புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
1 Post - 1%
Kavithas
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
1 Post - 1%
bala_t
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
1 Post - 1%
prajai
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
1 Post - 1%
M. Priya
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
296 Posts - 42%
heezulia
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
6 Posts - 1%
prajai
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
4 Posts - 1%
manikavi
 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_m10 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 20, 2017 6:18 am

 ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது! DS1KjFrRiCRQi92xQL2A+tamilan_3176521f

இந்திய இதழியல் வரலாற்றிலும், தமிழக அரசியல்
வரலாற்றிலும் பண்டிதர் அயோத்தி தாசரின் ‘தமிழன்’
இதழுக்குத் தனித்த இடமுண்டு.

இம்மண்ணுக்குப் பூர்வீக பவுத்தத்தையும், இம்மக்களுக்கு
‘தமிழன்’ எனும் அடையாளத்தையும், சாதிபேதமற்ற
திராவிட அரசியல் கோட்பாட்டைக் கொடுத்ததில் ‘தமிழன்’
இதழுக்கு முக்கியப் பங்குண்டு.

சென்னை ராயப்பேட்டையில் 19.6.1907 அன்று
‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் வார இதழைத் தொடங்கினார்
அயோத்தி தாசர். டேப்லாய்டு அளவில் 4 பக்கங்களில் அச்சான
இவ்விதழ், அன்றைக்குக் காலணாவுக்கு விற்கப்பட்டது.

‘ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என
இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக
அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்’ எனத் தன்
இதழுக்குப் பெயர்க் காரணம் கொடுத்தார் அயோத்தி தாசர்.

ஓராண்டுக்குப் பின் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க,
இதழின் பெயரில் இருந்த ‘ஒரு பைசா’ நீக்கப்பட்டு, ‘தமிழன்’
ஆனது. இதழ் அச்சடிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், கோலார்
தங்கவயல் வாசகர்கள் அயோத்தி தாசருக்குப் புதியதாக அச்சு
இயந்திரம் வாங்கிக்கொடுத்தனர்.

இதையடுத்து, சொந்தமாக ‘கவுதம சித்தார்த்தா’ அச்சகத்தை
நிறுவி, ‘தமிழ’னை இறுதிவரை புதன்கிழமை தவறாமல்
வெளியிட்டார்.

பவுத்தத்தின் குறியீடான தாமரையை முகப்பாகக் கொண்ட
‘தமிழன்’ இதழில் நவீன அரசியல், ஆய்வுக் கட்டுரை, பகுத்தறிவு,
சாதி ஒழிப்பு, பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு, வகுப்புவாரிப் பிரதி
நிதித்துவம், முற்போக்கு, பவுத்தம் போன்றவை குறித்த தீவிர
கருத்துகள் இடம்பெற்றன.

இலக்கியம், அறிவியல், மருத்துவம், விவசாயம், வானியல் அறிக்கை,
வாசகர் கேள்வி - பதில் உள்ளிட்டவையும் மூன்று பத்திகளில்
நெருக்கமான எழுத்தில், நேர்த்தியான வடிவமைப்புடன் பிரசுரமாகின.

சமகால அரசியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிய அயோத்தி தாசர்,
‘புத்தரது ஆதி வேதம், இந்திர தேச சரித்திரம், திருவள்ளுவர் சரித்திரம்’
உள்ளிட்ட தொடர்களையும் மரபான ஆய்வு முறையோடு
‘தமிழ’னில் எழுதினார்.

இதில் ஏ.பி.பெரியசாமிப் புலவர், தங்கவயல் ஜி.அப்பாதுரையார்
போன்ற தலித் பெரியார்களும், பேரா.லட்சுமி நரசு, எம்.சிங்காரவேலு
என பல தலித் அல்லாத அறிவுஜீவிகளும் தொடர்ந்து எழுதினர்.
இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோரிடம் இருந்து எழுந்த, முதல்
காத்திரமான உரிமைக் குரல் தமிழனுடையது.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு கடந்தும் ‘தமிழ’னுக்கு வாசகர்கள்
பெருகினர். ‘தமிழன்’ மூலமாகவே அவர் அனைத்து பவுத்த
சங்கங்களையும் ஒருங்கிணைத்து பவுத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்.
ஒருவேளை ‘தமிழன்’ ஆங்கிலத்தில் முழங்கியிருந்தால்,
தேசிய அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்!

5.5.1914 அன்று அயோத்தி தாசர் மரணிக்கும் தறுவாயில் தன் மகன்
பட்டாபிராமனை அழைத்து, ‘தமிழன்’ இதழைத் தொடர்ந்து
நடத்துமாறு பணித்தார். பட்டாபிராமனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த
‘தமிழன்’ மாதமிரு முறையாக மாறி, இடையில் நின்றது.

பின்னர், கோலார் தங்கவயலுக்கு இடம்பெயர்ந்த ‘தமிழன்’ இதழ்
ஜி.அப்பாத்துரையார், இ.என்.அய்யாக்கண்ணு புலவர், பி.எம்.ராஜரத்தினம்
ஆகியோரை ஆசிரியர் களாகக் கொண்டு சிறுசிறு இடை வேளைக்கு
நடுவே வெளிவந்தது. 1933-ல் ‘தமிழன்’ முற்றிலுமாக நின்றுபோனது.

நூற்றாண்டை நெருங்கும் தறுவாயில் மீண்டும் கண்டெடுக்கப்பட்ட
‘தமிழன்’ தற்போது தொகுப்புகளாகப் புத்துயிர் பெற்றுள்ளது.
எந்தெந்த நோக்கங்களுக்காக அயோத்தி தாசர் ‘தமிழன்’ இதழைத்
தொடங்கினாரோ, அந்தந்த நோக்கங்களை அடைய இன்றும் வழி
காட்டுகிறது!

(ஜூன்.19-ல் ‘தமிழன்’ இதழ் தொடங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆ
கின்றன.)
-
-------------------------

- இரா.வினோத், தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக