புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_c10ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_m10ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_c10 
30 Posts - 50%
heezulia
ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_c10ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_m10ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_c10ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_m10ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_c10ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_m10ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_c10 
72 Posts - 57%
heezulia
ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_c10ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_m10ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_c10ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_m10ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_c10ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_m10ரயில் கொள்ளை ஜாக்கிரதை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் கொள்ளை ஜாக்கிரதை!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 7:14 pm

ரயில் கொள்ளை ஜாக்கிரதை! P6

'இது பிரீமியம் சிறப்பு ரயில். முன்பதிவு நேரத்தில் கட்டணம் அதிகமாகும்’ - இப்படி, கண்ணுக்குத் தெரியாத சின்ன எழுத்துகளில் ஆங்கிலத்தில் எழுதி ஒரு ஸ்டார் குறியீடு வைக்கப்பட்டிருக்கிறது ரயில்வே ஆன்லைன் முன்பதிவு வெப்சைட்டான ஐ.ஆர்.சி.டி.சி-யில். 'அட... தீபாவளிக்கு முதல் நாள் டிக்கெட் நிறைய இருக்கே...’ என்ற சந்தோஷத்துடன் நீங்கள் முன்பதிவு செய்தால்... விமானத்தில் செல்வதைவிட கூடுதலான பணம் உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து பறிக்கப்படும். மத்திய பி.ஜே.பி அரசால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது இந்தப் புதிய திட்டம்!


வழக்கமாக, பண்டிகை காலங்களில் பயணிகள் நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்களை வழக்கமான கட்டணத்தில் இயக்குவார்கள். இந்தமுறை அந்த சிஸ்டத்தை மாற்றிவிட்டு 'பிரீமியம் ரயில்கள்’ என்கிற பெயரில் கூடுதல் கட்டணத்தில் 96 ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது ரயில்வே துறை. இவற்றில் ஐந்து ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன. இதுதவிர இனி எப்போதும் பிரீமியம் ரயில்கள் ஒவ்வொரு வழித்தடத்திலும் இயக்கப்படும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் சொல்கிறார்

ரயில் கொள்ளை ஜாக்கிரதை! P7a

சேலத்தைச் சேர்ந்த ரயில் பயணி குப்புராஜ், ''ஆயுத பூஜைக்கு முந்தின நாள் எனது நண்பர் ஒருவர் வந்தார். நெல்லை டு சென்னைக்கு மூன்றடுக்கு ஏ.சி-யில் டிக்கெட் புக்கிங் செய்யச் சொன்னார். பிரீமியம் ரயிலில் மட்டும் இடம் இருந்ததால் நான் அதில் புக்கிங் செய்தேன். டிக்கெட் புக்கிங் செய்யும்போது ஒரு டிக்கெட் கட்டணமாக விலை 1,250 ரூபாய் என காட்டியது. நான் இரண்டு டிக்கெட் போட்டேன். இரண்டுக்கும் சேர்த்து 2,500 ரூபாய்தான் எடுத்திருக்க வேண்டும். ஆனால், 6,600 ரூபாய் எடுக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்ததும் ஷாக் ஆகிவிட்டது. உடனே ரயில்வே துறைக்கு போன் செய்து கேட்டேன். 'நீங்க ரூல்ஸை படிக்கவில்லையா? அதில் தெளிவாகப் போட்டிருக்கோமே... போட்டது போட்டதுதான். இந்த டிக்கெட்டை கேன்சல் செய்யவும் முடியாது’ என்று சொன்னார்கள். இது பகல் கொள்ளையாக இருக்கிறதே என்று அவர்களிடம் சத்தம் போட்டேன். 'இதையெல்லாம் பிரதமர் மோடியிடம் சொல்லுங்கள். நாங்கள் சாதாரண ஊழியர்கள்தான். ஏதோ நாங்க உங்க பணத்தை வீட்டுக்கு எடுத்துட்டுப் போற மாதிரி பேசுறீங்க...’ என்றார். இதை நான் டிக்கெட் போடச் சொன்ன நண்பரிடம் சொன்னபோது, சண்டைக்கு வந்துவிட்டார். அவரிடம் எவ்வளவோ சொல்லியும், 'ரெண்டு டிக்கெட்டுக்கும் ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேல தர முடியாது’ என்று சொல்லிவிட்டார். என்ன செய்யுறது சொல்லுங்க...?'' என்று வேதனையோடு கேட்கிறார்.

பிரீமியம் ரயில் கட்டண உயர்வு பற்றி எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் என்.கண்ணையாவிடம் பேசினோம். ''தீபாவளி சமயத்தில் சில ஆம்னி பஸ்காரங்கதான் இப்படி செய்வாங்க. அவங்களையே மிஞ்சும் வகையில் ரயில்வே இந்த பிரீமியம் ரயில் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. ரயில் கிளம்பும் நேரத்தையும் பயணிகளின் தேவையையும், காலியிடங்களையும் அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட புரோகிராம் உதவியுடன் கம்ப்யூட்டரே கட்டணத்தை நிர்ணயம் செய்யும். இதற்கு, 'டைனமிக் கட்டணம் சிஸ்டம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தட்டுப்பாடுக்கு தகுந்தாற்போல் இந்தக் கட்டணம் 200 சதவிகிதம் வரை உயருமாம். இதுமட்டுமல்ல... ஏற்கெனவே ஒவ்வொரு ரயிலிலும் உள்ள மொத்த பயணிகளின் இருக்கைகளில் 50 சதவிகித இருக்கைகள் தட்கல் என்கிற பெயரில் கூடுதல் கட்டணத்தில் விற்கப்படுகின்றன. தீபாவளி நேரத்தில் தட்கல் டிக்கெட்டிலும் பாதியை பிரீமியம் தட்கல் என்று விற்கிறார்கள். இதிலும் பிரீமியம் ரயிலைப்போல டிக்கெட் தட்டுப்பாடுக்கு ஏற்ப கட்டணம் உயரும். இப்படியே போனால் எதிர்காலத்தில் சாதாரண மக்களுக்கு ரயில் பயணம் என்பதே கனவாகிவிடும்'' என்று சொன்னார்.

ராஜ்யசபா எம்.பி-யான திருச்சி சிவா, ''அரசின் சேவை துறைகள் என்கிற வரிசையில் ரயில்வே வருகிறது. ஏழை, எளிய நடுத்தர மக்கள் வசதி, பாதுகாப்பையும் தாண்டி, செலவு குறைவானது என்பதால்தான் ரயிலைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல மடங்கு கூடுதல் கட்டணம் என்கிற வகையில் ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது தவறு. அரசைப் பொறுத்தவரையில், லாபம் ஈட்ட எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்த கட்டண உயர்வை உடனே வாபஸ்பெற வேண்டும். இதுபற்றி மத்திய அரசிடம் நிச்சயமாகப் பேசுவேன்'' என்றார்.

தமிழகத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் இருவர், மத்திய ரயில்வே நிலைக்குழுவில் உறுப்பினர்கள். ஒருவர், மத்திய சென்னை நாடாளுமன்ற எம்.பி-யான எஸ்.ஆர். விஜயகுமார். இன்னொருவர், திருச்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி-யான ரத்தினவேலு. இருவரிடமும் நாம் பேசினோம். இருவரும் சொன்ன பதில் இதுதான்: ''ரயில்வே போர்டு மீட்டிங் டெல்லியில் நடக்கிறது. பிரீமியம் ரயில் கட்டண உயர்வு விஷயத்தில் தமிழக மக்களின் கடும் அதிருப்தியை நாங்கள் எடுத்துச் சொல்ல இருக்கிறோம். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்!''

வாழ்க்கையில் போரடிக்காத விஷயங்களில் ரயில் பயணமும் ஒன்று என்பார்கள். அதை திகிலடிக்கும் பயணமாக மத்திய அரசு மாற்றிவிடக் கூடாது!

விகடன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக