புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
சிவா | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2017 ஆங்கில புத்தாண்டு, பொது மற்றும் ராசி பலன்கள் !
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
-
ஆண்டின் முதல் தேதியில் எண் கணிதப்படி, 3 ஆக வருகிறது.
2017 ஆம் ஆண்டின் எண் 1 என்று வருகிறது. அதனால் 1 ஆம்
எண்ணுக்குரிய சூரியபகவானும் 3 ஆம் எண்ணுக்குரிய
குருபகவானும் இந்த புத்தாண்டில் முக்கியமானவர்களாக
கருதப்பட வேண்டும்.
இந்த ஆண்டு 26.1.2017 (வியாழக்கிழமை) இரவு 7.28 (ஐஎஸ்டி)
மணிக்கு சனி ஹோரையில் சனிபகவான் விருச்சிக
ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 7.4.2017
(வியாழக்கிழமை) பின்னிரவு 5.40 (ஐஎஸ்டி) மணிக்கு
(விடிந்தால் வெள்ளிக்கிழமை) சூரியஹோரையில் மூலம்
நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில் சனிபகவான் தனுசு ராசியில்
வக்கிரமடைகிறார்.
இந்த ஆண்டு 21.6.2017 (செவ்வாய்க்கிழமை) பின்னிரவு
4.49 (ஐஎஸ்டி) மணிக்கு சூரிய ஹோரையில் சனிபகவான்
அதிவக்கிர கதியில் விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
இங்கு சனிபகவான் 25.10.2017 வரை சஞ்சரித்துவிட்டு 26.10.2017
(வியாழக்கிழமை) பிற்பகல் 3.32 (ஐஎஸ்டி) மணியளவில் சூரிய
ஹோரையில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு
மறுபடியும் பெயர்ச்சி ஆகிறார்.
12.9.2017 (செவ்வாய்க்கிழமை) காலை 7.00 (ஐஎஸ்டி) மணிக்கு
செவ்வாய் ஹோரையில் குருபகவான் கன்னி ராசியிலிருந்து
துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
இங்கு 10.10.2018 வரை சஞ்சரித்துவிட்டு குருபகவான் 11.10.2018
(வியாழக்கிழமை) இரவு 7.20 (ஐஎஸ்டி) மணிக்கு சனிஹோரையில்
துலாம் ராசியை விட்டு விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
இந்த ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் இந்த சனி மற்றும்
குருபகவான்களின் சஞ்சாரத்தைக் கருத்தில் கொண்டும்
எழுதப்பட்டுள்ளது.
இந்த ஆங்கிலப் புத்தாண்டு ஜாதகத்தில் லக்னம் மற்றும்
தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்தில்
விரயாதிபதியான சூரியபகவானுடன் இணைந்து புத ஆதித்ய
யோகத்தைப் பெறுகிறார்.
புதபகவான் கேதுபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில்
தன் ஆட்சி வீடான மிதுன ராசியை அடைகிறார். சூரியபகவானும்
தன் ஆட்சி வீடான சிம்மராசியை அடைகிறார். புதபகவான்
கல்விக் காரகராவார். வியாபாரத்திற்கும் புதபகவான்
காரகராகிறார். இதனால் தொழில் துறை, பேச்சு, கணினி,
கணிதம், எழுத்துத்துறை போன்ற துறைகள் ஏற்றம் காணும்.
அதோடு நீதித் துறையிலும் நவீன மாற்றங்கள் உண்டாகும்.
பூர்வபுண்ணிய (ஐந்து) மற்றும் ருணம் (கடன்), ரோகம் (வியாதி),
சத்ரு (விரோதி) ஆகிய ஆறாம் வீட்டுக்கும் அதிபதியான சனி
பகவான் மூன்றாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று
லக்னாதிபதியின் சாரத்தில் (கேட்டை) நட்சத்திரத்தில் அமர்ந்து
நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
-
ஆண்டின் முதல் தேதியில் எண் கணிதப்படி, 3 ஆக வருகிறது.
2017 ஆம் ஆண்டின் எண் 1 என்று வருகிறது. அதனால் 1 ஆம்
எண்ணுக்குரிய சூரியபகவானும் 3 ஆம் எண்ணுக்குரிய
குருபகவானும் இந்த புத்தாண்டில் முக்கியமானவர்களாக
கருதப்பட வேண்டும்.
இந்த ஆண்டு 26.1.2017 (வியாழக்கிழமை) இரவு 7.28 (ஐஎஸ்டி)
மணிக்கு சனி ஹோரையில் சனிபகவான் விருச்சிக
ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். 7.4.2017
(வியாழக்கிழமை) பின்னிரவு 5.40 (ஐஎஸ்டி) மணிக்கு
(விடிந்தால் வெள்ளிக்கிழமை) சூரியஹோரையில் மூலம்
நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில் சனிபகவான் தனுசு ராசியில்
வக்கிரமடைகிறார்.
இந்த ஆண்டு 21.6.2017 (செவ்வாய்க்கிழமை) பின்னிரவு
4.49 (ஐஎஸ்டி) மணிக்கு சூரிய ஹோரையில் சனிபகவான்
அதிவக்கிர கதியில் விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
இங்கு சனிபகவான் 25.10.2017 வரை சஞ்சரித்துவிட்டு 26.10.2017
(வியாழக்கிழமை) பிற்பகல் 3.32 (ஐஎஸ்டி) மணியளவில் சூரிய
ஹோரையில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு
மறுபடியும் பெயர்ச்சி ஆகிறார்.
12.9.2017 (செவ்வாய்க்கிழமை) காலை 7.00 (ஐஎஸ்டி) மணிக்கு
செவ்வாய் ஹோரையில் குருபகவான் கன்னி ராசியிலிருந்து
துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
இங்கு 10.10.2018 வரை சஞ்சரித்துவிட்டு குருபகவான் 11.10.2018
(வியாழக்கிழமை) இரவு 7.20 (ஐஎஸ்டி) மணிக்கு சனிஹோரையில்
துலாம் ராசியை விட்டு விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
இந்த ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் இந்த சனி மற்றும்
குருபகவான்களின் சஞ்சாரத்தைக் கருத்தில் கொண்டும்
எழுதப்பட்டுள்ளது.
இந்த ஆங்கிலப் புத்தாண்டு ஜாதகத்தில் லக்னம் மற்றும்
தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்தில்
விரயாதிபதியான சூரியபகவானுடன் இணைந்து புத ஆதித்ய
யோகத்தைப் பெறுகிறார்.
புதபகவான் கேதுபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில்
தன் ஆட்சி வீடான மிதுன ராசியை அடைகிறார். சூரியபகவானும்
தன் ஆட்சி வீடான சிம்மராசியை அடைகிறார். புதபகவான்
கல்விக் காரகராவார். வியாபாரத்திற்கும் புதபகவான்
காரகராகிறார். இதனால் தொழில் துறை, பேச்சு, கணினி,
கணிதம், எழுத்துத்துறை போன்ற துறைகள் ஏற்றம் காணும்.
அதோடு நீதித் துறையிலும் நவீன மாற்றங்கள் உண்டாகும்.
பூர்வபுண்ணிய (ஐந்து) மற்றும் ருணம் (கடன்), ரோகம் (வியாதி),
சத்ரு (விரோதி) ஆகிய ஆறாம் வீட்டுக்கும் அதிபதியான சனி
பகவான் மூன்றாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று
லக்னாதிபதியின் சாரத்தில் (கேட்டை) நட்சத்திரத்தில் அமர்ந்து
நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
-
சூரியனின் ஆதிக்க எண்ணாகிய ஒன்றாம் எண்ணிலும்,
கதிரவனின் நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் 2017ம் வருடம்
பிறப்பதால் அதிரடி அரசியல் நிகழ்வுகள் தினந்தோறும்
அரங்கேறும்.
எண் ஜோதிடப்படி விதி எண்ணாக குருவின் ஆதிக்கம் கொண்ட
மூன்றாம் எண் வருவதால் பணக்காரர்கள், பதுக்கல்காரர்கள்
பாதிக்கப்படுவார்கள். பஞ்சபட்சி சாஸ்திரப்படி மயில் துயில்
கொள்ளும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் ஊர்க்குருவிகள்
பருந்துகளாக தம்மை காட்டிக்கொள்ளும்.
திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னத்தில் இந்த
ஆண்டு பிறப்பதால் கேமரா, டிவி, மொபைல், லேப்டாப் போன்ற
எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும்.
தனக்காரகன் குரு தனது பகைக்கிரகமான புதன் வீட்டில் ஆகஸ்ட்
மாதம் வரை தொடர்வதால் அதுவரை பணத்தட்டுப்பாடு இருக்கும்.
பதுக்கல் தங்கம் பிடிபடும். வங்கிகளில் கடன் பெற கடுமையான
விதிமுறைகள் பிறப்பிக்கப்படும்.
ஹவாலா மோசடிகள் தடுக்கப்படும். பாலியல் வல்லுறவுக்
குற்றத்திற்கான தண்டனைகள் கடுமையாக்கப்படும். 10-ம் மற்றும்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் முறை
கணினிமயமாக்கப்படும்.
28.1.2017 முதல் 5.6.2017 வரை சுக்ரன் மீன ராசியிலேயே அமர்வதால்
சினிமாத் தொழில் பாதிப்படையும். புகழ்பெற்ற படத்தயாரிப்பாளர்கள்
மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டமடைவர்.
பழைய முன்னணி இயக்குனர்கள், நடிகர், நடிகைகளை விட புது
முகங்கள் பிரபலமாவார்கள். கலைஞர்கள் பாதிப்படைவார்கள்.
அதிவேக அதிநவீன வாகனங்கள் மற்றும் சுற்றுச்சுழலை பாதிக்காத
மின்சாரம் மற்றும் சூரிய ஆற்றலில் இயங்கும் வாகனங்கள்
விற்பனைக்கு வரும்.
செவ்வாயின் போக்கையும், சனியின் சஞ்சாரத்தையும் அடிப்படையாகக்
கொண்டு பார்க்கும்போது பிப்ரவரி மாதம் முதல் உச்ச நீதிமன்றத்திற்கும்,
மத்திய அரசிற்கும் உள்ள பனிப்போர் நீங்கும். காலியாக உள்ள நீதிபதி
பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்படும்.
ரியல் எஸ்டேட், பத்திரப்பதிவு மற்றும் கட்டுமானத்துறையில் ஊழல்களைத்
தடுக்க புதிய சட்டங்கள் அமலுக்கு வரும். புதிய மேம்பாலங்கள் மற்றும்
புதிய நகரங்கள் அமைக்கப்படும்.
அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு உதவும்.
பாகிஸ்தான், சீனாவின் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி தரப்படும்.
கிரிக்கெட்டில் மேலும் இந்தியா சாதிக்கும்.
10.4.2017முதல் 16.4.2017 வரை, 28.5.2017முதல் 4.6.2017வரை,
25.6.2017முதல் 3.7.2017 வரை, 23.7.2017முதல் 29.7.2017வரை,
19.8.2017முதல் 25.8.2017வரை, 13.9.2017முதல் 19.9.2017வரை,
9.10.2017முதல் 14.10.2017வரை, 1.11.2017முதல் 6.11.2017வரை,
17.11.2017முதல் 30.11.2017வரை உள்ள காலகட்டத்தில் புயல் சின்னம்
உருவாகி மழை பொழியும் வாய்ப்புள்ளது.
-
------------------------------
மேஷம்
எதிலும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களே! உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடன் பிரச்சினைகள் தீரும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு ராகு 5-ல் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். மகளுக்கு வரன் தேடும் போது மணமகனின் பழக்கவழக்கங்களை விசாரித்து முடிவெடுப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள்.
பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். கேது 11-ம் வீட்டில் தொடர்வதால் பணவரவு அதிகரிக்கும். பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தவர் களால் ஆதாயமடைவீர்கள். வி.ஐ.பிகள், தொழிலதிபர்களின் நட்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் இடத்திலும் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைப்பளு இருந்துக் கொண்டேயிருக்கும்.
வீண்பழிகளும் வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி, இரத்த அழுத்தம் வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும். மற்றவர்களுக்காக ஜாமீன், உத்தரவாதக் கையொப்பமிட வேண்டாம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் வீண் சச்சரவுகள் வரக்கூடும். முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆனால் 02.9.2017 முதல் குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்கவிருப்பதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.
தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தில், பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். ஆரோக்கியம் சீராகும். அடகிலிருந்த நகை, சொத்தையெல்லாம் மீட்க வழி, வகை பிறக்கும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.
சொந்தபந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். 14.12.2017 வரை சனி 8-ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். பெரிய நோய்கான அறிகுறிகளெல்லாம் இருப்பதைப் போல் தோன்றும். ஆனால் மருத்துவப் பரிசோதனை செய்யும் போது பெரிய பாதிப்புகள் இருக்காது. கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. 15.12.2017 முதல் சனி 9-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.
மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துப் பேசும் பக்குவம் உண்டாகும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். செப்டம்பர் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கப்போய் சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும்.
-
குடும்பத்தினருக்கு
ஆகஸ்ட் மாதம் வரை குரு சரியில்லாததால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பாங்க. கல்யாணம், உத்யோகம் கொஞ்சம் தள்ளிப்போகும் அதற்குப் பரிகாரமாக பக்கத்தில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் நவகிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் விளக்கேற்றுங்கள். ஆகஸ்ட் மாதத்திலிருந்து ராகு சரியில்லாததால் தாயாருடன் சின்னச் சின்ன மோதல் வரும். வண்டியை கவனமாக ஓட்டுங்கள் முடிந்தால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றுங்கள். வருடம் முழுக்க அஷ்டமத்துச் சனி இருப்பதால் நரசிம்மரை சனிக்கிழமைகளில் வணங்குங்கள்.
உங்கள் குடும்பத்தில் விருச்சிகம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், சிம்மம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் அதிகரிக்கும். மேலும் குடும்பத்தில் அனைவருக்கும் சுபிட்சம் உண்டாக கீழ்கண்ட சூரியகிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
எதிலும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்று நினைப்பவர்களே! உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடன் பிரச்சினைகள் தீரும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு ராகு 5-ல் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். மகளுக்கு வரன் தேடும் போது மணமகனின் பழக்கவழக்கங்களை விசாரித்து முடிவெடுப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள்.
பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். கேது 11-ம் வீட்டில் தொடர்வதால் பணவரவு அதிகரிக்கும். பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தவர் களால் ஆதாயமடைவீர்கள். வி.ஐ.பிகள், தொழிலதிபர்களின் நட்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் இடத்திலும் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைப்பளு இருந்துக் கொண்டேயிருக்கும்.
வீண்பழிகளும் வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி, இரத்த அழுத்தம் வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும். மற்றவர்களுக்காக ஜாமீன், உத்தரவாதக் கையொப்பமிட வேண்டாம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் வீண் சச்சரவுகள் வரக்கூடும். முக்கியக் கோப்புகளைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆனால் 02.9.2017 முதல் குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்கவிருப்பதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.
தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தில், பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். ஆரோக்கியம் சீராகும். அடகிலிருந்த நகை, சொத்தையெல்லாம் மீட்க வழி, வகை பிறக்கும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.
சொந்தபந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். 14.12.2017 வரை சனி 8-ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். பெரிய நோய்கான அறிகுறிகளெல்லாம் இருப்பதைப் போல் தோன்றும். ஆனால் மருத்துவப் பரிசோதனை செய்யும் போது பெரிய பாதிப்புகள் இருக்காது. கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. 15.12.2017 முதல் சனி 9-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும்.
மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துப் பேசும் பக்குவம் உண்டாகும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். செப்டம்பர் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கப்போய் சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும்.
-
குடும்பத்தினருக்கு
ஆகஸ்ட் மாதம் வரை குரு சரியில்லாததால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பாங்க. கல்யாணம், உத்யோகம் கொஞ்சம் தள்ளிப்போகும் அதற்குப் பரிகாரமாக பக்கத்தில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் நவகிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் விளக்கேற்றுங்கள். ஆகஸ்ட் மாதத்திலிருந்து ராகு சரியில்லாததால் தாயாருடன் சின்னச் சின்ன மோதல் வரும். வண்டியை கவனமாக ஓட்டுங்கள் முடிந்தால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றுங்கள். வருடம் முழுக்க அஷ்டமத்துச் சனி இருப்பதால் நரசிம்மரை சனிக்கிழமைகளில் வணங்குங்கள்.
உங்கள் குடும்பத்தில் விருச்சிகம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், சிம்மம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் அதிகரிக்கும். மேலும் குடும்பத்தில் அனைவருக்கும் சுபிட்சம் உண்டாக கீழ்கண்ட சூரியகிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
ரிஷபம்
கடந்து வந்த பாதையை மறக்காதவர்களே! உங்களுடைய 9-வது ராசியில்
இந்தாண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன்
பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள்.
முகப்பொலிவு, ஆரோக்யம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.
வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.
உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை
முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். 14.12.2017 வரை
ராசிக்கு 7-ம் வீட்டில் சனி நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள்.
குடும்ப அந்தரங்க விஷயங்களில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.
புதிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். யாருக்கும் ஜாமீன்,
உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும்
ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வருங்காலத்தை மனதில்
கொண்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள்
தலை தூக்கும். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.
மனைவி வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.
மகனுக்கோ, மகளுக்கோ வாழ்க்கைத்துணை தேடுபவர்கள் நிச்சயதார்த்தத்திற்கும்,
திருமணத்திற்கும் அதிகம் இடைவெளி தராமல் உடனே முடிப்பது நல்லது. யாருக்கும்
ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும்,
4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள்.
தாயாருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து செல்லும்.
அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். சிலர் வீடு
மாற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள். ஜுலை 27-ம் தேதி முதல் ராசிக்கு
9-ம் வீட்டில் கேது தொடர்வதால் பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும்.
தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை
சிகிச்சைகள் வந்து செல்லும். செலவுகள் அதிகமாகிக்கொண்டே போகும்.
ஆனால் ராகு 3-ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். தைரியம் கூடும்.
ஷேர் மூலம் பணம் வரும். வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வீட்டில்
தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். தைரியமாக
சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.
சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.
01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் கல்வியாளர்கள்,
அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும்.
குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்
கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும்.
குடும்பத்தினருடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை
செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகள்
உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள்.
உறவினர்கள் தேடி வருவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். ஆனால் 02.9.2017
முதல் குரு 6-ம் வீட்டில் அமர்வதால் சின்னச் சின்ன காரியங்களைக் கூட இரண்டு,
மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக்
கொள்ளாதீர்கள். சின்னச் சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். பழைய கடனை
நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். குடும்பத்தில், கணவன்,மனைவிக்குள்
ஈகோவால் பிரிவுகள் வரக்கூடும். எனவே அனுசரித்து போகப் பாருங்கள். உடல்
ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.
நோய்த் தொற்று வர வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி
லாபம் சம்பாதிப்பீர்கள். சின்னச் சின்ன நட்டங்கள் இருக்கும். உத்யோகத்தில்
தலைமைக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன்
இருக்கத்தான் செய்யும்.
-
குடும்பத்தினருக்கு
-
சனியின் போக்கு இந்த வருடம் முழுக்க சரியில்லாமல் இருப்பதால் சனிக்கிழமை
தோறும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள். முடிந்தால் வெற்றிலை
மாலை சாற்றுங்கள். அதனால் கணவர், பிள்ளைகளுடன் இருக்கும் கருத்து மோதல்கள்
விலகி நிம்மதி உண்டாகும். செப்டம்பர் மாதம் முதல் குரு மறைவதால் பிள்ளைகளுக்கு
வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அவசரம் வேண்டாம்.
பிள்ளைகளுக்கு எல்லாம் கிடைக்க ஸ்ரீரங்கநாதரை தாமரை மலர் தந்து வணங்குவது
நல்லது.
உங்கள் குடும்பத்தில் மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ,
பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், கன்னி,
மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில்
அனைவருக்கும் நல்லது நடக்க கீழ்கண்ட சந்திர கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை
பூஜையறையில் மாகோலமிட்டு திங்கட்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
-
-------------------------------------------------
மிதுனம்
தீவிர யோசனைக்குப் பின் முடிவெடுப்பவர்களே! 14.12.2017 வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே பலம் பெற்று நீடிப்பதால் பிரச்சனைகள் எதுவானாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானம் உயரும். வங்கிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வீடு வந்து சேரும். நாடாளுபவர்கள், வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
-
அவ்வப்போது பணப்பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி வந்து போகும். அ- செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள். ஆனால் மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். வேற்றுமதம், மாற்றுமொழி பேசுபவர்களால் உங்களது வாழ்க்கைத் தரம் ஒரு படி உயரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும்.
-
ஜுலை 27-ம் தேதி முதல் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் வீண் விரயம், அலைச்சல், பொருள் இழப்புகள் வந்து போகும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அதிகமாகும். இனம்புரியாத கவலைகள் வந்துபோகும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதிக்காதீர்கள்.
-
வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். ஆனால் 02.09.2017 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தங்க ஆபரணங்கள், இரத்தினங்கள் வாங்குவீர்கள். சொந்தபந்தங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். சொந்த ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.
-
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடி வரும். உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் தேக்க நிலை மாறும். வேலைச்சுமை குறையும்.
-
குடும்பத்தினருக்கு
-
ஜூலை மாதம் வரை ராகு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் கணவர் மற்றும் பிள்ளைளை நன்றாக வழி நடத்துவீர்கள். உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஆகஸ்ட் வரை குரு சரியில்லாததால் பணத்தட்டுப்பாட்டையும், உறவினர் பகைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் அந்த பாதிப்பு விலக வியாழக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது கேரட் கொடுங்கள்.
-
உங்கள் குடும்பத்தில் மேஷம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் சிம்மம், கன்னி, மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் அனைவருக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்க கீழ்கண்ட சுக்கிர கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
-
-----------------------------------------------
தீவிர யோசனைக்குப் பின் முடிவெடுப்பவர்களே! 14.12.2017 வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே பலம் பெற்று நீடிப்பதால் பிரச்சனைகள் எதுவானாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானம் உயரும். வங்கிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வீடு வந்து சேரும். நாடாளுபவர்கள், வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
-
அவ்வப்போது பணப்பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி வந்து போகும். அ- செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள். ஆனால் மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். வேற்றுமதம், மாற்றுமொழி பேசுபவர்களால் உங்களது வாழ்க்கைத் தரம் ஒரு படி உயரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும்.
-
ஜுலை 27-ம் தேதி முதல் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் வீண் விரயம், அலைச்சல், பொருள் இழப்புகள் வந்து போகும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அதிகமாகும். இனம்புரியாத கவலைகள் வந்துபோகும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதிக்காதீர்கள்.
-
வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். ஆனால் 02.09.2017 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தங்க ஆபரணங்கள், இரத்தினங்கள் வாங்குவீர்கள். சொந்தபந்தங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். சொந்த ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.
-
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடி வரும். உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் தேக்க நிலை மாறும். வேலைச்சுமை குறையும்.
-
குடும்பத்தினருக்கு
-
ஜூலை மாதம் வரை ராகு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் கணவர் மற்றும் பிள்ளைளை நன்றாக வழி நடத்துவீர்கள். உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஆகஸ்ட் வரை குரு சரியில்லாததால் பணத்தட்டுப்பாட்டையும், உறவினர் பகைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் அந்த பாதிப்பு விலக வியாழக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது கேரட் கொடுங்கள்.
-
உங்கள் குடும்பத்தில் மேஷம், விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் சிம்மம், கன்னி, மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் அனைவருக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்க கீழ்கண்ட சுக்கிர கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
-
-----------------------------------------------
கடகம்
கள்ளம் கபடமற்ற பேச்சால் கவர்பவர்களே! உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பொது விழாக்கள், கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் படபடப்பு, எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பிறர்மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும்.
வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மற்றவர்களை தாக்கிப் பேச வேண்டாம். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வதில் தடுமாற்றம் வரும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் தொடர்வதால் எதிலும் ஒருவித பயம், ஒற்றைத் தலை வலி, செரிமானக் கோளாறு, வலிப்பு வந்து செல்லும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். புதிது புதிதாக வரும் விளம்பரங்களை பார்த்து சோப்பு, பற்பசை, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். அலர்ஜி வரக்கூடும். விஷப் பூச்சிகளான பூரான், பாம்பு, தேள் கடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கவனம் தேவை.
கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். அவ்வப்போது பலவீனமாக உணருவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். கூடாப்பழக்க வழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும்.
விமர்சனங்கள் கண்டு அஞ்ச வேண்டாம். ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டிலேயே அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். அவருக்கு பார்வைக் கோளாறு, முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், அம்மான், அத்தைவழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். தந்தையாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்ப் பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அவ்வப்போது கனவு தொல்லையால் தூக்கம் குறையும்.
14.12.2017 வரை சனி 5ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி நன்கு விசாரித்து முடிக்கப்பாருங்கள். மகன் காரண காரியமேயின்றி கோபப்படுவார். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என்று ஆதங்கப்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 15.12.2017 முதல் 6ம் வீட்டில் சனிபகவான் அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கு மாறும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
--
குடும்பத்தினருக்கு
---
இந்த வருடம் முழுக்க ராகுவும், கேதுவும் உங்களுக்கு சரியில்லாததால் நீங்கள் சாதாரணமாகப் பேசுவது கூட குடும்பத்தில் உள்ள மாமியார், நாத்தனார் தவறாக புரிந்துக்கொள்வார்கள் இதுபோன்ற சங்கடங்கள் விலக அருகிலுள்ள புற்றுக்கோயிலுக்கு மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் சென்று விளக்கேற்றுங்கள். உங்கள் குடும்பத்தில் விருச்சிகம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் ரிஷபம், கன்னி, மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் நல்வாழ்வு அமைய கீழ்கண்ட குருபகவான் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
--
கள்ளம் கபடமற்ற பேச்சால் கவர்பவர்களே! உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பொது விழாக்கள், கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் படபடப்பு, எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பிறர்மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும்.
வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மற்றவர்களை தாக்கிப் பேச வேண்டாம். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வதில் தடுமாற்றம் வரும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் தொடர்வதால் எதிலும் ஒருவித பயம், ஒற்றைத் தலை வலி, செரிமானக் கோளாறு, வலிப்பு வந்து செல்லும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். புதிது புதிதாக வரும் விளம்பரங்களை பார்த்து சோப்பு, பற்பசை, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். அலர்ஜி வரக்கூடும். விஷப் பூச்சிகளான பூரான், பாம்பு, தேள் கடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கவனம் தேவை.
கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். அவ்வப்போது பலவீனமாக உணருவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். கூடாப்பழக்க வழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும்.
விமர்சனங்கள் கண்டு அஞ்ச வேண்டாம். ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டிலேயே அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். அவருக்கு பார்வைக் கோளாறு, முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், அம்மான், அத்தைவழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். தந்தையாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்ப் பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அவ்வப்போது கனவு தொல்லையால் தூக்கம் குறையும்.
14.12.2017 வரை சனி 5ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி நன்கு விசாரித்து முடிக்கப்பாருங்கள். மகன் காரண காரியமேயின்றி கோபப்படுவார். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நலமாக இருக்குமே என்று ஆதங்கப்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. 15.12.2017 முதல் 6ம் வீட்டில் சனிபகவான் அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கு மாறும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
--
குடும்பத்தினருக்கு
---
இந்த வருடம் முழுக்க ராகுவும், கேதுவும் உங்களுக்கு சரியில்லாததால் நீங்கள் சாதாரணமாகப் பேசுவது கூட குடும்பத்தில் உள்ள மாமியார், நாத்தனார் தவறாக புரிந்துக்கொள்வார்கள் இதுபோன்ற சங்கடங்கள் விலக அருகிலுள்ள புற்றுக்கோயிலுக்கு மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் சென்று விளக்கேற்றுங்கள். உங்கள் குடும்பத்தில் விருச்சிகம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் ரிஷபம், கன்னி, மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் நல்வாழ்வு அமைய கீழ்கண்ட குருபகவான் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
--
சிம்மம்
எதிலும் உடனடித் தீர்வை விரும்புபவர்களே! உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் 2017-ம் ஆண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும்.
மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். என்றாலும் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். கல்யாணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் என வீடு களைகட்டும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் இனி தேடி வருவார்கள். 14.12.2017 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தம் வரும்.
தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். நெடுந்தூர, இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள். ஜுலை 26-ம் தேதி வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், ஹார்மோன் பிரச்சினை, அல்சர், இரத்த சோகை வந்து செல்லும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள்.
முன்கோபத்தைக் குறையுங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் நீர்க் கட்டி, நரம்புச் சுளுக்கு வந்து நீங்கும். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். 27.7.2017 முதல் ராகு 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் தொடர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவீர்கள். நோய்களெல்லாம் விலகும். தோற்றப் பொலிவு கூடும். சோர்ந்துப் போய் கலையிழந்திருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை மலரும். கோவில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
ஷேர் மூலம் பணம் வரும். பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிர்த்தவர்களெல்லாம் அடங்குவார்கள். வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். சொந்த ஊர் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வேலையும் அமையும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப வளைந்து கொடுப்பீர்கள்.
ஆடை, ஆபரணம் சேரும். வழக்குகள் சாதகமாக முடியும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால் 02.09.2017 முதல் குரு 3-ம் வீட்டிலேயே அமர்வதால் எந்த ஒரு காரியத்தையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். முன்பின் தெரியாதவர்களிடம் உங்களுடைய குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்யோகத்தில் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும்.
--
குடும்பத்தினருக்கு
---
இந்த வருடம் முழுக்க சனியின் வீீச்சு சரியில்லாததால் தான் அடிக்கடி குடும்பத்தில் சண்டை, சச்சரவு மருத்துவ செலவுகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அதிலிருந்து விடுபட அருகிலிருக்கும் சிவாலயத்திலுள்ள பைரவரை அஷ்டமி திதியில் சின்ன பூசணிக்காயில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், துலாம் விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் ரிஷபம், மிதுனம், கன்னி ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் செல்வம் செழிக்க கிடைக்க கீழ்கண்ட கேது கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
-
எதிலும் உடனடித் தீர்வை விரும்புபவர்களே! உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் 2017-ம் ஆண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும்.
மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். என்றாலும் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். கல்யாணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் என வீடு களைகட்டும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் இனி தேடி வருவார்கள். 14.12.2017 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால் தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தம் வரும்.
தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். நெடுந்தூர, இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள். ஜுலை 26-ம் தேதி வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், ஹார்மோன் பிரச்சினை, அல்சர், இரத்த சோகை வந்து செல்லும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள்.
முன்கோபத்தைக் குறையுங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பையில் நீர்க் கட்டி, நரம்புச் சுளுக்கு வந்து நீங்கும். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். 27.7.2017 முதல் ராகு 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் தொடர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவீர்கள். நோய்களெல்லாம் விலகும். தோற்றப் பொலிவு கூடும். சோர்ந்துப் போய் கலையிழந்திருந்த உங்கள் முகத்தில் இனி புன்னகை மலரும். கோவில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
ஷேர் மூலம் பணம் வரும். பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிர்த்தவர்களெல்லாம் அடங்குவார்கள். வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். சொந்த ஊர் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வேலையும் அமையும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப வளைந்து கொடுப்பீர்கள்.
ஆடை, ஆபரணம் சேரும். வழக்குகள் சாதகமாக முடியும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால் 02.09.2017 முதல் குரு 3-ம் வீட்டிலேயே அமர்வதால் எந்த ஒரு காரியத்தையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். முன்பின் தெரியாதவர்களிடம் உங்களுடைய குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்யோகத்தில் வேலையில் ஆர்வம் அதிகரிக்கும்.
--
குடும்பத்தினருக்கு
---
இந்த வருடம் முழுக்க சனியின் வீீச்சு சரியில்லாததால் தான் அடிக்கடி குடும்பத்தில் சண்டை, சச்சரவு மருத்துவ செலவுகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அதிலிருந்து விடுபட அருகிலிருக்கும் சிவாலயத்திலுள்ள பைரவரை அஷ்டமி திதியில் சின்ன பூசணிக்காயில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், துலாம் விருச்சிகம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் ரிஷபம், மிதுனம், கன்னி ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் செல்வம் செழிக்க கிடைக்க கீழ்கண்ட கேது கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
-
கன்னி
நுணுக்கமாகவும், துல்லியமாகவும் யோசிப்பவர்களே! தைரியஸ்தானமான 3-ம் வீட்டில் சனிபகவான் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகங்களை அனுபவிப்பீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். இந்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் 6-ல் இடத்திலும், சூரியன் 4-லும் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். திடீர் பயணங்கள் உண்டு.
26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். ஆனால் ராசிக்கு 12-ம் வீட்டில் ராகு நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சம் வரும். சுபச் செலவுகள் அதிகமாகும். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். 27.7.2017 முதல் கேது 5-ம் வீட்டில் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து போகும். பிள்ளைகளுக்கு அதிக அறிவுரைச் சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். ஆனால் ராகு 11-ம் வீட்டில் நீடிப்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பலன் கிட்டும். அயல் நாடு செல்லும் வாய்ப்பு வரும். குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணம் சென்று வருவீர்கள். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்கள் ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையை தவிர்க்கப் பாருங்கள். பிரிவுகள் வரக்கூடும். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், கார உணவுகள் மற்றும் லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. 02.09.2017 முதல் குரு 2-ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். சிலர் புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பம் விலகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். அழகு, அறிவுள்ள குழந்தை பிறக்கும். மனைவிக்கு இருந்து வந்த ஆரோக்கிய குறைவு சீராகும்.
வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சொத்துச் சேர்க்கை உண்டு. சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள், அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். மக்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புதிய சரக்குகள் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் இயல்பு உண்டாகும்.
--
குடும்பத்தினருக்கு
--
ஆகஸ்ட் வரை ஜென்ம குருயிருப்பதால் கணவருடன் ஈகோ பிரச்சினை, மாமியார், மாமனாருடன் பனிப்போர் இவைகளையெல்லாம் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த பிரச்சினையிலிருந்து விடுபட சதுர்த்தி திதியில் அருகம்புல் வைத்து விநாயகர வழிபடுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், சிம்மம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும்.
ஆனால் ரிஷபம், கடகம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல நிலைமைக்கு வர கீழ்கண்ட சனி கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு சனிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
நுணுக்கமாகவும், துல்லியமாகவும் யோசிப்பவர்களே! தைரியஸ்தானமான 3-ம் வீட்டில் சனிபகவான் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகங்களை அனுபவிப்பீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். இந்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் 6-ல் இடத்திலும், சூரியன் 4-லும் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். திடீர் பயணங்கள் உண்டு.
26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். ஆனால் ராசிக்கு 12-ம் வீட்டில் ராகு நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சம் வரும். சுபச் செலவுகள் அதிகமாகும். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். 27.7.2017 முதல் கேது 5-ம் வீட்டில் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து போகும். பிள்ளைகளுக்கு அதிக அறிவுரைச் சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். ஆனால் ராகு 11-ம் வீட்டில் நீடிப்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பலன் கிட்டும். அயல் நாடு செல்லும் வாய்ப்பு வரும். குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணம் சென்று வருவீர்கள். உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்கள் ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையை தவிர்க்கப் பாருங்கள். பிரிவுகள் வரக்கூடும். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், கார உணவுகள் மற்றும் லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. 02.09.2017 முதல் குரு 2-ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். சிலர் புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பம் விலகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். அழகு, அறிவுள்ள குழந்தை பிறக்கும். மனைவிக்கு இருந்து வந்த ஆரோக்கிய குறைவு சீராகும்.
வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சொத்துச் சேர்க்கை உண்டு. சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள், அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். மக்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புதிய சரக்குகள் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் இயல்பு உண்டாகும்.
--
குடும்பத்தினருக்கு
--
ஆகஸ்ட் வரை ஜென்ம குருயிருப்பதால் கணவருடன் ஈகோ பிரச்சினை, மாமியார், மாமனாருடன் பனிப்போர் இவைகளையெல்லாம் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த பிரச்சினையிலிருந்து விடுபட சதுர்த்தி திதியில் அருகம்புல் வைத்து விநாயகர வழிபடுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், சிம்மம், தனுசு, கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும்.
ஆனால் ரிஷபம், கடகம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல நிலைமைக்கு வர கீழ்கண்ட சனி கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு சனிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
துலாம்
எதையும் கலை நயத்துடன் செய்யக் கூடியவர்களே! இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பாதச் சனியாகத் தொடர்வதால் வீண் வாக்குவாதங்களையெல்லாம் தவிர்க்கப்பாருங்கள். பல் வலி வந்து போகும். காலில் அவ்வப் போது அடிபடும். பொது இடங்களில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. இருந்தாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கத்தான் செய்யும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். உங்களின் நிதி நிலை தெரியாமல் உறவினர்கள், நண்பர்களில் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.
உங்களுக்கு சுக வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களைகட்டும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். அவர்களை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
ராகு லாப வீட்டில் நிற்பதால் வசதி, வாய்ப்புகள் ஒரளவு பெருகும். ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் ஆதரவுக் கிட்டும். சமூக சேவையில் ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் இடத்திலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.
ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். புறநகர் பகுதியில் இடம் வாங்கி வைத்திருப்பவர்கள் அவ்வப்போது உங்களுடைய இடத்தை கண்காணித்து வருவது நல்லது. ட்ரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் இவற்றையெல்லாம் புதுப்பிக்கத் தவறாதீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் உடனுக்குடன் செலுத்துவது நல்லது. உங்களுடைய அடிப்படை நடத்தைகளை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள்.
பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தாயாருக்கு கழுத்து எலும்புத் தேய்வு, மூட்டு வலி, கை, கால் வலி, அசதி வந்து போகும். அவருடன் மனத்தாங்கலும் வரக்கூடும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம்
வீட்டில் மறைந்து நிற்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்து செல்லும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே எடுத்து நடத்துவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.
ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். இரத்த அழுத்தம் அதிகமாகும். பெரிய நோய் இருப்பதாக நினைத்து பயம் வரும். மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். அல்சர், மஞ்சள் காமாலை, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். உணவில் காய்கறிகள், பச்சை கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீரைக் காய்ச்சி அருந்துங்கள்.
வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். லாபம் சுமாராக இருக்கும். சின்ன சின்ன நட்டங்களும், ஏமாற்றங்களும் வரும். உத்யோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம்.
--
குடும்பத்தினருக்கு
---
பாதச்சனி தொடர்வதால் காலில் வலி, சின்னச் சின்ன அவமானங்கள் வந்த வண்ணம் இருக்கும் அதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள உங்கள் குலதெய்வ கோயிலுக்கு ஒரு முறை சென்று வருவதுடன் புதன்கிழமை தோறும் மீனாட்சி அம்மனின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கும்ப ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும் ஆனால் ரிஷபம், கடகம், சிம்மம், மகரம் ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து விளங்க கீழ்கண்ட புதன் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு புதன்கிழமைகளில் வணங்கி வாருங்கள்
--
விருச்சிகம்
கொள்கை, கோட்பாடு களை விட்டுக் கொடுக்காதவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். ஜென்மச் சனி தொடர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
மருத்துவக்காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். ஜெனரல் செக்கப் செய்து கொள்வது நல்லது. வறுத்த, பொரித்த மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வரும். மனைவிவழியில் கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் சிலர் உங்களை குறை கூறுவார்கள்.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். நாடாளுபவர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். உடல் எடை கூடும். பணப்புழக்கம் இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10-ம்
வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரிய தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.
உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால் ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வேற்றுமொழி பேசுவர்கள், வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்த புது வழிகளில் முயற்சி செய்வீர்கள். திடீர் யோகம், பணவரவு உண்டு. பழைய கடனில் ஒருபகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன் வந்து உதவுவார். பெரிய பதவிகள் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள்.
தூரத்து சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர்கள், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஜென்மச் சனி தொடர்வதால் புது தொழில் தொடங்கும் முயற்சிகள், பெரிய முதலீடுகள் வேண்டாம். போட்டிகளைச் சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் ஜூலை 26-ம் தேதி வரை சின்னச் சின்ன அலைகழிப்புகள் இருக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
--
குடும்பத்தினருக்கு
---
ஜுலை மாதம் வரை ராகு, கேதுவால் காரியத்தடைகள், வாகனப் பழுது மற்றும் விபத்துகள் நிகழும். அதிலிருந்து உங்களை காத்துக் கொள்ள அருகிலிருக்கும் முருகர் கோவிலுக்கு சஷ்டி திதியில் வணங்குவதுடன் திருத்தணி முருகர் படத்தை வீட்டில் வைத்து செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வாருங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், மிதுனம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், சிம்மம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் உங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக வீடு, மனை அமைய கீழ்கண்ட செவ்வாய் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
--
கொள்கை, கோட்பாடு களை விட்டுக் கொடுக்காதவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். ஜென்மச் சனி தொடர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
மருத்துவக்காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். ஜெனரல் செக்கப் செய்து கொள்வது நல்லது. வறுத்த, பொரித்த மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வரும். மனைவிவழியில் கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் சிலர் உங்களை குறை கூறுவார்கள்.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். நாடாளுபவர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். உடல் எடை கூடும். பணப்புழக்கம் இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10-ம்
வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரிய தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.
உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால் ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வேற்றுமொழி பேசுவர்கள், வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்த புது வழிகளில் முயற்சி செய்வீர்கள். திடீர் யோகம், பணவரவு உண்டு. பழைய கடனில் ஒருபகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன் வந்து உதவுவார். பெரிய பதவிகள் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள்.
தூரத்து சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர்கள், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஜென்மச் சனி தொடர்வதால் புது தொழில் தொடங்கும் முயற்சிகள், பெரிய முதலீடுகள் வேண்டாம். போட்டிகளைச் சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் ஜூலை 26-ம் தேதி வரை சின்னச் சின்ன அலைகழிப்புகள் இருக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
--
குடும்பத்தினருக்கு
---
ஜுலை மாதம் வரை ராகு, கேதுவால் காரியத்தடைகள், வாகனப் பழுது மற்றும் விபத்துகள் நிகழும். அதிலிருந்து உங்களை காத்துக் கொள்ள அருகிலிருக்கும் முருகர் கோவிலுக்கு சஷ்டி திதியில் வணங்குவதுடன் திருத்தணி முருகர் படத்தை வீட்டில் வைத்து செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வாருங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், மிதுனம், தனுசு ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். ஆனால் கடகம், சிம்மம், மகரம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் உங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக வீடு, மனை அமைய கீழ்கண்ட செவ்வாய் கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
--
தனுசு
அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் வாதாடுபவர்களே! உங்களுக்கு 2வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். சனிபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் தொடர்வதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். பணவரவு ஓரளவு இருக்கும். எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்ட பெயர்தான் மிஞ்சும். சிலர் உங்களைப் பற்றிய வதந்திகளை பரப்பிவிடுவார்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனங்களை இயக்குவதில் கவனம் தேவை. அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். நண்பர், உறவினர் சிலர் உங்களை தவறான போக்கிற்குத் தூண்டுவார்கள்.
ரத்த அழுத்தம், சளித்தொந்தரவு, இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் பிணக்குகள் வந்து செல்லும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வதில் குழப்பம் வரும்.
27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் வலி, காது வலி, கணுக்கால் வலி வந்து விலகும். வாகனத்தை நிதானமாக இயக்குங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.
காலில் அடிப்படும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். மறைமுக அவமானம் வந்து நீங்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 11-ம் வீடான லாபஸ்தானத்தில் அமர்வதால் எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.
புது சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உடல் நிலை சீராகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். அடகு வைத்திருந்த பத்திரம், பழைய கடனையெல்லாம் தீர்க்க புது வழி பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்களெல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். செப்டம்பர் மாதம் முதல் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். சக ஊழியர்களும் முக்கியத்துவம் தரத் தொடங்குவார்கள்.
--
குடும்பத்தினருக்கு
---
ஆகஸ்ட் மாதம் வரை குரு சரியில்லாததால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகளும், உத்யோகத்தில் வேலைச்சுமையும், விரும்பத்தகாத இடமாற்றமும் வரும். அதிலிருந்து விடுபட அருகிலுள்ள பெருமாள் கோயிலில் இருக்கும் சக்கரத்தாழ்வர் அல்லது சுதர்சனமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், ரிஷபம், கடகம், விருச்சிக ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும் ஆனால் சிம்மம், துலாம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் பணப்பலம் அதிகரிக்க கீழ்கண்ட சூரிய கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
--
அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் வாதாடுபவர்களே! உங்களுக்கு 2வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். சனிபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் தொடர்வதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். பணவரவு ஓரளவு இருக்கும். எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்ட பெயர்தான் மிஞ்சும். சிலர் உங்களைப் பற்றிய வதந்திகளை பரப்பிவிடுவார்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனங்களை இயக்குவதில் கவனம் தேவை. அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். நண்பர், உறவினர் சிலர் உங்களை தவறான போக்கிற்குத் தூண்டுவார்கள்.
ரத்த அழுத்தம், சளித்தொந்தரவு, இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். 26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் பிணக்குகள் வந்து செல்லும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வதில் குழப்பம் வரும்.
27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் குடும்பத்தில் சலசலப்புகள் வரும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் வலி, காது வலி, கணுக்கால் வலி வந்து விலகும். வாகனத்தை நிதானமாக இயக்குங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.
காலில் அடிப்படும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். மறைமுக அவமானம் வந்து நீங்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 11-ம் வீடான லாபஸ்தானத்தில் அமர்வதால் எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.
புது சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உடல் நிலை சீராகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். அடகு வைத்திருந்த பத்திரம், பழைய கடனையெல்லாம் தீர்க்க புது வழி பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்களெல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். செப்டம்பர் மாதம் முதல் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். சக ஊழியர்களும் முக்கியத்துவம் தரத் தொடங்குவார்கள்.
--
குடும்பத்தினருக்கு
---
ஆகஸ்ட் மாதம் வரை குரு சரியில்லாததால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகளும், உத்யோகத்தில் வேலைச்சுமையும், விரும்பத்தகாத இடமாற்றமும் வரும். அதிலிருந்து விடுபட அருகிலுள்ள பெருமாள் கோயிலில் இருக்கும் சக்கரத்தாழ்வர் அல்லது சுதர்சனமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். உங்கள் குடும்பத்தில் மேஷம், ரிஷபம், கடகம், விருச்சிக ராசியில் கணவரோ, பிள்ளைகளோ இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும் ஆனால் சிம்மம், துலாம், மீன ராசியில் இருந்தால் யோகப் பலன் கிடைக்கும். மேலும் பணப்பலம் அதிகரிக்க கீழ்கண்ட சூரிய கிரகத்தின் சூட்சமமந்திர வடிவத்தை பூஜையறையில் மாகோலமிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கி வாருங்கள்.
--
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|