புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறள் கூறும் அன்பு Poll_c10குறள் கூறும் அன்பு Poll_m10குறள் கூறும் அன்பு Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
குறள் கூறும் அன்பு Poll_c10குறள் கூறும் அன்பு Poll_m10குறள் கூறும் அன்பு Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
குறள் கூறும் அன்பு Poll_c10குறள் கூறும் அன்பு Poll_m10குறள் கூறும் அன்பு Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
குறள் கூறும் அன்பு Poll_c10குறள் கூறும் அன்பு Poll_m10குறள் கூறும் அன்பு Poll_c10 
16 Posts - 3%
prajai
குறள் கூறும் அன்பு Poll_c10குறள் கூறும் அன்பு Poll_m10குறள் கூறும் அன்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குறள் கூறும் அன்பு Poll_c10குறள் கூறும் அன்பு Poll_m10குறள் கூறும் அன்பு Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
குறள் கூறும் அன்பு Poll_c10குறள் கூறும் அன்பு Poll_m10குறள் கூறும் அன்பு Poll_c10 
4 Posts - 1%
jairam
குறள் கூறும் அன்பு Poll_c10குறள் கூறும் அன்பு Poll_m10குறள் கூறும் அன்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறள் கூறும் அன்பு Poll_c10குறள் கூறும் அன்பு Poll_m10குறள் கூறும் அன்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
குறள் கூறும் அன்பு Poll_c10குறள் கூறும் அன்பு Poll_m10குறள் கூறும் அன்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறள் கூறும் அன்பு


   
   
pricillashly
pricillashly
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 22/01/2016

Postpricillashly Mon Jan 25, 2016 7:41 pm

குறள் கூறும் அன்பு  
முனைவர். கி.ஜா.பிரிசில்லா,
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,
அ.து.ம. மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
நாகப்பட்டினம்
          சங்ககாலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும் தமிழர்க்கும் கிடைத்த அரிய களஞ்சியமான வள்ளுவத்தில் உலகளாவிய சிந்தனைகளும்  மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கும் காணப்படுகிறது. வள்ளுவம் தமிழனுக்குரியது என்னும் நிலையைக் கடந்து உலகத்தவர் அனைவர்க்கும் உரியதாக உள்ளமையை உணர்ந்த பாரதி
வள்ளுவம் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு
எனப் புகழ்ந்துரைத்தார். வள்ளுவப் பொருட்சிறப்பை அறிந்த மதுரைத் தமிழ்நாகனார் “எல்லாப் பொருளும் இதன் பால் உள” என தெளிந்துரைத்துள்ளார். திருக்குறள் 21ஆம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினருக்கு வழிகாட்டும் புரட்சி நூலாக விளங்குகிறது.
“அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா வரண்”.
               என்னும் குறள் மறைந்த முன்னாள் ஐனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது என அவரே கூறியுள்ளது வள்ளுவத்திற்கு மேலும் சிறப்பினைக் கூட்டுகிறது.

அன்பு
                 மானுட வெற்றியின் அடிப்படை“அன்பு” ஐந்தறிவை புறத்தே வைத்த இறைவன் ஆறாவது அறிவாகிய மனம்; எனும்; ஆற்றலை நெறிப்படுத்த அன்பை அகத்தே வைத்தான். அன்பு உள்ளங்களை இணைக்கும்; ஆற்றலுடையது. “ஆற்றல் மிக்க அன்பு” என்பார் அப்பரடிகள். மக்களின் வாழ்வியல் பண்புகளுக்கு அன்பு மிக தேவையானது  என்பது அனைத்து மதத்தாரும் போதிக்கும் கருத்தாகும்.  அன்பே தெய்வம் ”Love  is  God”  என்பது உலக உயர்மொழி. திருக்குறள், அன்பு பற்றிய மனித மாண்புகளை விளக்குகிறது. இதனைப் பின்பற்றுவோர் பேற்றினையும் ஒதுக்கியவர்  இழிவினையும் அடைவார் என திறம்படக்காட்டுகிறது. ஆகவே அன்பு பற்றிய வள்ளுவரின் கருத்துக்கள் மனிதசமுதாயத்தின் மறுமலர்ச்சியை உண்டாக்கும் மருந்தாக கொள்ளப்படுகி;றது.

அன்பின் வளர்ச்சி
              அன்பு இயல்பாய் மலரும். “அன்பினை எடுத்துக்காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி” என்பது சேக்கிழார் திருவாக்கு.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பெனும் நாடாச் சிறப்பு
”.
அன்பு ஆர்வத்தைத் தருகிறது. ஆர்வம் நட்பைத் தருகிறது. அன்பு நிறைந்த பழக்கத்திலே தோன்றி ஆர்வத்தினால் வழங்கப் பெற்று நட்பு என்ற நிலையை அடைகிறது. நட்பிற்கு மறுபெயர் தோழமை. நட்பு எல்லையற்றது. அழிவற்றது. அதனால் திருவள்ளுவர் “சிறப்பு” என்று சிறப்பித்து கூறுகிறார்;. அன்பிற்கும் நட்பிற்கும் இடையில் இணையாக இருப்பது ஆர்வம். ஆர்வத்தினை உளவியலார் apptitude என்பர். தமிழ் இலக்கியம் “பாங்கு” என்று கூறும்.

             உடல் வளர்ச்சியுடன் அன்பின் வளர்ச்சியும் இருக்க வேண்டும். அப்போதுதான்; நன்மை செய்து சிறப்புடன் வாழ முடியும். அந்த வாழ்க்கைதான் பயன்பட்ட வாழ்கையாக – நல்ல பண்புநிறைந்த வாழ்க்கையாக அமையும்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
”.
 
                  அன்பின் வழி ஒழுகினால் வாழ்வின் உயர் நிலையை அடையலாம். ஆகவே, ஒவ்வொருவரும் அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்பு பற்றி சுவாமி சித்பவானந்தர் “ வாழ்விற்கு உறுதுணையாவது அன்பு. தடைகள் எல்லாம் தகர்க்க வல்லது. பகை, வெறுப்பு, துன்பம் என்னும் பகைவர்களை உள்ளே புகவிடாமல் இருப்பது அன்பு” என்று விளக்கமளிக்கின்றார்.  இப்படியாக விளங்கும் அன்பு வெள்ளத்தை தடுத்து நிறுத்த முடியாது. தன் அன்பிற்குரியவர் துன்பப் படுவதை நேரில் காணும் கண்கள் விடும் கண்ணீர் அவர் தம் அன்பை வெளிஉலகிற்கு வெளிப்படுத்தி விடும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்
                         இந்த உயர்பெரும் அன்பை இன்பத்தில் மட்டுமின்றி பிறர் துன்பத்திலும் தாராளமாக செலுத்த வேண்டும்.

அன்பினால் உண்டாகும் வாழ்வு

                    அன்பு ஓர் அபூர்வமான சக்தி. உயிரின் உறைவிடமே அன்பு. வள்ளலார் போதித்த சுத்த சன்;மார்க்கத்தின் அடிப்படை அம்சம் எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு காட்டுதல்
“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே”
                   என்று மிக அழகாகப் பாடுகிறார் வள்ளலார். எங்காவது மலை கைப்பிடியில் அகப்படுமா? அன்பு என்னும் கைப்பிடியில் இறைவன் என்ற மலையும் அகப்படும் என்கிறார். குடிசையே ஆனாலும் அன்பிருக்குமானால் அரசனும் விரும்பி நுழைவான் என்கிறார். இதனையே வள்ளுவர் பெருமான்
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”.
                  இல்வாழ்க்கைக்கு அன்பே அச்சாணி. அன்பே இனிமை. செல்வந்தருக்கும் ஏழை எளியோருக்கும் இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை என்கிறார்;.
  “அன்பு உடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்பதன் மூலம் வள்ளுவர் அன்பு  தம் பொருளையும் உடலையும் விட எலும்பையும் பிறருக்கு கொடுக்க  வல்லது என்கிறார். இத்தகைய அன்பு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. மெய்யுணர்வு சம்பந்தபட்டது.
          சுவாமி விவேகானந்தர்   ,   “ஒருவனிடம் அன்பு குடிகொண்டிருக்குமேயானால் அது பிறரிடம் எதையும் கேட்காது. மாறாக அன்பு அனைத்தையும் கொடுத்து விடுகிறது. தன்னையே பிறர்க்கும் நல்கும் பேராற்றல் இந்த அன்பினால் முடியும்” என சொற்பொழிவொன்றில் எடுத்து இயம்பியுள்ளார்.
                 அன்பின் வழியை பரிசுத்த வேதாகமம் கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிரூபம் 13ஆம் அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறது.
''அன்பு நீடிய சாந்தமும் தயவு;முள்ளது; அன்பிற்கு பொறாமையில்லை, அன்பு தன்னை புகழாது, இறுமாப்பாயிராது.
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது,
சினமடையாது, தீங்கு நினையாது,
  அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும்,
சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும்,
சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
அன்பு ஒருக்காலும் ஒழியாது.”

   இதை நாம் அன்பின் இலக்கணங்களாகக்கொண்டு வாழ வேண்டும். செல்வாக்குள்ள மனிதனாக இருப்பதைவிட அன்புள்ள மனிதனாக இருப்பதே சிறந்தது. அன்புள்ளம் படைத்தவன் உலகம் மகிழ வழிகாட்டியாக விளங்குவான். அன்பின் அடிப்படையில் மனித வாழ்வு அமைந்திருக்குமானால் அமைதியிருக்கும். மகிழ்ச்சி நிலவும் உயர்வு தாழ்வு சிந்தனைகள் எழாது.
அன்பு வழி வாழ வேண்டும்!
அவ்வழியே வளரும்  வாழ்கை!!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 25, 2016 8:27 pm

இதை நாம் அன்பின் இலக்கணங்களாகக்கொண்டு வாழ வேண்டும். செல்வாக்குள்ள மனிதனாக இருப்பதைவிட அன்புள்ள மனிதனாக இருப்பதே சிறந்தது. அன்புள்ளம் படைத்தவன் உலகம் மகிழ வழிகாட்டியாக விளங்குவான். அன்பின் அடிப்படையில் மனித வாழ்வு அமைந்திருக்குமானால் அமைதியிருக்கும். மகிழ்ச்சி நிலவும் உயர்வு தாழ்வு சிந்தனைகள் எழாது.
அன்பு வழி வாழ வேண்டும்!
அவ்வழியே வளரும் வாழ்கை!!

அருமையாக கூறியுள்ளீர் .குறள் கூறும் அன்பு 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 8:49 pm

குறள் கூறும் அன்பு 103459460 குறள் கூறும் அன்பு 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 8:58 pm

அன்பு குறித்த தங்கள் கருத்துக்கள் ஒப்பத்தக்கன ! சிறப்பான கட்டுரை .


வள்ளுவம் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்பது

" வள்ளுவன் தன்னை " என்றல்லவா இருக்கவேண்டும் .

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ; அன்புடையார்
என்பும் உரிய பிறர்க்கு .

என்பதே சரி . என்பு என்ற அக்ரிணைச் சொல் உயர்திணைக்குரிய " அர் " விகுதியை ஏற்காது அல்லவா !
வ .உ . சி . அவர்களின் அறத்துப்பால் உரையில் இவ்வாறுதான் காணப்படுகிறது . பெரும்பாலான உரையாசிரியர்கள் இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை .

தொடர்ந்து எழுதுங்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 25, 2016 10:37 pm

நல்ல கட்டுரை - தொடருங்கள் இதுபோல்.

வள்ளுவத்தின் மீது அன்பு கொண்டால்
அன்பு கொள்ளும் பண்பு தானே ஊரிடுமே




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 26, 2016 12:26 am

கட்டுரை அருமை. தொடருங்கள்.



குறள் கூறும் அன்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுறள் கூறும் அன்பு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குறள் கூறும் அன்பு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 26, 2016 4:47 am

குறள் கூறும் அன்பு 3838410834 குறள் கூறும் அன்பு 3838410834 குறள் கூறும் அன்பு 103459460



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக