புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
4 Posts - 4%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
1 Post - 1%
Rutu
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
1 Post - 1%
Pradepa
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
18 Posts - 2%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
5 Posts - 0%
Rutu
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 14 of 19 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Sep 15, 2018 9:21 pm

வணக்கம் அண்ணா ... :வணக்கம்: :வணக்கம்:  மாற்றங்கள் அருமை ... சூப்பருங்க சூப்பருங்க

சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1277798

வணக்கம் ரமேஷ்!

ஈகரையில் நாவல்களுக்கென தனிப்பிரிவாக கதைகள் பகுதியின் கீழ் “நாவல்கள்” என்று உருவாக்கப்பட்டுள்ளது, அங்கு இந்தத் திரியை மாற்றுகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1277799

நன்றி நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிரபாகரன் ஒற்றன்
பிரபாகரன் ஒற்றன்
பண்பாளர்

பதிவுகள் : 52
இணைந்தது : 31/08/2018

Postபிரபாகரன் ஒற்றன் Thu Sep 20, 2018 5:01 pm

வீரயுக நாயகன் வேள்பாரி - 101
நாகக்கரட்டி லிருந்து முன்னி ரவுக்குள் யானை கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. இரலிமேட்டின் பக்கம் யானைகள் ஏறவே யில்லை. ஏனெனில், அந்தப் பக்கம் இருந்துதான் காட்டெருமைகள் இறங்கி வந்தன. விரட்டப்பட்ட யானைகள், காரமலையின் வலதுபுறமும் இடது புறமுமாகச் சிதறி ஓடின. பள்ளத்தாக்கின் இறுதிப் பகுதியில் நின்றிருந்த யானைகளில் ஒரு பகுதி மட்டும் மீண்டும் வேந்தர் படையின் பாசறைக்குத் திரும்பியுள்ளது. ஆனால், தளபதி உச்சங்காரி என்ன ஆனான் எனத் தெரியவில்லை.
நாகக்கரட்டெங்கும் பறம்புவீரர்களின் உணர்ச்சிப் பேரொலி இடைவிடாது கேட்டது. போர் முடிவுற்றவுடன் அங்கு இருக்கும் குடிலில் வந்து ஆயுதங்களை வைத்துவிட்டு உணவு அருந்திய பிறகு இரலிமேட்டில் இருக்கும் பாட்டாப்பிறைக்குப் போவார் தேக்கன். ஆனால், இன்று குடிலுக்கு வந்தவர் ஆயுதங்களை வைத்துவிட்டு சற்றே தலை சாய்த்துப் படுத்தார். வீரன் ஒருவன் கலயத்தில் கொண்டுவந்த கஞ்சியையும் குடிக்கவில்லை. ``சிறிது பொழுதாகட்டும். இங்கு வைத்துவிட்டுப் போ” என்று சொல்லிவிட்டார்.
 
இருள் கவியத் தொடங்கி நெடுநேரம் ஆன பிறகு, தேக்கனைத் தேடி முடியன் வந்தான். பறம்பு ஆசானுக்கென்று அமைக்கப்பட்டிருந்த தனிக் கூடாரத்தில் அவர் படுத்திருந்தார். முடியன் வந்த பிறகுதான் எழுந்து அமர்ந்தார். முடியனின் பார்வை கலயத்தை நோக்கிப் போனபோதுதான் கஞ்சியை எடுத்துக் குடிக்கத் தொடங்கினார்.
 
தேக்கனின் உடல்நிலை என்ன பாடுபடுகிறது என்பதை முடியனால் உணர முடிந்தது. ஆனாலும் அவர் போர்க்களத்தில் நிற்பது எவ்வளவு முக்கியம் என்பதை இன்றைய நாள் உணர்த்தியது. தேக்கன் சொன்ன வழிமுறைப்படி உத்தியை வகுத்திராவிட்டால், பறம்புக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு அளவிடற்கரியதாக இருந்திருக்கும். ஆனால், அது நிகழாமல் தடுக்கப்பட்டது. அப்படியிருந்தும் பறம்புவீரர்கள் அதிக இழப்பைக் கண்ட நாள் இதுதான். நண்பகல் பொழுதில் வேந்தர்படை மிகுந்த ஆவேசத்தோடு தாக்கி முன்னேறியபோது பறம்புப்படை தற்காப்புப் போரை நடத்தவேண்டிய நிலை இருந்தது. அந்நிலையில் பறம்புப்படைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது பற்றி ஆசானிடம் பேச இரலிமேட்டில் இருக்கும் பாட்டாப்பிறை நோக்கிச் சென்றான் முடியன். ஆனால், தேக்கன் ஓய்வெடுப்பதற்காக இன்று தனது குடிலிலேயே இருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் பாட்டாப்பிறைக்குச் செல்லாமல் பாதியிலேயே திரும்பி இங்கு வந்து சேர்ந்தான்.
 
``இதுவரை நடந்த நான்கு நாள் போரிலும் வேந்தர்படையின் எண்ணிக்கையை சரிபாதிக்குமேல் குறைத்துள்ளோம். ஆனால், நமது படையின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதே நிலையில் இந்தப் போரை நீட்டிக்க முடியாது. வேறு திட்டங்களுக்கு நாம் சென்றாக வேண்டும்” என்றான்.
 
``எனது சிந்தனையும் அதை நோக்கித்தான் இருக்கிறது” என்றார் தேக்கன்.
 
அப்போது இரவாதன் உள்ளே நுழைந்தான். இருவரையும் தேடி பாட்டாப்பிறைக்குப் போனவன் அங்கு இல்லை என்பது அறிந்து இங்கு வந்துசேர்ந்தான். `முதலில், அவன் வந்துள்ள செய்தியைக் கேட்டறிந்த பிறகு நாம் பேசிக்கொள்ளலாம்’ என்று இருவரும் பார்வையிலே முடிவுசெய்தனர்.
 
பறம்புப்படை பெருவெற்றியை ஈட்டிய நாளில் அதற்குரிய முழு மகிழ்வோடு இருந்தது இரவாதனின் முகம். தான் வந்துள்ளதன் காரணத்தை அவன் சொன்னான், ``நான் இன்று மூஞ்சலை முழுமையாகப் பார்த்தேன்.”
 
முடியனும் தேக்கனும் இரவாதனைக் கூர்ந்து பார்க்கத் தொடங்கினர். நேற்றைய போரில் முடியனும் இரவாதனும் மூஞ்சலை நெருங்கினர். அப்போதுதான் முரசின் ஓசை கேட்டு, போர் முடிவுற்றது. ஆனால், இன்றைக்கு வேந்தர்களின் படை மொத்தமும் கீழிறங்கி பறம்புப்படையைச் சூழ்ந்து முற்றுகைத் தாக்குதலை நடத்தியது. மிகச்சிறிய படைதான் மூஞ்சலைக் காத்து நின்றது. தேக்கனின் திட்டப்படி இரவாதனின் குதிரைப்படை,  முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறி மூஞ்சலை அடைந்தது. அங்கு எண்ணிக்கையில் குறைந்த கவசவீரர்களும் அகப்படை வீரர்களும் காத்து நின்றனர். சின்னஞ்சிறுபடை காத்து நின்றதால் மூஞ்சலை முழு வட்டமடித்துத் தாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டான். ஆனால், இரவாதனின் குதிரைப் படையும் சிறியதாக இருந்ததால் அவனால் உள்நுழைய முடியவில்லை. ஆனால், மூஞ்சலின் தன்மை முழுமையும் அவனால் கவனித்தறிய முடிந்தது.
முடியனிடமும் தேக்கனிடமும் விளக்கினான், ``நேற்று மூஞ்சலைச் சுற்றிப் பல்லாயிரம் வீரர்களைக்கொண்ட பெரும்படை இருந்தது. நாம் அதன் அருகில் சென்றாலும் அதன் தன்மையை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. ஆனால், இன்று அப்படியல்ல; மிகக் குறைந்த வீரர்களே இருந்தனர். அவர்கள் மூஞ்சலை அமைத்துள்ள விதத்தையும் அதைப் பாதுகாக்கச் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டையும் முழுமையாக என்னால் பார்க்க முடிந்தது” என்றான்.
 
மருந்து தேய்க்கப்பட்டு, காய்ந்த வாழைமட்டை ஒன்றை அருகில் இருந்த விளக்கின் சுடரில் தேக்கன் வைத்தான். நெருப்பு சட்டெனப் பற்றியது. போதுமான அளவுக்கு அதை எரியவிட்டு விலா எலும்போடு எரிமட்டையை அமுக்கித் தேய்த்தார். கணநேரத்தில் கருகித் திரிந்தது. தேய்த்த விரல்களின் வழியே புகை வெளியேறிய படியே இருக்க, சதையின் மேல் போதுமான சூட்டோடு மருந்து அப்பி உள்ளிறங்கியது. தேக்கனின் இந்தச் செயலைப் பார்த்தபடியே இரவாதன் தொடர்ந்தான். ``மூஞ்சலை உடைக்க நமக்குப் புதிய திட்டம் வேண்டும்.”
 
``என்ன செய்யலாம்?”
 
சிறிதும் இடைவெளியின்றி இரவாதன் சொன்னான், ``அரிமான்களை உள்ளிறக்க வேண்டும்.”
 
அதிர்ந்தான் முடியன்.
 
சற்றே சிரித்தான் தேக்கன். ``இளவயது என்பதால், சட்டெனக் கேட்டுவிட்டாய். ஆனால், அதற்கு வாய்ப்பேதும் இல்லை. வேறு என்ன செய்யலாம் என்று சொல்.”
 
``இடர்மிகுந்த நேரத்தில்தானே அவர்களைக் களம் இறக்கலாம் என்று சொல்கிறேன்” என்று இரவாதன் தொடர்ந்தபோது முடியன் சொன்னான், ``தேக்கனின் சொல்லைப் பணிந்து கேள்.”
 
இப்போது தேக்கன், முடியனைப் பார்த்தான். தேக்கன் பயன்படுத்திய ஈட்டி, ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. கண்களை விலக்கித் தாழ்த்திக்கொள்வதன் மூலம் எவ்வளவு உணர்வுகளைக் கடத்திவிட முடிகிறது?
 
முடியனின் சொல்லை ஏற்றுக்கொண்ட இரவாதன் அடுத்து கேட்டான், ``சரி, திரையர்களையாவது உள்ளிறக்கலாமா?”
 
``ஏன்... நம்மால் முடியாது என்ற முடிவுக்கே வந்துவிட்டாயா?” எனக் கேட்டான் முடியன்.
 
``மூஞ்சலைத் தகர்த்தெறியவும் அழித் தொழிக்கவும் நம்மால் முடியும். ஆனால், உள்ளே நுழைந்து நீலனை மீட்டு வெளிவருவதற்கு, கூடுதல் ஆற்றலும் தெளிவான திட்டங்களும் பலவிதமான தாக்குதல் முறைகளை ஒருங்கிணைத்தலும் வேண்டும்.”
 
``ஏன்?”
 
``ஏனென்றால், மூஞ்சல் அமைக்கப்பட்டுள்ள விதம் அப்படி. மணற்பரப்பில் பள்ளம் பறித்தால் மறுகணமே சுற்றியுள்ள மணலெல்லாம் சரிந்து மூடிக்கொள்வதைப்போல் அதை வடிவமைத் துள்ளனர். ஆயுதங்கள் ஒன்றோடு ஒன்று செருகப் பட்டு வெளிப்புறச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்பகுதியில் கவசவீரர்களின் அணிவகுப்பு நிற்கிறது. அவர்களுக்குப் பின் மீண்டும் ஆயுதங்களின் சுவர், பிறகு வீரர்கள் என்று மூன்று அடுக்கு இருக்கின்றன. இந்தச் சுவரை எந்த இடத்தில் தகர்த்தாலும் மறுகணமே அருகில் பின்னப்பட்டு இறுகியிருக்கும் ஆயுதச்சுவர் விரிந்துகொடுத்து, தகர்க்கப்பட்ட இடத்தை மறைத்து நிரப்பிவிடும். அதேபோல வீரர்களை வீழ்த்தினாலும் அருகில் கோத்து நிற்கும் வீரர்கள் அந்த இடைவெளியை உடனே நிரப்புவர்” என்று சொன்னவன் முடியனைப் பார்த்துக் கேட்டான், ``நேற்றைய போர் நாம் மூஞ்சலை நெருங்கியவுடன் முடிவுற்றது. நான் அந்த இடம் நீண்டநேரம் நின்றேனே கவனித்தீர்களா?”
 
``ஆமாம். இவ்வளவு அருகில் வந்தும் பயனில்லாமற்போய்விட்டதே என்ற தவிப்பில் நின்றிருந்தாய்.”
 
``ஆமாம். எல்லோரும் அப்படி நினைக்க வேண்டும் என்பதால்தான் நீண்ட நேரம் நின்றிருந்தேன். ஆனால், எனது நோக்கம் வேறொன்றாக இருந்தது. போரிட்டுக் கொண்டிருந்தபோது மூஞ்சலைச் சுற்றிப் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் இருந்தனர். தேர்களும் குதிரைகளும் இங்கும் அங்குமாக நின்றிருந்தன. ஆனால், போர் முடிவுற்ற முரசின் ஓசை கேட்டதும் வீரர்கள் தங்களின் பாசறைக்குத் திரும்பத் தொடங்கினர். அப்போது செய்வதறியாத தன்மையில் சற்றுக் கூடுதல் நேரம் அங்கு நின்றேன். காரணம், மூஞ்சலுக்குள் எத்தனை கூடாரங்கள், எந்தத் தன்மையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகப் பார்க்க வேண்டும் என்பதால்தான் அப்படிச் செய்தேன். மூஞ்சலைத் தெளிவாகவும் பார்த்தேன். பன்னிரண்டு கூடாரங்கள் இருந்தன” என்றான்.
 
தெரிந்த எண்ணிக்கையைத்தான் அவன் சொல்கிறான் என்பதால், முடியனின் பார்வையில் வியப்பேதுமில்லை. தேக்கனோ மருந்து தேய்க்கப்பட்ட அடுத்த வாழைமட்டையை எடுத்து, சுடரில் காட்டிப் பற்றவைத்தான். அப்போது இரவாதன் சொன்னான், ``இன்றைக்குப் பார்த்தபோது பதினைந்து கூடாரங்கள் இருந்தன.”
 
சுடரை நோக்கியிருந்த தேக்கனின் பார்வை, இரவாதனை நோக்கித் திரும்பியது. அவனது கண்ணுள் சுடரின் முனை சுழன்று கொண்டிருந்தது. முடியனோ சற்றே வியப்போடு அவன் சொல்லவருவதைக் கவனித்தான்.
 
இரவாதன் சொன்னான், ``அவை உண்மையான கூடாரங்கள் அல்ல. நூற்றுக்கணக்கான படை வீரர்கள் உள்மறைந்திருக்கும் பொய்க்கூடாரங்கள். அந்த வகைக் கூடாரங்கள் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன.”
பாதி எரிந்த மட்டையை விலாவெலும்பில் தேய்த்தபடி தேக்கன் கேட்டான், ``அரிமான்களும் திரையர்களும் இல்லாமல் மூஞ்சலை உடைத்து நீலனை வெளிக்கொண்டுவர, நீ சொல்லும் உத்தி என்ன?”
 
இரவாதனின் கண்கள் அகல விரிந்தன. பறம்பு ஆசான், இந்தப் போரின் இலக்கை அடைவதற்கான உத்தியைப் பற்றி தன்னிடம் ஆலோசனை கேட்கிறார் என்றதும் உடலெங்கும் உற்சாகம் பீறிட்டது. நீண்ட தன் இரு கைகளையும் விரித்தபடி சொல்லத் தொடங்கினான். ``மூஞ்சலை ஒரு குழு ஓர் இடத்தில் உடைத்து முன்னேற முடியாது. ஒரே நேரத்தில் மூன்று திசைகளிலும் உடைத்து உள்நுழைய வேண்டும். அப்போதுதான் அவர்களின் சங்கிலித்தொடர் காப்புமுறையைச் செயலிழக்கச் செய்ய முடியும். அதே நேரத்தில் பொய்க்கூடாரங்களை நோக்கிக் குறிவைத்துத் தாக்க வேண்டும்” என்று சொன்னவன் அம்பு ஒன்றை எடுத்துத் தரையில் கீறி, மூஞ்சலின் வரைபடத்தை உருவாக்கினான்.
 
``மூன்று திசைகளிலிருந்தும் மூஞ்சலை ஒரே நேரத்தில் தாக்கி முன்னேறுவோம். முடியன் இடதுபுறமும் உதிரன் வலதுபுறமும் மூஞ்சலின் தடுப்பரணை உடைக்கட்டும். நான் நேர்கொண்டு தாக்கி உள்நுழைகிறேன். மற்ற இருவரும் மூஞ்சலை உடைத்த இடத்திலிருந்து உள்நுழையாமல் ஆயுதங்களாலும் வீரர்களாலும் காக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வட்டவடிவ வெளிப்புறச் சுவரை முற்றிலும் அழிக்கும் வேலையைச் செய்யவேண்டும். நான் எனது குதிரைப்படையோடு உள்நுழைகிறேன். உள்ளே நுழைந்ததும் எனது படை மூன்றாகப் பிரியும். பிடறிமான் தலைமையிலான பிரிவு, பொய்க்கூடாரங்களில் உள்ளவர்களை மட்டும் தாக்கும். கரிணி தலைமையிலான பிரிவு, உள்ளுக்குள் காத்து நிற்கும் அகப்படை வீரர்களை மட்டும் தாக்கும். எனது தலைமையிலான பிரிவு, நீலனின் கூடாரத்தை நோக்கி முன்னேறி அவனை மீட்கும். இந்தத் தாக்குதலின்போது எதிரிகளின் முழுக் கவனமும் மூஞ்சலை நோக்கிக் குவியாமலிருக்க மூஞ்சலை விட்டு மிகத்தள்ளி, களத்தின் மையப்பகுதியில் வலிமைமிகுந்த தாக்குதலைத் தேக்கனும் ஈங்கையனும் நடத்தவேண்டும்” என்றான். 
  
``ஓரளவுக்கு சரியான திட்டம்தான். இதில் இருக்கும் பிழை என்ன? இதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள  சிக்கல் என்ன?” என்று கேட்டான் தேக்கன்.
 
``பிழை ஏதும் இருப்பதாக நினைக்கவில்லை. சிக்கல் என்பது பிடறிமானும் கரிணியும் இந்தத் திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். கூடாரத்தைச் சுற்றிக் காத்து நிற்கும் கவசவீரர்களைத் தாக்கவும் பொய்க்கூடாரங்களில் குவிந்திருக்கும் வீரர்களைத் தாக்கவும் இரு வேறு தாக்குதல் உத்திகளைப் பின்பற்ற வேண்டும். அதற்கான தெளிவான பயிற்சி வேண்டும்” என்றான் இரவாதன்.
 
முடியன் சொன்னான், ``உதிரன் விற்படை மூஞ்சலை விட்டு மிகத்தள்ளி நின்றால்தான் எதிரிகளின் பெரும்படை மூஞ்சலை விட்டு விலகி நிற்கும். அவர்களின் கவனமும் இருகூறாகப் பிரிந்திருக்கும். எனவே, உதிரனை வெளியில்தான் வைத்திருக்க வேண்டும்” என்றான்.
 
``சரி. அப்படியென்றால் ஈங்கையனின் தலைமையிலான படையை மூஞ்சலில் வலதுபுறத் தாக்குதலுக்குப் பயன்படுத்தலாமா?” எனக் கேட்டான் இரவாதன்.
 
``போரில் யாரை, எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதுதான் மிக முக்கியம்” என்று சொல்லியபடி அடுத்த வாழைமட்டையை எடுத்தான் தேக்கன்.
 
முடியனோ தேக்கன் சொல்லப்போவதைக் கேட்காமல் தரையில் வரையப்பட்ட வரைபடத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். இரவாதனோ தேக்கன் ஏன் இப்படிச் சொல்கிறான் என்ற வியப்போடு அவனைப் பார்த்தான். தேக்கன் சொன்னான், ``இத்தனை நாள் போரிலும் ஈங்கையன் சொல்லிக்கொள்ளும்படியான எந்தத் தாக்குதலையும் நடத்தி முன்னேறவில்லை. படைக்குத் தலைமையேற்று முன்னேறுவதற்குரிய பயிற்சியும் ஆற்றலும் அவனுக்கு இல்லை என நினைக்கிறேன்.”
 
சற்றே வியப்போடு இரவாதன் கேட்டான், ``சோழப்படையை வீறுகொண்டு தாக்கி அழித்தவன் என்று அவனையும் அவனுடன் உள்ள வீரர்களையும் பற்றி நீலனும் உதிரனும் சொன்னார்களே!”
 
``இருக்கலாம். அது தாக்குதல் போர் என்பதால், அவர்கள் பெரும்வீரத்தை வெளிப்படுத்தி எதிரியை ஓடச்செய்திருக்கலாம். ஆனால், படைப்பிரிவினூடாக முன்னேறும் போர் என்பது அவர்களுக்கு வசப்படவில்லை என நினைக்கிறேன்” என்றான் தேக்கன்.
வரைபடத்திலிருந்து கண்களை அகற்றாமலேயே முடியன் சொன்னான், ``தேக்கனும் ஈங்கையனும் பின்களத்தில் நிற்கட்டும். உதிரன் தட்டியங்காட்டின் இடதுபுறமிருந்து எதிரியை நோக்கி முன்னேறட்டும். நாளைய போரில் தேர்ப்படைத் தளபதி கூழையனுக்குப் பதில் விண்டன் களமிறங்க இருக்கிறான். நீ சொன்ன திட்டப்படியே அவனும் நானும் நீயும் மூஞ்சலுக்குள் நுழைவோம்” என்றான்.
 
இரவாதனின் முகத்தில் சுடரின் ஒளி பரவி நின்றது. விண்டன், அவனது வயதொத்த இளம்வீரன். பாரி தனிப் பயணம் மேற்கொள்ளும் போது தேக்கனால் மறை பாதுகாப்புக்காக அனுப்பப்படுபவர்களில் ஒருவன். அவனும் நானும் தந்தையோடு இணைந்து போரிட்டால் மூஞ்சலை உடைத்து நீலனை மீட்கலாம்.
 
இந்தமுறை எடுத்த வாழைமட்டையைச் சுடரில் பற்றவைக்கவில்லை; கலயத்தில் இருந்த மூலிகைச்சாற்றில் நனைத்து இதுவரை சுட்டுத்தீய்த்த பகுதியின் மீது ஒட்டவைத்தான். ``நாளை நாம் தாக்குதல் போரை நடத்த வேண்டாம். உதிரனின் விற்படையும் குதிரைப்படையும் இன்றைய போரில் பேராற்றலை வெளிப்படுத்தி யிருக்கின்றன. அவர்களுக்கு சற்று இளைப்பாறுதல் தேவை. அப்போதுதான் நாளை மறுநாள் மூஞ்சலின் மீதான தாக்குதலை முழு வலிமையோடு நடத்த முடியும்” என்றான்.
 
சரியென ஏற்றுக்கொண்ட இரவாதன், ``ஆமாம். பிடறிமான், கரிணி ஆகிய இருவர் தலைமையிலான படைக்கும் தனித்த பயிற்சிகள் தேவை. இன்று மிகவும் களைத்துப்போய் இருப்பார்கள். நாளை இரவு அந்தப் பயிற்சியை முழுமையாக எடுத்துக்கொண்டு நாளை மறுநாள் தாக்குதலைத் தொடுக்கலாம்” என்றான் இரவாதன்.
 
ஈரமட்டையை விலாவெலும்பின் மேல் போர்த்தியபடி மீண்டும் கட்டிலில் சாய்ந்தான் தேக்கன். இரவாதன் வெளியேறிய பிறகு முடியனும் தேக்கனும் பேசிக்கொள்ளத் தேவையேதுமில்லை. இரவாதனின் பேச்சினூடே பேசவேண்டிய எல்லாம் பேசப்பட்டுவிட்டன.
 
பொழுது விடிந்தது. தட்டியங்காடெங்கும் சிதறிக்கிடக்கும் பிணங்களின் மீது கதிரவனின் ஒளி படர்ந்தது. இரவெல்லாம் முயன்றும் கொல்லப்பட்டுக் கிடக்கும் தன் வீரர்களின் உடல்களை வேந்தர்படையால் முழுமையாக அகற்ற முடியவில்லை. நேற்று மாலையிலிருந்து குதிரைகளும் மாடுகள் பூட்டிய வண்டிகளும் பிணங்களை எடுத்துச் சென்றபடியே இருந்தன. ஆனாலும் முடிந்தபாடில்லை. முற்றுகைப்போர் என்பதால், பறம்புப்படையினர் அணிவகுக்கும் பகுதிக்குப் பின்புறமும் எண்ணற்ற வேந்தர் படைவீரர்கள் நின்று போரிட்டனர். ஏறக்குறைய அந்தப் படைப்பிரிவினர் முழுக்க அழிக்கப் பட்டனர். எனவே, பறம்புப்பக்கம் எண்ணி லடங்காத வேந்தர்படை வீரர்களின் உடல்கள் கிடந்தன.
போர்க்களப் பணியாளர்கள், இரவெல்லாம் பந்தங்களின் வெளிச்சத்தில் எண்ணிலடங்கா உடல்களை அப்புறப்படுத்தினர். ஆனால், பொழுது விடிந்த பிறகுதான் தெரிந்தது இன்னும் நெடுந்தொலைவுக்கு வீரர்களின் உடல்கள் கிடக்கின்றன என்பது. அதுவும் எதிரிப்படையினர் நிற்கும் பகுதியில் தன் வீரர்களின் உடல்கள் கிடப்பது அவமானமாகக் கருதப்படும். போர் தொடங்கிவிட்டால் அந்த உடல்கள் எதிரிகளின் கால்களிலோ, அவர்களுடைய குதிரைகளின் கால்களிலோ, தேர்ச்சக்கரங்களிலோ நசுங்கிச் சிதைவது கொடிதிலும் கொடிது. எனவே,  அவற்றை அப்புறப்படுத்த, பணியாளர்கள் விரைந்து செயல்பட்டனர்.
 
மாடுகள் பூட்டிய வண்டி களிலும் குதிரை பூட்டிய வண்டிகளிலும் அப்புறப் படுத்தியவர்கள், இனி அவ்வாறு செய்து முடிக்க பொழுதில்லை என அறிந்துகொண்டனர். மாளிகையின் தரையில் இருக்கும் பெருவிரிப்புப்போல மரப் பலகைகளைக் கொண்டுவந்து ஒன்றோடொன்று இணைத்துப் பூட்டி பெருஞ்சட்டகத்தை உருவாக்கினர். இறந்துகிடக்கும் வீரர்களின் உடல்களை இழுத்துவந்து சட்டகத்தின் மீது போட்டனர். ஐந்து வண்டிகளில் கொண்டுசெல்லும் பிணங்களை ஒரு சட்டகத்தின் மேலே கிடத்தி இழுத்துச்செல்லலாம்.
 
ஆனாலும் வேலைகளை வேகப்படுத்துவது எளிதன்று. ஈட்டி பாய்ந்து கிடந்த வீரனின் உடலிலிருந்து ஈட்டியைப் பிடிங்கி எறிந்த பிறகே அந்த உடலைத் தூக்கி மரச்சட்டத்தின் மீது போட முடியும். இல்லையெனில், அடுத்த உடலைத் தூக்கிப்போட அது தடையாக இருக்கும். ஒவ்வோர் உடலில் இருந்தும் ஈட்டியை இழுத்துப் பிடுங்கவேண்டியிருந்தது. எல்லா உடல்களிலும் எண்ணற்ற அம்புகள் தைத்துக்கிடந்ததால் அவற்றை அப்புறப்படுத்துவது எளிய செயலாக இல்லை. அம்பு முனையின் இரு காதுப் பகுதிகளும் மிகக்கூர்மையானவை. தசைகளையும் நரம்புகளையும் இழுத்துக்கொண்டுதான் வெளியில் வரும். மருத்துவனால்கூட அதை எளிதில் வெளியே எடுக்க முடியாது. ஆனால், போர்ப் பணியாளர்களோ கைகளுக்குச் சிக்கியவற்றையெல்லாம் பிடுங்கி எறிந்து உடல்களைத் தூக்கி மரச்சட்டகங்களில் போட்டனர். வேலை வேகவேகமாக நடந்தது. இரண்டு ஆள் உயரத்துக்கு உடல்களைக் குவித்தனர். மரச்சட்டகங்களை இழுத்துச் செல்ல யானைகள் வந்தன.
 
உடலின் இரு பக்கங்களிலும் கட்டப்பட்ட பெருவடங்களால் மரச்சட்டங்களை யானைகள் இழுக்கத் தொடங்கின. குன்றெனக் குவிக்கப்பட்ட பிணக்குவியல்கள் தட்டியங்காட்டை விட்டு மெள்ள நகர்ந்தன. தனது முதுகுப் பகுதியில் எண்ணிலடங்காத மனித உடல்களைச் சுமந்தபடி நத்தைபோல ஊர்ந்தது மரச்சட்டகம். இழுபடும் மரச்சட்டகங்களிலிருந்து வழுவிய பிணங்களை மீண்டும் இழுத்துப்போட்டு நகர்ந்தனர்.
 
போர்ப்பணியாளர்கள்தாம், தாக்குதலின் தன்மையைக் கணிப்பவர்கள்; ஒவ்வொரு நாளும் தாக்குண்டு கிடக்கும் ஒவ்வொரு வீரனையும் வைத்து தாக்குவோரின் திறனை மதிப்பிடுபவர்கள். இன்றைய நாளில் வேந்தர்படையின் எண்ணிலடங்காத கவச அணிவீரர்களின் கழுத்துப் பகுதியில் அம்பு பாய்ந்து இறந்துகிடந்தனர். கவச அணிவீரர்கள் ஓரிருவர் கழுத்துப் பகுதியில் அம்பு பாய்ந்து இறக்கலாம். ஆனால், இத்தனை பேர் எப்படி குறிபார்த்து வீழ்த்தப்பட்டார்கள்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. அதுவும் கவச அணிவீரர்களின் உடல்களைத் தூக்கி மரச்சட்டகத்தில் போடுவது மிகக்கடினமான ஒன்று. சிலநேரத்தில் மூன்று பேர் சேர்ந்துகூட ஒருவரைத் தூக்கிப்போட முடியாது. ஆனாலும் அந்தப் பணியை வேகமாகச் செய்ய முயன்றனர்.
 
பிணங்களை இழுக்கும் யானையும் அதன் பாகனும் யட்சினியின் வடிவாகவே பார்க்கப்படுவர். போர் தொடங்கும்போது அழிவின் தேவதை யட்சினிக்காக பவளவந்திகையைப் பலியிட்டனர். அதேபோல போர் வெற்றியுடன் முடிந்தால் போர்க்களத்தில் பிணங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட யானைகளையும் அவற்றின் பாகன்களையும் யட்சினிக்குப் பலியிட்டுக் குளிரூட்டுவர்.
 
வழக்கம்போல் நாழிகை பரண் நோக்கித் தேரிலே வந்தார் திசைவேழர். ஆனால், தேரை ஓட்டும் வளவனால் குறிப்பிட்ட தொலைவைக் கடந்து தட்டியங்காட்டுக்குள் தேரைச் செலுத்த முடியவில்லை. வீரர்களின் உடல்கள் எங்கும் கிடந்தன. உயிர்த்துடிப்பு முடிவுறாமல் தவித்து மேலெழும் குரல் ஆங்காங்கே கேட்டது. உடல்களைத் தேர்ச்சக்கரங்களால் ஏற்றிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்த வளவனால், ஒருகட்டத்துக்குப் பிறகு தேரைச் செலுத்த முடியவில்லை. கடிவாளத்தை இழுத்துக் குதிரையை நிறுத்தினான்.
 
தேரை விட்டுக் கீழிறங்கினார் திசைவேழர். மரணத்தின் ஆட்சி நடக்கிற நிலத்தை, கண்கொண்டு பார்க்கவும் கால்கொண்டு கடக்கவும் முடியாமல் அப்படியே நின்றார். என்ன செய்வதென்று தெரியவில்லை. நீண்டுவிழுந்த அவரது நிழல், பொழுதாவதை உணர்த்தியது. வேறு வழியேயின்றி பரண் நோக்கி நடக்கத் தொடங்கினார்.
 
மூஞ்சல் எங்கும் போர் தொடங்கப்போகும் நேரத்துக்குரிய பரபரப்புடன் இருந்தது. உதியஞ்சேரல் மட்டும் போருக்கான கவச உடை அணிந்து தனது கூடாரத்தை விட்டு வெளியேறினான். மற்ற இரு பேரரசர்களும் இன்னும் கூடாரம் விட்டு வெளிவரவில்லை. மெய்க்காப்பாளர்களும் அகப் படையினரும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
 
குலசேகரபாண்டியன் கூடாரத்தை விட்டு வெளியேறும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது பொதியவெற்பன் அவரைக் காண வந்தான். நேற்று இரவு நடந்த உரையாடல், அவனுக்குப் பெருங்குழப்பத்தையும் கோபத்தையும் உருவாக்கியிருந்தது. ``மையூர்கிழாருக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு துணிச்சல்? மூவேந்தர்களின் தலைமைத் தளபதியை பாண்டியப் பேரரசர் இருக்கும் அவையில் அவரின் முன் தாக்குதலுக்குத் தகுதியற்ற தளபதி என்று எப்படி அவனால் சொல்ல முடிந்தது?” கொந்தளிக்கும் கேள்விகளை குலசேகரபாண்டியனிடம் முன்வைத்தான் பொதியவெற்பன்.
 
`இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியவில்லையா?’ என்றதோர் ஏளனமான பார்வையோடு குலசேகரபாண்டியன் சொன்னான், ``நேற்று நமது படை பேரழிவைக் கண்டது. முற்றுகை தகர்க்கப்பட்டு முற்றுகையிட்டவர்கள் பெருந்தாக்குதலைக் காண்பது போர்க்களத்தில் தோல்விக்கு இணையான ஒன்று. எந்த ஒரு மன்னனும் அதன் பிறகு போரிடும் முடிவைத் தொடர விரும்ப மாட்டான். சேரனுக்கும் சோழனுக்கும் நம்மீதான நம்பிக்கை முற்றிலும் சிதையும்படியான நாள் நேற்று. அந்நிலையில் வழக்கம்போல் இரவில் மூவரின் சந்திப்பு அமைந்தால் பேச்சும் முடிவும் நமக்கு எதிரானதாகத் தான் இருக்கும். அதை மாற்ற வேண்டும் எனச் சிந்தித்தேன். மையூர்கிழாரை அழைத்து, `அவையில் மூவேந்தர்களின் அனைத்து தளபதிகளின் மீதும் கடுங்குற்றச்சாட்டை முன்வைத்துப் பேசு’ என்றேன்.”
 
பொதியவெற்பன் வழக்கம்போல் திகைப்புற்றான். குலசேகரபாண்டியன் தொடர்ந்தார், ``ஆனால், மையூர்கிழார் இந்த வாய்ப்பைத் தனக்கானதாக முழுமையாக மாற்றிக் கொண்டான். நானே எதிர்பார்க்காத அளவு இருந்தது அவனது சீற்றம்.”
 
பொதியவெற்பனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ``ஆனாலும் தலைமைத் தளபதியை அவன் அவ்வாறு சொல்லியிருக்கக் கூடாது” என்று பேச்சைத் தொடர்ந்தபோது குலசேகர பாண்டியன் குறுக்கிட்டுச் சொன்னார், ``அதுவல்ல இப்போது முக்கியம். மகிழ்வூட்டும் செய்தி ஒன்று அதிகாலை என்னை வந்தடைந்தது” என்றார்.
 
பொதியவெற்பன், வேந்தரின் முகத்தை உற்றுப்பார்த்தபடி அவர் அடுத்து உதிர்க்கப்போகும் சொல்லுக்காகக் காத்திருந்தான். குலசேகர பாண்டியன் சொன்னான், ``இன்று மாலை பொற்சுவை, பாரியைக் காண இரலிமேட்டுக்குச் செல்கிறாள். நம் வீரர்கள் அவள் அறியாதபடி உடன் செல்லவுள்ளனர். நாம் எதிர்பார்த்த நாள் இது.”
 
திசைவேழரின் கை உயர்ந்ததும் தட்டியங் காட்டின் ஐந்தாம் நாள் போருக்கான முரசின் ஓசை ஒலிக்கத் தொடங்கியது. ஆனால், தட்டியங்காடெங்கும் பிணங்களை அகற்றும் பணி முழுமையாக முடியவில்லை. பெருமரச் சட்டங்களை யானைகள் இழுத்தபடியே இருந்தன. பறம்புவீரர்கள் அணிவகுத்து நிற்பதற்கு முன்பும் பின்பும் இன்னும் உடல்கள் கிடந்தன. ``உடல்களை முழுமையாக அகற்றாமல் நாம் முன்னேறிச் செல்ல வேண்டாம்” என்று கூறினான் முடியன்.
 
வேந்தர்களின் படையோ வெகுதொலைவில் அணிவகுத்தபடி அப்படியே இருந்தது. பறம்புப்படை முன் நகராததால் அவர்களும் முன் நகரவில்லை. யட்சினி யானைகள், பிளிறலுடன் மரச்சட்டங்களை இழுத்துக்கொண்டிருந்தன.
 
கருங்கைவாணன் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பேரரசரின் உத்தரவுக்கேற்பச் செயல்படுவோம் எனக் காத்திருந்தான். பேரரசரோ கூடாரம் விட்டு காலம் தாழ்த்தித்தான் வெளியேறி வந்தார். கருங்கைவாணன், அவரின் பார்வையில் நின்றிருந்தான். அவனது முகம் இருண்டிருந்தது. அதைப் பார்த்தபடி தனது இறுக்கத்தைத் தளர்த்தாமலே பேரரசர் சொன்னார். ``தற்காத்து நில். எதிரிகள் முன்னேறிவந்தால் மட்டும் தாக்கு.”
முடியனும் அதே முடிவில்தான் இருந்தான். விற்படை வீரர்களுக்கு இன்று அதிக வேலை கொடுக்கக் கூடாது. அதேபோல குதிரைப் படையையும் இன்று கடினமான தாக்குதலுக்கு உட்படுத்தக் கூடாது. எனவே, காலாட்படை வீரர் களையும் தேர்ப்படை வீரர்களையும் முன்புறமாக அணிவகுக்கச் செய்தான். தேர்ப்படைத் தளபதியாக விண்டனுக்கு இன்றுதான் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவன் ஏறிச்சென்று தாக்கும் துடிப்போடு இருப்பான். எனவே, அவனிடம் தெளிவான கட்டளைகளைப் பிறப்பித்தான் முடியன்.
 
தட்டியங்காடெங்கும் பேரமைதி நிலவியது. `மரணத்தின் ஆட்சி கண்டு மனிதன் நிலைகுலைந்து நிற்கிறான்’ என்று திசைவேழருக்குத் தோன்றியது. போர் தொடங்குவதற்கான முரசின் ஓசையைக் கேட்ட பிறகும் இருபக்கப் படைகளும் பாய்ந்து முன் நகரவில்லை. மரணத்தின் பேயுருவுக்கு முன்பு அசைவற்று நிற்கும் காட்சி தெளிவாகத் தெரிந்தது. யட்சினி யானைகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெரும்சட்டகங்களை இழுத்துக்கொண்டிருந்தன. பொழுதாகிக் கொண்டிருந்தது. போர்க்களத்தின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லை வரை கண்களை ஓடவிட்டுத் துல்லியமாகப் பார்த்தார் திசைவேழர். வேறு எங்கிருந்தாவது தாக்கி முன்வருவதற்கான திட்டம் ஏதும் இருக்கிறதா எனக் கவனித்தார். அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
 
காலாட்படையின் சில அணிகள் முன் நகரத் தொடங்கின. பிற்பகலுக்குப் பிறகு அங்குமிங்குமாக சிறுசிறு மோதல்களைத் தேர்படையினர் நடத்தினர். ஆனாலும் இரு தரப்பும் மொத்தப் படையை முன் நகர்த்தவில்லை. இருபடை தலைமைத் தளபதிகளும் தெரிந்தே ஒரு விளையாட்டை விளையாடுகின்றனர். ஆனால், இறுதி நாழிகையில் பெருந்தாக்குதல் ஒன்று நடக்கும் எனக் கணித்தார் திசைவேழர்.
 
அந்தத் தாக்குதலின்போது நாம் கவனமாகப் பார்த்தறியவேண்டும். கடைசி நாழிகையைப் பயன்படுத்தி சதியை நிகழ்த்தலாம் என எண்ணினார். எந்தச் சூழலிலும் களத்தின் நடுவில் இருக்கும் இந்தப் பரணில் நிற்கக் கூடாது. படைகளின் போக்கிற்கேற்ப வேந்தர் தரப்பில் இருக்கும் பரண்களின் மீதோ அல்லது பறம்பின் தரப்பில் இருக்கும் பரண்களின் மீதோ ஏறி நின்று உற்றுக்கவனிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால், பிற்பகலிலும் போக்குக்காட்டும் போரைத் தான் இருதரப்பும் நடத்தின. அங்குகொன்றும் இங்கொன்றுமாக ஈட்டிகள் குறுக்கிட்டுப் பாய்ந்தன. அம்புகள் விடுக்கும் ஓசை மிக மெல்லியதாகக் காற்றில் ஏறிவந்தது. இரண்டொரு தேர்கள் அவ்வப்போது விரைந்து கடந்தன. சட்டென நினைவுவந்தவராக திசைவேழர் நாழிகைவட்டிலைக் குனிந்து பார்த்தார். அவரால் நம்பவே முடியாத ஒரு நாளாக இன்றைய நாள் முடிய இருந்தது. நீண்ட நிழல் மூன்றாம் கோட்டைத் தொட்டது. அவர் கைகளை உயர்த்தினார். முரசின் ஓசை எங்கும் மேலெழுந்தது. ஐந்தாம் நாள் போர் முடிவுற்றது.
 
இருதரப்புப் படைகளும் தங்களின் பாசறைக்குத் திரும்பின. கதிரவன், காரமலையின் பின்புறம் இறங்கத் தொடங்கினான். ஒளியின் கைகள் மறையத் தொடங்கின. சேரன், செங்கனச்சோழனின் கூடாரத்துக்குள் வந்தான். குலசேகரபாண்டியனின் கூடாரம் நோக்கி பொதியவெற்பன் விரைந்தான். அனைவரும் எதிர்பார்த்திருந்த இரவு வரத் தொடங்கியது.
 
- பறம்பின் குரல் ஒலிக்கும்...

பிரபாகரன் ஒற்றன்
பிரபாகரன் ஒற்றன்
பண்பாளர்

பதிவுகள் : 52
இணைந்தது : 31/08/2018

Postபிரபாகரன் ஒற்றன் Thu Sep 27, 2018 8:32 am

வீரயுக நாயகன் வேள்பாரி - 102

பொழுது இருளத் தொடங்கியது. மேட்டுக்கரை யிலிருந்து ஒரு பல்லக்கு புறப்பட்டது. வழிகாட்டியாக முன்னே சென்றான் காராளி. அவன் மனம் அளவுகடந்த பதற்றத்தில் இருந்தது. இன்றோ, நாளையோ பொற்சுவையை அழைத்துக்கொண்டு வருவதாகக் கபிலரிடம் சொல்லிவந்தான். வேந்தர்களின் யானைப்படை வீரர்கள், காடுகளுக்குள்ளிருந்து முற்றிலும் அகன்று விடவில்லை. அங்கொருவர் இங்கொரு வராகத் தட்டுப்படுகின்றனர். பறம்புப்படையினர் கண்ணில்பட்டால் கொன்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் பதுங்கித் திரிகிறார்கள். இன்று ஒரு பொழுது கடந்துவிட்டால் பதுங்கி இருக்கும் ஒருசிலரும் வெளியேறிவிடுவார்கள். எனவே, நாளை இரவு இரலிமேட்டுக்குப் போகலாம் என்று எவ்வளவோ சொல்லியும் பொற்சுவை கேட்கவில்லை. ``இன்றே போக வேண்டும்’’ என்று சொல்லிவிட்டார். எனவே, மிகுந்த பதற்றத்தோடு முன்னே சென்று கொண்டிருந்தான் காராளி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 K5pEFCRKSN2gfotzSjSi+1
அவன் இருக்கும் இடத்திலிருந்து இரலிமேட்டுக்குச் செல்ல, குறுக்காக நடந்தால் இரு பொழுதுகளில் போய்விடலாம். ஆனால், புதர்கள் நிறைந்த அந்தப் பாதையில் பல்லக்கைத் தூக்கிச்செல்வது கடினம். எனவே, சுற்றிச்செல்லும் ஒற்றையடிப்பாதை ஒன்றின் வழியே அழைத்துச் சென்றான். இரவு வேளை என்பதால் அவனது பதற்றம் அதிகமாக இருந்தது. அவன் இந்த மலைப்பகுதியை நன்கு அறிந்தவன். விலங்குகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், இளவரசி யாரின் பயணத்தை வேந்தர்படையினரோ, வெங்கல்நாட்டினரோ பார்த்துவிடக் கூடாது. அப்படி நேர்ந்தால் அஃது இளவரசியின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். எனவே, மிகுந்த எச்சரிக்கையோடு அழைத்துச்சென்றான்.

பல்லக்குக்குள் பொற்சுவையும் சுகமதியும் எதிரெதிராக உட்கார்ந்திருந்தனர். அது, பெருமெத்தையும் விரிசிறகும்கொண்ட பெரும்பல்லக்கன்று; ஒரு நார்க்கயிறும் இளம்பஞ்சு தூவியும்கொண்ட குறும்பல்லக்கு. ஒருவர் மட்டுமே பயணிப்பதற்கானது. ஆனால், அதில் இருவர் பயணித்தனர். ``நான் இறங்கி நடந்து வருகிறேன்” என்று சுகமதி எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள். பொற்சுவை கேட்கவில்லை. ``நீ பல்லக்கில்தான் வரவேண்டும்” என்று உள்ளே அமர வைத்துக்கொண்டாள். அண்ணகர்கள், பல்லக்கைத் தூக்கி நடந்தனர்.

``இந்தச் சிறிய இடத்தில் நீங்கள் தனியே அமர்ந்து வருவதுதான் வசதியாக இருக்கும். இப்போது பாருங்கள், கால் நீட்டக்கூட முடியாமல் குறுக்கி உட்கார்ந்திருக்கிறீர்கள். எனது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. நான் இறங்கி நடந்து வருகிறேன் இளவரசி” என்று சொல்லி, பல்லக்கை விட்டு இறங்க மீண்டும் அனுமதி கேட்டாள்.

``எனது வாழ்வின் மிக முக்கியமான இந்த நேரத்தில், நீ எனக்கு மிக அருகில் இருக்க வேண்டும் சுகமதி.’’

``எல்லா நேரங்களிலும் நான் உங்களுக்கு அருகில்தானே இருக்கிறேன் இளவரசி?”

இளஞ்சிரிப்போடு பொற்சுவை சொன்னாள், ``நீ என்னை விட்டகலாத நிழல். ஒளியின்போது நிழல் வெளியில் இருக்கும். இருளின்போது நிழல் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்துகொள்ளும். அதனால்தான் இந்த இருளில் என் அருகில் உன்னை உட்காரவைத்துக்கொண்டேன்.”

பொற்சுவையின் சொற்கள் அன்பால் மயக்கின. ஆனால், அன்பைப் பெறத் தகுதியானவர்கள்தாம் அதை உள்வாங்க வேண்டும். சுகமதியோ தனக்கு அந்தத் தகுதி இல்லை என்று எப்போதும் நம்புகிறவள். தான் பொற்சுவையின் பணிப்பெண். `நீரோ, பாலோ, தேனோ தன்மீது எது கொட்டினாலும் உள்ளிறங்க அனுமதிக்காத கல்போலத்தான் பணிப்பெண்ணின் மனம் இருக்க வேண்டும்’ என்று சிறு வயது முதல் சொல்லி வளர்க்கப்பட்டவள். எனவே, சுகமதியை அந்த வார்த்தைகள் ஒன்றும் செய்துவிடவில்லை. ஆனாலும் பொற்சுவையின் வார்த்தைகளை வேறு திசைக்கு மாற்ற விரும்பினாள் சுகமதி.

பல்லக்கில் சிறு கண்ணாடிக்குடுவையில் விளக்கொளி சிந்திக்கொண்டிருந்தது. பொற்சுவையின் முகத்தை உற்றுப்பார்த்தபடியே சொன்னாள், ``நீண்டகாலத்துக்குப் பிறகு உங்களின் முகம் பூத்து மிளிர்கிறது இளவரசி.”

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 4bFtTUYXTD2xZbDvU2k2+2


``அப்படியா..!” என்று மகிழ்வு பொங்கக் கேட்டவள், ``பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆசானையும் பார்த்தறியாத பாரியையும் காணப்போகிறேன் அல்லவா... எனது முகம் மலராமல் என்ன செய்யும்? நான் காற்றில் மிதந்துகொண்டிருக்கிறேன் சுகமதி. எனக்குள் கவிதைகள் ஊற்றெடுக்கின்றன. சக்கரவாகப்பறவை வந்திறங்கும் நாளன்று நாம் எப்படி மகிழ்ந்திருப்போமோ, அதைவிடப் பலமடங்கு மகிழ்வில் மனம் கூத்தாடுகிறது.”

``எனது மனமும் மகிழ்வில்தான் இருக்கிறது இளவரசி. அதேநேரம் உள்ளுக்குள்ளிருக்கும் அச்சம், நேரம் கூடக்கூடப் பெருகுகிறது.”

``ஏன்?”

``இந்தப் பயணத்தின் ரகசியம் வெளியில் தெரிந்துவிட்டால்..?”வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 Q384t4ppTiK5eHK2mFU2+s

``இந்தப் பயணத்தின் நோக்கம் நிறைவேறுகிறதா என்பதுதான் முக்கியம். மற்றதெல்லாம் பொருட்டல்ல.”

``நீங்கள் ஒரு முடிவெடுத்துவிட்டால் அந்த முடிவை மட்டும்தான் பொருட்படுத்துவீர்கள். ஆனால், நீங்கள் எடுக்கும் எந்த முடிவையும்விட நீங்கள்தான் எனக்கு முக்கியம்.”

சிரித்தாள் பொற்சுவை.

போர்க்களம் விட்டு அகன்று நாகக்கரட்டுக்கு வந்த பிறகு கூடாரங்களில் ஆயுதங்களை வைத்துவிட்டு வீரர்கள் உணவருந்தினர். இன்றைய போர், சிறுபாதிப்புகூட யாருக்கும் ஏற்படாத வகையில் முடிவுக்கு வந்தது. உணவருந்தி முடித்தவுடன் இரவாதனின் தலைமையிலான விற்படையின் பெரும்பிரிவு தென்திசை நோக்கிப் புறப்பட்டது.

இருளினூடே புரவிகள் வேகம்கொண்டன. சற்றே நீண்ட பயணம் அது. குளவன்திட்டின் பின்புறத்தை அடைய குதிரைகள் விரைந்தன. வீரர்கள் வருவதற்கு முன்பே அங்கு எண்ணற்ற தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு எல்லாவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. நேற்றிரவே இந்தத் திட்டம் பேசப்பட்டுவிட்டதால், அதற்கான ஏற்பாட்டை முன்கூட்டியே தொடங்கி விட்டான் இரவாதன். இந்தப் பணிக்காகப் பகல் முழுவதும் இந்த இடத்தில் பலர் வேலைபார்த்துள்ளனர். வீரர்கள் வந்தடையும்போது அவர்களின் பயிற்சிக்கான ஆயத்தம் முழுமை பெற்றிருந்தது.

இந்தத் தாக்குதலுக்கு, இரவாதனுடன் பிடறிமானும் கரிணியும் தலைமை யேற்கவிருந்தனர். மூஞ்சலுக்குள் மூன்று விதமான தாக்குதலை நடத்த வேண்டி யுள்ளது. கவச உடை பூண்ட அகப்படை வீரர்களைத் தாக்கி அழிப்பது ஒன்று. பொய்க்கூடாரங்களில் குவிந்துள்ள வீரர்கள் சாரிசாரியாக வெளிவந்து தாக்குதலைத் தொடுப்பர்; அவர்களைத் தாக்கி அழிப்பது இரண்டு. நீலன் இருக்கும் கூடாரம் நோக்கி முன்னேறிப் போய் அவனை மீட்பது மூன்று. இந்த மூன்றும் தனித்தனியான தன்மைகளோடு செய்யப்படவேண்டிய தாக்குதல்கள்.

குறிப்பாக, மூஞ்சலுக்குள் நுழைந்த பிறகு வில்லால் தாக்குவதற்குத் தேவையான இடைவெளிகள் போதுமான அளவுக்கு இருக்காது. பெரும்பாலும் வாள்வீச்சுக்கும் ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களாலான தாக்குதலுக்கும்தான் அதிக தேவை இருக்கும். பறம்புப்படையின் முதற்பெரும் ஆற்றல், வில்லில்தான் இருக்கிறது. அதை அதிகம் பயன்படுத்த முடியாத நிலையில், மாற்றுத்திட்டத்தையும் அதற்குப் பொருத்தமான ஆயுதங்களையும் முடிவுசெய்யவேண்டியிருந்தது.

மூஞ்சலுக்குள் நுழையவிருக்கும் அனைத்து வீரர்களுக்கும், நடத்தப்போகும் தாக்குதலைப் பற்றிய முழுமையான புரிதல் தேவை. இரவாதன் முன்சொல்லியபடி, மூஞ்சலின் முழு வரைபடம் ஆயத்தநிலையில் இருந்தது. அதை வைத்து, தாக்குதல் திட்டத்தைத் தனது படைக்கு விளக்கத் தொடங்கினான். இரவு முழுமைக்கும் நீளும் பயிற்சி தொடங்கியது.

வெங்கல்நாட்டின் கடைசிக் குன்றைக் கடந்து பல்லக்குப் பயணித்துக்கொண்டி ருந்தது. மலைமீது பல்லக்கைத் தூக்கிச் செல்லும்போது உள்ளுக்குள் அசைவும் சரிவுமாக இருந்தது. சிறுபல்லக்கில் இருவர் எதிரெதிரே உட்கார்ந்திருந்ததால் சரிவில் இறங்கும்போதும் மேட்டில் ஏறும்போதும் பிடித்துக்கொள்ள வசதியாக இருந்தது. தனது கையோ, காலோ பொற்சுவையின் மீது படும்போதெல்லாம் மன்னிப்பு கேட்டபடியே இருந்தாள் சுகமதி.

அண்ணகர்கள், பெருஞ்சரிவு ஒன்றில் பல்லக்கை இறக்கிக்கொண்டிருந்தனர். முன்புறம் கால் மடக்கி உட்கார்ந்திருந்த சுகமதியின் கால்களை இறுகப் பிடித்தபடி சரிந்துவிடாமல் தன்னை நிலை நிறுத்திக்கொண்டாள் பொற்சுவை. சுகமதியோ தனது கால் பகுதியை இளவரசி பிடித்தபோது துடித்துப்போனாள். எவ்வளவு முயன்றும் விலக்க முடியவில்லை. ஆனால், பொற்சுவையோ சரிந்து கொண்டிருப்பதால் மட்டும் பிடிக்கவில்லை; அவளுக்கு அது பிடித்திருந்தது.

`உனது கை, எனது உடலில் பட்டால் அத்தனை முறை மன்னிப்பு கோருகிறாயே, எனது கை உனது காலில் பட்டால் என்ன செய்வாய்?’ என்பதுபோலத்தான் இருந்தது அவளது செய்கை. பல்லக்கு, சரிவு நிலையிலிருந்து சற்றே சமநிலை அடைந்தது. பொற்சுவை, பல்லக்கில் இருந்த சிறுமணியில் ஓசையெழுப்பினாள். அண்ணகர்கள் நடப்பதை நிறுத்தி, தாங்குகோல்களால் பல்லக்குக்கு முட்டுக்கொடுத்தனர். முன்னால் சென்றுகொண்டிருந்த காராளி, வேகவேகமாகப் பல்லக்கின் அருகில் வந்து நின்றான்.

திரையைச் சிறிதே விலக்கி ``வெங்கல்நாட்டின் ஆறு ஊர்களின் எல்லையைக் கடந்துவிட்டோமா?” எனக் கேட்டாள்.

``இன்னும் சிறுபொழுதில் கடந்துவிடுவோம் இளவரசி. பள்ளத்தாக்குக்கு அருகில் வந்துவிட்டோம்” என்றான்.

``விரைவுபடுத்து” என்று சொல்லியபடி திரையை மூடிக்கொண்டாள். அண்ணகர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கினர்.


வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 0Am1OV4ZQAycAveVRGqi+3
``ஏன் இளவரசி இவ்வளவு முக்கியமாகக் கேட்கிறீர்கள்?” என்று வினவினாள் சுகமதி.

அண்ணகர்கள் முழுவேகமாக நடக்கத் தொடங்கும் வரை அமைதிகாத்தவள் பிறகு சொன்னாள், ``இந்தப் போரின் ஒரு பகுதிதான் தட்டியங்காட்டில் நடக்கிறது. இன்னொரு பகுதி இந்த ஆறு ஊர்களில்தான் நடந்துகொண்டிருக்கிறது.”

புரியாமல் விழித்தாள் சுகமதி. ``இந்த ஆறு ஊர்க்காரர்கள்தாம் போரிலே ஈடுபட மாட்டோம் என்று சொல்லிவிட்டார்களே. பிறகு எப்படி..?”

``அதனால்தான் எல்லா வகையான உளவுத்தொழிலுக்கும் இந்த ஊர்கள் களமாக அமைந்துவிட்டன. மூவேந்தர்களும் தனித்தனியாக இந்த ஊரார்களைக்கொண்டு பறம்பை உளவுபார்க்கின்றனர்.”

சற்றே அதிர்ச்சியோடு சுகமதி கேட்டாள் ``அப்படியென்றால், நாம் செல்லும் செய்திகூட உளவுபார்க்கப்பட்டிருக்குமா?”

சுகமதியின் கண்களை உற்றுப்பார்த்தபடி பொற்சுவை சொன்னாள், ``பேரரசர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்கும் போது, நாம் என்ன செய்கிறோம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு அல்லவா?”

திடுக்கிட்டாள். ``பேரரசர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா இளவரசி?”

``ஆம். அந்தச் செய்தியை அறிந்ததால்தான் இன்றே செல்ல வேண்டும் என முடிவுசெய்தேன்.”

``போரை நிறுத்துவதற்கான பேச்சுக்குத்தானே பாரியைப் பார்க்கப்போவதாகக் கூறினீர்கள்?”

``அது கடந்த வாரச் சூழல். இனி இந்தப் போரை யாராலும் நிறுத்த முடியாது. அந்நிலை கடந்துவிட்டது.”

``அப்படியென்றால், யாருடைய வெற்றிக்காவது உதவப்போகிறீர்களா?”

``வெற்றி தோல்வியைப் போர்க்களம்தான் தீர்மானிக்கும். அதில் நாம் ஏன் உதவ வேண்டும்?”

``பிறகு, இந்தப் பயணத்தின் நோக்கம்தான் என்ன?”

``பாரியை, சதியால் வீழ்த்தத் திட்டமிட்டுள்ளனர். இன்றிரவு அந்தச் சதி நிகழப்போகிறது. அதைத் தடுக்கவே நான் போகிறேன்.”

மிரண்டது சுகமதியின் முகம். ``நீங்கள் சொல்வது உண்மையா இளவரசி? நம் பேரரசரா இந்தச் செயலைச் செய்யப்போகிறார்?”

``நம் பேரரசர் அல்ல. சோழப்பேரரசர் அந்தச் செயலைச் செய்யப்போகிறார்.”

சற்றே நிம்மதியானாள் சுகமதி. தமது பேரரசுக்கு எதிரான செயலில் தாம் ஈடுபடவில்லை என்பது அவளின் பெருமூச்சுக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், அதைப் பொற்சுவை கவனிக்காததுபோல இருந்துகொண்டாள்.

``கொலைச் சதியை நிறுத்தப்போகும்போதுகூட உங்களின் முகம் பதற்றமேதுமின்றி இருக்கிறதே!”

``செய்யப்போகும் செயலின் முக்கியத்துவம். சிறு ஐயம்கூட எனது நடவடிக்கையின் மீது ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உள்ள தெளிவு. உண்மையில் எனது வாழ்நாளில் இவ்வளவு பதற்றத்தை நான் இதற்கு முன்னர் அடைந்ததில்லை. ஆனால், அதை வெளிக்காட்டிவிடக் கூடாது என்பதில் முழு கவனத்தோடு இருக்கிறேன். எனது முகம் முழுமையாகப் பூத்திருக்கிறது என்பதை நீயே நம்பிய பிறகு, வேறு யார் ஐயம்கொள்ள முடியும்?”


வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 MOERIKaWTeCBSVXb2HJW+4


இந்தப் பயணத்தின் தன்மை, இப்போதுதான் சுகமதிக்கு முழுமையாகப் புரியத் தொடங்கியது. ``நான் மறுபடியும் கேட்கிறேன், இதனால் உங்களுக்கு ஆபத்து ஏதும் வந்துவிடாதே!”

``அது, நம் பேரரசர் எவ்வளவு ஒற்றறிகிறார் என்பதைப் பொறுத்தது.”

``இளவரசியாரின் செயலை அவ்வளவு துல்லியமாக ஒற்றறிகின்றனரா?”

``ஆம். காராளியின் எல்லா நடவடிக்கைகளும் அவர்களால் கண்காணிக்கப்படுகின்றன.”

நடுங்கிப்போனாள் சுகமதி. ``என்ன சொல்கிறீர்கள் இளவரசி? அவனை நம்பித்தானே இந்தப் பயணத்தையே மேற்கொள்கிறோம். அப்படியென்றால், இது உறுதியாக ஆபத்தில் போய்த்தான் முடியும்.”

``காராளியிடம் பொய் இல்லை. அவன் உண்மையான கலைஞன். ஆனால், அவனுடைய எல்லா நடவடிக்கைகளும் ஒற்றறியப்படுகின்றன. அவன் நமக்குச் சொல்வதைப்போல அவனைப் பற்றி வேறு யாரோ சொல்லிக் கொண்டிருக்கின்றனர். போர்நிறுத்ததுக்காகப் பேசப்போவதாக இருந்தால் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டிருக்க மாட்டேன். ஆனால், இது பாரியின் உயிர் பறிக்கும் சதி தொடர்பானது. இதைக் கேள்வியுற்ற பிறகு எப்படி நான் போகாமல் இருக்க முடியும்?”

``கேள்விப்பட்டது உண்மை என எப்படி நம்பினீர்கள்?”

``எல்லாவற்றையும் உண்மையில்லை என நம்பு. அப்போதுதான் உண்மை எதுவோ அது மட்டும் தனித்துத் துலங்கும்.”

``உங்களைப் போன்ற இளவரசியார்களுக்குத் தான் அது முடியும். எங்களைப் போன்றோர் எல்லாவற்றையும் நம்பவே பயிற்றுவிக்கப் பட்டவர்கள்.”

``பிறகு ஏன் கேள்வி எழுகிறது சுகமதி?”

அமைதி சூழ்ந்தது.


பிரபாகரன் ஒற்றன்
பிரபாகரன் ஒற்றன்
பண்பாளர்

பதிவுகள் : 52
இணைந்தது : 31/08/2018

Postபிரபாகரன் ஒற்றன் Thu Sep 27, 2018 8:34 am

குளவன்திட்டிலிருந்து வந்த பாரியும் காலம்பனும் குடிலில் உணவருந்திக்கொண்டி ருந்தனர். மற்றவர்கள் பாட்டாப்பிறையில் அமர்ந்திருந்தனர். தேக்கன் நேற்றைப்போல் இன்றைக்கும் வரவில்லை. தனது குடிலிலேயே தங்கிவிட்டான். வாரிக்கையனும் நாகக்கரட்டின் மீதே இருந்துவிட்டார். உதிரனும் ஈங்கையனும் விண்டனும் எதிர்ப்புறம் நின்று பேசிக்கொண்டிருக்க, அவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கபிலர். அவரது மனம் மிகுந்த கலக்கத்தில் இருந்தது.
தேக்கனிடமோ, முடியனிடமோ கலந்துகொள்ளாமலேயே பொற்சுவையை அழைத்துவரச் சொல்லிவிட்டோமே என்ற தவிப்பு அடங்கவில்லை. அந்நேரம், பாரியைப் பார்த்துவிட்டு முடியன் பாட்டாப்பிறை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் இங்கு வருவதற்குள் எதிர் சென்று பேசிவிடலாம் என அவனை நோக்கி நடந்தார். தீப்பந்த வெளிச்சம் சிறிது தொலைவுக்குத்தான் இருந்தது. ஆனாலும் வேகமாக நடந்து முன் சென்றார்.
மேலேயிருந்து இறங்கிக்கொண்டிருந்த முடியனைப் பார்த்ததும் தேக்கனின் உடல்நலம் பற்றிக் கேட்டறிந்தார். சொற்களின் வழியே தனது கவலை வெளிப்பட்டுவிடாதவாறு சொல்ல முனைந்தான் முடியன். அதே முயற்சியோடுதான் தொடர்ந்து வந்த கபிலரின் சொற்களும் இருந்தன. நேற்று தன்னைத் தேடி வந்த காராளி சொல்லிய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். ``தேக்கனையோ, உன்னையோ கலந்துகொண்டுதான் அவனுக்கு மறுசொல் சொல்லவேண்டும் என்று நெடுநேரம் காத்திருந்தேன். ஆனால், இருவரும் வந்துசேரவில்லை. வேறு வழியில்லாமல் அழைத்துவரச் சொல்லிவிட்டேன்” என்றார்.
அதிர்ச்சிக்குள்ளானான் முடியன். ``ஏன் அப்படிச் சொன்னீர்கள்? போர்ச்சூழல் எவ்வளவு மோசமாகிக்கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள். இந்நிலையில் அவர்கள் இங்கு வருவது எந்த வகையிலும் பொருத்தமல்ல” என்று கூறினான்.

``எனக்கும் புரிந்தது. அதனால்தான் அதைத் தவிர்க்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. நீங்கள் இருவரும் வந்து சேராததால் என்னால் வேறு முடிவெடுக்க முடியவில்லை” என்றார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் வீரன் ஒருவன் முடியனைக் கண்டு பேச பாட்டாப்பிறையிலிருந்து மேலேறி வந்தான்.

``காராளி என்பவன், நாகக்கரட்டின் வடமுனைப் பள்ளத்தாக்குக்கு வந்துள்ளான். அவனோடு பல்லக்கு ஒன்றும் வந்துள்ளது. கபிலரிடம் கேட்டுவிட்டுத்தான் வருவதாகச் சொல்கிறான். உள்ளே அனுமதிக்கலாமா?” என்று கேட்டான்.
முடியன், கபிலரைப் பார்த்தான். ``நாளைதான் வருவான் என நினைத்தேன்” என்று மெல்லிய குரலில் சொன்னார் கபிலர்.
வருவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என முடியனால் புரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வளவு தொலைவு வந்த பிறகு திருப்பி அனுப்புதல் முறையல்ல என்று மட்டும் தோன்றியது. ``சரி, காராளியை அங்கேயே நிறுத்திவிடுங்கள். பல்லக்கை மட்டும் அனுப்பிவையுங்கள். வழிகாட்ட நம் வீரர்கள் வரட்டும்” என்றான்.
                                                                                  வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 15 6msrkTFCSHqtuH0Q2myA+6
பள்ளத்தாக்கின் நுழைவுப்பகுதியில் காராளி நிறுத்தப்பட்டான். பறம்புவீரர்கள் இருவர் வழிகாட்ட அண்ணகர்கள் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு பின்தொடர்ந்தனர்.
பல்லக்குக்குள் உரையாடல் இறுக்கம்கொள்ளத் தொடங்கியது. சுகமதிக்கு அச்சமும் பதற்றமும் அதிகமாகின. அடுத்து என்ன நடக்கும் என்பதை அவளால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. முகத்தில் வியர்வை துளிர்த்தது. ``சிறு பல்லக்கு என்பதால் காற்றோட்டமாக இல்லை” என்று பொற்சுவையிடம் சமாதானம் சொல்லிக் கொண்டாள். ஆனால், பொற்சுவைக்கு வியர்க்கவில்லை. அவள் தெளிவுகொண்டிருந்ததால், தான் செய்யப்போகும் வேலை எத்தகையது என்பதைப் பற்றிப் பலமுறை மனதுக்குள் சிந்தித்துப் பார்த்துக்கொண்டாள். வாழ்வு, முன்னிலும் பொருள்பொதிந்த இடத்துக்குத் தன்னை இட்டுச்செல்வதாக உணர்ந்தாள்.
சுகமதியால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. `இவ்வளவு பெரிய செயலுக்குப் போகும்போதுகூட இளவரசியால் எப்படி இயல்பு மாறாமல் இருக்க முடிகிறது? என்னதான் சிந்தனையை ஒருமுகப்படுத்தினாலும் மனதின் ஆழத்திலிருக்கும் உணர்வு, நீருக்குள் இருக்கும் காற்றுக்குமிழியைப்போல முகத்தில் வெளிப்பட்டுத்தானே ஆகவேண்டும். ஆனால், பொற்சுவையின் முகத்தில் எதையும் கண்டறியவே முடியவில்லையே?’ எனச் சிந்தித்தவண்ணமே இருந்தாள்.
இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்கில் சமதளப்பயணம் என்பதால் இடுக்கி நெருக்கி உட்காரும் நிலையில்லை. ஆனாலும் சுகமதியால் இயல்பாய் இருக்க முடியவில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல், பொற்சுவையின் முகத்தைப் பார்ப்பதும், பிறகு பார்வையைத் தவிர்த்து, குனிந்து கால்விரல்களைப் பார்ப்பதும், சிறு விளக்கின் அசைவைப் பார்ப்பதுமாக வந்தாள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு, எதையோ சொல்ல, தலை நிமிர்ந்து பொற்சுவையைப் பார்த்தாள். அவளது முகத்தில் மாற்றங்கள் தெரிந்தன. தனது எண்ணத்திலிருக்கும் குழப்பம்தான் அப்படித் தோன்றுகிறது என நினைத்துக் குனிந்து கொண்டாள்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பொற்சுவையின் முகத்தைப் பார்த்தாள். அவளது முகத்தில் வியர்வைத் துளிகள் இருந்தன. சுகமதி அதிர்ச்சிக்குள்ளானாள். திடீரென இளவரசிக்கு என்ன ஆயிற்று எனப் புரியவில்லை. `காற்றோட்டம் குறைவாக இருப்பதால் வியர்க்கிறதோ!’ என நினைத்து, ``பல்லக்கின் திரையை விலக்கட்டுமா இளவரசி?” என்று கேட்டாள்.

``வேண்டாம்” என்று மறுத்தாள் பொற்சுவை. இவ்வளவு நேரம் பேசிவந்த குரலின் இனிமை இப்போது இல்லை. அவளது எண்ணம் குழப்பத்துக்குள் மூழ்குவது தெரிந்தது. சுகமதி, அவளது முகத்தையே உற்றுப்பார்த்தாள்.
பொற்சுவையின் கண்கள் இங்குமங்குமாக அலைமோதின. சுகமதி தன்னைக் கண்டறிகிறாள் என்றுகூட அவளால் கணிக்க முடியவில்லை. மனம் தத்தளித்தபடி இருந்தது. என்ன செய்வதென அறியாத பதற்றம் சூழ்ந்தது. சட்டெனச் சொன்னாள், ``உனது காதில் இருக்கும் அணிகலனைக் கழற்று.”
சுகமதிக்குப் புரியவில்லை. `எனது காதணியை ஏன் கழற்றச் சொல்கிறாள்?’ என்று மனம் குழம்பியபடி இருக்க, கைகள் காதணியின் திருகாணியைத் திருகிக்கொண்டிருந்தன.
அவளின் கைகள் செய்துகொண்டிருந்த அதே வேலையை, பொற்சுவையின் விரல்களும் செய்துகொண்டிருந்தன. அவள் தனது காதணியின் திருகாணியைக் கழற்றிக் கொண்டிருந்தாள். ஏன் இதைச் செய்கிறாள் என்று சுகமதிக்கு முற்றிலும் விளங்கவில்லை.
சுகமதி அணிந்திருந்தது சிறிய வடிவிலான பூங்குழைக் காதணி. அதை அவள் கழற்றும்போதே பொற்சுவை தான் அணிந்திருந்த பெரிய வடிவிலான மகரக்குழைக் காதணியைக் கழற்றி சுகமதியின் கைகளில் கொடுத்தாள்.
அதை வாங்கியபடி புரியாமல் விழித்த சுகமதியைப் பார்த்து ``நீ இந்தக் காதணியை இட்டுக்கொள்” என்றாள்.

``இளவரசி அணிந்திருக்கும் மகரக்குழைக் காதணியை நான் மாட்டுவதா?!” சொல்லும்போதே அச்சத்தில் நடுங்கினாள்.
ஆனால் பொற்சுவையோ, ``நான் வேறு காரணத்துக்காகச் சொல்கிறேன், அணிந்துகொள்” என்றாள். சுகமதி மீண்டும் மறுக்கவே, சற்றே கோபத்தை வெளிக்காட்டினாள்.
அதன் பிறகு சுகமதியால் மறுக்க முடியவில்லை. பாண்டியநாட்டு இளவரசியின் விலைமதிப்பற்ற மகரக்குழைக் காதணியைத் தனது காதில் மாட்டிக்கொண்டாள்.
பொற்சுவை, சுகமதியின் காதுகளையே உற்றுப்பார்த்தாள். மகரக்குழைக் காதணி ஆடியபடியே வந்தது.
காதணியையே பார்த்துக்கொண்டிருந்த பொற்சுவை, பல்லக்கில் சுடர்விட்டுக்கொண்டிருந்த சிறுவிளக்கை எடுத்து அதை சுகமதியின் கைகளில் கொடுத்தாள்.
அவள் என்ன செய்கிறார் என, சுகமதிக்குப் புரியவில்லை. ஆனாலும் அவள் சொன்னபடி விளக்கை இறக்கிப் பிடித்துக்கொண்டாள்.
பொற்சுவையோ, பல்லக்கின் திரையை மிகச்சிறிய அளவு மட்டும் விலக்கி வெளிப்புறமாகப் பார்த்தாள்.
இவ்வளவு சிறிய அளவு விளக்கொளியில் எதைப் பார்த்துவிட முடியும் எனப் புரியாமல் தவித்தாள் சுகமதி.
சிறிது நேரத்துக்குப் பிறகு விளக்கை மீண்டும் மேலே மாட்டச் சொன்னாள்.
சுகமதி விளக்கை மாட்டினாள்.

``தங்களின் நடவடிக்கை எதுவும் புரியும்படி இல்லை இளவரசி.”

``சிறிது நேரம் பொறு சொல்கிறேன்.”
பொற்சுவையின் மனம் சற்றே அமைதிகொண்டது. அடுத்து என்ன செய்யவேண்டும் என விரைவாக முடிவெடுக்கத் தொடங்கினாள். இதை சுகமதிக்குத் தெரியப்படுத்துவது அவசியம் எனத் தோன்றியது.
இதுவரை பேசியதைவிட மெல்லிய குரலில் சொன்னாள், ``நான் சொல்வதைக் கேட்டு அச்சப்படாதே. நமது பல்லக்கைத் தூக்கி வருகிறவர்கள் அண்ணகர்கள் அல்லர்.”
ஒரு கணம் நடுங்கி மீண்டாள் சுகமதி, ``என்ன சொல்கிறீர்கள் இளவரசி?”

``ஆம். நினைவுதெரிந்த நாள் முதல் பல்லக்கில் பயணிப்பவள் நான். பல்லக்குப் பயணத்தின் அத்தனை விதத்தையும் என்னால் எளிதில் கண்டறிய முடியும்.”
கண்ணிமைக்காமல் பார்த்தாள் சுகமதி.

``அண்ணகர்கள் பல்லக்கைத் தூக்குவதற்கும் மற்றவர்கள் பல்லக்கைத் தூக்குவதற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. அண்ணகர்கள் பல்லக்கைத் தூக்கிச்செல்வது நீரில் மிதக்கும் பூவைப் போன்றது. அதுவே மற்றவர்கள் தூக்கிச்செல்வது கூடையில் தூக்கிச்செல்லும் பூவைப்போன்றது. வீசும் காற்றுக்கும் தூக்கிச்செல்பவரின் தோள் குலுங்கலுக்கும் பூ ஆடிக்கொண்டேதான் இருக்கும்.”

``இவர்கள் அண்ணகர்கள் இல்லையா இளவரசி?”

``ஆம். எனக்கு முதலிலேயே சிறிய ஐயம் வந்தது. ஆனால், மேடு பள்ளத்தில் பல்லக்கைத் தூக்கி வந்ததாலும், சிறுபல்லக்கில் இருவர் மிக நெருக்கமாக உட்கார்ந்திருந்ததாலும் கண்டறியாமல் விட்டுவிட்டேன். இப்போது சமதளத்தில் செல்லும்போது எனது மகரக்குழைக் காதணிகள் காதுமடல்களிலிருந்து அசைந்து அசைந்து கழுத்தைப் போய்த் தட்டிக்கொண்டே இருந்தன. இவ்வளவு கனமான காதணிகள் இப்படி அசையும்படி அண்ணகர்கள் ஒருபோதும் பல்லக்கைத் தூக்கிச்செல்ல மாட்டார்கள். அதனால்தான் உனது காதில் மாட்டி அவை அசையும் விதத்தைப் பார்த்தேன்.”

``திரையை விலக்கிக் கீழே பார்த்தது?” என்று கேட்டு முடிக்கும் முன் பொற்சுவை சொன்னாள், ``ஐயத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமல்லவா? அதனால் விளக்கின் ஒளியில் தூக்கிச்செல்பவர்களின் கால்களைப் பார்த்தேன்.”
சுகமதியின் கண்கள் நடுங்கியபடியே அவளது முகத்தைப் பார்த்தன. பொற்சுவை சொன்னாள், ``அண்ணகர்களின் கால்களில் முடி இருக்காது. ஆனால், இந்தக் கால்களை நீ பார்க்கிறாயா?” என்றாள்.
பதறினாள் சுகமதி, ``அப்படியென்றால் நம்மைத் தூக்கிச்செல்வது யார் இளவரசி?”
சற்று அமைதிக்குப் பிறகு சொன்னாள், ``நம் அண்ணகர்களை நமக்குத் தெரியாமலேயே மாற்ற, வேறு யாரால் முடியும்? நம் பேரரசர்தான் இதைச் செய்திருப்பார்.”

``ஏன்?”

``பாரியைக் கொல்ல நம் மூலம் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடாக இஃது இருக்கலாம்.”
சொல்லும்போதே பொற்சுவைக்கு வியர்த்து அடங்கியது. ``கொலையைத் தடுக்க வருவதாக நினைத்து, கொலையாளிகளை அழைத்து வந்துள்ளேன்.”
சுகமதிக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. பொற்சுவையின் கண்களைக்கூட அவளால் பார்க்க முடியவில்லை; நீர் பெருகியது.
பல்லக்கு சட்டென நின்றது. பறம்புவீரர்கள், ``பல்லக்கை இங்கு இறக்குங்கள்” என்று சொல்வது கேட்டது.
பதறிய சுகமதி, பொற்சுவையின் கைகளை இறுகப்பற்றினாள்.

``நான் உங்களை இறங்க விட மாட்டேன்” சொல்லிக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் பொங்கியது.
அவளின் பிடியிலிருந்து கைகளை விலக்கி, அவளின் தலையைத் தொட்டபடி பொற்சுவை சொன்னாள், ``பதற்றப்படாதே. நாம் எண்ணிய இடத்துக்குத்தான் வந்துள்ளோம். இனி பின்வாங்க முடியாது. நமது அறிவு நமக்குக் கைகொடுக்கும். நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.”

``இல்லை. நான் கடமை வழுவ மாட்டேன். உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர அனுமதிக்க மாட்டேன்” என்று பதறினாள்.

``நீ எனது கனவின் மிச்சம். உனது வார்த்தைகளில்தான் அது முழுமைகொள்ளப் போகிறது. இங்கு என்ன நடந்தாலும் பல்லக்கை விட்டு நீ கீழிறங்கக் கூடாது” என்று சொல்லியபடி சட்டெனத் திரை விலக்கி வெளியேறினாள் பொற்சுவை.
தூக்கிவந்த அறுவர் தலைவணங்கி நின்றிருந்தனர். அவர்களுக்கு அருகில் பறம்பு வீரர்கள் நால்வர் நின்றிருந்தனர். பல்லக்கிலிருந்து வெளிவந்ததும் எதிரில் இருந்த மரத்தின் அடிவாரத்தைப் பார்த்தாள். அங்கு நிறைய தீப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. மரத்தின் அடிவாரத்தில் இருந்த கல் இருக்கைகளில் ஆறேழு பேர் பேசிக்கொண்டிருந்தனர். இடது ஓரத்தில் ஆசான் கபிலர் இருந்தார்.
பாட்டாப்பிறையின் வலது ஓரத்தில் பாரி இருந்தான். இடையில் முடியன், ஈங்கையன், உதிரன், விண்டன், காலம்பன் ஆகியோர் இருந்தனர். ஆனால், பொற்சுவை யாரையும் பார்க்கவில்லை. நேராக, கபிலரை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
மனதுக்குள் எண்ணங்கள் புரண்டெழுந்து கொண்டிருந்தன. சோழனின் சதித்திட்டத்தை எப்படிச் சொல்வது? உடன் வந்துள்ள பாண்டிய வீரர்களின் தாக்குதலை எப்படித் தடுப்பது? எதுவுமே அவளுக்குப் பிடிபடவில்லை. கண்களுக்கு வேறெதுவும் தெரியவில்லை. ஆசானின் முகம் மட்டுமே தெரிந்தது. அவரின் அருகில் வந்து நின்றாள் பொற்சுவை. `வேகமாக வந்துவிட்டோமா?’ என ஒரு கணம் எண்ணினாள். என்ன முடிவெடுப்பது என்பதறியாத பதற்றத்தோடு பணிந்து ஆசானின் கால்களைத் தொட்டாள்.
கண் கலங்கிய கபிலர், அவளுக்கு வாழ்த்து சொல்லி எழுந்திருக்கச் சொன்னார். ஆனால், பொற்சுவையால் எழுந்திருக்க முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்பது அவளுக்குப் பிடிபடவில்லை. குனிந்து வணங்கியபடி இருந்தவளின் மனம் கொந்தளித்தபடி இருந்தது. தன் வழியாகப் பாரியை எப்படி அடையாளம் கண்டறிவார்கள்; தாக்குதலுக்கு என்ன உத்தியை வகுத்திருப்பார்கள் எனச் சிந்தித்தபடியே எழுந்தாள்.
ஆசான் வாஞ்சையோடு அவளின் தலையைத் தொட்டு வாழ்த்து சொல்லியபடி இருக்க, அவர் முகத்தைப் பார்த்ததும் பொற்சுவை கேட்டாள், ``ஈங்கையன் எங்கு இருக்கிறார் ஆசானே?”
சற்றே அதிர்ச்சிக்குள்ளானார் கபிலர். `பாரியைத்தானே கேட்பாள் என நினைத்தோம். ஏன் ஈங்கையனைக் கேட்கிறாள்?’ எதுவும் புரியவில்லை. இடதுகையை நீட்டி மூன்றாவதாக நிற்பவனைக் காட்டினார் கபிலர்.
பொற்சுவையின் கால்கள் அவனை நோக்கித் திரும்பின. பல்லக்கின் மேற்பிடிமானங்கள் முழுவதும் உள்ளொடுங்கிய ஈட்டிகளால் ஆனவை. `பொற்சுவை, கபிலரை வணங்கிய பிறகு பாரியை வணங்கிப் பேசுவாள். அந்தக் கணத்தில் அவனைத் தாக்கி அழிக்கவேண்டும்’ என்னும் ஆணையோடுதான் நன்கு பயிற்சிபெற்ற வீரர்களைக் குலசேகரபாண்டியன் அனுப்பியிருந்தார். பொற்சுவையின் கால்கள் ஈங்கையனை நோக்கி நகரத் தொடங்கியபோது பாண்டிய வீரர்கள் பல்லக்கோடு ஒட்டியுள்ள ஈட்டியை இறுகப்பற்றினர்.
பொற்சுவையின் மனம் தள்ளாடியது. `பாரி எங்கு இருக்கிறான்; ஒரு கணமேனும் அவன் முகத்தைப் பார்க்க வேண்டும்’ என மனதுக்குள் தோன்றியது. `ஒருவேளை அந்த முகத்தைப் பார்த்துவிட்டால், தன்னை அறியாமலே கைகள் குவிந்து தாள்பணிந்துவிடுவோம். வேண்டாம்’ என மனதின் அடங்காத தவிப்போடு மூன்றாம் நிலையில் இருந்த ஈங்கையனின் முன்னால் வந்து நின்றாள். உடன் நிற்கும் யாருக்கும் எதுவும் புரியவில்லை.
ஈங்கையனைப் பார்த்தபடி கைகளைக் குவித்து கால் தொட்டு வணங்க மண்டியிட்டாள் பொற்சுவை. ஈங்கையன் பதற்றத்தோடு அவளைத் தடுக்க முற்படும்போது பாண்டிய வீரர்களின் ஈட்டிகள் மின்னலெனப் பாய்ந்தன. அருகில் நிற்பவர்கள் என்னவென்று அறியும் முன்பு அடுத்தடுத்து இறங்கின ஈட்டிகள். மற்றவர்கள் ஈங்கையனை நோக்கி ஓடிவருவதற்குள் கபிலரின் முகம் நோக்கிப் பீய்ச்சியடித்தது ஈங்கையனின் குருதி. கணநேரத்தில் பாட்டாப்பிறை போர்க்களமானது.
எதிர்பாராத கணத்தில் தாக்குதலில் இறங்கிய பல்லக்குத் தூக்கிகளைச் சுற்றி நின்றிருந்த பறம்புவீரர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டிச் சரித்தனர். ஒருவன்கூட உயிர் தப்பவில்லை. அலறல் ஒலி மேலெழும் முன்பே எல்லாம் முடிந்தன.
தாக்குதல் ஓசை கேட்டுப் பதற்றத்தோடு பல்லக்கை விட்டு வெளியில் வந்தாள் சுகமதி. மரத்தடியைப் பார்த்த கணத்தில் ``ஐயோ... இளவரசி..!” என்று உயிர் உருகக் கத்திக்கொண்டு ஓடினாள்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Sep 27, 2018 6:27 pm

இப்பொழுது தான் படித்து முடித்தேன் நண்பரே ...பகிரலாம் படங்களுடன் என்று நினைத்தேன்...
ஓவியங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் ... சூப்பருங்க

பிற செய்திகளிலும் கலந்து கொள்ளுங்கள் நண்பரே ... அன்பு மலர்

பிரபாகரன் ஒற்றன்
பிரபாகரன் ஒற்றன்
பண்பாளர்

பதிவுகள் : 52
இணைந்தது : 31/08/2018

Postபிரபாகரன் ஒற்றன் Sat Sep 29, 2018 7:01 pm

சரி நண்பா...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 01, 2018 6:18 pm

வீரயுக நாயகன் வேள் பாரியின் முதல் 100  அத்தியாயங்கள் PDF வடிவில் ...

Code:
http://www.mediafire.com/file/e5ob56xxljukzm6/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.pdf


kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Mon Oct 01, 2018 6:22 pm

பிடிப் டவுன்லோட் செய்ய முடியவில்லை

அன்புடன் ராம்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 01, 2018 6:24 pm

ஆமாம் நண்பரே.. இணைப்பில் சிறிய பிரச்சனை... இன்னும் சில நிமிடத்தில் சரி செய்யப்படும் ...

---------------------------------------------
இணைப்பிற்கு பதிலாக முழு முகவரி code - ல் உள்ளது .. காப்பி செய்து பயன்படுத்தவும் ...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 01, 2018 7:02 pm

வீரயுக நாயகன் வேள் பாரியின் முதல் 100 அத்தியாயங்கள் PDF வடிவில் ...






புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 14 of 19 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக