புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
3 Posts - 4%
Baarushree
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
2 Posts - 3%
viyasan
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
2 Posts - 3%
prajai
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
2 Posts - 3%
சிவா
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
1 Post - 1%
manikavi
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
1 Post - 1%
Rutu
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
2 Posts - 6%
viyasan
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
1 Post - 3%
Rutu
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
1 Post - 3%
manikavi
நானின்றி நீயேது ? Poll_c10நானின்றி நீயேது ? Poll_m10நானின்றி நீயேது ? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானின்றி நீயேது ?


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 26, 2016 3:20 pm


நானின்றி நீயேது ?
...நடவின்றி பயிரேது ?
ஊனின்றி உயிரேது ?
...உறவின்றி சுகமேது ?

வானின்றி மழையேது ?
...வரவின்றி செலவேது ?
தேனின்றி சுவையேது ?
...தெய்வத்தின் திருவுருவே !

நாவின்றி சொல்லேது ?
...நகமின்றி விரலேது ?
பூவின்றி காயேது ?
...புதனின்றி நாளேது ?

நீரின்றி உலகேது ?
...நிலவின்றி வானேது ?
தேரின்றி வருகின்ற
...தெய்வம் நீதானே !






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 26, 2016 5:45 pm

நன்றி ,அருமை ,Jagadeesan அவர்களே .

ஒன்றின்றி மற்றதில்லை
அறிந்தால் யாவருக்கும் நலமே .

( புதனின்றி நாளேது? இது ஒன்று மட்டும் சரியாக புரியவில்லை .விளக்கினால் நலம் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri Aug 26, 2016 5:53 pm

பின்னூட்டம் எழுதுங்க

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 26, 2016 6:27 pm

பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள் . மாதங்களில் சிறந்தது மார்கழி . அதுபோல நாள்களில் சிறந்தது புதன்கிழமை . புதன்கிழமை இல்லாவிட்டால் மற்ற நாள்கள் இருந்து பயனில்லை என்ற கருத்தில் எழுதினேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 26, 2016 7:26 pm

M.Jagadeesan wrote:பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள் . மாதங்களில் சிறந்தது மார்கழி . அதுபோல நாள்களில் சிறந்தது புதன்கிழமை . புதன்கிழமை இல்லாவிட்டால் மற்ற நாள்கள்  இருந்து பயனில்லை என்ற கருத்தில் எழுதினேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1220066

நன்றி M Jagadeesan .
இது சம்பந்தமாக எந்தன் பதிவு 1/10/2010 இல் ஈகரையில் பதிவாகி உள்ளது ( eegarai .net /t43462/#412572)

உங்களுக்காக ,மீண்டும் .
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது ,நாம் அடிக்கடி கேட்கும் ஒரு பழமொழி. பொதுவாக துணிமணிகள் , நகைகள் வாங்கும் போதும்,வீட்டில் விசேஷங்களுக்கு நாள் குறிக்கும் போது ,அதிகமாக உபயோகப்படும் பழமொழி.

உண்மையில், மாறாக அல்லவோ இருக்கிறது. தங்கம் விலை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டே இருக்கிறது.பொன் கிடைப்பது எட்டாக்கனியாக இருக்கிறது.

வாரத்திற்கு ஒரு முறை புதன் கிழமை வந்து கொண்டு தானே இருக்கிறது.

அர்த்தம் புரியாமல்,உபயோகித்து வரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று.

உண்மை என்னவென்று பார்ப்போமா?

பொன் என்பது பொன்னன் என்றும் அழைக்கப் படும் ஜுபிட்டர்(குரு) கிரகம் அதன் பொன்னிற நிறத்தால் அடைந்த பெயர்.
புதன் என்பது மெர்குரி என்று அழைக்கப்படும் மற்றுமொரு கிரகம். நம்முடைய பால் வீதியில்,சூரியனை வலம் வரும் பல கிரகங்களில் இவை இரெண்டும் நம் பழமொழியின் கதா நாயகர்கள்.

சூரியனை சுற்றி வரும் கிரகங்களின் நீள்வட்ட பாதைகள் ஒன்றுக் கொன்று மாறுபடும். சூரியனுக்கு பக்கத்தில் புதன் கிரகம், அடுத்து வெள்ளி,அதற்கு அடுத்து பூமி,அதற்கு அடுத்து செவ்வாய்,அதற்கு அடுத்து குரு என்கிற ஜுபிட்டர் என்கிற பொன் நிறம் கொண்ட பொன்னன் .கடைசியாக சனி.

நாம் ஜுபிடர் ஐயும் மெர்குரி ஐயும் மாத்திரம் இப்போது எடுத்துக் கொள்வோம்.

ஜுபிடரின் (பொன்னன் ) / மெர்குரி (புதன்) வானவியல் அடிப்படைகள் /உண்மைகள்.

சூரியனிடம் இருந்து ஜுபிடர் கிரகத்தின் தூரம் 778300000 கிலோ மீட்டர்./ புதன் தூரம் 57900000 கிலோமீட்டர்.---(Disance )
ஜுபிடர் கிரகத்தின் விட்டத்தின் அளவு 142800 கிலோமீட்டர் ./ புதன் கிரகத்தின் விட்டம் 4878 கிலோமீட்டர் { விட்டம்.( diameter )}

சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் : ஜுபிடர் 11 .86 வருடங்கள். ( 12 வருடம்)
புதன் 88 days .

அதாவது, ஜூபிடரை ,மெர்குரியுடன் ஒப்பிடும் போது, சூரியனில் இருந்து ஜுபிட்டர் 14 மடங்கு தூரத்தில் இருக்கிறது. ஜுபிடரின் உருவம் மெர்குரியின் உருவத்தை விட 29 அளவு பெரியது.

ஜுபிட்டர் 12 வருடத்துக்கு ஒரு முறை சூரியனை சுற்ற ,மெர்குரியோ வருடத்திற்கு நாலு முறை சூரியனை சுற்றுகிறது.
மெர்குரி சூரியனுக்கு அருகில் இருப்பதால் சூரியனின் ஒளியில் இதை பார்ப்பது இது கடினம். மேலும் சுற்றி வரும் தூரம்/ வேகத்தால் நம் கண்களில் படும் நேரம் மிக மிக குறைவு. இதன் உருவமும் சிறியது.

ஆனால்,ஜுபிட்டர் ,உருவத்தில் பெரியது, சுற்றி வரும் தூரம் /சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் -அதிகம்.
சூரியனை விட்டு மிகவும் தூரத்தில் இருப்பதால் ,சூரிய ஒளியின் தாக்கம் ,புதனை ஒப்பிடுகையில் குறைச்சல். வெறும் கண்களால் சில சமயம் ஜூபிடரை பார்க்க முடியும் ( சமிபத்தில் செப் 23 வெறும் கண்களுக்கு இரவில் தென்பட்டது.) புதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது.

இப்போது பழமொழிக்கு மறுபடியும் வருவோம்.

பொன் (தரிசனம்-கண்ணுக்கு ) கிடைத்தாலும் கிடைக்கும்.
புதன் (தரிசனம் -கண்ணுக்கு) கிடைக்காது.

சமயம் வரும்போது நீங்களும்,இவ்வுண்மைகளை எடுத்துக் கூறி, ஒரு பெரிய "ஓ" வை பெற்றுக் கொள்ளுங்கள்.

ரமணீயன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 26, 2016 8:12 pm

தங்களுடைய விளக்கம் இதுவரையில் நான் கேள்விப்பட்டிராத ஒன்று. ஆனாலும் ஏற்றுக் கொள்ளும்படி உள்ளது .மிக்க நன்றி .

மணப்பெண் கிடைத்தாலும் , புதன்கிழமை முகூர்த்த நாள் கிடைக்காது என்ற கருத்தில் அந்தப் பழமொழி இருப்பதாகவே எண்ணியிருந்தேன் .

மணப்பெண் கிடைப்பதுதான் அரிது . பொன் எப்போது வேண்டுமானாலும் GRT க்குப் போனால் கிடைக்கும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 26, 2016 8:53 pm

பொன் எப்போது  வேண்டுமானாலும் பிரபல கடைகளிலும்  கிடைக்கும் .22 கேரட் என்று  அறுதியிட்டு கூற முடியுமா ?
பொண்ணும் கிடைக்கிறார்கள் ! எவ்வளவு கேரட் என்று சொல்ல முடியாது .

ஆனால் பழமொழி பொன்னுக்கும் புதனுக்கும்தான் .
பொண்ணுக்கும் புதனுக்கும் இல்லை .

எனக்கு தெரிந்து செவ்வாய் /சனிக்கிழமைகளில் மணம் முடிப்பதில்லை.
மீதி ஐந்து தினங்களில் , நாளும் கோளும் சுப கிரகங்களில் இருந்தால் மணம் நிச்சயிக்கலாம் . சில மாதங்கள் ஏற்புடை இல்லை . 
அந்த தினங்களில் அசுப கிரகங்கள் இருந்தால் அவை சுபமுகூர்த்த தினங்களாக கருதப்படுவது இல்லை.

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

எந்தன் மேற்கண்ட பதிவு கூகிள் தளத்திலும் ,பழமொழிகள் ,தலைப்பில் பதிவாகி உள்ளன . புன்னகை புன்னகை

ர...ன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Aug 26, 2016 9:01 pm

நன்றி நன்றி நன்றி நானின்றி நீயேது ? 3838410834 நானின்றி நீயேது ? 1571444738



நானின்றி நீயேது ? 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக