புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_m10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_m10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_m10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_m10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10 
17 Posts - 4%
prajai
வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_m10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_m10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_m10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10 
8 Posts - 2%
jairam
வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_m10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_m10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_m10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_m10வணங்கா விட்டாலும் இறைவன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணங்கா விட்டாலும் இறைவன்!


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 12:46 pm

எப்போதோ படித்த ஒரு அரபுக் கதை சிறு மாற்றங்களுடன்...

முன்னொரு காலத்தில் ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ள ஒரு முதியசெல்வந்தர் ஒரு புனிதத் தலத்திற்கு பாலைவன வழியில் பயணித்துக்கொண்டு இருந்தார். வழியில் தங்கி இளைப்பாற இடமோ, உணவு உண்ண வழியோ இல்லாமல் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதைக் கவனித்தார். இறைவனை நாடிப் போகும் பக்தர்கள் இப்படி அவதியுறுகிறார்களே என்று இரக்கப்பட்ட அவர், அவர்கள் குறை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

புனிதத் தலத்தில் இறைவனைத் தொழுது விட்டுத் திரும்பிய பின் அவர் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். பாலைவனத்தில் ஒரு பெரிய கூடாரத்தைக் கட்டி அந்த வழியாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்களுக்கு உண்ண உணவும், இளைப்பாறிச் செல்ல வசதியும் ஏற்படுத்தித் தர முடிவு செய்தார். அதையும் தானே அங்கு தங்கிச் செய்ய நினைத்த அவர் மகன்களிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டுத் தன் செல்வதில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

பாலைவனத்தின் மத்தியில் அந்தப் பெரியவர் பெரிய கூடாரம் இட்டுக் கொண்டு அதில் சில வேலையாட்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.  புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அவர் இலவசமாக நீர் மற்றும் உணவும் இளைப்பாற வசதிகளும் தந்தார். ஆனால் வருபவர்கள் தொழுகை நடத்தி இறைவனை வணங்கிய பின்னரே அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. அதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்திருந்தார்.

பாலைவன வழியாக பயணித்த அனைவருக்கும் அவர் சேவை பெரிய உபகாரமாக இருந்தது. புனிதத் தலத்திற்குச் செல்லாமல் மற்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகளும் அவர் கூடாரத்திற்கு வந்து தொழுகை நடத்தி சாப்பிட்டு இளைப்பாறி விட்டுத் திருப்தியுடன் சென்றார்கள். அந்தப் பெரியவரும் அந்தப் பயணிகளுக்கு உதவ முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தார். பசியுடனும் களைப்புடனும் கூடாரத்திற்குள் நுழையும் மக்கள் திருப்தியுடனும், உற்சாகத்துடனும் கிளம்புவதைக் காணும் போது இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை இறைவனுக்கே செய்யும் சேவை போல் அவருக்கு நிறைவைத் தந்தது.

அவரும் ஒரு ஆளிற்காவது உணவளிக்காமல் உணவருந்தியதில்லை. சில நாட்களில் யாத்திரீகர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள். அவர் தொழுது முடித்தாலும் கூட யாத்திரீகர்களில் ஒருவராவது வந்து தொழுகை நடத்தி முடிக்கும் வரை காத்திருந்து அவருடன் சேர்ந்து தான் அவரும் உண்பார். நாளாவட்டத்தில் அவருடைய கூடாரமே புனிதத்தன்மை அடைந்திருப்பதாக யாத்திரீகர்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

ஒரு நாள் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தபடியால் பாலைவனத்தில் நீண்ட நேரம் யாரும் பயணிக்கவில்லை. பாலைவனத்தில் சாதாரணமாகப் பயணிப்பதே சிரமம் தான். தட்பவெப்ப நிலை மோசமாகி விட்டாலோ பாலைவனைத்தில் பயணிப்பதே கொடுமையான அனுபவம் தான். எனவே தான் பயணிகள் யாரையும் காணவில்லை. பெரியவர் ஒருவராவது வரட்டும் என்று உணவருந்தாமல் காத்திருந்தார். நீண்ட நேரம் கழித்து ஒரு பயணி களைத்துப் போய் வந்தான். அவனைப் பார்த்தவுடன் பெரியவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.  

அவனுக்கு வயது இருபத்தைந்து இருக்கும். பசியுடன் இருப்பது அவனைப் பார்த்தவுடனேயே அவருக்குத் தெரிந்தது. அவனை மனமார வரவேற்று உபசரித்த பெரியவர் சொன்னார். “வாருங்கள். கை கால் கழுவி விட்டு இறைவனைத் தொழுங்கள். உணவு தயாராக இருக்கிறது”

“இறைவனைத் தொழுவதா? நானா?” என்றான் அவன்.

அவர் ஆச்சரியத்தோடு கேட்டார். “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?”

“நான் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்புவதில்லை. நான் இது வரை ஒரு முறை கூட இறைவனைத் தொழுததும் இல்லை”

பெரியவர் வருத்தத்தோடு சொன்னார். ”நான் இங்கு வசிப்பதையும், இந்த வழியாகப் புனிதத் தலத்திற்குப் பயணிக்கும் இறை உணர்வாளர்களுக்கு உணவு தந்து உபசரிப்பதையும் இறை பணியாகவே செய்து வருகிறேன்.  அதனால் இறைவனைத் தொழாதவருக்கு நான் உணவு தருவதில்லை.”

அவன் உறுதியாகச் சொன்னான். “இறைவனைத் தொழுதால் தான் உணவு கிடைக்கும் என்றால் எனக்கு தங்கள் உணவு தேவை இல்லை”.

அவர் எவ்வளவோ சொல்லியும் அவன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அவரும் அவன் தொழாமல் உணவு பரிமாற சம்மதிக்கவில்லை. கடைசியில் அவன் பசியோடே அங்கிருந்து வெளியேறினான். பசியோடவே இருந்தாலும் இருப்பேனே தவிர இறைவனை வணங்க மாட்டேன் என்று அவன் பிடிவாதமாக இருந்தது அவருக்கு திகைப்பாக இருந்தது. அதே நேரம் பசியோடும், களைப்போடும் வந்த ஒருவன் அந்த கூடாரத்தில் இருந்து அப்படியே வெளியேறுவதும் அதுவே முதல் முறை என்பதால் அவருக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
அன்று முழுவதும் வேறு யாரும் அந்த வழியாக வரவுமில்லை. அவரும் உணவருந்தாமலேயே இரவு வரை காத்திருந்து விட்டு உறங்கச் சென்றார்.

இரவில் அவரது கனவில் இறைவன் குரல் ஒலித்தது. “என்னை வணங்காத அவனுக்கு ஒவ்வொரு வேளையும் நான் இருபத்தைந்து வருடங்களாக உணவு அளித்து வந்திருக்கிறேன். ஆனால் நீ என்னை அவன் வணங்கவில்லை என்பதாக ஒரு வேளை உணவு கூட அளிக்க மறுத்து பட்டினியாக அனுப்பி விட்டாயே”

பெரியவருக்கு சுருக்கென்றது. விழித்துக் கொண்டு நீண்ட நேரம் உறங்காமல் விழித்திருந்தார். கருணை மயமான இறைவன் தன்னை வணங்கினாலும், வணங்கா விட்டாலும் எல்லோரையும் காத்து வரும் போது இறைவனை வணங்கிப் பின்பற்றும் அவர் மட்டும் ஏன் வேறு மாதிரியாக இருக்க வேண்டும்?

மறு நாளில் இருந்து அவர் இறைவனைத் தொழுதால் தான் உணவு என்ற கொள்கையைக் கைவிட்டு விட்டார். இறைவனைத் தொழுவது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று எண்ணியவராக அனைவருக்கும் உணவளித்து மகிழ்ந்தார்.

இந்தக் கதையில் கிடைத்த பாடம் மிகவும் யோசிக்கத் தக்கது.

வணங்குபவன், வணங்காதவன், வாழ்த்துபவன், நிந்திப்பவன், நம்புபவன், நம்பாதவன் முதலான பாகுபாடுகள் இறைவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நன்றாகக் கவனித்தால் அவன் படைத்த உலகில் எல்லோருக்கும் இடம் இருப்பது புரியும். அவன் அருளில்லை என்றால் அவனுக்குப் பிடிக்காதவர்கள் யாரும் இங்கிருக்க முடியாதல்லவா? ஆகவே அவனை வணங்காதவர்களும், நிந்திப்பவர்களும், நம்பாதவர்களும் கூட இன்னும் இங்கிருக்கிறார்கள் என்றால் எல்லாம் வல்ல இறைவன் அருள் அவர்களுக்கும் இருக்கின்றது என்றே அல்லவா அர்த்தம். அப்படி இருக்கையில் இறைவனுக்கு எதிரானவர்கள் என்று நாமாகக் கற்பனை செய்து கொண்டு அவர்களை எதிர்த்து விமரிசிக்கவும், போராடவும், அழிக்கவும் கிளம்புவது நம் அறிவீனமே அல்லாமல் இறைவழி அல்ல என்பதை உணர்வோமா?



நன்றி: என்.கணேசன்

தினத்தந்தி



ஈகரை தமிழ் களஞ்சியம் வணங்கா விட்டாலும் இறைவன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 12:55 pm

//இந்தக் கதையில் கிடைத்த பாடம் மிகவும் யோசிக்கத் தக்கது.

வணங்குபவன், வணங்காதவன், வாழ்த்துபவன், நிந்திப்பவன், நம்புபவன், நம்பாதவன் முதலான பாகுபாடுகள் இறைவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நன்றாகக் கவனித்தால் அவன் படைத்த உலகில் எல்லோருக்கும் இடம் இருப்பது புரியும். அவன் அருளில்லை என்றால் அவனுக்குப் பிடிக்காதவர்கள் யாரும் இங்கிருக்க முடியாதல்லவா? ஆகவே அவனை வணங்காதவர்களும், நிந்திப்பவர்களும், நம்பாதவர்களும் கூட இன்னும் இங்கிருக்கிறார்கள் என்றால் எல்லாம் வல்ல இறைவன் அருள் அவர்களுக்கும் இருக்கின்றது என்றே அல்லவா அர்த்தம். அப்படி இருக்கையில் இறைவனுக்கு எதிரானவர்கள் என்று நாமாகக் கற்பனை செய்து கொண்டு அவர்களை எதிர்த்து விமரிசிக்கவும், போராடவும், அழிக்கவும் கிளம்புவது நம் அறிவீனமே அல்லாமல் இறைவழி அல்ல என்பதை உணர்வோமா?//

நிஜம் தான் பாலா.....நல்ல கோணத்தில் சிந்தித்து எழுதிஇருக்கிறார் இதன் ஆசிரியர்........அருமை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 1:27 pm

நல்ல அருமையான கதை...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 04, 2015 3:05 pm

சிந்திக்க வேண்டிய கதை புன்னகை

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 05, 2015 3:57 am

மிக சிறந்த கதை . வணங்கா விட்டாலும் இறைவன்! 103459460 வணங்கா விட்டாலும் இறைவன்! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக