புதிய பதிவுகள்
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:38 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
51 Posts - 66%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
8 Posts - 10%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
3 Posts - 4%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
2 Posts - 3%
Pradepa
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
225 Posts - 21%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
18 Posts - 2%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
5 Posts - 0%
Rutu
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 11:36 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 10, 2018 5:33 pm

மூன்றைப் பற்றியும் விளக்கினான் கருங்கைவாணன். ``நான் இன்று எனது வாளால் அந்தக் கிழவனைத் தாக்கினேன். இரும்பால் ஆன கேடயமே என்றாலும் அந்தத் தாக்குதலின் வேகத்தில் நெளிந்து அவனது எலும்புகளை நொறுக்கியிருக்க வேண்டும். ஆனால், அவனது மெய்க்கவசம் எனது வாளின் முழுவீச்சையும் உள்வாங்கி, அவனைக் காத்துள்ளது. எடை குறைவான, ஆனால் இரும்பைவிட வலிமையான கவசத்தைப் பூண்டு ஒவ்வொரு வீரனும் நிற்கிறான். இதோ, இந்தச் சாதாரண மரக்குச்சியினால் ஆன அம்பு, நிகரற்ற ஆற்றல்கொண்ட நமது குதிரைப்படையைச் செயலிழக்கச் செய்யும் என்பதை நம்மால் கற்பனைசெய்ய முடியுமா?” என்று கேட்டுக்கொண்டே வட்டப்பலகையில் இருந்த வாளைக் கையில் எடுத்தான் கருங்கை வாணன்.


``இது அவர்கள் பயன்படுத்தும் வாளா?” எனக் கேட்டார் குலசேகரபாண்டியன்.



``இல்லை பேரரசே! சாகலைவன் பயன்படுத்திய வாள். போர்க்களத்தில் எதிரியோடு போரிடும்போது இரு வாள்களின் மோதலில் சில இடங்களில் முனை மழுங்கும். ஆனால், இந்த வாளின் முனையைப் பாருங்கள். ஆங்காங்கே வெட்டுப்பட்டுள்ளது. ஒரு வாள் இன்னொரு வாளின் முனையை வெட்டி இறங்குமா என்ன? அவர்களது வாளின் முனை இரும்பின் தன்மையை மட்டும் கொண்டதன்று, அதைவிடக் கூர்மையான ஏதோ ஒன்றை அவர்கள் தமது வாளின் முனைக்குப் பயன்படுத்துகின்றனர் பேரரசே” என்றான்.  



கேட்டுக்கொண்டிருந்த குலசேகரபாண்டியன், ``என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?”



``நான் முதலிலே குறிப்பிட்டதைப்போல, வழக்கமான போர் முறைகளால் இவர்களை வீழ்த்த நினைப்பது நமக்குப் பெருஞ்சேதத்தை உருவாக்கும். எனவே, வரைமுறையற்ற தாக்குதலால் அவர்களை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும்” என்றான்.



``விதிகளைக் கைவிடுவது பற்றியே நீ சிந்திக்கிறாய். விதிகளைப் பயன்படுத்திக் கொள்வதைப் பற்றி நீ சிந்திக்க மறுக்கிறாய்.”



பேரரசரின் குற்றச்சாட்டு, கருங்கைவாணனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.



``நான் முடிவெடுத்துவிட்டேன். நாளை மிக முக்கியமான நாள். எதிரிகளின் குதிரைப்படை பேரழிவைச் சந்தித்துள்ளது. எனவே, தற்காப்புப் போருக்கான உத்தியைத்தான் அவர்கள் பயன்படுத்துவார்கள். இந்நிலையில் நான் முன்னேறித் தாக்கப்போகிறேன். பறம்பின் மொத்தப் படையும் முன்னேறித் தாக்குவதை நாளைதான் அவர்கள் முதன்முறையாக எதிர்கொள்ளப்போகின்றனர். ஏறக்குறைய அவர்களின் அனைத்துப் படைகளையும் முற்பகலிலேயே நிலைதடுமாறச் செய்துவிடலாம். எதிரிகளின் முழு கவனமும் என்மீதுதான் இருக்கும். நான் இடது ஓரத்திலிருந்து தாக்கி முன்னேறுவேன். உதிரனோ, தனது வலிமை மிகுந்த விற்படை கொண்டு நடுவில் தாக்கி முன்னகர்வான். இந்த நேரத்தில் இரவாதனின் தலைமையிலான சூளூர் வீரர்களின் படை, ஓங்கலத்தையும் பகழி அம்பையும் பயன்படுத்தி எதிரிகளின் அணிவகுப்பைப் பிளந்துகொண்டு மூஞ்சல் நோக்கி நகர்வார்கள். 



மூஞ்சலைக் கண்ணில் பார்க்கும் தொலைவை அடைந்துவிட்டால் போதும். அதன்பிறகு, நம் வீரர்கள் பல மடங்கு ஆற்றலை அதிகப்படுத்தித் தாக்குவார்கள். உள்ளுக்குள் இருக்கும் நீலனை மீட்கும் எண்ணம் ஒவ்வொரு வீரனையும் மாவீரனாக மாற்றிவிடும். இந்தத் தாக்குதல் நடக்கும்போது இறுதி வரிசையில் தேக்கன் நிற்பான். அவனை இனி வாள் ஏந்த விட மாட்டேன். அதே நேரம் போர்க்களம் விட்டு வெளியேறவும் விட மாட்டேன்” என்றான் முடியன்.



நீண்ட சிந்தனைக்குப் பிறகு தனது புதிய திட்டத்தை விளக்கினான் கருங்கைவாணன். வகுத்துக்கொண்ட விதிகளின் வழியே எதிரியைச் சிக்கவைக்கும் புதிய திட்டம் இது. இதற்குக் குலசேகரபாண்டியன் ஒப்புதல் தந்தார். ``பாரி இல்லாத போர்க்களத்தின் கடைசி நாள் நாளைதான். நாளை மறுநாள் அவன் போர்க்களம் வந்தே ஆகவேண்டும். ஏனென்றால், குடி ஆசானையும் குடி முடியனையும் ஒரே நாளில் வீழ்த்தும் திட்டமிது” என்று முழங்கினான் கருங்கைவாணன்.



பொழுது விடிந்தது. கதிரவன் மேலெழுந்த ஐந்தாம் நாழிகையில் திசைவேழர் கைகளை உயர்த்தினார். மூன்றாம் நாள் போர் தொடங்கியது. போர்க்களத்தின் தன்மை இப்போது இருபக்கப் படைகளுக்கும் சற்றே பழகியிருந்தது. வேந்தர்படை வழக்கம்போல் அலையலையாய் முன்னகர்ந்து வந்து தாக்குதலைத் தொடங்கியது. வழக்கத்துக்கு மாறாக தொடக்கம் முதலே பறம்புவீரர்கள் ஆவேசம்கொண்டு தாக்கத் தொடங்கினர்.



போர் தொடங்கும் கணத்திலேயே எதிரிகளின் தாக்குதலில் இருந்த ஆவேசத்தைக் கருங்கை வாணனால் உணர முடிந்தது. வேந்தர்படை இன்று வகுத்திருந்த திட்டத்துக்கு எதிரிகள் ஆவேசம்கொண்டு முன்னேறுவது உதவியாகத்தான் இருக்கும் எனத் தோன்றியது. வழக்கம்போல் நடுப்பகல் வரை சற்றே நிதானம்கொண்டு தாக்குபவர்கள், நடுப்பகலில் நாகக்கரட்டிலிருந்து ஊதப்படும் காரிக்கொம்பின் ஓசையைக் கேட்டவுடன் தாக்குதலை வேகப் படுத்துவார்கள். உத்திகளையும் மாற்றுவார்கள். அடுத்த ஓசை கேட்கும்போது முழுமைகொண்ட வேகத்தோடு தாக்குவார்கள். இதைக் கணித்துதான் கருங்கைவாணன் இன்றைய உத்தியைத் தீர்மானித்திருந்தான். ஆனால், பறம்புவீரர்கள் தொடக்கத்திலேயே ஆவேசத்தோடு முன்னகர்வது தெரிந்தது.



மையூர்கிழாரின்மேல் பறம்புத் தளபதிகள் எவ்வளவு சினத்தோடு இருக்கிறார்கள் என்று கருங்கைவாணன் முழுமையாக அறிந்தே அன்றைய திட்டத்தை வகுத்திருந்தான். நடுப்பகல் வரை வழக்கமான தாக்குதல் போரை நடத்த வேண்டும். நடுப்பகலில் மலைமேலிருந்து காரிக்கொம்பு ஓசை கேட்கும்போது பின் களத்திலிருந்து முடியன் முன்பகுதிக்கு வருவான். அந்த நேரத்தில் மையூர்கிழாரின் தேர் அவன் கண்ணில்பட வேண்டும். முடியன், மையூர் கிழாரைத் தாக்க அவரை நோக்கி விரைவான். மையூர்கிழார் படையின் வலதுபுற ஓரத்தின் வழியாக முடியனைப் பின்னோக்கி இழுத்துச் செல்லவேண்டும். 



படையணியின் ஓரப்பகுதி வழியாக முடியனை எவ்வளவு தொலைவு பின்னோக்கி இழுக்க முடியுமோ, அவ்வளவு தொலைவு இழுத்துச் செல்ல வேண்டும். மையூர்கிழாரை வீழ்த்தும் வெறிகொண்டு முன்னகரும் முடியனை, வேந்தர்படைத் தளபதிகளான சூலக்கையனும் நகரிவீரனும் பின்தொடர வேண்டும். பொருத்தமான இடத்தில் படையணியின் சுழலுக்குள் சிக்கவைத்து அவனை வீழ்த்த வேண்டும். 



முடியன் தங்களது படையணிக்குள் இழுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது கருங்கை வாணன், தேக்கனை நோக்கி முன்னகர்வான். பறம்புப்படைக்குள் எந்த இடத்தில் தேக்கன் இருந்தாலும் அந்த இடம் நோக்கி எதிரிகளைக் கிழித்துக்கொண்டு உட்புகும் ஆற்றல் கருங்கைவாணனின் படைக்கு உண்டு. மற்ற தளபதிகள், எதிரிகளை வேறு திசையில் முன்னேறவிடாமல் தடுக்கும் பணியைச் செய்வர். இதுதான் வேந்தர்படையின் இன்றைய திட்டமாக இருந்தது.



நேற்றைய போரில் வேந்தர்களின் குதிரைப்படை பேரழிவுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இன்று மூஞ்சலை நோக்கி நகர்வதற்கான திட்டமிடலோடு பறம்புப்படை இருந்தது. போர் தொடங்கியதிலிருந்து அதற்கான தன்மையில் அவர்கள் முன்னகர்ந்தனர். இன்று அவர்களுக்குக் கூவல்குடியினரின் மூலம் வழங்கப்படும் உத்தரவு வழக்கம்போல இருக்காது. காரிக்கொம்பின் ஓசை வெவ்வேறு பொழுதுகளில் தேவையறிந்து ஊதப்படும். போர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடியனின் தேர் பின்புறமிருந்து படையின் நடுப்பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது. 
  

வழக்கம்போல் குளவன்திட்டின் மேல் நின்றிருந்த பாரி, போர்க்களத்தின் தன்மையை உற்றுகவனித்துக்கொண்டிருந்தான். மூன்றாம் நாள் போரில்கூட, தான் களம் புகுவதைப் பாரி ஏன் மறுக்கிறான் என்பது காலம்பனுக்குப் புரியவில்லை. திரையர்குலம் இனி சிறிய இழப்பைக்கூடச் சந்திக்கக் கூடாது என்பதைப் பாரி மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறான். அப்படியிருந்தும் கொற்றனைப் பலிகொடுக்க நேர்ந்ததைப் பாரியால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தான் போர்க்களம் புக நேர்ந்தாலும்கூட காலம்பன் போர்க்களம் புகக் கூடாது என்றே பாரி நினைத்தான். தட்டியங்காட்டில் திரையர்குலத்தினரின் குருதி வீழக் கூடாது என்ற பாரியின் எண்ணத்துக்கு, திரையர்குலம் கடந்தகாலத்தில் அடைந்துள்ள இழப்புகளே காரணம். பாரியும் காலம்பனும் போர்க்களத்தை உற்றுகவனித்துக்கொண்டிருக்கையில், சிறியதாய் ஏதோ ஓசை கேட்டுத் திரும்பினான் பாரி. அது இகுளிக்கிழவனின் ஓசை. விளக்கின் சுடர் மெள்ள அசையத் தொடங்கியது. 



பாரி, வியப்போடு இகுளிக்கிழவனைப் பார்த்தான். அவனோ கைகளைத் தூக்கிக் கூவல் குடியினருக்கு உத்தரவு கொடுக்கக் காத்திருந்தான். இரண்டு நாள்களாக எதிர்பார்த்தபோது எதுவும் நடக்காமல், சற்றும் எதிர்பாராத நேரத்தில் கொம்மனும் கொம்மியும் உதவப்போவது வியப்பைத் தந்தது. பாரியின் மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, விளக்கின் சுடர் சட்டெனச் சாய்ந்தது. இகுளிக்கிழவன் கையை அசைக்க மலையெங்குமிருந்து கூவல்குடியினரின் பீறிட்ட ஓசை கணநேர இடைவெளியின்றி வெளிவந்தது.  



பறம்பின் குதிரைப்படை வீரர்களோ, வாள்படை வீரர்களோ இந்தக் கணத்தைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கல்லூழி அம்புகளை எடுத்து எய்வதற்குள் காற்று அவர்களைக் கடந்தது. ஆனால், உதிரனின் தலைமையிலான விற்படை வீரர்களோ, ஓசையைக் கேட்ட கணத்தில் காற்றின் முகப்போடு அம்பை இணைத்தனர். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83h_1533638321
ஆறு அம்புகளைக் கொண்டது ஒரு கொத்து. ஒவ்வொரு வீரனுக்கும் மூன்று கொத்துகள் கொடுக்கப்பட்டிருந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் முதல் கொத்தை எடுத்து நாணில் பொருத்தி முழு விசையோடு எய்தது விற்படை. மேற்கு மலைக் கணவாயின் பின்புறத்திலிருந்து கொம்மன் ஊத, வீறுகொண்ட காற்று தட்டியங்காட்டு நிலத்தை நோக்கி வலதுபுறமாகச் சீவிக்கொண்டு இறங்கியது. எண்ணிலடங்காத அம்புகள் காற்றின் முன்முகப்போடு இணைய, கண்பார்வைக்கு அப்பால் சீறிச்சென்றன அம்புகள். 


மலைமேலிருந்து கொம்போசை கேட்ட கணத்திலேயே சற்றே அதிர்ச்சிக்குள்ளானான் கருங்கைவாணன். வழக்கமான ஓசையாக அது இல்லை. வழக்கமான நேரத்திலும் ஊதப் படவில்லை. `இது என்ன புதுவகையாக இருக்கிறதே!’ எனச் சிந்தித்துக்கொண்டிருக்கும் போதுதான், சிறுபுல்லின் கனம்கொண்ட எண்ணிலடங்காத அம்புகள் அவன் தலைக்கு மேலே எங்கோ பறந்து சென்றுகொண்டிருந்தன. `என்ன இது?’ எனக் கருங்கைவாணனுக்கு ஒன்றும் புரியவில்லை. தேக்கனை நோக்கி முன்னேறிச் சென்றுகொண்டிருந்தவன் சற்றே குழப்பத்துக்குள்ளாகி அப்படியே நின்றான். பாய்ந்து செல்லும் எண்ணிலடங்காத அம்புகள் எங்கே செல்கின்றன என்று தலையைப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான். வெகு தொலைவுக்கு அப்பால் சென்றன. 



வீசிய காற்றின் எதிர்ப்புறமாக வேந்தர்படை நின்றுகொண்டிருந்தது. குறுமணல் தூசிகளை அள்ளி எறிந்தபடி காற்று போய்க்கொண்டிருந்தது. வேந்தர்படை வீரர்கள், கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தனர். பறம்புவீரர்களைப் பொறுத்த வரை காற்று முதுகுப்புறத்தைத் தாக்கி முன்னகர்ந்தது. இவ்வளவு தொலைவு பறக்கும் அம்புகளை வாழ்வில் முதன்முறையாகப் பார்த்த கருங்கைவாணனுக்கு, ஒன்றும் புரியவில்லை. கண்களைக் கசக்கியபடியே திரும்பினான். எதிர்த்திசையில் பறம்புவீரர்கள் தங்களின் ஆவேசத் தாக்குதலைத் தொடங்கினர்.



கருங்கைவாணன் சட்டென விழிப்படைந்து பேரிகையை முழக்கச் சொல்லி, தன் வீரர்களை எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்ள ஆயத்தப் படுத்தினான். பறம்புவீரர்களோ, அவ்வளவு தொலைவு செல்லும் அம்பை எய்த மறுகணமே வழக்கம்போலான தாக்குதலைத் தொடங்கினர். எய்யப்பட்ட கல்லூழி அம்பினால் ஏற்பட்ட விளைவு என்ன என்பது எய்த யாருக்கும் தெரியாது. அது கண்ணுக்கு அப்பால் எங்கோ நிகழ்ந்துகொண்டிருந்தது.



குளவன்திட்டில் இருந்தபடி பாரி பார்த்துக் கொண்டிருந்தான். எய்யப்பட்ட அம்புகள் மூன்றாம் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த வேந்தர்படையின் பிற்பாதியில் போய் இறங்கின. மூன்றாம்நிலைப் படையின் சரிபாதி வீரர்களின் மீது சுருள் அம்புகள் இறங்கின.
 

போர் நடந்துகொண்டிருந்த முற்பகுதியை மூன்றாம்நிலைப் படையினர் கண்கொண்டே பார்க்க முடியாது. அது எங்கோ நடந்து கொண்டிருந்தது. அவர்களைப் பொறுத்தவரை ஆயத்தநிலையில் நிற்க வேண்டும். அவ்வளவுதான். எந்தத் தொடர்பும் இல்லாமல் காற்றின் வழியே வானெங்குமிருந்து பறந்துவந்த வைக்கோல் அளவே கனம்கொண்ட அம்புகள் வீரர்களை நோக்கிச் சரசரவென இறங்கின. 



பறந்து போன அம்புகள் எங்கே இறங்கின என்பது, முன்களத்தில் நின்றிருந்த கருங்கை வாணனுக்குத் தெரியவில்லை. இந்தத் தாக்குதல் என்ன என்பதும் அவனுக்குப் புரியவில்லை. ஏதோ நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது. இந்நிலையில்தான் முடியனின் தேர் நடுக்களம் நோக்கிச் சென்றது. முன்வகுத்த திட்டப்படி அந்தத் தேரின் பார்வையில் படும்படி மையூர்கிழாரைக் களத்துக்குள் வரச்சொல்லும் மறைக்குறிப்பு அனுப்பப்பட்டது. 



தேரில் முன்னகர்ந்துகொண்டிருந்த முடியனின் எண்ணமெல்லாம், கல்லூழி வேர் எவ்விடம் கீழிறங்கியிருக்கக்கூடும் என்பதைக் கணிப்பதிலேயே இருந்தது. தேரின் மீது நின்றாலும் அவனது பார்வைக்கு அப்பால்தான் அந்தத் தாக்குதல் நிகழ்ந்திருந்தது. எப்படியிருந்தாலும் கல்லூழி அம்புகள் தைத்தவுடன் அவற்றின் பாதிப்பு தெரியாது. பிடுங்க முடியாமல் தவிக்கும்போதும் தசையோடு பிய்த்துக்கொண்டே அம்புகள் வெளிவரும்போதும்தான் பாதிப்பை உணரத் தொடங்குவார்கள். அப்போது அங்கிருந்து கொடுக்கப்படும் மறைக்குறிப்பு, முன்களத்தில் நிற்கும் வேந்தர்படையைப் பெருங்குழப்பத்துக்குள்ளாக்கும். அவர்களின் மொத்தக் கட்டுக்கோப்பும் அடுத்த சில பொழுதுகளுக்குள் முழுமுற்றாகக் கலையும் என எண்ணிக்கொண்டிருந்த போது ஏந்திய வில்லோடு மையூர்கிழார் சென்றுகொண்டிருந்த தேர் தெரிந்தது. 



இத்தனை நாள்களாகப் போர்க்களத்தில் முடியன் எவனைத் தேடினானோ, அவன் இப்போது கண்ணில்பட்டான். தேரோட்டும் வலவனைப் பார்த்து, ``அந்தத் தேரைப் பின் தொடர்” என்று கூறினான். ஆனால், மறுகணமே அவனது எண்ணம் வேறானது. களத்தின் சூழல் இவ்வளவு அருமையான வாய்ப்பை உருவாக்கியுள்ளபோது நாம் மூஞ்சலை நோக்கிச் செல்வதே சரியான முடிவு எனத் தோன்றியது. ஆனாலும் மையூர்கிழாரை விட்டுவைப்பது சரியன்று என்றும் தோன்றியது. தேரோ, மையூர்கிழாரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. முடியனின் சிந்தனை, முடிவெடுக்க முடியாமல் தடுமாறியது. 



ஏறக்குறைய இதே குழப்பத்தைச் சந்தித்தான் கருங்கைவாணன். `இத்தனை ஆயிரம் அம்புகள் காற்றில் எப்படி இவ்வளவு தொலைவு பறந்தன. அவையெல்லாம் எங்கே போய் இறங்கின. எங்கே இறங்கியிருந்தாலும் பல காதத் தொலைவுக்கு நிற்கும் நம் படைவீரர்களின் மீதுதானே இறங்கியிருக்கக் கூடும். பார்ப்பதற்கு மிகவும் சிறுத்த இந்த அம்புகளால் பெரிய பாதிப்பு எதுவும் நிகழ்ந்திருக்காது. ஆனாலும் படைத் தலைமைத் தளபதி என்ற முறையில் பின்களப்படையின் பாதிப்பை அறிந்த பிறகு முன்னேறிச் செல்வதுதான் சரியெனத் தோன்றியது. ஆனாலும் நாம் திட்டமிட்டபடி மையூர்கிழாரை நோக்கி முடியனின் தேர் செல்லத் தொடங்கிவிட்டது. இனி நாம் பொறுத்திருக்க வேண்டாம்’ என்று முடிவுசெய்து தேக்கனை நோக்கிப் பறம்புப்படைக்குள் புகுந்து உள்நுழையத் தொடங்கினான் கருங்கைவாணன்.



போர்க்களத்தில் தளபதிகளால் முழுமுற்றான தெளிவோடு இயங்க முடியாது. பல்லாயிரம் வீரர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிச்சரித்து முன்னகரும் போரியக்கத்தைத் துல்லியமாகக் கணிப்பது எளிதன்று. தளபதிகள், குழப்பத்துக்குள் சிக்கிச் சிக்கி மீள்பவர்களாகத்தான் இருப்பார்கள். 



கருங்கைவாணன் குழப்பத்துக்குள்ளிருந்து முடிவுக்கு வந்து தேக்கனை நோக்கிப் புறப்பட்டபோது, மையூர்கிழாரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முடியன், தேரைச் சற்றே நிறுத்தினான். தொலைவில் குதிரையில் இருந்தபடி போரிட்டுக்கொண்டிருந்த வேட்டூர் பழையனைத் தனது தேரில் ஏறச் சொல்லி மையூர்கிழாரைக் கொன்றழிக்க உத்தரவிட்டு, அவனது குதிரையில் ஏறி இரவாதனை நோக்கிப் புறப்பட்டான் முடியன்.



பொழுதாகிக்கொண்டிருந்தது. வேந்தர்படையின் மூன்றாம் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த எண்ணிலடங்காத வீரர்கள் கல்லூழி அம்பை உருவி எடுக்க முடியாமல் திணறியபோதுதான் ஆபத்தின் அளவு புரியத் தொடங்கியது. கூச்சலும் குழப்பமும் மேலேறி வரத் தொடங்கியபோது முடியன் குதிரைப்படையோடு இணைந்து மூஞ்சலை நோக்கி முன்னகரத் தொடங்கினான்.



முன்திட்டப்படி தன்னைத் தொடர்ந்துவரும் தேரை, படையின் வலதுபுற ஓரமாகவே உள்ளிழுத்துச் சென்றுகொண்டிருந்தார் மையூர்கிழார். தளபதிகள் துடும்பனும் நகரிவீரனும் அவரைக் குறிவைத்துத் தங்களின் தேரை விரைவுபடுத்தினர்.



திட்டமிட்டபடி பறம்புப்படையின் பின்பகுதியை நோக்கி விரைந்து வந்தான் கருங்கைவாணன். எதிரிகளின் படையை விலக்கி முன்னகரும் உத்தியில் அவனது படை இணையற்ற அனுபவம்கொண்டது. விரைந்து முன்னகர்ந்து வந்த கருங்கைவாணனின் கண்களுக்கு வெகுதொலைவில் வாளூன்றி நிற்கும் தேக்கன் தனித்துத் தெரிந்தான்.



- பறம்பின் குரல் ஒலிக்கும்... 




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 17, 2018 11:14 am

ட்டியங்காட்டுப் போர்க்களம் இன்று யாரும் கணிக்க முடியாத ஒன்றாக இருந்தது. காலையில் போர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே காற்று வீசியது. மற்ற நிலத்தில் வீசும் காற்றைப் போன்றதன்று... சீவிச்செல்லும் இந்தக் காற்றின் வேகம் இணையற்றது. குளவன்திட்டின் பின்புறம் உள்ள கணவாயிலிருந்து சீற்றத்தோடு வெளிவந்து தட்டியங்காடெங்கும் இருக்கும் ஈக்கிமணலையும் கருமணலையும் உருட்டி எடுத்துக்கொண்டு போனது. பரண்மேல் நின்றிருந்த திசைவேழர், ஒரு கணம் நடுங்கிப்போனார். காற்றின் வேகம், பரணை இழுத்து ஆட்டியது. கம்பங்களை இறுகப்பிடித்து நின்றார். அவரின் கண்களின் முன்னால் நாழிகை வட்டிலைத் தூக்கி எறிந்தது. நாழிகைக்கோல் எங்கோ பறந்தது. மாணவன் ஒருவன் அவற்றைப் பிடிக்க முயன்றான். ஆனால், கணநேரத்தில் அவை மறைந்துவிட்டன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83b_1534316216
காற்றின் வேகம் அளவிடற்கரியதாக இருந்தது. செம்புழுதி மேலேறி வந்து கொண்டிருக்கும்போதுதான் எண்ணிலடங்காத அம்புகள் காற்றோடு பறந்து சென்றதைப் பார்த்தார். அவருடைய கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. இங்கு நிகழ்வது எதிர்பாராத ஒன்றா அல்லது எதிர்பார்த்த ஒன்றா என்று அவருக்குப் புரியவில்லை. பரண்கட்டிய கம்பங்கள் வில்லென வளைந்து மீண்டன. இந்த நிலத்தின் தன்மைக்கு ஏற்ப மரக்கட்டுமானம் இருந்ததால் அவர் தப்பித்தார்.
ஆனாலும் ஆழ்மனம் நடுங்கியபடியே இருந்தது. அதற்குக் காரணம், அவரின் கண் முன்னால் நாழிகைவட்டிலை, காற்று தூக்கியெறிந்ததுதான். நிலைமான் கோல்சொல்லியின் முன்னால் வைக்கப்பட்ட நாழிகைவட்டிலும் அதில் பரப்பப்பட்ட குறுமணலும் நாழிகைக்கோலும் போரின் உயிர்நாடி போன்றவை. ஆனால், காற்று அவருடைய கண்களின் முன்னால் அவற்றைத் தூக்கியெறிந்தது. திசைவேழர் நிலைகுலைந்து நின்றார். 

பறம்புவீரர்கள் எந்தவிதத் திகைப்புக்கும் ஆட்படாமல் தாக்குதலை முன்னெடுத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் காற்றைக் கையாண்டவிதம் யாரும் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்தது. காரமலையிலிருந்து ஓசை கேட்ட கணத்தில்தான் பெருங்காற்று வீசியது. அந்தக் கணத்தில் அம்புகள் அலையலையாய் மேலேறிப் பறக்கின்றன. திசைவேழருக்கு இந்தச் செயல்பாட்டுக்குள் இருந்த இணைப்புப் பிடிபடவில்லை. `காற்றை வருமுன் உணரும் ஆற்றல்கொண்டவர்களாகப் பறம்பு மக்கள் இருக்கின்றனரா? விண்மீன்களின் நகர்வைக்கொண்டு காலத்தைக் கணிக்கிறோம். ஆனால் இவர்களோ காற்றையே கணிக்கிறார்கள். இது எளிய செயலன்று.’ திசைவேழரின் எண்ணங்கள் நடுக்கத்தை அதிகப்படுத்தியபடியே இருந்தன.
தட்டியங்காட்டின் முழு ஆற்றலும், இன்று வெளிப்பட்டுக்கொண்டிருந்தது; அந்த நிலத்தில் நின்று போரிட்டுக்கொண்டிருக்கும் இருதரப்புக்கும் யாராலும் கணிக்க முடியாத புதுப்புதுச் சவால்களை உருவாக்கியபடியே இருந்தது. நடுப்பகலுக்குப் பிறகு வழக்கம்போல் வெக்கையின் தாக்கம் அதிகமாகியது. போர்க்களம், இதுவரை இல்லாத குழப்பத்துடனும் ஆவேசத்துடனும் இருந்தது. வீரர்கள் வழக்கத்தைவிட பேரோசையை எழுப்பிக்கொண்டி ருந்தனர். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83a_1534316248
உள்ளும் புறமும் நடுக்கத்தை உணர்ந்தபடி இருந்த திசைவேழர், மாணவன் ஒருவனைக் கீழே அனுப்பி இன்னொரு வட்டிலில் மணலையும் நாழிகைக்கோலையும் எடுத்துவரச் சொன்னார். மாணவன் கீழே இறங்கினான். வீரர்கள் ஒருவரை யொருவர் வெட்டிச்சரித்துக்கொண்டிருந்தனர். குதிரைகளும் தேர்களும் குறுக்கிட்டு ஓடிக்கொண்டிருந்தன. நிலமெங்கும் அம்புகளும் ஈட்டிகளும் காற்றைக் கிழித்தன. தேரில் ஏறி, போர்க்களத்தினூடே புகுந்து, குடிலுக்குச் சென்று திரும்ப முடியும் என அவனுக்குத் தோன்றவில்லை. என்ன செய்வதெனத் தெரியாமல் மிரட்சியோடு நின்றான். 
மையூர்கிழாரை விரட்டிச் சென்ற வேட்டூர்பழையன், எதிரியின் படையைச் சரிபாதிக்குமேல் கடந்தார். இவ்வளவு தொலைவு உள்ளே வருவது சரியன்று எனத் தோன்றியது. ஆனால், முடியன் ``இவனைக் கொன்றழித்துவிடு” என்று சொல்லியே அவனது தேரை ஒப்படைத்துள்ளான். போர்க்களத்தில் முடியனின் வாக்கைப் பறம்புத்தளபதிகள் மீறுவதில்லை. அதுமட்டுமன்று, மையூர்கிழாரைக் கொல்வதைவிட முக்கிய வேலை இந்தப் போர்க்களத்தில் வேறில்லை. எனவே, பழையன் விடாது விரட்டிச் சென்றார். 

முன்திட்டப்படி படையின் ஓரப் பகுதியாகவே சென்றுகொண்டிருந்தார் மையூர்கிழார். அதனால்தான் இவ்வளவு தொலைவு முடியனின் தேரை இழுத்துவர முடிந்தது. குறிப்பிட்ட அளவு கடந்ததும் பின்தொடர்ந்து வருவது முடியன் அல்ல; வேட்டுர்பழையன் என்பதை மையூர்கிழார் அறிந்துவிட்டார். ஏற்கெனவே வகுக்கப்பட்ட திட்டப்படி உள்ளிழுத்துச் செல்லவேண்டியது முடியனைத்தான். அவன்தான் முதலில் பின்தொடர்ந்து தாக்குதல் தொடுத்தபடி வந்தான். இடையில் பழையன் எப்போது மாறினார் என்பது மையூர்கிழாருக்கு விளங்கவில்லை. 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83d_1534316277
மையூர்கிழாருக்கு நீலன் மீதும் வேட்டூர்பழையன் மீதும்தான் அதிக கோபம் இருந்தது. தன் மகன் இளமாறனின் மரணத்துக்கு வேட்டுவன் பாறையைச் சேர்ந்தவர்களே காரணம் என்று அவர் நம்பினார். எனவே, பின்தொடர்வது முடியனல்ல, வேட்டுர்பழையன்தான் என்பது தெரிந்த பிறகும் அவர் எதையும் காட்டிக்கொள்ளாமல் அதே வேகத்தில் போய்க்கொண்டிருந்தார். பழையனின் மரணம் நிகழப்போவதைக் காணும் வெறி அவரது செயலிலே இருந்தது. மற்ற இரு தளபதிகளான நகரிவீரனும் சூலக்கையனும் வளைத்துத் தாக்குவதற்கு ஏதுவான இடைவெளியில் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர்.
முடியன், இரவாதனோடு வந்து இணைந்தான். இது குதிரைப்படை வீரர்கள் யாரும் எதிர்பாராத ஒன்று. பறம்புவீரர்களின் ஆவேச உணர்வு, வெள்ளம்போல் சீறிப்பாயத் தொடங்கியது. எதிரிகளின் தற்காப்புநிலைகளை நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தில் தகர்த்து முன்னேறியது பறம்பின் குதிரைப்படை. அந்தத் திசையில் நின்றிருந்த வேந்தர்படைத் தளபதி உறுமன்கொடி, `இவர்களால் அதிக தொலைவு முன்னேறி வந்துவிட முடியாது’ என்றுதான் நினைத்தான். ஆனால் பறம்புப்படை, எதிரிப்படையைக் கிழித்துக்கொண்டு இறங்கியது. வாள்வீச்சும் அம்புகளின் தாக்குதலும் எதிர்கொள்ள முடியாத வேகத்தில் இருந்தன.
நேற்றைய தாக்குதலில் தனது படையில் இருந்த பெரும்பான்மையான குதிரைகளை இழந்தான் உறுமன்கொடி. அப்படியிருந்தும் இன்று வாள்வீரர்களைப் பெரும்பகுதியாகத் தனது அணிகளில் நிறுத்தி, மிகக்குறைவான குதிரைகளைப் பின்னிலையில் நிறுத்தியிருந்தான். ஆனால், எதிரிகளின் தாக்குதல் ஈடுகொடுக்க முடியாததாக இருந்தது. பாய்ந்து முன்னேறும் எதிரிகளைத் தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை வந்துவிடுமோ என்று உறுமன்கொடியின் மனதுக்குள் அச்சம்படரத் தொடங்கியது. 
அப்போது உதிரனின் தலைமையிலான பறம்பின் விற்படையானது, வேந்தர் படையின் இரண்டாம் நிலையின் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்தி உள்நுழைந்துகொண்டிருந்தது. களத்தின் மையப்பகுதியை வழக்கம்போல் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் உதிரன். உண்மையில் பறம்புப்படையின் அச்சு உதிரனின் கையில்தான் இருந்தது. வேந்தர்படை பறம்புப்படைக்குள் எளிதில் நுழைய முடியாத தன்மையை உருவாக்குவது மட்டுமன்று, தேவைப்படும் நேரத்தில் வேந்தர்படையைத் தாக்குதலின் மூலம் திசைதிருப்பவும் உதிரனால் முடிந்தது.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83e_1534316308
வேந்தர்படையின் வில் வீரர்கள் எய்யும் அம்பைவிட இரு மடங்குத் தொலைவுக்கு பறம்புப்படை அம்பெய்வதால், எதிரிகளால் அருகில் நெருங்கவே முடிவதில்லை. எனவே, இரண்டு நாள் போரிலும் சிறு பாதிப்புகூட விற்படைக்கு ஏற்படவில்லை. உதிரனுக்கு இன்றைய போரில்தான் முழு வேகத்தில் தாக்கி முன்னேற அனுமதி கொடுக்கப்பட்டது. இதற்காகத்தான் அவன் காத்திருந்தான். உதிரனின் வேகம் காலையிலிருந்தே எதிரிகளால் ஈடுகொடுக்க முடியாததாகத்தான் இருந்தது. நடுப்பகலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமானது. பறம்பின் விற்படை வேந்தர்படையின் இரண்டாம்நிலையைப் பிளந்து உள்நுழைந்தபோதுதான் முடியன், இரவாதன் ஆகிய இருவரின் தாக்குதலையும் எதிர்கொள்ள முடியாமல் உறுமன்கொடி திணறி நின்றான். உடனடியாக இரண்டாம்நிலைப் படையை உதவிக்கு அழைக்கலாம் என்று அவன் நினைத்தபோது அங்கு நிலைமை மோசமடைந்துகொண்டிருந்தது. உதிரனின் தாக்குதல், இரண்டாம்நிலைப் படையின் வீரர்களைக் கணக்கின்றி வீழ்த்திக்கொண்டிருந்தது. 
தலைமைத் தளபதி கருங்கைவாணன், பறம்புப்படையின் இறுதிப் பகுதியில் நின்றிருந்த தேக்கனை வந்தடைந்தான். அவன் இங்கு வருவான் என்று தேக்கன் உள்ளிட்ட யாரும் எதிர்பார்க்கவில்லை. அவன் வருவது அறிந்ததும் சீழ்க்கை ஒலியெழுப்பினான் தேக்கன்.
அவன் எழுப்பிய ஓசை எதற்கானதென்று கருங்கைவாணனுக்குத் தெரியவில்லை. அவன் குதிரையிலிருந்து கீழே இறங்கினான். கடுமையான வாள்வீச்சுக்குப் பிறகும் கிழவன் மீண்டும் போர்க்களம் வந்து நிற்பதே கருங்கைவாணனுக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அவனது வாழ்வு அடுத்த சில கணங்களில் முடியப்போகிறது என எண்ணியபடியே உறையிலிருந்து வாளை உருவினான்.
தேக்கனோ, வாளை ஏந்த ஆயத்தமாக இல்லை; கருங்கைவாணனைப் பார்த்தபடியே நின்றிருந்தான். வீரர்கள் வாள்வீச்சுக்கு இடம்விட்டு விலகினர். அப்போது அங்கு வந்த குதிரையிலிருந்து கூழையன் இறங்கினான். தேக்கனின் சீழ்க்கை ஓசை கூழையனுக்கானது. கருங்கைவாணன், கூழையனைப் பார்த்ததும் அறிந்துகொண்டான், இவன் பறம்பின் தேர்ப்படைத் தளபதியென்று.
கூழையன் குதிரையிலிருந்து இறங்கினான். தேக்கன் போரிட ஆயத்தமாக இல்லாதது ஏன் என்று கருங்கைவாணனால் புரிந்துகொள்ள முடிந்தது. கிழவன் கடுமையான வலியோடு நின்றுகொண்டிருக்கிறான். ஆனாலும் போர்க்களம் நீங்கக் கூடாது என்பதற்காக வாளேந்தி நிற்கிறான் என எண்ணியபடி கூழையனை நோக்கி முன்னகர்ந்தான்.
தேக்கன், கூழையனை நோக்கி சத்தமாகச் சொன்னான், ``இவன் அதிக நேரம் நிற்க மாட்டான், ஓசை கேட்டதும் பின்னால் ஓடிவிடுவான். எனவே, ஏறித் தாக்காதே; வாங்கித் தாக்கு.”

தேக்கன் சொன்னது கருங்கைவாணனுக்குத் தெளிவாகக் கேட்டது. சுழற்றிய வாளோடு உள்ளிறங்கியவனை அந்தச் சொல் ஒரு கணம் தாக்கி நிறுத்தியது. கிழவன் ஏன் இதைச் சொல்கிறான் என்று கருங்கைவாணன் எண்ணத் தொடங்கியபோது, இயற்கையாகவே அவனது கவனம் படையின் பின்பக்கமிருந்து எழும் ஓசையை அனுமானித்தது. கிழவன் வீசிய முதல் சொல், கருங்கைவாணனின் கவனத்தைச் சிதறச்செய்தது.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83g_1534316398
கூழையன், விற்போரில் நிகரற்ற வீரத்தை வெளிப்படுத்தக்கூடியவன். ஆனால், வாள்வீச்சில் பெருவீரன் எனச் சொல்லிவிட முடியாது. அதுவும் வேந்தர்படையின் தலைமைத் தளபதியான கருங்கை வாணனின் வாள்வீச்சைக் கூழையனால் எதிர்கொள்ள முடியாது. எனவேதான் எதிரியின் கவனத்தைத் திருப்பும் உத்தியாகவும் இதைக் கையாண்டான் தேக்கன்.
கருங்கைவாணனால் படையின் பின்புறத்திலிருந்து எழும் ஓசையை மதிப்பிட முடியவில்லை. ஆனால், பறம்புத்தளபதி முடியன் வழக்கத்துக்கு மாறாக முற்பகலிலேயே முன்னேறிவந்ததும் காற்றில் பறந்த கணக்கற்ற அம்புகளும் அவனது எண்ணத்தைக் குறுக்கிட்டபடியே இருந்தன. ஆனால் கூழையன், கண்ணுக்கு முன்னால் வாளைச் சுழற்றி இறங்கிவிட்டான். கருங்கைவாணனின் கண்களிலிருந்த குழப்பத்தைத் தேக்கனால் அறிய முடிந்தது.
முழு வேகத்தில் வாள்வீச்சைத் தொடங்க முடியாத சிறு குழப்பத்தைத் தன்னுள் உணர்ந்தான் கருங்கைவாணன். பறம்புப்படையின் கடைசிப் பகுதியில் அவன் இருக்கிறான் என்பதும், பறம்புவீரர்கள் காற்றில் எய்த அம்புகள் அவனது படையின் பின்பகுதியை ஒருவேளை தாக்கியிருக்கக்கூடும் என்பதும் அவனது கவனத்தை முழுமையாகக் கவ்விக்கொண்டன. இவையெல்லாம் எதிரிகளின் தெளிவான திட்டமிடல் என்பதை அவன் உணரும் வேளையில் கூழையனின் வாள் முன்சுழன்று வந்தது.
கருங்கைவாணனைப்போல தேக்கனுமே அந்தக் கணம் அதிர்ச்சியடைந்தான். `வாங்கித் தாக்கத்தானே சொன்னோம். இவன் ஏன் ஏறிப் பாய்கிறான்!’ என்று தேக்கன் சற்றே அதிர்ச்சிக்குள்ளானான். கருங்கைவாணனோ கவனத்தைச் சிதறவிடக் கூடாது என எண்ணியபடி வாளை ஏந்தி முன்னகர்ந்தான்.

பரண் விட்டுக் கீழிறங்கிய திசைவேழரின் மாணவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பொழுதாகிக்கொண்டிருந்தது. இன்றைய போர் முடிய இன்னும் இரண்டொரு நாழிகைகள்தான் இருந்தன. எனவே, வேகமாக ஆசான் கேட்டதைக் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும் என்று பதற்றம்கொண்டான். சற்றுத் தொலைவில், வேந்தர்படை வீரன் பயன்படுத்திய கேடயம் ஒன்று கிடந்தது. வேகமாகப் போய் அதை எடுத்தான். கேடயத்தைத் திருப்பி அதில் மண்ணை அள்ளி நிரப்பினான். குருதி தோய்ந்த அம்பு ஒன்று கிடந்தது. அதை எடுத்து எட்டு விரல்கட்டை அளவு நீளத்துக்கு ஒடித்தான். என்றும் இல்லாத அளவுக்குப் போர்க்களத்தின் ஓசை இன்று பலமடங்கு அதிகமாக இருந்தது. என்ன நடக்கிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி பரண் மேல் ஏறத் தொடங்கினான்.

மையூர்கிழாரின் தேர், முன்திட்ட மிட்டபடி மூன்றாம்நிலைப் படையின் இறுதிப் பகுதிக்குச் சென்றது. ஆனால், அங்கு பெருங்குழப்பம் நிலவியது. கல்லூழி வேரால் ஆன அம்பைப் பிடுங்க முயலும்போது அதன் வலி நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. அம்பின் உள்நுழைந்த பகுதி சுருண்டுவிட்டதால், தசையோடு பிய்த்துக்கொண்டுதான் வந்தது. எனவே, வீரர்களின் உடலில் தைத்த எந்த அம்பையும் பிடுங்க முடியவில்லை. `வைக்கோல் அளவுகொண்ட சிறு அம்புதானே, இது என்ன செய்துவிடும்’ என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால், பிடுங்க முடியாமல் ஒவ்வொரு வீரனும் துடிக்கத் தொடங்கிய பிறகுதான் நிலைமையின் விபரீதம் புரியத் தொடங்கியது. 

மூன்றாம்நிலைப் படையில் பெருங் குழப்பம் நிலவியதால், மையூர்கிழார் தேரை, படையின் நடுப்பகுதிக்குக் கொண்டுசெல்லவில்லை. மாறாக, ஓரப்பகுதியின் வழியே படை நின்றிருக்கும் பகுதிக்கு வெளிப்புறம் நோக்கி இழுத்துச்செல்லலாம் என்ற முடிவுக்கு வந்தார். தேரை ஓட்டும் வலவனிடம், ``வெளிப்புறமாக விரைந்து ஓட்டு” என்றார்.


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 17, 2018 11:20 am

அவரின் தேரைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார் வேட்டூர்பழையன். `இந்தப் போருக்கான முக்கியக் காரணமாக இருப்பவன் மையூர்கிழார். இவன்தான் பறம்பைப் பற்றிய பல குறிப்புகளை வேந்தர்களுக்கு வழங்குபவன். அவன் இருக்கும் துணிவில்தான் காரமலையின் அடிவாரத்தில் இவ்வளவு பெரிய படையைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றனர்’ என்று அவனைப் பற்றிய எண்ணங்கள் மேலேறியபடியே இருந்தன. `எதிரிப்படையின் கடைசிப் பகுதிக்கு வந்துவிட்டோம். இவ்வளவு தொலைவு ஏறி வருதல் நல்லதன்று. ஆனால், இத்தனை நாள் களத்துக்கு வராத இந்தத் துரோகி, இன்று போர்க்களத்துக்குள் வந்துள்ளான். இவனை இன்றோடு கொன்றழிக்காமல் விட்டால் பறம்புக்குக் கடும்பாதிப்பைத் தொடர்ந்து உருவாக்குவான். எனவே, இன்றைய போரில் தனக்கு என்ன நேர்ந்தாலும் மையூர்கிழாரைக் கொன்றழிக்காமல் விடக் கூடாது’ என்ற உறுதியோடு அவனை விரட்டிச் சென்றார் வேட்டூர்பழையன். 

முடியனும் இரவாதனும், வேந்தர்படையின் இரண்டாம்நிலையைக் கடந்து மூன்றாம்நிலையை அடைந்தனர். உறுமன்கொடியின் தடுப்பரண்கள் சிதறிப்பறந்தன. எதிர்கொள்ளவே முடியாத தாக்குதலால் நிலைகுலைந்துகொண்டிருந்தான் உறுமன்கொடி. முடியனும் இரவாதனும் ஒரே களத்தில் ஒன்றாய் நின்று இதுவரை போரிட்டதில்லை. தன் மகன் எப்படிப் போர்புரிவான் என்பதை மற்றவர்கள் சொல்லித்தான் முடியன் கேட்டுள்ளான். தட்டியங்காட்டில்தான் அவனது தாக்குதலை முடியனால் பார்க்க முடிந்தது.  

இன்று இருவரும் ஒரே படைப்பிரிவில் முன்னேறிப் பாய்க்கின்றனர். உள்ளுக்குள் பெருமிதம் இருந்தாலும் கண்களில் அதைக் காட்டிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு தாக்குதலை முன்னெடுத்தான் முடியன். தந்தையோடு இணைந்து களத்தில் நின்று போராடும் இந்நாளில், வழக்கத்தைவிட வீரியமாக இருந்தது இரவாதனின் தாக்குதல். சூளூர் வீரர்கள் முன்புற அணியில் தாக்கி முன்னேற, பறம்பின் குதிரைப்படை வேந்தர்படையின் மூன்றாம் நிலைக்குள் வகுடுபிளந்து போய்க்கொண்டிருந்தது. 

குளவன்திட்டிலிருந்து போர்க்களத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. `பறம்பின் குதிரைப்படை இதே வேகத்தில் முன்னேறினால் இன்னும் சிறிது நேரத்தில் மூஞ்சலை நெருங்கிவிட முடியும்’ எனக் கணித்தான். குகைக்குள்ளிருந்து மீண்டும் ஓசை எழுப்பினான் இகுளிக்கிழவன். சற்று நேரத்துக்குப் பிறகுதான் அவனது ஓசையைக் கவனித்தான் பாரி. இகுளிக்கிழவன் கூறினான், சுடர் இடதுபுறம் அசையப்போகிறது. இப்போது வரப்போவது காற்றி. அது தட்டியங்காட்டை இடதுபுறமாக உருட்டிச்செல்லும் என்று சொல்லி, கையை உயர்த்தினான். ஆனால் பாரியோ, கூவல்குடியினரை நோக்கிக் கை அசைக்கவில்லை. 

சற்றே அதிர்ச்சிக்குள்ளானான் இகுளிக்கிழவன். ``ஏன் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்த மறுக்கிறாய்?” என்று இகுளிக்கிழவன் கேட்டதற்குப் பாரி சொன்னான், ``பறம்பின் குதிரைப்படை வீரர்கள் எதிரிகளின் மூன்றாம்நிலைக்குள் நுழைந்துவிட்டனர். இந்தச் சூழலில் முதல்நிலையில் இருந்து எய்யப்படும் அம்பு மூன்றாம்நிலையில் இருக்கும் நம் வீரர்களையே தாக்க வாய்ப்புண்டு. எனவேதான் உத்தரவிடவில்லை.”

இகுளிக்கிழவன் மீண்டும் விளக்கைப் பார்த்தான். சாய்ந்த சுடர் மீண்டும் நிமிர நேரமானது.

தேக்கன் கூறியபடி வாங்கித் தாக்காமல், ஏறித் தாக்கிய கூழையன் ஒருகட்டத்துக்குப் பிறகு களைப்படையத் தொடங்கினான். சிறிது நேரம் பின்புறப் படையில் எதுவும் நிகழ்ந்துவிடுமோ என்று கவனத்தைச் செலுத்திய கருங்கைவாணன், நேரம் கடந்த பிறகு தாக்குதலைத் தீவிரப்படுத்தினான். தனது கவனத்தைத் திருப்பவே கிழவன் இப்படிச் சொல்லியுள்ளான் என நினைத்தான் கருங்கைவாணன். இப்போதும் கூழையன் தற்காப்பு நிலையில் நிற்காமல் முன்களம் நோக்கியே பாய்ந்துகொண்டிருந்தான். 

அவனது செயல் பொருத்தமானதில்லை. எதிரிப்படைத் தளபதியை மிகவும் குறைத்து மதிப்பிடுவதால் இவ்வாறு செய்கிறான் எனத் தேக்கனுக்குத் தோன்றியது. ஆனால், போரிட்டுக் கொண்டிருப்பவனை நோக்கிச் சத்தம்போட்டுச் சொல்வது குழப்பதையோ, தவறான புரிதலையோ உருவாக்கிவிடும் என்பதால் அமைதி காத்தான். கூழையன் அணிந்திருக்கும் மெய்க்கவசம் எவ்வளவு வேகமான தாக்குதலையும் வாங்கி நிற்கும். எனவே, கவனமாகத் தாக்கினால்தான் இவனை வீழ்த்த முடியும் என நினைத்தபடியே வாளைச் சுழற்றினான் கருங்கைவாணன். இருவரின் கால்களும் பின்னல் வடிவில் வட்டக்களத்தில் நகர்ந்துகொண்டிருந்தன.

சற்றும் எதிர்பாராமல் காற்று பெருவேகத்தோடு வீசியது. அப்போது எதிர்த்திசையில் கூழையனும் பறம்பின் திசையில் கருங்கைவாணனும் நின்றுகொண்டிருந்தனர். `இப்பெருங்காற்று வீசும்போது காரமலையிலிருந்து ஏன் ஓசை எழுப்பப்படவில்லை; பாரி என்ன செய்துகொண்டிருக்கிறான்?’ என்று கண நேரத்தில் கூழையனின் சிந்தனை காற்றின் வழியே குளவன்திட்டை அடைந்தபோது கருங்கைவாணனின் வாள் கூழையனின் கழுத்துப் பகுதியில் இறங்கி வெளியேறியது.

மூன்றாம்நிலைப் படையைப் பறம்பின் குதிரைப்படை பிளந்து முன்னேறிக்கொண்டி ருந்தபோது ஆபத்து அதன் உச்சத்தை அடைந்தது. உறுமன்கொடியின் கைகளில் இருந்து படையின் கட்டுப்பாடு வழுவத் தொடங்கியது. ஒரு தளபதி வேறு வழியே இன்றிச் செய்யும் கடைசிச் செயலுக்கான உத்தரவை இட்டான். முச்சங்கு ஊதப்பட்டது. அது பேராபத்தைத் தெரிவிக்கும் குறியீடு. மற்ற சங்குகள் ஊதப்பட்டால் அது ஆபத்து பற்றித் தலைமைத் தளபதிக்குத் தெரிவிக்கும் செயல். அவர் உடனடியாக உரிய ஏற்பாட்டைச் செய்வார். ஆனால், முச்சங்கு ஊதப்பட்டால் தலைமைத் தளபதி உட்பட அதைக் கேட்கும் ஒவ்வொரு தளபதியும் உடனடியாக அந்த இடத்துக்கு வந்துசேர வேண்டும்.

ஆனால், உடனடியாக வரும் நிலையில் வேந்தர்படைத் தளபதிகள் எவரும் இல்லை. நகரிவீரனும் சூலக்கையனும் முன்வகுக்கப்பட்ட திட்டப்படி படையின் பின்புறத்தைக் கடந்து மையூர்கிழாரால் கொண்டுசெல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். கருங்கைவாணனோ பறம்புப்படையின் முன்களத்தில் ஏறிப்போய்ப் போரிட்டுக்கொண்டிருந்தான். விற்படைத் தளபதி துடும்பனோ, உதிரனின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மிகவும் பின்னகர்ந்துகொண்டிருந்தான். உறுமன்கொடி எதிர்பார்த்த எந்த ஒரு தளபதியும் உதவிக்கு வரவில்லை. பறம்பின் குதிரைப்படைத் தாக்குதல் இணையற்ற வேகத்தில் இருந்தது. 

முடியனும் இரவாதனும் கணக்கின்றிக் கொன்றழித்து முன்னேறினர். எங்கும் குருதி பீறிட்டது. சூளூர் வீரர்களின் பாய்ச்சலுக்கு முன் வேந்தர்படையால் நிலைகொள்ள முடியவில்லை. உறுமன்கொடி முச்சங்கை மீண்டும் மீண்டும் ஊதச் சொன்னான். களத்தில் ஓசையெழுப்ப நிறுத்தப்பட்டிருந்த அனைவரும் இனி இந்த ஓசையையே எதிரொலிக்க வேண்டும். நிலைமை மிக மோசமாகிறது என்பதன் அறிகுறி இது.

மூன்றாம் நிலையில் மூஞ்சலுக்குப் பக்கத்தில் முழுப் பாதுகாப்போடு நின்றிருந்த வேந்தர்களுக்கு இப்போதுதான் ஆபத்தின் அளவு புரிந்தது. தங்கள் தளபதிகள் ஒன்றுகூட முடியாதபடி சிதறிக்கிடக்கின்றனர்; எதிரிகளின் குதிரைப்படையோ மூஞ்சலை நெருங்கிக்கொண்டிருக்கிறது எனத் தெரிந்ததும் பொதியவெற்பனும் உதியஞ்சேரலும் உறுமன்கொடிக்கு உதவ, தங்களின் படைப்பிரிவினரோடு விரைந்தனர். சோழவேழன், விற்படைத் தளபதி துடும்பனுக்கு உதவ விரைந்தான்.

கூழையன் மண்ணில் சரிந்த பிறகு, தேக்கன் களத்தில் இறங்கினான். கருங்கைவாணன் எதிர்பார்த்த வேட்டை இப்போது அவன் முன்னால் வாளேந்தி நின்றது. ஆனால், படையின் முன்வரிசையிலிருந்து மாறி மாறி ஓசை எழுப்புவதைப் போன்ற உணர்வு தொடர்ந்து இருந்தது. அவனால் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. தேக்கன் வாளை ஏந்திப்பிடித்தான். விலா எலும்பு குத்தி உள்ளிறங்குவதுபோல வலியெடுத்தது. ஆனாலும் நிலைமையைச் சமாளித்தாக வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் கருங்கைவாணனைக் கொன்றழிக்க வேண்டும் என்ற முடிவோடு மீண்டும் முன்னகர்ந்தான்.  

இருவரும் சுழற்கட்டுக்கட்டி கேடயத்தை முன்னகர்த்தியபடி வட்டக்களத்தில் கால்களை நகர்த்தினர். நேற்றைய போரில் கிழவன் வீசிய வாளை சூலக்கையன் தடுத்திருக்காவிட்டால் நிலைமை என்னவாகியிருக்கும் என்று நினைத்த கணத்தில், அவனுக்கு வெறி உச்சத்தில் ஏறியது. இன்றோடு இவனைக் கொன்றழிக்க வேண்டும் என்று வாளின் கைப்பிடி நொறுங்குவதுபோல இறுகப்பிடித்தான். கால்கள் தாவி முன்செல்ல ஆயத்தமானபோதுதான், முச்சங்கின் பேரோசை இடைவிடாது எதிரொலித்தது. 

ஒரு கணம் நடுங்கி நின்றான். `அப்படியென்றால், அப்போதிருந்து சங்கோசை கேட்டுக்கொண்டே இருந்ததா? நிலைமை கைமீறியதால்தான் முச்சங்கை விடாது ஊதவேண்டிய நிலை வந்துள்ளது. கிழவன் சொன்னது உண்மைதானா?’ எனத் திணறி நின்றான் கருங்கைவாணன். தேக்கன் வலிமையோடு இருந்திருந்தால் இந்தக் கணத்தில் கருங்கைவாணனை வெட்டிச்சரித்திருப்பான். வாளை உயர்த்தியபடி செயலற்று நின்ற கருங்கைவாணனை நோக்கிப் பாய்ந்து வாள் வீச முடியாத நிலையில் தேக்கன் இருந்ததால், அவன் தப்பித்துப்போய் குதிரையில் ஏறினான். 

கண்பார்வையின் எல்லையில் மூஞ்சல் கூடாரத்தின் மேல்முனைகள் தெரியத் தொடங்கியபோது பறம்புவீரர்கள் உச்ச அளவுத் தாக்குதலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். முடியனின் மனதுக்குள் பற்றியெறிந்த தீ சுழற்காற்றைப்போல வேகம்கொண்டது. எதிரிகளின் படைவீரர்களால் மறித்து நின்று போரிட முடியவில்லை. இந்நிலையில்தான் பொதியவெற்பனும் உதியஞ்சேரலும் தங்களின் வலிமைமிகுந்த படையோடு வந்துசேர்ந்தனர். 

உடல் முழுவதும் கவசம் அணிந்த சிறப்புப்படை வீரர்கள் எதிரிகளின் தாக்குதலை வலிமையோடு சந்தித்தனர். மூஞ்சலைக் கண்கொண்டு பார்த்த கணத்தில், பறம்புவீரர்களின் தாக்குதல் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. வேந்தர்களின் சிறப்புப்படைப் பிரிவு அவர்களின் வேகத்தை நிறுத்த, பேராற்றலை வெளிப்படுத்தியது. 

கைகள் மட்டுமல்ல, முழு உடலும் நடுங்கியது. மணலின் மீது நீண்டுபடர்ந்தது நாழிகைக் கோலின் நிழல். அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த போது திசைவேழரின் கண்களில் நீர் பெருகியது; மனம் துடித்தது. பதற்றத்தில் அவரின் உடல் முழுவதும் ஆடத் தொடங்கியது. எதையும்வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது என நினைத்தார். ஆனால், அவரது வயது அனைத்தையும் வெளிக்காட்டியது. கைகளை மெள்ள மேலே உயர்த்தினார். தட்டியங்காடெங்கும் முரசின் ஓசை மேலெழுந்தது. மூன்றாம் நாள் போர் முடிவுக்கு வந்தது. 

அதிர்ந்து நின்றான் முடியன். முரசின் ஓசையை அவனால் நம்பவே முடிய வில்லை. இன்னும் சிறுபொழுது இருந்தால்கூட நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும். பறம்பின் குதிரைப்படை வீரர்கள் அனைவரும் அளவுகடந்த ஆவேசத்தோடு போரிட்டனர். `இலக்கை இவ்வளவு நெருங்கியும் பயனின்றிப் போய்விட்டதே!’ என வேதனைப்பட்டான் இரவாதன். முடியனோ, முதற்கணத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறுகணத்தில் சரிசெய்துகொண்டான். `மூஞ்சலைக் கண்கொண்டு பார்த்துவிட்டோம். இனி, பறம்பின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது!’ எனத் தோன்றியது.

போர்க்களத்தை விட்டு வெகுதொலைவுக்கு அப்பால் போயிருந்தனர் மையூர்கிழாரும் வேட்டூர்பழையனும். ஒருவரை ஒருவர் வீழ்த்தியே தீருவது என்ற உறுதியோடு விரைந்துகொண்டிருந்தனர். காரமலைக் குன்றுகளின் அடிவாரத்தில் முன்சென்ற மையூர்கிழாரின் தேர், பார்வையிலிருந்து சட்டென மறைந்தது. `எந்தப் பக்கம் போனான்?’ என நினைத்தபடி சற்றே திரும்பினார் வேட்டூர்பழையன். எதிரில் இரு தளபதிகளான நகரிவீரனும் சூலக்கையனும் இருநூறு குதிரைவீரர்கள் சூழ வந்து நின்றனர்.

பழையன் விரைந்து வில்லுயர்த்திய போது, தளபதிகள் இருவரும் அம்பை நாணிற்பூட்டி இழுத்தனர். வெகு தொலைவுக்கு அப்பால் மெல்லியதாகக் கேட்டது முரசின் ஓசை.

பழையன் நாண் இழுத்த அம்பைக் கீழிறக்கி மண் நோக்கி விடுவித்தான். விடுபட்ட அம்பு மண்ணைக் குத்தி நின்றது. அதைப் பார்த்தபடி நிமிர்ந்து எதிரியைப் பார்த்தான். ஆனால், அவர்கள் இருவரும் தத்தம் வில்களைத் தாழ்த்தவில்லை.

நகரிவீரன் சொன்னான், ``போரின் விதிகள் போர்க்களத்துக்கு மட்டும்தான். நாமோ களம் நீங்கி நெடுநேரமாகிவிட்டது” - சொல்லும்போதே விடுபட்டுச் சீறின அம்புகள். 

சட்டெனத் தடுப்புக்கேடயத்தைத் தூக்கும் முன்பு, எண்ணற்ற அம்புகள் வந்து எகிறின. நெஞ்சில் தைத்த அம்புகள் எல்லாம் மெய்க்கவசத்தில் குத்தி முறிந்தன. ஆனால், வலது தோளிலும் இடது காலிலும் குத்திய இரு அம்புகள் குருதியைப் பீய்ச்சின. 

கண்ணிமைக்கும் நேரத்தில் அம்புகளால் தாக்கப்பட்டு வலவன் மண்ணில் சரிந்தான். உருவிய வாளோடு தேரிலிருந்து குதித்து இறங்கிய பழையன், ஓடி மரங்களுக்குள் நுழைந்தான்.

தேரையும் குதிரையையும் விட்டு இறங்கிய வீரர்கள், அவனை விரட்டியபடி மலை ஏறினர். அப்போது ஓசை எழுப்பியபடி இன்னொரு புறத்திலிருந்து வந்தார் மையூர்கிழார். ``இனி அவனைத் தொடர முயலாதீர்கள். அது ஆபத்தில் முடிந்துவிடும்.”

சூலக்கையன் கத்திச் சொன்னான், ``கைகால்களில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளான். அவனால், அதிக தொலைவு செல்ல முடியாது. ஆயுதத்தையும் கைக்கொள்ள முடியாது. எனவே, அவனை எளிதில் கொன்றழித்துவிடலாம்” என்று விரட்டிக்கொண்டு மலையேறினர்.

இங்கும் அங்குமாக வேட்டூர் பழையனது உருவம் மறைந்து மேலேறிக்கொண்டிருந்தது. வீரர்கள் சுற்றிவளைத்துக் குன்றின்மேல் ஏறினர். பொழுது மறைந்துகொண்டிருந்தது. ``அதிக தொலைவு செல்ல முடியாது விரட்டிப்பிடியுங்கள்” என்று கத்திக்கொண்டே முன்னேறினர் தளபதிகள் இருவரும்.

சிறுகுன்றின் உச்சிக்குச் சென்று மறுபுறம் இறங்கத் தொடங்கினர். வானத்தில் கருமையேறியது. தொலைவிலிருந்து வீரன் ஒருவன், ``அதோ, அங்கே போகிறான்” எனச் சத்தமிட்டான்.

எல்லோரும் அந்த இடம் நோக்கி ஓடினர். வேட்டூர்பழையன், தனித்திருந்த மரம் ஒன்றை நோக்கித் தடுமாறித் தடுமாறி நடந்தார். தளபதிகளும் வீரர்களும் அவரை நோக்கி ஓடினர்.
மரத்தின் அடிவாரத்துக்கு வந்த பழையன், மரத்தோடு சாய்ந்து நின்றார். ஓடிவந்த தளபதிகள் உருவிய வாளோடு அவன் அருகே வந்தனர். வீரர்கள் அனைவரும் மரத்தைச் சூழ்ந்து நெருங்கினர்.

நகரிவீரன் ஏந்திய வாளோடு பழையனை நெருங்கியபடி சொன்னான், ``பறம்புத் தளபதி கோழைபோல் ஓடி ஒளிந்தான் என்று உன்னைப் பற்றி மக்கள் கூறுவர்.”

அதிக அளவு குருதி கொட்டிவிட்டதால் மிகவும் களைத்துப்போன வேட்டூர்பழையன் சொன்னான், ``இல்லை, இரண்டு தளபதிகளையும் நூற்றுக்கணக்கான வீரர்களையும் கொன்றுவிட்டே செத்தான் பழையன் என்றுதான் மக்கள் பேசுவர்.”

வாய்விட்டுச் சிரித்தான் நகரிவீரன், ``நீ, எங்கள் அனைவரையும் கொல்லப்போகிறாயா?” என்று சொன்னபோது அருகில் இருந்தவன் ஏதோ மாற்றத்தை உணரத் தொடங்கினான். மூச்சுக்குழல் எரிச்சலடையத் தொடங்கியபோது, மரத்தில் சாய்ந்திருந்த பழையன் சொன்னான், ``இனி நீங்கள் யாரும் உயிர் பிழைக்க முடியாது. உங்களின் மூச்சுக்காற்றுக்குள் சொனைகள் இறங்கிவிட்டன” என்று கூறியவர், மரத்தோடு சரிந்தபடியே சொன்னார் ``இது ஆட்கொல்லிமரம்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Aug 28, 2018 8:32 pm

மூன்றாம் நாள் போர் முடிவுறுவதைக் குறிக்கும் முரசின் ஓசை, எங்கும் கேட்டது. ஓசை கேட்டதும் காயம்பட்டவர்களைத் தூக்கிச் செல்லும் பணியாளர்கள் களம் நோக்கி ஓடினர். வீழ்ந்து கிடப்பவர்களை எடுத்துச்செல்ல கயிற்றுத்தொட்டிலைத் தூக்கியபடி இரலிமேட்டிலிருந்து பெருங்கூட்டம் தட்டியங்காட்டுக்குள் இறங்கியபோது, திசைவேழரின் மாணவன் ஒருவன் இரலிமேடு நோக்கி மேலேறிக்கொண்டிருந்தான். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83b_1534847883
நேற்றைக்கு இதே பொழுதில் கபிலரை அழைக்க வந்த மாணவனே இன்றும் வந்தான். வாரிக்கையனும் கபிலரும் ஒரே இடத்தில்தான் இருந்தனர். போர் முடிவுற்ற நேரத்தின் பதற்றம் எல்லோருக்குள்ளிருந்தும் மேலேறிவந்தது. அப்போது அங்கு வந்த அவன், கபிலரை வணங்கிச் சொன்னான், ``ஆசான் உங்களை அழைத்து வரச் சொன்னார்.”

கபிலர் அதிர்ச்சியோடு வாரிக்கையனைப் பார்த்தார். `நேற்று ஓங்கலத்தால் சிக்கல் ஏற்பட்டதைப்போல, இன்றும் ஏதோ பிரச்னையில் மாட்டிவிட்டீர்களா?’ என்று கேட்பதுபோல் இருந்தது அவரது பார்வை. அதைப் புரிந்துகொண்டு வாரிக்கையன் சொன்னார், ``அப்படி எதுவும் நாம் செய்யவில்லை.”

``பிறகு ஏன் அழைத்து வரச் சொல்லியுள்ளார்?”

``என்னிடம் கேட்டால், எனக்கென்ன தெரியும்?” என்று கேட்டவர் சற்று இடைவெளி விட்டு, ``நீங்கள்தான் முன்கூட்டியே சொல்லிவிட்டீர்களே” என்றார்.

``நான் என்ன சொன்னேன்?”

``திசைவேழர் யார் என நான் கேட்டதற்கு, `அறத்தின் அடையாளம்’ என்றீர்கள். பாரியிடம் பேசியபோது `போர்க்களத்தில் அறம் நெடுநேரம் உயிர்வாழாது’ என்றீர்கள்.”

வாரிக்கையனின் ஒப்பீட்டால் நடுங்கிப்போனார் கபிலர். ``ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?” எனப் பதறிக் கேட்டார்.

வாரிக்கையன் சொன்னார், ``நாள்கள் செல்லச் செல்ல, போர்க்களத்தில் நிற்கும் மனிதன் தனது வலிமையை இழந்துவிடுவான். முடிவுறாத வேட்டையை எந்த உயிரினமும் நடத்தாது. மனிதன்தான் `போர்’ என்ற பெயரில் அதை நடத்திக்கொண்டிருக்கிறான். இரக்கமற்ற அந்தக் காட்சிகளைப் பொழுதெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதைப்போலக் கொடுமையானது வேறில்லை. கண்களைத் திறப்பதைவிடக் கடினமானது மூடுவது. மனத்துக்குள் விழுந்துகிடக்கும் கொடூரங்களை எதைக்கொண்டு அப்புறப்படுத்த முடியும்? புறமும் அகமும் வெட்டுண்ட மனிதச்சதைகள் துடித்துக்கொண்டிருக்க, எதிலிருந்து தப்பித்து எங்கே ஓடுவார் அவர்? யாரிடமாவது பேசினால் இந்தத் துயரிலிருந்து மீண்டெழ முடியுமா என்ற தவிப்பு அவரை அலைக்கழிக்கும். அந்தத் தவிப்பிலிருந்து மீள்வதற்கு உங்களை அழைத்திருப்பார்.” 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83a_1534847969
வாரிக்கையனின் விளக்கம், கபிலரைப் பொறிகலங்கச்செய்தது. போர்க்களம் நோக்கிப் பெருங்கலக்கத்தோடு நடக்கத் தொடங்கினார். அவலத்தின் துயரத்தை நெருங்க, கால்கள் அஞ்சின. காட்சிகளை, கண்கொண்டு பார்க்க முடியவில்லை. போர் முடிவுற்ற கணத்தில் களம் நோக்கிப் பயணிப்பதைப்போல் கொடுந்துன்பம் வேறில்லை. ஆயுதங்கள் துளைத்துக்கிடக்கும் மனிதர்களின் ஓலம், எங்கும் கேட்டது. உடல்கள் கிடத்தப்பட்ட கயிற்றுத்தொட்டில்களை சாரிசாரியாகத் தூக்கிச்சென்றனர். எல்லாவற்றையும் கடந்து நாழிகைவட்டில் இருக்கும் பரண் நோக்கி நடந்தார் கபிலர்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83c_1534847993

அவரது வருகைக்காகக் காத்திருந்தார் திசைவேழர். திசைவேழரின் முகத்தில் இருளேறியிருந்தது. என்ன நடந்திருக்கும் என, கபிலரால் சிந்திக்க முடியவில்லை. வணங்கியபடி அவர் அருகில் அமர்ந்தார்.

`நிலைமான் கோல்சொல்லியின் உயிர் எனக் கருதப்படும் நாழிகைவட்டிலையும் நாழிகைக்கோலினையும் என்னிடமிருந்து பிடுங்கியெறிந்தது காற்று’ என்றுதான் சொல்ல நினைத்தார் திசைவேழர். ஆனால், அவரை அறியாமலேயே, முடத்திருக்கண்ணைப் பற்றிய பேச்சைத் தொடங்கினார்.

``தவறிழைத்தவன் தண்டனையின் வழியே காட்டிக்கொடுத்த நிலத்தை நாம் தேர்வுசெய்திருக்கக் கூடாதோ?” எனக் கேட்டார்.

இப்போது ஏன் இதைக் கேட்கிறார் எனக் கபிலருக்குப் புரியவில்லை. ``தவறேதும் நடந்ததா?” எனக் கேட்டார் கபிலர்.

``எல்லாம் தவறுதலாக நடக்கின்றன” என்றார் திசைவேழர்.

எதைச் சொல்கிறார் என்பது புரியாமல் விழித்தார் கபிலர்.

``நிலைமான் கோல்சொல்லியின் உயிர்நாடி நாழிகைவட்டிலும் கோலும்தானே. அவை இரண்டையும் இன்று என்னிடமிருந்து காற்று பறித்துக்கொண்டது” என்று சொன்னவர், ``இன்று எதைக்கொண்டு பொழுதளந்தேன் தெரியுமா?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83d_1534848028
கலங்கிய அவருடைய கண்களையே கூர்ந்துபார்த்தார் கபிலர்.

``கொல்லப்பட்ட போர்வீரனின் தசைகள் ஒட்டியிருந்த ஒரு கேடயத்தில், குருதியால் ஊறிப்போன மண் எடுத்து, முறிந்த அம்பை நட்டுப் பொழுதளந்தேன்.”

அவரது சொல்லிலிருந்த நடுக்கம் கபிலரின் மீதும் பரவியது.

``போர்க்களத்தில் மரணத்தின் கருவிகொண்டு பொழுதளந்துள்ளேன். இனி இந்த நிலம் எண்ணிப்பார்க்க முடியாத மரணத்தைக் காணும். கவசங்கள் வீரர்களைக் காத்து நிற்காது. முறிந்த அம்புகளால் நீளும் பொழுது வீரர்களின் குருதியைக் குடித்துக் கொண்டேயிருக்கும். மரணத்தின் அடையாளமே பொழுதென ஆகிவிட்டது. இனி போர்க்களத்தின் பொழுதை மரணமே ஆட்சிசெய்யும்.”

திசைவேழரின் சொற்கள் கபிலரை உறையச்செய்தன.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83e_1534848052

``இந்த நிலத்தைத் தேர்வுசெய்யும்போது நான் சொன்னது நினைவிருக்கிறதா உங்களுக்கு? `நாம் இழைத்த தவறுகளுக்கும் தண்டனை இந்தத் தட்டியங்காடுதான். நமது தலை சாயும் வரையிலும் இந்த நிலம் நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும்’ என்றேனே!”

`ஆம்’ எனத் தலையசைத்தார் கபிலர்.

``துரத்திச் செல்லும் இடைவெளியைக் கூட இந்த நிலம் வழங்காது என நினைக்கிறேன். இந்த நிலத்திலேயே நானும் சாய்ந்துவிடுவேன். முடத் திருக்கண்ணின் உயிர் பிரியும்போது அவன் இழைத்த தவற்றுக்கான தண்டனை என நினைத்தேன். எனது உயிர் பிரியும்போதும் அதையே நினைப்பேன்” என்றவர், நின்றுகொண்டிருக்கும் பரண்கம்பங்களைக் கைகளால் தொட்டபடி, ``எனது வாழ்வின் பொழுதை இந்தப் பரண் அளந்து கொண்டிருக்கிறது கபிலரே. எந்தக் கணமும் அளவை முடியலாம்.”

கலங்கிப்போயிருக்கும் திசைவேழரை எந்தச் சொல்கொண்டு மீட்பது எனத் தெரியாமல் திணறிய கபிலர் சொன்னார், ``நீங்கள் இன்னும் நெடுநாள் வாழவேண்டியவர். மரணம் பற்றி அதற்குள் ஏன் பேசுகிறீர்கள்?”

``வாழ்வை எளிய கணக்குகளால் அளவிட முடிவதில்லை புலவரே. பொங்கும் புதுப்புனலைப் பார்த்து மகிழவே வைகையின் கரையில் குடில் அமைத்துத் தங்கினேன். ஆனால் இப்போதோ, வீழ்ந்துகிடக்கும் மனித உடலுக்குள்ளிருந்து பல்லாயிரம் கறையான்கள் பொங்கி மேலெழும் காட்சியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் என் கால்களாலேயே இங்கு இழுத்து வரப்பட்டேன். எத்தனையோ முறை இதைத் தவிர்க்க நினைத்தேன். ஆனால், எனது சொல்லின் வழியே நான் வரவழைக்கப்பட்டேன். நான் நன்கு அறிவேன், வேந்தர்கள் அறவழிப்பட்டு வாழ விரும்புவார்கள். ஆனால், அறம் எனப்படுவது விருப்பத்தின்பாற்பட்ட செயலன்று; அது இயல்பின்பாற்பட்டது; அன்பின்பாற்பட்டது. எனவேதான் வேந்தர்களால் அறவழியில் வாழ முடிவதில்லை. அதிகாரமும் அறமும் இரண்டு எல்லைகள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறம் பேணவே முடியாது. அப்படியிருக்க, என்னை அழைத்து ‘அறம் பிறழாமல் இந்தப் போரை நடத்துங்கள்’ எனச் சொல்கிறார்கள் என்றால், நான் ஏதோ ஒருவகையில் அவர்களுக் கானவனாக இருந்திருக்கிறேன். அதிகாரத்தின் மறுப்பையோ நிராகரிப்பையோ நான் பெறவில்லை. நான் பேணிய அறம் அவர்களின் அதிகாரத்தை உறுத்தாமல் இசைவாய் இருந்திருக்கிறது. அதற்கான தண்டனைதான் இது.”

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83f_1534848076கபிலருக்கு என்ன மறுமொழி சொல்வதெனத் தெரியவில்லை. ஆனால், துயரத்தில் மூழ்கும் அவரது மனத்தை மீண்டெழச்செய்ய வேண்டும் என்று மட்டும் தோன்றியது, ``இந்தக் கொடும் தண்டனையை அறத்தின் பொருட்டே நாம் ஏற்றிருக்கிறோம். ஒருவகையில் இதுவும் நமது கடமைதானே!” என்றார்.

``வெல்ல நினைப்பவர்களும் அழிக்க நினைப்பவர்களும்தாம் போரை விரும்புகிறார்கள். வாழ நினைப்பவர்கள் வேறு வழியின்றி அந்தப் போரை எதிர்கொள்கின்றனர். நான் முதல்தரப்புக்காகப் பரணேறியிருக்கிறேன். எனவே, எனது உள்ளொளி அணைந்து கொண்டிருக்கிறது. நீங்களோ இரண்டாம் தரப்புக்காக நிற்கிறீர். எனவேதான் அணையவிடாமல் தடுக்கும் துணிவை இழக்காமல் இருக்கிறீர்” என்று சொன்னவரின் கண்களில் நீர் பெருகியது.

சற்றே தலை கவிழ்ந்த திசைவேழர் குரல் தாழ்த்திச் சொன்னார், ``என்னை ஆற்றுப்படுத்த முயலாதீர்கள். நேற்றிரவுதான் நான் நீலனைப் பற்றி அறிந்தேன். எவ்வளவு பெரிய சூழ்ச்சியில் நான் சிக்கவைக்கப்பட்டுள்ளேன். நீங்களாவது எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?”

சற்றே தயங்கிய குரலில், ``தாங்கள் நிலைமான் கோல்சொல்லியாக இருக்க ஒப்புக்கொண்ட பிறகு, பேரரசர்கள் வீற்றிருக்கும் அவையில்தானே நான் உங்களைச் சந்தித்தேன். எனவே, இதைப் பற்றிப் பேசும் சூழல் இல்லாமல்போனது” என்றார் கபிலர்.

``இந்தப் போருக்குப் பின்னணியில் இப்படியொரு செயல் நடந்திருக்கிறது எனத் தெரிந்திருந்தால், நான் நிலைமானாக இருக்க ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன் என்பதை நீங்கள் நம்பத் தவறிவிட்டீர்கள். எனவே, இதைப் பற்றிப் பேச வேண்டும் என உங்களுக்குத் தோன்றவில்லை.”


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Aug 28, 2018 8:41 pm

திசைவேழரின் சொற்களைக் கபிலரால் எதிர்கொள்ள முடியவில்லை. நடுங்கிய தன் கைகளைக் குவித்தபடி எதையோ சொல்லவந்தார் கபிலர். வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83g_1534848102

சட்டென அவரின் கைகளைப் பற்றிய திசைவேழர் சொன்னார், ``என் தோழனாய் என்னை நீங்கள் கவனப்படுத்தத் தவறிவிட்டீர்கள். அதை எனது மனம் ஏற்றுக்கொள்ளாது. ஆனால், நீங்கள் பாரியின் தரப்புக்காக நிற்கிறீர். எனவே, உம் கைகள் நடுங்கக் கூடாது.”

பேரரசர்கள் கூடியுள்ள கூடாரத்தில் பேரமைதி நீடித்தது. மையூர்கிழார் தனது வாக்குமூலத்தைச் சொல்லி முடித்துவிட்டு வெளியேறினார். ``மலைமீது ஏறிச் செல்ல வேண்டாம் என்று நான் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை” என்பதுதான் அவர் வலியுறுத்திச் சொன்னது.

ஆள்கொல்லி மரத்தின் அருகில் போகாமல் மிகத் தள்ளியிருந்த ஓரிரு வீரர்கள் தப்பிவந்து நடந்ததை விளக்கியுள்ளனர். வேந்தர்படையின் இரண்டு தளபதிகள் இன்றைய போரில் இறந்துள்ளனர். அதேநேரம் பறம்பின் தரப்புத் தளபதிகளான கூழையனும் வேட்டூர் பழையனும் கொல்லப் பட்டுள்ளனர்.

சம அளவில்தான் மரணங்கள் நிகழ்ந்துள்ளன எனத் திருப்திப்பட்டுக் கொள்ளும் நிலையில் இங்கு யாரும் இல்லை. ஏனெனில், இன்றைய போரில் பறம்பின் தாக்குதல் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. இதுவரை வாள் ஏந்தாமல் நின்றிருந்த அரசர்கள் இன்று தாக்குதல் முனைக்குப் போகவேண்டிய நிலைக்கு வந்துள்ளனர். மையூர்கிழார் அவை நீங்கி நீண்ட நேரமாயினும் யாரும் பேச்சைத் தொடங்கவில்லை.

முதன்முறையாக, போர்க்களம் பற்றிய அச்சம் அவையில் அமைதியின் வடிவில் பரவியிருந்தது. இரு தளபதிகளின் மரணம்கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக, பறம்பின் போர்முறைகள் விடை அறிய முடியாத கேள்விகளாக இருந்தன.

``காற்றின் வீச்சும் போக்கும் அம்பை இழுத்துச் செல்லும் அல்லது மறித்துச் சாய்க்கும்; வலுவிழக்கச் செய்யும். ஆனால், காற்றின் துணைகொண்டு எப்படி அம்பெய்ய முடியும்? காற்றின் வருகையை எப்படிக் கணித்தனர்? அது வருவதற்கு முன் எப்படி அம்பை விடுத்தனர்? கண்பார்வைக்கு அப்பால் அம்புகள் பறவைகளைப்போலப் பாய்ந்து செல்கின்றன. மனிதர்களால் இதுபோன்ற முயற்சியைச் செய்ய முடியுமா? நாம் மனிதர்களோடுதான் போரிட்டுக் கொண்டிருக்கிறோமா?” கேள்விகள் அடுக்கடுக்காய் மேலெழுந்தன. ஆனால், யாரிடமும் விடையில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83i_1534848139
உதியஞ்சேரல் சொன்னான், ``வீரர்களைத் தைத்த அம்புகளில் ஒன்றைக்கூட எளிதில் பிடுங்க முடியவில்லை. காற்றின் வேகத்தோடு உள்ளேறிய அம்புகள் சதைகளையும் நரம்புகளையும் பிய்த்துக்கொண்டுதான் வருகின்றன. இதுவரை யாரும் கேள்விப் பட்டிராத அம்புகளாக இருக்கின்றன. போர்முனைக்குத் தொடர்பே இல்லாமல் மூன்றாம் நிலையில் நின்றிருந்த வீரர்களில் எண்ணற்றோரை நாம் இழந்துள்ளோம்.”

``நம் தலைமைத் தளபதி எதிரிப்படையின் கடைசிப் பகுதியில் நின்றிருக்கும்போது, அவர்கள் நமது படையின் இறுதி அணியை வீழ்த்தியுள்ளனர். யாராலும் நெருங்கவே முடியாத அளவுக்கு நிறுத்தப்பட்டிருந்த படையணிகளைப் பிளந்துகொண்டு எதிரிகள் மூஞ்சல் வரை வந்துள்ளனர். முப்பெரும் பேரரசுகளின் தாக்குதல் திட்டங்களை ஒரு சிறுகுடி மன்னனின் படை அசைத்துப்பார்க்கிறது. இது எப்படி நிகழ்கிறது?” எனக் கேட்டார் சோழவேழன்.

கேள்வி, நேரடியாகக் கருங்கைவாணனை நோக்கியதாக இருந்தது. நேற்று அவன் வகுத்த திட்டப்படி பறம்பின் குடி முடியனும் குடி ஆசானும் கொல்லப்பட்டிருக்க வேண்டும். பறம்புப்படை இன்று பெரும்நெருக்கடியைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது, இதற்கு நேரெதிராக இருக்கிறது. போர்க்களத்தின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது தலைமைத் தளபதியான கருங்கைவாணனே!

அவையில் நடந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த குலசேகர பாண்டியன் இதுவரை கருத்தேதும் சொல்லவில்லை. போர்க்களத்தில் நிகழும் உரையாடலில் சொற்களின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர், இன்று எந்த ஒரு சொல்லையும் உச்சரிக்காமல் அமைதியாக இருந்தார். ஆனால், முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குக் கருங்கைவாணன் மறுமொழி சொல்லியே ஆகவேண்டிய நிலை இருந்தது.

அவன் பேரரசர்களை வணங்கிவிட்டுச் சொன்னான், ``நான் போர் தொடங்கும் முன்னரே தெரிவித்தேன். இவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் அல்லர்; நெருப்பைப் பிளந்து வெளிவரக்கூடியவர்கள். பாறைகளை உருட்டியும் மரங்களைப் பிடுங்கியெறிந்தும் தாக்கக்கூடியவர்கள். எந்தவொரு விலங்குடனும் மனிதன் விதிகளை உருவாக்கிப் போரிட முடியாது. இந்த விலங்குகளை அழிக்க வேண்டுமென்றால், நாமாக உருவாக்கிக்கொண்ட விதிகளைத் தூக்கியெறிய வேண்டும்.”வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83h_1534848189

கருங்கைவாணனின் சீற்றத்தை மறித்து நிறுத்தினார் சோழவேழன். ``மூன்று பேரரசுகள் ஒன்றிணைந்து ஒரு சிறுகுடி மன்னனை வீழ்த்தும் போரில், மரபுகளையும் விதிகளையும் விட்டொழிக்கச் சொல்வது இழிவென்று தோன்றவில்லையா?”

``நான் எதிரிகளை வீழ்த்த முடியாதவனல்ல. நம்முடைய எதிரிகள் யாரென்றே தெரியாமல் இந்தப் போர்க்களத்தின் விதிகள் வகுக்கப்பட்டுவிட்டன. இத்தனை ஆயிரம் குதிரைகள் போர்க்கொட்டிலில் செயலற்றுக் கிடப்பதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? இவ்வளவு தொலைவு பறக்கும் அம்புகளை மனிதனால் எய்துவிட முடியும் என்றால், யார் நம்புவார்கள்? நாம் நம்மைப்போன்ற மனிதர்களிடம் போரிடவில்லை. விலங்குக் குணமேறிய காட்டுமனிதர்கள். தீயகுணமும் அதீத ஆற்றலும்கொண்ட கூட்டம் அது. அவர்களால் நமது அறிவுப்புலனுக்கு எட்டாத பலவற்றைச் செய்ய முடியும். எனவேதான் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன், இந்தப் போரை வழக்கப்படி நடத்தக் கூடாது. ஒரே நாளில் முழுமுற்றாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.”

``ஒரே நாளிலா... எப்படி?” எனக் கேட்டார் சோழவேழன்.

``நம்மிடம் இருக்கும் அனைத்துவிதமான ஆயுதங்களையும் நஞ்சேற்றி எதிரிகளின் மொத்தப் படையையும் தாக்க வேண்டும். சிறிய வாய்ப்புகூடத் தரக் கூடாது. தாக்கப்பட்ட ஒருவன்கூட குற்றுயிராகவேனும் போர்க்களம் நீங்கி இரலிமேட்டில் கால்பதிக்கக் கூடாது. ஒரு பகலில் முழுமுற்றாகப் பறம்புப்படை அழித்தொழிக்கப்பட வேண்டும். மிச்சம் வைக்காமல் அழித்தால் மட்டுமே நாம் தட்டியங்காட்டை விட்டு வெற்றியோடு வெளியேற முடியும்.”

கருங்கைவாணன் முடிக்கும் முன் சோழவேழன் சொன்னார், ``எதிரி குறித்து, தலைமைத் தளபதிக்கு இவ்வளவு பதற்றமா?”
 
``சோழப்பேரரசருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பதற்றம், அவர்கள் வெல்ல முடியாதவர்கள் என்பதால் அல்ல; நாம் எண்ணிலடங்காத வீரர்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதால்தான்.”

இவ்வளவு நேரமும் அமைதிகாத்த குலசேகரபாண்டியன் இப்போது சொன்னார், ``நீ விதிகளில் நம்பிக்கையின்றி இருப்பதால்தான் எதிரிகளின் மீதான தாக்குதல் உத்தியை உன்னால் நம்பிக்கையோடு வகுக்க முடியவில்லை.”

அவை, அமைதியோடு அவரின் குரலைக் கேட்டது.

``அடுத்த கூடாரத்தில் நீலன் இருக்கிறான். அவனைப் போய்ப் பார். விதிகள் வகுக்கப்பட்ட இந்தப் போரில் பாரி வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையை அவனது ஒவ்வோர் அசைவிலும் உன்னால் உணர முடியும். எதிரிகளிடம் சிறைப்பட்ட ஒருவனுக்கு, அவனது படையின் மீதும் தாக்குதலின் மீதும் முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், சிறைப்பிடித்து வந்த உனக்கு அந்த நம்பிக்கை இல்லை.”

வாழ்வில் முதன்முறையாக, போர்க்களக் கூடாரத்தில் அவமானப்பட்டு நின்றான் கருங்கைவாணன்.

சினமேறிய அவனுடைய கண்கள் வெளித்தெரியாமல் இருக்க, தலை கவிழ்ந்தான்.

அவனுக்கான சொற்களுக்கு இடம் தராமல் குலசேகரபாண்டியன் சொல்லி முடித்தார். ``இரவு உணவை அருந்திய பிறகு கூடுவோம். நாளைய தாக்குதலுக்கான புதிய திட்டத்தோடு வா.”

கருங்கைவாணன் வெளியேறிய பிறகு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மட்டும் கூடாரத்தில் இருந்தனர். வெளிப்படையாக எல்லாவற்றையும் பேச முடியாத நிலை மூவேந்தருக்கும் இருந்தது.

`தந்தை சோழவேழன், கருங்கைவாணனைக் கடுஞ்சொற்கள்கொண்டு பேசியது சரியன்று’ என, செங்கனச்சோழனுக்குத் தோன்றியது. ஆனால், பொதியவெற்பனின் எண்ணம் வேறு மாதிரி இருந்தது. தந்தை குலசேகரபாண்டியன் இப்படிப் பேசியதுதான் சரி. தளபதியை அவமானப்படுத்தும் சொற்களை உரிய முறையில் பயன்படுத்தவேண்டியது போர்க்களச் செயல்பாட்டில் முக்கியமான ஒன்று.

தளபதியானவன் வேட்டை விலங்கின் சீற்றம் குறையாமல் போரை வழிநடத்திச் செல்ல வேண்டும். எதிரிகளை வீழ்த்த முடியாததற்கு அவனிடம் தெளிவான காரணங்கள் இருக்கக் கூடாது. போரின் போக்கை மீண்டும் மீண்டும் தனதாக்கிக்கொள்ளும் வெறி மட்டுமே அவனுக்கு வேண்டும். ஆனால் கருங்கைவாணனோ, எதிரிகளின் வலிமைக்கான காரணங்களைத் தன்னுடைய இரண்டு தோள்களிலும் சுமந்துகொண்டு திரிகிறான். அவற்றை வெட்டி வீழ்த்தவேண்டியதே இப்போதைய தேவை. குலசேகர பாண்டியன் அதைத்தான் செய்துள்ளார் எனப் பொதியவெற்பன் நினைத்தான்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 P83j_1534848229அவை, பேச்சின்றி நீடித்தது. அமைதியை முடிவுக்குக் கொண்டுவந்தது சோழவேழனின் குரல். ``போரில்லாத வழிமுறைகளைப் பற்றியும் நாம் தீவிரமாகச் சிந்திக்கவேண்டிய நேரம் இது.”

``உண்மைதான். ஆனால், மலைமக்களின் கனவுகள் மிகக் குறுகியவை. சமவெளி மனிதர்களைப்போல ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் அவர்கள் விலைபோய் விடுவதில்லை. குலச்சமூகத்தில் உடைப்பை ஏற்படுத்துவதும் எளிதன்று” என்றான் பொதியவெற்பன்.

``பறம்பில் வேளிர்குலம் மட்டும் இல்லையே. பல குலங்கள் இருக்கின்றனவல்லவா? அவற்றை நமக்கான முறையில் நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது?” எனக் கேட்டார் சோழவேழன்.

``நிறைய குலங்கள் இருக்கின்றன. ஆனால், எல்லோரும் தங்களின் குடிகளோடு பறம்பில் வசிக்கின்றனர். எனவே, எளிதில் பாரிக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள்” என்று சொன்ன குலசேகரபாண்டியன் சற்று இடைவெளிக்குப் பிறகு சொன்னார், ``அதுபோன்ற செயல்களுக்கு நீண்டகாலம் தேவை. போர்க்களத்தில் தாக்குதல் உச்சம்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவற்றைப் பற்றிச் சிந்திப்பது நம்மை வலிமை குன்றச் செய்துவிடும். இப்போதைய தேவை எதிரியை உருக்குலைக்கச் செய்யும் தாக்குதல் உத்திதான். கருங்கைவாணன் என்ன திட்டத்தோடு வருகிறான் என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

அவரின் கருத்தை ஏற்று உணவு அருந்தக் கலைந்தனர்.

அணுக்கக்காவலர்களும் மெய்க்காப்பாளர்களும் சூழ, பேரரசர்கள் தத்தமது கூடாரம் நோக்கிப் போயினர். காக்குவீரர்கள் அணிவகுக்க உதியஞ்சேரல் அவனது கூடாரத்துக்குள் நுழைந்தான். மூஞ்சல் நோக்கிப் பாய்ந்துவந்த எதிரிகளின் தாக்குதல் வேகம் அவனது மனக்கண்ணை விட்டு எளிதில் அகலவில்லை. பறம்போடு அதிகமான போர்களை நடத்தியது சேரர்குடிதான். எனவே, அவனால் முன்னர் நடந்த போர்களின் தன்மைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. பறம்புவீரர்களின் தாக்குதல் இந்தப் போரில் பல மடங்கு வலிமைகொண்டுள்ளதாகத் தோன்றியது. மூவேந்தர்களின் கூட்டுப்படையின் எண்ணிக்கை யாரும் நினைத்துப்பார்க்க முடியாதது. ஆனால், அவற்றையெல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. போரின் மூன்றாம் நாளிலேயே அவர்கள் மூஞ்சலை நெருங்கிவிட்டார்கள். இனி அவர்களின் வேகம் மேலும் அதிகமாகும். நமது தரப்பில் வலிமையான படையைக்கொண்டுள்ளோம். ஆனால், நம்மிடம் சரியான திட்டங்கள் இல்லை என்ற எண்ணத்தோடு உணவு அருந்த அமர்ந்தான் உதியஞ்சேரல்.

அப்போது காவல்வீரன் உள்ளே வந்து வணங்கிச் சொன்னான், ``சோழப்பேரரசர் தங்களைக் காண வந்துள்ளார்.”

உதியஞ்சேரல் எழுந்து வாயில் நோக்கி வருவதற்குள் ஊன்றுகோலை நகர்த்தி உள்நுழைந்தான் செங்கனச்சோழன்.

இருவரும் உணவு அருந்தியபடியே பேசத் தொடங்கினர்.

பொதியவெற்பனைத் தனது கூடாரத்துக்கு உணவு அருந்த அழைத்து வரச் சொன்னார் குலசேகரபாண்டியன்.

தந்தையின் திடீர் அழைப்பு வியப்பை ஏற்படுத்தியது. ‘எதற்காக அழைத்திருப்பார்?’ என்ற சிந்தனை யுடனேயே கூடாரத்துக்குள் வந்தான் பொதிய வெற்பன்.

உணவு அருந்திக் கொண்டிருந்த குலசேகரபாண்டியன், எதிரில் வந்து நிற்கும் பொதிய வெற்பனிடம் கேட்டார், ``நான் கருங்கைவாணனைக் கடுஞ்சொற்களால் பேசியது ஏன் என உன்னால் புரிந்து கொள்ள முடிந்ததா?”

``புரிந்தது தந்தையே. தாக்குதல் உத்தியில் இன்னும் நமது ஆற்றல் முழுமையாக வெளிப்படவில்லை என்பதால்.”

பொதியவெற்பன் சொல்லி முடிக்கும் முன் குலசேகரபாண்டியன் கூறினார், ``இல்லை. அவன் இதுவரை சரியான உத்திகளைத்தான் வகுத்துள்ளான். ஆனால், அவற்றையெல்லாம் எதிரிகள் எளிதில் தகர்க்கிறார்கள்.”
தந்தையின் பேச்சு பொதிய வெற்பனுக்குச் சற்றே அதிர்ச்சியைக் கொடுத்தது.

``ஆனால், அதை நாம் அவையில் ஏற்றுக்கொண்டால் போரை வழிநடத்தும் நமது தலைமைத்திறன்மீது மற்ற இரு பேரரசுகளுக்கும் நம்பிக்கை பொய்க்கத் தொடங்கும். அதனால்தான் கருங்கைவாணன் பின்பற்றும் உத்தியைக் குறைசொல்லாமல் அவன் கொண்டிருக்கும் கருத்தின்மீது தாக்குதல் தொடுத்தேன்.”

பொதியவெற்பன் வாயடைத்து நின்றான்.

``மற்ற இரு பேரரசர்களுக்கும் பறம்பை வெல்ல வேண்டும் என்ற ஒற்றை நோக்கம்தான் இருக்கிறது. ஆனால், நமக்கு இருப்பதோ அந்த ஒற்றை நோக்கம் மட்டுமன்று.”

குலசேகரபாண்டியன் குரலின் வழியே போரின் ஆழம் வெளிப்படத் தொடங்கியது.

குலசேகரபாண்டியன் தொடர்ந்தார், ``மற்ற இரு பேரரசர்களும் முதன்முறையாக நமது தலைமையை ஏற்று வந்துள்ளனர். இந்த நிலையைப் பாதுகாக்க வேண்டும். அது, பறம்பை வெல்வதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது. அதே நேரத்தில் பறம்பை வெற்றிகொள்ளும் உத்தியின் வழியேதான் நம்மீதான அவர்களின் நம்பிக்கையை இறுகக் கட்ட முடியும்.”

போரின் முழுப்பரிமாணமும் குலசேகரபாண்டியனின் வார்த்தையில் விரிந்தது.

போர்க்களம் உருவாக்கும் நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மையைத் தனது பேச்சு மற்றும் கண்ணோட்டத்தின் வழியே தலைகீழாக மாற்றவேண்டிய ஆற்றல் முக்கியமானது. உண்மையில் போர் தலைமையேற்பவர்களின் மனநிலையை வழிநடத்துவதில்தான் நிலைகொள்கிறது. குலசேகரபாண்டியன் தனித்து நடத்திக்கொண்டிருக்கும் பெரும்போரை விரிந்த கண்களின் வழியே பார்த்துக் கொண்டிருந்தான் பொதியவெற்பன்.

``போரின் போக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

செங்கனச்சோழனின் கேள்விக்கு உடனடியாக பதில்சொன்னான் உதியஞ்சேரல், ``நம்மால் நினைத்துப்பார்க்க முடியாதபடி போரின் போக்குகளை அவர்கள் உருவாக்குவார்கள். என் தந்தையின் காலம்தொட்டு எத்தனையோ தாக்குதல்களைப் பறம்பின்மீது நடத்தியிருக்கிறோம். ஆனால், அப்போதெல்லாம் இல்லாத பேராற்றல் இப்போது பறம்புவீரர்களிடம் வெளிப்படுவதைக் காண்கிறேன்.”

``காரணம்?”

``பாரி இறங்கி வந்து போரிட வேண்டும் என்பதற்காக நாம் கடைப்பிடித்த உத்தி தவறானது என நினைக்கிறேன். அளவுக்கு அதிகமாகச் சினம்கொள்ளும்படி அவர்களை நாம் சீண்டிவிட்டோம் எனத் தோன்றுகிறது.”

``அப்படியா நினைக்கிறீர்கள்?”

``ஆம். குகைக்குள் இருக்கும் விலங்கை வெளியேற்ற அதன் குட்டியைத் தூக்கிவரக் கூடாது. அது வெளியேற்றும் செயலன்று; வெறியேற்றும் செயல். நாம் அதைச் செய்துவிட்டோம்.”

``இதை எதிர்கொள்ள என்ன வழி?”

``கருங்கைவாணன் சொல்வதுபோல ஒரே நாளில் நஞ்சாயுதங்களைக்கொண்டு பெருந்தாக்குதல் நடத்துவதுதான் பயன்கொடுக்கும் என நினைக்கிறேன்.”

``வேறு வழியே இல்லையா?”

``எனக்குத் தெரிந்து வேறு வழியேதும் இல்லை. உங்கள் தந்தை கூறியதைப்போல போர் அல்லாத வழிமுறையைப் பற்றிப் பேச இது நேரமல்ல. குலசேகரபாண்டியன் கூறியதைப்போல எண்ணற்ற குலங்கள் பறம்பில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தங்கள் குடிகளுடன்தாம் இருக்கின்றனர். எனவே, அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பேதும் இல்லை.”

``இதைப் பற்றிப் பேசுவதற்காகத்தான் நான் வந்தேன்” என்றான் செங்கனச்சோழன்.

``இதைப் பற்றிப் பேச வேறென்ன இருக்கிறது?” என்று சற்றே வியப்போடு உதியஞ்சேரல் பார்த்தான்.

செங்கனச்சோழன் சொன்னான், ``குடிகள் அல்லாத குலத்தலைவர்களும் அங்கு உள்ளனர்.”

``வாய்ப்பேயில்லை. பறம்பைத் தொடர்ந்து கவனித்தும் அறிந்தும் வருபவர்கள் நாங்கள். குடிகளின்றிக் குலத்தலைவர்கள் மட்டும் அங்கு இருக்க வாய்ப்பேதும் இல்லை.”

செங்கனச்சோழன் வலதுகையில் பிடித்திருந்த ஊன்றுகோலை மெள்ளத் திருகியபடி கரும்பாக்குடியைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்.

``இந்தப் போரில் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி வெற்றிகொள்ளும் வாய்ப்பைக் கருங்கைவாணனுக்கு வழங்குவேன்” என்றார் குலசேகரபாண்டியன்.

``விதிகளின்படி போரிட்டு வெற்றிகொள்வது மிகக்கடினம் எனத் தெரிந்தும் அந்த வழியே தொடர்ந்து முயல்வது நமக்குத்தானே இழப்புகளை அதிகமாக்கும். ஏன் மாற்றுவழிக்கு நீங்கள் அனுமதி தர மறுக்கிறீர்கள்?”

``எது சிறந்த மாற்றுவழி என்பதை நான் அறிவேன். எனவே, அதற்கான முயற்சியை நான் செய்துள்ளேன். ஒருவேளை நான் பின்பற்றும் வழியும் தோல்வியடைந்தால் மூன்றாவதாக, கருங்கைவாணன் சொல்லும் நஞ்சுத்தாக்குதலுக்கு அனுமதி வழங்குவேன்.”

குலசேகரபாண்டியனின் சொற்கேட்டு அசைவற்று நின்றான் பொதியவெற்பன். சற்றும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது அவர் சொன்னது. அந்த மாற்றுவழியில் அவருக்குப் பெரும்நம்பிக்கை இருப்பதால்தான் விதிமுறைப்படி போரிடத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது புரிந்தது. அதுமட்டுமன்று, மற்ற இரு பேரரசுகளும் போர்முனை நோக்கியே கவனம்கொண்டிருக்க வேண்டும், அப்போதுதான் மாற்று வழிமுறையானது பாண்டியரின் தனிப்பெரும் முயற்சியாகத் துலங்கிநிற்கும் என்பதும் விளங்கியது.

``போர்க்களம் நம்பிக்கையை மெய்யாக்கினால் தொடர்ந்து வாள் ஏந்தலாம். நம்பிக்கையைப் பொய்யாக்கினால் தொடர்ந்து வாள் ஏந்தக் கூடாது. ஏனெனில், வெற்றி என்பது வாளோடு மட்டும் தொடர்புடையதன்று” என்றார் குலசேகரபாண்டியன்.


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Aug 28, 2018 8:42 pm

`ஆம்’ எனத் தலையசைத்தான் பொதியவெற்பன்.

``எவ்வளவு பெரும்படையும் துரோகத்துக்கு ஈடில்லை என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும் மகனே.”

போர்க்களம் கடந்து வெற்றி நோக்கிய மாற்றுப்பாதை ஒன்றைக் கண்டறிந்த தந்தையின் சொற்கள், அளவற்ற மகிழ்வைக் கொடுத்தன. பெரும் தயக்கத்தோடு மெள்ளக் கேட்டான், ``அந்தப் பாதை என்ன தந்தையே?”

``அந்தப் பாதை என்ன என்பதையும் அதில் பயணிக்கப்போகிறவர் யார் என்பதையும் நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உன்னை வரச் சொன்னேன்.”

கரும்பாக்குடியின் மொத்தக் கதையையும் சொல்லி முடித்தான் செங்கனச்சோழன். ஏறக்குறைய உறைந்த நிலையில் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான் உதியஞ்சேரல்.

``பொருத்தமான மனிதர்கள் மூலம் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். விரைவில் நல்ல செய்தி வரும்.”

``அடைக்களம் தந்த பாரிக்கு எதிராக அவர்கள் எப்படி...” என்று உதியஞ்சேரல் சொல்லி முடிக்கும் முன் செங்கனச்சோழன் சொன்னான், ``கரும்பாக்குடியின் குலத்தலைவர்கள்தாம் அங்கு இருக்கின்றனர். அந்தக் குடிகள் அனைவரும் எம்முடைய நாட்டில்தான் இருக்கின்றனர். நமக்காக இல்லாவிடினும், அவர்கள் குலம் காக்கவாவது நாம் சொல்வதைச் செய்வார்கள். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியேதும் இல்லை.”

``உங்களுக்கு நம்பிக்கை உள்ள அந்தப் பாதை என்ன? அதில் பயணிக்கப்போகிறவர் யார் தந்தையே?”

பொதியவெற்பனின் கேள்விக்கு அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்து பதில் சொன்னார் குலசேகரபாண்டியன், ``அந்தப் பாதையில் பயணிக்கப்போவது பொற்சுவை.”

தடுமாறி நின்றான் பொதியவெற்பன். போர்க்களம் வந்து இத்தனை மாதங்கள் கழித்து, தந்தை தன்னைத் தனியே அழைத்துப் பேசுவதன் காரணம் இப்போதுதான் புரியத் தொடங்கியது.

குலசேகரபாண்டியன் சொன்னார், ``அவள் அமைதிவேண்டிப் பாரியைக் காணத் திட்டம் வகுத்திருக்கிறாள். போரில் பங்கெடுக்காத வெங்கல்நாட்டின் ஆறு ஊர்க்காரர்களைக் கொண்டு அந்தச் செயலைச் செய்ய முயல்கிறாள். எனது கணிப்புப்படி விரைவில் அவள் பாரியைக் காண்பாள். அந்த நாளில் நாம் நினைத்தது நடக்கும்.”

தந்தையை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பொதியவெற்பன். பாண்டியனின் தனித்த முயற்சியால் பாரி கொல்லப்படுவான். அதுவரை மூவேந்தர்களின் கூட்டுப்படையை வகுக்கப்பட்ட விதிகளின்படி கருங்கைவாணன் வழிநடத்துவான். அறம் பிறழாத போரின் சான்றெனப் பரண்மேல் நின்றிருப்பார் திசைவேழர். தட்டியங்காட்டின் வெற்றி பாண்டியப் பேரரசின் தனிப்பெரும் வெற்றியாக நிலைகொள்ளும்.

பெருவேந்தன் குலசேகரபாண்டியனின் திட்டம் இப்போதுதான் பொதிய வெற்பனுக்குப் புரியத் தொடங்கியது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

சு.வெங்கடேசன் 

பிரபாகரன் ஒற்றன்
பிரபாகரன் ஒற்றன்
பண்பாளர்

பதிவுகள் : 52
இணைந்தது : 31/08/2018

Postபிரபாகரன் ஒற்றன் Fri Aug 31, 2018 9:54 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 98
பிறைநிலவு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. விளாமரத்தின் அடிவாரத்தில் கூழையனைப் புதைத்தனர். தன் கண்களுக்கு முன்னால் கூழையன் வெட்டிச்சாய்க்கப்பட்டதை, தேக்கனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிறுவயது முதல் உற்ற தோழனாய் இருந்தவனைப் பறிகொடுத்த பதற்றம் அவனது உடல் முழுவதும் இருந்தது. மறுகணமே கருங்கைவாணனை வீழ்த்தக் கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்த முடியாமல்போய்விட்டது. ஒருவேளை அது நடந்திருந்தால்கூட மனம் சற்றே ஆறுதலடைந்திருக்கும். தேக்கனின் முகம் மிகவும் இறுகியிருந்தது.  

புதைத்து முடித்தவுடன் எல்லோரும் இரலிமேட்டில் இருக்கும் பாட்டாப்பிறை நோக்கி வலதுபுறமாகத் திரும்பி நடந்தனர். தேக்கன் மட்டும் இடதுபுறமாக நாகக்கரட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். இறுதியாகச் சென்றுகொண்டிருந்த முடியன் அவனைப் பார்த்தபோது, ``முறியன் ஆசானைப் பார்த்துவிட்டு வருகிறேன். நீ போ’’ என்றான்.

முடியனுக்குப் புரிந்தது. `உடல்வலியோடு மனவலியும் சேர்ந்திருக்கிறது. கிழவன் எதையும் வாய் திறந்து சொல்ல மாட்டான்’ என எண்ணியபடி நடந்தான். எங்கும் வீரர்களின் ஓசை கேட்டபடி இருந்தது. நாகக்கரட்டுக்கும் இரலிமேட்டுக்கும் இடைப்பட்ட சமவெளிப் பள்ளத்தாக்கு எங்கும் ஓலை வேய்ந்த சிறு குடில்கள் எண்ணற்றவை அமைக்கப்பட்டிருந்தன. வீரர்களுக்கு உணவு, தங்கல் எல்லாம் அந்தக் குடில்களில்தான்.

தேக்கன் அக்கம்பக்கம் யாரையும் பார்க்கவில்லை. நேராக முறியன் ஆசானின் குடிலை நோக்கி வேகமாக நடந்தான். வளர்பிறையாதலால், வானில் ஒளிப்பரவல் விரைவாக இருந்தது. ``ஆசானின் குடில் சற்றுத் தொலைவில் இருக்கிறது. குதிரையில் போகலாம்’’ என்று வீரர்கள் சொன்னதற்கு தேக்கன் மறுத்துவிட்டான்.

குதிரை பாய்ந்து செல்லும்போது விலாவெலும்பு உள்குத்தி ஏறுகிறது. வலி தாங்க முடியவில்லை. அதனால்தான் குதிரையைத் தவிர்த்து வேக வேகமாக நடந்தான். எங்கும் பந்தங்கள் ஏற்றப்பட்டிருந்தன. உலைக்களங்களில் தீப்பொறிகள் பறந்துகொண்டிருந்தன. சாணைக்கல்லில் கருவிகள் கூர்தீட்டப்பட்டுக்கொண்டிருந்தன. பொதினிமலை சாணைக்கற்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. மற்ற சாணைக்கற்களைவிட இருமடங்கு வேகத்தில் ஆயுதங்களைக் கூர்தீட்டக்கூடியவை. அவை கருவிகளோடு உரசும்போது தெறிக்கும் பொறியில் நீலமேறியிருக்கும். வேல், ஈட்டி, எஃகல், ஆலம், சகடம், குந்தம், கயலி, ஈர்வாள் என நாள்தோறும் ஆயுதங்களைக் கூர்தீட்டி வாங்கிக்கொள்வது போர்வீரர்களுக்கு வழக்கம்.

காட்சிகளைப் பார்க்கப் பார்க்க தேக்கனின் மனவேதனை அதிகமாகிக்கொண்டே இருந்தது. வாழ்வில் இனி தனக்கான ஆயுதங்களைக் கூர்தீட்டவே முடியாதோ எனத் தோன்றியது. போர் முடிந்த இரவில் நீலநிறப் பொறிகள் உதிர்க்கும் தீக்கங்குகளை ஒவ்வொரு வீரனும் ஆசையோடு பார்த்துக்கொண்டிருப்பான். இன்றைய போரில் எதிரியோடு தான் நிகழ்த்திய தாக்குதலால் தனது ஆயுதங்கள் முனை மழுங்கிப்போயுள்ளன என்பதை உலைக்களத்தில் உள்ளவர்களிடம் சொல்வதில்தான் அவனது பெருமை இருக்கிறது.

``ஒருவேளை, இன்று நான் எனது ஆயுதத்தைக் கூர்தீட்ட உலைக்களம் சென்றிருந்தால் என்ன பேசியிருப்பேன்? `எனது கைக்கெட்டும் தொலைவில் எதிரிப்படைப் தளபதி இருந்தும் அவனது தலையை வெட்டிச்சரிக்காமல் விட்டுவிட்டேன்’ எனச் சொல்லி யிருப்பேனா? பறம்பின் எந்த ஒரு வீரனுக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பை இழந்து நிற்கிறேன். இனி நான் போர்க்களம் புகவேண்டுமா?’’ என்று அடுக்கடுகாய்க் கேள்விகள் மேலேறியபடி இருந்தன. ஆனாலும் மனவோட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டான்.

கயிறுகள் இறுக முடைந்திருந்த கட்டில் ஒன்றில் குடிலின் முன் உட்கார்ந்திருந்தார் முறியன் ஆசான். சுற்றிலும் இளம் மருத்துவர்கள் தங்களின் வேலைகளைப் பார்த்தபடி இருந்தனர். தேக்கன் வந்தவுடன் அவர்கள் சற்று விலகிப் போயினர்.

தேக்கனின் முகத்தைப் பார்த்ததும் வலியின் கூறுகளை முறியன் ஆசானால் உணர முடிந்தது. எதிரில் இருந்த மரப்படுக்கையில் படுக்கச் சொன்னார். ஒருபக்கமாகச் சாய்ந்து கையூன்றி உடலைக் கிடத்தினான் தேக்கன். அவன் படுக்கும்விதமே காயத்தின் தன்மையைச் சொன்னது. நெஞ்செலும்பின் அடிப்பகுதி சற்றே வீக்கம்கொண்டிருந்தது. அதை ஆசான் தொட்டபோது வலி பொறுக்க முடியவில்லை. ஆனால், அதை வெளிக்காட்டாமல் இருந்தான் தேக்கன்.

அந்த இடத்தை விரலால் அழுத்தியபடி தேக்கனின் முகத்தை ஆசான் பார்த்தபோது தேக்கன் சொன்னான், ``என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். போர் முடியும் வரை நான் களத்தில் நிற்க வேண்டும்.’’

``மருத்துவனிடம் முன்நிபந்தனை கூடாது.’’

``சிகிச்சை பெறுவதற்கான காரணத்தை மருத்துவனிடம் மறைக்கக் கூடாதல்லவா!’’

``போர்க்களத்தில் நின்றால் மட்டும் போதுமா... போரிட வேண்டாமா?’’

``வேண்டாம். இந்தப் போரை வெற்றியாக்குவது முடியனின் கடமை. அவன் அதைச் செய்து முடிப்பான். நான் களம் விட்டு அகன்றால் பாரி களம் இறங்கும் சூழல் உருவாகிவிடும். அதைத் தவிர்ப்பதுதான் எனது வேலை. அதே நேரம் எனது செயல் மற்றவர்கள் ஐயம்கொள்ளாதபடி இருக்க வேண்டும்.’’

உடலெங்கும் அழுத்திப்பார்த்து உள்காயங்களைக் கணித்தபடியே ஆசான் சொன்னார், ``வாளும் வில்லும் ஏந்தக் கூடாது. ஈட்டியை வைத்துக்கொள்ளுங்கள். ஆயுதம் கைக்கொண்டதாகவும் இருக்கும்; ஊன்றி நிற்க உதவியாகவும் இருக்கும்.’’
தேக்கன் பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவன் கண்கள் வார்த்தைகளின் கசப்பை விழுங்க முடியாமல் துடித்தன.

அப்போது தேக்கனைச் சந்திக்க வீரன் ஒருவன் வந்தான். ஆனால், மாணவர்களோ தேக்கனுக்குச் சிகிச்சை தொடங்கிவிட்டதால் வீரனைச் சற்றுத் தொலைவிலேயே நிறுத்தினர். வடகோடியில் காட்டுக்குள் நுழைந்த வேட்டூர் பழையன் ஆட்கொல்லி மரத்தை அண்டி எண்ணற்றோரைக் கொன்று தானும் இறந்துள்ளார் என்ற செய்தியைச் சொல்வதற்காக அந்த வீரன் காத்திருந்தான்.

உலைக்களங்களில் எண்ணிலடங்காத ஆயுதங்களை உருவாக்கும் வேலை இரவு பகலாக நடந்தது. ஆனால், அவற்றின் ஓசை எதுவும் மூஞ்சலுக்குள் கேட்காது. ஏனென்றால், உலைக்களம் இருக்கும் பகுதி, படைக்கலப் பேரரங்கு இருக்கும் பகுதி, மருத்துவக்கூடாரம், மூஞ்சல் என எல்லாம் தனித்தனியே வெகுதொலைவில் இருந்தன.

பொழுது, நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. குலசேகர பாண்டியன் சொல்லியதைப்போல புதிய தாக்குதல் திட்டத்தோடு கூடாரத்துக்குள் நுழைந்தான் கருங்கைவாணன். உள்ளே அனைவரும் காத்திருந்தனர். செங்கனச்சோழன் கரும்பாக்குடியினரைப் பற்றிச் சொன்ன செய்தியைக் கேட்டு மகிழ்ந்துபோயிருந்தான் உதியஞ்சேரல். தந்தை குலசேகரபாண்டியனின் திட்டத்தைக் கேட்டு ஆச்சர்யம்கொண்டி ருந்தான் பொதியவெற்பன். அனைவரும் மிக இறுக்கமான சூழலில் இருப்பார்கள் என நினைத்து உள்ளே வந்த கருங்கை வாணன், வேந்தர்களின் முகங்களைப் பார்த்து சற்றே குழப்பமானான். ஆனாலும் அவன் வகுத்த திட்டத்தைப் பற்றிக் கூறலானான். நிறைந்த அவையில் அவமானப்பட்ட ஒரு தளபதியின் சினம், அவன் வகுத்த திட்டத்தின் வழியே வெளிப்படத் தொடங்கியது.

``மூன்று நாள் போர்களின் அனுபவத்திலிருந்து நான் சில முடிவுகளுக்கு வந்துள்ளேன். எதிரிகளின் போர் உத்தி, நம்மால் முன் உணர முடியாததாக இருக்கிறது. இனிமேலும் அப்படித்தான் இருக்கும். ஆனால், அவர்கள் படையின் வலிமை எதில் இருக்கிறது என்பதை என்னால் கணிக்க முடிந்திருக்கிறது’’ என்றான்.

இதுவரை தாக்குதல் உத்தியைப் பற்றி மட்டுமே பேசிய கருங்கைவாணன் முதன்முறையாக எதிரிப்படையின் நுணுக்கங்களைப் பற்றிப் பேசத் தொடங்கியதை அவை உன்னிப்பாகக் கேட்டது.

``நம்மோடு ஒப்பிட்டால் பறம்பின் படை அளவில் மிக மிகச் சிறியது. ஆனாலும் அவர்கள் மூன்று நாள் போர்களிலும் முன்னேறித் தாக்கியுள்ளனர். அதற்குக் காரணம், அவர்களது படையின் மைய அச்சாக இருக்கும் விற்படைதான். அவர்கள் அம்பெய்யும் தொலைவில் சரிபாதிதான் நம் வீரர்களால் அம்பெய்ய முடிகிறது. எனவே, விற்படையினரை நம்மால் நெருங்கவே முடியவில்லை. அந்தப் படையினர் போர்க்களத்தின் நடுவில் இருக்கின்றனர். அதனால், எதிரிப்படையின் மீது நம் படையினர் தாக்குதலைக் குவித்து முன்னேற முடியவில்லை. எனவே, நமது தாக்குதலின் மூலம் எதிரிகளைத் தற்காப்புநிலைக்குத் தள்ள முடியவில்லை. மாறாக, எதிரிப்படையின் ஏதாவது ஒரு பிரிவு மூஞ்சலை நோக்கித் தொடர்ந்து முன்னேறித் தாக்குகிறது’’ என்றான்.

கருங்கைவாணனின் கணிப்பு மிகச் சரியானது எனத் தோன்றியது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்தார் குலசேகரபாண்டியன்.

நாளைய போரில் பறம்பின் விற்படையை முழுமுற்றாகச் செயலிழக்கவைப்பதற்கான திட்டத்தை விளக்கினான். போர் உத்திகளை வகுப்பதில் அவன் கொண்டிருந்த அனுபவம், அவன் உச்சரித்த ஒவ்வொரு சொல்லிலும் மிளிர்ந்தது. சோழவேழன், மிரட்சியோடு அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். கருங்கைவாணன் திட்டத்தைக் கூறி முடிக்கும்போது யாரும் மறுசொல்லின்றி அதை நிறைவேற்ற ஆயத்தமாயினர். நாளைய போர், வேந்தர்கள் கொண்டாடும் செய்தியைத் தரும் என்பதில் ஐயமேதுமில்லை.

உடலும் மனமும் தளர்ந்தபடி பரண்மீது நின்றுகொண்டு, எழும் கதிரவனைப் பார்த்தார் திசைவேழர். செம்பிழம்பின் வட்டவடிவை மேகத்துண்டுகள் தழுவிக் கடந்தன. வானில் பறவை ஏதும் தென்படவில்லை. கண்கள், வெளியெங்கும் பார்த்துத் திரும்பின. வழக்கத்துக்கு மாறாக வேந்தர்படைகள் நிலைகொண்ட பகுதியில் தூசியும் புழுதியும் சூழ்ந்திருந்தன. `போர் தொடங்கி நீண்டபொழுதுக்குப் பிறகுதானே இவ்வளவு புழுதி மேலெழும். இன்று என்ன நடந்துள்ளது... போர் தொடங்கும் முன்பே புழுதி இவ்வளவு உயரத்துக்குச் சூழ்ந்துள்ளதே!’ என நினைத்தபடியே நாழிகைவட்டிலைப் பார்த்தார். கோலின் நிழல் உள்ளிழுத்துக்கொண்டிருந்தது. சரியான இடத்தைத் தொட்டதும் வலதுகையை உயர்த்தினார். பரணெங்குமிருந்து ஓசை எழுப்பப்பட்டது. தட்டியங்காட்டுப் போரின் நான்காம் நாள் தொடங்கியது.

கை உயர்த்தி இமைப்பொழுது கடப்பதற்குள் நிலம் எங்குமிருந்து வீரர்களின் பெருமுழக்கமும் முரசுகளின் பேரோசையும் வெளியை அதிரச்செய்தன. வழக்கத்தைவிடப் பல மடங்கு ஓசை கணப்பொழுதில் மேலெழும்பியது. களத்தில் என்ன நடக்கிறது என்று திசைவேழர் கூர்ந்துபார்த்தார். பறம்புப்படை வழக்கம்போல் தாக்குதலுக்கு ஆயத்தமானது. ஆனால், வேந்தர்படையோ வழக்கத்துக்கு மாறாக வெள்ளம்போல் பரவி விரியத் தொடங்கியது.

எல்லா திசைகளிலும் ஓசையுடன் புழுதி மேலெழுந்துகொண்டிருந்தது. இதுவரை வேந்தர்படை வடக்கு தெற்காக வரிசைகளை ஏற்படுத்தி, கண்ணுக்கெட்டும் தொலைவு வரை அணிவகுத்து நிற்கும். முதல்நிலைப் படை, இரண்டாம்நிலைப் படை, மூன்றாம்நிலைப் படை என மூன்று பெருந்தொகுப்புகளாகப் படை நின்றிருக்கும். முதல்நிலைப் படை பறம்புப்படையோடு மோதிக்கொண்டிருக்கும். இழப்புகள் அதிகமாகும்போது அடுத்தடுத்த நிலையில் இருக்கும் வீரர்கள் முதல்நிலைப் படையோடு வந்து இணைவர். ஆனால், இன்றைய போரில் வேந்தர்படை வழக்கம்போல் அணிவகுக்கவில்லை. பெரும்மாற்றம் நடந்துள்ளது. ஆனால், என்னவென்று புரிபடவில்லை.

முரசின் ஓசை கேட்டதும் தாக்குதலுக்குத் தயாரானது பறம்புப்படை. நேற்றைய போரில் மூஞ்சலின் அருகே பறம்பின் குதிரைப்படை சென்றது. இன்றைய போரில் மூஞ்சலுக்குள் நுழையும் திட்டத்தோடு முடியன் வந்திருந்தான். குதிரைப்படையை ஆறு கூறுகளாகப் பிரிப்பது என முடிவெடுத்திருந்தான். மூஞ்சலின் வடிவம் அவன் கண்களுக்குள்ளேயே இருந்தது. குதிரைப்படையின் இரண்டு பிரிவுகள் மூஞ்சலை அடையும் வரை போரிடக் கூடாது. அந்த இரண்டு பிரிவுகளையும் மூஞ்சலின் அருகில் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டியது மற்ற நான்கு பிரிவுகளின் வேலை. அந்த நான்கு பிரிவுகளுக்கும் முடியன் பொறுப்பாவான். மூஞ்சலின் அருகில் சென்றதும் எதிரிகளின் தாக்குதல் பல மடங்கு வலிமைகொண்டதாக இருக்கும். ஏறக்குறைய அனைவரும் கவச வீரர்களாக இருப்பர். எனவே, மிக வலிமையான தாக்குதலின்றி மூஞ்சலைச் சுற்றியுள்ள அரணை உடைத்து உட்செல்ல முடியாது. எனவே, மிகத் தேர்ந்த வீரர்களைக்கொண்டு அந்தப் பிரிவினரை உருவாக்கியிருந்தான். அதற்கு இரவாதனைப் பொறுப்பாக்கியிருந்தான்.

போர் தொடங்கிய கணத்தில் வேந்தர்படையின் மின்னல் வேகச் செயல்பாடு யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. எல்லா திசைகளிலும் வேந்தர்படையினர் பிரிந்தும் கலைந்தும் விரைந்துகொண்டிருந்தனர். பறம்புப்படையின் மீது அவர்கள் தாக்குதல் தொடுக்கவில்லை. ஆனால், களமெங்கும் விரைந்துகொண்டிருந்தனர். என்ன செய்கிறார்கள் என்று யாருக்கும் பிடிபடவில்லை. முன்னணியில் விரைந்துகொண்டிருந்தவை தேர்கள்தாம். திகிரியையும் ஆழியையும் உருளியாகக்கொண்ட வலிமைமிகுந்த கூவிரம் வகைத் தேர்கள் விடுபட்ட அம்புகளைப்போல விரைந்துகொண்டிருந்தன.

பரண் மேல் நின்றபடி திசைவேழர் இமைக்காமல் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார். பறம்புப்படையை விட்டு மிக விலகி எங்கே அவர்கள் போகின்றனர் எனப் பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் அதற்கும் அப்பால் தேர்ப்படையின் இன்னோர் அணி போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. சற்றே அதிர்ச்சியோடு, முன்னேறிச் செல்லும் அந்த அணியைக் கூர்ந்து பார்த்தார். விரையும் தேர்களின் மீது காலைக்கதிரவனின் ஒளி பட்டுச் சிதறியபடி இருந்தது. உற்றுக் கவனித்தார், அவையெல்லாம் நிறைந்த பூண்களைக்கொண்ட கொடிஞ்சிவகைத் தேர்கள். இந்த வகைத் தேர்களை எந்தக் கருவிகொண்டும் சேதப்படுத்த முடியாது. திசைவேழர் தலையை எக்கிப் பார்த்தார். தேர்களின் உச்சியில் இருந்த கூம்புமொட்டுகள் கதிரவனின் ஒளிபட்டுத் தகதகத்தன. உராய்வில் பறக்கும் தீப்பொறிபோல விரையும் அவற்றின் வேகத்தில் மின்னி நகர்ந்தது வெய்யோன் பொன்னொளி. கண்கள் பார்க்கும் நில விளிம்பில் தேர்கள் எழுப்பும் மண்புழுதி அலையலையாய் மேலெழுந்து  கொண்டிருந்தது. என்ன நடக்கிறது என்று திசைவேழருக்குப் புரியத் தொடங்கியது.

மூன்று நிலைகளில் நின்றிருந்த வேந்தர்படையின் ஒழுங்கை, கருங்கைவாணன் இன்று மாற்றிவிட்டான். முதல்நிலைப் படை வழக்கம்போல் பறம்புப்படையை எதிர்கொள்ள முன்னால் நகர்ந்து போய்க்கொண்டிருக்கும்போது, இரண்டாம்நிலைப் படை பறம்புப் பகுதியின் இடுப்புப்பகுதியைச் சூழவேண்டும். அதேநேரம் மூன்றாம்நிலைப் படை அதைவிடத் தொலைவில் அரைவட்டவடிவில் பயணித்துப் பறம்புப்படையின் பின்புறத்தை அடையவேண்டும். அதாவது, பறம்புப்படை முழுமுற்றாக வேந்தர்படையால் சூழப்பட வேண்டும். அவ்வளவு தொலைவு பயணித்து, பறம்பின் மொத்தப் படையையும் முற்றுகையிடுவதற்குத் தேவையான அளவுக்கு வீரர்கள் வேந்தர்படையில் இருந்தனர். அதனால்தான் கருங்கைவாணன் இந்தத் திட்டத்தைத் தீட்டினான்.

அவன் வகுத்த திட்டப்படி வேந்தர்களின் தேர்ப்படை மின்னல் வேகத்தில் பறம்புப்படையின் பின்பகுதியை நோக்கி மிகத்தொலைவில் அரைவட்டமடித்து விரைந்துகொண்டிருந்தது. அந்தத் தேர்கள் எல்லாவற்றிலும் மணிகள் கட்டப்பட்டிருந்தன. எனவே, மணிகளின் பேரோசை எங்கும் எதிரொலித்தது. எழும் புழுதியும் வீரர்களின் பேரோசையும் தெறிக்கும் மணியோசையுமாகப் போர்க்கள வெளியெங்கும் வேந்தர்படையின் ஆதிக்கம் மேலெழுந்தது.

தனது திட்டப்படி விரைந்து தாக்குதலைத் தொடுக்கவேண்டிய முடியன், போர் தொடங்கிய கணமே நிதானம்கொள்ளத் தொடங்கினான். எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்பது சற்றே குழப்பமாக இருந்தது. அவர்கள் யாரும் பறம்புப்படை நோக்கி ஒற்றை அம்பைக்கூட எய்யவில்லை. ஆனால், எல்லோரும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றனர். எதிரிகளின் திட்டம் என்ன என்பதை அறிய அவர்களின் செயலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் முடியன். ஆனால், கடைசி வரிசையில் ஈட்டியை ஊன்றுகோலாகப் பிடித்தபடி சாய்ந்து நின்றுகொண்டிருந்த தேக்கனுக்குப் பிடிபடத் தொடங்கியது. ஏனென்றால், பறம்புப்படையை விட்டு மிக விலகி அரைவட்ட வடிவில் புழுதி மேலெழுந்துகொண்டிருந்தது. மேலெழும் புழுதியின் முன்முகம் அவன் இருக்கும் பின்புறத்தை நோக்கி வளைந்து வந்துகொண்டிருந்தது.

கருங்கைவாணன் தாக்குதலுக்கான திட்டத்தை உருவாக்கிய கணத்திலிருந்து மிகத் தீவிரமாய்ச் செயல்பட்டுக்கொண்டி ருக்கிறான். நேற்று நள்ளிரவு மூவேந்தர்களும் இந்தத் திடத்தை ஏற்றனர். கொல்லப்பட்ட தேர்ப்படைத் தளபதி நகரிவீரனுக்குப் பதில் வெறுகாளனைப் புதிய தளபதியாக நியமித்தான் செங்கணச்சோழன். சூலக்கையனுக்குப் பதில் மாகனகனைத் தளபதியாக நியமித்தான் குலசேகர பாண்டியன். உடனடியாகத் தாக்குதல் திட்டத்துக்கான வேலைகள் தொடங்கின. படைக்களக் கொட்டிலில் இருக்கும் ஆயுதவாரியை நோக்கி முதல் ஆணை பிறப்பிக்கும் பொழுது நள்ளிரவைத் தொட்டு நின்றது.

வழக்கம்போலவே நாளைய தாக்குதல் நடக்கும் என நினைத்த ஆயுதவாரி, வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களை எல்லாம் படைப்பிரிவுகளுக்கு வழங்கிவிட்டு, தனது கூடாரத்துக்குச் சென்றார். உள்ளே சென்று அமர்ந்ததும் தலைமைத்தளபதியின் ஆணையோடு வீரன் ஒருவன் வந்து நின்றான்.

ஆணையைக் கண்டதும் அவர் அதிர்ச்சிக்குள்ளானார். நாளைய போரில் வேந்தர்படையில் இருக்கும் அத்தனை வீரர்களும் களம்புகுந்து எதிரிகளின் மீது தாக்குதல் நடத்தப்போகிறார்கள். எனவே, அனைவருக்கும் தேவையான ஆயுதங்களை உடனடியாகக் கொண்டுசேர்க்கும் ஏற்பாடுகளைச் செய்யும்படி அதில் கருங்கைவாணனின் உத்தரவு இருந்தது.

``இதுவரை முதல்நிலைப் படைவீரர்கள் மட்டுமே தாக்குதல் தொடுத்தனர். மற்ற இரு நிலைகளிலும் இருந்த வீரர்கள் தாக்குதல் களத்துக்குத் தேவைப்பட்டால் மட்டுமே சென்றனர். தாக்குதல் களத்துக்குள் வீரர்கள் அனைவரும் புகுந்தால் அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களைப்போல குறைந்தது ஆறு மடங்கு ஆயுதங்களை அவர்களுக்குக் கொண்டுசேர்க்க ஆயுதவாரி ஆயத்தநிலையில் இருக்க வேண்டும். தாக்கும் அணியின் பின்புறம் ஆயுதவண்டிகள் எந்நேரமும் அணிவகுத்து நிற்க வேண்டும். இப்போது படை முழுவதும் இருக்கும் அனைத்து வீரர்களும் தாக்குதலுக்குக் களம்புகப் போகிறார்கள் என்றால், அனைவரின் கைகளிலும் தேவையான அனைத்துவிதமான ஆயுதங்களும் இருக்க வேண்டும். அனைத்துப் படையினருக்கும் களத்துக்குத் தேவையான ஆயுதங்களை வண்டியில் ஏற்றி ஆயத்தப்படுத்த வேண்டும். இவையெல்லாம் இந்த நள்ளிரவுக்குப்பின் எப்படிச் சாத்தியமாகும்? ஒருபோதும் முடியாது’’ என்று புலம்பியபடி, ``தலைமைத்தளபதி எங்கே இருக்கிறார்?’’ எனக் கேட்டான் ஆயுதவாரி.

செய்தியைக் கொண்டுவந்த வீரன், ``மூஞ்சலுக்குள் இருந்துதான் இதைக் கொடுத்து விட்டார்’’ என்றான்.

``மூஞ்சலுக்குள் இருந்தால் எந்த உத்தரவையும் பிறப்பிப்பாரா? நள்ளிரவுக்குப்பின் எப்படி இவ்வளவு ஆயுதங்களையும் கொண்டுசேர்க்க முடியும்? நாளைய போரில் சரிபாதி வீரர்களைக் களத்தில் இறக்குவோம். நாளை மறுநாள் முழுமையாக அனைவரையும் களத்தில் இறக்க ஏற்பாடு செய்வோம் என்று நான் சொன்னதாகப் போய்ச்சொல்’’ என்று கூறி அந்த வீரனைத் திருப்பி அனுப்ப முற்பட்டார்.

ஆனால், வீரனிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே வெளியில் பெருங்கூச்சலோசை கேட்டது. `இந்த நள்ளிரவில் என்ன இவ்வளவு சத்தம்?’ என எண்ணியபடி கூடாரத்தை விட்டு வெளியில் வந்து பார்த்தார். படைக்கலப் பேரரங்கை நோக்கி ஆயுதங்களை ஏற்றிச் செல்ல யானைகளும் குதிரைவண்டிகளும் மாடுகள் பூட்டிய நீள்வண்டிகளும் அணியணியாய் வந்துகொண்டிருந்தன. படைக்கலப் பேரரங்கின் முன்னால் பெருங்கூட்டம் கூடிக்கொண்டிருந்தது.

தொலைவில் இருந்து இந்தக் காட்சியைப் பார்த்த ஆயுதவாரிக்கு, என்ன செய்வதெனப் புரியவில்லை. மூன்று நாள் போரிலும் கொல்லப்பட்டதுபோக மீதம் இருக்கும் நாற்பத்தைந்து சேனைமுதலிகளும் அவர்களுக்குக் கீழே இருக்கும் நானூற்றைம்பது சேனைவரையர்களும் நாளை தங்களின் படைகளைக் களம் நோக்கித் தாக்குதலுக்கு நகர்த்துகின்றனர். அனைத்துப் படைப்பிரிவுகளுக்கும் தேவையான ஆயுதங்களைப் பெற்றுச்செல்ல சேனைமுதலிகளின் உத்தரவோடு படைப்பணியாளர்கள் போர்க்களப் பேரரங்குக்கு முன்னால் வந்து குவியத் தொடங்கிவிட்டனர்.

மிரண்டுபோனார் ஆயுதவாரி. தன்னிடம் கேட்காமல் இந்த நள்ளிரவுக்குப்பின் இப்படியோர் உத்தரவை சேனைமுதலிகளுக்கு எப்படி வழங்கலாம் என்று கடுங்கோபத்தோடு பேரரங்கு நோக்கி விரைந்தார்.

பாண்டியனின் படைக்கலப் பேரரங்குதான் மூஞ்சலுக்கு அருகில் இருக்கிறது. சேரனின் பேரரங்கு தென்புறத்திலும், சோழனின் பேரரங்கு வடபுறத்திலும் சற்றுத் தொலைவில் இருக்கின்றன. ஒவ்வொரு பேரரங்கும் மூஞ்சல் நகரைவிடப் பெரியது; எண்ணற்ற கூடாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு கூடாரத்திலும் ஒவ்வொரு வகையான ஆயுதங்களை வரிசைப்படுத்தி வைத்திருந்தனர். நான்கு வகையான வில்கள், பதின்மூன்று வகையான அம்புகள், இருபது வகையான வாள்கள், எட்டு வகையான வேல்கள், மூன்று வகையான குறுவாள்கள், மூன்று வகையான தண்டங்கள், மூன்று வகையான கேடயங்கள். இவை தவிர நூற்றுக்கும் மேற்பட்ட தனித்துவமான ஆயுதங்கள் என அனைத்தும் வகை பிரித்து வைக்கப்பட்டுள்ளன.  

இவற்றை எடுத்துத் தருவதிலும், களத்தில் வீரர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலும் சிறுகுழப்பம் நடந்தாலும், அது களத்தின் போக்கை வெகுவாக பாதிக்கும். முன்களத்தில் நின்று போரிடும் உலோக வில் ஏந்திய பெருவீரர்களுக்கு, கணை, வாளி, கதிர் ஆகிய மூன்று வகை அம்புகள்தான் கொடுக்கப்பட வேண்டும். மற்றவகை அம்புகள் உலோக வில்லுக்கு ஏற்றவை அல்ல. அதேபோல ஐந்து முடிச்சுகள்கொண்ட மூங்கில் வில்களை ஏந்தி நிற்கும் வீரனிடம் கோலம்பினையோ கதிரம் அம்பினையோ கொடுத்தால் ஒரு பனை தொலைவுகூடப் பாயாது. ஏழு அல்லது ஒன்பது முடிச்சுகளைக்கொண்ட பட்டுநூலால் ஆன நாணைப் பயன்படுத்தும் வில்லாளிதான் விற்படையின் நடுவில் வலிமையோடு நின்று போரிடுபவன். அவனுக்குத் தேவை சரவகை அம்புகள் மட்டுமே. இவை அனைத்தும் துல்லியமான கணக்குகளின் அடிப்படையில் வகை பிரித்து அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. எந்தவிதமான குழப்பமுமின்றி மிகக்கவனமாகச் செய்யப்படவேண்டிய பணியிது.

ஒருமுறை இதில் குழப்பம் ஏற்பட்டு, வரிசையாக அடுக்கப்பட்டுள்ள அம்புக்கட்டுகள் மாறி இன்னோர் அறையில் வைக்கப்பட்டுவிட்டால், அதன்பொருட்டு களத்தில் எத்தனையோ வீரர்கள் உயிரிழக்க நேரிடும். எனவே, பேரரங்கில் ஆயுதம் கையாள்வதை எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் செயல்படுத்த வேண்டும். ஆனால், `கருங்கைவாணனின் செயல் எதையும் புரிந்துகொள்ளாத ஒரு மூடனின் முடிவையொத்தது’ என மனதுக்குள் வசைபாடியபடியே படைக்களப் பேரரங்குக்கு வந்தார் ஆயுதவாரி.

அங்கோ, எண்ணற்ற போர்க்களப் பணியாளர்கள் தங்களுக்கான ஆயுதங்களை வண்டிகளில் வேகவேகமாக ஏற்றிக்கொண்டிருந்தனர். தான் வரும் முன்பு எப்படி இந்த வேலையைத் தொடங்கினார்கள் என்ற கோபத்தோடு ஆயுதவாரி உள்ளே நுழைந்தபோது, அங்கு கருங்கைவாணன் நின்றுகொண்டு பணிகளை ஒருங்கிணைத்துக்கொண்டி ருந்தான். ``எண்ணற்ற வண்டிகளும் யானைகளும் ஆயுதங்களை ஏற்றிச் செல்லக் காத்திருக்கின்றன. வேகமாக வந்து பணியை ஒருங்கிணையுங்கள்’’ என்று ஆயுதவாரியைப் பார்த்து சத்தம்போட்டுக் கூறினான் கருங்கைவாணன்.

மிகுந்த கோபத்தோடு வந்த ஆயுதவாரிக்கு, வீரர்களும் பணியாளர்களும் நிறைந்த இந்த இடத்தில் தலைமைத்தளபதியிடம் எப்படி சினத்தை வெளிப்படுத்துவதெனத் தெரியவில்லை. ஆனால், வேலை வேகவேகமாக நடைபெற்றுக்கொண்டி ருந்தது. ``விரைவாகப் பிரித்தனுப்புங்கள். சேரனின் பேரரங்கிலிருந்து ஆயுதமேற்றப்பட்ட வண்டிகள் அப்போதே வெளியேறிவிட்டன’’ என்றான்.

பாண்டியனின் ஆயுதவாரி சற்றே அதிர்ச்சிக்குள்ளானார். ``அதற்குள் எப்படி அவர்கள் பிரித்தனுப்பினார்கள்?’’ என்றார்.

``அவர்கள் ஆயுதவாரி இரவில் கூடாரத்துக்குச் சென்று ஓய்வெடுப்பதில்லையாம். ஆயுதப்பேர ரங்கில்தான் இருப்பாராம். எனவே, செய்தி கிடைத்ததும் வேலையைத் தொடங்கிவிட்டார்’’ என்றான் கருங்கைவாணன். அதன் பிறகு அவர் பேச்சு ஏதுமின்றி ஆயுதங்களைப் பிரித்தனுப்பும் வேலையில் ஈடுபட்டார்.

உண்மையில் கருங்கைவாணன், மற்ற இரு ஆயுதவாரிகளுக்கும் இன்னும் செய்தியையே அனுப்பவில்லை. நள்ளிரவுக்குப்பின் இவ்வளவு பெரிய வேலையைச் சொன்னால், எந்த ஆயுதவாரியும் ஒப்புக்கொள்ள மாட்டார். அதுமட்டுமன்று, வலுக்கட்டாயமாகச் செய்யும் சூழலை ஏற்படுத்தினால் அது போர்க்களத்தில் குழப்பத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது. எனவேதான், மிகக் கவனமாக இந்த வேலையைச் செய்தான் கருங்கைவாணன்.

பாண்டியனின் பேரரங்கிலிருந்து ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு வண்டிகள் வெளியான பிறகுதான் மற்ற இரு ஆயுதவாரிகளுக்கும் செய்தி சென்று சேர்வதைப்போலப் பார்த்துக்கொண்டான். சிறு முணுமுணுப்புகளும் கோபமும் வெளிப்பட்டனவே தவிர, வேலையை மறுக்கும்நிலை எங்கும் ஏற்படவில்லை. ஏனென்றால், ஒரு பேரரசு இன்னொரு பேரரசைவிடப் பின்தங்கும் நிலை ஏற்படக் கூடாது என்பதில் மூன்று பேரரசுகளின் பொறுப்பாளர்களும் ஆயுதவாரிகளும் மிகக்கவனமாக இருந்தனர்.

பல்லாயிரம் வீரர்களுக்கு எண்ணற்ற வகையான ஆயுதங்களைக் கணக்குகளின்படி துல்லியமாக வகை பிரித்து அனுப்பும் பணியை ஆயுதவாரிகள் மூவரும் அவர்களுக்குக் கீழே பணியாற்றும் எண்ணிலடங்காத போர்ப்பணியாளர்களும் இரவு முழுவதும் செய்தனர். விடியும்போதுகூட ஆயுதமேற்ற யானைகளும் வண்டிகளும் பேரரங்கின் முன்னால் காத்திருந்தன. அப்போதுதான் திசைவேழரின் சங்கொலி கேட்டது.

காற்றெங்கும் செம்புழுதியேறி மிதக்க திசைவேழரின் முரசோசை கேட்டதும் தேர்கள் தங்களுக்கான இலக்கு நோக்கி வேகம்கொள்ளத் தொடங்கின. கருங்கைவாணன் மிகக் கவனமாகத் திட்டங்களை வகுத்து அவற்றை சேனைமுதலிகளுக்கும் தளபதிகளுக்கும் விளக்கியிருந்தான்.

``அனைத்துப் படைப்பிரிவுகளையும் எதிரியின் படையைத் தாக்கப் பயன்படுத்தினால் மூஞ்சலின் பாதுகாப்புக்கு என்ன ஏற்பாடு?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. ``மூஞ்சலை வேந்தர்களின் கவசப்படையும் அகப்படையும் காத்தால் போதும். எதிரிகள் யாரும் இன்று மூஞ்சலை நெருங்க எந்தவித வாய்ப்பும் இல்லை. ஒருவேளை சிறு குழு ஏதாவது நெருங்கினால் இந்தப் படையால் அவர்களை எளிதில் வீழ்த்த முடியும்’’ என்றான்.

``காற்றின் துணைகொண்டு தாக்கும் அம்பை எதிரிகள் பயன்படுத்தினாலும் நமக்கு எந்த பாதிப்பும் நிகழப்போவதில்லை. ஏனென்றால், நமது படை எதுவும் தொலைவில் நிற்கப்போவதில்லை. மொத்தப்படையும் எதிரிகளைச் சூழ்ந்துதான் நிற்கப்போகிறது’’ என்றான்.

கருங்கைவாணனின் திட்டம், வேந்தர்களைப்போல தளபதிகளுக்கும் சேனைமுதலிகளுக்கும் பெரும்நம்பிக்கையை உருவாக்கியது. போர்க்களத்தில் தாக்குதலுக்கும் இழப்புக்கும் பின் நம்பிக்கையளிக்கும் திட்டம் தீட்டப்படுமேயானால் அது பல மடங்கு ஆற்றலோடு செயல்பாட்டுக்கு வரும். வேந்தர்படையின் செயல்பாடு இன்று அப்படித்தான் இருந்தது.

பறம்புப்படை நிலைகொண்டுள்ள இடத்துக்கு மேற்குப் பகுதியில் காரமலை உள்ளது. அந்த திசை தவிர, பிற மூன்று திசைகளிலும் முழுமையாக வேந்தர்படை, பறம்புப்படையைச் சுற்றிவளைத்தது.

`ஈக்கிமணலும் கருமணலும் உள்ள தட்டியங்காட்டு நிலத்தில் குதிரைகளால் வெகுதொலைவுக்கு விரைந்து ஓட இயலாது. அதைக் கணித்து ஒரே மூச்சில் குதிரைகளையோட்டி, பறம்புப்படையின் பின்புறம் சென்று சேர்க்க வேண்டும். அதைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் அணியணியாய்ப் பின்தொடர்ந்து தங்களுக்குரிய இடத்தில் நிலைகொள்ள வேண்டும். இடைப்பகுதிக்கும் பின்பகுதிக்கும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாகப் போய்ச்சேர வேண்டும். அந்த விரைவே, இன்றைய தாக்குதல் உத்திக்கான அடிப்படையை உருவாக்கும்’ என்று கூறியிருந்தான் கருங்கைவாணன். அவனது திட்டம் அப்படியே செயல்படுத்தப்பட்டது.

தாக்கி முன்னேறும் தனது திட்டத்தைத் தொடங்காமல் நிறுத்திக்கொண்டான் முடியன். எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை உற்றுக் கவனித்தான். வேந்தர்படை, பறம்புப்படையை நெருங்கவோ ஆயுதங்களால் தாக்கவோ முற்படவில்லை. ஆனால், முழுமையாகச் சூழ்ந்து அணிவகுத்துக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் குதிரையில் ஏறி பறம்புப்படை முழுமையும் சுற்றிவந்தான் முடியன். எதிரிகளின் தளபதிகள் பலரும் அவன் கண்ணில் பட்டனர். ஆனால், கருங்கைவாணன் மட்டும் அவன் கண்ணில் படவே இல்லை. `இவ்வளவு விரிவாகத் திட்டமிட்டிருப்பதால் அவன் முன்னணியில்தானே நிற்க வேண்டும். எங்கே போனான்?’ என்று சிந்தித்தவண்ணம் பறம்புப்படையின் பின்பகுதியை வந்து அடைந்தான் முடியன்.

அங்கே தேக்கன் நின்றுகொண்டிருந்தான். தேக்கனின் பாதுகாப்புக்காகத்தான், அவனைப் பின்புற வரிசையில் நிற்குமாறு முடியன் சொல்லியிருந்தான். ஆனால், இப்போது அவன் இருக்கும் திசையிலும் எதிரிகள் சூழ்ந்து நிற்பதால் அவனும் முன்வரிசையில் நிற்பவனாக மாறினான்.

தேக்கனின் அருகில் வந்ததும் குதிரையை விட்டு இறங்கினான் முடியன். அப்போது நாகக்கரட்டிலிருந்து நீள்கொம்பின் சுழியோசை கேட்டது. அதிர்ச்சியோடு நாகக்கரட்டைத் திரும்பிப் பார்த்தான். வெளிப்படுத்தப்படுவது சுழியோசைதானா என்பதை மறுபடியும் கூர்ந்து கவனித்தான். ஆபத்தை முன்னுணர்த்தும் நீள்கொம்பின் சுழியோசைதான் அது.

சற்றே கோபத்தோடு, ``எதிரிகள் நமது படையைச் சூழ்ந்துவிட்டால் ஆபத்து என்று பொருள்கொண்டுவிடுவதா?’’ என்று தேக்கனைப் பார்த்துக் கேட்டான்.

ஓசை கேட்ட திசையையே பார்த்துக்கொண்டிருந்த தேக்கன் சொன்னான், ``ஆபத்து இங்கில்லை, அங்கு.’’

முடியன் சற்றே மிரட்சியோடு மீண்டும் நாகக்கரட்டைப் பார்த்தான். இருக்கிக்கொடியின் பால்கொண்டு காட்டப்படும் குறிப்பு குளவன்திட்டை நோக்கிக் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏற்பட்டுள்ள ஆபத்தைப் பாரிக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர் நாக்கரட்டின் மீதிருந்த கூவல்குடியினர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Sep 01, 2018 10:18 am

நன்றி நண்பரே ... பணி நிமிர்த்தமாக படிக்கவும் பதிவிடவும் முடியவில்லை ... பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் ...

தங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் ..



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிரபாகரன் ஒற்றன்
பிரபாகரன் ஒற்றன்
பண்பாளர்

பதிவுகள் : 52
இணைந்தது : 31/08/2018

Postபிரபாகரன் ஒற்றன் Sat Sep 01, 2018 1:03 pm

தங்களை என்னை மன்னிக்கவும்...
இதில் படத்தை இணைக்கவில்லை
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 1757813334 வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 1757813334 ...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Sep 01, 2018 3:38 pm

பார்த்தேன் நண்பரே... படங்களுடன் நான் பதிவு செய்து விடுகிறேன் ...  வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 13 3838410834
மன்னிப்பு எல்லாம் எதுக்கு நண்பரே .. சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக