புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
1 Post - 1%
Rutu
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pradepa
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
18 Posts - 2%
prajai
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Rutu
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_m10இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை' - Page 3 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குநர் பாண்டியராஜனின் 'தூக்கம் வராதபோது சிந்தித்தவை'


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:01 am

First topic message reminder :


இது அறிவுரை அல்ல. உங்களைப் போல் நானும் கற்றுக் கொண்டு வரும் புத்திக் கொள்முதல். இரவு உறங்கும் முன் நாளைய பொழுது இன்றை விட நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன். காலையில் ஒரு தொலைபேசி அலாரமானது அலறியது. எதிர்முனைக் கேள்விகள், அதிர்ச்சிகள், உடனே பதில் முடிவு எடுக்க முடியாத வில்லங்க விஷயங்கள், பயம், நடுக்கம்.ஆனால், அந்தத் தொலைபேசி அலாரம்தான் என்னை எழுப்பி விட்டதுமல்லாமல் உசுப்பியும் விட்டது. சூரியனுக்கு முன் சுறுசுறுப்புடன் உழைக்கத் தொடங்கினேன்.

நான் ஏதாவது திரைப்படம் பார்க்கும்போது ஒரு முடிவுடன் செல்வேன். இது நான் பார்க்க வேண்டிய படம். நான் இயக்க வேண்டிய, நடிக்க வேண்டிய படம் வேறு. என் கனவுகள் வேறு, இப்போதைய பிழைப்பு வேறு.

முன்பெல்லாம் யாரைச் சந்தித்தாலும் அவரிடமுள்ள நல்ல விஷயங்கள், திறமைகள் ஆகியவற்றைக் கவனிப்பதோடு எனக்கு உடன்படாத குணாதிசயங்கள் இருந்தால் அதைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றியே சிந்தித்து, அவரை விட நான் நல்லவன் என்ற தம் பட்டம் அடித்துப் பல நேரங்களை வீணடித்துள்ளேன். தற்போதைய புத்திக் கொள்முதலால் இப்போதைக்கு என் நம்பிக்கை நூறு சதவீதம் நல்லவனாக யாருமில்லை, நானுமில்லை, எவரும் இருக்க முடியாது.

எதிர்பார்ப்புகள் தான் நம் தினசரி எதிரி. எதிர்பார்ப்பு இல்லையென்றால் நம் சந்தோஷப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். பிரச்சினையின் அளவை வைத்துதான் வெற்றி! வெற்றி பெரிதாக வரவேண்டுமென்று ஆசைப்படும் நாம்...பிரச்சினை சிறியதாக இருந்தாலே சங்கடப் படுவது எந்தவிதத்தில் நியாயம்© பிரச்சினை இல்லாத மனிதன் இறந்தவன் ஆகிறான். நாம் அதற்காகவா ஆசைப்படுகிறோம் ! பிரச்சினைகளைப் பட்டியல் போடுங்கள். தீரும் பிரச்சினை தீராதப் பிரச்சினை என்று பிரித்துப் பாருங்கள். உங்களுக்கே சிரிப்பு வரும். அதே போல் உங்களுக்கு வந்திருக்கும் பிரச்சினை இது வரை உலகிலேயே யாருக்கும் வந்ததில்லையா© என்று யோசித்துப் பாருங்கள். பிரச்சினையோடு போரிடத் தொடங்கி விடுவீர்கள்.

வழக்காடு மன்றத்தில் வாதம் நடப்பதுபோல். நம் மனதுக்குள்ளும் வாதம்- மன நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுத்தால் நிச்சயம் வாழ்க்கையில் வழுக்கலே இருக்காது. முகம் காட்டும் கண்ணாடி முன் நம் அழகை சரி செய்வது போல் அகம் காட்டும் கண்ணாடி இருப்பதாக நினைத்து நம் மன அழுக்கை அகற்றுவோம்.

இன்று நேற்று அல்ல- உங்களை விட நூறு மடங்கு நல்ல இதயம் இல்லாதவன், உங்களை விட நூறு மடங்கு அறிவு இல்லாதவன், உங்களை விட நூறு மடங்கு மனிதநேயம் இல்லாதவன், இந்த சமுதாயத்தில் உங்களை விட நூறு மடங்குக்கு மேல் மதிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதற்காக வருந்தியிருப்பீர்கள். இது இன்று நேற்று அல்ல, வரலாறு தோன்றிய காலத்திலிருந்தே இப்படி ஓர் அநியாயம் இந்த உலகில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதை நினைத்து நம் நேர்மையையும், திறமையையும் ஒப்பிட்டு வேதனைப் படக்கூடாது. ஏனென்றால் இதையெல்லாம் பிரித்து. விபத்துக்களை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அது ஆபத்தில்தான் முடியும். அனுபவங்கள் அதிகம் இருந்தால் தான் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். அதே நேரத்தில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டுமென்றால், சில கெட்ட அனுபவங்களைச் சந்தித்திருக்க வேண்டும்.

எந்த மனிதனைச் சந்தித்தாலும் அவரைப் பற்றி இரண்டு வார்த்தை பாராட்டிப் பேசுங்கள். பிறகு நீங்கள் எதைப் பேசினாலும் அவர் தலையாட்டுவார். ஒருவர் முன்பைவிட ஒல்லியாக இருந்தால், "எப்படி உடம்பை சிலிம்மா வெச்சிருக்கீங்க," என்றும் கேட்கலாம். அதே நேரத்தில், "என்ன உடம்பு இப்படி வீக்கா இருக்கு," என்றும் காயப்படுத்தலாம். மனிதனை மனிதன் காயப் படுத்தாமல் இருப்பது தான் மிகப்பெரிய புண்ணியம் என்று வாழத்துவங்கினால் "புகழ்" நம்மை நோக்கிப் "புயல்" வேகத்தில் வரும்.

கஷ்டப்பட்டவர்கள் எல்லாம் வெற்றி பெற்றதில்லை. ஆனால் வெற்றி பெற்ற அனைவரும் கஷ்டப்பட்டவர்கள் என்று "பென்ஜமின் டிசிலெரி" என்பவரின் கருத்து. வெற்றியின் விதையே தேடுதல்தான். எல்லோரிடமும் தனித்தன்மை இருக்கும். அதைத் தேட வேண்டும்.இப்படி இருந்தால் வெற்றி கிட்டும் என்றும் விதிமுறையில்லை. ஆனால் மனதுக்குள் ஒரு விதிமுறை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் சொல்லி வரக் கூடாது. அது தானே வழக்கத்தில் இருக்க வேண்டும். மற்றவர்களின் அறிவை நீ அறிந்தாலே உன் அறிவு கூர்மையாகும். சிலநேரம் அக்கிரமங்களைக் கண்டு கொள்ளாமல் போவது கூட ஒரு பாவம் தான். உன் நம்பிக்கையை மற்றவர்களுக்குச் சொல், திணிக்காதே.

மற்றர்களின் நம்பிக்கையைக் கவனி, புறக்கணிக்காதே. பிரச்சினைகளின் வடிவம் தான் மாறுமே தவிர, பிரச்சினை தீராது. எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டால் மரண பயம் என்று ஒன்று வரும். அதற்குப் பதிலே கிடையாது. ஆனால் நாம் வேறு பிரச்சினைகளுக்கு சிந்தனையையும் செயலையும் உபயோகிப்பதால் மரண பயம் பற்றி யோசிக்காமல் இருக்கிறோம். மரணத்திற்கு மருந்து கிடையாது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:05 am

விசேஷங்களுக்குப் போகும்போ என்ன பரிசுப் பொருள் வாங்கி போவது - இதை அழைப்பிதழ் வந்த உடனே யோசிக்க வேண்டும். இல்லையென்றால் விழாக்களுக்குப் புறப்படும் முன் ஏற்படும் டென்ஷன் இருக்கிறதே - அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அழைப்பிதழ் வந்தவுடன் அவருக்கும் நமக்கும் உள்ள நெருக்கம்...இப்போதைய நமது பொருளாதார நிலை.....இதையெல்லாம் கணக்குப் போட வேண்டும்.

என்னைப் பொறுத்த வரை நான் அழைப்பிதழைப் பார்த்தவுடன் இதற்கு மலர் கொத்து, அன்று எனக்கு முக்கிய வேலை இருந்து போக முடியாமல் போனால் அதற்கு வாழ்த்துத் தந்தி, பரிசுப்பொருள் என்றால் எவ்வளவு விலை என்பதை அழைப்பிதழ் கவரிலேயே எழுதிவிடுவேன்.

மேலும் என்ன பரிசுப்பொருள் கொடுக்கப் போகிறோம் என்பதைக் கொஞ்சம் யோசித்துக் கொடுத்தால் அழைப்பிதழ் அனுப்பியவர் மனதில் அதிகம் இடம் பிடிக்கலாம்.

உதாரணத்திற்கு, அவர் எப்போதோ உங்களிடம் சொன்ன விஷயத்தை ஞாபகம் வைத்து அது நினைவுக்கு வரும்படி பரிசுப் பொருள் கொடுத்தால், அவர் எப்போதும் உங்களை மனதில் ஞாபகம் வைத்திருப்பார். கல்யாணப் பெண்ணுக்குப் பரிசு கொடுக்கும் போது, ©சாவிக் கொத்து© கொடுங்கள். இனி தன் கையில்தான் இந்தக் குடும்பப் பொறுப்பு என்று புரிந்து சந்தோஷப்படுவார்.

மாப்பிள்ளைக்கு, குழந்தை தாலாட்டும் தொட்டில் கொடுத்து பாருங்கள். அப்போதே தந்தையாகிவிட்ட சந்தோஷம் முகத்தில் தாண்டவமாடும். புதுமனைப் புகுவிழா என்றால் வீட்டைச் சுத்தம் செய்யும் மிஷின் வாங்கிக் கொடுங்கள். எப்போதும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் சிம்பாலிக் அவர்களை சிலிர்க்க வைக்கும்.

டேப் ரிக்கார்டரில் பாடல் கேட்கும் ஆர்வம் உள்ள நாம், அந்தப் படப் பாடல் கேசட் முடிந்தவுடன் மறுபடியும் அந்தப் பட கேசட்டைப் பெட்டிக்குள் வைக்கிறோமா என்றால் , பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம் அதே சமயம் உடனே கேட்க விரும்பும் படப் பாடல் கேசட் தேடும்போது கிடைக்கவில்லையென்றால் வரும் கோபத்தின் அளவு இருக்கிறதே.... அடேங்கப்பா !

இதற்கு ஒரு யோசனை பாடல் கேட்டு முடிந்தவுடன் அடுத்தப் பட பாடல் கேசட்டை ஆர்வத்துடன் எடுக்கும் முன், கேட்டு முடிந்த பாடல் கேசட்டை அதன் பெட்டிக்குள் வைத்து விட வேண்டும். பிறகு அடுத்த பாடல் பெட்டியைப் பிரிக்க ஆரம்பித்தால் இந்த கேசட் குழப்பம் தவிர்க்கப்படும். இதே போல, சில பைல்களைத் தேடும் போது வீட்டில் ரகளையே நடக்கும்.

டெலிபோன் டைரியில் எப்படி நம்பர்களைக் குறித்து வைத்துக் கொள்கிறோமோ அதேபோல் ஒரு டைரியில் எந்த பைல் எந்தப் பெட்டியில் இருக்கிறது என்று குறித்து வைத்துக் கொண்டால் வீட்டுக்குள்ளேயே ஒரு குட்டி அலுவலகம் நடக்கும் உணர்வு தோன்றும்.

உழைப்பு என்பது உடல் ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், இருக்கிறது. உடல் உழைப்புடன் அறிவும் கலந்து விட்டால் வெற்றியின் உச்சத்தைத் தொட்டு விடலாம். இதில் தன்னிலை உணருதல் மிக முக்கியம். தன்னால் இந்த வேலையைச் செய்ய முடியுமா© என்று முடிவெடுப்பது மிக முக்கியம்.

கோடரியால் மரத்தை வெட்டுவது பலம். மரம் வெட்டும் முன்பே கோடரியைக் கூர்தீட்டுவது அறிவு. உடல் பலம் உள்ள எல்லோரிடமும் அறிவு அதிகமிருக்கும் என்று நினைப்பது தவறு. ஆனால் அறிவாளிகள் தனக்கு என்ன தெரியும் என்பதை விட, என்ன தெரியாது என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்து செயல்படுவார்கள். இப்போதும் எப்போதும் எனக்கு மனப்பாடம் ©ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:05 am

இரண்டு குடும்பத்துக்கு இடையே சண்டை, இரண்டு அணியினர்க்கு இடையே பிரச்சினை. முதலாளிக்கும் தொழிலாளர்களுக்கும் கோரிக்கையில் குழப்பம். இதற்கெல்லாம் சமரசப் பேச்சுவார்த்தை நடப்பதைப் பலரும் பார்த்திருப்போம். முதல் சுற்றிலேயே சமரசம் ஏற்படும் பேச்சுவார்த்தையும் உண்டு. பேச்சு வார்த்தையால் பிரச்சினை பெரிதானதும் உண்டு.

கொஞ்சம் யோசித்து முடிவெடுப்பவர்கள் முதலில் தங்களது கோரிக்கைகளைப் பட்டியலிட்டு எது நமக்கு மிக முக்கியமானது, எதை விட்டு கொடுத்தால் நமக்குப் பெரிய பாதிப்பு வராது என்று திட்டமிடுவார்கள். இது வெற்றிக்கு பெரிய வித்து.

என்னுடைய கோரிக்கையில் ஒன்றைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் ©அலை எப்ப ஓயுரது, தலை எப்ப முழுகிறது©© என்ற பழமொழி பழக்கமான மொழியாகிவிடும். விட்டுக் கொடுக்கப் பழகிக் கொள்ளுங்கள். சண்டை, பிரச்சினை, மோதல் இதெல்லாம் நம்மை விட்டு ஓடியே போய்விடும்.

சிலருக்கு தொலைபேசி பில் வந்தவுடன் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து விடும். முதலில் தொலைபேசி நமக்குச் செய்கிற நன்மைகளை எண்ணி பாருங்கள். மறைமுகமாமக தொலைபேசி நமக்கு சம்பாதித்துத் தருகிறது என்பதை மறந்து விடுகிறோம்.

பல கோடி வியாபாரங்களைக் கூட தொலைபேசி முடித்துவிடும். அவசரச் செய்திகள், பாராட்டுகள், வாழ்த்துக்கள் போன்ற வேலைகளைத் தொலைபேசி மூலம் நாம் முடிக்கும் போது நம்மை டபுள் ஆக்‌ஷன்- இரட்டை வேடம் மாதிரி அல்லவா மாற்றிவிடுகிறது © பக்கத்து நாட்டைப் பக்கத்து வீடாக சுருக்குகிறது. இந்த ...©டிரிங்.....டிரிங்...© ஓசை இல்லையென்றால் காதல் கூட கொஞ்சம் குறைந்து போயிருக்கும்.

நாம் சந்திக்க வேண்டிய நபர் வீட்டில் இருக்கிறாரா© என்று தெரிந்து கொள்ள தொலைபேசி இல்லையென்றால் எவ்வளவு தூம் வீணாகப் போய்வர வேண்டும். அநாவசிய விஷயங்களுக்கும் போனைப் பயன்படுத்தாதீர்கள். உங்கள் வீட்டுப் போன் கட் ஆனால், இந்த உலக வாழ்க்கையில் நீங்கள் பாதி ஒதுங்கி விட்டீர்கள் என்று அர்த்தமாகிவிடும். போன் வாங்குவது பெரிதல்ல- உங்கள் நம்பர் எப்போதும் ஒரே நம்பராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் தன் தொலைபேசி துண்டிக்கப்படாமல் வாழ்கிறார் என்றால், அவர் வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ்கிறார் என்று அர்த்தம்.

பலர் குளிப்பதை ஒரு பெரிய வேலையாகக் கருதி, தள்ளிப் போட்டுக் கொண்டே ஒரு வாரம் வரை கூட குளிக்காதவர்களும் உண்டு. ஒரு விஷயம் ! உங்களை வேலைக்குள் தள்ளி விடுவதே குளியல்தான் . குளித்து முடித்து எந்த வேலைக்குப் போகப் போகிறோம் என்ற கேள்விக்கு நீங்கள் குளிக்க ஆரம்பித்தவுடன் தானாகவே பதில் கிடைத்து விடும். புயல் போல் புறப்பட்டு விடுவீர்கள்.

மேலும் குளிக்கும்போது தோன்றும் யோசனைகள், திட்டங்கள் பெரும்பாலும் பயனுள்ளதாகவும், நிறைவேறக் கூடியதாகவும் இருக்கும். குளியலைத் தள்ளிப் போட்டால் நீங்கள் சோம்பேறி லிஸ்டில் சேர்ந்து விட்டீர்கள் என்று அர்த்தம். உற்சாகம் குறையும் போது குளித்துப் பாருங்கள்- குளியலின் மகிமை தெரியும்.

இரண்டு நாள் ஷேவிங் செய்யாமல் இருந்தால் நீங்கள் ஏதோ துக்கத்தில் இருப்பது போல் உங்களுக்கே தோன்றும். தாடி பொருந்தியவர்களுக்கு இது பொருந்தாது. அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி, ஷேவிங், குளியல் என்று வேலைக்கு வெளியேறுங்கள். உங்கள் பேங்க் சேவிங் அக்கவுண்ட் கூடும்.

சிலர் தன்னிடம் இல்லாத ஏதோ ஒரு திறமையைச் சுட்டிக்காட்டி, அது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால் நான் பெரியாளாகிவிடுவேன் என்று புலம்புவார்கள். குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியவில்லை என்றால், அது ஒன்றுதான் வெற்றிக்கு முட்டுக்கட்டை என்று நினைப்பார்கள்.

ஒரு விஷயம், நீங்கள் எதில் சிறந்தவர் என்று தேர்ந்தெடுப்பது தான் அறிவு கூர்மை. விதோவன் என்ற மாபெரும் இசை மேதைக்குக் காது சரிவரக் கேட்காது என்ற செய்தி படித்துப் பதறிப் போனேன். உங்கள் குறைகளைத் தெரிந்து, களைய ஆரம்பிக்கும் போதே உங்கள் நிறைகளை மெருகூட்ட ஆரம்பிக்கிறீர்கள். துவண்ட நேரங்களில் நீங்கள் இதுவரை அடைந்த வெற்றிகளை எண்ணிப் பாருங்கள்- துள்ளி எழுவீர்கள்.

வெற்றிக்கு இதுதான் பாதை என்று தெரிந்துவிட்டால் எல்லாரும் அதே பாதையில் பயணம் செய்யத் துவங்கி விடுவார்கள். தன்னம்பிக்கை அடைய பணம் காசு செலவு செய்ய வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக யோசியுங்கள்! பெருமை உங்கள் வீடு தேடி வந்து சேரும் !

வீடுகளில் கதவுகளைத் திறந்து விட்டு, பின் மூடாமல் விட்டு விட்டால் கதவு ©டமார்© என்று அடிக்கும் சத்தம் இருக்கிறதே - வீடே இடிந்து விடும்போல் இருக்கும். கதவு ©படால்© என்று மூடாமல் இருக்க ஒரு புஷ் பொருத்துவோம். அதைச் சரியாகப் பராமரிக்காமல் இருப்பதால் தான் இந்த ©டமார்© இடி. புஷ் இல்லாத போது ஒரு துண்டுப் பேப்பவரை மடித்து வைத்தால் கூட இதைத் தவிர்க்கலாம்.

சில நேரங்களில் கதவு பின்னாலிருந்து ©தடால்© என்று அடிப்பதால், தலையில் அடிபட்டு பெரிய விபத்து கூட நேரலாம். கதவிடுக்கில் கால் மாட்டினால் கூட வேதனை தானே ! ஜன்னலும் இப்படித்தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:06 am

வீட்டின் தரையில் சிமெண்ட் அல்லது டைல்ஸ் ஒட்டி அழகு பார்க்கும் நாம், அங்கே போடும் நாற்காலியால் தரை சேதப்படாமல் இருக்க யோசிப்பதில்லை. உங்கள் காலுக்கு செருப்பு அணிந்து கொள்வது போல வீட்டில் போடும் நாற்காலிகளுக்கும் புஷ் போடுங்கள். தரையும் பாதிக்காது, உங்கள் காலும் பாதிக்காது.

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்பது இப்போது பல விஷயங்களுக்குத் தேவைப் படுகிறது. பாஸ்போர்ட், அடையாள அட்டை, பரீட்சைக்கு ஹால் டிக்கெட், கிரெடிட் கார்டு, பேங் அக்கவுண்ட் இப்படிப் பலவற்றிற்குத் தேவைப்படுகிறது. இது இல்லாத போது இச்சிறிய போட்டாவை எடுக்கப் பலர் காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல் குதித்துக் கொண்டு, ©சீக்கிரம்© - சீக்கிரம்- சீக்கிரம்©என்று போட்டோ கடைக் காரரை நச்சரிப்பார்கள்.

இப்போதெல்லாம் புகைப்படத் துறையில் பல முன்னேற்றங்கள் வந்து விட்டன. போட்டோ எடுத்த ஐந்து நிமிடத்தில் எத்தனை பிரிண்ட் வேண்டுமானாலும் எடுத்துத் தருகிறார்கள். நாம் திடீரென்று போட்டோ எடுக்க வேண்டிய கட்டத்தில், தாடியுடன் இருக்கிறோமா, கொஞ்சம் டல்லாக இருக்கிறோமா© என்று பல குழப்பங்கள் வரலாம். எப்போதும் நம்மிடம் குறைந்தது பத்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை ரெடியாக வைத்திருங்கள். டென்ஷனே இல்லை.

இதேபோல் சிலர் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்து விட்டு எப்போது வரும் என்று தவித்துக் கொண்டிருப்பார்கள். எப்போதாவது வெளிநாடு செல்வோம் என்ற கனவுடையவர்கள் உடனே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்ய வேண்டும். பாஸ்போர்ட் இருந்தால் தான் சில உயர் படிப்புகளுக்குத் தேர்வே எழுத முடியும் என்பது சிலருக்குத் தெரியாது.

எப்போதாவது, என்னவோ அற்புதம் நடக்கும் என்ற நம்பிக்கையில்தாம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெளிநாடு செல்ல அதிர்ஷ்டம் வந்து கதவைத் தட்டும் போது ©பாஸ்போர்ட்© என்கிற சாவி உங்கள் கையில் இருந்தால் தான் நீங்கள் வெளிநாடு செல்ல முடியும். ஒரு விஷயம், பாஸ்போர்ட் என்பது உங்கள் உடன் பிறவா பிறப்பு.

நம் வீடுகளில் சுவர் மூலையில் ஒட்டடையைப் பார்த்தவுடன் தான் ஒட்டடை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. சில சந்தோஷ குடும்பங்களைக் கவனித்திருக்கிறேன். அட்டவணை ஒன்று வைத்திருக்கிறார்கள். அதன்படி ஒட்டடை இருக்கிறதோ, இல்லையோ - இத்தனை நாளைக்கு ஒரு முறை ஒட்டடை அடிக்க வேண்டும், விளக்குகளைச் சுத்தம் செயய வேண்டும், காருக்கு ஆயில் மாற்ற வேண்டும். இப்படித் தயாரித்த பட்டியலை, குடும்பத்தில் யார், யார் என்னென்ன வேலை செய்வது என்பதைப் பசங்கள் வரைக்கும் பிரித்துக் கொடுத்து விடுகிறார்கள்.

அதனால் தான் வீடுகள் எப்போதும்©பளீச்© சென இருக்கின்றன. வீட்டில் உள்ளவர்களும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். இது என்ன நம்மால் முடியாததா© நிச்சயம் முடியும். இப்போதே பட்டியலைத் தயாரியுங்கள். ஒட்டடை அடிக்கத் துவங்கினால் ஒட்டகத்தையும் ஒரே தவணையில் வாங்கலாம்.

நம் நண்பர் ஒருவரை ஓட்டலுக்கு அழைத்துச் செல்கிறோம் என்றால் முதலில் நம் பாக்கெட் நிறைவாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், ஆர்டர் செய்யும் போது உங்களுக்குப் பிடித்தது என்ன வென்று அறிந்து ஆர்டர் செய்ய வேண்டும்.

அதைவிட ஒரு மடங்கு மேலே யோசித்தால் , சர்வரிடமே, ©ஐயா! இவர் என் உயிர் நண்பர், விருந்த கொடுக்க அழைத்து வந்திருக்கிறேன். அவர் உங்களையும் உங்கள் ஓட்டலையும் பாராட்டும்படி அசத்துங்கள்©, என்று கூறி விட்டால் போதும். உங்கள் நண்பர் உச்சி குளிந்து விடுவார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:06 am

சில நண்பர்கள் இருக்கிறாகள். சர்வர் பில் கொண்டு வரும் நேரம் பார்த்து கை கழுவப் போய்விடுவார்கள் . பிறகு வந்த ©நீங்கள் ஏன் பில் கொடுத்தீர்கள்©© என்று போலியாக சண்டை போடுவார்கள். உபசரிப்பில் உண்மை இருந்தால், ருசியை விட அன்பும், நட்பும் பலப்படும்.

ஒரு பொருளை எடுத்துப் பயன்படுத்தி விட்டு, அப்பொருளை எடுத்த இடத்திலேயே வைக்கிறோமா© என்று நம்மை நாமே கேட்டால் பாதிப் பேரிடம் இருந்து வரும் பதில் ©இல்லை© என்று தான் இருக்கும். சாவியை எடுத்த இடத்திலேயே வைக்காமல் அதைத் தேடி அவதிப் படுவதைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம்.

இப்போதெல்லாம் சிலர் தங்களது செல்போனை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் இன்னொருவரின் போனை வாங்கி ; தங்கள் நம்பருக்குப் போட்ட எங்கே போன் சத்தம் அழுகிறது© என்று கண்டுபிடிக்கிறார்கள். பல் துலக்கும் பிரஷ்ஷிலிருந்த இப்பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் நம் ஞாபக சக்தி மேல் நமக்குள்ள நம்பிக்கை வைக்கலாம் ; ஆனால் அதீத நம்பிக்கை கூடாது. கார் சாவி இந்த இடத்தில் தான் வைக்க வேண்டும் ; சைக்கிளைப் பூட்டி இந்த இடத்தில் தான் சாவியை வைக்க வேண்டும் என்று நிர்ணயித்தால், எதுவும் தொலைந்து போகாது. மூளையைப் போட்டுத் துளைக்கவும் வேண்டாம். ஞாபகமறதியே இல்லாதவர்கள் இருப்பதாக என் ஞாபகத்தில் இல்லை.

நமக்கு எஸ்.டி.டி.மற்றும் ஐ.எஸ்.டி. போன் வந்தால் யார் பேசுகிறார்களோ அவர்களது பொருளாதார நிலை, நமது நிலை ஆகியவற்றை ஒரு கணம் ஒப்பிட்டுப் பார்த்துப் பேச வேண்டும். அவர் சொல்லக் கூடிய செய்தி சுருக்கமானதாக இருந்தால் பரவாயில்லை.

அதிக நேரம் பேச வேண்டிய விஷயமாக இருந்தால், போன் செய்வதவரை, ©நீங்கள் போனை வையுங்கள், நான் திரும்ப அழைக்கிறேன்© என்று கூறி அவரது டெலிபோன் பில்லைக் குறைக்க முயலுங்கள். அவர் மனதில் மட்டு மல்ல, உங்கள் மனதிலும் மகிழ்ச்சி ©அலை© அடிக்கும். போன் செய்து விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக வெட்டியாகப் பேச்சை இழுப்பது ஒரு வகையில் துரோகம் கூட.

சிலர் எங்கே எதைப் பேச வேண்டுமென்று தெரியாமல் மூக்கை நுழைத்துப் பேசுவதைப் பார்த்தால் நமக்கு எரிச்சலாக வரும். மேலும் நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்காமல் படபடவென பேசுவார்கள்.

ஒரு விஷயம்- மற்றவர்களின் பேச்சில் என்ன விஷயம் இருக்கிறது.எங்கே அவர் முற்றுப்புள்ளி வைக்கிறார் என்று கவனித்து நாம் நம் கருத்தைச் சொல்லத் தொடங்க வேண்டும். அவர் பேச்சில்©கமா© - வைக்கும் போது நாம் குறுக்கிட்டுப் பேசக்கூடாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:06 am

ஆங்கிலப்புத்தகம் ஒன்று பார்த்தேன். சுமார் 1,600 பக்கம் இருக்கும்.அதன் பெயர் ©ஹவ் டு லிசன்© (How to listen). மற்றவர்களது பேச்சைக் கவனிக்கவே இவ்வளவு பெரிய புத்தகமென்றால், நாம் பேசக்கற்று கொள்ள எவ்வளவு பெரிய புத்தகம் படிக்க வேண்டும்.இப்போது என் ஞாபகத்துக்கு வருவது அறிவாளியாய் இரு முட்டாளாய் நடி.

சிலரிடம் பொருளுதவியோ அல்லது வேறு உதவியோ கேட்டுப் போனால், அவரது பெருமையைக் காட்டும் வகையில் ©நான் பார்த்துக் கொள்கிறேன்© என்று உடனே வாக்குறுதியை அள்ளி வீசி விடுவார்கள். அவர்கள் யோசிக்க வேண்டியது இந்த வாக்குறுதியை நம்பி வந்தவர் எவ்வளவு நம்பிக்கையுடனும், கவலை தீர்ந்தது என்ற கற்பனையுடனும் போகிறார் என்பது தான்.

ஒரு விஷயம், நம்மால் எல்லாருடைய பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. இதுதான் உண்மை. அதனால் நம்மை நம்பி வருபவரிடம் ©முடியும்©, ©முடியாது©,©நீங்கள் கேட்கும் அளவுக்கு என்னால் தர முடியாது©, இவ்வளவு தான் முடியும், உங்களது அவசரத்துக்கு உடனே உதவ முடியாது© போன்ற விஷயங்களைக் கூச்சப்படாமல் கூறி அதே நேரத்தில் உங்களது நிலையை விளக்குங்கள்.

அள்ளி கொடுங்கள் - அதே நேரத்தில் உங்களால் முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்காதீர்கள் - அது ஒரு வகையில் பாவம்.

ஒருவர் வெளிநாட்டுக்கோ அல்லது வெளியூருக்கோ சென்று வந்தால், அவர் நமக்கு என்ன வாங்கி வந்தார் என்று குழந்தைகள் ஆவலுடன் பெட்டியைப் பார்ப்பது இயற்கை, ஆனால் சில பெரியவர்களே கூச்சப்படாமல் எனக்கு ஒண்ணும் வாங்கி வரவில்லையா© என் நினைப்பே உனக்கு வரவில்லையா© என்று சில குழந்தைத்தனமான கேள்விகளைக் கேட்கும்போது குண்டூசியால் குத்துவது போன்று தோன்றும்.

ஒருவிஷயத்தை நாம் யோசிக்க வேண்டும். அவரது பயணம் நமக்குப் பொருள் வாங்கத்தானா© அவரது பயணத்தின் நோக்கம் அங்கு வெற்றியா© அல்லது வேதனையா© கொண்டு போன பணத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு அவர் வேதனையுடன் வந்திருக்கலாம், புறப்படும் போது அவசரம் ஏற்பட்டிருக்கலாம், உங்களுக்கு ஏதாவது வாங்கி வரவில்லை என்ற ஒரே காரணத்தால் அவருக்கு உங்கள் மீது பாசமில்லை என்று எடை போட்டு விடாதீர்கள்.

பாசம் பரிசுப் பொருளில் இல்லை. மனிதல் இருக்கிறது. பயணம் முடிந்து வந்தவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் - போன காரியம் வெற்றிகரமாக முடிந்ததா© அங்கே உள்ள எனது நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருந்தார்களா© இப்படிக் கேட்டால் அடுத்து அவர் எங்கே பயணப்பட்டாலும் உங்களையும் உடன் அழைத்துச் செல்ல ஆசைப்படுவார்.

சிலர் அடிக்கடி, ©என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள்©© என்று வெகுளித்தனமாகக் கேட்கும் போது, அவர்களது அறிவு, ©கூர் தீட்டப்படவில்லை© என்றே தோன்றும். அன்பையும், நட்பையும் எடை போட்டுக் கொண்டே இருந்தால் ஒரு நாளில் முக்கால் பாகத்தை அதுவே முழுங்கி விடும். அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு வரும்போது வெளிபடுத்த வேண்டும்.

மேலும், நாம் ஒருவர் மீது அன்பு செலுத்துவது மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. பலர் அன்பை வெளிப்படுத்த ஒரு கூட்டத்தைச் சேர்த்து தெரியப்படுத்துவர். கணவன்- மனைவி அன்பில் நம் கலாச்சாரம் ஒளிந்திருப்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:06 am

நண்பனாவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். எனக்குத் தெரிந்து எந்த நண்பரையும் நான் இழந்ததில்லை. அப்படிப் பிரிந்து போனால் அவரை தூரத்து நண்பன் என்றே அழைப்பேன். என்மீது எத்தனை கிராம் அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், அவர்கள் மேல் இருந்த பல கிலோ கணக்கு அன்பு, சில கிராமாகக் குறைந்து விடும் என்பதைப் பலர் யோசிப்பதில்லை நீங்கள் யோசியுங்கள்.

நம் வீட்டில் வேலைப் பார்க்கும் வேலைக்காரர்களுடன் நம் குழந்தைகள் எப்படிப் பழகுகிறார்கள்,எப்படி அழைக்கிறார்கள் என்பதை நாம் கவனிப்பது மிகவும் அவசியமான ஒன்று. ஓட்டுநரை©அண்ணன்© என்றும், வீட்டைச் சுத்தம் செய்பவரை ©அக்கா© என்றும் அவர்களாகவே கூப்பிட்டால் குழந்தைகள் குழந்தைகளாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

அப்படியில்லாது, பேர் சொல்லியோ, ©டா© போட்டோ கூப்பிடுகிறார்கள் என்றால், நம் குழந்தைகள் குட்டி ரவுடிகளாக மாறியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

நம் வீட்டில் வேலை பார்ப்பவர்களைக் கூர்ந்து கவனியுங்கள் - நாம் முகம் சுளிக்கும் வேலையையும் அவர்கள் மூக்கைப் பிடித்து கொண்டு செய்கிறார்கள். நம்மால் தூக்க முடியாத பாரங்களை அவர்கள் தம் பிடித்துத் தூக்குகிறார்கள். அதற்குத்தான் சம்பளம் தருகிறோமே என்று சொல்லலாம். பணத்தை விட முக்கியமானது பாசம்.

வேலைக்காரர்களை நண்பர்போல் நடத்துங்கள். சில வீடுகளில் குடும்ப உறுப்பினர்களை விட வேலையாட்கள் மீது குழந்தைகள் பாசமாக விளையடுவதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் பாசம் தான் உண்மையான பாதுகாப்பு.

நம் வீட்டுப் பிள்ளைகளைப் படிப்பு விஷயத்தில் அவர்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதில் முழு சுதந்திரம் கொடுங்கள். இல்லையேல் அவர்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.

அதே போல் அவர்களின் விருப்ப விளையாட்டில் ஒரு மணி நேரம் சந்தோஷமாக விளையாட அனுமதியுங்கள். எப்போது பார்த்தாலும் படி, படி என்றால் அவர்களுக்கு விளையாட்டின் மீது மேலும் ஒரு படி கவனம் போய்விடும்.

குழந்தைகள் செய்யும் குறும்பையும், நகைச்சுவையையும் ரசியுங்கள். உங்களுக்கே உற்சாகம் ஊற்றெடுக்கும்.அதட்டல் இருக்கலாம். ஆனால் அடித்தல் கூடாது.

இன்றைய சூழ்நிலையில் நம் பிள்ளைகளை நண்பர்கள் போல் நடத்துவதுதான் மிக நல்லது. இல்லையென்றால் குழந்தைகள் பெற்றோர்களைப் போலீஸ்காரர் போல்தான் பார்ப்பார்கள். அதே நேரத்தில் நம் பிள்ளைகளின் நண்பர்கள் எப்பேர்ப்பட்டவர்கள் என்பதை உன்னிப்பாகக் கவனியுங்கள். பழக்கம் தான் ஒழுக்கத்தின் அஸ்திவாரம்.

சிலர் விலை உயர்ந்த சட்டையைத்தான் அணிவேன், இது என் வழக்கம் என்பார்கள். இது தவறில்லை. வசதி படைத்தவர்கள் வசதியாக வாழலாம்.

வேறு கோணத்தில் சிலரைப் பார்த்திருக்கிறேன். பல கோடிக்கு அதிபராக இருந்தும் சாதாரண சட்டை அணிந்திருப்பார்கள். அவரால் அந்த சட்டை பெருமை அடைகிறது. பெரிய எழுத்தாளர்களைச் சந்திதிருக்கிறேன். சாதாரண பேனாவைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர் எழுதும் எழுத்து பலரது தலை எழுத்தையே மாற்றிவிடும்.

எனக்குத் தோன்றுவதெல்லாம் நாம் பயன்படுத்தும் பொருளால் நமக்குப் பெருமை என்பதைவிட நம்மால் அந்தப் பொருளுக்குப் பெருமை ஏற்பட வேண்டும். பல தலைவர்களின் நினைவில்லங்களுக்குச் சென்றால் அவர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பார்த்தால் தெரியும்.

உயர உயர எளிமைதான் பெருமை சேர்க்கும் என்பதைப் புரிந்து கொண்டால் நீங்களும் தலை வராகலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:07 am

சின்ன விஷயம் என்று அக்கறை காட்டாமல் இருப்பது தான். நாம் பல நேரங்களில் செய்யும் பெரிய தவறு. ஆம். சின்ன விஷயம் தான் பெரிய பிரச்சினைக்கு அஸ்திவாரம்.

சைக்கிளில் காற்று கம்மியாக இருந்தால் அதை உடனே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் அது பஞ்சரில் ஆரம்பித்து டயரையே மற்றும் அளவு வளர்ந்திருக்கும். பையன் காலாண்டுத் தேர்வில் ஒரு பாடத்தில் பெயில் ஆகியிருந்ததைக் கவனிக்காமல் விட்டால் ஓர் ஆண்டு வீணாக வாய்ப்பு உண்டு. குழாயில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் ஒழுகும் போது அதைக் கவனிக்காமல் விட்டால் காலையில், வீட்டுத் தண்ணீர் டேங்கில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இருக்காது. வீட்டில் செல்(கரையான்) அரிப்பைக் கவனிக்காத ஒருவர் அந்த வீட்டையே விற்றுவிட்டார் என்றால் பாருங்களேன் !

இதிலிருந்து நாம் மனதில் பதிவு செய்ய வேண்டியது சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் தான் பெரிய ஆபத்திலிந்து தப்பிக்கலாம்.

ஓட்டலுக்குச் சென்று சாப்பிட ஆர்டர் கொடுக்கும்முன் விலைப்பட்டியலைப் பார்த்து விடுவது மிகவும் முக்கியமானது. இது சிறிய ஓட்டலிலிருந்து ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை பொருந்தும். சில பொருட்களில் ©ஸ்பெஷல்© என்று ஒரு வார்த்தை சேர்ந்து இருக்கும் . அந்தப் பொருளின் விலையை நிச்சயம் கவனிக்க வேண்டும். ©ஸ்பெஷல்© என்ற வார்த்தைக்கு விலை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.

அதேபோல், தாங்கள் இதற்கு முன் சாப்பிடாததாகவும் இருந்தால் அதைப்பற்றி விசாரிப்பது நல்லது. சில பலகாரங்களின் பெயர் படிப்பதற்குப் பிரமாதமாக இருக்கிறதென்று ஆர்டர் கொடுத்து விடுவீர்கள். ஆனால், அந்தப் பல காரம் உங்கள் டேபிளுக்கு வந்தபிறகு அதன் ருசியே உங்களுக்குப் பிடிக்காமலிருந்தால், காசு வீணாவதோடு சங்கடமும் ஏற்படும்.

எனவே, கூச்சப் படாமல் சாப்பிடுவது போல், சாப்பிடப் போகிற பொருள் எப்பேர்ப்பட்டது. எவ்வளவு விலை என்பதையும் கூச்சப்படாமால் கேட்பது நல்லது.

நாம் தயாரிக்கும் ஒரு பொருள் பிரமாதமாக வியாபாரம் ஆகிறது என்றால், அப்பொருளை விட இன்னும் பிரமாதமான ஒரு பொருளைத் தயாரிக்க மூளையைக் கசக்கிக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞானத்தில் நீங்கள் தயாரிக்கும் பொருளைவிட சிறப்பாகவும், விலை குறைவாகவும் ஒரு பொருள் திடீரென்று விற்பனைக்கு வரலாம். அந்தப் பொருள் உங்களை வீழ்த்த வந்ததாகக் கோபப் பட்டால் நஷ்டம் நமக்குத்தான். புதுப்புதுக் கண்டு பிடிப்புகள் வந்து கொண்டே தான் இருக்கும்.

உங்கள் தயாரிப்பு மக்களிடம் வெற்றிகரமாக இருக்கும் போதே, அடுத்த உங்களது புது வரவுக்காக அறிவை விதைத்து வையுங்கள். நாம் தயாரிக்கும் பொருள் மற்ற பொருட்களிலிருந்து எந்த எந்த விஷயத்தில் தனித்தன்மை கொண்டது என்பது தான் வியாபாரத்தின் வெற்றியாக இருக்கும். கண்ணுக்குத் தெரியாத ரகசியம் மக்களின் ரசனை அதை நாம் ©அறிவு© என்ற பூதக்கண்ணாடி போட்டுக் கண்டுபிடித்தால் தொட்டதெல்லாம் துலங்கும்.

சிலர் வில்லங்கம் உள்ள சொத்து ஏதாவது விலைக்கு இருக்கா, என்று கேட்பார்கள். அவர்களைப் பார்த்தால், நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வில்லங்கம் உள்ள சொத்து விலை குறைவாகக் கிடைக்கும் என்பது, இவர்களது பேராசை, பிரச்சனை வந்தால் கோர்ட்டுக்குப் போகலாம். இவர்கள் கோர்ட்டுக்குப் போவதற்காகவே வில்லங்கச் சொத்தை விலை பேசுவார்கள்.

ஒரு முறை கோர்ட்டுக்குப் போகும் போது ஏற்படுகிற மன உளைச்சல் இருக்கிறதே, அந்த வேதனை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். சொத்து விற்கும் போது, ஒருவர் துக்கத்துடன் தான் விற்பார். அவரது இயலாமையைப் பயன்படுத்தி அடிமாட்டு விலைக்கு வாங்குவது, வாங்குபவருக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால் அதுபோல் துரோகச் செயல் வேறு எதுவும் இல்லை. ©நியாயமான விலைக்கு வாங்கும் சொத்துதான் நிலைத்து நிற்கும்© என்ற நிஜத்தைப் பலர் நினைத்துப் பார்ப்பதில்லை.

சொத்து ஒரே இடத்தில் தான் இருக்கிறது. பத்திரங்கள் தான் புதிதாகவும், புதுப்பெயருடனும் சேர்ந்து கொண்டே போகின்றன. வில்லங்கச் சொத்து வாங்குபவர்களெல்லாம், நாம் ஏதோ 200 ஆண்டு காலம் வாழப் போகிறோம் என்ற மூட நம்பிக்கையில் தான் கொள்ளை லாபம் அடிக்கும் செயலில் இயங்குகிறார்கள். பெரும்பாலும், நகை வியாபாரிகள் நகையை விற்கும் போது வாழ்த்திக் கொடுப்பார்கள். அந்த மனப்பான்மையோடு சொத்து விற்பவரும் வாழ்த்திக் கொடுக்கும் படி வியாபாரம் நடந்தால் தான், அந்த சொத்து நிலைக்கும்.

சின்ன அளவு வீடாக இருந்தாலும், பங்களா வீடாக இருந்தாலும், வீட்டில் மிக முக்கியமாகப் பராமரிக்க வேண்டிய இடம் ©பாத்ரூம்©. நம் உடம்பில் உள்ள அழுக்கைப் போக்கும் இடம் ©பாத்ரூம்© அதுவே அழுக்காக இருந்தால் எப்படி© அங்கேயே துர்நாற்றம் வீசினால் நம் உடம்பில் உள்ள துர்நாற்றம் எப்படிப் போகும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:07 am

நோய் உருவாகும் இடமும் அதுதான். நோயைக் குணப்படுத்தும் இடமும் அததுன். நம்ம வீட்டுக்கு யாராவது வந்தால், நம் பாத்ரூமைப் பார்த்துப் பாராட்டினால் நீங்கள் அரண்மனையில் வாழ்வது போன்ற ஒரு மகிழ்ச்சி உண்டாகும். பாத்ரூமைக் கிளீனாக வைத்திருப்பது அணிச்சை செயலாக இருக்க வேண்டும்.

குழந்தைகள் உள்ள வீட்டில் பாத்ரூமைக் கிளீனாக வைத்திருப்பது கஷ்டம் தான். கஷ்டத்தைப் பார்த்தால் நாளைக்கு வரும் நோய்க்கு யார் வேதனைப்படுவது © பாத்ரூமைச் சுத்தமாக வைத்து கொள்ளக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். ©நீங்கள் கருமியாகக் கூட இருங்கள். ஆனால் நோய்க்கிருமி வராமலிருக்க பாத்ரூமைச் சுத்தமாகப் பார்த்துங்குங்க.©

புது வருடம் பிறந்தவுடன் இப்போதெல்லாம், இலவசமாக அதிகம் கிடைப்பது டைரிகள் தான். பெரும் பாலானவர்கள் இப்போது கடைப்பிடிக்கும் புதுப்பழக்கம். இந்தாண்டு டைரியை அடுத்த ஆண்டு பயன்படுத்துவது.

அன்பளிப்பாகவோ, இலவசமாகவோ எந்தப் பொருள் கிடைத்தாலும் அதன் மீது நாம் அக்கறை கொள்வதில்லை. காற்று இலவசமாகக் கிடைப்பதால் அதைப் பொருட்படுத்துவதில்லை. காற்றைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய காலம் வந்தால் நம் கதி என்ன© டைரியும் அது போலத்தான். அன்பளிப்பாக வரகிற டைரியையே நாம் பிறருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடுகிறோம்.

வரவு செலவுகளைப் பதிவு செய்ய டைரியை விடச் சிறந்த கணக்கர் உண்டா© உங்கள் புரோகிராம்களை எடுத்துச் சொல்ல டைரியை விட சிறந்த சம்பளம் வாங்காத பி.ஏ உண்டா© எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி எண்கள், இன்னும் என்னென்னவோ வசதிகள். எத்தனை பேர் டைரிகள் நமது பெயர், விலாசம், தொலைபேசி எண், ரத்தப்பிரிவு இப்படித் தகவல்களைப் பதிவு செய்து வைத்துள்ளோம்©

டைரியை முழுமையாகப் பய்னபடுத்தினால் நீங்கள் ஆண்டுக்கு ஒரு புத்தகம் எழுதுகிறீர்கள் என்றே சொல்லலாம். டைரி எழுதுவது ஒரு வரலாற்றுப் பதிவு. பட்டப் படிப்பு முடித்து வேலை பார்க்கும் ஒருவர். அவரது பத்தாம் வகுப்பு நோட்டுப் புத்தகத்தைப் புரட்டும் போது புன்னகை பூப்பது போல டைரி உங்களின் வளர்ச்சியின் அளவுகோல்.

நாம் நேசிக்கும் நபர் மீதோ அல்லது நமது நண்பர்கள் மீதோ சில நேரங்களில் அவர்களது செய்கைகளால் நமக்குக் கோபத்தைக் கொட்டி தீர்க்கும் வகையில் கடுஞ் சொற்களால் எழுதித் தபாலில் அனுப்பி, நமது கோபத்தைத் தனித்துக் கொள்வோம்.

கொஞ்சம் யோசித்தால், ©எதுவும் முடிவல்ல© என்ற பக்குவத்தோடு அவரை நேரில் பார்க்கும் போது, உங்கள் கோபத்தை சூழ்நிலைக்கேற்ப அவரிடம் தெரிவியுங்கள். அவர் உங்களுக்கு சரியான பதிலை அளிக்கலாம். அல்லது, தான் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்கலாம். ஆனால் நாம் அவசரப் பட்டுக் கோபத்தைக் கடிதம் மூலம் எழுதியிருந்தால், கடிதம் சின்ன விஷயத்தைப் பெரியதாக்கிவிடும்.

கடிதம் அன்பையும், நட்பையும், வெளிப்படுத்துவதற்கு மட்டுமே அதிகம் பயன் படவேண்டும். கோபக் கடிதங்கள் சில நேரங்களில் கோர்ட்டில் கூட ஒரு சாட்சி ஆகிவிடும் என்பதை உணர வேண்டும்.

வக்கீலிடமும், டாக்டரிமும் உண்மையை மறைக்கக் கூடாது என்று எல்லோரும் சொல்கிறோம். ஆனால் செயலில் எத்தனை பேர் இதைக் கடைப்பிடிக்கிறார்கள். என்று பார்த்தால் பாதிக்குப் பாதி கூட இருக்காது.

வக்கீலிடம் பேசும்போது, ©நான் நல்லவன்©, ©நான் நல்லவன்© என்று பாயிண்ட் வைத்தே பேசுவார்கள். தான் செய்த தவறை, ©இது ஒரு தவறா©© என்று மனசுக்குள்ளேயே பூட்டி வைத்துப் பேசினால் , உங்கள் வழக்கில் வக்கீல் எப்படி வாதாடி வெற்றி பெறுவார்© செய்த தவறை முதலில் சொல்லி விட்டால் உங்களைக் காப்பாற்ற அவர் முயற்சி எடுப்பார். உங்கள் பலத்தைச் சொல்லுமுன், உங்கள் பலவீனத்தையும் சொல்லி விட்டால் நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.

அதோ போல் தான் டாக்டரிடமும் உங்கள் வீக்னசை சொல்லக் கூச்சப்படாதீர்கள். உங்களைக் காப்பாற்ற முயற்சிப்பவரிடம் என்ன கூச்சம்© இந்த விஷயம் வக்கீலிடமும், டாக்டரிடமும் மட்டும் தான் பொருந்தும், எல்லோரிடமும் எல்லா உண்மைகளையும் உளறிக் கொட்டினால், அது வீண் வம்பில் தான் முடியும்.

பலருக்கும் பயன்படும் தகவல்களைத் தெரிந்து கொண்டால், அதைமற்றவர்களுக்கு சொல்லவே மாட்டார்கள் சிலர். இது குறுகிய மனப்ன்மையாகும். சமுதாயத்தில் அறிவிக்கப்படும் எல்லா பயனுள்ள விஷயங்களும் எல்லோரும் அறிந்து கொள்ளத்தான். ஒரு அப்ளிகேஷன் பார்ம் வாங்கிவிட்டால் கூட, தன் நண்பனுக்கும் சேர்த்தே தன் செலவில் வாங்கும் நண்பனும் உண்டு.

வேகமான உலகில் எங்கே, என்ன கிடைக்கின்றது© எப்படி வாங்குவது© என்பதை அறிந்தால், தெரியாதவர்களுக்குத் தெரியபடுத்துங்கள். அது தர்மத்துக்கு நிகரானது. ஒருவருக்கு வேலை கிடைக்க நீங்கள் வழிகாட்டிப் பாருங்கள்.உங்கள் வாழ்க்கை வளப்படும்.ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்க்க உதவி புரிந்து பாருங்கள். உங்கள் மனம் குழந்தை மனசாக மாறும்.

நாம் மட்டுமே முன்னேற வேண்டும். நாம் மட்டுமே வெற்றி பெற வேண்டும். நாம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும்© என்ற எண்ணத்துக்குத் தீனி போட்டால், நீங்கள் ஒரு வகை மிருகமாக மாறி வருகிறீர்கள் என்று அர்த்தம். மனிதன் என்ற பெயர் உங்களுக்குப் பொருந்தாது.

சிலர் அவசரத்துக்குப் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சைக்கிளையோ, ஸ்கூட்டரையோ கேட்பார்கள். இது ஒரு உதவி என்று அவர்களும் பெருந்தன்மையுடன் கொடுப்பார்கள். எப்போதாவது இப்படி உதவி கேட்பதில் தப்பில்லை. சிலர் எப்போதுமே ஏதாவது காரணம் சொல்லி ஓசியில் வண்டி கேட்டு உபத்திரவம் செய்வதைப் பழக்கமாக வைத்திருப்பார்கள்.இது ©புத்திசாலித்தனம்© என்ற பெயரில் செய்யும் பிராடுத்தனம்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 01, 2014 7:07 am

இது எங்கே முடியும் என்றால், உண்மையிலேயே உங்களுக்கு அவசரமாக வண்டி தேவைப்பட்டு, பொருளாதாரமும் புரட்ட முடியாத நேரத்தில் பக்கத்து வீட்டுக் காரரிடம் வண்டி கேட்டால், உங்கள் வழக்கமான வில்லங்கத்தனத்தை மனதில் வைத்துக் கொண்டு, வண்டி கொடுத்து உதவும் நிலையிருந்தும் ஒரு பொய்க் காரணத்தைச் சொல்லி, ©வண்டி கொடுக்க முடியாது, எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது © என்பார்கள்.

உதவி கேட்பது தப்பல்ல. ஆனால் உதாரித்தனத்துக்கெல்லாம் மற்றவர்களிடம் ஏமாற்று வேலை செய்வது, உங்களை ஆபத்து நேரத்தில் தத்தளிக்க விடும். பக்கத்து வீட்டுக்காரர் உங்களுக்கு ©ஸ்கூட்டர்© கொடுத்து உதவும் போது, ©பெட்ரோலை நான் போட்டுக்கொள்கிறேன்© என்பது தான் நல்லவர்க்கு அழகு.

கணவன் - மனைவிக்குள் ஊடல், சின்னச் சின்ன சண்டைகள் வருவது சகஜம்.கணவன் வேலைக்குப் போகிறான் என்றால், போருக்குப் போகிறான் என்று அர்த்தம். பொருள் ஈட்டுவது சாதரண விஷயமல்ல.

நேர்மையாக சம்பாதிப்பதற்கு வியர்வை மட்டும் செலவழிக்கவில்லை. அவமானம், கேலி, கிண்டல், சோதனை, தேய்மானம் இத்தனைக்கும் பிறகுதான் வருமானம், வேலை கிடைத்து வேலைக்குப் போகிற கணவர்களுக்கு இப்படி என்றால், வேலையில்லாமல் வீட்டிலிருந்து வேலை தேடும் அல்லது வேலை கிடைக்காத கணவனை நினைத்துப் பாருங்கள். அவருக்கு அந்த வீடே போலீஸ் இல்லாத ஜெயில்.

கணவருக்கு பசிக்கும்போது ருசியாகப் பரிமாற அடுப்புடன் மனைவி வேகிறாள். அந்த அடுப்பில் பூனை தூங்கக் கூடாது என்று கணவன் போராடுகிறான். இதை இருவரும் அடிக்கடி யோசித்தால் ஊடலைவிடக் கூடல் அதிகரிக்கும்.

டைம் டேபிள்போட்டுப் பள்ளியில் படிக்கலாம். வாழ்க்கையை டைம் டேபிள் போட்டு வாழ முடியாது. திட்டம் போடுவதும், செயல்படுவதும் தான் நம் கையில், நடைமுறையில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் துல்லியமாகத் தெரியாது. நாம் நினைத்தது நடக்கவில்லையென்றால் ஒரு சிலர் ஒப்பாரி வைப்பதுடன், உலகத்தில் தனக்கு மட்டுந்தான் இந்தக் கஷ்டம், இந்த கஷ்டம் என்று நினைக்கிறார்கள்.

சிங்கத்துக்கு அடுத்து வேளை உணவு கிடைக்குமா© என்று தெரியாது.ஆனால் அதுதான் காட்டுக்கு ராஜா. அதே போல் உணவு கிடைத்துப் பசி ஆறியபின் தன் பக்கத்தில் மான் உரசினால் கூட சிங்கம் சீண்டாது. சொத்தில் கொஞ்சம் குறைந்து விட்டால் செத்தே போய்விடுவேன் என்று சிலர் பேசுவதைக் கேட்டால் எனக்கு சிரிப்பு தான் வரும். அதே நேரம் அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லாத பலர் சந்தோஷத்தில் இடி இடிப்பது போல் சிரிப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன்.

டைம்டேபிள் வாழ்க்கை உழைப்பில் இருக்கலாம்.அதிர்ஷ்டத்தை டைம் டேபிள் போடக்கூடாது.ஆறு நாள் பட்டினி கிடந்தாலும் சிங்கம் சிங்கம் தான். ஒரு தகவல் : சிங்கத்தின் பாலை சாதாரணக் கிண்ணத்தில் வைக்க முடியாதாம். கிண்ணம் உருகிவிடுமாம். தங்கக் கிண்ணத்தில் தான் வைக்க முடியுமாம் .

எது நடந்தாலும் நடக்கா விட்டாலும் நீங்கள் சிங்கம் போல் வாழுங்கள்.


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக