புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
61 Posts - 50%
heezulia
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
15 Posts - 3%
prajai
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
9 Posts - 2%
jairam
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_m10டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம்


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Wed Dec 06, 2017 1:09 pm




டைபாய்டு காய்ச்சலைத் தடுப்போம்!
காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், ‘இது டைபாய்டு காய்ச்சலாக இருக்குமோ?’ என்று சாதாரண மக்களே சந்தேகப்படும் அளவுக்குப் பரவலானது டைபாய்டு காய்ச்சல். பொது சுகாதாரக் குறைவால் உருவாகின்ற தொற்றுநோய் இது. சுகாதாரம் மிகுந்த ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் டைபாய்டு காய்ச்சல் இல்லை. சுகாதாரம் குறைந்த வளரும் நாடுகளில்தான் இதன் பாதிப்பு அதிகம்.
மழைக் காலங்களில் சுற்றுப்புறம் மாசடைந்து, குடிநீரும், தெருச் சாக்கடை நீரும் கலந்து, நோய்க்கிருமிகள் வாழ வசதி செய்து தருவதால், செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரை டைபாய்டு காய்ச்சலுக்கான காலகட்டம்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரையும் பாதிக்கும் தன்மைகொண்டது டைபாய்டு.
நோய் வரும் வழி:
‘சால்மோனெல்லா டைபி’ (Salmonella typhi) எனும் பாக்டீரியாக் கிருமிகள், நம் குடல் திசுக்களைத் தாக்குவதால், இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. நோயாளியின் சிறுகுடலிலும், அதைச் சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வாழ்கின்றன. நோயாளியின் மலம் மற்றும் சிறுநீரில் இவை வெளியேறுகின்றன. இதன் காரணமாக அசுத்தமான இடங்களிலும், பொதுமக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் தெரு ஓரங்களிலும் இந்தக் கிருமிகள் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. இந்த இடங்களில் வாழும் ஈக்கள், இந்தக் கிருமிகளைச் சுமந்துகொண்டு வீட்டில் உள்ள பாதுகாப்பில்லாத குடிநீரிலும், உணவிலும் கலந்துவிடுகின்றன. இந்த அசுத்த உணவையும், குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு டைபாய்டு காய்ச்சல் வருகிறது.
ஏற்கனவே டைபாய்டு காய்ச்சல் வந்து குணமானவரின் குடலில் இந்தக் கிருமிகள் குறைந்தது மூன்று மாதங்கள்வரை வசிக்கும். அப்போது அந்த நபரின் மலத்திலும் சிறுநீரிலும் இவை வெளியேறி, அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும். இந்த நபர்களை ‘நோய்க் கடத்துநர்கள்’ (Carriers) என்கிறார்கள்.
அறிகுறிகள்:
ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரித்து, தலைவலியும் உடல் வலியும் கடுமையாகும். நாக்கில் வெண்படலம் தோன்றும். பசி இருக்காது. வாந்தி, வயிற்றுவலி வரும். உணவு சாப்பிட முடியாது. இதனால், சோர்வு அதிகரித்து, மயக்கம் வரும்.
சிக்கல்கள்:
இந்தக் காய்ச்சல் குழந்தைகளைப் பாதிக்கும்போது, ‘காய்ச்சல் வலிப்பு’ வரலாம். குடலில் ரத்தக்கசிவு, ரத்த வாந்தி ஏற்படலாம். நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைபெறத் தவறினால், ரத்தத்தில் இந்தக் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகரித்து, ‘நச்சுக் குருதிநிலை’ (Septicaemia) ஏற்படலாம். இதன் மூலம் உயிருக்கு ஆபத்து நேரலாம்.
தடுப்பு ஊசியும் தடுப்பு மாத்திரையும்:
டைபாய்டு காய்ச்சல் வராமல் தடுக்க, தடுப்பூசியும் தடுப்பு மாத்திரையும் உள்ளன. தசை ஊசியாகச் செலுத்தப்படும் டைபாய்டு தடுப்பூசியில் (Typhoid vaccine – Injection) ‘விஐ கேப்சுலர் பாலிசாக்கரைடு தடுப்பூசி (Vicapsular polysaccharide (Vi-PS) vaccine), ‘விஐபிஎஸ் டிடி இணைக் கூட்டுப்பொருள் தடுப்பூசி’ (Vi-PS TT Conjugate vaccine) என்று இரண்டு வகை உள்ளன. வாய் வழி விழுங்கப்படும் ‘டைபாய்டு தடுப்பு மாத்திரை’ (Typhoid vaccine – Oral) வெளிநாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் இந்த மாத்திரை தற்போது பயன்பாட்டில் இல்லை.
விஐபிஎஸ் தடுப்பூசி போடப்படும் முறை:
குழந்தைக்கு 2 வயது முடிந்ததும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும். ஒருமுறை போடப்படும் தடுப்பூசியின் அளவு அரை மில்லி. இதைத் தசை ஊசியாகத் தொடை அல்லது புஜத்தில் போட்டுக்கொள்ளலாம். ஒருமுறை இதைப் போட்டுக்கொண்டால், 3 ஆண்டுகளுக்கு டைபாய்டு வருகின்ற வாய்ப்பு குறையும். ஆகவே, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.
விஐபிஎஸ் டிடி இணைக் கூட்டுப்பொருள் தடுப்பூசி:
இதன் வீரியமும் செயலாற்றலும் அதிகம் என்பதால், இந்தத் தடுப்பூசியைத்தான் இப்போது அதிகம் பயன்படுத்துகின்றனர். குழந்தைக்கு 9 மாதம் முடிந்ததில் இருந்து ஒரு வயதுக்குள் இதைப் போட்டுக்கொள்ளலாம். ஊக்குவிப்பு ஊசியாக குழந்தைக்கு 2 வயது முடிந்ததும் ஒருமுறை இதைப் போட்டுவிட வேண்டும்.
முக்கியத் தகவல் மற்றத் தடுப்பூசிகள் போடப்படும்போது அவற்றுடன் டைபாய்டு தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளலாம். தற்போது, குழந்தைகளுக்கு 9 மாதங்கள் முடிந்ததும் எம்.எம்.ஆர் தடுப்பூசி போடுவது உண்டு. அப்படிப் போடப்பட்ட குழந்தைக்கு 4 வாரங்கள் இடைவெளிவிட்டு டைபாய்டு தடுப்பூசியைப் போட வேண்டும்.
டைபாய்டு காய்ச்சல் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு 2 வாரங்களுக்கு முன்பு, டைபாய்டு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தடுப்பூசி வேலை செய்யும். இது தடுப்பு மாத்திரைக்கும் பொருந்தும். ‘ஆன்டிபயாட்டிக்’ மருந்துகளைச் சாப்பிடுபவர்கள், அவற்றைச் சாப்பிட்டு முடித்த பிறகு, குறைந்தது 3 நாட்கள் இடைவெளி விட்டு, தடுப்பு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
டைபாய்டு வந்தவருக்குத் தடுப்பூசி போடலாமா?
டைபாய்டு ஏற்பட்டவர்கள் கடந்த 3 வருடங்களுக்குள் டைபாய்டுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை எனில், டைபாய்டுக்கு முறைப்படி சிகிச்சை எடுத்துச் சரியான பிறகு 4 வாரங்கள் கழித்து இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
யாருக்குப் பயன்படுத்தக் கூடாது?
தடுப்பூசி அல்லது தடுப்பு மாத்திரைக்கு அலர்ஜி உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது. டெங்கு, மலேரியா போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அந்த நோய்கள் குணமான பிறகு பயன்படுத்தலாம்; தடுமம், சளி போன்ற சிறிய தொந்தரவுகள் இருக்கும்போதும் பயன்படுத்தலாம்.

பக்கவிளைவுகள்:
இந்தத் தடுப்பூசிக்கான பக்கவிளைவுகள் மிதமாகவே இருக்கும். ஊசி போடப்பட்ட இடத்தில் தோல் சிவப்பது, லேசான வலி, சிறிய வீக்கம், மிதமான காய்ச்சல், தலைவலி போன்ற தொல்லைகள் உண்டாகலாம். இவை தானாகவே சரியாகிவிடும்.
டைபாய்டு புள்ளி விவரம்
உலகில் வருடத்துக்கு இரண்டரைக் கோடிப் பேருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இவர்களில் 6 லட்சம் பேர் இறந்துவிடுகிறார்கள். இந்தியாவில் இந்தக் காய்ச்சல் ஏற்பட்ட பத்து நோயாளிகளில் மூன்று பேருக்கு இந்த நிலைமை ஏற்படுவதாக மருத்துவப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
வரவிடாமல் தடுக்க வழி!
டைபாய்டு காய்ச்சலை வரவிடாமல் தடுக்கத் தடுப்பு ஊசி அல்லது தடுப்பு மாத்திரை மட்டுமே போதாது. காரணம், இவற்றின் நோய் தடுக்கும் சக்தி 80 சதவிகிதம் மட்டுமே. எனவே, மற்றத் தடுப்பு வழிகளையும் பின்பற்ற வேண்டியது மிக அவசியம்.
கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
தெருக்களைக் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது.
குடிநீரை நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.
காய்கறி மற்றும் பழங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே சமையலுக்கும் சாப்பிடவும் பயன்படுத்த வேண்டும்.
சமைத்த உணவுகளை திறந்துவைக்கக் கூடாது. ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். திறந்தவெளிகளில் ஈக்கள் மொய்க்கும் வகையில் விற்கப்படும் உணவுகளையும் சாப்பிடக் கூடாது.
வீடுகளிலும் தெருக்களிலும் சுற்றுப்புறச் சுகாதாரம் காக்கப்பட வேண்டும்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக