புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
48 Posts - 48%
ayyasamy ram
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
3 Posts - 3%
prajai
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
2 Posts - 2%
manikavi
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
2 Posts - 2%
Kavithas
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
1 Post - 1%
M. Priya
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
214 Posts - 42%
heezulia
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
189 Posts - 37%
Dr.S.Soundarapandian
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
18 Posts - 4%
sugumaran
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
6 Posts - 1%
manikavi
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
4 Posts - 1%
prajai
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_m10தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 12:07 pm

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு!


செப்டம்பர் - பெரியார் மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா என தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் கொண்டாட்டமான மாதம் எப்போதும். இப்போது, கோர்ட் மாதமாக மாறிவிட்டது!

2ஜி ஸ்பெக்ட்ரம், ஏர்செல் - மேக்சிஸ் வழக்குகளில் டெல்லியில் தி.மு.க-வும், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரில் அ.தி.மு.க-வும் மாட்டிக்கொண்டு முழிக்கின்றன. தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகளின் விசாரணைப் படலம் தொடர்ந்துகொண்டிருக்க, ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, செப்டம்பர் 27-ம் நாள் பெங்களூரு நீதிமன்றத்தில் வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசியல் செப்டம்பர் 27-க்கு முன் - பின் எனப் பிரித்துச் சொல்லும் அளவுக்கு திடீர் முக்கியத்துவம் கிளம்பி இருக்கிறது.

தி.மு.க தலைவர் கருணாநிதி, காலையும் மாலையும் பெங்களூரு வழக்கின் தீர்ப்பைப் பற்றி விசாரிப்பதையே வேலையாகக் கொண்டிருக்கிறார். சட்டம் தெரிந்தவர்களிடம் மட்டும் அல்ல, தன்னைப் பரிசோதிக்கும் மருத்துவர்களிடமும்கூட, 'பெங்களூரு வழக்கு பத்தி என்னய்யா சொல்றாங்க... தீர்ப்பு எப்படி வருமாம்?’ என அதைப் பற்றியே விசாரிக்கிறார்.

கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் கருணாநிதி, திருவாரூரில் இருந்திருக்க வேண்டும். தொகுதிப் பணிகள், தி.மு.க பொதுக்கூட்டம் எனப் பயணத் திட்டம் வைத்திருந்தார். முதலில் தீர்ப்பு தேதி செப்டம்பர்-20 என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் தனது திருவாரூர் பயணத்தைத் தள்ளிவைத்தார் கருணாநிதி. அதாவது தீர்ப்புக்குப் பிறகு எல்லா நிகழ்ச்சிகளையும் வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி, நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு... இனி, இன்னொரு முறை தனக்கான அரசியல் அதிகார வாய்ப்பு இல்லை எனச் சோர்ந்துபோயிருந்த கருணாநிதியை, மலர்ச்சியுடன் தெளிச்சிபெற வைத்துள்ளது பெங்களூரில் ஜெ.வுக்கு எதிராக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு முஸ்தீபுகள்!

அப்படித்தான் மு.க.ஸ்டாலினுக்கும்!

தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக தி.மு.க-வுக்கு தலைவர் ஆகிவிடுவோம் எனத் தனி ஆவர்த்தன குதிரையை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் தட்டிவிட்டவர் மு.க.ஸ்டாலின். தேர்தல் தோல்வி, 'இந்தக் குதிரையை நம்பி பணம் கட்டலாமா?’ என்ற பயத்தை தி.மு.க நிர்வாகிகள் மத்தியிலேயே விதைத்தது. ஆனால், சில 'விடலை’களுக்கு இது விளங்கவில்லை. ஸ்டாலினுக்கு நல்லது செய்வதாக நினைத்து அவரைத் தூக்கியும் கருணாநிதியைப் பலவீனப்படுத்தியும் இணையதளங்களில் கருத்துக்களைப் பரப்பினர். இவையெல்லாம் தனது கையெழுத்துப் பத்திரிகைக் காலத்திலேயே கருணாநிதி பயன்படுத்திய அஸ்திரங்கள்தான் என்பது, அந்தப் புதியவர்களுக்குப் புரிவதற்கு முன், 'தலைவரை வீழ்த்த நினைக்கிறாரா தளபதி?’ என்ற கெட்ட பெயர் ஸ்டாலின் மீது ஏற்பட்டது. 'கருணாநிதியா... ஸ்டாலினா?’ என்ற நேருக்கு நேர் கோதா தொடங்கியது!

ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு நெருக்கடி நெருங்கும் நேரத்தில், இப்படி ஓர் உள்குத்து கோபாலபுரத்தில் நடப்பது ஆரோக்கியமானது அல்ல என்பதை உணர்ந்த ஸ்டாலின், தி.மு.க முப்பெரும் விழாவில் தன்னிலை விளக்க முரசு கொட்டினார்... 'தலைவருக்கும் எனக்கும் தகராறு என பத்திரிகைகள் எழுதுகின்றன. தலைவரைவிட்டால் இந்த நாடு இல்லை; நான் இல்லை; நீங்கள் இல்லை. அவருக்காக இன்னும் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் உழைக்கவே விரும்புகிறேன். வேறு பதவியை விரும்பவில்லை. அண்ணன் துரைமுருகன் சொன்னதுபோல 2016-ல் தலைவர் கலைஞர் தலைமையில் கழக ஆட்சி அமையும்’ என்று ஸ்டாலின் சொன்னது கடந்த இரண்டு மாத மனக் கசப்புகளைத் தள்ளிவைத்துவிட்டு, கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்குமே நிம்மதியைக் கொடுத்துவிட்டது. இணைந்தும் பிணைந்தும் ஸ்டாலின் செயல்பட முடிவெடுத்தது கட்சியினர் மத்தியில், பெங்களூரு தீர்ப்பைவிட மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

இது தி.மு.க நிலவரம் என்றால்... இதுவரை தனது உடல்நலன் பற்றியும் மகனது நடிப்புத் திறன் பற்றியும் மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருந்த விஜயகாந்தை, அரசியல் தூக்கத்தில் இருந்து கொஞ்சம் எழுப்பியிருக்கிறது இந்தத் தீர்ப்பு தேதி. 'ஜெயலலிதாவின் சட்டவிரோத ஆட்சிக்கு எதிராக சட்டமன்ற மாண்பைக் காப்பதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்’ என கருணாநிதி பலதடவை வலைவிரித்தபோது எல்லாம் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த விஜயகாந்த், 'உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்’ என அறிக்கைவிடும் அளவுக்கு யதார்த்த நிலைக்கு இறங்கிவந்துவிட்டார். எதிர் அணியினரது வாக்குகளை மொத்தமாக வாங்க, ஐக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்துவிட்டார் அவர். பா.ஜ.க-வுடன் சேர்ந்து இருந்தால் மட்டுமே இந்த நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்; தனித்துச் செயல்படுவதால் லாபம் இல்லை என்பதுதான் விஜயகாந்தின் இப்போதைய புரிதல்!

இந்தச் சூழ்நிலையில் அதிரடியாக வைகோவும் ஜெயலலிதா எதிர்ப்பு அரசியலைத் தீவிரமாகக் கையில் எடுத்துவிட்டார். கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, பூவிருந்தவல்லியில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் பேசிய வைகோ, சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் ஜெயலலிதாவை மட்டுமே விமர்சித்தார். 'முல்லைப் பெரியாறுக்காக எதையுமே செய்யாதவர் தனக்குத்தானே பாராட்டு விழாவை நடத்திக்கொள்கிறார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதலபாதாளத்துக்குப் போய்விட்டது. எதிர்க்கட்சிகளே இல்லை எனச் சொல்லும் ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தலில் தெருத்தெருவாகப் போய் எதற்காகப் பிரசாரம் செய்யவேண்டும்?’ என்று கேட்டு, 'ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்துவதற்கு கட்சிகள் ஒன்றுபட்டு கைகோக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வும் பா.ஜ.க-வை வலியப் போய் ஆதரித்து தனது இருப்பை கூட்டிக் கொண்டது.

பா.ஜ.க-வைப் பற்றி சொல்லவே வேண்டாம். இப்போதைக்கு அ.தி.மு.க.வு-க்கு எதிராக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் இருந்த ஒரே கட்சி அதுதான். பா.ஜ.க வேட்பாளர்களை வாபஸ் வாங்கவைத்து, அவர்களது கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்யவைத்து, தேவைக்கு அதிகமான முக்கியத்துவத்தை பா.ஜ.க-வுக்குக் கொடுத்துவிட்டது அ.தி.மு.க.. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க உருவாக்கிய கூட்டணியை அப்படியே தக்கவைத்திருக்கிறார்கள். ஒரே மேடையில் தோன்றாவிட்டாலும், ஒரே கூட்டணியில் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் ஆகியோரைக் கட்டிவைத்துள்ளது பா.ஜ.க. மேலும், பேசிப் பேசி ரஜினி மனதைக் கரைத்தும் வருகிறார்கள். '2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 'ரஜினி’ எனும் அஸ்திரத்தைக் கைப்பற்றவே, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மோடியே ரஜினியின் வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது முதல் ரஜினியை எங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. சீக்கிரமே அவரது வருகை அல்லது ஆதரவு தாமரைக்குக் கிட்டும்!’ என்ற அபார நம்பிக்கையில் இருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். 'பா.ஜ.க பக்கம் பார்வையைத் திருப்பலாமா... வேண்டாமா?’ என்பதைத் தீர்மானிக்க ரஜினி காத்திருப்பதும்... செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்புக்குப்பிறகுதான்!

பொதுவாக, சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு எத்தகைய அனல், கனல், கொந்தளிப்பு இருக்குமோ... அந்த வெப்பம் இப்போதே தகிக்கிறது, தமிழக அரசியல் வட்டாரத்தில்!

அதில், பெங்களூரு தீர்ப்பு ஊற்றப்போவது எண்ணெயையா... தண்ணீரையா?

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 26, 2014 2:40 pm

பெங்களூரு தீர்ப்பு ஊற்றப்போவது எண்ணெயையா... தண்ணீரையா?[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1090633

என்னை பொருத்தவரை இதில் தண்ணீர் தேவைஇல்லை என்றே நினைக்கிறேன்.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தீர்ப்பு... எகிறுது எதிர்பார்ப்பு! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 2:54 pm

தமிழர் அனைவரது விருப்பமும் அதுதான்... புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 27, 2014 12:13 pm

தீர்ப்பு என்னாச்சு?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 27, 2014 12:54 pm

தாமதமாகி கொண்டிருப்பதாக புதிய தலைமுறை செய்தி வெளியிடுகிறது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 27, 2014 2:04 pm

ம்....இன்னும் தீர்ப்பு   வரவில்லை.......இங்கு ஒரே அமர்க்களமாம்...............ஹோசூரில் எல்லா பஸ்களும் நிருத்தபடிருக்காம்  ...............தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மின்சாரம் இல்லையாம்...தீர்ப்பை மக்கள் டிவி இல் பார்க்கக்கூடாது  என்று அப்படி செய்துள்ளதாக  டிவி இல் சொல்கிறார்கள்.................அண்ணா சாலை வெறிச்சோடி இருக்காம்........

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 27, 2014 2:16 pm

1 மணிக்கு தீர்ப்பு வந்துருச்சாமே



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 27, 2014 2:19 pm

ஜெயலிதா குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 27, 2014 2:28 pm

பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா; பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு!

சென்னை: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் நீதிமன்றத்தினுள் இருக்கும் வழக்கறிஞர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்ற சிறப்பு நீதிபதி குன்ஹா இன்னும் சற்று நேரத்தில், நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தீர்ப்பை வழங்க உள்ளார்.

ஜெயலலிதா தவிர்த்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரும் ஆஜராகி உள்ளனர். அவர்கள் தற்போது தீர்ப்புக்காக நீதிமன்றத்தில் காத்திருக்கின்றனர்

ஓ.பி. எஸ். உடன் பேசிய ஜெயலலிதா

இதனிடையே நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த ஜெயலலிதா, திடீரென வெளியே வந்து அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசிவிட்டு சென்றார்.


பாதுகாப்பு
ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றம் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள காந்தி பவனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு முற்பகல் 11 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிடுகிறார்.

தீர்ப்பு இன்று கூறப்படுவதையடுத்து, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் பணியில் சுமார் 6 ஆயிரம் போலீஸார், ஆயுதப் படை, அதிரடிப் படையைச் சேர்ந்த ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

ஜெயலலிதா பெங்களூர் புறப்பட்டார்

இந்த வழக்கில் நேரில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை பெங்களூரு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வழக்கு நடைபெறும் நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல உள்ளார். சென்னையில் இருந்து பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரம் நீதிமன்றத்திற்கு செல்லும் ஜெயலலிதாவுக்கு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாகனங்கள் நிறுத்தம்
தமிழ்நாட்டுக்கு வரும் கர்நாடக மாநில பேருந்துகள் எல்லையோடு நிறுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பின் முடிவை அறிந்த பிறகு பேருந்துகளை இயக்க கர்நாடக போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதேபோல், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகளும் தமிழக எல்லையோடு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, ஓசூர் இடையே பேருந்து, கார், லாரி உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர் படையெடுப்பு
தமிழக அமைச்சர்கள் அனைவரும் தீர்ப்பை அறிவதற்காக பெங்களூர் வந்து முகாமிட்டுள்ளனர். அ.தி.மு.க. வழக்கறிஞர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் பெங்களூருவில் குவிந்துள்ளனர்.

வழக்கு விவரம்

தமிழக முதல்வராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது.

2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி விசாரணை தொடங்கியது. இதுவரை 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன. அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் 17 நாட்கள் தனது வாதத்தை முன்வைத்தார். ஜெயலலிதா வழக்கறிஞர் பி.குமார் தனது தரப்பு வாதங்களை 25 நாட்கள் பதிவு செய்தார். இருதரப்பு வாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று சனிக்கிழமை (செப்.27) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 27, 2014 2:30 pm

தீர்ப்பு வந்தாச்சு நேசன்.........ஜெயலலிதா பதவிவிலகுகிறார்.......டிவி இல் இது தான் breaking நியூஸ் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக