புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_m10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10 
69 Posts - 58%
heezulia
'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_m10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_m10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_m10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_m10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10 
111 Posts - 59%
heezulia
'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_m10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_m10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_m10'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:02 am

'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் 8ckyjUaRlmphxlzZXDXR+postal5jpg'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் VmuuFUuUSjeGJoSy68tM+postal2jpg


ஹரிஹரன்

1944-ல், ஹரிஹரனின் தாத்தா எழுதிய கடிதம்

அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கோவை புதூர் நா.ஹரிஹரனை நான் அடிக்கடி சந்திக்கிறேன். அப்படிச் சந்திக்கும்போதெல்லாம் தபால் இலாகா சம்பந்தப்பட்ட அரிய தகவல் ஒன்றை என்னிடம் சொல்லாமல் இருக்கமாட்டார் அவர்.


“இந்த வருசம் இந்திரா காந்தி நூற்றாண்டு விழா தம்பி.. அதுக்காக அவருக்கு அஞ்சல் துறையில தபால் தலை வெளியிட்டுருக்காங்க. ஆனா, மத்த யாராச்சும் இந்திரா காந்தியைக் கொண்டாடறாங்களா பாருங்க..” என்றார் ஒருமுறை. “அஞ்சல் துறையை நஷ்டத்திலிருந்து காப்பாத்துறதுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் ‘மை ஸ்டாம்ப்’ திட்டம். மெனக்கெட்டு அதை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தினா நல்லாருக்கும்.

பொக்கிஷமாய் வைத்திருக்கிறார்

இப்ப, ரஜினியுடன் ரசிகர்கள் சந்திப்பு நடக்குது. அந்த இடத்துல அஞ்சல் துறை ஒரு கேம்ப் போட்டு உட் கார்ந்தா, ஆயிரக் கணக்குல மை ஸ்டாம்ப் கலெக் ஷன் ஆகும். இது சம்பந்தமா ரெண்டு முறை அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிட்டேன்; பதிலையே காணோம்” அண்மையில் இப்படியும் சொன்ன ஹரிஹரன், அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு தனது தாத்தா எழுதிய கடிதத்தைக்கூட பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

வாயைத் திறந்தால் அஞ்சல் இலாகா சம்பந்தமாக ஏதாவதொன்றைச் சொல்லாமல் இருக்க மாட்டார் வயது எழுபத்து நான்கை கடந்து கொண்டிருக்கும் ஹரிஹரன். 1774-ல், கொல்கத்தாவில் தான் நாட்டின் முதல் தபால் நிலையம் தொடங்கப்பட்டது. கேரளத்தின் ஆழப்புழையில் உள்ள குட்டநாட்டில் தான் இந்தியாவின் மிதக்கும் தபால் நிலையம் உள்ளது. இப்படி தபால் துறையின் தகவல் சுரங்கமாக திகழும் ஹரிஹரன், தபால் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான தகவல்களையும் அவ்வப்போது சொல்லி வருகிறார். அதற்காக, இதுவரை 6 முறை சிறந்த ஆலோசனைக்கான விருதையும் தபால் துறையிடமிருந்து இவர் பெற்றுள்ளார்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:04 am

மேக்தூத் விருது

பணியில் இருந்த காலத்தில் தபால் துறையில் சிறந்த சேவைக்காக மேக்தூத் தேசிய விருதையும் பெற் றுள்ளார். “ஓய்வுக்குப் பிறகும் தபால் துறையை மறக்கமுடியாமல் இன்னமும் அதனூடேயே ஒட்டி உறவாடுகிறீர்களே.. அதற்கு என்ன காரணம்?” என்று ஹரிஹரனைக் கேட்டேன். இந்தக் கேள்விக்கு உணர்ச்சிப்பூர்வமாக பதில் சொன்னார்.

'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் OrJK7XlESD2KDoQX1Yah+postal4jpg

தனது தபால்துறை நண்பர்களுடன் ஹரிஹரன்


“ஆரம்பத்தில் தபால் துறையில் நான் தற்காலிக பணியாளராகத்தான் இருந்தேன். 1964-ல் தான் கிளார்க் ஆனேன். கோவை அண்ணாசிலை பகுதி தபால் அலுவலகத்தில் வேலை. தொடக்கத்திலிருந்தே எனக்கு தபால் துறை மீது ஈடுபாடு அதிகம். எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அதிகாரிகள் 1977-ல், தபால் துறையின் வளர்ச்சிக்கு உங்களிடம் யோசனை இருந்தால் சொல்லலாம் என்றார்கள். அப்போது, அஞ்சல் படிவம் ஒன்றை மாற்றி அமைப்பது தொடர்பாக நான் சொன்ன யோசனை ஏற்கப்பட்டு, அதற்கு 100 ரூபாய் பரிசும் தந்தார்கள். இப்படித்தான் அடுத்தடுத்தும் நான் சொன்ன மேலும் ஐந்து யோசனைகளும் ஏற்கப்பட்டு, பரிசு கொடுத்தார்கள்.

ஒட்டிக் கொண்டிருக்கிறேன்

கார்கில் உள்ளிட்ட நாட்டின் எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் தபால் ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக மேக்தூத் விருது அளிப்பார்கள். 1984-ல், அந்த விருதை எனக்கும் கொடுத்தார்கள். தபால் துறையின் மீது நான் கொண்டிருந்த பற்றும், அதன் வளர்ச்சிக்கு நான் சொன்ன யோசனைகளும் என்னை போஸ்ட் மாஸ்டர், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், தபால் நிலையங்களுக்கான நில ஆர்ஜிதப் பிரிவு பி.ஆர்.ஓ என பல நிலைகளுக்கு உயர்த்தியது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 29, 2017 7:06 am

15 வருடங்களுக்கு முன்பு நான் பணி ஓய்வுபெற்றுவிட்டேன். ஆனாலும் எனக்குப் பிடித்தமான தபால் துறையைவிட்டு என்னால் ஒதுங்கியிருக்க முடியவில்லை. அதனால், தொடர்ந்து அத்துறையுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறேன். கடந்த 15 வருடங்களில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட தபால் துறை சார்ந்த தகவல்களை மீடியாக்களுக்குத் தந்திருப்பேன். அதைவிட கூடுதலான எண்ணிக்கையில் தபால் துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பேன்” என்று நெகிழ்ந்துபோய் சொன்னார் ஹரிஹரன்.

வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் தோன்றி தபால் துறையின் பெருமை பேசியிருக்கும் ஹரிஹரன், “இப்போது வழக்கத்தில் இருக்கும் இ - மெயில் வழி கடிதங்கள் எல்லாம் காலப்போக்கில் காலாவதியாகி விடும். ஆனால், தபால் மூலம் வரும் கடிதங்களுக்கு அழிவில்லை. அவை, ஒரு காலத்தில் இந்த தேசத்தின், உலகத்தின் வரலாற்றைச் சொல்லும் ஆவணமாகவே மாறும். எனவே, தபால் கடிதங்களை அடுத்தடுத்த தலைமுறையினர் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

மாணவ கண்மணிகள் கடிதம் எழுதிப் பழக வேண்டும். பள்ளிக் குழந்தைகள் மத்தியில் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக முன்பு பள்ளிக்கூடங்களில் லெட்டர் பெட்டிகள் வைக்கப்பட்டன. மாணவர்கள் எழுதும் கடிதங்களை அந்தப் பெட்டியில் போட வைத்து, சிறந்த கடிதங்களுக்கு பரிசும் கொடுக்கப்பட்டது. 2006-ல், கோவை எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் சுமார் 4,000 மாணவர்கள் கடிதம் எழுதினார்கள்.
'கடிதம் எழுதிப்பழகுங்கள் கண்மணிகளே.. ' சொல்கிறார் அஞ்சல் துறை நாயகன் G4xONkbvT7GP9S4oa23K+postal3jpg

தபால் துறை நண்பர்களுடன் ஹரிஹரன்

அதேபோல் 2006-07-ல், கோவை பாரதியார் பல்கலையில் படித்த சீன மாணவர்கள் 27 பேரை தலைமை அஞ்சலகத்துக்கு வரவைத்தோம். இந்திய தபால் துறை செயல்படும் விதம் குறித்து அங்கு அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, சீனாவிலிருந்த அவர்களது பெற்றோருக்கு கடிதம் எழுத வைத்தோம்.

கோவை ஜவான்ஸ் பவனில் இருக்கும் நண்பர் ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது நண்பர்களுக்குத் தகவல் சொல்லவும் வாழ்த்துச் சொல்லவும் தபால் கடிதங்களை மட்டுமே பயன்படுத்துகிறார். அவரின் இந்தச் செயல்பாட்டின் பின்னணியில் எனது தூண்டுதலும் வழிகாட்டுதலும் இருக்கிறது, அவரைப் போலத்தான் நானும் கடைசி வரை அஞ்சல் அட்டைகள் மூலமே நண்பர்களுக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துக்கள் அனுப்புவது என்பதில் தீர்மானமாய் இருக்கிறேன்” என்று சொன்னார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக