புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» கருத்துப்படம் 18/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:28 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» கருத்துப்படம் 18/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:28 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறைநெறி நவிலும் நிறைமொழி
Page 1 of 1 •
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் )
{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
அவையடக்கம்
வெயிலுக்கு இடும்விளக்குப் போலும்யான் நீதிநூல் கூறல்
1.வெயிலினைச் சோதிசெய்வான் விளக்கிடல் போலுங்காகங்
குயிலினுக் கிசையுணர்த்துங் கொள்கையே போலு நட்டம்
மயிலினுக் குணர்த்துங் கான வாரண மெனவும் யாவும்
பயிலுல கிற்கு நீதி பகரயான் துணிவுற் றேனால்.
பதப்பொருள்:
வெயில் – சூரியன்
சோதிசெய்தல் – காட்டுதல்.
விளக்கு – கைவிளக்கு.
நட்டம் – நாட்டியம்; ஆடல்கலை
கானம் – காடு
வாரணம் - வான் கோழி ; காட்டுக்கோழி என்னும் பறவை
தெளிவுரை:
கைவிளக்கைக் கொண்டு, சுயம் பிரகாசமான சூரியனைக் காண்பித்தல் போலவும்,
இயற்கையாகவே இனிமையாகப் பாடும் குயிலுக்குக் காகம் இசை கற்பிக்க முயலுதல் போலவும்,
அழகிய நட்டியத்தைத் தன் பிறவியிலேயே கொண்டு ஆடும் மயிலுக்கு, வான் கோழி நாட்டியம் கற்பிக்க முற்படுவதுபோலும்,
அனைத்து நீதிகளையும் கற்றுத் தெளிந்த ஞானியர் நிறைந்த இப்புவியில் வாழும் மக்களுக்கு நானும் நீதிநெறிகளை இந்நூலின் மூலமாகப் போதிக்க விழந்த என் துணிவை என்னென்பதுவோ!
விளக்கவுரை :
நூலாசிரியரின் அவையடக்கமே அட்டகசமாக இருக்கின்றது. சூரியனைக் காண்பிக்கக் கைவிளக்கைத் துணையாகக் கொள்வதும்,
குயிலுக்குக் காகம் பாடக் கற்பிப்பதும், மயிலுக்கு வான் கோழி நாட்டியம் கற்பிப்பதும் அவ்வவற்றின் அறியாமை.
அதுபோலவே தானும் ஞானம் நிறைந்த இவ்வுலக மக்களுக்கு நீதி சொல்ல ஆசைப்படுகிறனே என் அறியாமையை என்னென்பது என்று அழகாக நூலுக்கு அவையடக்கம் அமைத்தமை ஆசிரியரின் நுண்மான் நுழைபுலத்தை வெளிப்படுத்துவதை உணரமுடிகிறது.
{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
அவையடக்கம்
வெயிலுக்கு இடும்விளக்குப் போலும்யான் நீதிநூல் கூறல்
1.வெயிலினைச் சோதிசெய்வான் விளக்கிடல் போலுங்காகங்
குயிலினுக் கிசையுணர்த்துங் கொள்கையே போலு நட்டம்
மயிலினுக் குணர்த்துங் கான வாரண மெனவும் யாவும்
பயிலுல கிற்கு நீதி பகரயான் துணிவுற் றேனால்.
பதப்பொருள்:
வெயில் – சூரியன்
சோதிசெய்தல் – காட்டுதல்.
விளக்கு – கைவிளக்கு.
நட்டம் – நாட்டியம்; ஆடல்கலை
கானம் – காடு
வாரணம் - வான் கோழி ; காட்டுக்கோழி என்னும் பறவை
தெளிவுரை:
கைவிளக்கைக் கொண்டு, சுயம் பிரகாசமான சூரியனைக் காண்பித்தல் போலவும்,
இயற்கையாகவே இனிமையாகப் பாடும் குயிலுக்குக் காகம் இசை கற்பிக்க முயலுதல் போலவும்,
அழகிய நட்டியத்தைத் தன் பிறவியிலேயே கொண்டு ஆடும் மயிலுக்கு, வான் கோழி நாட்டியம் கற்பிக்க முற்படுவதுபோலும்,
அனைத்து நீதிகளையும் கற்றுத் தெளிந்த ஞானியர் நிறைந்த இப்புவியில் வாழும் மக்களுக்கு நானும் நீதிநெறிகளை இந்நூலின் மூலமாகப் போதிக்க விழந்த என் துணிவை என்னென்பதுவோ!
விளக்கவுரை :
நூலாசிரியரின் அவையடக்கமே அட்டகசமாக இருக்கின்றது. சூரியனைக் காண்பிக்கக் கைவிளக்கைத் துணையாகக் கொள்வதும்,
குயிலுக்குக் காகம் பாடக் கற்பிப்பதும், மயிலுக்கு வான் கோழி நாட்டியம் கற்பிப்பதும் அவ்வவற்றின் அறியாமை.
அதுபோலவே தானும் ஞானம் நிறைந்த இவ்வுலக மக்களுக்கு நீதி சொல்ல ஆசைப்படுகிறனே என் அறியாமையை என்னென்பது என்று அழகாக நூலுக்கு அவையடக்கம் அமைத்தமை ஆசிரியரின் நுண்மான் நுழைபுலத்தை வெளிப்படுத்துவதை உணரமுடிகிறது.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் )
மறைநெறி நவிலும் நிறைமொழி
{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
அவையடக்கம்
ஆன்றோர் அறிவித்த வற்றையே அவர் முன் கூறுவேன்
2
பானுவின் கதிரை யுண்ட பளிங்கொளி செய்தல் போலும்
வானுலாங் கொண்டல் பெய்யுமழையினைத் தழையில்தாங்கித்
தானும்பெய் தருவைப் போலுந் தமிழொரு மூன்றுமாராய்ந்து
ஆனுவார் கவிசொல் வோர்முன் அறிவிலேன் பாடலுற்றேன்.
பதப்பொருள்:
பானு- சூரியன்
பளிங்கு – பளிங்குக் கல்
வாந்- ஆகாயம்
கொண்டல்- மேகம்
தழை – இலை
தரு – மரம்.
ஆனுதல் – நீங்குதல் ; தெளிதல்
தெளிவுரை:
சூரியனிடம் இருந்து ஒளியைப் பெற்ற பளிங்குக் கல் அவ்வொளியைத் தன்னிலிருந்தே பிரகாசிப்பதாகக் காட்சியளிப்பது போலவும், வானில் இருக்கும் மேகங்களிடம் இருந்து பெய்யப்பட்ட மழைநீரைத் தம் மண்டிய இலைகளில் தாங்கிப் பின், தன்னிடமிருந்து மழைபெய்வதைப்போல் காட்சியளித்து நீரை உதிர்க்கும் மரத்தைப்போலவும், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் வல்லுநகர்கள் அவற்றைத் தெளியக் கற்று அவர்கள் எனக்குக் காலத்தால் முன்பாகச் சொன்னவற்றைத்தான் ஏதோ நான் சொல்லுவதுபோல் உலகிற்கு என்னுடைய அறியாமையால் இந்நூலைப் பாடுகின்றேன்.
விளக்கவுரை :
நூலாசிரியர் இந்நூலில் சொல்ல வரும் கருத்துக்கள் புதியவையைப் போல் தோன்றினாலும் அவைகள் அனைத்தும் முத்தமிழ் அறிந்த வித்தகர்களால் தனக்கு முன்னதாகவே உலகிற்குச் சொல்லப்பட்டவைதான் என்கிறார். இருந்தாலும் தனது அறியாமையால் மீண்டும் அவற்றையே கூறப்போகும் என் அறியமையை என்னென்பது என்பது பொருள்.
அழகானதும் அற்புதமானதும் ஆகும் இந்த அவையடக்கப் பாடல் நூலாசிரியரின் பணிவைப் பகர்கின்றது - எளிமையை எடுத்துரைக்கின்றது.
மறைநெறி நவிலும் நிறைமொழி
{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
அவையடக்கம்
ஆன்றோர் அறிவித்த வற்றையே அவர் முன் கூறுவேன்
2
பானுவின் கதிரை யுண்ட பளிங்கொளி செய்தல் போலும்
வானுலாங் கொண்டல் பெய்யுமழையினைத் தழையில்தாங்கித்
தானும்பெய் தருவைப் போலுந் தமிழொரு மூன்றுமாராய்ந்து
ஆனுவார் கவிசொல் வோர்முன் அறிவிலேன் பாடலுற்றேன்.
பதப்பொருள்:
பானு- சூரியன்
பளிங்கு – பளிங்குக் கல்
வாந்- ஆகாயம்
கொண்டல்- மேகம்
தழை – இலை
தரு – மரம்.
ஆனுதல் – நீங்குதல் ; தெளிதல்
தெளிவுரை:
சூரியனிடம் இருந்து ஒளியைப் பெற்ற பளிங்குக் கல் அவ்வொளியைத் தன்னிலிருந்தே பிரகாசிப்பதாகக் காட்சியளிப்பது போலவும், வானில் இருக்கும் மேகங்களிடம் இருந்து பெய்யப்பட்ட மழைநீரைத் தம் மண்டிய இலைகளில் தாங்கிப் பின், தன்னிடமிருந்து மழைபெய்வதைப்போல் காட்சியளித்து நீரை உதிர்க்கும் மரத்தைப்போலவும், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் வல்லுநகர்கள் அவற்றைத் தெளியக் கற்று அவர்கள் எனக்குக் காலத்தால் முன்பாகச் சொன்னவற்றைத்தான் ஏதோ நான் சொல்லுவதுபோல் உலகிற்கு என்னுடைய அறியாமையால் இந்நூலைப் பாடுகின்றேன்.
விளக்கவுரை :
நூலாசிரியர் இந்நூலில் சொல்ல வரும் கருத்துக்கள் புதியவையைப் போல் தோன்றினாலும் அவைகள் அனைத்தும் முத்தமிழ் அறிந்த வித்தகர்களால் தனக்கு முன்னதாகவே உலகிற்குச் சொல்லப்பட்டவைதான் என்கிறார். இருந்தாலும் தனது அறியாமையால் மீண்டும் அவற்றையே கூறப்போகும் என் அறியமையை என்னென்பது என்பது பொருள்.
அழகானதும் அற்புதமானதும் ஆகும் இந்த அவையடக்கப் பாடல் நூலாசிரியரின் பணிவைப் பகர்கின்றது - எளிமையை எடுத்துரைக்கின்றது.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் )
மறைநெறி நவிலும் நிறைமொழி
{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
அவையடக்கம்
3. ஊமையர் பாடலை ஒக்கும் என் பாட்டும்
முடவரே யாட அந்தர் முன்னின்று பார்த்து வக்கத்
திடமொடு மூகர் பாடச் செவிடர் கேட் டதிச யிக்கக்
கடலுல கினிற்கண் டென்னக் கனவினுங்கலையைத்தேரா
மடமையே னுலகநீதி வகுத்திடத் துணிந்தேன்மன்னோ.
பதப்பொருள் :
முடவர்- ஊனமுற்ற கால்களை உடையவர்.
அந்தர் – கண்பார்வையற்ற குருடர்கள்.
மூகர் – வாய்பேச முடியாத ஊமையர்
செவிடர்- காதுகேட்க முடியாத செவிடர்கள்
மடமையேன் – அஞ்ஞானியகிய நான்
தெளிவுரை:
கண்பார்வை இல்லாத குருடர்கள் என்று அறிந்து கொள்ளும் திறன் ஏதும் இல்லாத அறிவிலியாகிய கால்கள் ஊனமுற்றவன், அக்குருடர்கள் தம் நடனத்தைக் கண்டு மகிழ்வார்கள் என்று அவர்கள் முன்பாக நடனமாடுவது போலும்;
காதுகேளாத செவிடர்கள் என்று அறிந்து கொள்ளும் திறன் ஏதும் இல்லாத அறிவிலியாகிய பேசும் திறனற்ற ஊமையானவன், அச்செவிடர்கள் தம் பாடலைக் கேட்டு அதிசயம் அடைவார்கள் என்ற உறுதியுடன் பாடுவது போலும்;
கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் ஞான கலாசாலையைக் கனவில் கூடப் பார்க்காதவனும் , அங்கு ஞானம் என்பதை ஒருநாள் கூட கற்காத அஞ்ஞானியும் ஆகிய நான், எத்தகைய துணிவோடு இந்த நீதிநூலை வகுத்துப் பாடிட முயற்சி மேற்கொண்டேனோ !
விளக்கவுரை :
“குருடர்கள் முன்பாக கால்கள் ஊனமுற்றவன் ஆடுவது அறிவீனம். அதுபோலவே செவிடர்கள் முன்பாக ஊமைகள் பாடுவதும் அறிவீனம். ஆனால் கடல்சூழ் இவ்வுலகில் வாழும் ஞானியர்கள் முன்பாக கனவில்கூட ஞானசபையைக் காணாத நான், நீதி வகுத்துப் பாடத் துணிந்தது எந்த வகை அறிவீனம் என்பதோ! ”என்று தன்னைத் தாழ்த்தி அவையடக்கம் பாடுகிறார் நீதிபதி. ஆகா என்ன பணிவு! “வித்யா ததாதி வினயம் – கல்வி பணிவைத் தருகிறது” என்னும் வேதவாக்கியத்தை நூலாசிரியர் மெய்ப்பிக்கின்றார்.
மறைநெறி நவிலும் நிறைமொழி
{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
அவையடக்கம்
3. ஊமையர் பாடலை ஒக்கும் என் பாட்டும்
முடவரே யாட அந்தர் முன்னின்று பார்த்து வக்கத்
திடமொடு மூகர் பாடச் செவிடர் கேட் டதிச யிக்கக்
கடலுல கினிற்கண் டென்னக் கனவினுங்கலையைத்தேரா
மடமையே னுலகநீதி வகுத்திடத் துணிந்தேன்மன்னோ.
பதப்பொருள் :
முடவர்- ஊனமுற்ற கால்களை உடையவர்.
அந்தர் – கண்பார்வையற்ற குருடர்கள்.
மூகர் – வாய்பேச முடியாத ஊமையர்
செவிடர்- காதுகேட்க முடியாத செவிடர்கள்
மடமையேன் – அஞ்ஞானியகிய நான்
தெளிவுரை:
கண்பார்வை இல்லாத குருடர்கள் என்று அறிந்து கொள்ளும் திறன் ஏதும் இல்லாத அறிவிலியாகிய கால்கள் ஊனமுற்றவன், அக்குருடர்கள் தம் நடனத்தைக் கண்டு மகிழ்வார்கள் என்று அவர்கள் முன்பாக நடனமாடுவது போலும்;
காதுகேளாத செவிடர்கள் என்று அறிந்து கொள்ளும் திறன் ஏதும் இல்லாத அறிவிலியாகிய பேசும் திறனற்ற ஊமையானவன், அச்செவிடர்கள் தம் பாடலைக் கேட்டு அதிசயம் அடைவார்கள் என்ற உறுதியுடன் பாடுவது போலும்;
கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் ஞான கலாசாலையைக் கனவில் கூடப் பார்க்காதவனும் , அங்கு ஞானம் என்பதை ஒருநாள் கூட கற்காத அஞ்ஞானியும் ஆகிய நான், எத்தகைய துணிவோடு இந்த நீதிநூலை வகுத்துப் பாடிட முயற்சி மேற்கொண்டேனோ !
விளக்கவுரை :
“குருடர்கள் முன்பாக கால்கள் ஊனமுற்றவன் ஆடுவது அறிவீனம். அதுபோலவே செவிடர்கள் முன்பாக ஊமைகள் பாடுவதும் அறிவீனம். ஆனால் கடல்சூழ் இவ்வுலகில் வாழும் ஞானியர்கள் முன்பாக கனவில்கூட ஞானசபையைக் காணாத நான், நீதி வகுத்துப் பாடத் துணிந்தது எந்த வகை அறிவீனம் என்பதோ! ”என்று தன்னைத் தாழ்த்தி அவையடக்கம் பாடுகிறார் நீதிபதி. ஆகா என்ன பணிவு! “வித்யா ததாதி வினயம் – கல்வி பணிவைத் தருகிறது” என்னும் வேதவாக்கியத்தை நூலாசிரியர் மெய்ப்பிக்கின்றார்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அருமையான பதிவு அன்பரே>
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் )
மறைநெறி நவிலும் நிறைமொழி
{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
அவையடக்கம்
பசுவை நோக்காது பாலைக் கொள்வதுபோல் பாட்டை நோக்காது பயனைக் கொள்க.
4
பயன்கொள்வோ ரதனை நல்கும் பசுவுரு விலதென் றோரார்
வியன்சினை வளைவு நோக்கார் விளைந்தீங் கனிப றிப்போர்
கயங்கொள்சே றகற்றித் தெண்ணீர் கைக் கொள்வா ரென்ன நூலின்
நயன்கொள்வ தன்றிப் பாவி னவையைநோக் கார்மே லோரே.
பதப்பொருள் :
பசு உரு- பால் தரும் பசுவின் உருவ அமைப்பு.
ஓர்தல் – சிந்த்திதுப் பார்த்தல்
வியன்சினை - மரக்கிளை
கயம் –கீழ்மை.
நயன் – நன்மைதரும் நீதி
அவை –பாடல்களின் எண்ணிக்கை.
தெளிவுரை:
பசுதரும் பருகும் பாலின் சுவையையும் அதன் நன்மையையும் கருதிப்பார்பவர்கள் அப்பசுவின் உயரம், நிறம், கொம்பின் நீளம், வயது, போன்ற உருவ அமைப்பை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்.
நன்கு முற்றிப் பழுத்த இனிய சுவைமிகு பழத்தை உண்பவர்கள், அது விளைந்த மரத்தின் கிளை கோணலாக இருப்பதைக் கருத மாட்டார்கள்.
மிகு தாகத்தால் வாடுபவர்கள், குடிக்கும் தெளிந்த தண்ணீரின் அடியில் கீழ்மையான சேறு இருப்பதை நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.
அதைப்போலவே என்பாட்டில் உள்ள நன்மை பயக்கும் நீதிநெறிகளை ஏற்றுக் கொள்ளும் சான்றோர்கள் பாடல்களின் எண்ணிக்கையை அதிகம் என்று சொல்லமாட்டார்கள்.
விளக்கவுரை :
நீதி நூலில் பாக்களின் எண்ணிக்கை 614 என்பது அதிக எண்ணிகையில் இருப்பினும் அவற்றைக் கருதாமல், அவற்றில் கூறப்பட்டுள்ள நல்ல நீதிகளைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்று நூலாசிரியர் விண்ணப்பிக்கின்றார்.
மறைநெறி நவிலும் நிறைமொழி
{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
அவையடக்கம்
பசுவை நோக்காது பாலைக் கொள்வதுபோல் பாட்டை நோக்காது பயனைக் கொள்க.
4
பயன்கொள்வோ ரதனை நல்கும் பசுவுரு விலதென் றோரார்
வியன்சினை வளைவு நோக்கார் விளைந்தீங் கனிப றிப்போர்
கயங்கொள்சே றகற்றித் தெண்ணீர் கைக் கொள்வா ரென்ன நூலின்
நயன்கொள்வ தன்றிப் பாவி னவையைநோக் கார்மே லோரே.
பதப்பொருள் :
பசு உரு- பால் தரும் பசுவின் உருவ அமைப்பு.
ஓர்தல் – சிந்த்திதுப் பார்த்தல்
வியன்சினை - மரக்கிளை
கயம் –கீழ்மை.
நயன் – நன்மைதரும் நீதி
அவை –பாடல்களின் எண்ணிக்கை.
தெளிவுரை:
பசுதரும் பருகும் பாலின் சுவையையும் அதன் நன்மையையும் கருதிப்பார்பவர்கள் அப்பசுவின் உயரம், நிறம், கொம்பின் நீளம், வயது, போன்ற உருவ அமைப்பை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்.
நன்கு முற்றிப் பழுத்த இனிய சுவைமிகு பழத்தை உண்பவர்கள், அது விளைந்த மரத்தின் கிளை கோணலாக இருப்பதைக் கருத மாட்டார்கள்.
மிகு தாகத்தால் வாடுபவர்கள், குடிக்கும் தெளிந்த தண்ணீரின் அடியில் கீழ்மையான சேறு இருப்பதை நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.
அதைப்போலவே என்பாட்டில் உள்ள நன்மை பயக்கும் நீதிநெறிகளை ஏற்றுக் கொள்ளும் சான்றோர்கள் பாடல்களின் எண்ணிக்கையை அதிகம் என்று சொல்லமாட்டார்கள்.
விளக்கவுரை :
நீதி நூலில் பாக்களின் எண்ணிக்கை 614 என்பது அதிக எண்ணிகையில் இருப்பினும் அவற்றைக் கருதாமல், அவற்றில் கூறப்பட்டுள்ள நல்ல நீதிகளைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்று நூலாசிரியர் விண்ணப்பிக்கின்றார்.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் )
மறைநெறி நவிலும் நிறைமொழி
{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
அவையடக்கம்
கடலுக்கு நீர் தரும் மழைபோல் கற்பித்தாரிடத்தே ஒப்புவித்தேன்
5
வேலைவா யுண்ட நீரை மேகஞ்சிந் தினுமே சிந்துங்
காலிடைக் கொண்ட நீரைக் கழனியக் காற்கு நல்கும்
பாலர்கற் றவையா சான்பாற் பகர்வர்யான் நாலு ணர்ந்த
சீலர்பாற் கற்றதன்னோர் செவியுற நவின்றே னம்ம.
பதப்பொருள் :
வேலை –கடல்.
சிந்துதல் –தெளித்தல்.
கால் – வாய்க்கால்.
தெளிவுரை:
கடலில் இருந்து சூரியனின் வெப்பத்தால் தான் முகந்து குடித்த நீரை மேகமானது மீண்டும் அந்த நீரையே அக்கடலிலேயே தெளித்து மழையைப் பெய்வித்தல் போலவும்;
ஏரி, கிணறு மற்றும் ஆறு போன்றவற்றிலிருந்து வாய்க்கால் வழியாகத் தான் பெற்ற விளை பயிர்களுக்காகும் நீரை அதேபோன்ற வயலின் கிளை வாய்க்கால் வழியாகவே பயிர்களுக்கு விளைநீரைக் கொடுப்பது போலவும் ;
குருகுலத்தில் ஸ்ரீகுருதேவரிடமிருந்து தாம் கற்ற கல்வியை அந்த குருதேவரிடமே ஒப்புவித்துக் காட்டும் மாணாக்கன் போலவும்;
இவ்வுலகில் நன்நெறிகளில் வாழ்ந்த சான்றோர்களிடம் நான் கற்ற கல்வியறிவை, ‘நீதிநூல்’ என்னும் பெயரில் அதே உலகத்தோர் செவிகளில் சொல்லுகின்றேனே ! ஐயகோ என் இத்தகைய அறியாமையாகிய செயலை என்னவென்பது!!
விளக்கவுரை :
நீதி நூலில் தாம் சொல்லப்போகும் நீதிகளை இவ்வுலகத்தில் வாழ்ந்த மற்றும் வாழ்கின்ற சான்றோர்களிடம் தான் நான் கற்றேன். அதனையே உங்களுக்கும் சொல்கின்றேன். “என்னே என் அறியாமை” என்பது நூலாசிரியரின் அவையடக்கம்.
மறைநெறி நவிலும் நிறைமொழி
{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
அவையடக்கம்
கடலுக்கு நீர் தரும் மழைபோல் கற்பித்தாரிடத்தே ஒப்புவித்தேன்
5
வேலைவா யுண்ட நீரை மேகஞ்சிந் தினுமே சிந்துங்
காலிடைக் கொண்ட நீரைக் கழனியக் காற்கு நல்கும்
பாலர்கற் றவையா சான்பாற் பகர்வர்யான் நாலு ணர்ந்த
சீலர்பாற் கற்றதன்னோர் செவியுற நவின்றே னம்ம.
பதப்பொருள் :
வேலை –கடல்.
சிந்துதல் –தெளித்தல்.
கால் – வாய்க்கால்.
தெளிவுரை:
கடலில் இருந்து சூரியனின் வெப்பத்தால் தான் முகந்து குடித்த நீரை மேகமானது மீண்டும் அந்த நீரையே அக்கடலிலேயே தெளித்து மழையைப் பெய்வித்தல் போலவும்;
ஏரி, கிணறு மற்றும் ஆறு போன்றவற்றிலிருந்து வாய்க்கால் வழியாகத் தான் பெற்ற விளை பயிர்களுக்காகும் நீரை அதேபோன்ற வயலின் கிளை வாய்க்கால் வழியாகவே பயிர்களுக்கு விளைநீரைக் கொடுப்பது போலவும் ;
குருகுலத்தில் ஸ்ரீகுருதேவரிடமிருந்து தாம் கற்ற கல்வியை அந்த குருதேவரிடமே ஒப்புவித்துக் காட்டும் மாணாக்கன் போலவும்;
இவ்வுலகில் நன்நெறிகளில் வாழ்ந்த சான்றோர்களிடம் நான் கற்ற கல்வியறிவை, ‘நீதிநூல்’ என்னும் பெயரில் அதே உலகத்தோர் செவிகளில் சொல்லுகின்றேனே ! ஐயகோ என் இத்தகைய அறியாமையாகிய செயலை என்னவென்பது!!
விளக்கவுரை :
நீதி நூலில் தாம் சொல்லப்போகும் நீதிகளை இவ்வுலகத்தில் வாழ்ந்த மற்றும் வாழ்கின்ற சான்றோர்களிடம் தான் நான் கற்றேன். அதனையே உங்களுக்கும் சொல்கின்றேன். “என்னே என் அறியாமை” என்பது நூலாசிரியரின் அவையடக்கம்.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் )
மறைநெறி நவிலும் நிறைமொழி
{நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
அவையடக்கம்
முறையைப் பழிப்பதாம் என் பாட்டைப் பழிப்பது
6
கோவிலைப் பழிக்கி னோரெண் குணனையும் பழித்த தொப்பாம்
காவினைப் பழிக்கின் ஆண்டார் கடிமலர்ப் பழித்த தொப்பாம்
வாவியைப் பழிக்கிற் கொண்ட வண்புனல் பழித்த தாமென்
பாவினைப் பழிக்கி னீதிப் பயனையும் பழித்த தாமே.
பதப்பொருள் :
எண்குணன் –பரம்பொருள்; எளிதில் அணுகத்தக்கவன்
கா - பூஞ்சோலை
ஆண்டார் - உடையோர்.
வாவி -நீர்இலை
வண்புனல் - பயன்தரும் நீர்
தெளிவுரை:
கடவுளுக்கென அமைக்கப்பட்டுள்ள திருக்கோவில்களைக் குறைகூறினால் அது கடவுளையே குறைசொல்லுவதற்கு நிகரானதாக அமையும்.
நல்ல மணம் பரப்பும் மலர்களைக் கொண்டுள்ள பூங்காவைனைக் குறைகூறினால் அப்பூங்காவில் மலர்ந்திருக்கும் மணம் வீசும் மலர்களைக் குறைகூறுவதாக ஆகிவிடும்.
நீர்நிலைகளைக் குறைசொன்னால், அதிலுள்ள பயன்தரும் நீரையே பழித்ததாகும்.
அதுபோலவே, என் படைப்பாகிய “நீதி நூலில் உள்ள” படல்களைத் தாழ்த்திச் சொல்வதால் அது நீதியின் பயனையே தாழ்த்திச் சொல்வதாகிவிடும்
விளக்கவுரை :
கடவுளின் எட்டுக்குணங்களாக (1) தன்வயத்தனாதல், (2) தூயஉடம்பினனாதல், (3) இயற்கைஉணர்வினனாதல், (4) முற்றுமுணர்தல், (5) இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல், (6) பேரருளுடைமை, (7) முடிவிலாற்றலுடைமை, (8) வரம்பிலின்பமுடைமை ஆகியன சொல்லப்படுகின்றன. அவை சரி என்றால் உலகில் மீதியுள்ள குணங்கள் எல்லாம் பின் எவருடையது என்னும் கேள்விக்குப் பதிலிருக்காது.
அனைத்துமாகும் பரம்பொருளுக்கு நற்குணம், தீய குணம் என்ற பாகுபாடு ஏது ! உலகில் நேர்மறையாவதும் எதிர்மறையாவதும் பரம்பொருளே. அதுவே உண்மை -அதுவே பொய். ஒளியும் அதுவே- இருளும் அதுவே. ஆனாலும் அந்த எட்டு குணங்களும் சான்றோர்களுக்கானவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
பரம்பொருளைப் பொருத்தவரை எண்குணன் என்பது எளிதில் அணுக முடிவது என்று பொருள் கொள்ளத்தக்கது. அதன் கூடவே எளிதில் அணுக முடியாதது என்பதும் கடவுளுக்குப் பொருந்தும். அதுதான் எல்லாமும் ஆயிற்றே!
கோலில்களில் இருப்பதாகக் கருதப்படும் தெய்வத்திற்கும், பூங்காவில் இருக்கும் மணம்வீசும் மலர்களுக்கும், நீர்நிலைகளில் இருக்கும் பயன்தரும் நீருக்கும் ஒப்பானதுதான் , தம் நீதி நூலில் தாம் கூறியுள்ள பாடல்கள் புகட்டும் நீதி என்று ஆணித்தரமாக புலவர் அவையடக்கம் பாடுகிறார். (இப்பாடலோடு அவையடக்கம் நிறைவுறுகிறது)
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் )
மறைநெறி நவிலும் நிறைமொழி
{நீதிநூல் – மாயூரம் முனிசீப். வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
அதிகாரம் 2.
தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
கடவுளை அகத்தில் காண்பதே காட்சி
31
பொங்கலை ஆழி தாண்டிப் பொருப்புகள் கடந்தோ யாமல்
அங்குமிங் குந்தி ரிந்தே யழிந்துபோ முடலைக் காப்பாய்
எங்கணு முள்ளோன் றாளுன் னிருக்கையி னிருந்து போற்றிப்
பங்கமில் சுகம்பெற் றுய்யப் பாரமென் பகராய் நெஞ்சே. 15
பதம்பிரித்த பாடல்:
{ பொங்கு அலை ஆழி தாண்டிப் பொருப்புகள் கடந்து ஓயாமல்
அங்கும் இங்கும் திரிந்தே அழிந்துபோம் உடலைக் காப்பாய்
எங்கணும் உள்ளோன் தான் உன்னிருக்கையில் இருந்து போற்றிப்
பங்கம் இல் சுகம் பெற்று உய்யப் பாரம் என் பகராய் நெஞ்சே }
பதப்பொருள்:
பொருப்பு – மலை
பங்கம் - குற்றம்; குறை
பாரம் – சுமை; துயரம்.
பகர்தல் – நினைத்தல்.
தெளிவுரை :
பரம்பொருளைக் காணும் பொருட்டு , பொங்கிவரும் அலைகளையுடைய கடலைக் கடத்தலும் , மலைகளைச் சிரமப்பட்டு ஏறி அதற்கு அப்பால் செல்லுதலும், அப்போதும் ஓய்வுகொள்ளாமல், அங்கும் இங்குமாகத் திரிந்து அலைவதாலும், சீர்கெட்டுப் போகும் கிடைத்தற்கு அரியதாகிய உன் மானுட உடம்பைக் கொஞ்சமும் சிரமம் இல்லாமல்காப்பாற்றிக் கொள்வாயாக.
எங்கும் பரந்து நிறைந்துள்ள பரம்பொருள் உன்னிலும் உள்ளான். உனக்கு அண்மையிலும் சேய்மையிலும் உள்ளான். அப்பரம்பொருளை நீ இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு போற்றி
வணங்கி குறைவற்ற சுகத்தைப் பெற்று இல்வாழ்விலும் ஆன்ம மேம்பாட்டிலும் வளர்ச்சிகண்டு , உனக்குள்ள துயரம் என்னும் சுமையைப் போக்கிக் கொள்ள நினையுங்கள் மனிதர்களே!
விளக்கவுரை :
பரம்பொருள் எங்கும் உள்ளது. அதனைக் காலம், பொருள், ஆற்றல், உடல்நலம் ஆகியனவற்றை விரையும் செய்து தேடாமல் இருந்த இடத்திலேயே அறிந்து, உணர்ந்து, தெளிந்து , வணங்கி, வழிபட்டு மேன்மை அடைந்து துயரத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் என்பது கருத்து.
மறைநெறி நவிலும் நிறைமொழி
{நீதிநூல் – மாயூரம் முனிசீப். வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது}
அதிகாரம் 2.
தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
கடவுளை அகத்தில் காண்பதே காட்சி
31
பொங்கலை ஆழி தாண்டிப் பொருப்புகள் கடந்தோ யாமல்
அங்குமிங் குந்தி ரிந்தே யழிந்துபோ முடலைக் காப்பாய்
எங்கணு முள்ளோன் றாளுன் னிருக்கையி னிருந்து போற்றிப்
பங்கமில் சுகம்பெற் றுய்யப் பாரமென் பகராய் நெஞ்சே. 15
பதம்பிரித்த பாடல்:
{ பொங்கு அலை ஆழி தாண்டிப் பொருப்புகள் கடந்து ஓயாமல்
அங்கும் இங்கும் திரிந்தே அழிந்துபோம் உடலைக் காப்பாய்
எங்கணும் உள்ளோன் தான் உன்னிருக்கையில் இருந்து போற்றிப்
பங்கம் இல் சுகம் பெற்று உய்யப் பாரம் என் பகராய் நெஞ்சே }
பதப்பொருள்:
பொருப்பு – மலை
பங்கம் - குற்றம்; குறை
பாரம் – சுமை; துயரம்.
பகர்தல் – நினைத்தல்.
தெளிவுரை :
பரம்பொருளைக் காணும் பொருட்டு , பொங்கிவரும் அலைகளையுடைய கடலைக் கடத்தலும் , மலைகளைச் சிரமப்பட்டு ஏறி அதற்கு அப்பால் செல்லுதலும், அப்போதும் ஓய்வுகொள்ளாமல், அங்கும் இங்குமாகத் திரிந்து அலைவதாலும், சீர்கெட்டுப் போகும் கிடைத்தற்கு அரியதாகிய உன் மானுட உடம்பைக் கொஞ்சமும் சிரமம் இல்லாமல்காப்பாற்றிக் கொள்வாயாக.
எங்கும் பரந்து நிறைந்துள்ள பரம்பொருள் உன்னிலும் உள்ளான். உனக்கு அண்மையிலும் சேய்மையிலும் உள்ளான். அப்பரம்பொருளை நீ இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு போற்றி
வணங்கி குறைவற்ற சுகத்தைப் பெற்று இல்வாழ்விலும் ஆன்ம மேம்பாட்டிலும் வளர்ச்சிகண்டு , உனக்குள்ள துயரம் என்னும் சுமையைப் போக்கிக் கொள்ள நினையுங்கள் மனிதர்களே!
விளக்கவுரை :
பரம்பொருள் எங்கும் உள்ளது. அதனைக் காலம், பொருள், ஆற்றல், உடல்நலம் ஆகியனவற்றை விரையும் செய்து தேடாமல் இருந்த இடத்திலேயே அறிந்து, உணர்ந்து, தெளிந்து , வணங்கி, வழிபட்டு மேன்மை அடைந்து துயரத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் என்பது கருத்து.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|