புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_c10நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_m10நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_c10 
21 Posts - 66%
heezulia
நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_c10நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_m10நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_c10நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_m10நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_c10 
63 Posts - 64%
heezulia
நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_c10நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_m10நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_c10நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_m10நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_c10நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_m10நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Nov 03, 2015 8:53 am

நினைவெல்லாம் உன்னோடு
நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன்
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி

*****

‘நினைவெல்லாம் உன்னோடு’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நூல் ஆசிரியர் கவிஞர் செ. குகசீலரூபன் அவர்கள் பன்முக ஆற்றலாளர். சிறந்த கல்வியாளர், பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்.


இந்து சமய அறநிலையத்துறையில் ஆய்வாளராக இருந்து பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று விரும்பி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக முத்திரை பதித்து வருகிறார். வழக்கறிஞர்களிடையே உயர்நீதிமன்றத்தில் நடந்த கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். நான், அப்போட்டிக்கு மூன்று நடுவர்களில் ஒருவராக இருந்தேன். அப்போதே அவரிடம் சொன்னேன். விரைவில் கவிதை நூல் வெளியிடுங்கள் என்று. என்னுரை ஏற்று வெளிவந்துள்ள நூலிற்கு எனது எளிய அணிந்துரை.


உள்ளத்தில் உள்ளது கவிதை, உணர்வின் வெளிப்பாடு கவிதை, நூலாசிரியர் செ. குகசீலரூபன், கவிஞராக இருந்த காரணத்தால் தான் அவரால் பல துறைகளில் முத்திரை பதிக்க முடிகின்றது என்பது என் கருத்து.


முதல் கவிதையில் முத்திரை பதித்து உள்ளார். வித்தியாசமாக சிந்தித்து கவிதை வடித்துள்ளார், பாராட்டுக்கள்.


எனக்குப் பிடிக்கும்!


நீ அழுவது கூட / எனக்குப் பிடிக்கும் /
ஆறுதல் சொல்ல எனக்கு ஆசையாக இருப்பதால்!

நீ பிடிவாதம் செய்வது / எனக்குப் பிடிக்கும் /
அப்போது என் / பிள்ளையாக மாறுவதால்!

நீ வியர்வையில் குளிப்பது / எனக்குப் பிடிக்கும் /
பனித்துளிகளுக்கு நடுவே / ரோஜாவைக் காண்பதால்.


பொதுவாக பெண்கள் அழுதால் பிடிக்காது, பிடிவாதம் செய்தால் பிடிக்காது என்று தான் சொல்வார்கள். இவர் உடன்பாட்டுச் சிந்தனையுடன் ‘பிடிக்கும்’ என்பது நமக்கும் பிடிக்கின்றது.


காதல் கவிதை பலரும் எழுதுகிறார்கள், ஆனால் வித்தியாசமாக எழுதுபவர்களே வெற்றி பெறுகிறார்கள். நூலாசிரியரின் முதல் நூல் காதல் கவிதைகள் வித்தியாசமாக எழுதி வெற்றி பெற்றுள்ளார். சமுதாயக் கவிதைகளும் நூலில் உள்ளது, கூடுதல் சிறப்பு!


தோல்வி!

நேர்முகத் தேர்வில் / தோற்றுப் போனேன்
உலக அதிசயங்களில் / ஒன்றைக் கேட்டார்கள்
உன் பெயரைச் சொன்னதால்.


அரசியல்வாதிகளுக்கு உள்ள பதவி ஆசையை, இருக்கை ஆசையை எள்ளல் சுவையுடன் உணர்த்தி உள்ளார். கவிதையைப் படிக்கும் வாசகர்கள் உண்மையில் சிரித்து விடுவார்கள்.


அரசியல்வாதி!

நெஞ்சுக்கும் தொண்டைக்கும் / இழுத்துக் கொண்டிருந்தது
கடைசி நிமிட உயிர் / நாற்காலியில் அமர வைத்தார்கள்
நல்லபடியாகப் போய்ச் சேர்ந்தது.


நூலின் தலைப்பான “நினைவெல்லாம் உன்னோடு” நெடிய கவிதை நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள். படிக்கும் போது உங்களுக்கு கண்டிப்பாக உங்கள் துணையின் நினைவு வரும் என்று உறுதி கூறலாம்.


நாட்டில் நடக்கும் அவலங்களை, ஊடகங்களில் காணும் போது, படிக்கும் போது, வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை. அதனை உணர்த்திடும் வைர வரிகள் இதோ!


மாண்டு போன மனிதநேயம்!
மகாத்மாவோடு சேர்த்து / மனிதநேயத்தையும்
மண்ணில் புதைத்து விட்டோம்.

அன்று தேசப்பிதாவின் / சுவாசத்தை நிறுத்த
ஒரு கோட்சே!

இன்று / கோட்சேக்களுக்கு நடுவில் / பாவம்
தேசப்பிதாவைத்தான் / தேட வேண்டியிருக்கிறது!


பாடாத பொருள் இல்லை எனுமளவிற்கு பல்வேறு பொருள்களில் பாடி உள்ளார். முதுமை பற்றி தன்னம்பிக்கை பற்றி, காதல் பற்றி பல கவிதைகள் உள்ளன. பாராட்டுக்கள்.


ஏ! பாரத மாதாவே! கவிதையில் உரத்த சிந்தனை சிந்திக்க வைக்கின்றார். பதச்சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன்!. பிடித்த கவிதைகளை மடித்து வைத்துக் கொண்டே வந்தேன். எல்லாக் கவிதைகளையும் மடித்து விட்டேன். அணிந்துரையில் அனைத்தையும் மேற்கோள் காட்ட முடியாது என்ற காரணத்தால் மீண்டும் மறுவாசிப்பு செய்து மிகவும் கவர்ந்த வரிகளை மட்டும் எழுதி உள்ளேன்.


ஹைக்கூ வடிவில் சில கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. சிந்திக்க வைக்கின்றன. எதிர்காலத்தில் ஹைக்கூ 3 வரிகளில் மட்டும் எழுதி, தனியாக ஹைக்கூ நூல் படைப்பார் என்ற நம்பிக்கை உண்டு.


சிகரெட் !

பற்ற வைப்பதே
விரைவில்
பற்ற வைக்கத்தான்.


விரைவில் மடிவாய், தீ மூட்ட வேண்டி வரும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். புகைப்பவர்கள் சிந்தித்துப் பார்த்து செயலை மாற்ற வேண்டும்.


உலகப்பொதுமறையான திருக்குறள் பற்றி சொற்சிக்கனத்துடன் வடித்த கவிதை மிக நன்று.


திருக்குறள் !

வார்த்தைப் பூக்களால்
தொடுக்கப்பட்ட
வாழ்க்கை மாலை!


தமிழகத்தில் ஒரு படத்தில் நடித்தவுடன், தமிழக முதல்வர் ஆகி விட வேண்டும் கனவு வந்து விடுகிறது பலருக்கும்.சினிமா பற்றிய கவிதை சிந்திக்க வைத்தது, நீண்ட கவிதை என்ற போதிலும் மிகவும் பிடித்த வரிகள் இதோ!



சினிமா!

சாதியும் சினிமாவும் / ஆட்சிக் கட்டிலில்
அமர் வைக்கும் என்று / மனப்பால் குடித்தவர்கள்
ஏற்கெனவே சூடுபட்ட / பூனைகளை
ஏனோ நினைப்பதில்லை.


இசைக்கருவிகளில் ஒன்றான சிறிய புல்லாங்குழல் பற்றிய கவிதை மிக நன்று. படிக்கும் போது மனக்கண்ணில் புல்லாங்குழல் தெரிய வைத்து வெற்றி பெறுகின்றார், கவிஞர் செ. குகசீலரூபன்.


புல்லாங்குழல்!

உடம்பிலே பட்ட காயத்திற்கு
உதடுகளால் ஒத்தடம்
நன்றிக்கடனாய் / நாதம்!


நன்றி மறவாத காவல் காக்கும் நாய் பற்றிய ஹைக்கூ நன்று.

நாய் / பேசியது / வாலால்!


வாயில்லா ஜீவன் என்பார்கள் நாயை. அது வாலால் பேசிடும் என்பதை உணர்த்துகின்றார்.


பெண்களின் மனதைப் புரிந்து கொள்ள முடியாது, மிக நுட்பமானது, ஆழமானது, அதனை உணர்த்திடும் ஹைக்கூ.


கடலை விட / ஆழமானது / கன்னியின் மனது.


நூல் ஆசிரியர் கவிஞர் செ. குகசீலரூபன் அவர்கள் பரபரப்பான வழக்கறிஞர்கள் பணிக்கு இடையே கவிதைகள் எழுதுவது பாராட்டுக்குரியது. புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ கவிதை விருந்தாக உள்ளது. பன்முக ஆற்றலாளரின் ஒருமுகமான உன்னத படைப்பு. இலக்கிய உலகம் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள். வாசகர்களே! கவிதை என்ன செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்நூல். படித்துப் பாருங்கள். என் கூற்று உண்மை என்பதை உணர்வீர்கள்.

--

.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 10:14 am

நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி 103459460
-
நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி CLTqnZP4Q0Ca2l7TauUw+jahei_269610
-
படத்திலிருப்பவர்கள் விபரம் தெரிவிக்கும்படி
கவிஞர் இரா.இரவி கேட்டுக் கொள்ளப்படுகிறார்...
-


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Nov 03, 2015 12:42 pm

Kavithai vaasippavar guga siila rupan

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 1:41 pm

நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி 1571444738

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Nov 03, 2015 1:42 pm


தோல்வி!

நேர்முகத் தேர்வில் / தோற்றுப் போனேன்
உலக அதிசயங்களில் / ஒன்றைக் கேட்டார்கள்
உன் பெயரைச் சொன்னதால்



                  சுவாரஸ்யமான படைப்பு .  வாழ்த்துகள்



நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை  : கவிஞர் இரா. இரவி Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 03, 2015 3:52 pm

மாண்டு போன மனிதநேயம்!
மகாத்மாவோடு சேர்த்து / மனிதநேயத்தையும்
மண்ணில் புதைத்து விட்டோம்.

அன்று தேசப்பிதாவின் / சுவாசத்தை நிறுத்த
ஒரு கோட்சே!

இன்று / கோட்சேக்களுக்கு நடுவில் / பாவம்
தேசப்பிதாவைத்தான் / தேட வேண்டியிருக்கிறது!


அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 03, 2015 4:07 pm

ரசிக்கும் படியாக இருந்தன கவிதைகள் .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அதை அழகு பட விமரிசித்த இரா இரவி அவர்களுக்கு நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 03, 2015 8:55 pm

அற்புத கவிதை வரிகளை படிக்க படிக்க அருமை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக