புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
61 Posts - 50%
heezulia
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
15 Posts - 3%
prajai
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
9 Posts - 2%
jairam
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பயத்தின் வெளிப்பாடு! Poll_c10பயத்தின் வெளிப்பாடு! Poll_m10பயத்தின் வெளிப்பாடு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயத்தின் வெளிப்பாடு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 11:07 am

கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த பவித்ரா, ''லட்சுமியம்மா... 11:00 மணி போல அத்தைக்கு ஞாபகமாக சூப் வைச்சு கொடுத்திடுங்க. ஜுரம் அடிச்சதால ரெண்டு நாளா சரியாக சாப்பிடாம சோர்ந்து போயிருக்காங்க,'' என்றாள்.

''நீங்க கிளம்புங்கம்மா; நான் பாத்துக்கிறேன், '' என, சமையல்காரம்மா சொல்ல, மாமியார் இருக்கும் அறையை எட்டிப் பார்த்தாள்.

''பவித்ரா... வேலைக்கு கிளம்பிட்டியா... ஆபிஸ் வேலையா ஊருக்கு போயிருக்கிற வரதன் எப்ப வர்றான்?''என்று கேட்டார் மாமியார்.

''ரெண்டு நாள்ல உங்க பிள்ளை வந்திடுவாரு அத்தை... நான் கிளம்பறேன்,''என்று கூறி, விடைபெற்று வாசலுக்கு வந்தவள், மகள் லலிதா வருவதை ஆச்சரியமாக பார்த்தாள்.
லலிதாவிற்கு திருமணம் முடிந்து மூணு மாதம் தான் ஆகிறது. கணவனுடன் இதே சென்னையில் தான் இருக்கிறாள்.

போன் கூட செய்யாமல் மகள் வந்து நின்றது ஆச்சரியம் அளிக்க, ''வா லலிதா... என்ன வரேன்னு கூட சொல்லாம, புறப்பட்டு வந்திருக்க... மாப்பிள்ள வரலயா?''என்று கேட்டாள்.

பதில் சொல்லாமல் சோர்வுடன் உட்கார்ந்த லலிதா, ''என்கிட்ட எதுவும் கேட்காத... நீ வேலைக்கு போயிட்டு வா சாயந்திரம் பேசிக்கலாம்,'' என்றாள்.

''அது இருக்கட்டும்; உன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு... என்ன விஷயம்ன்னு சொல்லு...''

''அங்க இருக்க எனக்கு பிடிக்கலம்மா. என் மாமியார் என்னை அதிகாரம் செய்றதும், இதைச் செய், அதைச் செய்யின்னு ஆர்டர் போடுறதும்... நான் என்ன அவங்க வீட்டு வேலைக்காரியா... ''நான், அவங்க பிள்ளையோட மனைவிங்கிற எண்ணம் அவங்க மனசுல இருக்கிற மாதிரி தெரியல. அவர்கிட்ட இதப்பத்தி பேசலாம்ன்னா, அவங்கம்மா மேல குறை சொல்றேன்னு தப்பா எடுத்துப்பாரோன்னு தயக்கமா இருக்கு.

''அதான் மனசே சரியில்ல; அம்மாவ பாத்துட்டு வரேன்னு அவர்கிட்ட சொல்லிட்டு புறப்பட்டு வந்துட்டேன்,'' என்றாள் லலிதா.

''சரி... நீ சாப்பிட்டுட்டு, பாட்டியோடு பேசிட்டு இரு; எனக்கு காலேஜுக்கு நேரமாச்சு; சாயந்திரம் வந்து விவரமாகப் பேசலாம்.''

''ஹலோ மாப்பிள்ளை... நான் பவித்ரா பேசறேன்.''

''சொல்லுங்க அத்தை.. நல்லாயிருக்கீங்களா... லலிதா அங்க தான் வந்திருக்கா பாத்தீங்களா...''
''பாத்தேன் மாப்பிள்ள... மதியம் லஞ்ச்சுக்கு எங்க காலேஜுக்கு பக்கத்திலிருக்கிற ஓட்டலுக்கு வர்றீங்களா... உங்க கிட்ட சில விஷயங்க பேசணும்ன்னு நினைக்கிறேன்,'' என்றாள்.

''என்ன விஷயம் அத்தை... சாயந்திரம் தான் வீட்டுக்கு வர்றேனே அப்ப பேசுவோம்; அப்படியே லலிதாவையும் அழைச்சிட்டு வந்திடுவேன்,''என்றான்.

''இல்ல மாப்பிள்ள... உங்ககிட்ட பர்சனலா பேசணும்ன்னு நினைக்கிறேன்; உங்களுக்கு சிரமம்ன்னா வேணாம்.''

''அப்படியெல்லாம் இல்லத்தை; நான், 1:00 மணிக்கு அங்கு வர்றேன்.''
டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டையே பார்த்தபடி மவுனமாக இருந்தாள் பவித்ரா.
''சாப்பிடுங்க அத்தை... இங்க அடிக்கடி வருவீங்களா... சாப்பாடு அருமையா இருக்கு,'' என சாப்பிட்டபடி சொன்னான் குமார்.

''மாப்பிள்ளை... நான் சொல்ல வர்றதை நீங்க சரியா புரிஞ்சுக்கணும்...''
''எதுக்கு அத்தை இந்த பீடிகை... தைரியமா சொல்லுங்க.''

''நீங்க அப்பா இல்லாம, அம்மாவோட அரவணைப்பில வளர்ந்தவரு. தனி மனுஷியா உங்கள வளத்து ஆளாக்கியிருக்காங்க உங்க அம்மா. அதனால, அவங்களுக்கு உங்க மேலே அன்பும், பாசமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்; அதே மாதிரி உங்ககிட்டேயும் அவங்க எதிர்பாப்பாங்க...'' என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, ''நீங்க சொல்றது ரொம்ப சரி... எங்கம்மா என் மேலே ரொம்ப அன்பு வச்சிருக்காங்க; நானும் இன்னைக்கு வரைக்கும், அவங்க மனசு கோணாம தான் நடந்துட்டு வரேன்,''என்றான் குமார்.

தொடரும்...........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 11:08 am

புன்னகையோடு மருமகனை பார்த்தவள், ''என் மாமியாரும் அப்படித்தான்; சின்ன வயசிலேயே புருஷனை பறிகொடுத்து, தனக்கு எல்லாமே பிள்ளை மட்டும் தான்னு வாழ்ந்துட்டு வர்றாங்க.

எனக்கு கல்யாணமான புதுசுல என் மாமியார் என்கிட்டே சொன்னது இதுதான்:

'நீ, என் பிள்ளைக்கு மனைவியா, இந்த வீட்டிற்கு மருமகளாக வந்திருக்கே... தனி மனுஷியா என் பிள்ளையை கஷ்டப்பட்டு வளர்த்தேன்.

'என் உலகமே என் பிள்ளைதான். இதை, நீ முதல்ல புரிஞ்சுக்கணும். என் பிள்ளை கிட்ட நான் காட்டற அன்பும், பாசமும் உனக்கு மிகையாகக் கூட தோணலாம். அதான் உன்கிட்டே என் மனசிலிருக்கிறத எல்லாம் தெளிவாக பேசிடலாம்ன்னு நினைக்கிறேன். என்னை மாதிரி பிள்ளைய மட்டுமே நம்பி வாழற அம்மாக்கள், எங்கே மருமகள் தன் பிள்ளைய தன்னிடமிருந்து பிரிச்சிடுவாளோன்னு பயப்படுவாங்க.

'அதை மறைக்க, பிள்ளை மேல் தனக்கிருக்கிற உரிமைய வெளிப்படுத்த, அதிகாரத்தை மருமகள் கிட்டே காட்டுவாங்க. ஆனா, நான், என் பிள்ளை மேல் இருக்கிற உரிமைய வெளிப்படுத்த அதிகாரத்தைக் காட்ட விரும்பல; அன்பை தான் வெளிப்படுத்த நினைக்கிறேன்.

'என் பிள்ளையும், நீயும் எனக்கு ஒண்ணுதான். என் பிள்ளை மேல் வச்சிருக்கிற அன்பு, நிச்சயம் உன்கிட்டேயும் வெளிப்படும். என்னை உன் தாய் ஸ்தானத்தில் வச்சு கடைசி வரை பராமரிப்பியா பவித்ரா'ன்னு சொன்னாங்க...

''இன்னைக்கு வரைக்கும் அவங்க எனக்கு ஒரு அம்மாவாகத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. இதை நான் எதுக்கு உங்ககிட்ட சொல்றேன்னா, உங்கம்மாவோட மன நிலையும் இதே மாதிரி தான் இருக்கு. என் மகள், எங்கே உங்கள அவங்க கிட்டேயிருந்து பிரிச்சுடுவாளோன்னு பயப்படறாங்க. அதன் வெளிப்பாடு, அவகிட்டே கண்டிப்பையும், அதிகாரத்தை மட்டும் காட்டறாங்க. அது, அவ மனசிலே வெறுப்பை தான் வளர்க்கும்.

''காலையில லலிதா என்கிட்டே, உங்கம்மாவோட நடவடிக்கைக தன்னை கஷ்டப்படுத்தறதாவும் உங்ககிட்ட சொன்னா, நீங்க தப்பா எடுத்துப்பீங்களோன்னு பயப்படறதா சொன்னா...'' என்றாள் பவித்ரா.

''நீங்க சொல்றது எனக்கு புரியது அத்தை... அதான் கொஞ்ச நாளா முகம் வாடி, சோர்வா இருந்தாளா... எங்கம்மாவோட பயம் அர்த்தமில்லாததுன்னு அவங்களுக்கு நான் புரிய வைக்கிறேன்,''என்றான் குமார்.

''அது மட்டுமில்ல மாப்பிள்ள... அவங்க மனசு வருத்தப்படாம, நீங்க தான் நல்லபடியா அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும். மருமகள் கிட்ட காட்டுற அன்பும், பிரியமும் தான், மகன் அருகில் கடைசி வரை அவங்களை வச்சிருக்கும்கிறதை நீங்க தான் நல்லபடியா சொல்லணும்.
''உங்களை நம்பி வந்த உங்க மனைவியையும், சந்தோஷமா வச்சிக்கணும்; உங்க அம்மாவுக்கும் ஒரு நல்ல மகனா இருக்கணும்,'' என்றாள்.

தனக்கு புரியும்படி தெளிவாக பேசும் மாமியாரை பார்த்து, ''உங்க அணுகுமுறை எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு அத்தை. மாமியார் மேலே தப்பான அபிப்ராயத்தோடு வந்த மகளை, மேலும் அவ மனசை கெடுத்து, குடும்பத்தை பிரிக்க நினைக்காம, உள்ள நிலைமைய எனக்கு புரியும்படி அழகா எடுத்துச் சொன்னீங்க; ரொம்ப நன்றி. சாயந்திரம் நானே வீட்டுக்கு வந்து லலிதாவை கூட்டிட்டு போறேன்; இனி நிச்சயம் லலிதா இது மாதிரி புகாரோடு வர மாட்டா,'' என்றான் உறுதியுடன் குமார்.

ராஜ் பாலா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக