புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ஔவையார்’ மாதங்கி! Poll_c10‘ஔவையார்’ மாதங்கி! Poll_m10‘ஔவையார்’ மாதங்கி! Poll_c10 
42 Posts - 63%
heezulia
‘ஔவையார்’ மாதங்கி! Poll_c10‘ஔவையார்’ மாதங்கி! Poll_m10‘ஔவையார்’ மாதங்கி! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
‘ஔவையார்’ மாதங்கி! Poll_c10‘ஔவையார்’ மாதங்கி! Poll_m10‘ஔவையார்’ மாதங்கி! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
‘ஔவையார்’ மாதங்கி! Poll_c10‘ஔவையார்’ மாதங்கி! Poll_m10‘ஔவையார்’ மாதங்கி! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஔவையார்’ மாதங்கி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 10, 2014 5:22 am

‘ஔவையார்’ மாதங்கி! P89

உள் உறுப்புகளால் ஏற்படும் உடல்நலக் குறைபாட்டை பலரும் எதிர்கொள்ளப் பழகிவிடுகிறார்கள். ஆனால், தீ விபத்து, வாகன விபத்து, சமையலறைக் காயங்கள் என எதிர்பாராத விபத்தால் முகம், உடலில் ஏற்படும் கோரத்தை சுமந்துகொண்டு வெளிவரத் தயங்கி, முடங்குபவர்கள் பலர். கிட்டத்தட்ட 46 வருடங்களாக, அப்படி ஆயிரக்கணக்கானவர்களை, தன் மருத்துவ சிகிச்சையால்... சேவையால்... வெளியுலகுக்கு கொண்டுவந்து, தன்னம்பிக்கையுடன் நடமாடவைத்துக் கொண்டிருக்கிறார், டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்.

பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத்துறையில் தொண்டாற்றி வரும் இவர், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட்’ மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர். இவருடைய சேவைகளைக் கௌரவிக்கும்விதமாக, 2014-ம் ஆண்டுக்கான 'ஒளவையார் விருது’ அறிவித்திருக்கிறது தமிழக அரசு!

''சிறுவயதில் இருந்தே, மற்றவர்களின் கஷ்டத்தை ஏதோ ஒரு வகையில் தீர்க்கும்போதெல்லாம், என் மனம் உணரும் மகிழ்ச்சி அலாதியானது. அந்த அர்ப்பணிப்புதான், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் 'பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடென்ட்’ என்கிற சிறப்புத் தகுதியுடன் எம்.பி.பி.எஸ். முடிக்க வைத்தது. பிளாஸ்டிக் சர்ஜரி மீதான அளவில்லாத ஆர்வமும், சேவை எண்ணமும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தில் 'டாக்ட்ரேட் ஆஃப் சயின்ஸ்' பட்டம் பெற்ற, தமிழகத்தின் முதல் பிளாஸ்டிக் சர்ஜன் என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

கீழ்ப்பாக்கம் மெடிக்கல் கல்லூரியின் 'பிளாஸ்டிக் அண்ட் ரீகன்ஸ்ட்ரக்டிவ்’ துறைத் தலைவராக நான் இருந்தபோதுதான், தென்னிந்தியாவிலே முதல் முறையாகவும், மிகப்பெரியதுமான 50 பெட் வசதிகளை கொண்ட 'பர்ன் யூனிட்' (Burn unit) மற்றும் அதற்கான தனி கட்டடத்தையும் எழுப்பினோம். அன்றிலிருந்து ரிட்டயர் ஆகும்வரை, கிட்டத்தட்ட 25 வருடங்களாக, என் மனமும் மூளையும் இடைவிடாமல் இயங்கிய இடம் அது'' என்று சிலிர்ப்பவர், அதன்பிறகுதான் 'காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட்’ பொறுப்பேற்றிருக்கிறார். இவருடைய கணவர் ராமகிருஷ்ணன், எழும்பூர் மருத்துவமனையின் முன்னாள் முதன்மை மருத்துவர். மகள், குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர்.

''கிட்டத்தட்ட 60 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறேன். சிதைந்த உடம்பை, முகத்தை சீர்படுத்தி தரும்போது, நோயாளியின் முகத்திலும் மனதிலும் நான் பார்க்கும் சந்தோஷத்துக்கு இணையான இன்னொரு உணர்வை, அனுபவத்ததில்லை. ஆனால், சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு எல்லாம் உடனே தீக்குளித்துவிடுகிறார்கள். இப்போது, ஆசிரியர் அடித்தார், திட்டினார் என்று மாணவர்கள் தீக்குளிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. அதனால், தீயணைப்புத் துறையுடன் இணைந்து மாணவர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறோம்'' என்ற டாக்டர் சொன்ன ஒரு சம்பவம், கல்லையும் கரைத்திடும்!

''எத்தனையோ காயங்கள் பார்த்திருந்தாலும், குறிப்பிட்ட அந்தக் குழந்தையை மறக்க முடியாது. அந்தத் தம்பதிக்கு குழந்தையில்லை. கணவனிடம் சொல்லாமல், நான்கு வயது ஆண் குழந்தையைத் தத்தெடுத்துவிட்டார் மனைவி. கோபமான கணவன், குழந்தை மீது ஆசிட் ஊற்றிவிட்டான். வேதனையுடன் குழந்தை துடித்ததை எங்களால் தாங்க முடியவில்லை. அந்த ஏழைப் பெண்ணால் பணமும் ஏற்பாடு செய்யமுடியவில்லை. தெரிந்தவர்களிடம் டொனேஷன் ஏற்பாடு செய்து, அறுவை சிகிச்சையை முடித்தோம். பார்வை பறிபோகும் நிலையில் இருந்த அந்த குழந்தைக்கு, மதுரையிலிருக்கும் அரவிந்த் கண் மருத்துவமனையினர், ஓரளவு அடையாளம் காணும் வகையில் பார்வையை தக்கவைத்துக் கொடுத்தார்கள். நல்ல குரல் மற்றும் இசை வளமுள்ள அந்தப் பையன், இசைக்குழு பாடகனாக இப்போது வலம் வருகிறான்'' என்று சொல்லும் டாக்டர், இப்படி தன்னிடம் வரும் பல ஏழை நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சை உள்ளிட்ட பெரிய மருத்துவச் செலவுகளுக்கு தானே பல்வேறு இடங்களில் உதவி பெற்றுத் தருகிறார். இதுபோன்ற பணிகளைப் பாராட்டி ஏகப்பட்ட விருதுகளைக் குவித்திருக்கும் இவருக்கு, இந்திய அரசு 2002-ல் 'பத்மஸ்ரீ’ வழங்கியும் சிறப்பித்திருக்கிறது.

''70 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது கடினம் என்பார்கள். சவாலாக மட்டுமல்லாமல், சக உயிர் மேலான அக்கறையாகவும் அதை எதிர்கொண்டு, பெரும்பாலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். 'இவர் இதற்காகத்தான் படைக்கப்பட்டார்’ என்பது போல, நான் இந்த மகத்துவமான சிகிச்சையால் பலரின் கண்ணீர் துடைக்கும் கருவியாகவே படைக்கப்பட்டுள்ளேன் என்று நம்புகிறேன்!''

- அமைதியான வார்த்தைகள் வருகின்றன டாக்டர் மாதங்கியிடமிருந்து!

-அவள் விகடனிலிருந்து...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 10, 2014 5:24 am


டாக்டர் மாதங்கிக்கு அவ்வையார் விருது: ஜெயலலிதா வழங்கினார்

சென்னை: சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு அவ்வையார் விருதை ஜெயலலிதா வழங்கி பாராட்டினார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிருவாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கண்ணியப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டிலும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில், ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்தந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி “அவ்வையார் விருது” எனும் உயரிய விருது வழங்கப்படும் என்றும், இந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி 2012ஆம் ஆண்டு முதல் "அவ்வையார் விருது" மகளிர் தினத்தை யொட்டி வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு 2014ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா 4.3.2014 அன்று அறிவித்திருந்தார்.

அதன்படி, சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அவ்வையார் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்" என்று கூறப்பட்டுள்ளது.



‘ஔவையார்’ மாதங்கி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக