புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
3 Posts - 5%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Rutu
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Pradepa
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
219 Posts - 21%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Rutu
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 4:42 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p21
கொற்றவைக்கூத்தின்  மூன்றாம் நாள். கூட்டத்தின் அளவு பாதிதான் இருந்தது. தரையில் எவரும் உட்காரவில்லை. மூன்று அடிகளுக்குமேல் இருக்கும் திட்டுகளிலும் மரக்கட்டை களிலும்தான் உட்கார்ந்திருந்தனர். இந்த மலையெங்கும் இருக்கும் பாம்புகள், இன்றைய கூத்தைக் கேட்கின்றன என்பது நம்பிக்கை.

ஆடுகளத்தின் முன் ஒரு பனை நீளத்துக்கும் இரு கை அகலத்துக்கும் மரக்கட்டைகளை அடுக்கி, அதில் நெருப்பைப் பற்றவைத்துக்கொண்டிருந்தனர். பற்றிய நெருப்பு, நான்கு முனைகளில் இருந்தும் மெள்ளப் பரவிக்கொண்டிருந்தது.

வழக்கமாகக் கபிலரின் முகக்குறிப்பு அறிந்தே விளக்கம் சொல்லும் பாரி, இமை மூடாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அடுக்கிவைக்கப்பட்ட எல்லா கட்டைகளிலும் நெருப்பு பற்றியது.

 தழல், மேலேறத் தொடங்கியது. சற்று நேரம் கழித்து கபிலர் கேட்டார், “இங்கு என்ன நடக்கிறது?”

“பாம்புக்கு நீர் கொடுக்கும் நாகரவண்டுகள் இன்னும் வந்து சேரவில்லை.”

கபிலர் சுற்றும்முற்றும் பார்த்தார். சூழல் வழக்கம்போல் இல்லை. நாகர்குடி பாணன் ‘பகுளி’ என்ற பறையை இசைக்கத் தொடங்கினான். அதன் ஓசை சன்னமாக வெளிவந்தது. கபிலர், இசைப்பவனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு பாரியிடம் கேட்டார், “நாகரவண்டுகள் வந்துவிட்டனவா?”

“அவை வந்த பிறகுதான் ஆட்டம் தொடங்கியது.”வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p11

``எங்கே, யார் ஆடுவது?” எனக் கேட்டார் கபிலர்.

“உற்றுப்பாருங்கள், நெருப்பின் பின்புறம் என்ன நடக்கிறது என்று.”

கபிலர் சற்றே கூர்ந்து கவனித்தார். நெருப்பின் பின்புறம் வளைந்தும் நெளிந்தும் இரண்டு உருவங்கள் ஆடிக்கொண்டிருந்தன. எரியும் தழலுக்குப் பின்புறம் இருளின் அசைவுகள்போல் அவை இருந்தன.

``கை புணர்ந்தாடும் துணங்கை ஆட்டம்” என்றான் பாரி.

``அவர்களை நாம் பார்க்கக் கூடாது என்பதற்காக நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறதா?” என்று கேட்டார் கபிலர்.

``இல்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு, அவர்கள் நெருப்புக்குள் இறங்கி ஆடுவார்கள்” என்றான்.

நெருப்பு எரிந்து முடிந்த பிறகு, கங்குகளின் மீது ஆடத்தான் இந்த ஏற்பாடு எனப் புரிந்துகொண்டார் கபிலர்.

பின்புறம் ஆடுபவர்களின் உடல்மொழி மாறியது. பாம்புத்துள்ளல் தொடங்கியது. நாகக்குடியின் கதையை, பாணன் தொடங்கினான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p3
ருக்குமலையைச் சேர்ந்த நாகர்கள்தான் இந்த மலைத்தொடரில் மிகவும் பழைமையான குடிகள். ‘நாகம், இவர்களின் சொல் கேட்கும்; இவர்களின் வாசனை அறிந்து விலகிச் செல்லும். இவர்களால் நாகத்தைக் கட்டுப்படுத்த முடியும்’ என இவர்களைப் பற்றி பலவிதமான பேச்சுகள் இந்த மலை முழுவதும் உண்டு.

தேறிமலையின் அடிவாரத்தில் `சேரலர்' என்ற ஒரு குலம் உண்டு. எருக்குமலையும் தேறிமலையும் ஒரே மலைத்தொடரின் இரு வேறு பகுதிகள். எருக்குமலை, தேறிமலையைவிட மிக உயர்ந்து பரந்தது. அந்த மலையின் மீதுதான் நாகர்கள் இருந்தனர். தேறிமலையின் அடிவாரத்தில் சேரலர் இருந்தனர்.

சேரலர் குடி, மலை அடிவாரத்தின் சமதளத்தில் இருந்ததால் வேளாண்மை, வணிகம் என தங்களின் செயல்களை விரைவாகப் பெருக்கியது. வளமும் கூடியது. பெருஞ்சேரல்தான் அந்தக் குலத்தின் தலைவனாக இருந்தான். நீண்டகாலம் அவனது தலைமையில் சேரலர் குலம் தழைத்தது. அவனுக்கு வயது கூடியது. தோலில் சுருக்கம்படியத் தொடங்கியது.

ஒருநாள் அவனது ஊர் மன்றலில் குடிக்கூத்து நடந்துகொண்டிருந்தது. பெருஞ்சேரலும் அவன் குலமக்கள் அனைவரும் அதைக் கண்டு மகிழ்ந்தனர். அப்போது கூத்தாடிய இளம்பெண் ஒருத்தி, கூத்தின் வேகத்துக்கு ஏற்ப கண்களைச் சுழற்றிச் சுழற்றி ஆடினாள். அவளது கண்கள் தன்னைத்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றன எனப் பெருஞ்சேரல் நினைத்தான். நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் தெரிந்தது, அவளது கண்கள் சுழன்று வந்து மொய்த்தது தன்னை அல்ல; தனக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கும் வீரனை என்று. அன்று இரவு முழுவதும் சேரலுக்குத் தூக்கம் கொள்ளவில்லை. அழகியின் கண்கள் தன்னைத் தாண்டிப்போன கணத்தை அவனால் தாங்க முடியவில்லை.

`சேரல்குலத்தின் வளம்பெருக்கி, திறன்கூட்டிய மாவீரன்' எனப் புகழப்பட்ட தன்னை, வயோதிகம் வந்து பற்ற நினைப்பதை அவனால் ஏற்க முடியவில்லை. தோலில் ஏற்படும் சுருக்கங்களைக் காண, கண்கள் மறுத்தன. ``சுருக்கம் களைய வழி உண்டா?” எனக் கேட்டு, திசையெங்கும் ஆட்களை அனுப்பினான்.

வடதிசை போனவன் வந்து சொன்னான், “நான் பார்த்த பெருமுனி ஒருவன், இதற்கு வழி உண்டு எனச் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p4சொன்னான். ஆனால், என்னவென்று சொல்ல மறுத்துவிட்டான்” என்றான்.

வெகுவிரைவில் அந்த முனி தேறிமலைக்கு வரவழைக்கப்பட்டார். “தேகத்தின் சுருக்கம், மரத்தின் சருகைப்போல உதிரக்கூடியதுதான்” என்றார் அவர்.

“அதற்கான வழியைக் காட்டுங்கள்” என்று பெருஞ்சேரல் வேண்டி நின்றான்.

சிறு குண்டம் அமைத்து, அதில் பலவிதமான மரக்குச்சிகளைப் போட்டுத் தீமூட்டி, அந்தப் புகை நடுவே நின்று அந்த முனி சொன்னார், “நாகங்கள் சட்டையைக் கழற்ற ஒரு மூலிகையை உண்ணும். அந்த மூலிகையை நீ உண்டால், உனது தேகத்தின் சுருங்கிய மேல்தோல் கழன்று யெளவனம் அடைவாய்” என்று.

“அந்த மூலிகையை எவ்வாறு கண்டறிவது?” எனக் கேட்க, “இந்தப் புவிமேல் அந்த ரகசியத்தை அறிந்தவர்கள் நாகக்குடியினர் மட்டுமே.

நீ அவர்களிடம் கேட்டு அந்த மூலிகையைப் பெற்றுப் பயனடைவாய்” என்றார் முனி.

பெருஞ்சேரலின் மனம் குளிர்ந்தது. முனியின் மனம் குளிரச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்து அனுப்பினான்.

எருக்குமலைக்குச் சென்று நாகர் குடியின் தலைவனைக் காணுமாறு, தனது அவையினருக்குப் பெருஞ்சேரல் உத்தரவிட்டான். அந்த உத்தரவை ஏற்று மலையேற, யாரும் முன்வரவில்லை. காரணம், நாகர்களைப் பற்றிய கதைகள் அப்படி. நாகர்குடியின் வயதான முதுமகள் உடுத்தியிருக்கும் ஆடையில் இருந்துதான் விரியன்பாம்புக் குட்டிகள் உதிர்ந்து வெளியேறுகின்றன என அவர்கள் நம்பினர். நாகத்தைப் பற்றி எப்போது பேசினாலும் அதைக் கேட்கும் சக்தி அதற்கு உண்டு என நம்பினர். நாகத்தைப் பற்றிய எந்த ஒரு சொல்லும் நாகத்தின் செவியில்தான் போய்த் தங்கும் என்பது எல்லோரும் அறிந்ததே.

``தங்களின் குலத்தலைவனுக்காகப் போக எவருக்கும் துணிவு இல்லையா?” எனக் கேட்டபோது, பெரியவர் பொறையன் முன்வந்தார். திறன்கொண்ட பன்னிரு வீரர்களின் துணையோடு, தான் போய் வருவதாகக் கூறினார். பெருஞ்சேரல் மகிழ்வுற்றான்.

சற்றே தயக்கத்துடன் பொறையன் கேட்டார். “ஒருவேளை அந்த மூலிகையை அவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டால் என்ன செய்வது?”

“வடதிசை முனி சொன்ன இரண்டாவது வழியில் வேண்டிப் பெறுங்கள்” என்றான் பெருஞ்சேரல்.
சரியென பொறையன் சம்மதித்தார். பன்னிரு வீரர்களுடன், பாம்புக்கடிக்கு வைத்தியம் பார்க்கும் பிடார வைத்தியன் இருவருமாக பதினான்கு பேரை உடன் அனுப்ப முடிவானது. வயதில் மூத்த பிடார வைத்தியனுக்கு, இரு காதுகளும் அறுபட்டிருந்தன. இன்னொருவன் வயதில் இளையவனாக இருந்தான். இருவரும் இருவேறு திசைகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். பொறையனோடு சேர்த்து பதினைந்து பேரிடமும் குடிமுனை வாக்குப் பெற்றான் பெருஞ்சேரல். எந்தச் சூழலிலும் அவர்கள் இந்தக் கட்டளையை நிறைவேற்றாமல் இனி நாடு திரும்ப முடியாது.

பதினைந்து பேரும் எருக்குமலையில் ஏறத் தொடங்கினர். நாகர்குடி அல்லாத வேற்றுக்குடியினரின் காலடி, எருக்குமலையில் இதுவரை பட்டதில்லை. முதன்முதலாக அது நிகழ்ந்தது. எருக்குமலையின் அடிவாரம், காட்டுப்புற்களாலும் குறுமரங் களாலும் நிரம்பியதாக இருக்கும். புற்களை விலக்கி அவர்கள் மலையேறத் தொடங்கினர். புது மனிதர்களின் வாடையை நாகங்கள் நன்கு அறியும். அவர்கள் முன்னால் இருக்கும் புற்களை விலக்கி, கால்களை மிகக் கவனமாக முன்நகர்த்திச் சென்று கொண்டிருந்தனர். மலையின் முதல் குன்றைக் கடந்தபோது நிழல்விரியன் ஒன்று நடந்துகொண்டிருந்த ஒருவனின் நிழலுக்குள் நுழைந்தது.

எந்த மனிதனின் நிழலுக்குள் அது நுழைகிறதோ, அவன் நிழலிலேயே அது ஊர்ந்து வந்துகொண்டிருக்கும். நடந்துசெல்பவன் எவ்வளவு வேகமாக நடந்தாலும், மெதுவாக நடந்தாலும் அதுவும் அதே வேகத்தில் நிழலுக்குள் நெளிந்தபடியே வரும். அதன் உடலில் படிந்த நிழலைவிட்டு அது பிரியாது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p5
இளைய பிடாரனின் நாசி, பாம்பின் வாசனையை நுகர்ந்தது. “யாரும் நின்றுவிடாதீர்கள். ஏதோ ஒரு பாம்பு நம் அருகில் வந்துகொண்டிருக்கிறது” என்றான். எல்லோருக்குள்ளும் அதிர்ச்சி பரவியது; வியர்க்கத் தொடங்கியது. என்ன வாசனை என்பது அவனுக்குப் பிடிபடவில்லை. மூத்த பிடாரனைப் பார்த்துக் கேட்டான், “உங்களின் மூக்கை வாசனை எட்டவில்லையா?”

மூத்த பிடாரன், ‘இவனது செயல் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறதே’ என்று நினைத்தபடியே பதில் ஏதும் சொல்லாமல் நடந்துகொண்டிருந்தான். நடந்துசெல்லும் வீரர்கள் அனைவரும் கையில் ஆயுதங்களுடன் இருந்தனர். மனிதன், பாம்பைப் பற்றி பேசும் கணத்திலேயே அது அவனுக்குள்ளே வந்துவிடுகிறது. வெளியே அவன் எந்த வகை ஆயுதங்களை வைத்திருந்தும் என்னவாகப் போகிறது? உள்ளுக்குள் ஏற்படும் நடுக்கத்தை எவரால் நிறுத்த முடியும்?

நடுக்கமின்றி நடந்துகொண்டிருந்தவன் மூத்த பிடாரன் மட்டும்தான். அவனது நாசி, நீண்ட நேரத்துக்கு முன்பே நாவிப்பூ மணத்தைக் கண்டறிந்துவிட்டது. கருவிரியனுக்கும் நிழல் விரியனுக்கும்தான் இந்த வாடை வரும். கருவிரியனாக இருந்தால் வாடை நுகர்வதற்குள் கடி விழுந்திருக்கும். இது நிழல்விரியன்தான். அதனால்தான் நடக்கவிட்டு வந்துகொண்டே இருக்கிறது. யாருடைய நிழலில் வருகிறது என்பதுதான் அவனுக்குத் தெரியவில்லை.

`மனிதரின் நிழலுக்குள் அது நுழைந்துவிட்டால், அந்த நிழலைவிட்டு விலகாமல் வந்துகொண்டே இருக்கும். நிழலுக்கு உரியவன் அதனிடமிருந்து தப்பிக்க ஒரே வழி, நிற்காமல் நடந்துகொண்டே இருப்பதுதான். மாலையில் கதிரவனின் ஒளி மறைந்து மனித நிழல் அதுவாகச் சிதைந்தால் மட்டுமே அது திக்குத்தெரியாமல் திசை மாறும். இல்லையென்றால், அது வந்துகொண்டேதான் இருக்கும். நடப்பவன் எந்த இடத்தில் நின்று இளைப்பாறுகிறானோ, அந்த இடத்தில் அவனது குதிக்காலைக் கடித்துச் சுற்றும். இதை நாம் சொன்னால், மொத்தக் கூட்டமும் பயந்து சிதறிவிடும். என்ன செய்வது?' என, மூத்த பிடாரன் சிந்தித்தபடியே நடந்துகொண்டிருந்தான். இளைய பிடாரனோ பொறையனிடம் போய்ச் சொன்னான், “பாம்பின் வாடை வருகிறது. இந்த வாடையைக்கூட இந்தக் காது அறுந்தவனால் உணர முடியவில்லை. இவன் பாம்புப் பிடாரன்தானா என்பதே சந்தேகமாக இருக்கிறது.”

அவனது சொல்லைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் பொறையன். மூத்த பிடாரனைத் திரும்பிப் பார்த்தார். பொறையன் நடையை நிறுத்தியதும் எல்லோரும் நின்றனர். மூத்த பிடாரன் மட்டும் நிற்காமல் நடந்தான். தன்னை இவன் அவமதிக்கிறான் எனப் பொறையன் நினைத்த கணத்தில், இடதுபக்கம் வந்துகொண்டிருந்த வீரன் ஒருவன் கத்திக்கொண்டு கீழே விழுந்தான்.

அன்று இரவு, தனித்த மரம் ஒன்றில் பரண் அமைத்துத் தங்கினர். வீரர்கள், சுழற்சி முறையில் காவல் காத்தனர். உணவு மூடைகளைக்கூட கீழே வைக்காமல் மரத்திலேயே கட்டித் தொங்கவிட்டனர். நடந்ததை மூத்த பிடாரன் விளக்கியபோது, இளைய பிடாரன் வணங்கி மன்னிப்புக் கோரினான்.

மறுநாள் விடிந்தது. ``பாம்பு பெரும்பாலும் காலையிலும் மாலையிலும்தான் இரை மேயும். எனவே, வெயில் நன்கு மேலேறிய பிறகு நடக்கலாம்'' என்றான் மூத்த பிடாரன். அதன்படியே அவர்கள் பொறுத்திருந்து நடந்தனர்.

வீரர்கள் எல்லோருக்குள்ளும் அச்சம் அப்பிக்கிடந்தது. மூத்த பிடாரன் முன் சென்றுகொண்டிருந்தான். வீரர்களுக்கு நடுவில் பொறையனும் இறுதியில் இளைய பிடாரனும் நடந்தனர். பாம்புகளின் விதவிதமான தடங்கள் நெடுகக்கிடந்தன. தொலைவில் இருந்த புதரின் மேல் பெரும்கிளையைப்போல கழுத்தை நீட்டி பறப்பவற்றை மேய்ந்துகொண்டிருந்தது ஏதோ ஒன்று. பின்னால் நடந்துகொண்டிருந்த வீரன் ஒருவன் அதைப் பார்த்துக் கை காட்டினான். இளைய பிடாரன் அதை உற்றுப்பார்த்தான்.

அது கட்டையா அல்லது பாம்பா என்பதை அவனால் உணர முடியவில்லை. ஒரு கல் எடுத்து அதை நோக்கி வீசினான். அது மெள்ளத் திரும்பியது.

முன்னால் போய்க்கொண்டிருந்த மூத்த பிடாரனிடம் சத்தம்போட்டுச் சொன்னான், “உனது காதுகளை அறுத்தால் ஒழிய உனக்குப் புத்தி வராது.’’

அப்போதுதான் புரிந்தது. அவன் ஏற்கெனவே அதைப் பார்த்துவிட்டான் என்று. பதில் சொல்லியபடியே நடக்கும் வேகத்தை இரு மடங்கு கூட்டினான் மூத்த பிடாரன். ஏதோ ஓர் ஆபத்து வரப்போகிறது என்பதை எல்லோரும் புரிந்து, வேகம்கொண்டனர்.

இளைய பிடாரன், வீரர்களைக் கடந்து சற்று உள்ளே போய்விட முயன்றபோது, அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த வீரர்கள், ``காலிலே குச்சியாலேயே குத்திவிட்டது'' என்று சொல்லி கீழே உட்கார்ந்தனர். அவ்வாறு உட்கார்ந்த நான்கு பேரும் அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை.

“ஒரு கட்டைவிரியன் இருந்தால், அதைச் சுற்றி எண்ணற்றக் குறுவிரியன்கள் இருக்கும் என்பதுகூடவா உனக்குத் தெரியாது? தேன்கூட்டைக் கலைப்பதுபோல புதரில் கிடந்தவற்றைக் கல் வீசிக் கலைத்துவிட்டாயே!” என்று சொல்லிக்கொண்டே இளைய பிடாரனது காதோரத்தின் சிறு பகுதியை அறுத்தான் மூத்த பிடாரன்.

இளைய பிடாரன் வலியால் கத்தினான். ஆனால், நான்கு வீரர்களின் மரணத்துக்கு, தான் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p6காரணமாகிவிட்டதால் தண்டனையை ஏற்றான்.

இதுபோன்ற காரணங்களுக்காகச் சிறுகச் சிறுக அறுத்து இரண்டு காதுகளையும் முழுமையாக இழந்து நிற்பவன்தான் மூத்த பிடாரன். காதுகள் அற்ற அவனது தோற்றத்துக்குப் பின்னால், எத்தனை வகையான பாம்புகளைப் பற்றிய அறிவு இருக்கும் என்பதை இளைய பிடாரன் அப்போதுதான் உணர்ந்தான்.

மூன்றில் ஒரு பங்கு வீரர்களை இரண்டாம் நாளிலேயே இழந்தனர். `நாகக்குடியினரின் வாழ்விடத்துக்கு என, ஆறு நாள்கள் ஆகும்’ என்று முன்னோர் சொல்லக் கேட்டுள்ளனர். அங்கு சென்று சேரும்போது எத்தனை பேர் உயிரோடு இருப்போம் என்ற அச்சம் எல்லோரையும் ஆட்கொண்டது.

மூன்றாம் நாள் காலைப்பொழுது கழிந்த பிறகு நடக்க ஆரம்பித்தனர். ஒருவருக்கொருவர் எந்தவிதப் பேச்சும் பேசவில்லை. சற்றே பெரும் மரங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் காடு அது. வழக்கத்தைவிடக் கூடுதல் அச்சம் உள்ளுக்குள் ஆட்டிக்கொண்டிருந்தது. ஐந்து பேர் மரணித்துள்ளனர். வாயில் நுரைதள்ளி, உடல் நீலம்பூத்து, கால் விரல் சுருண்டு இழுத்து... என மரணத்தின் இறுதி வடிவங்கள் நினைவிலிருந்து அகல மறுத்தன.

முன்னால் நடந்துகொண்டிருந்த மூத்த பிடாரன், கீழே பதிந்துகிடக்கும் தடத்தைப் பார்த்ததும் நடையை நிறுத்தினான். எல்லோரும் இடம்விட்டு அசையாமல் அப்படியே நின்றனர். அவன் குனிந்து மண்ணில் இருக்கும் நெளிவுகளை உற்றுப்பார்த்தான். பின்னால் இருப்பவர்களுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. நின்றால் நிழல்விரியன் குதிக்காலைக் கவ்வும், பேசினால் குறுவிரியன் செவிக்கு எட்டும். என்ன செய்வது எனப் புரியவில்லை. ஆயுதங்களின் பிடி வழுக்கும் அளவு வீரர்களின் உள்ளங்கை வியர்த்தது.

மூத்த பிடாரன், அந்தத் தடத்தைப் பார்த்தபடி அது போன திசையில் இன்னும் சிறிது தொலைவு புற்களை விலக்கி உள்ளே போனான். அவன் எதுவும் சொல்லாததால் பதற்றத்தின் வேகம் கூடிக்கொண்டே இருந்தது. பின்னால் நின்று இருந்த இளைய பிடாரன், ``நான் அங்கு வரவா?” என்று கேட்க வாயெடுத்தபோது, கை மீறிக் காதைத் தடவிப் பார்த்துக்கொண்டது.

மூத்த பிடாரனின் முகம் இன்னும் தெளிவடையாமல் இருப்பதைப் பொறையன் கவனித்தார். சின்னதாக அச்சம் அவருக்குள் ஏற ஆரம்பித்தது. மூத்த பிடாரன் தடத்தைப் பார்த்தபடியே அங்கு இருந்த பாறை விரிசலை நோக்கி நகர்ந்துபோனான்.

`எந்தப் பாம்பின் தடத்தையும் தொலைவில் இருந்தே சொல்லக்கூடியவன் மூத்த பிடாரன். இந்தத் தடம் பற்றி மட்டும் ஏன் இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறான்?' என்று பொறையன் குழம்பிக்கொண்டிருக்கையில், மூத்த பிடாரன் சொன்னான், “மலஞ்சாரைப் புரண்டிருக்கிறது”.

அவன் சொல்வது மற்றவர்களுக்குப் புரியவில்லை.

“பாம்புகள், வளைந்து வளைந்து போகக்கூடியவை. பாம்புகளின் இனத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப வளைவுகளின் அகலம் மாறுபடும். பாம்புகளுக்கு வயது ஆக ஆக வளையும் ஆற்றல் குறையும். அதனால் அவற்றின் வேகம் குறையும். இந்த நிலையிலேயே பெரும்பாலான பாம்புகள் இறந்துவிடும். ஒருசில பாம்புகள்தான் இவற்றைத் தாண்டியும் வாழும். முடிந்தவரை நெளிவுகொடுத்து நகர்ந்துபோகும். மிகவும் வயதானால், அதாவது, மனிதன் நூறு வயதை எட்டுவதைப்போல பாம்பும் பெரும் வயதை அடைந்தால், அதன் உடல் பாதி அளவுக்குச் சுருங்கிவிடும். அதனால் நெளிந்தபடி நகர முடியாது. உடலை முறுக்கிப் புரளத் தொடங்கும். அப்படியே இடதுபுறமும் வலதுபுறமுமாகப் புரண்டு புரண்டுதான் இடத்தைக் கடக்கும். மனிதன் வயோதிகத்தில் உட்கார்ந்து உட்கார்ந்து போவதைப்போலத்தான் அதுவும். இந்த இடத்தில் மலஞ்சாரை ஒன்று புரண்டுபோயிருக்கிறது” என்றான் மூத்த பிடாரன்.

அவன் சொல்வதை அனைவரும் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

மூத்த பிடாரன் தொடர்ந்தான், “இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்தக் குன்றில் வேறு எந்தப் பாம்பும் இருக்காது.”

எல்லோரையும் ஆச்சர்யம் தொற்றியது.

`` `பாம்பு புரளும் மண்ணில் பிற பாம்புகள் தங்காது’ என்பது முன்னோர் வாக்கு. எனவே, இன்று இந்தக் குன்றைக் கடக்கும் வரை உங்களுக்கு அச்சம் தேவையில்லை” என்றான் மூத்த பிடாரன்.

வீரர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. “அப்பாடா!'' என்று பெருமூச்சு விட்டனர். அச்சமற்ற அடிகளை கால்கள் எடுத்துவைத்தன. நடையின் வேகம் கூடியது. பேச்சு தொடங்கியது. பாம்புகளைக் கையாள்வதில் உள்ள நுட்பங்களைப் பற்றி பேசினர்.

“பாம்புகள், மனிதனைக் கண்டு அஞ்சித்தானே ஓடுகின்றன. பின்னர் ஏன் மனித மனம் பாம்பைக் கண்டு பதறுகிறது?” என்று கேட்டான் வீரன் ஒருவன்.

அசட்டுச் சிரிப்புடன் மூத்த பிடாரன் சொன்னான், “மனிதன், பாம்பின் ஓட்டத்தைப் பொய்யாகப் புரிந்துகொண்டான் என்று பொருள்.”

“அது அஞ்சி ஓடவில்லை என்கிறீர்களா?”

“அதைக் கண்டு நாம் அஞ்ச, அதனிடம் நஞ்சு இருக்கிறது. நம்மைக் கண்டு அது அஞ்சி ஓட, என்ன இருக்கிறது நம்மிடம்?”

வீரனிடம் பதில் இல்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p7
``ஒவ்வொரு பாம்பும் தனது இனத்தின் எண்ணற்றப் பாம்புகளைத் தின்றுவிட்டுத்தான் உயிர்வாழ்கிறது. மனிதனைப்போல் ஓர் உடம்புக்குள் வாழும் ஓர் உயிர் அல்ல; எண்ணிலடங்காத உயிர்கள் வாழும் ஓர் உடல். அது தின்ற உயிருக்கு ஏற்ப அதன் கால்கள் அமைகின்றன.”

மூத்த பிடாரனின் பேச்சு, அச்சமூட்டுவதாக இருந்தது. பாம்பை விடுத்து வேறு எதையும் பேசும் சூழல் இல்லை. இன்னொரு வீரன் நாகர்களைப் பற்றி கேட்டான். ``நாகர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானா அல்லது அவர்களுக்குத் தனித்த அடையாளம் ஏதும் உண்டா?”

“நம்மைப் போன்ற மனிதர்கள்தான். ஆனால், தனித்த அடையாளங்களும் உண்டு.”

“என்னென்ன?”

``நாகர்குடியின் ஆண்களை நீங்கள் கண்டறிய வேண்டும் என்றால், அவர்களின் கால்களை வைத்துத்தான் கண்டறிய முடியும். குதிக்காலில் நமக்கு மேலும் கீழுமாக வெடிப்புகள் இருக்கும். அவர்களுக்கோ, செதில் செதிலாகப் பக்குகள் இருக்கும். அதேபோல கைவிரல் நகக்கண்ணில் தோல் நமக்கு மேலும் கீழுமாக உரியும். அவர்களுக்கோ செதில் செதிலாகத்தான் உரியும். உற்றுப்பார்த்தால் நகம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதே தெரியாது” அவ்வளவு நேரம் உற்சாகமாக இருந்த பேச்சொலி, இப்போது சற்றே அமைதிகொள்ளத் தொடங்கியது.

இன்னொருவன் கேட்டான், “நாகர்குடிப் பெண்களை எப்படிக் கண்டறிவது?”

“காமம் கொள்கையில்” என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டான் மூத்த பிடாரன்.

“எப்படி?” என்று மீண்டும் அழுத்திக் கேட்டான் அவன். இந்தப் பதிலை அறிய, எல்லோரும் மிக ஆவலுடன் இருந்தனர். சிறு சத்தம்கூட எழுப்பாமல் கால்கள் நடந்துகொண்டிருந்தன.

மூத்த பிடாரன் சொன்னான், “காமம் கொள்கையில் விம்மும் கொங்கையின் நாவு படம்போல் விரிந்து அடங்கும். அதை உணரும்போது நாம் மரணித்துக்கொண்டிருப்போம்.”

அந்த இடம் அமைதியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து ஒருவன் கேட்டான், “காமத்தின்போது அவர்கள் இமை மூட மாட்டார்கள் என்றுதானே சொல்வார்கள். நீங்கள் வேறொன்றைச் சொல்கிறீர்களே?”

“எல்லாம் கண்டறியாதவர்கள் சொல்லும் கதைகள்தானே. ஆளுக்கு ஒன்றாகத்தான் இருக்கும்” என்றான் மூத்த பிடாரன். மூன்றாம் குன்றைவிட்டுக் கீழ் இறங்கினர். ``இந்த இடத்தில் இன்று தங்கிவிட்டு, நாளை மீண்டும் பயணத்தைத் தொடங்கலாம்'' என்றார் பொறையன்.

வீரர்கள், தங்குவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். உணவு மூடைகளைத் தூக்கிவந்த ஒருவன், ஆளுக்கு ஒரு கனியை உண்ணக் கொடுத்தான். மூத்த பிடாரனும் பொறையனும் கனியைப் பெற்றுக்கொண்டு சற்றுத் தள்ளியிருக்கும் சிறுபாறையை நோக்கி நடந்தனர்.

பொறையன், பாறையின் மீது ஏறி உட்கார்ந்து கனியைக் கடித்தார். அவருக்கு எதிரில் நின்றபடி மூத்த பிடாரன் கனியைக் கடிக்கும்போதுதான் கவனித்தான். பொறையன் கனியைக் கடிக்கும்போது பற்களுக்கு இடையில் இருக்கும் செதில்களிலிருந்து குருதி வந்துகொண்டிருந்தது.

பொறையன் கனியைக் கடித்துத் தின்றபடியே சொன்னார், “மரணம் ஏதும் இன்றி இன்றைய பொழுது முடிந்தது.''

அவரது சொல்லை அவரே இன்னும் சிறிது நேரத்தில் பொய்யாக்கப்போகிறார் என்பது மூத்த பிடாரனுக்குப் புரிந்துவிட்டது. ‘நேற்று இரவு மூடைகளைக் கட்டித் தொங்கவிட்ட மரத்திலிருந்து அது கனிகளுக்குள் இறங்கியிருக்க வேண்டும்’ என ஊகித்தபடியே பதில் ஏதும் சொல்லாமல், பொறையனையே பார்த்துக்கொண்டிருந்தான் மூத்த பிடாரன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 6:14 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p1
டிக்கணக்கும் நஞ்சுக்கணக்கும் அறிந்த மூத்த பிடாரனின் கணக்குகளைத் தவறாக்கின செத்து விழுந்த வீரர்களின் உடல்கள். பாம்புகள் முன்நகரும் என்று மட்டுமே அறிந்த பிடாரனின் அறிவைப் பொய்ப்பித்தது செம்மண்ணுளி. அது கோடைக்காலத்தில் முன்நகரும்; மழைக்காலத்தில் பின்நகரும். நிலத்தின் வெப்பத்துக்கு ஏற்ப நகரும் இரு வகைச் செதில்களைக்கொண்டது அது.

எரிவிரியனையும் ஊதுசுருட்டையும்  நண்டுதின்னி நாகத்தையும் கண்கொண்டு பார்த்தறிந்தான் இளம் பிடாரன். இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்தபடி ஆறாம் மலை அடிவாரத்துக்கு அவர்கள் வந்தபோது உயிரோடு இருந்தவர்கள், இரு பிடாரன்களோடு ஒரு வீரன் மட்டுமே.

இவர்கள் வந்த செய்தி, நாகர் குலத் தலைவனுக்கு எட்டியது. அழைத்துவந்து விசாரித்தான். தலைவனைக் கண்டதும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர் மூவரும். பெருஞ்சேரலின் வேண்டுதலைச் சொன்னான் மூத்த பிடாரன்.

“தோலை உரிப்பதற்காக பாம்பு தின்னும் மூலிகையை, சேரல் குலத் தலைவனுக்கு நீங்கள் தந்துதவ வேண்டும்.”

நாகர் குலத் தலைவன் மிக இளவயதுக்காரன்போல் தெரிந்தான். அசட்டையான பார்வையோடு கேட்டான், “ஒவ்வொரு பாம்பும் ஒவ்வொருவிதமான மூலிகையைத் தின்னும். நீ எந்த மூலிகையைக் கேட்டு வந்துள்ளாய்?”

மூத்த பிடாரனுக்கு இந்தக் கேள்வி பெரும்வியப்பைத் தந்தது. பாம்பு தின்னும் ஏதாவது ஒரு மூலிகையை அறிந்துவைத்திருப்பதே அரிதானது. இவர்கள் ஒவ்வொரு பாம்புக்குமான மூலிகையை அறிந்துவைத்திருக்கின்றனர்.

“எந்த மூலிகையைத் தின்றால், மனிதனின் மேல் தோல் உரியும்?” எனக் கேட்டான் மூத்த பிடாரன்.

“நாங்கள் அதைத் தின்றதில்லை” என்றான் நாகர் குலத் தலைவன்.

மூத்த பிடாரனுக்கு, அடுத்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. பெருஞ்சேரல் சொல்லி அனுப்பிய இரண்டாவது வேண்டுகோளை முன்வைக்க முடிவுசெய்தான்.

கொண்டுவந்த கோணிப்பையில் இருந்து வெண்ணிறத் துணி ஒன்றை எடுத்து, நாகர் குலத் தலைவனை நோக்கி நீட்டியபடி, “இந்தத் துகிலை, புணரும் நாகங்களின் மீது போத்தி எடுத்துத் தர வேண்டும்” என்றான்.

`நாகங்கள் புணர்கையில் அவற்றின் மீது போத்தப்பட்ட துணியால் மனிதனுக்கு நீடித்த  ஆயுளும் அதிர்ஷ்டமும் கைக்கூடும்' என்பது வடதேசத்து முனியின் வாக்கு. அதனால்தான் இதைக் கொடுத்து அனுப்பினான் பெருஞ்சேரல்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p2
``நாகங்கள் புணர்வதைக் கண்டவர் யாரும் இல்லை” என்றான் நாகர் குலத் தலைவன்.

“நாகங்கள் பின்னிக்கிடப்பதை ஊரெங்கும் உள்ள மக்கள் பார்த்திருக்கின்றனர். நீங்கள் பார்த்ததில்லை என்பது நம்பும்படியாக இல்லையே” என்றான் மூத்த பிடாரன்.

“நாகங்கள் பின்னிக்கொள்வது அவற்றின் காதல் விளையாட்டு. அதை எல்லோரும் பார்க்கலாம். ஆனால், நாகங்கள் புணர்வதைத்தான் யாரும் பார்க்க முடியாது.”

இவை இரண்டும் வெவ்வேறு வகையான செயல்கள் என்பதை இப்போதுதான் மூத்த பிடாரன் கேள்விப்படுகிறான்.

நாகர் குலத் தலைவன் சொன்னான், ``நாகத்துக்கு காமம் பெருகும் காலங்களில் மெல்லிய நீரொன்று உடலெங்கும் ஊறி, அதன் கண்களை மறைக்கத் தொடங்கும். மனிதரைப் போலத்தான் அதற்கும் காமம் கண்களைக் கட்டும். அதற்குரிய மூலிகையைத் தின்ற பிறகு, நாகம் தனது மூக்கு நுனியின் வழியே அந்த நீர்த்தோலைக் கழற்றத் தொடங்கும். கண்களின் மேல் படர்ந்த காமத்திரையை அகற்றும். முழு உடலையும் உருவிப் புத்துடல்கொள்ளும். அதன் பிறகு அது எட்டு நாள்களுக்கு வெளியே வராது. எங்கு, எப்படி இருக்கும் என்பதை இதுவரை யாரும் அறிந்ததில்லை. தன் இணையோடின்றி, தனித்து நாகம் தோல் உரிப்பதில்லை.

புத்துடல்கொண்ட கணத்திலிருந்து அது இணை சேரத் தொடங்கும். ஒவ்வொரு செதிலாலும் தன் இணையின் ஒவ்வொரு செதிலுடன் கலந்து மீளும். திருகி, புரண்டு, இறுகி, மேல் தோல் கனிந்து முதிர்ந்த பிறகுதான் இணையைப் பிரிந்து வெளியேறும். தன் பழைய உடலின் வழியே இணை கூடாத ஒரே உயிரினம் அது மட்டும்தான்” எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாகனின் கருவிழிகளில் நீல நிற வளையம் ஒன்று பூத்து அடங்கியது.

நாகன் மேலும் சொன்னான், “புதிய மேனிகொண்டு மட்டுமே தழுவி வாழும் காதல் வாழ்க்கை நாகத்தினுடையது. இந்தப் புவியில் எந்த உயிரும் இன்புற்றிராத அபூர்வக் காதல் அது.”

மூத்த பிடாரன், வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தான். ‘காமம்கொள்கையில் மனிதன் நாகங்களைப் போல பின்ன ஆசைப்படுவது அதனால்தானா?’ என்ற எண்ணம் ஓடியது. சற்றே நிதானித்தான். தனது இரண்டு வேண்டுதல்களும் அர்த்தமற்றதாகிவிட்டன என்பதை உணர்ந்தான். அடுத்து என்ன சொல்வது எனத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தான்.

“வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?”

``நீங்கள் வணங்கும் நாகதேவதையை நாங்கள் வணங்கி விடைபெற எண்ணுகிறோம்.”

``பொழுது சரிந்துவிட்டது. நாளை உங்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறேன். இன்றிரவு குடிலில் தங்குங்கள். எக்காரணம்கொண்டும் குடிலைவிட்டு வெளியே வரக் கூடாது.”

“சரி” என்று சம்மதித்தான் மூத்த பிடாரன்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p3

தனித்து இருந்த குடில் ஒன்றில், அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். இரவு கூடியது. `மகுளி'ப் பறை இசைக்கும் ஓசை கேட்டது. இன்று நாகர்களின் விருப்ப நாள். வந்துள்ளவன் பிடாரன் எனத் தெரிந்தும் அவனிடம் கனிவுகாட்டியதற்கு அதுதான் காரணம்.

குலத்தின் வழக்கப்படி புதிய இணையர்கள் விரும்பிக்கூடும் நாள் இது. நாகர்குடி முழுவதும் மந்தையைச் சூழ்ந்து உட்கார்ந்திருந்தது. நடுவில் பெரும்வட்டத்தில் நெருப்பு மூட்டியிருந்தனர்.

குடிலுக்குள் அடைபட்டிருந்தனர் மூவரும். வீரனுக்கு எதுவும் தோன்றவில்லை. அவன் படுக்க தலை சாய்த்தான். பிடாரன்கள் இருவரும் வெளியே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள தவியாய்த் தவித்தனர். இசையின் ஓசை கூடிக்கொண்டே இருந்தது.

இளம் ஆண்களும் பெண்களும் தங்களின் இணையைத் தேர்வுசெய்யத் தொடங்கினர். மூத்த பிடாரன், ஓலை வேய்ந்த குடிலில் மிகவும் பக்குவமாக சிறுதுளையை உருவாக்க முயன்றுகொண்டிருந்தான். நாகர்கள் வேய்ந்த குடிலில் ஆபத்து நிறைந்திருக்கும் என்பதை அவனால் யூகிக்க முடிந்தது. எனவே, மிகவும் கவனமாக அந்த வேலையைச் செய்துகொண்டிருந்தான்.

இளம்பெண்கள் அமர்ந்திருக்க, இளம் ஆண்கள் அவர்களின் அருகில் வந்து இரு கைகளையும் பற்றி உள்ளங்கையை ஒன்றோடொன்று உரசினர். சாரைப்பாம்பின் அடிவயிறு வழவழப்பானதாக இருக்கும். நல்லபாம்பின் அடிவயிறு சொரசொரப் பானதாக இருக்கும். அது மரம் ஏறக்கூடியதால், அந்தத் தன்மை வாய்ந்தது.

ஆண், பெண் இருவரிலும் இந்த இரு இனங்களும் உண்டு. எதிரெதிர் தன்மை உள்ளவர்கள் கைகளை இறுகப் பற்றினர். அவ்வாறு இல்லாதவர்களின் கைகள், விலகி மறு கை பற்றின. வழவழப்பான சாரையின் அடிவயிற்றை, சொரசொரப்பான உள்ளங்கைகள் சூழத்தொடங்கின.

மூத்த பிடாரன் பக்குவமாகத் துளையிட்டு தொலைவில் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். இளைய பிடாரனும் அதே போல துளையிட முயன்றான். கைகளைப் பற்றியவர்களின் ஆட்டம் தொடங்கியது. கை புணர்ந்து ஆடும் துணங்கைக் கூத்து. நாகத்திடமிருந்து மனிதன் கற்ற காதற்கலை இது. சுழிவும் பின்னலுமாக நெருப்பின் தழல் போல் உடல்கள் ஒன்றின் மேல் ஒன்று படர்ந்து மேலேறின. இசை கூடியது. நாகம் படம் விரிக்கையில், மயில்தோகையில் பல வண்ணம் சட்டெனத் தோன்றி மறையும். நாகர் குலப் பெண்களின் முகங்கள் தழல் படர்ந்த வெளிச்சத்தில் அவ்வாறே தோன்றின.

மூத்த பிடாரன் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கையில், “ஐயோ..!'' எனக் கத்தியபடி கீழே சரிந்தான் இளம் பிடாரன். வேகமாக வந்து அவனைத் தாங்கிப்பிடித்தான் மூத்த பிடாரன். அவனது கண்களின் ஓரம் சிறியதாக நீண்டிருந்தது உள்ளே சென்றதன் வால் பகுதி.

அதிர்ந்துபோனான் மூத்த பிடாரன். கொத்தும் பாம்புகளைத்தான் இதுவரைப் பார்த்துள்ளான். தீண்டிய வேகத்தில் உள்நுழையும் நாகத்தை இப்போதுதான் பார்க்கிறான். தாங்கிப் பிடித்தவனின் கை நடுங்கியது. இனி அவனைக் காப்பாற்ற முடியாது எனத் தெரிந்ததும் அப்படியே தரையில் படுக்கவைத்தான். ‘நாகர்கள் வேய்ந்த ஓலையில் எல்லாம் இருக்கும் என்பதை அறியாது அவசரப்பட்டு விட்டானே’ என்று மூத்த பிடாரன் கவலைகொண்டான்.

அதன் பிறகு துளையில் எட்டிப்பார்க்க மனம்வரவில்லை. இசை கேட்டுக்கொண்டே இருந்தது. நாகங்களுக்கு நெருப்பு ஆகாது. இவர்கள் ஏன் நெருப்பை மூட்டி ஆடுகின்றனர் என்பதை அறியவேண்டும் என ஆவலிருந்தது. ஆனால், கண்ணுக்குள் நுழைந்ததைப் பார்த்த பிறகு எல்லாம் வடிந்துவிட்டன.

மறுநாள் காலை நாகர்குடி இளைஞன் ஒருவன் வந்து, இருவரையும் நாகதேவதையின் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றான். செல்லும்போது வீரன் கேட்டான், “இளைய பிடாரன் ஏன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான்?”

``எழுந்திருக்க முடியாததால்” என்றான் மூத்த பிடாரன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p4
நாகதேவதையின் இருப்பிடத்தை அடைந்தனர். மர அடிவாரத்தில் சிறு சிறு கற்களும் பாம்பு உரித்த தோல் ஒன்றும் இருந்தன.

நாகங்களைப் படமெடுக்கச் செய்து, அவற்றின் தலையில் சிறு கல் வைத்து அழைத்துவருவாள் குலத்தின் முதுமகள் எனக் கேள்விப்பட்டுள்ளான் பிடாரன். அங்கு இருக்கும் கற்கள் எல்லாம் தலைமுறை தலைமுறையாக அவ்வாறு கொண்டுவரப்பட்ட கற்களாக இருக்கும் என யூகித்தான் மூத்த பிடாரன். ஆனால், ``பாம்பு கழற்றிய அந்தத் தோலை வைத்து ஏன் வணங்குகின்றனர், அதன் காரணம் என்ன?'' என்று கேட்டான்.

அழைத்து வந்த நாகர்குடி வீரன் சொன்னான், “அது வெண்சாரைக் கழற்றிய தோல்.”

இரண்டு நாள்களில் அடைந்திராத பேரதிர்ச்சியை மூத்த பிடாரன் இப்போது அடைந்தான்.

“வெண்சாரையைப் பார்ப்பது தெய்வத்தைப் பார்ப்பதற்குச் சமம் என்பார்கள். நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?”

“எங்கள் முன்னோர்கள் பார்த்திருக்கிறார்கள்” என்று மட்டும் சொன்னான் நாகன்.

சேரலின் அவையில் நடந்தவற்றை விளக்கினான் மூத்த பிடாரன். வரும்போது நாக வீரன் எங்களை கீழ்மலையின் அடிவாரம் வரை அழைத்து வந்தான். உயிரிழப்பு இன்றி இருவரும் வந்து சேர்ந்தோம்” என்றான்.

“நாம் கேட்ட இரண்டையும் அவர்கள் கொடுக்காமல், கவனமாகப் பேசி உங்களைத் திருப்பி அனுப்பியுள்ளனர்” என்றான் சேரல்.

“கவனம் பேச்சில் இருந்து என்ன செய்ய, செயலில் வேண்டும்” என்றான் மூத்த பிடாரன்.

அவன் சொல்வது அவையோருக்குப் புரியவில்லை.

“நாகம், என்றுமே மனிதனின் எதிரிதான். அதனிடம் இரந்து பயன் ஏதுமில்லை. அதை அழித்தால் மட்டுமே மனிதன் பயனடைவான். நாகர்கள் அதனினும் கொடிய அழிவுசக்திகள். அவர்களைக் கூண்டோடு அழித்தாக வேண்டும். அவர்கள் இறங்கி வர முடிவெடுத்தால், ஒரே நாளில் சேரல் குலம் அழிந்துபோகும்”.

அந்தக் கணம், பெருஞ்சேரலின் உடல் நடுங்கி அடங்கியது.

“என்ன உளறுகிறாய்?”

“நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டது, நீங்கள் தர முன்வந்த செல்வத்துக்காக அல்ல. பிடாரன்களின் வாழ்நாள் வைராக்கியம், நாகங்களை வெல்வதே. கரும்பருந்திடம் நாங்கள் அளித்துள்ள வாக்கும் அதுதான். நாகர்களின் ஆற்றலை அறியவே எருக்குமலை ஏறினேன். என்னை யாரென அவர்களால் கண்டறிய முடியவில்லை. ஆனால், அவர்களை நான் கண்டறிந்துவிட்டேன். மிகச் சிறியதொரு கூட்டம் அது. பெரும்சக்தி வாய்ந்த சேரலர் அவர்களை ஏன் இன்னும் விட்டுவைத்திருக்கிறீர்கள் எனப் புரியவில்லை.”

“என்ன செய்யலாம் எனச் சொல்கிறாய்?”

``நீங்கள் உதவ முன்வந்தால், அவர்களைக் கூண்டோடு அழித்துவிடலாம்.”

``ஆறு மலைகளைத் தாண்டி அவர்களின் இருப்பிடம் உள்ளது. எப்படி அழிக்க முடியும்?”

“இந்தத் திசையில் போனால்தான் ஆறு மலைகளைத் தாண்ட முடியும். நாட்டின் வட எல்லையில் கடலோடு இணைந்த மலைமுகடு ஒன்று உள்ளது அல்லவா? அந்தத் திசையில் நுழைந்தால், முதல் குன்றின் மீதுதான் நாகக்குடியின் இருப்பிடம் உள்ளது. இந்தப் பயணத்தில் நான் கண்டறிந்த உண்மை அதுவே.”

பெருஞ்சேரல் மூத்தமகன் பதுமன், “அப்படியென்றால், தாக்குதலை இன்றே தொடங்கலாம்” என்றான் படுஉற்சாகமாக.

பெருஞ்சேரலோ, நிதானம் தவறாமல் இருந்தான். வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p5

“நாகர்களை நம்மால் எப்படி வெல்ல முடியும்?”

``நீங்கள் படைகளைத் தாருங்கள். நான் வெற்றியைத் தருகிறேன்.”

‘பிடாரனின் சொல்லை நம்பலாமா?’ என்ற சிந்தனையில் இருந்தான் பெருஞ்சேரல்.

“நாம் வென்றால், வளம்மிக்க மலைக்குன்றுகள் நம் நாட்டுடன் இணையும். அதுமட்டுமன்று, நாகர்களையே வென்றவர்களாக சேரலர் அறியப்படுவர். அதன் பிறகு, யார் மீது நாம் போர் தொடுத்தாலும் நமது ஆயுதங்கள் தாக்கும் முன் நாம் வென்ற நாகர்களின் கதைகள் அவர்களைத் தாக்கி பலம் இழக்கச் செய்யும்” என்றான் பதுமன்.

பெருஞ்சேரல் மூத்த பிடாரனைப் பார்த்துக் கேட்டான், “படைகள் எப்போது புறப்பட வேண்டும்?'’

``எனக்கான ஆயுதங்களை நான் சேகரிக்க, சில மாதங்கள் ஆகும். அதன் பிறகு புறப்படலாம்.”

டதிசை மலைமுகட்டின் அடிவாரத்தில், சேரலர் படை அணிவகுத்து நின்றது. தளபதிகள் இரண்டு நிலைகளாகப் படைகளை நிறுத்தியிருந்தனர். காலாட்படையும் விற்படையும் எருக்குமலையை நோக்கி நின்றன. படைகளுக்குப் பின்னால் முகட்டின் மேல்புறத்திலிருந்து பெருஞ்சேரல் களத்தைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான்.

பெருஞ்சேரலின் படை அடிவாரத்தில் திரண்டிருப்பதை அறிந்த நாகர்கள், எதிர் தாக்குதலுக்கு ஆயத்தமானார்கள்.

மூத்த பிடாரன் மூன்று மாதங்களாகச் சேகரித்த ஆயுதங்கள் எல்லாம் நான்கு கூட்டு வண்டிகளில் இருந்தன. அவை என்ன ஆயுதங்கள் என்பதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. போரின் போக்குகளுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்தலாம் என்ற முடிவோடு, நாகர்களின் தாக்குதல் உத்தியைக் கவனித்துக்கொண்டிருந்தான். அவனோடு பெருஞ்சேரல் மகன் பதுமன் நின்றிருந்தான்.

விரிசங்கு ஊதி போரைத் தொடங்கினான் பெருஞ்சேரல். அவன் படைவீரர்கள் ஆயுதங்களோடு மெள்ள முன்நகர்ந்தனர். மலையின் மீதிருந்து நாகர் படைத் தளபதியின் கொம்போசை கேட்டது.

நாகர்களின் தாக்குதல் எப்படி இருக்கும் என இதுவரை யாரும் பார்த்ததில்லை. எனவே, வீரர்கள் பெரும் நடுக்கத்தின் வழியேதான் ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டு முன்னேறினர். சேரலர் படை எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தது. அதில் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவாகத்தான் நாகர் குடியினர் இருப்பார்கள் எனக் கணித்திருந்தான் மூத்த பிடாரன். எனவே, இந்தப் போர் உச்சிப் பொழுதுக்குள் முடிந்துவிடும் என்பது அவனது எண்ணம்.

சேரல வீரர்கள் முன்னோக்கிச் சென்றபோது நாகர்களும் மூன்று அணிகளாக இறங்கி வந்தனர். ஒவ்வோர் அணியிலும் மிகக் குறைவான வீரர்களே இருந்தனர். அதைக் கண்ட சேரல வீரர்களுக்கு பெரும் நம்பிக்கை பிறந்தது. அவர்கள் இறங்கி வருவதில் ஏதோ மாறுபட்டத்தன்மை இருக்கிறதே என உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் மூத்த பிடாரன்.

நாகர்களின் இடதுபுறக் குழு குறுவளைவு கொண்டு இறங்கியது. வலதுபுறக் குழு பெரும்வளைவு கொண்டு இறங்கியது. நடுவில் வந்த குழு, வளைவுகளற்று நெட்டுவாக்கில் படுவேகமாக இறங்கியது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் எனக் கணித்துக்கொண்டிருக்கும்போதே சேரலர் படை நாகர்களை நோக்கி அம்புகளை வீசியது.

நடுவில் நெட்டுவாக்கில் வந்த நாகர் படையின் முன்வரிசையினர் மண்டியிட்டு அமர்ந்து அம்பை நாணில் ஏற்றினர். வழக்கமான நேரத்தைவிட அவர்கள் நாண் ஏற்ற மும்மடங்கு நேரமானது. ``போர்ப் பயிற்சி அற்றவர்கள் என்பது இதிலிருந்தே தெரிகிறது'' என்றான் பதுமன்.

நாகர்கள் தொடுத்த நாணில் இருந்து அம்புகள் பறந்து வரும்போதுதான், அம்போடு சேர்த்து மற்றொன்று நெளிந்துகொண்டு வருவது தெரிந்தது. கண நேரத்துக்குள் சேரலர் படை கதிகலங்கியது.

அம்போடு வந்து இறங்கிய சாரைகள் நான்கு புறங்களிலும் விழுந்து நகர, படைவீரர்கள் திசையெங்கும் தெறித்து ஓடினர்.

நாகர்களின் இந்தத் தாக்குதலை எதிர்பார்த்திருந்தான் மூத்த பிடாரன். “முதலிலே சொன்னால், படைவீரன் ஒருவன்கூட களத்தில் நிற்க மாட்டான். அதனால்தான் சொல்லவில்லை” என்று பதுமனிடம் கூறினான்.

“நடுவில் நெட்டுவாக்கில் இறங்கியது சாரைப்பாம்பு உத்தி. இடதுபுறம் குறுவளைவு கொண்டு இறங்கியது எரிவிரியன் உத்தி. வலதுபுறம் பெருவளைவுகொண்டு இறங்கியது நல்லபாம்பு உத்தி. பாம்புகளின் தடத்துக்கு ஏற்ப உத்தி வகுத்துள்ளனர். அவர்கள் இப்போது சாரைப் பாம்பை மட்டுமே பயன்படுத்தி அம்பு எய்துள்ளனர்” என்றான் பிடாரன்.

பதுமனுக்கு, உடல் நடுக்கம்கொள்ளத் தொடங்கியது.

“இதைத் தடுக்க வழி என்ன?”

கேட்டுக்கொண்டிருக்கும்போதே தனது கூட்டு வண்டியின் மேல்கூடாரத்தைத் திறந்துவிட்டான் மூத்த பிடாரன். கரும்பருந்துகளும் பாம்புப் பருந்துகளும் படபடத்து வெளியேறின. காற்றில் ஏறிய பருந்துகளின் ஓசை, எங்கும் எதிரொலித்தது. பருந்துகளின் விரல்கள் களத்தில் நெளியும் சாரைகளைக் கவ்வி மேலேறின. அந்தக் காடு முழுவதும் பருந்துகள் வட்டமடிக்கத் தொடங்கின. பருந்தின் கண்கள் பாம்பைக் காணும் முன் அதை பாம்பு கண்டுணர்ந்துவிடும்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p6
“இனி எந்தப் பாம்பும் வெளியே நிலைகொள்ளாது. அனைத்தும் தன் இருப்பிடத்தை நோக்கி ஓடிவிடும். அவர்களால் அதைக் கையில் எடுத்து அம்பில் பொருத்தி அனுப்ப முடியாது” என்றான் பிடாரன்.

பதுமனுக்கு, மேலெல்லாம் வியர்த்திருந்தது.

பிடாரனின் இந்த உத்தியை எதிர்பார்த்து இருந்தவனைப் போல நாகர் குலத் தளபதி குறுஞ்சிரிப்பு ஒன்றை உகுத்தான்.

“முகட்டின் பின்புறம் நிறுத்தப்பட்டிருக்கும் அடுத்த படைப் பிரிவை முன்னகர்ந்து வரச் சொல்” என்று கத்தினான் மூத்த பிடாரன்.

பதுமன் அதற்கான உத்தரவைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும்போதே, நான்காவது கூட்டுவண்டியின் கதவைத் திறந்தான் மூத்த பிடாரன். மரப்பெட்டிகள் நிறைந்திருந்தன. “வீரர்களிடம் பெட்டியை எடுத்துக்கொண்டுபோய், எதிர்திசையில் பகுதிக்கு ஒன்றாகத் திறந்துவிடச் சொல்'' என்றான் மூத்த பிடாரன். பதுமன் உடனடியாக அதற்கான உத்தரவை இட்டான்.

வீரர்கள், பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடினர்.

“பெட்டிகள் முழுக்க எண்ணற்ற பாம்புக்கீரிகளும் கருங்கீரிகளும் இருக்கின்றன. அவை முக்கியம் அல்ல. எட்டு பழந்தின்னிக் கீறிகள் இருக்கின்றன. அவற்றின் வாடை காற்றில் மிதந்தாலே போதும், இந்தத் திசைவிட்டே பாம்புகள் வெளியேறிவிடும்” என்றான் மூத்த பிடாரன்.

சேரலர் படை, மறுமுறை அணிவகுத்தது. இப்போது பின்வரிசையில் கம்பீரமாக நிலைகொண்டது யானைப்படை. அதற்கு முன்னால் விற்படையும் காலாட்படையும் அணிவகுத்தன. முதலில் இருந்ததைப்போல இருமடங்கு வீரர்கள். உத்தரவு கிடைத்ததும் முன்னேறினர்.

நாகர் குலத் தளபதி கை அசைத்ததும் நாகர்களின் அம்புகள் நாணில் இருந்து விடுபட்டு, காற்றில் பாய்ந்தன. இப்போது அம்போடு நெளிந்து வளையும் பாம்புகள் எவையும் தென்படவில்லை. சேரல வீரர்கள் உற்சாகத்துடன் முன்னேறினர். பதுமன், மூத்த பிடாரனைத் தழுவிப் பாராட்டினான். “இனி வெற்றி உறுதி!” என்று சொல்லி மகிழ்ந்தான் பதுமன்.

சிறிது நேரத்தில் முன்கள வீரர்களிடம் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டன. என்னவென்று அறியும் முன்பே வீரர்கள் பின்னோக்கி ஓட ஆரம்பித்தனர். சருகில் தீப்பற்றுவதைப் போலத்தான் போர்க்களத்தில் ஓட ஆரம்பிப்பது. ஒருவன் ஓட ஆரம்பித்தால், அந்த அச்சம் கண நேரத்துக்குள் ஒட்டுமொத்த படையிலும் பரவும். யானைப்படைத் தளபதி சட்டென அனுமானித்து, களத்தைவிட்டு வெளியேற உத்தரவிட்டான்.

மூத்த பிடாரனுக்கு, நடப்பது எதுவும் புரியவில்லை. நாகர்கள், அம்பு எய்தியபடி முன்னோக்கி வந்துகொண்டிருந்தனர். சேரலர் படை, களம்விட்டு ஓடிக்கொண்டிருந்தது. பிடாரன் நடப்பதை அறியாமல் திகைத்து நின்றான்.

வீரர்கள், உயிர்பிழைக்க வெறிகொண்டு ஓடினர். என்ன என்பது விளங்கவில்லை. `தாமதிக்கக் கூடாது' என முடிவெடுத்த மூத்த பிடாரன், முன் களத்தை நோக்கி விரைந்தான். பதுமன் அடுத்து என்ன முடிவெடுப்பது என்பது தெரியாமல் தந்தை இருக்கும் இடம் நோக்கி மேலேறினான்.

பெருஞ்சேரல், முகட்டின் மேல் இருந்தபடி களத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது படை பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்தது. சின்னஞ்சிறிய நாகர் கூட்டம் முன்னோக்கி வந்துகொண்டிருந்தது. பதுமன் வந்து தந்தையோடு இணைந்தான். எந்தவித முடிவும் எடுக்காமல் மூத்த பிடாரனுக்காக அவர்கள் காத்திருந்தனர்.

சிறிது நேரம் கழித்து மூச்சிரைக்க ஓடிவந்தான் மூத்த பிடாரன். மேலெல்லாம் அலங்கோலமாய் இருந்தது. “எள்ளுச்செடியில் உற்பத்தியாகும் கண்ணுக்குத் தெரியாத கொடும்நாகம் ‘குருதிப்பனையன்’. அம்புகளோடு இணைந்து அவை வந்துகொண்டிருக்கின்றன” என்று தன் மீது பாய்ந்த அம்பை கையில் ஏந்தியபடி கூறினான்.

பெருஞ்சேரலன் நடுங்கிப்போனான்.

“இப்போது என்ன செய்யலாம்?”

பதில்  சொல்லும் ஆற்றல் குறைந்துகொண்டிருந்தது. ஆனாலும் உள்ளுக்குள் பாயும் நஞ்சின் வேகத்தை கணித்துக்கொண்டிருந்தான் மூத்த பிடாரன். அப்போது பாய்ந்து வந்த அம்பு ஒன்று, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் குத்தியது.

மூத்த பிடாரன் சொன்னான், “இந்தக் குன்றில் மட்டுமே அவர்களின் குடி இருக்கிறது. இன்று இரவோடு இரவாகக் குன்றைச் சுற்றிவளையமிட்டுத் தீயிடுங்கள். தீயில் இருந்து மீள, அவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை. நாகர் இனம் முழு முற்றாக அழியும்.”

பெருஞ்சேரல் சற்றே தயங்கிச் சிந்தித்தான்.

மூத்த பிடாரன் சொன்னான், “ஒருமுறை தாக்கிவிட்டுப் பாதியில்விட்டால், அவர்கள் உங்களை அழிக்காமல் விட மாட்டார்கள். எனவே, முழுமையும் அழித்துவிடுங்கள்.”

பெருஞ்சேரலின் உடலெங்கும் அச்சம் பரவியிருந்தது. அவனது தயக்கத்தைக் கணித்தபடி பிடாரன் வாய் குழறிச் சொன்னான், “இவர்களை அழித்தால் மட்டுமே உங்கள் இரண்டாவது மகனின் ஆட்சிக்காலம் நிலைத்திருக்கும்.”

‘முதல் மகன் பதுமன் இருக்கும்போது ஏன் இவன் இரண்டாவது மகனைப் பற்றிச் சொல்கிறான்?’ என்ற அதிர்ச்சியோடு பெருஞ்சேரல் திரும்பி பதுமனைப் பார்த்தான்.

பெருஞ்சேரலின் கதறல், காதில் சன்னமாக விழுந்தது. கேட்டபடியே மண்ணில் சரிந்த மூத்த பிடாரனின் வாய் முணுமுணுத்தது, “ஒரு முழம் அளவில் கிளைகளில் தொங்கியபடி வாய் பிளந்து இருக்கும் மனிதனைக் கண்டால் தாவிக் கடிக்கும் உச்ச நஞ்சுகொண்ட பச்சிலை விரியன், சிறிது நேரத்துக்கு முன் பாய்ந்து வந்த அம்பிலிருந்து விலகித் தாவி பதுமனின் தொண்டையைக் கவ்வியது.”

வாயில் நுரை தள்ளியபடி இருந்தது. ஆனாலும் மூத்த பிடாரனின் உடலில் இருந்த நச்சுமுறி மருந்துகள் அவனை விரைவில் சாகவிடவில்லை.

அன்று இரவு எருக்குமலையைச் சுற்றி தீ மூட்டப்பட்டது. மூத்த பிடாரனின் கண் முன் எருக்குமலை முழுமுற்றாக எரிந்தது. அதன் மஞ்சள் வெளிச்சத்தில் நாகர்கள் துடிதுடித்துச் செத்தனர். நாகர்களின் அழிவோடு பிடாரனின் வாழ்வும் முடிந்தது.

தை கேட்டுக்கொண்டிருந்த கபிலருக்கு, உயிர் உறைந்துவிடுவதுபோல் இருந்தது. ஆனால், கதையைவிட அவரை உலுக்கியது கண்ணுக்கு முன்னால் காணும் காட்சி. நெருப்பு அணைந்த பிறகு கங்குகளின் மீதுதான் இறங்குவார்கள் என்றுதான் அவர் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், புதிதாக இரண்டு காதல் இணையர்கள் கை புணர்ந்து ஆடியபடி நெருப்பை நோக்கி நகர்ந்தனர்.

நெருப்பின் அனலில் நின்றாடப்போகிறார்கள் எனக் கபிலர் நினைத்துக்கொண்டிருந்தபோதே, அவர்கள் எரியும் நெருப்புக்குள் நுழைந்தனர். கபிலருக்கு குருதியோட்டமே நின்றுவிடுவதுபோல் இருந்தது.

மனிதர்கள் உயிரோடு நெருப்புக்குள் இறங்குவதை, கண்களால் காண முடியவில்லை. நெருப்புக்குள் இறங்கியவர்கள் சுழன்று கைகளை வீசியபோது, உள்ளிருந்து தீப்பொறிகள் நான்கு புறங்களிலும் தெறித்தன. அவர்கள் ஆடுகின்றனரா... எரிகின்றனரா? புரியாத நிலையில் கண்ணிமை செருக, மயங்கிச் சரிந்தார் கபிலர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 11, 2018 6:19 pm

நன்றி ரமேஷ் .
இன்றுதான் முதல் முறையாக படிக்க ஆரம்பித்துள்ளேன்.
ஒரு புதினம் மனதை கவருவதற்கு அதன் முதல் அத்தியாயம்
கதாநாயகன் அறிமுகம் படுத்தும் விதம், உரை நடை முதலியவை
மிகவும் முக்கியம். வெங்கடேசன் அவர்கள் நடை மிகவும் அருமை.
நீலன் --கபிலர் முகவுரை சம்பாஷணை அருமை.
நீலனின் பேச்சில் உள்ள தன்னம்பிக்கை ---வாவ் --அருமையோ அருமை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 6:29 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p1
து ஆதி பழங்காலம். எந்த ஆண்டிலும் இல்லாதவாறு கோடைவெயில் உக்கிரம்கொண்டிருந்தது. எங்கும் இலை, தழைகள் காய்ந்து சருகாகக் கிடந்தன. நிலத்தின் வெக்கை, எலிவளைக்குள்கூட நாகங்களை இருக்கவிடவில்லை. மனிதர்களின் பாடு அதனினும் மோசமாக இருந்தது. ஒரு கொடும்பகலில் எருக்குமலையின் தென்திசையில் காட்டுத் தீ பற்றியது. பற்றிய வேகத்தில் மலையின் அடிவாரம் முழுவதும் நெருப்புப் பரவியது. மலையின் மேல்புறத்தில் குடியிருக்கும் நாகர்கள் பரவிவரும் நெருப்பை பகல் முழுவதும் அறியவில்லை. சூரிய வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு இருந்ததால், அவர்கள் பகலில் குடிலைவிட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். அனல் அலையலையாக மேலேறி வர, அது வழக்கமான ஒன்றுதான் என்று நினைத்தனர்.

சூரியன் இறங்கிய பிறகே அவர்கள் வெளியேறி வந்தனர். கரும்புகை விண்ணை நோக்கி எழுந்தவண்ணம் இருந்தது. எருக்குமலையின் நாலாபுறங்களில் இருந்தும் சருகுகள் பற்றி எரிய, தீயின் நாவுகள் சுழன்று மேல்நோக்கிப் பாய்ந்துவந்தன. மலையின் எந்தத் திசை வழியாகவும் வெளியேற முடியாத நிலை உருவாகிவிட்டது. இருக்கும் ஒரே வழி, மலையின் மேற்கு முகப்பிலே இருக்கும் கரும்பாறை மடிப்புகளும் அவற்றில் ஆங்காங்கே இருக்கும் குகைகளும்தான். நாகர்கள் எல்லோரும் குடிலைவிட்டு அகன்று குகைகளில் நுழைந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p2
உயிர் தப்பிய மகிழ்வு யாரிடமும் இல்லை. மலை முழுவதும் இருந்த நாகங்கள் நெருப்பில் அழிந்திருக்குமே, அவற்றைக் காப்பாற்ற முடியாமல் நாம் மட்டும் பிழைத்து என்ன ஆகப்போகிறது என்ற மனநிலைதான் எல்லோருக்கும். காட்டுத் தீ ஆறு நாட்கள் எரிந்தது. காற்று வீச வீச நெருப்பின் வெக்கை நாலாபுறங்களிலும் சீறிக்கொண்டிருந்தது. கரும்பாறைகள் பிளவுண்டன.

இரவும் பகலும் நாகர்கள் அழுகையை நிறுத்தவே இல்லை. ஒரு நள்ளிரவில் முதுமகள் ஒருத்தி குகையைவிட்டுச் சற்றுத் தள்ளிப்போய், பாறையின் மீது அமர்ந்து நெருப்புக்கோளமாகத் தகதகத்துக்கிடக்கும் காட்டைப் பார்த்தபடி இருந்தாள். அந்த இடத்தின் சூட்டில் யாரும் ஒரு கண்ணிமைப்பொழுதும் நிற்க முடியாது. அவள் எப்படி இவ்வளவு நேரம் நிற்கிறாள் என மற்றவர்களுக்குப் புரியவில்லை.

அவள் கண்களில் உயிர் இல்லை. எங்கும் தகிக்கும் கங்குகளே இருந்தன. நிலைகொண்ட மரங்கள் எவையும் இல்லை. நெருப்பு, மரங்களை முறுக்கித் திருகியது. இரவில் எரிந்து சரியும் மரங்களைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அங்குமிங்குமாக மரங்கள் வெடிக்கும் ஓசை நின்றபாடில்லை. கருநாகத்தின் சீற்றம் என வெடிப்புற்ற மரங்கள் நெருப்பைக் கக்கின.

முதுமகள், அழும் கண்களைத் துடைத்தபடி பாறையைவிட்டு எழுந்தாள். எழும்போது தொலைவில் தகித்துக்கொண்டிருக்கும் நெருப்பின் பரப்பில், ஏதோ ஒரு வேறுபாட்டை உணர்ந்தாள். அது என்னவென்று அவளுக்குப் பிடிபடவில்லை. அந்த இடத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஒன்றும் தெரியவில்லை. எங்கும் கங்குகள் கண் விழித்திருந்தன. இந்தக் கொடும் இரவில் எதைப் பார்த்து என்ன ஆகப்போகிறது என்ற நினைப்போடு எழுந்தாள். மீண்டும் அந்த இடத்தில் ஏதோ ஓர் அசைவு தெரிந்தது. கண்களைக் கூர்மையாக்கி உற்றுப்பார்த்தாள். கங்குகளின் உள்நெருப்பு காற்றின் போக்குக்கு ஏற்ப கூடிக் குறைவதால் ஏற்படும் அசைவுகள் நம்மைத் தொந்தரவு செய்கின்றன என்று நினைத்தபடி, குகையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p3
சிறிது தொலைவு நடந்தவள், மனம் பொறுக்காமல் மீண்டும் திரும்பிவந்து அந்த இடத்தை உற்றுப்பார்த்தாள். கங்குகளின் மீதான அசைவுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படத் தொடங்கின. அவளின் கண்கள் இமைகளை இறக்காமல் உற்றுப்பார்த்தபடியே இருந்தன. நம்பவே முடியாத பேரதிசயம் ஒன்றை அவள் உணரத் தொடங்கினாள். உடலெங்கும் வியர்த்து அடங்கியது. அது உண்மைதானா என்ற கேள்வியை மனம் மீண்டும் மீண்டும் எழுப்ப, அசையாமல் பார்த்தாள். உண்மைதான். `என் கண்கொண்டுதான் அதைப் பார்க்கிறேன்’ என்பதை அவள் நம்பத் தொடங்கினாள்.

நெருப்பு எரிவது அடங்கி, கங்குகள் மட்டும் கனன்றுகொண்டிருந்த ஓர் இடத்தில், சாம்பல் படிந்த கங்குகளின் மீது ஒரு நாகம் ஊர்ந்து போவதுபோல் இருந்தது. உற்றுப்பார்த்தாள் அவள். கண்ணிமைக்கும் நேரத்தில் கங்குகளைக் கடந்து, நெருப்பு அணைந்த இருள் பகுதிக்குள் நுழைந்தது அந்த நாகம்.

முதுமகள், குகையை நோக்கி ஓடினாள். கத்தியபடி இந்த உண்மையைச் சொன்னாள். `இந்தக் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p4கொடும்நெருப்பால் ஆறு நாட்கள் சூழப்பட்ட இந்த நிலையில் எல்லோரும் மனம் சிதைந்தே இருக்கிறோம். முதுமகள், அதிகச் சிதைவுக்கு உள்ளாகிவிட்டாள்’ என்று மற்றவர்கள் நினைத்தனர்.

அவளோ, `‘இல்லை நெருப்பின் மீது நாகம் ஊர்ந்து செல்வதை நான் பார்த்தேன்'’ எனக் கத்தி முறையிட்டாள். எல்லோருக்குமான ஆசையே, `‘மண்ணின் அதிசய உயிரினமான நாகங்கள் எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்பதுதானே. குலத்தின் முதுமகளுக்கு அது இருக்காதா?’' என்று ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லினர்.

முதுமகள் ஆறாத சினம்கொண்டாள். மறுநாள் இரவு எல்லோரையும் அவள் அமர்ந்திருந்த பாறைக்கு அழைத்துவந்தாள். தாங்க முடியாத வெக்கைக்கு நடுவே இரவு முழுவதும் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். நேற்றுபோல் கங்குகள் பெரும் அனலோடு இல்லை. சற்றே குறைந்திருந்தது. ஆனாலும் உள்நெருப்பு இரவானதும் கண்கள் விழித்துத் தகித்தது. ஊரே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. கரும்புகை விடாது வந்து முகத்தில் அறைந்தது.

பொழுது, நள்ளிரவைத் தாண்டியது. அவர்கள் தலைமுறைத் தலைமுறையாக வாழும் காட்டைச் சுழற்றித் தின்ற நெருப்பு, இப்போது சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறது.

`‘இந்தக் கொடும்காட்சியை இரவும் பகலுமாகப் பார்த்துக்கொண்டிருந்தால் எல்லோருக்கும் மனம் சிதைந்துதான்போகும், வாருங்கள் குகைக்குள் ஒடுங்குவோம்” என்று சொல்லி, பெரியவர் ஒருவர் எழுந்தவுடன் அனைவரும் எழுந்து குகை நோக்கிப் புறப்பட்டனர்.

முதுமகளுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. இனி இவர்களை நிறுத்த முடியாது என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. அவளும் உடன் நடக்கத் தொடங்கினாள். எல்லோரும் பாறைவிட்டு அகன்ற பிறகு, ஒரு சிறுவன் மட்டும் எதிர்திசையில் பார்த்தபடி அசையாமல் நின்றுகொண்டிருந்தான். மற்றவர்கள் அவனைச் சத்தம்போட்டு அழைத்தபடி குகை நோக்கி நடந்தனர்.

சிறுவனின் குரல் மெல்லியதாகத்தான் கேட்டது. எல்லோரும் அருகில் வந்து அந்தத் திசை நோக்கிப் பார்த்தனர். வியப்பால் விழிகள் பிதுங்கிக்கொண்டிருந்தன. கூட்டத்தினர் மூச்சு விடும் சத்தம்கூடக் கேட்கவில்லை. உறைந்துபோன நிலையில் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். கண்ணீரைத் துடைத்தபடி முதுமகள் மட்டும் குகையை நோக்கி நடந்தாள்.

அதன் பிறகு, பலகாலம் அந்த ரகசியத்தைக் கண்டறிய முடியாமல் நாகர்கள் தவித்துப்போயினர். கங்குகளின் மீது பாம்புகளால் எப்படி ஊர்ந்துபோக முடிந்தது? விடை தெரியாமல் இருந்த கேள்விக்கு முதுமகள்தான் ஒருநாள் விடை கண்டாள். அந்த மலையின் தென்திசைப் பாறை இடுக்குக்குள் ஓர் இடத்தில் ‘தீக்களி’ உள்ளது. அதில் புரண்டு, மேனி எல்லாம் தீக்களி அப்பியபடி நாகங்கள் நெருப்பைக் கடந்துள்ளன என்று அறிந்தாள்.

அது உண்மையா என்பதை அறிய முதலில் தானே உடல் எங்கும் தீக்களி பூசியபடி நெருப்புக்குள் இறங்கப்போவதாகச் சொன்னாள். முதுமகள் வாக்கைத் தட்ட முடியாமல் பெரும்மரங்களை வெட்டி வீழ்த்தி தீயை உருவாக்கினர். ஆடை துறந்து உடல் எங்கும் தீக்களி பூசியபடி நெருப்பினுள் நுழைந்தாள் முதுமகள். நாகர் கூட்டத்தின் உயிர்நாடி ஒடுங்கியது. அவள் உள்நுழைந்தபோது வீசிய காற்று, தழலைக் கிளர்ந்தெழச் செய்தது. குலத்தின் முதுமகள் நெருப்பில் மறைந்தாள்.

கணநேரத்தில் பதறிய ஆண்கள், “தண்ணீர்கொண்டு ஊற்றி நெருப்பை அணையுங்கள்” என்று கத்த, பெண்களோ, “முதுமகள் வாக்கை மீற அனுமதிக்க மாட்டோம்” என்று தீயைக் காத்து நின்றனர். சூழ்கொடி எனப் படர்ந்திருந்த நெருப்பின் கிளைகளை விலக்கி வெளியே வந்தாள் அவள்.

உறைந்து நின்றனர் நாகர்கள்.

``எண்ணெய்க்குள் நீர் நுழைய முடியாததைப்போலத்தான் இந்தத் தீக்களியைத் தாண்டி தீ நுழைய முடியாது” - சொல்லியபடி நடந்தாள் முதுமகள்.

நிர்வாண நிறைச்சுடரை அழைத்துக்கொண்டு நீராடச் சென்றனர் நாகினிகள். நடக்கும்போது அவள் சொன்னாள், “நெருப்பு, கண்ணுக்குள் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது கண்கள் திறந்தால் போதும்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p5
அவளின் குரலை, கண்விழித்துக் கேட்டுக்கொண்டிருந்தன நாகங்கள்.

தழல்மாலை சூடி வந்தவளின் மேனி எல்லாம் நீரூற்றி நீர்மாலை சூடினர்.

பெருஞ்சேரலின் படை எருக்குமலையைச் சூழ்ந்து எரியூட்டியபோது நாகர்கள் பலரும் போரிட்டு மாண்டுள்ளனர். மிஞ்சியவர்கள் உடல் எங்கும் `தீக்களி’ பூசி அந்த நெருப்பில் இருந்து வெளியேறி பறம்புமலை வந்து சேர்ந்தனர்.

அப்போதிருந்து, அவர்களின் குலவழக்கப்படி கொற்றவைக் கூத்தில் கை புணர்ந்தாடும் துணங்கைக் கூத்து நிகழ்கிறது. புதிய இணையர்கள் தங்களின் மேனி எங்கும் ‘தீக்களி’ பூசியபடி நெருப்புக்குள் நுழைந்து, `தழல்மாலை சூடுவர்.

பிலரின் உடல்நிலை ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்தது. நேற்றைய இரவுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமானது. பகல் முழுக்க தனது மாளிகையில் படுத்தபடி ஏதேதோ பிதற்றினார். உடல் மிகவும் சூடேறியிருந்தது. செய்தியைக் கேள்விப்பட்டு பாரி வந்தான். மருத்துவர்கள் மருந்துகள் தந்தனர். அவர்கள் போன பிறகு பாரி ‘தழல்மாலை சூடும்’ நிகழ்வை விளக்கிச் சொன்னான். அதை முழுமையாக அறிந்த பிறகுதான் கபிலரின் மனம் நிதானமடைந்தது.

`` `மூன்றாம் நாள் சற்றே அச்சமூட்டுவதாக இருக்கும். நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னேன். நீங்கள்தான் செவி சாய்க்கவில்லை” என்றான் பாரி.

“எனது உடல் ஈடுகொடுக்க மறுக்கிறது; மனம் உடலைப் பொருட்படுத்த மறுக்கிறது.”

அவர் சொன்னதைப் பற்றி பாரி சிந்தித்துக்கொண்டிருந்தான். கபிலர் தொடர்ந்தார்.

``எத்தனையோ தலைமுறைக்கு முன்னால் அழிந்த குலங்கள் பற்றி நான் கேள்விப்பட்ட கதைகள் இங்கு உயிர்கொள்கின்றன. மனிதர்கள் வரலாற்றுக்குள்ளிருந்து இறங்கிவருகிறார்கள். இந்த மண்ணெங்கும் சிந்தப்பட்ட குருதியும் கண்ணீரும் உலராமல் உனது உள்ளங்கையில் இருக்கின்றன பாரி” எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கபிலரின் குரல் உடைந்தது.

பாரிக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p6

“அந்தக் கண்ணீருக்கும் குருதிக்கும் பறம்பு கடமைப்பட்டுள்ளது” என்று மட்டும் சொன்னான்.

சிறிது நேரம் பேச்சற்ற அமைதி நீடித்தது.

“நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். நான் பிறகு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்தான் பாரி.

“உன்னிடம் இன்னொன்று கேட்க வேண்டும்?”

“என்ன?” என்றான் பாரி.

“நான் முதன்முதலாகக் கொற்றவைக் கூத்து பார்க்கிறேன். தழல்மாலை சூடலைப் பற்றி கேள்விப்பட்டதுகூட இல்லை. ஆனால், நீ காலங்காலமாக அதைப் பார்த்துக்கொண்டி ருப்பவன். அப்படியிருக்க அவர்கள் நெருப்புக்குள் இறங்கும்போது உனது உடல் நடுங்கியது ஏன், உனது கண்கள் ஏன் கலங்கின?”

கபிலரின் கேள்வி, பாரிக்குப் பெரும்வியப்பைக் கொடுத்தது. நெருப்பாடல் கண்டு கூட்டமே உறைந்துபோயிருந்த வேளையில், தன்னை எப்படி இவ்வளவு கூர்மையாகக் கவனித்தார்?

எழுந்த பாரி, கபிலரின் அருகில் உட்கார்ந்தான். அவனது முகத்தில் இவ்வளவு நேரம் இல்லாத ஓர் இளஞ்சிரிப்பு ஓடி மறைந்தது.

பாரி சொன்னான், ``நேற்று தழல்மாலை சூட மூன்று இணையர்கள் நெருப்புக்குள் இறங்கினர் அல்லவா? நெருப்புக்குப் பின்புறம் இருந்து உடல் எல்லாம் தீக்களி பூசிக்கொண்டு இறங்குபவர்களை, நெருப்புக்கு முன்புறம் உட்கார்ந்திருக்கும் நம்மால் எளிதில் அடையாளம் காண முடியாது. நேற்றும் அப்படித்தான். ஆனால், மூன்றாவது இணை உள்ளிறங்கும்போது அந்த ஆண்மகன் யார் என எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்தப் பெண்மகள் யார் என்று எனக்குத் தெரிந்தது. கணநேரத்தில் கண்டறிந்தேன்.”

சற்றே அமைதி காத்த பிறகு பாரி சொன்னான், “அவள் என் மூத்தமகள் அங்கவை.”

அதிர்ந்தார் கபிலர்.

பாரி தொடர்ந்தான், “சிறுவயதில் இருந்து தழல்மாலை சூடுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நெருப்பால் தீக்களியை மீறி ஒன்றும் செய்துவிட முடியாது என்று நன்றாகத் தெரியும். ஆனால், உள்ளிறங்கியது அங்கவை எனத் தெரிந்த கணத்தில் எனது உடல் நடுங்கியது.

அவள் ஆட்டத்தில் சிறந்தவள். தனது இணையோடு நெருப்பில் இறங்கி ஆடுகிறாள். ‘காதல்கொண்டு நெருப்பில் குளிக்கும் உன் மகளைப் பார்’ என ஒருபக்கம் மனம் துள்ளிக் குதித்தது. இன்னொரு பக்கமோ தழலுக்குள் இறங்குவது என் தசை எனத் துடித்தது.

உடலும் மனமும் இரு கூறுகளாப் பிளவுண்டதாக நீங்கள் சொன்னீர்களே, எனக்கோ மனமே இரு கூறுகளாகப் பிளவுண்டது.”

கலங்குவதிலும் கலங்கி மீள்வதிலும் பாரியே உதாரணமாக இருக்கிறான் என கபிலருக்குத் தோன்றியது.
 
“அவள் காதல்கொண்டது உனக்குத் தெரியுமா?”

``அவள் காதல் கொண்டுள்ளாள் என்பதை நான் முன்பே கணித்துவிட்டேன். ஆனால், யாரைத் தேர்ந்தெடுத்துள்ளாள் என்றுதான் தெரியாமல் இருந்தது.

``இப்போது தெரிந்ததா?’’

``இல்லை. நெருப்பில் நம் தசையைத்தானே நாம் உணர முடியும். அந்த இளைஞன் யார் எனத் தெரிந்துகொள்ள ஆசையோடிருக்கிறேன். அவளே சொல்லட்டும். அவள் காதல்கொண்டுள்ளாள் என்றால், அவன் மாவீரனாகத்தான் இருப்பான். இவளின் காதலைப் பெற முடிந்த ஒருவன், வீரத்தைத் தாண்டிய அரும்குணங்களைக் கொண்டிருப்பான். காத்திருக்கிறேன். அவனின் கைப்பற்றி எனக்கு எதிரில் வந்து அவள் நிற்கும் நாளுக்காக.”

மகிழ்ச்சி பொங்க கபிலர் கேட்டார்... வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p7

``ஆதினிக்குத் தெரியுமா?”

சிரித்தான் பாரி.

``அவளுக்குத் தெரியாமலா இருக்கும்? தனக்கும் அவனுக்கும் ஏற்பட்டுள்ளது காதல் என்று அங்கவை உணரும் முன்பே அவள் அறிந்திருப்பாள். அவள், தாய் அல்லவா?”

கலங்கினார் கபிலர். மண்ணை வேர் ஊடுருவுவதுபோல மனங்களை ஊடுருவுகிறான் பாரி. தன்னையும் அவன் ஊடுருவிக்கொண்டிருப்பான்.

“அப்படி எனில், வேளீர் குலம் நாகர் குலத்தோடு கலக்கப்போகிறது அல்லவா?”

“கலவையில்தானே புதுமைகள் பூக்கும். வேடர்குலமும் கொடிக்குலமும் இணைந்ததில்தானே வேளீர்குலம் பிறந்தது. வேளீர்குலத்தில் கலந்துள்ள கலவைகள் எத்தனை எத்தனை! என் தாய் சொல்வாள்... `உன் பாட்டன் திரையர் பெண்ணை மணந்தான்’ என்று. `காட்டெருமையை அடக்கும் வலு எனது தோள்களுக்கு வாய்த்தது அதனால்தான்' எனப் பலமுறை நினைத்திருக்கிறேன். திரையர்போல் திடம்கொண்ட ஒரு குலம் இந்த மண்ணில் வேறு எது? நாளை என் பேரக்குழந்தையின் கண்களில் நீல வளையம் பூத்து மறையும் அழகைப் பார்க்க இப்போதே தயாராகிவிட்டேன்” - சொல்லும்போதே பாரியின் முகம் எல்லாம் பூத்து மலர்ந்தது.

கபிலரின் உடற்சூடு குறையவில்லை. மாலை ஆனதும் அதிகமாகத் தொடங்கியது. நீலன், திசைக்காவல் வீரன். ஆதலால், கொற்றவைக் கூத்து முடிந்ததும் அவன் வேட்டுவன் பாறைக்குச் சென்றாக வேண்டும். எனவே, கபிலருக்கு உதவ உதிரனை அனுப்பிவைத்தான் பாரி.

இளம்வீரன் உதிரன், கபிலரின் மாளிகைக்கு மாலையில் வந்துசேர்ந்தான். அந்தப் பெருங்கவியை விழுந்து வணங்கினான். இருக்கையில் அமர்ந்தபடி அவனுக்கு வாழ்த்து சொன்னார் கபிலர். கொண்டுவந்த பச்சிலை உருண்டைகளை அவர் கையில் கொடுத்து, வாயில் போட்டுக்கொள்ளச் சொன்னான்.

“எனது உடற்சூடு குறைந்துள்ளதாக உணர்கிறேன்.”

குடிக்க நீரைக் குவளையில் நீட்டியபடி உதிரன் சொன்னான், “இன்னும் குறையவில்லை?”

உதிரனை உற்றுப்பார்த்தார் கபிலர்.

“உங்களின் கால் தொடும்போது அறிந்தேன். நீங்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி அனுப்பியுள்ளனர்” என்றான் உதிரன்.

பெரியவர்கள் சில வேலைகளைச் செய்ய மறுப்பார்கள். அதற்கான காரணங்கள் அவர்களிடம் இருக்கும். அதுதான் சரி என உறுதியாக நம்புவார்கள். அதை மீறி அவர்களைச் செய்யவைக்கச் சிறந்த வழி, வயதில் மிகச் சிறியவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதுதான். இறங்கிவந்து அவர்களால் வாதாட முடியாது. அவர்களைக் கொண்டே அவர்களின் தரப்பை வீழ்த்தும் முயற்சி. பாரி அதையே செய்தான்.

உதிரன், ஒரு பெருங்கவியைக் குழந்தைவடிவில் கண்டுகொண்டிருந்தான். அவர் இரவானதும், “கொற்றவைக் கூத்துப் பார்க்க அழைத்துப் போ” என்று நச்சரிக்கத் தொடங்கினார். அவனோ அவரை மாளிகையின் மேலே அழைத்துச் சென்றான். காற்றில் மிதந்துவரும் இசையை வைத்தே, அன்றைய கூத்து யாருடையது என்று அவருக்குச் சொல்லத் தொடங்கினான்.

நான்காம் நாள் கூத்துக்கான சல்லென்ற ஓசையுடைய சல்லிகையின் ஓசை கேட்டது. மறுநாள் மலைத்தெய்வம் சாத்தனுக்காக முழங்கப்படும் இசைக்கருவியான ‘அடக்கத்தின்’ ஓசை கேட்டது. ஆறாம் நாள் பலாமரத்தினால் செய்யப்பட்டு கரடி கத்துவதுபோல் ஓசை எழுப்பக்கூடிய ‘கரடிகை’யின் ஓசை கேட்டது.

இப்படி ஒவ்வொரு நாளும் கேட்கும் ஓசையை வைத்தே அன்றைய கூத்தில் பாடப்படும் கதையை அவன் கூறினான்.

எட்டாம் நாள் இசையின் சத்தமே இல்லாமல் விட்டு விட்டு மனிதர்கள் கத்தும் ஓசை மட்டும் கேட்டது. ``இது கூவல் குடி'’ என்றான்.

``ஒலிக் குறியீடுகளை உருவாக்கி, காட்டைத் தங்களின் குரல்வளையால் பின்னி, தொடர்புகளை உருவாக்கும் வித்தை தெரிந்தவர்கள்'’ என்றான். மறுநாள் கொம்பன் குடியைப் பற்றிக் கூறினான். இடையில் சற்றே உடல் நலம் சரியான கபிலர் கொம்பன் குடியின் கதையைக் கேட்ட நாள் அன்று முற்றிலும் தூக்கம் தொலைத்தார். கதைகள் பல நேரம் குருதியை உறையவைக்கக்கூடியனவாக அமைந்துவிடுகின்றன.

கதை, சொல்லும்போது பெருகக்கூடியது; நினைக்கும்போது திரளக்கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக்கூடியது. வடிவமற்ற ஒன்றின் அதீத ஆற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான்.

மறுநாள் கடும் மழை இறங்கியது. கார்காலத்தின் தொடக்க நாள்கள். காட்டின் குணம் மாறத் தொடங்கியது. இரவில் மழையின் ஒலியே எங்கும் கேட்டது. இசைக்கருவிகளின் ஓசை எதுவும் கேட்கவில்லை. முதல் இரண்டு நாள்கள் இரவில் விட்டுவிட்டுப் பெய்த மழை, அதன் பிறகு, முழு இரவும் கொட்டித் தீர்த்தது. மீதம் இருக்கும் நாள்களின் கதைகளைச் சொல்லும்படி கபிலர் கேட்டுக்கொண்டே இருந்தார்.

மூன்று கதைகளைச் சொன்னான் உதிரன். பதினைந்து கூடையில் பழங்கள் வைக்கப்பட்டு, தெய்வவாக்கு விலங்குக்காகக் காத்திருப்பது கபிலருக்கு நன்கு தெரியும். எனவே, மீதமுள்ள நான்கு நாள்களுக்கான கதைகளை கேட்டுக்கொண்டே இருந்தார். உதிரன், ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்துப் பார்த்தான்.

“நான் ஒன்றும் சிறுபிள்ளை அல்ல” என்று சற்றே கோபித்தார் கபிலர்.

உதிரன் மனம் கலங்கிச் சொன்னான், “என்னை மன்னித்துவிடுங்கள். அந்தக் கதைகளைச் சொல்லும் வலிமை எனக்கு இல்லை.’’

சொல்லும்போதே அவனது உடல் நடுங்கியதைக் கபிலர் உணர்ந்தார். மறுநாள் கபிலரைப் பார்க்க வந்த மருத்துவர்களிடம் அவனும் மருந்து வாங்கிக்கொண்டான்.

``இன்று பதினேழாம் நாள் எவ்வளவு கடும் மழை பெய்தாலும், அதையும் மீறி இசையின் ஓசை கேட்கும்’’ என்றான்.

“காரணம் என்ன?” எனக் கேட்டார் கபிலர்.

``இன்றைய நாள் வேளீருக்கு உரியது. வந்துள்ள அத்தனை குடிப் பாணர்களின் இசைக்கருவிகளும் ஒருசேர முழங்கும். காடு கிடுகிடுக்க, காண்போர் நடுநடுங்க களமிறங்கி ஆடுபவன் வேள்பாரி. கொற்றவைக்கு முன் காட்டெருமையைப் பலியிட்டு, மேலெல்லாம் குருதி பூசி நிலம் நடுங்க ஆடுவான். பறம்பின் எல்லைக்குள் வந்த குலங்களின் கண்ணீர் துடைக்க உயிரையும் தரச் சித்தம் என உருகிச் சொல்லும் பெருநாள் இது.''

சொல்லிக்கொண்டிருக்கும் உதிரனின் உடல்மொழியைக்கொண்டே பாரியின் ஆட்டத்தை உணர்ந்தார் கபிலர். போர்த் தெய்வமான கொற்றவையின் முன், வாளேந்தி ஆடும் அமலையின் ஆட்டத்தை ஆடுவான் வேள்பாரி!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 6:33 pm

T.N.Balasubramanian wrote:நன்றி ரமேஷ் .
இன்றுதான் முதல் முறையாக படிக்க ஆரம்பித்துள்ளேன்.
ஒரு புதினம் மனதை கவருவதற்கு அதன் முதல் அத்தியாயம்
கதாநாயகன் அறிமுகம் படுத்தும் விதம், உரை  நடை முதலியவை
மிகவும் முக்கியம். வெங்கடேசன் அவர்கள் நடை மிகவும் அருமை.
நீலன் --கபிலர் முகவுரை சம்பாஷணை அருமை.
நீலனின் பேச்சில் உள்ள தன்னம்பிக்கை ---வாவ் --அருமையோ அருமை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1268786
ஆமாம் ஐயா நிச்சயமாக அருமையான நடை... மீளமுடியாமல் தவிக்கிறேன் ... இக்கதையில் இருந்து ...
கல்கி அவர்களை போலவே கதை மாந்தர்களுக்குள் நம்மை உலாவ விடுகிறார்.. உலாவிக்கொண்டு இருக்கிறேன் மகிழ்ச்சியுடனும் பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 11, 2018 7:13 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி ரமேஷ் .
இன்றுதான் முதல் முறையாக படிக்க ஆரம்பித்துள்ளேன்.
ஒரு புதினம் மனதை கவருவதற்கு அதன் முதல் அத்தியாயம்
கதாநாயகன் அறிமுகம் படுத்தும் விதம், உரை  நடை முதலியவை
மிகவும் முக்கியம். வெங்கடேசன் அவர்கள் நடை மிகவும் அருமை.
நீலன் --கபிலர் முகவுரை சம்பாஷணை அருமை.
நீலனின் பேச்சில் உள்ள தன்னம்பிக்கை ---வாவ் --அருமையோ அருமை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1268786
ஆமாம் ஐயா நிச்சயமாக அருமையான நடை... மீளமுடியாமல் தவிக்கிறேன் ... இக்கதையில் இருந்து ...
கல்கி அவர்களை போலவே கதை மாந்தர்களுக்குள் நம்மை உலாவ விடுகிறார்.. உலாவிக்கொண்டு இருக்கிறேன் மகிழ்ச்சியுடனும் பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1268789

ஆம் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் + வந்தியத்தேவன் அறிமுகம் நினைவுக்கு வருகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 9:43 pm

பாகம் 2







வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p1

ளமருதன், குதிரையின் மீது ஏறி அமர்ந்தான். அவனது குதிரைக்கு ‘ஆலா’ எனப் பெயர். ஆலாப்பறவை ஓய்வின்றி நாள் முழுவதும் பறந்துகொண்டிருப்பதைப்போல, அவனது குதிரையும் நாள் முழுவதும் நிற்காமல் ஓடக்கூடியது. ‘ஆலாய்ப் பறக்கிறான் இளமருதன்’ என்ற பேச்சு, எங்கும் பரவியிருந்தது.

குதிரை, தன் வேகத்தைவிட இளமருதனின் குறிப்பு அறிந்து செயல்படும்விதம்தான் வியப்பூட்டக்கூடியது. ஆலாவின் முன்தலையை விரல்களால் வருடியபடி அதனுடன் பல நேரம் பேசிக்கொண்டிருப்பான். அது தலையை மெள்ள ஆட்டிக் கேட்டுக்கொண்டிருக்கும். அவன் சொல் கேட்டுத் தலையாட்டுகிறதா அல்லது விரல்கள் நீவுவதால் இன்புற்றுத்  தலையசைக்கிறதா என்பது, காண்போருக்குப் புரியாது. அது அவர்கள் இருவரின் மனவோட்டத்தோடு தொடர்புடையது. மேலே அமர்ந்திருக்கும் வீரனின் எண்ணத்தோடு குதிரையின் மனவோட்டமும் இணையும்போதுதான் வேகத்தை ஆளும் ஆற்றலைப் பெற முடிகிறது.

இளமருதனுக்கு இந்த உலகிலேயே மிகவும் பிடித்த செயல் ஆலாவின் மீது அமர்ந்து, பாய்ந்து செல்வதுதான். நிலத்தை ஆலாவின் காலடியில் அழுத்தி விண்ணில் குதிக்கும் அந்தக் கணம் மனதில் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை இன்னொன்று ஏற்படுத்தாது. எனவே, கடிவாளத்தைச் சுண்டியதும் குதிரை பாயத் தொடங்கும் அந்த முதற்கணத்துக்காக எப்போதும் காத்திருப்பான்.

அதனாலேயே இந்த நீண்ட பயணம் அவனுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. புறப்படும் நாளுக்காக ஆவலோடு காத்திருந்தான். அவன் தந்தை மையூர்கிழார், வெங்கல்நாட்டுத் தலைவன்; பாண்டிய வேந்தனுக்குக் கட்டுப்பட்ட சிறுகுடி மன்னன்.
பாண்டிய மாவேந்தன் குலசேகரப் பாண்டியனின் ஆளுகைக்குக் கீழ் எண்ணற்ற சிறுகுடி மன்னர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் வெங்கல்நாட்டுத் தலைவனுக்குத் தனித்த ஓர் இடம் உண்டு. அதனால்தான் இளவரசர் பொதியவெற்பனின் மணவிழாவுக்கான சிறப்பு அழைப்பு அவருக்கு வந்திருக்கிறது.

பாண்டியநாட்டு இளவரசனின் மணவிழா, நான்கு நிகழ்வுகளாக இரு மாதகாலம் நடைபெறுகிறது. நிறைவாக நடக்கும் திருமாலை அணியும் விழாவுக்குத்தான் சிறுகுடி மன்னர்கள் அனைவருக்கும் அழைப்பு. மற்ற விழாக்களுக்கு அவர்களுக்கு அழைப்பில்லை. மாமன்னரின் மனதில் தனித்து இடம்பிடித்த சிறுகுடி மன்னர்கள் எண்மருக்குத்தான் இந்த முழு விழாவுக்கான அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று வெங்கல்நாடு.

புறப்படுவதற்கு இன்னும் காலம் இருந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் அரண்மனையிலிருந்து அவசர ஓலை. `மணவிழாவுக்காகப் புதிய மாளிகைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றின் பணிகளை வேகமாக முடிக்கவேண்டியுள்ளதால், தேர்ந்த சுதை வேலைகள் செய்யும் ‘மண்ணீட்டாளர்களை’ அனுப்ப வேண்டும்' என்னும் ஓலையைக் கொண்டுவந்தான் அரண்மனையின் முதன்மை அலுவலனான செவியன்.

வெங்கல்நாடு, மதுரைக்கு வெகுதொலைவில் பச்சைமலையின் தென்புற அடிவாரத்தில் உள்ளது. `பாண்டியநாட்டின் வடமேற்கு எல்லை இது' எனச் சொல்லலாம். செழிப்பான நிலப்பகுதிகளைக் கொண்டது. சரிபாதி மலை வளத்தையும் மீதிப்பாதி மருத நிலத்தையும் கொண்டது. எனவே, வனத்தின் செல்வமும் உழவின் செல்வமும் ஒருங்கே கிடைத்தன. அதனாலேயே வெங்கல்நாடு செழிப்புற்று விளங்கியது.

மரவேலைப்பாடுகளும் மண் வேலைப்பாடுகளும் சிறப்புறச் செய்யும் எண்ணற்ற கலைஞர்கள் இங்கு உள்ளனர். கட்டடங்கள் கட்டியெழுப்பும் கொற்றர்களுக்கு இது தாய்நிலம். பெரும்கட்டடங்கள், இவர்களின் கரம்கொண்டே மேலெழும்பின. அதன் தொடர்ச்சியாக, நுட்பமான சுதை வேலைப்பாடுகளைச் செய்யும் மண்ணீட்டாளர்களும் உருவாகினர். தலைநகர் மதுரையின் கட்டடத் தேவைகளுக்கான கலைஞர்களைத் தருவதில் வெங்கல்நாடு முதன்மையாக விளங்கியது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் மதுரையை இப்போதுதான் பார்க்கப்போகிறான் இளமருதன். மணவிழாவுக்கு, வெங்கல்நாட்டின் சார்பில் தரவேண்டிய சிறப்பான பரிசுப்பொருளைத் தேர்வுசெய்வதில்தான் கடந்த சில மாதங்களாக இவர்கள் மும்முரமாக இருந்தனர். நடக்கப்போவது இந்தப் புவியின் மாபெரும் விழா. இந்த விழாவில் கலந்துகொள்ள, உலகெங்கிலும் இருந்து அரசக் குடும்பத்தினர் வந்து இறங்கப்போகின்றனர். தனது வாழ்நாளில் இப்படியொரு பெருவிழாவை இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கப்போவதில்லை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் மையூர்கிழார். எனவே, தாங்கள் தரும் பரிசுப்பொருளை மாமன்னரும் இளவரசனும் கண நேரமாவது கண்கொண்டு பார்க்க வேண்டும் என்பதற்கு பெருமுயற்சி எடுத்துக்கொண்டனர்.

எத்தனையோ பொருள்கள் தயாராகிக் கொண்டிருந்தன. ஆனால், மையூர்கிழார் பெரிதும் கவனம் செலுத்திக்கொண்டிருப்பது ஒரு பொருளின் மீதுதான். அரண்மனையில் புதிதாகக் கட்டப்படும் மாளிகைகளைப் பற்றிய விவரம் மற்றவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, மையூர்கிழாருக்கு நன்கு தெரியும். ஏனென்றால், மதுரைக்கு அதிகமான கொற்றர்களை அனுப்பிவைப்பது இவர்தானே!

புதிய கட்டுமானத்தில் பேரெழிலோடு எழுப்பப்பட்டுவருவது ‘பாண்டரங்கம்’. அரசக் குலத்தினர் மட்டும் ஆடி மகிழும் கலைக்கூடம். அதுவும் இந்தப் பாண்டரங்கம், இளவரசரின் மணவிழாவுக்காகக் கட்டப்படுகிறது. பொதிய வெற்பனின் அந்தரங்க அவை அது. அங்கு கண்ணில்படும் பொருள், அதன் பிறகு ஒருபோதும் மறையாது. நாம் தரும் பரிசுப்பொருள் பாண்டரங்கத்தில் இடம்பெற வேண்டும். அதற்குச் செய்யவேண்டியது என்ன என்பதைத்தான் பல மாதங்களாகச் சிந்தித்துக்கொண்டிருந்தனர்.

மணமக்கள் பொற்காசுகளை அள்ளி எறிய, மதுரையின் வீதியெங்கும் பொன்னொளி வீசப்போகும் திருவிழா. இந்த விழாவில் சிறுகுடி மன்னன் ஒருவன் தரும் பரிசுப்பொருள் நினைவில் நிற்கவேண்டுமென்றால், அது இயலாத காரியம் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். ஆனால், மையூர்கிழார் விடாமல் முயற்சி செய்துகொண்டிருந்தார். செல்வத்தை விஞ்சும் ஆற்றல் கலைகளுக்கு உண்டு. செல்வத்தின் திளைப்பில் மிதக்கும் கண்களை, அதைவிட அதிகமான செல்வத்தைக் கொட்டுவதன் மூலம் கவனம் பெறவைக்க முடியாது. ஆனால், கலையின் நுணுக்கம் கண்களை அசைவற்று நிறுத்தும்.

மனிதன், கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனைக் குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது. மையூர்கிழார் பாண்டரங்கத்தில் வைப்பதற்கு ஏற்ற பொருளை ஆயத்தம்செய்வது என முடிவுக்கு வந்தார். அப்போதுதான் அதிலிருக்கும் இன்னொரு சிக்கல் தெரியவந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p2
நடக்கும் திருமணம் பாண்டியநாட்டு இளவரசருக்கு என்பதைவிட மிக முதன்மையானது, அவர்கள் பெண் எடுக்கும் இடம் பற்றியது. இந்த மணவிழாவுக்கு, உலகில் உள்ள கலைப்பொருள்கள் அனைத்தையும் கொண்டுவந்து கொட்டுவர் என்பதை எண்ணியபோதுதான் மையூர்கிழாருக்கு சற்றே அவநம்பிக்கை ஏற்பட்டது. அந்தக் கலைப்பொருள்களோடு நாம் ஈடுகொடுக்க முடியாது என்று எண்ணி சோர்வுற்றார்.

அப்போது பொற்கொல்லர் அவையில் இருந்த இளைஞன் `காராளி’ சொன்னான், ‘`வாசல் வரை வந்து வழுக்கி விழக் கூடாது. அந்த வழியிலேயே காலெடுத்து வைத்து முன் நகர்வோம்.'’

“பாண்டரங்கம் முழுவதும் இடம்பெறப்போவது, யவனர்களின் மிகச்சிறந்த கலைப் படைப்பான `பாவை விளக்கு'தான். அது இருக்கும் அவையில் வேறு எந்தப் பொருளும் கவனம்பெற முடியாது” என்று மையூர்கிழார் சோர்வடைந்தபோது காராளி சொன்னான், `‘யவன பாவை விளக்கை விஞ்சும் விளக்கொன்றை நம்மால் உருவாக்க முடியும்.”

`‘உறுதியாக முடியாது” என்று சொன்ன மையூர்கிழார், காராளியிடம் கேட்டார்

`‘நீ யவனர்களின் பாவை விளக்கைப் பார்த்திருக்கிறாயா?”

“இல்லை மன்னா.”

“அதனால்தான் எளிதில் சொல்லிவிட்டாய்.”

“நீங்கள் எவ்விடம் பார்த்தீர்கள் மன்னா?”

“வேந்தனின் அரண்மனை முழுவதும் இப்போது யவனர்களின் பாவை விளக்குகள்தானே கண்ணில்படுகின்றன. அரசவை மாடத்தில் சுடர் ஏந்தி நிற்கும் அந்த விளக்குகளைக் காண்பவர் வியந்துபோய் நிற்பர்.”

சற்றே இடைவெளிவிட்டு காராளி சொன்னான், `‘அரசவை மண்டபம், அரண்மனை மாடங்கள் என எங்கும் பார்த்துப் பழகிய ஒரு கலைப்பொருள், அந்தரங்கமான இடத்தில் கூடுதல் கவனத்தைப் பெறுமா?”

காராளியின் கேள்வி, மையூர்கிழாருக்கு வழிகாட்டத் தொடங்கியது. அவன் மேலும் சொன்னான், “அது மணமக்கள் கூடிக்குலவும் அரங்கு. அங்கே கண்களுக்குத் தேவை புதுமை. அதுவும் காதலுக்கு அப்பாற்பட்ட புதுமை அன்று; காதலுக்குள்ளே மூச்சுமுட்ட இழுத்துச் செல்லும் ஒரு புதுமை. அதை நாம் கலைவடிவாக்கலாம்.”

“என்ன செய்யலாம் என்கிறாய்?”

“காமன் விளக்கு செய்வோம்.”

பொற்கொல்லர் அவையில் இருந்த அனைவரும் வியப்புற்று நின்றனர். `மிகச் சிறப்பான சிந்தனை' என மையூர்கிழாருக்குப் பட்டது.

அவன் அடுத்துச் சொன்னான், “காமன் விளக்கு மட்டும் போதாது. நாம் வழக்கமாகச் செய்யும் நாக விளக்கு இரண்டையும் சேர்த்துச் செய்யவேண்டும். அதுதான் காமன் ஏற்படுத்தும் கனவுக்கு உருவம் கொடுக்கும்'’.

எல்லோரும் வாயடைத்துப்போனார்கள். இரண்டு நாகங்கள் பின்னியபடி மேலெழுந்து தலை நீட்ட, அதன் உச்சந்தலைச் சிறு குழியின் முன் விளக்கின் நாக்கும் நாகங்களின் நாக்குகளும் ஒன்றாக நீட்ட, சுடர் எரியும் வடிவுகொண்டது நாக விளக்கு.

நாகம் கொண்டு காமம் கவர்கிறான் இளைஞன் எனப் பூரித்து நின்ற மையூர்கிழார் கேட்டார், “வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்கள் இருக்கும் இந்த அவையில், யாருக்கும் தோன்றாத சிந்தனை உனக்கு எப்படித் தோன்றியது?”

மெல்லிய சிரிப்போடு காராளி சொன்னான், ‘`அவர்கள் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள். எனவே, அனுபவத்தின் கண்கொண்டு பார்க்கின்றனர். அனுபவம், அடைவதிலிருந்து மட்டும் ஏற்படுவதில்லை; அடையாததிலிருந்தும் ஏற்படுகிறது. நான் அடைந்திராத அனுபவத்தின் கண்கொண்டு பார்த்தேன்.”

மையூர்கிழார் வியந்துபோனார். அவனது சொல், அவரை மயக்கியது. பணிகள் தொடங்கின.

காமன் விளக்கை எப்படிச் செய்வது? காமத்துக்கு வடிவம் கொடுக்க முடியுமா? அது காட்சிவயப்பட்டதன்று, கனவு வயப்பட்டது. பூவின் மலர்தலில் வெளியேறும் மணம்போல, மனித மலர்தலில் உள்ளுருகும் நிகழ்வு அது.

கனவைக் கண்கொண்டு பார்க்க நினைப்பது அறியாமை. அது கண்ணுள் பார்க்கவேண்டியது. எனவே, தங்களுக்குள் மூழ்கும் எண்ணங்களுக்கு வாசல் திறக்கும் வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்கலானான் காராளி.

சட்டகங்களால் எல்லா திசைகளிலும் இழுத்துப்பிடிக்கப்பட்டிருக்கும் தோலில் ஓவியத்தை வரையத் தொடங்கினான். காதல் பரவசத்தில் நிற்கும் ஒரு பெண், தன் வலதுகையை பக்கவாட்டில் சற்றே உயர்த்திப் பிடித்திருக்கிறாள். அந்த உள்ளங்கையில் தீபத்துக்கான அகல் இருக்கிறது. இடதுகையை மார்போடு அணைத்தபடி வைத்திருக்கிறாள். அந்தக் கை, ஒரு மலரைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அவளின் பேரழகில் மயங்கிய காதலன், அவளின் முகம் பார்த்தபடி மிகவும் அணுக்கமாகக் கிறங்கி நிற்கிறான்.

காராளி வரைந்த இந்த ஓவியத்தைப் பார்த்தவர்களுக்கு, சற்றே ஏமாற்றம் ஏற்பட்டது. “இந்தப் படம் மிக அழகாக இருக்கிறது. ஆனால், இதில் என்ன புதுமை இருக்கிறது?” எனக் கேட்டனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p4
“ஓவியத்தைச் சிலையாக்கினால்தான் இதில் உள்ள புதுமை தெரியும்” என்றான் காராளி.

அவன் வரைந்ததுபோலவே, அழகும் உணர்வும் கொப்புளிக்கும் சிலை வடிக்கப்பட்டது. வலதுகையில் விளக்கு ஏந்தி, இடதுகையில் மலரை மார்போடு அணைத்து நின்றாள் அந்தப் பெண். காதல் பேருணர்வில் அவளின் முகத்தருகே வியந்து நின்றான் ஆண்.

பெரும் எதிர்பார்ப்புடன் வந்து வார்ப்புச்சிலையைப் பார்த்த மையூர்கிழாரின் முகம் சற்றே வாடியது, “அழகாய் இருக்கிறது. ஆனால், புதுமை இல்லையே!” என்றார்.

காராளி சொன்னான், “அவளின் கையில் இருக்கும் அகலில் விளக்கேற்றிப் பாருங்கள். புதுமை துலங்கும்.”

அந்தப் புதிய விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினர். தீச்சுடர் எரியத் தொடங்கியது. எல்லோரும் கவனமாகப் பார்த்தனர். விளக்கின் ஒளி, இருவரின் கன்னங்களிலும் பட்டுத் தெறிப்பதை கண்கள் உற்றுப்பார்க்கையில் காராளி கூறினான், “பின்புறம் நீளும் நிழலைப் பாருங்கள்.”

பக்கவாட்டில் ஏந்தி நின்ற வலதுகையில் தீபம் எரியத் தொடங்கியதும், இருவரின் நிழல்களும் ஒன்றின் மேல் ஒன்றாகப் படர்ந்து ஒற்றை நிழலாக நீண்டன. ஏந்தி நிற்கும் விளக்கின் உயரத்தையும் நிழல்கள் படரும் கோணத்தையும் அவ்வளவு துல்லியமாக வடிவமைத்திருந்தான் காராளி. அதைப் பார்த்த அனைவரும் மெய்ம்மறந்து நின்றனர்.

காராளி சொன்னான், “அந்தரங்க அவையில் காமன் விளக்கில் சுடர் ஏற்றியதும் அவர்கள் ஒளியின் வழியே நிழலுள் கரைவர். தனது நிழல் எது எனப் பிரித்தறிய முடியாத தவிப்பு, இரவு முழுவதும் அவர்களைச் சூழும். காமம், ஒளியால் அல்ல... ஒளி ஏற்படுத்தித்தரும் இருளுக்குள்தான் மலரத் தொடங்கும். நீர்மநிலையில் இருக்கும் எண்ணெய் நெருப்பாய் மாறி சுடர்வதைப் போலத்தான் தங்களுக்குள் இருக்கும் உயிர் பற்றி எறிய... ஓர் உயிராய் ஒடுங்குவர்.”

அனைவரும் வாயடைத்துப்போனார்கள். காராளி தொடர்ந்தான், ``நிழலை, இன்னும் கூர்ந்து கவனியுங்கள்.”

அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்கள், கண்களை அகலத் திறந்தபடி உற்றுப்பார்த்தனர். தீச்சுடர் அசையும்போதெல்லாம் நீண்டு கிடந்த நிழல்கள் அசைந்து நெளிந்தபடி இருந்தன. இறுக அணைத்துப் புரளும் உருவங்களை அவை நினைவுபடுத்தின. உருவ அசைவுகள் ஆளுக்கொன்றாகத் தோன்றத் தொடங்கின. கனவு ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ்ந்து கொண்டிருந்தது.

எவரும் பேசிக்கொள்ளவில்லை. ஏறக்குறைய உறைநிலையை அடைந்தனர். “காண்பவரின் கண்ணுக்குள் கனவை நிகழ்த்துவதுதான் கலை.”

காராளி, தான் முன்னர் சொன்ன சொற்களை மனதுக்குள் அசைபோட்டபடி நின்று கொண்டிருந்தான்.

பேச்சற்று நின்றிருந்த மையூர்கிழார் நேரம் கழித்துச் சொன்னார், “இந்த விளக்கு, எனது வாக்கைக் காப்பாற்றியது; உனது வாக்கை அழித்துவிட்டது.”

அவர் சொல்வதன் பொருள் யாருக்கும் புரியவில்லை. `என்ன தவறிழைத்தான் காராளி?' என, மற்றவர்கள் சிந்திக்கலாயினர்.

மையூர்கிழார் சொன்னார், “மிகச்சிறந்த பரிசுப்பொருளைக் கொண்டு செல்வேன் என்ற எனது வாக்கை, இந்தச் சிலை காப்பாற்றிவிட்டது. ஆனால், அனுபவமில்லாதவன் என்ற உனது வாக்கை இது பொய்யாக்கிவிட்டது.”

அரங்கம், சிரிப்பால் நிரம்பியது. காராளி, சற்றே தலைவணங்கி நின்றான். இந்தச் சிலையின் சிறப்பு, வலது கையில் ஏந்தி நிற்கும் விளக்கன்று; இடதுகையில் பிடித்திருக்கும் மலர்தான். ஆனால், அது யார் கண்ணுக்கும் படவில்லை. யாரும் அதைப் பொருட்படுத்திப் பார்க்கவில்லை. பெரும்படைப்பை உருவாக்கும் கலைஞனுக்கு ஏமாற்றமே மிஞ்சும். காராளிக்கும் அதுவே மிஞ்சியது. ஆனாலும் யாரேனும் ஒருவரின் கண் அந்தச் சிறப்பைக் கண்டறியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.
அகம் மகிழ்ந்து பாராட்டினார் மையூர்கிழார். ``மெருகேற்றும் பணியை விரைவில் முடியுங்கள்'' என்று உற்சாகமாகச் சொல்லிச் சென்றார். வேலைகள் முன்னிலும் வேகமாக நடந்தன.

இந்த நிலையில்தான் மதுரையிலிருந்து செவியன் ஓலை கொண்டுவந்தான். `கொற்றர்களை அழைத்துக்கொண்டு உடனே வரவேண்டும்' என்று.

ஐம்பது கொற்றர்களோடு இளமருதன் மறுநாள் புறப்படுவதாக முடிவாயிற்று. காராளி செய்துகொண்டிருக்கும் காமன் விளக்கின் பணிகள் முடிவடைய, இன்னும் ஒரு வார காலம் ஆகும். ஆனால், நாளை தனது மகன் வெறுங்கையோடு போனால் நன்றாக இருக்காது. ஏதாவது பரிசுப்பொருள் கொண்டுபோக வேண்டுமே என எண்ணினார் மையூர்கிழார். ஒன்றும் பிடிபடவில்லை. தனித்துவம் இல்லாத பொருளைக் கொடுத்துவிடுவதை மனம் ஏற்கவில்லை. ‘சரி, விடியட்டும் பார்க்கலாம்’ என முடிவுசெய்தார்.

றுநாள் அதிகாலை, மலையடிவாரத்தில் உள்ள தனது நிலத்தின் விளைச்சலைப் பார்க்க மூன்றேர் உழவன் சென்றான். காட்டாற்றின் அக்கரையில் இருந்தது அவனது விளைநிலம். இரவு கடும் மழை பெய்திருந்தது. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்க வேண்டும். இப்போது சற்றே குறைந்திருந்தது. ஆனாலும் ஆற்றைக் கடக்க முடியாது. கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அடித்துவரப்பட்ட பெரும்மரத்தின் தூர்ப்பகுதி கரையில் இருந்த பாறையின் இடுக்கில் செருகி நின்றது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனின் கண்களுக்கு, மரத்தின் மேல் ஈரத்தில் நடுங்கியபடி அமர்ந்திருந்த இரண்டு சிறு உயிரினங்கள் தெரிந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p3
அருகில் சென்று உற்றுப்பார்த்தான். அவை என்ன உயிரினம் எனப் புலப்படவில்லை. இதற்கு முன்பு இவற்றைப் போன்ற ஒன்றைப் பார்த்ததில்லை. அவை ஈரத்துக்கு நடுங்கியபடி இருந்தன. பார்க்கவே மிகவும் கவலையாக இருந்தது. அவை இரண்டும் குழந்தைகளைப்போல கண்களால் மிரண்டு பார்த்துக்கொண்டிருந்தன. நீரின் போக்கு, அவற்றை பெரும் அச்சம்கொள்ளச் செய்தது. அவற்றால் சிறிதும் நகர முடியவில்லை. சற்றே நகர்ந்தாலும் நழுவி நீருக்குள் விழுந்துவிடும் ஆபத்து இருந்தது.

உழவன், அருகில் சென்று அவற்றைக் காப்பாற்றலாம் என எண்ணினான். ஆனால், அருகில் சென்றால் கடித்துவிடுமோ என்ற அச்சம் வந்தது. அவை கொடிய நஞ்சாக இருந்தால் என்ன செய்ய முடியும்? எனவே, இறங்கிப் போய்ப் பிடிக்க வேண்டாம். அவையாகக் கரைக்கு ஏறுவதைப்போல ஒரு பெரிய கட்டையை எடுத்து கரைக்கும் அவை இருக்கும் கொப்புக்கும் இடையில் பாலம் அமைத்தான். ஆனால் அவையோ, அச்சத்தில் நடுங்கியபடி சிறிதும் நகராமல் அப்படியே ஒண்டிப்போய் நின்றன.

துணிந்து நீருக்குள் இறங்கி, அவற்றின் அருகில் சென்றான். அவை இரண்டும் பயந்து பம்மின. அவற்றைப் பிடித்துக்கொண்டு கரைக்கு வந்தான். அவை ஒன்றும் செய்யாமல் அப்படியே இருந்தன. விசித்திர வடிவம் தாங்கிய விலங்கை அவன் நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தான்.

குடித்தலைவர் மையூர்கிழாரிடம் கொண்டுபோய்க் கொடுப்போம் என முடிவுசெய்து, கிழாரின் மாளிகைக்கு வந்தான். அவரோ மகனை, கொற்றர்களுடன் மதுரைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். வாழ்த்துச் சொல்ல வந்த பாணர் கூட்டம் ஒன்று, அங்கு காத்திருந்தது.

மாளிகையின் உள்ளே வந்த உழவன், “இந்தப் புதுமையான விலங்கைப் பாருங்கள்” என்று சொல்லி, அவற்றை வெளியே எடுக்க முயன்றான்.

அவை உழவனைவிட்டு வெளியே வராமல் அவனது ஆடைக்குள் ஒடுங்கிப் பம்மின. அவன், இடுப்பைப் பிடித்து இழுத்து வெளியே விட்டான். வட்டவடிவக் கண்களால் மிரண்டு மிரண்டு விழித்தன. மையூர்கிழாரும் உடன் இருந்த அனைவரும் இந்த விலங்கை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர். யாரும் இதற்கு முன் இவற்றைப் பார்த்ததில்லை. இவை என்ன வகை விலங்கு என, ஆளுக்கொரு விளக்கத்தை அளித்துக் கொண்டிருந்தனர். சற்றுத்தள்ளி நின்ற பாணர் கூட்டத்தின் முதியோன் ஒருவன் எட்டிப்பார்த்தபடி சொன்னான், “இது பறம்புநாட்டின் தெய்வவாக்குச் சொல்லும் விலங்கு. பெரும்மழையில் அடித்து, தரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.”

பாணனின் குரல், வியப்பை ஏற்படுத்தியது. அவற்றின் மீதான வியப்பு இன்னும் அதிகமானது. அதுவரை தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த மையூர்கிழார், இப்போது அருகில் வந்து அவற்றைத் தொட்டுத் தூக்கினார். அவை அஞ்சி மிரண்டன.

புறப்படவேண்டிய நேரம் வந்துவிட்டதை நினைவுபடுத்த, அவரைத் தேடி வந்தான் இளமருதன். தந்தையின் கையில் புதுமையான விலங்குகள் இருப்பதைப் பார்த்தான். அவை என்ன விலங்கு என அவனுக்குப் புரியவில்லை. அவற்றின் தோற்றம், சற்றே அருவருப்பை ஏற்படுத்துவதுபோல் இருந்தது.

மையூர்கிழார் சொன்னார், “மகனே நீ எடுத்துச் செல்லவேண்டிய பரிசுப்பொருள்கள் தாமாக வந்து சேர்ந்திருக்கின்றன.”

“இவற்றையா… அருவருப்புக்கொண்ட இந்த விலங்குகளையா எடுத்துச்செல்லச் சொல்கிறீர்கள்?”

``ஆம். பாண்டிய வேந்தன் நிமித்தம் பார்ப்பதில் மிகுந்த நம்பிக்கையுள்ளவன். இளவரசனின் மணவிழாவின்போது பறம்புநாட்டின் தெய்வவாக்கு விலங்கு மதுரைக்கு வந்து சேர்வதை மிக நல்ல நிமித்தமாக நினைப்பான். எவராலும் கொடுக்க முடியாத பரிசுப்பொருளை இத்தனை மாதங்களாகத் தேடிக்கிடந்தோம் அல்லவா? இதோ உரிய நேரத்தில் தானாக வந்து சேர்ந்திருக்கின்றன. இவற்றை நீ கொண்டு செல். இரு வாரங்கள் கழித்து, மணவிழாவுக்கு காமன் விளக்கோடு நான் வந்து சேர்கிறேன்.”

சுற்றி இருந்த அனைவரும் வாயடைத்துப் போனார்கள். மையூர்கிழாரின் குரலில் இருந்த உற்சாகம் இளமருதனையும் தொற்றியது.

இரட்டைக் குதிரைகள் இழுத்துச் செல்லும் ஐந்து பெருவண்டிகள், மதுரையிலிருந்து வந்திருந்தன. அவற்றில் கொற்றர்கள் ஏறி அமர்ந்தனர். அவர்களுக்கு இடையில் சதுரவடிவக் கூண்டுக்குள் மிரட்சி விலகாமல் அவை இருந்தன. ஆலாவைச் சுண்டியபடி மதுரை நோக்கிப் புறப்பட்டான் இளமருதன்.

வெங்கல்நாட்டு மன்னனின் வளாகம் முழுவதும் இதுவே பேச்சாக இருந்தது. வேந்தனை வியக்கவைக்கும் பரிசுப்பொருள்களோடு மகனும், இளவரசனை வியக்கவைக்கும் பரிசுப் பொருளோடு தந்தையும் மதுரைக்குள் நுழைய உள்ளனர். இது வெங்கல்நாட்டுக்கு நல்ல பலனைத் தரும் எனக் கருதினர்.

மையூர்கிழாரைப் பார்த்துப் பாட வந்த பாணர்கள், பாடாமலேயே பெரும்பொருளைப் பரிசாகப் பெற்றனர். “நீங்கள் சொன்ன செய்தி ஏற்படுத்தியதைவிட பெரும்மகிழ்வை உங்கள் பாடலால் ஏற்படுத்திவிட முடியாது” என்று கூறியபடி மையூர்கிழார் அள்ளி வழங்கினான்.

அவர்கள், அவை நீங்கி வெளியேறினர். முகத்தில் கவலையின் ரேகை படர்ந்திருந்தது. அன்றைய பகல் முடியும் முன் வெங்கல்நாட்டின் எல்லையைக் கடந்தனர். பேச்சற்ற நெடும்பகலாக அது இருந்தது.

நீண்டபொழுதுக்குப் பிறகு இளம் பாணனைப் பார்த்து மூத்த பாணன் கேட்டான், ``பறம்புநாட்டின் தெய்வவாக்கு விலங்கு தரை வந்து சேர்ந்ததைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

``பாரி, இனி தனது ஆற்றலை இழக்கத் தொடங்குவான்.”

பதில் கேட்ட மூத்த பாணன், சற்றே அமைதியோடு நடந்தான்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்ட இளம் பாணனின் கேள்வி முடியும் முன் மூத்த பாணன் சொன்னான்,

``இறங்கி அடிக்கப்போகிறான் வேள்பாரி.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 10:24 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p1
துரைக் கோட்டையின் மேற்கு வாசலை நோக்கி சூரியக்கதிர்கள் தகதகத்து இறங்கிக்கொண்டிருந்தன. வாங்கிய ஒளியை அதைவிட வேகமாக வெளியில் உமிழ்ந்தன கதவுகள். அந்த நெடுங்கதவுகள் முழுக்க பொன்னாலான பூச்சுகொண்டவை. அவற்றின் குமிழ்களின் மேல் மணிக்கற்கள் பொதிந்திருந்தன. பச்சை நிறப் பெருங்கல் ஒன்று தன்னை நோக்கிவந்த செம்மஞ்சள் நிற ஒளியை, சூற்குடத்தில் உள்வாங்கி சுட்டுக் கருக்கி வெளியேற்றியது. அருவியில் நீர் விழுந்து தெறிப்பதைப்போல, பொன்பூச்சில் விழுந்து சிதறின செஞ்சூரியனின் ஒளிக்கதிர்கள்.

பொழுது மறையும் முன்னர் கோட்டைக்குள் நுழைந்தால்தான் உண்டு. அதன் பின்னர், கதவுகளைத் திறக்கவைப்பது எளிது அல்ல. காவல் வீரர்களின் கடுமை இரும்பினும் இறுகியது. பகற்பொழுதின் முப்பதாம் நாழிகை முடிந்ததும், நாழிகைக் கணக்கன் நிலைமாடத்தின் மணியோசையை எழுப்புவான். அந்த ஓசை கேட்டதும் நெடுங்கதவுகளின் குறுக்குத்தடிகளை யானையைக்கொண்டு தூக்கிச் செருகுவர். அதன் பின், மறுநாள் காலை மீண்டும் யானையைக் கொண்டுவந்தே குறுக்குத்தடிகளை விலக்குவர்.

கோட்டையின் கதவுகள் மூடப்பட்ட பின் அவற்றைத் திறக்கவைப்பதெல்லாம் இயலாத  செயல். அதை உணர்ந்தே விரைந்து பயணித்தான் செவியன். அவன் குதிரைதான் முன்னால் போய்க்கொண்டிருந்தது. அதை அடுத்து இளமருதனின் குதிரை. தொடர்ந்து சற்றுத் தொலைவில் ஐந்து வண்டிகள் வந்தன. இளமருதன் சிறுவயதில் பார்த்த மதுரையை இப்போது மீண்டும் பார்க்கப்போகிறான். தொலைவிலேயே கோட்டைச்சுவர் தெரியத் தொடங்கியது. மதுரையை அடைத்து நின்றது செம்பொன் நிறத்தாலான நெடுங்கோட்டை. அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து வாய் பிளந்தபடி வந்துகொண்டிருந்தனர். கோட்டை வாயிலில் வந்து அவர்கள் நிற்கும்போது முழுமையாக இருள் சூழ்ந்துவிட்டது. நெடுங்கதவுகள் அடை பட்டிருந்தன. தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் பொன்பூச்சு மின்னியது.

மேற்கு வாசலின் தளபதியை அழைத்துவரச்சொல்லி, பெருங்குரலில் கத்தினான் செவியன். கோட்டை வாயிலின் மேல்மாடத்தில் நின்றிருந்த காவலர்கள் வியந்து பார்த்தனர். வருகிறவர்கள் கோட்டைக் கதவுகளைத் திறக்கச்சொல்லி முறையிடுவார்கள். ஆனால், இவனோ தளபதியை அழைத்து வரச்சொல்லி ஆணை பிறப்பிக்கிறான். வந்திருப்பவன் மதுரையின் நிர்வாகத்தை நன்கு அறிந்துள்ளான் என்பதை அவனது குரலே சொல்கிறது. மறுசொல் கூறாமல் தளபதியை அழைக்கப் போனார்கள்.

இளமருதன் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். யானையின் மீது வீரன் அமர்ந்து கொடியைத் தாழ்த்தாமல் உள்நுழையக்கூடிய அளவு உயரம்கொண்ட கோட்டை வாயில். காற்று புகாவண்ணம் அடைப்பட்டிருக்கும் அந்த நெடுங்கதவுகளின் பொன்பூச்சில்தான் எவ்வளவு வேலைப்பாடுகள். குமிழ்களின் மேல் கால் பதித்து மயில் ஒன்று நிற்கிறது. அதன் தோகை ஒரு பாதி விரிந்திருக்க, இடப்புறமாகத் திரும்பி வாயிலில் நிற்பவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது மயில். என்ன அழகான வேலைப்பாடு. இந்தக் கதவுகள் முழுக்க எவ்வளவு நுட்பங்கள். ஒரே ஒரு பரிசுப்பொருளை உருவாக்க நமக்குப் பல மாதங்கள் ஆகின்றன. ஆனால், வாயிற் கதவுகளிலேயே எவ்வளவு வேலைப்பாடுகள்.

இளமருதனின் மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, மேல்மாடத்தில் வந்து நின்ற மேற்குவாசல் தளபதி மாரையனிடம், தாங்கள் யார் என செவியன் சொல்லி முடித்தான். ‘கட்டுமானப் பணிக்கு அழைத்துவரப்பட்டிருக்கும் கொற்றர்களை உடனடியாக உள்ளே அனுப்ப வேண்டும். அரண்மனையில் பணிகள் இரவு பகலாக நடக்கின்றன. இவர்களை நாளை பகல் வரை வெளியில் நிறுத்தினால், நாம் தண்டிக்கப் பட்டுவிடுவோம்’ என்பதை உணர்ந்தான் மாரையன். ஆனால், கோட்டைத் தளபதியின் உத்தரவு இல்லாமல் நெடுங்கதவைத் திறக்க இயலாது. உடனடியாக அவரைக் காண விரைந்தான். உடன் இரு வீரர்களும் சென்றனர்.

மதுரைக் கோட்டையின் நான்கு வாசல்களுக்கும், வாசலுக்கு ஒருவர் என நான்கு வாயில் தளபதிகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கோட்டைத் தளபதிக்குக் கட்டுப்பட்டவர்கள். மாலையில் கோட்டைக் கதவுகள் மூடப்பட்ட பின் கோட்டைத்தளபதி உத்தரவு இல்லாமல் அவற்றை மீண்டும் திறக்க முடியாது. பகலிலும் இந்த நெடுங்கதவை முழுமையாகத் திறந்து மூடும் அதிகாரம் அவரிடமே இருந்தது. கதவின் கீழ்ப்புறத்தில் மனிதர்கள் வந்துபோக ஏற்றதாகச் சிறிய அளவில் உள்ள ‘பிள்ளைக்கதவுகளை’த் திறந்து மூடும் அதிகாரம் தான் வாயில் தளபதிகளுக்கு உண்டு.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p2
மதுரையின் கோட்டைத் தளபதி சாகலைவன். வீரத்துக்கும் தந்திரத்துக்கும் பெயர் எடுத்தவன். அவன் கோட்டையின் எந்தத் திசையில் இருப்பான் என்பதை,   கீழ்நிலையில் இருக்கும் அதிகாரிகளால் கண்டறிந்துவிட முடியாது. அதுவும் இந்த விழாக்காலத்தில் அவனைக் கண்டறிவது எளிது அல்ல. 

மாரையனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. மாலையில் கிழக்கு வாசலில் சாகலைவனைப் பார்த்ததாக ஒருவர் கூறினார். இங்கிருந்து கிழக்கு வாசலுக்குச் செல்வது மிகக் கடினம், நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுவிட்டது. யவனர்கள் இன்றிரவு வந்து இறங்கப்போகிறார்கள். வணிக வீதிகளில் எள் விழ இடம் இல்லை. எங்கும் பெருந்திரள் கூட்டம். குதிரையை விரட்டிச் செல்ல முடியாது. கூட்ட நெரிசலில் சிக்கினால் கிழக்கு வாசலை அடையும் முன்னே விடிந்துவிடும். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றான் மாரையன். அவனால் நிற்கவும் முடியவில்லை; நகரவும் முடியவில்லை.

யோசித்தபடியே கூட்டம் குறைவான தென்புற வீதியில் நுழைந்தான். அந்த வீதி திரும்பும் இடத்தில் இரு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் ஒன்று கண்ணில் பட்டது. முன்னால் நான்கும் பின்னால் நான்குமாக எட்டு குதிரை வீரர்கள் ஈட்டியை ஏந்தியபடி சென்றுகொண்டிருந்தனர். போய்க்கொண்டிருப்பது அரசின் உயர் அலுவலர் என்பது புரிந்தது. யாராக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள விரைந்து சென்றான். அவர் அரசாங்கத்தின் களஞ்சியத் தலைவர், ‘வெள்ளி கொண்டார்’. இந்தப் பேரரசின் செல்வத்தைக் கட்டிக்காக்கும் மாமனிதர்.

அவரைக் கண்டதும் குதிரையைவிட்டு இறங்கி வணங்கினான். மேற்கு வாயில் தளபதியைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டார் அவர். என்ன என்று விசாரிக்க,  சூழலை விளக்கிச் சொன்னான் மாரையன். எந்த ஒன்றையும் காதுகொடுத்துக் கேட்பது எவ்வளவு ஆபத்தானது என்பது, கேட்ட பின்புதான் புரியும். வெள்ளிகொண்டாரின் நிலைமை அதுவே. அவரைப் போன்ற உயரிய இடத்தில் இருப்பவர்களின் கவனத்துக்கு ஓர் இக்கட்டு வந்த பின், அதற்குத் தீர்வுகாணும் பொறுப்பும் இயல்பாக அவர்களையே வந்துசேருகிறது.

வெள்ளிகொண்டார் போகும் வேலைக்குக் குறுக்கே, கோட்டைத் தளபதியைக் கண்டறியும் வேலையும் வந்து நின்றது. என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். தேரோட்டி திரும்பிப் பார்த்தான். அவரின்  உத்தரவு கிடைக்காததால் தேர் அசைவற்று நின்றது. அருகில் சற்றே இளைப்பாறியபடி நின்றான் மாரையன்

“இந்தப் பெருங்கூட்டத்தில் நீ எங்கு போய்க் கண்டறிவாய். இரவு முழுவதும் தேடிக்கொண்டே இருக்க வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p3வேண்டியதாகிவிடும். எனது தேரில் வந்து உட்கார்” என்றார்.

சற்றே தயக்கத்துடன் தேரில் ஏறி அவரின் எதிரில் ஒடுங்கி உட்கார்ந்தான். தேர் புறப்பட்டது. முன்செல்லும் குதிரை வீரர்களைக் கண்டதும் கூட்டம் தானாக விலகி இடம்கொடுத்தது.

தென்புறச் சாலையில் இருந்து கிழக்கு முகமாக உள்வீதிக்குள் திரும்பியதும் திகைத்துப்போனான் தேரோட்டி.  கூட்டத்தை விலக்கி தேருக்கு வழியை அமைக்க முடியுமா என்பது ஐயமே. முன்னால் செல்லும் குதிரைவீரர்கள் நால்வரும் ஓசை எழுப்பியபடி சென்றனர். ஆனாலும், தேரின் நகர்வு மிகவும் மெதுவாகத்தான் இருந்தது.

மாரையனின் கண்களில் இருந்து மிரட்சி அகலவில்லை. “இப்போதே இப்படி என்றால் மணவிழா தொடங்க இன்னும் இரு வார காலம் இருக்கிறதே, மதுரை எப்படித் தாங்கும்?” என்றான்.

தேரின் இருக்கையை முழுவதும் அடைத்து உட்கார்ந்திருந்த அந்த அகண்ட மனிதர், வாயில் வெற்றிலை மென்றபடி, “மணவிழா என்றால் மதுரை தாங்கியிருக்கும். ஆனால், இது வெறும் மணவிழா மட்டும் அல்லவே?” என்று சொல்லி நிறுத்திக்கொண்டார். மாரையனுக்குப் புரியவில்லை.

ஆனால், அவரிடம் விளக்கம் கேட்கும் தகுதி அவனுக்கு இல்லை. அதனால் அடக்கமாக அவரது முகம் பார்த்தான். அவனது பார்வையின் பொருள் புரிந்தது. வயிறு பொருமி ஏப்பம் வந்தது. நீண்ட ஒலியோடு ஏப்பம் விட்டார். பெருத்துச் சரிந்திருந்த வயிறு சற்றே உள்வாங்கி இறங்கியது. இரவு உணவு முடித்துவருகிறார். ஆனால், தனக்கு அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று மாரையன் நினைத்தபோது, வெள்ளிகொண்டார் தனது நெஞ்சுக்கூட்டை இடதுகையால் அழுத்தித்தடவியபடி, “எல்லாம் இதுவால் வந்தது” என்று விரல்களில் சிக்கிய முத்துமாலையை தொட்டுத் தடவிக்கொண்டே சொன்னார்.

“கொற்கை முத்து இப்போது யவன தேசத்தின் கனவுப்பொருளாக மாறிவிட்டது. சேரனின் மிளகுக்கு இணையான வணிகப்போட்டிக்கு எதுவுமில்லை என்ற நிலை உடைந்துவிட்டது. மிளகும் முத்தும் யவன வணிகத்தில் இணையான இடத்தைப் பிடித்தன. அதுதான் நேற்று வரை இருந்த நிலை. ஆனால், இந்தத் திருமணம் வணிக நிகர்நிலையை உடைத்து பாண்டியனை முதல் நிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

பாண்டிய இளவரசன் பொதியவெற்பன் மணமுடிக்கப்போவது இன்னொரு வேந்தன் மகளாக இருந்திருந்தால், இந்தத் திருமணம் இரு நாடுகளின் திருவிழாவாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இன்று அப்படி அல்ல. இந்தப் புவியின் பெருவிழாவாக இது மாறிப்போனது. கடலையும் காற்றையும் அறிந்து இந்தப் புவியெங்கும் வணிகம் செய்துகொண்டிருப்பவர்கள் நூற்றியிருபது வணிகர்கள். அவர்கள் தங்களுக்கு என்று ‘சாத்துக்கள்’  என்ற அமைப்பை வைத்துள்ளனர். பேரரசுகளை விஞ்சும் செல்வத்தின் நாயகனாக சாத்துக்கள் அமைப்பின் தலைவன் இருக்கிறான். அந்தத் தலைவனை ‘சூல்கடல் முதுவன்’ என்ற பெரும்பெயர் கொண்டு அழைக்கின்றனர். அந்தச் சூல்கடல் முதுவனின் மகள்தான் மதுரையின் இளவரசனை மணக்கப்போகிறவள். அவளின் பெயர் ‘பொற்சுவை’.

ஓய்வறியா அலைகடலின் பாய்மரங்கள் வைகைக் கரை நோக்கியே வலசை வந்து கொண்டிருக்கின்றன. கடற்பரப்பு எங்கும் மிதந்துகிடக்கும் நாவாய்கள் இப்போது கொற்கைத் துறையில் நங்கூரம் இறக்கிவிட்டன. இப்படி ஒரு தகுதி இந்த மண்ணில் இதுவரை எந்தப் பேரரசுக்கும் கிடைக்கவில்லை. இந்தத் திருமணம் பாண்டியப் பேரரசு கடல் வணிகத்தில் முதல்நிலையைப் பெற்றதைப் பறைசாற்றும் அரசியல் நிகழ்வு. இதனால், இந்தப் பேரரசு காணப்போவதோ கரைபுரளும் செல்வச்செழிப்பு.

தன் இரண்டு மகன்களையும் கடற்புயலில் இழந்தவன் சூல்கடல் முதுவன். அவனின் ஒரே மகள் பொற்சுவை இப்போது மதுரைக்கு மணமகளாக வரப்போகிறாள். உலகெங்கும் இருந்து வணிகத்தால் நிரப்பபட்ட பெருஞ்செல்வம் நெடும்படி தாண்டி பாண்டியனின் கருவூலம் வந்துசேரவுள்ளது.

பொற்சக்கரங்கள் பூட்டப்பட்ட சாத்துக்களின் வண்டிகள்,  மதுரையின் பெருந்தேர் சாலைகளில் தடம்பதிக்க இருக்கின்றன. பொற்குவியலில் திணறப்போகிறது இந்த மாமதுரை. யவனம் முதல் சாவகம் வரை கண்டறியப்பட்ட அதிசிறந்த கலைப் படைப்புகள் இந்த நகரின் நெடுவீதி எங்கும் நின்று மிளிரப்போகின்றன.

வணிக சாத்துக்களின் வரைவில்லா செல்வத்தைவிட இந்தப் பேரரசே செழிப்புமிக்கது என்பதைக் காட்ட வேண்டிய தேவை நம் பேரரசருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கக் கருவூலத்தில் குவிந்துகிடக்கும் செல்வம் எல்லாம் மதுரையின் வீதிகளில் அள்ளிவீசப்பட உள்ளன.

இந்த இருவரும் இணையும்  இந்த வேளையை மிகுந்த கவனத்தோடு பயன்படுத்தக் களமிறங்கிவிட்டனர் யவனர்கள். பேரரசர் குலசேகரப்பாண்டியனையும் சூல்கடல் முதுவனையும் ஒருசேரத் திகைப்பில் ஆழ்த்த அவர்கள் தயாராகிவிட்டனர். இந்த மணவிழாவுக்கான பரிசுப்பொருள்களை கப்பல் நிறைய எடுத்து வந்துள்ளனர். யவனத் தேறல் மட்டுமே ஆறு திறளி மரப்படகில் கரை வந்து சேர்ந்தது என்று செய்தி.

இந்தத் திருமணத்தின்  வழியாக யவனர்களுக்கு ஒரு செய்தி தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. அவர்களும் அதைப் புரிந்துகொண்டார்கள். இனி யவன அரசர்கள் இந்த நாவலத்தீவின் முதற்சிறப்பை பாண்டியருக்கே செய்வார்கள். அதன் அறிகுறிகளும் தொடங்கிவிட்டன.

இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கின்றன. மதுரை விழாக்களின் நகரம். இந்த மாநகரின் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p4மண்ணடுக்கு விழாக்களில் ஏற்றப்படும் தீபப் புகையால்தான் சாம்பல் நிறம்கொண்டுள்ளதோ என்று நான் பலநேரம் நினைத்தது உண்டு. ஆனால், இப்போது நடைபெறப்போகும் இந்த மணவிழாதான் அதன் உச்சம். இந்த உச்சத்தை மதுரை இனி எந்தக் காலத்தில் எட்டும் எனத் தெரியாது. இன்று நள்ளிரவுக்குப் பிறகு விற்பனைக்கான பொருள்களை மட்டும் யவனர்கள் நகரத்தின் வணிக வீதிக்குக் கொண்டுவர உள்ளனர். அதை வாங்கத்தான் மக்கள் பெரும் ஆர்வத்தோடு திரண்டுள்ளனர். திருமணத்தை முன்னிட்டு எல்லா குடும்பங்களும் அலங்காரத்துக்குத் தயாராகி வருகின்றன. யவனர்களே அலங்காரப் பொருளின் அடையாளமாகிவிட்டார்கள்.

கோட்டையின் கிழக்கு வாசலுக்கு வெளிப்புறத்தில் இரு காதத் தொலைவில் இருக்கிறது யவனச்சேரி. இன்று மாலைதான் கொற்கையில் இருந்து பொருள்கள் எல்லாம் அங்கு வந்துசேர்ந்தன. அதில் விற்பனைக்கான பொருள்களை மட்டும் தனியே பிரித்தெடுத்து, நள்ளிரவுக்குப் பின்னர் வணிக வீதிக்குக் கொண்டுவருவார்கள். எனவே, இரவின் பதினைந்தாம் நாழிகையின்போது  கோட்டையின் கிழக்கு வாசல் திறக்க இருக்கிறது. அப்போது கோட்டைத் தளபதி சாகலைவன் அங்கிருப்பான். அதுவரை அவன் எங்கிருப்பான் என்பதுதான் கேள்வி.”
 
அவர் சொல்லியதை மாரையன் வாய்பிளந்து கேட்டுக்கொண்டு வந்தான். தேர் கிழக்குப் பக்கமாகவோ, வணிக வீதியின் பக்கமாகவோ செல்லாமல் வட திசையின் தனித்த மாளிகையை நோக்கிப் போனது. இந்தப் பக்கம் எதற்குப் போகிறது என்பது அவனுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்க முடியாமல் சுற்றும்முற்றும் பார்த்தபடி வந்துகொண்டிருந்தான்.

மாளிகையின் வாசலில் வந்து நின்றது தேர். முன்னால் இருந்த குதிரை வீரன் ஒருவன், வேகமாக வந்து அவர் தேரை விட்டு இறங்கக் கைப்பிடித்து நின்றான். தொடர்ந்து மாரையன் இறங்கினான். மாளிகை, அலங்காரத்தால் மின்னியது. எங்கும் தீபங்கள் ஏற்றப்பட்டுக் கண்சிமிட்டியபடி இருந்தன. வெள்ளிகொண்டார் வந்ததை அறிந்து உள்ளிருந்த இளம்பெண்கள் இருவர் ஓடோடி வந்து, அவரது கைப்பற்றி வாசல் படி கடந்து உள்ளே அழைத்துச் சென்றனர்.

மாரையன் முன்னறையில் அமரவைக்கப்பட்டான். பட்டுத் திரைச்சீலைகள் காற்றில் அசைந்தபடி இருக்க, முகங்கள் இங்குமங்குமாக நழுவி மறைந்தன. இளமஞ்சள் நிறத்தில் ஒளிரும் தீபத்தின் விளிம்பில் எப்போதும் ஒரு செந்நிறம் கலந்திருக்கும். இயற்கை எந்த ஓர் அழகையும் முழுமைகொள்ள அதன் விளிம்பில் அடர்வண்ணம் பூசுகிறது. திரைச்சீலைகளின் விளிம்பில் அடர்வண்ண முகங்கள் மறைந்து மறைந்து தெரிந்துகொண்டிருந்தன. காமக்கிழத்திகள் பற்றிய  சொல்லோவியங்களைப் பொய்யாக்கின அந்த முகங்கள். எந்தச் சொல்லாலும் இந்த அழகைச் சொல்லிவிட முடியாது என்று மாரையனுக்குத் தோன்றியது.

கோட்டையின் மேல்மாடத்திலிருந்து இரவு முழுக்க வெளிப்புற இருளை வெறித்துப்பார்த்துப் பழகிய அவனின் கண்கள், மின்னும் ஒளிவிளக்கில் பொன்முகங்கள் மிதந்துபோவதைப் பார்த்துத் தடுமாறிக்கொண்டிருந்தன.

`இந்தப் பேரழகிகளிடமிருந்து வெள்ளிகொண்டார் மீண்டு வந்து அதன் பின் நாம் தளபதியைத் தேடிப்பிடிப்பதற்குள் விடிந்துவிடும்’ என்று அவன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தபோது யானைக் கட்டுத்தறியின் தலைவனுக்கு சாகலைவன் எழுதிய ஓலையை, பெண்ணொருத்தி கொண்டுவந்து கொடுத்தாள். ஓலையை வாங்கிப் படித்த மாரையன் அதிர்ந்துபோனான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p5
“கோட்டைத் தளபதியும் இங்குதானா?”

‘குறித்த நாழிகைக்குள் எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்று கோட்டைத் தளபதி அடிக்கடி சொல்வது இதைத்தானா?’ - கேள்வியோடு அந்த இடம் விட்டு நீங்கினான்.

கோட்டை மேற்கு வாசலின் வெளிப்புறம் அவர்கள் காத்திருந்தனர். செவியன் சற்றே பொறுமையிழந்திருந்தான். இளமருதனுக்கு அங்கு வியந்துபார்க்க நிறையவே இருந்தன. அகழியில் முதலைகள் தெரிகிறதா என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் மண்ணீட்டாளர்கள். தாமரை மொட்டுகளும் ஆம்பல் மலர்களும் நீர் எங்கும் நிறைந்திருந்தன. பொழுது நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது.

கோட்டைத் தளபதியிடம் வாங்கிய ஓலையைக் கட்டுத்தறியின் தலைவன் அல்லங்கீரனிடம் கொண்டுவந்தான் மாரையன். அல்லங்கீரனுக்கு வயது அறுபதைக் கடந்திருக்கும். யானைகளின் குணம் காண்பதில் இவருக்கு இணை யாரும் இல்லை. அந்த வயதான பெரியவரை எழுப்பினான் மாரையன். ‘நள்ளிரவு வந்து எழுப்புவதைக்கூட மன்னிக்கலாம். ஆனால், எழுந்தவனிடம் எழுத்தைக் காட்டிப் படிக்கச் சொல்பவனுக்கு மன்னிப்பே கிடையாது’ என்று புலம்பியபடியே ஓலையை வாங்கிப் படித்தார்.

அவருக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.

“இங்கு இருப்பவை எல்லாம் பாசறையில் இருக்கும் இளவயது யானைகள் என்று நினைத்தாயா? ஐம்பது வயதைக் கடந்த யானை களைத்தான் கட்டுத்தறிக்குக் கொண்டுவருகிறோம். இவற்றை நீங்கள் சொல்லும்போதெல்லாம் வேலைவாங்க முடியாது. அதுவும் இரவு முழுநிலை உணவு மூன்று சுற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பாரம் புல்லும் நான்கு ஆடகம் அரிசியும் அரைக் குடுபம் எண்ணெயும் பத்து பலம் வெல்லமும் பத்து பலம் உப்பும் கலந்து கொடுத்துள்ளோம். வயிறார உண்டுவிட்டு அயர்ந்திருக்கின்றன. இப்போது அவற்றை எழுப்பி வேலை வாங்குவது இயலாத செயல் மட்டுமன்று; ஆபத்தானதும்கூட.”

மாரையனுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. ஆனால், அவசர வேலைக்காக அழைத்துவரப்பட்டவர்கள் கோட்டைக்கு வெளியே காத்திருக்கிறார்கள். அவர்களை எப்படியாவது உள்ளே அனுமதிக்க வேண்டும். அதற்காகத் தொடர்ந்து வேண்டினான்.

“கோட்டைத் தளபதி எங்கே?’’ என்று கேட்டார் அல்லங்கீரன்.

மாரையன் பதில் சொன்னான்.

“அவசரத்துக்கு அவனால் எழுந்துவந்து உன்னிடம் ஓலை கொடுக்க முடியவில்லை அல்லவா? யானையை மட்டும் உடனே எழுப்பு என்றால் என்ன பொருள்?”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், பெரியவரின் கேள்வி பொருத்தமானது என்று தோன்றியது.

பிரச்னை வந்து நிற்பது மாரையனுக்கு முன்னால் நாளை விசாரிக்கப்பட்டால், அவன்தான் பதில் சொல்லவேண்டியிருக்கும்.  எனவே, அவன் அந்த இடத்தைவிட்டு அசைவதாக இல்லை. பெரியவர் அல்லங்கீரனுக்கும் வேறு வழி இல்லை. நீண்ட நேரம் கழித்து யானையை எழுப்ப பாகனுக்கு உத்தரவிட்டார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p6
மாரையன் தன்னுடன் வந்த வீரர்களோடு வெளியில் காத்திருந்தான். சிறிது நேரத்தில் யானை வெளியேறி வந்தது. பொழுது நள்ளிரவைக் கடந்தது. தனது கால் பெருவிரலால் அதனுடைய காதின் பின்பக்கத்தை ஊன்றி உந்தினான் பாகன். ஆனாலும், அது மெள்ளவே முன்னகர்ந்து சென்றது.

பக்கவாட்டில் குதிரையில் இருந்தபடியே பாகனைப் பார்த்து மாரையன் சொன்னான், “இந்த வேகத்தில் நடந்தால், வாசலை அடைவதற்குள் விடிந்துவிடும். வேகமாக நடத்து.”

பாகன் சொன்னான்... “எனது தொடை நடுக்கத்தை நீ உணர மாட்டாய். யானைக்கு மிக மோசமான வயது ஐம்பது. இளமைக்கும் முதுமைக்கும் நடுவில் இருப்பது. அது என்ன நினைக்கிறது என்பதை நாம் கணிக்க முடியாது. இந்த வயதுடைய யானைக்கு நிலையுணவு கொடுத்து, நள்ளிரவு எழுப்புவது ஆபத்தை விலைக்கு வாங்குவதைப் போன்றது. இதுவரை இல்லாத செயலை இது இப்போது வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.”

“ஒழுங்காகத்தானே போய்க்கொண்டிருக்கிறது. இதில் என்ன சிக்கல்?”

“எழுப்பியதிலிருந்து துதிக்கையைத் தந்தத்தில் சுற்றியபடியே வருவதைப் பார்த்தீரா? தந்தத்தில் அது கொடுக்கும் அழுத்தத்தை எனது அடித்தொடையில் உணர முடிகிறது.”

மாரையன் சற்றே அதிர்ந்து பார்த்தான்.

“எனக்குச் சொல்லப்பட்ட உத்தரவை நான் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். ஆனால், எனது உத்தரவை யானை எந்தக் கணமும் மறுக்கலாம்.”

மாரையன் குதிரையை வேகப்படுத்தி முன்னால் நகர்ந்தான். நள்ளிரவின் மணியோசையை நாழிகைக் கணக்கன் எழுப்பினான். கோட்டையின் கிழக்கு வாயிலில் முரசுகள் முழங்கத் தொடங்கின. வணிகவீதியில் மக்களின் ஆரவாரம் எங்கும் எதிரொலித்தது.

யானை, கோட்டையின் மேற்கு வாசல் குறுக்குக்கட்டையைத் தூக்கி எடுத்தது. அப்படியே வலதுபுறம் திரும்புவதற்காக இடதுபாத முனையால் இடப்பாக காதின் அடியை மெள்ளத் தட்டினான் பாகன். அது அசைந்து திரும்பியது.

மாரையன் மகிழ்ச்சியோடு கதவைத் திறக்க உத்தரவிட்டான். வீரர்கள் நெடுங்கதவை இழுத்துத் திறந்தனர். இளமருதன் குதிரையைவிட்டு இறங்கி தனது ஆலாவைப் பிடித்தபடி மதுரைக்குள் நுழைந்தான். வண்டிகள் ஐந்தும் ஒவ்வொன்றாக உள்நுழைந்தன. கடைசி வண்டியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கிடையில் மரச்சட்டகத்தால் ஆன கூண்டு ஒன்று இருப்பதைப் பார்த்த காவல் வீரனொருவன்  கேட்டான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p7
“என்ன அது?”

“தெய்வவாக்கு விலங்கு’’ என்றான் ஒருவன்.

இன்னொருவன், “தேவாக்கு விலங்கு’’ என்றான்.

காவல் வீரனுக்கு அவன் சொல்வது புரியவில்லை.

“என்ன பெயர் சொல்கிறீர்கள்?” என்று மீண்டும் கேட்டான்.

“தேவாங்கு” என்றான் இன்னொருவன்.

கோட்டைக்குள் நுழைந்ததும்  அவை இரண்டும் மிரண்டுபார்த்து கண்களை உருட்டின. எல்லோரும் உள்நுழைந்த உற்சாகத்தில் இருந்தனர்.

மாரையன் பெருமூச்சுவிட்டான்.

பாகனுக்கு உள்நடுக்கம் பல மடங்கு அதிகமானது. குறுக்குக்கட்டையைத் தூக்கிய பின் அது அமைதியாக நடந்துகொண்டே இருந்தது. அவனது கால்கள் இரு காதுகளுக்கு அடியில் அனைத்து உத்தரவுகளையும் கொடுத்துவிட்டன. அது எதையும் பொருட்படுத்தாமல் சென்றுகொண்டே இருந்தது. அந்தப் பெரும் குறுக்குத்தடி அதன் தந்தங்களின் மேல் வாகாக உட்கார்ந்திருந்தது. துதிக்கையை வலப்புறமும் இடப்புறமும் முழுமையாக வீசி நடந்தது. பாகன் நடுங்கினான்.

“இந்நேரம் கோட்டையின் கிழக்கு வாசலுக்குள் யவனப்பொருள்களைக் கொண்டுவந்திருப்பர்’ என்று எண்ணியபடியே நெடுங்கதவை மூட உத்தரவிட்டுவிட்டான் மாரையன். வீரர்கள் கதவை இழுத்து அடைத்தனர். குறுக்குத்தடியை பொருத்தச் சொல்வதற்காக மாரையன் திரும்பிப் பார்த்தான். தடியைச் சுமந்தபடி யானை இடப்புறம் உள்ளே போய்க்கொண்டிருந்தது. குறுந்தடியைக்கொண்டு கதவை மூடாமல் அதை எடுத்துக்கொண்டு ஏன் உள்ளே போகிறது என்று பதறிய மாரையன் அதை நோக்கி குதிரையில் விரைந்தான்.

வலப்புறம் போன வண்டியில் இருந்த தேவாங்குகள் வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசிப் பதுங்கின. கிழக்கு வாசலின் வழியே பெரும் உற்சாகத்தோடு யவன வண்டிகள் உள்நுழைந்தன. தனது உத்தரவை மறுக்கும் யானை என்ன செய்யப்போகிறது எனத் தெரியாமல் பாகன் பதைபதைத்துக்கொண்டிருந்தபோது, யானைக்குப் பின்னாலிருந்து விரைந்து வந்த மாரையன் சற்றும் எதிர்பாராமல் குறுக்கிட்டான். அதிர்ந்த பாகனின் முகத்துக்கு நேரே ஓங்கிய துதிக்கை வந்துசென்றது!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 10:40 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p1
ள்ளறை ஒன்றில் படுத்திருந்த இளமருதன் கண்விழித்தபோது, விடிந்து நெடுநேரமாகியிருந்தது. அவன் அழைத்துவந்த கொற்றர்களுக்கு வேலைகள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் தங்களுக்குரிய இடத்துக்குச் சென்றுவிட்டனர். தன்னை அழைத்துவந்த செவியன் எங்கே எனத் தேடியபடி வெளியே வந்தான் இளமருதன். அவனின் கண்கள் வியப்பில் மூழ்கின. தாமரை மொட்டுபோல அடுக்கடுக்காகக் குவிந்து நிற்கும் புதிய மாளிகைகள், கதிரவனின் ஒளிபட்டு வெண்பஞ்சுபோல் ஒளிர்ந்துகொண்டி ருந்தன. வியப்புற்று நின்ற அவனருகே வந்து தோள் தொட்டான் செவியன்.

“இந்தப் பகுதியில் மூன்று பெரும்மாளிகைகள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. கட்டட வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. மர வேலைப்பாடுகளும் ஓவியப் பணிகளும்தான் நடக்கின்றன. மாளிகைக்குப் பின்புறம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பூந்தோட்டத்தில், ஒருசில பணிகளும் நடைபாதை, சுற்றுச்சுவர் போன்ற சிறுசிறு வேலைகளும்தான் மிச்சமிருக்கின்றன. நாம் அழைத்துவந்த கொற்றர்களை அங்கு அனுப்பியாகிவிட்டது” என்றான் செவியன்.

மலைப்பில் இருந்து மீளாமல் கேட்டுக்கொண்டி ருந்தான் இளமருதன். மேல்மாடத்தின் வெளிப்புற விளிம்பில், கடல் அலைகளின் வளைவுகள் சுழன்று பொங்கியபடி இருந்தன. அதைப் பார்த்தபடி கேட்டான், “எப்படி இவ்வளவு நுணுக்கமாக வடிவமைக்க முடிந்தது?”

செவியன் சொன்னான்... “அலைகள் பொங்கும் கடல்போல் மாடத்தின் விளிம்புகள் வடிவமைக்கப்பட்டிருப்பதன் காரணம், உள்ளிருக்கும் மாளிகையின் மொத்த வடிவம் சிப்பி போன்றது. சிப்பிக்குள் இருக்கும்
ஆதி இருளுக்குள்தானே வெண்முத்து சூல்கொள்ளும்?”

புரியாமல் விழித்தான் இளமருதன்.

“இதுதான் மணமக்களின் பள்ளியறை. இந்தப் பேரரசின் வம்சக்கொடி வேர்பிடித்து மலர வேண்டிய மாளிகை.”

அசைவுறா கண்கள் திரும்ப மறுத்தன.

“வாருங்கள் உள்ளே போய்ப் பார்ப்போம்’’ எனச் சொல்லி மாளிகைக்குள் அழைத்துச் சென்றான் செவியன்.

உள்ளே மகதநாட்டு வினைஞர்கள் நெடுங்கதவுகளை இழைத்துப் பொருத்தும் பணியைச் செய்துகொண்டிருந்தார்கள்.

காற்று எங்கும் நுண்ணிய மரத்தூள்கள் மிதந்துகொண்டிருந்தன. சந்தனத்தின் வாசனை மாளிகைக்குள் நுழையும் முன்னரே இளமருதனின் மூக்கில் ஏறியது. உள்நுழைந்த இளமருதன், வடிவிலும் வாசனையிலும் வண்ணத்திலும் நிலைமறந்து நின்றான்.

பெரும் வட்டவடிவில் ஒன்பது தூண்கள் நின்றுகொண்டிருந்தன. தூண்களின் மடிப்புகளும் வேலைப்பாடுகளும் இணை சொல்ல முடியாதவை. அந்தத் தூண்களின் மேல் குவிமாடம் இருந்தது. மாடத்தின் மேற்கூரை முழுவதும் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. இரவு நேரத்து வானம். நிலவு ஒளிர்ந்துகொண்டிருக்க, எங்கும் விண்மீன்கள் மின்னிக்கொண்டிருக்கும் காட்சி அதில் இருந்தது. அண்ணாந்து பார்த்தபடி மேற்கூரையின் முழுவட்டத்தையும் நோக்கினான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p2
“ஓவியர்கள், வேலையை முடித்துவிட்டார்கள். ஆனால், குறித்துக்கொடுத்த அந்துவன் வந்து பார்த்து `சரி' எனச் சொன்னால்தான் சாரத்தைப் பிரிக்க முடியும். இன்று நற்பகல் அவர் வந்துவிடுவார்” என்று சொல்லியபடி, “வாருங்கள் இன்னொரு பள்ளியறைக்கு” என்று அழைத்தான் செவியன்.

“இன்னொரு பள்ளியறையா?”

“ஆம், இது கார்காலப் பள்ளியறை. கீழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. அடர்ந்த தூண்களும் மரவேலைகளும் இதில் அதிகம். இன்னொன்று வேனிற்காலப் பள்ளியறை. அது மேல்மாடத்தில் கட்டப்பட்டுள்ளது. வைகையின் காற்று எல்லா திசைகளிலிருந்தும் உள்நுழைவதைப்போல வடிவமைக்கப் பட்டிருக்கும்” என்று சொல்லியபடி அங்கு அழைத்துச் சென்றான். அங்கும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. வேலைசெய்பவர்கள் யவனத் தச்சர்கள். வேனிற்கால வெக்கையைக் காதலின் கவசமாக மாற்றும் வித்தையைச் செய்துகொண்டிருந்தனர். விதவிதமான கைக்கருவிகளை வைத்துப் பணியாற்றினர். இளமருதன் கண்களை எங்கும் ஓடவிட்டான். அங்கு நெருக்கமாக அமைக்கப்படாமல் விலகி நிற்கும் தூண்கள், சாளரத்திலிருந்து தன்னியல்பிலே வந்து தழுவிச்செல்லும் காற்று என, இரண்டு மாளிகைகளுக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் இருந்தன. மேற்கூரை ஓவியம் மட்டும்தான் ஒன்றுபோல இருந்தது. இரவு நேரத்து விண்மீன்களும் நிலவும் ஒளிவீசியபடி.

“இந்த இரண்டை ஒன்றுசேர்த்தாலும் ஈடாக முடியாத பெரும் மாளிகை ஒன்று கட்டப்பட்டு வருகிறது” என்று சொல்லி பாண்டரங்கத்துக்கு அழைத்துச்சென்றான் செவியன்.

அங்கே வைப்பதற்காகத்தான் அவன் தந்தை காமன்விளக்கு செய்துகொண்டிருக்கிறார் என்பதால், அந்த அரங்கு எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ஆவலுடன் போனான் இளமருதன். பளிங்குக்கற்கள் பாவப்பட்டு, நிலைச்சுவரிலும் தந்தரையிலும் பளபளப்பு ஏறியிருந்தது. ஓவியங்களும் மரவேலைப்பாடுகளும் மனிதக் கற்பனைக்கு எட்டாத பேரழகுகொண்டு விளங்கின. கலை வேலைப்பாடுகளின் உச்சம் என இந்த அரங்கைச் சொல்லலாம். நடுவில் ஆடுகளம். அதைச் சுற்றி இசைக்கவும் பாடவும், பார்த்து ரசிக்கவும் ஏற்றவாறு ஒவ்வொன்றுக்கும் தகுந்த மேடைகள். எல்லா தூண்களிலும் சிற்ப வேலைகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. சுவர்களில் சுதை வேலைப்பாட்டுக்கும் வண்ணங்கள் பூசப்பட்டுவிட்டன. மேற்கூரை ஓவியமும் முடிந்துவிட்டது. அந்துவன் வந்து பார்த்துவிட்டால் எல்லாம் முற்றுபெற்றுவிடும்.”

நிலைமறந்து பாண்டரங்கத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் இளமருதன்.

“வாருங்கள், அந்துவன் வருவதற்குள் நாம் உணவருந்திவிட்டு வந்துவிடுவோம்” என்று சொல்லி அழைத்துச்சென்றான் செவியன்.

கோட்டைக்கு தெற்கே மதுரையின் இடுகாடு இருந்தது. இறந்துபோன மேற்கு வாசலின் தளபதி மாரையனின் உடல் அங்குதான் கொண்டுவரப்பட்டது. வீரர்கள் உடலேந்தி வந்தனர். நேற்று நள்ளிரவு யானையைக் குறுக்கிட்ட மாரையனை, சற்றும் எதிர்பாராமல் துதிக்கையால் சுழற்றி அடித்தது. குதிரையின் முதுகெலும்பு நொறுங்கி, கீழே சரிந்தான் மாரையன். பின்னங்கால்களால் அவனை மிதித்துக் கடந்தது யானை. பின்புறம் வந்த வீரர்கள் நிலைமையை உணர்ந்து யானைக் கட்டுத்தறியின் தலைவன் அல்லங்கீரனிடம் செய்தி சொல்ல ஓடினர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p3
மேலே உட்கார்ந்திருந்த பாகனுக்கு, இப்போதுதான் விஷயம் பிடிபட்டது. யானைக்கு மதம்கொள்ளவில்லை. மதம் பிடித்திருந்தால் இந்நேரம் தான் உயிரோடு இருக்க மாட்டோம். தந்தத்தில் தாங்கிப் பிடித்திருக்கும் குறுக்குக்கட்டையால் இந்த இடத்தையே தகர்த்திருக்கும். முழுநிலை உணவு மூன்று சுற்று கொடுக்கப்பட்ட பிறகு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அதை எழுப்பி வேலைவாங்கியதில் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது. தளபதி மாரையன், அவசரப்பட்டு இடையில் வந்து குறுக்கிட்டுவிட்டார். `இது வேறு திசை போகாமல் வந்த வழியே கட்டுத்தறி நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது' என்று நினைத்தபடியே அதன்மேல் அமர்ந்திருந்தவன் குத்துக்கோலை (அங்குசம்) வலது காதின் பின்புறம் செருகிவிட்டு, சட்டென யானையின் மேல் இருந்து பக்கத்து மாளிகைச் சுவரின் மேல் தாவினான். அல்லங்கீரனைப் பார்த்துத் தகுந்த ஏற்பாடு செய்வதற்காக அவரை நோக்கி ஓடினான்.

மாரையனின் வீரர்கள்தான் முதலில் கட்டுத்தறியின் தலைவனை வந்தடைந்தனர். வீரர்கள் ஓடிவரும் வேகத்தைப் பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டார் அல்லங்கீரன்.

``தளபதியை மிதித்துக் கொன்றுவிட்டது'' என, பதைபதைக்கச் சொன்னார்கள். உடனடியாக மூன்றாம் தறியில் இருந்த யானைகளை எழுப்ப உத்தரவிட்டான்.

எத்தனை நூறு யானைகளைப் பழக்கியவன் அல்லங்கீரன். போர்க்களத்தில் எதிரிகளின் யானைப் படையைச் சிதைக்க எத்தனையோ முறை வழிவகுத்தவன். வயதாகிவிட்ட காரணத்தைச் சொல்லி யானைப்படை பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, வாரக்கணக்கில் உணவெடுக்காமல் பட்டினிகிடந்து துயரத்தைக் கடந்தவன். யானைகளுடனே வாழ்வைக் கழித்தவன். வயதான யானைகள் இருக்கும் கட்டுத்தறி, இப்போது இவன் வசம்.

யானைகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பொழுதுகளில் அவனது ஆளுமையைக் கண்டு வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p4நாடே நடுங்கியிருக்கிறது. இப்போது உடல் மிகவும் தளர்ந்துவிட்டது. ஆனாலும் சவாலைச் சந்திக்கத் தயாரானான்.

நிலைப்படை வீரர்கள்,  அலையலையாக யானையின் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.  அவர்கள் கோட்டையின் உள்பக்கமாகப் போகாமல் கட்டுத்தறியை நோக்கியே நடந்தனர். வீரர்கள், பாதுகாப்பான தொலைவில் பின்தொடர்ந்தனர்.

குறுக்குத் தெருக்களின் வழியாக விரைந்தோடி வந்த பாகன் கட்டுத்தறியை அடைந்தபோது அல்லங்கீரன் அங்கு இல்லை. செய்தியைக் கேட்டு யானையை மறிக்கப் போய்விட்டார் என்பதை உணர்ந்தான். அவர் போன திசை நோக்கி ஓடினான். யானைக்கு மதம் பிடிக்கவில்லை. கட்டுப்பட மறுக்கிறதே தவிர, கட்டுப்பாட்டை மீறவில்லை. வலது காலில் இருக்கும் காயங்களை நோக்கிக் கட்டுகளை வீசி இறுக்கிவிட்டால்,
அது அசையாமல் நின்றுவிடும். இதை அவரிடம் சொல்லத்தான் விரைந்து வந்தான். ஆனால், அதற்குள் எல்லோரும் போய்விட்டார்கள். அதற்கு மதம் பிடித்துவிட்டது எனக் கருதி அதை வீழ்த்தப்போகிறார்கள். எப்படியாவது அந்தச் செயலைத் தடுக்க வேண்டும் எனப் பதறியடித்து யானையை நோக்கி ஓடினான் பாகன்.

யானை வந்துகொண்டிருக்கும் வீதியை அடைந்தான் அல்லங்கீரன். கொடுக்குப்போல் மேல்தூக்கி இருந்த அதன் அடிவாலைக் கொண்டுதான் மதத்தைக் கணக்கிட முடியும். வந்தவுடன் அடிவாலைப் பார்க்க முயன்றபோது, மேலே பாகன் இல்லை என்பது தெரிந்தது. அவனை, யானை கொன்றுவிட்டது என்ற முடிவுக்கு அவர் போனதால், மேல்தூக்காமல் இருந்த அடிவாலை அவரது கண்கள் காணவில்லை.

மதயானையை எதிர்கொள்வதற்காகவே பயிற்சிபெற்ற வீரர்கள், துல்லியமான தாக்குதலை முன்னெடுத்தார்கள். பாண்டியப் பேரரசு, யானைப் போர்களிலும் மதயானையை அடக்கும் உத்திகளிலும் நிகரற்று விளங்கியது.

மதுரையில் மாபெரும்விழா நடக்கும் நேரம். சற்றே பிசகு ஏற்பட்டாலும் பெரும் இழப்பில் முடிந்துவிடும். எனவே, தாமதிக்க வேண்டாம் என முடிவெடுத்தார் அல்லங்கீரன். அதைப் போகவிட்டு சரியான ஒரு நாற்சந்தியில் யானைகளோடு மறித்தார். ஒரே நேரத்தில் யானைகள் நான்கும் பிளிறிக்கொண்டு துதிக்கையைத் தூக்கியபடி அதை நோக்கி முன்நகர்ந்தன. அவற்றின் தந்தங்களின் முனைகளில் பளிச்சிடும் பூண்களும் குத்தீட்டிகளும் மாட்டப்பட்டிருந்தன. அந்த அடர் இருட்டில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் புரியவில்லை. பிளிறலின் பேரொலி மேலெழுந்தபோது அது குறுந்தடியோடு மண்ணில் சரிந்தது.
மற்ற நாள்களில் இது நடந்திருந்தால், இந்தப் பேரோசை கேட்டு மொத்த நகரமும் விழித்திருக்கும். ஆனால், விழாக் கொண்டாட்டத்தில் நகரம் திளைத்துக்கொண்டிருந்ததால், எங்கும் எதிரொலிக்கும் பேரொலிக்கு நடுவில் யானைகளின் பிளிறல், கொண்டாட்டத்தின் பகுதியாகக் காற்றில் கரைந்தது.

தலைமை அமைச்சர் முசுகுந்தருக்கு, முதலில் செய்தி சொல்லப்பட்டது. இந்த மாநகரை வகுக்கப்பட்ட வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p5விதிகளின் வழியே கட்டிக்காப்பவர் அவர்தான். மணவிழா திருநாளுக்காக எங்கும் மங்கலப் பேரொலி நிரம்பியிருக்கும் நாளில், இப்படி ஒரு செய்தியைக் கேட்டு மனிதர் நடுங்கிப்போனார். இந்தச் செய்தி பரவாமல் உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவந்தார். விடிவதற்குள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

பெரும் மரவண்டியில் யானையை இழுத்து ஏற்றினர். முன்னும் பின்னுமாக யானைகளே அந்த வண்டியை இழுத்தும் தள்ளியும் கொண்டுசென்றன. அந்த இடத்தில் மண்ணைக் கொட்டிக் குருதியை மூழ்கடித்தனர். இரவோடு இரவாக வேலையை முடித்தனர். ஆனாலும், விதிகளின்படி விசாரணை உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.

ரண்மனையின் நாள்களையும் கோள்களையும் கணித்துச் சொல்லும் தலைமைக் கணியனின் பெயர்தான் அந்துவன். காலம் கணிக்கும் கணியனான அந்துவனின் சொல்லுக்கு மறுசொல் இல்லை இந்த மாநகரில். அவன் கணித்துச்சொல்லும் சொல்லே பேரரசின் சொல்லாகிறது. சிறுகோல் ஒன்றை எப்போதும் கையில் வைத்திருக்கும் அவன், தடித்த கோல்போலவே உடல்கொண்டவன். பொதிகை மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் பாண்டிய நாட்டின் பெருங்கணியர் திசைவேழருக்கு மாணவன்.

திருமணத்தை முன்னிட்டுப் புதிதாக மூன்று மாளிகைகள் கட்டப்படுவதை அறிந்ததும், அதன் மேற்கூரையில் என்ன ஓவியம் இருக்கலாம் என்று முடிவுசெய்ய, பொதிகை மலை சென்று பேராசான் திசைவேழரிடம் கருத்தறிந்து வந்தவன். அவர் சொன்ன அடிப்படையில் வானியல் அமைப்புகளைச் சொல்லி ஓவியர்களை வரையவைத்துள்ளான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p6
திருமணத்தை முன்னிட்டு நாளை பெருங்கணியர் திசைவேழர் அரண்மனைக்கு வரவிருக்கிறார். அவர் வருவதற்குள் ஓவியப் பணிகளை முடித்து வைக்க வேண்டும். வரையப்பட்டவை எல்லாம் சரியாக இருக்கின்றனவா எனப் பார்ப்பதற்காக அந்துவன் புதிய மாளிகையை நோக்கி வந்துகொண்டிருந்த போது, அவரது வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தனர் செவியனும் இளமருதனும்.

அந்துவன் வந்ததும் இளமருதனை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தான் செவியன். இளமருதன் அவரை வணங்கினான். அவனது வணக்கத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, தலையை மெள்ள அசைத்தபடி நடந்தார் அந்துவன்.

புதிய மாளிகைகள் குறித்து இளமருதன் தனது வியப்பை அவரிடம் வெளிப்படுத்தியபடியே உடன் நடந்தான். மூவரும் கார்காலப் பள்ளியறையை நோக்கி நடந்தனர். கட்டட அமைப்பை, மரவேலைப் பாடுகளை, கலை நுணுக்கங்களை வியந்து சொல்லிக்கொண்டே அவன் வந்தான். மேற்கூரை ஓவியத்தைப் பற்றி ஏதாவது சொல்வானா என, கணியனின் காதுகள் காத்திருந்தன.

அப்போது செவியன் சொன்னான்... “கணியரே மூன்றும் வெவ்வேறு விதமான மாளிகைகள். ஆனால், மேற்கூரை ஓவியத்தை மட்டும் ஏன் ஒன்றுபோல் வரைந்திருக்கிறீர்கள்?”

“மூன்றும் வெவ்வேறானவைதானே” என்றார் அந்துவன்.

“இல்லையே, ஒரே மாதிரிதானே இருக்கின்றன” என்றான் செவியன்.

“வானத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய, சற்றே வானறிவு வேண்டும். வாருங்கள் என்ன வேறுபாடு என்று உங்களுக்குச் சொல்கிறேன்” எனச் சொல்லிக்கொண்டே மாளிகைக்குள் நுழைந்தார் அந்துவன். பின்னாலேயே இருவரும் நுழைந்தனர்.

கார்காலத்து மாளிகையின் மேற்கூரையைக் காட்டிச் சொன்னார்... “இதில் மதி எவ்விடம் இருக்கிறது பார்த்தீர்களா?”

“மேற்கூரையின் இடது பக்கம் இருக்கிறது” என்றான் செவியன்.

“நான் இடம் எனச் சொன்னது காலத்தை, வானில் நிறைமதி எந்த விண்மீன் கூட்டத்தோடு இணைந்து வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p7நிற்கிறதோ, அந்த விண்மீன் பெயரில்தான் அந்த மாதத்தை அழைக்கிறோம். அங்கு பாருங்கள் ஆறு முத்துக்களைப்போல மின்னிக் கொண்டிருப்பவைதான் கார்த்திகை விண்மீன் கூட்டம். அதோடு மதி நிற்பதால் இது கார்த்திகை மாதம். மதி நிற்கும் இடம், விண்மீன் கூட்டம் இருக்கும் இடமும் பிற கோள்கள் நிற்கும் இடமும் வானியல் கணக்குப்படி அமைக்கப்பட்டுள்ளன. திகிரிக் கணக்கு. அதாவது, வானியல் கணக்கை அறிந்தவர்கள் இந்த ஓவியத்தைப் பார்த்தால் எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த நாளை இந்த ஓவியம் குறிக்கிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்கள். மேற்கூரையின் வட்டத்துக்குள் இருப்பது ஓவியம் அன்று, காலம்.

இளவரசர் பொதியவெற்பன் பிறந்தபோது வானத்தில் நாள்மீன்களும் கோள்மீன்களும் இருந்த அமைப்பு இதுதான். படுக்கையில் சாய்ந்து பார்க்கும்போது அவரது கண்கள் நேரடியாக இதைத்தான் பார்க்கும். மதியும் விண்மீன்களும் கோள்மீன்களும் இதே அமைப்புக்கு மறுபடி வர, அறுபது ஆண்டுகள் ஆகும். காலத்தின் முழு வட்டம், எல்லா காலங்களிலும் ஒளிவீசிக்கொண்டுதான் இருக்கப்போகின்றன. அதைப்போல் என்றென்றும் ஒளிவீசக்கூடிய வாழ்வை நீ அமைத்துக்கொள் என்று காலம் அவருக்கு ஒவ்வோர் இரவும் சொல்லும்.”

அந்துவனின் விளக்கத்தைக் கேட்டு மெய்சிலிர்த்து நின்றான் செவியன். மேற்கூரையை அண்ணாந்து பார்த்தபடி இருந்த இளமருதனுக்கு, பேச நா எழவில்லை.

சற்று நேரம் கழித்து அந்துவன் சொன்னார், “வேனிற்கால மாளிகையின் மேற்கூரையில் இருக்கும் கால அமைப்பு, இளவரசியார் ‘பொற்சுவை’ பிறந்தபோது நிலைகொண்டிருந்த வானியல் அமைப்பு.”

மூவரும் அந்த அரங்குக்குள் நுழைந்தனர். மதி முற்றிலும் வேறு ஒரு திசையில் இருந்தது. நாள்மீன்களும் கோள்மீன்களும் வெவ்வேறு இடங்களில் நிலைகொண்டிருந்தன.

மூன்றாவது மாளிகையான பாண்டரங்கத்துக்குள் நுழைந்தனர்.

“இது யார் பிறந்த கால அமைப்பு?” என்று கேட்டான் செவியன்.

“அதுதான் எனக்கும் தெரியவில்லை. நாள்களும் கோள்களும் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என திசைவேழர் குறித்துத் தந்தார். அதன்படி வரைந்துள்ளேன். `இது என்ன அமைப்பு என்று இப்போது வரை எனக்கு விளங்கவில்லை' என்றார் அந்துவன். நாளை அவர் வரவிருக்கிறார். இதில் எத்தனை குறைகள் அவர் கண்களுக்குத் தெரியப்போகின்றனவோ?” என்றவரின் குரலில் பதற்றத்தை உணர முடிந்தது.

``அரண்மனைக் கணியனின் பார்வையில் நடந்துள்ளவற்றில் குறை கண்டறிய முடியுமா என்ன?”

அசட்டையான சிரிப்போடு அந்துவன் சொன்னார்... ``வரையப்பட்ட வானில் எத்தனை விண்மீன்கள் இருக்கின்றனவோ, அத்தனை குறைகளை அவரால் கண்டறிய முடியும். ஏனென்றால், வானில் அவ்வளவு நிறைகண்டவர் அவர். அதனால்தானே பெரும்புலவர் கபிலர், திசைவேழரைப் போற்றி அத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்.”

சொல்லிக்கொண்டே அந்துவன் வெளிமாடத்தைப் பார்த்தபோது அங்கு வட்டவடிவில் செய்துவைக்கப்பட்டிருந்த திகிரி மேடையின் மேல் நாற்சதுரக் கூண்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதைப் பார்த்ததும் பதறிப்போன அவர், ``அதைத் தூக்கிக் கீழே எறியுங்கள்'' எனக் கத்தியபடி அதை நோக்கி விரைந்தார்.

அவ்வளவு நேரம் அவர் சொன்னதை வியந்து கேட்டுக் கொண்டிருந்த இளமருதன், அவர் கத்தியதால் ஓடிப்போய், “அய்யா பொறுத்துக்கொள்ளுங்கள். நான் கொண்டுவந்த கூடுதான் இது” என்று சொல்லிக்கொண்டே கூண்டைத் தூக்கி கீழே இறக்கினான்.

அந்துவனின் கண்கள் சிவந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p8
“என்ன இது அருவருப்பான விலங்கு, இதைக் கொண்டுவந்து ஏன் இதில் வைத்தாய், அது என்ன மேடை தெரியுமா, எதற்காக அமைத்திருக்கிறோம் தெரியமா?  இப்படி இதைக் கறைபடுத்தி விட்டாயே” என்று கோபப்பட்டார்.

இளமருதன் அவரை வணங்கி மீண்டும், மீண்டும் மன்னிப்புக் கேட்டான். பணியாளர்களை வரவழைத்து திகிரி மேடையைத் தூய்மைப்படுத்தச் சொன்னார். அவர்களும் வேகவேகமாகச் செய்தனர்.

செவியனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

``தேவாங்கு இருக்கும் கூண்டை எங்கு வைக்க?'' என்று  இளமருதன் கேட்டபோது, ``மாளிகையைவிட்டு வெளியே தனித்திருக்கும் அந்த மேடையின் மீது வையுங்கள்'' என்று சொன்னது அவன்தான்.

‘வெளியிலிருந்து வந்துள்ள ஒருவன் செய்துவிட்டான் என்பதால், அவரது கோபம் இந்த அளவுக்கு இருக்கிறது. இதை வைக்கச் சொன்னது நான்தான் என்பது தெரிந்தால் அவ்வளவுதான்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, பேச்சைத் திருப்ப, “இந்த அழகிய வட்டவடிவ மேடையை எதற்காக மாளிகையை விட்டு வெளியே அமைத்துள்ளார்கள்?” எனக் கேட்டார்.

சற்றே கோபம் தனிந்த அந்துவன் சொன்னார்... “இது சக்கரவாகப் பறவைக்கான மேடை. `பறவைகளின் இளவரசி சக்கரவாகப் பறவை' என்று சொல்வார்கள். வரப்போகும் பாண்டியநாட்டு இளவரசியார் பொற்சுவையின் செல்லப்பறவை அதுதானாம். இது உண்மையில் பறவைகளின் இளவரசி அன்று... வணிகர்களின் இளவரசி. ஆம்... கால மாற்றத்தைக் கணித்துச் சொல்லும் பறவை அது. கார்காலத்துக்கான காற்று தொடங்கும்போது உலகின் எந்தத் திசையிலிருந்தோ இது வந்துவிடுகிறது. இது வந்துவிட்டால், காற்றின் திசையும் மழையின் தொடக்கத்தையும் கடலில் மிதக்கும் வணிகர்கள் அறிவார்கள். மழையோடு வந்து மழைநீரை மட்டுமே அருந்தி உயிர்வாழும் வியப்புதரும் இந்தப் பறவை, மழைக்காலம் முடிந்ததும் புறப்பட்டு மீண்டும் கடலுக்குள் போய்விடுகிறது.

இளவரசியார் இந்தப் பறவையோடுதான் வந்துகொண்டிருக்கிறாராம். அந்தப் பறவைக்கான கூண்டு வைக்கும் மேடை ஒன்றைச் செய்யச் சொன்னார்கள். அது கார்காலம் முடிந்ததும் பறந்துசெல்லும் திசையை நோக்கி, ஆறு மரங்களால் வட்டவடிவில் அந்த திகிரி மேடையை அமைத்துள்ளேன். அதில் போய் இந்த விலங்கை வைத்துவிட்டீர்களே” என்று கோபப்பட்டவர், தேவாங்கைப் பார்த்தபடியே கேட்டார். “என்ன விலங்கு இது? இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லையே. எதற்கு இதைக் கொண்டு வந்துள்ளீர்கள்?”

``தேவாங்கு'' என்று அதன் பெயரைச் சொன்ன இளமருதன். இதைக் கொண்டுவந்ததன் காரணத்தைச் சொல்ல வாயெடுத்தான். ஆனால், சட்டென அதை நிறுத்திக்கொண்டான். `பாரிக்கு தெய்வவாக்குச் சொல்லும் விலங்கு இது. இதை மாமன்னருக்குப் பரிசுப்பொருளாகக் கொண்டு வந்துள்ளோம். இதைப் பார்த்ததும் மாமன்னர் அடையப்போகும் மகிழ்வு அளவற்றது. இதை மாமன்னரிடம்தான் சொல்ல வேண்டும். இடையில் இருப்பவர்களிடம் சொன்னால், எப்படியும் மாற்றிவிடுவார்கள்’ என்று நினைத்தவன் சட்டென வாயடைத்துக் கொண்டான்.

“உலகமே வியக்கப்போகும் ஒரு திருமணத்துக்கு நீ கொண்டுவந்துள்ள பரிசு இதுதானா?” என்று சொல்லிச் சிரித்தபடி, ``குறுநில மன்னன் ஒருவனின் மகனால் மாமன்னரை இந்தக் காலத்தில் கண்டுவிட முடியுமா என்ன?”

செவியன் சொன்னான்... “வெங்கல்நாட்டின் மீது பேரரசருக்கு நல்ல மதிப்பு உண்டு. எனவே, நேரம் ஒதுக்குவார் என்றுதான் நான் நினைக்கிறேன்.”

“சரி அதையும் பார்ப்போம்” என்று சொன்ன அந்துவன், “இந்த விலங்குக் கூண்டை இனி இங்கு வைக்கக் கூடாது. மாளிகைக்குள் இருக்கும் மேடையில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

இளமருதன் கூண்டை எடுத்துக்கொண்டு பாண்டரங்கத்துக்குள் நுழைந்தான். `இந்த அரங்கில் வைக்கத்தான் தந்தை காமன்விளக்கைச் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், நான் கொண்டுவந்த விலங்கு அதற்கும் முன்னே உள்நுழைந்துவிட்டது' என எண்ணியபடி, அந்தக் கலைமாடத்தின் மேல்புறம் இருக்கும் மேடை ஒன்றின் மீது வைத்தான்.

உள்ளிருந்த இரண்டு தேவாங்குகளும் வட்டக்கண்களை உருட்டி உருட்டி இங்கும் அங்கும் பார்த்தன.

முன்புபோல் இவை அச்சம்கொள்வதில்லையே என இளமருதன் எண்ணிக்கொண்டிருக்கையில், அவை இரண்டும் அண்ணாந்து மேற்கூரையைப் பார்த்தன. பார்த்த கணத்தில் கத்தியபடி மருண்டு உள்ளொடுங்கின.

முதன்முறையாக அவற்றின் கத்தலைக் கேட்ட இளமருதன், அப்படி என்ன இருக்கிறது மேற்கூரையில் என எண்ணியபடி அண்ணாந்து பார்த்தான். சிதறிக்கிடக்கும் விண்மீன்களுக்கு இடையில் ஓர் ஓரத்தில் நிலவு இருந்தது. காலம், சொல்லவேண்டியதைச் சொல்லிக்கொண்டி ருந்தது. அவனுக்கு அது புரியவில்லை!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 11, 2018 11:04 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p1
கார்காலத்தின் தொடக்க நாளிலேயே மழை கொட்டித்தீர்த்தது. கபிலரின் உடல், சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டது. கபிலர் இருந்த வீட்டில்தான் எந்நேரமும் பாரியின் மகள்கள் இருந்தனர். அங்கவை, சங்கவையோடு சேர்த்து எட்டுப் பேருக்கு எழுத்துகளைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கியிருந்தார் கபிலர். நடுவீட்டில் மரப்பலகையில் மணல் கொட்டி, அதன் மேல் உயிரெழுத்துகளை எழுதச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். சிறிது காலம் கபிலருக்கு உதவியாக அவரோடு இருந்துவிட்டு வருவதாகச் சொல்லி, மயிலா அங்கேயே தங்கிவிட்டாள்.

பறம்புநாட்டின் தென் பகுதி எல்லைக்காவல் பொறுப்பாளன் கூழையனிடமிருந்து தேக்கனுக்குத் தகவல் வந்திருந்தது. குடநாட்டு அமைச்சன் கோளூர் சாத்தனின் கைகளை வெட்டி அனுப்பியதற்குப் பிறகு, குட்டநாட்டு அரசவைக்குக் குடநாட்டின் தூதுவர்கள் சென்றுள்ளனர். `அடுத்து நிகழப்போவதைப் பற்றிய விழிப்போடு இருக்க வேண்டிய வேளை இது!' என அவர் நினைத்தார்.

கொற்றவைக்கூத்து முடிந்து ஒரு வாரத்துக்குப் பிறகு, கபிலரின் உடல் முற்றிலும் குணமானது. ஆனால் மனம், மிகவும் துவண்டே இருந்தது. நீலன் புறப்பட்ட பிறகு, கபிலரின் மனம் நிலைகொள்ள நாளெடுத்துக்கொண்டது. பார்த்த முதல் கணத்திலிருந்து அவனைப் பற்றிய வியப்பு பெருகிக்கொண்டே இருந்தது. வேட்டுவன் பாறையில் பார்த்தபோது, கையில் பிடித்திருந்த அதே வேற்கம்போடு கபிலரிடமிருந்து விலகி காட்டுக்குள் மறைந்தான் நீலன். கண்களைவிட்டுப் பிரியும் வரை கபிலரின் கண்கள் அசைவற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தன.

இப்போது கபிலரோடு எந்நேரமும் உடனிருந்து உதவிகள் செய்பவன் உதிரன். இவனும் நீலனைப் போலத்தான்; துடிப்பேறிய இளைஞன். கபிலரின் தேவைகளை மிகுந்த அக்கறையோடு கவனித்துவருபவன்.

ஒரு பகற்பொழுதில், கபிலரின் வலது காலை தனது தொடையின் மேல் தூக்கி வைத்துக்கொண்டு விரல்நகங்களை நறுக்கத் தொடங்கினான் உதிரன். அவரின் வலதுகால் நடுவிரல் சூம்பிப்போய் சின்னஞ்சிறியதாக இருந்தது. அந்த விரலின் அடிப்பகுதியை விரல்களால் மெள்ள நீவிவிட்டான். சற்றே உயரமான மரப்பலகையின் மேல் உட்கார்ந்திருந்தார் கபிலர். அவரின் எண்ணங்கள் வேறு எங்கோ இருந்தன. உதிரன் நகம் நறுக்குகிறான் என்பது மட்டுமே அவரின் நினைவில் இருந்தது. சூம்பிய விரலுக்கு உணர்ச்சியில்லாததால், அவன் அந்த விரலின் அடிப்பாகத்தை நீவிவிட்டுக் கொண்டிருப்பதை அவரால் உணர முடியவில்லை.

‘பறம்புநாடே ஒரு தாய்போல் இருக்கிறது. அழிந்த இனங்களை, வாழத் துடிப்பவர்களை, எங்கெங்கோ இருந்து வந்து சேர்ந்தவர்களை எல்லாம் அள்ளி அணைத்துக்கொண்டுள்ளது. சேரனின் நாடு, சோழனின் நாடு, பாண்டியனின் நாடு என, மன்னர்களால்தானே நாடுகள் அறியப் படுகின்றன. ஆனால், ஒரு தாயின் குணத்தோடு விளங்கும் நாட்டை ஏன் `தாய்நாடு' எனச் சொல்லக் கூடாது? நாட்டைத் தாயோடு ஒப்பிடும் எண்ணம் இதுவரை யாருக்கும் தோன்றியதில்லை. சில மாதங்களுக்கு முன்னால் இப்படியோர் எண்ணம் தோன்றியிருந்தால், அது எவ்வளவு பொருளற்றதாக இருந்திருக்கும். மண்ணும் நாடும் உடைமையின் குறியீடுகள். அவற்றைப்போய் தாய்க்கு உவமையாக எப்படிச் சொல்ல முடியும்? ஆனால், கொற்றவைக் கூத்தைப் பார்த்த பிறகு, திசையற்றவர்களையும் நிலமற்றவர்களையும் தலைமுறை தலைமுறையாக அள்ளி அரவணைத்து நிற்கும் பறம்புநாட்டைத் `தாய்நாடு' எனச் சொல்வதைவிட வேறென்ன சொல்ல முடியும்?’ என்று கபிலரின் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, அவரை அறியாமலே கண்கள் கலங்கின.

ஒருகணம் கண்களை மூடிச் சிந்தித்தார். தனக்குள் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? மேலெல்லாம் ஏன் சில்லிட்டு அடங்கியது? இப்போது நினைவுக்குள் என் தாய் வந்துவிட்டுப் போனாளே எப்படி? நினைவின் வழியே எதையோ கண்டறிந்துவிட நினைத்தபோதுதான் அவர் கால்விரல் நினைவுக்கு வந்தது. மெள்ளக் குனிந்து கீழே பார்த்தார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p2
அவ்வளவு நேரம் எங்கேயோ பார்த்தபடி இருந்த கபிலர், இப்போது குனிந்து தன்னைப் பார்க்கிறார் என்பதை அறிந்ததும் உதிரன் சொன்னான், “உங்கள் வலதுகால் நடுவிரலில் குருதி யோட்டத்துக்காக அடிநரம்பைச் சற்று அழுத்தி நீவிவிட்டேன். எதுவும் தொந்தரவாகிவிட்டதா?”

‘இல்லை’ என்று தலையாட்ட மட்டும் செய்தார் கபிலர்.

உதிரன் சொன்னான், “நடுவிரல் சூம்பியுள்ளதால், நடக்கும்போது சற்றே இடறினாலும் தசை பிறண்டுவிடும். கூடுமானவரை பாதடியைக் கழற்றாதீர்கள்.”

இப்போது தலையாட்டாமல் அவனையே பார்த்தார் கபிலர்.

“வேட்டுவன் பாறையில் ஏறும்போது நீலன், உங்கள் பாதடியைக் கழற்றச் சொன்னதால்தான் உடனே உங்களுக்குத் தசை பிறண்டிருக்கிறது. காட்டில் பிடித்து நடப்பதைப்போன்ற வடிவில் ஒரு பாதடியைச் செய்துதர ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லியபடி, விரலின் அடிப்பாகத்தை அழுத்தி நீவிவிட்டான் உதிரன்.

கபிலரின் கண்கள் கலங்கின.

அதைக் கவனித்த உதிரன், “வலி ஏற்படுவதுபோல மிகவும் அழுத்திவிட்டேனா?” என்று பதற்றப்பட்டுக் கேட்டான்.

“இல்லை, சிறுவயதில் என் தாய் அந்த விரலின் அடிநரம்பை இளஞ்சூட்டு எண்ணெய் தொட்டு அழுத்தி நீவிவிடுவாள். அப்போது ஏதாவது ஒருகணத்தில் அந்த விரலை நான் உணர்ந்திருக்கிறேன். மற்ற நேரங்களில் அதை நான் உணர்ந்ததேயில்லை. எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன, எவ்வளவோ நிலப்பரப்புகளை நடந்தே கடந்திருக்கிறேன். பல்லாண்டுகளுக்குப் பிறகு, சட்டென இப்போது ஒருகணம் அந்த விரலை நான் உணர்ந்தேன். உணர்ந்த அந்தக் கணம் என் தாய் நினைவுக்கு வந்துவிட்டாள். உடலெல்லாம் சிலிர்ப்பு மேலிடுகிறது” எனச் சொல்லியபடியே உதிரனின் உச்சந்தலையில் கைவைத்தார் கபிலர். ஊறிய கண்ணீர் ஒழுகாமலா இருக்கும்?

சிறிது நேரத்தில், பெண்பிள்ளைகள் மொழி கற்றுக்கொள்ள வீடு வந்தனர். நறுக்கிய நகத்துண்டுகளை எடுத்துக்கொண்டு உதிரன் வெளியேறினான். கபிலர், மொழிக்குள் நுழையத் தொடங்கினார். மழை அதிகமாகத் தொடங்கியது. வாரக்கணக்கில் விடாது கொட்டும் அடைமழை, இன்னும் சில நாள்களில் தொடங்கும். அடைமழை தொடங்கிவிட்டால், அடுத்து கடுங்குளிர்.

தந்தரையிலிருந்து வந்தவர்களால் இந்தக் குளிரைத் தாங்க முடியாது. கடுங்குளிர் தாங்க, கபிலருக்கு எலிமயிர்ப் போர்வையை நெய்யுமாறு பாரி சொன்னான். குளிரிலிருந்து காத்துக்கொள்ள எவ்வியூரில் உள்ளவர்கள் முடியுள்ள தோல் ஆடைகளைப் பயன்படுத்துவர். அது, காட்டில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்குப் போதுமானது. புதியவர்களின் உடலுக்கு அது போதுமானதாக இருக்காது.  அவர்களின் உடற்சூட்டைப் பாதுகாக்கும் மேலாடை தேவை.

காட்டின் மிக உயர்ந்த பகுதிகளில் லவங்கமும் செங்கடம்பும் அடர்ந்துகிடக்கும் இடங்களில் பேரெலி உயிர்வாழும். இது பூனையைவிட அளவில் பெரியது. பஞ்சினும் மெல்லிய மயிர்களை உடையது. பொங்கும் புகைபோல பொசுபொசுவென இருக்கும் இதன் மயிர்களால் உருவாக்கப்படும் போர்வை, உடலுக்கு மிகுந்த கதகதப்பைத் தரும். உடலின் சூட்டை வெளிவிடாமல் காத்துக்கொள்ளும்; கடுங்குளிரையும் உடலோடு அண்டவிடாது.

கபிலருக்கு எலிமயிர்ப் போர்வையை நெய்ய, தேவையான எலிகளைப் பிடித்தாக வேண்டும். உதிரன், பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். கபிலர், தானும் உடன் சென்று வருவதாக பாரியிடம் கூறினார்.

“பேரெலி, உயரமான கரும்பாறை இடுக்குகளில்தான் இருக்கும். இளைஞர்கள் மிக விரைந்து செயல்பட்டால்தான், அதைப் பிடிக்க முடியும். நீங்கள் அவர்களைப் பின்தொடர்வது கடினமாயிற்றே?” என்றான் பாரி.
“நான் என்ன விரட்டியா பிடிக்கப்போகிறேன்? பிடிக்கப்போகிறவர்களைப் பின்தொடரப் போகிறேன்.”

“முன்னேறுவதைவிடக் கடினமானது பின்தொடர்வது.”

“பின்தொடரக்கூட முடியாத அளவுக்கு நான் தளர்ந்துவிடவில்லை; எனக்கு வயதாகிவிடவும் இல்லை.”

சின்ன சிரிப்புடன் பாரி சொன்னான், “மழைக்காலம் அல்லவா, பாறைகள் வழுக்கும் எனச் சொல்லவந்தேன்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p3
“எப்படிச் சொன்னாலும் நீ சொல்லவரும் செய்தி அதுதானே?” என்றார் கபிலர்.

“நான் பதில் சொல்லவில்லை என்றால், உங்கள் வினாவே விடையாகிவிடும். என் தோழன் அவனது சொல்லாலேயே கண்டறியப்பட்டுவிடக் கூடாதல்லவா?”

“ `எந்தப் பக்கம் போய் மறித்தாலும் தப்பித்துப்போகும் வல்லமைகொண்டது' என்று உதிரன் சொன்னது, பேரெலியை மட்டும்தான் என நினைத்துவிட்டேன்.”

பாரி சிரித்துக்கொண்டே கபிலரைக் கட்டி அணைத்தான். இருவரும் புறப்பட்டனர். ஆதிமலையின் குறிப்பிட்ட திசை நோக்கி இளைஞர்கள் வேகமாகச் சென்றனர். சூரிய ஒளி, நற்பகல் வரைதான் தெரியும். அந்தப் பொழுதுக்குள் பிடித்தால்தான் உண்டு. நாளொன்றுக்கு இரண்டு பிடிப்பதே கடினம். ஒரு போர்வை செய்ய, குறைந்தது இருபது பேரெலிகளையாவது பிடித்தாக வேண்டும். உதிரன், சரசரவெனப் பாறைகளில் ஏறிப் போய்க்கொண்டிருந்தான். மிகச்சிறிய நேரம்தான் அவர்களைப் பின்தொடர்ந்தனர். அதன் பிறகு, பின்தொடர்தலுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

பாரியும் கபிலரும் பேசியபடி அவர்கள் சென்ற திசை நோக்கி மலையேறிக்கொண்டிருந்தனர். “பன்மயிர் பேரெலி என்று இந்த எலியைப் பற்றிப் பழம்புலவர் ஒருவர் பாடியுள்ளார்” என்று சொன்ன கபிலர், சட்டென நினைவு வந்தவராகச் சொன்னார், “அங்கவை, கற்றுக்கொள்வதில் அளவற்ற ஆர்வத்துடன் இருக்கிறாள்.”

பாரிக்கு இது புதிய செய்தி அல்ல. ஆனால், கபிலர் வாயால் கேட்பது மகிழ்வைத் தந்தது.

“பொதுவாக, மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காகத்தான் கேள்வி கேட்பார்கள். அங்கவையோ, அறிந்துகொள்வதற்காகக் கேள்விகள் கேட்கிறாள்.”

இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்பதைப் போலிருந்தது பாரியின் பார்வை.

“மரத்தைத் தெரிந்துகொள்ள மரத்தைப் பார்த்தால் போதும். ஆனால், மரத்தை அறிந்து கொள்ள அதன் வேரைப் பார்க்க வேண்டும் அல்லவா? அதைப்போலத்தான் ‘உயிரெழுத்து பன்னிரண்டு’ என்று நான் சொன்னபோது தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு, ‘என்னென்ன?’ எனக் கேட்பாள் என நினைத்தேன். அவளோ  ‘ஏன் பன்னிரண்டு?’ எனக் கேட்டாள்.

“வினா சரிதானே?”

``சரிதான். ஆனால், விடைக்கான இடம் வினாவில் இருக்க வேண்டுமல்லவா? எத்தனையோ தலைமுறைகளாக நமது முன்னோர்கள் ஒலியை உருட்டி உருட்டி எழுத்தாக்கி வைத்திருக்கிறார்கள். நீர் போன இடத்தில் பதியும் தடம்போல, பேசும் ஒலிக்கு ஒரு தடத்தை உருவாக்க முயன்றிருக்கிறார்கள். இந்தப் பெரும் பட்டறிவுச்சேகரத்தை எனது அறிவால் எப்படி அளந்துபார்த்து விடை சொல்ல முடியும்?”

கபிலரின் விடை, பாரிக்குப் பொருத்தமாகப் பட்டது.

கபிலர் சொன்னார், “முன்பு ஒருமுறை என்னிடம் மொழி கற்ற மாணவி இப்படித்தான் வினாக்களைக் கேட்டுக்கொண்டே இருப்பாள். காலையில் அங்கவை கேள்வி கேட்டதில் அவளின் நினைவாகவே இருக்கிறது” என்று சொன்னபடி எதிரில் இருக்கும் வேங்கை மரத்தைப் பார்த்து அப்படியே அசைவற்று நின்றார் கபிலர். பாரியும் நின்றான்.

வேங்கைமரத்தின் தாழ்வான கிளையில் மயில் ஒன்று அமர்ந்திருந்தது. பேச்சுக் கேட்டு பறந்துவிடக் கூடாது என்பதற்காக, கபிலர் பேச்சை நிறுத்தினார். அது தன் தலையை மட்டும் மேலே தூக்கியது. அதன் அசைவை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர். பாரி, மரத்தின் அடிவாரத்தில் எதையோ உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

மயில் மெள்ள தலையைத் திருப்பி, இருவரையும் பார்த்தபடி கிளையிலிருந்து குதித்து, காட்டுக்குள் மறைந்தது. “இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாதா? வெருகுப்பூனையின் கண்களுக்குள் இருக்குமே நீலமும் பச்சையும் கலந்த கலவை. அதுதானே மயில்தோகையின் கண்களிலும் இருக்கிறது?” என்றார் கபிலர்.

பாரி, மறுமொழி ஏதுமின்றி மரத்தின் அடிவாரத்தை நோக்கி நடந்தான். கபிலர், அந்தக் கிளையை நோக்கிச் சென்றார். மயில், கிளையிலிருந்து தாவி மண்ணில் கால் பதித்த இடத்தில் அதன் காலடி படிந்திருந்தது. அதைப் பார்த்தபடி சொன்னார், “மயிலின் காலடியை நொச்சி இலைக்கு உவமை சொல்வர். வெண்ணொச்சி ஐந்து இலைகளை உடையது. மயிலுக்கு முன்பக்கம் மூன்று விரல்கள்தானே, அதனால் கருநொச்சியைத் தான் உவமை சொல்லியிருக்க வேண்டும். அதற்குத்தான் மூன்று இலை.”

கபிலரின் பேச்சுக்கு, பாரியிடமிருந்து மறுமொழி ஏதும் இல்லை.

“நீ என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” என வினவியபடி பாரியின் அருகில் வந்தார் கபிலர்.

மரத்தின் பட்டையில் ஒட்டியிருந்த செந்நிறத் தடத்தைக் காண்பித்து பாரி சொன்னான், “புலி, தனது வாயில் இருந்த குருதியைத் துடைத்துவிட்டுப் போயிருக்கிறது.”

கபிலரின் கண்கள் குருதியை உற்றுப் பார்த்தன.

“புலியின் வாயில் இவ்வளவு குருதி இருந்திருக்குமேயானால், அது யானையைத்தான் வீழ்த்தியிருக்கும்.”

கபிலரின் கண்கள் பாரியை உற்றுப்பார்த்தன.

“புலி குட்டி போட்டிருக்கும் புதருக்குள் யானை எதிர்பாராமல் நுழைந்ததால், இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம்.”

தடத்தின் வழியே காட்சியை அடுக்கிக்கொண்டேபோனான் பாரி. கபிலரின் மனதுக்குள்ளும் சொற்கள் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p4விரிந்துகொண்டே போயின.

‘கிளையில் தோகை விரித்த மயில்.

அடியில் குருதி துடைத்த புலி.

மயிலின் கால் தடம் நொச்சியைச் சொன்னது.

புலியின் வாய்த் தடம் யானையைக் கொன்றது.


குருதி யுலரா வேங்கையின் அடியில்
தனது இறகு உதிர்க்காமல் சென்றது மயிலே’
என, கபிலரின் மனம் காட்சிகளைச் சரசரவெனத் தொகுத்துக்கொண்டிருந்தபோது, பாரியின் வலதுகை ஈட்டியை இறுகப்பிடித்திருந்தது. ஏனென்றால், குருதியின் ஈரம் காயாமல்தான் இருந்தது. ஒருவேளை அந்தப் புதர் மிக அருகில் இருக்கலாம்.

விழா என்றால், அறுவகைத் தராசும் தரை தட்டும் ஓசை நிற்காமல் கேட்க வேண்டும். அதுவே திருவிழா என்றால், இந்த அறுவகையோடு சேர்ந்து எழுவகை அளவையும் நில்லாமல் நீள வேண்டும். அதனினும் பெருவிழா என்றால், இந்த இரண்டோடு சேர்த்து எண்வகை இன்பத்தில் நகரம் திளைக்க வேண்டும். இதுவே விழாக்களுக்கு இலக்கணம் கண்டோர் சொன்ன சொல்.

மாமதுரையின் வணிகச்சாலையில் குவிந்துள்ள மக்களின் கூட்டம் குறைவதாக இல்லை. மாணிக்கக்கற்களை நிறுத்தும் மிகச்சிறிய மணித்தராசும், தங்க நகைகளை நிறுத்தும் பொன்தராசும், உலோகங்களை நிறுத்தும் உலோகத்தராசும் பண்டத்தராசும் மரத்தராசும் தூக்குத்தராசும் நிலை கொள்ளாமல் இரவு முழுவதும் ஆடியபடியே இருந்தன. தராசுத்தட்டு தரை தட்டும் ஓசை இடைவிடாது ஒலிக்கும் இசை அரங்கம் போல கேட்டுக்கொண்டே இருந்தது. துலா முள்ளின் தலையாட்டல் நின்றபாடில்லை. நிற்காமல் துடிக்கும் வணிகத்தின் வால் அதுதானே.

பண்டகக் காப்போன், எண்ணற்ற கணக்கர்களோடு அமர்ந்து நாள்கணக்கில் கணக்குகளைப் போட்டுக்கொண்டே இருந்தான். இந்தத் திருமணத்துக்கு வரப்போகும் தேர்கள் எத்தனை, ஒரு குதிரை இழுக்கும் தேர், இரு குதிரைகள் இழுக்கும் தேர், நான்கு குதிரைகள் இழுக்கும் தேர் என வகைக்கு ஏற்ப பிரித்துக் கணக்கிட்டனர். குதிரைகள் தவிர, பிற விலங்குகளால் இழுத்து வரப்படும் தேருக்கு மணவிழா முடியும் வரை கோட்டைக்குள் அனுமதி இல்லை. அதேபோல, சிறிய பல்லக்குகளுக்கும் சிவிகைகளுக்கும் அனுமதி இல்லை. நான்கு பேர் சுமக்கும் பெரும்பல்லக்குகளுக்கும் எட்டுப்பேர் சுமக்கும் மணிப்பல்லக்குகளுக்கும் யானையின் மேல் பொருத்தப்பட்ட கூண்டுப் பல்லக்குகளுக்கும் மட்டுமே அனுமதி.

தேர்களின் எண்ணிக்கையை உய்த்தறிந்து அதன் அடிப்படையில் தேர் இழுக்கும் விலங்குகளின் எண்ணிக்கை கணக்கிடப் பட்டது. விலங்குகளுக்குத் தேவையான கூலங்கள் கணக்கிடப்பட்டன. பணியாளர் களின் எண்ணிக்கையையும் விருந்தினர்களின் எண்ணிக்கையையும் கணக்கிட்டனர். நெல், வரகு, தினை, சாமை தொடங்கி எள், கொள், அவரை, மொச்சை, வரையிலான பதினெட்டு வகைக் கூலங்களையும் நிறுத்தல், முகர்தல், பெய்தல் அளவைகளைக்கொண்டு தேவைகளைக் கணக்கிட்டனர்.

பண்டகக் காப்போனின் அறை முழுவதும் கணக்குகள் நிரம்பி வழிந்தன. இரவும் பகலும் இதே வேலையாக இருந்ததால், ஏடுகளில் எழுதாமலேயே எண்களை ஒப்புவித்துக் கொண்டிருந்தனர்.  ஒரு படிக்கு அவரை 1,800, பயறு 14,800, அரிசி 38,000 இருக்கும் என எண்ணிக்கையை நினைவுகளின் பகுதியாக்கினர்.

குதிரைகளின் கட்டுத்தறிக் கணக்குகள் துல்லியமாகத் தயாராகின. ஆட்டுத்தோல் பிடிகொண்ட கசை எத்தனை தேவை என்பதில் தொடங்கி கண்பட்டி, கடிவாளம் வரை குதிரைக்குத் தேவையான பொருள்கள் எவ்வளவு, கொள், புல், தண்ணீர் வேளை தவறாமல் கொடுக்கவேண்டிய அளவுக்கான மொத்தக் கணக்குகளும் எழுதப்பட்டன. கட்டுத்தறியின் துர்நாற்றத்திலிருந்து நகரத்தைக் காப்பாற்ற கணக்குகளே அச்சாணிகளாக இருந்தன.

எண்ணற்ற விழாக்களையும் திருவிழாக்களையும் கண்ட மதுரை, இப்போது பெருவிழாவுக்குத் தயாராகியது. இன்னும் சிறிது நேரத்தில் மணமகள் வந்திறங்க இருக்கிறாள். அவரை வரவேற்க, நெடுங்கல்சாலை முழுவதும் பேரலங்காரம் பூண்டிருந்தது. எங்கும் அரச குலத்தினர் திரண்டிருந்தனர். வரப்போகும் மதுரையின் குலமகளுக்காக மாமன்னர் குலசேகரப் பாண்டியன் இன்று அதிகாலை வைகையில் நீராடி, பொன்னால் செய்யப்பட்ட தும்பைப்பூவை இருபது மாவீரர் களுக்குப் பரிசாக வழங்கினார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 4 83p5
பொன்னரிமாலையும் நெற்றிப் பட்டமும் சூடிய பட்டத்துயானை முன்னே வந்தது. அதைத் தொடர்ந்து பொன்னால் செய்யப்பட்ட சேண மணிந்த குதிரைகளில் பொன்பூவைச் சூடிய மாவீரர்கள் இருபது பேர் அணிவகுத்து வந்தனர்.

அதற்கு அடுத்து, மின்னும் தலையணிகளும் சங்கு வளையல்களும் செந்நிற வடமும் இடையணியும் அணிந்த அழகுப் பதுமைகள் எண்மர் பொற்கிடுகு மேயப்பட்ட சிறு பல்லக்கைத் தூக்கி வந்தனர்.

பெண்கள் பல்லக்குத் தூக்கி வருவதை, மதுரை முதன்முறையாகக் கண்டது. நெடுங்கல்சாலையில் விலக முடியாத பெருங்கூட்டம் நின்றது. இளமருதனும் செவ்வியனும் கூட்ட நெரிசலில் திணறியபடி நின்றுகொண்டிருந்தனர். இந்த அரிய காட்சி என்றைக்குக் கிடைக்கும்? எவ்வளவு நெரிசல் இருந்தாலும் வந்து இறங்கும் இளவரசியாரைப் பார்க்காமல் போவதில்லை என்ற முடிவோடு இருவரும் நின்றிருந்தனர்.

நெடுங்கல்சாலையின் திருப்பத்தில்தான் அவர்கள் நின்றிருந்தனர். அங்கிருந்து பார்த்தால், தொலைவில் பல்லக்கில் வந்து இறங்கி அரண்மனையின் நெடும் படி ஏறி உள்ளே செல்வதைப் பார்க்க முடியும்.

பொன்னால் ஆன தும்பைப்பூ சூடிய வீரர்களின் அணிவகுப்பைத் தொடர்ந்து பெண்கள் எண்மர் தூக்கி வரும் சிறு பல்லக்கு முதலில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கப்போவது யார் என எல்லோரும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு நின்றனர். ஆனால், அந்தப் பல்லக்கிலிருந்து யாரும் இறங்கவில்லை.

முன்னால் இருப்பவன் அடைத்து நின்றதால், இளமருதனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. “யார் இறங்குவதென்று தெரியவில்லை. சற்றே விலகுங்கள்’' என்று கூறினான். அதற்கு அடைத்து நின்ற அந்த மனிதன் சொன்னான், “அந்தப் பல்லக்கில் இருந்து யாரும் இறங்க மாட்டார்கள்.”

செவியன் அவனை உற்றுப்பார்த்தான். தோற்றமே அவனொரு வணிகன் என்பதைச் சொல்லியது. சாத்துகளின் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதை, பிற அடையாளங்களைக்கொண்டு அறிந்தனர். அவன் பல செய்திகளையும் அறிந்திருப்பான் என உய்த்தறிந்த செவியன் கேட்டான்.

“அந்தப் பல்லக்கில் யாரும் வரவில்லையா?”

“அது பொற்கிடுகு வேய்ந்த பல்லக்கு. சாத்துகளின் விழாக்களில் அதற்குத்தான் முதல் இடம்.”

“அந்தப் பல்லக்கில் யார் இருப்பார்?”

“செல்வத்தின் இளவரசி இருப்பாள்.”

அவன் சொல்வது புரியாமல் இருவரும் முழித்தபோது அவன் மேலும் சொன்னான், “அது சக்கரவாகப் பறவையைக் கொண்டுவரும் பல்லக்கு.”

அந்தக் கணம் இளமருதனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இப்பெரும்விழாவில் தலைமரியாதை கொடுத்துப் பொற்பல்லக்கில் எடுத்துவரும் பறவைக்காகச் செய்யப்பட்ட மேடையிலா நான் ஈச்சமரச் சட்டகங்களால் செய்யப்பட்ட தேவாங்கின் கூட்டை வைத்திருந்தேன். அந்துவன் கோபப்பட்டதன் நியாயம் இப்போது விளங்குகிறது’ என எண்ணிக்கொண்டிருக்கும்போதே செம்மணிகள் பதிக்கப்பட்ட மகரப்பல்லக்கு வருவது தொலைவில் தெரிந்தது. சூரிய ஒளி மின்னி மேலெழும் அழகு எல்லாவற்றையும் சொன்னது.

“எட்டு அண்ணகர்கள் தூக்கி வருகிறார்களே, அதுதான் இளவரசியாரின் பல்லக்கு” என்றான் அந்த வணிகன்.

‘அவன் சொல்லாமலே அதுதான் இளவரசியாரின் பல்லக்கு என்பது தெரிந்தது. ஆனால், தூக்கி வருபவர்களை அண்ணகர்கள் எனச் சொல்கிறானே!?’ என எண்ணியவாறே, அவர்கள் யாரெனக் கேட்டான் இளமருதன்.

“விதை எடுக்கப்பட்டவர்கள்” என்றான் வணிகன்.

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இசைக் கருவிகளின் முழக்கம் எங்கும் கேட்கத் தொடங்கியது. அரண்மனைப் பெண்கள் மங்கலக் குலவையிட்டனர். இளவரசியாரை வரவேற்க, பழையன்மாதேவி படி இறங்கி வந்தார். மலர்க்குவியலும் மஞ்சள் அரிசியும் பொன்வட்டில் எடுத்தபடி சேடிப்பெண்கள் உடன்வர, அவர் வந்து நிற்பதும் பொற்பல்லக்கு மாளிகை நெடும் படியின் எதிரில் வந்து நிற்பதும் ஒரேபொழுதில் நிகழ்ந்தன.

தொட்டியில் தண்ணீர் இறங்குவதைப்போல பல்லக்கை சிறு அசைவுகூட இன்றிக் கீழிறக்கினர் அண்ணகர்கள். தங்களின் கால் பார்த்தபடியே வணங்கி பின் நகர்ந்து நின்றனர்.

இசைக்கருவிகளின் ஓசை எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மாடங்களிலிருந்து பூக்கள் சொரியப்பட்டுக்கொண்டிருந்தன. பல்லக்கிலிருந்து இறங்கும் இளவரசியைப் பார்க்க, கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இளமருதன் எக்கி, வணிகனின் தோள்பட்டையைத் தாண்ட முயன்றான்.

மகரப்பல்லக்கின் செம்மணிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லி, அவற்றின் நிறப்பெருமையையும் அவை எடுக்கப்பட்ட நிலங்களின் தன்மையையும் அவை தாங்கி வந்துள்ள இளவரசியாரின் சிறப்பையும் இணைத்து இணைத்துச் சொல்லி மகிழ்ந்தான் வணிகன். அவளுடைய வார்த்தைகளில் வணிகர்குலம் பெருமிதம் பொங்கியது. எல்லோரின் கண்களும் இறக்கப்பட்ட பல்லக்கையே பார்த்துக்கொண்டிருந்தன. மேளதாளங்களின் ஓசையாலும் தூவப்படும் வண்ணமலர்களாலும் நெடுங்கல்சாலை திணறியது.

பழையன்மாதேவி வந்து நின்றபின்னும், பல்லக்கிலிருந்து யாரும் இறங்கவில்லை. பெருகும் உற்சாகத்துக்கு நடுவே, மிகச்சிலரின் கண்கள் தாமதமாகும் அந்தக் காலத்தைக் கணித்துக் கொண்டிருந்தன.

பல்லக்கின் உள்ளே இருந்தவள் யோசித்துக் கொண்டே இருந்தாள். ‘இந்தத் தயக்கம் எனது வாழ்வின் எல்லா உண்மைகளையும் சொல்லும்.’ கண் மூடி அந்தக் கணத்தைக் கடந்தாள். நெஞ்சின் அழுத்தத்தை மூச்சுக்காற்று வெளியேற்றியது. மூடிய கண்களைத் திறந்தாள். இடக்கை விரல்களால் செம்பட்டுத் திரைச்சீலையை மெள்ள விலக்கினாள். மதுரையின் மண் அவள் கண்களில்பட்டது. சற்றுநேரம் மண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தவள், காலடியை மதுரையில் வைத்தாள்.

கூட்டத்தின் ஆரவாரமும் இசை முழக்கமும் வாழ்த்துச்சொல்லும் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இளமருதன் நின்ற இடத்திலிருந்து நெரிபடும் கூட்டத்துக்குள் தலைதூக்கிப் பார்த்தான். தூவப்படும் மலர்களுக்கு இடையில் கண்கொள்ளாப் பேரழகு நகர்ந்துகொண்டிருந்தது. இளமஞ்சள் வெயிலில் கண நேரத்தில் மறைந்த அவளது வடிவு கண்டு அவனை அறியாமலேயே, “உலகின் பேரழகி” என்று வாய் முணுமுணுத்தது.

முன்னால் நின்றிருந்த வணிகனின் காதில் அந்த முணுமுணுப்பு கேட்டது. அவன் சற்றே திரும்பிச் சொன்னான், “அந்த அழகையும் விஞ்சும் பேரறிவுகொண்டவள் பொற்சுவை.”

இளமருதனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் வணிகனைப் பார்த்தான். அவன் மேலும் சொன்னான், “பெரும்புலவர் கபிலரிடம் கல்வி பயின்றவள் அல்லவா?”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


Sponsored content

PostSponsored content



Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக