புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_m10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10 
5 Posts - 71%
Manimegala
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_m10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_m10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_m10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_m10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_m10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10 
11 Posts - 4%
prajai
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_m10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10 
9 Posts - 4%
Jenila
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_m10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10 
4 Posts - 2%
Rutu
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_m10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_m10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10 
2 Posts - 1%
Barushree
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_m10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_m10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10 
2 Posts - 1%
jairam
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_m10சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21)


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2015 1:28 am

ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் நாள் ‘தாய்மொழி நாளாக’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1952 ஆம் ஆண்டு தங்கள் தாய்மொழியைக் காப்பதற்கான போராட்டத்தில் உயிர் நீத்த வங்கதேச மொழியுரிமை போராளிகளின் நினைவாக 2000-மாவது ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

மொழிகள் இனங்களை அடையாளம் காட்டுவன; அந்தந்த இனமக்களின் அமைதியான வாழ்வுக்கு மொழிகள் அடிப்படையாகத் திகழ்வன சமுதாய ஒருமைப்பாட்டுக்கும் நிலையான வளர்ச்சிக்கும் துணை நிற்பன.

தற்போது உலகமெங்கும் சுமார் 7000 மொழிகள் பேச்சு வழக்கிலும் பல்லாயிரக்கணக்கான மொழிகள் ஏட்டில் இடம்பெறாத நிலையிலும் உள்ளன. ஏட்டில் இடம்பெற்று பேச்சில் இடம்பெறாத மொழிகள் ஏட்டிலும் பேச்சிலும் இடம் பெற்று இலக்கிய வளம் பெறாத மொழிகள் இலக்கிய வளம் பெற்றும் ஆட்சியில் இடம் பெறாத மொழிகள் என்று பல நிலைகளில் மொழிகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.

வளமான மொழிகளிலேயேகூட ஆயிரக்கணக்கான மொழிகள் இன்னும் கல்வி மொழியாக ஊடக மொழியாக கணினிமொழியாக ஆக்கப்படவில்லை என்றும் இப்போது பேச்சு வழக்கில் உள்ள சுமார் 7000 மொழிகளில் சரிபாதி அடுத்த சில தலைமுறைகளுக்குள்ளேயே காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது என்றும் கூறுகிறார் யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர்.

மொழிகள் அழிந்தால் அது ஒட்டு மொத்த மனித குலத்துக்கே ஆபத்தாகும். மொழிகளின் எண்ணிக்கை குறைந்தால் சிந்தனைகள் குறையும். மொழிகளின் அழிவைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான ஒரு திட்டத்தையும் வகுத்துள்ளது யுனெஸ்கோ நிறுவனம். ஒவ்வொரு மொழிக் குடும்பத்தாரும் தத்தமது மொழியை தங்குதடையின்றி எல்லாத் துறைகளிலும் புகுத்த வேண்டும் என்று அந்த திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.

சீர்திருத்தம் முதலில் சொந்த வீட்டில் தொடங்கப்பட வேண்டும். அதற்கிணங்க ஐ.நா. தாம் ஏற்றுக் கொண்ட ஆறு மொழிகளுக்குள்ளும் (ஆங்கிலம் பிரெஞ்சு சீனம் ஸ்பானிஷ் ரஷியன் அராபிக்) வேறுபாடு எதுவும் காட்டாமல் அனைத்தையும் சமமாகக் கருதிச் செயல்பட வேண்டும் என்றும் தம் அறிக்கைகள் ஆவணங்கள் அனைத்தையும் ஆறு மொழிகளிலும் வெளியிட்டு வருகிறது.

தாய்மொழியை அனைத்து மக்களும் கற்றுப் பயன்படுத்துவதுடன் தேசிய மொழி ஒன்றையும் பன்னாட்டு மொழி ஒன்றையும் கூடக் கற்றுக் கொள்வது நல்லதுதான். உலகமயமாகும் இக்காலச் சூழலில் பல மொழிகளையும் ஒருவர் தெரிந்து வைத்திருந்தால் அவருக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக அமையும்தான். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

“”ஆங்கில மொழியில் எழுதுவதை விடப் பேசுவதைவிட என் தாய்மொழி குஜராத்தில் எழுதினால் பேசினால் எளிமையாக என்னால் கருத்துகளை வெளிப்படுத்த முடியும்””- மகாத்மாவின் இந்த சிந்தனையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

செம்மொழியான தமிழ்மொழி

உலக மொழிகள் என்று எடுத்துக் கொண்டால் எண்ணிக்கையில் அது அறுநூறு. அவற்றுள் இலக்கியம் மற்றும் இலக்கணம் உடையவை என்று பார்த்தால் வெறும் முன்னூறு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு உடைய மொழிகள் எத்தனை என்று பார்த்தால் எண்ணிக்கை ஒற்றை இலக்கில்தான் உள்ளது.

அதாவது ஆறு மொழிகள் மட்டுமே அத்தகைய சிறப்பு கொண்டவை.
1. தமிழ்
2. சீனம்
3. சமஸ்கிருதம்
4. இலத்தீன்
5. ஹீப்ரு
6. கீரிக்


இந்த ஆறு மொழிகளில் முதலிடம் வகிப்பது தமிழ். தமிழ் மொழி மட்டுமே மனித சிந்தனைகளை நுண்ணிய உணர்வுகளை மிகத் தெளிவாக அழுத்தந்திருத்தமாக உணர்த்தும் ஆற்றல் கொண்ட மொழி என்று மொழியியல் தந்தை எமினோ கூறியிருக்கின்றார்.

உலக மொழிகளில் காந்த சக்தி கொண்டது தமிழ். ஒரு மொழியை நன்கு ஆய்வு செய்த பின்னரே அம்மொழியின் வளம் பற்றி பேச முடியும். ஆச்சார்யா வினோபா பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அவர் தமிழ்மொழியை நன்கு ஆராய்ந்து உலகுக்கு உரைத்தவர். அவர் அன்னைத் தமிழின் பெருமைகளை கூறும் போது இவ்வாறு கூறுகிறார், “”லத்தீன் மொழியைப் போன்று தமிழ்மொழி அளவற்றவினைச் சொற்களைக் கொண்டுள்ளது. ஒரு மொழியின் வளம் அதன் வினைச் சொற்களில் அளவில் அமைந்துள்ளது. அந்த வகையில் தமிழ் உயர் தனிச்செம்மொழி என்பதில் ஐயமில்லை”” என்று கூறியிருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு அவர்கள் தான் எழுதிய ‘உலக சரித்திரம்’ என்றநூலில் மொஹஞ்சாதாரோ ஹரப்பா ஆகிய இடங்களில் திராவிட நாகரிகம் இருந்ததாக குறிப்பிட்டு எழுதியுள்ளார். அப்படிப்பட்ட நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்களாகிய நம்முடைய மொழி தமிழ்மொழி.

செம்மொழி மாநாட்டின்போது நாடு நகரமெங்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இலச்சினையை மக்கள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். கடல்கோள்களை எதிர் கொண்டும் காலவெள்ளத்தைக் கடந்தும் சீரிளமைத் திறத்தோடு தமிழ்மொழி திகழ்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் சுனாமி அலைகள் அய்யன் திருவள்ளுவர் திருவடிகளில் சுருளுவதாக அழகிய பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது மாநாட்டின் இலச்சினை. அறம் பொருள் இன்பம் எனும் முப்பாலைக் குறிப்பிடும் வகையில் அவர் மூன்று விரல்களைக் காட்டுவதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. திருவள்ளுவரைச் சுற்றியுள்ள மேல்வட்டத்தில் உலகத் தொன்மையான நான்கு நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படும் திராவிட நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகச் சின்னங்களும் ஹரப்பாவிலிருந்த குறியீடுகளும் இடம் பெற்றிருந்தன.

செம்மொழி மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக ‘பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும்’ என்பது அமைந்திருந்தது. ஏற்றத்தாழ்வற்ற உலகம் அமைய இந்தியா உலகிற்கு அளிக்கும் கருத்துக் கொடை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதாகும், இச்சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் செம்மொழி தரணிக்கு வழங்கிய கொடையாகும்.

‘என்றுமுள தென்றமிழ்’ என்று கம்பன் தமிழின் இனிமையை தன் படைப்புக் காப்பியங்களில் உணர்த்தியிருக்கிறார். எம்மொழியும் பெறாத முச்சங்கம் அதாவது தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என்று சங்கம் வைத்து வளர்ந்த செம்மையான மொழி நம் தமிழ்ச் செம்மொழி.

உலக மொழிகள் பலவற்றுக்கும் தாயாகிய மொழி நம் தமிழ்மொழி. நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பே எழுத்து மொழியாய் ஏறுநடை போட்ட மொழி தமிழ்மொழி. மொழி பேசுவதற்குரிய ஒரு கருவி என்று சொல்லப்பட்டாலும் நம்மொழி வாழ்வியல் மொழியாய் வளர்ந்து செழித்து தமிழ் மண்ணுக்கே உரிய பண்பாட்டையும் நாகரிகத்தையும் தழுவிக் கொண்டு தமிழனத்தை வளர்த்த மொழி. நம் தாய்மொழியான தமிழ்மொழியை போற்றுவோம் வணங்குவோம் பாதுகாப்போம்.

மனோகரன் பி.கே




சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 21, 2015 5:10 am

சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) 103459460

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 21, 2015 11:52 am

சிறந்த பதிவு தல ... நன்றி அன்பு மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 21, 2015 11:56 am

//இந்த ஆறு மொழிகளில் முதலிடம் வகிப்பது தமிழ். தமிழ் மொழி மட்டுமே மனித சிந்தனைகளை நுண்ணிய உணர்வுகளை மிகத் தெளிவாக அழுத்தந்திருத்தமாக உணர்த்தும் ஆற்றல் கொண்ட மொழி என்று மொழியியல் தந்தை எமினோ கூறியிருக்கின்றார்.//

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல பகிர்வு சிவாபுன்னகை...நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 21, 2015 11:58 am

அற்புதமான பகிர்வு.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) W5td1pX3QFi1kBRhH0I3+Affection
rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Sat Feb 21, 2015 12:20 pm

செம்மொழி மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக ‘பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும்’ என்பது அமைந்திருந்தது. ஏற்றத்தாழ்வற்ற உலகம் அமைய இந்தியா உலகிற்கு அளிக்கும் கருத்துக் கொடை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதாகும், இச்சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் செம்மொழி தரணிக்கு வழங்கிய கொடையாகும்.

நல்ல பதிவு

நாம் தமிழன் என்று பெருமை அடைவோம்

ராஜி ராணி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக