புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 5:18 pm
» ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!
by ayyasamy ram Today at 5:16 pm
» ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !
by ayyasamy ram Today at 5:15 pm
» இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்..!
by ayyasamy ram Today at 5:14 pm
» இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடு
by ayyasamy ram Today at 5:13 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
by heezulia Today at 5:56 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 5:18 pm
» ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!
by ayyasamy ram Today at 5:16 pm
» ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !
by ayyasamy ram Today at 5:15 pm
» இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்..!
by ayyasamy ram Today at 5:14 pm
» இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடு
by ayyasamy ram Today at 5:13 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm
» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm
» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm
» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm
» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm
» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க
Page 8 of 12 •
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3719
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
18 .12 .2017
இது ஒரு புதிய முயற்சி.
ஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.
ஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.
காவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை பொருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.
அரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.
அரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.
அரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.
அரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.
ப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.
என்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி
"என் வீரத்தின் மீதாணை"
இவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.
தளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இருந்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
ப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.
அரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.
அந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.
காவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.
அரசி : வரச்சொல் சபைக்கு.
காவலாளி : உத்தரவு.
ப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்?
அரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.
சபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.
புலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.
அரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ?
புலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.
அரசி : ஏனப்படி?
புலவர் : காரணம் புரியவில்லை
அரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.
புலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ?
புலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.
அரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.
புலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.
அரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]
ப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்?
புலவர் : இதே ஊர்.
ப்ரதம தளபதி : பெயர்?
புலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.
ப்ரதம தளபதி : தாய் தந்தையர்?
புலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு
ப்ரதம தளபதி : உற்றார் உறவினர்?
புலவர் : இல்லை
ப்ரதம தளபதி : சகோதரர்?
புலவர் : அனாதை
ப்ரதம தளபதி : உமக்குத் தொழில்?
புலவர் : எமக்குத் தொழில் கவிதை.
ப்ரதம தளபதி : அடுத்து?
புலவர் : ஆண்டவன் தொண்டு
ப்ரதம தளபதி : இதற்கு முன்?
புலவர் : பிறப்பால் ஊமை.
ப்ரதம தளபதி : பேச்சு வந்தது?
புலவர் : கலைவாணியின் அருளால்.
ப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.
புலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ?
ப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், அடக்கமாகப் பேசும்.
புலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.
அரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,
அரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.
புலவர் : அரசி
அரசி : ஆட்சிக்கிலக்கணம்?
புலவர் : ஆணவமற்ற அரசு.
அரசி : புலவனின் உரிமை?
புலவர் : சுதந்திரப் பறவை.
அரசி : இதயத்தை மகிழ்விப்பது?
புலவர் : குழந்தையின் மழலை
அரசி : வேதனை தருவது?
புலவர் : நண்பனின் பிரிவு.
அரசி : நட்புக்குயர்வு?
புலவர் : இடுக்கண் களைவது.
அரசி : எண்ணக்கூடாதது ?
புலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]
அரசி : பொருளில்லாதவர்க்கு?
புலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.
அரசி : அருளில்லாதவர்க்கு?
புலவர் : எவ்வுலகமுமில்லை.
அரசி : எங்கும் வேண்டுவது?
புலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.
அரசி : உயர்வுக்கு வழி?
புலவர் : உண்மையும், சத்தியமும்.
ப்ரதம தளபதி : அழியாது நிற்பது?
புலவர் : கவிஞனின் காவியம்
அரசி : அழிந்து விடுவது?
புலவர் : நிலையற்ற செல்வம்
ப்ரதம தளபதி : வீரருக்கு அழகு?
புலவர் : பேச்சைக் குறைப்பது.
ப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு?
புலவர் : பொன்னேட்டில் இருப்பது.
அரசி : புவியாள்பவர் முடிவு?
புலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.
ப்ரதம தளபதி : சகிக்க முடியாதது?
புலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை
தளபதி : தாள முடியாதது?
புலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்
தளபதி : கேட்கத் தகாதது ?
புலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.
ப்ரதம தளபதி : பார்க்க முடியாதது?
புலவர் : அடக்கமில்லாமை
அரசி : அதற்குதாரணம் ?
புலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.
ப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி
பிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.
அரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.
அரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.
புலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
அரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?
புலவர் : ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.
ப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.
புலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.
அரசி : எப்படி?
புலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.
ப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.
புலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.
தளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.
புலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.
Heezulia
18 .12 .2017
இது ஒரு புதிய முயற்சி.
ஒரு படத்திலுள்ள வசனங்களை அப்படியே தர்றேன். என்ன படம், இந்த வசனங்கள்ல நடிச்சிருப்பவங்க யார் யார்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். சொல்லுங்களேன். கண்டிப்பா கண்டு புடிச்சிருவீங்க. ஏன்னா ஈஸியானதாதானே குடுத்திருக்கேன்.
ஒரு அரண்மனை. அரசி சபைக்குள் நுழைகிறார்.
காவல்காரன் : நாட்டின் பேரரசி, செல்வபுரத்தின் பெண்ணரசி, மங்கையர் உலகுக்கு மாபெரும் தலைவியாய் விளங்க வந்த மங்கையர்க்கரசி, தக்க சமயத்தில் மக்களைக் காக்க வந்த மாதரசி, திருவின் கடாட்சத்தால், தெய்வத்தின் கருணையால் நம் நாட்டிற்குக் கிடைத்த பொன்னரசி, மாட்சிமை பொருந்திய செல்வபுரத்தின் மஹாராணி, ராஜமஹோன்னத, ராஜகோலாஹல, ராஜகம்பீர, ஸ்ரீ விஜயஜெய செல்வாம்பிகை நாச்சியார், வாழ்க.
அரசி வந்து, எல்லோரையும் அமரச் சொல்லி, அவரும் அமர்கிறார். சபையில் இருந்தவர்கள் அமர்கின்றனர்.
அரசி [சபையைப் பார்த்து] : ப்ரதம தளபதி பட்டமளிப்பு விழாவிற்கு விஜயம் செய்துள்ள ராஜ ப்ரமுகர்கள் அனைவரையும், அன்போடு வரவேற்கிறேன். என் அழைப்பிற்கிணங்கி, அனைவரும் வருகை தந்தமைக்கு, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தன்னைச் துச்சமென மதித்து என்னைக் காப்பாற்றிய வீரமல்லரின் வீரத்தைப் பற்றி, நான் விளக்கம் சொல்லத் தேவையில்லை. நடந்த சம்பவம் நாடறிந்தது. அப்படிப்பட்ட பலசாலியின், அரசியின் உயிரையே காத்த மாபெரும் வீரரே, இந்தச் செல்வபுரத்தின் ப்ரதம தளபதியாக நியமிக்க முடிவு கட்டி, உங்கள் முன் பதவிப் ப்ரமாணம் செய்து வைக்கிறேன்.
அரசி [தளபதியைப் பார்த்து]: வீரமல்லரே, நாட்டுக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு, பெற்ற தாய்போல் பிறந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கட்டளை இடுகிறேன். [தளபதியை நோக்கிக் கையை நீட்டி] இன்று முதல், உம்மை இந்த நாட்டிற்குப் ப்ரதம தளபதியாக நியமிக்கிறேன்.
அரசி ஒரு காவலாளியை நோக்க, அந்தக் காவலாளி வாள் இருந்த ஒரு தட்டை அரசியின் அருகில் கொண்டு வந்து நீட்டுகிறான். அரசி சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, தட்டிலிருந்த அந்த வாளை எடுத்து, பிரதம தளபதியின் கையில் கொடுக்கிறார். தளபதியும் அந்த வாளைக் கையில் வாங்கிப் பணிவுடன் அரசியை வணங்குகிறார். அரசி சிம்மாசனத்தில் அமர்கிறார்.
ப்ரதம தளபதி [உறையிலிருந்து வாளை உருவி] : பேரரசியே, பிறந்த நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூட மாற்றான் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு, நம் நாட்டைக் காப்பேன். எல்லைகளைக் காப்பேன். பகைவரால் தொல்லை ஏதேனும் வந்தால், அதை வேரோடு முறியடித்து விடுகிறேன். நமது செல்வபுரத்தை எனது உடலில் கடை.... சி சொட்டு ரத்தம் உள்ளவரை பாதுகாக்கிறேன் என்று உறுதி கூறி, இந்தப் ப்ரதம தளபதி பதவியை ஏற்றுக் கொள்கிறேன். இது என் தாய்மீதாணை. தாய்நாட்டின் மீதாணை.
என்று கூறி, வாளை உரையிலிருந்து உருவி மேலுயர்த்தி
"என் வீரத்தின் மீதாணை"
இவ்வாறு சொல்லி, வாளை முத்தமிட்டு விட்டு, உறையில் வைக்கிறார் ப்ரதம தளபதி.
தளபதி : பேரரசியே, ப்ரதம தளபதிக்குப் பக்கத் துணையாக இருந்து, படை நடத்தி, நாங்களும் நாட்டைப் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
ப்ரதம தளபதியும், தளபதியும் தத்தம் இருக்கையில் அமர்கின்றனர்.
அரசி : வாழ்க வீரம். வளர்க உங்களது ஆற்றல். பெருகட்டும் படைபலம்.
அந்தச் சமயத்தில் ஒரு காவலாளி அரசிமுன் வந்து வணங்குகிறான்.
காவலாளி : அரசியே, தங்கள் உத்தரவுப்படி, புலவரை அழைத்து வந்திருக்கிறோம்.
அரசி : வரச்சொல் சபைக்கு.
காவலாளி : உத்தரவு.
ப்ரதம தளபதி [சிறிது யோசித்து விட்டு அரசியைப் பார்த்து] : யாரந்தப் புலவன்?
அரசி [அலட்சியமாக] : வருவார் பாரும்.
சபைக்கு அந்தப் புலவர் கர்வத்துடன் வீரனடை நடந்து வருகிறார். சபையிலுள்ளவர்கள் எல்லோரும் அவரையே பார்க்கின்றனர். புலவர் அரசி முன் வந்து.
புலவர் : வாழ்க நாடு. உயர்க அரசு, ஓங்குக புலமை.
அரசி [புன்னகையுடன்] : வருக புலவரே. வருக [என்று வரவேற்று] திடீரென்று நான் அழைத்தது, உமக்கு வியப்பைத் தந்ததோ?
புலவர் [இல்லையென்று தலையாட்டி] : வேண்டா வெறுப்பாக இருந்தது.
அரசி : ஏனப்படி?
புலவர் : காரணம் புரியவில்லை
அரசி : புரியச் சொல்கிறேன். உமது புலமையின் திறமையைப் பரிசோதிக்கவே உம்மை இங்கே அழைத்தேன்.
புலவர் [சிரித்து] : ஹா ஹா .... எனது புலமையை சோதிக்கும் அளவுக்குப் புலமையில் தேர்ச்சி பெற்ற பாவலன் இங்கு யாரோ?
புலவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார் கர்வமாக.
அரசி : சகலரும் இங்கு சகல கலைகளும் பயின்றவர்கள்.
புலவர் : [கிண்டலாக] ஆ... மகிழ்ச்சி. வினாக்களைக் கேட்டால் விடை சொல்லக் காத்திருக்கிறேன்.
அரசி : தளபதியாரே [ என்று ப்ரதம தளபதியைப் பார்க்கிறார்]
ப்ரதம தளபதி : [புலவரைப் பார்த்து] உமது ஊர்?
புலவர் : இதே ஊர்.
ப்ரதம தளபதி : பெயர்?
புலவர் : [நடந்துகொண்டே பதிலளிக்கிறார்] வித்யாபதி.
ப்ரதம தளபதி : தாய் தந்தையர்?
புலவர் : தாய் இல்லை, தந்தை உண்டு
ப்ரதம தளபதி : உற்றார் உறவினர்?
புலவர் : இல்லை
ப்ரதம தளபதி : சகோதரர்?
புலவர் : அனாதை
ப்ரதம தளபதி : உமக்குத் தொழில்?
புலவர் : எமக்குத் தொழில் கவிதை.
ப்ரதம தளபதி : அடுத்து?
புலவர் : ஆண்டவன் தொண்டு
ப்ரதம தளபதி : இதற்கு முன்?
புலவர் : பிறப்பால் ஊமை.
ப்ரதம தளபதி : பேச்சு வந்தது?
புலவர் : கலைவாணியின் அருளால்.
ப்ரதம தளபதி : [அலட்சியமாக] ஹே ஹே [அரசியைப் பார்த்து] நம்பத் தகாதது.
புலவர் : [அவரும் அலட்சியமாக] ஹே ஹே ... கோழை வீரனாகி, தளபதியாக வீற்றிக்கும்போது. ஊமை புலவனாகிப் பேசுவது நம்ப முடியவில்லையோ?
ப்ரதம தளபதி : ம்ம்ம்ம்ம்ம், அடக்கமாகப் பேசும்.
புலவர் : [கையை அமர்த்தி] அமைதியாகக் கேளும்.
அரசி : வித்தையிலே மெத்தப் படித்து, வினாக்களுக்கு அடுக்கடுக்காக விடை பகரும் புலவர் வித்யாபதி,
அரசி இதைக் கூறிக் கொண்டிருக்கும்போதே புலவர் அரசியின் அருகில் சென்று நிற்கிறார்.
புலவர் : அரசி
அரசி : ஆட்சிக்கிலக்கணம்?
புலவர் : ஆணவமற்ற அரசு.
அரசி : புலவனின் உரிமை?
புலவர் : சுதந்திரப் பறவை.
அரசி : இதயத்தை மகிழ்விப்பது?
புலவர் : குழந்தையின் மழலை
அரசி : வேதனை தருவது?
புலவர் : நண்பனின் பிரிவு.
அரசி : நட்புக்குயர்வு?
புலவர் : இடுக்கண் களைவது.
அரசி : எண்ணக்கூடாதது ?
புலவர் : செல்வத்தின் செருக்கு [அரசியைச் சுட்டிக்காட்டுகிறார்]
அரசி : பொருளில்லாதவர்க்கு?
புலவர் : இவ்வுலகமட்டும் இல்லை.
அரசி : அருளில்லாதவர்க்கு?
புலவர் : எவ்வுலகமுமில்லை.
அரசி : எங்கும் வேண்டுவது?
புலவர் : ஒழுக்கத்தின் உயர்வு.
அரசி : உயர்வுக்கு வழி?
புலவர் : உண்மையும், சத்தியமும்.
ப்ரதம தளபதி : அழியாது நிற்பது?
புலவர் : கவிஞனின் காவியம்
அரசி : அழிந்து விடுவது?
புலவர் : நிலையற்ற செல்வம்
ப்ரதம தளபதி : வீரருக்கு அழகு?
புலவர் : பேச்சைக் குறைப்பது.
ப்ரதம தளபதி : புலவனுக்கு முடிவு?
புலவர் : பொன்னேட்டில் இருப்பது.
அரசி : புவியாள்பவர் முடிவு?
புலவர் : முடிசார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்.
ப்ரதம தளபதி : சகிக்க முடியாதது?
புலவர் : பச்சைக் குழந்தையின் அழுகை
தளபதி : தாள முடியாதது?
புலவர் : பத்தினிப் பெண்ணின் சாபம்
தளபதி : கேட்கத் தகாதது ?
புலவர் : [தளபதியின் முகத்தின் நேரே கையை நீட்டி] தகுதியற்ற கேள்வியும், அர்த்தமற்ற பதிலும்.
ப்ரதம தளபதி : பார்க்க முடியாதது?
புலவர் : அடக்கமில்லாமை
அரசி : அதற்குதாரணம் ?
புலவர் : [அரசியைச் சுட்டிக்காட்டி] உங்களது ஆட்சி.
ப்ரதம தளபதி : [கோபமா எந்திரிச்சு] வித்யாபதி
பிரதம தளபதியும், தளபதியும் கோபமாக எழுகிறார்.
அரசி இருவரையும் உட்காருமாறு சைகை காட்டுகிறார். இருவரும் அமர்கின்றனர்.
அரசி : வித்யாபதி, உமது புலமையின் திறமையைப பாராட்டுகிறேன். இன்றுமுதல், உம்மை எமது ஆஸ்தான புலவனாக நியமிக்க முடிவு கட்டியிருக்கிறேன்.
புலவர் : நீங்கள் முடிவு கட்டியிருக்கலாம். ஆனால் முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
அரசி : ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?
புலவர் : ஆண்டவன் சன்னிதானத்திற்கே எங்களை அர்ப்பணித்துக்கொண்ட பரம்பரை நாங்கள். தெய்வத்தொண்டே திருத்தொண்டாக நினைத்து, இறைவனுக்கடியவனாக இருக்கும் நான், இந்த அரசுக்கு அடிமையாக மாட்டேன்.
ப்ரதம தளபதி : [கோபமா கத்துகிறார்] ஆணவம் படைத்த புலவன் நீ. எப்போது எமது அரசியின் கட்டளையை மதிக்கத் தவறினாயோ, அப்போதே உனக்கு இங்கு ஆஸ்தான புலவனாக அமரும் யோக்யதை இல்லையென்று முடிவு கட்டிவிட்டோம். போகட்டும். அழைத்த மரியாதைக்காக, நாங்கள் அனைவரும் கேட்க, அரசியைப் பாராட்டி ஒரேயொரு கவி பாடிவிட்டு போ.
புலவர் : நரஸ்துதி......... பாடுவதில்லை.
அரசி : எப்படி?
புலவர் : இறைவனைப் பாடும் வாயால், இடையே தோன்றி மறையும் இந்த மனித ஜென்மங்களைப் பாடுவதில்லை.
ப்ரதம தளபதி : பாடாமல் உன்னை விடப்போவதில்லை.
புலவர் : இந்த பலாத்காரத்தைக் கண்டு நான் பயப்படப்போவதில்லை.
தளபதி : உன்னைப் பணிய வைக்கிறோமா இல்லையா பார்.
புலவர் : உங்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேனா இல்லையா பாருங்கள்.
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3719
இணைந்தது : 03/12/2017
மேற்கோள் செய்த பதிவு: 1261179heezulia wrote:03.03.2018
இது என்ன படம்னு யாருக்கும் தெரியலியா? சரி clue கொடுக்கிறேன். மகளாக நடிச்சது KR விஜயா. இப்ப தெரியுதா யோசிங்க!
Heezulia
05.03.2018
படம் : நாடகமே உலகம் 1979
வசனம் பேசினவங்க : KR விஜயா, MN ராஜம் & மேஜர் சுந்தரராஜன்
திரைக்கதை & வசனம் : ஆரூர்தாஸ்
பாட்டுக்கள் : கண்ணதாசன் & வாலி
ம்யூசிக் : V குமார்
டைரக் ஷன் : கிருஷ்ணன் பஞ்சு
Heezulia
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3719
இணைந்தது : 03/12/2017
19.03.2018
பேசியவங்க : மீனா & ராஜு
ஒரு ஆஃபிஸ். Phone பெல் அடிக்குது. தன் ஸீட்ல இருந்து எந்திரிச்சு, phone அடிக்கிற இடத்துக்கு வந்து ஃபோனை எடுக்கிறான் ராஜு.
ராஜு : ஹலோ.......
அடுத்த முனையில் ஒரு பெண்.
மீனா : மீனா பேசுறேன்.
ராஜு : மீனாவா? வணக்கங்க.
மீனா : உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும். ஆஃபிஸ் முடிஞ்சதும் கொஞ்சம் வீட்டுக்கு வர்றீங்களா? ஸ்ரமம் ஒண்ணுல்லியே.
ராஜு : ஸ்ரமமா? எனக்கா? ஹ்ஹ, அப்டி ஒண்ணுல்லீங்க. நிச்சயமா வர்றேன். கண்டிப்பா வர்றேங்க. அதவிட எனக்கென்ன வேல, அ? சரி, நன்றி.
ராஜு வர்றேன்னு சொல்லிட்ட சந்தோஷத்தில, படுக்கையில சந்தோ...........ஷமா புரள்றா. ராஜு தன் ஸீட்ல உக்காந்து யோசிக்கிறான். “ம்ம், எதுக்காக இருக்கும்?”
ராஜு உக்காந்திருந்தது ரோலிங் சேர். சேர்ல ஆடிட்டே யோசனை.
“ஒரு வேள வேலுவ பத்தி இருக்குமா? ப்ச்”
எந்திருச்சு போறான்.
அடுத்த ஸீன்.
மீனா வீட்ல, அலங்காரம் செஞ்சு, ட்ரெஸ்ஸ மாத்திட்டு, வெக்கப்பட்டு சிரிக்கிறா. ட்ரெஸ்ஸிங் டேபிள்லே இருந்து எந்திரிச்சு, மறுபடியும் படுக்கையில் விழுந்து தலவாணியை பிடிச்சு, அங்கயும் ஒரு வெக்கம்.
மீனா வீட்டு முன்னால கார் வந்து நிக்கிது. ராஜு இறங்கி வீட்டுக்குள்ள வர்றான். ஒரு ரூமுகுள்ள வர்றான். அங்க மீனா வீணை வாசிச்சிட்டிருக்கா. அவன் ரசிச்சிட்டு நிக்கிறான். வீணையிசை முடிஞ்சுது. கை தட்டுறான்.
ராஜு : சபாஷ் சபாஷ்
மீனா : [மூஞ்சி நிறைய சிரிப்போட, பல்லெல்லாம் வாயாக] வாங்க, முந்தியே வந்திட்டீங்களா?
வீணையை எடுத்து வச்சுட்டு, எந்திரிச்சு வர்றா.
பின்னே என்ன, வீணையை தூக்கிட்டா வருவா?
ராஜு : அந்த அதிர்ஷ்ட்டம் எனக்கு கெடக்கல.
மீனா : அப்டீன்னா?
ராஜு : உங்க விரல் அந்த வீணைல ஏத்தின நாதத்த, என்னால முழுஸ்ஸா கேட்டு ரசிக்க முடியல. அ....., நான் வந்ததுல.......... உங்க வாசிப்பு தட பட்ருக்கும்ன்னு நெனக்கிறேன்.
மீனா : இல்ல இல்ல, உங்க வருகைய வீணாக்க கூடாதுன்னு, நாந்தான் வீணையை நிறுத்திட்டேன். நிக்கிறீங்களே, வாங்க வாங்க, வாங்க. உக்காருங்க.
ராஜு : தாங்க்ஸ்.
chairல உக்கார்றான். மீனா உள்ள போயி, தன் அலங்காரத்தை ஒரு தடவை சரி செஞ்சுட்டு, ஏற்கனவே ட்ரேல எடுத்து வச்சிருந்த பலகாரங்களை கொண்டு வர்றா. ராஜு முன்னால அந்த ட்ரேயை வைக்கும்போது, முந்தானை நழுவி விழுது. அவன் தலை குனியிறான். அவள் முந்தானையை சரி செஞ்சுட்டு, “சாப்புடுங்க” ன்னு சொல்றா.
ராஜு : இவ்வளயுமா?
மீனா : அப்பா ஊருக்கு போனதுக்கப்றம், இந்தப் பக்கமே ஒங்கள காணமே.
ராஜு : ஆஃபிஸ்ல வேல நெறைய இருந்துது. அதனால வரமுடியல. அ, அத பத்தி நீங்க கவலபட வேண்டாம்.
மீனா : எத பத்தி?
ராஜு : அ...,டிஸ்மிஸ் செய்யப்பட்ட வேலு விஷயமா பேசத்தானே வரசொன்னீங்க?
மீனா : இல்லியே, அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அது கம்பெனி விஷயமில்ல. அதிர்கட்டும், அப்பா ஊர்க்கு போம்போது, ஏதாவது சொந்த விஷயமா சொன்னாங்களா?
ராஜு : ஓஹோ, ஆமா, அ... ஒங்க சம்பந்தமா அப்பா சொல்லிட்டு போய்ருக்காரு.
அவள் வெக்கப்பட்டு : ஓ, சொல்லிட்டாங்களா.....? பாத்தீங்களா, இந்த விஷயம் நம்ள தவ்ற வேற யாருக்கும் தெரியக்கூடாதுன்னு என்கிட்டே சொல்லிட்டு, உங்ககிட்ட சொல்லிர்காரு. ஆமா, அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?
ராஜு : நான் என்ன சொல்றது? மொதலாளி உத்ரவ தட்ட முடியுமா? ஆகட்டும்னு சொன்னேன்.
மீனா : தேதிய பத்தி எதாவது அப்பா சொன்னாங்களா?
ராஜு : சொன்னாங்க, கல்கத்தாவிலேருந்து பொறப்பட்றதுக்கு முந்தி, தேதிய தெரிவிக்றேன்னு சொன்னாங்க.
மீனா : ஒங்க ட்ரெஸ்ஸ பத்தி, நீங்க கவலபடவே..... கூடாது. எல்லாம் நாந்தான் செலக்ட் பண்ணுவேன்.
ராஜு : [ஆச்சரியம் & அதிர்ச்சி] ட்ரெஸ்ஸா, செலக் ஷனா? என்ன சொல்றீங்க?
மீனா கொஞ்சலா : வெளையாட்டு போதும்.
ராஜு : உண்மயாத்தான் சொல்றேன். நீங்க பேஸ்றது எனக்கு வெளங்கல. தயவுசெய்து கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.
மீனா : சர்தாம்போங்க. நம்ம கல்யாண விஷயத்த பத்தி, அப்பா ஏதாவது ஒங்ககிட்ட சொன்னாங்களான்னுதான் கேட்டேன். நீங்ககூட ஆமான்னு சொன்னீங்களே.
அவன் எந்திரிக்கிறான்.
ராஜு : இல்லியே, ஒங்கள பத்திரமா பாத்துக்கும்படி மொதலாளி சொல்லிட்டு போனாரு. அதத்தான் சொன்னேன். நீங்கதான் தவறா புரிஞ்சிரிக்கீங்க.
மீனா : என்ன, தவறா? நான் உங்கள கல்யாணம் செய்துக்க நெனச்சுது தவறா?
ராஜு : மிகப்பெரிய தவறு. நான் ஏற்கனவே காதலிச்சவன், காதலிக்கப்பட்டவன். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேத்த மாதிரி, காதல மாத்திக்க முடியாது மீனா. மாத்திக்க முடியாது.
மீனா : அப்படி சொல்லாதீங்க. ஒங்கள வச்சு, நான் கட்டிருக்கிற காதல் கோட்டையை நீங்களே இடிச்சிறாதீங்க.
அவன் ரூமை விட்டு வெளிய வர்றான்.
மீனா : ராஜு
வெளிய வந்துட்டான். அவள், அவன் பின்னாலேயே ஓடி வர்றா.
மீனா : ராஜு, ராஜு. ராஜு.
ஓடி ஓடி வந்து ராஜுவுக்கு முன்னால வந்து நிக்கிறா.
மீனா : ராஜு, உங்களுக்காக நான் எதயும் செய்ய தயாரா இருக்கேன். நீங்கதான் எனக்கு பெருசு.
ராஜு : எனக்கு என் காதல் பெருசு. இத எதுக்காகவும், யாருக்காகவும் அத விட்டு கொடுக்க முடியாது.
அவன் மாடியிலிருந்து கீழ எறங்கி வரான். மீனா அழுதுட்டே நிக்கிறா. அப்புறமா அவன் பின்னாலேயே “ராஜு, ராஜு” ன்னு ஓடி வந்து, அவன் முன்னால வந்து நிக்கிறா.
மீனா : ராஜு, ஏன்நெலம தெரியாம என்னென்னமோ பேசுறீங்களே. நீங்க இல்லேன்னா எனக்கு வாழ்வே கெடயாது. நீங்க வெறுத்துட்டா, நான் சாஹ்றத தவிர வேற வழியே இல்ல ராஜு, வழியே இல்ல.
ராஜு [அமைதியாக] : மீனா, உங்க நெலமக்காக நான் ரோம்.......ப அனுதாபபட்றேன். மத்தவங்க விருப்பத்த தெரிஞ்சிக்காம தானே ஒரு முடிவுக்கு வர்றது, அதுக்காக போராட்றது, பிறர பலவந்தப்படுத்றது, பிறகு பலியாஹ்றது. ச்சு, ச்சு, ச்சு, ச்சு, இது எப்படி ஞாயமா இருக்கு முடியும்?
ராஜு இப்டி சொல்லிட்டு வீட்டுக்கு வெளியே போறான். மீனா “ராஜு, ராஜு" ன்னு சொல்லிட்டே அவளும் பின்னால போறா. ராஜு வாசல் வரைக்கும் போயி, திரும்பி அவளை பார்க்கிறான்.
ராஜு : மீனா, உங்கள வேண்டி கேட்டுக்கிறேன். தயவுசெய்..........து என்ன மறந்துர்ங்க.
மீனா சிலையாய் நிற்க, ராஜு போய்ட்டான்.
இப்ப சொல்லுங்க. மீனாவும், ராஜுவும் யாரு யாரு? எந்த படத்தில இந்த வசனங்கள்? பதில் வருமா, வராதா?
Heezulia
பேசியவங்க : மீனா & ராஜு
ஒரு ஆஃபிஸ். Phone பெல் அடிக்குது. தன் ஸீட்ல இருந்து எந்திரிச்சு, phone அடிக்கிற இடத்துக்கு வந்து ஃபோனை எடுக்கிறான் ராஜு.
ராஜு : ஹலோ.......
அடுத்த முனையில் ஒரு பெண்.
மீனா : மீனா பேசுறேன்.
ராஜு : மீனாவா? வணக்கங்க.
மீனா : உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும். ஆஃபிஸ் முடிஞ்சதும் கொஞ்சம் வீட்டுக்கு வர்றீங்களா? ஸ்ரமம் ஒண்ணுல்லியே.
ராஜு : ஸ்ரமமா? எனக்கா? ஹ்ஹ, அப்டி ஒண்ணுல்லீங்க. நிச்சயமா வர்றேன். கண்டிப்பா வர்றேங்க. அதவிட எனக்கென்ன வேல, அ? சரி, நன்றி.
ராஜு வர்றேன்னு சொல்லிட்ட சந்தோஷத்தில, படுக்கையில சந்தோ...........ஷமா புரள்றா. ராஜு தன் ஸீட்ல உக்காந்து யோசிக்கிறான். “ம்ம், எதுக்காக இருக்கும்?”
ராஜு உக்காந்திருந்தது ரோலிங் சேர். சேர்ல ஆடிட்டே யோசனை.
“ஒரு வேள வேலுவ பத்தி இருக்குமா? ப்ச்”
எந்திருச்சு போறான்.
அடுத்த ஸீன்.
மீனா வீட்ல, அலங்காரம் செஞ்சு, ட்ரெஸ்ஸ மாத்திட்டு, வெக்கப்பட்டு சிரிக்கிறா. ட்ரெஸ்ஸிங் டேபிள்லே இருந்து எந்திரிச்சு, மறுபடியும் படுக்கையில் விழுந்து தலவாணியை பிடிச்சு, அங்கயும் ஒரு வெக்கம்.
மீனா வீட்டு முன்னால கார் வந்து நிக்கிது. ராஜு இறங்கி வீட்டுக்குள்ள வர்றான். ஒரு ரூமுகுள்ள வர்றான். அங்க மீனா வீணை வாசிச்சிட்டிருக்கா. அவன் ரசிச்சிட்டு நிக்கிறான். வீணையிசை முடிஞ்சுது. கை தட்டுறான்.
ராஜு : சபாஷ் சபாஷ்
மீனா : [மூஞ்சி நிறைய சிரிப்போட, பல்லெல்லாம் வாயாக] வாங்க, முந்தியே வந்திட்டீங்களா?
வீணையை எடுத்து வச்சுட்டு, எந்திரிச்சு வர்றா.
பின்னே என்ன, வீணையை தூக்கிட்டா வருவா?
ராஜு : அந்த அதிர்ஷ்ட்டம் எனக்கு கெடக்கல.
மீனா : அப்டீன்னா?
ராஜு : உங்க விரல் அந்த வீணைல ஏத்தின நாதத்த, என்னால முழுஸ்ஸா கேட்டு ரசிக்க முடியல. அ....., நான் வந்ததுல.......... உங்க வாசிப்பு தட பட்ருக்கும்ன்னு நெனக்கிறேன்.
மீனா : இல்ல இல்ல, உங்க வருகைய வீணாக்க கூடாதுன்னு, நாந்தான் வீணையை நிறுத்திட்டேன். நிக்கிறீங்களே, வாங்க வாங்க, வாங்க. உக்காருங்க.
ராஜு : தாங்க்ஸ்.
chairல உக்கார்றான். மீனா உள்ள போயி, தன் அலங்காரத்தை ஒரு தடவை சரி செஞ்சுட்டு, ஏற்கனவே ட்ரேல எடுத்து வச்சிருந்த பலகாரங்களை கொண்டு வர்றா. ராஜு முன்னால அந்த ட்ரேயை வைக்கும்போது, முந்தானை நழுவி விழுது. அவன் தலை குனியிறான். அவள் முந்தானையை சரி செஞ்சுட்டு, “சாப்புடுங்க” ன்னு சொல்றா.
ராஜு : இவ்வளயுமா?
மீனா : அப்பா ஊருக்கு போனதுக்கப்றம், இந்தப் பக்கமே ஒங்கள காணமே.
ராஜு : ஆஃபிஸ்ல வேல நெறைய இருந்துது. அதனால வரமுடியல. அ, அத பத்தி நீங்க கவலபட வேண்டாம்.
மீனா : எத பத்தி?
ராஜு : அ...,டிஸ்மிஸ் செய்யப்பட்ட வேலு விஷயமா பேசத்தானே வரசொன்னீங்க?
மீனா : இல்லியே, அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அது கம்பெனி விஷயமில்ல. அதிர்கட்டும், அப்பா ஊர்க்கு போம்போது, ஏதாவது சொந்த விஷயமா சொன்னாங்களா?
ராஜு : ஓஹோ, ஆமா, அ... ஒங்க சம்பந்தமா அப்பா சொல்லிட்டு போய்ருக்காரு.
அவள் வெக்கப்பட்டு : ஓ, சொல்லிட்டாங்களா.....? பாத்தீங்களா, இந்த விஷயம் நம்ள தவ்ற வேற யாருக்கும் தெரியக்கூடாதுன்னு என்கிட்டே சொல்லிட்டு, உங்ககிட்ட சொல்லிர்காரு. ஆமா, அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?
ராஜு : நான் என்ன சொல்றது? மொதலாளி உத்ரவ தட்ட முடியுமா? ஆகட்டும்னு சொன்னேன்.
மீனா : தேதிய பத்தி எதாவது அப்பா சொன்னாங்களா?
ராஜு : சொன்னாங்க, கல்கத்தாவிலேருந்து பொறப்பட்றதுக்கு முந்தி, தேதிய தெரிவிக்றேன்னு சொன்னாங்க.
மீனா : ஒங்க ட்ரெஸ்ஸ பத்தி, நீங்க கவலபடவே..... கூடாது. எல்லாம் நாந்தான் செலக்ட் பண்ணுவேன்.
ராஜு : [ஆச்சரியம் & அதிர்ச்சி] ட்ரெஸ்ஸா, செலக் ஷனா? என்ன சொல்றீங்க?
மீனா கொஞ்சலா : வெளையாட்டு போதும்.
ராஜு : உண்மயாத்தான் சொல்றேன். நீங்க பேஸ்றது எனக்கு வெளங்கல. தயவுசெய்து கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.
மீனா : சர்தாம்போங்க. நம்ம கல்யாண விஷயத்த பத்தி, அப்பா ஏதாவது ஒங்ககிட்ட சொன்னாங்களான்னுதான் கேட்டேன். நீங்ககூட ஆமான்னு சொன்னீங்களே.
அவன் எந்திரிக்கிறான்.
ராஜு : இல்லியே, ஒங்கள பத்திரமா பாத்துக்கும்படி மொதலாளி சொல்லிட்டு போனாரு. அதத்தான் சொன்னேன். நீங்கதான் தவறா புரிஞ்சிரிக்கீங்க.
மீனா : என்ன, தவறா? நான் உங்கள கல்யாணம் செய்துக்க நெனச்சுது தவறா?
ராஜு : மிகப்பெரிய தவறு. நான் ஏற்கனவே காதலிச்சவன், காதலிக்கப்பட்டவன். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேத்த மாதிரி, காதல மாத்திக்க முடியாது மீனா. மாத்திக்க முடியாது.
மீனா : அப்படி சொல்லாதீங்க. ஒங்கள வச்சு, நான் கட்டிருக்கிற காதல் கோட்டையை நீங்களே இடிச்சிறாதீங்க.
அவன் ரூமை விட்டு வெளிய வர்றான்.
மீனா : ராஜு
வெளிய வந்துட்டான். அவள், அவன் பின்னாலேயே ஓடி வர்றா.
மீனா : ராஜு, ராஜு. ராஜு.
ஓடி ஓடி வந்து ராஜுவுக்கு முன்னால வந்து நிக்கிறா.
மீனா : ராஜு, உங்களுக்காக நான் எதயும் செய்ய தயாரா இருக்கேன். நீங்கதான் எனக்கு பெருசு.
ராஜு : எனக்கு என் காதல் பெருசு. இத எதுக்காகவும், யாருக்காகவும் அத விட்டு கொடுக்க முடியாது.
அவன் மாடியிலிருந்து கீழ எறங்கி வரான். மீனா அழுதுட்டே நிக்கிறா. அப்புறமா அவன் பின்னாலேயே “ராஜு, ராஜு” ன்னு ஓடி வந்து, அவன் முன்னால வந்து நிக்கிறா.
மீனா : ராஜு, ஏன்நெலம தெரியாம என்னென்னமோ பேசுறீங்களே. நீங்க இல்லேன்னா எனக்கு வாழ்வே கெடயாது. நீங்க வெறுத்துட்டா, நான் சாஹ்றத தவிர வேற வழியே இல்ல ராஜு, வழியே இல்ல.
ராஜு [அமைதியாக] : மீனா, உங்க நெலமக்காக நான் ரோம்.......ப அனுதாபபட்றேன். மத்தவங்க விருப்பத்த தெரிஞ்சிக்காம தானே ஒரு முடிவுக்கு வர்றது, அதுக்காக போராட்றது, பிறர பலவந்தப்படுத்றது, பிறகு பலியாஹ்றது. ச்சு, ச்சு, ச்சு, ச்சு, இது எப்படி ஞாயமா இருக்கு முடியும்?
ராஜு இப்டி சொல்லிட்டு வீட்டுக்கு வெளியே போறான். மீனா “ராஜு, ராஜு" ன்னு சொல்லிட்டே அவளும் பின்னால போறா. ராஜு வாசல் வரைக்கும் போயி, திரும்பி அவளை பார்க்கிறான்.
ராஜு : மீனா, உங்கள வேண்டி கேட்டுக்கிறேன். தயவுசெய்..........து என்ன மறந்துர்ங்க.
மீனா சிலையாய் நிற்க, ராஜு போய்ட்டான்.
இப்ப சொல்லுங்க. மீனாவும், ராஜுவும் யாரு யாரு? எந்த படத்தில இந்த வசனங்கள்? பதில் வருமா, வராதா?
Heezulia
- GuestGuest
வழமை போல் சூப்பரோ சூப்பர். ஆனால் என்ன, படங்களே பார்க்க முடியவில்லை இதில் பழைய படங்கள் பற்றிக் கேட்டால்? துப்புக் கொடுக்கலாமே.
பதில் வரும் ஆனா வராது.
பதில் வரும் ஆனா வராது.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3719
இணைந்தது : 03/12/2017
21.03.2018
என்ன மூர்த்தி இது. இப்டி தப்பு தப்பா............. எழுதாதீங்க. அது அப்டி இல்ல.
வரும்..................... ஆனா வராது. இப்..................டி எழுதணும்.
வழமையான உங்க சூப்பரோ சூப்பருக்கு வழமையான என் நன்றியோ நன்றி.
துப்புதானே. MGR படம்.
நான் மட்டும் என்ன எல்லா................... படங்களையுமா பார்க்கிறேன். ஒரு 10% தான் பார்த்திருப்பேன்.
Heezulia
என்ன மூர்த்தி இது. இப்டி தப்பு தப்பா............. எழுதாதீங்க. அது அப்டி இல்ல.
வரும்..................... ஆனா வராது. இப்..................டி எழுதணும்.
வழமையான உங்க சூப்பரோ சூப்பருக்கு வழமையான என் நன்றியோ நன்றி.
துப்புதானே. MGR படம்.
நான் மட்டும் என்ன எல்லா................... படங்களையுமா பார்க்கிறேன். ஒரு 10% தான் பார்த்திருப்பேன்.
ஓஹோ அப்டியா. இதைத்தான் என் மத்த friends சொன்னாங்க. ஆனா காட்சியில்ல. படத்தையே போட்டிருக்காங்க. அதனால பதில் சொல்லிட்டாங்க.by SK on Wed Mar 21, 2018
இந்த காட்சி சமீபத்தில் சன் லைப் சானலில் பார்த்த நியாபகம் அனால் நடிகர்கள் படம் நினைவில் இல்ல
Heezulia
- GuestGuest
நானும் கண்டு பிடிச்சிட்டேன். வேலு -நம்பியார்.ஆனா லேட்டா கண்டு பிடித்தேன். SK முந்திட்டார்.அடுத்த தடவை முயற்சி பண்ணலாம்.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3719
இணைந்தது : 03/12/2017
21.03.2018
செந்தில், மூர்த்தி ரெண்டு பேரும் கரீ.......................ட்டா சொல்லிட்டீங்க.
மூர்த்தி லேட்டா சொன்னாலும், கரெக்கேட்டா சொல்லியிருக்கீங்கல்ல. அதுதானே முக்கியம்.
ரெண்டு பேருக்குமே வா............ழ்............த்..............து............க்............க.............ள்..........
Heezulia
செந்தில், மூர்த்தி ரெண்டு பேரும் கரீ.......................ட்டா சொல்லிட்டீங்க.
மூர்த்தி லேட்டா சொன்னாலும், கரெக்கேட்டா சொல்லியிருக்கீங்கல்ல. அதுதானே முக்கியம்.
ரெண்டு பேருக்குமே வா............ழ்............த்..............து............க்............க.............ள்..........
Heezulia
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1263270heezulia wrote:21.03.2018
செந்தில், மூர்த்தி ரெண்டு பேரும் கரீ.......................ட்டா சொல்லிட்டீங்க.
மூர்த்தி லேட்டா சொன்னாலும், கரெக்கேட்டா சொல்லியிருக்கீங்கல்ல. அதுதானே முக்கியம்.
ரெண்டு பேருக்குமே வா............ழ்............த்..............து............க்............க.............ள்..........
Heezulia
வா............ழ்............த்..............து............க்............க.............ள்
இப்படி ஆகா யார் கரணம்
- Sponsored content
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 12
|
|