புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
49 Posts - 52%
heezulia
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
91 Posts - 56%
heezulia
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 21, 2015 6:13 pm

காதல் திருமணங்கள் என்றாலே த்ரில்தான். அப்படி ஒரு த்ரில் திருமணம்தான், மாதேஷ் அனிதாவுடையதும்! வலுக்கட்டாயமாக இன்னொரு வருடன் மணமேடை வரை கொண்டு செல்லப்பட்ட தன் காதலியை, உயிரைப் பணயம் வைத்துப் போராடி தன் மனைவியாக்கியிருக்கிறார் மாதேஷ்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்துள்ள ராமாபுரத்தில் வசிக்கும் இந்த புதுமணத் தம்பதியை, வியப்பு கலந்த வாழ்த்துகளுடன் சந்தித்தோம்.

உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி N6RaaIqQnqNsXqsEMABk+p91
''நீங்க கொஞ்ச நேரத்துல சாகப்போறீங்க; உங்க காதலிக்கு வேறொருத்தரோட கல்யாணம் நடக்கப் போகுது... இப்படி ஒரு சூழல்ல, என்ன பண்ணுவீங்க? 'என்னதான் ஆகுது பார்த்துருவோம்டா’னு ஒரு வீரம் வரும் பாருங்க... அந்த தைரியம்தான் இன்னிக்கு அனிதாவை எங்கிட்ட சேர்த்திருக்கு!''

வெட்கம் பூக்கிறது மாதேஷ் முகத்தில்.

''பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன். அப்பா, அம்மா, ரெண்டு தம்பிங்க... இதுதான் என் குடும்பம். லோன் போட்டு ஒரு சுமோ கார் வாங்கி, ஓசூர்ல ஓட்டினேன். பெங்களூருல இருக்குற ஒரு கார்மென்ட் கம்பெனிக்கு வேலையாட்களை அழைச்சிக்கிட்டுப் போற கான்ட்ராக்ட் கிடைச்சது. அப்படி ஆணும் பொண்ணுமா ஏத்திட்டுப் போன 10 பேர்ல ஒருத்தர்தான், அனிதா!''

அறிமுகம் தந்து நிறுத்தினார் மாதேஷ்.

அனிதாவுக்குப் பூர்விகம் ஆந்திரா. ''குடும்பத்தோட சூளகிரிக்கு பக்கத்துல இருக்குற கொரளத்தொட்டிக்கு வந்துட்டோம். ஒரு அண்ணன், ரெண்டு தங்கச்சி, நான்னு வீட்டுல மொத்தம் நாலு பசங்க. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கூலி வேல. பத்தாவதுக்கு மேல எனக்கு படிப்பு வரல. கார்மென்ட் கம்பெனி வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அப்போதான் இவரைப் பார்த்தேன். ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சோம்.

ரெண்டு பேரோட குடும்பச் சூழலையும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டதால, கடமைகளை கொஞ்சம் முடிச்சிட்டு, ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தோம். எங்கூட வேலைபார்க்குற ஒருத்தர், இதை எங்கம்மாகிட்ட சொல்லிட்டாங்க. உடனே சட்டுனு கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க. மாதேஷுக்கு போன் பண்ணி, 'எப்படியாச்சும் என்னைக் கூட்டிட்டுப் போயிடுங்க’னு அழுதேன். ஜனவரி 22-ம் தேதி பந்தல் நாள், 23-ம் தேதி சூளகிரியில கல்யாணம். '22-ம் தேதி ராத்திரி என் ஃப்ரெண்ட்ஸை அனுப்புறேன். அவங்ககூட வந்துடு’னு சொன்னார் மாதேஷ்.

கல்யாணத்துக்கு முதல் நாள் நைட், மண்டபத்துல திடீர்னு லைட் ஆஃப் ஆயிருச்சு. ஒரே சத்தம். வெளிய வந்து பார்த்தா, மாதேஷோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர், எங்க சொந்தக்காரங்க பிடியில இருக்காங்க. லைட்டை ஆஃப் பண்ணிட்டு என்னைக் கூட்டிட்டுப் போக என் ரூமுக்கு வந்திட்டிருந்ததை எங்க மாமா பார்த்துட்டார். பொண்ணைத் தூக்க வந்திருக்காங்கனு தெரிஞ்சுபோச்சு. ஆனா, அதை வெளிய சொல்ல முடியாதுங் கிறதால, திருடனுங்கனு சொல்லி போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்துட்டாங்க. என்னையும் ரூம்ல அடைச்சு வெச்சுட்டாங்க. மாதேஷ் வருவார்ங்கிற நம்பிக்கை எனக்கு சுத்தமா போயிருச்சு. மறுநாள் காலையில முகூர்த்த நேரத்துக்கு நான் மணமேடைக்கு வந்துட்டேன். மாப்பிள்ளையும் வரப்போறார். திடீர்னு என் எதிர்ல வந்து நிக்குறார் மாதேஷ்!'' சினிமா காட்சியின் விறுவிறுப்போடு சென்றது கதை!

''அப்புறம் என்ன நடந்துச்சுன்னா...''

மாதேஷ் குரலில் பூரிப்பு.

''நான் அனுப்பின மூணு ஃப்ரெண்ட்ஸ்ல ரெண்டு பேர்தான் மாட்டினாங்க. இன்னொருத்தன் போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிட்டான். என்ன பண்றதுனு தெரியாம, இயலாமையில விடியக்காத்தால விஷத்தைக் குடிச்சிட்டேன். சாகப்போற பயம் ஒரு பக்கம்; என் காதலிக்குக் கல்யாணம்ங்கிற வலி ஒரு பக்கம். என்னதான் நடக்குதுனு பார்த்துடலாம்னு ஒரு தைரியம் வந்துருச்சு.

உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி OaeiVcwtScGrtJnXXqX9+p92

மஞ்சகொம்புல தாலி ஒண்ணு ரெடி பண்ணி பாக்கெட்ல வெச்சிக்கிட்டு, மொய் கவரோட மேடைக்குப் போனேன். என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியான அனிதா ஒரே அழுகையா அழுதா. ஆகுறதைப் பாத்துக்கலாம்னு பாக்கெட்ல வெச்சிருந்த தாலியை எடுத்து அவ கழுத்துல போட்டுட்டேன். அவ சொந்தக்காரங்க எல்லோரும் சேர்ந்து என்னை வெளுத்தப்போ, அதுல ஒருத்தர் என் பாக்கெட்ல இருந்த விஷ பாட்டிலை பார்த்துட்டார். 'பையன் விஷம் குடிச்சுருக்கான்'னு அவர் சொல்ல, அடிச்சவங்க எல்லோரும் விலகிட்டாங்க. போலீஸுக்குத் தகவல் கொடுத்து, என்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க, அங்க நான் பொழச்சுட்டேன்!''

மாதேஷ் நிறுத்த...

"எனக்கு முடிவாகியிருந்த மாப்பிள்ளை, என்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லி, அதே மேடையில அவரோட அத்தை பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். அப்பக்கூட எங்க வீட்டுல என்னை இவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்காம, எங்க அத்தை பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பேசினாங்க. எங்க அத்தை ஒப்புக்கல. அப்புறம் கிராமத்து ஆளுங்க எங்க ரெண்டு வீட்டுலயும் பேசி கல்யாணத்தை முடிச்சு வெச்சாங்க!''

ஒருவழியாக சுப க்ளைமாக்ஸ் விழுந்ததைச் சொன்னார் அனிதா!

''ரெண்டு பேரும் வேற வேற ஜாதி. கல்யாணத்துக்கு அப்புறம் அனிதா வீட்டுக்காரங்க எங்கிட்ட, 'இந்தாப்பா... எங்க கிராமத்துக் காரங்க உங்களை ஏத்துக்க மாட்டாங்க. நீங்க எங்க வீட்டுக்கு வர முடியாது, வரவும் வேண்டியதில்ல. நல்லாயிருந்தா சரி!’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. ஒரு நாள் அவங்களே தேடி வந்து எங்களை ஏத்துக்குற மாதிரி நாங்க வாழ்ந்து காட்டுவோம்!''

அனிதாவின் கைகோத்துச் சொல்கிறார் மாதேஷ்!

வாழ்வின் உத்வேகம் காதல்தானே!

நன்றி-அவள்விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 21, 2015 7:03 pm

ம்..............படம் பார்த்த மாதிரி இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக