புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
1 Post - 1%
சிவா
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
1 Post - 1%
bala_t
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
1 Post - 1%
prajai
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
296 Posts - 42%
heezulia
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
6 Posts - 1%
prajai
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஓளவையார் Poll_c10ஓளவையார் Poll_m10ஓளவையார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓளவையார்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 24, 2016 11:34 pm

இந்தத் தளத்தில் ஏற்கனவே ஒளவையார் பற்றி சில தகவல்கள் இருப்பதைக் கண்டேன். அதனால் அவற்றை நீக்கி வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
அந்தப் பதிவை படிக்க.....



இலக்கியப் பாடல்களைத் தவிர படைப்பாளர்களைப் பற்றியொ புலவர்களைப் பற்றியோ நாம் வாதிட முடியாது. பாடல்கள் வரலாற்றுத் தகவல்கள் தவிர மற்றவை எல்லாமே  ஆதாரங்கள் இல்லாத வாய்மொழித் தகவல்கள் தான். வள்ளுவருக்கு பெயர் சூட்டினோம்,வாசுகி என்ற மனைவியை உருவாக்கினோம்,உருவத்தையும் கொடுத்திருக்கிறோம்.

அதே போல் ஒளவையார் (சிலர் அவ்வையார் எனவும் எழுதுகின்றனர்) பற்றியும் பல வாய்மொழிக் கதைகள் உண்டு. அவை முக்கிய மூன்று  ஒளவையாரில் யாரைப் பற்றியது என்பது சரியாக தெரியவில்லை.ஆனாலும் 12 ம் நூற்றாண்டைய கம்பர் காலத்து ஒளவையார் தான் கூன் கண்ட மூதாட்டியாக அறியப்படுகிறார்.

ஒளவையார் காத்தில் வாழ்ந்த கம்பன் சிறந்த புலவனாக இருப்பினும்,பணத்துக்காகவும் வசதிக்காகவும் புலமையை விற்றான் என்று அன்று வாழ்ந்த புலவர்களின் கருத்தாக உள்ளது.இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக.....

ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டு -அம்பர் -என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்தவர்,  களைப்பு மிகுதியால்  ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.அந்த வீட்டில் இருந்த சிலம்பி என்ற தாசி, தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்டதும், தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொண்டு வந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.அதைக் அருந்திய ஒளவைப்பாட்டி,
அந்த வீட்டின் சுவற்றிலே கரியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:

தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே,

இது என்ன? என்று கேட்ட ஒளவைக்கு,குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள், மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு, நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து, என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன்.
அதற்குக் கம்பர், ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும், 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும் என்றும் கூறி, கரிக் கட்டியால் இந்த இரண்டு வரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன், என்று சிலம்பி கூறவே,

அந்த வரிகளுக்குக் கீழே இரண்டு வரிகளை சேர்த்து எழுதி  பூர்த்தி செய்து விட்டு சென்றாள் ஒளவை.அது.......

பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

என்பதாகும். முழுப்பாடலாக,

தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு.

ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் பொற்சிலம்பு  அணியுமளவிற்குப்  செல்வச் செழிப்புடன் வாழ்ந்தாள்.

இனித்தான் ஆட்டம் ஆரம்பம்..............நாளை

sundarr.sa
sundarr.sa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 27/01/2015

Postsundarr.sa Fri Jun 24, 2016 11:58 pm

சூப்பர்...இந்தக் கதை நான் கேட்டிருக்கேன் மூர்த்தி..............தொடருங்கள் ........ ஓளவையார் 3838410834 ஓளவையார் 3838410834 ஓளவையார் 3838410834 சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2016 12:15 am

sundarr.sa wrote:சூப்பர்...இந்தக் கதை நான் கேட்டிருக்கேன் மூர்த்தி..............தொடருங்கள் ........ ஓளவையார் 3838410834 ஓளவையார் 3838410834 ஓளவையார் 3838410834 சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1212504

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 25, 2016 6:34 am

நன்று மூர்த்தி.

தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய அறிஞர் . மு . அருணாசலம் ஆறு ஒளவையார்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். நீதி நூல்களைப் பாடிய ஒளவையாரே அனைவரிலும் புகழ் மிக்கு விளங்குகிறார் .

ஒளவை , அவ்வை என்று எழுதுவதில் தவறு ஒன்றுமில்லை என்பார் அறிஞர் தமிழண்ணல் அவர்கள் .
ஒளவை என்பது பழைய வடிவம் , அவ்வை என்பது பிற்பட்ட வழக்கு . எழுத்துப் போலியால் அமைந்தது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 25, 2016 3:08 pm

நான் அவற்றைப் படிக்கவில்லை.தகவலுக்கு நன்றி ஐயா.

ரமணியன் ஐயாவுடன் மோதினால் கவிதை மழையாக பொழிவார். எனக்கோ சுத்தமாக கவிதை பாட வராது. மலையும் மண்குதிரும் மோதுவதாக இருக்கும்.

ஆனால் இங்கே இரண்டு மலைகள் மோதுகின்றன. இங்கே புதிர் போட்டவர் கம்பன், புதிருக்கு விடை கொடுத்தவர் ஒளவை.

அப்போது இராமாயணம் கம்பனால் பாடப்பெறாத காலம். 500 பொற்காசுகள் கம்பனைப் பொறுத்தவரை மிகப் பெரிய தொகையாயிற்றே. அதுவும் ஒளவையால் போய் விட்டது, மானமும் போயிற்று என்று வருந்தினான் கம்பன்.

தான் 500 பொற் காசுகள் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை, ஔவையார் கூழுக்குப் பாடி செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி தன் மானத்தையும் வாங்கி விட்டாளே என்று ஔவையார் மீது வெறுப்புக் கொண்டார். அதற்காக வஞ்சம் தீர்க்க எண்ணியிருந்த கம்பனுக்கு அதற்கான சந்தர்ப்பமும் கிடத்தது.

கம்பன் அவைக்களப் புலவராக இருந்த சோழமன்னன் அவைக்கு, அரசனைக் காண ஔவையார் வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை அவமானப்படுத்த எண்ணம் கொண்டு ஒரு புதிராக, ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் என்று சிலேடையாக இரு பொருள் படும்படியாக, ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,அத்துடன் தன் கோபத்தையும் காட்டி -டீ- (பெண்களை மரியாதையற்று அழைப்பதைப் போல்)

ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ-
என்று ஒரு புதிரை வைத்தார்.
ஒளவை சும்மா இருப்பாளா? கொடும் சினத்துடன்.............-டீ- க்கு -ஒரு -டா- போட்டு,

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது.
என்று பாட்டாகவே பதிலடி கொடுத்தார்.

இந்தச் சம்பவத்தை சிலர் காளமேகத்தை நோக்கி ஒளவையார் பாடியதாக சொல்வர். ஆனால் காளமேகம் காலமும் (15 ம் நூற்.) ஒளவையார் காலமும் (12 ம் நூற்.) ஒத்துப் போகவில்லை.

இப்படிச் சிலேடையாகப் பாடுவது புலவர்கள் மட்டுமல்ல, பொது வாழ்விலும் கையாளப்படுகிறது.ஒரு சொல்லை அல்லது சொற்தொடரை பொது இடத்திலும் பலரின் முன்னிலையிலும் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லும் வழக்கம் அன்று மட்டுமல்ல இன்றும் வழக்கத்தில் உள்ளது. கொல்லைப்பக்கம் , இயற்கை உபாதை இப்படியான வார்த்தைகளை இன்றும் பாவிப்பதைக் காணலாம்.
இப்படி மறைமுகமாக சொல்வது தமிழ் இலக்கணத்தில் -இடக்கரடக்கல்- எனப்படும். ஆங்கிலத்தில் Euphemism எனச் சொல்லப்படும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 25, 2016 5:56 pm

நல்ல சுவையான பாடல்கள் . நினைவுபடுத்திய மூர்த்தி அவர்களுக்கு நன்றி .

 "ஒருகாலில் நாலிலைப் பந்தலடி " என்று வரவேண்டும் . ( ஆதாரம் : 'அவ்வையார் '- தமிழண்ணல் )

"ஒருகாலடீ " என்று வரும்போது வெண்பா இலக்கணம் தளை தட்டுகிறது .
நிறை நேர் நிறை  என்று வந்து கனிச்சீர் வருகிறது . வெண்பாவில் கனிச்சீர் வருதல் கூடாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 25, 2016 6:30 pm

இரு கவிஞர்கள் பாடிய பாடல் . அருமையாக இருந்தது .

ஆழ்ந்து பாருங்கள் . முதலிரண்டு வரிகள் கம்பர் பாடியதாக உள்ளது .
சிலம்பி கொடுத்தது 500 பொற்காசுகள் , தன்னை பாடச் சொல்லி
கம்பர் பாடியது சோழன் ஆளும் சோழ மண்டலத்தை பற்றி ......
பெற்றுக் கொண்டது 500 பொற்காசுகள்
ஒளவையார் பாடி வாழ்த்தியது சிலம்பியை .
பெற்றுக்கொண்டது பசியாற்றிய கூழ் .

எவ்வளவு பெரிய முரண்பாடு ? நடந்திருக்குமா ?

murthy wrote:இலக்கியப் பாடல்களைத் தவிர படைப்பாளர்களைப் பற்றியொ புலவர்களைப் பற்றியோ நாம் வாதிட முடியாது. பாடல்கள் வரலாற்றுத் தகவல்கள் தவிர மற்றவை எல்லாமே ஆதாரங்கள் இல்லாத வாய்மொழித் தகவல்கள் தான். வள்ளுவருக்கு பெயர் சூட்டினோம்,வாசுகி என்ற மனைவியை உருவாக்கினோம்,உருவத்தையும் கொடுத்திருக்கிறோம்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 25, 2016 7:44 pm

ஏற்கனவே கிரிஷ்ணாஅம்மா வின் பதிவில் கருத்துகள் பதிவிடப்பட்டன.
மீண்டும் பதிவிட்டதற்குக் காரணம், சிலேடையாகவும் இடக்கரக்கல் ஆகவும் கருத்துகளை சொல்லியும் பேசியும் மனிதனாக நடந்து கொண்ட தமிழன், நாகரிகமாக சொல்லக்கூடிய சொற்களைக் கூட மறைமுகமாக சொல்லி நாகரிகம் வளர்த்த தமிழர்கள், பெண் ஒருவள் கொலை செய்யப்படுகிறாள்,தடுக்கவில்லை,குற்றுயிராய் கிடந்த அவளுக்கு முதலுதவி கூட செய்ய திராணியற்று தமிழினம் வேடிக்கை பார்த்து நிற்கிறதே? சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பது போல் வேடிக்கை பார்த்து நிற்கிறோமே என்ற ஆதங்கம் தான்.


avatar
Guest
Guest

PostGuest Sat Jun 25, 2016 7:46 pm

வரலாற்று இலக்கியக் கதைகளை கதைகளாக படிக்க வேண்டுமே தவிர,முழுவதும் உண்மைத்தன்மை இருக்குமென சொல்ல முடியாது.இவை யாவும் வாய்மொழிக் கதைகளே. கம்பர் வாழ்ந்த காலம் 9-10-12 ம் நூற்றாண்டு என வேறுபட்ட ஆய்வுகள் சொல்கின்றன. கன்னடக் கல்வெட்டுகள் 12 க்கு முன்னர் 10 இல் என சொல்கின்றன.

அம்பிகாபதி-அமராவதி கதையும் கம்பரை வைத்து சொல்லப்பட்டாலும் கம்பரின் மகன் அம்பிகாபதி என்பதற்கு எதுவித சான்றுகளும் கிடைக்கவில்லை. சோழமன்னன் குலோத்துங்கனுக்கும் கம்பருக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை வைத்து உண்மை கலந்த புனைகதையாகவும் இருக்கலாம்.

இதுதவிர வேறு பல கதைகளும் கம்பர் பற்றி இருக்கிறது. கம்பரின் கவிதைகள் ,பாடல்கள் பல இடைச்செருகல் என் கிறார் வையாபுரிப்பிள்ளை. தமிழறிஞர்களே இவை பற்றி தடுமாறும் நிலையில் பத்தாவது படித்த எனக்கு ஆராயும் அறிவு சிறிதும் கிடையாது.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 26, 2016 11:57 pm

மூர்த்தி wrote:ஏற்கனவே கிரிஷ்ணாஅம்மா வின் பதிவில் கருத்துகள் பதிவிடப்பட்டன.
மீண்டும் பதிவிட்டதற்குக் காரணம், சிலேடையாகவும் இடக்கரக்கல் ஆகவும்  கருத்துகளை சொல்லியும் பேசியும் மனிதனாக நடந்து கொண்ட  தமிழன், நாகரிகமாக சொல்லக்கூடிய சொற்களைக் கூட மறைமுகமாக சொல்லி நாகரிகம் வளர்த்த தமிழர்கள், பெண் ஒருவள் கொலை செய்யப்படுகிறாள்,தடுக்கவில்லை,குற்றுயிராய் கிடந்த அவளுக்கு முதலுதவி கூட செய்ய திராணியற்று தமிழினம் வேடிக்கை பார்த்து நிற்கிறதே? சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பது போல் வேடிக்கை பார்த்து நிற்கிறோமே என்ற ஆதங்கம் தான்.

ஆமாம், அந்த திரி இல் நிறைய பேசினோம் இந்த கம்பன் , ஒளவையாரைப் பற்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக