புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
28 Posts - 62%
heezulia
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
24 Posts - 3%
sugumaran
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
13 Posts - 2%
M. Priya
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
தன்ணுணர்வின் கதை Poll_c10தன்ணுணர்வின் கதை Poll_m10தன்ணுணர்வின் கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்ணுணர்வின் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 01, 2016 7:50 pm


ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும்
அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாக
இருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானது
எதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடு
பார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோ
அதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும்
செய்யமுடியாது.

நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றி
ஒரு அழகான கதை உண்டு.

அவர் ஒரு நிர்வாணமாக திரியும் பக்கிரி, ஆனால்
உண்மையான தேடுதல் உடையவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டார். ஒரு நாட்டின் அரசி கூட
நாகார்ஜூனா மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். அவள் ஒருநாள் நாகார்ஜூனாவை
அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தாள். நாகார்ஜூனா அரண்மனைக்குச் சென்றார்.

அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள்.
அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப்
பாத்திரம்தான் வேண்டும் என்றாள்.

நாகார்ஜூனா கொடுத்துவிட்டார் – அது ஒன்றுதான்
அவரிடம் உள்ள பொருள் – பிச்சைப் பாத்திரம். ராணி உள்ளே சென்று வைரங்கள்
பதிக்கப்பட்ட தங்கத்திலான பிச்சைப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து
நாகார்ஜூனாவிடம் கொடுத்தாள்.

அவள், இதை வைத்துக் கொள்ளுங்கள். வருடக் கணக்காக
உங்கள் கைகளில் இருந்த அந்த பிச்சை பாத்திரத்தை நான் வழிபட போகிறேன் – உங்களின்
துடிப்பில் சிறிதளவாவது அது கொண்டிருக்கும். இனி அது என் கோவிலாக இருக்கும்.
உங்களைப் போன்ற மனிதர் ஒரு சாதாரண மரத்திலான பிச்சை பாத்திரத்தை ஏந்தக் கூடாது.
இந்த தங்க பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே விசேஷமாக
செய்தேன். என்றாள்.

அது உண்மையிலேயே விலையுயர்ந்தது. நாகார்ஜூனா
சாதாரண முனிவர்கள் போல இருந்திருந்தால், நான் இதை தொட மாட்டேன். நான் துறவி. இந்த
உலகத்தை துறந்து விட்டேன் என்று கூறியிருப்பார். ஆனால் அவரைப் பொறுத்தவரை
எல்லாமும் ஒன்றுதான், அதனால் அவர் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டார்.

அவர் அரண்மனையை விட்டுப் போகும்போது, ஒரு
திருடன் அவரைப் பார்த்தான். அவனால் அவனது கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு நிர்வாண
சந்நியாசியிடம் இவ்வளவு விலையுயர்ந்த பொருளா இவரால் எவ்வளவு காலம் இதை பாதுகாக்க
முடியும் அதனால் திருடன் அவரை பின்தொடர்ந்தான்.

நாகார்ஜூனா ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த
கோவிலில் தங்கியிருந்தார் – கதவுகளும் இல்லை, ஜன்னல்களும் இல்லை. மிகவும்
பாழடைந்தது. திருடன் அதைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சீக்கிரமே
அவர் தூங்கப் போய்விடுவார். பின் எந்த கஷ்டமும் இல்லை. நான் அந்த பாத்திரத்தை
எடுத்துக் கொள்வேன் என நினைத்தான்.

திருடன் கதவுக்கு வெளியே ஒரு சுவறின் அருகில்
பதுங்கியிருந்தான். நாகார்ஜூனா அந்த பாத்திரத்தை வெளியே விட்டெறிந்தார். திருடனால்
நடந்ததை நம்பவே முடியவில்லை.

நாகார்ஜூனா இந்த திருடன் தன்னை பின் தொடர்ந்து
வருவதை பார்த்திருந்தார். இவன் தனக்காக வரவில்லை, இந்த பாத்திரத்திற்காகத் தான்
வருகிறான் என்பதை நன்கு அறிந்த அவர் அதை வெளியே வீசி விட்டார். எதற்கு அனாவசியமாக
அவன் காத்திருக்க வேண்டும் எடுத்துக் கொண்டு அவன் போகட்டும், நானும்
ஓய்வெடுக்கலாம் என நினைத்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 01, 2016 7:51 pm

இவ்வளவு விலையுயர்ந்த பொருளை நாகார்ஜூனா இவ்வளவு
சுலபமாக வீசி விட்டாரே என ஆச்சரியப்பட்ட திருடனுக்கு அது தனக்காகத் தான்
வீசப்பட்டது என நன்றாகத் தெரிந்தது. அதனால் அவருக்கு நன்றி சொல்லாமல் அவனால் போக
முடியவில்லை.

அவன், தலையை உள்ளே நீட்டி, சாமி, மிகவும் நன்றி.
ஆனால் நீங்கள் மிக வித்தியாசமான மனிதர் – என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை.
மேலும் எனக்கு ஆழமான ஆசை ஒன்று எழுகிறது. ஒரு திருடனாக இருந்து என் வாழ்நாளை நான்
வீணடித்துவிட்டேன். ஆனால் உங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்களா நான் உள்ளே வந்து
உங்கள் காலில் விழலாமா எனக் கேட்டான்.

நாகார்ஜூனா சிரித்தார், அவர், வா, அதற்காகத்தான்
அந்த பாத்திரத்தை வெளியே வீசினேன். அப்போதுதான் நீ உள்ளே வருவாய். என்றார்.

திருடன் மாட்டிக் கொண்டான். உள்ளே வந்து
பாதங்களை தொட்டான். அந்த சமயத்தில் திருடன் மிகவும் வெளிப்படையாக இருந்தான்.
ஏனெனில் இவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை அவன் கண்டான். அவன் மிகவும்
மென்மையாகவும், திறந்தும், நன்றியோடும், திகைத்தும், உள்வாங்கத்தயாராகவும்
இருந்தான். அவன் அவர் காலில் விழுந்து வணங்கிய போது, வாழ்க்கையில் முதன்முறையாக
அவன் தெய்வீகத்தை உணர்ந்தான்.

அவன் நாகார்ஜூனாவிடம், நானும் உங்களைப் போல மாற
இன்னும் எத்தனை பிறவிகள் ஆகும் எனக் கேட்டான்.

நாகார்ஜூனா, எத்தனை பிறவிகளா அது இங்கேயே
இப்போதே, இன்றே நடக்கலாம் என்றார்.

திருடன், நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். அது
இப்போது எப்படி நிகழமுடியும் நான் ஒரு திருடன், நாடே அறியும். அவர்களால் என்னை
பிடிக்க முடிய வில்லை. அரசர் கூட என்னை பார்த்து பயப்படுவார். ஏனெனில் மூன்றுமுறை
பொக்கிழத்திற்க்குள் நுழைந்து திருடிக் கொண்டு போயிருக்கிறேன். அவர்களுக்கு அது
நான்தான் எனத் தெரியும். ஆனால் அத்தாட்சியில்லை. நான் ஒரு பக்கா திருடன் – நீங்கள்
இந்த பகுதிக்கு அன்னியராக இருப்பதால் உங்களுக்கு இவை தெரியாமலிருக்கலாம். இப்போதே
நான் எப்படி மாற முடியும் என்றான்.

நாகார்ஜூனா ஆயிரக்கணக்கான வருடங்களாக வெளிச்சமே
இன்றி இருண்டு கிடக்கும் ஒரு வீட்டிற்க்குள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு
வந்தால், இருள் ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன். ஒரு தீபத்தை
உள்ளே கொண்டு வந்ததால் மட்டுமே என்னால் வெளியே போக முடியாது. நான் நெடுங்காலமாக
இங்கே இருக்கிறேன். எனக் கூற முடியுமா இருள் சண்டையிட முடியுமா ஒருநாள் இருட்டு,
ஆயிரக்கணக்கான வருட இருட்டு என இருட்டில் பேதம் உண்டா எனக் கேட்டார்.

திருடனால் அதை புரிந்து கொள்ள முடிந்தது, இருள்
வெளிச்சத்தை எதிர்க்க முடியாது. வெளிச்சம் வரும்போது, இருள் மறைந்துவிடும்.
நாகார்ஜூனா, நீ பல பிறவி பிறவியாக இருளில் இருந்திருக்கலாம். – அது ஒரு
பொருட்டேயல்ல. நான் உனக்கு ஒரு ரகசியத்தை கொடுக்கிறேன். அதன்மூலம் நீ உன்
இருப்பில் வெளிச்சத்தை கொண்டு வர முடியும். என்றார்.

திருடன், என் தொழில் அதை நான் விட வேண்டுமா எனக்
கேட்டான்.

நாகார்ஜூனா அதை நீதான் தீர்மானிக்க வேண்டும்.
எனக்கு உன் தொழிலைப் பற்றியோ உன்னைப் பற்றியோ அக்கறையில்லை. உன் இருப்பில்
வெளிச்சத்தை கொண்டுவரக்கூடிய ஒரு ரகசியத்தை நான் உனக்குத் தருவது மட்டுமே நான்
செய்வது. மற்றபடி எல்லாமே உன்னை பொறுத்தது. என்றார்.

திருடன், ஆனால் நான் மற்ற சன்னியாசிகளிடம்
சென்றபோது, அவர்கள் எப்போதும், முதலில் திருடுவதை நிறுத்து – பின்புதான்
தீட்சையளிக்க முடியும் எனக் கூறுவர். என்றான்.

நாகார்ஜூனா சிரித்து, நீ சன்னியாசிகளிடம்
செல்லாமல் திருடர்களிடம் சென்றிருக்கலாம். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

நீ வெறுமனே உன் சுவாசத்தை கவனி – இது புத்தரின்
முறை – உன் சுவாசம் உள்ளே போவதையும் வெளியேறுவதையும் கவனி. எப்போதெல்லாம் நினைவு
வருகிறதோ, அப்போதெல்லாம் உன் சுவாசத்தை கவனி. திருடப் போகும்போது, வேறு யாருடைய
வீட்டிற்க்குள் இரவில் நுழையும்போதும், உன் சுவாசத்தை கவனி. பொக்கிஷத்தை
திறக்கும்போதும், வைரங்கள் அங்கே இருப்பதை பார்க்கும்போதும் உன் சுவாசத்தை கவனி.
என்ன செய்ய விரும்புகிறாயே அதை செய் – ஆனால் சுவாசத்தை கவனிக்க மறந்து விடாதே.
என்றார்.

திருடன், இது மிகவும் எளிதானதாக தோன்றுகிறதே.
ஒழுக்கம் தேவையில்லையா குணநலன் வேண்டாமா வேறு எதுவும் தேவையில்லையா என்றான்.

நாகார்ஜூனா, நிச்சயமாக வேறு எதுவுமில்லை. உன்
சுவாசத்தை கவனி. அவ்வளவுதான் என்றார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81591
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 01, 2016 7:51 pm

பதினைந்து நாட்களுக்கு பிறகு திருடன் திரும்ப
வந்தான். ஆனால் அவன் முற்றிலும் புதியவனாக இருந்தான். அவன் நாகார்ஜூனாவின் காலில்
விழுந்து வணங்கி, என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் ஒரு துளி கூட சந்தேகப் பட
முடியாத விதத்தில் மிக அழகாக என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் இந்த பதினைந்து
நாட்களாக முயற்சி செய்தேன் – அது நடக்கவே இல்லை. நான் என் சுவாசத்தை கவனித்தால்
என்னால் திருட முடியவில்லை. நான் திருடினால், என் சுவாசத்தை என்னால் கவனிக்க
முடியவில்லை. சுவாசத்தை கவனித்தால் நான் மிகவும் மௌனமாக, விழிப்போடு, தன்னுணர்வோடு,
கவனமானவனாக இருக்கிறேன். அப்போது வைரங்கள் கூட கூழாங்கற்களாக தோன்றுகிறது. நீங்கள்
எனக்கு ஒரு கஷ்டத்தை, அலைபாயுதலை உருவாக்கி விட்டீர்கள். நான் இப்போது என்ன
செய்வது என்று கேட்டான்.

நாகார்ஜூனா, வெளியே போ – நீ என்ன செய்ய
விரும்புகிறாயோ அதை செய். அந்த அமைதி, அந்த மௌனம், அந்த ஆனந்தம் என உன் சுவாசத்தை
நீ கவனிக்கும் போது கிடைப்பது வேண்டும் என நினைத்தால் அதை தேர்ந்தெடு. அதை விட
வைரமும் தங்கமும் வெள்ளியும் விலைமதிப்புள்ளது என முடிவெடுத்தால் அதை தேர்ந்தெடு.
நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும். உன் வாழ்வில் தலையிட நான் யார் எனக் கேட்டார்.

அந்த மனிதன், என்னால் தன்னுணர்வற்ற நிலையை தேர்ந்தெடுக்க முடியாது.
இதுபோன்ற கணங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை உங்களது சீடனாக ஏற்றுக்
கொள்ளுங்கள். எனக்கு தீட்சையளியுங்கள் என்று கேட்டான்.

நாகார்ஜூனா, நான் உனக்கு ஏற்கனவே தீட்சையளித்து
விட்டேன் என்றார்.

மூலம் – The fish in the sea is not thirsty che# 10



வாட்ஸ் அப் பகிர்வு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக