புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடயோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடயோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
Page 2 of 9 •
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
மண்ணால் வேறுபட்டிருந்தாலும் மனத்தால் உலகெங்கும் பெண்களின் துன்பங்களும் தைரியங்களும் ஒன்றேதான் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற ஆங்கில நாவல். அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதியிருக்கும் இந்த நாவலின் நாயகி - எம்மா ரமோட்ஸ்வே! இவள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற சாதனைத் துடிப்பின் பிம்பம்.
எம்மா ரமோட்ஸ்வே பிறந்து, வளர்ந்து, வாழ்வதெல்லாமே ஆப்பிரிக்கக் கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான போட்ஸ்வானா மண்ணில்.
நிறத்தாலும் மொழியாலும் உருவ அமைப்பாலும் வேறுபட்டிருந்தாலும்கூட, போட்ஸ்வானா மக்கள் கிட்டத்தட்ட நம் கலாசாரத்தை அப்படியே நினைவுறுத்துகிறார்கள். மகளுக்கு சீதனமாகத் தர மாடுகளை வளர்க்கும் தந்தை, முழுக்க நம்பியவன் கைவிடும்போது ஏமாற்றத்தில் துடிக்கிற மகள், தொலைந்துபோன மகனை எண்ணி தவித்து நிற்கும் பெற்றோர்.. என்று ஒவ்வொரு பாத்திரத்தின் உள்ளேயும் ஊறுகிற உணர்வுகள், நம் கலாசாரத்தையும் வாழ்க்கைத் துடிப்பையும் அப்படியே நினைவூட்டுகின்றன.
துன்பங்கள் ஆயிரம் வந்தாலும், தைரியத்தோடு மட்டுமல்ல.. சின்னதொரு நகைச்சுவை உணர்வோடும் அவற்றை எதிர்கொண்டு தூளாக்க வேண்டும் என்பதில், எம்மா ரமோட்ஸ்வேக்கு நிகர் அவளேதான்!
ரமோட்ஸ்வே பயணிக்கிற பாதையில் வரும் அப்பாவிகள் நம்மை கண்கலங்க வைக்கிறார்கள். வினோத வில்லன்கள் நடுங்க வைக்கிறார்கள். கொடுமைக்காரர்கள் கொதிக்க வைக்கிறார்கள்.
தனியாக ஒரு தைரியப் பயணத்தைத் தொடங்குகிறாள் ரமோட்ஸ்வே. துணைக்கு நாமும் அவளுடன் கிளம்புவோம்..
எ ம்மா ரமோட்ஸ்வே ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டின் அழகான கலே மலை யடிவாரத்தில் சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தாள். அதுவே தான் அவளது துப்பறியும் நிறுவனமும்.
நிறுவனம் என்ன பெரிய நிறுவனம், ஒரு சின்ன வெள்ளை நிற கார், இரண்டு மேஜை, நாற்காலிகள், ஒரு டெலிபோன். ஒரு பழைய மாடல் டைப் ரைட்டர்.. இதுதான் அந்த நிறுவனத்தின் மொத்த ஆஸ்தியே! போட்ஸ்வானா வின் ஒரேயரு துப்பறியும் நிபுணியும் ரமோட்ஸ்வேதான்.
இந்த மலையடிவாரத்தின் தேநீர் பார்க்க சிவப்பாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். இதைக் காய்ச்ச ஒரு கெட்டிலும், மூன்று கோப்பைகளும்.. ஒன்று அவளுக்கு. இன்னொன்று அவளுடைய காரியதரிசி எம்மா*மகுட்ஸிக்கு, மூன்றாவது அவளைத் தேடிவரும் வாடிக்கையாளருக்கு.
தனிப்பட்ட டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இதை விட, வேறு என்ன வேண்டும்? இதுபோன்ற வேலைகளுக்கு மூலதனமே புத்திக்கூர்மையும், உள்ளுணர்வும்தான். எம்மாவுக்கு இவை இரண்டும் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. இவைதான் அவளை இந்தத் துப்பறியும் தொழிலைத் தொடங்கச் செய்தது.
அவள், இதை விடவும் பெரிய நாட்டில்.. பெரிய நகரத்தில் போய், இதே தொழிலை ஆரம்பித்திருக்கலாம். பெரிய நகரங்களில் வாழும் மனிதர்களிடம் பணமும் அதிகம், பிரச்னைகளும் அதிகம்.. அதற்கேற்ற ஊதியமும் நிறையவே கிடைக்குமாயிருக்கும்.
ஆனால் அவளோ, நான் ஒரு ஆப்பிரிக்க பிரஜை என்பதில் வெட்கப்படவே இல்லை. சோதனைகள் நிறைந்த இந்த நாட்டையும், கடவுள் படைத்த எல்லா மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். முக்கியமாக இங்கு வசிப்பவர்கள் என் சகோதர, சகோதரிகள். அவர்களுக்கு உதவுவது என் கடமை. அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதுதான் என் வேலை என்பாள்.
ரமோட்ஸ்வே, தன் அப்பா விட்டுச் சென்ற ஆடு மாடுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினாள்.
ரமோட்ஸ்வேவின் தந்தை மிக மோசமான உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டிருந்ததால், அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. உனக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொள் ரமோட்ஸ்வே. இப்பொழுது ஆடு, மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும். விற்ற பணத்தில் ஒரு கசாப்பு கடை அல்லது பாட்டில் ஸ்டோர், எது உனக்கு இஷ்டமோ அது.. அப்பா மரணப் படுக்கையில் இதைச் சொல்ல, ரமோட்ஸ்வே உருகிப் போனாள்.
உயிருக்கு உயிரான அப்பா, புழுதி நிறைந்த சுரங்கத்தில் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு, தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்க உழைத்த மனிதர். அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் மல்க அவரைப் பார்த்தாள் ரமோட்ஸ்வே. துக்கத்தில் பேச்சு வரவில்லை. ஆனாலும் திக்கித் திணறி தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்..
அப்பா.. நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கப் போகிறேன். போட்ஸ்வானாவின் மிகச் சிறந்த நிறுவனமாக அது இருக்கும்.
அதைக் கேட்ட அவளின் தந்தை, மிகுந்த சிரமத்துடன் விழிகளை விரித்து அவளைப் பார்த்தார். குழறியபடி பேச முயற்சித்தார்.
ஆனால்.. ஆனால்..
ஆனால், அவர் எதையும் சொல்வதற்கு முன்பே இறந்து போய்விட்டார். எம்மா ரமோட்ஸ்வே, அவரது மார்பில் முகத்தைப் புதைத்தபடி விசும்பினாள். அவரது பாசத்தையும், கௌரவமான வாழ்க்கையையும், தனக்காக அவர் பட்ட பாடுகளையும் இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்துப் போகும் ரமோட்ஸ்வேக்கு.
இந்த வாழ்க்கை அவர் கொடுத்தது. அப்பாவை நினைத்தால் மட்டுமே துயரம் பொங்குமே தவிர, தான் கடந்து வந்த கரடுமுரடான வாழ்க்கையை நினைத்து ஒருபோதும் அவள் சலித்துக் கொண்டதே இல்லை.
போராட்டமும், காதலும், கசப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை.. என்றாலும் இதையே நினைத்து மூலையில் உட்கார்ந்திருப்பது ஒரு டிடெக்டிவ்வுக்கு அழகில்லை.
நம்பர் ஒன் பெண்கள் துப்பறியும் நிறுவனம்! ரகசியமான தகவல்கள், விசாரிப்புகள் எல்லோருக்கும் திருப்தி தரும் முறையில் நேரடி மேற்பார்வையில் சேகரித்துத் தரப்படும் வர்ணம் தீட்டப்பட்ட இப்படி ஒரு விளம்பரப் பலகையை தனது அலுவலகத்தின் முன்பும், தன் உதட்டில் மெல்லிய முறுவலையும் ஒரு சேர மாட்டினாள் ரமோட்ஸ்வே.
அவளது துப்பறியும் நிறுவனம், பலருக்கும் வியப்பை அளித்தது. இருக்காதா பின்னே.. ஒரு பெண் துப்பறி கிறாளாமே!
ரேடியோவில் அவளது பேட்டி வேறு வந்தது. போதாக்குறைக்கு தினசரி ஒன்றிலும், நாட்டின் ஒரேயரு பெண் டிடெக்டிவ் ஏஜென்ட் என்கிற செய்தி வெளியாகி இருந்தது.
ரமோட்ஸ்வே இந்தச் செய்தியை கத்தரித்து, நகலெடுத்து, தன் ஆபீசின் பார்வையான இடத்தில் ஒரு நோட்டீஸ் போர்டு மாட்டி, அதில் ஒட்டி வைத்தாள்.எந்தவொரு சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை அவள்.
ஆ ரம்ப நாளில், தனது வாடிக்கையாளராக வந்த ஹேப்பி பபெட்ஸியை அத்தனை சுலபத்தில் மறக்க முடியுமா? பாவம்.. என்றைக்கோ காணாமல் போன தகப்பன் திரும்பி வந்து, மறுபடியும் காணாமல் போய்..
எனது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போதுதான் இது நேர்ந்தது. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படிச் சொல்லி உதட்டைப் பிதுக்கினாள் பபெட்ஸி. ரமோட்ஸ்வே, அவளைக் கூர்ந்து பார்த்தபடியே தேநீரை உறிஞ்சினாள்.
ஒருவருடைய முகத்தைப் பார்த்தாலே, அவரைப் பற்றிய சகல விஷயங்களையும் அனுமானித்துவிடுவாள் ரமோட்ஸ்வே. தலையின் வடிவம் முக்கியமான ஒன்று என்று பல புத்திசாலி துப்பறிவாளர்கள், தங்களது அனு பவத்தில் எழுதியிருந்தாலும், ரமோட்ஸ்வே, அதையெல்லாம் நம்பவில்லை.
முகத்தின் பொதுவான தோற்றமும், கண்களும், கண் களின் ஓரத்தில் நெளியும் சிறு கோடுகளும் மனிதரின் மனதைத் துல்லியமாகச் சொல்லிவிடும். அதிலும் இந்தக் கண்கள்தான் ஜன்னல். அதனால்தானோ என்னவோ, நிறைய பேர், வீட்டில் இருக்கும்போது கூட கறுப்புக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும்.
ஹேப்பி பபெட்ஸி பெயரில் மட்டுமல்லாமல், உண்மையிலேயே சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவள் தான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. ஆனாலும் ஏதோ ஓர் ஆணால் ஏற்பட்ட பிரச்னையாகத்தான் இருக்கும் என்று ரமோட்ஸ்வே எண்ணினாள்.
எவனுடைய நடத்தையினாலோ இவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் அவளது சிந்தனையை பபெட்ஸியின் குரல் கலைத்தது.
முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேனே..
ம்! சொல்..
நான், ஒகாவாங்கர் அருகில் உள்ள மான் என்கிற இடத்திலிருந்து வருகிறேன். என் அம்மா ஒரு சிறிய கடை வைத்திருந்தாள். அதன் பின்புறமுள்ள வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வீட்டில் நிறைய கோழிகள்.. நிறைய மகிழ்ச்சி..
.........
மண்ணால் வேறுபட்டிருந்தாலும் மனத்தால் உலகெங்கும் பெண்களின் துன்பங்களும் தைரியங்களும் ஒன்றேதான் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற ஆங்கில நாவல். அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதியிருக்கும் இந்த நாவலின் நாயகி - எம்மா ரமோட்ஸ்வே! இவள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற சாதனைத் துடிப்பின் பிம்பம்.
எம்மா ரமோட்ஸ்வே பிறந்து, வளர்ந்து, வாழ்வதெல்லாமே ஆப்பிரிக்கக் கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான போட்ஸ்வானா மண்ணில்.
நிறத்தாலும் மொழியாலும் உருவ அமைப்பாலும் வேறுபட்டிருந்தாலும்கூட, போட்ஸ்வானா மக்கள் கிட்டத்தட்ட நம் கலாசாரத்தை அப்படியே நினைவுறுத்துகிறார்கள். மகளுக்கு சீதனமாகத் தர மாடுகளை வளர்க்கும் தந்தை, முழுக்க நம்பியவன் கைவிடும்போது ஏமாற்றத்தில் துடிக்கிற மகள், தொலைந்துபோன மகனை எண்ணி தவித்து நிற்கும் பெற்றோர்.. என்று ஒவ்வொரு பாத்திரத்தின் உள்ளேயும் ஊறுகிற உணர்வுகள், நம் கலாசாரத்தையும் வாழ்க்கைத் துடிப்பையும் அப்படியே நினைவூட்டுகின்றன.
துன்பங்கள் ஆயிரம் வந்தாலும், தைரியத்தோடு மட்டுமல்ல.. சின்னதொரு நகைச்சுவை உணர்வோடும் அவற்றை எதிர்கொண்டு தூளாக்க வேண்டும் என்பதில், எம்மா ரமோட்ஸ்வேக்கு நிகர் அவளேதான்!
ரமோட்ஸ்வே பயணிக்கிற பாதையில் வரும் அப்பாவிகள் நம்மை கண்கலங்க வைக்கிறார்கள். வினோத வில்லன்கள் நடுங்க வைக்கிறார்கள். கொடுமைக்காரர்கள் கொதிக்க வைக்கிறார்கள்.
தனியாக ஒரு தைரியப் பயணத்தைத் தொடங்குகிறாள் ரமோட்ஸ்வே. துணைக்கு நாமும் அவளுடன் கிளம்புவோம்..
எ ம்மா ரமோட்ஸ்வே ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டின் அழகான கலே மலை யடிவாரத்தில் சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தாள். அதுவே தான் அவளது துப்பறியும் நிறுவனமும்.
நிறுவனம் என்ன பெரிய நிறுவனம், ஒரு சின்ன வெள்ளை நிற கார், இரண்டு மேஜை, நாற்காலிகள், ஒரு டெலிபோன். ஒரு பழைய மாடல் டைப் ரைட்டர்.. இதுதான் அந்த நிறுவனத்தின் மொத்த ஆஸ்தியே! போட்ஸ்வானா வின் ஒரேயரு துப்பறியும் நிபுணியும் ரமோட்ஸ்வேதான்.
இந்த மலையடிவாரத்தின் தேநீர் பார்க்க சிவப்பாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். இதைக் காய்ச்ச ஒரு கெட்டிலும், மூன்று கோப்பைகளும்.. ஒன்று அவளுக்கு. இன்னொன்று அவளுடைய காரியதரிசி எம்மா*மகுட்ஸிக்கு, மூன்றாவது அவளைத் தேடிவரும் வாடிக்கையாளருக்கு.
தனிப்பட்ட டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இதை விட, வேறு என்ன வேண்டும்? இதுபோன்ற வேலைகளுக்கு மூலதனமே புத்திக்கூர்மையும், உள்ளுணர்வும்தான். எம்மாவுக்கு இவை இரண்டும் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. இவைதான் அவளை இந்தத் துப்பறியும் தொழிலைத் தொடங்கச் செய்தது.
அவள், இதை விடவும் பெரிய நாட்டில்.. பெரிய நகரத்தில் போய், இதே தொழிலை ஆரம்பித்திருக்கலாம். பெரிய நகரங்களில் வாழும் மனிதர்களிடம் பணமும் அதிகம், பிரச்னைகளும் அதிகம்.. அதற்கேற்ற ஊதியமும் நிறையவே கிடைக்குமாயிருக்கும்.
ஆனால் அவளோ, நான் ஒரு ஆப்பிரிக்க பிரஜை என்பதில் வெட்கப்படவே இல்லை. சோதனைகள் நிறைந்த இந்த நாட்டையும், கடவுள் படைத்த எல்லா மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். முக்கியமாக இங்கு வசிப்பவர்கள் என் சகோதர, சகோதரிகள். அவர்களுக்கு உதவுவது என் கடமை. அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதுதான் என் வேலை என்பாள்.
ரமோட்ஸ்வே, தன் அப்பா விட்டுச் சென்ற ஆடு மாடுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினாள்.
ரமோட்ஸ்வேவின் தந்தை மிக மோசமான உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டிருந்ததால், அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. உனக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொள் ரமோட்ஸ்வே. இப்பொழுது ஆடு, மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும். விற்ற பணத்தில் ஒரு கசாப்பு கடை அல்லது பாட்டில் ஸ்டோர், எது உனக்கு இஷ்டமோ அது.. அப்பா மரணப் படுக்கையில் இதைச் சொல்ல, ரமோட்ஸ்வே உருகிப் போனாள்.
உயிருக்கு உயிரான அப்பா, புழுதி நிறைந்த சுரங்கத்தில் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு, தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்க உழைத்த மனிதர். அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் மல்க அவரைப் பார்த்தாள் ரமோட்ஸ்வே. துக்கத்தில் பேச்சு வரவில்லை. ஆனாலும் திக்கித் திணறி தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்..
அப்பா.. நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கப் போகிறேன். போட்ஸ்வானாவின் மிகச் சிறந்த நிறுவனமாக அது இருக்கும்.
அதைக் கேட்ட அவளின் தந்தை, மிகுந்த சிரமத்துடன் விழிகளை விரித்து அவளைப் பார்த்தார். குழறியபடி பேச முயற்சித்தார்.
ஆனால்.. ஆனால்..
ஆனால், அவர் எதையும் சொல்வதற்கு முன்பே இறந்து போய்விட்டார். எம்மா ரமோட்ஸ்வே, அவரது மார்பில் முகத்தைப் புதைத்தபடி விசும்பினாள். அவரது பாசத்தையும், கௌரவமான வாழ்க்கையையும், தனக்காக அவர் பட்ட பாடுகளையும் இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்துப் போகும் ரமோட்ஸ்வேக்கு.
இந்த வாழ்க்கை அவர் கொடுத்தது. அப்பாவை நினைத்தால் மட்டுமே துயரம் பொங்குமே தவிர, தான் கடந்து வந்த கரடுமுரடான வாழ்க்கையை நினைத்து ஒருபோதும் அவள் சலித்துக் கொண்டதே இல்லை.
போராட்டமும், காதலும், கசப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை.. என்றாலும் இதையே நினைத்து மூலையில் உட்கார்ந்திருப்பது ஒரு டிடெக்டிவ்வுக்கு அழகில்லை.
நம்பர் ஒன் பெண்கள் துப்பறியும் நிறுவனம்! ரகசியமான தகவல்கள், விசாரிப்புகள் எல்லோருக்கும் திருப்தி தரும் முறையில் நேரடி மேற்பார்வையில் சேகரித்துத் தரப்படும் வர்ணம் தீட்டப்பட்ட இப்படி ஒரு விளம்பரப் பலகையை தனது அலுவலகத்தின் முன்பும், தன் உதட்டில் மெல்லிய முறுவலையும் ஒரு சேர மாட்டினாள் ரமோட்ஸ்வே.
அவளது துப்பறியும் நிறுவனம், பலருக்கும் வியப்பை அளித்தது. இருக்காதா பின்னே.. ஒரு பெண் துப்பறி கிறாளாமே!
ரேடியோவில் அவளது பேட்டி வேறு வந்தது. போதாக்குறைக்கு தினசரி ஒன்றிலும், நாட்டின் ஒரேயரு பெண் டிடெக்டிவ் ஏஜென்ட் என்கிற செய்தி வெளியாகி இருந்தது.
ரமோட்ஸ்வே இந்தச் செய்தியை கத்தரித்து, நகலெடுத்து, தன் ஆபீசின் பார்வையான இடத்தில் ஒரு நோட்டீஸ் போர்டு மாட்டி, அதில் ஒட்டி வைத்தாள்.எந்தவொரு சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை அவள்.
ஆ ரம்ப நாளில், தனது வாடிக்கையாளராக வந்த ஹேப்பி பபெட்ஸியை அத்தனை சுலபத்தில் மறக்க முடியுமா? பாவம்.. என்றைக்கோ காணாமல் போன தகப்பன் திரும்பி வந்து, மறுபடியும் காணாமல் போய்..
எனது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போதுதான் இது நேர்ந்தது. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படிச் சொல்லி உதட்டைப் பிதுக்கினாள் பபெட்ஸி. ரமோட்ஸ்வே, அவளைக் கூர்ந்து பார்த்தபடியே தேநீரை உறிஞ்சினாள்.
ஒருவருடைய முகத்தைப் பார்த்தாலே, அவரைப் பற்றிய சகல விஷயங்களையும் அனுமானித்துவிடுவாள் ரமோட்ஸ்வே. தலையின் வடிவம் முக்கியமான ஒன்று என்று பல புத்திசாலி துப்பறிவாளர்கள், தங்களது அனு பவத்தில் எழுதியிருந்தாலும், ரமோட்ஸ்வே, அதையெல்லாம் நம்பவில்லை.
முகத்தின் பொதுவான தோற்றமும், கண்களும், கண் களின் ஓரத்தில் நெளியும் சிறு கோடுகளும் மனிதரின் மனதைத் துல்லியமாகச் சொல்லிவிடும். அதிலும் இந்தக் கண்கள்தான் ஜன்னல். அதனால்தானோ என்னவோ, நிறைய பேர், வீட்டில் இருக்கும்போது கூட கறுப்புக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும்.
ஹேப்பி பபெட்ஸி பெயரில் மட்டுமல்லாமல், உண்மையிலேயே சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவள் தான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. ஆனாலும் ஏதோ ஓர் ஆணால் ஏற்பட்ட பிரச்னையாகத்தான் இருக்கும் என்று ரமோட்ஸ்வே எண்ணினாள்.
எவனுடைய நடத்தையினாலோ இவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் அவளது சிந்தனையை பபெட்ஸியின் குரல் கலைத்தது.
முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேனே..
ம்! சொல்..
நான், ஒகாவாங்கர் அருகில் உள்ள மான் என்கிற இடத்திலிருந்து வருகிறேன். என் அம்மா ஒரு சிறிய கடை வைத்திருந்தாள். அதன் பின்புறமுள்ள வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வீட்டில் நிறைய கோழிகள்.. நிறைய மகிழ்ச்சி..
.........
'நான் நினைத்தால் குடிப்பேன். நீ வீட்டில் உட்கார்ந்து எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்கிறவள்தானே?
இல்லை. மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவழித் திருக்கிறாய் என்றுதான் சொன்னேன். வேறொன்றும் தப்பாகச் சொல்லவில்லையே.
இருந்தாலும் அவன் கோபம் தணியவில்லை.
உன்னைக் கொடுமைப்படுத்தும்படி நீதான் என்னைத் தூண்டுகிறாய். நான் முரட்டுத்தனம் காட்ட நீதான் காரணம்.. என்றவாறே அவன், தன் பலம் அத்தனையையும் அவள் மீது செலுத்த, அவள் வலி தாங்காமல், கதறிக்கொண்டே திமிறினாள். அவனைப் பிடித்துத் தள்ள, அவள் எடுத்த முயற்சி எல்லாமே வீண். அத்தனை சுலபத்தில் அவனைத் தள்ளிவிட அவளால் முடியவில்லை.
ஐயோ.. வயிற்றில் உன் குழந்தை. அதை ஒன்றும் செய்து விடாதே!
குழந்தையா? எதற்காக அதைப் பற்றிப் பேசுகிறாய்? அது என்னுடையது இல்லை! நான் எந்தக் குழந்தைக்கும் தகப்பன் இல்லை!
ஆணின் கரங்கள்.. ஆனால், இந்த முறை மெல்லிய ரப்பர் கையுறை அணிந்து! ஒரு வெள்ளைக்காரரின் கை போல..
இங்கே வலிக்கிறதா? இல்லையா.. இங்கே.. இங்கே..?
அவள் தலையசைத்தாள்.
குழந்தை நல்லபடியாகத்தான் இருக்கிறது.. இந்தக் காயங்கள் எப்படி.. வலி வெளியே மட்டுமா? உள்ளேயுமா?
வெளியேதான்..
அப்படியா.. நான் இங்கே உனக்குத் தையல் போடப் போகிறேன். வலி தெரியாமல் இருக்க ஒரு மருந்தை ஸ்பிரே செய்கிறேன். வலி தெரியாமல் இருக்கத்தான் மருந்தைப் போடுகிறேன்.. விழிப்பு இருக்கும். ஆனால், நான் தையல் போடுவதை நீ பார்க்கக் கூடாது
அவள், கண்களை மூடிக் கொண்டாள். ஸ்ஸ்ஸ்' என்னும் சத்தம் கேட்டது. அவ ளுடைய தோலின் மேற்பகுதி மரத்துப் போனது. டாக்டர் தன் வேலையை ஆரம்பித் தார்.
இது உன் கணவன் செய்த காரியம்தானே? - டாக்டர் கேட்டார். அமைதியாக இருந்தாள். அவர் நர்ஸின் கையில் சில உபகரணங்களைக் கொடுத்து, கையுறைகளையும் கழற்றிக் கொடுத்து விட்டுக் கேட்டார்.
இதுமாதிரி ஏற்கெனவே நடந்திருக்கிறதா?
எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாது..
நீ மறுபடியும் அவனிடம்தான் போவாய் என்று எனக்குத் தெரியும்..
அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். ஆனால், அவர் இடைமறித்துக் கூறினார்...
ஆமாம். பெண்கள் அப்படித்தான் செய்வீர்கள். திரும்பத் திரும்ப இதைத்தான்..
அவர் பெருமூச்சுடன் நிறுத்தினார். பின் நான், மறுபடியும் உன்னை இங்கே பார்ப்பேன் என்று நினைக்கிறேன்.. ஆனால், அது கூடாது என்றும் ஆசைப்படுகிறேன். எதற்கும் ஜாக்கிரதையாக இரு.. என்றார்.
அவள் மறுநாள் வீடு திரும்பினாள். முகத்தின் காயங்கள், கீறல்களை மறைக்க ஒரு பெரிய கைக்குட்டையினால் முகத்தை மறைத்திருந்தாள். வயிற்றில் போட்டிருந்த தையல் சுரீரென வலித்தது, கைகளும் கூட.. வலி குறைய, ஆஸ்பத்திரியில் மாத்திரைகள் கொடுத்திருந்தார்கள். பஸ்ஸில் ஏறும் முன் ஒன்றை வாயில் போட்டுக்கொண்டாள். வலி சற்று குறைந்த மாதிரி இருந்தது. இன்னொரு மாத்திரையையும் விழுங்கினாள்.
வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது. அவள் படபடக்கும் தன் இதயம், நெஞ்சைவிட்டுக் குதித்து விடாதபடி மிரட்சியுடன் அந்தக் காட்சியைப் பார்த்தாள். அறை காலியாக இருந்தது. சில மரச் சாமான்கள் மட்டுமே அங்கிருந்தன. அவனுடைய டேப் ரிக்கார்டர், ஒலிநாடாக்கள், அவர்களது புதிய பெட்டி, மஞ்சள் நிறத் திரைச் சீலைகள் எதுவுமே இல்லை. அவர்களது படுக்கை முழுவதும் கத்தியினால் தாறுமாறாகக் கிழிக்கப்பட்டு, அறை முழுவதும் பஞ்சு பறந்து கொண்டிருந்தது.
படுக்கையில் எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தாளோ.. தெரியாது. பக்கத்து வீட்டுப் பெண்மணி வந்து, அவளை யார் துணையுடனாவது மொச்சுடிக்கு அவளது தந்தை ஓபட் இருக்கும் இடத்துக்கு டிரக் மூலமாகக் கொண்டுபோய் விட்டு வருவதாகச் சொன்னாள்.
அடுத்த பதினான்கு வருடங்கள், தன் தந்தையை கவனித்துக் கொண்டு இருந்தாள் ரமோட்ஸ்வே. அவளுக்கு முப்பத்து நான்கு வயதாகும்போது, அவர் இறந்து விட்டார்.
எம்மா ரமோட்ஸ்வே தாய் தந்தையற்று, கொடுமையான கனவாக திருமண வாழ்வை முடித்துக் கொண்டு, ஐந்து நாட்களுக்கு மட்டுமே ஒரு தாயாக இருந்த நினைவுடன், தனிமரமான பின்.. ஒரு சிறந்த துப்பறியும் பெண்மணியாகும் லட்சியத்தோடு இதோ.. நம் முன்னே நிற்கிறாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 5
----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 5
----------------------------------------------------------------
எ ம்மா ரமோட்ஸ்வே, ஒரு துப்பறியும் நிறுவனம் தொடங்குவது என்பது, மிகவும் சுலபமான வேலை என்று தான் நினைத்தாள். புதுசாகத் தொழில் தொடங்குபவர்கள் பலரும் முதலில் அது எளிதானது என்று நினைத்து ஆரம்பித்து விட்டு, பிறகுதான் அந்தத் தொழிலில் ஒளிந்திருக்கும் பிரச்னைகளையும், திருப்பங்களையும், எதிர்பாராத அவதிகளையும் எதிர்கொள்வார்கள். பணப் பற்றாக்குறையினாலோ, தேவையான அளவுக்குப் பொருள் கையிருப்பு இல்லாததனாலோ நான்கு, அல்லது ஐந்து வாரங்களில் படுத்துப் போன வியாபாரங்களைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். இது மற்றதைக் காட்டிலும் கடினமான வேலை.
முதலில் ரமோட்ஸ்வே, ஜோப்ரா டிரைவ் எனும் இடத்தில், மூலையில் ஒரு வீட்டைப் பார்த்தாள். ஆனால், அது விலை அதிகமாக இருந்தது.. கடைசியில் ஊர்க் கோடியில், கலே மலைக்கு அருகில் ஒரு சிறிய இடம் கிடைத்தது. அது நல்ல இடமாகத் தோன்றியது. ஏனெனில், எப்போதும் ஜனநடமாட்டம் நிறைந்த இடமாக இருந்தது.. ஏராளமானோர் பரபரப்பாகப் போவதும் வருவதுமாக இருந்தனர்.
அப்படி நடக்கிறவர்களின் பார்வையில் நிச்சயம் இவள் மாட்டும் போர்டு தென்படும். போட்ஸ்வானா செய்தித்தாள்களில் விளம்பரம் வருவதைக் காட்டிலும் இது நிச்சயம் அதிகம் பலன் தரும். கூடிய விரைவில் அவளைப் பற்றி போட்ஸ்வானா மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
அவள் வாங்கிய இடம் ஒன்றும் உடனே குடி வரக் கூடியதாக இல்லை. ஏராளமான ரிப்பேர் வேலைகள் இருந்தன. ஒரு மேஸ்திரியை அழைத்து வந்து, சுவரின் பூச்சு வேலை களைச் சரிபார்த்தாள். அப்படியே மேல் தளத்துப் பூச்சு வேலையையும் முடித் தாள். கட்டடத்தின் வெளியே இள மஞ்சள் நிறமும், உள் சுவர்களில் வெள்ளை நிறமும் பூசப்பட்டது. மஞ்சள் நிறத் திரைச் சீலைகளைக் கொண்டு வாசலையும், ஜன்னல் களையும் அலங்கரித்தாள். இப்போது இன்னும் குஷி பிறந்து, இரண்டு மேஜை களையும் நாற்காலிகளையும் வாங்கிப் போட்டாள். இவளு டைய நண்பர் ஒருவர் தன்னிடம் உபரியாக இருந்த பழைய டைப்ரைட்டரைக் கொடுத்து உதவினார். ஆபீஸுக்குத் தேவை யான எல்லாம் தயார். காரியதரிசிதான் பாக்கி.
அதுவும் மிகவும் சுலபமாகக் கிடைத்தது. காரியதரிசிகளுக்கான பயிற்சி தரும் கல்லூரிக்கு போன் செய்தவுடனேயே, இவளுக்கு ஒரு பெண்மணி கிடைத்தாள். ஒரு பள்ளி ஆசிரியரின் விதவை. காரியதரிசிக்கான பரீட்சையில் முதன்மையாகத் தேறியிருந்தாள். ரமோட்ஸ்வேக்கு மிகவும் பொருத்தமானவள் என்று கல்லூரி நிர்வாகி கூறினார்.
ரமோட்ஸ்வேக்கு மகுட்சியைப் பார்த்தவுடனேயே பிடித்துப் போய்விட்டது. ஒல்லியான தேகமும், கொஞ்சம் வித்தியாசமான நீள் சதுர முகமுமாக.. தலைமுடியை நிறைய, மருதோன்றி இலைச் சாறைத் தடவி, செஞ்சிவப்பாக்கியிருந்தாள். முட்டை வடிவ மூக்குக் கண்ணாடிக்கு பிளாஸ்டிக் பிரேம் போட்டு, சிரித்த முகமாக, மனதில் எதையும் மறைத்து வைக்க மாட்டாள் என்பதை வெளிப்படையாகக் காட்டும் விதமாக இருந்தாள். அநாவசிய பந்தா இல்லாமலும், மனிதர்களிடம் ஒட்டி உறவாடி, அதே சமயம் எதிராளியை மதிப்பிடக் கூடிய வளாகவும் இருந்தாள்.
ஒரு திங்கட்கிழமையன்று, அலுவலகத்தைத் திறந்தார்கள். மகுட்சி, டைப்ரைட்டரின் முன் அமர்ந்து, நான் வேலை செய்யத் தயார் என்று சிரித்தாள்.
ஆமாம். நாம் புதிதாக ஆரம்பித்திருப்பதால் சூடு பிடிக்க நாளாகும். வாடிக்கையாளருக்காக காத்திருக்க வேண்டியது தான்! - ரமோட்ஸ்வே இப்படிச் சொன்னாலும், உள்மனதில் வாடிக்கையாளர்கள் வருவார்களா என்கிற சந்தேகமே இருந்தது. இந்தத் தொழிலே தவறோ என்றுகூட அவளுக்குத் தோன்றியது. யாருக்கும் துப்பறிபவர் தேவையில்லை. அதுவும் ரமோட்ஸ்வே யார்? அவளுக்கு மட்டும் தலையில் கொம்பா முளைத்திருக்கிறது? அவளும் மொச்சுடியில் உள்ள ஒரு சாதாரணப் பெண்தானே? துப்பறிபவர்களைப் பற்றி, அவள் லண்டனுக்குச் சென்று தெரிந்து கொண்டதில்லை. ஜோஹனஸ்பர்க் கூடப் போன தில்லை.
யாராவது, உங்களுக்கு ஜோஹனஸ்பர்க் தெரியுமில்லையா? என்று கேட்டால், ஒன்று வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பொய் சொல்ல வேண்டும்..
மகுட்சி, டைப்ரைட்டர் அச்சுகளைப் பார்ப்பதும், மேஜை இழுப்பறையை இழுத்துப் பார்ப்பதும், வீட்டுக்குள் வரும் கோழியை விரட்டுவதுமாக இருந் தாள்.
பதினோரு மணி சுமாருக்கு, ஒரு கோப்பை தேநீரை அருந்திய ரமோட்ஸ்வே எழுந்து, பக்கத்துக் கடைகளில் நல்ல பெர்ஃப்யூம் கிடைத்தால் வாங்கி வருவதாகச் சொல்லிக் கிளம்பினாள். மகுட்சியிடம், ஏதாவது போன் வந்தால் பேசவும், யாராவது வாடிக்கையாளர் வந்தால் பார்த்துக் கொள்ளவும் சொல்லி விட்டுச் சென்றாள்.
ரமோட்ஸ்வேக்கு, உள்ளூரச் சிரிப்பு வந்தது..
யார் வந்துவிடப் போகிறார்கள்?
- அவள், இப்படித்தான் நினைத்தாள்.
அநேகமாக இன்னும் ஒரு மாதத்திலேயே இந்த பிஸினஸை மூடி விட வேண்டியதுதான் என்றுகூடத் தோன்றியது. மகுட்சி எவ்வளவு நிலையில்லாத வேலை யைத் தேடிக் கொண்டிருக்கிறாள்.. பாவம் என்றே தோன்றியது. மிக அதிக மதிப்பெண்களுடன் பாஸ் செய்த பெண்ணுக்கு இது துரதிருஷ்டமான வாய்ப்பு தான்..
கடையில், பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது மகுட்சி பறந்தோடி வந்தாள்.
எம்மா ரமோட்ஸ்வே.. ஒரு வாடிக்கையாளர்.. ஒரு வாடிக்கையாளர்..
- மூச்சு வாங்கியது மகுட்சிக்கு.
நான், அவளை ஆபீஸில் உட்கார வைத்திருக்கிறேன். இது பெரிய விவகாரமாக இருக்கும்போல் இருக்கிறது.. காணாமல் போன மனிதன் பற்றியது. சீக்கிரம் வாருங்கள்..
காணாமல் அல்லது தொலைந்து போகும் புருஷர்களின் மனைவிகள் எல்லோருமே ஒரே ரகம்தான் என ரமோட்ஸ்வே நினைத்தாள். முதலில் புருஷனின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்குமோ என்று பயப்படுவார்கள். ஒருவேளை வேறு பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடியிருப்பானோ என்று அப்புறம் நினைப்பார்கள் - அநேகமாக அப்படித்தான் இருக்கும் என்கிற இந்த சந்தேகம் மெள்ள மெள்ள பெண்களை ஆக்கிரமித்து, அது அப்படியே கோபமாக மாறும்.. பிறகு, அவன் திரும்பி வந்தாலும் அவனைப் போட்டு உலுக்கி, பெரிய சண்டை போட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.
மாளாட்ஸி என்கிற அந்தப் பெண், இரண்டாவது நிலையில் இருப்பதாகவே ரமோட்ஸ்வேக்குத் தோன்றியது. அவள் கணவன், வேறு ஒருத்தியுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என நினைத்த ரமோட்ஸ்வே யின் சந்தேகம் வேறு விதமாகவும் திசை மாறியது..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒருவேளை நிறைய கடன் தொல்லை இருக்குமோ?
நீ உன் கணவரைப் பற்றிய விவரங்களைக் கொஞ்சம் கூறு..
இதற்குள் மகுட்சி, மூன்று கோப்பை தேநீருடன் வந்தாள்.
என் கணவர் பெயர் பீட்டர் மாளாட்ஸி.. அவருக்கு நாற்பது வயதாகிறது. மரச் சாமான்களைத் தயாரித்து விற்பனை செய்வது அவர் வேலை. வியாபாரம் நல்லபடியாகவே நடந்தது. அதனால், கடன் தொல்லையினால் அவர் ஓடிப் போக சாத்தியக்கூறுகள் இல்லை..
ரமோட்ஸ்வே தலையை ஆட்டினாள்.
வேறு விதமாகவும் இருக்கலாம் இல்லையா.. ஒருவேளை இன்னொரு பெண்ணின் தொடர்பு..?
மாளாட்ஸி, வேகமாகத் தலையை ஆட்டி மறுத்தாள்.
இல்லை. நான் அப்படியும் நினைக்கவில்லை. ஒரு ஆண்டுக்கு முன்பு என்றால் அப்படி இருந் திருக்கலாம். ஆனால், அவர் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து விட்டார்.. அவர் ஒருமுறை என்னை, தன்னுடன் வரும்படி அழைத்தார். நான் மறுத்து விட்டேன். அதனால் ஞாயிறு அன்று, தானே சென்று வந்தார். அவர் காணாமல் போனது கூட ஒரு ஞாயிற்றுக் கிழமைதான். நான், வழக்கம்போல சர்ச்சுக்குப் போயிருக்கிறார் என்றே நினைத்தேன்..
ரமோட்ஸ்வே மோட்டுவளையை வெறித்தாள். இது ஒன்றும் கஷ்டமான வழக்காகத் தோன்றவில்லை. பீட்டர் யாரோ ஒரு கிறிஸ்தவருடன்தான் சென்றிருக்க வேண்டும். அது பற்றி ஏதும் சந்தேகமேயில்லை. அவர் எந்தக் குழுவுடன் சென்றார் என்று கண்டுபிடித்தால், அவரைப் பற்றிய முழு விவரமும் கிடைக்கும். இது எதிர்பார்க்கும் முடிவுதான். பீட்டரை விடவும் வயதில் குறைந்தவனாகத்தான் இருக்க முடியும்.
மறுநாள் மாலைக்குள், தனக்குக் கிடைத்த விவரங்களின்படி ஐந்து குழுக்களைத் தேர்ந்தெடுத்தாள். அடுத்த இரண்டு நாட்களுக்குள் மூன்று குழுக்களின் தலைமை போதகர்களைச் சந்தித்தாள். அவர்கள் யாருக்குமே பீட்டரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை.. போதாக்குறைக்கு அதில் இருவர், இவளை மதம் மாறச் சொல்லி வற்புறுத்தினர். மூன்றாவது நபர், நாசூக்காக இவளிடம் பணம் கேட்டார்.
ரமோட்ஸ்வே அவரிடம் ஐந்து ரூபாய் மதிப்புள்ள பணத்தைக் கொடுத்து விட்டு நகர்ந்தாள். நாலாவது குழுவின் தலைவரான ரெவரெண்ட் ஷாட்ரெக் மெபாலி யைச் சந்தித்தபோது தனது தேடல், முடிவுக்கு வந்து விட்டதாகவே எண்ணினாள் ரமோட்ஸ்வே.
மாளாட்ஸி பெயரைக் கேட்ட துமே அவரது முகம் வெளிறியது. பயத்துடன் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டார்.
ஆகா.. இந்த மனிதரிடம் பீட்டரைப் பற்றிய விஷயம் இருக்கிறது..
ரமோட்ஸ்வே அவரையே உற்று நோக்கினாள்.
நீங்கள் போலீஸைச் சேர்ந்தவரா..?''
- ரெவரெண்ட் மிரட்சியுடன் கேட்டார்.
நான்.. பெண் போலீஸ்..
அவர் பீதியுடன் வாயைத் திறந்து மூடினார்.
சரியாகச் சொல்லப் போனால் நான் போலீஸ்காரி இல்லை. ஒரு துப்பறியும் நிறுவனத்தைச் சேர்ந்தவள்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதற்குள் ரெவரெண்ட் சுதாரித்துக் கொண்டார்.
உங்களை யார் அனுப்பினார்கள்? - ரமோட்ஸ்வேயைப் பார்த்து, இப்போது சற்றே துணிச்சலாகக் கேட்டார்.
பீட்டர் மாளாட்ஸியின் மனைவி.
ஓ.. அவன், தனக்கு பெண்டாட்டியே இல்லை என்று கூறினானே..
இருக்கலாம். ஆனால், அவன் மனைவி. தன் கணவனைத் தேடித் தரச் சொல்லி, என் உதவியை நாடி வந்திருக்கிறாள்.
அவன் இறந்து விட்டான். கடவுளின் பாதத்தை அடைந்து விட்டான்.
ரமோட்ஸ்வே, ரெவரெண்ட்டைப் பார்த்தாள்.
அவர் சொல்வது உண்மையாக இருக்கும் என்றே அவளுக்குத் தோன்றியது. அவளுடைய தேடல் முடிவடையும் தருவாய்க்கு வந்து விட்டது.
இனி அவன் எப்படி இறந்தான் என்பதைக் கண்டுபிடித்தால் போதும். ரமோட்ஸ்வே, ரெவரெண்ட்டை நட்புடன் பார்த்துப் புன்னகைத்தாள்.
நீங்கள் அது பற்றி என்னிடம் நடந்ததை மறைக்காமல் கூறலாம். உங்கள் அனுமதியின்றி, உங்கள் பெயரை, நான் யாரிடமும் வெளியிடமாட்டேன். அவர் எப்படி இறந்தார்?
ரமோட்ஸ்வேயின் வெள்ளை நிற காரில், ரெவரெண்ட்டும் ஏற, அங்கிருந்த நதிக்கரை ஓரமாக இருவரும் பயணம் செய்தனர். கன மழை காரணமாகவும், புயலின் சீற்றத்தாலும் பாதை மேடும் பள்ளமுமாக இருந்தது.. கார் போகவே முடியாமல் திணறியது. ஒரு மரத்தடியில் காரை நிறுத்தினார்கள்.
ரெவரெண்ட் கண்களில் பீதியுடன் ஆற்றைப் பார்த்தார்.
இதுதான் நாங்கள் ஞானஸ்நானம் செய்து வைக்கும் இடம்..
இப்போது அவர் காட்டியது ஆற்றை ஒட்டியபடி இருந்த நீர்த்தேக்கத்தை.
நான் இங்குதான் நின்று கொண்டிருந்தேன். பாவமன்னிப்பு கேட்பதற்காக என்னுடன் வந்தவர்கள், இங்குதான் நீரில் இறங் கினார்கள்..
எத்தனை பேர்..?
ஆறு பேர்.. பீட்டர் மாளாட்ஸியையும் சேர்த்து. எல்லோரும் ஒன்றாகத்தான் சென்றார்கள். நான், வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தேன் - ரெவரெண்ட்டின் குரல் இப்போது நடுங்கியது.
அப்புறம்..?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமோட்ஸ்வே, அந்த நீர்த்தேக்கத்திலிருந்து கண்களை எடுக்காமல் கேட்டாள்..
அனைவரும் மார்பளவு நீரில் நின்று கொண்டிருந்தனர். நான் கிறிஸ்துவின் சங்கீதங்களைப் பாடி அவர்களைத் திருப்பி பாட வைத்துக் கொண்டிருந்தேன். சட்டென ஏதோ தவறு நடந்து விட்டது போலத் தோன்றியது. நான் உற்றுப் பார்த்தேன். ஐந்து பேர்தான் இருந் தார்கள்.
ஒருவரைக் காணவில்லை.. அப்படித்தானே?
ஆமாம். அந்த ஒருவனை இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டு விட்டான்.
ரமோட்ஸ்வே அந்த நீர்த்தேக்கத்தைப் பார்த்தாள். அப்படி ஒன்றும் பெரியதாக இல்லை.
மழை நாட்கள் தவிர அங்கு, குட்டையாகத்தான் தண்ணீர் தேங்கியிருக்கும். ஆனால், நல்ல மழை பெய்தால், பெரு வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. நீச்சல் தெரியாதவனாக இருந்தால், வெள்ளம் அடித்துச் செல்லும் அபாயமும் உண்டு.
அப்படி அடித்துச் செல்லப்பட்டிருந்தால், அந்த உடல் எங்கேயாவது நதிக்கரையில் ஒதுங்கியிருக்க வேண்டுமே.. யார் கண்ணிலாவது பட்டிருக்குமே..? நதிக்கு யாராவது வந்து போய்க் கொண்டுதானே இருக்கிறார்கள்.. அடையாளம் தெரியாத உடல் ஒன்று நதிக்கரையில் கிடந்ததாக பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும் இத்தனை நாள் வந்திருக்காதா..?
இதை அலட்சியமாக விடக் கூடாது.
ரமோட்ஸ்வே கொஞ்சம் யோசித்தாள். வேறு கோணத்தில் யோசித்துப் பார்த்தவளுக்கு உடல் நடுங்கியது.
ஒரு வேளை ரெவரெண்ட்.. ஃபாதரே..
அவள் அவரைக் கூர்மையாகப் பார்த்தாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 6
----------------------------------------------------------------
அ வள் தடாலடியாக அவரைப் பார்த்துக் கேட்டாள்..
இதை ஏன் நீங்கள் போலீஸுக்குச் சொல்லவில்லை?
ஃபாதர் தலைகுனிந்து தரையைப் பார்த்தார். உண்மையிலேயே வருத்தப் படுபவர்கள்தான் தரையைப் பார்ப்பார்கள். கூசாமல் தவறு செய்பவர்கள் தலையை உயர்த்தி, ஆகாயத்தைத்தான் பார்ப்பார்கள்.
நான் கட்டாயம் சொல்லியிருக்க வேண்டும். கடவுள் அதற்காக என்னைத் தண்டிப்பார். அவன் மரணத்துக்கு நான்தான் காரணம் என்று சொல்லி விடுவார்களோ எனப் பயந்தேன். என்னை கோர்ட் வரை இழுத்து, நஷ்ட ஈடு கேட்பார்கள். அதற்கு சர்ச்சின் பணத்தைத்தான் செலவழிக்க வேண்டிவரும். இறைவனின் வேலைகள் எல்லாம் நின்று போய்விடும். இந்த சர்ச் பணம், பல அநாதைக் குழந்தை களுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது. நான் ஏன் பேசாமல் இருந்தேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? ஞானஸ்நானம் பெற வந்தவர் களிடம் சர்ச்சின் நிதி நிலைமையை யும், கோர்ட்டின் பலவந்தமான அபராதத்தையும் எடுத்துச் சொன்னதும், அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
ரமோட்ஸ்வேக்குப் புரிந்தது. கோர்ட்டில் போய் ஆயிரக்கணக்கில் அபராதத் தொகை கட்டுவதினால் ஆகப் போவது ஒன்றுமில்லை. இந்த சர்ச்சில் இயங்கி வரும் அநாதைக் குழந்தைகளின் வயிறுதான் காயும். எப்படியும் இறந்தவன் வரப் போவதில்லை.
அவள், ஃபாதரின் கரத்தை மிருதுவாக அழுத்தினாள்.
நீங்கள் செய்ததில் தவறு ஒன்றுமில்லை. கடவுள் நீங்கள் நற்காரியங்களைத் தொடர்ந்து செய்வதையே விரும்புகிறார். அவர் உங்களை கோபிக்க மாட்டார். பீட்டர் இறந்தது உங்களுடைய தவறு இல்லை!
ஃபாதர் கலக்கத்துடன் கண்களை உயர்த்திப் பார்த்தார். கண்ணீர் தளும்பப் புன்னகைத்தார்.
உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி..
ரமோட்ஸ்வே அவரிடமிருந்து விடை பெற்றாலும், இன்னொரு கடமை தனக்கு இருப்பதையும் மறக்க வில்லை. அது, பீட்டரின் மனைவி மாளாட்ஸிக்கு, அவளுடைய கணவர் நீரில் மூழ்கி இறந்து விட்டார் என்பதை எப்படி நிரூபிப்பது?
அன்று மதியம் ரமோட்ஸ்வே, தனது பக்கத்து வீட்டுக்காரரிடம், அவரது நாயை சற்று நேரத்துக்கு இரவல் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டாள்.
எனக்கு ஒரு வழக்கில் துப்பறிய ஒரு நாய் தேவைப் படுகிறது. நான் அதைப் பத்திரமாகத் திருப்பித் தந்து விடுகிறேன்.
- அவள் இப்படிச் சொல்ல, பக்கத்து வீட்டுக்காரருக்குப் பெருமை பிடிபடவில்லை.
இந்த நாயைக் கொண்டு போங்கள். இதற்கு மோப்ப சக்தி அபாரம். வயதிலும் மூத்தது. இது நல்ல துப்பறியும் நாயாக இருக்கும்..
- அவர் கூற, ரமோட்ஸ்வே அந்த அழுக்குப் பிடித்த, நாற்றமடிக்கும் பெரிய நாயை சற்று அருவருப்புடனேயே அழைத்துக் கொண்டாள். இருட்டத் தொடங்கியதும் தன் காரில் அதை ஏற்றிக் கொண்டு, கையில் ஒரு கயிற்றுடன் பயணமானாள். அந்த நதிக்கரையை அடைந்தாள்.
தண்ணீர் தேங்கியிருந்த குட்டையின் அருகில் தான் கொண்டு வந்திருந்த நீண்ட மரக் கட்டையை மணலில் ஆழமாக நட்டாள். நாயை, கயிற்றினால் அந்த மரக்கட்டையில் கட்டி வைத்தாள். தன் கைப்பையிலிருந்து ஒரு பெரிய எலும்புத் துண்டை எடுத்து நாயை மோப்பம் பிடிக்கச் செய்தாள். நாய், மிகுந்த உற்சாகத்துடன் அந்த எலும்புத் துண்டைக் கடிக்க ஆரம்பித்தது.
ரமோட்ஸ்வே, சற்று தொலைவில், கொசு கடிக்காமல் இருக்க ஒரு சால்வையால் காலை மூடியபடி, தன்னுடைய பெரிய துப்பாக்கியுடன் உட்கார்ந்தாள். சுமார் இரண்டு மணி நேரம் போனது. கொசுக்கடி பிடுங்கியபோதும், அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. வேலை என்று வந்து விட்டால் அதுதான் அவளுக்கு முக்கியம்.
திடீரென நாய் உறுமும் சத்தம் கேட்டது. அவள் கண்களைக் குவித்து இருட்டில் பார்த்தாள். நாய் நின்று கொண்டிருப்பதும், அதன் பார்வை, தண்ணீரை நோக்கி இருப்பதும் தெரிந்தது. நாய் திரும்பவும் உறுமிக் குரைத்தது.
ரமோட்ஸ்வே போர்வையை உதறி விட்டு, அருகில் உள்ள டார்ச் லைட்டை நிதானமாக எடுத்தாள். தண்ணீரில் சலசலப்பு கேட்டது. உடனே அவள் டார்ச் லைட் பட்டனை அமுக்கி, வெளிச்சத்தைப் பாய்ச்சினாள். அந்த ஒளியில், ஒரு பெரிய முதலை திரும்பிப் பார்த்தபடி இருந்தது தெரிந்தது.
நாயைக் கூர்மையாகப் பார்த்தபடியே அது மெதுவாக நகர்ந்தது. ரமோட்ஸ்வே துப்பாக்கியை எடுத்து, நன்கு தெளிவாகத் தெரிந்த அதன் தலையை நோக்கி, குறி வைத்துச் சுட்டாள்! துப்பாக்கி குண்டு பாய்ந்தவுடன் முதலை ஒரு குட்டிகரணம் அடித்து, பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக விழுந்தது. இருமுறை துடித்து விட்டு அடங்கி விட்டது. ரமோட்ஸ்வே கைகள் நடுங்க துப்பாக்கியைக் கீழே வைத்தாள். ஒரு கத்தியை எடுத்து முதலையின் வயிற்றுப் பகுதியைக் கிழித்தாள். வயிற்றில் உள்ளது எல்லாம் டார்ச் லைட் ஒளியில், தெளிவாகத் தெரிந்தது. அதில் கூழாங்கற்கள் (உணவு செரிப்பதற்காக முதலை உண்ணும்), அழுகிய மீனின் பகுதிகள், ஜீரணமாகாத வளையல், மோதிரம், ஒரு கைக்கடிகாரம் எல்லாம் இருந்தன. துருப்பிடித்து, கன்னங்கரேல் என இருந்தாலும் அவை தனியே காணப்பட்டன. மிகத் தெளிவாக முதலையின் ராட்சதப் பசிக்குச் சான்றாக இருந்தன!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இ து உன் கணவருக்குச் சொந்தமானதா? - ரமோட்ஸ்வே, முதலை யின் வயிற்றிலிருந்து மீட்ட கைக்கடிகாரத்தை மாளாட்ஸியிடம் காட்டி னாள்.
அவள், அதைக் கையிலெடுத்து உற்றுப் பார்த்தாள்.
மாளாட்ஸி நிதானம் இழக்கவில்லை.
நல்லது. இப்போது என் கணவர் இறைவனிடம் இருக்கிறார் என்பது தெரிய வந்து விட்டது. இன்னொரு பெண்ணுடன் இருக்கிறார் என்பதை விட இது எத்தனையோ மேல்.
மாளாட்ஸியின் வார்த்தைகளை ஆமோதித்தாள் ரமோட்ஸ்வே..
உண்மையான பேச்சு.
நீங்கள் மணமானவரா? கணவருடன் வாழ்வது என்பது எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா..? - மாளாட்ஸி வினவ.. ரமோட்ஸ்வே, ஜன்னல் வழியாகத் தெரியும் முள் மரங்களையும், அதன் பின்னணியில் தெரியும் மலைகளையும் வெறித்து நோக்கினாள்.
எனக்கு ஒரு கணவன் இருந்தான். அவன் ஒரு இசைக் கலைஞன். என்னை ரொம்பவும் கஷ்டப்படுத்தினான். இப்போது நான் அவனுடன் இல்லை. ஆனால், சந்தோஷமாக இருக்கிறேன்..
சற்று இடைவெளி விட்டுச் சொன்னாள்..
மன்னியுங்கள். நீங்கள் கணவனை இழந்து நிற்கிறீர்கள்.. அதற்காக வருத்தப்படுகிறீர்கள்..
மாளாட்ஸியின் இதழ்க்கடையில் விரக்தி மிகுந்த புன்சிரிப்பு.. ஆமாம். கொஞ்சம்..
- இதைச் சொல்லி விட்டு எழுந்தவள்.. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.. என்றாள்.
அலட்டிக் கொள்ளாத அவளது சுபாவம், ரமோட்ஸ் வேக்கு மிகவும் பிடித்திருந்தது.
பாசாங்கு செய்யத் தெரியாத பெண்..
அ ந்தப் பையனுக்கு பதினோரு வயது ஆன போதிலும், வயதுக்கேற்ற வளர்ச்சியின்றி சிறியவனாக இருந்தான். அவனைப் பார்ப்பவர்கள் ஏழு அல்லது எட்டு வயதுதான் மதிப்பிடுவார்கள்.
அந்தச் சிறுவன், மற்ற சிறுவர்களைக் காட்டிலும் அதீத துறுதுறுப்பும் விஷயங்களை அறிவதில் வேகமும் உடையவனாக இருந்தான். புதர்களிடையே புகுந்து, மணிக்கணக்காக கண்ணில் தென்படாமல் இருப்பது அவனுடைய வழக்கமாயிற்று. திடீரென, கால்நடை பட்டிக்குப் பின்புறமாகவோ, ஆட்டு மந்தையின் பின்னாலோ அரிய பொக்கிஷம் போல கழுகின் இறகு, காய்ந்து போன மரவட்டை, அல்லது பாம்பின் வெளுத்த எலும்புக்கூடு.. இப்படி எதையாவது பிடித்துக் கொண்டு வெளியே வருவான்.
இப்போது மறுபடியும் தன் சுபாவப்படி புதர்களின் நடுவில் இருந்த புழுதிப் பாதையில் நடந்தான். அவனுடைய ஆர்வத்தைத் தூண்டும் படியாக, பாம்பின் புதிய கழிவு அவன் கண்ணில் பட, அதைப் பின்பற்றித் தொடர்ந்து சென்று அந்தப் பிராணியைக் காணலாம் என்கிற நினைப்புடன் நடந்தான். அவனுக்கு அது எந்தப் பாம்பின் மலம் என்று கூடத் தெரிந் திருந்தது. அதன் மேல், பாறையில் வாழும் முயலின் ரோமங்கள் இருந்தன. பெரிய பாம்புகளுக்கு, பாறை முயல்கள் மிகவும் பிடித்த உணவு. இதுவும் அவனுக்குத் தெரியும். பாம்பு மாத்திரம் அவன் கண்ணில் படுமானால், அதைப் பாறையில் அடித்துக் கொன்று விட்டு, பாம்புத் தோலில் தனக்கும், தன் தந்தைக்கும் பெல்ட் செய்து கொள்ளலாம் என்று நினைத்தான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இருட்ட ஆரம்பித்துவிட்டது. இந்தத் தேடலை நிறுத்த வேண்டியதுதான். நிலவில்லாத அந்த இரவில் பாம்பைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பது சாத்திய மில்லாதது. பாதையை விட்டு விலகி, புதர் நடுவில் உள்ள ஒற்றையடிப் பாதை வழியே போய், காய்ந்து கிடந்த ஆற்றுப் படுகை வழியாக ஊர் செல்ல எண்ணி னான்.
பாதையை சீக்கிரமாகவே கண்டு பிடித்து விட்டான். கால்களை மணலில் புதைத்தபடி சிறிது நேரம் இளைப் பாறினான். அவனுக்குப் பசித்தது. வீட்டில் மாமிசமும் குழம்பும் அவனுக் காக இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். அவன் எழுந்திருந்து மறுபடி யும் நடக்கத் தொடங்கினான். இப்போது நன்றாக இருட்டி விட்டது.
அப்போதுதான் கவனித்தான்.. எதிரில் இருந்த மரங்களின் பின்னணியில் இருந்து மஞ்சள் நிற வெளிச்சம் தெரிந்தது. அவன் திரும்பியபோது, பின்னால் ஒரு டிரக் வண்டி வந்து கொண்டிருந்தது. அது காராக இருக்க முடியாது. ஏனெனில், அங்கு மணல் மிக ஆழமாகவும் மிருதுவாகவும் இருந்தது. கார் இந்தப் பாதையில் போக முடியாது.
அவன் பாதையின் ஓர் ஓரத்தில் நின்று காத்திருந்தான். வண்டியின் வெளிச்சம், இப்போது நேரே அவன் மீது விழுந்தது. ஒரு சின்ன டிரக்.. தலையில் இரண்டு விளக்குகளின் வெளிச்சம் பாதையின் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப ஏறி ஏறி இறங்கியது. வண்டி மிக அருகில் வர, வெளிச்சம் அவன் முகத்தில் அடிக்க, சட்' என கைகளால் கண்களை மறைத்துக் கொண்டான்.
குட் ஈவ்னிங் - சம்பிரதாயமான வாழ்த்து வண்டிக்குள் இருந்து ஒலித்தது.
சிறுவன் சிரித்தபடியே பதில் வணக்கம் கூறினான். வண்டியில் இருவர் இருந்தனர். இளைஞனான ஒருவன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் அருகில் வயதானவன் ஒருவன். இருவருமே புதியவர்கள் என்பதை ஒரு பார்வையிலேயே புரிந்து கொண்டு விட்டான் சிறுவன். ஸெட்ஸ்வானா மொழியை அவர்கள் பேசிய விதம் சற்று வித்தியாசமாக இருந்தது. உள்ளூர்வாசிகள் பேசுவதுபோல் இல்லை. ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் குரல் மேல் ஸ்தாயியிக்குச் சென்றது.
காட்டு மிருகங்களை வேட்டையாடுகிறாயா.. இருட்டில் புலியைப் பிடிக்கப் போகிறாயா?
அவன், இல்லை எனத் தலையசைத்தான்.
நான் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்..
புலியை நீ பிடிக்கும் முன்பே அது உன்னைப் பிடித்து விடும்..
சிறுவன் சிரித்தான். நீங்கள் சொல்வது சரிதான். எப்படியானாலும் நான், இன்று புலியைச் சந்திக்க விரும்பவில்லை..
சரி.. நான், உன்னை வீட்டில் கொண்டுபோய் விட்டு விடுகிறேன். ரொம்பத் தொலைவோ?
இல்லை இல்லை.. தூரமில்லை. இதோ, பக்கம் தான்.
இதற்குள் வண்டி ஓட்டி, கதவைத் திறந்து கொண்டு, கீழே இறங்கினான். இன்ஜினை அணைக்காமலேயே, சிறுவன் ஏறி பக்கவாட்டு இருக்கையில் உட்கார வசதி செய்து தந்தான். பின்னர் கதவை மூடிவிட்டு, வண்டியில் ஏறி, கியரை மாற்றினான். சிறுவன் காலைத் தூக்கி மேலே வைத்துக் கொள்ள - காலடியில் ஏதோ மிருகத்தின் மிருதுவான ஈரம் படர்ந்த மூக்கில் பாதம் பட - நாயோ இல்லை ஆடோ..
இடது பக்கம் உட்கார்ந்திருந்த வயதான மனிதனைத் திரும்பிப் பார்த்தான் சிறுவன். ஒருவரை உற்றுப் பார்ப்பது அநாகரிகம் என்று அவனுக்குத் தெரியும். அதுவும் இந்த கருங்கும்மிருட்டில்.. இருந்தாலும் அந்த மனிதனின் உதடுகளும் கண்களும் ஏதோ மாதிரி இருப்பதைக் கவனித்தான். உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
ஒரு பையன், வயதான ஒருவரை அப்படிப் பார்ப்பது தவறுதான். ஆனால். இந்த மனிதர்கள் ஏன் இங்கே இருக் கிறார்கள்.. என்ன செய்கிறார்கள்..?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதோ.. அதுதான் என் அப்பாவின் வீடு. விளக்கு வெளிச்சம் தெரிகிறது பாருங்கள்..
எங்களுக்குத் தெரிகிறது.
இங்கேயே நிறுத்துங்கள்.. நான் இந்தப் பக்கமாகப் போய்விடுவேன்..
நாங்கள் நிறுத்த மாட்டோம். உன்னால் எங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது..
பையனுக்கு திடீரென பயம் பிடித்துக் கொண்டது. விருட்டெனத் திரும்பி டிரைவரைப் பார்த்தான். அந்த இளைஞன் சிரித்தான்.
கவலைப்படாதே. பேசாமல் உட்கார். நாம் இப்போது, வேறு ஒரு இடத்துக்குப் போகிறோம்..
என்னை எங்கே அழைத்துப் போகிறீர்கள்.. ஏன் அழைத்துப் போகிறீர்கள்..?
சிறுவன் கிட்டத்தட்ட கூச்சலிடாத குறை.. இதற்குள் வயதானவன், அவனுடைய தோளைத் தொட்டான்.
உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம். நீ வீட்டுக்கு அப்புறம் போகலாம். உனக்கு ஒரு கெடுதலும் நேராது. நாங்கள் மிகவும் இரக்க சுபாவமுள்ளவர்கள்.
சிறுவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அதுவரை என்ன நடக்கிறது என்று அவனுக்குப் புரிய வில்லை. இப்போது புரிந்து விட்டது. என்ன நடக்கும் என்பதை யூகித்து விட்டான்.
ஏய்.. பையனைப் பிடி! அவன் கைகளைக் கெட்டி யாகப் பிடித்துக் கொள். நீ பிடித்துக் கொள்ளவில்லை என்றால், வண்டி பாதையை விட்டு இறங்கி விடும்!
நான் முயற்சி செய்கிறேன். அவன் பிசாசு மாதிரி திமிறுகிறான்.
நீ பிடித்துக் கொள்.. நான் வண்டியை நிறுத்து கிறேன்.
முதல் வழக்கில் பெற்ற வெற்றி, ரமோட்ஸ்வேக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. தனியார் துப்பறிவது பற்றிய புத்தகங்களை வரவழைத்து, அத்தியாயம் அத்தியாயமாகப் படித்துக் குறிப்பெடுத்தாள்.
அவளுடைய காரியதரிசி மகுட்சிக்கு கடிதங்களைப் பிரித்துப் பார்க்கும் வேலை இருந்தது. முதல் மூன்று நாட்களுக்குக் கடிதங்களே இல்லை. நான்காவது நாள் ஒரு பட்டியல் கடிதமும், சொத்து வரிக்கான தாக்கீதும் வந்தன.
இரண்டாவது வார ஆரம்பத்தில், கைபட்டு, அழுக்கடைந்த ஒரு வெள்ளை உறையிலிருந்த கடிதத்தை ரமோட்ஸ்வேக்குப் படித்துக் காண்பித்தாள்.
அன்புள்ள எம்மா ரமோட்ஸ்வே, நீங்கள் இத்தகைய பெரிய நிறுவனத்தை இங்கு ஆரம்பித்திருப்பது பற்றி, பேப்பரின் மூலம் தெரிந்துகொண்டேன்.
நான், என் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள காபரோனேயிலிருந்து முப்பது மைல் தொலைவிலுள்ள காட்ஸானா கிராமத்தில் ஒரு சிறிய பள்ளியில் ஆசிரியராக இருக்கி றேன். எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு பெண் குழந்தைகளும் பதினோரு வயதில் ஒரு பையனும் உண்டு. எங்களுடைய பையன் காணாமல் போய் இரண்டு மாதங்கள் ஆகின்றன.
நாங்கள் போலீஸிடம் சென்றோம். அவர்கள் வலை வீசித் தேடி, பல இடங்களில் விசாரித்தும் பயனில்லை. யாருக்கும் என் பையனைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
நான் பள்ளியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, எங்கள் ஊரைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குகை, ஒவ்வொரு பள்ளத்திலும் அவனைத் தேடினேன். அவனது சுவடே இல்லை.
என் பையனுக்கு இயற்கை யின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்ததனால் அங்குமிங்கும் அலைவான். கற்களையும் காட்டில் கிடைக்கும் பறவை சிறகுகளையும் சேமிப்பதில் ஆர்வம் கொண்டவன். அவனுக்குப் புதர்களைப் பற்றி நன்கு தெரியுமாதலால், முட்டாள்தனமாக எதையும் செய்து மாட்டிக் கொள்ள மாட்டான். இங்கு சிறுத்தைப் புலிகள் இல்லை. கலஹாரி மலையிலிருந்து வெகுதூரத்தில் நாங்கள் இருப்பதால் சிங்கங்கள் வருவதற்கும் வழியில்லை. இங்குள்ள ஒவ்வொரு கிணற்றையும் பார்த்து விட்டேன். விவசாயிகளையும் தண்ணீரில் இறங்கிப் பார்க்கச் சொன்னேன். இருந்தும் பலன் பூஜ்யம்தான்.
ஒரு பையன் திடீரென்று எப்படி மாயமாக மறைந்து போக முடியும்? நான் பெரிய பணக்காரன் இல்லை. தனியார் துப்பறியும் நிறுவனங் களுக்குப் போதுமான பணம் தரும் அளவுக்கு எனக்கு வசதியில்லை. இருந்தாலும் கடவுளின் பெயரால் உங்களிடம் கையேந்தி யாசிக்கிறேன்.
நீங்கள் மற்ற வழக்குகளை விசாரணை செய்யும்போதும், மனிதர்களை விசாரிக்கும் போதும், பதினோரு வயதான தோபிஸோ என்ற பையனைப் பற்றி ஏதாவது தெரியுமா.. காட்ஸானா கிராமத்தில் ஒரு ஆசிரியரின் பையன் அவன் என்று சொல்லி விசாரிக்க முடியுமா..? குழந்தையைத் தொலைத்து விட்டு, சாப்பிடாமல் உருக்குலைந்து கிடக்கும் என் மனைவிக்காகவாவது தயவுசெய்து இதை நினைவில் வைத்துக் கொண்டு செய்வீர்களா..? உங்களிட மிருந்து ஏதாவது நல்ல தகவல் வரும் எனக் காத்திருக்கும் ஆசிரியர்.
கடவுள் துணை.
- எர்னஸ்ட் மோலோய் பகோடாட்டி.
மகுட்சி படிப்பதை நிறுத்திவிட்டு ரமோட்ஸ்வேயைப் பார்த்தாள். சிறிது நேரம் இருவரும் பேசவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 7
----------------------------------------------------------------
ர மோட்ஸ்வேதான் முதலில் மௌனத்தைக் கலைத்தாள்.
மகுட்சி.. உனக்கு ஏதாவது இது பற்றி தெரியுமா? ஏதாவது பையன் காணாமல் போனது பற்றிக் கேள்விப் பட்டாயா?
மகுட்சி சற்று யோசித்தாள்.
கேள்விப்பட்டேன் என்று நினைக்கிறேன். நியூஸ் பேப்பர்களில், காணாமல் போன சிறுவன் பற்றி வந்திருந்தது. ஆனால், எல்லோரும் அவன் வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டதாக நினைக்கின்றனர்.”
ரமோட்ஸ்வே எழுந்து, காரியதரிசியின் கையில் இருந்த கடிதத்தை வாங்கிப் பார்த்தாள். தடயங்கள் அழியாமல் இருக்க, கோர்ட்டில் மிக ஜாக்கிரதையாக பிடிப்பார்களே.. அதுபோல, அந்தக் காகிதத்தைக் கையிலெடுத்தாள். அந்த மெல்லிய காகிதம் - சோகமான செய்தியினால் கனமாக இருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது.
என்னால் இதில் எதுவும் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன். இருந்தாலும், என் காதுகளைக் கூர்மையாக வைத்துக் கொள்வேன். இதை, அந்தப் பரிதாபத்துக்குரிய தந்தையிடம் கூறுவேன். வேறு என்ன செய்ய முடியும். கட்ஸானாவைச் சுற்றியுள்ள புதர்களை அவரே நன்கு அறிவார். அங்குள்ள மனிதர்களையும் அவருக்கு மிக நன்றாகத் தெரியும். இதில், நான் செய்யக்கூடியது பெரிதாக ஒன்றும் இல்லை.
மகுட்சியிடம் ஒரு பிரச்னையிலிருந்து விடுபட்ட நிம்மதி.
ஆம்.. இதில் நாம் செய்யக்கூடியது எதுவும் இல்லை..
ரமோட்ஸ்வே சொன்ன கடிதத்தை, அவள் மிக கவனத்துடன் டைப் செய்தாள். அழகாக உறையில் இட்டு, மேலே ஸ்டாம்ப்பையும் ஒட்டி, போஸ்ட் செய்வதற்கான சிவப்பு நிற ட்ரேயில் வைத்தாள்.
இதுதான் துப்பறியும் நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட இரண்டாவது கடிதம். முதல் கடிதம் 250 புலாவுக்கான (அந்த ஊர் ரூபாய்) கட்டண ரசீது. அதன் மேல் மகுட்சி, உன் கணவர் இறந்த மர்மத்தைக் கண்டுபிடித்ததற்கான கட்டணம் என்று மாளாட்ஸிக்கு டைப் செய்திருந்தாள்.
ஜீ ப்ரா டிரைவ்விலுள்ள தன் வீட்டில் ரமோட்ஸ்வே, தனது பகல் உணவுக்காக ஸ்டூவும் (ஒருவிதமான குழம்பு) பூசணிக்காய் கறியும் சமைத்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு கோப்பை நிறைய தேநீரை உறிஞ்சியபடி, குழம்பைக் கிளறியவாறு, அன்றைய சம்பவங்களை நினைக்கப் பிடிக்கும். அன்று வந்திருந்த அந்தக் கடிதத்தைத் தவிர, பல நிகழ்ச்சிகள் நடந்திருந்தன. ஏராளமாகக் கடன் கொடுத் திருந்த ஒருவனுக்கு, கடன் வாங்கியவர்களிடம் இருந்து, பணத்தைத் திரும்பப் பெற்றுத் தருவதாகக் கூறியிருந்தாள்.
இது மாதிரியான சமாசாரங்களை எல்லாம் கூட துப்பறியும் நிறுவனம் செய்யுமா? தெரியவில்லை. இதுபற்றி ஒரு குறிப்பும், எந்தப் புத்தகத்திலும் இல்லை. இருந்தாலும் அந்த மனிதன் விடாப்பிடியாக அவளை வற்புறுத்திக் கொண்டிருக்கிறான். முடியாது என மறுக்கவும் கஷ்டமாக இருந்தது. பிறகு, தன் கணவனைப் பற்றிய கவலையுடன் ஒரு பெண் அவளிடம் வந்தாள்.
அவன் வீடு திரும்பும்போது ஒரே பெர்ஃபியூம் வாசனையுடன் வருகிறான். சிரித்த முகமாக வேறு வருகிறான்.
அவன் ஏன் வாசனையுடன் சிரித்த முக மாக வீடு திரும்புகிறான் என்பதே மனைவியின் கவலை.
ஏன்?
ஏனென்றால், வேறு பெண் எவளையாவது பார்த்துவிட்டு வருகிறானோ என்னவோ! - ரமோட்ஸ்வே கூறினாள்.
என் கணவன் அப்படி செய்வான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
- அந்தப் பெண் அழமாட்டாத குறையாகக் கேட்டாள்.
இதுபற்றி இருவரும் பேசி, அந்தப் பெண்ணே இது விஷயமாகக் கணவனை சரி கட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இதற்கு இன்னொரு காரணம்கூட இருக்கலாம் என்று ரமோட்ஸ்வே நம்பிக்கையுடன் கூறினாள்.
அப்படியென்றால்?
அதாவது, நிறைய ஆண்கள் இந்தக் காலத்தில் வாசனை யாக இருக்க விரும்புகிறார்கள். ஆண்களின் உடல் நாற்றம் பற்றி உனக்குத் தெரியாதா? - மகுட்சி கேட்டாள்.
அந்தப் பெண், நாற்காலியிலிருந்து உடனடியாக திரும்பி, மகுட்சியை வெறித்தாள்.
என் கணவர் மிகவும் சுத்தமானவர். அதனால் நாற்றமே கிடையாது.
இப்போது ரமோட்ஸ்வே, மகுட்சியைக் கூர்மையாக, எச்சரிப்பதுபோலப் பார்த்தாள். வாடிக்கையாளர்களுடன் தான் பேசிக் கொண்டிருக்கும்போது, அவளை ஒதுங்கியிருக்கும்படிச் சொல்ல வேண்டும் என தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - மொழிபெயர்ப்பு மின்னூல்!
» நீரிழிவு நோய் பாதிப்பு இந்தியாதான் நம்பர் 1: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை
» பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)
» பெண்கள், சிறுமிகளை கடத்துவதில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்'!
» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
» நீரிழிவு நோய் பாதிப்பு இந்தியாதான் நம்பர் 1: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை
» பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)
» பெண்கள், சிறுமிகளை கடத்துவதில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்'!
» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 9
|
|