புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 8:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
1 Post - 1%
bala_t
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
1 Post - 1%
prajai
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
284 Posts - 42%
heezulia
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
5 Posts - 1%
prajai
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_m10 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 14 May 2014 - 19:38



எப்போதாவது அபூர்வமாக வரும் மிக சிறந்த கதையம்சம் கொண்ட படங்களின் வரிசையில், ‘மெய்யழகி.’

ஜெய்குவேதனி சிறுமியாக இருக்கும்போதே அவருடைய அம்மா ஒரு தம்பியை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து போகிறார். அப்பா ஒரு குடிகாரர். தம்பியை தன் கழுத்தில் தொட்டில் கட்டி வளர்க்கிறார், ஜெய்குவேதனி. ‘ஆட்டிஸம்’ பாதித்த சிறுவனாக வளர்கிறான், தம்பி பாலாஜி. வாயில் எப்போதும் எச்சில் ஒழுக, கையையும் கால்களையும் இழுத்துக்கொண்டு நடக்கும் பாலாஜியை ஊரில் உள்ள மற்ற சிறுவர்கள், ‘ஜொள்ளு’ என்று கேலி–கிண்டல் செய்கிறார்கள்.

அக்கா ஜெய்குவேதனி மட்டும் தம்பி பாலாஜி மீது பாசமழை பொழிந்து, கண்ணுக்கு கண்ணாக வளர்க்கிறார். தம்பிக்காக, திருமண வாழ்க்கையை தியாகம் செய்கிறார். ஜெய்குவேதனியின் அழகையும், வசீகர உடற்கட்டையும் பார்த்து, அந்த ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் பண்ணையார் அருண்மொழிவர்மன் ஆசைப்படுகிறார். அனுபவிக்க துடிக்கிறார். அவருடைய வலையில் சிக்காமல் தப்புகிறார், ஜெய்குவேதனி.

அருண்மொழிவர்மன் தனது கடைசி அஸ்திரமாக, ஒரு ஜோதிடரை ‘செட்–அப்’ செய்து, மனைவி சம்மதத்துடன் ஜெய்குவேதனியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அதற்கு சம்மதிக்காத ஜெய்குவேதனி, அருண்மொழிவர்மனிடம் வேலை செய்யும் எல்லனை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறார். அதை கேள்விப்பட்ட அருண்மொழிவர்மன், எல்லனை அடித்து கொலை செய்கிறார். கொலையாளி, ஜெய்குவேதனியின் முறைமாமன்தான் என்று இல்லாத ஒரு உறவை சொல்லி, போலீசை திசை திருப்புகிறார்.

இந்த நிலையில், தம்பி பாலாஜிக்கு ஒரு லட்சம் செலவு செய்து ஆபரேஷன் செய்தால் குணமாகி விடுவார் என்று டாக்டர் சொல்கிறார். தம்பிக்காக, அருண்மொழிவர்மனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஜெய்குவேதனி சம்மதிக்கிறார். அவர்கள் திருமணம் நடந்ததா, இல்லையா? என்பதே படத்தின் முடிவு.

‘ஆட்டிஸம்’ பாதித்த இளைஞராக பாலாஜி வாழ்ந்திருக்கிறார். கோணல் வாயில் எப்போதும் எச்சில் ஒழுகியபடி, ஒரு கையை கோணலாக வைத்துக்கொண்டு, ஒரு காலை இழுத்து நடக்கும் அந்த ‘தெய்வா’ கதாபாத்திரத்தில் பாலாஜி, படம் பார்ப்பவர்களை உருக வைத்து விடுகிறார். அக்கா காலில் குத்திய முள்ளை எடுத்து ஆக்ரோஷமாக தீயில் போட்டு கருக்குவது; அக்கா வாங்கி கொடுத்த பிரியாணியை, ‘‘எனக்கு நீ வாங்கி கொடுப்பாய்...உனக்கு யார் வாங்கி கொடுப்பாங்க’’ என்று அக்காவுக்கும் ஊட்டி விடுவது; ‘‘என் பிள்ளைடா நீ’’ என்று உருகும் அக்கா காலில் விழுந்து வணங்குவது...என கதையுடனும், கதாபாத்திரத்துடனும் ஒன்ற வைத்து விடுகிறார்.

அக்காவாக ஜெய்குவேதனி, பொருத்தமான தேர்வு. தம்பியை காணாமல் தவித்துபோய், ‘‘உன்னை காணாமல் துடிச்சிப் போயிட்டேன்டா அக்கா. நான் பெற்றெடுக்காத பிள்ளைடா நீ’’ என்று ஜெய்குவேதனி கலங்குகிற காட்சியில், தியேட்டரில் நிறைய பேர் கண்களை துடைத்துக்கொள்கிறார்கள்.

‘பணம்’ கதாபாத்திரத்தில் அருண்மொழிவர்மன் (டிஸ்கோசாந்தியின் தம்பி) கலக்கி இருக்கிறார். அதட்டி உருட்டாமல் சிரித்தபடி இவர் செய்யும் வில்லத்தனம், படத்துக்கு கூடுதல் பலம். இவருடைய மனைவியாக ஜெனி ஜாஸ்மின் (மீராஜாஸ்மின் அக்கா), பாலாஜி–ஜெய்குவேதனியின் அப்பாவாக ராம்ராஜ், ஜெய்குவேதனியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும் எல்லனாக புதுமுகம் அர்ஜுன் ஆகியோரும் அந்தந்த கதாபாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள்.

விவேகா எழுதிய ‘‘என் தாயே...என் தாயே...’’ பாடல் வரிகள், நெஞ்சை உலுக்கி விடுகிறது. பாடல்களில் இனிமை சேர்த்த எஸ்.பி.அபிஷேக், பின்னணி இசையில் இன்னும் கனம் சேர்த்து இருக்கலாம்.

ஆர்.டி.ஜெயவேல் டைரக்ஷனில், படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. ஜெய்குவேதனியை இரண்டாம் தாரமாக மணப்பதற்காக, ‘பணம்’ ஜோதிடரை மிரட்டி ‘செட் அப்’ செய்தபின், கதை வேகம் பிடிக்கிறது. ஒரு அக்காவுக்கும், தம்பிக்கும் இடையேயான பாசப்பிணைப்பை இந்த அளவுக்கு உயிரோட்டமாக எந்த படத்திலும் காட்டியதில்லை.

படத்தின் முடிவு, சூப்பர். பழைய பாரதிராஜா படம் பார்த்த திருப்தி.


[thanks] தினத்தந்தி [/thanks]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 14 May 2014 - 19:40

மெய்யழகி – ‘தி இந்து’ விமர்சனம்

மிக அபூர்வமான படங்கள் ஆரவாரம் இல்லாமல் வெளியாகின்றன. மெய்யழகியும் அப்படித்தான். ஒப்பனையுமின்றி, ஒப்பேத்தலுமின்றி ஒரு அக்காள் - தம்பியின் பாசப்போராட்டத்தை உயிரோட்டத்துடன் முன்வைத்திருக்கும் படம். படம் முழுவதும் கதாபாத்திரங்களை மறைந்திருந்து படம் பிடித்தமாதிரி மிகைகள் குறைந்த யதார்த்தம்.

தம்பியை ஈன்ற அம்மா மரணத்தைத் தழுவ, தாயின் இடத்தை நிரப்புகிறாள் அக்கா. ஆட்டிசம் குறைபாட்டுடன் வளரும் தம்பியைக் காப்பாற்ற வாழை இலைகளை உணவுவிடுதிகளுக்கு விற்றுத் தம்பியைக் காக்கும் நேர்மையான கிராமத்துப் பெண்மை. திருமணம் செய்துகொண்டால், தம்பியைப் பார்த்துக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என அஞ்சி வாழும் இந்த அபலைப் பெண் மீது அந்த ஊரின் பெரிய மனுசனாக இருக்கும் பண்ணையாருக்குக் காதல். ஆனால் பண்ணையாரின் கார் ஒட்டுநராக இருக்கும் இளைஞனின் காதலை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால் தம்பியால் காதலனை இழக்கவேண்டிய சூழல் வரும்போது அக்காள் என்ன செய்தாள் என்பதுதான் இந்த மெய்யழகியின் வாழ்க்கை..

கதாபாத்திரங்களை மிகையில்லாமல் உருவாகியவிதம், காட்சிகளை நமக்கு அருகாமையில் நிகழ்வதுபோலச் சித்தரித்த விதம், இரண்டிலுமே நேர்த்தி காட்டியிருக்கும் அறிமுக இயக்குனர் ஆர்.டி.ஜெயவேலுவை நம்பிக்கையூட்டும் இளம் இயக்குனர்களில் ஒருவராக அடையாளம் காண முடிகிறது.

பொழுதுபோக்கை நாடிவரும் பெரும்பான்மை ரசிகர்களுக்கு, உணர்ச்சிபூர்வமான ஒரு கதையைச் சொன்னாலும், அதை விறுவிறுப்பாகச் சொல்ல முடியும் என்று திரைக்கதையிலும் தொய்வில்லாத தன்மையைக் கடைசிவரை கையாண்டிருக்கிறார் இயக்குனர். இந்தக்கதையில் நகைச்சுவையைத் தேவையில்லாமல் நுழைக்காமல் இருந்ததற்காகவே இயக்குனரைத் தனியாகப் பாராட்டலாம்.

மெய்யழகியை மணமுடிக்க, தனது மனைவியை வைத்தே காய் நகர்த்தும் பண்ணையாரும், கணவன் சொன்னால் அதில் உண்மை இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பும் அவரது மனைவி கதாபாத்திரமும் கதையை இழுத்துச் செல்வதில் கன கச்சிதம். தீடீர் காதலனாகும் கார் ஓட்டுனர் அர்ஜூன் கதாபாத்திரத்திலும் மிகையில்லை.

முதன்மைக் கதாபாத்திரமாக நடித்தவர்களில் அக்கா ’மெய்யழகியாக’ நடித்திருக்கும் ஆரோகணம் படப்புகழ் ஜெய்குஹானி அருமையான நட்சத்திரத் தேர்வு. துளி ஒப்பனை இல்லாமல் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கணவனைத் திருமணம் செய்துகொண்டால் எல்லாமே கிடைக்கும் என்று சாப்பிட அழைக்கும் பண்ணையாரின் மனைவியிடம் “எச்சில் இலைல சாப்பிடக் கூப்பிடுறீங்களே... நியாயமாக்கா..?” என்று கேட்கும் இடம் உட்படக் கடைசிவரை கண்ணியம் கெடாமல் இருக்கிறது இவரது கதாபாத்திரம்.

இவர்தான் மொத்தக் கதையையும் தோளில் சுமக்கிறார் என்றால், ஆட்டிசம் தம்பியாக நடித்திருக்கும் பாலாஜி, விருதுபெறும் தகுதிக்குரிய நடிப்பை வழங்கியிருக்கிறார். 'பட்டாளம்', 'காதல் சொல்ல வந்தேன்' ஆகிய படங்களில் நடித்திருக்கும் இவர், வாயில் எச்சில் ஒழுகியபடியே கைகளை மடக்கி வைத்துக் கொண்டு.. கால்களைத் தரையில் தேய்த்தபடியே தனது கதாபாத்திரத்தை முழுமையாக உயிரூட்டியிருக்கிறார். ஒரு காட்சியில் கூட மாறுதலைக் காட்டாமல் கடைசி வரையிலும் நடிப்பில் இவர் காட்டியிருக்கும் கவனத்தையும், அர்ப்பணிப்பையும், படம் பார்த்தால் மட்டுமே உணரமுடியும்.

’எம்பேர நானே மறந்தேனடா உன்ன நெனச்சு’ பாடல் உட்பட அபிஷேக்கின் இசையில் அமைந்த மூன்று பாடல்களுமே கதையைத் தூக்கிப்பிடிக்கும் பாடல்கள். படத்தில் இருக்கும் சின்னச்சின்ன குறைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் மெய்யழகி முழுமையான படம்.

இந்து டாக்கீஸ் தீர்ப்பு

கையாண்ட கதையை அழுத்தமாகவும், யதார்த்தமாகவும் சொல்ல முயன்று வெற்றிபெற்றது, தொய்வில்லாத திரைக்கதை, கதாபாத்திரங்களாக நடித்தவர்களின் இயல்பான நடிப்பு. ஆகிய காரணங்கள் மெய்யழகியை அனைவரும் பார்க்கத் தகுதியான படமாக்கியிருக்கிறது.




 மெய்யழகி - மிக சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed 14 May 2014 - 20:03

நல்ல படம் ரொம்ப நாள் ஓடாதே அண்ணா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 14 May 2014 - 20:19

M.M.SENTHIL wrote:[link="/t110259-topic#1063612"]நல்ல படம் ரொம்ப நாள் ஓடாதே அண்ணா.

படம் வந்ததே யாருக்கும் தெரியாது செந்தில்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed 14 May 2014 - 20:26

சிவா wrote:[link="/t110259-topic#1063622"]
M.M.SENTHIL wrote:[link="/t110259-topic#1063612"]நல்ல படம் ரொம்ப நாள் ஓடாதே அண்ணா.

படம் வந்ததே யாருக்கும் தெரியாது செந்தில்!

நிஜமாய் எனக்கே இன்றுதான் தெரியும் அண்ணா. அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக