5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!by சக்தி18 Yesterday at 10:56 pm
» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by சக்தி18 Yesterday at 10:32 pm
» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by aeroboy2000 Yesterday at 10:02 pm
» 40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்!
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm
» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 8:33 pm
» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Yesterday at 8:09 pm
» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 8:03 pm
» பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm
» சுஜாதா நாவல்கள்
by kajan2009 Yesterday at 6:25 pm
» கிமு-கிபி மின் நூல் புத்தகம் -மதன்
by gans Yesterday at 6:18 pm
» புத்தகங்கள் தேவை !
by gans Yesterday at 6:07 pm
» சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப்பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய சில செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:02 pm
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:52 pm
» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு
by ayyasamy ram Yesterday at 4:41 pm
» புதுநல மருத்துவ மனை...!!
by T.N.Balasubramanian Yesterday at 4:16 pm
» சுப்ரமணி - நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 4:13 pm
» என் காதலி - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:06 pm
» மறதி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» ராபின் சர்மா
by kuloththungan Yesterday at 12:45 pm
» பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:04 am
» என் நிழல் நீயடி
by ANUBAMA KARTHIK Yesterday at 10:34 am
» நான் தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:57 am
» பொதுவான செய்திகள்.
by ayyasamy ram Yesterday at 4:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 4:37 am
» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்?
by shivi Sun Feb 17, 2019 5:26 pm
» mr novels
by kanu Sun Feb 17, 2019 5:07 pm
» ARTHA SASTHIRAM NEEDED
by NAADODI Sun Feb 17, 2019 5:00 pm
» தமிழ்நாடு.
by T.N.Balasubramanian Sun Feb 17, 2019 4:20 pm
» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Sun Feb 17, 2019 4:09 pm
» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.
by ayyasamy ram Sun Feb 17, 2019 4:00 pm
» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்
by ayyasamy ram Sun Feb 17, 2019 3:38 pm
» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது
by ayyasamy ram Sun Feb 17, 2019 3:36 pm
» சிரித்து பார் , உன் முகம் பிடிக்கும்,
by ayyasamy ram Sun Feb 17, 2019 2:18 pm
» MUTHULAKSHMI NOVEL
by kanu Sun Feb 17, 2019 1:29 pm
» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:53 pm
» வீடு வாங்க இதுதான் நேரம்
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:50 pm
» ரஷ்யாவில் சின்னத்தம்பி.
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:42 pm
» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:38 pm
» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:36 pm
» உத்தமர்கள் வாழும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:32 pm
» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:26 pm
» இரவு முடிந்து விடும்!! - திரைப்பட பாடல் காணொளி
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:20 pm
» வழிகாட்டல் தேவை
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:16 pm
» ஆண்ட்ராய்டு ரூட்
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:15 pm
» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
by md.thamim Sun Feb 17, 2019 10:40 am
Admins Online
கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
Page 1 of 2 • 1, 2 

கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
அகந்தை அழிந்தது எப்படி?
- தென்கச்சி சுவாமிநாதன்
அ து மிகவும் பழைமையான ஒரு கோயில். அங்கே அர்ச்சகர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். எல்லோருமே பிரம்மச் சாரிகள். ஆகவே, அவர்கள் உடலில் வலிவு இருந்தது. முகத்தில் பொலிவு இருந்தது.
ஒரு நாள் -
அந்த ஆலயத்தின் முன்னால் சில குதி ரைகள் வந்து நின்றன. அவற்றிலிருந்து சில வீரர்கள் கீழே இறங்கினார்கள். உள்ளே வந் தார்கள்.
‘‘நாங்கள் அரண்மனையிலிருந்து வருகி றோம்’’ என்றார்கள் அந்த வீரர்கள்.
‘‘வாருங்கள்’’ என்றனர் அர்ச்சகர்கள்.
‘‘மன்னர் எங்களை அனுப்பி வைத்தார்!’’
‘‘என்ன வேண்டும் உங்களுக்கு?’’
‘‘நீங்கள்தான் வேண்டும்!’’
‘‘அப்படியென்றால்?’’
‘‘உங்களை அழைத்து வரச் சொன்னார் மன்னர்!’’
அர்ச்சகர்கள் அலட்சியமாக அவர்களைப் பார்த்தார்கள். ‘‘அரசனை வேண்டுமானால் இங்கே வரச்சொல்லுங்கள்!’’
அழைக்க வந்தவர்கள் திகைத்துப் போனார்கள். திரும்பிப் போனார்கள். அரசனிடம் விவரத்தைச் சொன்னார்கள். அரசர், அமைச்சர்களை வரச் சொன்னார். ஆலோசனை நடத்தினார்.
‘‘அர்ச்சகர்களின் அகந்தை அடங்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?’’
ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி செய்தார்கள்.
அவ்வளவுதான். அதன் பிறகு அந்த அர்ச்சகர்களை அரண்மனைக்குக் கூப்பிட்டு அனுப்ப வேண்டிய அவசியமே வரவில்லை! அவர்களாகவே தேடி வர ஆரம்பித்தார்கள். ‘‘மன்னா! தங்களை ஆசீர்வாதம் பண்ண வந்திருக்கிறோம். இதோ அர்ச்சித்த மலர்களைக் கொண்டு வந்திருக்கிறோம். பெற்றுக் கொள்ளுங்கள்!’’ என்றார்கள்.
கூடவே சில கோரிக்கைகளையும் வைத்தார்கள். ‘‘மன்னா! நாங்கள் வீடு கட்ட வேண்டும். வீடுகளில் சில விழாக்களையும் சடங்குகளையும் நடத்த வேண்டும். அதற்கு நீங்கள்தான் அருள் புரிய வேண் டும்!’’
அர்ச்சகர்களின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?
அரசன் என்ன செய்தார்?
வேறொன்றுமில்லை... அர்ச்சகர்கள் அத்தனை பேருக்கும் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார். அவ்வளவுதான். அதன் பின், சொன்னபடி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் அர்ச்சகர்கள். இது, குருதேவர் ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதை.
நண்பர்களே! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த உலகில் மூன்று வகைத் துறவுகள் இருப்பதாகச் சான்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தல் - சமயத் துறவு. அதிகாரத்துக்காக வெறுத்தல் - போர்த் துறவு.
பணத்துக்காக வெறுத்தல் - பணத் துறவு.
இந்த மூன்றாவது வகைத் துறவே இன்றைக்கு அதிகமாகக் காணப்படுகிறது.
தொடரும்
- தென்கச்சி சுவாமிநாதன்
அ து மிகவும் பழைமையான ஒரு கோயில். அங்கே அர்ச்சகர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். எல்லோருமே பிரம்மச் சாரிகள். ஆகவே, அவர்கள் உடலில் வலிவு இருந்தது. முகத்தில் பொலிவு இருந்தது.
ஒரு நாள் -
அந்த ஆலயத்தின் முன்னால் சில குதி ரைகள் வந்து நின்றன. அவற்றிலிருந்து சில வீரர்கள் கீழே இறங்கினார்கள். உள்ளே வந் தார்கள்.
‘‘நாங்கள் அரண்மனையிலிருந்து வருகி றோம்’’ என்றார்கள் அந்த வீரர்கள்.
‘‘வாருங்கள்’’ என்றனர் அர்ச்சகர்கள்.
‘‘மன்னர் எங்களை அனுப்பி வைத்தார்!’’
‘‘என்ன வேண்டும் உங்களுக்கு?’’
‘‘நீங்கள்தான் வேண்டும்!’’
‘‘அப்படியென்றால்?’’
‘‘உங்களை அழைத்து வரச் சொன்னார் மன்னர்!’’
அர்ச்சகர்கள் அலட்சியமாக அவர்களைப் பார்த்தார்கள். ‘‘அரசனை வேண்டுமானால் இங்கே வரச்சொல்லுங்கள்!’’
அழைக்க வந்தவர்கள் திகைத்துப் போனார்கள். திரும்பிப் போனார்கள். அரசனிடம் விவரத்தைச் சொன்னார்கள். அரசர், அமைச்சர்களை வரச் சொன்னார். ஆலோசனை நடத்தினார்.
‘‘அர்ச்சகர்களின் அகந்தை அடங்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?’’
ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி செய்தார்கள்.
அவ்வளவுதான். அதன் பிறகு அந்த அர்ச்சகர்களை அரண்மனைக்குக் கூப்பிட்டு அனுப்ப வேண்டிய அவசியமே வரவில்லை! அவர்களாகவே தேடி வர ஆரம்பித்தார்கள். ‘‘மன்னா! தங்களை ஆசீர்வாதம் பண்ண வந்திருக்கிறோம். இதோ அர்ச்சித்த மலர்களைக் கொண்டு வந்திருக்கிறோம். பெற்றுக் கொள்ளுங்கள்!’’ என்றார்கள்.
கூடவே சில கோரிக்கைகளையும் வைத்தார்கள். ‘‘மன்னா! நாங்கள் வீடு கட்ட வேண்டும். வீடுகளில் சில விழாக்களையும் சடங்குகளையும் நடத்த வேண்டும். அதற்கு நீங்கள்தான் அருள் புரிய வேண் டும்!’’
அர்ச்சகர்களின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?
அரசன் என்ன செய்தார்?
வேறொன்றுமில்லை... அர்ச்சகர்கள் அத்தனை பேருக்கும் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார். அவ்வளவுதான். அதன் பின், சொன்னபடி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் அர்ச்சகர்கள். இது, குருதேவர் ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதை.
நண்பர்களே! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த உலகில் மூன்று வகைத் துறவுகள் இருப்பதாகச் சான்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தல் - சமயத் துறவு. அதிகாரத்துக்காக வெறுத்தல் - போர்த் துறவு.
பணத்துக்காக வெறுத்தல் - பணத் துறவு.
இந்த மூன்றாவது வகைத் துறவே இன்றைக்கு அதிகமாகக் காணப்படுகிறது.
தொடரும்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
இவன் எதிரி இல்லையே!
- தென்கச்சி சுவாமிநாதன்
ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் இருந்தார்.
அவர் ஒரு நாள் தன் நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தார். வீட்டு வாசலில் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.
மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை; இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை. அவர்கள் இருவரும் அந்த நண்பரின் பிள்ளைகள்.
இந்தப் பெரியவர் அங்கே போய்ச் சேர்ந்த சமயத்தில் மூன்று வயதுச் சிறுமி இரண்டு வயதுச் சிறுவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்... ‘‘உன் மண்டையிலே இருக்கிறது மூளை இல்லை... களிமண்ணு! அதனாலதான் நீ சரியா படிக்க மாட்டேங்கறே. உன்னைப் போல ஒரு முட்டாள் இந்த உலகத்துல யாருமே கிடையாது!’’
பெரியவர் இதைக் கவனித்தார்.
உடனே அந்தச் சிறுமியை அருகில் அழைத்தார். ‘‘குழந்தே... இங்கே வா!’’
அவள் வந்தாள். இவர் கேட்டார்: ‘‘ஏன் இப்படி சண்டை போடுகிறாய்?’’
‘‘அவன் ஒரு திருடன்!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்!’’
‘‘அப்படி என்னத்தைத் திருடினான்?’’
‘‘நான் விளையாடுவதற்காக வைத்திருந்த என்னுடைய கரடி பொம்மையைத் திருடி விட்டான்!’’
‘‘அப்படின்னா... அவன் செஞ்சது தப்புதான்.’’
‘‘அதனாலதான் திட்டினேன்.’’
‘‘இதுவும் தப்புதான்!’’
‘‘என்ன சொல்றீங்க?’’
‘‘நான் சொல்லலே... பெரிய மகான்கள் எல்லாம் சொல்லியிருக்காங்க.’’
‘‘என்ன சொல்லி இருக்காங்க?’’
‘‘மனிதன் செய்கிற செயல்களிலேயே மிகவும் சிறந்த செயல் _ அடுத்தவர்களை மன்னிக்கறதுதான் என்று சொல்லியிருக்கிறார்கள்!’’
‘‘அப்புறம் என்ன சொல்லியிருக்காங்க?’’
‘‘நாம் யார் கூடவும் சண்டை போடக் கூடாது. நமக்கு எதிரியாக இருந்தாலும் நாம் அவர்களை மன்னிக்க வேண்டும்!’’
‘‘நீங்க சொல்றது சரி... இவன் என் எதிரியாக இருந்தால் மன்னிக்கலாம். இவன் என் எதிரி இல்லையே!’’
‘‘பின்னே...’’
‘‘என் சகோதரன்!’’
இது ஒரு வேடிக்கைக் கதை. என்றாலும் நடைமுறை வாழ்க்கையில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது, ஆன்மிக உலகில் அறிவுரை சொல்கிறவனைவிட, அதை ஏற்றுச் செயல் படுத்துகிறவன் சில சமயம் உயர்ந்து விடுகிறான்.
தொடரும்
- தென்கச்சி சுவாமிநாதன்
ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் இருந்தார்.
அவர் ஒரு நாள் தன் நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தார். வீட்டு வாசலில் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.
மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை; இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை. அவர்கள் இருவரும் அந்த நண்பரின் பிள்ளைகள்.
இந்தப் பெரியவர் அங்கே போய்ச் சேர்ந்த சமயத்தில் மூன்று வயதுச் சிறுமி இரண்டு வயதுச் சிறுவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்... ‘‘உன் மண்டையிலே இருக்கிறது மூளை இல்லை... களிமண்ணு! அதனாலதான் நீ சரியா படிக்க மாட்டேங்கறே. உன்னைப் போல ஒரு முட்டாள் இந்த உலகத்துல யாருமே கிடையாது!’’
பெரியவர் இதைக் கவனித்தார்.
உடனே அந்தச் சிறுமியை அருகில் அழைத்தார். ‘‘குழந்தே... இங்கே வா!’’
அவள் வந்தாள். இவர் கேட்டார்: ‘‘ஏன் இப்படி சண்டை போடுகிறாய்?’’
‘‘அவன் ஒரு திருடன்!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்!’’
‘‘அப்படி என்னத்தைத் திருடினான்?’’
‘‘நான் விளையாடுவதற்காக வைத்திருந்த என்னுடைய கரடி பொம்மையைத் திருடி விட்டான்!’’
‘‘அப்படின்னா... அவன் செஞ்சது தப்புதான்.’’
‘‘அதனாலதான் திட்டினேன்.’’
‘‘இதுவும் தப்புதான்!’’
‘‘என்ன சொல்றீங்க?’’
‘‘நான் சொல்லலே... பெரிய மகான்கள் எல்லாம் சொல்லியிருக்காங்க.’’
‘‘என்ன சொல்லி இருக்காங்க?’’
‘‘மனிதன் செய்கிற செயல்களிலேயே மிகவும் சிறந்த செயல் _ அடுத்தவர்களை மன்னிக்கறதுதான் என்று சொல்லியிருக்கிறார்கள்!’’
‘‘அப்புறம் என்ன சொல்லியிருக்காங்க?’’
‘‘நாம் யார் கூடவும் சண்டை போடக் கூடாது. நமக்கு எதிரியாக இருந்தாலும் நாம் அவர்களை மன்னிக்க வேண்டும்!’’
‘‘நீங்க சொல்றது சரி... இவன் என் எதிரியாக இருந்தால் மன்னிக்கலாம். இவன் என் எதிரி இல்லையே!’’
‘‘பின்னே...’’
‘‘என் சகோதரன்!’’
இது ஒரு வேடிக்கைக் கதை. என்றாலும் நடைமுறை வாழ்க்கையில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது, ஆன்மிக உலகில் அறிவுரை சொல்கிறவனைவிட, அதை ஏற்றுச் செயல் படுத்துகிறவன் சில சமயம் உயர்ந்து விடுகிறான்.
தொடரும்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
வாழ வைக்கும் நம்பிக்கை!
தென்கச்சி சுவாமிநாதன்
ஓ ர் ஊரில் பெரிய குளம் ஒன்று இருந்தது.
அந்தக் குளம் ஒரு பெரிய மனிதருக்குச் சொந்தமானது.
அதில் பல வகையான மீன்களை விட்டு வளர்த்துக் கொண்டிருந்தார். மீன்கள் வளர வளர அவற்றைப் பிடித்து விற்பனை செய்வது அவரது வழக்கம். அதில் நல்ல லாபம் கிடைத்து வந்தது.
இந்த நிலையில் அந்தக் குளத்தில் இருந்த மீன்கள் அவ்வப்போது திருட்டுப் போக ஆரம்பித்தன.
யார் திருடுவது?
அதைக் கண்டுபிடிக்க ரகசியமாக சில காவலர்களை நியமித்தார்.
வழக்கமாகத் திருடுகிறவன், ஒரு நாள் இரவு நேரத்தில் வலை வைத்து மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தான்.
காவலர்கள் கையில் விளக்குடன் வருவது கண்ணில் பட்டது.
அவ்வளவுதான்! அவன் பிடித்த மீன்கள் அனைத்தையும் குளத்திலேயே போட்டுவிட்டு பக்கத்திலிருந்த மரங்களுக்கு இடையே ஓடினான்.
காவலர்கள் நெருங்குவது தெரிந்தது.
பளிச்சென்று அவனுக்குள் ஒரு யோசனை. உடம்பெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டான். ஒரு மரத்தடியில் சாமியார் மாதிரி கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.
காவலர்கள் ஓடி வந்தார்கள்.
‘‘சுவாமி... இந்தப் பக்கம் யாராவது ஓடி வந்தார்களா?’’
சாம்பல் பூசியவன் வாயே திறக்கவில்லை.
‘‘மௌன சாமியார் போல் இருக்கிறது!’’ என்றான் ஒருவன். அனைவரும் பொத்தென்று அவன் காலில் விழுந்து வணங்கினார்கள்.
‘‘சாமி! நாங்க தேடுகிற ஆள் எங்களுக்குக் கிடைக்கணும். அதுக்கு நீங்கதான் ஆசீர்வாதம் பண்ணணும்!’’
சுவாமி கைகளை உயர்த்தினார்.
காவலர்கள் திருப்தியோடு எழுந்து போனார்கள்.
‘‘இந்தப் பக்கமாகத்தான் ஓடினான்’’ என்றான் ஒருத்தன்.
எல்லோரும் அந்தப் பக்கம் ஓடினார்கள்.
மரத்தடியில் சாமியார் இருக்கிற செய்தி பரவியது.
மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். காணிக்கை செலுத்தினார்கள்.
கணக்குப் பார்த்தார் சாமியார். எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே பணம் சேர்ந்திருந்தது.
அவர் மனசுக்குள் ஒரு கணக்குப் போட்டார்.
உழைத்துச் சாப்பிடுவதைவிட, உட்கார்ந்து சாப்பிடுவது சுலபமாக இருக்கிறது.
உழைத்துப் பிழைப்பதைவிட மக்களின் நம்பிக்கையில் பிழைப்பது எளிதான வழி என்பது புரிந்தது.
ஆன்மிகம் இன்றைக்கு இப்படித்தான் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது.
எது மெய், எது பொய் என்பது புரிவதில்லை.
ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது.
நம்பிக்கை என்பது நம்புகிறவனையும் வாழ வைக்கிறது. நம்பப்படுகிறவனையும் வாழ வைக்கிறது.
தென்கச்சி சுவாமிநாதன்
ஓ ர் ஊரில் பெரிய குளம் ஒன்று இருந்தது.
அந்தக் குளம் ஒரு பெரிய மனிதருக்குச் சொந்தமானது.
அதில் பல வகையான மீன்களை விட்டு வளர்த்துக் கொண்டிருந்தார். மீன்கள் வளர வளர அவற்றைப் பிடித்து விற்பனை செய்வது அவரது வழக்கம். அதில் நல்ல லாபம் கிடைத்து வந்தது.
இந்த நிலையில் அந்தக் குளத்தில் இருந்த மீன்கள் அவ்வப்போது திருட்டுப் போக ஆரம்பித்தன.
யார் திருடுவது?
அதைக் கண்டுபிடிக்க ரகசியமாக சில காவலர்களை நியமித்தார்.
வழக்கமாகத் திருடுகிறவன், ஒரு நாள் இரவு நேரத்தில் வலை வைத்து மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தான்.
காவலர்கள் கையில் விளக்குடன் வருவது கண்ணில் பட்டது.
அவ்வளவுதான்! அவன் பிடித்த மீன்கள் அனைத்தையும் குளத்திலேயே போட்டுவிட்டு பக்கத்திலிருந்த மரங்களுக்கு இடையே ஓடினான்.
காவலர்கள் நெருங்குவது தெரிந்தது.
பளிச்சென்று அவனுக்குள் ஒரு யோசனை. உடம்பெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டான். ஒரு மரத்தடியில் சாமியார் மாதிரி கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.
காவலர்கள் ஓடி வந்தார்கள்.
‘‘சுவாமி... இந்தப் பக்கம் யாராவது ஓடி வந்தார்களா?’’
சாம்பல் பூசியவன் வாயே திறக்கவில்லை.
‘‘மௌன சாமியார் போல் இருக்கிறது!’’ என்றான் ஒருவன். அனைவரும் பொத்தென்று அவன் காலில் விழுந்து வணங்கினார்கள்.
‘‘சாமி! நாங்க தேடுகிற ஆள் எங்களுக்குக் கிடைக்கணும். அதுக்கு நீங்கதான் ஆசீர்வாதம் பண்ணணும்!’’
சுவாமி கைகளை உயர்த்தினார்.
காவலர்கள் திருப்தியோடு எழுந்து போனார்கள்.
‘‘இந்தப் பக்கமாகத்தான் ஓடினான்’’ என்றான் ஒருத்தன்.
எல்லோரும் அந்தப் பக்கம் ஓடினார்கள்.
மரத்தடியில் சாமியார் இருக்கிற செய்தி பரவியது.
மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். காணிக்கை செலுத்தினார்கள்.
கணக்குப் பார்த்தார் சாமியார். எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே பணம் சேர்ந்திருந்தது.
அவர் மனசுக்குள் ஒரு கணக்குப் போட்டார்.
உழைத்துச் சாப்பிடுவதைவிட, உட்கார்ந்து சாப்பிடுவது சுலபமாக இருக்கிறது.
உழைத்துப் பிழைப்பதைவிட மக்களின் நம்பிக்கையில் பிழைப்பது எளிதான வழி என்பது புரிந்தது.
ஆன்மிகம் இன்றைக்கு இப்படித்தான் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது.
எது மெய், எது பொய் என்பது புரிவதில்லை.
ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது.
நம்பிக்கை என்பது நம்புகிறவனையும் வாழ வைக்கிறது. நம்பப்படுகிறவனையும் வாழ வைக்கிறது.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
‘நீங்க ராமசாமிதானே?’
தென்கச்சி சுவாமிநாதன்
பேருந்து போய்க் கொண்டிருந் தது.
அதில் பயணம் செய்யும் ஒருவர், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைத் திரும்பிப் பார்த்தார்.
‘‘நீங்க ராமசாமியா..?’’ என்று கேட்டார்.
‘‘இல்லை!’’ என்றார் அவர்.
கொஞ்ச நேரம் ஆயிற்று.
இவர் மறுபடியும் கேட்டார்.
‘‘சும்மா சொல்லுங்க... நீங்க ராமசாமி தானே?’’
‘‘இல்லீங்க!’’ என்றார் அவர் அழுத்த மாக.
இவர் விடுவதாக இல்லை.
‘‘என்கிட்டே சொல்றதுலே எந்தத் தப்பும் இல்லே. தைரியமா சொல்லலாம். நீங்க ராமசாமிதான். சரியா?’’
‘‘நிச்சயமா சொல்றேன்... நான் ராமசாமி இல்லை. போதுமா?’’
கேட்டவர் மௌனமானார்.
கொஞ்ச நேரம் ஆயிற்று.
மறுபடியும் ஆரம்பித்தார்.
‘‘நிச்சயமா சொல்றேன்... நீங்க ராம சாமியேதான்!’’
அவர் யோசித்தார்.
இவரிடமிருந்து தப்பிக்க ஒரே வழிதான் உண்டு.
‘‘ஆமாம் சார்! நான் ராமசாமிதான்!’’ என்றார் சற்று எரிச்சலாக.
இவர் மறுபடி மெள்ள அவர் பக்கம் திரும்பி னார்.
‘‘உங்களைப் பார்த்தா அப்படித் தெரியலையே!’’ என்று ஆரம்பித்தார்.
அவர் திடீரென்று எழுந்தார். இடத்தை மாற்றிக் கொண்டு போய்விட்டார்.
இந்தக் கதை வேடிக்கையாக இருந்தாலும், இதில் இருக்கிற கருத்து ஆழமானது.
நாம் பல சந்தர்ப்பங்களில், முதலில் முடிவு எடுத்து விடுகிறோம்.
அதன் பிறகு அதை உறுதிப்படுத்த வழி கண்டு பிடிக்கிறோம்.
நாம் முடிவு செய்ததுதான் சரி என்று நிரூபிப்பதில் நமக்கு ஒரு பெருமை!
அந்தப் பெருமைக்காக பெரும் பொழுதுகளை எல்லாம் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.
ஆன்மிக உலகிலும் இந்த மனித சுபாவம் நிறையக் குழப்பங்களை உண்டு பண்ணிக் கொண் டிருக்கிறது.
ஆலய வாசலில் நின்று கொண்டு, உள்ளேயிருந்து வெளியே வருகிறவர்களை விசாரித்துக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.
‘‘என்ன வேண்டிக்கொண்டீர்கள்?’’
வந்து கொண்டிருந்தவர்கள் ஆளுக்கொரு பதில் சொன்னார்கள்...
‘‘தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும்!’’
‘‘தேர்தலில் வெற்றி பெற வேண்டும்!’’
‘‘வேலை கிடைக்க வேண்டும்!’’
இவையெல்லாம் ஏற்கெனவே செய்து கொண்ட முடிவுகள். இந்த முடிவுகளுக்கு ஆதரவு தேடி அவர்கள் ஆலயத்துக்கு வந்திருக்கிறார்கள்.
நண்பர்களே!
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்:
ஆலயம் என்பது...
உங்கள் முடிவுகளை உறுதிப்படுத்துகிற இடம் அல்ல!
பரம்பொருளின் இருப்பிடம் என்பது வேறு; பத்திரப் பதிவு அலுவலகம் என்பது வேறு!
தென்கச்சி சுவாமிநாதன்
பேருந்து போய்க் கொண்டிருந் தது.
அதில் பயணம் செய்யும் ஒருவர், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைத் திரும்பிப் பார்த்தார்.
‘‘நீங்க ராமசாமியா..?’’ என்று கேட்டார்.
‘‘இல்லை!’’ என்றார் அவர்.
கொஞ்ச நேரம் ஆயிற்று.
இவர் மறுபடியும் கேட்டார்.
‘‘சும்மா சொல்லுங்க... நீங்க ராமசாமி தானே?’’
‘‘இல்லீங்க!’’ என்றார் அவர் அழுத்த மாக.
இவர் விடுவதாக இல்லை.
‘‘என்கிட்டே சொல்றதுலே எந்தத் தப்பும் இல்லே. தைரியமா சொல்லலாம். நீங்க ராமசாமிதான். சரியா?’’
‘‘நிச்சயமா சொல்றேன்... நான் ராமசாமி இல்லை. போதுமா?’’
கேட்டவர் மௌனமானார்.
கொஞ்ச நேரம் ஆயிற்று.
மறுபடியும் ஆரம்பித்தார்.
‘‘நிச்சயமா சொல்றேன்... நீங்க ராம சாமியேதான்!’’
அவர் யோசித்தார்.
இவரிடமிருந்து தப்பிக்க ஒரே வழிதான் உண்டு.
‘‘ஆமாம் சார்! நான் ராமசாமிதான்!’’ என்றார் சற்று எரிச்சலாக.
இவர் மறுபடி மெள்ள அவர் பக்கம் திரும்பி னார்.
‘‘உங்களைப் பார்த்தா அப்படித் தெரியலையே!’’ என்று ஆரம்பித்தார்.
அவர் திடீரென்று எழுந்தார். இடத்தை மாற்றிக் கொண்டு போய்விட்டார்.
இந்தக் கதை வேடிக்கையாக இருந்தாலும், இதில் இருக்கிற கருத்து ஆழமானது.
நாம் பல சந்தர்ப்பங்களில், முதலில் முடிவு எடுத்து விடுகிறோம்.
அதன் பிறகு அதை உறுதிப்படுத்த வழி கண்டு பிடிக்கிறோம்.
நாம் முடிவு செய்ததுதான் சரி என்று நிரூபிப்பதில் நமக்கு ஒரு பெருமை!
அந்தப் பெருமைக்காக பெரும் பொழுதுகளை எல்லாம் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.
ஆன்மிக உலகிலும் இந்த மனித சுபாவம் நிறையக் குழப்பங்களை உண்டு பண்ணிக் கொண் டிருக்கிறது.
ஆலய வாசலில் நின்று கொண்டு, உள்ளேயிருந்து வெளியே வருகிறவர்களை விசாரித்துக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.
‘‘என்ன வேண்டிக்கொண்டீர்கள்?’’
வந்து கொண்டிருந்தவர்கள் ஆளுக்கொரு பதில் சொன்னார்கள்...
‘‘தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும்!’’
‘‘தேர்தலில் வெற்றி பெற வேண்டும்!’’
‘‘வேலை கிடைக்க வேண்டும்!’’
இவையெல்லாம் ஏற்கெனவே செய்து கொண்ட முடிவுகள். இந்த முடிவுகளுக்கு ஆதரவு தேடி அவர்கள் ஆலயத்துக்கு வந்திருக்கிறார்கள்.
நண்பர்களே!
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்:
ஆலயம் என்பது...
உங்கள் முடிவுகளை உறுதிப்படுத்துகிற இடம் அல்ல!
பரம்பொருளின் இருப்பிடம் என்பது வேறு; பத்திரப் பதிவு அலுவலகம் என்பது வேறு!
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
உழைத்துப் பிழைப்பதைவிட மக்களின் நம்பிக்கையில் பிழைப்பது எளிதான வழி என்பது புரிந்தது.
ஆன்மிகம் இன்றைக்கு இப்படித்தான் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது.
நம்பிக்கை என்பது நம்புகிறவனையும் வாழ வைக்கிறது. நம்பப்படுகிறவனையும் வாழ வைக்கிறது.
எவ்வளவு உண்மையான செய்தி!!!
நம் மக்கள் ஆனாலும் அதிகமாகவே நம்புகின்றனர்
ஆன்மிகம் இன்றைக்கு இப்படித்தான் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது.
நம்பிக்கை என்பது நம்புகிறவனையும் வாழ வைக்கிறது. நம்பப்படுகிறவனையும் வாழ வைக்கிறது.
எவ்வளவு உண்மையான செய்தி!!!
நம் மக்கள் ஆனாலும் அதிகமாகவே நம்புகின்றனர்
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881
Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
கை எங்கே? கால் எங்கே?
- தென்கச்சி சுவாமிநாதன்
ஓ ர் ஊரில் பத்து நண்பர்கள் இருந்தார்கள்.
அவர்கள் எங்கே போனாலும் சேர்ந்தேதான் போவார்கள்; வருவார்கள். அப்படியரு பாசப் பிணைப்பு.
பக்கத்து நகரத்துக்கு அவர்கள் ஒரு தடவை சினிமா பார்க்கப் போனார்கள்.
இரண்டாவது ஆட்டம்...
படம் முடிந்து வெளியே வந்தார்கள்.
பக்கத்தில் இருந்த மதுக்கடைக்குள் நுழைந் தார்கள்.
மயக்கத்தோடு வெளியே வந்தார்கள்.
ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
வழியில் ஒரு பெருங்காடு.
அதைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.
நள்ளிரவு நேரம்.
நடுக்காட்டில் அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென்று மழை... நேரம் ஆக ஆக மழை வலுத்தது.
‘‘இனி... நாம இங்கேயே தங்கிக்கறதுதான் நல்லது. விடிஞ்சதும் ஊருக்குப் போகலாம். இப்ப நாம இந்த ஆல மரத்துக்குக் கீழே படுத்துக்கலாம்!’’ என்று அந்தப் பத்துப் பேரில் ஒருவன் சொன்னான்.
எல்லோரும் படுத்துக் கொண்டார்கள்.
குளிர் ஒரு பக்கம்; பயம் ஒரு பக்கம்.
எப்படியோ தூங்கிப் போனார்கள்.
பொழுது விடிந்தது.
விழித்துப் பார்த்தால் அவர்களுக்குள் ஒரு புதிய சிக்கல்.
ஆமாம்... அவர்களின் கைகளும் கால்களும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டிருந்தன.
பிரிக்க முடியவில்லை. காரணம் அவரவர்களின் கை எது? கால் எது என்பது அவர்களுக்கே அடையாளம் தெரியவில்லை.
அழ ஆரம்பித்தார்கள். இந்த அழுகைச் சத்தம் அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஒரு வழிப்போக்கனின் காதில் விழுந்தது.
நெருங்கி வந்தான்.
‘‘என்ன ஆச்சு உங்களுக்கு?’’
‘‘பயத்துலே நடுங்கிக்கிட்டே படுத்தோம்... காலை யிலே பாத்தா கை - கால் எல்லாம் பின்னிக்கிட்டு கிடக்குது!’’
‘‘அதாங்க பிரச்னை... எது எங்களுடையதுனு அடையாளம் தெரியலே.. இப்ப என்ன பண்றது..?’’
‘‘கவலைப்படாதீங்க... நான் உங்க சிக்கலைத் தீர்த்து வைக்கிறேன்!’’
வழிப்போக்கன் பக்கத்திலிருந்த கருவேல மரத்தி லிருந்து ஒரு நீண்ட முள்ளை ஒடித்துக் கொண்டு வந்தான். ஒரு காலில் குத்தினான்.
‘‘ஆ...!’’ என்றான் ஒருத்தன்.
‘‘இந்தக் கால் உன்னுடையது. எடுத்துக்கோ...!’’ என்று சொல்லிவிட்டு ஒரு கையில் குத்தினான்.
‘‘ஐயோ!’’ என்று அலறினான் ஒருத்தன்.
‘‘இந்தக் கை உன்னுடையது. இழுத்துக்கோ’’ என்றான்.
வெடுக்கென்று இழுத்துக் கொண்டான்.
இப்படியாக அந்த நண்பர்களின் கை-கால்களை அவர் அடையாளம் காட்டினார். அவர்கள் விடு பட்டார்கள்.
பந்தபாசம் இப்படித்தான். பல சமயம் மனிதர்களைக் கட்டிப் போட்டு விடுகிறது. சிக்கிக் கொள்கிறார்கள்.
ஆன்மிக வெளிச்சம் என்கிற முள் வந்துதான் அவர்களை விடுவிக்க வேண்டி இருக்கிறது!
- தென்கச்சி சுவாமிநாதன்
ஓ ர் ஊரில் பத்து நண்பர்கள் இருந்தார்கள்.
அவர்கள் எங்கே போனாலும் சேர்ந்தேதான் போவார்கள்; வருவார்கள். அப்படியரு பாசப் பிணைப்பு.
பக்கத்து நகரத்துக்கு அவர்கள் ஒரு தடவை சினிமா பார்க்கப் போனார்கள்.
இரண்டாவது ஆட்டம்...
படம் முடிந்து வெளியே வந்தார்கள்.
பக்கத்தில் இருந்த மதுக்கடைக்குள் நுழைந் தார்கள்.
மயக்கத்தோடு வெளியே வந்தார்கள்.
ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
வழியில் ஒரு பெருங்காடு.
அதைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.
நள்ளிரவு நேரம்.
நடுக்காட்டில் அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென்று மழை... நேரம் ஆக ஆக மழை வலுத்தது.
‘‘இனி... நாம இங்கேயே தங்கிக்கறதுதான் நல்லது. விடிஞ்சதும் ஊருக்குப் போகலாம். இப்ப நாம இந்த ஆல மரத்துக்குக் கீழே படுத்துக்கலாம்!’’ என்று அந்தப் பத்துப் பேரில் ஒருவன் சொன்னான்.
எல்லோரும் படுத்துக் கொண்டார்கள்.
குளிர் ஒரு பக்கம்; பயம் ஒரு பக்கம்.
எப்படியோ தூங்கிப் போனார்கள்.
பொழுது விடிந்தது.
விழித்துப் பார்த்தால் அவர்களுக்குள் ஒரு புதிய சிக்கல்.
ஆமாம்... அவர்களின் கைகளும் கால்களும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டிருந்தன.
பிரிக்க முடியவில்லை. காரணம் அவரவர்களின் கை எது? கால் எது என்பது அவர்களுக்கே அடையாளம் தெரியவில்லை.
அழ ஆரம்பித்தார்கள். இந்த அழுகைச் சத்தம் அந்த வழியாக வந்து கொண்டிருந்த ஒரு வழிப்போக்கனின் காதில் விழுந்தது.
நெருங்கி வந்தான்.
‘‘என்ன ஆச்சு உங்களுக்கு?’’
‘‘பயத்துலே நடுங்கிக்கிட்டே படுத்தோம்... காலை யிலே பாத்தா கை - கால் எல்லாம் பின்னிக்கிட்டு கிடக்குது!’’
‘‘அதாங்க பிரச்னை... எது எங்களுடையதுனு அடையாளம் தெரியலே.. இப்ப என்ன பண்றது..?’’
‘‘கவலைப்படாதீங்க... நான் உங்க சிக்கலைத் தீர்த்து வைக்கிறேன்!’’
வழிப்போக்கன் பக்கத்திலிருந்த கருவேல மரத்தி லிருந்து ஒரு நீண்ட முள்ளை ஒடித்துக் கொண்டு வந்தான். ஒரு காலில் குத்தினான்.
‘‘ஆ...!’’ என்றான் ஒருத்தன்.
‘‘இந்தக் கால் உன்னுடையது. எடுத்துக்கோ...!’’ என்று சொல்லிவிட்டு ஒரு கையில் குத்தினான்.
‘‘ஐயோ!’’ என்று அலறினான் ஒருத்தன்.
‘‘இந்தக் கை உன்னுடையது. இழுத்துக்கோ’’ என்றான்.
வெடுக்கென்று இழுத்துக் கொண்டான்.
இப்படியாக அந்த நண்பர்களின் கை-கால்களை அவர் அடையாளம் காட்டினார். அவர்கள் விடு பட்டார்கள்.
பந்தபாசம் இப்படித்தான். பல சமயம் மனிதர்களைக் கட்டிப் போட்டு விடுகிறது. சிக்கிக் கொள்கிறார்கள்.
ஆன்மிக வெளிச்சம் என்கிற முள் வந்துதான் அவர்களை விடுவிக்க வேண்டி இருக்கிறது!
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
உள்ளே என்ன இருக்கு?
தென்கச்சி சுவாமிநாதன்
ஒ ரு மனிதன். நீண்ட நாளைக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டான். ‘மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி?’ அவன் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
ஒரு நாள் கடை வீதிக்குப் போனான். கடையில் ஒரு பொருளைப் பார்த்தான். இதுவரையில் அவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு பொருள் அது. ஆகவே, தனக்குத் தெரியாதது எல்லாமே தன் மனைவிக்கும் தெரியாது என்கிற ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.
‘‘அது என்னங்க?’’ என்று விசாரித்தான்.
‘‘அதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’ என்றார் கடைக்காரர்.
‘‘அப்படின்னா என்னங்க... அது எதுக்கு உபயோகம்?’’
‘‘இதுக்குள்ளே சூடான பொருளை வெச்சா சூடாவே இருக்கும்! குளிர்ச்சியான பொருளை வெச்சா குளிர்ச்சியாவே இருக்கும்!’’
‘‘அப்படியா சொல்றீங்க...?’’
‘‘ஆமாங்க!’’
‘‘அப்படின்னா அதுலே ஒண்ணு கொடுங்க!’’
வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.
அவனுக்குள் உற்சாகம் உற்பத்தியாயிற்று.
மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பது அவன் திட்டம். அந்தத் திட்டப்படி மேலும் சில பொருள்களை வாங்கிக் கொண்டு வேகமாக நடந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
‘‘சீக்கிரம் இங்கே வா!’’ என்று மனைவியை அழைத்தான்.
அவள் வந்தாள். கவனித்தாள்.
‘‘என்னங்க இது?’’
‘‘இது ஒரு புதுமையான பாத்திரம்!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்! இதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’
‘‘எதுக்கு இது?’’ என்று தெரியாதது போல கேட்டாள்.
‘‘இது சூடான பொருளைச் சூடாகவும், குளிர்ச்சியான பொருளைக் குளிர்ச்சியாகவும் அப்படியே வெச்சிருக்கும்! உனக்காக வாங்கிட்டு வந்திருக்கேன்!’’
_ கணவன் தலை நிமிர்ந்து நின்றான்.
மனைவி கேட்டாள்:
‘‘உள்ளே என்ன இருக்கு?’’
அவன் சொன்னான்:
‘‘அதுவும் உனக்காகத்தான் வாங்கி வந்தேன்!’’
‘‘அப்படியா? என்ன அது... சொல்லுங்களேன்.’’
‘‘ஒரு கப் காபியும் ஒரு கப் ஐஸ்கிரீமும்!’’
மனைவி மயங்கி விழுந்தாள்.
நண்பர்களே!
ஒன்றைத் தெரிந்து கொள்வது என்பது வேறு; அதைப் புரிந்து கொள்வது என்பது வேறு!
ஆன்மிகம் என்பது புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அதைத் தெரிந்து கொள்வதோடு நிறுத்தி விடுகிறவர்களுக்குத்தான், தேவை இல்லாத குழப்பங்கள் எல்லாம் வந்து சேர்கின்றன.
‘‘விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் என்ன வேறுபாடு?’’ என்று பெர்னாட்ஷாவிடம் கேட்டார்கள். அவர் சொன்னார்: ‘‘விஞ்ஞானம் இருக்கிறதே.... புதிதாகப் பத்துப் பிரச்னைகளை உருவாக்காமல் எந்த ஒரு பிரச்னைக்கும் அது தீர்வு கண்டதில்லை!’’
அறிவால் ஏற்படுகிற வெளிச்சம் - விஞ்ஞானம்; ஆன்மாவால் ஏற்படுகிற வெளிச்சம் - மெய்ஞ்ஞானம்!
தென்கச்சி சுவாமிநாதன்
ஒ ரு மனிதன். நீண்ட நாளைக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டான். ‘மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி?’ அவன் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
ஒரு நாள் கடை வீதிக்குப் போனான். கடையில் ஒரு பொருளைப் பார்த்தான். இதுவரையில் அவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு பொருள் அது. ஆகவே, தனக்குத் தெரியாதது எல்லாமே தன் மனைவிக்கும் தெரியாது என்கிற ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.
‘‘அது என்னங்க?’’ என்று விசாரித்தான்.
‘‘அதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’ என்றார் கடைக்காரர்.
‘‘அப்படின்னா என்னங்க... அது எதுக்கு உபயோகம்?’’
‘‘இதுக்குள்ளே சூடான பொருளை வெச்சா சூடாவே இருக்கும்! குளிர்ச்சியான பொருளை வெச்சா குளிர்ச்சியாவே இருக்கும்!’’
‘‘அப்படியா சொல்றீங்க...?’’
‘‘ஆமாங்க!’’
‘‘அப்படின்னா அதுலே ஒண்ணு கொடுங்க!’’
வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.
அவனுக்குள் உற்சாகம் உற்பத்தியாயிற்று.
மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பது அவன் திட்டம். அந்தத் திட்டப்படி மேலும் சில பொருள்களை வாங்கிக் கொண்டு வேகமாக நடந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
‘‘சீக்கிரம் இங்கே வா!’’ என்று மனைவியை அழைத்தான்.
அவள் வந்தாள். கவனித்தாள்.
‘‘என்னங்க இது?’’
‘‘இது ஒரு புதுமையான பாத்திரம்!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்! இதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’
‘‘எதுக்கு இது?’’ என்று தெரியாதது போல கேட்டாள்.
‘‘இது சூடான பொருளைச் சூடாகவும், குளிர்ச்சியான பொருளைக் குளிர்ச்சியாகவும் அப்படியே வெச்சிருக்கும்! உனக்காக வாங்கிட்டு வந்திருக்கேன்!’’
_ கணவன் தலை நிமிர்ந்து நின்றான்.
மனைவி கேட்டாள்:
‘‘உள்ளே என்ன இருக்கு?’’
அவன் சொன்னான்:
‘‘அதுவும் உனக்காகத்தான் வாங்கி வந்தேன்!’’
‘‘அப்படியா? என்ன அது... சொல்லுங்களேன்.’’
‘‘ஒரு கப் காபியும் ஒரு கப் ஐஸ்கிரீமும்!’’
மனைவி மயங்கி விழுந்தாள்.
நண்பர்களே!
ஒன்றைத் தெரிந்து கொள்வது என்பது வேறு; அதைப் புரிந்து கொள்வது என்பது வேறு!
ஆன்மிகம் என்பது புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அதைத் தெரிந்து கொள்வதோடு நிறுத்தி விடுகிறவர்களுக்குத்தான், தேவை இல்லாத குழப்பங்கள் எல்லாம் வந்து சேர்கின்றன.
‘‘விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத்துக்கும் என்ன வேறுபாடு?’’ என்று பெர்னாட்ஷாவிடம் கேட்டார்கள். அவர் சொன்னார்: ‘‘விஞ்ஞானம் இருக்கிறதே.... புதிதாகப் பத்துப் பிரச்னைகளை உருவாக்காமல் எந்த ஒரு பிரச்னைக்கும் அது தீர்வு கண்டதில்லை!’’
அறிவால் ஏற்படுகிற வெளிச்சம் - விஞ்ஞானம்; ஆன்மாவால் ஏற்படுகிற வெளிச்சம் - மெய்ஞ்ஞானம்!
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
கடவுளைக் காப்பாற்றுங்கள்!
ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவ மனைக்குப் போனார்.
டாக்டரிடம் சொன்னார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார்.
அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ‘‘இதை உடனே வாங்கி வா!’’ என்றார்.
அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார்.
மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.
மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு மருந்தின் பெயரை எழுதினார்.
‘‘இது கிடைத்தாலும் பரவாயில்லை!’’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார்.
அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால், வந்து சேரவில்லை.
படுத்திருந்தவரை தலைவலி பாடாகப்படுத்துகிறது. டாக்டரும் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் ஏதோ கூச்சல் கேட்கிறது. அங்கே ஒரு சுழலும் வழி...
ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால்நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு.
அங்கே இரண்டு பேர், ‘நான்தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு- இரண்டு பேருமே செல்ல முடியவில்லை.
இவர்கள் போடுகிற சத்தத்தைக் கேட்டு டாக்டர் வெளியே ஓடி வந்து பார்க்கிறார். அந்த இரண்டு பேருமே உள்ளே படுத்திருக்கிற தலைவலிக்காரருக்காக மருந்து வாங்கப் போனவர்கள்.
இருவரின் கையில் இருப்பதும் ஒரே நோய்க்கான மருந்துதான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
உள்ளே படுத்திருப்பவரோ, தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான மருந்தை வைத்திருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது! இதுதான் இன்றைய ஆன்மிகம்!
மனித குலம்தான் அந்த நோயாளி. கடவுள்தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.
சரி... இப்போது கதையைத் தொடரலாம். டாக்டர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருந்த இரண்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறார்.
ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்!
ஆமாம்!
இப்போது டாக்டருக்கும் தலைவலி!
மதவாதிகளே!
தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!
ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவ மனைக்குப் போனார்.
டாக்டரிடம் சொன்னார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார்.
அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ‘‘இதை உடனே வாங்கி வா!’’ என்றார்.
அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார்.
மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.
மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு மருந்தின் பெயரை எழுதினார்.
‘‘இது கிடைத்தாலும் பரவாயில்லை!’’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார்.
அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால், வந்து சேரவில்லை.
படுத்திருந்தவரை தலைவலி பாடாகப்படுத்துகிறது. டாக்டரும் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் ஏதோ கூச்சல் கேட்கிறது. அங்கே ஒரு சுழலும் வழி...
ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால்நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு.
அங்கே இரண்டு பேர், ‘நான்தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு- இரண்டு பேருமே செல்ல முடியவில்லை.
இவர்கள் போடுகிற சத்தத்தைக் கேட்டு டாக்டர் வெளியே ஓடி வந்து பார்க்கிறார். அந்த இரண்டு பேருமே உள்ளே படுத்திருக்கிற தலைவலிக்காரருக்காக மருந்து வாங்கப் போனவர்கள்.
இருவரின் கையில் இருப்பதும் ஒரே நோய்க்கான மருந்துதான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
உள்ளே படுத்திருப்பவரோ, தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான மருந்தை வைத்திருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது! இதுதான் இன்றைய ஆன்மிகம்!
மனித குலம்தான் அந்த நோயாளி. கடவுள்தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.
சரி... இப்போது கதையைத் தொடரலாம். டாக்டர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருந்த இரண்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறார்.
ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்!
ஆமாம்!
இப்போது டாக்டருக்கும் தலைவலி!
மதவாதிகளே!
தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
ஆலயம் என்பது...
உங்கள் முடிவுகளை உறுதிப்படுத்துகிற இடம் அல்ல!
பரம்பொருளின் இருப்பிடம் என்பது வேறு; பத்திரப் பதிவு அலுவலகம் என்பது வேறு!
மிகச்சரி
உங்கள் முடிவுகளை உறுதிப்படுத்துகிற இடம் அல்ல!
பரம்பொருளின் இருப்பிடம் என்பது வேறு; பத்திரப் பதிவு அலுவலகம் என்பது வேறு!
மிகச்சரி
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881
Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
ருசிக்கத் தெரிந்த குரு!
‘‘இ ந்த உலகத்துல வாழ்ந்து என்ன சுகத்தைக் கண்டேன்?’’ என்று அலுத்துக் கொள்கிறவர்கள் அதிகம்!
‘‘ஆகா... என்ன அற்புதமான உலகம்!’’ என்று ஆனந்தப் படுகிறவர்கள் குறைவு!
ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு எல்லாமே சுகம்தான்!
இங்கிலாந்து நாட்டில் ஒரு கவிஞர் இருந்தார். அவர் பெயர் ஜார்ஜ் பர்ன்ஸ்.
அவருக்கு 95-வது பிறந்த நாள்.
நண்பர்கள் எல்லாரும் வந்தார்கள். வாழ்த்தினார்கள்.
ஒரு நண்பர் கேட்டாராம்:
‘‘இந்த 95-வது வயது எப்படி இருக்கிறது?’’
உடனே கவிஞர் உற்சாகமாகப் பதில் சொல்ல ஆரம்பித்தாராம்.
‘‘சொல்றேன் கேளுங்க.... இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருந்ததில்லை. இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு ஜாலியாக இருந்ததில்லை. இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு அற்புதமாகக் காதலித்ததில்லை!’’ என்று சொல்லி நிறுத்திவிட்டு, ‘‘இன்னொரு ரகசியம்... இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு அதிகமாகப் பொய் சொன்னதில்லை!’’ என்றாராம்.
கூட்டம் ‘கொல்’லென்று சிரித்ததாம்!
அந்தக் கவிஞருக்கு வாழ்க்கை ஒரு சுமையாகத் தெரியவில்லை. சுகமாகத் தெரிகிறது.
வயதான குரு ஒருவர்... அவருக்கு 100 வயது. வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருக்கிறார்.
சுற்றிலும் சீடர்கள் சோகமாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சீடர் வேகமாக வெளியே ஓடுகிறார். குரு வழக்கமாக விரும்பிச் சாப்பிடும் ஒரு பலகாரத்தைத் தேடிப் பிடித்து வாங்கி வருகிறார். குருவிடம் நீட்டுகிறார். அவர் ஆவலோடு அதை வாங்கிச் சாப்பிடுகிறார். சாப்பிட்டு விட்டு அந்தச் சீடரை அருகில் அழைக்கிறார். சீடர் அவர் அருகில் குனிகிறார் _ ஏதோ கடைசி உபதேசம் சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில்!
குருவின் உதடுகள் மெல்ல அசைகின்றன. ‘‘ஆகா! என்ன ருசி!’’ என்று சொல்லி விட்டுக் கண்களை மூடிவிடுகிறார்.
சீடருக்கு அந்த குருவின் உபதேசம் புரிகிறது.
அந்த குருவுக்கு வாழ்க்கையின் கடைசி விநாடிகூட ருசியாக இருந்திருக்கிறது!
வாழ்வின் கடைசி விநாடியைக்கூட ருசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் அந்த குருவின் உபதேசம்!
ஆன்மிகம் அந்தக் கலையைத்தான் நமக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
அப்படி ஒரு மனத் தெளிவை உண்டு பண்ணுவதுதான் உண்மையான ஆன்மிகம்!
நண்பர்களே!
வயதாகிவிட்டதே என்று யாரும் கவலைப்படாதீர்கள்.
பல பேருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதே இல்லை!
‘‘இ ந்த உலகத்துல வாழ்ந்து என்ன சுகத்தைக் கண்டேன்?’’ என்று அலுத்துக் கொள்கிறவர்கள் அதிகம்!
‘‘ஆகா... என்ன அற்புதமான உலகம்!’’ என்று ஆனந்தப் படுகிறவர்கள் குறைவு!
ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு எல்லாமே சுகம்தான்!
இங்கிலாந்து நாட்டில் ஒரு கவிஞர் இருந்தார். அவர் பெயர் ஜார்ஜ் பர்ன்ஸ்.
அவருக்கு 95-வது பிறந்த நாள்.
நண்பர்கள் எல்லாரும் வந்தார்கள். வாழ்த்தினார்கள்.
ஒரு நண்பர் கேட்டாராம்:
‘‘இந்த 95-வது வயது எப்படி இருக்கிறது?’’
உடனே கவிஞர் உற்சாகமாகப் பதில் சொல்ல ஆரம்பித்தாராம்.
‘‘சொல்றேன் கேளுங்க.... இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருந்ததில்லை. இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு ஜாலியாக இருந்ததில்லை. இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு அற்புதமாகக் காதலித்ததில்லை!’’ என்று சொல்லி நிறுத்திவிட்டு, ‘‘இன்னொரு ரகசியம்... இதற்கு முன் எப்போதும் நான் இவ்வளவு அதிகமாகப் பொய் சொன்னதில்லை!’’ என்றாராம்.
கூட்டம் ‘கொல்’லென்று சிரித்ததாம்!
அந்தக் கவிஞருக்கு வாழ்க்கை ஒரு சுமையாகத் தெரியவில்லை. சுகமாகத் தெரிகிறது.
வயதான குரு ஒருவர்... அவருக்கு 100 வயது. வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருக்கிறார்.
சுற்றிலும் சீடர்கள் சோகமாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சீடர் வேகமாக வெளியே ஓடுகிறார். குரு வழக்கமாக விரும்பிச் சாப்பிடும் ஒரு பலகாரத்தைத் தேடிப் பிடித்து வாங்கி வருகிறார். குருவிடம் நீட்டுகிறார். அவர் ஆவலோடு அதை வாங்கிச் சாப்பிடுகிறார். சாப்பிட்டு விட்டு அந்தச் சீடரை அருகில் அழைக்கிறார். சீடர் அவர் அருகில் குனிகிறார் _ ஏதோ கடைசி உபதேசம் சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில்!
குருவின் உதடுகள் மெல்ல அசைகின்றன. ‘‘ஆகா! என்ன ருசி!’’ என்று சொல்லி விட்டுக் கண்களை மூடிவிடுகிறார்.
சீடருக்கு அந்த குருவின் உபதேசம் புரிகிறது.
அந்த குருவுக்கு வாழ்க்கையின் கடைசி விநாடிகூட ருசியாக இருந்திருக்கிறது!
வாழ்வின் கடைசி விநாடியைக்கூட ருசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் அந்த குருவின் உபதேசம்!
ஆன்மிகம் அந்தக் கலையைத்தான் நமக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
அப்படி ஒரு மனத் தெளிவை உண்டு பண்ணுவதுதான் உண்மையான ஆன்மிகம்!
நண்பர்களே!
வயதாகிவிட்டதே என்று யாரும் கவலைப்படாதீர்கள்.
பல பேருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதே இல்லை!
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
சுறுசுறுப்பு டானிக்!
‘‘எ ன்ன... இப்படி சோர்ந்து போய் நடந்து வந்துக்கிட்டு இருக்கே?’’
‘‘நடக்கவே முடியலை... அவ்வளவு சோர்வு. உடம்பில் ஏதோ கோளாறு... டாக்டர்கிட்டே போகணும்!’’
‘‘அதுக்கும் முன்னாடி கடற்கரைப் பக்கம் போகலாம் வா!’’
‘‘அங்கே எதுக்கு?’’
‘‘அங்கே ஒருத்தன் ‘சுறுசுறுப்பு டானிக்’ விற்கிறான். தினமும் காலையிலேயே ஒரு ‘ஸ்பூன்’ சாப்பிட்டா போதும். நாள்பூரா உற்சாகமா இருக்கும். சுறுசுறுப்பு தானா வந்துடும்.!’’
‘‘அப்படியா சொல்றே?’’
‘‘ஆமாம்... நான் கூட வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தேன். நல்ல பலன் இருக்கு... நிறைய பேர் தினம் வந்து வாங்கிட்டுப் போறாங்க!’’
‘‘அப்படின்னா சரி... வா போகலாம்!’’
இருவரும் கடற்கரை நோக்கி நடந்தார்கள்.
அங்கே அவன் அந்த மருந்தை (டானிக்!) விற்றுக் கொண்டிருந்தான்.
அது அமோகமாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தது.
இவனும் போய் ஒரு பாட்டில் மருந்து வாங்கிக் கொண்டான். அதன் பிறகு அந்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
என்ன ஆச்சரியம்!
சோர்வாக இருந்த உடம்புக்குள் சுறுசுறுப்பு தெரிய ஆரம்பித்தது.
உற்சாகமாக நடக்க ஆரம்பித்தான். நண்பனைத் தேடிப் போய் நன்றி சொன்னான், ஒரு நல்ல மருந்தை அறிமுகம் செய்து வைத்ததற்காக!
கொஞ்ச காலம் கழிந்தது.
கைவசம் இருந்த மருந்து தீர்ந்து போனது.
மறுபடியும் வாங்க வேண்டும்.
கடற்கரைக்குப் போனான்.
அங்கே அவனைக் காணவில்லை. மருந்து விற்பவன் என்ன ஆனான்? வேறு ஊருக்கு போயிருப்பானோ?
பல ஊர்களிலும் தேடிப் பார்த்தார்கள். பலன் இல்லை.
இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு நாள்- இவர்கள் கடற்கரைக்குப் போனபோது அங்கே அவன் இருந்தான்.
இப்போது அவன் மருந்து விற்பனை செய்யவில்லை. பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.
‘‘என்ன ஆச்சு உனக்கு... எங்கேயெல்லாம் உன்னைத் தேடுறது? அந்த ‘சுறுசுறுப்பு டானிக்’ இன்னும் கொஞ்சம் வேணுமே? அதுசரி... இவ்வளவு நாள் எங்கே இருந்தே?’’
‘‘ஜெயில்லே இருந்தேன்...!’’
‘‘ஜெயிலா? என்ன ஆச்சு?’’
‘‘போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் சிறைத் தண்டனை!’’
‘‘போலி மருந்தா... என்ன சொல்றே?’’
‘‘ஆமாம்... நான் உங்ககிட்டே விற்பனை பண்ணினது உண்மையிலேயே சுறுசுறுப்பு டானிக் இல்லை!’’
‘‘அப்படிச் சொல்லாதே! அதைச் சாப்பிட்டதும் எங்க உடம்பு சுறுசுறுப்பு ஏற்பட்டது உண்மை!’’
‘‘இருக்கலாம். அதுக்குக் காரணம் மருந்து இல்லை... நம்பிக்கை!’’
‘‘என்னப்பா சொல்றே?’’
‘‘நான் உங்ககிட்டே வித்தது வெறும் தண்ணிதான். உப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இதையெல்லாம் பொடி செய்து அதுலே கலந்திருந்தேன்... அவ்வளவுதான். இதைச் சாப்பிட்டதும் சுறுசுறுப்பு வந்துட்டதா நீங்க நினைச்சிட்டீங்க. உங்க நினைப்புதான் உங்களின் உந்து சக்தி!’’
இப்படி சொல்லிவிட்டு அந்த மனிதன் பலூன் விற்கப் போய்விட்டான்.
இவர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒரு சிக்கலான கேள்விக்கு விடை கிடைத்தது.
கேள்வி: நமக்கு முக்கியம் கடவுளா? கடவுள் நம்பிக்கையா?
பதில்: கடவுளை விடவும் மேலானது கடவுள் நம்பிக்கை!
‘‘எ ன்ன... இப்படி சோர்ந்து போய் நடந்து வந்துக்கிட்டு இருக்கே?’’
‘‘நடக்கவே முடியலை... அவ்வளவு சோர்வு. உடம்பில் ஏதோ கோளாறு... டாக்டர்கிட்டே போகணும்!’’
‘‘அதுக்கும் முன்னாடி கடற்கரைப் பக்கம் போகலாம் வா!’’
‘‘அங்கே எதுக்கு?’’
‘‘அங்கே ஒருத்தன் ‘சுறுசுறுப்பு டானிக்’ விற்கிறான். தினமும் காலையிலேயே ஒரு ‘ஸ்பூன்’ சாப்பிட்டா போதும். நாள்பூரா உற்சாகமா இருக்கும். சுறுசுறுப்பு தானா வந்துடும்.!’’
‘‘அப்படியா சொல்றே?’’
‘‘ஆமாம்... நான் கூட வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தேன். நல்ல பலன் இருக்கு... நிறைய பேர் தினம் வந்து வாங்கிட்டுப் போறாங்க!’’
‘‘அப்படின்னா சரி... வா போகலாம்!’’
இருவரும் கடற்கரை நோக்கி நடந்தார்கள்.
அங்கே அவன் அந்த மருந்தை (டானிக்!) விற்றுக் கொண்டிருந்தான்.
அது அமோகமாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தது.
இவனும் போய் ஒரு பாட்டில் மருந்து வாங்கிக் கொண்டான். அதன் பிறகு அந்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
என்ன ஆச்சரியம்!
சோர்வாக இருந்த உடம்புக்குள் சுறுசுறுப்பு தெரிய ஆரம்பித்தது.
உற்சாகமாக நடக்க ஆரம்பித்தான். நண்பனைத் தேடிப் போய் நன்றி சொன்னான், ஒரு நல்ல மருந்தை அறிமுகம் செய்து வைத்ததற்காக!
கொஞ்ச காலம் கழிந்தது.
கைவசம் இருந்த மருந்து தீர்ந்து போனது.
மறுபடியும் வாங்க வேண்டும்.
கடற்கரைக்குப் போனான்.
அங்கே அவனைக் காணவில்லை. மருந்து விற்பவன் என்ன ஆனான்? வேறு ஊருக்கு போயிருப்பானோ?
பல ஊர்களிலும் தேடிப் பார்த்தார்கள். பலன் இல்லை.
இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு நாள்- இவர்கள் கடற்கரைக்குப் போனபோது அங்கே அவன் இருந்தான்.
இப்போது அவன் மருந்து விற்பனை செய்யவில்லை. பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.
‘‘என்ன ஆச்சு உனக்கு... எங்கேயெல்லாம் உன்னைத் தேடுறது? அந்த ‘சுறுசுறுப்பு டானிக்’ இன்னும் கொஞ்சம் வேணுமே? அதுசரி... இவ்வளவு நாள் எங்கே இருந்தே?’’
‘‘ஜெயில்லே இருந்தேன்...!’’
‘‘ஜெயிலா? என்ன ஆச்சு?’’
‘‘போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் சிறைத் தண்டனை!’’
‘‘போலி மருந்தா... என்ன சொல்றே?’’
‘‘ஆமாம்... நான் உங்ககிட்டே விற்பனை பண்ணினது உண்மையிலேயே சுறுசுறுப்பு டானிக் இல்லை!’’
‘‘அப்படிச் சொல்லாதே! அதைச் சாப்பிட்டதும் எங்க உடம்பு சுறுசுறுப்பு ஏற்பட்டது உண்மை!’’
‘‘இருக்கலாம். அதுக்குக் காரணம் மருந்து இல்லை... நம்பிக்கை!’’
‘‘என்னப்பா சொல்றே?’’
‘‘நான் உங்ககிட்டே வித்தது வெறும் தண்ணிதான். உப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இதையெல்லாம் பொடி செய்து அதுலே கலந்திருந்தேன்... அவ்வளவுதான். இதைச் சாப்பிட்டதும் சுறுசுறுப்பு வந்துட்டதா நீங்க நினைச்சிட்டீங்க. உங்க நினைப்புதான் உங்களின் உந்து சக்தி!’’
இப்படி சொல்லிவிட்டு அந்த மனிதன் பலூன் விற்கப் போய்விட்டான்.
இவர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒரு சிக்கலான கேள்விக்கு விடை கிடைத்தது.
கேள்வி: நமக்கு முக்கியம் கடவுளா? கடவுள் நம்பிக்கையா?
பதில்: கடவுளை விடவும் மேலானது கடவுள் நம்பிக்கை!
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
‘என்னை அடையாளம் தெரிகிறதா?’
அ வன் ஒரு சராசரி மனிதன்தான்.
ஆனாலும் அடுத்தவர் களுக்குத் தன்னால் முடிந்த அளவு உதவ வேண்டும் என்று நினைப்பவன். ஒரு நாள் அவன் கடை வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தான்.
அப்போது அவன் எதிரே ஒருவன் வந்து நின்றான். ‘‘ஐயா! என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?’’ என்றான்.
‘‘இல்லையே...’’
‘‘என்னை உங்களுக்கு நினைவிருக்காது. ஆனாலும், உங்களை என்னால் மறக்க முடியாது!’’
‘‘என்ன சொல்கிறாய்?’’
‘‘பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊருக்கு நான் வந்திருந்தேன். அப்போது உங்களைச் சந்தித்தேன். உங்களிடம் கொஞ்சம் பணம் கேட்டேன். உடனே நீங்கள், ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து ‘ஒரு மனிதனை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல இது உதவியாக இருக்கட்டும்’ என்று வாழ்த்திக் கொடுத்தீர்கள்!’’
‘‘அப்படியா...?’’
‘‘ஆமாம். அதை நான் மறக்க முடியாது... எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தீர்கள்... அதை நன்றியோடு நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் உங்களைப் பார்த்து...!’’
‘‘அடடா! இதற்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. எப்படியோ நீ நல்ல படியா இருந்தால் அதுவே போதும்... இதற்காகவா இவ்வளவு தூரம் தேடி வந்தாய்?’’
‘‘அதுக்காக இல்லீங்க!’’
‘‘பின்னே... வேறே எதுக்கு?’’
‘‘இப்போ மறுபடியும் அது மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தர முடியுமானு கேட்கற துக்கு வந்தேன்!’’
அவ்வளவுதான், எதிரே இருந்தவர் மாயமாக மறைந்து போனார்!
ஏனென்றால், அவர் கடவுள் மாதிரி.
இன்றைக்குக் கடவுளின் நிலைமையும் இதுதான். திரும்பத் திரும்பத் தேடி வந்து உதவி கேட்கிற பக்தர்களே இன்றைக்கு அதிகமாகிப் போனார்கள்.
ஒரு நோயாளி மருத்துவமனைக்குப் போகிறான். நோய் குணமாகிறது. வீட்டுக்குத் திரும்பி வந்து விடுகிறான். மறுபடியும் மறுபடியும் மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்று அவன் விரும்பக் கூடாது.
ஆலயத்துக்குப் போகிறவர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். அங்கு இருப்பவனே, நம்முள்ளேயும் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளத்தான் அங்கே போகிறோம்.
அந்த உண்மை புரிந்துவிட்டால், அங்கே போக வேண்டிய அவசியம் இருக்காது. மற்றவர்களும் இதைப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு நாம் வழிவிடலாம்.
ஆனால், இன்றைக்கு எவரிடமும் புரிந்துகொள்ளும் இந்தப் பக்குவம் இல்லை. எனவே, அங்கு செல்லும் அவசியம் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. அதனால்தான் ஆலயங்களில் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது!
அ வன் ஒரு சராசரி மனிதன்தான்.
ஆனாலும் அடுத்தவர் களுக்குத் தன்னால் முடிந்த அளவு உதவ வேண்டும் என்று நினைப்பவன். ஒரு நாள் அவன் கடை வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தான்.
அப்போது அவன் எதிரே ஒருவன் வந்து நின்றான். ‘‘ஐயா! என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?’’ என்றான்.
‘‘இல்லையே...’’
‘‘என்னை உங்களுக்கு நினைவிருக்காது. ஆனாலும், உங்களை என்னால் மறக்க முடியாது!’’
‘‘என்ன சொல்கிறாய்?’’
‘‘பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊருக்கு நான் வந்திருந்தேன். அப்போது உங்களைச் சந்தித்தேன். உங்களிடம் கொஞ்சம் பணம் கேட்டேன். உடனே நீங்கள், ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து ‘ஒரு மனிதனை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல இது உதவியாக இருக்கட்டும்’ என்று வாழ்த்திக் கொடுத்தீர்கள்!’’
‘‘அப்படியா...?’’
‘‘ஆமாம். அதை நான் மறக்க முடியாது... எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தீர்கள்... அதை நன்றியோடு நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் உங்களைப் பார்த்து...!’’
‘‘அடடா! இதற்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. எப்படியோ நீ நல்ல படியா இருந்தால் அதுவே போதும்... இதற்காகவா இவ்வளவு தூரம் தேடி வந்தாய்?’’
‘‘அதுக்காக இல்லீங்க!’’
‘‘பின்னே... வேறே எதுக்கு?’’
‘‘இப்போ மறுபடியும் அது மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தர முடியுமானு கேட்கற துக்கு வந்தேன்!’’
அவ்வளவுதான், எதிரே இருந்தவர் மாயமாக மறைந்து போனார்!
ஏனென்றால், அவர் கடவுள் மாதிரி.
இன்றைக்குக் கடவுளின் நிலைமையும் இதுதான். திரும்பத் திரும்பத் தேடி வந்து உதவி கேட்கிற பக்தர்களே இன்றைக்கு அதிகமாகிப் போனார்கள்.
ஒரு நோயாளி மருத்துவமனைக்குப் போகிறான். நோய் குணமாகிறது. வீட்டுக்குத் திரும்பி வந்து விடுகிறான். மறுபடியும் மறுபடியும் மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்று அவன் விரும்பக் கூடாது.
ஆலயத்துக்குப் போகிறவர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். அங்கு இருப்பவனே, நம்முள்ளேயும் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளத்தான் அங்கே போகிறோம்.
அந்த உண்மை புரிந்துவிட்டால், அங்கே போக வேண்டிய அவசியம் இருக்காது. மற்றவர்களும் இதைப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு நாம் வழிவிடலாம்.
ஆனால், இன்றைக்கு எவரிடமும் புரிந்துகொள்ளும் இந்தப் பக்குவம் இல்லை. எனவே, அங்கு செல்லும் அவசியம் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. அதனால்தான் ஆலயங்களில் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது!
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
தென்கச்சியாரின் பேச்சுக்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்! அவருடைய பேச்சுக்களடங்கிய எம்பி3 நிறைய வைத்துள்ளேன்.
அவருடைய கதைகளை அள்ளித் தந்துள்ளீர்கள், இதைப் படிப்பவர்கள் அனைவருக்கும் இன்றைய நாள் மகிழ்ச்சி பொங்கும் நாளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பாராட்டுக்கள் தமிழ்நேசன்!
அவருடைய கதைகளை அள்ளித் தந்துள்ளீர்கள், இதைப் படிப்பவர்கள் அனைவருக்கும் இன்றைய நாள் மகிழ்ச்சி பொங்கும் நாளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பாராட்டுக்கள் தமிழ்நேசன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
சிவா- நிறுவனர்
- பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875
Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்!
ஆமாம்!
இப்போது டாக்டருக்கும் தலைவலி!
மதவாதிகளே!
தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!
இன்றைய நிலையை சரியாக சொல்லியிருக்கிறார் .
அருமை
ஆமாம்!
இப்போது டாக்டருக்கும் தலைவலி!
மதவாதிகளே!
தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!
இன்றைய நிலையை சரியாக சொல்லியிருக்கிறார் .
அருமை
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881
Re: கல கலப் பக்கங்கள்--தென்கச்சியார்
ஆலயத்துக்குப் போகிறவர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். அங்கு இருப்பவனே, நம்முள்ளேயும் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளத்தான் அங்கே போகிறோம்.
அந்த உண்மை புரிந்துவிட்டால், அங்கே போக வேண்டிய அவசியம் இருக்காது. மற்றவர்களும் இதைப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு நாம் வழிவிடலாம்.
ஆனால், இன்றைக்கு எவரிடமும் புரிந்துகொள்ளும் இந்தப் பக்குவம் இல்லை. எனவே, அங்கு செல்லும் அவசியம் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. அதனால்தான் ஆலயங்களில் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது!
மிகப்பெரிய தத்துவத்தை இப்படி சாதாரண சிறுகதை மூலம் சொல்லும் திறமை அவரையே சாரும்.
நன்றி !!! இந்த பதிவிற்கு !!!
அந்த உண்மை புரிந்துவிட்டால், அங்கே போக வேண்டிய அவசியம் இருக்காது. மற்றவர்களும் இதைப் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு நாம் வழிவிடலாம்.
ஆனால், இன்றைக்கு எவரிடமும் புரிந்துகொள்ளும் இந்தப் பக்குவம் இல்லை. எனவே, அங்கு செல்லும் அவசியம் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. அதனால்தான் ஆலயங்களில் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது!
மிகப்பெரிய தத்துவத்தை இப்படி சாதாரண சிறுகதை மூலம் சொல்லும் திறமை அவரையே சாரும்.
நன்றி !!! இந்த பதிவிற்கு !!!
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|