புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
37 Posts - 51%
heezulia
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
17 Posts - 2%
prajai
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
4 Posts - 1%
jairam
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_m10"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா?


   
   
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Wed Nov 05, 2014 5:05 pm

"ஒருத்தனுக்கு ஒருத்தி" ஏன் வந்தது - உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழியா, பொருளாதார காரணிகளா?
மனித வாழ்வில் ஓற்றைத் துணை வாழ்வு உயிரியல் ரீதியானதா, பண்பாட்டு வழி வந்ததா, பொருளாதார காரணிகளுக்கானதா?

'அன்றிலும் பேடும் போல' இணையாக வாழ்ந்தார்கள் என்கிறோம். சீதைக்கு இராமன், நளனும் தமயந்தியும், சிவனும் உமையும் எனக் கொண்டாடுகின்றோம். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மனித இனத்தின் மாண்பு என எண்ணுகிறோம்.
ஆனால் கோவலனுக்கு கண்ணகியும் மாதவியும் இருக்கவே செய்தார்கள். பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள். குந்தவி சூரியனுடன் இணங்கிய பின் பாண்டுவிற்கும் குழந்தைகள் பெற்றெடுத்தாள். அங்காங்கே பிறழ்வுகள் இருந்தபோதும் மனித இனத்தில் ஒருவனுக்கு ஒருத்தி அவர்களது பிள்ளைகள் எனக் குடும்பமாக வாழ்வது வழக்கமாகிவிட்டது.

ஒருதார மணம், ஒருதாரக் குடும்பம், ஒற்றை மணவாழ்வு, ஒற்றைத் துணை வாழ்வு என்றெல்லாம் பலவாறு சொல்கிறார்கள்.

ஆங்கிலத்தில் monogamy என்கிறார்கள். இது எவ்வாறு வழக்கமாயிற்று. மனித வாழ்வின் கூர்ப்பில் வளர்ச்சியில் எப்பொழுது இது ஆரம்பித்தது என்பது பற்றி தெளிவான தரவுகள் கிடையாது.

ஏனைய உயிரினங்களைப் பொறுத்தவரையில் பறவைகள் பெருமளவு சோடிகளாகவே வாழ்கின்றன. 90% பறவைகள் சோடிகளாக வாழ்கின்றன எனச் சொல்கிறார்கள். ஆனால் மிருகங்களில் குறைவே பாலூட்டிகளைப் பொறுத்தவரையில் மிகக் குறைவான 3% வீதம் மட்டுமே சோடிகளாக வாழ்கின்றன.

மனித இனம் தோன்றிய காலம் முதல் ஒற்றை மண வாழ்வு இருந்திருப்பதற்கான சாத்தியமில்லை. மனித இனத்தின் பரிணாம வளரச்சியின் போது ஒரு சில காரணங்களினால் இது வந்திருக்கும் என நம்பலாம். அவை என்ன காரணங்களாக இருக்கலாம் என்பதையிட்டு விஞ்ஞானிகள் சில விளக்கங்களை சொல்லுகிறார்கள்.



1. மனிதக் குழந்தைகள், சில மிருகக் குட்டிகளின் ஆரம்ப காலங்களில் அவற்றின் தேவைகள் அதிகம். அவற்றால் நடக்க முடியாது. தாமாக உணவு தேட முடியாது. தம்மைத்தாமே பாதுகாத்துக்;கொள்ள முடியாது. இவற்றின் காரணமாக ஒற்றைப் பெற்றோரால் அதன் தேவைகள் முழுவதையும் பூர்த்தி செய்ய வளர்த்தெடுப்பது முடியாத காரியம். ஆதனால் சோடியாக வாழ்வது அவசியமாயிற்று.
2. இரண்டாவதாக அவர்கள் கூறும் காரணம் துணையைப் பாதுகாத்தல் (mate guarding) என்பதாகும். வேறு ஆண்கள் ஆண் மிருகங்கள் வந்து தனது துணையை கவர்ந்து செல்லாமல் இருப்பதைத் தடுப்பதற்காக சேர்ந்து வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
3. தனது வாரிசைப் பாதுகாப்பதற்காகவும் துணையாக வாழ நேர்ந்தது என்கிறார்கள். ஒரு பெண்ணின் குழந்தையைக் கொன்றுவிட்டால் அவளது உடல் மற்றொரு குழந்தையைச் சுமப்பதற்கு தயாராகிவிடும் என்பதால் வேறு ஆண்கள் குழந்தையைக் கொன்று விடுமாம். கடுவன் பூனையிடமிருந்து தனது குட்டியைப் பாதுகாப்பதற்காக தனது குட்டிகளை தூக்கிக் கொண்டு ஓடும் தாய்ப் பூனைகள் ஞாபகத்திற்கு வரவில்லையா?


தங்கள் கருத்துகள் சரியானவையா என ஆராய்வதற்காக Christopher Opie தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் 230 வகையான மிருகங்களின் குடும்ப வாழ்வு சம்பந்தமான தரவுகளைத் தேடிப் பெற்று ஆய்வு செய்தனர். அவர்களது ஆய்வானது bush babies, monkeys, apes and modern humansமுதலான மிருகங்களின் புணர்வுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை, குட்டிகளின் இறப்பு விகிதம், பெற்றோரின் துணை போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

தங்களது ஆய்வுகளை 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த காலம் முதல் இற்றைவரைsimulated evolution பண்ணினர். பல மிருகங்களில் பரிணாம வளர்ச்சியில் ஒற்றைத் துணை வாழ்வானது சில காலங்களி;ல் ஏற்றமும் தாழ்வும் கண்டதை அவ் ஆய்வுகள் ஊடாக உணர முடிந்ததாம்.

சிசுக்கொலையும் வாரிசுகளைப் பாதுகாத்தலும்

பல்லாயிரம் தடவைகள் தமது ஆய்வை மீள ஆய்ந்தபோது மிருகங்களின் ஒற்றைத் துணை வாழ்க்கைக்கு காரணம் ஒன்றே ஒன்றாத்தான் இருந்ததாம். ஆண்கள் தமது குட்டிகளைக் கொல்லும் பழக்கமான சிசுக்கொலையே அது எனத் தெரிய வந்தது.

'சிசுக் கொலை ஏற்கனவே இல்லாமல் ஒற்றைத் துணை வாழ்வு வர வாய்ப்பு இல்லை. அதேபோல ஒற்றைத் துணை வாழ்வு இல்லாமல் பெற்றோரின் பாதுகாப்பு சிசுவிற்கு கிடைக்காது' என்ற முடிவிற்கு தலைமை ஆய்வாளரான Christopher Opie வந்தார்

பரிணாம வளர்ச்சியில் மிருகங்களின் மூளையின் அளவு பருமனடைந்தமை, கூட்டங்களாக வாழத் தலைப்பட்டமை போன்றவை தனது கருத்திற்கு வலுச் சேர்ப்பதாக அவர் கருதுகிறார். மூளை பருமனடையும்போது குழந்தைகள் தங்குவதற்கான இடைவெளி நீண்டு செல்கிறது. குட்டிக்குப் பாலூட்டும் காலத்தில் தாயின் சூலகத்திலிருந்து முட்டை வெளியேறுவதில்லை. இதனால் அக்காலத்தில் அவளது கருப்பையானது மற்றொரு கருவைச் சுமக்க ஆயத்தமாவதில்லை. எனவே அவளை மீண்டும் கருவலுவுள்ளவளாக வேண்டுமாயின் சிசுக்கொலை ஆண்மிருகங்களுக்கு அவசியமாக இருந்தது என்கிறார். ஆனால் சோடியாக வாழும்போது சிசுக்கொலை நடப்பதில்லை.

சிசுக்கொலையைத் தடுப்பதற்கு சோடியாக வாழ்வதை விட வேறு வழிகள் ஏதும் கிடையாதா என நீங்கள் கேட்கக் கூடும்.

சிம்பன்சிக் குரங்குகள் இதற்கு ஒரு அற்புதமான வழியைக் கண்டன. புணரும் காலத்தில் பெண் சிம்பன்சிகள் தமது குழுவில் உள்ள அனைத்து ஆண்களுடனும் புணருமாம். இதனால் ஆண் சிம்பன்சிகளுக்கு இதன் தந்தை யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டு அவை சிசுக்கொலை செய்வதில்லையாம்.



பறவைகளில் அது அதிகம் காணப்படுவதும் தேவையின் நிமித்தமே. பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு கூடு கட்ட வேண்டும். குஞ்சு பொரித்த பின் அவற்றிக்கு இரை தேடவும், காவலிருக்கவும் தாயும் தகப்பனுமாக இருவரும் அவசியம். அதனால் பறவைகளுக்கு ஒற்றைத் துணை வாழ்வு அதிதியாவசியமானது எனக் கொள்ளலாம்.

ஓற்றைத் துணை விடயமானது மனித இனத்தின் மூதாதையரில் பழக்கத்திற்கு வந்து ஒரு லட்சம் வரைதான் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மாற்றுக் கருத்துக்கள்

வேறு சில விஞ்ஞானிகள் இந்த ஆய்வு முடிவுகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. 'ஒற்றைத் துணை எனச் சொல்லி ஆய்விற்கு எடுக்கப்பட்ட சில மிருகங்கள் வனங்களில் வாழ்பவையாக இல்லை. ஆந்தைக் குரங்குகள் வருடத்திற்கு ஒரு முறையே குட்டி போடுபவை.



எனவே அவை தனது குட்டியை இழந்தாலும் அடுத்து புணர்வுக் காலத்திற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். ஏனைய பல இனக் குரங்குகள் ஆய்வில் சொல்லப்பட்ட அளவிற்கு ஒற்றைத் துணை மிருகங்கள் அல்ல' என பல்வேறு காரணங்களைச் சொல்கிறார் Dr Maren Huck. இவர் டேர்பி பல்கலைக்க கழத்தில் மிருகங்களின் வாழ்க்கை முறை பற்றி ஆய்வு செய்பவராவார்.

மற்றொரு கட்டுரையாளரான Meg Barker மனிதர்களின் ஒற்றைத் துணை வாழ்க்கை முறைக்கு மிருகங்களில் ஆதாரம் தேடுவது அபத்தமானது எனக் கருதுகிறார். முழுமையாகத் தெளிவில்லாத நரம்பியல் விஞ்ஞானத்திலும்
(neuroscience) பரிணாம வளர்ச்சி உயிரியலிலும் (evolutionary biology) ஆதாரங்களைத் தேடுவதை விடுத்து மனிதனது சமூக விஞ்ஞானத்திலும் மெய்யியலிலும் தேடுவதே பொருத்தமானது என வாதாடுகிறார்.

பரிணாம வளரச்சியின் போது மனித மூளையானது துரித வளரச்சி அடைவதும் அதனால் கருத் தங்குவதற்கான கால இடைவெளி அதிகரிப்பதும் காரணமாகலாம், அதேபோல உடலில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களுக்கும் பங்கு இருக்கலாம். ஆனால் அவற்றைவிட மனிதக் குழுக்களின் வாழ்க்கை முறைகள், சமூக ஊடாட்டங்கள், உளவியல் தாக்கங்கள் போன்ற அனைத்துமே ஒற்றைத் துணையா, பல துணையா, தேவைக்கு ஏற்ப துணையா என்பதைத் தீர்மானிக்கினறன எனலாம்.biopsychosocial approach தேவை என்கிறார்கள்.

நாளாந்த வாழ்வில் துணையுடனான உறவுகளில் எத்தனை வித பிரச்சனைகளும் சஞ்சலங்களும் ஏற்படுகின்றன என்பதை ஒவ்வொருவரும் தனது உள் மன வேட்கைகளை திறந்த மனத்தோடு ஆராய்தால் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கக் கூடும். அதுவும் ஆண்களும் பெண்களும் வேலைக்குச் செல்லும் காலகட்டதில் நிரந்தரத் துணைகளுக்கு அப்பால் தற்காலிகத் துணைகளும் யதேச்சமான துணைகளுக்குமான சாத்தியங்களுக்கு குறைவில்லை.

ஒருவருடன் உறவில் இருக்கும் அதே நேரத்தில் தனது பாலியல் சுதந்திரத்தை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதையிட்டு பலர் சஞ்சலப்படுகிறார்கள். மேலை நாடுகளில் இது பற்றிய ஆலோசனைகளுக்காக மருத்துவர்களை நாடுவதையும் அறிய முடிகிறது. வெளி உறவுகள் சுகத்தைக் கொடுக்கும் அதே நேரம் அது ஏற்படுத்தும் உள்ளார்ந்த வலி பலரைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது.

உறவுக்கு நாட்டமிருக்கிறது. ஆனால் ஆண் குறி விறைப்படைவதில்லை என்ற சிக்கலோடு; பல ஆண்கள் வருகிறார்கள். உறவு கொள்ளும் போது தாங்க முடியாத வலி பெண் உறுப்பில் ஏற்படுகிறது என்கிறார்கள் சில பெண்கள். நிதானமாக ஆராயும் போது திருமண உறவுக்கு அப்பாலான பால் உறவுகளால் ஏற்படும் குற்ற உணர்வு நோயாகப் பரிணமிப்பது தெரிய வருகிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுச் சூழலிலும், சமூக ரீதியான நிரப்பந்தங்களிலும் வாழும் எமது சமூகத்தில் இது ஆழமான மனத் தாக்கதை ஏற்படுத்துவது ஆச்சரியமல்ல.

ஆனால் எல்லாச் சமூகங்களும் ஒற்றைத் துணை வாழ்வை தமது பண்பாடாகக் கொள்வதில்லை. பலதார மணங்கள் உலகின் பல்வேறு சமூகங்களில் வழமையானதாக இருக்கின்றன. வெளிப்படையாக ஒருதார மண வழக்கமுள்ள சமூகங்களிலும் மறைமுகமாகவும் இரகசியமாகவும் பல துணைகள் இருக்கவே செய்கின்றன. கணவனை அல்லது மனைவியை தள்ளி வைத்துவிட்டு புது ஒற்றைத் துணையைத் தேடுவதை எதில் அடக்குவது?.

தசரதனுக்கு ஆயிரம் மனைவி என்றனர். எல்லோருடனும் அவன் உறவு கொள்பவனாக இருக்கிறான் என்றாலும், ஒரு நாளில் அவன் மூன்று பெண்களுக்கு மேல் உறவு கொள்வது சாத்தியமில்லை. இன்று ஒருத்தியுடன் உறவு கொண்டால் அடுத்த தடவை அவளுடன் சேர குறைந்தது ஒரு வருடமாகும் எனக் கணக்கிடலாம்.

இதைப் பெண்ணின் இடத்தில் வைத்துச் சிந்தித்துப் பாருங்கள். அவளுக்கு வருடம் ஒரு முறைதான் பாலியில் இன்பம் கிட்டும். எவ்வளவு பரிதாபம்! தசரதனின் வாள் துடித்து எழாவிட்டால், வாயில் காவலர்களுடனும் மந்திரிகளுடனும் அவர்கள் சுகித்திருப்பார்கள் என்பது நிச்சயம். இங்கு வெளிப்படையாக அவளுக்கு ஒற்றைத் துணை, அவனுக்கோ பல துணைகள். மணவாழ்வு பற்றிய மாற்றுக் கோணங்கள் இவை.

உண்மையில் மனித வாழ்வைப் பொறுத்த வரையில் ஆரம்ப காலங்களில் ஒற்றைத் துணை என்பது பாதுகாப்பு காரணங்களுக்காக இருந்திருக்கலாம். கால ஓட்டத்தில் அது பண்பாட்டு அம்சமாகவும் பொருளாதார தேவைகளின் நிமித்தமும் இருந்தது. 'சொத்து வெளியே போகக் கூடாது என்பதற்காக நெருங்கிய உறவினரைத் திருமணம் செய்வது எமது சமூகத்தில் வழக்கமாக இருக்கவில்லையா?

ஆனால் இன்று பாதுகாப்பு பெருமளவு பிரச்சனையாக இல்லை. ஆண்களும் பெண்களும் சரிசமமாக உழைப்பதால் பொருளாதார ரீதியாக மற்றவரில் தங்கியிருக்க வேண்டிய அவசியமும் நீர்த்துப் போகின்றது. இதனால் இன்று துணை என்பது பெரும்பாலனவர்களுக்கு, காதலுக்கும் பாலியல் கிளர்ச்சிக்கும் மட்டுமே ஆனதாக மாறி வருகிறது. இவற்றின் காரணமாக பலர் இன்று துணையின்றி தனியாக வாழவும் நேர்கிறது. ஒற்றைப் பெற்றோராக குழந்தையுடன் வாழ்வதும் தொடர்கிறது.

மூத்த தலைமுறையினருக்கு அதிர்ச்சி அளிப்பது போல, ஒருபால் திருமணமும், சேர்ந்து வாழ்வதும் மறைவாக நிகழ்ந்த காலம் போய் சட்ட ரீதியான அங்கீகாரத்தை பல நாடுகள் வழங்க முன் வந்திருக்கினறன.

ஒரு சில நூற்றாண்டுகளுக்கிடையே மனித வாழ்வின் திருமண உறவிலும், பண்பாட்டு முறைகளிலும், பாலியல் சிந்தனைகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவை யாவுமே பெரும்பாலும் சமூக பொருளாதார காரணிகளாலும், தனிமனித சுதந்திரம் வலுப் பெற்றுள்ளதாலும் வந்தவை எனப் புரிந்து கொள்வது சிரமமானது அல்ல.

எனவே இத்தகைய ஆய்வுகளை ஆய்வு கூட பரிசோதனைக் குழாய்கள், நுணுக்குக் காட்டி, கணனி ஆகியவற்றிற்குள் மட்டும் முடக்கிவிடாது, சமூதாய மாற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது முக்கியமானதாகப்படுகிறது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக