புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10 
17 Posts - 4%
prajai
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10 
9 Posts - 2%
jairam
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_m10இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டறக் கலந்த பேஸ்புக் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 9:55 pm

இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Go61UcSRpOOvmaEFRNvH+E_1399202302

கடந்த சில ஆண்டுகளாக, அபரிதமான வளர்ச்சி பெற்று, பேஸ்புக், அனைவரின் வாழ்க்கையோடு இணைந்து இயங்கி வருகிறது. பல பயனாளர்கள், இது ஓய்ந்து போகக் கூடாதா என்று எண்ணி வந்தாலும், எந்த வகையிலும் இது நம்மை விட்டுப் போகாது என்ற நிலையில் தான், பேஸ்புக் செயல்பாடும் அதன் பயனாளர்களும் உள்ளனர். ஏனென்றால், மனிதனின் பலவகையான தேவைகளை அது நிறைவு செய்கிறது.

நம்மை உற்சாகப்படுத்துகிறது, எண்ணங்களைச் செலுத்துகிறது, எரிச்சலையும் தருகிறது, மனச்சோர்வையும் அளிக்கிறது - ஆம் அனைத்து வகையான உணர்வுகளையும் தருகிறது. பேஸ்புக் ஒரு மனிதனின் உள்ள உணர்வோட்டங்களை மாற்றி அமைக்கிறது. இது மனிதனை உற்சாகப்படுத்துகிறதா? இல்லை, ஊனப்படுத்துகிறதா என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதைத்தான் இன்றைய சமூக உளவியலாளர்கள், பேஸ்புக் குறித்து கூறி வருகின்றனர். தங்கள் ஆய்வையும் இந்த காரணங்களைச் சுற்றியே அமைத்துள்ளனர். இங்கு பேஸ்புக் நமக்கு எவ்வாறு நல்லதைச் செய்திடும் எனப் பார்க்கலாம்.

1. நாம் அறியப்பட வேண்டும் என்ற உணர்வு: பள்ளிக் கூடங்களில் பயிலும்போது, நாம் விளையாடுகிறோமோ இல்லையோ, விளையாட்டு அணியில் நாம் இடம் பெற வேண்டும். நாம் அடையாளம் காணப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த உணர்வு நமக்கு அனைத்து வயதிலும் ஏற்படுகிறது. இந்த எண்ணத்திற்கான வடிகாலை பேஸ்புக் நமக்குத் தருகிறது. இதனால் தான், பேஸ்புக்கினை விட்டு விலகி இருப்போம் என்று திட்டமிடுபவர்கள் கூட, ஒரு நாளைக்கு மேல் விலகி இருக்காமல், மீண்டும் திரும்புகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2. மகிழ்ச்சி மற்றும் துக்கம் தரும் பேஸ்புக்: அதிக நேரம் பேஸ்புக்கில் செலவழிப்போர், மகிழ்ச்சிக்குப் பதிலாக துக்கமே அடைகின்றனர். ஏனென்றால், மற்றவர்கள் அளவிற்கு நாம் பிரபலம் ஆகவில்லையே என்ற கவலைதான். சிறுவன் ஒருவன் தன்னை ஒத்த வயதுடைய நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு மகிழ்ச்சியுடன் செல்கிறான். ஆனால், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, தன் நண்பனை மற்றவர்கள் தொடர்ந்து வாழ்த்தி, பரிசுகளை வழங்கும்போது, பொறாமைக் குணம் அவனிடம் ஏற்படும். மகிழ்ச்சி சற்று குறையும். இன்னொருவருடைய வாழ்க்கை தன்னுடையதைக் காட்டிலும் நன்றாக இருக்கிறது என்ற பொறாமை அல்லது ஆற்றாமை ஒவ்வொருவருக்கும் பல நேரங்களில் ஏற்படுகிறது. பேஸ்புக்கில் இருக்கும்போது இது அதிகமாகவே ஏற்படுகிறது.

இந்த கருத்தினை சிலர் மறுக்கிறார்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது,பேஸ்புக்கில் நீங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதன் அடிப்படையிலேயே அமைகிறது. பேஸ்புக் பெரும்பாலான நேரங்களில், நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான வழிகளையும் தருகிறது. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாத இளைஞர்களைக் காட்டிலும், இவற்றைப் பயன்படுத்துவோர், ஏறத்தாழ 54% பேர், மகிழ்ச்சியாகவே உள்ளனர். அது மட்டுமின்றி, நம் எண்ணங்களைச் சீரமைக்கவும், வாழ்க்கையில் முன்னேற்றமடையும் வழிகளைத் தருவதிலும், பேஸ்புக் இயங்குகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

3. தன்னைத்தானே ரசிக்கும் தன்மை: தன்னைத்தானே பார்த்துக் கொண்டு, தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டு மகிழ்ச்சி அடையும் குணம் பலரிடம் இருக்கிறது. மற்றவர்களிடம் சிறிதளவாவது உள்ளது. இவர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை பேஸ்புக் தருகிறது. வழிகளையும் அமைத்து வழங்குகிறது.

4. ஒதுங்க நினைப்பவர்களுக்கு இடம்: மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றாமல் ஒதுங்குபவர்களுக்கு, ஒரு சமுதாயத்தினைத் தரும் வழிகளை பேஸ்புக் கொண்டுள்ளது. சமுதாயத்தினைக் கண்டு வெட்கப்பட்டு ஒதுங்க எண்ணுபவர்கள், இங்கு தங்களுக்குப் பிடித்த நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, தங்களுக்கென ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

5. உள்முகச் சிந்தனை: நம்மில் பலரும் உள்முகச் சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறோம் என்று உளவியலாளர்கள் கூறுவார்கள். அப்படி இருப்பவர்களில் சிலர் ஒத்துக் கொள்வார்கள். பலர் இல்லவே இல்லை என சாதிப்பார்கள். இந்த குணம் பேஸ்புக்கில் நம் பதிவுகளில் அதிகம் வெளிப்படுகிறது. இந்த வடிகால், அவர்களின் மனதைச் சாந்தப்படுத்தி, வெற்றி பெற்று விட்டதாக எண்ண வைக்கிறது. இந்த வகையில் பேஸ்புக் நல்லதொரு சேவையினை வழங்குகிறது என உளவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலே சொன்ன கருத்துக்களைக் காட்டிலும், இன்னும் பல வழிகளில் பேஸ்புக் நம் வாழ்வோடு இணைந்ததாகவே உள்ளது. இணையம் பக்கமே வராமல், பேஸ்புக் அல்லது அது போன்ற சமுதாய தளங்கள் குறித்து தெரியாமல், வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இணையம் அறிந்தவர்கள், பேஸ்புக்கில் எப்படியாவது இணைந்து அதில் இருந்து விலகாமலேயே உள்ளனர் என்பதுதான் உண்மை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 07, 2014 10:07 pm

100% உண்மை உங்கள் பதிவு...
பகிர்வுக்கு நன்றி...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 07, 2014 10:17 pm

இரண்டறக் கலந்த பேஸ்புக் ! 103459460 நிதர்சனமான உண்மை



கிருஷ்ணா
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 07, 2014 10:44 pm

krishnaamma wrote:ஆனால், இணையம் அறிந்தவர்கள், பேஸ்புக்கில் எப்படியாவது இணைந்து அதில் இருந்து விலகாமலேயே உள்ளனர் என்பதுதான் உண்மை.
முற்றிலும் உண்மை.....
 இரண்டறக் கலந்த பேஸ்புக் ! 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 08, 2014 2:17 am

விமந்தனி wrote:[link="/t110073-topic#1062106"]
krishnaamma wrote:ஆனால், இணையம் அறிந்தவர்கள், பேஸ்புக்கில் எப்படியாவது இணைந்து அதில் இருந்து விலகாமலேயே உள்ளனர் என்பதுதான் உண்மை.
முற்றிலும் உண்மை.....
 இரண்டறக் கலந்த பேஸ்புக் ! 103459460

இரண்டற கலந்தது--உங்கள்
பதிவுகள் 31
மதிப்பீடுகள் 13

ரமணியன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 9:14 am

முகநூல்:

தூக்கத்தைக் கெடுக்கும்,
நட்பைக் கலைக்கும்,
குடும்பத்தை பிரிக்கும்,
அருகில் இருக்கும் அன்பை மறந்து
மாயை அன்பைத் தேடித் தரும்!
அது நிலையானதல்ல என்று
மனம் நினைக்க மறுக்கும்!

முகநூலில் அதிக நேரம் இணைந்திருப்பது ஆரோக்கியமானதல்ல.

பயனுள்ள கட்டுரை அக்கா!




இரண்டறக் கலந்த பேஸ்புக் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Thu May 08, 2014 7:49 pm

நான் இதுவரை பேஸ்புக் போனதில்லை பேஸ்புக்கைப்
பற்றி நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.
நன்றி அம்மா தேவையான பதிவு

mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri May 09, 2014 7:07 am

உங்கள்  கருத்துக்களை  நானும்  வரவேற்கிறேன் !  நன்றி !     சூப்பருங்க  எம்கேஆர்சாந்தாராம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 09, 2014 6:13 pm

நன்றி நண்பர்களே ! நம் வீட்டு குழந்தைகள் மேலேயும் ஒரு கண் வைத்திருங்கள் இந்த பாழாய் போன Face Book அவர்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் கெடுக்காமல் இருக்க புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 09, 2014 6:25 pm

எல்லோரும் பேஸ்புக் பேஸ்புக்னு சொல்றாங்களேனு நானும் அதை ஒப்பன் செய்தேன்மா.... ஆனா ரொம்ப நாள் உபயோகிக்காமலே இருந்தேன்... இந்த சிவா தம்பி தான் முகநூல் காணொளி என பதிவு போடவும் ஆர்வம் வந்து நானும் உபயோகிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா தினமும் போக மாட்டேன் என்றாவது ஒரு நாள் லாகின் செய்து பார்ர்ப்பேன்.

பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக