புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மஹா  பெரியவா ! Poll_c10மஹா  பெரியவா ! Poll_m10மஹா  பெரியவா ! Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
மஹா  பெரியவா ! Poll_c10மஹா  பெரியவா ! Poll_m10மஹா  பெரியவா ! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
மஹா  பெரியவா ! Poll_c10மஹா  பெரியவா ! Poll_m10மஹா  பெரியவா ! Poll_c10 
3 Posts - 6%
prajai
மஹா  பெரியவா ! Poll_c10மஹா  பெரியவா ! Poll_m10மஹா  பெரியவா ! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
மஹா  பெரியவா ! Poll_c10மஹா  பெரியவா ! Poll_m10மஹா  பெரியவா ! Poll_c10 
2 Posts - 4%
viyasan
மஹா  பெரியவா ! Poll_c10மஹா  பெரியவா ! Poll_m10மஹா  பெரியவா ! Poll_c10 
1 Post - 2%
Rutu
மஹா  பெரியவா ! Poll_c10மஹா  பெரியவா ! Poll_m10மஹா  பெரியவா ! Poll_c10 
1 Post - 2%
சிவா
மஹா  பெரியவா ! Poll_c10மஹா  பெரியவா ! Poll_m10மஹா  பெரியவா ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மஹா  பெரியவா ! Poll_c10மஹா  பெரியவா ! Poll_m10மஹா  பெரியவா ! Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
மஹா  பெரியவா ! Poll_c10மஹா  பெரியவா ! Poll_m10மஹா  பெரியவா ! Poll_c10 
2 Posts - 15%
Rutu
மஹா  பெரியவா ! Poll_c10மஹா  பெரியவா ! Poll_m10மஹா  பெரியவா ! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹா பெரியவா !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 6:26 pm

மஹா  பெரியவா ! Yiolov24SmilvUH0lfNJ+kanji-periava

நீங்க எல்லாருமே சுவாமி கும்புடறவாளாதான் இருப்பேள்.

தினசரி கர்மானுஷ்டானங்களை அனுசரிச்சு பூஜை பண்ணாட்டாலும் தெரிஞ்ச ஒரு சின்னத் துதியையாவது சொல்லி, சில நிமிஷமாவது தினமும் சுவாமியை வணங்கறதையும் பழக்கமா வைச்சுண்டிருப்பேள் .

அவா அவா வழக்கப்படிஆராதனைகளைப் பண்ணினாலும் நிச்சயம் ஏதாவது ஒரு வேண்டுதலும் அதுல இருக்கும்கறதுதான் நிஜம். அப்படி நீங்க வேண்டிக்கறதெல்லாம் உடனே பலிச்சுடறதா?
சிலருக்கு கேட்டது உடனே கிடைக்கும், இன்னும் கொஞ்சம் பேருக்கு கொஞ்சம் தாமதமா கிடைக்கும். மத்தவாள்ல சிலருக்கு ரொம்ப லேட்டா கோரிக்கை ஈடேறும்... சிலருக்கு நிறைவேறவே நிறைவேறாது.

எல்லாருமே வேண்டிக்கறது என்னவோ சுவாமிகிட்டேதான். ஆனாலும் ஏன் இப்படி வேற வேற மாதிரி பலன் கிடைக்கறது? அதுக்குக் காரணம், கோரிக்கை பண்றது நாமாக இருந்தாலும், கேட்டதை தரலாமா? வேண்டாமான்னு தீர்மானிக்கறது தெய்வம்தான்.

மனுஷாதான் யார் எதைக் கேட்டாலும் தரலாமா? வேண்டாமா?ன்னு ஆலோசனை பண்ணுவா? ஆனா கடவுளுக்கு எல்லாருமே சமம்தானே? அப்புறம் ஏன் ஒருத்தருக்கு குடுக்கறது, இன்னொருத்தருக்கு தாமதப்படுத்தறது, சிலருக்கு தராமலே இருந்துடறதுன்னு பார்ஷியாலிடி பண்றது எதனால?

இந்த சந்தேகம் பலருக்கும் இருக்கறதுதான் வாஸ்தவம். தன்னோட கோரிக்கைகள் நூறு இருந்தா அதுல தொண்ணூத்து ஒன்பது ஈடேறிடறதைப்பத்தி நினைக்கறதே இல்லை. ஒண்ணே ஒண்ணு நடக்கலைன்னதும் தெய்வத்தையே குறை சொல்ல ஆரம்பிச்சுடுவா.

ஒரு தாய்க்கு நாலு புள்ளைகள் இருக்கா. அவா நாலுபேருமே ஐஸ்க்ரீம் கேட்கறான்னு வைச்சுப்போம். அந்தப் புள்ளைகள்ல ஒருத்தனுக்கு ஜலதோஷம்.

அதனால, அவனுக்கு அப்போதைக்கு வாங்கித் தர மாட்டா. அடுத்தவனுக்கு சைனஸ் ப்ராப்ளம் அவனுக்கு கொஞ்ம் குணமானதும் வாங்கித் தருவா. மூணாவனுக்கு டான்சில் வளர்ந்திரக்கு. அதனால அவனுக்கு ஐஸ்க்ரீமே தரக் கூடாது. நாலாவது புள்ளைக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

அதனால அவனுக்கு உடனே கிடைக்கிறது. இந்த விஷயத்தை நன்னா நினைச்சுப் பாருங்கோ. அம்மா யார்கிட்டேயும் பாகுபாடெல்லாம் பார்க்கலை. கேட்டதை தர்றதுக்கு முன்னால, தரலாமா? அதனால பின்விளைவுகள் எதுவும் ஏற்படுமான்னு யோசிச்சுப் பார்க்கறா. சங்கடம் வரும்னா, தராம தவிர்க்கறா. சந்தோஷம் கிடைக்கும்னா உடனே கிராண்டட்.

அப்படித்தான் சுவாமியும் கேட்கறதை தர்றதால, பக்தர்களுக்கு பிரச்னை வரும்னா, தராம இருந்துடறா. அப்போதைக்குத்தான் தரக்கூடாது. கொஞ்சம் கழிச்சு தரலாம்னா, அப்படியே கொஞ்சம் லேட்டா கிடைக்கிறது. சரி இந்த கேள்விக்கு விடை மாதிரி, மகாபெரியவா சொன்ன ஒரு சம்பவம் இப்போ பார்க்கலாமா?

விஜய நகர சாம்ராஜ்யம்னு வரலாறுல படிச்சிருப்பேள். அந்த ராஜ்யம் அமையறதுக்கு காரணமானவர், பரம சன்யாசியான வித்யாரண்யர். சன்யாசம் ஏத்துக்கறவா எல்லாரும், எதுவுமே வேணாம்னுட்டு ஆஸ்ரமம் ஏத்துக்குவா. ஆனா, இவர் சன்யாசி அனதே வித்தியாசமான காரணத்துக்காக.

வித்யாரண்யர்ங்கறது அவரோட ஆஸ்ரமப் பேர், பூர்வாஸ்ரமப் பேர் என்னன்னு தெரியலை. ஆனா, அவர் பரம ஏழ்மையா இருந்தார். கஷ்டமெல்லாம் தீரணும்னா அதுக்கு ஒரே வழி மகாலட்சுமியோட கடாட்சம் தன்மேல படறதுதான்னு தீர்மானிச்சு, கடுமையா தவம் பண்ணினார். அவரோட தவத்துக்கு இரங்கி காட்சி தந்தா திருமகள்.

"அம்மா... அலைமகள்ங்கற உன்னோட பேருக்கு ஏத்த மாதிரி உன்னோட பார்வையை அங்கே இங்கேன்னு அலையவிடாம, என்மேல கொஞ்ச நாழி பதிச்சியான்னா. என்னோட வறுமையெல்லாம் தீர்ந்துடும்..!'னு வேண்டிண்டார்.

"இவ்வளவு கடுமையா தபஸெல்லாம் பண்ணி என்னை கும்பிட்டிருக்கே, அதுக்காகவாவது நான் உனக்க வரம் தந்துதான் ாகணும். ஆனா, உன்னோட விதியில இந்த ஜனமாவுல உனக்கு வறுமைதான்னு எழுதியிருக்கு, அதை என்னால மாத்த முடியாது. அதனால உன்னோட அடுத்த ஜன்மாவுல தங்கச் சுரங்கமாவே செல்வம் தர்றேன்! இப்போ வேற ஏதாவது வேணும்னா கேளு!' அப்படின்னா மகாலட்சுமி.

திக்குன்னு ஆச்சு, வித்யாரண்யருக்கு. பிரம்மசரியம் அனுஷ்டிக்கற பருவத்துலயே இந்த வறுமையை தாங்கிக்க முடியலையே... இன்னும் இந்தப் பிறவி முழுக்க இதை அனுபவிக்கணும்னா அவ்வளவுதான். இங்கேயே நரகவாசம் பண்றாப்புல ஆயிடுமே... இதுல இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்குமான்னு யோசிச்சார். சட்டுன்னு ஓர் எண்ணம் தோணித்து அவருக்கு.

ஒருத்தர் சன்யாசம் ஏத்துண்டார்னா, அது அவரோட ரெண்டாவது ஜென்மான்னு சொல்றது சாஸ்த்ரம். நம இப்ப உடனே சன்யாசம் ஏத்துண்டுட்டா, இந்த ஜென்மா முடிஞ்சு அடுத்த ஜன்மா எடுத்துட்டதா ஆயிடும். அப்போ மகாலட்சுமி நமக்கு வரம் தர்றதுல எந்த பிரச்னையும் இருக்காது! அப்படின்னு தோணித்த அவருக்கு.

உடனே, "தாயே மகாலட்சுமி நான் இந்த க்ஷணமே சன்யாசம் வாங்கிக்கறேன். இப்போ இது என்னோட ரெண்டாவது ஜன்மாவா ஆயிடுத்து... அதனால நீ சொன்னபடிக்கு எனக்கு செல்வத்தைக் குடு!'ன்னு கேட்டார் வித்யாரண்யர்.

மறுவிநாடியே அவர் பார்த்த இடமெல்லாம் தங்கமா மாறித்த. மலைமலையா பெரும் தங்கக் குவியல் அவரை சுத்தி இருந்தது. பார்த்தார் வித்யாரண்யர்.

அவரோட கண்ணுல இருந்து ஜலம் அருவிமாதிரி கொட்டித்து. "ஆஹா.. இவ்வளவு செல்வம் கிடைச்சும் இதுல ஒரு தூசியைக்கூட தொட முடியாதபடிக்கு சன்யாசம் வாங்கிட்டோமே... சன்யாசிக்கு எதுக்கு இவ்வளவு தங்கம்? தாயார் சொன்னபடிக்கு அடுத்த பிறவியில வாங்கியிருந்தாலாவது அதை "னுபவிச்சிருக்கலாம்.

இப்போ தெய்வத்தை ஏமாத்தறதா நினைச்சுண்டு நம்பளை நமளே ஏமாத்திண்டிருக்கோம். சரி, நடந்ததை மாத்திக்க முடியாது. இனிமேலாவது நல்லபடியா ஏதாவது பண்ணுவோம்' னு நினைச்சார். கண்ணுக்கு எட்டின தூரத்துல யாராவது இருக்காளான்னு பார்த்தார்.

கொஞ்சம் தொலைவுல குறும்பர்கள் அதாவது ஆடு, மாடு மேய்க்கறவா ரெண்டு பேர் நின்னுண்டு இருந்தாங்க. துங்கபத்திரை நதியோட கரையில ஒரு ராஜாங்கத்தை ஸ்தாபிச்சு அதுக்கு அவா ரெண்டுபேரையும் ராஜாக்களா ஆக்கினார். செல்வம் முழுசையும் தந்து, மாலிக்காபூரோட படையெடுப்பால் சிதைஞ்சு போயிருந்த கோயில்களையெல்லாம் சீரமைக்கச் சொன்னார்.

அன்னிக்கு அவர் ஸ்தாபிச்சதுதான், விஜயநகர சாம்ராஜ்யம். ஹரிஹரர், புக்கர்தான் அந்த ரெண்டு ராஜாக்கள்.அதுக்கப்புறம் வித்யாரண்யர் சன்யாச ஆஸ்ரமத்துல இருந்துண்டு. நாலு வேதங்களுக்கு பாஷ்யம் எழுதினார்.

யாருக்கு எப்போ எதைக் கொடுத்தா நல்லது? எந்த சமயத்துல தந்தா, அது அவாளுக்கு பயன்படக்கூடியதா இருக்கும்? கேட்டதைத் தர்றதா, கேட்காததைக் குடுக்கறதா? இதெல்லாம் சுவாமியோட தீர்மானப்படி நடந்தா நல்லது. நாம கேட்கலாமே தவிர, பகவான் குடுக்கறதை மனப்பக்குவத்தோட ஏத்துக்கணும். இந்த வித்யாரண்யர் வரலாறு மகாபெரியவா உபந்யாசங்கள் பண்றச்சே பலசமயங்கள்ல சொல்லியிருக்கார்.

செய்வத்துகிட்டே எப்படி நடந்துக்கணும்கறதுக்கு நடமாடும் தெய்வமான பரமாசார்யா சொன்ன இந்த வழிமுறை, சன்யாசிகளுக்கு மட்டுமல்லாம எல்லாருக்குமே பொருந்தும் இல்லையா?

பி. ராமகிருஷ்ணன்
dinamalar




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 6:49 pm

ஜய ஜய சங்கரா
ஹர ஹர சங்கரா
மஹா  பெரியவா ! OyIsHmlQTX243CQ9P5g4+periyava
மஹா  பெரியவா ! ANtg9NAJT8SpV2pGjJxd+c2677625-f06f-49ce-9294-65e5c11b0ab2_namaste01
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 7:38 pm

மகா பெரியவர் சொன்ன கருத்தைத்தான் , மாணிக்கவாசகர் இவ்வாறு குறிப்பிடுகிறார் .


வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்டமுழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொணடாய்
வேண்டி நீயாது அருள் செய்தாய்
...யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே.

- “திருவாசகம்”


பொருள் : என் சிவபெருமானே, நான் வேண்டியதை தருபவன் நீ. எனக்கு என்னவேண்டும் என்பது எனக்கு தெரியாவிட்டாலும் உனக்கு தெரியும். எனக்கு எதனை அருள வேண்டுமென்பதை நீயே அறிய வல்லவன். எனக்கு நல்லது எதுவோ அதனை வழங்கும் பொறுப்பு உன்னுடையது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 7:44 pm

தெய்வ சந்நிதானத்தில் நல்லதே செய் என்று வேண்டினாலே போதும் .
ஆண்டவனுக்கு தெரியும் எதை எவ்வளவு எப்போது தரவேண்டும் என்று .
அந்த நம்பிக்கை வேண்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2015 8:36 pm

ஒரு ஆதி திராவிடர், பிராமண பெண்ணை மணந்திருந்தார்...
-
சுமார், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள்
காஞ்சி மடத்திற்கு சென்றனர்....
-
மதிய உணவு சாப்பிட நின்ற க்யூவில் சென்ற கணவரை
உணவு கூடத்திற்கு செல்ல அனுமதிக்க வில்லை...
-
இப்போது நிலைமை எப்படி உள்ளது..?
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 8:53 pm

யாருக்காவது இது விஷயம் தெரிந்து இருந்தால் ,
பகிர்ந்து கொள்ளலாம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 12:52 am

T.N.Balasubramanian wrote:தெய்வ சந்நிதானத்தில் நல்லதே செய் என்று வேண்டினாலே போதும் .
ஆண்டவனுக்கு தெரியும் எதை எவ்வளவு எப்போது தரவேண்டும் என்று .
அந்த நம்பிக்கை வேண்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155066

நல்லது செய் என வேண்டவும் வேண்டுமா ? எதையுமே வேண்டாமல் "இதுவரை செய்ததற்கு நன்றி "
என்று சொன்னாலும் போதும் . அவனுக்கு தெரியும் எதை , எப்போ, எப்படி , யார் மூலமாக , எவ்வளோ
தரவேண்டும் , தரலாமா பிடாதா என்று .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2015 7:09 am

வேண்டுதல் வேண்டி செல்வதால்
வேண்டுதல் அவசியம் என நினைத்தேன்
வேண்டாம் என்பவர்களுக்கு வேண்டாம்
வேண்டும் என்பவர்களுக்கு வேண்டும்
வேண்டுமா வேண்டாமா உங்களுக்கு ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 7:19 am

T.N.Balasubramanian wrote:வேண்டுதல் வேண்டி செல்வதால்
வேண்டுதல் அவசியம் என நினைத்தேன்
வேண்டாம் என்பவர்களுக்கு வேண்டாம்
வேண்டும் என்பவர்களுக்கு வேண்டும்
வேண்டுமா வேண்டாமா உங்களுக்கு ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155255

எனக்கு
வேண்டவே... வேண்டாம் ....
வேண்டவே வேண்டாம் .....
என் நாடி போகும் வரை
நான் நாடுவேன் அவனை ... :வணக்கம்:
வேண்டுதல் இல்லாமலே .

உங்க அளவுக்கு கவிதை வரவில்லை அய்யா ... அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக