புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
56 Posts - 50%
heezulia
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
4 Posts - 1%
jairam
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறுகதை: புதிய பயணம்! Poll_c10சிறுகதை: புதிய பயணம்! Poll_m10சிறுகதை: புதிய பயணம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை: புதிய பயணம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 4:06 am


பிரபுவைப் பற்றி சங்கர் சொன்ன விஷயம் மகேஷின் தலைக்குள் எரிமலையை உருவாக்கியது.

“”சங்கர், நெஜமாத்தான் சொல்றியா… அந்த ராஸ்கல், இப்ப சென்னையில்தான் இருக்கானா…நல்லா பாத்தியா.. அது அவன்தானான்னு?”

“”ஆமாம் மகேஷ். நானென்ன உன்கிட்ட பொய்யா சொல்லப் போறேன். பிரபுவை ஒருநாள் தி.நகரிலேயும் இன்னொரு நாள் வடபழனி ஏ.வி.எம்.க்கு எதிரேயும் பார்த்தேன். பைக்கிலே போய்க்கிட்டிருந்தான். அவனுக்கு இங்கேதான் வேலை கிடச்சு ஜாயின்ட் பண்ணியிருப்பான்னு நெனைக்கிறேன்.”

“”அவனைச் சும்மா விடக் கூடாது. ஊரிலேயே அடிச்சு நொறுக்கியிருக்கணும். சூழ்நிலை சாதகமா இல்லாமப் போச்சு. இப்ப இங்கே வச்சு குமுறினோம்னா கேக்க நாதி இல்லே..என்ன சொல்றே?”

“”உண்மைதான். ஒரு நாளைக்கி அவனைப் பதம் பார்த்துட வேண்டியதுதான்”

“”இன்னொருநாள் அவனைப் பார்த்தா அட்ரஸ் கேட்டு வாங்கு. என்ன”

“”ஓ.கே.” என்றான் சங்கர்.

***

மகேஷ், சங்கர், பிரபு மூவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தான். பக்கத்து பக்கத்துக் கிராமம். பத்து கிலோ மீட்டர் தூர இடைவெளியில் வசிப்பவர்கள்.

மகேஷின் அப்பாவிற்கு மத்திய அரசில் உத்யோகம். வேலை இடமாற்றம் காரணமாக சென்னைக்கு மாற்றலாகி இருந்தது குடும்பம்.

மகேஷிற்கு பிரபுவிற்கும் மோதல் கல்லூரி ஆண்டு விழாவின்போதுதான் நிகழ்ந்தது.

கல்லூரி ஆண்டு விழாவில் மகேஷ் மேடையேறி ஒரு கவிதையை வாசித்தான். சக மாணவர்களின் கைதட்டலைப் பெற்றான்.

பிரபு சும்மா இருக்க முடியாமல், அந்த மேடையிலேயே அந்தக் கவிதையைப் பற்றி மட்டமாக விமர்சனம் செய்தான். அப்போது அவனை விட்டுவிட்ட மகேஷ் மறுநாள் கல்லூரி வளாகத்தில் பிரபுவைப் பிடித்தான்.

“”ஏன்டா, என்னயப் பத்தி எல்லோர்கிட்டேயும் தப்பா பேசிக் கிட்டுத் திரியிற?” என்றான்.

“”முதல்ல வார்த்தையைத் திருத்திக் கொள். நான் விமர்சனம் பண்ணியது உன்னைய இல்ல. நீ வாசிச்ச கவிதைய”

“”நீ ரசனை கெட்டவன். அதான் கவிதையே புரியலை”என்றான் மகேஷ்.

“”நீ எழுதியதா அன்னிக்கு வாசிச்சியே…அது உன்னோட கவிதையே இல்ல. பழைய புக்ல காபி பண்ணினது. அதனாலதான் அப்படிச் சொன்னேன். உண்மையை எல்லார்கிட்டேயும் சொல்லணுமா… சொல்லட்டுமா?” என்றான் பிரபு.

மகேஷ் கூனிக் குறுகிப் போனான். அவமானம் அவனைச் சாட்டையால் அடித்தது. அந்தச் சம்பவம் அத்துடன் முடிந்துவிடவில்லை. எரியும் நெருப்பில் சிறு சிறு துரும்பை எடுத்துப் போட்டதுபோல வார்த்தைகளாலும், பார்வைகளாலும் அவ்வப்போது மோதிக் கொண்டனர். ஒரு சின்ன விஷயம் பெரிதானது. சிறுநெருப்பு புகைந்து புகைந்து பெரும் பகையானது. பார்த்தால் ஒருவரையொருவர் தாக்கும் அளவுக்கு.

இந்த நிலையில் கல்லூரி படிப்பு முடியவும், மகேஷின் இடமாற்றம் நிகழவும் சரியாக இருந்தது.

அப்போது மகேஷின் மனதில் பற்றிய தீ இன்னும் அணையாமல் அப்படியே இருந்தது.

இப்போது சங்கர், பிரபுவைப் பற்றிச் சொல்லி மேலும் அதைக் கிளறி விட்டுவிட்டான்.

என்றாவது ஒருநாள் அவனிடம் ஏதாவது வம்புச் சண்டையிழுத்து அவனை அடித்தால்தான் மனது ஆறும் என்று தோன்றியது.

***

அன்று-

மகேஷ் ஒரு கம்பெனி இண்டர்வியூ விஷயமாகப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான்.

பேருந்தின் ஜன்னலோரமாக இருக்கை ஒன்றில் அமர்ந்திருக்க, பேருந்து அசோக் நகர் நெடுஞ்சாலையில் சிக்னலுக்காக நின்றது.

மகேஷ் ஜன்னல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் அந்தக் காட்சி அவன் கண்ணில் பட்டது.

சிக்னலுக்கு எதிர்திசையில் பைக்கில் பிரபு இருப்பதைப் பார்த்தான். அவனைப் பார்க்கப் பார்க்க உடலெங்கும் உஷ்ணம் பரவியது.

“விடாதே பிடி’ என்று மனதிற்குள் ஆத்திரம் பொங்கியது. அதற்குள் சிக்னல் விழ எதிர்திசையில் வாகனங்கள் கிளம்புகின்றன.

பிரபு வண்டியைக் கிளப்புகிறான் அவன் பின்னால் யாரது? தெரிந்த முகமாக இருக்கிறதே. அது…அது…உமா அல்லவா?

பிரபுவின் இடுப்பைச் சுற்றி வளைத்துப் பிடித்தபடி அமர்ந்திருக்கிறாள் உமா, மகேஷின் தங்கை.

மகேஷுக்குக் கோபம் உச்சிக்குப் போனது. ஆனாலும் கொஞ்சம் யோசித்தான்.

உமா பிறவியிலேயே கால் ஊனமாகப் பிறந்தவள். அந்த ஊனமே அவள் திருமணத்திற்குத் தடையாக இருந்தது. இதுவரை ஒருவர் கூட அவளைப் பெண் கேட்டு வரவில்லை. இவனாகச் சிலரிடம் முயற்சித்த போது அவமானமே பரிசாகக் கிடைத்தது. உமாவைக் கரையேற்ற என்ன செய்யலாம் என்று தடுமாறிக் கொண்டிருந்தான் மகேஷ்.

இந்தப் பிரபு என் தங்கை உமாவைக் காதலிக்கிறானா? அவளைக் கல்யாணம் செய்து கொள்வானா? உமாவின் எதிர்கால வாழ்வில் வெளிச்சம் தெரிந்தது. தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவனுக்கு கண்ணெதிரே உதவிக்கரம் ஒன்று தென்படுவதைப் போல இருந்தது.

இவ்வளவு நாட்களாக மகேஷின் மனதில் கனன்று கொண்டிருந்த கோபம் சட்டென்று காணாமல் போனது. தன் தங்கைக்குக் கணவனாகப் போகிறவன் என்ற எண்ணம் வந்ததும் ஒரு புதிய கோணத்தில் அவன் பிரபுவைப் பார்த்தான். சிக்னல் மாறி பஸ் புறப்பட்டது. புதிய பாதையில் சென்றது. மகேஷின் சிந்தனையும்.

- ஜி. சுந்தரராஜன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 29, 2014 12:26 pm

சிறுகதை: புதிய பயணம்! 3838410834 சிறுகதை: புதிய பயணம்! 3838410834 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 02, 2014 7:23 pm

ஓகே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக