புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
3 Posts - 3%
prajai
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
3 Posts - 3%
manikavi
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
2 Posts - 2%
Rutu
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
1 Post - 1%
Kavithas
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
214 Posts - 42%
heezulia
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
18 Posts - 4%
sugumaran
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
6 Posts - 1%
manikavi
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
4 Posts - 1%
prajai
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_m10சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது


   
   

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 02, 2016 12:38 pm

சென்னை இளம் பெண் சுவாதி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட நபரை போலீஸ் தனிப்படை நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் கைது செய்தது.

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Ramkumar_2917293a



போலீஸ் தகவல்:

கைது நடவடிக்கை குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு போலீஸ் உயரதிகாரி ஒருவர் அளித்தப் பேட்டியில், "நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்திலிருந்து ராம்குமாரை கைது செய்தோம்.ராம்குமார் பொறியியல் பட்டதாரி. வயது 22. இவர் கடந்த சில மாதங்களாக சென்னை சூளைமேட்டில் ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், சுவாதியை கொலை செய்த ராம்குமார் மறுநாளே சொந்த ஊருக்குச் திரும்பியிருக்கிறார்.

சுவாதியின் செல்போன் சிக்னல் செங்கோட்டை அருகே இருந்து கிடைக்கப்பெற்றதையடுத்து போலீஸ் தனிப்படை அங்கு விரைந்தது. சுவாதி கொலையில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்ட அந்த நபரின் வீட்டை முற்றுகையிட்ட போது ராம்குமார் பிளேடால் தனது கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து ராம்குமாரை உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயம் ஆழமாக இல்லை என கூறிய மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து அவரை காப்பாற்றியுள்ளனர். ராம்குமார் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். தற்போது அவர் இருக்கும் நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்.

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது As_mansion_2917299a

குற்றவாளி ஒப்புதல்:

சுவாதி கொலையை தான் செய்ததாக ராம்குமார் ஒப்புக்கொண்டதாக போலீஸார் வட்டாரம் தெரிவிக்கின்றது. அதிகாரபூர்வ அறிவிப்பை போலீஸ் உயரதிகாரிகள் விரைவில் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாதி வீட்டருகேயே தங்கியிருந்த ராம்குமார்:

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சென்னை சூளைமேட்டில் சுவாதி வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியிருந்திருக்கிறார்.

சுவாதி கொலை வழக்கு இதுவரை:

கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த இளம் பெண் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் 2-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளி யார் எனத் தெரியாமல் ரயில்வே போலீஸார் திணறி வந்தனர்.

இந்நிலையில், ரயில் நிலையத்துக்கு அருகே ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் கொலையாளியாக இருக்கக்கூடும் என்ற சந்தேக நபரின் உருவம் பதிவாகியிருந்தது. தொடர்ந்து கிடைக்கப்பெற்ற சிசிடிவி பதிவில் அதே நபர் ரயில் நிலையத்தின் நடை மேடையில் கொலை நடந்த சில விநாடிகளில் வேகமாக ஓடும் காட்சி பதிவானது தெரியவந்தது. இதைவைத்து போலீஸார் கொலையாளியை உறுதி செய்தனர். ஆனால் அவரைப் பற்றிய கூடுதல் விவரம் ஏதும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சுவாதி கொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கில் ஏன் தொய்வு ஏற்படுகிறது எனக் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனையடுத்து வழக்கு ரயில்வே போலீஸாரிடம் இருந்து சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சென்னை போலீஸ் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் சுவாதி கொலையாளியைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்தார். சுவாதியின் குடும்பத்தினர், நண்பர்கள், அவர் பணி செய்த அலுவலகம் பெங்களூரூ, மைசூரூவில் அவர் பயிற்சி பெற்ற அலுவலகங்கள் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் ஜூலை 2 அதிகாலை நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்திலிருந்து சுவாதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட ராம்குமார் என்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
--தி இந்து



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 02, 2016 12:41 pm

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியை கொலை செய்த ராம்குமார் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது 1467441869-6374

நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த இவர் காவல் துறை கைது செய்ய வருவதை அறிந்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர்.

ராம்குமாருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்த பின்னர் ராம்குமார் பேச ஆரம்பித்ததாகவும், காவல் துறை அவரிடம் பேச்சு கொடுத்து வாக்குமூலம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

ராம்குமார் தனது வாக்குமூலத்தில், நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பை முழுமையாக முடிக்காமல் சென்னை சூளைமேட்டில் தங்கி இருந்து ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும், அப்போதுதான் சுவாதியுடன் அறிமுகம் கிடைத்து கடந்த 4 மாதமாக பழகி வந்ததாக கூறினார்.

மேலும், தான் வேலைக்கு நடந்து செல்லும் போது சுவாதியுடன் பேச ஆரம்பித்ததாகவும், தன்னை பொறியியல் பட்டதாரி என அறிமுகம் செய்துகொண்ட ராம்குமார் நாளடவில் சுவாதியை காதலிக்க ஆரம்பித்ததாகவும் கூறினார்.

நான், பொறியியல் படிப்பை முடிக்காததும், ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருவதும் தெரிந்த சுவாதி என்னிடம் பேசுவதை தவிர்த்தார். இந்நிலையில் என்னுடைய காதலை சுவாதியிடம் கூறினேன். சுவாதி என்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளாமல் என்னை சந்திப்பதையும் தவிர்த்தார்.

பின்னர் வேலைக்கு ரயில் நிலையத்துக்கு வரும்போது அவரது தந்தையுடன் வர ஆரம்பித்தார். இதனால் சுவாதியை சந்திக்க என்னால் முடியவில்லை. பின்னர் 2 முறை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை சந்தித்து எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி அவரிடம் கெஞ்சினேன்.

ஆனால் எனது காதலை ஏற்றுக்கொள்ளாத சுவாதி, உனக்கும் எனக்கும் எந்தவித பொருத்தமும் இல்லை என திட்டி எனது காதலை நிராகரித்தார். இதனால் ஆத்திரமடைந்து சுவாதியை கொல்ல திட்டமிட்டு இரண்டு நாட்களாக பின் தொடர்ந்தேன்.

இறுதியாக கடந்த 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை சந்தித்து எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி மீண்டும் கெஞ்சினேன். ஆனால் அவள் அப்பொழுதும் எனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுவாதியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினேன் என ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் ராம்குமாரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. ஆனல் அவர் அந்த கேள்விக்கு பதில் ஏதும் சொல்லவில்லை.
வெப்துனியா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 02, 2016 12:55 pm

பாவம் ! இனி அவன் வாழ்க்கை நரகம்தான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 02, 2016 5:18 pm

இதற்கெல்லாம் ஒரே காரணம் சினிமா தான்.

வேலைவெட்டிக்கு போகாத / படிக்காத எந்த பொறுக்கியும் பணக்காரன் அல்லது படித்த மேற்பதவியில் உள்ள பெண்ணை காதலிக்கலாம்!! கடத்திக்கொண்டு போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்று திரைப்படங்களில் காட்டப்படும் போது அதையே இவனை போன்றவர்கள் நடைமுறையில் செயல்படுத்த பார்க்கிறார்கள்.


பொறியியல் படித்து உலகளவில் முன்னணியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணை பொறியியல் படிப்பை முடிக்காமல் ஜவுளிக்கடையில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பொறுக்கி தனது தராதரம்தெரியாமல் காதல் என்ற போர்வையில் சுற்றி வந்து இப்ப அந்த பெண்ணின் உயிரை எடுத்துருக்கிறான்.




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 02, 2016 6:08 pm

இது ஒருதலைக் காதல் . அந்தப் பெண் காதலிக்கவில்லை என்பது தெரிகிறது. இருவருக்கும் இடையில் மலைக்கும் , மடுவுக்கும் உள்ள வேறுபாடு . ஆனாலும் காமம் அவனை விடவில்லை . காமம் இல்லாத அந்தப் பெண்ணைத் துன்புறுத்தியும் ,பழித்துப் பேசியும் இன்புற்றிருக்கிறான் .ஆனால் இவனுக்குச் சாதகமாக அந்தப் பெண் எதையும் செய்யவில்லை . அதுவே அவனைக் கொலைசெய்யத் தூண்டியது .

ஒருதலைக்காதல் கைக்கிளை எனப்படும் . அதன் இலக்கணம் ,

காமஞ்சாலா இளமை யோள்வயின்
ஏமஞ்சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறான் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே .

- தொல்காப்பியம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 02, 2016 6:49 pm

மூன்றாம் தர அப்படங்கள் தான் சூப்பர் ஹிட் படங்கள். நடித்தவர்களுக்கு அவார்ட். வாழ்க வாழ்க.




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jul 02, 2016 7:16 pm

அவன் கொன்றது, அவனை பிடித்தது, நாளை அவனை என்கவுண்டர் செய்வது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்தப் பொறுக்கி பொறம்போக்கு கொலை பண்ணியது போலவே, அம்மா மற்றும் 3 பெண் குழந்தைகளை கொன்றவனின் வழக்கு என்னாச்சு.

விஷ்ணுப்பிரியா தற்கொலை(?????) வழக்கின் நிலை என்ன?

இதுபோன்ற கேள்விகள் எழுகிறது மனதில்.

இவ்வளவு துரிதமாய் செயல்பட்டது போலவே, மற்ற வழக்கினையும் முடிக்கலாம்தானே, ஏன் இயலவில்லை.

இன்னும் பல என் மனதில், பதிவிட தோன்றவில்லை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 02, 2016 8:36 pm

யாரிடமும் விதி விளையாடாமல் விட்டு விடுவதில்லை. எல்லாம் வல்ல அவனின் திருவிளையாடல்களே>>>>>>>>>>>>>>

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 02, 2016 10:57 pm

வழக்கு முடியவில்லை செந்தில். இனிமே தான் ஆரம்பம் ஆகும் ஆட்டம். இதுக்குன்னு ஒரு வக்கீல் கூட்டம் இருக்கு, அது களத்தில் இறங்கும் அவனுக்காக வாதாடும்.

அடுத்த வீட்டு பிள்ளைக்கு அருவாள், இவனுக்கு அரை ப்ளேடா? இவனை அதே இடத்தில் போட்டுத் தள்ளி இருக்க வேண்டும்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 03, 2016 12:27 am

யினியவன் wrote:வழக்கு முடியவில்லை செந்தில். இனிமே தான் ஆரம்பம் ஆகும் ஆட்டம். இதுக்குன்னு ஒரு வக்கீல் கூட்டம் இருக்கு, அது களத்தில் இறங்கும் அவனுக்காக வாதாடும்.

அடுத்த வீட்டு பிள்ளைக்கு அருவாள், இவனுக்கு அரை ப்ளேடா? இவனை அதே இடத்தில் போட்டுத் தள்ளி இருக்க வேண்டும்.
உடனே கொல்லக்கூடாது அண்ணா ,

ஒரு படத்தில் (நடிகர் கரண் படமென்று நினைக்கிறேன் ) கதாநாயகனுக்கு கொடுமையான தண்டனை கொடுப்பார்கள் , உடம்பில் உயிரை மட்டும் வச்சுட்டு நடைபிணமாக ஆக்கியிருப்பார்கள் . எனக்கு இந்தப்படமும் அதன் கதையும் நினைவில்லை , ஆனால் அந்த தண்டனைக்கு பிறகு அந்த கதாநாயகன் தன் உயிரை போக்கிக்கொள்ள கூட இயலாதவனாக இருப்பான். அது போல இவனுங்களை செய்யவேண்டும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக