புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
28 Posts - 62%
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
13 Posts - 2%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
3 Posts - 0%
M. Priya
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Thu May 17, 2018 2:16 pm

அன்பரே

அத்தியாயம் 17 ல் இருந்து தாங்கள்
கடைஎழு வள்ளல்களில் ஒருவரான வேட்டுவ வேந்தனான கொல்லியாண்ட வல்வில் ஓரியின்
வில்லின் வேகத்தில் பதிவிட்டு
அத்தியாயம் 83 வந்து விட்டீர்கள் ...
என்ன ஒரு பாராட்டும் படியான வேகம்...


அடியேன் ரொம்ப பின்னால் வந்து கொண்டு உள்ளேன் ...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 3838410834 வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 3838410834 வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 3838410834

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 17, 2018 2:38 pm

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் "ஆலா" பறந்து சிறிது படித்து முடித்து விட்டேன் நண்பரே... சிரி
அடுத்த வாரம் வியாழக்கிழமை வரை 84 - வது அத்தியாயத்திற்கு காத்திருக்க வேண்டும்... அதனால் நீங்கள் மெதுவாகவே வாருங்கள் ஒரு திங்களில் நெருங்கி விடலாம் ... சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 24, 2018 2:19 pm

வேட்டுவன்பாறையில் இருந்த பெண்கள் கூட்டம் மயிலாவை அழைத்துக் கொண்டு வள்ளிக் கானம் நோக்கிப் புறப்பட்டது. கூத்துக்களத்தில் இசைக் கருவிகளை இசைக்கக்கூட ஆண்கள் யாருக்கும் அனுமதியில்லை. எல்லாவற்றையும் பெண்களே இசைக்க வேண்டும். எனவே, ஊரில் இருந்த பறை, துடி, முழவு என ஒன்றைக்கூட விடவில்லை. மந்தையில் கட்டியிருந்த காரிக்கொம்பைக்கூட கழற்றி எடுத்துக்கொண்டார்கள். கரைபுரண்ட உற்சாகத்தினூடே கூட்டம் புறப்பட்டது. பெருங்குரைப்பொலியோடு நாய்க்கூட்டமும் மொத்தமாக உடன் சென்றது.

சந்தனவேங்கை, காட்டின் எந்தத் திசையிலும் இருக்கக்கூடியதுதான். ஆனால், கருவுற்ற பெண்ணுக்கான சடங்கைச் செய்ய எந்தச் சந்தனவேங்கையைத் தேர்வுசெய்கின்றனரோ அந்த மரம் இருக்கும் பகுதியைத்தான் `வள்ளிக்கானம்’ என்பர். அங்கு நடக்கும் சடங்கு என்னவென்று இன்று வரை ஆண்களுக்குத் தெரியாது. பறம்புப்பெண்கள் காலங்காலமாய்க் காத்துவரும் ரகசியம் இது. இரவெல்லாம் கூத்து நடத்துகிறார்கள் என்று மட்டுமே ஆண்கள் அறிவர். அங்கு என்ன வகையான கூத்து நடக்கிறது என்பதெல்லாம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இந்தச் சடங்கில் பங்கெடுத்துத் திரும்பும் பெண்கள், அதன் பிறகு நெடுநாள்கள் அந்த மகிழ்வைப் பேசிக் களிப்பர். அதுதான் ஆண்களை மேலும் சினமேற்றும். என்னதான் நடக்கிறது அங்கு எனத் தெரிந்துகொள்ள, எண்ணற்ற வழிமுறைகளைக் கையாண்டு பார்த்தனர்.  ஆனாலும் இன்று வரை அவர்களால் எதையும் கண்டறிய முடியவில்லை.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 85p1_1526719951
காதல்வயப்பட்ட இளம்பெண், தன் காதலன் மீதான அளவுகடந்த அன்பால் இந்தச் சடங்கில் நிகழ்வதைப் பற்றிச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஆண்கள் அதற்கான முயற்சியையும் செய்துபார்த்தார்கள். ஆனாலும் எந்தக் காதலியும் தன் காதலனிடம் இதை மட்டும் பகிர்ந்து கொள்வதேயில்லை.

காரணம், இந்தச் சடங்கில் பங்கெடுக்கும் இளம்பெண்ணிடம் முதுபெண்கள் சொல்லும் முதல் எச்சரிக்கையே அவள் காதலனைப் பற்றியதுதான். ``வள்ளிக்கூத்தில் என்ன நடக்கிறது என்பதை உன் காதலனிடம் பகிர்ந்துகொள்ளக் கூடாது. அவ்வாறு பகிர்ந்துகொண்டால், உனது பிள்ளைப்பேறு வலி மிகுந்ததாக மாறும். அப்போது எந்த ஆணும் உனது வலியைச் சுமக்க வர மாட்டான். நாங்கள்தான் உடன் நிற்போம். அளவுகடந்த உனது வலியைவைத்தே நீ தப்பு  செய்துவிட்டாய் எனக் கண்டறிந்துவிடுவோம்’’ என்று சொல்லிவிடுவார்கள். இது ஓர் அச்சமூட்டும் எச்சரிக்கைக்காகச் சொல்லப் படுவதுதான். ஆனால், இளம்பெண்கள் பிள்ளைப்பேறு வலியை நினைத்துப்பார்த்து யாரிடமும் வாய் திறக்க மாட்டார்கள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 85p2_1526720058
ஆணுக்குத் தெரியாத ஓர் உலகை, இன்று வரை பறம்புப்பெண்கள் காப்பாற்றிவருகின்றனர். அதுவே அவர்களுக்குப் பெருமகிழ்வைக் கொடுப்பதாகவும் இருக்கிறது. அவர்களின் இந்த மகிழ்வுதான் ஆண்களை மீண்டும்  மீண்டும் கண்டறியத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. இன்றுகூட அதற்கான முயற்சிதான் நடந்தது.  இரலிமேட்டிலிருந்து வள்ளிக்கூத்துக்காக நீலன் புறப்பட்டபோது, ``காலம்பன் மூத்தமகன் கொற்றனையும் அழைத்துச் செல்’’ என்று வேட்டூர் பழையன் அனுப்பிவைத்தான். அதற்கான காரணம் இதுதான். உள்ளூர்ச் சிறுவர்களை அனுப்பினால் வள்ளிக்கானத்துக்கு அழைத்துச் செல்ல மறுப்பார்கள். அதுவே காலம்பன் மகன் என்றால், மறுத்து ஒதுக்க மாட்டார்கள் என நினைத்து அனுப்பிவைத்தான் பழையன். ஆனால், காட்டுக்குள் நுழையும்போது அவனை நீலனின் கையில் கொடுத்து, ``இங்கேயே இரு. நாங்கள் காலையில் வந்து உனக்கு விருந்துபடைக்கிறோம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள் பெண்கள்.

வேட்டுவன்பாறையின் வயதான இரண்டு பெருசுகள், சோமக்கிழவனும் செம்பூந்தனும். பழையனைவிட சற்று வயது குறைவுதான். ஆனால், மலைப்பாறைகளில் உருண்டதால் நடமாட்டம் வேகமாகத் தளர்ந்துவிட்டது. அதிக தொலைவு நடக்க முடியாத கிழத்தன்மையை அடைந்திருந்தனர். அதனால்தான் இப்போது இரலிமேட்டுக்குப் போகாமல் ஊரிலேயே இருக்கின்றனர். காட்டுக்குள் நுழைந்த பெண்கள் கொற்றனை அழைத்துச் செல்லாமல் ``இங்கேயே இரு” எனக் கூறிச் சென்றவுடன், சோமக்கிழவன் தான் கொதித்தெழுந்தான்.

``சின்னப் பையன் ஆசையாகக் கேட்கிறான். அவனக்கூட கூட்டிப்போகாம விட்டுட்டுப் போறீங்களேடி!” எனப் பெரும்சத்தத்தை எழுப்பினான். ஆனால், பெண்கள் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. கிழவன் ஏன் கத்துகிறான் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும். எல்லாக் காலங்களிலும் சிறுவர்களின் மூலமாகவும் காதலன்களின் மூலமாகவும்தான் ஆண்கள் முயல்கிறார்கள். இன்று வரை அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இப்போதும் கொற்றனைக் கொஞ்சிப் பேசி, நீலனுக்குப் பக்கத்தில் உட்காரவைத்துவிட்டுப் போய் விட்டார்கள்.

அங்கவை, இதுவரை வள்ளிக்கூத்தில் கலந்துகொண்டதில்லை. முதன்முறையாக இப்போதுதான் அவள் கலந்துகொள்கிறாள். பெண்கள் கூட்டம், மயிலாவை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் போய்க்கொண்டிருந்தது. தீப்பந்தங்களை ஏந்தியவர்கள் முன்னும் பின்னுமாக வந்துகொண்டிருந்தனர். ஆதினிக்கு அருகில் சற்றே அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்தாள் அங்கவை. கூட்டத்தின் பேச்சொலியினூடே அவளின் அமைதியைக் கவனித்த ஆதினி அருகில் சென்று கேட்டாள், ``முதன்முறையாகப் பங்கெடுப்பதால் என்னவெல்லாம் நடக்கும் என்ற சிந்தனையிலேயே வருகிறாயா?”

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 85p3_1526719966
தலையாட்டி `இல்லை’ என்றாள் அங்கவை.

``பிறகு என்ன சிந்தனையில் இருக்கிறாய்?” எனக் கேட்டாள்.

அப்போதும் அங்கவையிடமிருந்து பதிலில்லை.

``இன்றிரவு `என்ன நடந்தது?’ என உதிரன் கேட்டால் சொல்லிவிடுவோம் என அச்சப் படுகிறாயா?” என்று கேட்டாள் சற்றே நக்கலாக.

சின்னப் புன்முறுவலோடு ஆதினியின் காதோடு வந்து சொன்னாள், ``உதிரன் கேட்டால் சொல்ல மாட்டேன். ஆனால், தந்தை கேட்டால் மறுக்க மாட்டேன்.”

ஆதினிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை, மகளைத் தோளோடு அணைத்துக் கொண்டு யார் காதிலும் விழாதபடி மெள்ள ``நிச்சயம் உன் தந்தை கேட்க மாட்டார். கவலைப்படாதே!” என்றாள்.

அங்கவை அதிர்ச்சியோடு ஆதினியைப் பார்த்தாள். அவளோ மகளைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டியபோது, முகத்திலிருந்து பொங்கி மேலெழுந்தது வெட்கம்.

அங்கவை ஒரு கணம் ஆடிப்போனாள். சற்றே கோபத்தோடு ``அப்படியென்றால் நானும் உதிரனிடம் சொல்வேன்” என்றாள்.

வெட்கம் படர தாயும் மகளும் மற்றவர்களின் காதில் படாமல் பேசிச் சிரிப்பதைப் பார்த்த பெண் ஒருத்தி ``நீங்கள் மட்டும் என்ன பேசிச் சிரிக்கிறீர்கள்?” எனக் கேட்டாள்.

கேட்டவளை அழைத்துக்கொண்டு பேச்சை மாற்றியபடி அங்கவையை விட்டு சற்றுத்தள்ளி முன்னே நடந்தாள் ஆதினி.

இன்னும் சிறிது தொலைவுதான் இருந்தது வள்ளிக்கானம். நேரம் செல்லச் செல்ல வேகம் கூடிக் கொண்டேயிருந்தது. இதற்காக மாதக்கணக்கில் காத்திருந்தவர்கள் அல்லவா அவர்கள்! கும்மிருளில் மலைப்பாதையில் அவர்களின் கால்கள் பெருமயக்கத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தன.

சந்தனவேங்கையின் அடிவாரத்தில் கருவுற்ற  பெண்ணை அமரவைத்து நடக்கும் சடங்குகள் எல்லாம் வழக்கம்போல் ஊருக்குள் நடக்கும் சடங்குகள்தான். ஆனாலும் இன்றைய இரவின் முக்கியத்துவத்துக்குக் காரணம் வள்ளிக்கானத்தின் கொண்டாட்டம்தான். அந்தக் கொண்டாட்டத்துக்கு அடிப்படை, எங்கும் கிடைக்காத அதிசிறந்த மதுவகைதான்.

ஆண்கள் அறிந்திராத அரிதினும் அரிதான மதுவகை ஒன்று உண்டு. பெண்கள் மட்டுமே அறிந்து, இன்றுவரை ஆண்களின் வாடையே படாமல் காப்பாற்றிவைத்துள்ள மது வகை அது. `வள்ளிக்கானத்தின் கொண்டாட்டத்தில் பெண்கள் மது உண்டு களிக்கின்றனர்’ என்ற செய்தி ஆண்களால் யூகிக்கக்கூடியதுதான். ஆனால், அது என்ன வகை மது என்பது இன்றுவரை ஆண்களுக்குத் தெரியவில்லை.

சோமப்பூண்டு பானத்தைக் குடித்த ஒருத்தி, ``எங்களின் மதுபோல இது இல்லை” என்று ஒருமுறை சொல்லிவிட்டாள். அன்றிலிருந்துதான் வள்ளிக்கூத்தில் குடிக்கும் மதுவின் வகை என்ன என்பதைப் பற்றிய தேடலை ஆண்கள் தீவிரப் படுத்தினர். இன்றுவரை யாருக்கும் தெரியாத ரகசியமாக அது காப்பாற்றப்படுகிறது. காரணம், அந்த மதுவை உருவாக்கும் பணியில் ஈடுபடு பவர்கள் முதுபெண்களே. அவர்களிடமிருந்து ஆண்களோ, மற்ற பெண்களோகூட இது தொடர்பான செய்தியைக் கேட்டறிய முடியாது.

ஒவ்வொரு வகை மலரின் தேனுக்கும் ஒவ்வொரு வகையான குணமுண்டு. ஆனால், இணையற்ற சுவைகொண்ட தேன் இருக்கும் மலர், `நாகசம்பங்கி’. அதில் துளிர்க்கும் தேனின் சுவையை எதனுடனும் ஒப்பிட முடியாது. துளித்தேனை நுனிநாக்கில் வைத்த கணம், மொத்த உடலும் தேனுக்குள் கரைவது போலிருக்கும். ஆனால், நாக்கில் வைக்கப்பட்ட தேன்துளி எளிதில் கரையாது; ஒட்டிக்கொள்ளும். அதன் சுவையை நாக்கு அடிக்கடி நுகரத் துடிக்கும். அப்போது அந்தச் சுவை உடல் முழுக்கத் தளும்பிக்கொண்டிருக்கும். நினைவுப் புலன்கள், சுவையுணர்வுக்குள் சிக்குண்டுவிடும். மீள முடியாத சுவையை, நினைவு மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்தபடியே இருக்கும். சுவை கரையாமல் தேன் மட்டுமே கரைந்திருக்கும். மறு துளி நோக்கி மனதை நகர்த்தாமல் நிறுத்தி வைக்கக்கூடிய மயக்கம் நாக சம்பங்கியின் தேனுக்கு மட்டுமே உண்டு.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 85p4_1526719980
நாகசம்பங்கி பூத்துக்கிடக்கும் பகுதியில் இருக்கும் தேன்கூட்டிலிருந்து தேன்கட்டியை எடுப்பதுதான் முதலில் செய்யும் பணி. அதன் பிறகு அந்தத் தேன்கட்டியைத் தகுந்த சேர்மானத்தோடு சேர்த்து நிலத்துக்குள் புதைத்து வைத்துவிடுவர். பெண் முதன்முறையாகக் கருவுற்றவுடனே முதுபெண்களின் முதல் வேலை நாகசம்பங்கியின் தேனை எடுப்பதுதான். எந்தச் சந்தனவேங்கையைத் தேர்வு செய்கிறார்களோ, அந்த இடத்தில்தான் அதைப் புதைத்துவைப்பர். நான்கு முதல் ஐந்து மாதம் மண்ணுக்குள் இருக்கும் தேன்கட்டி, நுரை துளிர்த்து சுவை இறுகி உறைந்திருக்கும். ஒற்றைத் துளியிலே மனிதரைக் கரைக்கக்கூடிய தேன், இப்போது தேறலாக உருத்திரண்டிருக்கும். இதன் துளி நாக்கில் பட்ட கணம், தேள் கொட்டியதைப் போல சுர்ரென ஒரு காரமயக்கம் உச்சந்தலைக்கு ஏறும். கண நேரம் கண் கட்டி அவிழும். அதன் பிறகு நிகழ்வதை நினைவில் தங்கவைக்க யாராலும் முடியாது.

இன்றைக்குச் சந்தனவேங்கையின் அடிவாரத்தில் அமரவைக்கப்பட்ட மயிலா, முதல் மிடறு குடித்ததிலிருந்து தொடங்கியது வள்ளிக்கூத்து. ஆறு வகையான துடிகளை அடித்து, ஆண்களால் அறியவே முடியாத மதுவின் சாரமேற்றி, பெண்களின் கூட்டம் ஆடத் தொடங்கியது. நேரமாக ஆக துடியின் ஓசையும், பறையின் அதிர்வும், முழவின் சத்தமும் காட்டை உலுக்கின. பெண்கள் தங்களின் ஆதியாட்டத்தை நிலம் பிளக்க ஆடினர்.

வேட்டுவன்பாறையில் இருந்த ஆண்கள் துடியின் ஓசை கேட்டு, காரமலையின் வடபுறம் நோக்கி ஏக்கத்தோடு பார்த்திருந்தனர். பொழுது, நள்ளிரவை நெருங்கவில்லை. ஆனால், அதற்குள் ஆட்டம் தொடங்கிவிட்டதை இசைக்கருவிகளின் ஓசை சொல்லியது. செம்பூந்தன் சொன்னான், ``அது என்ன தேறல்னு இன்னைக்கு வரைக்கும் தெரியலை. எந்த ஆம்பளையினாலும் கண்டுபிடிக்க முடியலை. இவளுக மட்டும் இந்த ஆட்டம் போடுறாளுக!”

சோமக்கிழவனோ ``தொடங்கும்போதே சத்தம் இப்படி இருக்கே... இன்னும் போகப்போக எப்படி இருக்கும் பாரு!” என்றார்.

இளைஞர்கள், ஓசை கேட்ட மலை உச்சியை நோக்கி அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தனர். ஓசை கூடிக்கொண்டேயிருந்தது.

வேட்டுவன்பாறையைச் சுற்றிப் பல நூறு வீரர்கள் செடிகொடிகளினூடே நுழைந்து மேலேறிக் கொண்டிருந்தனர். கும்மிருட்டு சூழ்ந்திருந்தது. இருப்பதோ இருபத்துநான்கு பேர்தான். எல்லோரின் கவனமும் உச்சிமலை பார்த்து வள்ளிக்கூத்தில் நிலைகொண்டிருந்தது.

மூன்று சேனைகளைக்கொண்ட அறுநூறு பேரோடு மேலேறிக்கொண்டிருந்தான் கருங்கைவாணன். நிறையிருள் நாள் எல்லா வகையிலும் பொருத்தமாக இருந்தது. மிகத்தேர்ந்த வீரர்களைக்கொண்ட படையணியைத் தேர்வுசெய்திருந்தான். பறம்பின் காவல் தலைவர்கள் இருக்கும் ஊருக்குள் நுழைந்து தாக்கப்போகும் இந்தப் படைக்கு, தானே பொறுப்பேற்று வந்தான். திரையர்களைத் தாக்கிய போரில் பெரும் வீரத்தை வெளிப்படுத்திய திதியனை தென்புறத்துக்கும், சேரநாட்டுப் பெருவீரன் துடிச்சாத்தனை வடபுறத்துக்கும் தலைமைதாங்கச் செய்தான். கிழக்குப்புறத்திலிருந்து வீரர்களோடு முன்னேறினான் கருங்கைவாணன்.

வேட்டுவன்பாறையின் பாதி உயரத்தைக் கடந்துகொண்டிருந்தனர். நாய்கள் ஏதும் ஊரில் இல்லாதது அவர்களுக்கு இன்னும் வசதியாகிவிட்டது. புது ஆள்களை மலையடிவாரத்தில் கண்டாலே மேலேயிருந்து பாய்ந்து இறங்குபவை இடுப்புயர நாய்கள். சூழ்ந்துவிட்டால், யானைகளையே நகரவிடாமல் நிறுத்தக்கூடியவை. அத்துணையும் இன்று பெண்களோடு சேர்ந்து மலைமேல் ஏறிவிட்டன. குரைப்பொலி ஏதுமற்று அமைதி கொண்டிருந்த வேட்டுவன்பாறையை நோக்கி எதிரிகள் மேலேறிக்கொண்டிருந்தனர்.

ஊரின் மந்தையில் உட்கார்ந்தபடி காரமலையில் துடியோசை கேட்கும் பகுதியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தனர் ஆண்கள். துடியோசை, பெருகத் தொடங்கியது. பெண்கள் இல்லாத ஊரில் பெண்களைப் பற்றிப் பேசத்தான் எவ்வளவு கதைகள் இருக்கின்றன. அதுவும் அவர்களால் நிராகரிக்கப்பட்ட வலியை, கேலிப் பேச்சின் மூலம்தான் கடக்க முடியும். பேச்சு, களைகட்டத் தொடங்கியது. சிறுவன் கொற்றனுக்குத் தூக்கம் வந்தது. அதைக் கவனித்த நீலன், ``நள்ளிரவுக்குப் பிறகு பனி அதிகமாக இருக்கும். நீ போய் குடிலுக்குள் படுத்துக்கொள்” என்றான்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 85p5_1526719993
கொற்றன், மந்தையிலிருந்து எழுந்து நீலனின் குடில் நோக்கி நடந்தான். வேட்டுவன்பாறையின் கிழக்கு முனையில் நாங்கில்மரத்தின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட குடில் அது. அங்கிருந்து பார்த்தால், கிழக்குத்திசைக் குன்றின் சரிவும் விரிந்துகிடக்கும் சமவெளியும் முழுமையாகத் தெரியும். கொற்றன் தூக்கக்கலக்கத்திலேயே குடில் நோக்கி வந்தான். படல்கொண்டு மூடப்பட்டிருந்தது வாசல். படலை மெள்ளத் தூக்கிச் சுவர் ஓரமாகத் திரும்பினான். சரிவுப் பகுதியில் இங்கும் அங்குமாக மனிதத்தலைகள் தெரிந்தன. ஆயுதம் ஏந்திய பெருங்கூட்டம் மேலேறிக்கொண்டிருப்பது தெரிந்தது. கும்மிருட்டினூடே தலைகள் பதுங்கி மறைந்தன. எதிரிகள் வந்துகொண்டிருப்பது கண நேரத்தில் புரிந்தது. `இப்படியே சத்தம்போட்டுக்கொண்டு மந்தை நோக்கி ஓடலாமா?’ எனத் தோன்றியது. `அப்படிச் செய்தால் எதிரிகள் விழிப்படைந்து விடுவார்கள்’ எனச் சிந்தித்தபடியே குடிலுக்குள் போய் படலை மூடிக்கொண்டான் கொற்றன். 

ஒரு கணம் சிந்தித்தவன் சட்டென குடிலின் மேற்புறக் கூரையை ஆள் நுழைவதற்கு ஏற்ப பிரித்தெடுத்தான். நாங்கில்மரத்தின் கிளைகள், குடில் மேல் படர்ந்திருந்தன. கூரையினுள் நுழைந்து கிளையின் மேல் ஏறினான். மரங்கள் ஒன்றுடனொன்று நெருங்கிப் பின்னிக் கிடந்தன. கொப்புகளின் வழியே ஊர்ந்து கடந்தவன் கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்றாம் மரத்தின் அடிவாரத்தில் தரையில் குதித்தான்.  

`யாரோ மரத்திலிருந்து குதிப்பதுபோல் இருக்கிறதே!’ என்று மந்தையில் இருப்பவர்கள் திரும்பிப் பார்த்தனர். பதறிப்போய் ஓடிவந்தான் கொற்றன். இப்படி ஒரு நள்ளிரவில்தான் தன்னுடைய ஊர், எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்டது; மக்கள் எல்லோரும் கொன்று குவிக்கப்பட்டனர். மந்தையில் வைத்து ஊரே வெட்டிச் சாய்க்கப்பட்ட கொடுமையை நேர்கொண்டு பார்த்தவனுக்கு, இப்போது உடலெல்லாம் நடுங்கியது; பேச வார்த்தை எழவில்லை. `ஏதோ விலங்கைப் பார்த்துதான் அஞ்சி ஓடிவந்துள்ளான்’ என முதலில் நினைத்தனர். ``அஞ்சாமல் சொல், எதைப் பார்த்தாய்?” என நீலன் கேட்டதற்கு, மேலேறிக்கொண்டிருக்கும் எதிரிகளைப் பற்றிச் சொன்னான் கொற்றன்.

மந்தையில் இருந்தவர்கள் சரிவு நோக்கிப் பாய்ந்து சென்றனர். மூன்று புறங்களிலும் எதிரிகள் மேலேறிக்கொண்டிருந்தனர். சத்தமின்றி நீலன் கையைக் காட்டி ஏதோ சொன்னான். வீரர்கள் சிலர் வீடுகளுக்குள் இருந்த ஆயுதங்களை எல்லாம் வெளியே எடுத்து வந்தனர். புங்கன், தென்புறச் சரிவில் மேலேறும் எதிரிகளைப் பார்த்தான். சோமக் கிழவன் வலதுபுறச் சரிவைப் பார்த்தான். கிழக்குத்திசை முனையிலிருந்து முப்புறமும் பார்த்தான் நீலன். வந்து கொண்டிருப்பது பெரும் எண்ணிக்கையிலான படை என்பது தெரிந்தது. `இருபத்திநான்கு பேர்தான் இருக்கிறோம். அதில் பாதிப்பேர் வயதான கிழவர்கள். அதற்குத் தகுந்த தாக்குதல் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று சிந்தித்தபடியே ஊரின் நடுப்பகுதிக்கு ஓடிவந்தான்.

மற்ற திசையில் பார்த்துக் கொண்டிருந்த வர்களும் நீலனின் மெல்லிய சீழ்க்கை ஒலி கேட்டு ஒன்றுகூடினர். ``பேசுவதற்கான நேரமில்லை. வேட்டுவன்பாறையின் மீது எதிரிகள் ஏறிவிடக் கூடாது. மூன்றாகப் பிரிவோம் எல்லா வகையான தாக்குதல் உத்திகளையும் பயன்படுத்துங்கள்” என்றான் நீலன். குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மூன்று திசைகளிலும் தாக்க ஆயத்தமானார்கள்.

கருங்கைவாணனின் படை, மிகக் கவனமாக மேலேறிக்கொண்டிருந்தது. இப்போதுவரை யாரும் நம்மைப் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில்தான் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். நீலனின் குடிலுக்குச் சற்று கீழ்முனையில் பெரும்பாறை ஒன்றை யாரோ நகர்த்துவதுபோல் தோன்றியது. `மேலே ஏதோ சத்தம் கேட்பதுபோல் இருக்கிறதே!’ என உணர்ந்த கருங்கைவாணன், அண்ணாந்து பார்த்தான். பெரும்பாறை ஒன்று மெள்ள உருளத் தொடங்கியது. மேலேறிக்கொண்டிருந்த எதிரிகள் சத்தம் கேட்டு மிரண்டு பார்க்கும்போது பாறைகள் ஒன்றுக்கு அடுத்து ஒன்றாக உருளத் தொடங்கின. உருளும் பாறைகள் நேர்க்கோட்டில் இறங்குவதில்லை. எந்தத் திசையில் நெளியும் எனக் கணிக்க முடியாததால், வீரர்கள் எங்கும் தெறித்துச் சிதறினர். இருட்டு, ஒன்றின் ஓசையை இன்னொன்றுக்கு மாற்றிக்காட்டக்கூடியது. எனவே, பாறைகள் எல்லாப் பக்கங்களும் உருளுவதுபோல் உணர்ந்தனர்.

எதிரிகள் தாக்கத் தொடங்கிவிட்டார்கள் எனத் தெரிந்ததும், எதிர்த்தாக்குதல் நடத்த உத்தரவிட்டான் கருங்கைவாணன். ஆனால், உருளும் பாறைகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதே வீரர்களுக்கு முதல்நிலைப் பணியாக இருந்தது. ஆங்காங்கே பொருத்தமான இடங்களில் நிலைகொண்ட பிறகே எதிர்த்தாக்குதலைத் தொடங்கினர்.

மூன்று திசைகளிலிருந்தும் வேந்தர்களின் படைகள் தாக்குதலைத் தொடங்கின. சிறிது நேரத்திலேயே மேலிருந்தும் ஆயுதத்தாக்குதல் தொடங்கியது. அம்புகளும் ஈட்டிகளும் இணையற்ற வேகத்தோடு காற்றைக் கிழித்துக்கொண்டு இறங்கின. இருட்டில் எந்தத் திசையிலிருந்து ஆயுதங்கள் வருகின்றன எனத் தெரியாததால், வேந்தர்படை தற்காத்துக்கொள்ள மிகவும் திணறியது. மேலிருந்து தாக்குபவர்களின் வேகம் எண்ணிப்பார்க்க முடியாதபடி இருந்தது.

அம்புகளும் ஈட்டிகளும் இறங்கினாலும், பாறைகளும் ஆங்காங்கே உருண்டுகொண்டுதான் இருந்தன. பாறைகளை உருட்டுவதால் எதிரிகளை அதிக அளவில் கொன்றுவிட முடியாது. ஆனால், மேலேறிக்கொண்டிருப்பவர்களுக்குப் பெரும் அச்சத்தை உருவாக்கலாம். எப்போது எந்தப் பாறை உருளுமோ என ஒவ்வொரு பாறையையும் பார்த்துப் பார்த்து அஞ்சியஞ்சியே முன்னோக்கி நகர முடியும்.

``எரியம்புகளைப் பயன்படுத்த வேண்டாம்’’ என்று நீலன் உத்தரவிட்டான். குறைவான வீரர்களே இருக்கிறார்கள் என்பதை அது காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் அவ்வாறு சொன்னான்.

வடக்குப்புறச் சரிவில் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த சோமக்கிழவன், வீரன் ஒருவனை அந்தத் திசையின் உச்சியில் இருக்கும் மரம் ஒன்றில் ஏறச் சொன்னான். அதேபோல இன்னொருவனை மறுவிளிம்பில் இருக்கும் மரத்தில் ஏறச் சொன்னான். மற்றவர்கள் அம்புகளையும் ஈட்டிகளையும் எறிந்துகொண்டிருந்தனர். இரண்டு கிழவர்களை வைத்துக்கொண்டு பாறைகளை நகர்த்தித் தள்ளிக்கொண்டிருந்தான் கொற்றன். அவனது வெறி, கிழவர்களையும் தினவோடு இயங்கவைத்தது. சரிவுகளில் இருக்கும் பாறைகள் எல்லாம் அடப்புக் கொடுத்துச் செருகப்பட்டிருந்த சிறுகற்களால்தான் நின்றுகொண்டி ருந்தன. எந்தெந்தப் பாறைக்கு எப்படியெல்லாம் அடப்புக்கொடுக்கப்பட்டுள்ளது என்பது கிழவர்களுக்குத் தான் நன்கு தெரியும். கும்மிருட்டில்கூட சரியான முறையில் அடப்புக்கல்லை ஈட்டியால் குத்தி நகர்த்தினார்கள். அடப்பை நகர்த்துவதும் அதற்கேற்ற கோணத்தில் பாறையை அசைப்பதும் மிகத் தேர்ந்தவர்களால் மட்டுமே எளிதில் செய்ய முடியும். பெருவீரனால்கூட நகர்த்த முடியாத பாறையை இரண்டு கிழவர்கள் எளிதில் நகர்த்துவார்கள். யானைகளின் உச்சந்தலைக் கும்பம்போலப் பருத்த இரு  தோள்கள் திரையர்களுக்குத் தோன்றக் காரணம், குழந்தைப் பருவத்திலிருந்தே பாறைகளுடனான அவர்களின் பழக்கம்தான். திரையர்குடியின் இளம்வீரனான கொற்றன், பாறைகளின் குழந்தை. கிழவர்கள் சொல்லச் சொல்ல, தோளால் முட்டி எம்பினான் பாறைகளை.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 85p6_1526720008
தாக்குதல் தொடங்கியவுடன் பெரும்கூச்சலிட்டபடி வேந்தனின் வீரர்கள் அங்கும் இங்குமாகச் சிதறி, தற்காப்புக்கு ஏதுவான இடங்களில் நின்றுகொண்டு, அதற்கு ஏற்பவே எதிர்த்தாக்குதலைத் தொடுத்தனர். இந்த நிலையில் நமது தாக்குதலைத் தீவிரப்படுத்தாமல் `கிழவன் ஏன் மரம் ஏறச் சொல்கிறான்?’ எனச் சிந்தித்தபடியே இருவர் வேகவேகமாக மரத்தில் ஏறினர்.

அதில் ஒன்று, தணக்குமரம். இன்னொன்று, அகில்மரம். இரண்டும் முருங்கையைப்போல வலிமையற்றவை. ``சொல்லும் இடத்தில் வேல்கம்புகளால் குத்தி, காலால் மிதித்து, கிளைகளை ஒடி” என்றான் கிழவன். அவ்வாறே வேல்கம்புகளால் குத்தியும் அமுக்கியும் பெரும்பெரும் கிளைகளை `மடார் மடார்’ என ஒடித்துச் சரித்தனர் வீரர்கள்.

மேலேறிக்கொண்டிருந்த வேந்தர்படை மிரட்சிக்குள்ளானது. `பெரும்பெரும் மரங்களையே கணப்பொழுதில் சாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்; ஏது செய்யப் போகிறார்களோ!’ என எதிரிகள் மிரண்டு நின்றனர். எதிரிகளின் வடக்குப்புறப் படைக்குத் தலைமையேற்ற துடிசாத்தன் வீரர்கள் முன்னேறுவதை நிறுத்தி ``தற்காத்து நில்லுங்கள்” என்று ஆணையிட்டான்.

இருட்டுக்குள்ளிருந்து அம்புகள் பாய்வதும் ஈட்டிகள் இறங்குவதும் பாறைகள் உருள்வதுமாக இருக்க, இப்போது மரங்களை உருட்டியோ எறிந்தோ தாக்கப்போகிறார்கள் என நினைத்துத் திகிலடைந்து நின்றது வலப்புறப்படை.

கிழக்குப்புறம் நீலனின் தாக்குதல், எதிரிகளை நிலைகுலையச்செய்தது. மேலிருந்து எறியப்படும் ஈட்டிகள் பாறைகளில் பட்டுத் தெறிக்க, தீப்பொறி விடாது பறந்துகொண்டே இருந்தது. தனது வேகத்தை எக்காரணம் கொண்டும் குறைத்துக்கொள்ளக் கூடாது என உறுதியோடு இருந்தான் கருங்கைவாணன். தாக்குதலைச் சற்று நிறுத்தச் சொன்னால் கூட வீரர்களுக்குப் பின்வாங்கும் மனநிலை உருவாகிவிடும். எனவே, என்ன இழப்பு வந்தாலும் விடாது முன்னேறச் சொல்லி, பேரோசை எழுப்பிக்கொண்டிருந்தான் கருங்கைவாணன். ஆனால், மேல்நிலையி லிருந்த நீலன் தலைமையிலான வீரர்களின் தாக்குதலை மீறி மேலேறுவது எளிய செயல் அல்ல. கருங்கைவாணன் எவ்வளவு கத்தினாலும் அவனது படை சற்றுப் பதுங்கியே நின்றிருந்தது.

அனைத்து திசைகளிலும் ஆவேசமிக்க தாக்குதலை மேலிருந்து நடத்திக் கொண்டிருந்தனர். தங்களைப் பன்மடங்கு காட்டிக்கொள்ள, ஒவ்வொரு வீரனும் இணையற்ற வேகத்தோடு இயங்கிக் கொண்டிருந்தான். ஆனால் தென்புறத்தில் வேந்தர்படைக்குத் திதியன் தலைமையேற்று வந்துகொண்டிருந்தான். அவனது வேகத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் திணறியது புங்கனின் தலைமையிலான படை.

சிறிது நேரத்தில் சீழ்க்கை அடித்தபடி ஊரின் நடுப்பகுதிக்கு ஓடிவந்தான் புங்கன். கண நேரத்தில் சோமக்கிழவனும் நீலனும் வந்து சேர்ந்தனர். ``அவர்கள் மேலேறிக்கொண்டிருக்கிறார்கள். நம்மிடம் மிகக் குறைவான வீரர்களே இருக்கிறார்கள். சற்றே பின்வாங்கி, காரமலையில் ஏறிவிட்டால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டுக் கோபத்தோடு கத்தினான் நீலன், ``நம்மை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், கூத்தோசை கேட்கும் வள்ளிக் கானம் நோக்கி எதிரிகளின் படை போனால், நிலைமை என்னவாகும் என நினைத்தாயா?”

அப்போதுதான் ஆபத்தை உணர்ந்தான் புங்கன். ``அப்படியென்றால் உடனடியாகக் காரிக்கொம்பு ஊதச்சொல்லி, செய்தியைத் தெரிவிக்கலாமா?” என புங்கன் கேட்டு முடிக்கும் முன் சோமக்கிழவன் சொன்னான், ``நான் அப்போதே அதற்கான முயற்சியைச் செய்துவிட்டேன்.

பெருங்காரிக்கொம்புகளை எல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். இருக்கும் சிறுகொம்பை ஊதினாலும் ஓசை பெரிதாக வெளிப்படவில்லை. மலையின் மேலேயிருந்து கேட்கும் கூத்தின் ஓசைதான் எங்கும் கேட்கிறது” என்றான்.

``என்ன செய்யலாம்?” என புங்கன் கேட்டபோது, ``செய்தியைப் பாரியிடம் சொல்ல, குதிரை எடுத்துக்கொண்டு ஒரு வீரன் மட்டும் விரைந்து செல்லட்டும். நாம் எக்காரணம் கொண்டும் வேட்டுவன்பாறையை விட்டுப் பின்னகரக் கூடாது. நாகக்கரடிலிருந்து வீரர்கள் வரும் வரை நாம் இந்த இடத்தைக் கடக்க எதிரிகளை அனுமதிக்கக் கூடாது” என்றான் நீலன்.

சொன்னவுடன் வீரன் ஒருவன் குதிரைக் கொட்டிலை நோக்கி ஓடத் தொடங்கினான், அவனிடம் சத்தம்போட்டு நீலன் சொன்னான், ``இடதுபுறமாகத் தனித்துக் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒன்று உண்டு. அதுதான் ஆலா. அதை எடுத்துச் செல். இருமடங்கு வேகத்தோடு பாயும்.”

முன்களத்தில் இருக்கும் வீரர்கள், முடிந்தளவுக்குத் தாக்குதல் தொடுத்து நிலைமையைச் சமாளித்துக்கொண்டிருந்தனர். மூவரும் மீண்டும் தாக்குதல் இடத்தை அடைந்தனர். நீலனின் அம்புகள், இருளைத் துளைத்து இறங்கத் தொடங்கின. கும்மிருட்டின் பிடியில் மேலிருந்து பேரோசையோடு நடத்தும் எதிரிகளின் தாக்குதலைச் சமாளித்துத் தற்காத்துக் கொள்ளவே முயன்றுகொண்டிருந்தது கருங்கை வாணனின் படை. வடக்குப்புறத்தில் சோமக்கிழவனின் தாக்குதலால் எதிரிகள் நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருந்தனர். மேலேறவில்லை. ஆனால், தெற்குப்புறத்தில் புங்கனின் தலைமையிலான வீரர்களால் எதிரிகளின் வேகத்தைக் குறைக்க முடியவில்லை. எதிரிப்படையின் தளபதி திதியனின் ஆவேசம் இணையற்று இருந்தது. எத்தனை வீரர்களைப் பலிகொடுத்தாலும் முன்னேறும் வேகத்தைக் குறைத்துக்கொள்ளுதல் அவனது பழக்கத்திலேயே இல்லை. அந்தத் திசையில் மட்டும் எதிரிகள் அடுத்தடுத்த நிலைநோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். 

ஆலாவின் மீதேறி விரைந்தான் வீரன். ஊரின் பின்புறத்தில் இருக்கும் குதிரைப்பாதை, கார மலையினூடே பயணிக்கிறது. வள்ளிக்கானத்தின் கூத்தோசைக்கும் வேட்டுவன்பாறையின் தாக்குதலோசைக்கும் நடுவில் குதிரையை வெறிகொண்டு செலுத்தினான்.

மறு குன்றைத் தாண்டும்போதுதான், மயிலாவின் ஊரான செம்மனூர் இந்தத் திசையில் இருப்பது நினைவுக்கு வந்தது. அங்கு போய் செய்தியைச் சொல்லிவிட்டுப் போகலாம் எனக் குதிரையைத் திருப்பினான். சிறிது தொலைவு சென்ற பிறகுதான் தோன்றியது, `ஊரில் இளைஞர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோரும் நாகக்கரட்டுக்குப் போயிருப்பார்கள். மிகவும் வயதானவர்கள்தான் இருக்கக்கூடும்’ என்று.  குதிரைகளும் அங்கு இல்லை. அவர்கள் நடந்தே வேட்டுவன்பாறைக்குப் போய்ச் சேருவதற்குள் நாமே நாகக்கரட்டிலிருந்து வீரர்களை அழைத்துவந்துவிடலாம் என முடிவுசெய்து மீண்டும் குதிரையைத் திருப்பினான். பதற்றமும் அலைக்கழிப்புணர்வும் மேலோங்க, இருளுக்குள் சீறிப்பாய்ந்துகொண்டிருந்தது ஆலா.



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 30, 2018 4:06 pm

இரண்டாயிரம் பார்வையாளர்களை கடந்து போய் கொண்டிருக்கிறது ... ஜாலி ஜாலி

இதுவரை படிக்க தொடங்காதவர்கள் முயற்சி செய்து பாருங்கள் .. ஒரு சில அத்தியாயங்களை படித்து விட்டால், விடாமல் தொடர்ந்து படிக்க தூண்டும் ஒரு அற்புதமான தொடர்...

இந்த தொடரை படிக்கும் பொழுது எல்லாம் தோன்றும், பொன்னியின் செல்வனை படமாக எடுத்தால் 6 அல்லது 9 மணி நேரத்தில் முடிக்க முடியாது அப்படி முடித்தாலும் சிறப்பாக இருக்காது ...  ஆனால் தொலைகாட்சி தொடராக எடுத்தால் அருமையாக இருக்கும் என்று..
ஆங்கில தொலைக்காட்சி தொடர்களை போல தமிழில் எடுத்தால் அதில் நிச்சயம் வேள்பாரியையும் எடுக்க வேண்டும் ... ஒவ்வொரு அத்தியாயமும் GOT -க்கு குறைந்தது அல்ல அப்படி ஒரு விறுவிறுப்பு அத்தனை தகவல்கள் ... சாதாரணமான தொடராக எடுக்காமல் பிரமாண்டமாக எடுக்க கூடிய படைப்பு வேள்பாரி...  தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் யாராவது கண்ணில் பட்டால் இதை ஒரு வேண்டுகோளாகவும் ஒரு யோசனையாகவும் வைத்து கொள்ளுங்கள் ...

ஆசிரியர் ஐ லவ் யூ சு.வெங்கடேசன் ஐ லவ் யூ , ஐ லவ் யூ ஓவியர் ம.செ ஐ லவ் யூ மற்றும் ஐ லவ் யூ விகடன் பதிப்பகத்தார்கள் ஐ லவ் யூ  அனைவருக்கும் நன்றிகள் பல  ... நன்றி நன்றி


நாளை வரும் அத்தியாத்திற்காக காத்திருப்புகளுடன் இப்பதிவு..

kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Wed May 30, 2018 5:27 pm

உண்மை

யாரெண்ம் சோனி அல்லது மோஷன் pictures அணுகலாம்

பாரி யாக விஜய் சேதுபதி

டைரக்டர் மணிரத்தினம் அல்லது ராஜமௌலி

நன்றி
ராம்













ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 31, 2018 12:35 pm

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,
ன் மகன் இளமாறனின் மரணத்துக்கு பறம்புவீரர்களே காரணம் என அறிந்த பிறகுதான் மையூர்கிழார் வெஞ்சினம் உரைத்தார். ``பறம்புக்கு எதிரான போரில் நானும் பங்கெடுத்து, பகை முடிப்பேன்’’ என்று முழங்கினார். காற்றைப்போல் இணையற்ற வேகத்தில் செல்லக்கூடிய இளமாறனின் குதிரையான `ஆலா’ வேட்டுவன் பாறையில் நிற்கிறது என்று, அவர் வெஞ்சினம் உரைத்து நீண்டநாள்கள் கழித்துதான் தெரியவந்தது. ஒன்றுக்கும் மேற்பட்டமுறை ஆள்களை அனுப்பி, பார்த்துவரச் சொன்னார். எல்லோரும் அதை உறுதிப்படுத்தினர்.

வைப்பூர் துறைமுகத்தின் மீதான தாக்குதலில் வேட்டுவன்பாறை வீரர்களே பங்கெடுத்துள்ளனர் என்பதை எல்லாவகைகளிலும் உறுதிப்படுத்திக்கொண்டார் மையூர்கிழார். நீலனின் வீரத்தை மலைமக்கள் அனைவரும் நன்கு அறிவர். எனவே, ஆலாவைக் கைப்பற்றி தகுந்த பதிலடி கொடுக்க பொருத்தமான நேரத்துக்காகக் காத்திருந்தார். வேட்டுவன்பாறையில் என்ன நடக்கிறது என்று தொடர்ந்து கவனித்தார்.

மயிலாவுக்கான நிறைசூல் விழாவைப் பற்றி பலரும் அறிவர். இந்த விழாவுக்காக நாகக்கரட்டில் இருக்கும் நீலன் உள்ளிட்ட வீரர்கள் வேட்டுவன்பாறைக்கு வருவர். போர்ச்சூழல் இருப்பதால் எண்ணிக்கையில் குறைவான வீரர்களே இந்த விழாவில் பங்கெடுப்பர். ஆனால், நீலன் உறுதியாகப் பங்கெடுப்பான் என எல்லா செய்திகளையும் திரட்டினார் மையூர்கிழார். அதன் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் வடிவமைக்கப்பட்டது.

கருங்கைவாணனின் திட்டமிடல் மையூர்கிழாரிடம்கூட பகிர்ந்துகொள்ளாததாக இருந்தது. யட்சினி வழிபாட்டுக்கான ஏற்பாடுகள்தான் முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தன. அது தொடர்பான பணிகள்தான் மையூர்கிழாருக்கு வழங்கப் பட்டிருந்தன. போருக்கான தொடக்கச் சடங்கில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நினைத்து பெருமிதத்தோடு இயங்கிக்கொண்டிருந்தார். அன்று நண்பகல் அவரை வரவழைத்த கருங்கைவாணன், ``நீலனை நன்கு அடையாளம் தெரிந்த இரு வீரர்களை அனுப்பிவையுங்கள்’’ என்றான். `யட்சினிக்கான சடங்கு நடக்கும்போது இருவரை எதற்காகக் கேட்கிறார்?’ எனச் சிந்தித்தபடியே இரண்டு வீரர்களை அனுப்பிவைத்தார்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 83p1_1527497762
காரிருளின் நள்ளிரவில் யட்சினி வழிபாட்டின் உச்சத்தில் பவளவந்திகையின் குருதி பீறிட்டுத் தெறித்தது. போர் நிலமெங்கும் பேரிகைகள் முழங்கின. வேட்டுவன் பாறையின் அடிவாரத்தில் இந்த ஓசையை எதிர்பார்த்தே கருங்கைவாணன் காத்திருந்தான். பேரிகைகள் முழங்கியவுடன் தனது படைக்கான உத்தரவைப் பிறப்பித்தான். மூன்று திசைகளிலிருந்தும் அவர்கள் மேலேறினர்.

எதிர்பார்த்ததைவிட கடும்தாக்குதலைச் சந்திக்க நேர்ந்தது. மிகக் குறைவான வீரர்கள் மட்டுமே இருந்தும் இவ்வளவு வலிமையான தாக்குதலை எப்படி நடத்துகின்றனர் என்பது பெரும்வியப்பாகவே இருந்தது. தாக்குதலை எதிர்கொண்டபடி மிக நிதானமாகவே மேலேறிக்கொண்டிருந்தான் கருங்கைவாணன். வடதிசையில் இருந்த துடிச்சாத்தன், கருங்கை வாணன் அளவுக்குக்கூட முன்னேறவில்லை; கீழ்நிலையில் இருந்தான். ஆனால், தென்திசையில் திதியனோ கருங்கைவாணனைவிட இரு பனை உயரத்துக்கு மேலேறியிருந்தான்.

படைகள் இப்படி சமநிலையற்று முன்னேறுவது, எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். துடிச்சாத்தன் ஏன் இவ்வளவு பின்தங்கியுள்ளான் என்ற கவலைகூட பெரிதாக இல்லை; திதியனின் செயல்தான் அதிக கவலையளிப்பதாக இருந்தது. அவன் ஏறக்குறைய வேட்டுவன்பாறையின் மேல்நிலைக்குச் சென்றுவிட்டான். சற்றே பதற்றமானான் கருங்கைவாணன். அவனை பொறுத்திருக்கச் சொல்ல முயன்றான். ஆனால், நீலன் தலைமையிலான வீரர்கள் நடத்தும் தாக்குதல் மிகக் கடுமையாக இருந்தது. தாக்குதலை எதிர்கொண்டு தாக்குப்பிடிப்பதே பெரும்பாடாக இருந்தது.

எவ்வளவு தாக்கினாலும் எதிரிகள் மேலேறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்தபடியே தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தினான் நீலன். சோமக்கிழவனின் திசையில் எதிரிகள் மிகவும் கீழ் நிலையில் இருக்கின்றனர். ஆனால், புங்கனின் திசையில் எதிரிகள் மிகவும் மேலேறிய நிலையை அடைந்துள்ளனர் என்பதை அறிந்தபடி என்ன செய்யலாம் எனச் சிந்தித்தான் நீலன். `சோமக்கிழவனின் பக்கம் இருக்கும் மூன்று வீரர்களை இந்தப் பக்கம் அனுப்பலாமா?’ எனச் சிந்தித்தபோதுதான் கொற்றனின் நினைவுவந்தது.

அவன் மிகச் சிறியவன். எதிரிகள் மேலேறிக்கொண்டிருக்கின்றனர். இனி தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும். காலம்பன் மகனுக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என எண்ணிய நீலன், சட்டென சோமக்கிழவனின் திசை நோக்கி ஓடினான். அங்கு எதிரிகளை மேலே ஏறவிடாமல் அனைவரும் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தனர். விரைந்து வந்த நீலன், கொற்றனை தனியே அழைத்தான். பாறைகளை முடிந்த அளவுக்குத் தூக்கித் தள்ளிக்கொண்டிருந்த கொற்றன், மறுதிசையில் தாக்குதல் தொடுக்க அழைக்கிறான் என நினைத்து வேகமாக மேலேறிச் சென்றான்.

வேட்டுவன்பாறையின் மேலே குடில்களுக்கு இடையே ஆங்காங்கே பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. தாக்குதலின் ஓசையும் விடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால், இவற்றையெல்லாம் மீறி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது வள்ளிக்கானத்தில் நடைபெறும் கூத்தின் ஓசை. எல்லா வகையான இசைக் கருவிகளும் அங்கு வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. காரமலையின் அமைதியை முழுமுற்றாக விரட்டிக்கொண்டிருந்தன கூத்தின் ஓசையும், வேட்டுவன்பாறை தாக்குதலின் சத்தமும்.

கொற்றனை தனியாக அழைத்துவந்த நீலன், பின்புறம் செல்லும் ஒற்றையடிப் பாதையைக் காட்டி, ``இந்த வழியில் ஒருபொழுது நடந்தால் அருவியும் அதன் அடிவாரத்தில் பெரும் பாறைகளும் இருக்கும். நீ அங்கு போய்விட்டால் யாராலும் அதற்குள் வந்து உன்னைக் கண்டறிய முடியாது. நாளை காலை வரை நீ அங்கேயே இரு. விடிந்ததும் ஊருக்கு வா” என்றான்.

எதிரிகளோடு கடும்மோதல் நடந்து கொண்டிருக்கும்போது தன்னை மட்டும் ஏன் தனியே காட்டுக்குள் போகச் சொல்கிறான் என்பது கொற்றனுக்குப் புரியவில்லை. எல்லாவற்றையும் சொல்லிப் புரியவைப்பதற்கான நேரமில்லை. கொற்றன் விழித்துக்கொண்டு நின்றதைப் பார்த்த நீலன், ``காலையில் வந்து உன்னிடம் விளக்கமாகச் சொல்கிறேன். இப்போது புறப்படு” என்றான்.

அதற்குமேல் நீலனின் குரலை மறுத்து நிற்க முடியாது. மனமேயில்லாமல் அவன் சொன்ன பாதையை நோக்கிப் புறப்பட்டான் கொற்றன். அவன் புறப்பட்ட பிறகு நீலன் மீண்டும் கிழக்குத்திசை நோக்கி ஓடத் தொடங்கினான். மூன்று திசைகளிலிருந்தும் தாக்குதலின் ஓசை அதிகமாகிக்கொண்டிருந்தது. தென்திசையின் ஓசை மிகவும் மேலேறிக் கேட்டது. புங்கனின் தலைமையிலான வீரர்கள் வேந்தர்படையின் தாக்குதலைத் தடுக்க முடியாமல் பின்னோக்கி வந்துகொண்டேயிருந்தனர்.

பெருங்குரலெழுப்பியபடி திதியன் முன்னேறிக்கொண்டிருந்தான். காரமலையை நோக்கி விரைந்துகொண்டிருந்த கொற்றன், எதிரிகளின் ஓசை இவ்வளவு அருகில் கேட்கிறதே என நினைத்து சற்றே திரும்பினான். பந்தத்தின் ஒளியில் சீறிக்கொண்டிருந்த திதியனின் முகம் நேர் எதிரே தெரிந்தது. ஓடிக்கொண்டிருந்த கொற்றன் அந்த முகத்தைப் பார்த்த கணத்தில் உறைந்து நின்றான்.

நினைவுகளால் மூச்சுமுட்டியது. தம்பிகளோடு சேர்த்து தன்னையும் கால்களைக்கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டவன். கையில் சிக்கியவர்களை எல்லாம் கொன்று குவித்தவன். கதறித் துடித்த பெண்களை எல்லாம் கழுத்தை அறுத்து வீசியவன். கண் முன்னால் ஊரையே வேட்டையாடித் தீர்த்தவன். உறைந்து நின்ற கொற்றனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆனால், நீலன் சொன்ன பாதையை நோக்கி ஓட கால்கள் மறுத்தன.

புங்கனால் திதியனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை. சிறிது சிறிதாக பின்னோக்கி நகர்ந்து வந்துகொண்டேயிருந்தான். வேந்தர்படையணிக்குத் தலைமை தாங்கிய திதியனின் உறுதிப்பாடு, புங்கனை நிலைகுலையச் செய்தது. அவன் எந்தத் தாக்குதலையும் கண்டு அஞ்சாமல் முன்னோக்கி வந்துகொண்டே யிருக்கிறான். அவனைக் கட்டுப்படுத்த எந்த வழியிலும் புங்கனால் முடியவில்லை.

திதியன் ஏறக்குறைய மேல்நிலைக்கே வந்துவிட்டான். அவனது வருகையை எதிர்பார்த்தபடி தோதக்கத்திமரத்தின் கிளையின் மேல் ஏறி மறைந்து பார்த்துக்கொண்டிருந்தான் கொற்றன். மரத்தின் மீது படர்ந்திருந்த கொடியைப் பிடித்தபடி காத்திருந்தான். மேல்நிலைக்கு அருகில் வந்ததும் திதியனின் ஆவேசம் இன்னும் அதிகமானது. ஆங்காங்கே பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. ஆனால், வீரர்கள் யாரும் தென்படவில்லை. தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் புங்கன் மேலும் மேலும் பின்நோக்கி வந்துகொண்டிருந்தான்.

திதியன் சரியான இடத்துக்கு வரும்வரையில் காத்திருந்தான் கொற்றன். அன்று தலைகீழாய்க் கட்டித்தொங்கவிடப்பட்ட நிலையில் தன்னையும் தம்பிகளையும் சுட்டிக்காட்டி, `அம்பு வீசிக் கொல்’ எனக் கொக்கரித்தவனின் தலையை உச்சியில் தொங்கியவாறு எந்தக் கோணத்தில் கொற்றவன் பார்த்தானோ, அவன் தலை இப்போது அதே கோணத்தில் தனக்கு நேர்கீழே வந்து நிற்பதைப் பார்த்தான் கொற்றன். இந்தக் கணத்தை எதிர் பார்த்துதான் இவ்வளவு நேரமும் கொப்போடு கொப்பாக ஒட்டிக்கிடந்தான். எந்தவித ஓசையும் எழுப்பாமல் கொடியைப் பிடித்தபடி உச்சிக்கொப்பிலிருந்து கீழ்நோக்கிக் குதித்தான். `ஏதோ ஓசை கேட்கிறதே!’ என நினைத்த திதியன் சட்டென மேல்நோக்கி அண்ணாந்து பார்க்கும்போது கூர்வாளின் முழுமுனையும் அவனது முகத்தைக் கிழித்துக்கொண்டு நெஞ்சுக்கூட்டுக்குள் இறங்கியது.

திதியனோடு வந்தவர்கள் சற்றும் எதிர்பார்க்காத தாக்குதலாக அது இருந்தது. தங்கள் படையணித்தலைவன் மண்ணில் சாய்ந்த கணத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தபோது, விழிப்படைந்த புங்கன் வீறுகொண்டு தாக்கி முன்னோக்கி நகரத் தொடங்கினான். நிலைமையை எதிர்கொள்ள முடியாமல் வேந்தர்படைவீரர்கள் சற்றே பின்நோக்கி இறங்கினர். ஆனால், திதியனோடு சாய்ந்து கிடந்த கொற்றனின் உடலில் எண்ணில்லாத ஈட்டிகள் இறங்கியிருந்தன.

யட்சினி வழிபாடு பற்றி கபிலர் சொன்னதும் அடுத்து செய்யவேண்டிய வேலைகளைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்கத் தொடாங்கினான் முடியன். யட்சினி வழிபாடு என்பது தாக்குதலுக்கு முன்பு நடக்கும் சடங்கு என கபிலர் கூறிய பிறகு `தாக்குதலை விடிந்ததும் தொடங்குவார்களா... இப்போதா?’ என்று கேள்வியை எழுப்பியபடி இருந்தான்.

நாகக்கரட்டுக்குச் சென்ற பாரியும் கபிலரும் இன்னும் வரவில்லையே என நினைத்த தேக்கனும் வாரிக்கையனும் இரலிமேட்டிலிருந்து நாகக்கரட்டுக்கு வந்துசேர்ந்தனர். நள்ளிரவைக் கடந்து நீண்டநேரமாகியிருந்தது. அவர்கள் வந்ததும் மீண்டும் யட்சினிக்கான சடங்கு பற்றி கபிலர் கூறினார், ``எதிரிகளின் தாக்குதலை எதிர்பார்த்துதானே இருக்கிறோம். எப்போது தாக்கினாலும் எதிர்த்தாக்குதலால் அவர்களை வீழ்த்துவோம்” என்றான் தேக்கன்.

``பொழுது விடியும்போது எல்லா நிலைகளிலும் வீரர்களை ஆயத்தநிலையில் இருக்கச் சொல்லுங்கள். நிலைமைக்கு ஏற்ப முடிவெடுப்போம்’’ என்றான் பாரி.

இந்தப் பேச்சு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் வேட்டுவன்பாறையிலிருந்து வந்த வீரன் நாகக்கரட்டின் இடதுமுனையை அடைந்தான். அந்தத் திசைக்குத் தலைமையேற்ற நீலன் நிறைசூல் விழாவுக்குப் போய்விட்டதால், அந்தப் பொறுப்பை வேட்டூர்பழையன் ஏற்றிருந்தார். வந்த வீரன் மூச்சிரைக்க, தாக்குதலை விவரித்தான். செய்தியைக் கேட்டுத் துடித்தெழுந்த பழையன், முதற்படைப் பிரிவை அழைத்துக்கொண்டு வேட்டுவன்பாறை நோக்கிப் பாய்ந்து சென்றான்.

இடதுமுனையிலிருந்து காரிக்கொம்பு ஊதப்பட்டது. ஏதோ பிரச்னை என்பது நாகக்கரட்டின் மேல் இருந்த ஐவருக்கும் தெரிந்தது. வீரன் ஒருவன் நாககரட்டின் மேல்நிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். ஐவரும் குதிரையில் ஏறி காரிக்கொம்பு ஊதப்பட்ட இடதுபுறத்தை நோக்கி விரைந்தனர். ஏதோ நடந்திருக்கிறது என்பது புரிந்தது. என்ன என்பதைக் கணிக்க முடியவில்லை. குதிரைகள் விரைந்தன.

வீரன் எதிர்பட்டான். நடந்துகொண்டிருக்கும் தாக்குதலை அவன் விவரித்தபோது அனைவரும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர். வீரன் சொல்லி முடிக்கும்போதே, நீலனைக் காக்க பாய்ந்து செல்லத் துடித்தது பாரியின் மனம். அதை உணர்ந்த வாரிக்கையன், ``பாரி இங்கே இருக்கட்டும். தேக்கனும் முடியனும் புறப்படுங்கள்’’ என்றார்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 83p2_1527497778
பாரி மறுசொல் சொல்லும் முன் பெருங்குரலில், ``எல்லோரையும் வேட்டுவன்பாறையை நோக்கித் திருப்பிவிட்டு, எதிரியின் தாக்குதல் இந்தத் திசையில் அமைய வாய்ப்பிருக்கிறது” என்று சொன்ன தேக்கன், கணநேரம்கூடக் காத்திருக்காமல் குதிரையைத் தட்டி விரட்டினான். முடியனும் வீரர்களும் பின்தொடர்ந்தனர். இமைக்கும் நேரத்துக்குள் முடிவுகள் எடுக்கப்பட்டன. குதிரையின் காலடிக்குளம்பிலிருந்து தெரிந்த மண்துகள் கபிலரின் நெற்றியில் பட்டபோதுதான் திகைப்பு மீண்டார்.

எதிரிகள் மூன்று திசைகளிலும் வேட்டுவன் பாறையின் மேல்நிலையை நெருங்கிவிட்டனர். பறம்பின் தரப்பில் தாக்குதல் தொடுத்த வீரர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. இனியும் தாக்குதல் உத்தியை மாற்றாமல் இருக்கக் கூடாது என நினைத்த நீலன், பின்னோக்கி விரைந்தான். ``குடில்களின் மேற்கூரைகளை எல்லாம் இழுத்துக் கீழே போடுங்கள். காய்ந்த மரங்கள், கட்டைகள் எல்லாவற்றையும்கொண்டு பெரும்வட்டத்தை உருவாக்குங்கள்’’ எனச் சொல்லிவிட்டு, மீண்டும் தாக்குதல் முனைக்கு ஓடினான். மேல்நிலையில் நின்றிருந்த வீரர்கள், குடில்களின் மேற்கூரைகளை எல்லாம் கீழே சரித்தனர். திண்ணைகளிலும் முற்றத்திலும் இருக்கும் பெரும்பெரும் கட்டைகளைப் பொருத்தமான இடைவெளிகளில் போட்டு நிரப்பினர். மீண்டும் மீண்டும் வந்து என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லியபடியே தாக்குதல் தொடுக்க கிழக்குமுனைக்கு ஓடினான் நீலன்.

வேட்டுவன்பாறையின் மந்தையைச் சுற்றி பெரும்வட்டத்தில் கூரைகளையும் மரங்களையும் கட்டைகளையும் கொண்ட ஓர் அரணை உருவாக்கிய பிறகு, எல்லோரையும் உள்ளே வரச் சொன்னான் நீலன். வேட்டுவன்பாறையைச் சேர்ந்த எஞ்சிய வீரர்கள் எல்லோரும் உள்ளே வந்த பிறகு எல்லா திசைகளிலும் ஒரே நேரத்தில் தீயிட்டான். தீக்கங்குகள் வெடித்து மேலேறத் தொடங்கின. பாறைச் சரிவுகளின் வழியே மூன்று பக்கங்களிலிருந்து மேலேறிய வேந்தர்படை, வேட்டுவன்பாறை முழுக்க குடில்கள் தீப்பிடித்து எரிவதைப் பார்த்துத் திகைத்து நின்றது. `எதிரிகள் தனது கைகளில் சிக்காமல் குடில்களுக்கு தீவைத்துவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்’ என நினைத்தான் கருங்கைவாணன். எந்தத் திசையிலிருந்தும் ஊருக்குள் நெருங்க முடியவில்லை. கூரைகளில் பற்றிய நெருப்பு, பெருங்கட்டைகளைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தது.

உயிரோடு மிஞ்சிய வேட்டுவன்பாறை வீரர்கள் வளையத்துக்குள் ஒன்றுகூடினர். ஊர்தோறும் தீக்களியை தாழி நிறைய சேகரித்து வைத்திருப்பது பறம்பின் வழக்கம். இடதுதோளிலும் காலிலுமாக இரு அம்புகள் தைத்த நிலையிலும் இயங்கக்கூடிய திறனோடு இருந்தான் சோமக்கிழவன். அவன்தான் தீக்களியை நீர்விட்டு பிசைந்து எஞ்சியிருக்கும் எட்டு வீரர்களின் உடலில் பூசினான். தீ நன்றாகப் பற்றி நாலாபுறமும் சீறி எரிவது வரை அவர்கள் காத்திருந்தனர். யார் யார் எந்தத் திசையின் வழியே வெளியேறிச் சென்று தாக்க வேண்டும் என வழிகாட்டினான் நீலன்.

வேந்தர்படை அடுத்து என்ன செய்வதென்று முடிவெடுக்க முடியாமல் நின்றிருந்தபோது, நெருப்பைப் பிளந்துகொண்டு பறம்புவீரர்கள் வெளிப்பட்டனர். இரண்டு கைகளிலும் இரு வாள்களை ஏந்தியபடி படைக்குள் தாவிய அவர்கள், மின்னல் வேகத்தில் சிக்கியவர்களை எல்லாம் வெட்டிச் சரித்துவிட்டு மீண்டும் நெருப்புக்குள் புகுந்து மறைந்தனர். நடுங்கிப்போனது வேந்தர்படை. நெருப்பைப் பிளந்து எதிரிகள் வெளியேறி வந்து தாக்குதல் தொடுக்கின்றனர் என்பதை யாராலும் நினைத்துகூடப் பார்க்க முடியவில்லை. இரு வாள்களோடு வெளிவந்த நீலன், கண நேரத்தில் பத்துக்கும் மேற்பட்டோரை சீவியெறிந்துவிட்டு மீண்டும் தீக்குள் புகுந்தான்.

வீரர்களின் பேரோலத்தைக் கேட்டு ஓடிவந்தான் கருங்கைவாணன். ``நெருப்புக்குள்ளிருந்து வெளியேறி வந்து தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் உள்ளே போய்விடுகின்றனர்’’ என்று மற்ற வீரர்கள் தெரிவித்தனர். மிரண்டுபோய்ப் பார்த்தான் கருங்கைவாணன். எல்லா திசைகளிலும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. ``உள்ளே போனவன் எந்த வழியில் போனான்?’’ எனக் கேட்டான் கருங்கைவாணன். உடன் இருந்த வீரர்கள், அவன் தாக்குதல் நடத்தித் திரும்பிய இடத்தைக் காண்பித்தனர். மனிதன் நுழைந்து வெளியேறும் அளவுக்கு அந்த இடத்தில் நெருப்பு சிறுத்து எரிகிறதா என, சற்றே உற்றுப்பார்த்தான் கருங்கைவாணன். ஆனால், ஆள் உயரத்துக்கு மேலாக நெருப்பின் கீற்றுகள் மேலெழுந்து கொண்டிருந்தன. இதற்குள்ளிருந்து எப்படி வெளிவந்து மீண்டும் உள்ளே போக முடியும் என்பது புரியாத குழப்பத்தில் மிரண்டு நின்றான்.

தாக்குதல் நடத்திவிட்டு வீரர்கள் உள்ளே வந்ததும், அவர்கள் வந்த நெருப்பின் தடத்துக்குள் ஏற்கெனவே ஆயத்தநிலையில் இருந்த வீரர்கள் மிளகுக் குடுவையை உருட்டிவிட்டனர். குடுவையில் தீப்பொறி பட்டவுடன் சூடேறும். கண நேரத்தில் பெரும்சத்ததோடு வெடிக்கும். வெடிப்புற்ற கணம் மேலே கிடக்கும் கட்டைகளையே தூக்கிவீசும். நெருப்புக் கங்குகள் எல்லா பக்கங்களிலும் தெறிக்கும். நீலன் நெருப்புக்குள் நுழைந்த இடத்தை கருங்கைவாணன் உற்றுப்பார்த்தபோதுதான் மிளகுக்குடுவை வெடித்துச் சிதறியது. முகமெல்லாம் கங்குத்துளிகள் தெறித்துவிழ துடித்துப்போனான் கருங்கைவாணன்.

உடனடியாக கருங்கைவாணனுக்கு மற்றவர்கள் உதவிக்கொண்டிருந்தபோது, சற்று தொலைவில் நெருப்புக்குள்ளிருந்து வெளிவந்த வீரன் ஒருவன் இரு வாள்களைக்கொண்டு வெட்டிச் சரித்துவிட்டு மீண்டும் நெருப்புக்குள் நுழைந்தான். வேந்தர்படை உறைந்து நின்றது. எதிரிகள் தாக்குதலை எந்தத் திசையிலிருந்து எப்படி நடத்துகின்றனர் என்பது புரியாதபுதிராக இருந்தது. வடக்குப் பக்கத்தில் நெருப்பைப் பிளந்து வெளியேறும் மனிதர்களைக் கண்டவுடன் துடிச்சாத்தன் செயலற்று நின்றான்.

வெளியேறியவர்களின் வாள்வீச்சில் குருதி பொங்கித் தெறித்தது. நெருப்பின் சீற்றத்தினூடே குருதியைக் குடித்தபடி வாள்கள் மீண்டும் தீப்பிழம்புக்குள் நுழைந்து மறைந்தன.

`மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட செயலை பறம்புவீரர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். இனியும் தாம் இங்கு இருப்பது எந்த வகையிலும் நல்லதன்று’ எனச் சிந்தித்த துடிச்சாத்தன், கருங்கைவாணனை நோக்கி விரைந்தான். வீரர்கள் சுற்றி நிற்க நெருப்பைவிட்டு மிகவும் தள்ளி பாறை ஒன்றின் மேல் கருங்கைவாணன் அமர்ந்திருந்தான். அவனது முகத்தை துணிகொண்டு மூடி இளைப்பாறச் செய்துகொண்டிருந்தனர்.

தாக்குதல் நடத்திவிட்டு உள்ளே வரும் வீரர்களின் உடலில் தீக்களி காய்ந்தோ, உதிர்ந்தோபோயிருந்தால், மீண்டும் தீக்களியைப் பூசி தாக்குதலுக்கு ஆயத்தம் செய்யும் வேலையைச் செய்துகொண்டிருந்தான் சோமக்கிழவன். நீலன், புங்கன், மேலும் இருவர் என நான்கு பேர்தான் தீக்களி பூசி இரு வாள்கள் ஏந்தி எதிரிகளை வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தனர். மற்ற மூவரும் மிளகுக்குடுவையை நெருப்புக்குள் இங்கும் அங்குமாக வீசியெறிந்துகொண்டிருந்தனர்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 83p3_1527497796
என்ன நடக்கிறது என எதிரிகள் அறியும் முன், பறம்புவீரர்கள் நால்வரும் ஐந்து முறைக்கும் மேலே சென்று தாக்கிவிட்டு மீண்டும் நெருப்புக்குள் திரும்பியிருந்தனர். ஒவ்வொரு வீரனும் பத்துக்கும் மேற்பட்டோரை வெட்டிச்சாய்த்திருந்தான். நீலனின் தாக்குதலில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் சரிந்திருப்பர். நெருப்பெங்கும் வடியும் குருதியோடு வாளை சூடாக்கிக் கொண்டேயிருந்தனர் பறம்புவீரர்கள்.

முகமெல்லாம் மிளகுப்பொறி பட்டு சுட்டுக்கருகியபோது துடித்துக் கத்தினான் கருங்கைவாணன். ஆனாலும் அவனது இலக்கை விட்டு திரும்பிச் செல்ல அவன் ஆயத்தமாக இல்லை. நெருப்பின் வட்டத்துக்குள்ளிருந்து எப்படி இவர்கள் வெளிவருகின்றனர்; நெருப்பின் சூட்டை இவர்கள் எப்படி தாக்குப்பிடிக்கின்றனர் என எதுவும் புரியவில்லை. வேந்தர்படை வீரர்கள், வெடித்துச் சிதறும் நெருப்பின் பொறி கண்டு அஞ்சி இருளுக்குள் பதுங்கினர். ஆனாலும் ``நெருப்பைவிட்டு அகலாமல் நில்லுங்கள்’’ என்று வீரர்களை நோக்கி மீண்டும் மீண்டும் கூறினான் கருங்கைவாணன்.

வள்ளிக்கானத்தில் நாகசம்பங்கியின் தேறல் தேள்போல் கொட்டி உள்ளிறங்கிக் கொண்டிருந்தது. துடியும் முழவும் பறையும் அடர்காட்டை உலுக்கின. பெண்கள் களிவெறிகொண்டு ஆடினர். பெருங் கூக்குரலினூடே இருளைக்கிழித்து பெண்கள் ஆடிக்கொண்டிருந்தபோது, நெருப்பைப் பிளந்து வாள் ஏந்தி ஆடிக்கொண்டிருந்தனர் ஆண்கள். இருவிதமான ஓசைகள் காரமலையின் இரு இடங்களிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தன.

கலங்கிப்போய் வந்த துடிச்சாத்தனிடம் நம்பிக்கைகொடுத்து, தாக்குதலுக்கான வழிமுறைகளைப் பற்றிப் பேசினான் கருங்கைவாணன். பறம்புவீரர்கள் நடத்தும் இந்தத் தாக்குதலால் சிலர்தான் வெட்டுப்பட்டு சாகின்றனர். ஆனால், மனித முயற்சிக்கு அப்பாற்றபட்ட அவர்களின் இந்தச் செயலால் வீரர்கள் எல்லாம் நம்பிக்கை இழந்து மிரண்டு நிற்கின்றனர். `பறம்பினரை ஒன்றும் செய்ய முடியாது. தீயின் தேவதை அவர்கள் பக்கம் நிற்கிறாள்’ என வீரர்கள் கருதுவதாகவும் ``வேந்தர்படை, விரைவில் இந்த இடம்விட்டு நகர்வது நல்லது’’ எனவும் துடிச்சாத்தன் கூறினான்.

முகத்தில் நெருப்புப்பொறி பட்டபோதுகூட இப்படிக் கத்தவில்லை. இப்போது கத்தினான் கருங்கைவாணன். ``நான் வந்த வேலையை முடிக்காமல் திரும்பினால் மூவேந்தர்களின் பெரும்படைக்குத் தலைமைதாங்கும் தகுதியை இழந்தவனாவேன். எனது உயிரே போனாலும் வெற்றிகொள்ளாமல் இந்த இடம்விட்டுத் திரும்ப மாட்டேன்” என நரம்பு புடைக்கக் கத்தினான்.

``எதிரிகளைக் கண்டு அஞ்சாதீர்கள். அவர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தான். நெருப்புக்குள் நீண்டநேரம் தாக்குப்பிடிக்க முடியாது. விரைவில் வெளிவந்துதான் தீரவேண்டும். அந்தக் கணத்துக்காகக் காத்திருப்போம். உரிய நேரத்தில் ஒன்றுபட்டு தாக்குதல் தொடுத்தால் அவர்களை வீழ்த்திவிட முடியும்” என்று பாறையின் மீது நின்று முழங்கினான் கருங்கைவாணன்.

கட்டைகள் வெடித்து நெருப்புப்பொறிகள் எங்கும் சிதறிக்கொண்டிருந்தன. ``வீரர்களே... நெருப்பைவிட்டு மிகவும் தள்ளி நில்லுங்கள். அவர்கள் எவ்விடம் வெளியில் வருகிறார்களோ, அவ்விடம் அம்பு எய்தித் தாக்குங்கள். வாளால் தாக்க முயலாதீர்கள்” என்று வடப்புறமாகக் கத்திவிட்டு, தென்புறம் திரும்பினான் கருங்கைவாணன். கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியில் வந்து, மூவரின் தலைகளைச் சீவியெறிந்துவிட்டு மீண்டும் நெருப்புக்குள் நுழைந்தான் நீலன்.

நெருப்பைக் கிழித்து வெளிவரும் கணத்திலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்தான் கருங்கைவாணன். தீச்சுடரே நீண்டுவந்து தலைகளைச் சீவிச்செல்வது போல இருந்தது. நீலனை நன்கு அடையாளம் தெரிந்த இருவரும் எந்நேரமும் கருங்கைவாணனின் அருகிலே இருந்தனர்.

பெருவட்டத்தில் நிலைகொண்டு எரிந்த நெருப்பிலிருந்து எந்தத் திசையிலும் வெளியேறி தாக்கிக்கொண்டே இருந்தனர். கருங்கைவாணன் அந்த வட்டம் முழுவதும் சுற்றியபடி வீரர்களிடம் நம்பிக்கையூட்டினான். ஆனால், அவன் உருவாக்கும் நம்பிக்கைகள் நெருப்பைப் பிளக்கும் மனிதர்களால் கணநேரத்தில் எரியூட்டப்பட்டன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 83p4_1527497814
ஆனாலும் விடாது முயன்றபடி அங்கும் இங்குமாக ஓடினான் கருங்கைவாணன். நெருப்புக்குள் மூங்கில்கட்டைகள் வெடிப்புற்று தெறித்தபோது, தெறிக்கும் நெருப்புக் கொப்புளங்களுக்குள்ளிருந்து வெளிவந்தான் நீலன். அவன் எதிரில் வாளேந்திய கையை உயர்த்தினான் துடிச்சாத்தன். நீலனின் வாள்வீச்சின் வேகம் துடிச்சாத்தனின் கழுத்தில் குறுக்கிட்டு இறங்கியது.

தெறித்த குருதி மண்ணில் விழும் முன் நெருப்பைப் பிளந்து அந்தப் பக்கத்தை அடைந்தான் நீலன். உருண்டு வந்த துடிச்சாத்தனின் தலை, கருங்கைவாணனின் காலில் வந்து முட்டி நின்றது. ஒரு கணம் அப்படியே நின்றான் கருங்கைவாணன். அருகில் இருந்தவன் சொன்னான், ``தாக்கிச்சென்றது நீலன்.”

எந்தத் திசையிலிருந்தெல்லாம் பறம்பினர் வெளிவருகிறார்களோ, அந்தத் திசையில் எல்லாம் வேந்தர்படையினர் விலகியிருந்து அம்பு எய்தனர். நெருப்பைப் பிளந்து வெளியேறியவர்களின் உடல்களில் அம்புகள் தைக்கத் தொடங்கின. உள்ளிருந்து தாக்குதல் தொடுத்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீழத் தொடங்கினர். ஆனாலும் நீலனின் வேகம் குறையவேயில்லை. நெருப்புக்கு வெளியேயிருந்து தாக்குதல் தொடுப்பவர்கள் மிகவும் விலகி நிற்கிறார்கள் என அறிந்து, அதற்கு ஏற்ப தாக்குதல் திட்டத்தை மாற்றுங்கள் என நீலன் சொன்னபோது, புங்கன் ஈட்டியால் குத்தப்பட்டு நெருப்புக்குள் இருந்து வெளிவர முடியாமல் சாய்ந்தான். எது கண்டும் கலங்கும் நிலையில் நீலன் இல்லை. அவனோடு எஞ்சிய வீரர்கள் இருவர் மட்டுமே.

அவர்களுக்கும் தீக்களியைப் பூசிக்கொண்டிருந்தான் சோமக்கிழவன். நெருப்புக்கு அப்பால் எந்தத் திசையில் சென்று தாக்கலாம் என நெருப்பின் கீற்றுகளை நீலன் பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் காற்று அதிரக் கேட்டது காரிக்கொம்பின் ஓசை.

ஒரு கணம் மனதுக்குள் மின்னல்வெட்டியதைப்போல மகிழ்ச்சி பூத்தது. இரண்டாம் குன்றுக்கு அப்பால் வரும்போதே வேட்டூர்பழையன் காரிக்கொம்பை ஊதச் சொல்லிவிட்டான். `நாங்கள் அருகில் வந்துவிட்டோம்’ என்று சொல்வதற்கான ஓசை அது. காரிக்கொம்பின் ஓசை கேட்ட கணம் உற்சாகம் பீறிட வெறிகொண்டபடி நெருப்பைப் பிளந்துகொண்டு வெளிவந்தான் நீலன். நெருப்பைவிட்டு விலகி நின்றிருந்த எதிரிகளின் மீது மூன்று ஈட்டிகளை எறிந்துவிட்டு மீண்டும் நெருப்புக்குள் நுழைந்தான்.

அவனது வருகையை எல்லா திசைகளிலும் எதிர்பார்த்திருந்த கருங்கைவாணன், கண்ணெதிரே வந்து திரும்பும் நீலனைப் பார்த்தவுடன் தனது கைநரம்பே அறுந்து கொண்டுபோவதைப்போல வீசினான் ஈட்டியை. நெருப்புக்குள் நுழைந்த நீலனின் வலது பின்னங்கால் தொடையில் இறங்கியது ஈட்டி. நெருப்போடு சாய்ந்தான் நீலன். ``அவனை வெளியே இழுங்கள்” எனக் கத்தியபடி அருகில் ஓடிவந்தான் கருங்கைவாணன்.

இரு குன்றுகளுக்கு அப்பாலிருந்து எரியும் நெருப்பைப் பார்த்தபடி என்ன நடக்கிறது எனப் புரிந்துகொள்ள முடியாமல் பதற்றத்தோடு குதிரையை விரட்டிவந்தான் வேட்டூர்பழையன். அவனோடு படையணி வீரர்கள் அனைவரும் படு ஆவேசத்தோடு வந்துகொண்டிருந்தனர். ``காரிக்கொம்பை விடாம ஊது’’ என்று சத்தம்போட்டபடி குதிரையை விரட்டினான்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 83p5_1527497833
இரண்டு குன்றுகளையும் தாண்டி வேட்டுவன்பாறைக்குள் நுழையும்போது கிழக்கின் ஒளிக்கீற்று மெள்ள மேலெழுந்துகொண்டிருந்தது. தீயின் நாக்குகள் இங்கும் அங்குமாக எரிந்துகொண்டிருந்தன. மனிதர்கள் யாரும் உயிருடன் இருப்பதுபோல் தெரியவில்லை, `நீலன்... புங்கன்...’ என ஒவ்வொரு பெயராகச் சொல்லிக் கத்தியபடி எங்கும் ஓடினான் வேட்டூர்பழையன். வீரர்கள், நான்கு திசைகளிலும் தேடித் தவித்தனர்.

நெருப்புக் கட்டைகளுக்கு நடுவே கரிக்கட்டைகளாக சிலர் கிடந்தனர். இரு பக்கங்களிலும் குருதியில் மிதந்தபடி எண்ணற்ற உடல்கள் கிடந்தன. குன்றின் சரிவு முழுக்க வேந்தர்படைவீரர்கள் மாண்டுகிடந்தனர். ஒருவன் சத்தம்போட்டு வேட்டூர்பழையனை அழைத்தான். அவன் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினான் வேட்டுர்பழையன். வீட்டின் மண்சுவர் ஓரம் குற்றுயிராய்க் கிடந்தான் சோமக்கிழவன்.

பழையனைப் பார்த்ததும் கீழ்ப்புறமாகக் கையை நீட்டி, ``அவர்கள் நீலனைக் கொண்டுசெல்கின்றனர்” என்றான்.

கிழக்குத் திசையில் நீலனின் குடில் இருந்த முனைப்பகுதிக்கு வந்து பதற்றத்தோடு பார்த்தான் வேட்டுர்பழையன். காலைக்கதிரவன் மேலெழுந்துகொண்டிருந்தான். வேட்டுவன்பாறையின் அடிவாரத்திலிருந்து வேந்தர்படைவீரர்கள் குதிரைகளில் புறப்பட்டனர்.

முன்னால் போய்க்கொண்டிருந்த தேரில் கிடத்தப் பட்டிருந்த நீலன் பெருங்கயிறுகளால் கட்டப்பட்டிருந்தான். அந்தத் தேரின் முன்நிலையில் நின்றுகொண்டிருந்த கருங்கைவாணன் உடலெல்லாம் குருதிகொட்ட, முகமெல்லாம் மகிழ்வு பூக்க ஆவேசக்குரல் எழுப்பியபடி தேரைச் செலுத்தினான்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 31, 2018 12:50 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 83p5_1527497833

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 07, 2018 9:47 am

“நாகரவண்டினைக் கொத்திக்கொண்டு வந்துவிட்டேன்” என்று சொல்லி மகிழ்வின் உச்சத்தை வெளிப்படுத்தினார் குலசேகரபாண்டியன். யவனத்தேறலைக் குடித்துக்கொண்டே அவர் கூறுவதை மகிழ்ந்து கேட்டனர் செங்கனச்சோழனும் உதியஞ்சேரலும். குடியில் ஒருவரை ஒருவர் விஞ்சினர். போர்ச்சூழலில் அளவின்றிக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனச் சொல்வதற்கு தொடர்ந்து முயன்றார் முசுகுந்தர். ஆனால், அதற்கான வாய்ப்பே அமையவில்லை.

இத்தனை நாள்கள் மையூர்கிழாரின் மாளிகை ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த ஹிப்பாலஸ், இன்று மூஞ்சலுக்கு அழைக்கப்பட்டான். இந்த விருந்தில் அவனும் பங்கெடுத்தான். ஹிப்பாலஸிடம் குலசேகரபாண்டியன் மீண்டும் மீண்டும் சொன்னார், ``நாகரவண்டினை நமது கூட்டுக்குக் கொண்டுவந்துவிட்டோம். இனி நமக்கான இரை நம்மைத் தேடி வந்தே தீரும். மூவரும் இணைந்து வளைத்து வளைத்து வேட்டையாடுவோம்.”

கருங்கைவாணனுக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்டதால் அவன் விருந்தில் பங்கெடுக்கவில்லை. மருத்துவர்களின் கூடாரத்தில் இருந்தான். நீண்டகாலத்துக்குப் பிறகு இன்றைக்குத்தான் அவனது வீரத்தை அவையில் புகழ்ந்து பேசினார் குலசேகரபாண்டியன்.

பேரரசர் அவன்மீது வைத்திருந்த நம்பிக்கை, வைப்பூர் தாக்குதலால் சிதைந்துவிட்டது. அதை எப்படியாவது மீட்கவேண்டும் எனப் பேறுதியோடு செயல்பட்டு வந்தான் கருங்கைவாணன். ஆனால், இன்று அந்த உறுதி தளர்ந்தது. திட்டமிட்டபடி நீலனைச் சிறையெடுத்து வந்துவிட்டான். ஆனால், நேற்று இரவு நடந்த தாக்குதல் அவன் வாழ்வில் இதுவரை காணாத ஒன்று. சின்னஞ்சிறிய கூட்டம் ஒன்று, வேந்தர்பெரும்படையை முழுமுற்றாக அழித்தது. மாவீரர்களான திதியனும் துடிச்சாத்தனும் கொல்லப்பட்டனர். பங்கெடுத்த வீரர்களில் பத்தில் ஒரு பங்கு வீரர்கள் மட்டுமே உயிரோடு மீண்டுள்ளனர். அவர்களில் பாதிப்பேர் போர்க்களம் புக நீண்டகாலமாகும். இருமுறை மயிரிழையில் உயிர்தப்பினான் கருங்கைவாணன்.

இவையெல்லாம் பறம்புவீரர்களின் திறனை வெளிப்படுத்துவனவாக இருந்தாலும், நெருப்பைப் பிளந்துகொண்டு அவர்கள் தாக்குதல் தொடுத்தமுறை குருதியை உறைய வைப்பதாக இருக்கிறது. நினைக்கும்போதே நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் தாக்குதலில் தப்பித்த ஒவ்வொருவனும் இனி இதைத்தான் பேசுவான். பறம்புவீரர்களின் கற்பனைக்கு எட்டாத வீரமும் ஆற்றலும் அடுத்து வரும் நாள்களில் வேந்தர்படை முழுவதும் பரவிவிடும்.

`எதிரிப்படையினர் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்பது மாறி அவர்கள் பேராற்றல்கொண்டவர்கள் என ஆழ்மனம் நம்பிவிடும். நீரை நிலம் விழுங்குவதைப்போல, தனது வீரத்தைத் தானே விழுங்கி வற்றச்செய்யும் வேலையை மனம் நமக்குத் தெரியாமலேயே செய்துகொண்டிருக்கும். இதை எப்படி மாற்றப்போகிறோம்? அவர்களை வீழ்த்தும் வலிமை நமக்கு இருக்கிறது என்பதை படைவீரர்களின் எண்ணிக்கையால் மட்டுமே உருவாக்கிவிட முடியாது. அறுநூறு வீரர்கள் கொண்ட படைப்பிரிவை அந்தச் சின்னஞ்சிறிய கூட்டம் அழித்து முடிக்க அதிக நேரமாகவில்லை. அப்படியென்றால், குவிக்கப்பட்டுள்ள இந்தப் பெரும்படையை அவர்களால் வென்றுவிட முடியும்தானே?’ கேள்விகள், விடாது மேலெழுந்து கொண்டேயிருந்தன.

``கண்களைச் சற்று மூடுங்கள். முகம் முழுவதும் பச்சிலை தடவ வேண்டும்” என்றார் மருத்துவர். கண்களை மூடினால் நெருப்பைப் பிளந்து கொண்டு பறம்புவீரர்கள் வெளிவந்துகொண்டே இருந்தனர். கருங்கைவாணனால் கண்களை மூட முடியவில்லை. சிந்தனையின் வெக்கை இமைகளைச் சுட்டது.

இந்தப் பெரும்போருக்குத் தலைமையேற்கும் மகாசாமந்தனாகக் கருங்கைவாணனைத் தேர்வுசெய்தது எவ்வளவு பொருத்தமானது என உதியஞ்சேரலும் செங்கனச்சோழனும் பாராட்டிப் பேசினர். `` `போர்க்களத்தில் சிறந்த தளபதியைக் கொண்டுள்ள மன்னன் நிம்மதியாகப் படுத்துறங்குவான்’ என்று சொல்வார்கள் அல்லவா!” எனக் கேட்டார் முசுகுந்தர்.

``ஆம்... ஆம்...” என வேந்தர்கள் வழிமொழிந்தனர். நிறைந்த மயக்கத்தில் குலசேகரபாண்டியன் ஹிப்பாலஸிடம் சொன்னார், ``நீங்கள் நாளை புறப்பட்டு மதுரைக்குச் சென்று ஓய்வெடுங்கள். பாரியை வீழ்த்திவிட்டு நாங்கள் வந்து சேருகிறோம்.”

ஹிப்பாலஸ், மகிழ்வோடு அதை ஏற்றுத் தலைவணங்கி நன்றி சொன்னான். மகிழ்வின் உச்சத்திலும் நிலைகொள்ளாத மயக்கத்திலும்கூட பாண்டிய வேந்தர் செயலில் கவனத்தோடு இருப்பார் என்பதைப் பலமுறை பார்த்து வியந்தவர் முசுகுந்தர். இன்றைய செயலும் அவரை எல்லையற்ற வியப்புக்கு உட்படுத்தியது.

`குலசேகரபாண்டியரை யாராலும் கணித்துவிட முடியாது. எந்தச் சொல்கொண்டு செயலின் திசையை எந்தப் பக்கம் திருப்புவார் என்பதை இத்தனை ஆண்டுகளாக உடனிருக்கும் தன்னாலேயே புரிந்துகொள்ள முடியவில்லையே... உதியஞ்சேரலும் செங்கனச்சோழனுமா புரிந்து கொள்ளப்போகின்றனர்’ என்று எண்ணியபடி ஹிப்பாலஸ்ஸை அனுப்பிவைக்கும் வேலையில் ஈடுபட்டார் முசுகுந்தர். நள்ளிரவுக்குப் பிறகும் வெகுநேரம் விருந்து நீண்டது.

மறுநாள் பொழுது விடிந்த பிறகு நாகக் கரட்டிலிருந்து தனித்த தேர் ஒன்று கீழிறங்கியது. கருநிறத்தாலான பெரும்போர்வையை உடல் முழுவதும் சுற்றி, தேரின் வலதுபுறக் கைக்கட்டையைப் பிடித்தபடி வந்து கொண்டிருந்தார் கபிலர். வேந்தர்களின் படையணியை நோக்கிக் கீழிறங்கி வந்தது தேர். உடலின் அத்துணை உறுப்புகளும் செயலற்றதைப் போல உணர்ந்த நாள் இது. உயிர்த்துடிப்பற்று இருந்தன அவருடைய கண்கள். ஆனாலும் தன்னுடைய கடமையைச் செய்யவேண்டும் என்பதில், அவரது உள்ளம் தெளிவோடு இருந்தது. தேர், வேந்தர்களின் படையணிக்கு அருகில் வந்து நின்றது.

வீரன் ஒருவன் தேருக்கு அருகில் வந்து, ``செய்தி என்ன?” என்று கேட்டான்

``கபிலர் வந்திருக்கிறேன் என்று வேந்தர்களிடம் சொல்” என்றார்.

``சரி” எனக் கூறிய அவன் செய்தியைச் சொல்ல மூஞ்சலை நோக்கிக் குதிரையில் விரைந்தான்.

நள்ளிரவுக்குப் பிறகும் விருந்து நீண்டதால், வேந்தர்கள் யாரும் எழுந்திருக்கவில்லை. மூஞ்சலின் வாசலிலேயே அந்த வீரன் நின்றிருந்தான்.

நெடும்பொழுது கடந்தது. கபிலரின் தேர் அசைவற்று நின்றிருந்தது. அனுமதிக்காகக் காத்திருக்கும் நீண்டபொழுதை, கபிலர் முதன்முறையாகச் சந்தித்துக்கொண்டிருந்தார். மனம் கொந்தளிப்பிலேயே இருந்தது. தேரோட்டி வந்த வீரன், `இடதுபக்கக் கட்டையில் தொங்கிக் கொண்டிருக்கும் மூங்கில் குடுவையில் உள்ள நீராகாரத்தைக் கபிலருக்குத் தருவோம்’ என நினைத்துத் திரும்பினான்.

``எக்காரணங்கொண்டும் திரும்பாதே. அழைப்பு வருகிறதா என்று மட்டும் பார்” என்றார்.

கபிலரின் திடமான குரல் கேட்டு, சற்றே அதிர்ச்சியானான் வீரன்.

இரலிமேட்டிலிருந்து பாரி, கபிலரைப் பார்த்துக்கொண்டேயிருப்பான். இவ்வளவு பொழுது அவர் நிற்கவைக்கப்பட்டதை அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. உடனே திரும்பி வாருங்கள் என்று சொல்லிவிடக்கூடும். எனவேதான், ``எப்பக்கமும் திரும்பாதே” என்று கபிலர் வீரனைக் கடிந்து கூறினார்.

பொழுது நண்பகலைக் கடந்தது. தேர் தனது இடம் விட்டு நகராமல் நின்றுகொண்டேயிருந்தது. அனுமதி கேட்கச் சென்றவன் வந்துசேர்ந்தான். கபிலரின் தேர் படையணிக்குள் அனுமதிக்கப் பட்டது. குதிரைவீரன் வழிகாட்டி முன் சென்றான்.

படையணிகளுக்குள்ளும் பாசறைகளுக்கிடையேயும் வளைந்து நெளிந்து சென்ற தேர், இறுதியில் மூஞ்சலை அடைந்தது. கபிலர் இறங்கினார். வரவேற்க எவரும் இல்லை. எந்தக் கூடாரம் நோக்கிப் போவது என்பது சற்றே குழப்பமாக இருந்தது. குதிரைவீரன், மூன்றாம் கூடாரத்தைக் கைகாட்டி ``உங்களை அங்கே வரச்சொன்னார்கள்” என்றான்.

கபிலர் அதை நோக்கி நடந்தார். அருகில் செல்லச் செல்ல இசைக்கருவிகளின் ஓசை கேட்டது. மகிழ்வின் வெளிப்பாடு முகத்தில் அறைந்தது. உடல் கூசி நடுங்கியது. நீண்டநேரம் நிறுத்திவைத்ததன் மூலம் ஏற்படுத்திய உணர்வை, அருகில் அழைப்பதன் மூலமும் ஏற்படுத்த முடிந்தது. கபிலரின் கால்கள் நகராமல் நின்றன. சற்று நேரத்தில் கூடாரத்திலிருந்து வெளியே வந்த முசுகுந்தர் அவருக்கு வணக்கம் தெரிவித்து உள்ளே அழைத்துச் சென்றார்.

இசை நிகழ்வு முடிவுற்றதும் கபிலர் உள்நுழைந்தார். வேந்தர்கள் மகிழ்வோடு வீற்றிருந்தனர். பெரும்புலவரை வழக்கத்தைவிடப் பேரோசையை வெளிப்படுத்தி வரவேற்றார் குலசேகரபாண்டியன். வரவேற்க ஆள்கள் இல்லாதபோது என்ன உணர்வை ஏற்படுத்த முடிந்ததோ, அதே உணர்வை வரவேற்கும்போதும் ஏற்படுத்த முடிந்தது. அவையை வணங்கினார் கபிலர்.

``என்ன புலவரே, நண்பகலில் இவ்வளவு பெரிய போர்வையைப் போர்த்திக்கொண்டு வந்திருக்கிறீர்... உடல் நடுங்குகிறதா?” எனக் கேட்டார் சோழவேழன்.

``தோழனின் நடுக்கத்தை பெரும்புலவர் தானும் உணர்கிறாரோ?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு உள்நுழைக்கிற கருவி, சொற்களின்றி வேறில்லை. கணநேரத்தில் உடல் நடுங்கியது. சூம்பிப்போயிருந்த வலதுகால் நடுவிரல் உள்ளிழுத்தது. பின்னங்கால் நரம்பு இழுக்கத் தடுமாறுவதுபோல் இருந்தது. கண்களை மூடி உடலையும் மனதையும் திடப்படுத்திக்கொண்டார். தனக்கான சொற்கள் எதுவும் தன்னிடம் வரக் கூடாது என நினைத்தார். நீலனைப் பார்க்கும் வரை சொல்லேந்தக் கூடாது என்ற முடிவோடு இருந்தார்.

``பெரும்புலவர் நம்மைப் பார்க்க வரவில்லை. நீலனைப் பார்க்கவே வந்துள்ளார். எனவே, முதலில் அவர் நீலனைப் பார்த்துவிட்டு வரட்டும். பிறகு பேசலாம்” என்றார் குலசேகரபாண்டியன்.

``சரி’’ எனச் சொல்லி எழுந்த முசுகுந்தர், கபிலரை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தார். மூஞ்சலில் பெரும்பெரும் கூடாரங்கள் போதிய இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடாரங்களுக்கு நடுவே சின்னதாய் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. முசுகுந்தர் அதை நோக்கி நடந்தார்.

கபிலரின் கால்கள் முன்னகரத் தயங்கின. நீலன் எந்த நிலையில் இருக்கப்போகிறான் என்ற கவலை அவரை மேலும் நடுக்கமுறவைத்தது. முசுகுந்தர் கூடாரத்தின் திரைச்சீலையை விலக்கியபடி, கபிலர் உள்ளே செல்ல கையை நீட்டினார். உள்நுழைந்தார் கபிலர். கூடாரத்தின் நடுவில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மரத்தூண் ஒன்றில் சாய்ந்துகிடந்தான் நீலன். உடலெங்கும் குருதி வழிந்த கருந்திட்டுகள் இருந்தன. இன்னும் சில இடங்களில் செங்கசிவு நிற்காமல் இருந்தது. கால்தொடையில் ஈட்டி இறங்கிய இடத்தில் துணிகளைக்கொண்டு கட்டியிருந்தான். ஆங்காங்கே தசைகள் பிய்ந்து தொங்க ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. கண்கள் உட்செருகியபடி கிடந்தவன், ஓசை கேட்டு விழித்துப் பார்க்க முயன்றான். புருவங்கள்தான் மேலேறிக்கொண்டிருந்தன. இமைகளைத் திறக்க முடியவில்லை. முயன்று இமை திறந்து பார்த்தான். எதிரில் கபிலர்.

அவனது தலையைக் கைகளால் மெள்ளத் தடவியபடி அருகில் மண்டியிட்டு அமர்ந்தார். விழிகள் ஏறிட்டு கபிலரைப் பார்த்தன. கலங்கிய கண்களோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் கபிலர். அவரின் கண்கள் அவனது காயங்களைத் தேடித் தேடி நகர்ந்தன.

எதிரியின் கூடாரத்தில் கட்டுண்டு கிடக்கும் மாவீரனிடம் நம்பிக்கையூட்டும்படி பேச கபிலரால் முடியும். ஆனால், நீலனைப் பல நேரங்களில் தன் மகனைப்போல உணர்ந்தவர் அவர். அவரது மனம் உணர்வுகளின் கொதிகலனாக இருந்தது. கண்களில் நீர் பெருகிக்கொண்டேயிருந்தது. அவனது காயங்களினூடே கைகள் நகர்ந்தபடி இருந்தன.

அவரை நீலனால் முழுமையாக உணர முடிந்தது. மெள்ள அவன் பேசத் தொடங்கினான், ``உங்களைச் சந்தித்த முதல் நாள் நான் என்ன சொன்னேன் என்பது நினைவிருக்கிறதா?”

தனது உடல்நடுக்கத்தை வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது என முயன்றுகொண்டிருந்த கபிலருக்கு, நீலன் எதைக் கேட்கிறான் என்பது புரியவில்லை. சிந்தித்துப்பார்த்தார். அவன் கேட்பது நினைவுக்குப் புலனாகவில்லை.

நீலன் சொன்னான், ``வேட்டுவன்பாறைக்கு நீங்கள் வந்த அன்று சொன்னேன், ‘வீரனின் வாழ்வு மிகக் குறுகியது. பறம்புநாட்டுக்கு நாற்புறமும் எதிரிகள். எப்போது போர்மூளும் எனத் தெரியாது. போர்க் களத்தில் நான் சாயும்போது எனது ஈட்டியை இறுகப் பற்றி முன்னேற, என் மகன் வந்து நிற்க வேண்டும்’ என்று.”

கண்களை அகலத் திறந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார் கபிலர். ``நான் எனது வார்த்தையைக் காப்பாற்றிவிட்டேன். இன்னும் சில நாள்களேயானாலும் நான் மரணிப்பதற்குள் மயிலா வீரமகவை ஈன்றெடுப்பாள்” என்றான் நீலன்.

கலங்கியபடி கூறினார் கபிலர், ``நீ மாவீரன். போரிடும் முன்பே வாகைப்பூ ஏந்தி வந்த உன்னை மரணம் எப்படி அணுகும்?”

மயிலாவுக்காகக் குமரிவாகையைப் பறித்துப்போனது நினைவுக்கு வந்தது. ஆதினி இதைச் சொல்லித்தான் மயிலாவை ஆற்றுப்படுத்தியிருப்பாள் எனத் தோன்றியது.

``கொற்றவை உனக்கு வெற்றிவாகையைத் தந்து அனுப்பியுள்ளாள். அதனால்தான் உனது வீரத்தை இன்று பறம்பே பேசுகிறது” என்றார் கபிலர்.

தொடர்ந்து பேச முயன்றான் நீலன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. முயன்று சொன்னான், ``என்னைவிடப் பெரும்வீரத்தை வெளிப்படுத்தியவர்கள் சோமக்கிழவனும் கொற்றனும்தான். கிழவனும் சிறுவனும் எண்ணிலடங்காத எதிரிகளை அழித்தொழித்தார்கள்” என்றவன் சற்றே இளைப்பாறி, ``காலம்பனிடம் மன்னிப்பு கேட்டதாகச் சொல்லுங்கள். கொற்றனை நான் காக்கத் தவறிவிட்டேன்” சொல்லும்போது உடைந்து கலங்கினான் நீலன்.

``இல்லை. உரியநேரத்தில் உதவ முடியாததற்காக உன்னிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லிப் பாரி கூறினான்.”

என்ன பேசுகிறார்கள் என அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்தார் முசுகுந்தர். நீலனின் மீது மொய்த்துக்கொண்டிருந்த ஈக்களை விரட்டியபடி, தான் போர்த்தியிருந்த போர்வையை எடுத்து உதறாமல் அவன்மீது இறுகச்சுற்றிப் போர்த்தினார் கபிலர். அவனது காலிலே குருதி வடியத் தொங்கிக்கொண்டிருந்த மேலாடையின் சிறு பகுதியைக் கிழித்து எடுத்தார்.

கபிலர் என்ன செய்கிறார் என முசுகுந்தருக்கு விளங்கவில்லை. கிழித்து எடுத்த அந்தச் சிறு துணியைக் கைவிரல்களில் சுருட்டியபடியே சொன்னார், ``வரும் முழுநிலா நாளில் கொற்றவைக்குக் குருதியாட்டு விழா. கூத்துத்திடலில் திரி போட வேண்டுமல்லவா?” என்றார். நீலன் அவரை உற்றுப்பார்த்தான்.

``பாரிதான் எடுத்துவரச் சொன்னான்” என்று சொல்லியபடியே துணியைச் சுருட்டி முடித்தார்.

நீலனுக்கு விளங்கியது. போர் முடிவுற்றவுடன் நடப்பதுதான் குருதியாட்டு விழா. முழுநிலவுக்கு இன்னும் பன்னிரண்டு நாள்கள் உள்ளன. அதற்குள் எதிரிகளை வென்று முடிப்பேன் எனச் சொல்லி அனுப்பியுள்ளான். அதுமட்டுமன்று, போரிலே தமது குருதி படிந்த ஆடைகொண்டே கொற்றவைக்கு விளக்கேற்றத் திரி போடுவர். நீலனின் குருதி படிந்த மேல்துணியை எடுத்துவரச் சொன்னதற்குக் காரணம், குருதியாட்டு விழாவுக்கு நீலன் திரி போட வந்து சேருவான் என்பதே. நீலனிடம் சொல்ல வேண்டிய எல்லாச் செய்திகளையும் சொல்லி முடித்தார் கபிலர்.

`பன்னிரண்டு நாள்களில் எதிரிகளை வென்று உன்னை மீட்பேன்’ என்று பாரி சொன்னதாகக் கபிலர் சொன்ன எதுவும் முசுகுந்தருக்குப் புரியவில்லை. ``சரி, புறப்படலாம்” என முசுகுந்தரைப் பார்த்துச் சொல்லியபடி நீலனிடமிருந்து எழுந்தார் கபிலர். மகிழ்வின் ஒளியேறிய முகத்தோடு அவரைப் பார்த்தான் நீலன். அந்தப் பார்வை விளங்கிக்கொள்ள முடியாத ஆழத்தோடு இருந்தது. விடைபெற்று கூடாரத்துக்கு வெளியில் வந்தார் கபிலர்.

சிறிது தொலைவு கடந்ததும் முசுகுந்தர் கேட்டார், ``அவன்மீது அளவுகடந்த அன்புகொண்டுள்ளீர்களே!”

`ஆம்’ என்று தலையை மட்டும் ஆட்டினார் கபிலர்.

``நீங்கள் போர்த்தியிருந்த போர்வையை அவனுக்கு ஏன் போர்த்தினீர்கள்?”

``மேலெல்லாம் ஈக்கள் மொய்க்கின்றனவே. அதிலிருந்தாவது அவனைக் காப்போம் என்றுதான்.”

``நீங்கள் நினைத்தால் அவனையே காப்பாற்றலாம்!”

சற்றே நடையின் வேகத்தைக் குறைத்த கபிலர் முசுகுந்தரைப் பார்த்தார்.

``மூவேந்தர்களுக்கு உதவுவதாக வாக்களியுங்கள். உங்களின் தேரிலேயே அவனை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறேன்.”

சிரித்தார் கபிலர். ``மேகம் எப்படி காற்றுக்கு எதிராகப் பயணிக்கும்?”

``நீலனின் மீது உங்களுக்கு இருப்பது உண்மையான அன்பென்றால், வீசும் காற்று ஒரு பொருட்டன்று.”

``அன்பின் உண்மைத்தன்மையை உங்களால் கண்டறிய முடியுமா முசுகுந்தரே?”

``நிச்சயம் முடியும். கபிலரை எத்தனையோ ஆண்டுகளாக அறிந்தவன் நான். எளிய உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காத பேரறிஞர். ஆனால், இன்று அவனோடு பேசும்போது உங்களின் கண்கள் எத்தனை முறை பெருக்கெடுத்தன என்பதைக் கவனித்தேன். `கபிலர்தானா இவர்?’ என்று உங்களின் மீதே எனக்கே ஐயம் வருமளவுக்கு இருந்தது, அவன் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு. அவன் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவன் என்று புரிந்துகொண்டேன். அதனால்தான் சொல்கிறேன் உங்களால் அவனைக் காப்பாற்ற முடியும்.”

``அவனது துன்பங்கள் கண்டு என்னை அறியாமல் கண்ணீர் சிந்தினேன். ஆனால், எனது துன்பத்தை பாரி அறிய நேர்ந்தால் குருதி சிந்துவான்.”

முசுகுந்தர் சற்றே அதிர்ச்சியோடு கபிலரைப் பார்த்தார்.

கபிலர் சொன்னார், ``ஒருவேளை காற்றை எதிர்த்துக்கூட மேகம் பயணிக்கலாம். ஆனால், வானத்தை விட்டு விலகிச் செல்ல கதிரவனுக்கு வழியேதுமில்லை.”

முசுகுந்தர் பேச்சின்றி அமைதியானார். பெரும்புலவரை வசப்படுத்துதல் எளிதன்று என அவருக்குத் தெரியும். ஆனாலும் கண்கலங்கியதைப் பார்த்துக் கல்லெறியலாம் என முயன்றார். எதுவும் நடக்கவில்லை. இருவரும் வேந்தர்களின் கூடாரத்துக்குள் நுழைந்தனர்.

அவருக்கான இருக்கையில் அமரும்வரைகூடக் காத்திருக்க ஆயத்தமாயில்லை. வந்தவுடன் சோழவேழன் கேட்டார், ``என்ன கபிலரே, இதை எதிர்பார்த்திருக்க மாட்டீரே!”

இருக்கையில் அமர்ந்துகொண்டே கபிலர் சொன்னார், ``ஆம். பெருவேந்தர்கள் மூவரும் கோழையின் செயலைச் செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?”

அதிர்ந்தது அவை. தனக்கான சொற்களைக் கைக்கொள்ளத் தொடங்கினார் கபிலர். பாரி என்ன நோக்கத்துக்காக அனுப்பிவைத்தானோ, அந்த வேலை முடிந்தது. நீலனுக்கான செய்தி சொல்லப்பட்டுவிட்டது. இனி கபிலர் சொல்லைச் சுழற்றத் தடையேதுமில்லை.

``எது கோழையின் செயல்? திரண்டு நிற்கும் படை கண்டு தோள்கள் புடைக்க களம் காணாமல் காடுகளுக்குள் ஒளிந்துகிடப்பது கோழையின் செயலா? அவனது எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி அவன் தளபதிகளில் ஒருவனைச் சிறைப்பிடித்து வந்தது கோழையின் செயலா?” சீறினான் உதியஞ்சேரல்.

``ஒற்றறிந்து, இருள்போர்த்தி, பம்மிப் பதுங்கி நீங்கள் நடத்திய தாக்குதலுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால், அந்தச் செயலுக்கான குணம் கோழையினுடையது.”

``ஒற்றறிவதோ, இருள்போத்தி நகர்வதோ, பதுங்கிப் பாய்வதோ போரின் பகுதியென்று நீங்கள் அறியாதவர் அல்லர். பாரியுடனான நட்பு, போர் நியதியை மறந்தவராக உங்களை மாற்றியுள்ளது.”

``நியதிகளையும் மரபுகளையும் அறியாதவர்களின் பட்டியலில் என்னைச் சேர்க்கும் அளவுக்கு, போருக்கான மனநிலையில் மூழ்கிவிட்டீர்கள். உங்களின் நோக்கம் அதுவென்றால், உங்களுக்கு உதவ நான் ஒரு வழிமுறை சொல்கிறேன், கேட்கிறீர்களா?”

``பெரும்புலவரே! உங்களால் எங்களுக்கு உதவ முடியாது. எங்களுக்கு உதவுவதாக நீங்கள் எது செய்தாலும் அதற்குப் பின்னால் இருப்பது எங்களின் எதிரியான பாரியின் நலனே” என்றார் குலசேகரபாண்டியன்.

சற்றே வாய்விட்டுச் சிரித்தபடி கபிலர் சொன்னார், ``இதைத்தானே நான் சொன்னேன். போருக்கான மனநிலைக்குள் முழுமுற்றாக மூழ்கிவிட்டீர்கள். இனி குருதி பிசையாமல் உங்களால் உணவருந்த முடியாது.”

சொற்களின் கூர்மை நுனிமூக்கைக் குத்தி இழுத்தது. உயர்த்திய குரலோடு உதியஞ்சேரல் கேட்டான், ``சரி, சொல்லுங்கள். எங்களுக்கு உதவ என்ன சொல்லப்போகிறீர்கள்?”

``பாரி மலைவிட்டுக் கீழிறங்கிப் போரிட வேண்டும். அதனால்தானே நீலனைச் சிறைப்பிடித்து வந்துள்ளீர்கள்?”

அவையில் அமைதி நீடித்தது. கபிலர் தொடர்ந்தார், ``நீலனைத் தூக்கிவந்தால்கூட அவன் உடனடியாகப் போர்தொடுக்க மாட்டான். சற்று காலம் தாழ்த்துவான். உங்களின் அவசரம் கருதிச் சொல்கிறேன். நீலனை விடுவித்துவிடுங்கள். என்னைச் சிறையிலிடுங்கள். இந்தக் கணமே போரைத் தொடங்குவான் பாரி.”

கூடாரம் அதிர்வதைப்போலச் சிரித்தார் குலசேகரபாண்டியன். ``பெரும்புலவரே! இதைத்தானே நான் முதலிலேயே சொன்னேன். எங்களுக்கு உதவுவதாக நீங்கள் எது செய்தாலும் அதற்குப் பின்னால் இருப்பது எங்கள் எதிரியான பாரியின் நலனே!”

கபிலர் சற்று அதிர்ந்தார்.

``தமிழ் நிலத்தின் பெரும்புலவரை மூவேந்தர்கள் சிறைப்பிடித்தனர் என்ற அவப்பெயர் எங்களுக்கு நேர வேண்டும். ஆனால், அவரை மீட்கப் போரிட்டு உயிர் நீத்தான் பாரி என, புலவர்குடிகள் காலம்காலமாக அவனைப் போற்றவேண்டும். அதுதானே உங்களின் நோக்கம்?”

கபிலர் சொன்னார், ``நீங்கள் விரும்பும் போர்க்களத்துக்குப் பாரியை உடனடியாக வரவைக்கும் வழியைத்தான் நான் கூறினேன். அதில் துளியும் மிகையில்லை. ஆனால், இந்தச் செயலில் என்பால் அவனுக்கு இருக்கும் அன்பு உங்களுக்குப் புலப்படவில்லை. அவன் அடையப்போகும் புகழ் மட்டுமே உங்களின் கண்களுக்குத் தெரிகிறது. இதைப் பற்றிதான் பேச நினைக்கிறேன்.”

``இன்னும் பேச என்ன இருக்கிறது?”

``இருக்கிறது. உங்களது போர், அவன் கொண்டுள்ள பொருளுக்கானதன்று; அவன் பெற்றுள்ள புகழுக்கானது. ஒருவனின் செல்வத்தைக் கவர்ந்திட நீங்கள் போரிட்டால் அந்தப் போரில் வெற்றி-தோல்வி உண்டு. ஆனால், ஒருவனின் புகழை எதிர்த்து இன்னொருவனால் போரிடவே முடியாது. நீரைப் பாறைகொண்டு நசுக்க முடியாது.”

குலசேகரபாண்டியன் உயர்த்திய குரலோடு சொன்னார், ``இந்தப் போரில் நாங்கள் வெல்வதைத் தடுக்க யாராலும் முடியாது. ஆனாலும் போர் தொடங்கும் முன்பே ஒருவரை நாங்கள் இழந்துவிட்டோம். அதுதான் எங்களுக்கு ஆறாத்துயரை ஏற்படுத்துகிறது.”

``யாரை?” எனக் கேட்டார் கபிலர்.

``உங்களைத்தான். தமிழ் நிலத்தின் பெரும்புலவர்; மூவேந்தர்களின் அவைகளையும் பாட்டால் பொலிவுறச்செய்த பேரறிஞர். இன்று எங்களின் எதிரியோடு போய் நிற்கிறீர். அவன் உங்களின் தமிழால் எங்களைச் சீண்டுகிறான். உங்களின் புலமைகொண்டு நம் நட்பைத் தகர்க்கிறான். தயவுகூர்ந்து உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அந்தக் கோழையை உங்களின் மேலாடையை விட்டு வெளியில் வந்து பேசச் சொல்லுங்கள்.”

பாரியுடனான நட்பும் வேந்தர்களுடனான நட்பும் ஒரே நேரத்தில் இகழ்ச்சிக்குள்ளானது. ``எனது புலமையும் எனது தோழமையும் எத்தனையோ முறை சீண்டப்பட்டிருக்கின்றன. ஆனால், தனிமனிதனாக நான் இப்போது சீண்டப்படுகிறேன்…” என்ற கபிலர் அடுத்த வார்த்தையை உச்சரிக்கும் முன் சட்டென இடைமறித்தார் முசுகுந்தர்.

``இதற்குமேல் பேசிக்கொண்டிருப்பது பொருளற்றது. சிறைப்பிடிக்கப்பட்டவனை மீட்க, துணிவிருந்தால் போரிட்டு மீட்டுக்கொள்ளச் சொல்லுங்கள்” என்று நிறுத்தினார் பேச்சை.

அவையில் சட்டென அமைதி திரும்பியது. தலையசைத்தபடி `சரி’யெனச் சொன்ன கபிலர். ``போரிட்டு மீட்பான் பாரி. ஆனால், போர் முடியும் வரை சிறைப்பிடிக்கப்பட்டவனைப் பாதுகாக்கும் அறத்திலிருந்து நீங்கள் நழுவ மாட்டீர்கள் என நம்புகிறேன்.”

``அவனுக்கு உணவும் நீரும் அளிப்போம். மருந்தளிக்க மாட்டோம். தாக்குண்ட காயத்தால் அவன் மரணம் எய்துவானேயானால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றார் முசுகுந்தர்.

``உணவும் நீரும் அளியுங்கள். அது போதும்” என்றார் கபிலர்.

``சரி. அப்படியென்றால், போரின் விதிகளை வரையறுத்துக்கொள்ளலாமா?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

``போரின் விதிகளைப் போரிடுபவரிடம்தானே நீங்கள் பேசவேண்டும். நான் போரிடுபவன் அல்லன். போரிடப்போகிறவனுக்கு நண்பன்.”

``அப்படியென்றால் நாளைக் காலை போர் விதிகளை முடிவுசெய்வதற்கான மனிதரை அழைத்துவாருங்கள்” என்றார் குலசேகரபாண்டியன்.

``சரி” எனச் சொல்லி அவை நீங்கினார் கபிலர். அவரைப் பொறுத்தவரை வந்த வேலை எல்லா வகையிலும் சிறப்பாக முடிந்தது. நீலனுக்கு அவர் போர்த்திய போர்வை பருத்தி நூலால் நெய்யப்பட்டது மட்டுமன்று, பருத்தி நூலோடு சேர்த்து மூலிகை நார்களால் பின்னப்பட்டது. எல்லாவகையான மருத்துவப் பொடிகளும் அதன்மீது போர்த்தி மேவப்பட்டிருந்தது. அதை மேலே போர்த்தியவுடன் குருதிக்கசிவுகள் உடனே நிற்கும். காயங்கள் விரைவில் குணமாகும். புத்துணர்ச்சியும் ஆற்றலும் பிறக்கும்.

ஒருவேளை, அவனுக்கு உண்ணக் கொடுக்கும் உணவில் நஞ்சு இருந்தாலும் நஞ்சுமுறியாகவும் அது செயல்படும். முறியன் ஆசான் கொடுத்தனுப்பிய மருத்துவ ஆடை அது. அதன் கீழ் விளிம்பில் சற்றே பெரிதான சரடு போன்ற ஒன்று உண்டு. அது தராக்கொடியும் செவ்வகத்தி வேரும். ஒருவேளை இரும்புத்தூணில் அவன் கட்டப்பட்டிருந்தால் அந்தக் கொடியின் பால் பட்டு இரும்பு உருகும்.

அதைப்போலவே குறுங்காது முயலின் குருதியில் ஊறிய நரம்புகள் போர்வைக்குள் இருக்கின்றன. கையில் கிடைக்கும் சிறு தடியைக்கொண்டுகூட வில்லைச் செய்ய அது பயன்படும். மருந்து, ஆயுதம் ஆகிய அனைத்தும் கொண்டதாக இருந்தது அந்தப் போர்வை. நீலனுக்குத் தேவையான அனைத்தும் அவனுக்குத் தரப்பட்டு விட்டன.

கபிலர் நிறைவோடு படை நீங்கி வெளியேறினார். நாகக்கரட்டில் ஏறும்போதே இரவாகிவிட்டது. அவரின் வரவுக்காக ஆறாம் குகையில் பாரி, தேக்கன், முடியன், காலம்பன், கூழையன், வாரிக்கையன், முறியன் ஆசான் ஆகியோர் காத்திருந்தனர். கபிலர் வந்தவுடன் முறியன் ஆசான் எண்ணற்ற கேள்விகளைக் கேட்டார். நீலனின் ஒவ்வொரு காயத்தைப் பற்றியும் விளக்கினார் கபிலர். முறியன் ஆசான் சொன்னதுபோலத்தான் நீலனின் உடல் முழுவதும் விரல்களால் தொட்டுப்பார்த்தார். எந்தெந்த இடத்திலெல்லாம் நீலன் வலிமிகுதியை உணர்ந்தான், எந்தெந்த இடத்திலெல்லாம் உணர்வற்று இருந்தான் என்பதையெல்லாம் துல்லியமாகக் கேட்டார். அவன் எந்தெந்த வடிவில் கைகால்களை நீட்டி மடக்கி உட்கார்ந்திருந்தான் எனக் கேட்டார்.

வலதுகால் தொடையில்தான் ஈட்டி இறங்கிய பெருங்காயம் இருப்பதைச் சொன்னார் கபிலர். ``தொடைப் பகுதியில்தான் போர்வை சுருண்டும் மடங்கியும் அதிக நேரம் குவிந்துகிடக்கும். எனவே, ஓரிரு நாள்களில் அது குணமடைந்துவிடும்” என்றார் முறியன் ஆசான்.

முறியன் ஆசானின் வேலை முடியும் வரை மற்றவர்கள் காத்திருந்தனர். அவர் குகை விட்டு வெளியேறியவுடன் வேந்தர்களோடு நடந்த பேச்சு வார்த்தையைப் பற்றிச் சொன்னார் கபிலர். அனைவரும் கவனமாகக் கேட்டனர்.

போர்விதிகளைப் பற்றிப் பேச, பொருத்தமானவரை அழைத்துக்கொண்டு வருகிறேன் எனக் கூறி வந்துள்ளதாகக் கபிலர் சொன்னார்.

சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு முடியன் சொன்னான், ``அப்படியென்றால் நாளை கபிலரோடு தேக்கன் செல்லட்டும்.”

எல்லோரும் `சரி’ என்பதுபோலத் தலையசைத்தபோது, பாரி சொன்னான், ``தேக்கன் வேண்டாம்.”

சற்றே வியப்போடு பார்த்தனர்.

``கபிலரோடு வாரிக்கையன் செல்லட்டும்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 14, 2018 12:37 pm

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,
ருங்கைவாணன் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவக் கூடாரத்துக்கு வந்தனர் பொதியவெற்பனும் முசுகுந்தரும். ``முகத்திலும் கை, கால்களிலும் ஆங்காங்கே நெருப்புக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஓரிரு நாள்களில் குணமாகிவிடும்” என்றார் மருத்துவர். தீக்காயங்களின் தன்மையைப் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தான் பொதியவெற்பன். மழை பெய்யத் தொடங்கியது. நெடுநேரம் வரை மழை நிற்கவில்லை. வேட்டுவன்பாறையில் நடைபெற்ற தாக்குதலைப் பற்றி கருங்கைவாணனுடன் நீண்ட பொழுது பேசிக்கொண்டிருந்தான் பொதியவெற்பன்.

மூவேந்தர்களும் சோழவேழனும் வழக்கம்போல் இரவில் சந்தித்து உரையாடினர். பொதியவெற்பனும் முசுகுந்தரும் கருங்கைவாணனைப் பார்க்கப் போயிருந்ததால், இன்றைய உரையாடலில் அவர்கள் பங்கெடுக்கவில்லை. சோழவேழன் கேட்டார், `` `போர்விதிக்கான பேச்சுவார்த்தையை நடத்த பொருத்தமானவரை இன்றே அழைத்துவாருங்கள்’ என்று கபிலரிடம் சொல்லியிருக்கலாமே. நாளை அழைத்துவரச் சொன்னது அவர்களுக்கு நேரம் கொடுத்ததாகிவிடாதா?``

குலசேகரபாண்டியன் சொன்னார், ``நாம் திட்டமிட்டுக்கொள்ள நேரம் தேவைப்படுகிறது. அதனால்தான் நாளை அழைத்துவரச் சொன்னேன்.’’
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 45p2_1528793870
போருக்கான விதிகள் எல்லோரும் அறிந்ததே. பல நூறு போர்க்களங்களில் குருதி கலந்த காற்றை நுகர்ந்தபடி தளபதிகளாலும் அமைச்சர்களாலும் பேசிப் பேசி உருவாக்கப்பட்ட வார்த்தைகள்தான் அவை. போர் என்பது அழிவின் களம். அங்கு ஒருபோதும் ஒழுங்கை உருவாக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் விதிகளை உருவாக்கி, போர்புரியும் மரபு பல தலைமுறைகளாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான போர்கள் விதிகளின்படிதான் தொடங்குகின்றன. ஆனால், விதிகளின்படி முடிவதில்லை. தமக்கு வெற்றி கிடைக்கும் என்னும் நம்பிக்கை இருக்கும் வரை விதிகளைப் பின்பற்ற அனைவரும் பழகியுள்ளனர். ஆனால், அந்த நம்பிக்கை தகரும்போது விதிகளுக்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதில்லை.

போர்விதிகள், பொதுவான சில ஒழுங்குகளை முன்வைக்கின்றன. இருதரப்பினருக்கும் அந்த ஒழுங்குகள் தேவையாக இருப்பதால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவற்றைப்போலவே வெற்றியும் இருதரப்புக்கும் தேவையாக இருப்பதால் இருவரும் விதிகளைப் பற்றிப் பேசி, உடன்பட்டு, போரைத் தொடங்கு கின்றனர். ஆனால், போர்க்களத்தில் ஒருவனின் கை வலிமைபெறும்போது இருவருக்கும் விதிகள் முக்கியத்துவமற்றுப் போய்விடுகின்றன.

வாளுக்கு வடிவமைக்கப்பட்ட உறைபோலத்தான் போருக்கு வடிவமைக்கப்படும் விதிகளும். கலை வேலைப்பாட்டுடன் மிளிர்வது உறைக்கு அழகு. ஆனால், வாளுக்கு அழகு, வெட்டிச் சரிக்கத் தேவையான கூர்முனை மட்டுமே. எல்லா வாள்களுக்கும் மேற்பூச்சுகொண்ட உறை தேவைப்படுவதைப்போலத்தான் போருக்கு விதிகள் தேவைப்படுகின்றன.

எல்லோரும் ஏற்றுக்கொண்ட போர்விதிகளை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தவை, மூன்று பேரரசுகள்தான். பல காலங்களாக போர்க்களம் நீங்கா இந்தப் பேரரசுகள்தான் எதிரும் புதிருமான முறையில் எத்தனையோ விதிகளை உருவாக்கின. இன்று பொதுப் புழக்கத்தில் இருக்கும் போர்விதிகளில் பெரும் பான்மையானவை எதிரெதிரே இருக்கையில் அமர்ந்து இந்தப் பேரரசுகளால் உருவாக்கப் பட்டவைதான். வரலாற்றில் முதன்முறையாக மூன்று பேரரசுகளும் ஒன்றாய் உட்கார்ந்து பொது எதிரியோடு போர்புரிவதற்கான விதிகளைப் பற்றி இப்போது பேசுகின்றன.

``போர்விதிகளை உருவாக்குவதில் நாம் புதிதாய்த் திட்டமிட என்ன இருக்கிறது?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

``போர்விதியின் அடிப்படையில் வெற்றிபெற முயல்வதைவிட, வெற்றி பெறுவதற்கான முறையில் விதிகளை வடிவமைத்துக் கொள்வதே அறிவுடைமை” என்றார் குலசேகரபாண்டியன்.

``இந்தப் போரை விதிகளால் ஒழுங்குப்படுத்த முடியாது. ஏனென்றால், எதிரிகளுக்கு என்ன ஆற்றல் இருக்கிறது என்றே நமக்குத் தெரியாது. பிறகு எப்படி நாம் பொதுவிதியை உருவாக்க முடியும்?” எனக் கேட்டான் கருங்கைவாணன்.

இன்று கபிலரோடு நடைபெற்ற பேச்சு வார்த்தையைச் சொல்லி நாளை போரின் விதிகள் பேசப்படவுள்ளதை முசுகுந்தர் பகிர்ந்துகொண்ட போது, கருங்கைவாணனின் மறுமொழியாக இது இருந்தது.

`கருங்கைவாணனா இப்படிப் பேசுவது!’ என வியப்போடு பார்த்தான் பொதியவெற்பன். முசுகுந்தருக்கும் நம்ப முடியாததாகத்தான் இருந்தது.

``மூவேந்தர்களின் கூட்டுப்படைத் தளபதியின் குரலா இது?” எனக் கேட்டார் முசுகுந்தர்.

``ஆம். நமக்கான விதிகளையும் அவர்களுக்கான விதிகளையும் ஒன்றாய்ப் பொருத்த முடியாது.”

``ஏன்? நம்மைவிட எந்த வகையில் அவர்கள் வேறுபட்டவர்கள்?”

``அது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் நம்மைப் போன்றோர் அல்லர். புதருக்குள்ளிருந்து விலங்குகள் வெளிவருவதைப்போல நெருப்புக்குள்ளிருந்து வெளிவரும் மிருகங்கள் அவர்கள். அவர்கள் மீது இரக்கமற்ற  தாக்குதலையே நடத்த வேண்டும். ஒழுங்குப்படுத்தப்பட்ட விதிகளெல்லாம் அந்தக் காட்டு மனிதர்களுக்குத் தேவையில்லை.”

கருங்கைவாணன் தீக்காயங்களிலிருந்து மீளாது துடித்துக்கொண்டிருப்பது அவனது சொற்களிலேயே தெரிந்தது.

``உனது வார்த்தைப்படியே வைத்துக் கொண்டாலும் விதி என்பது அவர்களது ஆற்றலைக் குறைக்கப் பயன்படுமேயானால், அதை நாம் ஏன் தவறவிட வேண்டும்?”

``அவர்களது ஆற்றல் என்னவென்று தெரிந்தால்தானே நம்மால் குறைக்க முடியும்?”

``அளவிட முடியாத ஆற்றல்கொண்டவர்கள் என்று சொல்கிறாயா?”

``இல்லை, எல்லாவகையான உத்திகளையும் பயன்படுத்தி அழிக்கப் படவேண்டிய ஒரு கூட்டம் என்று சொல்கிறேன். அந்தக் கூட்டத்துக்குப் பொதுவிதிகளைப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. அப்படிப் பொதுவிதிகளை உருவாக்குவது அவர்களுக்கு நாமே வாய்ப்பைத் தருவதுபோல் ஆகிவிடும்.”

``உருவாக்கப்படும் விதிகளின் படியே போர் புரியவேண்டும் என்பது முன்னோர் மரபு.”

``இதைத்தான் நான் சொல்ல வருகிறேன். சமதளத்தில் வாழ்கிற நமது முன்னோர்கள் உருவாக்கிய மரபு அது. மலைமனிதர்களுக்கு மரபு ஏது... அறம் ஏது?”

``நீ அவர்களின் திறனை மிகைப்படுத்துகிறாய் என நினைக்கிறேன். ஆத்திரப்படுவதால் அவ்வாறு தோன்றுகிறது.”

``இல்லை அமைச்சரே! யாராலும் நெருங்கவே முடியாது எனச் சொல்லப்பட்ட திரையர்களை அவர்களின் இருப்பிடத்துக்குள் நுழைந்து வீழ்த்தினோம். நானே அஞ்சி பின்வாங்க நினைத்தபோதுகூட சற்றும் இரக்கம்காட்டாமல் துணிந்து முன்னேறி அவர்களை வீழ்த்தினான் திதியன். ஆனால், சிறிய குன்றின் மேல் இருந்த சின்னஞ்சிறிய ஒரு கூட்டம், திதியனைக் கொன்றழித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. பெரும்பாறைகளை உருட்டுவதும், மரங்களைச் சாய்த்துத் தள்ளுவதும், நெருப்புக்குள் நுழைந்து வெளிவருவதுமாக அவர்கள் நடத்திய தாக்குதல் முழுவதும் நம்ப முடியாத மாயக்காட்சிகளாக இருந்தன. நாம் நடத்திய திடீர் தாக்குதலிலேயே அவர்களால் இவ்வளவு திறனை வெளிப்படுத்த முடிந்தபோது, திட்டமிட்டு முறைப்படுத்தப்பட்ட விதிகளை உருவாக்கி அதன்படி போரை நடத்த முற்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் எனச் சிந்திக்கவே முடியவில்லை.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 45p1_1528793853
``அதனால்..?’’

``அவர்கள் சிந்திப்பதற்கான வாய்ப்பைக் கொடுக்கக் கூடாது. எல்லா வகையிலும் அழித்தொழிப்பு ஒன்றே நோக்கமாகக்கொண்ட தாக்குதல் முறையைப் பின்பற்ற வேண்டும். சூழ்ச்சிகளும் வரைமுறையற்ற தாக்குதலும் அழித்தொழிப்புமே அவர்களை வீழ்த்துவதற்கான உத்தியாக இருக்க முடியும்.”

``பறம்புநாடு, இதுவரை விதிகள் வகுத்துக்கொள்ளப்பட்ட ஒரு போர்முறைக்குள் பங்கெடுத்ததில்லை. பறம்புக்குள் நுழைந்த எதிர் நாட்டினரின் மீது தாக்குதல் நடத்தி வென்றுள்ளனர். தாக்குதல் போருக்கும், விதிகளால் வரையறுக்கப்பட்ட களப்போருக்கும் நிறைய வேறுபாடு உண்டு. விதிகளால் முறைப்படுத்தப்பட்ட போரில் தாக்கும் திறன் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானித்துவிடுவதில்லை. பறம்பினர், தாக்கும் திறனை மட்டுமே நம்பியுள்ள கூட்டத்தினர். அவர்களின் வலிமையின் வழியே அவர்களை வீழ்த்த வேண்டும்” என்றார் குலசேகர பாண்டியன்.

அவர் சொல்வதை சற்று ஆழ்ந்து சிந்தித்தனர். `என்ன செய்யலாம்?’ என்ற கேள்வியே மிச்சமிருந்தது.

``முதன்முறையாக கபிலர் பேசவந்தபோது அவரை அறியாமலேயே முக்கியமான செய்தி ஒன்றை நமக்குத் தெரிவித்தார்.”

குலசேகரபாண்டியன் எதைச் சொல்கிறார் என்று மற்ற மூவரும் சிந்தித்தனர். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. அவரே கூறினார்,

`` `நாகக்கரட்டின் மேல் நின்று பார்த்தால் நமது படையில் மூன்றில் ஒரு பகுதி தெரிகிறது. இரலிமேட்டிலிருந்து பார்த்தால் முழுப் படையும் தெரிகிறது’ என்றார் அல்லவா?”

அப்போதுதான் மற்றவர்களுக்குக் கபிலர் கூறியது நினைவுக்கு வந்தது.

``அது எவ்வளவு முக்கியமான குறிப்பு. அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. வேட்டுவன்பாறையின் மீது திடீர் தாக்குதல் தொடுக்க வேண்டும் என்றுதான் அந்தக் குன்றினைவிட்டு நமது படையை மிகத்தள்ளி கூடாரம் அமைக்கச் சொன்னேன். நம்மைக் கண்டு அஞ்சியே வேந்தர்படையினர் கூடாரத்தைப் பிரித்துக்கொண்டு போகிறார்கள் என்று எதிரிகள் எண்ணவேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தேன். அப்படிச் செய்ததன் மூலம்தான் வேட்டுவன் பாறையின் மீதான தாக்குதலை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. அதில் கவனம் செலுத்திய நான் மற்றொன்றைக் கவனிக்கத் தவறிவிட்டேன்” என்றார் சற்று கவலையோடு.

குலசேகரபாண்டியனின் கவலை அனைவர் முகத்திலும் பரவியது.

``நாம் படையை மலையடிவாரத்தில் நிறுத்திவிட்டோம். அவர்கள் பார்வையால் மதிப்பிட முடியாத தொலைவில் நிறுத்தியிருக்க வேண்டும். இன்னொரு முறை படையை நகர்த்தினால், அது வீரர்களிடம் குழப்பத்தையும் பயத்தையும் உருவாக்கிவிடும். எனவே, நாம் போர் உத்தியை மிகக் கவனமாகத் திட்டமிட வேண்டும்” என்றார்.

``என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

``இந்தப் போருக்கான களம் மலையடி வாரத்தில் அமையக் கூடாது. கிழக்கும் மேற்குமாக நின்று நாம் போரிடக் கூடாது. ஏனென்றால், மேற்குத்திசையில் மலை இருக்கிறது. எதிரிகள் படையின் பின்புறம் மலை இருப்பது அவர்களுக்கான வலிமையைக் கூட்டும். எனவே, படையின் அணிவகுப்பு வடக்கு தெற்காக இருக்க வேண்டும். அதேபோல அவர்கள் மேலிருந்து பார்த்தால் மதிப்பிட முடியாத தொலைவில் போர்க்களம் அமைய வேண்டும்” என்றார்.

இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என அனைவரும் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினர். இதில் உள்ள பெரும்சிக்கல், போருக்கான களத்தையும் படைகள் நிற்கவேண்டிய திசையையும் தீர்மானிப்பது தளபதிகளோ அரசர்களோ அல்ல; போரின் விதி பிறழாத `நிலைமான் கோல்சொல்லி’களே!

போர் நிலத்தின் அனைத்து விதிகளையும் எழுதுபவர்கள் `நிலைமான் கோல் சொல்லி’களே. நாள்தோறும் போர் எப்போது தொடங்க வேண்டும் எப்போது முடிவுற வேண்டும் என்பதை, போர்க்களத்தில் நடப்பட்ட நாழிகைக்கோலைப் பார்த்துச் சொல்பவர்களை `கோல்சொல்லிகள்’ என்று அழைத்தனர்.

போர்க்களத்தின் ஒவ்வொரு நாளும் கோல் சொல்லியின் குரலிலேதான் தொடங்குகிறது; முடிகிறது. எனவே, இருதரப்பும் ஏற்றுக்கொண்ட கோல்சொல்லியானவர் அறம் தவறாத நிலைமானாக இருக்க வேண்டும் என்பதால், அவரை `நிலைமான் கோல்சொல்லி’ என்று அழைக்கும் பழக்கம் உருவானது. அவ்வாறு தேர்வுசெய்யப்படும் நிலைமான் கோல்சொல்லிதான், போர்புரிவதற்கான இடத்தையும் போருக்கான காலத்தையும் முடிவுசெய்கிறார்.

குலசேகரபாண்டியன் சொன்னார், ``எனது கணிப்பின்படி எதிரிகளின் தரப்பில் கோல்சொல்லியாகக் கபிலரையே கூறுவார்கள்.”

``ஆம், அவர்களின் தரப்பில் நாழிகைக்கோலைப் பார்க்கும் அறிவு வேறு யாருக்கு இருக்கப்போகிறது?” என்றார் சோழவேழன்.

``நமது தரப்பில் யாரை அறிவிக்கப் போகிறாம்?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

போர்க்களம் அமையும் இடம்தான், இந்தப் போரின் வெற்றி-தோல்வியை முடிவுசெய்வதில் முக்கியப் பங்காற்றப்போகிறது. எனவே, நாம் சொல்லும் இடத்தில் போர்க்களத்தை முடிவுசெய்பவராக நிலைமான்கோல்சொல்லி இருக்க வேண்டும். எதிரியின் தரப்பில் கோல்சொல்லியாக கபிலர் வந்தால், அவரும் நாம் சொல்லும் இடத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் திறன்கொண்டவராகவும் சூழ்ச்சி தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்” என்றார் குலசேகரபாண்டியன்.

அவர் சொல்வதை மறுப்பதற்கில்லை. நமது தரப்பில் யாரை நியமிப்பது என்று தீவிரமாகச் சிந்தித்தனர். ``கபிலர், நாழிகைக்கோல் பார்க்கத் தெரிந்தவராக இருக்கலாம். ஆனால், போரின் விதிகளை முழுமையாக அறிந்தவர் என்று சொல்லிவிட முடியாது. எனவே, பொருத்தமானவரைத் தேர்வுசெய்தால் கபிலரை நமது முடிவுக்கு இணங்கச் செய்ய முடியும்” என்றான் உதியஞ்சேரல்.

``ஆம். அதனால்தான் இந்தப் பணிக்குப் பொருத்தமானவராக பாண்டியநாட்டு அரண்மனையின் தலைமைக் கணியன் அந்துவனைக் கருதுகிறேன்” என்றார் குலசேகரபாண்டியன்.

`அவன் பொருத்தமானவனா!’ என்று மற்றவர்கள் சிந்தித்தனர். ``அந்துவன், கபிலரைவிட மிக இளையவனாக இருக்கிறானே, பெரும்புலவரை திசைமாற்றி போர்க்களத்தை நாம் நினைக்குமிடத்தில் அமைக்கும் ஆற்றல்கொண்டவனா?” எனக் கேட்டான் செங்கனச்சோழன்.

``அவன், பெருங்கணியர் திசைவேழருக்கு மாணவன். எனவே, அவன்பால் கபிலருக்கு பெரும்மரியாதை உண்டு. அவனது கணிப்பு பல நேரங்களில் ஆசானைப்போல் உள்ளது என்று என்னிடமே கூறியுள்ளார். அதுமட்டுமன்று, கபிலரைக் கையாள்வதில் அவன் மிகவல்லவன். எனவே, நமது திட்டத்தை அச்சுபிசகாமல் நடைமுறைப்படுத்திவிடுவான்” என்றார்.

``அப்படியென்றால் அவனையே நமது தரப்பின் `நிலைமான் கோல்சொல்லி’யாக அறிவித்துவிடலாம்” என்றனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 45p4_1528793837
சரியென்று ஏற்றுக்கொண்ட குலசேகரபாண்டியன், ``ஒரு முக்கியச் செய்தி. நாளை மட்டுமன்று, எப்போது கபிலர் பேச வந்தாலும் அவரை அதிகமாக பேசவிட வேண்டும். கோபப்பட்டு நிறுத்தக் கூடாது. அவராகவே நமக்கு வேண்டிய முக்கியக் குறிப்பைக் கொடுத்துவிட்டுச் செல்வார்” என்றார். மற்றவர்கள் மகிழ்ந்து சிரித்தனர்.

மறுநாள் போர்விதிகளை வகுக்க மூஞ்சலின் பெருங்கூடாரத்தில் எதிர்பார்ப்போடு இருந்தனர் வேந்தர்கள். கபிலரின் தேர்ப்படை எல்லைக்குள் நுழைந்ததும் மூஞ்சலுக்குச் செய்தி வந்தது, ``உடன் கிழவன் ஒருவனை அழைத்துக்கொண்டு வருகிறார் கபிலர்.”

``சென்றமுறை சிறுவனை அழைத்துவந்தார். இந்த முறை கிழவனை அழைத்துவருகிறார்” என்று பேசிச் சிரித்தனர். சிறிது நேரத்தில் மூஞ்சலுக்குள் நுழைந்தது கபிலரின் தேர்.

தேரோட்டும் வலவனின் தோள்பற்றி கபிலர் இறங்க, அவரின் தோள்பற்றி வாரிக்கையன் இறங்கினார். ஊன்றுகோலை ஊன்றி கபிலரைப் பின்தொடர்ந்தார் கிழவர். இருவரையும் வரவேற்று கூடாரத்துக்குள் அழைத்துச்சென்றார் முசுகுந்தர். பெருவேந்தர்கள் வீற்றிருந்த அவையில் இருவரும் வந்து அமர்ந்தனர். கபிலர் மூவேந்தர்களையும் உடன் இருந்த சோழவேழன், பொதியவெற்பன், முசுகுந்தர் ஆகிய அறுவரையும் பற்றி வாரிக்கையனிடம் தெரிவித்தார். வாரிக்கையனைப் பற்றி வேந்தர்களிடம் சொல்லும்போது, ``பறம்பு நாட்டுப் பெருங்கிழவன்” என்று கூறினார்.

‘பன்னெடுங்காலத்துக்கு முன் பட்டுப்போன மரம்போல் இருக்கிறான் கிழவன். கால்கள் கவட்டை விழுந்து, நகங்கள் எல்லாம் சூம்பிச்சுருண்டு கிடக்கின்றன. மேல் தோல் செம்பட்டையோடு திட்டுத் திட்டாக இருக்கிறது. பார்க்கவே சற்று அருவருப்பூட்டும் இவரை ஏன் அழைத்துவந்துள்ளார் கபிலர்?’ என்று சிந்தித்தபடி இருந்தனர் அனைவரும்.

பணியாளர்கள் சுவைநீர் கொண்டுவந்து கொடுத்தனர். வாரிக்கையன், ``எனக்குத் தேவையான எல்லா சுவைகளும் வெற்றிலையில்தான் இருக்கின்றன” எனச் சொல்லி இடுப்பின் இடதுபக்கத்தில் சுருட்டிவைத்திருந்த வெற்றிலையை எடுத்தார். கபிலர், சுவைநீர்க் குவளையை வாங்கிக் குடிக்கத் தொடங்கினார். மற்றவர்களும் சுவைநீர் பருகினர்.

வலதுபக்கம் சுருட்டி வைத்திருந்த சுருக்குப்பையை எடுத்தார் வாரிக்கையன். அவர் என்ன செய்கிறார் என்று கண்களைத் திருப்பிப் பார்த்தார் கபிலர். பாக்குக்கொட்டை ஒன்றை எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால் அழுத்தி உடைத்தார். கொட்டை உடையும் ஓசை ‘சடக்’கெனக் கேட்டது.

வாரிக்கையனுக்கு இடதுபக்கம் கபிலரும் வலது பக்கம் சற்று தள்ளி எதிரே உதியஞ்சேரலும் அமர்ந்தி ருந்தனர். வாரிக்கையனுக்கு நேர் எதிரில் குலசேகரபாண்டியன் இருந்தார். அவருக்கு வலதும் இடதுமாக மற்றவர்கள் இருந்தனர். கிழவன் பாக்குக்கொட்டையை விரல்களால் அழுத்தி உடைக்கும் ஓசை, பக்கத்தில் இருந்த உதியஞ்சேரலுக்குக் கேட்டது. `தள்ளாடி நடந்துவரும் கிழவன் பாக்குக்கொட்டையை விரல்களால் எப்படி அழுத்தி உடைத்தான்!’ என்று வியப்போடு பார்த்தான் அவன்.

சோழவேழன் சுவைநீரைப் பருகிய படியே கபிலரிடம் கேட்டார், ``நேற்று பெரும்மழை பெய்ததல்லவா? இரவு போதுமான உறக்கம் இருந்திருக்காது; நனைந்து ஈரம்கொண்டிருப்பீர்கள். வயதான காலத்தில் உடல்நிலையைப் பேணுதல் கடினமானது. ஒருவேளை நீங்கள் வர காலந்தாழுமோ என நினைத்தோம்.”

``நான் குகையில் இருந்ததால் மழையில் நனையவில்லை. உறக்கமும் கெடவில்லை” என்றார் கபிலர்.

``மழைக்கு குகை இதமான வெப்பத்தோடு இருக்கும். தூங்கவும் சுகமாகத்தான் இருக்கும். ஆனால், வௌவால்கள் நிறைய அடைந்துகிடக்குமே. ஆழ்ந்து தூங்கவிடாதே!” என்றார் சோழவேலன். கபிலரை கூடுதலாகப் பேசவிடுதல் நேற்றெடுத்த முடிவுகளில் ஒன்றல்லவா!

``வெளவாலை அதன் இருப்பிடத்திலிருந்து விரட்டுவது எளிய செயலன்று. அதுவும் நீண்ட குகையென்றால் விரட்ட விரட்ட அது உள்ளே போய் அடைந்துகொள்ளும்” எனச் சொன்ன உதியஞ்சேரல் “அந்தக் குகை எவ்வளவு நீளமானது?” எனக் கேட்டான்.

``எவ்வளவு நீளமாக இருந்தால் என்ன? குகையைவிட்டு வெளவாலை விரட்டுவதெல்லாம் பெரிய வேலையா?” என்று எதிர்க்கேள்வி கேட்டார் வாரிக்கையன். 

அனைவரும் ஆர்வத்தோடு பார்த்தனர். `தங்களுக்குத் தேவை பேச்சின் மூலம் பெறும் தகவல்தான். கபிலரோடு சேர்ந்து கிழவனும் அதிகம் பேசுபவனாக இருக்கிறான்’ என்று எண்ணியபடி அவர் சொல்லப்போவதைக் கவனித்தனர்.

வெற்றிலையை மென்றபடியே வாரிக்கையன் கேட்டான், ``உங்களுக்கு பனையேறி அணிலைப் பற்றித் தெரியுமா?”

``அணிலில் அது ஒரு வகை என்று அறிவேன். அவ்வளவுதான்” என்றான் உதியஞ்சேரல்.

வெற்றிலையை ஒருபக்கமாக ஒதுக்கிக் கொண்டே வாரிக்கையன் சொன்னார். ``தெளிந்த நீர் இருக்கும் கிணற்றில் கல்லைப் போட்டால் அது ஆழத்துக்குச் செல்வது வரை எப்படிப் பார்க்க முடியுமோ, அப்படித்தான் குகைக்குள் பனையேறி அணிலைவிட்டால் அடைந்துகிடக்கும் வெளவாலை கடைசிவரை விரட்டிப்போவதை பார்க்க முடியும்”.

சுவைநீர் அருந்தியபடியே ஆர்வத்தோடு உதியஞ்சேரல் கேட்டான், ``எப்படி?”

``மற்ற அணிலைப்போல பனையேறி அணில் மரத்தில் நேராக மேலேறாது. மாறாக, மரத்தைச் சுற்றிச் சுற்றித்தான் மேலேறும். அதைக் குகைக்குள் விட்டால் நேராக உள்ளே போகாது. குகையின் ஓரப்பகுதியைச் சுற்றிச் சுற்றியே உள்நுழையும். அணில் வருவது அறிந்தவுடன் வெளவால்கள் இருப்பிடத்தைவிட்டு சற்று உள்ளே போகும். அணில் மீண்டும் விளிம்பைச் சுற்றியபடியே உள்ளே போகும். இப்படி, குகையின் கடைசி எல்லை வரை அணில் விரட்டிக்கொண்டே போகும். மூன்று பனையேறி அணில்களை அடுத்தடுத்து குகைக்குள் விட்டால் போதும் ஒரு வெளவாலைக்கூட அந்தக் குகைக்குள் அடையவிடாது” என்றார்.

ஆனால், வெற்றிலையை இருபக்கமுமாக ஒதுக்கியபடி இதைச் சொல்வதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் மிக அதிகம். கேட்பவர்கள் பொறுமையை இழக்கும்படி மென்றுமென்று பேசினார்.

`இவ்வளவு மெதுவாகப் பேசக் கூடியவரல்லரே வாரிக்கையன். ஏன் இவ்வளவு மெதுவாகப் பேசுகிறார்?’ எனக் கபிலருக்கே விளங்கவில்லை. சிந்தித்துக்கொண்டிருக்கும் போது பொதியவெற்பன் கேட்டான், ``எந்நேரமும் வெற்றிலையை மென்று கொண்டேதான் இருப்பீர்களா? பேசும்போது கூட மெல்வதை நிறுத்த மாட்டீர்களா?” 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 45p5_1528793814
கன்னத்தாடை இரண்டும் அகன்று மேலேறின. மென்றுகொண்டே சிரித்தார். ``கருவுற்றப் பெண்ணுக்கு வாயூறிக்கொண்டே இருக்குமல்லவா? அதேபோலத்தான் எனக்கும் வாயூறிக்கொண்டே இருக்கும். அதனால் வெற்றிலையை மென்றுகொண்டே இருப்பேன்” என்று சொன்னவர், கேள்விகேட்ட பொதியவெற்பனைப் பார்த்து, ``உன் மனைவி கருவுற்றிருக்கிறாளா?” எனக் கேட்டார்.

சற்றும் எதிர்பாராத கேள்வி. கபிலரே அதிர்ந்துபோனார். பொதியவெற்பனுக்கு அவையில் என்ன சொல்லவது எனத் தெரியவில்லை. அந்தரங்கத்துக்குள் நெருப்புப் பட்டதுபோல் இருந்தது. அதிர்ச்சியை வெளிக்காட்ட முடியாமலும், உட்செரிக்க முடியாமலும் திணறினான். இறுகிய நிலையை யார் உடைப்பது என யாருக்கும் புரியவில்லை. நிலைமையை அறிந்து முசுகுந்தர் தலையிட்டார் ``இளவரசருக்கு இப்போதுதான் மணமாகியிருக்கிறது.”

வாரிக்கையன் விடுவதாக இல்லை. ``இப்போது மணமானவரை ஏன் போர்க்களத்துக்குக் கூட்டிவந்தீர்கள்? பனையேறி அணில்போல மனைவியை அல்லவா சுற்றிக்கொண்டிருக்க வேண்டும். இங்கு வந்து கிழவர்களோடு உட்கார்ந்து வெளவாலைப் பற்றி ஏன் பேசிக்கொண்டிருக்கிறார்?” எனக் கேட்டார்.

நிலைமை மிக மோசமாகிக்கொண்டிருக்கிறது என அனைவரும் உணர்ந்தனர். `இதற்குமேல் இந்தப் பேச்சை நீட்டிக்க வேண்டாம். போர்விதிகளுக்கான பேச்சைத் தொடங்கலாம்’ என எண்ணி குலசேகரபாண்டியனைப் பார்த்தார் சோழவேழன். அவரோ வாரிக்கையனைக் கூர்ந்து பார்த்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். நேரமாகிக்கொண்டிருந்தது.

`சரி, நாமே தொடங்கலாம்’ என நினைத்த சோழவேழன், “பறம்பின் தரப்பில் நாழிகைக்கோலைப் பார்த்துச் சொல்லப்போகும் நிலைமான் கோல்சொல்லி யாரென முடிவுசெய்துவிட்டீர்களா?”

கேட்டு முடிக்கும் முன் வாரிக்கையன் சொன்னார், ``கபிலர்தான்.”

குலசேகரபாண்டியன் கணித்தது துளியளவும் பிசிறவில்லை. மிகச்சரியாக இருந்தது. கபிலரைக் கைக்கொள்ளும் திட்டம் ஏற்கெனவே தீட்டப்பட்டிருந்தது.

சற்று இடைவெளிக்குப் பிறகு, ``உங்களின் தரப்பில் நிலைமான் கோல்சொல்லி யார்?” எனக் கேட்டான் வாரிக்கையன்.

குலசேகரபாண்டியன்தான். பெயரைச் சொல்ல வேண்டும்... நேற்று அப்படித்தான் பேசப்பட்டது. ஆனால் அவரோ, வாரிக்கையனைக் கூர்ந்து பார்த்தபடி பேசாமல் இருந்தார். அவையில் அமைதி நீடித்தது. மற்ற இரு வேந்தர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. நேற்றைய பேச்சில் பொதியவெற்பனும் முசுகுந்தரும் கலந்துகொள்ளாததால் அவர்கள் இயல்பான அமைதியோடு இருந்தனர்.

வாரிக்கையன், தான் வெற்றிலையை மென்றுகொண்டே கேட்டதால் சரியாகப் புரியவில்லையோ என நினைத்து, மீண்டும் ஒருமுறை கேட்டார் ``உங்களின் தரப்பில் நிலைமான் கோல்சொல்லி யார்?”

அவையில் பேச்சு ஏதும் எழவில்லை. ஏன் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்கள் என்று கபிலருக்குப் புரியவில்லை. செங்கனச்சோழன் தன் தந்தையின் முகத்தைப் பார்த்தான். உதியஞ்சேரலோ சோழர்கள் இருவரையும் பார்த்தான். எதிரில் உட்கார்ந்திருப்பவர்கள் ஏன் திகைத்தபடி ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் எனக் கபிலருக்குப் புரியவில்லை.

`இனியும் பேசாமல் இருக்கக் கூடாது’ என நினைத்த சோழவேழன், ``தலைமைக் கணியன்...” என்று தொடங்கினார். ஆனால், பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை. நினைவுகூர்ந்தபடி நிறுத்தினார்.

குலசேகரபாண்டியனின் அருகில் நின்றிருந்த முசுகுந்தரோ ஒரு கணம் அதிர்ச்சியானார். `திசைவேழரையா சொல்கிறார்!’ எனத் திகைத்து குலசேகரபாண்டியனைப் பார்த்தார். அவரோ எதுவும் பேசாமல் வாரிக்கையனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவையோருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. முசுகுந்தர், குலசேகர பாண்டியனுக்கு மிக அருகில் சென்று மெல்லிய குரலில், ``திசைவேழரா பேரரசே?” எனக் கேட்டார்.

குலசேகரபாண்டியன் மெல்லிய சிரிப்போடு தலையசைத்தார். முசுகுந்தருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. `திசைவேழரைப்போன்ற அறம் தவறாத மாமனிதரை, போருக்கான கோல்சொல்லியாக நியமித்தால், அவரை நம்மால் எந்த வகையிலும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. போர்க்களத்தின் பிடிமானம் நம்மிடம் இல்லாமல்போகும் வாய்ப்புண்டு’ எனச் சிந்தித்தபடி மீண்டும் அவரை உற்றுப்பார்த்தார். அதே சிரிப்போடு தலையசைத்தார் குலசேகரபாண்டியன்.

பேரரசர் என்பவர், எப்போதும் யாரும் சிந்திக்காததைச் சிந்திக்கக்கூடியவர் என்பதை வாழ்வு முழுவதும் அறிந்தவர் முசுகுந்தர். எனவே, அவரின் திட்டமிடல் மற்றவர்கள் எண்ணத்துக்கு அப்பாற்பட்டுதான் இருக்கும் என்ற பெருமிதத்தோடு ``எங்கள் தரப்பின் நிலைமான் கோல்சொல்லியாகப் பெருங்கணியர் திசைவேழர் செயல்படுவார்” என அறிவித்தார்.

வேந்தரின் தரப்பில் இருந்த மற்றவர்கள் திகைத்துப்போனார்கள். பொதிய வெற்பனுக்கோ தலையே சுற்றுவதுபோல் ஆனது. என்ன நடக்கிறது இங்கு என்று யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

தான் பேசட்டும் என்று மற்றவர்கள் கருதுவதாக நினைத்த முசுகுந்தர், ``திசைவேழரை நாளை அழைத்துவருகிறோம். கோல்சொல்லிகள் இருவரும் போரின் விதிகளை வரையறுக்கட்டும்” என்றார்.

`சரி’யெனச் சொல்லி அவை நீங்கினர் கபிலரும் வாரிக்கையனும்.

பிற்பகலின் இறங்குவெயிலில் தேர், வேந்தர்களின் படையைவிட்டு வெளியேறியது. நீண்டநேரம் கபிலர் எதுவும் பேசவில்லை. அவருக்கு அவையில் நடந்ததைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

“ஏன் பேசாமல் வருகிறீர்கள்?” எனக் கேட்டார் வாரிக்கையன்.

“இல்லை, பேரரசர்களில் மூத்தவர் குலசேகரபாண்டியன். அவர்தான் எல்லாவற்றையும் பேசுவார். ஆனால் இன்று, அவர் பேசுவதை முற்றிலும் தவிர்த்துவிட்டார். மற்றவர்கள், அவரின் முகத்தையே மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தனர். காரணம் எதுவும் எனக்குப் பிடிபடவில்லை” என்றார்.

சற்றே சிரிப்போடு, ``காரணம் நான்தான்” என்றார் வாரிக்கையன்.

``நீங்களா?” என அதிர்ச்சியோடு கேட்டார் கபிலர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 11 45p7_1528793795
``ஆம். நான் முதலில் இடதுபக்க இடுப்புப் பையில் இருந்த வெற்றிலையை எடுத்தேன் என்பதை நீங்கள் கவனித்தீர்கள். ஆனால், வலதுபக்க சுருக்குப்பையைத் திறந்து என்ன செய்தேன் என்பதை நீங்கள் கவனிக்கவில்லை” என்றார்.

``சுருக்குப்பையில் என்ன செய்தீர்கள்?”

``அதற்குள்தான் திகைப்பூச்சியை வைத்திருந்தேன். பாக்கு எடுப்பதைப்போல அவற்றுள் மூன்றை முதலில் எடுத்து வெளியில் விட்டேன். அவை போவதை மற்றவர்கள் எளிதில் பார்த்துவிட முடியாது. ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதால்தான் பாக்கை மற்றவர்களுக்குக் கேட்பதைப்போல சத்தமாக உடைத்தேன். எல்லோரின் கவனமும் எனது கைக்கு வந்தது. திகைப்பூச்சிகள் எனக்கு நேராக உட்கார்திருப்பவனின் இருக்கை நோக்கிப்போனது. அது கடித்து சிறிதுபொழுதுக்குப் பிறகுதான் திகைப்புத்தன்மை உருவாகும். அதனால்தான் வெற்றிலையை மென்றபடி மெள்ள மெள்ளப் பேசி நேரத்தை நீட்டித்தேன்” என்றார்.

கபிலர் உறைந்துபோனார். ``நீங்கள்தான் குலசேகரபாண்டியனைப் பேசவிடாமல் செய்ததா? அப்படிச் செய்ததால் நமக்கென்ன நன்மை?”

``நம்மிடம் போர்விதிகளை எப்படிப் பேசுவது, யார் யார் பேசுவது என்பதையெல்லாம் அவர்கள் ஏற்கெனவே முடிவுசெய்திருப்பார்கள். திகைப்பூச்சி கடிப்பதன் மூலம் அவர்களில் ஓரிருவர் பேச முடியாத நிலையை எய்துவர். முடிவுசெய்தபடி ஏன் பேசவில்லை என்று மற்றவர்களுக்கு பேச முடியாதவர் மீது ஐயம் உருவாகும். அந்த ஐயம்தான் விரிசலுக்கான வழியை உருவாக்கும்” என்றார்.

கபிலர், விரித்த கண்களை இமைக்காமல் வாரிக்கையனையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மேலும் சொன்னார், “அவர்கள் மூவரும் நண்பர்கள் அல்லர்; நம்மை அழிப்பதற்காக ஒன்றுபட்டுள்ளனர். எனவே, அவர்களுக்குள் விரிசலை உருவாக்க, சிறிய காரணமே போதுமானது.”

நாகக்கரட்டின் அடிவாரத்தில் தேர் வந்து நின்றது. கபிலர் கீழிறங்கினார். அவரின் தோள்பற்றி இறங்கிய வாரிக்கையன் சொன்னார், “இந்தப் போரில் வலிமைமிகுந்த எண்ணற்ற ஆயுதங்களை நாம் பயன்படுத்தப்போகிறோம். ஆனால், நாம் பயன்படுத்தப்போகும் எந்தவோர் ஆயுதத்தையும்விட கண்களுக்குத் தெரியாத இந்தச் சிறுபூச்சி செய்துள்ள நன்மை இணையற்றதாக இருக்கும்”.

பேச்சின்றி நடந்தார் கபிலர்.

``அது சரி, யார் அந்தத் திசைவேழர்?”

வாரிக்கையனின் கேள்விக்கு அதிர்ச்சியிலிருந்து மீண்டபடி பதில் சொன்னார் கபிலர், ``அறத்தின் அடையாளம்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 14, 2018 2:10 pm

அந்த காலத்தின் திகைப்பூச்சியின் திறன் மனதில் கொண்டே
இந்த காலத்தில் திகைப்பூசி (anasthetic injection ) கண்டு பிடித்தார்களோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக