட்டி உருட்டி எழுத்தாக்கி வைத்திருக்கிறார்கள். நீர் போன இடத்தில் பதியும் தடம்போல, பேசும் ஒலிக்கு ஒரு தடத்தை உருவாக்க முயன்றிருக்கிறார்கள். இந்தப் பெரும் பட்டறிவுச்சேகரத்தை எனது அறிவால் எப்படி அளந்துபார்த்து விடை சொல்ல முடியும்?”

கபிலரின் விடை, பாரிக்குப் பொருத்தமாகப் பட்டது.

கபிலர் சொன்னார், “முன்பு ஒருமுறை என்னிடம் மொழி கற்ற மாணவி இப்படித்தான் வினாக்களைக் கேட்டுக்கொண்டே இருப்பாள். காலையில் அங்கவை கேள்வி கேட்டதில் அவளின் நினைவாகவே இருக்கிறது” என்று சொன்னபடி எதிரில் இருக்கும் வேங்கை மரத்தைப் பார்த்து அப்படியே அசைவற்று நின்றார் கபிலர். பாரியும் நின்றான்.

வேங்கைமரத்தின் தாழ்வான கிளையில் மயில் ஒன்று அமர்ந்திருந்தது. பேச்சுக் கேட்டு பறந்துவிடக் கூடாது என்பதற்காக, கபிலர் பேச்சை நிறுத்தினார். அது தன் தலையை மட்டும் மேலே தூக்கியது. அதன் அசைவை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர். பாரி, மரத்தின் அடிவாரத்தில் எதையோ உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

மயில் மெள்ள தலையைத் திருப்பி, இருவரையும் பார்த்தபடி கிளையிலிருந்து குதித்து, காட்டுக்குள் மறைந்தது. “இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாதா? வெருகுப்பூனையின் கண்களுக்குள் இருக்குமே நீலமும் பச்சையும் கலந்த கலவை. அதுதானே மயில்தோகையின் கண்களிலும் இருக்கிறது?” என்றார் கபிலர்.

பாரி, மறுமொழி ஏதுமின்றி மரத்தின் அடிவாரத்தை நோக்கி நடந்தான். கபிலர், அந்தக் கிளையை நோக்கிச் சென்றார். மயில், கிளையிலிருந்து தாவி மண்ணில் கால் பதித்த இடத்தில் அதன் காலடி படிந்திருந்தது. அதைப் பார்த்தபடி சொன்னார், “மயிலின் காலடியை நொச்சி இலைக்கு உவமை சொல்வர். வெண்ணொச்சி ஐந்து இலைகளை உடையது. மயிலுக்கு முன்பக்கம் மூன்று விரல்கள்தானே, அதனால் கருநொச்சியைத் தான் உவமை சொல்லியிருக்க வேண்டும். அதற்குத்தான் மூன்று இலை.”

கபிலரின் பேச்சுக்கு, பாரியிடமிருந்து மறுமொழி ஏதும் இல்லை.

“நீ என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” என வினவியபடி பாரியின் அருகில் வந்தார் கபிலர்.

மரத்தின் பட்டையில் ஒட்டியிருந்த செந்நிறத் தடத்தைக் காண்பித்து பாரி சொன்னான், “புலி, தனது வாயில் இருந்த குருதியைத் துடைத்துவிட்டுப் போயிருக்கிறது.”

கபிலரின் கண்கள் குருதியை உற்றுப் பார்த்தன.

“புலியின் வாயில் இவ்வளவு குருதி இருந்திருக்குமேயானால், அது யானையைத்தான் வீழ்த்தியிருக்கும்.”

கபிலரின் கண்கள் பாரியை உற்றுப்பார்த்தன.

“புலி குட்டி போட்டிருக்கும் புதருக்குள் யானை எதிர்பாராமல் நுழைந்ததால், இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம்.”

தடத்தின் வழியே காட்சியை அடுக்கிக்கொண்டேபோனான் பாரி. கபிலரின் மனதுக்குள்ளும் சொற்கள் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p4விரிந்துகொண்டே போயின.

‘கிளையில் தோகை விரித்த மயில்.

அடியில் குருதி துடைத்த புலி.

மயிலின் கால் தடம் நொச்சியைச் சொன்னது.

புலியின் வாய்த் தடம் யானையைக் கொன்றது.


குருதி யுலரா வேங்கையின் அடியில்
தனது இறகு உதிர்க்காமல் சென்றது மயிலே’
என, கபிலரின் மனம் காட்சிகளைச் சரசரவெனத் தொகுத்துக்கொண்டிருந்தபோது, பாரியின் வலதுகை ஈட்டியை இறுகப்பிடித்திருந்தது. ஏனென்றால், குருதியின் ஈரம் காயாமல்தான் இருந்தது. ஒருவேளை அந்தப் புதர் மிக அருகில் இருக்கலாம்.

விழா என்றால், அறுவகைத் தராசும் தரை தட்டும் ஓசை நிற்காமல் கேட்க வேண்டும். அதுவே திருவிழா என்றால், இந்த அறுவகையோடு சேர்ந்து எழுவகை அளவையும் நில்லாமல் நீள வேண்டும். அதனினும் பெருவிழா என்றால், இந்த இரண்டோடு சேர்த்து எண்வகை இன்பத்தில் நகரம் திளைக்க வேண்டும். இதுவே விழாக்களுக்கு இலக்கணம் கண்டோர் சொன்ன சொல்.

மாமதுரையின் வணிகச்சாலையில் குவிந்துள்ள மக்களின் கூட்டம் குறைவதாக இல்லை. மாணிக்கக்கற்களை நிறுத்தும் மிகச்சிறிய மணித்தராசும், தங்க நகைகளை நிறுத்தும் பொன்தராசும், உலோகங்களை நிறுத்தும் உலோகத்தராசும் பண்டத்தராசும் மரத்தராசும் தூக்குத்தராசும் நிலை கொள்ளாமல் இரவு முழுவதும் ஆடியபடியே இருந்தன. தராசுத்தட்டு தரை தட்டும் ஓசை இடைவிடாது ஒலிக்கும் இசை அரங்கம் போல கேட்டுக்கொண்டே இருந்தது. துலா முள்ளின் தலையாட்டல் நின்றபாடில்லை. நிற்காமல் துடிக்கும் வணிகத்தின் வால் அதுதானே.

பண்டகக் காப்போன், எண்ணற்ற கணக்கர்களோடு அமர்ந்து நாள்கணக்கில் கணக்குகளைப் போட்டுக்கொண்டே இருந்தான். இந்தத் திருமணத்துக்கு வரப்போகும் தேர்கள் எத்தனை, ஒரு குதிரை இழுக்கும் தேர், இரு குதிரைகள் இழுக்கும் தேர், நான்கு குதிரைகள் இழுக்கும் தேர் என வகைக்கு ஏற்ப பிரித்துக் கணக்கிட்டனர். குதிரைகள் தவிர, பிற விலங்குகளால் இழுத்து வரப்படும் தேருக்கு மணவிழா முடியும் வரை கோட்டைக்குள் அனுமதி இல்லை. அதேபோல, சிறிய பல்லக்குகளுக்கும் சிவிகைகளுக்கும் அனுமதி இல்லை. நான்கு பேர் சுமக்கும் பெரும்பல்லக்குகளுக்கும் எட்டுப்பேர் சுமக்கும் மணிப்பல்லக்குகளுக்கும் யானையின் மேல் பொருத்தப்பட்ட கூண்டுப் பல்லக்குகளுக்கும் மட்டுமே அனுமதி.

தேர்களின் எண்ணிக்கையை உய்த்தறிந்து அதன் அடிப்படையில் தேர் இழுக்கும் விலங்குகளின் எண்ணிக்கை கணக்கிடப் பட்டது. விலங்குகளுக்குத் தேவையான கூலங்கள் கணக்கிடப்பட்டன. பணியாளர் களின் எண்ணிக்கையையும் விருந்தினர்களின் எண்ணிக்கையையும் கணக்கிட்டனர். நெல், வரகு, தினை, சாமை தொடங்கி எள், கொள், அவரை, மொச்சை, வரையிலான பதினெட்டு வகைக் கூலங்களையும் நிறுத்தல், முகர்தல், பெய்தல் அளவைகளைக்கொண்டு தேவைகளைக் கணக்கிட்டனர்.

பண்டகக் காப்போனின் அறை முழுவதும் கணக்குகள் நிரம்பி வழிந்தன. இரவும் பகலும் இதே வேலையாக இருந்ததால், ஏடுகளில் எழுதாமலேயே எண்களை ஒப்புவித்துக் கொண்டிருந்தனர்.  ஒரு படிக்கு அவரை 1,800, பயறு 14,800, அரிசி 38,000 இருக்கும் என எண்ணிக்கையை நினைவுகளின் பகுதியாக்கினர்.

குதிரைகளின் கட்டுத்தறிக் கணக்குகள் துல்லியமாகத் தயாராகின. ஆட்டுத்தோல் பிடிகொண்ட கசை எத்தனை தேவை என்பதில் தொடங்கி கண்பட்டி, கடிவாளம் வரை குதிரைக்குத் தேவையான பொருள்கள் எவ்வளவு, கொள், புல், தண்ணீர் வேளை தவறாமல் கொடுக்கவேண்டிய அளவுக்கான மொத்தக் கணக்குகளும் எழுதப்பட்டன. கட்டுத்தறியின் துர்நாற்றத்திலிருந்து நகரத்தைக் காப்பாற்ற கணக்குகளே அச்சாணிகளாக இருந்தன.

எண்ணற்ற விழாக்களையும் திருவிழாக்களையும் கண்ட மதுரை, இப்போது பெருவிழாவுக்குத் தயாராகியது. இன்னும் சிறிது நேரத்தில் மணமகள் வந்திறங்க இருக்கிறாள். அவரை வரவேற்க, நெடுங்கல்சாலை முழுவதும் பேரலங்காரம் பூண்டிருந்தது. எங்கும் அரச குலத்தினர் திரண்டிருந்தனர். வரப்போகும் மதுரையின் குலமகளுக்காக மாமன்னர் குலசேகரப் பாண்டியன் இன்று அதிகாலை வைகையில் நீராடி, பொன்னால் செய்யப்பட்ட தும்பைப்பூவை இருபது மாவீரர் களுக்குப் பரிசாக வழங்கினார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p5
பொன்னரிமாலையும் நெற்றிப் பட்டமும் சூடிய பட்டத்துயானை முன்னே வந்தது. அதைத் தொடர்ந்து பொன்னால் செய்யப்பட்ட சேண மணிந்த குதிரைகளில் பொன்பூவைச் சூடிய மாவீரர்கள் இருபது பேர் அணிவகுத்து வந்தனர்.

அதற்கு அடுத்து, மின்னும் தலையணிகளும் சங்கு வளையல்களும் செந்நிற வடமும் இடையணியும் அணிந்த அழகுப் பதுமைகள் எண்மர் பொற்கிடுகு மேயப்பட்ட சிறு பல்லக்கைத் தூக்கி வந்தனர்.

பெண்கள் பல்லக்குத் தூக்கி வருவதை, மதுரை முதன்முறையாகக் கண்டது. நெடுங்கல்சாலையில் விலக முடியாத பெருங்கூட்டம் நின்றது. இளமருதனும் செவ்வியனும் கூட்ட நெரிசலில் திணறியபடி நின்றுகொண்டிருந்தனர். இந்த அரிய காட்சி என்றைக்குக் கிடைக்கும்? எவ்வளவு நெரிசல் இருந்தாலும் வந்து இறங்கும் இளவரசியாரைப் பார்க்காமல் போவதில்லை என்ற முடிவோடு இருவரும் நின்றிருந்தனர்.

நெடுங்கல்சாலையின் திருப்பத்தில்தான் அவர்கள் நின்றிருந்தனர். அங்கிருந்து பார்த்தால், தொலைவில் பல்லக்கில் வந்து இறங்கி அரண்மனையின் நெடும் படி ஏறி உள்ளே செல்வதைப் பார்க்க முடியும்.

பொன்னால் ஆன தும்பைப்பூ சூடிய வீரர்களின் அணிவகுப்பைத் தொடர்ந்து பெண்கள் எண்மர் தூக்கி வரும் சிறு பல்லக்கு முதலில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கப்போவது யார் என எல்லோரும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு நின்றனர். ஆனால், அந்தப் பல்லக்கிலிருந்து யாரும் இறங்கவில்லை.

முன்னால் இருப்பவன் அடைத்து நின்றதால், இளமருதனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. “யார் இறங்குவதென்று தெரியவில்லை. சற்றே விலகுங்கள்’' என்று கூறினான். அதற்கு அடைத்து நின்ற அந்த மனிதன் சொன்னான், “அந்தப் பல்லக்கில் இருந்து யாரும் இறங்க மாட்டார்கள்.”

செவியன் அவனை உற்றுப்பார்த்தான். தோற்றமே அவனொரு வணிகன் என்பதைச் சொல்லியது. சாத்துகளின் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதை, பிற அடையாளங்களைக்கொண்டு அறிந்தனர். அவன் பல செய்திகளையும் அறிந்திருப்பான் என உய்த்தறிந்த செவியன் கேட்டான்.

“அந்தப் பல்லக்கில் யாரும் வரவில்லையா?”

“அது பொற்கிடுகு வேய்ந்த பல்லக்கு. சாத்துகளின் விழாக்களில் அதற்குத்தான் முதல் இடம்.”

“அந்தப் பல்லக்கில் யார் இருப்பார்?”

“செல்வத்தின் இளவரசி இருப்பாள்.”

அவன் சொல்வது புரியாமல் இருவரும் முழித்தபோது அவன் மேலும் சொன்னான், “அது சக்கரவாகப் பறவையைக் கொண்டுவரும் பல்லக்கு.”

அந்தக் கணம் இளமருதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இப்பெரும்விழாவில் தலைமரியாதை கொடுத்துப் பொற்பல்லக்கில் எடுத்துவரும் பறவைக்காகச் செய்யப்பட்ட மேடையிலா நான் ஈச்சமரச் சட்டகங்களால் செய்யப்பட்ட தேவாங்கின் கூட்டை வைத்திருந்தேன். அந்துவன் கோபப்பட்டதன் நியாயம் இப்போது விளங்குகிறது’ என எண்ணிக்கொண்டிருக்கும்போதே செம்மணிகள் பதிக்கப்பட்ட மகரப்பல்லக்கு வருவது தொலைவில் தெரிந்தது. சூரிய ஒளி மின்னி மேலெழும் அழகு எல்லாவற்றையும் சொன்னது.

“எட்டு அண்ணகர்கள் தூக்கி வருகிறார்களே, அதுதான் இளவரசியாரின் பல்லக்கு” என்றான் அந்த வணிகன்.

‘அவன் சொல்லாமலே அதுதான் இளவரசியாரின் பல்லக்கு என்பது தெரிந்தது. ஆனால், தூக்கி வருபவர்களை அண்ணகர்கள் எனச் சொல்கிறானே!?’ என எண்ணியவாறே, அவர்கள் யாரெனக் கேட்டான் இளமருதன்.

“விதை எடுக்கப்பட்டவர்கள்” என்றான் வணிகன்.

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இசைக் கருவிகளின் முழக்கம் எங்கும் கேட்கத் தொடங்கியது. அரண்மனைப் பெண்கள் மங்கலக் குலவையிட்டனர். இளவரசியாரை வரவேற்க, பழையன்மாதேவி படி இறங்கி வந்தார். மலர்க்குவியலும் மஞ்சள் அரிசியும் பொன்வட்டில் எடுத்தபடி சேடிப்பெண்கள் உடன்வர, அவர் வந்து நிற்பதும் பொற்பல்லக்கு மாளிகை நெடும் படியின் எதிரில் வந்து நிற்பதும் ஒரேபொழுதில் நிகழ்ந்தன.

தொட்டியில் தண்ணீர் இறங்குவதைப்போல பல்லக்கை சிறு அசைவுகூட இன்றிக் கீழிறக்கினர் அண்ணகர்கள். தங்களின் கால் பார்த்தபடியே வணங்கி பின் நகர்ந்து நின்றனர்.

இசைக்கருவிகளின் ஓசை எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மாடங்களிலிருந்து பூக்கள் சொரியப்பட்டுக்கொண்டிருந்தன. பல்லக்கிலிருந்து இறங்கும் இளவரசியைப் பார்க்க, கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இளமருதன் எக்கி, வணிகனின் தோள்பட்டையைத் தாண்ட முயன்றான்.

மகரப்பல்லக்கின் செம்மணிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லி, அவற்றின் நிறப்பெருமையையும் அவை எடுக்கப்பட்ட நிலங்களின் தன்மையையும் அவை தாங்கி வந்துள்ள இளவரசியாரின் சிறப்பையும் இணைத்து இணைத்துச் சொல்லி மகிழ்ந்தான் வணிகன். அவளுடைய வார்த்தைகளில் வணிகர்குலம் பெருமிதம் பொங்கியது. எல்லோரின் கண்களும் இறக்கப்பட்ட பல்லக்கையே பார்த்துக்கொண்டிருந்தன. மேளதாளங்களின் ஓசையாலும் தூவப்படும் வண்ணமலர்களாலும் நெடுங்கல்சாலை திணறியது.

பழையன்மாதேவி வந்து நின்றபின்னும், பல்லக்கிலிருந்து யாரும் இறங்கவில்லை. பெருகும் உற்சாகத்துக்கு நடுவே, மிகச்சிலரின் கண்கள் தாமதமாகும் அந்தக் காலத்தைக் கணித்துக் கொண்டிருந்தன.

பல்லக்கின் உள்ளே இருந்தவள் யோசித்துக் கொண்டே இருந்தாள். ‘இந்தத் தயக்கம் எனது வாழ்வின் எல்லா உண்மைகளையும் சொல்லும்.’ கண் மூடி அந்தக் கணத்தைக் கடந்தாள். நெஞ்சின் அழுத்தத்தை மூச்சுக்காற்று வெளியேற்றியது. மூடிய கண்களைத் திறந்தாள். இடக்கை விரல்களால் செம்பட்டுத் திரைச்சீலையை மெள்ள விலக்கினாள். மதுரையின் மண் அவள் கண்களில்பட்டது. சற்றுநேரம் மண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தவள், காலடியை மதுரையில் வைத்தாள்.

கூட்டத்தின் ஆரவாரமும் இசை முழக்கமும் வாழ்த்துச்சொல்லும் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இளமருதன் நின்ற இடத்திலிருந்து நெரிபடும் கூட்டத்துக்குள் தலைதூக்கிப் பார்த்தான். தூவப்படும் மலர்களுக்கு இடையில் கண்கொள்ளாப் பேரழகு நகர்ந்துகொண்டிருந்தது. இளமஞ்சள் வெயிலில் கண நேரத்தில் மறைந்த அவளது வடிவு கண்டு அவனை அறியாமலேயே, “உலகின் பேரழகி” என்று வாய் முணுமுணுத்தது.

முன்னால் நின்றிருந்த வணிகனின் காதில் அந்த முணுமுணுப்பு கேட்டது. அவன் சற்றே திரும்பிச் சொன்னான், “அந்த அழகையும் விஞ்சும் பேரறிவுகொண்டவள் பொற்சுவை.”

இளமருதனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வணிகனைப் பார்த்தான். அவன் மேலும் சொன்னான், “பெரும்புலவர் கபிலரிடம் கல்வி பயின்றவள் அல்லவா?”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 11:28 pm

யது பழுத்த முதுகிழவர். தோளிலே விழுந்து புரளும் நரைமுடி. பற்கள் உதிர்ந்துவிட்டன. ஆனாலும் கண்பார்வை மட்டும் அப்படியே. அதுவும் இரவாகிவிட்டால் கண்களின் ஒளி மெருகேறிவிடும்போல. அரண்மனைத் தாழ்வாரத்தின் வழியே தளர்ந்து நடந்துவரும் திசைவேழரைச் சுற்றி தலைமை மாணாக்கர்கள் நால்வர் வந்தனர். நேற்று இரவே அரண்மனைக்கு வந்து சேர்ந்த அவர், நண்பகலில்தான் புது மாளிகையில் வரையப்பட்ட காலக்கணக்கைப் பார்க்க வருகிறார்.

அவரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அந்துவன். அரண்மனையின் தலைமைக் கணியன் அவன்தான். ஆனாலும் ஆசான் வருகை உள்ளுக்குள் சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியபடி இருந்தது. அந்துவனுக்குப் பக்கத்தில்  அவன் உதவியாளர்கள் நின்றிருந்தனர்.

ஆணை மணி ஓசையெழுப்பியபடி பணியாளன் முன்நடந்து வந்தான். அரண்மனையின் பேரதிகாரம் பெற்றவர்கள் வரும்போது, அவர்களுக்கு முன் இந்த ஓசை எழுப்பப்படும். திசைவேழர், கோலூன்றி நடந்து வந்தார். அரண்மனைக்கு அவர் வந்து எட்டு ஆண்டுகள் ஆயிற்று. சென்றமுறை அவர் வந்தபோது அவரோடு கபிலரும் வந்திருந்தார். இருவரும் இருமாத காலம் இங்கு தங்கியிருந்தனர். விண்ணையும் மண்ணையும் பற்றி இரவு பகலாகப் பேசிக் களித்தனர். ஒரு வைகறைப்பொழுதில் வைகையின் நிலை மண்டபத்தில் அமர்ந்த கபிலர், அந்த முழு நாளும் எழுந்து வராமல் எழுதிக்கொண்டே இருந்தார். அத்தனையும் திசைவேழரின் பேரறிவைப் போற்றிப் பாடிய பாடல்கள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P83a
அந்த நாள்களின் எண்ணங்கள் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. பட்டியக்கல்லைப் பார்த்தபடியே ஊன்றுகோலை எடுத்துவைத்து நடந்தார். கார்கால மாளிகையின் வாயிலில் நின்ற அந்துவன் வணங்கி வரவேற்றான். சொற்கேட்டு  தலை ஆட்டினார். முகம் பார்க்கவில்லை. மாளிகையின் நடுவில், சின்ன அடையாளம் ஒன்றை வைத்திருந்தனர். நேராக அந்த இடம் வந்து நின்றார். நெஞ்சுக்கு நேராக ஊன்றுகோலை ஊன்றி இரு கைகளாலும் இறுகப்பிடித்தார். தலையை முன்சாய்த்து கண்கள் மூடியவர், சிறிய கால இடைவெளியில் தலையை அப்படியே பின்னால் சாய்த்தார். படுத்துக் கிடப்பவனைப்போல முகம் கிடைமட்டத்திலிருந்து  மேற்கூரையைப் பார்த்தது. கண்களைத் திறந்தார். கருவிழிகள் காலத்துக்குள் நுழைந்தன. பொதியவெற்பன் பிறந்தபோது இருந்த நாள்மீன்களும் கோள்மீன்களும் அவரின்  நினைவுக்கு வந்தன.  மேற்கூரையில் உள்ளொடுங்கிய விண்மீன்களுக்குள் கண்கள் செருகின.

உடலையோ கழுத்தையோ சுற்றாமல் கருவிழிகளைச் சுழற்றி மேற்கூரையின் முழுவட்டத்தையும் பார்த்து முடித்தார். தலை முன்வணங்கி கோல் நோக்கிக் கவிழ்ந்தது. என்ன சொல்லப்போகிறார் என்பதறிய அந்துவன் ஆவலோடு இருந்தான்.

அமைதியான அந்த மாளிகையில் மெள்ள ஒலித்தது திசைவேழரின் குரல். “பொதியவெற்பன் பிறந்தநாள் என்ன?”

அந்துவனுக்கு விடை உடனே நினைவுக்கு வரவில்லை. சற்றே நிதானித்துச் சொன்னான், “வளர்பிறையின் எட்டாம் நாள்.”

“எந்தப்பொழுதில் பிறப்பு நிகழ்ந்தது?”

“அதிகாலையில்.”

“நீ செய்திருக்கும் பிழை என்ன?”

விளக்கம் அளிக்கும் வாய்ப்பு எதுவும் இந்த வினாவில் இல்லை. அடுத்த பிழையைத் தவிர்க்க மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்துவன் அதிர்ச்சிக்குள்ளானான். கண்களை அகலத் திறந்து மேற்கூரையைப் பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை.

“வளர்பிறை நாள்களில் கதிரவன் எழுவதற்கு முன்பே நிலவு மறைந்துவிடும். கதிரவனும் நிலவும் இல்லா புலர் காலைப்பொழுதில்தான் பொதியவெற்பன் பிறந்தான். ஆனால், நீ வானத்தின் மேற்கு விளிம்பில் எட்டாம் நாள் நிலவை வரைந்து வைத்திருக்கிறாய். இதன் பொருள் என்ன தெரியுமா?”

உறைந்துபோய் நின்ற அந்துவனுக்கு, விடை சொல்ல நா எழவில்லை.

``ஓவியம் குறிப்பது, வளர்பிறையின் எட்டாம் நாள் அல்ல.”

அந்துவனுக்கு வியர்த்துக்கொட்டியது.

“மற்றவற்றில் தவறுகளின் அளவைப் பொறுத்து பாதிப்பின் தன்மை இருக்கும். ஆனால், காலக்கணக்கில் அப்படி அன்று. பெரியதோ, சிறியதோ பிசகு பிசகுதான். கணப்பொழுதில் எல்லாம் குலைந்துவிடும்.”
சொல்லியபடியே வேனிற்காலப் பள்ளியறையை நோக்கி நடந்தார். அது மேல்மாடத்தில் இருக்கிறது. ஏறிச்செல்ல தன் மாணவர்களைத்தான் அனுப்புவார் என்று நினைத்திருந்தான் அந்துவன். ஆனால், திசைவேழரின் கால்கள் படியேறிக் கொண்டிருந்தன.

லைமை அமைச்சர் முசுகுந்தரின் முன் யானைப்பாகன் நிறுத்தப்பட்டிருந்தான். “பாண்டியநாட்டின் பெருவிழா நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தச் சிக்கல் தொடர்பாக விசாரிக்கத் தாங்கள் வரவேண்டுமா?” என்று முசுகுந்தரிடம் அரசாங்கத்தின் களஞ்சியத் தலைவர் வெள்ளிகொண்டார் கேட்டார்.

“இப்படி ஒரு கோர நிகழ்வு நடந்துள்ளது என்பது நம்மினும் மேலுள்ளவர்களுக்குத் தெரியாது. ஆனால், கீழ்நிலை வீரர்கள் காதோடு காதாக இதைத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். இப்போதே இதுகுறித்து விசாரித்து தண்டனை வழங்கினால், அந்த வீரர்களின் காதுகளில் தானாகப் போய்ச்சேரும். விழாக்காலத்தில் ஒழுங்கை உறுதிப்படுத்துவது முக்கியம். அதற்குத் தேவையான அச்ச உணர்வை ஊட்ட இது நல்ல வாய்ப்பு. அதை ஏன் தவறவிட வேண்டும்?”

நிர்வாகத்தை நடத்திச்செல்லும் மூதறிவாளர் முசுகுந்தர் என்பது அவரது ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுவதாக எண்ணி மகிழ்ந்தார் வெள்ளிகொண்டார்.

தனித்திருந்த அந்த மாளிகைக்கு இருவரும் வந்தபோது, கோட்டைத்தளபதி சாகலைவனும் யானைக் கட்டுத்தறியின் பொறுப்பாளன் அல்லங்கீரனும் அங்கு இருந்தனர். விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட மற்ற நான்கு வீரர்களும் பாகனுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தனர்.

பாகனின்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை, தளபதி சாகலைவன் தடித்த குரலில் கூறினான் “யானையைவிட்டுப் பாகனும், கப்பலைவிட்டு மீகானும் (மாலுமி) தப்பிக்க அனுமதியில்லை. இது பாண்டியநாட்டின் விதி. அதை நீ மீறியிருக்கிறாய்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P83b
“நான் என்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தப்பவில்லை. அதைக் காப்பாற்றவே முயன்றேன்.”

“மதம்கொண்ட யானையை எப்படிக் காப்பாற்ற முடியும்?”

“அதற்கு மதம் பிடிக்கவில்லை.”

“தளபதி மாரையனை அது ஏன் கொன்றது?”

“என்னை ஏன் அது கொல்லவில்லை?”

எதிர்க்கேள்வி, எரிச்சலை உண்டுபண்ணியது. கேள்விக்குள் இருக்கும் உண்மை, பதற்றத்தைக் கூட்டியது.

“அரை இருட்டுக்குள்ளிருந்து குதிரை பாய்ந்து கண்ணெதிரே வந்தால், எந்த விலங்குதான் அச்சங்கொள்ளாது? அச்சத்தால்தான் அது அடித்தது. மதத்தால் அல்ல.”

“உனது விளக்கம், தளபதியின் மரணத்தை நியாயப்படுத்தப் போதுமானதாக இல்லை. அதுவும் இந்தப் பெருவிழா நடந்து கொண்டிருக்கும்போது. ஒருவேளை யானை நெடுந்தெருவுக்குள் நுழைந்திருந்தால் இழப்பு என்ன ஆகியிருக்கும்?” 

“என் உத்தரவுகளை அது ஏற்கவில்லையே தவிர, அதற்கு மதம் பிடிக்கவில்லை. அதனால்தான் அது கட்டுத்தறியை நோக்கிப் போனது. மூன்று திருப்பங்களிலும் சரியாகத் திரும்பி நடந்தது. மேற்குவாசல் தளபதி சட்டென எதிரில் வந்துவிட்டார். இருட்டில் அவரின் வருகையை நானே பார்க்கவில்லை. அது வேகம் கொள்ளாமல்தான் அடித்தது. பின்னங்காலில் மிதிபட்டதால் அவர் செத்தார். அது நிற்காமல்... ஆனால், சரியான திசைநோக்கிப் போனதால்தான் குத்துக்கோலைக் (அங்குசத்தை) காதோரம் செருகிவிட்டு இறங்கினேன். அதை எளிதில் பிடித்திருக்க முடியும். ஆனால், அவசரத்தில் எல்லாம் தவறுதலாக நடந்துவிட்டன.”

“நீ நடந்துகொண்டதுதான் தவறு. அதை ஏற்காமல் எல்லாவற்றின் மீதும் பழிசுமத்தாதே.”

பாகனின் எதிர்க்கூற்றைக் கேட்டுக் கொண்டிருந்த முசுகுந்தர் சொன்னார், “பாண்டிய நாட்டின் பெருவிழா நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் மற்றவர்களுக்குத் தெரியாமல்  விசாரித்துக்கொண்டிருக்கிறோம். விசாரணையைக்கூடக் குற்றத்தின் பகுதியாக நீ மாற்றிவிட்டாய். நீ இழைத்த குற்றம் அன்றோடு நிற்கவில்லை. இன்றும் தொடர்கிறது.”

முசுகுந்தரின் சொல்லால் அதிர்ச்சியடைந்த அல்லங்கீரன், இனியும் பேசாமல் இருப்பது முறையல்ல என்று முடிவுசெய்தார்.

வேனிற்கால மாளிகைக்குள் நுழைந்தார் திசைவேழர். சுற்றுச்சுவர் முழுக்க செடிகொடிகளால் ஆன வண்ண ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. பச்சைநிறப் பரப்பாய் மதில்கள் காட்சி தந்தன. மாளிகையின் நடுவே போன திசைவேழர் வழக்கம்போல் கோலை ஊன்றி தலையை மேலேற்றி அண்ணாந்து பார்த்தார்.

சிறுபுலி கண்போல் அறுவை (சித்திரை) இருமீன் மேற்கூரையின் உச்சியில் இருந்தது. அதன் இடப்புறம் மூன்றாம்பிறை நிலவு இருந்தது. அதற்கு நேர் கீழே செவ்வாயும், அதற்கு எதிரே காரியும் (சனி) இருந்தன. அண்ணாந்த திசைவேழரின் தலை சற்றே கூடுதல் நேரம் எடுத்தது. அதேபோல அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த அந்துவனுக்குப் பிடரி பிடிப்பதைப்போல இருந்தது.

தலை இறக்காமலே  கேள்வி வந்தது. “செவ்வாய்க்கோளுக்குப் பூசியுள்ள செந்நிறத்துக்கான வண்ணத்தை எதிலிருந்து எடுத்தாய்?”

“வெடவேலம் பட்டையிலிருந்து எடுத்தேன்.”

“அதுதான் இளஞ்சிவப்பாக இருக்கிறது. செவ்வாய் அடர்சிவப்பு நிறம் அல்லவா? அதனால்தானே இந்த அழகிய பெயரை நம் முன்னோர்கள் சூட்டினர். நுணாமரக் கட்டையிலிருந்து சாறு எடுத்துப் பூசு. அதுதான் அடர்சிவப்பைத் தரும்.”

‘சரி’யென்று வேகமாகத் தலையாட்டினான் அந்துவன்.

``விண்மீன்கள் அனைத்தும் இமைக்கும் ஒளி உடையவை. அவற்றுக்குக் கோள்மீன்களைப்போல வெறும்வண்ணம் பூசாதே. சிப்பியைத் தட்டியோ, சுக்கான் துகளைக் கலந்தோ பூசு. அப்போதுதான் இமைக்கும் தன்மை கிடைக்கும்.''

‘சரி’யென்று மீண்டும் தலையசைத்தான். `நல்லவேளை பெரிய தவறு எதுவும் இதில் இல்லை' என்று மனம் சற்று நிம்மதியடைந்தது.

திசைவேழர் திரும்பி நடக்கத் தொடங்கினார். எதிரே இருந்த சுவர் ஓவியத்தின் கீழ்ப்புறம் அவர் கண்ணில்பட்டது. நடக்கத் தொடங்கிய கால்கள் நின்றன. மற்றவர்களும் நின்றனர். எல்லோரின் கண்களும் எதிர் சுவரைப் பார்த்தன. வேனிற்கால மாளிகையாதலால் செடிகொடிகள் பின்னிக்கிடக்கும் பச்சை வண்ணக் காட்சி வரையப்பட்டிருந்தது.

எதைப் பார்த்து நிற்கிறார் என்பது மற்றவர்களுக்குப் புரியவில்லை. சற்றே உற்றுப்பார்த்தார். பின்னிக்கிடக்கும் கொடிகளுக்குக் கீழே தரையோடு இருக்கும் ஒரு செடியில் பூ வரையப்பட்டிருந்தது. ஊன்றுகோலை நோக்கிக் காட்டி “இது என்ன பூ?” என்று கேட்டார்.

என்ன  விடை சொன்னாலும் அது தவறாகத்தான் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால், அது தவறாக வரையப்பட்டதால்தான் இந்தக் கேள்வியே பிறந்திருக்கிறது என்று எல்லோரும் நம்பினர்.  விடையேதும் வரவில்லை.

“யாருக்குமே இது என்ன பூ என்று தெரியவில்லையா?” என, சற்றே குரல் உயர்த்திக் கேட்டார்.

ஈட்டிபோல் புற இதழ்களையும், விசிறிபோல் அக இதழ்களையும் உடைய பொன்மஞ்சள் வண்ணம் கொண்ட அந்தப் பூவை உற்றுப்பார்த்து ஒரு மாணவன் சொன்னான், “நெருஞ்சிப் பூ.”

அந்துவனும் அதைத்தான் நினைத்தான். ஆனால், தவறு ஏதும் வந்துவிடக் கூடாது என்பதால் சொல்லவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P83c
“நெருஞ்சிப் பூவுக்கு இன்னொரு பெயர் ஞாயிறுதிரும்பி. கதிரவன் எழுவதிலிருந்து மறைவது வரை அதைப் பார்த்தபடி திரும்பக்கூடிய விந்தையான மலர். அதனால் இதைக் கதிரவன் மேல் காமம்கொண்ட மலர் என்று சொல்வார்கள்” என்றார் திசைவேழர். எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால், புதிதாகக் கேட்பதைப்போலக் கேட்டனர். விடையின்றித் தலை தாழ்த்தி நிற்கும் மாணவனே ஆசானின் அகங்காரத்துக்குச் சுவையூட்டுகிறான். 

“பள்ளியறையில் நெருஞ்சிப் பூ வரைதல் மிகப்பொருத்தம்” என்று பாராட்டினார் திசைவேழர்.

தங்கள் ஆசானுக்குப் பாராட்டக்கூடத் தெரியும் என்று பல மாணவர்கள் அன்றுதான் அறிந்தார்கள். `இவர் பாராட்டுவார் எனத் தெரிந்திருந்தால், நாமே சொல்லியிருக்கலாமே!' என்று அந்துவனுக்குத் தோன்றியது.

அடுத்த கணம் கேட்டார், “இதில் இருக்கும் பிழை என்னவென்று சொல்லுங்கள்?”

வழக்கம்போல் அனைவரும் திகைத்தனர். பூவின் இதழ்களையும் அதன் வடிவத்தையும் உற்றுப்பார்த்தான் அந்துவன். `எல்லாம் சரியாகத்தானே இருக்கின்றன. இதில் என்ன பிழை கண்டார்?' எனச்  சிந்தித்தான்.

யாருக்கும் எதுவும் பிடிபடவில்லை.

அவரே சொன்னார். “நெருஞ்சிப் பூ எத்திசை நோக்கி இருக்கிறது?”

“நேராக மேல்வானத்தை நோக்கி இருக்கிறது.”

“அப்படியென்றால் நண்பகல் என்று பொருள். மாளிகையின் மேற்கூரையில் பின்னிரவு விண்மீன்கள் மின்னுகின்றன. மாளிகையின் சுவரில் பகல் வெயில் சுடுகிறது. என்ன வானியல் இது?”

மாணவர்கள் உறைந்துபோனார்கள். அவர் யாரையும் பார்க்காமல் ஊன்றுகோலை நகர்த்தியபடி முன் நடந்தார்.

ருகாலமும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கா பெருங்கிழவன் அல்லங்கீரன். அவன் பேச ஆரம்பித்ததும் விசாரணையின் சூழலே மாறியது.

“வந்திருக்கும் மண்ணீட்டாளர்கள் அவசரமாக அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மாரையன் உணர்ந்திருந்தான். ஆனால், கோட்டைக் கதவை அவனால் திறந்துவிட முடியவில்லை. எல்லா அதிகாரங்களையும் காமக்கிழத்தின் படுக்கை அறைக்குள் வைத்துக்கொண்டு நீ இருந்தாய். அதுதான் சிக்கலுக்குக் காரணமே.”

அல்லங்கீரனின் குற்றச்சாட்டு சாகலைவனின் முகத்துக்கு நேர் எகிறியது.

“அவனுக்குக் கதவைத் திறக்கும் அதிகாரம் இருந்திருந்தால், இரவு நிலையுணவு கொடுப்பதற்கு முன்பே கட்டுத்தறிக்குச் செய்தி சொல்லி யிருப்பான். யானையும் கதவைத் திறந்து விட்டிருக்கும். எந்தச் சிக்கலும் ஏற்பட்டிருக்காது.”

“ஒரு மரணத்தை வைத்து நிலைநிறுத்தப்பட்ட அதிகாரத்தைக் கேள்வி கேட்காதீர்கள்” என்றார் வெள்ளிகொண்டார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P83e
“மாரையன் கதவைத் திறக்க அவ்வளவு முயன்றபோதும், சாகலைவன் காமக்கிழத்தியின் கட்டிலைவிட்டு அகலாமல் இருந்ததுதான் அதிகாரத்தின் கோரவடிவம். நான் அதைத்தான் கேள்வி கேட்கிறேன்.”

“எல்லாவற்றையும் அறிந்துதான் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை கேள்விக்கு உட்படுத்தும் அதிகாரம் யாருக்கும் வழங்கப் படவில்லை” என்றார் வெள்ளிகொண்டார்.

“அறிவாலும் குணத்தாலும் எடுக்கவேண்டிய முடிவை, விதிகளாலும் கட்டளைகளாலும் எடுக்க முடியாது. மனிதன் எடுக்கவேண்டிய முடிவைச்  சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம்.”

அவ்வளவு நேரமும் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த முசுகுந்தர், சற்றே ஆவேசத்தோடு தலையிட்டார், “கட்டளைகளால் கட்டியெழுப்பப்படுவதுதான் அரசாட்சி. அதன்  உறுப்புகள்  அனைத்தும் உத்தரவுகளால் மட்டுமே இயங்க வேண்டும். முடிவெடுக்கும் அதிகாரத்தை இழப்பதன் மூலமே எல்லோருக்குமான சிறந்த முடிவு கிடைக்கிறது. எல்லோர் கைகளிலும் அதிகாரம் இருந்தால் எல்லாம் அழியும்.”

“மனிதனைவிட உயர்ந்த இடத்தை விதிகளுக்கு எப்படித் தர முடியும்?” என்று சொன்ன அல்லங்கீரன் சற்றே மூச்சுவாங்கிவிட்டுச் சொன்னார் “உங்களைப்போல உயரத்தில் இருக்கும் மனிதர்களுக்கு அதுதான் வசதியாக இருக்கிறது. ஏனென்றால், உங்களின் கையில்தான் சட்டவிதிகள் இருக்கின்றன. அவற்றுக்குத்தான் கண், காது என எதுவும் இல்லையே. கையில் எடுப்பவனுக்குத் தகுந்த கையுறைகள்தானே சட்டவிதிகள்.”
`கிழவனை இன்னும் பேசவிடக் கூடாது' என முசுகுந்தனுக்குத் தோன்றியது.

“இந்த மாநகரம் சட்டவிதிகளால் பதப்படுத்தப் பட்டது. அதன் பக்குவத்தைக் குலைக்க நினைப்பதை அனுமதிக்க முடியாது.”

``முளைத்தது விளையும்... விளைந்தது கனியும். அதற்கு எதிராக எதுவொன்றையும் பக்குவப் படுத்தி விளையவைக்கவும் முடியாது; பதப்படுத்தி கனியவைக்கவும் முடியாது. அதுதான் இயற்கை.”

“இயற்கையை ஆள்வதற்காகத்தான் வெல்ல முயல்கிறோம். வெல்வதற்காகத்தான் அழிக்க முயல்கிறோம். அந்த அழிவுதான் அரசாட்சியின் சாட்சி” குரல் கணீரென எதிரொலிக்க, இருக்கையிலிருந்து எழுந்தார் முசுகுந்தர்.

அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்பது அல்லங்கீரனுக்கு நன்கு தெரியும். அதனால் சற்றே முந்திக்கொண்டு சொன்னார், “மதமற்ற யானையை நான் கொன்றேன். மேல் தூக்காத அதன் வாலைக் கவனிக்காது பெரும் தவறிழைத்தவன் நான்தான். எனக்கான தண்டனையையும் சேர்த்துச் சொல்லிவிடுங்கள்.”

“நீதான் விதிகளின்படி முடிவைச் சிறப்பாக நிறைவேற்றியவன். தனித்து வந்த யானையை கண நேரத்தில் வீழ்த்தினாய். மணநாளில் மாமன்னர் சிறந்தோருக்கு வழங்கவிருக்கும் பொற்றாமரைப் பூவை உனக்கும் வழங்க ஏற்பாடு செய்கிறேன்.” 

“தவறுகளைச் ‘சிறப்பு’ என்று நீங்கள் பாராட்டுவதன் காரணம், சிறப்பானவற்றைத் தவறானதாக மாற்றிவைத்திருக்கும் உங்களின் அதிகாரம்தான்.”

திசைவேழர் பாண்டரங்கத்துக்குள் நுழைந்தார். மாணவர்கள் பின்தொடர்ந்தனர். இதுவரை பார்த்த இரு பள்ளியறையை இணைத்தாலும் இதன் அகலம் வராது. பார்வையின் எல்லை மேற்கூரையைத் தொடும்போது மனம் விரிந்து அடங்கும். ஆனால், ஆசானுக்கு அப்படி இருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும்.

உள்ளே நுழைந்ததும் அனைவரின் முகத்திலும் ஏற்பட்ட வியப்பு அளவு கடந்ததாக இருந்தது. ஆனால், அந்துவனின் முகம் எதையும் காட்டிக்கொள்ளாமல் மிக அமைதியாக இருந்தது. ‘இவ்வளவு பெரிய மேற்கூரையில் எல்லாமே மிக நுணுக்கமாக வரையப்பட்டுள்ளன. வானியல் வரையப்பட்டதில் மிகப்பெரிய மேற்கூரை இதுதான். இதைச் சரியாக வரையத்தான் மாதக்கணக்கில் பணி செய்தேன். இதைப் பார்த்து ஆசிரியன் சொல்லப்போகும் அந்தப் பாராட்டுச் சொல் போதும் வாழ்வுக்கு’ என்று காத்திருந்தான் அந்துவன்.

திசைவேழர் மண்டபத்தின் நடுவில் கோல் பிடித்து நின்று, மெள்ள தலையைத் தூக்கினார். அவர் கண்விழித்துப் பார்க்கும் அந்த முதற்கணம் அவர் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியைப் பார்க்க ஆவலோடு இருந்தான் அந்துவன். அவர் தலையைப் பின்புறம் கவிழ்ந்து கண்விழிக்கப்போகும் நிலையில் அந்துவனுக்குச் சட்டென நினைவுக்கு வந்தது தேவாங்கு இருக்கும் மரக்கூண்டு. ‘இளமருதன் இங்குதானே வைத்திருந்தான்.
எடுத்துவிட்டானா அல்லது இன்னும் இங்குதான் இருக்கின்றனவா?’ என்று சுற்றியிருக்கும் மேடைகளைப் பார்த்தான். அவன் இருக்கும் இடத்திலிருந்து ஒரு பாதி மேடைகள்தான் தெரிந்தன. பெருந்தூண்கள், மேடைகளை மறைத்து நின்றன. இரண்டு அடிகள் முன்னும் பின்னுமாகப் போய், கண்களை ஓடவிட்டான். இடப்புறம் இறுதித்தூணுக்குப் பின்புறம் ஒரு மரக்கூண்டு இருப்பதன் சிறு பகுதி தெரிந்தது.

கூண்டுக்குள் இருக்கும் அந்த விலங்கைப் பார்த்தால், ஆசான் என்ன சொல்வாரோ என்று எண்ணிய கணத்தில்தான் அவர், வரையப்பட்ட  மேற்கூரையை நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது. சட்டென அவரை நோக்கித் திரும்பினான். அவர்  மேற்கூரையைப் பார்த்து முடித்துவிட்டு தலையை முன்சாய்த்தார்.

‘அவரின் முகக்குறிப்பைப் பார்க்க முடியவில்லையே, என்ன சொல்லப்போகிறாரோ!' என்று பதற்றம் கூடியது. அவர் குறித்துக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. குதிரையின் தலைபோல் இருக்கும் ஆறு புரவிகளும் (அசுவினி) இடப்புறம் இருந்தன.  குமிழ்போல் மூன்று புள்ளிகளாக இருக்கும் அடுப்பு (பரணி) அதன் நேர்மேலே இருந்தது. பொற்கால் கட்டில்போல் இருக்கும் கணை (பூரம்) சற்றே கீழிறங்கி இருந்தது. ஒவ்வொரு விண்மீன் கூட்டமும் நினைவுக்கு வந்தது. மனக்கண்ணில் எல்லாவற்றையும் நினைத்து மீண்டும் மேலே பார்த்தான் எல்லாம் சரியாகத்தான் வரையப்பட்டிருந்தன. ஆனால், ஆசான் இன்னும் வாய் திறக்கவில்லை.
அமைதி எல்லோரையும் பீடித்தது. மெல்லிய செருமல் வந்தது. என்ன சொல்லப்போகிறார் என்ற ஆர்வத்தோடு இருந்தனர்.

“இந்த வானியல் அமைப்பு எதைக் குறிக்கிறது?”

குரல் இறுக்கமாக இருந்ததை ஒருசிலர் மட்டும் உணர்ந்தனர்.  வினாவுக்கான  விடை யாரிடமும் இல்லை. மற்றவர்கள் அந்துவனையே பார்த்தார்கள். தயங்கியபடி அந்துவன் சொன்னான்  “பேரரசரின் பிறந்தநாள் அமைப்பு இதுவன்று. பேரரசியாரின் பிறந்தநாள் அமைப்பும் இதுவன்று. வேறு யாருடையது என்று என்னால் உய்த்தறிய முடியவில்லை ஆசானே.”

“மனிதனுக்குரிய நாளை நினைவுபடுத்துவது மட்டுமா வானியலின் வேலை? அது இயற்கையின் காலமானி அல்லவா?”

அவரின் சொல், புதிய திறப்பை உருவாக்கியது. வியப்போடு தலைநிமிர்ந்து மேலே பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை.

ஆசானின் குரல் கணீரென ஒலித்தது. “இது மேற்கு மலையில் பெருமழை பெய்து வைகையில் வெள்ளம் பெருகும் கோள்நிலை. பாண்டரங்கத்தில் ஆடலும் பாடலும் செழிக்க, பாண்டியநாட்டில் உழவும் வணிகமும் தழைக்க இந்தக் கோள்நிலையே அடிப்படை. இது பிறந்த காலத்தைக் குறிப்பதன்று, இந்தப் பேரரசின் சிறந்த காலத்தைக் குறிப்பது.”

வாயடைத்துப்போனார்கள் அனைவரும். வானியல் பேராசானின் அறிவுகண்டு மெய்ம்மறந்து நின்றபோது, அவரின் குரல் அதைவிட கனத்து ஒலித்தது,  “இதில் நீ செய்த பிழை என்ன தெரியுமா?”

அடித்தொண்டையிலிருந்து வந்தது கேள்வி. அந்துவனின் உடல் உதறியது. அவன் நிமிர்ந்து பார்த்தான். மேற்கூரையைக் கண்கள் சுற்றின, தலையும் சுற்றியது.

ஆசானின் குரல் வெளிவந்தது. “வெள்ளி வெறும் கோளன்று... மழைக்கான கோள். ஆனால், அது தெற்கே விலகி இருப்பது மழையின்மைக்கு அறிகுறி. நீ எங்கே வரைந்து வைத்திருக்கிறாய் பார்.”

அந்துவன் திரும்பி மேற்கூரையைப் பார்த்தான். வெள்ளி தெற்கே விலகி இருந்ததைப் பார்த்த கணத்தில் உச்சந்தலையைத் தாக்கியது ஆசானின் ஊன்றுகோல். துவண்டு விழுந்தான் அந்துவன்.

“பாண்டரங்கத்தைப் பாழுமரங்காக்கப் பார்த்தாயா?”

குரல் கேட்டு நடுங்கினான் அந்துவன். “மன்னியுங்கள் ஆசானே, என்னை மன்னியுங்கள். உடனடியாகச் சரிப்படுத்துகிறேன். பொறுத்தருளுங்கள்.”

அந்துவனைவிட அதிக நடுக்கம் இருந்தது ஆசானின் கைகளில்தான். “காலத்தைக் கணித்தல் எளிதன்று; கணநேரத்தில் எல்லாம் மாறிவிடும்.

நீ என் தலைமாணவன் என்பதால்தான் உன்னை அரண்மனைக்கு அனுப்பினேன்.”

அந்துவன் பாய்ந்துவந்து காலைப் பிடித்தான். அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்பதை அவனால் உய்த்தறிய முடிந்தது. “ஒரு வாய்ப்பு கொடுங்கள் ஆசானே, மறுபடியும் பொருத்தமாக வரைந்து காட்டுகிறேன்.”

அந்துவனின் கதறல் ஓசை கேட்டுக்கொண்டே இருக்க, திசைவேழர் பாண்டரங்கத்தைவிட்டு வெளியேறினார்.

கோட்டையின் வெளிப்புறம் இருக்கும் காட்டரண் அது. அங்குதான் யானைகளுக்கான வட்டரங்கு இருக்கிறது. முசுகுந்தரின் தீர்ப்பை நிறைவேற்ற எல்லோரும் வந்திருந்தனர்.

முதலில் பாகன் அரங்குக்குள் அனுப்பப் பட்டான். இன்னும் சிறிது நேரத்தில் யானை உள்ளே நுழையும்.

சுழல் அரங்கில் யானையிடம் தப்பி பாகன் ஓடவேண்டும். அவன் ஓடித் தப்பித்தால் குற்ற மற்றவன். மிதிபட்டுச் செத்தால் பாவமற்றவன். இதுதான் போட்டியின் விதி.

போட்டி தொடங்க இன்னும் நேரமிருந்தது. அதேசமயம், முடிவு எல்லோருக்கும் தெரிந்தேயிருந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 11:55 pm

பாண்டரங்கத்தின் மேற்கூரையில் புதிதாக ஓவியம் வரையும் பணி தொடங்கியிருந்தது. ஆசான் சொன்ன பிழையை மட்டும் திருத்தலாம் என்று ஓவியர்கள் சொன்னார்கள். ஆனால், அந்துவன் அதை ஏற்கவில்லை. “தெற்கே விலகியிருக்கும் வெள்ளியைப் பொருத்தமான இடத்தில் வரையலாம். ஆனால், உறுதியாக அது நிற வேறுபாட்டை வெளிப்படுத்தும். ஏற்கெனவே, வரையப்பட்ட ஓவியத்தின் வண்ணத்திலிருந்து புதிதாக வரையப்பட்ட பகுதி வேறுபட்டே தெரியும். இன்னொரு முறை ஆசானின் கோபத்துக்கு ஆளாக விரும்பவில்லை. எனவே, மேற்கூரையில் வரையப்பட்ட முழு ஓவியத்தையும் கருநீல வண்ணம் பூசி மறைக்கச் சொன்னான்.

அதன் மீது நாள்மீன்களையும் கோள்மீன்களையும் புதிதாக வரைந்துவிடலாம் எனச் சொல்லிவிட்டான். ஓவியர்கள், அந்துவன் சொன்னபடி பணியைத் தொடங்கினர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P89a
செவியன் மூலம் செய்தியைக் கேள்விப்பட்ட இளமருதன், சற்றே நடுங்கிப்போய் இருந்தான். ஆசான் வரும்போது தேவாங்கின் கூட்டை எடுத்து வேறு அறையில் வைத்துவிட வேண்டும் என்று அன்றே அந்துவன் சொல்லியிருந்தான். ஆனால், கடைசி நேரத்தில் எல்லோருக்கும் அது மறந்துவிட்டது. `பிரச்னைக்கு ஏதோ ஒருவகையில் தானும் காரணமாகிவிட்டோமோ!' என்று அஞ்சியபடி தேவாங்கின் கூட்டை வேறு இடம் மாற்றிவிடலாம் என முடிவுசெய்தான் இளமருதன். ஓவியர்கள் எல்லோரும் உணவருந்தப் போன நேரம் பார்த்து பாண்டரங்கத்துக்குள் நுழைந்தான்.

இடப்புறம் கடைசித் தூணுக்குப் பின்னால் இருந்த கூண்டை நோக்கிப் போனான். யாரோ ஒருவன் அதன் அருகில் உட்கார்ந்திருந்தான். அருகில் போன பிறகுதான் அவன் அந்துவன் என்பது தெரிந்தது.

“தவறிழைத்துவிட்டேன் மன்னியுங்கள்” என்றான் இளமருதன்.

“நீ ஏன் மன்னிப்புக்கோருகிறாய்? நீயா வெள்ளியைத் தென்புறம் நகர்த்தியது?” என்று கேட்டான் அந்துவன்.

இளமருதனுக்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியவில்லை.

சற்று அமைதியாக இருந்துவிட்டு, “நான் இந்தக் கூண்டை இங்கிருந்து எடுத்துக்கொண்டு போய்விடுகிறேன்” என்று சொல்லி, தேவாங்கின் கூண்டை எடுக்க முற்பட்டான்.

“வேண்டாம்'' என்று தடுத்த அந்துவன் சொன்னான், “மேற்கூரையில் ஓவியப்பணி முழுமையாக முடியும் வரை நான் இந்த அரங்கத்தைவிட்டு வெளியேறப்போவதில்லை. இந்த அரங்கத்துக்குள்தான் நாள்கணக்கில் இருக்கப்போகிறேன். எவ்வளவு நேரம்தான் அண்ணாந்து மேற்கூரையையே பார்த்துக்கொண்டிருக்க முடியும்? அவ்வப்போது குனிந்து கூண்டுக்குள் இவற்றின் விளையாட்டைப் பார்த்து மகிழ்வதுதான் என் ஒரே பொழுதுபோக்கு. எனவே, நான் இங்கு இருக்கும் வரை இவையும் இருக்கட்டும். பணிகள் முடிந்ததும் சொல்கிறேன். அதன் பிறகு, நீ வந்து எடுத்துச் செல்” என்று சொல்லி இளமருதனை அனுப்பிவைத்தான்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P89இளமருதனால் மறுப்புச் சொல்ல முடியவில்லை. ‘சரி’ எனத் தலையாட்டியபடி வெளியேறினான்.

அந்துவன் இலந்தைப்பழங்களை உள்ளே உருட்டிவிட்டபடி கூண்டையே பார்த்துக்கொண்டிருந்தான். தேவாங்குகள் இரண்டும் தலையை மெள்ள நீட்டி பழத்தை நோக்கி வந்தன.

அரண்மனையின் வளாகத்தில் மிகப் பழைமையான மாளிகை ஒன்று உண்டு. அதன் பெயர் `பாசிலை அரங்கு'. பச்சைநிற மணிக்கற்கள் பதிக்கப்பட்ட அரங்கு. எந்த ஒரு நற்செயலையும் பாண்டியர்குடி அங்குதான் தொடங்கும். இந்தத் திருமணத்தின் முதல் நிகழ்வும் அங்குதான் தொடங்கவிருந்தது.

அரச குடும்பத்தினர் மட்டுமே இந்தக் கூடுகையில் பங்கெடுத்தனர். வேறு எவருக்கும் அனுமதியில்லை. குடும்பத்தினர் அல்லாத ஒரே ஒருவர் திசைவேழர் மட்டுமே. காலம் குறித்த அச்சம் எல்லோருக்கும் எப்போதும் இருக்கத்தானே செய்கிறது. காலத்தை அறிந்தவனுக்கு அதிகாரத்தின் எல்லா கதவுகளும் திறக்கத்தானே செய்கின்றன.

அரச குடும்பத்துப் பெண்களும் ஆண்களும் பேரலங்காரத்துடன் அரங்கை நிறைத்திருந்தனர். வணிகக் குடும்பத்தினரின் அணிகலன்கள் மேலேறி மின்னிக்கொண்டிருந்தன. ஒருவரைப் பார்த்து ஒருவர் வியப்புற்றபோது, மாமன்னர் குலசேகர பாண்டியனும் சூல்கடல் முதுவனும் இணைந்து அரங்குக்குள் நுழைந்தனர்.

இருவருக்கும் வயது ஐம்பதைக் கடந்திருக்கும். நெடு உயரமும் உடல் வலிமையும் தோளில் புரளும் வெண்முடியும் இருவருக்கும் ஒரே மாதிரி இருந்தாலும், முக அமைப்பு இருவேறு உலகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெளிவாகச் சொன்னது. ஆழ்கடலின் உப்பங்காற்று காலம் முழுவதும் படிந்ததன் அடையாளத்தோடு இருந்தது சூல்கடல் முதுவனின் முகம். இளம்வயதில் செங்கணூர் முற்றுகையின்போது வெட்டப்பட்ட கீழ் உதட்டின் தழும்புகள் இன்று வரை மறையவில்லை குலசேகர பாண்டியனுக்கு. இருவரும் முழுநிலை அலங்காரத்துடன் அரங்கினுள் நுழைந்தனர். மனம் குவிந்து, உடல் விழுந்து, வணங்கி எழுந்தனர் அனைவரும். சமமான உயரத்தில் இருவிதமான அடையாளங் களுடனான இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்.

மணமகன் பொதியவெற்பன் வந்து, தந்தையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். எல்லோரும் மணமகளுக்காகக் காத்திருந்தனர். சூல்கடல் முதுவனின் கண்களில் ஒரு செருக்கு மேலேறியது. உள்நுழையும் தன் மகளின் பேரழகு கணநேரத்தில் இந்த அவையைச் சுழற்றிவிடும் என்பது அவருக்குத் தெரியும். அவள் வரும் திசையைப் பார்த்திருந்தனர்.

தோழிகள் சூழ, பொற்சுவை உள்நுழைந்தாள். ஒன்பதுவிதமான மணிகளை வரிசையாகப் பொருத்தி, ஒற்றைக்கொடிபோல உச்சந் தலையிலிருந்து முன்சரிந்திருந்தது தலைப்பாளை. நீலநிறக் கச்சை அணிந்திருந்ததால், இப்படி ஒரு வண்ணத்தில் மெல்லிய துணியை இதுவரை யாரும் கண்டதில்லை. காலடியில், ஒளி பட்டு மின்னும் பொற்சலங்கையிலிருந்து கசியும் வண்ணம்போல் இருந்தது செவ்வண்ணப்பூச்சு. கண்டவர் கருவிழிகள் நகர முடியாமல் நின்றன. பொற்சுவை மட்டும் நகர்ந்து கொண்டிருந்தாள். அவள் சற்றே தலை தாழ்த்தித்தான் நடந்து வந்தாள். அலங்காரங்களைக் கடந்து அவளது ஆழ்மனதைப் பார்க்கக்கூடியவர் எவரும் இல்லை அந்த அவையில்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P89b
தந்தையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் அதிக ஆபரணங்கள் அணியவில்லை. ஆனால், அணிந்திருந்த எந்த ஒன்றையும் இதற்கு முன் எவரும் பார்த்ததில்லை. பாண்டியன்மாதேவியின் தோழிகள் பேசிக்கொண்டார்கள், “பெரும்வணிகன் மகள். ஆனால், அவள் கழுத்தில் ஒற்றை அணி மாலையே அணிந்திருக்கிறாள். அதிலும் ஒற்றை முத்து மட்டுமே இருக்கிறதே ஏன்?”

``இடம்புரி சங்கு ஆயிரம் சூழ்ந்தது வலம்புரி சங்கு. வலம்புரி சங்கு, ஆயிரத்தில் ஒன்றுதான் வளைநிலை வடிவில் இருக்கும். அதுகொண்டுதான் அணிசெய்ய முடியுமாம். அந்தச் சிறப்புகொண்ட வலம்புரி சங்கு, இதுவரை இரண்டு மட்டும்தான் எடுக்கப்பட்டுள்ளனவாம். அதில் ஒன்று, யவன அரசியாரின் தலைமுடியில் இருக்கிறதாம். இன்னொன்று, பொற்சுவையின் கழுத்தில் இருக்கிறதாம்” அவளின் மறுமொழி காதோடுக் காதாகச் சுற்றிவந்தது. அதன் பிறகு, அரங்கு பேச்சற்றுப்போனது.

பாண்டியர்குல முதியவள், மின்னும் வெண்தட்டை எடுத்துவந்து பேரரசனிடம் கொடுத்தாள். அதில் மஞ்சள்கிழங்கு வட்டவடிவில் இருந்தது. நடுவில் வெற்றிலை வைக்கப்பட்டிருந்தது. குலசேகரபாண்டியன் அதைச் சூல்கடல் முதுவனிடம் வழங்கினான். அதைப் பெற்றுக்கொண்ட சூல்கடல் முதுவன், தங்களின் வழக்கப்படி பொன்நிறத் தட்டை வழங்கினான். அதிலும் மஞ்சள் சூழ நடுவில் வெற்றிலை இருந்தது. முன்னோர் மரபுப்படி இருவரும் வெற்றிலை மாற்றி மணமுடி வாக்களித்தனர். முறைப்படி மணவிழா இந்தக் கணத்திலிருந்து தொடங்குகிறது. இரண்டு மாதங்களில் ஆறு நிகழ்வுகளாக அது நிகழும். நிறைவாக, மணமாலை சூடலுடன் விழா நிறைவுறும்.

வீசிய ஈட்டி, கருங்கல்லில் பட்டுத் தெறித்தது. உதிரன் விடுவதாக இல்லை. பேரெலி, பாறை இடுக்குகளுக்குள் விரைந்து பதுங்கியது. கண்ணில் படாத வரைதான் அது தப்பித்து வாழும். கண்ணில் பட்டுவிட்டால், அது எந்தப் பாறைக்குள் நுழைந்து எவ்வளவு ஆழம் போனாலும் தப்ப முடியாது. அது உள்நுழைந்த கருங்கல்லை வீரர்கள் நால்வர் சேர்ந்து புரட்டிக்கொண்டிருந்தனர். அது தப்பி வெளியேறினால் குத்தித் தூக்க, உதிரனும் மற்றொரு வீரனும் தயாராக இருந்தனர்.
பாறைக்குச் சற்று மேலே இருந்தபடி பாரியும் கபிலரும் இதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். வீரர்கள் கரும்பாறையைப் புரட்டிக் கீழே தள்ளினர். உள்ளே எலியும் இல்லை; எந்தத் துளையும் இல்லை.  `அதற்குள் எங்கே போனது?' என அனைவரும் உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். ‘எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கையில் அது எப்படித் தப்பிப் போயிருக்க முடியும்?’ என்று எண்ணிக்கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராமல் வேறொரு திசையிலிருந்து குத்தித் தூக்கினான் உதிரன்.

அதன் கீச்சொலியோடு எல்லோரின் உற்சாக ஒலியும் கலந்தது. இந்தச் செயலைக் கண்டு தன்னையும் அறியாமல் சீழ்க்கை அடித்தான் பாரி.

பிடிபட்ட பேரெலியைச் சிறு கூடையில் போட்டுக்கொண்டு அடுத்த பாறையை நோக்கி நகர்ந்தனர். வழக்கம்போல் வீரர்கள் முன்னால் போக, பாரியும் கபிலரும் பின்னால் வந்துகொண்டிருந்தனர்.

பாறைகளுக்கு இடையில் இருக்கும் செடி கொடிகளைக் கிண்டியபடி வீரர்கள் நகர்ந்து கொண்டிருந்தனர். உதிரனின் கவனம் சற்றே சிதறத் தொடங்கியது. பாரியின் கண்கள் தன்னை ஊடுருவுவதை அவன் இரண்டு, மூன்று முறை கவனித்துவிட்டான். ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. பாரி உடன் வருவது கபிலருக்காக என்றுதான் உதிரனும் முதலில் நினைத்தான். ஆனால், இந்த இரண்டு நாள்களும் பாரியை உற்றுக்கவனித்ததிலிருந்து அவனுக்குச் சந்தேகம் வர ஆரம்பித்தது.

தனது திறனையும் திட்டமிடலையும் ஆராய்வதற் காகத்தான் இது நடந்துகொண்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது. நீலனுக்குப் பிறகு, கபிலருடன் இருக்கும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நான் அதற்குத் தகுதியானவன்தானா என்று கவனித்துக்கொண்டிருக்கிறாரா?

பாரியைப் பற்றி எண்ணற்றக் கதைகளைச் சிறு வயது முதல் கேள்விப்பட்டுள்ளான் உதிரன். `பாரியின் அறிவுநுட்பம் யாருக்கும் வாய்க்காது!' எனச் சொல்வார்கள். மற்ற வீரர்கள் எல்லோரும் பேரெலி வேட்டையைத் தான் பாரி பார்த்து க்கொண்டிருக்கிறான் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாரியின் கவனம் வேறொன்றாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று உதிரனுக்குத் தோன்றியது.

உதிரன் துல்லியமாகக் குத்தித் தூக்கியதை வியந்து பாராட்டியபடி வந்துகொண்டிருந்தார் கபிலர். பாரி மறுமொழி சொல்லாமல் நடந்து வந்தான்.

“அப்போது சீழ்க்கை அடித்துவிட்டு, இப்போது எதுவும் சொல்லாமல் வருகிறாய்?” எனக் கேட்டார் கபிலர்.

“நான் சீழ்க்கை அடித்தது உதிரனுக்காக அல்ல, பேரெலிக்காக.”

“என்ன சொல்கிறாய்?”

“தடித்த உடலைக்கொண்டதால் பேரெலியால் வேகமாக ஓடவோ, சிற்றிடுக்கு களுக்குள் நுழையவோ முடியாது. அப்படியிருந்தும் எத்தனையோ விலங்கு களிடமிருந்து அது தப்பி உயிர் வாழ்கிறது என்றால், அதன் தந்திரம்தான் காரணம். சமவெளியில் இருக்கும் நரியின் தந்திரத்தைவிட, மலைமுகட்டில் இருக்கும் பேரெலியின் தந்திரம் வியக்கக்கூடியது.”

“அப்படியென்ன அங்கே நிகழ்ந்தது? நீ எதைக் கண்டு சீழ்க்கை அடித்தாய்?”

“பாறையில் இருந்து வெளியேறி வந்த எலியும், உதிரன் குத்தித் தூக்கிய எலியும் வெவ்வேறு எலிகள். உள்ளிருந்து வந்தது வலப்புறம் ஓடிய வேகத்தில், அந்தச் சிறு புதருக்குள் இருந்த இன்னொன்று எதிர்பாராமல் வெளியேறியது. அதைத்தான் உதிரன் குத்தித் தூக்கினான். அவனது காலடியின் அருகில்தான், வெளியேறி வந்த எலி பதுங்கி இருந்தது.”

“நீ ஏன் அதைத் தெரிவிக்கவில்லை?”

“அது எனக்குத் தப்பித்தலைக் கற்றுக்கொடுக்கிறது. நான் எப்படி அதைக் காட்டிக்கொடுப்பேன்?”

எதிர்பாராத மறுமொழியாக மட்டுமல்ல, வேட்டையின் ஒழுங்குக்கு எதிரான மறுமொழியாகவும் இருப்பதாக, கபிலருக்குத் தோன்றியது.

“வேட்டைக்குப் பொருள் என்ன பாரி?”

“தாக்குதலும் தப்பித்தலும். நீங்கள் எந்தப் பக்கம் இருந்தும் இந்த விளையாட்டைப் பார்க்கலாம்.”

“நீ எந்தப் பக்கம் இருந்து இதைப் பார்த்தாய்?”

“வேட்டையை நான் எப்போதும் தப்பிச் செல்லும் விலங்கின் பக்கம் இருந்துதான் பார்ப்பேன். இந்த வேட்டையில் உதிரனின் விளையாட்டு வேறு மாதிரி இருக்கிறது. எனவே, நான் எந்தப் பக்கமும் சாராமல் இருக்கிறேன்.”

“ஏன் அப்படி?”

“உதிரனின் செய்கை அப்படி. அவன் வேண்டுமென்றே தப்பிக்க முடியாத பேரெலியாகப் பார்த்து வேட்டையாடுகிறான். அந்த எலிகொண்டு உங்களுக்கு ஆடை நெய்ய எண்ணுகிறான்.”

பாரி சொல்வதன் விளக்கம், கபிலருக்குப் புரியவில்லை.

“தப்பிக்க முடியாத பேரெலியைக்கொண்டு மட்டும் ஆடை நெய்வதன் பொருள் என்ன?”

“புரியவில்லையா? என்றென்றும் உங்களைப் பறம்பு நாட்டிலே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.”

சொல்லிவிட்டு, பாரி நடந்துகொண்டிருந்தான். கபிலர் அப்படியே நின்றுவிட்டார்.

ஒரு கணம் கழித்துக் கேட்டார், “நீங்கள் இருவரும் என்னைத்தான் வேட்டையாடிக்கொண்டிருக்கிறீர்களா?”

“நிச்சயம் இல்லை” என்று சொன்ன பாரி, சற்றே இடைவெளிவிட்டுச் சொன்னான் “பிடிபட்ட பிறகு எவராவது வேட்டையாடுவார்களா?”

பதில் கேட்டு அடங்காச் சிரிப்பை வெளிப்படுத்திய கபிலர் சொன்னார், “கூடு என்பது, பறவைக்கான தங்கும் இடம். வானம்தான் வாழ்விடம்.”

“உண்மைதான், ஒருநாள் உங்களின் வானமே நாங்களாக விரிந்திருப்போம்.”

பாரியின்  தோழமை  எல்லை கடந்து விரிந்துகொண்டிருந்தது. மலையின் கீழ்த்திசையில் ஊசிப்புகை மேலெழுந்து கொண்டிருந்தது. வேட்டையாடிக்கொண்டிருந்தவர்கள் பாறையின் இடப்புறம் இருந்ததால், அதைப் பார்க்கவில்லை. பாறையின் மேலே பாரி நின்றதால், அதைப் பார்த்தான்.

அந்தத் திசை நோக்கி அப்படியே நின்றான். அதைக் கவனித்தபடி கபிலரும் நின்றார். மிகத்தொலைவில் கீழ்க்காட்டின் நடுவில் இருந்து ஊசிபோல் மெல்லியப் புகை மேல் நோக்கி போய்க்கொண்டிருந்தது. காற்று வீசவில்லை என்பதால், புகை கலையாமல் உச்சிக்குப் போனது.

உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த பாரியைப் பார்த்துக் கபிலர் கேட்டார், “என்ன அது? காட்டின் ஊடேயிருந்து புகை வரக் காரணம் என்ன?”

“அங்குள்ளவருக்கு உதவி தேவைப்படுகிறது” என்று சொல்லிவிட்டு, இடப்புறம் திரும்பிப் பார்த்தான். பாறையின் இடப்புறம் பேரெலி வேட்டையில் உதிரன் குழு மிகவும் கவனமாக இருந்தது. பாறை மறைத்திருந்ததால் எழும் ஊசிப்புகையை அவர்கள் பார்க்கவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P89c
“காட்டுக்குள் இருக்கும் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், படர்ந்து கிடக்கும் சென்றிக்கொடியைப் பறித்துத் தீக்கற்களால் தீ மூட்டுவார்கள். அந்தக் கொடியில் தீப்பற்றி எரியாது; புகை மட்டுமே வரும். அவ்வாறு கசியும் புகை, கீழே படராது; அறுந்துவிடாமல் மேலெழும்பிக்கொண்டே இருக்கும். எங்கிருந்து பார்த்தாலும் உச்சிநோக்கி விடாமல் மேலெழும் ஊசிப்புகையைப் பார்த்துவிட முடியும். உடனே அவருக்கு உதவி செய்ய மக்கள் போய்விடுவார்கள்” என்றான் பாரி.
“அப்படியென்றால், அவர்களுக்கு உதவி செய்ய வீரர்களை அனுப்பாமலிருப்பது ஏன்?”

“தொலைவைக் கணக்கிட்டால், நாம் இருக்கும் இடத்தைவிட குறைவான தொலைவில் தென்திசையில் ஊர் ஒன்று உண்டு. அங்கிருந்து மக்கள் புறப்பட்டுப் போயிருப்பார்கள். இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.”
“எப்படி?'' எனக் கேட்டார் கபிலர்.

“அதோ பாருங்கள்” என அந்தத் திசையைச் சுட்டிக்காட்டினான் பாரி.

ஏற்கெனவே மேலெழுந்த ஊசிப்புகையின் அருகே இன்னோர் ஊசிப்புகை மேலெழுந்து கொண்டிருந்தது.

“மற்றொரு புகை மேலெழுந்தால், உதவிக்கு ஆள்கள் போய்விட்டார்கள். வேறு யாரும் வரவேண்டியதில்லை என்று பொருள்” என்றான் பாரி.

பாறைகளைச் சூழ்ந்தபடி பேரெலியை விரட்டிக்கொண்டு இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர் வீரர்கள். இன்று நான்கு பேரெலியையாவது பிடித்துவிட வேண்டும் என்று உதிரன் மிகத்தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
“காட்டுக்குள் பிறவற்றிலிருந்து தப்பித்தலைப் போல, பிறருக்குத் தன்னைக் காட்டிக்கொள்வதும் சம முக்கியத்துவம் உள்ள கலைதான். ஒவ்வோர் உயிரினமும் இந்த இரண்டு வித்தைகளையும் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. நாம் அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன” என்று பேசியபடி வீரர்களை நோக்கி பாரியும் கபிலரும் வந்துகொண்டிருந்தனர்.

பெரும்புதருக்குள்ளும் கரும்பாறை இடுக்குகளுக்குள்ளும் வீரர்கள் விடாமல் தேடினர். கண்களில் ஒன்றும் அகப்படவில்லை. உச்சிப்பொழுது கடந்துகொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரம்தான் வேட்டைக்குக் கிடைக்கும். அதன் பிறகு, இடுக்குகளில் மறைந்து வாழும் உயிரினங்களைக் கண்டறிவது இயலாத காரியம்.

கபிலர் நடப்பதற்கு ஏற்ப வழிகளைத் தேர்வுசெய்து அவரை அழைத்து வந்து கொண்டிருந்தான் பாரி. வீரர்கள் பாறை இடுக்குகளைக் கிளறிக்கொண்டிருக்க, உதிரன் மட்டும் தனியாகக் கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். சற்று தொலைவில் இருந்தே அதைக் கவனித்தான் பாரி. உதிரன் போய்க்கொண்டிருந்த திசையில் தனித்த மரம் ஒன்று இருந்தது. அதை நோக்கித்தான் அவன் போகிறான் என்பது தெரிந்தது.

தொலைவில் இருந்து பார்க்கையில் அது என்ன மரம் என்பது யாருக்கும் பிடிபடவில்லை. போய்க்கொண்டிருந்த உதிரன், மரத்தின் அருகில் போகாமல் சற்று தொலைவிலேயே நின்றுவிட்டான்.

அனைவரும் அவனை நோக்கி இறங்கி வந்தனர். பாரியின் கண்கள் அவற்றைக் கண்டறிந்தன. கபிலரிடம், “நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள்” என்று பாறை ஒன்றின் மேல் உட்காரவைத்துவிட்டு அந்த இடம் போனான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P89d
தொலைவிலேயே கபிலரை உட்கார வைத்துவிட்டு தனித்து வரும் பாரியைப் பார்த்த உதிரன், இது என்ன மரம் என்பதை அங்கிருந்தே பாரியின் கண்கள் கண்டறிந்துவிட்டன என்று தெரிந்துகொண்டான்.

உதிரன் இருக்கும் இடத்துக்கு எல்லோரும் வந்து சேர்ந்தனர். தனித்திருக்கும் அந்த மரத்தின் அடிவாரத்தில் அங்குமிங்குமாக வண்டுகள் செத்துக்கிடந்தன. எறும்புகளோ கறையான்களோ அவற்றை உண்ணவில்லை. அங்கு வந்து நின்ற எல்லோரின் கண்களும் கீழே கிடப்பனவற்றை உன்னிப்பாகப் பார்த்தன.

அது வண்டுகடி மரம். அந்த மரத்தின் இலைகளுக்குள் வண்டு பறந்தாலோ, கிளைகளின் மீது உட்கார்ந்தாலோ சிறிது நேரத்திலேயே மயங்கி கீழே விழுந்துவிடும். அதன் பிறகு, மயக்கம் தெளியாமலேயே இறந்துவிடும். இறந்ததை மொய்ப்பதற்குக்கூட எதுவும் அருகில் வராது. காட்டின் மிக அரிதான மரங்களில் வண்டுகடி மரமும் ஒன்று.

காட்டுக்குப் பழக்கப்படாத புதியவர்களின் மீது இதன் வாசனை பட்டாலே உடலெல்லாம் வீங்கிவிடும். மூக்கில் ஏற்படும் எரிச்சல் தாங்க முடியாது. அதனால்தான் கபிலரைத் தொலைவிலேயே உட்காரவைத்துவிட்டு வந்தான் பாரி. கபிலர் வந்ததிலிருந்து, ‘வண்டுகடி மரம் கண்ணில் படாதா?’ என்று பலமுறை எண்ணியுள்ளான். ஏனென்றால், வண்டுகடி மரத்தின் பட்டையை அறைத்துத் தேய்த்தால், காட்டுப்பூச்சிகள் எவையும் அண்டாது.

பறம்பிலேயே பிறந்து வாழ்பவர்களுக்கு இது தேவையில்லை. ஆனால், வெளியிலிருந்து வருபவர்களுக்கு, அதுவும் குறிப்பாக மழைக் காலத்தில் வந்து தங்குபவர்களுக்குப் பெரும்பாதுகாப்புக் கவசத்தை இதுவே அளிக்கும்.

அந்த மரப்பட்டையை உரிப்பது கடினமான பணி. அருகில் போய்ப் பிய்த்து எடுக்கவெல்லாம் முடியாது. அதன் வாசனை எந்த நேரமும் மயக்கத்தை உருவாக்கும். என்ன செய்யலாம் எனச் சிந்தித்தனர். உதிரன்தான் தனது ஈட்டியை மரத்தின் அடிவாரத்தை நோக்கி வீசி எறிந்தான். அது மரத்தின் தூர்ப் பகுதியின் விளிம்பில் குத்தி நின்றது. படுவேகமாக ஓடி, அதனருகே போன வேகத்தில் ஈட்டியின் முனையோடு பெரும் பட்டையைப் பிய்த்து எடுத்து எதிர்புறம் வெளியேறினான். முதன்முறையாக அவனது வேகம் பாரியைப் பொருள்படுத்திப் பார்க்கவைத்தது.

அன்றைய வேட்டையை அத்துடன் முடித்துப் புறப்பட்டனர். இன்று சிக்கியதென்னவோ ஒரு பேரெலிதான். ஆனால், பாரி அளவற்ற மகிழ்வில் இருந்தான்.

“என்னை ஏன் தனியே உட்காரவைத்துவிட்டுப் போனீர்கள்?” என்று கபிலர் கேட்டதற்கு, பாரி பதில் சொன்னான்.

அளவற்ற மகிழ்வோடு இருந்தது பாரியின் பதில்.

“பறம்பில் நீங்கள் இருக்கும் ஒவ்வொரு பொழுதும் என் மனம் பதற்றத்தில்தான் இருந்தது. அதுவும் கார்காலம் தொடங்கிய பிறகு, என் பதற்றம் அளவற்றதாகிவிட்டது.

எண்ணற்றப் பூச்சிகள், உயிரினங்கள் வாழும் இந்தக் காட்டில் கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகூட பெரும் நஞ்சை உட்செலுத்திவிடும். அதன் பிறகு, நஞ்சுமுறி கொடுக்கும் வரை உங்களின் உடல் அதைத் தாங்குமா என்பது தெரியாது. எனவே, என் பதற்றம் அதிகமாகிக் கொண்டேதான் இருந்தது. வண்டுகடி மரப்பட்டையை அறைத்து உடலெங்கும் தேய்த்து விட்டால், பிறகு எந்த ஒரு பூச்சியும் உங்களை அண்டாது. அதனால்தான் இந்த மரம் கண்ணில் படாதா என்று காத்திருந்தேன். உதிரன் கண்டறிந்து விட்டான்” எனச் சொல்லி, மகிழ்வோடு கபிலரை அழைத்துவந்தான் பாரி.

“நான் பறம்புக்கு வந்து இத்தனை நாள்களாகி விட்டன. இன்னும் என்னை ஆயத்தப்படுத்தும் வேலை முடியவில்லை போலும்?”

சிரித்துக்கொண்டே பாரி சொன்னான், “வந்து செல்பவர்களுக்கு இவ்வளவு தேவையில்லை. வந்தவர்களுக்கு மட்டும்தான் இவ்வளவும் தேவை.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P89e
மறுமொழிக்குள்ளிருக்கும் சூட்சுமம் கபிலருக்குப் புரிந்தது.

“வேட்டை இன்னும் முடியவில்லையா?” என்று கேட்ட கபிலர், “இந்த வேட்டையில் நீ எந்தப் பக்கமும் சாராமல் இருப்பதாகச் சொன்னாய். ஆனால், உன் மகிழ்வு வேட்டை யாடுபவனின் மனநிலையை நீ சார்ந்துவிட்டதைச் சொல்கிறது.”
“ஆம், அளவற்ற மகிழ்வின் மூலம் என்னை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன். அதன் மூலமே என் எண்ணத்தை வெளிப்படுத்தி விடுகிறேன் அல்லவா?”

பாரியின் ஒவ்வொரு சொல்லும் செயலும் கபிலரின் மீதான பேரன்பைக் கொட்டித்தீர்த்தன.

இருவரும் சிறிது நேரம் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், ஆழ்மன உரையாடல் நின்றபாடில்லை. மனதை இந்த எண்ணங்களிலிருந்து வேறொன்றுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கபிலருக்குத் தோன்றியது. அமைதியைக் கலைத்து பாரியிடம் கேட்டார், “அன்றொரு நாள் உன் முப்பாட்டன் ஒருவன் திரையர் பெண்ணை மணந்தான் என்று கூறினாய். அதைப் பற்றி பின்னர் பேசுவோம் என்றாயே, யார் அந்தத் திரையர்கள்?”

கபிலரின் கேள்வி, பாரிக்கு வியப்பை ஏற்படுத்தியது.

“நீங்கள் திரையர்களை அறிந்ததில்லையா?”

“இல்லை.”

“அவர்கள் குலம்தானே வெற்றிலையை முதன் முதலாகக் கண்டறிந்தது. இந்த மலைத்தொடரின் மாவீரர்கள் என்றால், அது அவர்கள்தானே!”

வெண்ணிறத் தட்டையும் பொன்னிறத் தட்டையும் மாற்றிக்கொண்ட குலசேகர பாண்டியனும் சூல்கடல் முதுவனும் மாற்றப்பட்ட தட்டுகளில் இருந்த வெற்றிலையை எடுத்து மெல்லத் தொடங்கினர். வெற்றிலையை மென்ற இருவர் நாவிலும் அதன் சாறு ஊறிப் பரவியது.

வெற்றிலையைக் கண்டறிந்த மாவீரர்களான திரையர்களின் கதை, பாரியின் நாவெங்கும் பொங்கி வெளிவந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 12:33 am

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P83b
“எட்டு முதல் பதினைந்து வயதுடைய பறம்பின் ஆண்மக்கள் அனைவரும் ‘காடறிய’ப் புறப்படுகின்றனர். மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கும் பயணம் அது. பயணத்தில் வழிகாட்டி அழைத்துச் செல்பவனே தேக்கன். ‘தேக்கன்’ என்பது பெயர் அன்று, காடு அறிந்த ஆசானை அழைக்கும் பட்டம். அவனை நம்பியே பிள்ளைகள் அனுப்பப்படுகின்றனர்.  
‘சாமப்பூ’ ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது. ஒவ்வொரு முறை அது பூக்கும்போதும் எட்டு வயதைக் கடந்த அனைத்து ஆண் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, காட்டுக்குள் நுழைவான் தேக்கன். பயிற்சி முடிந்து திரும்பிய  பின், அடுத்த முறை சாமப்பூ பூக்கும் வரை தேக்கன் ஊரில் இருப்பான். மறுமுறை பூ பூத்த பின் மீண்டும் புறப்படுவான். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P83a
பறம்பின் ஒவ்வோர் ஆணும் காடு பற்றிய எல்லா விதமான அறிவுகளையும் பெற்று, காட்டின் சவால்களை எதிர்கொள்ளும்  ஆற்றல் உடையவனாக மாறுவதுதான் காடு அறிதல். வெறுங்கையுடன் காட்டுக்குள் நுழையும் சிறுவர்கள்  பெரும் வனத்துக்குள் தன்னந்தனியாக முழுவாழ்வையும் வாழக் கற்றுக்கொள்கின்றனர்.

இந்தப் பயிற்சி எண்ணற்ற ஆபத்துகளை உடையது.   சிறுவர்கள் சிலர் இதில் இறக்கின்றனர். சிலருக்குக் கை கால்கள் சிதைகின்றன. சிலர் காட்டுக்குள் தொலைந்துவிடுகின்றனர்.  அவர்களுள் பலர் வீடு திரும்புவதே இல்லை. ஆண்டுகள் பல கழிந்த பின்னர், சிலர் வீடு திரும்பியுள்ளனர்.

காடு அறிய அழைத்துச்செல்லப்படும் சிறுவர்கள் கடும் சவால்களைத் தொடர்ந்து  எதிர்கொள்ள நேரும். இயற்கை ஒவ்வொரு கணமும் சவால்களை உருவாக்கியபடியேதான் இருக்கும்; ஆனால், அவை எல்லாம் தேக்கனின் கணக்குக்குள் வராது. ஒவ்வொரு நாளும் தேக்கன் உருவாக்கும் சவால்கள் தனி ரகம். அவற்றை மாணவர்கள்  எதிர்கொண்டு மீடேற வேண்டும். இவ்வாறு முன்பொரு முறை தேக்கன் அழைத்துச்சென்ற குழுவில் என் முன்னோன் சூலிவேளும் இடம்பெற்றிருந்தான்” என்றான் பாரி.

அவன் சொல்லும் கதையை மிகவும் கவனத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர்.

“அது கார்காலம். மழை விடாது கொட்டித் தீர்த்தது. தேக்கனும் மாணவர்களும் சிறு குகை ஒன்றில் ஒண்டியபடி இருந்தனர். நாள் முழுவதும் மழை நின்றபாடில்லை. மாணவர்களுக்குக் கடும் பசி. ஆனால், தேக்கன் உணவுக்கான உத்தரவைக் கொடுக்கவில்லை. அவர் உத்தரவு கொடுத்த பின்தான் நெருப்பை மூட்டி கைவசம் இருக்கும் கிழங்குகளைச் சுட்டுச் சாப்பிட வேண்டும். மழையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான் தேக்கன். பொறுத்துப் பார்த்த மாணவர்கள் ஒருகட்டத்தில் பொறுமை இழந்து வாய்விட்டுக் கேட்டனர். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P83c
``சரி, சுட்டுச் சாப்பிடுங்கள்” என்றான் தேக்கன். மாணவர்கள் மகிழ்ந்தனர்.  முந்தைய நாள் காலை உணவுக்குப் பின் யாரையும் சிறுபழம்கூடச் சாப்பிட அனுமதிக்கவில்லை. இப்போது அனுமதி கொடுத்தவுடன் வேலைகளை வேகமாகத் தொடங்கினர். குகைக்குள் இருந்த இடுக்கில் இரண்டு கட்டைகள் கிடந்தன. அவற்றைப் பயன்படுத்தி கிழங்கைச் சுட்டுவிடலாம் என்று முடிவுசெய்தனர்.

குகைக்கு வெளியே மழை கொட்டியது. கைவசம் இருக்கும் தீக்கல்லை வைத்து மாணவன் ஒருவன் தீ மூட்ட முனைந்தபோது தேக்கன் குகையை விட்டு வெளியேறினான்.

மழையில் நனைந்தபடி தேக்கன் வெளியேறியதன் காரணத்தை அறியாமல் மாணவர்கள் விழித்தனர். “அவர் நனைந்தபடி வெளியில் நின்று கொண்டிருக்கிறார். நாம் சாப்பிடப்போவது அவருக்குப் பிடிக்கவில்லையா? அவரிடம் கேட்டுத்தானே நாம் அனல் மூட்ட முயல்கிறோம்” என்று புலம்பியபடி இருந்தனர். பசி அதிகமாகிக்கொண்டே இருந்தது. ‘சாப்பிட்ட பின் என்னவென்று கேட்டுக்கொள்வோம்’ என நினைத்த ஒருவன், அனல் மூட்ட முயன்றான். அப்போது சூலிவேள் அவனைத் தடுத்தான்.

‘மாணவர்களில் மிகத் திறன்வாய்ந்தவன்’ என தேக்கன் கருதுவது சூலிவேளைத்தான். “அவரிடமே காரணம் கேட்போம்” என்றான் சூலிவேள்.
 
“சரி” என்றார்கள் மாணவர்கள்.

“நாங்கள் நெருப்பு மூட்டும்போது நீங்கள் ஏன் வெளியில் சென்றீர்கள்?” எனச் சத்தமாகக் கேட்டான் சூலிவேள்.

“உங்களை எப்போது சாப்பிடச் சொல்ல வேண்டும் என எனக்குத் தெரியாதா?”

“பசி தாங்காமல்தான் கேட்டோம்.”

“அப்படி என்றால் சுட்டுச் சாப்பிடுங்கள்.”

“நீங்கள் ஏன் வெளியில் போய் மழையில் நிற்கிறீர்கள்?”

“இரண்டு ஆண்டுகள் முடியப் போகின்றன. இன்னும் உங்களால் இதைக் கண்டறிய முடியவில்லையா?”

மாணவர்கள் எல்லோருக்கும் அப்போதுதான் இதில் ஏதோ சிக்கல் இருப்பது புரிந்தது.

என்னவாக இருக்கும் எனச் சிந்தித்தார்கள். ஒன்றும் புரிபடவில்லை. சிறிது நேரத்துக்குப் பின் சூலிவேள்தான் கண்டறிந்தான். தாங்கள் தீமுட்ட முயன்ற கட்டை தில்லைமரத்தினுடையது. “தில்லைமரக் கட்டையின்  புகை கண்ணிற்பட்டால் பார்வையை இழக்க நேரிடும். அதனால்தான் தேக்கன் உடனடியாக வெளியேறி யிருக்கிறார்” என்றான் சூலிவேள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P83d
மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேக்கனிடம் மன்னிப்புக் கோரினர்.  

“பசி கண்ணை மறைக்கலாம். ஆனால், கண்ணைக் கெடுத்துவிடக் கூடாது” என்றான் தேக்கன்.

பொறுத்திருந்தனர். சிறிது நேரத்தில் மழை நின்றது. குகைவிட்டு மாணவர்கள் வெளிவந்தனர். பக்கத்துக் குகையிலோ, பாறை இடுக்குகளிலோ காய்ந்த கட்டை இருக்கிறதா எனத் தேடப் போனார்கள். ஆனால், தேக்கன் ``வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டான்.

இப்போது இதற்கான காரணம் தெரியாமல் விழித்தார்கள்.

``குகைக்கு வெளியில் வைத்து தில்லைமரக்கட்டையைக் கொண்டே தீ மூட்டுங்கள். புகை கண்ணிற்படாமல் கிழங்கைச் சுட்டெடுங்கள். இதுவும் தேவைப்படும் ஒரு பயிற்சிதான்’’ என்றார்.

இருந்த பசி எங்கு போனது என்றே தெரியவில்லை. யாரும் தீ மூட்ட ஆயத்தமாகவில்லை. எல்லோரும் அப்படியே நின்றுகொண்டிருந்தனர்.

சூலிவேளை அழைத்தார் தேக்கன். ஒருவேளை யார் கண்ணையாவது புகை தாக்கிவிட்டால், உடனடியாகச் செய்ய வேண்டிய மாற்று என்ன என்பதை அவனிடம் சொன்னார். அதன் பிறகு, மாணவர்கள் துணிந்து
தீ மூட்டத்  தொடங்கினர்.

நன்றாக முகம் விலக்கி, அனற்கல்லை உரசிப் பற்றவைத்தான் ஒருவன். தில்லைமரக்கட்டையில் தீப்பிடித்தது. புகை தாக்கிவிடக் கூடாது என்ற மிகுந்த எச்சரிக்கையோடு கிழங்கைச் சுட்டனர். குகைவாசலில் உட்கார்ந்தபடி மாணவர்கள் கிழங்கு சுடுவதைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் தேக்கன். புகை மேல்நோக்கி எழுந்தபடியே இருந்தது. சிலர் கிழங்கைக் கருகவிட்டனர்.

சிலர் கிழங்கை நெருப்பின் அருகே கொண்டுபோகவே பெரும்பாடுபட்டனர். அணைவதற்கும் அகல்வதற்குமான  தொலைவை யாராலும் மதிப்பிட முடியவில்லை. புகையைக் கண்டு அஞ்சியவர்கள் கூடுதலாக விலகினர். மற்றவர்கள் விலகவேண்டிய அளவை எழும் புகை முடிவுசெய்தது. அனைத்தையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த தேக்கன் மனதில், ‘இவர்கள் யாருடைய கண்ணிலாவது புகைபட்டுவிட்டால் சூலிவேள் உடனடியாகச் செய்ய வேண்டிய மாற்றைச் செய்கிறானா என்று பார்த்துவிடலாம்’ என எண்ணிக் கொண்டிருந்தார்.

மாணவர்கள் காற்றின் சிறிய அசைவுக்குக்கூட உடல்விலக்கி மிகக் கவனமாகக் கிழங்கைச் சுட்டுக் கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ பெருங்காற்று வீசியது. சட்டென மாணவர்கள் கண்களை மூடி தரையோடு தரையாகப் படுத்துவிட்டார்கள்.
அடித்த காற்று, புகையைக் கொண்டுபோய் குகையோடு சேர்த்து தேக்கன் மீது அப்பியது. கண்களை மூடிய கணத்தில் தேக்கன் உணர்ந்து விட்டான், புகை இமைகளுக்குள் சூழ்ந்துவிட்டது என்று.

“சூலிவேள் உடனடியாக என்னை தூக்கிச் செல்” என்றான்.

தேக்கனைத் தோளில் தூக்கியபடி மலைச்சரிவில் இருக்கும்  ஆற்றை நோக்கி இறங்கினான் சூலிவேள். மற்றவர்கள் பின்தொடர முடியாதபடி இருந்தது அவனது வேகம். மழை மீண்டும் பெய்யத்தொடங்கியது. சரிந்து விழுந்துவிடாமல் கவனமாக நடக்க வேண்டும் என்பது எல்லாம் சூலிவேளுக்குப் புலப்படவில்லை. அவனது தோள்களின் பலமும் காலடியின் பிடிமானமும் அபார மானவை.  நெடிதுயர்ந்த தேக்கனைத் தூக்கிக்கொண்டு விரைந்து இறங்கினான் சூலிவேள்.

ஆற்றங்கரையை அடைந்ததும் தேக்கனைப் படுக்கவைத்துவிட்டு உள்ளே குதித்தான். தேக்கன்  சொல்லியிருந்தபடி ஆற்றில் முங்கி அதன் ஆதிக்களியை  அள்ளி வந்தான். தேக்கனைச் சுற்றி மாணவர்கள் உட்கார்ந் திருந்தனர். அள்ளி வந்ததைக் கொடுத்தான். அவரது இரு கண்களின் மேலும் அந்தக் களியை அப்பினர். அவர் இமைகளுக்குள் குளுமையை உணரத் தொடங்கினார்.

“இன்னும் அள்ளி வருகிறேன்” என்றான் சூலிவேள். “இதுவே போதும், சிறிதுநேரத்தில் சரியாகிவிடும்” என்று தேக்கன் சொல்லியபோது  ஆற்றின் நடுவில் நீந்திக்கொண்டிருந்த சூலிவேள்,  பொருத்தமான இடம்பார்த்து நீரில் மூழ்கினான். அடிமரம் ஒன்றை இழுத்துக்கொண்டு சடசடவெனக் கீழிறங்கியது பெருவெள்ளம். மாணவர்கள் உடனடியாகத் தேக்கனைத் தூக்கிக்கொண்டு மேலேறினர். கணநேரத்துக்குள் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. வெள்ளத்தின் வேகம் மலையேறுபவர்களின் கால்களைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தது. தேக்கனைத் தூக்கியபடி விரைந்து மேலேறி உயிர் தப்பினர்.

மேலே ஏறியதும், தேக்கன் கண்களைக் கசக்கியபடி திறந்தான். கொட்டும் மழையில் வெள்ளம் இரு பனைமரம் உயரத்துக்கு போய்க்கொண்டிருந்தது. கண்களுக்குள் எரிச்சல் இல்லை. ஆனால், துயரம் தாங்க முடியவில்லை. சூலிவேளை நினைத்து “ஓ” எனக் கத்தி அழுதான் தேக்கன்.

வெள்ளம் புரட்டி எடுத்துக்கொண்டு சென்றது. நீந்திக் கடப்பது இயலாத செயல். உயிரைத் தக்கவைத்தபடி வெள்ளத்தின் போக்கில் போவது என முடிவெடுத்தான் சூலிவேள். அடித்து, இழுத்துப் புரட்டிக்கொண்டுபோனது. கைகளில் சிக்கும் மரங்களைப் பற்றியும் அதில் இருந்து நழுவியும் இழுத்துச்செல்லும் நீருடன் சென்றுகொண்டிருந்தான். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P83e
குறுக்கிட்டு நீந்திக் கரையை அடைய நீரின் வேகம் குறையும் தருவாய்க்காகக் காத்திருந்தான். ஆனால், அது நிகழும்போது அவன் அரை மயக்கத்தில் இருந்தான். இரவு, பகல் கடந்த பின் நீர் அவனைப் பாறையின் இடுக்கு ஒன்றில் அடித்துச் செருகியது. 

ஆற்றங்கரையோரம் வந்த சிலர் பாறை இடுக்கில் சிக்கிக்கிடப்பவனை எட்டிப் பார்த்தனர். உயிர் இருக்கிறதா என்பது அறிய முடியவில்லை. கூட்டத்தில் இருந்த பெரியவர் இடுக்குக்குள் நுழைந்து அவனைப் பார்த்தார். வலது கால் உள்ளே செருகிக்கிடந்தது.  இடது கால் எலும்பு ஒடிந்துகிடந்தது. ஒரு கை திரும்பிவிட்டது. மேல் எல்லாம் பாறைகளில் அடிபட்டுச் செதில்செதிலாகப் பிளந்துகிடந்தது. “இவனை வெளியில் தூக்கி உயிரைக் காப்பாற்றினாலும் இவன் வாழத் தகுதியற்ற வனாகத்தான் கிடப்பான்” என்றார் அந்தப் பெரியவர்.

கூட்டத்தினர் பெரியவர் சொல்கேட்டு விலகினர். உள்ளிருந்த `தூதுவை’க்கு அவ்வாறு விட்டுச்செல்ல மனம் இல்லை. பெரியவரோடு வாதிட்டாள். ஆனால், அவனது நிலைமை படுமோசமாக இருந்ததாலும் பாறையின் இடுக்கைவிட்டு வெளியில் எடுக்க முடியாதபடி, அவன் உடல் செருகிக்கிடந்ததாலும், மற்றவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கூட்டம் நகரத் தொடங்கியது.

இறுதியாக ‘தூதுவை’ சொன்னாள்... “பாறையிடுக்கில் கிடப்பவனை எடுத்து வெளியில் போட்டுவிட்டாவது போவோம். திறன் இருந்தால் பிழைக்கட்டும்” என்றாள். ‘சரி’ என்று ஒப்புக்கொண்டு பெருமுயற்சி செய்து, அவனை வெளியில் எடுத்து கரை மீது கிடத்தினர். நீர் நிறைய குடித்திருந்ததால் வயிறு ஊதிப்போய் இருந்தது. வெட்டுப்பட்ட எந்தப் பிளவின் வழியேயும் குருதி கசியவில்லை. வெளிறித்தான் கிடந்தது எல்லாம். இன்று இரவு தாங்க மாட்டான் எனச் சொல்லிவிட்டு நடந்தார் பெரியவர். மற்றவர்களும் உடன் நடந்தனர்.

காற்று இரவெல்லாம் உடலை உலர்த்திக் கொண்டே இருந்தது. அடர்வனத்தில் ரீங்கரிக்கும் சில்வண்டுகளின் ஓசை செவிக்குள் துளையிட்டு நுழைந்தது. கானகத்தின் பல்வேறு ஓசைகளும் நினைவின் ஆழத்தைத் தொட்டுத் திரும்பின. கண்ணுக்குத் தெரியாத சிறுபூச்சி ஒன்று, வெட்டுப்பட்ட பிளவின் நடுவில் உட்கார்ந்து ஊசிக்கொடுக்கால் கொத்தி வெளியில் எடுத்தபோது அவனது உடல், வலியை நினைவுகொள்ளத் தொடங்கியது.

பொழுது புலர்ந்தது. சூலிவேள் மெள்ளக் கண் விழித்தான். தனக்கு உயிர் இருக்கிறது என்பதை உணர்ந்தான். கை, கால்களை அசைக்க முடியவில்லை. அங்கேயே கிடந்தான். தன்னை இழுத்து வெளியில்போட்டவர்கள் பேசிய பேச்சு அரைகுறையாக நினைவில் இருந்தது. தனக்கு என்னவெல்லாம் ஆகியிருக்கிறது என, அந்தப் பெரியவர் சொன்னதைவைத்து தனது உடலை மதிப்பிட்டான். அது தேக்கனின் குரல் என அவனுக்குத் தோன்றியது.

இந்த நிலையில் தேக்கன் இதைத்தான் செய்திருப்பார். ‘மற்றவற்றை எல்லாம் நீதான் சரிசெய்ய வேண்டும். இதுதான் பயிற்சி என்பார்.’ தேக்கனின் குரல் எப்போதும் சவால்களையே உருவாக்கும். எனவே, சவால்கள் உருவாகும் போதெல்லாம் தேக்கனின் நினைவு வருகிறது. அதில் மாறுபட்டு ஒலித்தது ஒரு பெண்ணின் குரல். அந்தக் குரலில் இருந்த நம்பிக்கை இப்போது மனதுக்கு மிகவும் தேவையாக இருந்தது. தனக்காக வாதிட்ட அந்தக் குரலை மெய்ப்பிக்க வேண்டும் எனத் தோன்றியது.

கதிரவன் மேலே ஏறிவந்தான். படுத்துக்கிடந்த சூலிவேளால் உட்கார மட்டுமே முடிந்தது. இரண்டு நாள்களாக எந்த உணவும்  உண்ணாததால் கைகால்கள் உயிரற்று இருந்தன. எதையாவது சாப்பிட வேண்டும் எனத் தோன்றியது. வலது கால் வலி மரத்துக்கிடந்தது. அதை எல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். அடர்காட்டின் நடுவே சீறிப்பாயும் ஆறு. ஆற்றின் போக்கைப் பார்த்துக்கொண்டே இருந்தான். சட்டென நினைவுக்கு வந்தது. இடுப்பில் கைவைத்தான். இறுகிக்கட்டப்பட்ட நார்க்கயிறு இருந்தது. நார்க்கயிற்றில் போடப்பட்ட முடிச்சை அவிழ்த்தான். உள்ளே கொல்லிக்காட்டு விதை ஒன்று இருந்தது.

பயிற்சியின்போது அகாலத்தில் அகப்பட்டுக் கொண்டால், பயன்படுத்தச் சொல்லி தேக்கன் கொடுத்த கொல்லிக்காட்டு விதை. விதையை விரல்களால் திருகி உடைத்தான். அதில் சிறுபகுதியை கையோரமாக மண்ணில் தூவிவிட்டு, மீதியை முடிச்சிட்டான். படபடத்து வந்திறங்கின இரண்டு பறவைகள். அவை விதையின் வாசனையை நுகர்ந்தபடி அருகில் வந்தன. சூலிவேள் அவற்றைப் பிடிக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். சற்றுநேரத்தில் பெருங்காடை ஒன்று இறங்கிய வேகத்தில், அந்தப் பறவைகள் இரண்டும் விலகிக்கொண்டன. கொல்லிக்காட்டு விதையை தனியொரு காடை கொத்தித் தின்றது. அது தின்று முடிக்கும்போது, சூலிவேள் கையை அருகில் கொண்டுபோனான். கையோடு அது சாய்ந்து படுத்தது.
இரவு எல்லாம் மனம்பொறுக்காமல் தூக்கம் தொலைத்துக்கிடந்த தூதுவை, காலையிலேயே தன் தோழியை அழைத்துக்கொண்டு சூலிவேளிடம் வந்துவிட்டாள். அவள் வரும்போது அவன் எழுந்து உட்கார்ந்திருந்தான். மரணத்தை நோக்கி விட்டுச்சென்ற ஒருவன், அதற்கு எதிர் திசையில் எழுந்து அமர்ந்திருப்பதைப்போல இருந்தது. பெரும்வியப்போடு அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் எங்கிருந்தோ வந்த பறவை ஒன்று, அவன் கைகளில் வந்து படுத்துக்கொண்டது. தான் கண்ணால் பார்ப்பதை அவளால் நம்ப முடியவில்லை. என்ன நடக்கிறது எனத் தோழிக்கும் புரியவில்லை.

கையில் சிக்கிய பறவையைச் சுட்டுத்தின்ன  ஆயத்தமானான். இறகுகளை வேகவேகமாகப் பிய்த்தெடுத்தான். அப்படியே கடித்துத் தின்னப்போகிறான் எனப் பார்த்துக்கொண்டிருந்த பெண்கள் இருவரும் எண்ணினர்.

இறகுகளை உரித்து முடித்த சூலிவேள், நெருப்பு மூட்ட வழி என்னவென்று சுற்றும்முற்றும் பார்த்தான். கொட்டித்தீர்த்த மழையும் விடாது புரண்டுசென்ற வெள்ளமும் எங்கும் நீரை ஊறவைத்திருந்தன. உலர்ந்தவை ஒன்றும் இல்லை. கரையின் சரிவில் எடுக்கும்  தொலைவில் அனற்கற்கள் கிடந்தன. ஆனால், அவற்றை வைத்து எதை எரிப்பது எனச் சிந்தித்தபடியே கண்களை எங்கும் சுழலவிட்டான்.

அவனால் நம்ப முடியாத ஒன்று அவனது கண்களுக்கு முன்னால் இருந்தது. அவன் செருகிக்கிடந்த பாறையை ஒட்டி ‘பால்கொறண்டி’ செடி ஒன்று தழைத்திருந்தது. அதன் தூர்ப்பகுதி நீரில் மூழ்கியிருந்தது.

சூலிவேளுக்கு மகிழ்ச்சி உடல் எங்கும் பரவியது. காய்ந்த சருகைவிட அதிவேகமாகப் பற்றி எரியும் பச்சையான பால்கொறண்டி.  அது வியப்புக்கு உரிய செடி. செடிகள் எல்லாம் வியக்கத்தக்கவைதான். நமக்குத்தான் அதைக் கண்டுணரத் தெரிய வேண்டும்.
கால்களை மெள்ள அசைத்தபடி கரையின் மேலிருந்து கீழ்நோக்கிச் சரிந்தான் சூலிவேள். கரையைத் தாண்ட மேல்நோக்கி ஏறுவதாக இருந்தால், ஒருவேளை முடியாமல் போயிருக்கும். ஆற்றின் ஓரமாகக் கீழே இருந்ததால் எளிதாகிவிட்டது. உடலை இழுத்தபடி கீழே வந்துசேர்ந்தான்.

‘ஏன் ஆற்றை நோக்கிச் சரிகிறான்?’ எனப் பதறிய  தூதுவையும் தோழியும் சற்றே முன்னால் வந்து எட்டிப்பார்த்தனர்.

சூலிவேள் பால்கொறண்டியின் இலைகளை ஒட்டி அனற்கல்லை உரசினான். உடலில் எங்கெங்கோ இருந்து வலி மேலே ஏறி வந்துகொண்டிருந்தது. இரு கற்களையும் அழுத்திப் பிடித்து உரசும் வலிமையை, இறகு உறிக்கப்பட்ட பறவையே கொடுத்துக் கொண்டிருந்தது. கல்லுக்குள் இருந்து தெறிக்கும் ஒற்றைத் தீப்பொறியை உருவாக்க மொத்த உடலிலும் விசை ஏற்றவேண்டியிருந்தது. விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிசெய்தான். உடல் முழுவதையும் தனது விசையோடு இணைத்தான். அறுந்த நரம்புகள் எல்லாம் அவனது எண்ணங்களோடு இணைந்தன.

தண்ணீரில் இருக்கும் செடியில் போய் அனற்கற்களை ஏன் தட்டிக்கொண்டிருக்கிறான் என்பது இருவருக்கும் புரியவில்லை. குழம்பிப்போய் மிகவும் முன்நகர்ந்து வந்து பார்த்தனர்.

சட்டெனத் தெறித்த தீப்பொறி பால்கொறண்டியில் பட்டவுடன் பற்றி மேலே ஏழுந்தது. எண்ணெயில் ஊறித் திருகி நிற்கும் திரியைப்போல, ஒவ்வோர் இலையும் நெருப்பை மேல்நோக்கி ஊதின. சடசடத்து நாலாபுறமும் பற்றியது நெருப்பு. நன்றாக இறங்கிவந்து நீருக்குள் கால் நுழைத்து, பறவையைப் பால்கொறண்டியின் நடுத்தண்டில் செருகினான் சூலிவேள்.

செடியின் அடிவாரத்தில் சூழ்ந்திருந்த நீரில் நெருப்பின் ஒளி கங்குபோல் தகதகத்தது. தீயின் நிழலுக்குள் கால்நுழைத்தபடி பறவையின் உடலை முன்னும் பின்னுமாகத் திருப்பிக் கொண்டிருந்தான் சூலிவேள். 

அவனது கால்களில் இருந்து நீரின் வழியாக நெருப்பு ஏறியதைப் பார்த்த தூதுவைக்குத் தலை சுற்றுவதுபோல் இருந்தது. ஆனால், அவளுக்கு முன்னரே கண் செருகினாள் தோழி.

ர் மாடத்தில் வந்து தூதுவை சொன்னபோது யாரும் நம்பவில்லை.

“அவன் உயிரோடு மீள்வான் என்பதே நம்ப முடியாத செய்தி.

நீ என்னென்னவோ சொல்கிறாய்” என மறுத்தான் கிழவன்.

தூதுவையும் தோழியும் சொல்வதைப் பார்த்தால் பேயோ, அணங்கோ, வனத் தாதனாகவோதான் இருக்க வேண்டும் என முடிவெடுத்து பூசாரியையும் கையோடு அழைத்துக்கொண்டு புறப்பட்டனர்.

நற்பகலுக்குப் பின், அவர்கள் சூலிவேள் இருக்கும் இடத்துக்கு வந்துசேர்ந்தனர். அவன் கரையேற முடியாமல் அப்படியே நீரில் கால் நனைத்தபடியே உட்கார்ந்திருந்தான். ஆனால், கொழுத்த பறவையைத் தின்றதால் முகம் தெளுச்சியாக இருந்தது.
பெரும்கூட்டம் ஒன்று வந்து நிற்பதை உணர்ந்து, பின்னால் திரும்பிப் பார்த்தான். வந்திருந்தது பெரும்கூட்டம் அன்று, சிறுகூட்டம்தான். ஆனால், ஒவ்வொரு மனிதனும் மூன்று மனிதர்களுக்கு இணை. விரிந்த மார்பும் திரண்ட சதையுமாக வந்து நின்றனர் அவர்கள்.

திரண்ட மனிதர்களை விலக்கி முன்வந்த பெரியவர் கேட்டார், “எங்களின் கண் முன் உனது மாயவித்தைகளைக் காட்டு?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P83f
“எனக்கு எந்த மாயவித்தையும் தெரியாது.”

“இல்லை, நீ செய்த வித்தைகளை நாங்கள் கண்கொண்டு பார்த்தோம்” என்றது தூதுவையின் குரல்.

ஒரு கணம் கண்ணை மூடினான் சூலிவேள். ‘நேற்று எனக்கு நம்பிக்கை தந்த அந்தக் குரல். இந்தக் குரலை மெய்ப்பிக்கவே நான் போராடிக் கொண்டிருக்கிறேன்’ நினைத்தபடியே கண் திறந்தான். தூதுவை வந்து எதிரில் நின்றாள். பார்த்த பின் பேச்சு எதுவும் வரவில்லை.

வந்தவர்கள் கேட்டார்கள்...

“கால்கள் நீட்டி நீரின் வழியாக பச்சை இலையைச் சுட்டு எரித்தாயாமே உண்மையா?”

சூலிவேள் மறுமொழி சொல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவர்கள் மீண்டும் கேட்டார்கள். பெரும் உடல்வாகுகொண்ட அந்த மனிதர்களை வியந்து பார்ப்பதைப்போலவே சின்னஞ்சிறு கண்கொண்ட தூதுவையையும், தன்னை மறந்து பார்த்துக்கொண்டே இருந்தான் சூலிவேள்.

அவர்கள் மீண்டும் கேட்டபோது, அனற்கல்லைக் கொடுக்க கைநீட்டினான். சிறுவன் ஒருவன் போய் அதை வாங்கினான். கரையின் இடப்புற உச்சியில் தனித்து நின்றுகொண்டிருந்தது பால்கொறண்டி ஒன்று. ``அதைப் போய்த் தீ மூட்டு’’ என்றான். அந்தச் சிறுவனும் அவ்வாறே போய்த் தீ மூட்ட, அடுத்த கணம் பற்றி எரிந்தது பால்கொறண்டி.

அந்தச் செடியின் ஆற்றலை விளக்கிச் சொல்லிக்கொண்டிருந்தான். பசும்செடி பற்றி எரியும் என்பதை அவர்கள் நம்பாமல்தான் பார்த்தார்கள். தூதுவையைப் பார்க்கும் வரை உள்ளுக்குள் நெருப்பின்றி எரியும் தீயைப்பற்றி யாராவது சொல்லியிருந்தால், சூலிவேளும் கூடத்தான் நம்பியிருக்க மாட்டான்.

“பறவை எப்படித் தானாக வந்து அமர்ந்தது?” எனக் கேட்டார்கள். இடுப்பிலிருந்த விதையின் சிறுபகுதியைக் கொடுத்துக் கரையில் போடச் சொன்னான். பறவைகள் வந்து தின்றன.  தின்று முடித்துப் பறக்கத் தொடங்குகையில் சிறகை ஈரடி அடித்து மண்ணில் சரிந்தன.

“பறவை மயங்குமா?” எனக் கேட்டனர்.

தன் மயக்கம் மீளாமல் இருந்த அவனுக்கு தன்னையே எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. அவளைப் பார்த்தபடியே, வேண்டாம் என நிறுத்திக் கொண்டான்.

“அது என்ன காய்... எங்கு விளைகிறது?”

எனக் கேட்டனர்.

“வெளியே சொல்லக் கூடாது என்பது எங்கள் குலநாகினியின் வாக்கு” என்றான்.

பெரும்வியப்புக்கு உரிய ஒருவனாக அவன் இருந்ததைப் பார்த்தபடி நின்றிருந்தனர்.

“பாறைகளின் இடுக்கில் செருகிக்கிடந்த என்னை எப்படி வெளியில் எடுத்தீர்கள்?” எனக் கேட்டான்.

“இந்தப் பாறையை நகர்த்தி எடுத்தோம்” என்றார் பெரியவர்.

ஒருகணம் திரும்பி அந்தப் பாறையைப் பார்த்தான். இரண்டு ஆள் உயரம்கொண்ட இரண்டு பெரும்பாறைகள் ஒன்றுடன் ஒன்று உரசியபடி நின்றுகொண்டிருந்தன.

“இவ்வளவு பெரும்பாறையை நகர்த்தினீர்களா? எப்படி முடிந்தது... யார் நீங்கள்?” என்றான்.

வந்தவர்கள் சொன்னார்கள், “நாங்கள் திரையர்கள்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 12:50 am

முறிந்த காலிலும் திருகிய கையிலும் கட்டுப்போடப்பட்ட அவன், ஊர் மந்தையில் படுக்கவைக்கப்பட்டிருந்தான்.
‘இரு மாதங்கள் கடந்துவிட்டன. இதுவே பறம்பின் வைத்தியனாக இருந்தால், பாதி நாள்கள்கூட ஆகியிருக்காது. திரையர்கள் உடல்வலிமையில் இணையற்றவர்கள்தான். ஆனால், அறிவுநுட்பத்தில் பறம்பு மக்களுக்கு ஈடுசொல்ல முடியாது’ என்று தோன்றியது சூலிவேளுக்கு.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P83a
கட்டுகள் கழட்டப்படும் நாளுக்காகக் காத்திருந்தான். தூதுவையின் குரல் அவனுக்கு மிகவும் தேவைப்பட்டது. அவள் அருகில் வரும்போதெல்லாம் தேக்கன்தான் நினைவுக்கு வந்தான். காட்டில் மனிதன் எந்தச் சவாலையும் எதிர்கொண்டு வாழும் பயிற்சியை அளித்தது தேக்கன்தான். எந்தச் சூழலையும் வெல்லும் வித்தையை அவன்தான் கற்றுக்கொடுத்தவன்.  ஆனால், தன்னைச் சுற்றி எதுவும் நிகழாமல் மனம் ஏன் ஒடிந்து விழுகிறது. சிதைந்த மனம் கணநேரத்தில் எப்படித் துளிர்த்தெழுகிறது? இதைப் பற்றி தேக்கன் எதையும் சொல்ல வில்லையே! இயற்கையின் ஆதிரகசியத்தை, செடிகொடிகளிலிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமா? வழுக்குப்பாறையாக பார்வை மாறினால், பற்றி ஏற விழுது ஏது? நினைவு ஏன் கட்டுப்பட மறுக்கிறது? செடிகொடிகளுக்கும் விலங்குகளுக்கும் இப்படித்தான் நிகழுமா அல்லது மனிதனுக்கு மட்டுமானதா? மனதுக்குள் அடர்ந்துகிடக்கும் காதலின் ரகசியங்களை யார் சொல்லித்தருவது? வினாக்கள் வினாக்களாகவே இருந்தன.
திரையர்களின் உடல்வாகு, கண்களுக்கு எப்போதும் மிரட்சியை உருவாக்குபவையாகவே இருந்தது. அவர்களின் பல செயல்களை சூலிவேளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவனுக்குள் என்ன நடக்கிறது என்பதையே அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் எப்படி திரையர்களைப் புரிந்துகொள்வான்.
இடையிடையே ஊரின் நினைவு வந்து போய்க்கொண்டிருந்தது. நடுகாட்டுக்குள்தான் இப்போதும் இருக்கிறோம். ஆனாலும், `நம் காடு' என்று தோன்றாமல் இருக்கிறது. `தேக்கனும் மற்றவர்களும் பயிற்சி முடித்து எப்போது ஊர் திரும்புவார்கள்? நாம் அதற்கு முன் திரும்பி விடுவோமா?' என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது, பெரும் சத்தத்துடன் ஓர் இளைஞனைத் தோளில் வைத்துத் தூக்கி வந்தனர்.  மேலெல்லாம்  குருதி சிந்தியபடி இருந்தது. அவன் கைகளில் ஏதோ ஓர் இலையை வைத்திருந்தான். மந்தையில் பெரியவர்கள் உட்கார்ந்தனர். ஊரே கூடியது.  உள்ளே என்ன நடக்கிறது என்று சூலிவேளுக்குத் தெரியவில்லை. ஆனால், எல்லோர் முகங்களிலும் பெருமகிழ்ச்சி இருந்தது. நல்ல செயல் நடைபெறுகிறது என நினைத்துக்கொண்டான். 
மறுநாள் காலையில் தூதுவை அவனைப் பார்க்க வந்தபோதுதான் சொன்னாள், “அவன் காட்டெருமையை வீழ்த்தி, வெற்றிலையைப் பறித்துவந்தான். அதனால் ஊரே அவனைக் கொண்டாடியது.”
“எத்தனை பேர் சேர்ந்து வீழ்த்தினார்கள்?” எனக் கேட்டான்.
“ஒரே ஆள்தான் வீழ்த்தினான்” என்று சொன்னாள். 
“ஒரே ஆள், ஒரு காட்டெருமையை எப்படி வீழ்த்த முடியும்? நீ சொல்வது நம்பும்படியாக இல்லையே” என்றான்.
“எந்த ஆயுதமும் வைத்துக்கொள்ளலாம். ஆனால், தனியொருவனாகக் காட்டெருமையை வீழ்த்தி, மலைமுகட்டில் இருக்கும் வெற்றிலையைப் பறித்து மந்தைக்கு வந்து சேரும் வீரனைத்தான் திரையர் குலப்பெண் ஏற்றுக்கொள்வாள். இல்லையென்றால், எந்தப் பெண்ணும் அவனை ஏற்க மாட்டாள்” என்றாள்.
சூலிவேளால் நம்ப முடியவில்லை. “தனியொருவனாக எப்படி காட்டெருமையை வீழ்த்த முடியும்? நீ பொய் சொல்கிறாய்” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P88a
“இதே மந்தையில்தான் நான் வந்து சொன்னேன், `ஒருவன் பச்சைச்செடியை எரியவைக்கிறான்', `பறவையை மயங்க வைக்கிறான்' என்று. `நம்பும்படியாகவா இருக்கிறது?' ” என்று கேட்டார்கள். அதுதானே உண்மை. அதேபோல்தான் இதுவும். அப்போது அவர்கள் நம்ப மறுத்தார்கள். இப்போது நீ நம்ப மறுக்கிறாய்” என்றாள்.
சூலிவேளால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `எவ்வளவு வலிமை வாய்ந்தவனாக இருந்தாலும், தனியொருவனாக எப்படி காட்டெருமையை அடக்க முடியும்?' என்று தன்னைத்தானே மீண்டும், மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தான்.
நீண்டநேரம் கழித்து, அவள் மண்வட்டியில் ஊன்சோறு கொண்டுவந்து கொடுத்தாள். மலையரிசிச் சோற்றுக்கு ஊடே பெரும்பெரும் கறித்துண்டங்கள் கிடந்தன. மிகவும் சுவைத்துச் சாப்பிட்டான்.
“சோற்றுக்குள் கிடப்பது அவன் வெற்றிகொண்ட காட்டெருமையின் கறி” என்றாள்.
அவள் சொன்ன உண்மை, சூலிவேளின் வயிறு வரை வந்து சேர்ந்தது. ஆனாலும், அவனால் நம்ப முடியவில்லை. ‘காட்டெருமைகளிடமிருந்து விலகிச் செல்லவும், விரட்டினால் தப்பிக்கவும்தானே நமக்குத் தெரியும். அதை எப்படி வீழ்த்த  முடியும்?’ என்று காட்டெருமையின் கறியைச் சாப்பிட்டுக்கொண்டே சிந்தித்தான். சாப்பிட்டு முடித்ததும், அவள் தான் கொண்டுவந்த வெற்றிலையைக் கொடுத்தாள்.
“காட்டெருமையைச் சாப்பிட்டால் அதைப்போலவே நாமும் இலை, தழைகளைச் சாப்பிட வேண்டுமா?” எனக் கேட்டான்.
“காட்டெருமையின் கறி மிகவும் வலிமை வாய்ந்தது. அது செரிக்க வேண்டுமானால், வெற்றிலையை உண்ண வேண்டும்” என்று சொல்லியபடி நீட்டினாள். வெற்றிலையை வாங்கி மெல்லத் தொடங்கினான்.
அதன் காரச்சுவை மிகவும் பிடித்துப்போனது. அவன் மெல்வதை நிறுத்தவேயில்லை. கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். அவனுக்குக் கொடுப்பதில் அவளுக்குள் ஒரு மகிழ்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாகச் சிவக்கத் தொடங்கும் அவன் உள்ளுதடுகளைப் பார்க்கும் ஆர்வத்தில் இருந்தன அவள் கண்கள்.
அவன் மீண்டும் மீண்டும் கை நீட்டினான். “காட்டெருமையைவிட அதிகமாகவே தின்றுவிட்டாய்... போதும்” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
டல் நன்கு தேறிவிட்டது. எழுந்து நடக்கவும் ஓடவும் தாவிக்குதிக்கவுமாக உடலைத் தயார் செய்தான். உள்ளம்தான் அதற்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. தில்லைமரத்தின் புகை இல்லாமலே காதல் கண்ணைக் கட்டியது. ஒரு மாலை வேளையில், தான் வந்துசேர்ந்த அந்தப் பாறையைப் பார்த்தபடி ஆற்றோரம் உட்கார்ந்திருந்தான். தூதுவையும் அந்த இடத்துக்கு வந்தாள். 
இருவரும் பேசிக்கொள்ளாமல் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தனர்.  அமைதி, பெரும்பாறையாக உருத்திரண்டு நின்றது. இப்போது இருவரும் அதன் இடுக்கில் சிக்கியிருந்தனர். பாறையை நகர்த்தி வெளியேற, இருவருக்கும் விருப்பமில்லை. எண்ணங்கள் எங்கெங்கோ போயின. அதுவும் சுகமாகத்தான் இருந்தது. பேசிக்கொள்ளாமலேயே அவள் எழுந்தபோதுதான் அவன் கவனித்தான், அவளின் வலது தோள்பட்டையின் மேல்புறத்தில் உள்ளங்கை அளவுக்குக் கரும்பச்சை நிற மச்சம் ஒன்று இருந்தது. அதன் ஒரு பகுதியை அவளது மேலாடை மறைத்திருந்தது. அதைப் பார்த்தபடி, “என்ன இது?” என்று கேட்டான்.
“அதுவா... `வெற்றிலை மச்சம்' என்று சொல்வார்கள். எங்கள் குலத்தில் நிறைய பேருக்கு இது இருக்கும்” என்று சொல்லியபடி அவள் புறப்பட்டாள். மனதுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் உரையாடலை, பேச்சுக் கொடுத்துக் கலைக்க அவள் விரும்பவில்லை.
நாள்கள் சென்றன. அடுத்த இளைஞன் காட்டெருமையை வேட்டையாடுவதைப் பார்க்க வேண்டும் என்று அவன் காத்திருந்தான். அந்த நாளும் வந்தது. ஊராரோடு சேர்ந்து அவனும் காட்டின் உச்சிப் பகுதிக்குச் சென்றான். எல்லோரும் முகட்டின்மேல் இருந்த பாறையில் ஏறி உட்கார்ந்தனர்.
இரு மலைகள் சரிந்து இணையும் பகுதி, நடுவில் நீர் சிறுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதில் தண்ணீர் குடிக்கக் காட்டெருமை வரும் என்று ஓடைக்கரையில் அந்த இளைஞன் காத்திருந்தான். நீண்ட நேரத்துக்குப் பிறகு, காட்டெருமை ஒன்று ஓடை நோக்கி வந்துகொண்டிருந்தது.
மலைமுகட்டிலிருந்து ஊராரோடு சேர்ந்து சூலிவேளும் அதைப் பார்த்தான். உண்மையிலேயே தனித்தொருவன் காட்டெருமையின் அருகில் போய்க்கொண்டிருக்கிறான் என்பதை அவன் கண்கள் நம்பவில்லை. போகிறவனின் இடுப்பில் இருபெரும் ஆயுதங்கள் இருந்தன. அவன் காட்டெருமையை நீர் குடிக்கவிடாமல் குறுக்கே போய் மறிக்க முயன்றான். பார்த்துக்கொண்டிருந்த சூலிவேளுக்கு மெய் சிலிர்த்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P88b
அந்தக் காட்டெருமையின் உயரம் மலை முகட்டிலிருந்து பார்க்கும்போதே அச்சம் தருவதாக இருந்தது. திருகியிருக்கும் அதன் கொம்புகள் பாறையை நொறுக்கக்கூடியன. அதன் முன்நெற்றி எந்த மரத்தையும் முட்டிச் சாய்க்கும் வலுக்கொண்டது. அதை ஒருவன் தன்னந்தனியனாகச் சந்திக்கப்போகிறான். சூலிவேளால் நிற்க முடியவில்லை.
அதன் பாதையில் குறுக்கிட்ட அந்த இளைஞன் ஏதோ ஒன்று செய்து அதைச் சீண்டினான். அது அவனை விரட்ட, பாயத் தொடங்கியது. நீரோடையைத் தாண்டி மலையின் எதிர்புறம் ஓடத் தொடங்கினான். அது நான்குகால் பாய்ச்சலில் வீறுகொண்டது. அவன் மலைப்புதருக்குள் படுவேகமாக மேலேறினான். காட்டெருமையின் ஓட்டத்தைவிட அவனுடைய ஓட்டத்தின் வேகம் கூடுதலாக இருந்தது. அது காட்டெருமையை மேலும் வேகப்படுத்தியது.
சூலிவேளால் பார்க்கும் காட்சியை நம்ப முடியவில்லை. ஒருவன் காட்டெருமையைவிட வேகமாக ஓடுகிறான். அதுவும் மலைச்சரிவில் மேல்நோக்கி ஓடுகிறான். அதுவும் பாதை இல்லாமல் புதர்களுக்குள் பிய்த்துக்கொண்டு ஓடுகிறான். எப்படி இது முடிகிறது? நம்பவே முடியவில்லை.
பலமுறை பார்த்துப் பழக்கப்பட்ட ஒன்றை, திரையர்கள் இயல்பாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். சூலிவேளால் ஒரு கணம்கூட தாங்க முடியவில்லை. திரையர்களின் உடல்பலத்தையும் வேகத்தையும் வந்த நாள் முதல் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறான். ஆனால், மலையில் விலங்கைப்போல செடிகொடிகளுக்கு இடையில் அறுத்தெறிந்து எப்படி ஓட முடிகிறது? அவன் அருகில் இருக்கும் திரையர்களின் உடல் அமைப்பை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினான். அவர்களது  காலடி, ஒரு சுளகுபோல விரிந்து இருந்தது; சூலிவேளின்  காலடியைவிட இருமடங்கு அகலமாக இருந்தது.
வேகமாக மேலே ஏறிக்கொண்டிருந்தவன், சட்டென ஓரிடத்தில் வளைவுகொண்டு கீழ்நோக்கித் திரும்பி சரசரவென ஓடைநோக்கி இறங்கினான். காட்டெருமையின் ஆத்திரம் இன்னும் அதிகமானது. இறங்கத் தொடங்கியதும் அதன் வேகம் கூடுவதுபோலிருந்தது. இரண்டாவது முறை குதித்து பெரும்புதரைத் தாண்டி அவன் முதுகுக்கு நேராக அதன் தலை இறங்கிக்கொண்டிருந்தது. எந்தக் கணம் அதைவிட அதிகமான தொலைவை அவன் தாவிக் கடந்தான் என்பதை சூலிவேளின் கண்கள் கண்டுணரவில்லை. மிக வேகமாக முன்னால் வந்து ஓடையைத் தாண்டி எதிர்புற மலையின் மீது ஏறினான்.
அதன் மூச்சில் அனல்காற்று சீறியது. கொம்புகளில் அடிபட்டு மரக்கிளைகள் முறிந்துகொண்டிருந்தன. அவன் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தான். நம்ப முடியாத காட்சிகளை வாழ்க்கை சூலிவேளுக்குக் காண்பித்துக்கொண்டிருந்தது. திரையர்கள் உற்சாக ஒலியெழுப்பியபடி இருந்தனர்.
அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் வீரவிளையாட்டு, சூலிவேளின் அறிவுக்குப் புலப்படவில்லை. ஓடுபவன் மேலும் கீழுமாக மூன்றுமுறை ஓடையைக் கடந்து ஓடினான். காட்டெருமையும் வெறிகொண்டு ஓடியது. அவனைத் தாக்கப்போகும் கணமும் தப்பிக்கும் கணமும் மிகமிக அருகில் இருந்தன.
ஓடையை நோக்கி வேகமாக இறங்கிக் கொண்டிருந்தபோது, ஏதோ ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துப் போக்குக்காட்டி ஒரு சுற்று சுற்றினான். அது குதித்துக் கீழே இறங்கிக்கொண்டிருந்தது. அவன், அதன் பின்புறம் இறங்கிக்கொண்டிருந்தான். புதர் அசைவில் என்ன நிகழ்ந்தது எனத் துல்லியமாகத் தெரியவில்லை. அவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த திரையர்கள், எழுந்து நின்று உற்சாக ஒலியெழுப்பினர்.
அவன் மீண்டும் முந்திக்கொண்டு ஓடையைக் கடந்து மேலே ஏறத் தொடங்கினான். வந்த வேகத்தில் அது ஓடையைக் கடந்து மேலே ஏற முடியாமல் தவித்தது. அதன் ஓட்டம் குறையத் தொடங்கியது.
திரையர்களின் கூச்சல் ஒலி பெருகியது.
ஒருகட்டத்தில் காட்டெருமையின் ஓட்டம் முழுமுற்றாக நின்றது. இப்போது அவனும் ஓட்டத்தை நிறுத்திவிட்டு, இடுப்பில் இருந்த இரண்டு ஆயுதங்களையும் கைகளில் ஏந்தத் தொடங்கினான். ஒரே இடத்தில் நின்றபடி அது அவனை நெருங்கவிடாமல் குத்த தலைப்பட்டது. அவன் விலகி விலகி, சரியான வேளைக்காகக் காத்திருந்தான்.
திரையர்களின் கூட்டம் பேரொலியோடு ஓடையை நோக்கி இறங்கத் தொடங்கியது. என்ன நடக்கிறது என்று சூலிவேளுக்குப் புரியவில்லை. அவனும் சேர்ந்து இறங்கினான். அவர்கள் அந்த இடத்தை அடையும்போது, அவன் காட்டெருமையை முழுமையாக வீழ்த்தியிருந்தான். வந்த வேகத்தில் ஒரு கூட்டம் அவனைத் தோளில் தூக்கியது. மேலெல்லாம் மரக்குச்சிகளும் கொடிகளும் விளார்விளாராக சீவியிருந்தன. அவன் கதிரவனைப் பார்த்து நரம்பு முறுக்கிச் சிலிர்த்தான்.
வெற்றிலையைப் பறிக்க அவன் தன் தோழர்களோடு போனபோது, மற்றவர்கள் காட்டெருமையை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். காட்டெருமையை அடக்கியவன், மாலைக்குள் மந்தையில் வெற்றிலையை வைத்து மணமுடிக்க வேண்டும். எனவே, அடுத்தகட்ட வேலைகள் வேகமாக நடந்தன.
பொழுது சாய்வதற்குள் ஊர் மந்தைக்கு வந்து அவன் வெற்றிலையை வைத்தான். பெரியவர்கள் என்னவென்று கேட்டார்கள். அவனுக்குரியவளைச் சொன்னான். அவளும் வெற்றிலையோடு மேலேறினாள். ஊர்வட்டியில் இருவரும் வெற்றிலையை மாற்றி எடுத்துக் கொண்டனர். ஊன் தயாரானது. கொண்டாட்டம் தொடங்கி இரவு முழுவதும் நீண்டது.
வழக்கம்போல் மந்தையில் இருந்த அவனுக்கு ஊன்சோறும் வெற்றிலையும் கொண்டுவந்தாள் தூதுவை. அவன் எதுவும் சொல்லாமல் வாங்கிச் சாப்பிட்டான். “நான் சொன்னதை, நேரில் பார்த்த பிறகுதான் ஊர் நம்பியது. நீயும் அப்படித்தானே?” என்று கேட்டாள்.
அவன் பதிலேதும் சொல்லாமல் இருந்தான். வாழ்வில் முதன்முறையாகத் தன்னால் ஒன்றைச் செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் அவன் தடுமாறிக்கொண்டிருந்தான். அந்தத் தடுமாற்றத்தை அவள் உணர்ந்தாள். ஆனாலும் அவளின் நம்பிக்கையை, வெற்றிலையைக் கொடுக்கும்போது கை தொட்டுக் கடத்திவிட்டுத்தான் எழுந்தாள்.
நாள்கள் சென்றன. அந்த மலைச்சரிவுக்குப் பல நாள்கள் போய் வந்துகொண்டிருந்தான். எப்போதாவது காட்டெருமைகள் வந்து நீர் குடிப்பதைத் தொலைவிலிருந்து பார்ப்பான். அதன் உருவ அமைப்பும் வலிமையும் முன்னெற்றியில் திரண்டிருக்கும் எலும்பின் திரட்சியும் பார்க்கவே அச்சம்தருவனவாக இருந்தன.
ஒருமுறை அதைச் சீண்டிப்பார்க்க அருகில் போக முடிவெடுத்த கணமே அது விரட்டத் தொடங்கி, படுவேகமாக மலைமேல் ஏறினான். அதன் வேகம் என்ன என்பது அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. மேல்நோக்கி ஏறும்போது அதன் வேகம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. ஏதேதோ வித்தைகாட்டி இறுதியில் உயிர்பிழைத்து ஊர்வந்து சேர்ந்தான்.
மேலெல்லாம் செடிகளும் கொடிகளும் குச்சிகளும் கிழித்து எடுத்திருந்தன. வரும்போதே பச்சிலைகளைப் பறித்துக் கொண்டு வந்தான். அறைத்துப் பூசிக்கொண்டு படுத்தான். மனம் முழுவதும் காட்டெருமையின் பாய்ச்சலும் தூதுவையின் மீதான காதலும் சரிசமமாக இருந்தன.
கிழவி ஒருத்தி அவன் அருகே வந்து உட்கார்ந்தாள். “காட்டெருமையை வீழ்த்தப் போகிறவர்கள் வெற்றிலையோடு வருவார்கள். நீ என்ன பச்சிலையோடு வந்திருக்கிறாய்?”
அவமானப்படுதல் அவனுக்கு அறிமுகமாகிக் கொண்டிருந்தது. “பால்கொறண்டியை எரிக்கவும் பறவையை மயக்கவும் வித்தை தெரிந்தால் போதும். இதற்கு வீரம் வேண்டும்'' என்றாள்.தொடர்ந்து மனம் சீண்டப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த இடம் கடந்துபோன தூதுவை, கிழவி இவனோடு இருந்ததைப் பார்த்து சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுப் போனாள்.
இவனது கோபம் மேலும் கூடியது. கிழவியும் விடுவதாக இல்லை. “காட்டுக்கோழியைக்கூடப் பிடிக்க முடியாதவன், காட்டெருமையை எப்படிப் பிடிப்பான்?” என்று அவளாகக் கேள்வி கேட்டுவிட்டு, எழுந்து போய்விட்டாள்.
இவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மறுநாள் அந்த மலைச்சரிவை நோக்கி மீண்டும் போனான். காட்டுக்கோழிகளின் கூவல் சத்தத்தைக் கடந்த அவனுக்குக் கிழவி சொன்னது நினைவுக்கு வந்தது. `ஏனோ காட்டுக்கோழியைப் பிடித்துப் பார்ப்போம்' என்று தோன்றியது.
மரக்கொப்புகளின் மீதேறி தாவி சென்று கொண்டிருந்தது. அது மீண்டும் பறக்கும் வேளைக்காகக் காத்திருந்தான் சூலிவேள். படபடத்து மேலெழுந்த  காட்டுக்கோழி, அவன் வீசிய கல்லால் சுருண்டு விழுந்தது. அதைப் போய்ப் பார்த்துவிட்டு எடுக்காமல் போய்விட்டான்.
‘கிழவி நம்மை இவ்வளவு எளிதாக நினைத்துவிட்டாளே!’ என்று தோன்றியது. மாலையில் மந்தைக்குத் திரும்பியதும் கிழவி அவன் அருகில் வந்தாள்.
“கோழி எங்கே?” என்று கேட்டாள்.
` ‘நான் கோழியை அடித்துவிட்டேன்' என்று சொல்வது வீரனுக்கு அழகல்ல. அதே நேரத்தில் ‘கோழியைக்கூடப் பிடிக்க முடியாதவன்’ என்று இவள் நம்மை பற்றி நினைத்திருப்பதையும் மாற்ற வேண்டும், என்ன செய்வது?’ என்று சிந்தித்தான். 
“எறிந்த இடத்தில் கிடக்கிறது. வேண்டுமென்றால், போய் எடுத்துக்கொள்” என்றான்.
“எடுக்கவேண்டியது நீதான். ஏன் எடுக்காமல் வந்தாய்?” எனக் கேட்டாள்.
அவளது கேள்வியின் நோக்கம் அவனுக்குப் புரியவில்லை.
“அதன் கால்களைப் பார்த்தாயா?” என்றாள்.
“காட்டுக்கோழியின் காலின் பின்புறம் சிறுவிரல் ஒன்று இருக்கும். அதைப்போலவே  காட்டெருமையின் பின்னங்கால் குளம்பின் பின்புறம் சிறுதசை ஒன்று வளர்ந்திருக்கும். சரியாக அந்தத் தசையை அடித்துவிட்டால், அதன் பின்னங்கால் நரம்புகள் இழுத்துக்கொள்ளும். அதனால் காலை நகர்த்த முடியாது. இருந்த இடத்தில் இருந்துதான் போராடும். அதன் பிறகு, அதை ஆயுதம்கொண்டு வீழ்த்திவிடலாம்” என்று குறிப்பு சொன்னாள் கிழவி.
சூலிவேள் அன்று பார்த்த காட்சியை நினைத்தான். ‘மூன்றுமுறை மலைச்சரிவின் மேலும் கீழுமாக ஓடியவன், மூன்றாம்முறை இறங்கும்போது சட்டென ஓரிடத்தில் விழுதைப் பிடித்து சுழன்று காட்டெருமையின் பின்புறம் தாக்கியது இதைத்தானா?’ எனத் தோன்றியது. அவனின் கோபத்தைக் கிழவி தூண்டியபோது தூதுவைச் சிரித்துக்கொண்டே போனதற்கான காரணம் இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது.
றுநாள் பொழுது மறைவதற்குச் சிறிது நேரத்துக்கு முன், சூலிவேள் மந்தையை நோக்கித் தட்டுத்தடுமாறி நடந்து வந்தான். அவன்மேல் பழையபடி கீறல் காயங்கள் இருந்தன. குருதி கசிந்துகொண்டிருந்தது. ‘மீண்டும் ஆற்றில் விழுந்து, பாறையில் அடிபட்டு வருகிறானா?’ என்று பார்ப்பவர்கள் எண்ணினர். ஆனால், அவன் கைகளில் வெற்றிலை இருந்தது. ‘இதை ஏன் பறித்து வருகிறான்?’ என்பது புரியவில்லை.
வந்தவன் மந்தையில் ஏறி அமர்ந்தான். ஊர்வட்டியில் வெற்றிலையை வைத்தான். எல்லோரும் கூடினர். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘வெற்றிலையைப் பறிக்கப்போய் ஏன் இவ்வளவு காயங்களுடன் வந்திருக்கிறான்?’ என்று  ஒருவர்  மாற்றி  ஒருவர்  கேட்டுக்கொண்டிருந்தனர். மூன்று இளைஞர்கள் மந்தை நோக்கி வந்து சொன்னார்கள், “அவன் காட்டெருமையை வீழ்த்தி, வெற்றிலையைப் பறித்து வருகிறான்” என்று.
ஊர் அதை நம்பவில்லை. “நீங்கள் சொல்வது உண்மையா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டனர். அந்த இளைஞர்கள் சொன்னார்கள், “நாம் பலமுறை மேலும் கீழும் ஓடவிட்டுத்தான் காட்டெருமையின் பின் நரம்பை அடிப்போம். இவனோ முதல்முறையே அடித்துவிட்டான்.”
ஊரார் அதிர்ந்துபோனார்கள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P88c
சூலிவேள் ஊர்வட்டியில் வெற்றிலையை வைத்தபடி பேசாமல் இருந்தான். ஊராருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. சூலிவேள் எதுவும் பேசவில்லை.
‘இவன் என்ன கேட்க வருகிறான்?’ என்பதும் ஊராருக்குப் புரியவில்லை. ஊரின் வயது முதிர்ந்த கிழவன் கூட்டத்தை விலகச்சொல்லி உள்ளே வந்தார். அவன் ஊர்வட்டியில் வைத்திருந்த வெற்றிலை ஒன்றை எடுத்து திருப்பிப் பார்த்தார். அவர் கண்கள் வியப்புக்கொண்டு விரிந்தன. அடுத்த வெற்றிலையை எடுத்து பின்புறம் திருப்பிப் பார்த்தார். ஊரார்கள் அவரையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர். அவரோ அவன் வைத்த அனைத்து வெற்றிலைகளையும் எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டார்.
“இவன் முன்வைத்துள்ளது அனைத்தும் ஆண் வெற்றிலை” என்றார். திரையர்கள் திகைத்துப்போனார்கள். மிகச்சிலருக்கு மட்டும்தான் வெற்றிலையில் உள்ள வேறுபாடுகள் தெரிந்தன. வெற்றிலையின் பின்புறம் இருக்கும் நரம்புகள் மூன்றும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒன்றுபோல் இறங்கியிருந்தால், அது ஆண் வெற்றிலை. மேலே இருப்பது இறங்கியும் மற்ற நரம்புகள் விலகியும் இறங்கியும் இருந்தால்
அது பெண் வெற்றிலை.
சூலிவேள் ஊர்வட்டிலில் ஆண் வெற்றிலைகளைக் கொண்டுவந்து வைத்துவிட்டான். இப்போது எதிர் வெற்றிலையாக, பெண் வெற்றிலையை ஊர் வைத்தே ஆக வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தனர். இனி புறப்பட்டு வெற்றிலைக்கொடி இருக்கும் மேல் காட்டுக்குப் போவதற்குள் இருட்டிவிடும். அதன் பிறகு, பெண் வெற்றிலையாகத் தேடிப் பறித்து வருவதெல்லாம் இயலாத செயல். ஆனால், பொழுது மறைவதற்குள் எதிர் வெற்றிலையை வைக்க வேண்டும் என்பது ஊரின் மரபு. என்ன செய்யலாம் என்பதறியாது எல்லோரும் திகைத்துக்கொண்டிருக்கையில், தூதுவை மந்தை நோக்கி வந்தாள்.
இவள் ஏன் உள்ளே வருகிறாள் என்பது யாருக்கும் புரியவில்லை. அனைவரையும் விலகச் சொல்லியபடி நடுமந்தைக்கு வந்த அவள், ஊர்வட்டிலில் எதிர் வெற்றிலையை வைக்கவேண்டிய இடத்தில் கால் மடக்கி அமர்ந்தாள்.
வலது தோள்பட்டையில் கிடந்த ஆடையை மெள்ள விலக்கியபடி சூலிவேளின் கண்களை நேர்கொண்டு பார்த்தாள்.
அவளின் தோளில் கரும்பச்சை நிற வெற்றிலை மச்சம் இருந்தது. அதற்குள் ஓடிய நரம்புகள் ஒன்றுபோல் இல்லாமல்தான் இருந்தன.  வியப்படைந்த கண்களில் மகிழ்ச்சி பூக்கத் தொடங்கியது. ஊருக்கு, பின்னங்கால் நரம்பில் அடிவிழுந்து சரிந்ததுபோல் இருந்தது. எல்லோருக்கும் செய்தி புரிந்தது.
திரையர்களுக்கு இணையான வீரன் என்பதை சூலிவேள்  மெய்ப்பித்துவிட்டான். இனி மறுத்துச் சொல்வதற்கு எதுவும் இல்லை. கொண்டாட்டம்  தொடங்கியது. காட்டெருமையின் கறியை ஊன்சோற்றில் பிசைந்தனர் திரையர்கள்.
அந்தப் பெருங்கிழவன் மட்டும் கிழவியை முறைத்துப் பார்த்தபடி போனான். காட்டெருமையோ வெற்றிலையோ பின்னால் இருக்கும் நரம்பில்தான் எல்லாம் இருக்கிறது என்று சொல்லிக்கொடுத்தவள் அவளாகத்தான் இருக்கும் என்பது அவருக்குப் புரிந்திருந்தது.
ஊன்சோறு பரிமாறப்பட்டது. பச்சைக்கொடி பற்றி எரிய, பறக்கும் பறவைகள் மயங்கிச் சரிய, அந்த இரவு முழுவதும் பெண் வெற்றிலையை விரும்பி உண்டான் சூலிவேள். ஆண் வெற்றிலையின் காரம் தூதுவைக்கு மிகவும் பிடித்திருந்தது. நாக்குக்குள் சுழலும் வெற்றிலை நாக்குகளைச் சுழற்றியது. சிவப்பேறிய இதழ்களுடன் பல இரவுகளைக் கடந்து, ஒரு நற்பகலில் எவ்வியூர் வந்தடைந்தனர்.
பாரி, கதையை முடித்தபோது இருள் சூழ்ந்து இறங்கத் தொடங்கியது. அவர்கள் எவ்வியூருக்குள் நுழைந்தனர். “திரையர்களின் கதைதான் இவ்வளவு வேகமாக இழுத்துவந்தது. இல்லையென்றால், நாம் ஊரடைய நள்ளிர வாகியிருக்கும்” என்றான் பாரி. கதையின் மயக்கத்திலிருந்து மீளாதவராக கபிலர் இருந்தார்.
பாரி சொன்னான், “இது எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் நடந்த கதை. அதன் பிறகு, திரையர்களுக்கும் வேளீருக்குமான திருமண உறவுகள் பெரிதாக நடக்கவில்லை. காரணம், அவர்களின் நாடு இந்த மலைத்தொடரின் ஏதோ ஓர் எல்லையில் இருக்கிறது. எப்போதாவது ஒருமுறை ஊர்வழிபாட்டுக்கு வந்து அழைத்துச் செல்வார்கள் என்று என் தந்தை சொல்வார். அதுவும் அவரின் தந்தையார் காலத்துக்குப் பிறகு வரவில்லை என்பார்.”
“நிலப்பரப்பால் ஏற்பட்ட இடைவெளி அல்லவா?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P88d
“ஆம். ஆனால் உயிருக்குள் கலந்துவிட்டால், நிலவியல் இடைவெளியால் என்ன செய்ய முடியும்?” என்றான் பாரி.
அவன் சொல்லவருவது கபிலருக்குப் புரியவில்லை.
“இளையவளை நன்கு கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டான்.
“சங்கவையையா?”
“ஆம்.”
“என்ன?”
சின்ன புன்னகையுடன் பாரி சொன்னான், “அவளின் வலது தோள்பட்டையின் முன்புறம் கரும்பச்சை மச்சம் ஒன்று இருக்கிறது. அவள் வளர்ந்து பெரியவளானால், அது வெற்றிலையின் வடிவம்கொள்ளும்.”
கபிலர் திகைத்துப்போனார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. வாய் மட்டும்  முணுமுணுத்தது. “கதைகள் ஒருபோதும் முடிவதில்லை.”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 1:08 am

ருநீலத்தில் ஏறியிருக்கும் மெல்லிய வெண்ணிறம் போதுமான அளவுக்கு இல்லை. சற்றே அதிகப்படுத்தச் சொன்னான் அந்துவன். அவன் சொன்னபடி ஓவியர்கள் நிறத்தைக் கூட்டிக்கொண்டிருந்தனர். அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தவன், இளைப்பாறலாம் என த் தேவாங்கின் கூண்டு அருகே உட்கார்ந்து சிறுகுச்சியால் அவற்றை அடிக்கப்போவதைப்போல் ஓங்கினான். அவை இங்குமங்குமாக ஓடி அலைக்கழிந்தன. மீண்டும் மீண்டும் அப்படியே செய்தான்.  
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P85a
அந்துவனின் மனம் அமைதியற்று இருந்தது. மீண்டும் அண்ணாந்து பார்த்தான். ஓவியர்கள் அவன் சொன்னதைப்போல வெண்ணிறத்தைச் சற்றே கூட்டியிருந்தனர். ஆனாலும், அவனுக்கு நிறைவாயில்லை.
மனம் தத்தளித்துக்கொண்டிருந்தது.

இந்தப் பெருவிழாவின் முதல் நிகழ்வான வெற்றிலை மாற்றி மணமுடிக்க வாக்களிக்கும் நிகழ்வில், அரண்மனைக் கணியனான தான் இல்லாததை அந்துவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனம் அலைமோதியது. கூண்டுக்குள் இருக்கும் தேவாங்குகளையும் அதேபோல அலைமோதவைத்தது. ‘அரண்மனைக் கணியன் ஏன் வரவில்லை?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டிருக்குமா அதற்கு திசைவேழர் என்ன பதில் சொல்லியிருப்பார் எனச் சிந்தித்தான். மனதின் வலியும் புறக்கணிப்பின் வேதனையும் இன்னும் அதிகமாகின.

“வலியையும் வேதனையையும் வெளிக் காட்டாமல் வாழ்வதுகூட ஒருவிதமான கலைதான்” என்றாள் பொற்சுவை.

தோழி சுகமதிக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. பொற்சுவையை முழுமையும் அறிந்தவள் அவள் மட்டும்தான். எனவே, இந்தக் கூற்றை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. கண்கள் கலங்கின. வெளிக்காட்டாமல் இறுகிக்கொண்டாள்.

“வணிகர் குலத்தில் பெண்ணாகப் பிறக்கக் கூடாது சுகமதி. அதுவும் அளவற்ற செல்வம்கொண்ட ஒரு குடும்பத்தில் பிறக்கவே கூடாது. இணையற்ற பொன்னொளியில் திரளும் கண்ணீர் எவர் கண்களிலும் படாது. வழிந்தோடுவது நம் கண்ணீர்தான் என்பதை சிலநேரம் நம்மாலேயே உணர முடியாமல் போய்விடும்.”

என்ன சொல்வது எனத் தெரியாமல் விழித்தாள் சுகமதி. பொற்பல்லக்கில் கொண்டுவரப்பட்ட கூண்டு அப்படியே இருந்தது. ‘பாண்டரங்கத்தில் வேலைகள் முடிந்ததும், அதன் எதிரில் கட்டப்பட்டுள்ள திகிரி மேடையில் வைத்துக்கொள்ளலாம். அதுவரை இங்கேயே இருக்கட்டும்’ எனச் சொன்னதால் சக்கரவாகப் பறவையைப் பொற்சுவையின் அறையிலேயே வைத்திருந்தனர். அதைப் பார்த்துக்கொண்டேதான் பொற்சுவை கேட்டாள்.

“என் மண நாளுக்குள் இது பறந்துவிடுமா சுகமதி?”

விடையின்றித் தத்தளித்தாள் சுகமதி.

பொற்சுவையின் குரல் உடைந்துவிடாமல் மிக நிதானமாக இருந்தது.

``கார்காலத்தின் இறுதி மழைத்துளியை ஏந்தியபடி இது பறந்தபின் என் கண்கள் பார்த்திருக்க என்ன இருக்கிறது இந்த அரண்மனையில்?”

பொற்சுவையின் மனதை ஆற்றுப்படுத்த ஒற்றைச் சொல்லின்றித் தவித்தாள் சுகமதி.

கூண்டுக்குள் விரல்களைவிட்டு சக்கரவாகப் பறவையின் உதிர்ந்த இறகு ஒன்றை எடுத்தாள். “என்ன ஓர் உறுதி இந்தப் பறவைக்கு, ‘மழைநீரை மட்டுமே அருந்துவேன்!’ என. நம்மால்தான் எந்த உறுதிப்பாட்டையும் கொண்டிருக்க முடியவில்லை.”

சுகமதி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். உள்ளுக்குள் கிடக்கும் ஓராயிரம் சொற்களை வெளியில் கொட்டுவதுதான் பொற்சுவைக்கு இப்போது தேவை. எனவே, அவள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேசட்டும் எனக் காத்திருந்தாள் சுகமதி.

“நானும் உறுதி ஏற்றிருப்பேன்... கடற்புயல்  மட்டும் என் அண்ணனைக் காவுகொள்ளாமல் இருந்திருந்தால்! அவன் இன்றி நான் யாரை நம்பி உறுதி ஏற்பது?”

சுகமதி எவ்வளவோ முயன்றும் அவளுடைய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், மறைத்துக்கொள்ள முடிந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P85b
“என் தாயின் மரணம்கூட எனக்கு நினைவில்லை. அப்போது நான் சிறுபிள்ளை. ஆனால், விரல்பிடித்து எனக்கு வாழ்வைச் சொல்லிக்கொடுத்தவன் என் அண்ணன் தான். நான் காதல் கொண்டதை அவனிடம் சொன்னபோது அவனுக்குள் ஏற்பட்ட மகிழ்வை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

“சாவகப் பயணம் முடித்து வந்ததும் நானே தந்தையிடம் சொல்லி இதற்கான ஒப்புதலைப் பெறுவேன்” என்றான்.

ஆனால், எல்லாவற்றையும் ஒரு புயல் அடித்துக்கொண்டு போனது.

சுகமதி எதுவும் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

`நான் அமைதியைக் குலைக்காமல் இருப்பதுதான் சரி, ஏனென்றால், பொற்சுவை பேசிக்கொண்டிருப்பது என்னோடு அல்ல... அவளின் ஆழ்மனதோடு. இந்த உரையாடல் ஏதோ ஒருவகையில் அவள் மேலெழுந்து வர உதவியாக இருக்கும்’ என எண்ணினாள்.

“நான் மிகவும் உறுதியானவள் எனச் சிறுபிள்ளையில் இருந்து பாராட்டப் பட்டுள்ளேன். என் உறுதியின் மீது எனக்கு நம்பிக்கை வரவைக்க ஏதாவது வழி உண்டா சுகமதி?”

பேசவேண்டிய இடம் இதுதான் என, சுகமதிக்குத் தோன்றியதும் பதில் சொன்னாள்...

“உண்டு இளவரசி.”

“என்ன?”

“உங்களைக் கலங்கடிக்கும் எதையும் உங்களுக்குள் அனுமதிக்காதவர்தான் நீங்கள். அதனால்தான், காதலையும் உங்களுக்குள் எளிதில் அனுமதிக்கவில்லை. ஓர் ஆண் உங்களின் காதலைப் பெற எவ்வளவு காலம் ஆனது என்பதை நான் அறிவேன். இப்போதும், அதேபோல உங்களைக் கலங்கடிக்கும் எதையும் உங்களுக்குள் அனுமதிக்காதீர்கள்.”

அசட்டுச் சிரிப்போடு கேட்டாள்...

“பொதியவெற்பனை அனுமதிக்காதே என்கிறாயா?”

சுகமதி ஒரு கணம் நடுங்கிப்போனாள்.

“நான், எண்ணங்களைச் சொல்கிறேன். அலைக்கழிக்கும் நினைவுகளைச் சொல்கிறேன். எந்த இடத்திலும் உங்களுக்கான வாழ்வை அமைத்துக் கொள்ளும் வல்லமைவாய்ந்தவர் நீங்கள். இசையும் இலக்கியமும் இருக்கும் வரை உங்களுக்கான உலகை யாராலும் தட்டிப் பறித்துவிட முடியாது.”

“காதல் எல்லாவற்றையும் தட்டிப்பறித்துவிடும் சுகமதி. அதுவும் பறிக்கப்பட்ட காதலின் ஆவேசம் எளிதில் அடங்காது. பூவுக்குள் இருந்து விதை முளைவிடுவதைப்போல, இன்னொரு முறை காண முடியாத அதிசயக் கனவு. அது என்னைவிட்டு ஒருபோதும் பிரியாது. அந்த நினைவுக்குப் பிறகு, என் இளமை முகிழ்ந்த கணம் இருக்கிறது. பற்றி எரியும் காமம் இருக்கிறது. சிறுமுலைகொண்டு பெருஞ்சினம் தீர்த்த பொழுதுகள் மறைந்து கிடக்கின்றன. நான் என்ன செய்வேன் சுகமதி?

தட்டுகளை மாற்றி தாம்பூலம் தரித்தபின் என்னிடம் சொல்ல என்ன இருக்கிறது என நினைத்துவிட்டார்கள். அண்ணகர்கள் பல்லக்கைக் கீழிறக்கிய இடத்தில் நான் இறங்கிவிடலாம்; ஆனால், எனது மனம் ஒருபோதும் கீழிறங்காது. அது, இந்த உலகின் அரிய காதலைத் தன்வயம் கொண்டது. நானே நினைத்தாலும் தனது நினைவு களைவிட்டு அது விலகாது.”

நினைவுகளைவிட்டு ஒருபோதும் அகலாத நாளாக இந்த நாள் இருக்கப்போகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால், இந்த மண்ணில் நடக்கும் ஒரு திருமணத்துக்கு யவனர்கள் பெரும் ஏற்பாட்டோடு வந்து, பரிசுகள் வழங்கி, மரியாதை செய்வது இதுவே முதன்முறை.

நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கும் இந்த வணிகத்தில் இன்றைய நாள் மிகவும் முக்கியமானது. யவனப் பெருவணிகன் வெஸ் பானியன் தலைமையில் அவர்கள் அணிதிரண்டு வந்துள்ளனர். அரசப் பிரதிநிதிகள், வணிகர்கள், துறைமுகப் பொறுப்பாளர்கள் எனப் பலரும் ஆறுக்கும் மேற்பட்ட நாவாய்களில் வந்து இறங்கினர். மிக முக்கியமாக ஹிப்பாலஸ் வந்துள்ளான். கடல்பயணத்தின் சாகசத் தளபதி என யவனர்களால் கொண்டாடப்படுபவன். அவன் வருகை துறைமுகங்களில் தனித்த விழாவாகக் கொண்டாடப்படும் என்று  கடலோடிகள் சொல்வார்கள்.

கொற்கையில் வந்து இறங்கிய எல்லோரும் மதுரைக்கு அருகில் உள்ள யவனச் சேரியில் நன்றாக ஓய்வெடுத்து, தங்களின் முறைப்படி இந்தத் திருமணத்தைக் கொண்டாடிக் களிக்க அரச மாளிகைக்குள் நுழைந்தனர்.
வட்டுடை வீரர்கள் புடைசூழ, யவனப் பேரழகிகள் கைகளில் பரிசுத்தட்டை ஏந்திவர வெஸ்பானியன், ஹிப்பாலஸ், கால்பா, பிலிப், எபிரஸ், திரேஷியன் எனப் பலரும் வந்தனர். அரண்மனையின்  நடுமண்டபத்தில் அவர்களின் வருகையை எதிர்பார்த்து, பேரரசரும் சூல்கடல் முதுவனும் வீற்றிருந்தனர்.

மதுரையின் எல்லா திசைகளிலும் இரவு, பகலாகக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. யவனர்கள் வந்து இறங்கிய திலிருந்து கொண்டாட்ட பேரொலியைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால், இவையெல்லாம் அரண்மனைக்குள் நடக்கும் கொண்டாட்டத்துக்கு ஈடாகுமா? அவர்கள் நுழைந்த கணத்திலிருந்து இன்றைய நாள் கொண்டாட்டம் தொடங்கியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P85c
தங்களுக்கான வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின் வெஸ்பானியன் அறிவித்தான்...

“இந்தத் திருமணத்தை முன்னிட்டு எம் அரசர் பொன் நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளார். உங்களின் அதிசிறந்த உயிரினமான யானையை அதில் பொறித்துள்ளார். அந்த நாணயத்துக்கு ‘மீனாள்’ எனப் பெயர்சூட்டி இந்தப் பாண்டிய அரசைப் பெருமைப்படுத்தியுள்ளார்” என அறிவித்து, தங்கத் தட்டிலிலுள்ள நாணயங்களைப் பேரரசரின் முன்னும், சூல்கடல் முதுவனின் முன்னும் நீட்டினார். அவர்கள் வியப்பு குறையாமல் அதை நீண்டநேரம் பார்த்தனர்.

நாற்சதுர வடிவின் நடுவே அச்சுப்பதிக்கப்பட்ட யானை ஒன்று ஒளிவீசி மின்னியது. அதன் மேல் `மீனாள்’ என யவனத்தில் எழுதியிருந்ததை, சூல்கடல் முதுவன் வாசித்துச்சொல்ல அகமகிழ்ந்தார் பேரரசர். அந்த நாணயங்களைத் தன் இருகைகளாலும் அள்ளி அவையை நோக்கி வீசினார். உற்சாகப் பேரொலி எங்கும் எதிரொலித்தது.

நூறுகால் மண்டபத்தின் ஆடலரங்கு இதுவரை இல்லாத பேரலங்காரத்தைக் கொண்டிருந்தது. விருந்தினர்கள் முப்புறமும் இருந்து மேடையைப் பார்த்தபடி அமர்ந்தனர். மேடையின் முன்நெற்றியில் நால்வகை முரசுகள் வைக்கப்படுவதற்கான கட்டில்கள் முதலில் கொண்டுவரப்பட்டன. அதன்பின், வட்ட வடிவ முறிகள் கொண்டு வரப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து முரசங்களை எடுத்துவந்தனர்.

தன்னந்தனியாக ஒற்றை மனிதன் ஒழுங்கற்ற ஆடையை அலங்காரமாகப் போத்திக்கொண்டு உள்நுழைந்தான். உள்நுழையும் கட்டியங்காரனைப் பற்றி மொழிபெயர்ப்பாளர்கள் யவனர்களுக்கு அறிமுகம் செய்தனர். அரங்கில் நுழைந்தவன், நான்கு முரசுகளும் வைக்கப்பட்டிருந்த கட்டில் கால்கள் எந்தெந்த நாட்டின் காவல் மரங்களை வெட்டியெடுத்துச் செய்யப்பட்டவை எனப் பட்டியலிட்டான். பேரரசின் வீரம் போற்றும் வரலாறு, முரசுக்கட்டிலின் கால்களிலிருந்து தொடங்கியது. கூட்டத்தினரின் உற்சாகப் பேரொலி எங்கும் எதிரொலித்தது. திரி முறுக்கிக் கட்டப்பட்ட வட்டவடிவ முறிகட்டில் கால்களின் நடுவில் வைக்கப்பட அதன் மீது முரசின் அடிப்பகுதி பொறுத்தப்பட்டது.

எத்தனை நாட்டு அரசியர்களின் கூந்தலை அறுத்துத் திருகிய முறி இதுவெனக் கட்டியங்காரன் சொன்னபோது அரங்கு அதிர்ந்து குலுங்கியது. அவன் சொல்லும் பெயர்ப்பட்டியல் நீண்டபடியே இருக்க, அரங்கின் அதிர்வோசை மேலும் மேலும் கூடியது. அந்தப் போர்களின் வெற்றிகளுக்குப் பின்னர், நிகழ்ந்த கொண்டாட்டங்கள், அரங்கினுள் மீண்டும் நிகழத்தொடங்கின.
 
மலை, ஆறு, நாடு, ஊர், யானை, குதிரை, மாலை, முரசு, கொடி, ஆணை எனப் பாண்டியப் பேரரசின் பத்து பெரிய அடையாளங்களுக்கான திருப்பெயர்களை வரிசைப்படுத்தி வணங்கினான் கட்டியங்காரன்.

சூல்கடல் முதுவனுக்கு ஆடல்களைக் காண்பதில் பெரிதாக ஆர்வம் இல்லை. வந்ததிலிருந்து பாண்டிய நாட்டின் மகா கணியன் திசைவேழரைச் சந்தித்து உரையாட வேண்டும் என்பதில் விருப்பத்தோடு இருந்தார். தாம்பூலம் தரித்த நாள் அன்று சந்தித்து வணங்கிக் கொள்ளத்தான் நேரம் கிடைத்தது. பேசிக்கொள்ள முடியவில்லை. இந்த நேரத்தை அதற்குப் பயன்படுத்தலாம் என எண்ணியவர், உதவியாளர் களிடம் அவரின் மாளிகைக்கு அழைத்துச்செல்ல உத்தரவிட்டார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P85d
அரண்மனையின் தென்திசை மாளிகையில் தான் அவர் தங்கியிருந்தார். மாளிகையின் மேல்மாடத்தில் ஒளிரும் விண்மீன்களைப் பார்த்தபடி இருந்த திசைவேழரை, மேல்மாடம் சென்று வணங்கினார் சூல்கடல் முதுவன்.

திசைவேழர் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். “ஆடல் அரங்கில் இருக்கவேண்டிய நேரத்தில் என்னைக் காண வந்திருக்கிறீர்கள்?” என்றார்.

“ஆடல் மகளிரை எங்கும் பார்க்கலாம். திசைவேழரை இங்கு மட்டும்தானே பார்க்க முடியும்.”

புன்முறுவல் பூத்தபடி இருவரும் இருக்கையில் அமர்ந்தனர்.

“இந்த விரிந்த வானத்தை எங்கும் பார்க்கலாம். ஆனால், இத்தனை கலைஞர்கள் பங்கெடுக்கும் ஆடல் நிகழ்வை இந்த அரங்கில்தானே பார்க்க முடியும். நீங்கள் ஏன் அங்கு வராமல் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்?” என எதிர் வினாவை எழுப்பினார் சூல்கடல் முதுவன்.

திசைவேழரின் உதட்டில் மெல்லிய சிரிப்பு ஓடியது. இருவரும் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

“எங்கிருந்தும் வானத்தைப் பார்க்கலாம். ஆனால், எங்கிருந்து பார்க்கிறோம் என்பதுதானே முக்கியம். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வானத்தைப் பார்க்கும் கோணமும் நான் இருக்கும் இடத்திலிருந்து வானத்தைப் பார்க்கும் கோணமும் வெவ்வேறானவை. கடல் அதன் அலைகளின் வழியாக அறியப்படுவதைப்போல வானம், அதைக் காணும் கோணத்தின் வழியாகத்தான் காட்சிப்படுகிறது.”

“இதற்குத்தான் நான் உங்களைப் பார்க்க வந்தேன். பாண்டிய நாட்டில் நிலைகொண்டுள்ள வானியல் அறிவைப் பற்றியும், உங்களைப் பற்றியும் பெரும்புலவர் கபிலர் பாடியுள்ள பாடல்களைக் கேட்டுள்ளேன். அதனாலே உங்களோடு உரையாட விரும்பி வந்தேன்.”

 “கபிலர் நம்மொழியின் பெருங்கவி. அவருக்கு ஏனோ வானியல் மட்டும் வசப்படவே இல்லை. கோள்மீன்களையும் நாள்மீன்களையும் பற்றி நானும் எவ்வளவோ சொல்லியுள்ளேன். ஆனாலும், அவரது ஐயங்கள் தீர்ந்தபாடில்லை. ஆனால், அவர் படைத்த கவிதைகளைக் கொண்டுதான் பலரும் என்னை அறிந்து கொள்கின்றனர். அறியாதவரைக் கொண்டு அறியப்படுதல் சற்றே நாணச் செய்கிறது” என்றார் திசைவேழர்.
‘கபிலர் மூலம் உங்களை அறிந்தேன்’ எனச் சொல்வது அவருக்கு மகிழ்வைத் தரும் என்று அல்லவா நினைத்தேன். இப்படி ஆகிவிட்டதே எனச் சற்றே அதிர்ச்சி அடைந்தார் முதுவன். ஆனாலும், வெளிக்காட்டிக்கொள்ளாமல் சொன்னார், “நான் செல்லும் எல்லா நாடுகளிலும் காலக்கணியர்கள் இருக்கிறார்கள். அரசரின் அவையில் பெரும் தகுதியோடு அவர்கள் வீற்றிருப்பதை எங்கும் பார்க்கிறேன். அந்தக் கணியர்கள் யார், அவர்களின் கணிப்பு முறை என்ன, அவர்கள் நிலவை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணிக்கின்றனரா, அல்லது கதிரவனை அடிப்படையாகக்கொண்டு காலத்தைக் கணிக்கின்றனரா, அவர்களின் கோணம் எப்படிப்பட்டது... என உரையாடத் தோன்றியதே இல்லை. காலம் முழுக்கக் கடலில் கிடக்கும் நமக்கு, அரண்மனைவாசிகள் சொல்ல ஒன்றுமில்லை என்றுதான் தோன்றும். ஆனால், பாண்டியப் பேரரங்கில், எண்ணிலடங்காத கலைஞர்கள் சுழன்றாடும் ஆடல் நிகழ்வை விட்டுவிட்டு உங்களைக் காண என் மனம் உந்தித்தள்ளியதற்குக் காரணம், கபிலர் பாடிய பாடல்கள்தான். அவருக்கு வானியலைக் கணிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், உங்களைச் சரியாகக் கணித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.”

சட்டென திசைவேழரிடமிருந்து மறுமொழி வந்துவிடவில்லை. சிறிது நேரத்துக்குப் பின் சொன்னார்...

“நம் மொழி ஆசான்கள் எல்லோருமே வானியல் ஆசான்களாக இருந்துள்ளனர். கோள்களின் பெயரையே நாள்களின் பெயராகச் சூட்டினர். விண்மீன் கூட்டங்களுக்குச் சூட்டிய பெயரையே மாதங்களுக்கும் சூட்டினர். இது வெறும் பெயர்சூட்டல் அல்ல. அபாரமான வானியல் அச்சை வாழ்வுக்குள் பொருத்தும் செயல். இந்தப் பெரும் காலச்சுழற்சிக்குள்தான் நமது ஒவ்வொரு நாளும் சுழல்கிறது என்ற உண்மையை நாள் தவறாமல் எடுத்துச்சொல்லும் பேரறிவு. இயற்கையின் சுழல்தட்டில் அமர்ந்து புதுவிசைகொண்டு சுழலும் உயிரினம் நாம்.

இந்தப் பேரறிவின் தொடர்ச்சியைப் பாணர்களிடம் நான் காண்கிறேன். ஆனால், எழுத்து கற்ற புலவர்களிடம் இது இல்லை. காலத்தின் அறிவு கணியர்களுக்கானது எனப் புலவர்கள் நினைக்கின்றனரோ எனத் தோன்றுகிறது. அதுதான் எனது கவலை” என்றார்.

திசைவேழரின் மறுமொழி முற்றிலும் வேறு ஒரு பார்வையைக் கொண்டிருந்தது. அது சூழ்கடல் முதுவனை, மேலும் சிந்திக்கத் தூண்டியது.
ர்ப்பரித்து எழும் பெரும் குரல் அடங்கவே இல்லை. நூறுகால் அரங்கு திணறியது. கட்டியங்காரனின் குரல் அனைவரையும் துடிப்பு நிலைக்கு மேல் ஏற்றிக்கொண்டிருந்தது.

ஆடை, அணி, உண்டி, தாம்பூலம், நறுமணம், காமம், இசை, கொண்டாட்டம் என்னும் எண்வகை இன்பத்தில் திளைக்கத் தொடங்கியது அரண்மனை வளாகம். இந்த இரவு பேரின்பத்தின் இரவு. இந்த இரவின் தொடக்கம், இந்த அரங்கின் கொண்டாட்டத்தின் வழியே தொடங்கியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P85e
எழுவகை முழவுகள் மேடையின் இடது புறம் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. ஆடல் கற்பிப்போன், இசையோன், பாடலாசிரியன், குழலோன், யாழ்வல்லுநர்கள்... என எண்ணற்ற கலைஞர்கள் மேடையில் நிறைந்தனர். கட்டியங்காரன் தன் குரலை உயர்த்திச் சொல்லவும் திரைச்சீலைகள் அகலத் தொடங்கின. எல்லோரின் கவனமும் மேடையில் குவிந்தது. ஏற்றப்பட்ட சிறுவிளக்கின் வழியே பொன்நிற ஒளி சிந்திக்கொண்டிருந்தது. நூறு நரம்புகள்கொண்ட மூன்று யாழ்கள் மேடையின் மூன்று புறமும் இருந்தன. யாழை மீட்ட அருகே வந்த பெண்கலைஞர்கள் நரம்பின் மீது தம் விரலை மெள்ள நகர்த்தினர். அதிரும் நரம்பின் வழி இசை கசியத் தொடங்கியது.

கூட்டத்தின் ஆர்ப்பரிக்கும் குரல் மெள்ள ஒடுங்கத் தொடங்கியபோது நடனமங்கைகள் எழுவர் வந்து நடுக்களம் இறங்கினர். ஒரு மெல்லிய வட்டமடித்து அறுவரும் உட்கார, நடுவில் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள். யாழிசை நின்றுவிட்டது. பிற இசைக்கருவிகள் எவையும் இசைக்கப்படவில்லை. விளக்கின் நாவுகள் தவிர, மேடையில் அசையும் பொருள் எதுவும் இல்லை. நடுவில் நிற்பது சிலையாகப் புலப்பட்டது. பார்வையாளர்கள் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். யவனர்களுக்கு விளக்கிச் சொல்ல எதுவும் தேவைப்படவில்லை.

சற்று இடைவெளிக்குப் பின். சிலை மெள்ள அசைந்து, வலது காலைத் தூக்கி மேடையின் முன்புறம் சட்டென எவ்விக் குதித்தது. குதித்த அந்தத் துள்ளலுக்குள் அறுபது இசைக்கருவிகளும் இணைந்தன. யாழின் நரம்பும் முழவின் தோலும் பறையின் முகமும் ஏககாலத்தில் அதிர்ந்தன. குதித்த அவளின் காலடி தரைதொடும்போது நிலம் வெடிப்புறுவதைப்போல பேரோசை எழுந்தது. எழுந்த பேரொலின் மீது கூட்டத்தினரின் ஆர்ப்பரிப்பு விசைகொண்டு மோதியது.

இன்னும் அவளின் விழிகள் சுழலத் தொடங்க வில்லை. அதற்குள் நூறுகால் மண்டபத்தின் தூண்கள் ஆரவார ஓசையால் தள்ளாடத் தொடங்கின.

யதானதால் திசைவேழரின் நடையில் மட்டுமே தள்ளாட்டம் தெரிந்தது. அவரது கருத்தில் இருக்கும் உறுதி காலத்தால் அசைக்க முடியாததாகத் தோன்றியது. அவரிடம் கேட்க எவ்வளவோ இருந்தும்.

மிகமுக்கியமான கேள்வியை மட்டும் கேட்டார் சூல்கடல் முதுவன்.

“யவனர்கள் ஒரு நாளை 24 பகுதியாகப் பகுக்கின்றனர். காலவட்டத்தை 12 ஆண்டுகள் என  வகுக்கின்றனர். நாமோ ஒரு நாளை 60 நாழிகைகளாகப் பகுக்கிறோம். கால சுழற்சியின் வட்டத்தை 60 ஆண்டுகள் என வகுத்துக் கொண்டுள்ளோம். இதில் எது சரியானது?”

சற்று அமைதிக்குப் பின் திசைவேழர் பேசத் தொடங்கினார், “எது சரி, எது தவறு, என்று ஏன்  வரையறுக்க நினைக்கிறீர்கள்? காலத்தை ஒருபோதும் வரையறுக்க முடியாது. தட்டின் மீது உட்கார்ந்துகொண்டு தராசை எப்படி எடைபோடுவீர்கள்? பகுக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். 

சனிக்கோளும் நிலவும் பிற விண்மீன் கூட்டங்களும் ஒரே அமைப்புக்கு மீண்டும் வந்து சேர 60 ஆண்டுகள் ஆகின்றன என்பதை நம் முன்னோர்கள் கணித்துள்ளனர்.  அதனால்தான் காலச்சுழற்சி வட்டத்தை 60 ஆண்டுகள் என வரையறுத்தனர். அதே அளவு வட்டத்தை ஒவ்வொரு நாளும் கொண்டுள்ளது என வரையறுத் தார்கள். எனவே, ஒரு நாளை 60 நாழிகைகளாகப் பகுத்துள்ளனர்.

எனக்கு யவனர்களின் கால அளவீடு தெரியாது. ஆனால், நீங்கள் சொன்ன குறிப்பில் இருந்து எனக்குத் தோன்றுவது. அவர்கள் வியாழன் கோளை அடிப்படையாகக்கொண்டு கால அட்டவணையை உருவாக்கியிருக்கலாம். வியாழன் ஒரு சுழற்சியை முழுமைகொள்ள 12 ஆண்டுகள் ஆகின்றன. அதையே சுழற்சி வட்டமாக வரையறுத்திருக்கலாம். அதன் அடிப்படையிலே பகலை 12 பகுதிகளாகவும் இரவை 12 பகுதிகளாகவும் பிரித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.”

“இதில் எதைப் பின்பற்றுவது பொருத்தம்?”

“உனக்கு எது தேவைப்படுகிறதோ, அதை எடுத்துக்கொள். உழவனுக்குக் கதிரவனும் வணிகனுக்கு விண்மீனுமே அதிகம் தேவைப் படுகின்றன. இது பொதுவானது. எல்லா வணிகனின் தேவையும் ஒன்று அல்லவே, கடல் வணிகனின் தேவை இன்னும் அதிகத் துல்லியத்தை எதிர்பார்க்கக் கூடியது. எனவே உங்களுக்கானதை நீங்கள் தேர்வு செய்துகொள்ளுங்கள்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 02
திசைவேழரின் மறுமொழி கேட்டு முதுவன் மெய்சிலிர்த்தான். என்ன ஒரு பரந்த அறிவு. இயற்கைக்கு முன் குறுகிநிற்கும் தன்னடக்கம். உண்மை எங்கிருந்தாலும் ஏற்கும் மனநிலை. அதுதான், இவரைப் பேராசானாகப் போற்றச் சொல்கிறது.

ளவரசன் பொதியவெற்பனைப் போற்றித்தான் அந்தப் பாடல்கள் அமைந்திருந்தன. ஆனால் ஆடல், பாடல், அழகு என மூன்றிலும் இணைசொல்ல முடியா ஒருத்தி அதைக் கலை என நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது அது கிளர்த்தும் உணர்வுக்கு அளவு ஏதும் இல்லை.

வழக்கமான வார்த்தைகள் எதுவும் இல்லாத புதுப்பொலிவுகொண்டிருந்தன; அவள் உச்சரிக்கும் வார்த்தைகள். சற்றே குள்ளமான பொதியவெற்பனின் உருவம் கூடலில் எவ்வளவு வாகானது என அவள் பாடும்போது, அவனால் இருக்கையில் எப்படி உட்கார்ந்திருக்க முடியும்.

அவன் இதுவரை நுகராத வாசனை அவன் மூக்குக்கு அருகில் மணம் வீசிச் சுழன்றாடிக் கொண்டிருந்தது. பொதியவெற்பனின் கண்கள் செருகின. இந்த உண்மைகள் எப்படி இவளுக்குத் தெரியும் எனத் தோன்றியது. மறுகணமே தனக்கு எப்படி இவள் தெரியாமல்போனாள் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அடுத்த கணம் இவ்வளவு பேருக்குத் தெரிவதைப்போல இவள் ஏன் ஆடிக்கொண்டிருக்கிறாள் எனக் கோபம் வந்தது.

அவள் ஆடினாள்; அவன் அடங்கினான்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்


Sponsored content

PostSponsored content



Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக