புதிய பதிவுகள்
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
75 Posts - 46%
heezulia
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
70 Posts - 43%
mohamed nizamudeen
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
4 Posts - 2%
M. Priya
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
1 Post - 1%
சிவா
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
1 Post - 1%
bala_t
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
306 Posts - 43%
heezulia
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
6 Posts - 1%
prajai
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
4 Posts - 1%
manikavi
நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_m10நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:22 pm

நூல் வெளி: உணவா, எரிபொருளா? எது முக்கியம்? LynvO61NSSOyCadDRLt5+cee85dbb27d8ed4f59985da6caed1845

கா

விரிப் படுகை முப்போகம் விளையும் பூமியாக இருந்ததெல்லாம் கதையாகிப் போனது. இனிமேல் கடைமடை வரைக்கும் காவிரி நீர் வந்து சேருமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில், படுகையின் அடியிலிருக்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுக்கும் திட்டங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுவருகின்றன.

காவிரிப் படுகையில் மீத்தேன் திட்டமும் அதைத் தொடர்ந்து ஷேல் கேஸ் எனப்படும் படிமப் பாறையி லிருந்து எரிவாயு எடுக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டு, அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்குப் பிறகு அத்திட்டங் கள் கைவிடப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரிப் படுகைளைத் துளைத்து எடுக்கப்படுவது மீத்தேன், படிமப்பாறைகளைத் துளைத்து எடுக்கப் படுவது ஷேல் கேஸ், இரண்டு திட்டங்களுக்கும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், ஹைட்ரோ கார்பன் என்ற புதிய வார்த்தை புழக்கத்துக்கு வந்திருக்கிறது. ஹைட்ரோ கார்பன் என்பது நிலக்கரிப் படுகை மீத்தேன், படிமப்பாறை எரிவாயு இரண்டையும் உள்ளடக்கியதே. ஆனால், இந்த வார்த்தையில் உள்ளடங்கியுள்ள எரிபொருட்களை அரசின் அறிவிப்புகள் விவரிப்பதில்லை.

நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:23 pm

ஏற்கெனவே, காவிரிப் படுகையில் பெட்ரோல் எடுக்கப்பட்டுவரும் நிலையில், இப்போது மட்டும் ஏன் எதிர்ப்புக் கிளம்புகிறது? விவசாயிகள் ஏன் அச்சத்துக்கு ஆளாகிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்வகையில், விவசாயிகளின் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்துபவர்கள், பத்திரிகையாளர்கள், அறிவியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று பலதரப்பினரும் எரிபொருட்களை அகழ்ந்தெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களின் சாதக பாதகங்களை விளக்கி புத்தகங்களை வெளியிட்டுவருகின்றனர்.
வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், மீத்தேன் எதிர்ப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான த.செயராமன் எழுதியுள்ள ‘மீத்தேன் அகதிகள்’ புத்தகத்தில், மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் திட்டங்களுக் காக மேற்கொள்ளப்படும் நீரியல் விரிசல் முறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நீரியல் விரிசல் செய்யப்பட்ட பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டதையும் மேலை நாடுகள் இம்முறையைக் கைவிடத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். த.செயராமன் வரலாற்றுத் துறை பேராசிரியர் என்பதால், அரசியல் சூழல்களின் காரணமாகவும் சூழலியல் பாதிப்புகளின் காரணமாகவும் உலகம் முழுவதும் அகதிகளாக இடம்பெயர்பவர்களின் துயரக் கதைகளையும் விவரமாக எழுதியிருக்கிறார். சுற்றுச்சூழல் பாதிப்புகள் புலம்பெயர்வுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிப்பதாகவே இந்நூல் அமைந்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:24 pm

பத்திரிகையாளர் கா.அய்யநாதன் எழுதியுள்ள ‘ஹைட்ரோ கார்பன் அபாயம்’ புத்தகம், ஓஎன்ஜிசி நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டுள்ள அறிக்கை களையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. எவ்வகையிலேனும் மக்களைச் சமாதானப்படுத்தி, திட்டங்களைத் தொடர்வதே அதன் நோக்கமாக இருக்கிறதேயொழிய, இத்திட்டங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைப் பற்றி முன்னறிவிப்பதாக இல்லை என்பதை ஆதாரங்களோடு விளக்கியிருக் கிறார். கச்சா எண்ணெய் இறக்குமதியால், தொடர்ந்து அந்நியச் செலாவணியை இழந்துவரும் இந்தியா, ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் மூலமாக அதை ஈடுகட்ட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையைக் காரணம் காட்டித்தான், தாராளமயம் அனுமதிக்கப்பட்டது. ஆனால், தாராளமயம் அனுமதிக்கப்பட்டு, 25 ஆண்டுகளாகியும்கூட அந்நியச் செலாவணியை நம்மால் ஈடுகட்ட முடியவில்லை என்பதே நிலை. இந்நிலையில் அந்நியச் செலாவணி, கச்சா எண்ணெய் ஆகியவற் றைக் காரணம்காட்டி, விவசாயிகளின் வாழ்வாதார மான நிலங்களைத் தகுதியிழக்கச் செய்வது சரியா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது கா.அய்ய நாதனின் ‘ஹைட்ரோ கார்பன் அபாயம்’ புத்தகம்.
தமிழில் தொடர்ந்து அறிவியல் சார்ந்த நூல்களை வெளியிட்டுவரும் அறிவியல் வெளியீடு, ‘அறிவியல் பார்வையில் ஹைட்ரோ கார்பன்’ என்ற நூலை வெளியிட்டுள்ளது. கேள்வி-பதில் வடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம், ஹைட்ரோ கார்பன் குறித்த சந்தேகங்களைக் கேள்விகளாக்கி அறிவியல்பூர்வ மான பதில்களை முன்வைக்கிறது. நெடுவாசல் ஒப்பந் தப் பின்னணி, காவிரிப் படுகையில் பெட்ரோலியப் பொருட்கள் உருவான வரலாறு உள்ளிட்ட பின்னிணைப்புகள் இப்பிரச்சினையை அறிவியல்பூர்வமாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கண்ணோட்டத்திலும் அணுகியிருக்கின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:25 pm

எரிபொருட்களை அகழ்ந்தெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களைப் போல, நியூட்ரினோ போன்ற ஆய்வுத் திட்டங்களும் இப்போது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. கோலார் சுரங்கத்தில் கை விடப்பட்ட நியூட்ரினோ ஆய்வுகளை இப்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தேனி, இடுக்கி மாவட்டங்களில் தொடர்வதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. அறிவியல் ஆய்வுகளுக்கான அவசியங்கள் இருந்தபோதும், அதன் விளைவுகள் மக்களையும் அவர்களது வாழ்வாதாரங்களையும் பாதித்துவிடக் கூடாது என்பதில் அக்கறை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். செயற்கையாக ஆய்வகங்களில் நியூட்ரினோக்களை உருவாக்கும்போது அங்கு உருவாகும் கதிர்வீச்சுகள், அருகிலிருக்கும் பகுதிகளில் எத்தகைய சூழல் கேடுகளை உருவாக்கும் என்பதைப் பற்றி கவனம் செலுத்தப்படவில்லை. மாநில அரசுகளின் அனுமதி பெறுவதில்கூட வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை.
தங்களது அனுமதி பெறாமல் இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று கேரள அரசு கூறியிருப்பதும் இந்தக் காரணத்தால்தான். இதுகுறித்து அணுசக்தி விஞ்ஞானி வி.டி.பத்மநாபன் எழுதிய கட்டுரைகள், அதற்கு இந்திய நியூட்ரினோ ஆய்வகம் தெரிவித்த மறுப்பு, வி.டி.பத்மநாபனின் விளக்கங்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்து ‘இந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்’ என்ற தலைப்பில் பூவுலகின் நண்பர்கள் - தமிழ்நாடு & புதுச்சேரி அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 25, 2018 7:25 pm

ஏற்கெனவே, காவிரிப் படுகையில் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. எண்ணெய்க் குழாய்களில் ஏற்படும் கசிவுகளைப் பற்றி ஓஎன்ஜிசி போதிய அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்று விவசாயிகள் குறைபட்டுக்கொள்கிறார்கள். ஆனால், கச்சா எண்ணெய் எடுப்ப தால் நிலத்தடிநீர் பாதிப்படையவில்லை என்பதால் அதுகுறித்து விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களில் கையாளப்படும் நீரியல் விரிசல் முறையால் நிலமும் வளமும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, அதை எதிர்க்கிறார்கள்.
விவசாயிகளையும் அவர்களை ஒருங்கிணைத்துப் போராடும் தலைவர்களையும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் போக்கு ஒன்றும் உருவாகி யிருக்கிறது. உண்மையில் உணவு, எரிபொருள் இரண்டுமே அத்தியாவசியத் தேவை என்பதை விவசாயிகள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இரண்டில் எதற்கு முக்கியத்துவம் என்பதில்தான் கருத்து மாறுபாடு.

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 25, 2018 7:43 pm

மீத்தேன் எடுக்கும் செலவை விட, மாடு வளர்ப்பதால் அதிக எரிபொருளை பெறலாமே.மேல் நாடுகளில் செயற்படுத்துகிறார்கள் . எரிபொருள்,பால் என இயற்கை முறையில் பயன் பெறலாம். செலவும் குறைவே.

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Sun Mar 25, 2018 9:18 pm

மூர்த்தி wrote:மீத்தேன் எடுக்கும் செலவை விட, மாடு வளர்ப்பதால் அதிக எரிபொருளை பெறலாமே.மேல் நாடுகளில் செயற்படுத்துகிறார்கள் . எரிபொருள்,பால் என இயற்கை முறையில் பயன் பெறலாம். செலவும் குறைவே.
மேற்கோள் செய்த பதிவு: 1264018
வழி பல இருக்கலாம்,
இது ஒரு சமுதாயம்
நாம் எதோ ஒரு கட்டுப்பாட்டிற்கு வரவேண்டும்
இந்த புரிதல் இல்லாத ,சுயநல சமுதாயத்திற்கு
ஒரு வழியும் பயன்படாது .
"போதும் என்ற மனதே பொன் செய்யும் மருந்து" - இது அந்தக்காலம்
"போதாதென்ற மனதே வெற்றியின் விளிம்பு" - இது இந்தக்காலம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 11:49 am

மூர்த்தி wrote:மீத்தேன் எடுக்கும் செலவை விட, மாடு வளர்ப்பதால் அதிக எரிபொருளை பெறலாமே.மேல் நாடுகளில் செயற்படுத்துகிறார்கள் . எரிபொருள்,பால் என இயற்கை முறையில் பயன் பெறலாம். செலவும் குறைவே.
மேற்கோள் செய்த பதிவு: 1264018
மாட்டு சாணத்தை மீத்தேன் எடுக்க
உபயோகப்படுத்தலாம்.
மாட்டிற்கு தண்ணீர் தீவனம் என்ன செய்வது.
நீராதாரம் இன்றி இது சாத்தியம் இல்லை.
நன்றி மூர்த்தி

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 26, 2018 12:25 pm

ஐயா இது முற்றிலும் சாத்தியமே. ஏற்கனவே இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் தனியாரால் சிறிய அளவில் தொடங்கப்பட்டு விட்டது. அரசு தான் கண்டுகொள்ளவில்லை.கார்பொரேட் நிறுவனங்களின் மோசடிக்கு துணைபோகும் அரசுகள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.இந்தத் திட்டத்திற்கு நீராதாரம் பெரிதாக தேவையில்லை.

கொமரபாளையம்,நேர்குன்றம்,ரெட்டிபட்டி-நாமக்கல், போன்ற பல இடங்களில் தனியார் இந்த திட்டத்தை செயற்படுத்தி நல்ல பலன் பெற்று வருகின்றனர். மாட்டின் கழிவுகள் மட்டுமல்லாமல் மனிதக் கழிவு,அழுகிய கழிவுகள் கூடப் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு தனியாருக்கு சிறிய மானியம் வழங்குகிறது. பெரிய அளவில் செய்ய மானில அரசு உதவி செய்வதில்லை கண்டுகொள்வதும் இல்லை..

நாம் தான் சாத்தியத்தை உருவாக்க வேண்டும். இஸ்ரயேல்,அரபு நாடுகள் நீர் இல்லாமல் பாலைவனமாக எதுவும் முடியாதென்ற நிலையில் இருந்த நிலை மாறி, இன்று தண்ணீரில் நிறைவு கண்டதுடன் விவசாயத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அன்று முடியாது சாத்தியமில்லை என்று இருந்திருந்தால் இப்படி வளர்ச்சி பெற்றிருக்க முடியாது.

தமிழ் நாட்டிற்கு இப்போது நீர் அவசியமில்லை நல்ல திட்டங்களை செயல்படுத்தும் ஒரு நல்அரசுதான் முக்கியமாக தேவைப்படுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 26, 2018 12:53 pm

மூர்த்தி wrote:ஐயா இது முற்றிலும் சாத்தியமே. ஏற்கனவே இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் தனியாரால் சிறிய அளவில் தொடங்கப்பட்டு விட்டது. அரசு தான் கண்டுகொள்ளவில்லை.கார்பொரேட் நிறுவனங்களின் மோசடிக்கு துணைபோகும் அரசுகள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.இந்தத் திட்டத்திற்கு நீராதாரம் பெரிதாக தேவையில்லை.

கொமரபாளையம்,நேர்குன்றம்,ரெட்டிபட்டி-நாமக்கல், போன்ற பல இடங்களில் தனியார் இந்த திட்டத்தை செயற்படுத்தி நல்ல பலன் பெற்று வருகின்றனர். மாட்டின் கழிவுகள் மட்டுமல்லாமல் மனிதக் கழிவு,அழுகிய கழிவுகள் கூடப் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு தனியாருக்கு சிறிய மானியம் வழங்குகிறது. பெரிய அளவில் செய்ய மானில அரசு உதவி செய்வதில்லை கண்டுகொள்வதும் இல்லை..

நாம் தான் சாத்தியத்தை உருவாக்க வேண்டும். இஸ்ரயேல்,அரபு நாடுகள் நீர் இல்லாமல் பாலைவனமாக எதுவும் முடியாதென்ற நிலையில் இருந்த நிலை மாறி, இன்று தண்ணீரில் நிறைவு கண்டதுடன் விவசாயத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அன்று முடியாது சாத்தியமில்லை என்று இருந்திருந்தால் இப்படி வளர்ச்சி பெற்றிருக்க முடியாது.

தமிழ் நாட்டிற்கு இப்போது நீர் அவசியமில்லை நல்ல திட்டங்களை செயல்படுத்தும் ஒரு நல்அரசுதான் முக்கியமாக தேவைப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1264070
இந்த பயோ கேஸ் திட்டம் மாட்டு சாணத்தை உபயோகித்து எடுப்பது.
இது எங்க வீட்டில் 1985ல் போட்டு உபயோகபடுத்தினோம். சமையல் செய்ய மிக
உபயோகமானதாக இருந்தது. இதில் நிறைய
பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் அதை அப்போது சரிசெய்து தர ஆளில்லை. ஒரு கட்டத்தில் அது உபயோகமற்று போனது.
இதில் எனக்கு நிறைய பிரச்சனைகள்
தெரியும். ஒரு கட்டத்தில் வெறுத்து விட்டு விட்டோம். ஆனால் தற்போது டெக்னாலஜி வளர்ந்து உள்ளது. இது சாத்தியம் தான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக