புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Rutu
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Rutu
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_m1040 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

40 தொகுதிகளின் நிலவரம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 3:53 pm

First topic message reminder :

40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 P19
தேர்தல் கமிஷன் லிஸ்டில், தமிழகத்தின் முதல் தொகுதி திருவள்ளூர்!

 இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகளின் துரை.ரவிக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலும், பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரும் களமிறங்கியிருக்கிறார்கள்.
வேட்புமனு இறுதி செய்யும் சமயத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு சின்னம் கிடைத்தது. அதுவரை வேட்பாளர் பெயரை மட்டுமே சொல்லி வாக்குகளைக் கேட்டது, ரவிக்குமாருக்கு மைனஸ். கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காதது இன்னொரு மைனஸ். திருவள்ளூர் தொகுதி தி.மு.க-வுக்குக் கிடைக்காத அதிருப்தியில், இன்னும் சில நிர்வாகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிரசாரத்துக்கு ஸ்டாலின் வந்து சென்ற பின்னரே ஒத்துழைப்பு கிடைத்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அடுத்த மைனஸ், புரட்சி பாரதம் கட்சியினர். திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றிபெறக் கூடாது என்ற முனைப்புடன் அவர்கள்  அ.தி.மு.க-வுக்காக சுறுசுறுப்புடன் வேலைபார்த்து வருகிறார்கள். தொகுதியில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. கூட்டணி, அது நிச்சயம் பலன் கொடுக்கும் என்று நம்புகின்றனர்.

சிட்டிங் எம்.பி-யான வேணுகோபால்தான் அ.தி.மு.க. வேட்பாளர். இந்தத் தொகுதியில் செய்த பணிகளை ஒவ்வொரு பிரசாரத்திலும் பட்டியலிடுகிறார். சிரித்த முகத்துடன் கட்சியில் எல்லோரையும் அனுசரித்து செல்வது வேணுகோபாலுக்கு ப்ளஸ்.

தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜ் வட சென்னை மாவட்டச் செயலாளராக இருப்பதால், தே.மு.தி.க-வினர் முழுவீச்சில் இவருடைய வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். அதோடு கூட்டணிக் கட்சியினரும், மோடி அலையும் தங்களுக்கு ப்ளஸ் என்கிறார்கள். புதிய வாக்காளர்களும் இளைஞர்களும் நிச்சயம் முரசைக் கொட்டுவார்கள் என்ற நம்பிக்கை ஆணித்தரமாக யுவராஜுக்கு உள்ளது.

உள்ளூர் மைந்தன் என்ற முகவரியுடன் களமிறங்கிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமார். ஆவடியில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட இவர், தொகுதி மக்கள் மத்தியில் ஓரளவுக்குப் பிரபலமானவர். கணிசமான வாக்குகளை வாங்குவார். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்தால், மோதிரம் டாலடிப்பதைவிட இரட்டை இலையே துளிர்க்கும் நிலை இந்தத் தொகுதியில் தெரிகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:07 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Chidambaram
 
சிதம்பரம் ரகசியம் என்பார்கள்... சிதம்பரம் தொகுதியில் தேர்தலை மையப்படுத்தி அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்களும் ரகசியங்களாகவே உள்ளன.

காங்கிரஸில் இருந்த மணிரத்தினம், பா.ம.க-வில் இணைந்ததுமே வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, வேட்புமனு தாக்கலில் அவரது மனு தள்ளுபடியாகி அவரது மனைவி சுதா வேட்பாளரானது... இரண்டுக்கும் பின்னணியில் உள்ள விவகாரங்கள் சிதம்பர ரகசியம்தான்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தொல்.திருமாவளவனும், அ.தி.மு.க-வில் சந்திரகாசியும், காங்கிரஸில் வள்ளல்பெருமானும் களமிறங்கியுள்ளனர். சிதம்பரம் சுமார் 13 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி.

அ.தி.மு.க. வேட்பாளரான சந்திரகாசி, அதிர்ந்துகூட பேசாதவர். அவருக்காக அதிரடியாக அனல் கிளப்பி வருகிறார் தொகுதி பொறுப்பாளரான செங்கோட்டையன். இண்டு இடுக்கு எல்லாம் புகுந்து புறப்பட்டு, ''எங்கள் ஆட்சியில் கொப்பரைக் கிராமத்தில் பெரிய அளவு நீர்த்தேக்கத் திட்டம், டெக்ஸ்டைல் பார்க் திட்டம் கொண்டுவந்தது நாங்கள்தான்'' என்று சந்திரகாசிக்கு பலம் சேர்த்து வருகிறார் செங்கோட்டையன். அதே சமயத்தில் பல ஊர்களில் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.

காங்கிரஸில் செல்வாக்காக இருந்து பா.ம.க-வுக்கு மாறிய மணிரத்தினத்தின் மனைவி சுதா மணிரத்தினம்தான் இங்கே பா.ம.க. வேட்பாளர். திடீரென முகாம் மாறியதால் தலித் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறார் மணிரத்தினம். அது சுதாவுக்கான எதிர்ப்பாக மாறியிருக்கிறது. வன்னியர் சமுதாயமும் கூட்டணிக் கட்சிகளும் தனக்குக் கைகொடுக்கும் என்பது சுதாவின் நம்பிக்கை.
தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான திருமாவளவன், தொகுதிக்கு பெரிய அளவு திட்டங்கள் ஏதும் நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி தொகுதி முழுக்கவே இருக்கிறது. இருந்தாலும், தொகுதியில் வசிக்கும் பெரும்பான்மையான தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் ஆதரவும், கூட்டணி கட்சியான தி.மு.க. இந்தத் தொகுதியில் செல்வாக்கோடு இருப்பதும் திருமாவளவனுக்குப் பலம் சேர்க்கிறது. திருமாவை எப்படியாவது கரைசேர்த்துவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கரனும் போராடி வருகிறார்கள்.

இறுதி கட்ட நிலவரப்படி பா.ம.க. வேட்பாளர் சுதா சற்று பின்தங்கி நிற்க... திருமா மீண்டும் சிதம்பரத்தை தன் கோட்டையாக மாற்றுவார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:07 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Mayiladurai
சிவன் மயிலுருவம் கொண்டு பார்வதியுடன் நடனமாடியதால் மயிலாடுதுறை என்று பெயர் வந்ததாகச் சொல்வார்கள். அந்த மயிலாடிய துறையில் அ.தி.மு.க. சார்பில் பாரதிமோகன், தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியும் களமிறங்கியுள்ளனர். பா.ம.க. வேட்பாளராக அகோரமும், காங்கிரஸ் சார்பில் மணிசங்கர் அய்யரும் மோதுகின்றனர்.
 
கடந்த முறை வெற்றிபெற்ற அ.தி.மு.க-வின் ஓ.எஸ்.மணியன் தொகுதி மக்களிடம் அதிகம் தலைகாட்டாமல் இருந்தது, அந்தக் கட்சியின் வேட்பாளரான பாரதிமோகனுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மணியனை பிரசாரத்துக்கு அழைக்காமல், மாநில அரசின் சாதனைகளை மட்டுமே சொல்லி வாக்கு சேகரிக்கிறார் பாரதிமோகன். கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசல் இவருக்குப் பலவீனம்.

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரான ஹைதர் அலி வெளியூர்க்காரர் என்பதால், தி.மு.க. நிர்வாகிகளை அரவணைத்தே பிரசாரம் செய்கிறார். தொகுதியில் இருக்கும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இவருக்குக் கிடைக்கும். மின்வெட்டு இருட்டைக் கிழிக்கும் மெழுகுவத்தி எனச் சொல்லி, தன் சின்னத்தைப் பிரபலப்படுத்துகிறார் ஹைதர் அலி.

பி.ஜே.பி. கூட்டணி பலத்துடன் களம் காணும் பா.ம.க-வின் அகோரம், தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் வாக்கு வங்கியை குறிவைக்கிறார். பாரதிமோகன் வன்னியர் என்பதால், வாக்குகள் பிரியலாம். கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வில் பெரும்பான்மையாக இருக்கும் தலித் மக்களின் வாக்குகள் இவருக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே! 

காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வியடைந்த மணிசங்கர் அய்யருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே.வாசன் இங்கு போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், மணிசங்கர் அய்யர் விரும்புகிறார் என்றதும் விட்டுக்கொடுத்தார் வாசன். பல மாதங்களாக இந்தத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருந்தார் இவர். அதற்காக தொகுதிக்குள் தங்கி மக்களையும் அடிக்கடி சந்தித்து வந்தார். அந்த அறிமுகமும் மக்கள் நெருக்கமும் அவருக்கு கௌரவமான வாக்குகளை வாங்கித் தரும்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் மனிதநேய மக்கள் கட்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அ.தி.மு.க-வின் பாரதிமோகன் பலே மோகனாகிவிடுவார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:08 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Nagapattanam
 
விவசாயிகளும் மீனவர்களும் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதி நாகப்பட்டினம்.

தொடர்ந்து மூன்று முறை வென்று ஹாட்ரிக் அடித்த தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.எஸ்.விஜயன், நான்காவது முறையாகக் களத்தில் இருக்கிறார். தான் பொறுப்பில் இருந்த காலங்களில் கொண்டுவந்த திட்டங்களையும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த திட்டங்கள் பற்றியும் கடிதமாகத் தொகுதி முழுவதும் அனுப்பியிருக்கிறார். அதில் மத்தியப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி, இரண்டு கல்லூரிகள், கிழக்குக் கடற்கரை சாலைகளும் அடக்கம். இருந்தாலும், நாகை துறைமுகத்தை மேம்படுத்தவில்லை என்ற குறை தொகுதி மக்களுக்கு இருக்கிறது.

அ.தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் கோபால், நன்னிலம் தொகுதி எக்ஸ் எம்.எல்.ஏ. ஆனாலும், தேர்தல் நேர அரசியல்வாதியாக இருப்பதால், நாளைய பிரசாரம் எங்கு எனக் கேட்டால்கூட தொகுதிப் பொறுப்பாளரான அமைச்சர் காமராஜின் செல் நம்பரைக் கொடுத்துவிடுகிறார். அ.தி.மு.க. அரசு கொடுத்த இலவசங்களைச் சொல்லி ஓட்டு வேட்டையாடுகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருத்துறைப்பூண்டி எக்ஸ். எம்.எல்.ஏ. பழனிச்சாமி போட்டியிடுகிறார். இவர்களது பிரசாரமே வித்தியாசப்படுகிறது. யாரையும் குறைகூறாமல், கடந்த காலங்களில் இந்தத் தொகுதிக்காகப் போராட்டம் நடத்திய தழும்புகளை மக்களிடத்தில் எடுத்துரைக்கிறார்கள். ஆனால், இவை அனைத்தும் வாக்குகளாக மாறுவது சந்தேகமே.

பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் தேனி மாவட்டத்துக்காரர். 'மக்கள்கிட்ட இருக்கிற எழுச்சியைப் பார்த்தா நான் ஜெயிச்சுருவேன் போலருக்கு’ என வெள்ளந்தியாக பேசுகிறார். பா.ம.க. கேட்காமல் தரப்பட்ட தொகுதி என்பதால் கட்சிக்காரர்கள் உற்சாகமும் கூட்டணி பலமும் குறைவாக இருக்கிறது.

காங்கிரஸ் வேட்பாளரான செந்தில் பாண்டியனுக்கு, தேர்தல் புதிது. சொந்தக் கட்சியினரே இவருக்கு அனுசரணையாக இல்லை. ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த இவருக்குப் பிரசாரம் செய்ய வந்த தங்கபாலுவை தடுத்து நிறுத்தும் அளவுக்குப் கோஷ்டிப்பூசல் இங்கு தலைவிரித்து ஆடுகிறது.

எப்போதுமே நாகை தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பது வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிதான். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் கொடுக்காத காரணத்தால், தனித்து போட்டியிட்டு கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ-வான வேதரத்தினம், இப்போது மீண்டும் கட்சியில் இணைந்து வேலை செய்வதும், அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடுவதும், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக், ம.ம.க. கூட்டணியும்... மீண்டும் விஜயனை வில்லேந்த வைக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:08 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Sivagangai
 
தமிழகமே திரும்பிப் பார்க்கும் தொகுதிகளில் சிவகங்கையும் ஒன்று. காங்கிரஸிடம் இருந்து தொகுதி கைமாறப் போவது உறுதியாகிவிட்டது.

ஏழு முறை வெற்றிபெற்ற ப.சிதம்பரம், இந்த முறை தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை களம் இறக்கி இருக்கிறார். தி.மு.க. சார்பாக சுப.துரைராஜும் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதனும் பி.ஜே.பி. வேட்பாளராக ஹெச்.ராஜாவும் கோதாவில் இறங்கியிருக்கிறார்கள்.

கடந்த முறை தி.மு.க. ஆதரவுடன் நின்ற ப.சிதம்பரம் சில ஆயிரங்கள் வித்தியாசத்தில்தான் வென்றார். ப.சிதம்பரத்துக்கு எதிராகத் தொகுதியில் அதிருப்தி இருந்தாலும் ஆறு மாதங்களுக்கு முன்பே கார்த்தி பிரசாரத்தைத் தொடங்கிவிட்டதால், களத்தில் அவர் முந்தி நிற்கிறார். இதுவரை கூட்டணிக் கட்சிகளின் பக்கபலத்தில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், இந்த முறை தனித்து விடப்பட்டதால், சில இடங்களில் பூத் கமிட்டி நியமிக்கவே ஆள் இல்லாத நிலைமையும் உள்ளது. சிறுபான்மை வாக்குகளும் தலித் மக்களின் அமோக ஆதரவும் காங்கிரஸ் முகாமை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

தி.மு.க-வின் சுப.துரைராஜ் செலவு செய்வதில் கறார் காட்டுவது அந்தக் கட்சிக்கு பலவீனம். அவரது நடவடிக்கை பிடிக்காமல் கட்சியினர் பலரும் ஒதுங்கிவிட்டனர். முக்குலத்தோர் அல்லாத வாக்குகளை ஒருங்கிணைக்கும் இவரது முயற்சிக்கு முழுமையாகப் பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே.

பி.ஜே.பி. வேட்பாளரான ஹெச்.ராஜா இந்த முறை கூட்டணி பலத்துடன் கடும் சவாலாக இருப்பார் என்பது பொய்த்துவிட்டது. பி.ஜே.பி. தலைவரான ராஜ்நாத் சிங் வருகைக்குப் பின்னர், கட்சித் தொண்டர்களிடம் உற்சாகம் கிளம்பியிருந்தாலும் ரொம்ப லேட்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கிருஷ்ணனும் ஆம் ஆத்மியின் தமிழ் அரிமாவும் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார்கள்.

அ.தி.மு.க சார்பில் களம் இறங்கும் செந்தில்நாதன், இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்கப் போராடுகிறார். பிரசார சமயத்தில் இவர் மீது எழுந்த நில மோசடி புகார் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் உதயகுமார் கட்சியினரை ஒன்று சேர்க்க முயற்சி மேற்கொண்டபோதிலும் உள்குத்து வேலையில் சிலர் இறங்கி இருப்பதால், சுலபமாக கிடைக்க வேண்டிய வெற்றிக்குக் கடுமையாகப் பாடுபட வேண்டிய கட்டாயம்.

அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் மூன்​றுக்கும் போட்டி. சில ஆயிரம் வாக்கு வித்தி​யாசத்தில் அ.தி.மு.க. வெல்லும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:09 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Madurai
தமிழக அரசியலின் மையமே மதுரை என்று சொல்லலாம். அனைத்துவிதமான அரசியல் அதிர்வுகளும் இங்கிருந்துதான் கிளம்பும். இந்த முறை பெரிய புள்ளிகள் களத்தில் இல்லாததால் சற்றே சுறுசுறுப்புக் குறைவுதான்.
 
அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணன், மதுரையில் அறிமுகம் ஆனவர்.  துணை மேயராக இருந்து அமைச்சர் செல்லூர் ராஜுவின் அபிமானத்தைப் பெற்று, சீட் வாங்கியவர். அ.தி.மு.க-வில் யாதவ சமுதாயம் சார்பாகப் போட்டியிடும் ஒரே வேட்பாளர் என்பதால், அந்த சமூகத்தின் வாக்குகள் மொத்தமாகக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொகுதிக்குள் நிலவும் குடிநீர் பிரச்னையும் மின்வெட்டும் இவருக்கு வில்லனாக நிற்கிறது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாங்கி வைத்திருக்கும் கெட்ட பெயர், அவரை நிம்மதி இல்லாமல் செய்யலாம்.

தி.மு.க. வேட்பாளர் வக்கீல் வேலுசாமி, கட்சியில் மிச்சமிருக்கும் சீனியர்களில் ஒருவர். எம்.எல்.ஏ-வாக இருந்தவர். ''பலமுனை போட்டி நடப்பதால், தி.மு.க-வுக்கு என்று  உள்ள ஓட்டுகள் மொத்தமாகக் கிடைக்கும். ஈசியா ஜெயிச்சிடலாம்'' என்று கட்சியினரிடம் உற்சாகமாகச் சொல்லி வருகிறார். தி.மு.க-வினரும் ரொம்ப உற்சாகமாக வேலைசெய்து வருகிறார்கள். 'அழகிரியும் அவர் ஆட்களும் ஓரங்கட்டப்பட்டது தி.மு.க-வுக்கு இருந்த அடாவடி இமேஜைப் போக்கியிருக்கிறது. அவரால் எந்தப் பாதிப்பும் இல்லை’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.

தங்கள் கட்சிக்கு மதுரையை ஒதுக்க வேண்டாம் என்று தலைவர்களுக்கு பெட்டிஷன் போடும் அளவுக்கு பி.ஜே.பி-க்குள் கோஷ்டிப்பூசல். அதனாலேயே தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. சிவமுத்துக்குமார் போட்டியிடுகிறார். வேட்பாளர் மாற்றப்படலாம் என்ற புரளி இருந்ததால், பெரிதாக வேலை நடக்கவில்லை. சௌராஷ்டிரா, பிரமலைக் கள்ளர் வாக்குகளை மலையாக நம்புகின்றனர். சௌராஷ்டிரா மக்களில் பெரும்பாலானவர்கள் பி.ஜே.பி-யை ஆதரிப்பார்கள். அவர்களது வாக்குகள் முழுமையாக தனக்கு விழும் என்று இவர் நம்புகிறார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் பரத் நாச்சியப்பனுக்கு, சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராம்பாபு கடுமையாக வேலை செய்கிறார். நாச்சியப்பன் கள்ளர் சமுதாயத்தவர் என்பதால், அந்த மக்களின் வாக்குகளையும் பெரிதாக நம்புகிறார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு என்று வாக்கு வங்கி உள்ளது. தொழிலாளர்கள் மட்டுமல்ல, வர்த்தகர்கள் வட்டாரத்திலும் தோழர் விக்கிரமனைத் தெரியாதவர்கள் யாருமில்லை. கணிசமாக இவர் வாக்குகளைப் பிரிப்பார். யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்பதே கணிக்க முடியாததாக உள்ளது.

இங்கு கோபாலகிருஷ்ணனுக்கும் வேலுச்சாமிக்கும்தான் போட்டி. இலை பலத்தை நம்பி கோபாலகிருஷ்ணனே முன்னேறுவார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:09 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Tanjor
 
நெற்களஞ்சியமான தஞ்சையில் இரட்டை இலை, உதயசூரியன், தாமரை, கை, அரிவாள் சுத்தியல் ஆகியவை களம் காண்கின்றன. இருந்தாலும் இலைக்கும் சூரியனுக்கும் இடையில்தான் போட்டி!

டெல்டாவில் பிரதான தொழில் விவசாயம். 'விவசாய ந¤லங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் வாயுத் திட்டம் வரக் காரணம் யார்?’ என்று தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறி மாறி போஸ்டர் யுத்தம் நடத்துகின்றன. 'நம்மாழ்வார் உயிரோடு இருந்திருந்தால், தி.மு.க-வை எதிர்த்து போட்டியிட்டு இருப்பார். நாம் அதைச் செய்ய வேண்டும்’ என்ற சீமானின் பிரசாரம் டெல்டா விவசாய சங்கங்களை உசுப்பிவிட்டிருக்கிறது. பழனிமாணிக்கத்துக்கு மீண்டும் சீட் ஒதுக்காதது, தஞ்சையில் தி.மு.க. வெல்லக் கூடாது என்று மு.க.அழகிரி உறுதியாக இருப்பது ஆகியவை தி.மு.க-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றன.  அ.தி.மு.க. வேட்பாளர் கு.பரசுராமன், சொந்தக் கட்சியினரிடையே அதிகம¢ அறிமுகம் இல்லாதவர். 'அபாயப் பட்டியலில் தஞ்சை இருக்கிறது’ என்று உளவுத் துறை ரிப்போர்ட் கொடுக்க, கடுமையான கோபத்தை ஏரியா அமைச்சர் வைத்திலிங்கத்திடம் தலைமை காட்டியதாம். அதனை அடுத்து வைத்திலிங்கம், 'கோஷ்டிப் பூசல்களை மறந்துவிடுங்கள்’ என¢று கட்சியினரை சமாதானப்படுத்தியதோடு, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் நேரடியாக சென்று ஓட்டுக் கேட்டுவருவது, அ.தி.மு.க-வினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் தந்தை துளசி அய்யா வாண்டையார் இங்கே எம்.பி-யாக இருந்திருக்கி¢றார். இவருக்கு சொந்தமான பூண்டி புஷ்பம் கல்லூரியில் மாணவர்களுக்கு டொனேஷன் இல்லாமல் சீட் தருவதால், கல்விக் காவலர் என¢ற பட்டம் உண்டு. கட்சியையும் தாண்டி தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அவரது திரைமறைவு தேர்தல் வேலைகள் கை கொடுப்பதால், கணிசமான வாக்குகள் கிடைக்கும். சி.பி.எம். வேட்பாளர் தமிழ்ச்செல்விக்கு கட்சி ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும்.

பி.ஜே.பி. சார்பில் கருப்பு முருகானந¢தம் களத்தில் இருக்கிறார். தஞ்சையில் பா.ம.க. ஓட்டுக்கள் அதிகம் இல்லை. தே.மு.தி.க., ம.தி.மு.க. ஓட்டுக்கள் மட்டுமே சுமாராக உள்ளன. ராஜ்நாத்சிங் பிரசாரம் கொஞ்சம் கை கொடுத்துள்ளது.

இந்தா பிடி அந்தா பிடி என்று இழுபறியாக இருந்தாலும், கடைசி நேரத்தில் இலையை சூரியன் முந்தவே வாய்ப்பு அதிகம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:10 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Theni
 
முல்லை பெரியாறுக்காக உக்கிர போராட்டம் நடத்திய தொகுதி தேனி.

அ.தி.மு.க. சார்பில் பார்த்திபனும் தி.மு.க. சார்பில் பொன்.முத்துராமலிங்கமும் ம.தி.மு.க. சார்பில் அழகுசுந்தரமும் காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.ஆரூணும் களத்தில் நிற்கிறார்கள்.

பார்த்திபனின் பிரசாரத்தில் வேகம் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்காக இந்தத் தொகுதியை எதிர்பார்த்து இருந்தார். ஆனால் கிடைக்கவில்லை. ஓ.பி.எஸ். மகன் நின்றிருந்தால் பிரசாரம் கடுமையாக இருந்திருக்கும். பார்த்திபனுக்கு ஒப்புக்காகத்தான் அனைவரும் வேலை பார்க்கிறார்கள். குடிக்க நீர் இல்லை என்பது தொகுதியில் பெரிய பிரச்னையாக இருக்கிறது. விவசாயத்துக்குத் தண்ணீர் கொண்டுவர வெட்டிய 58-ம் கால்வாய் அ.தி.மு.க-வின் வில்லனாக மாறிவிட்டது. ஆனாலும் எம்.ஜி.ஆர். காலத்து இரட்டை இலை பக்தி இன்னும் அப்படியே இருக்கும் தொகுதி என்பதால், அந்த வாக்காளர்கள் இதுபற்றி அதிகம் கவலைப்படுபவர்களாக இல்லை. அதுதான் அ.தி.மு.க-வின் பெரிய பலம்.

தி.மு.க. சார்பில் நிற்கும் பொன்.முத்துராமலிங்கம், மதுரையிலேயே அரசியல் செய்தவர். மாவட்டச் செயலாளர் மூக்கையாவும் இவரை அலட்சியமாகப் பார்க்கிறார். அழகிரியின் குடைச்சல் அதிகம். இதனால் அவருக்குப் பிரசாரம் பண்ணுவதற்குக்கூட யாரும் வருவது இல்லை. பழைய அறிமுகங்களை வைத்து பிரசாரம் செய்கிறார்.

ம.தி.மு.க-வுக்காகப் பம்பரமாய் சுழல்வது இளைஞர்கள்தான். முல்லை பெரியாறு பிரச்னைக்காக தொடர்ந்து மாநில எல்லையில் போராட்டம் நடத்தியதை ம.தி.மு.க-வினர் தெருத்தெருவாகச் சொல்கிறார்கள். 'ம.தி.மு.க-வைத் தோற்கடிக்க கேரள தொழில் அதிபர்கள் பணத்தை இறக்கி இருக்கிறார்கள்’ என்று வைகோ சொன்னதும் இந்தத் தொகுதியில் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  போட்டியே அ.தி.மு.க-வுக்கும் ம.தி.மு.க-வுக்கும்தான்.

வாக்காளர்களுக்கு 'செக்’ வைத்து தனக்கே உரித்தான பாணியில் கவர்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண். முஸ்லிம் வாக்குகளையும் அதற்கு அடுத்தபடியாக தேவேந்திரகுல வேளாளர்கள் சமுதாயம், குரும்ப கவுண்டர்கள் வாக்குகளைக் கவர பல வித்தைகளை காட்டுகிறார் ஆரூண்.

அ.தி.மு.க-வின் கோட்டை ஆண்டிபட்டி. இரண்டு லட்சம் ஓட்டுகள் அங்கு அ.தி.மு.க-வுக்கு நிரந்தரம். அதனால், தேனி தொகுதியில் அ.தி.மு.க-வின் வெற்றியும் நிரந்தரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:10 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Virudhunagar
பட்டாசுக்கும் பரோட்டாவுக்கும் பெயர்போன தொகுதி விருதுநகர். வைகோ இங்கே போட்டியிடுவதால் ஒட்டுமொத்த இந்தியாவும் கவனிக்கும் தொகுதியாகிவிட்டது.
 
சிவகாசியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க. சார்பிலும், தி.மு.க-வில் தொழிலதிபர் ரத்தினவேலுவும் களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சிட்டிங் எம்.பி. மாணிக்கம் தாகூரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சாமுவேல்ராஜும் வேட்பாளர்கள்.
ஆரம்பத்தில் இருந்தே தேர்தல் வேலைகளில் சுறுசுறுவென களமிறங்கினார் அ.தி.மு.க. வேட்பாளர். ஆனால் தொகுதிக்குள் பிரதானமாக இருக்கும் மின்வெட்டு, குடிநீர் பிரச்னைகளால் சோர்ந்துவிட்டார். பல இடங்களில் எதிர்ப்புகள் கிளம்ப... என்ன செய்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார். ஆனாலும், இலைக்காக இருக்கும் ஓட்டு தன்னைக் காப்பாற்றும் என்பது அவரது நம்பிக்கை.

ம.தி.மு.க. வேட்பாளரான வைகோ, கடந்த முறை இந்தத் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். அந்த அனுதாபம் மக்களிடம் நிறையவே இருக்கிறது. நல்ல வேட்பாளர் என்ற இமேஜும் மக்களிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. 'மோடி தலைமையிலான ஆட்சி அமையும்போது, வைகோ அதில் முக்கிய இடம் பிடிப்பார். அதனால், தொகுதிக்கு நல்லது நடக்கும்’ என்று தொகுதிக்குள் பரவலான பேச்சு இருக்கிறது. இதுதான் வைகோவின் ப்ளஸ். உள்ளூர் பட்டாசுத் தொழிலுக்கு சவாலாக சீன பட்டாசு பிரச்னை. 'வைகோ வந்தால்தான் அதனைத் தடுக்க முடியும்’ என்ற நம்பிக்கை பட்டாசு அதிபர்கள், தொழிலாளர்கள் மத்தியில் உருவாகிவிட்டது.
தி.மு.க. வேட்பாளர் ரத்தினவேலுக்காக, விருதுநகரைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் மற்றும் சிறுபான்மை மக்களான முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் ஓட்டுக்களும் அவருக்குக் கிடைக்கும் என்பது தி.மு.க-வினரின் நம்பிக்கை. அத்துடன் பண விஷயத்திலும் தாராளம் காட்டிவருகிறார் ரத்தினவேல்.
அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு ஈடுகொடுத்து தேர்தல் வேலைகளைச் செய்துவருகிறார் காங்கிரஸ் வேட்பாளரும், சிட்டிங் எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர். இவர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், கணிசமாக உள்ள அந்த சமுதாய வாக்குகள் மாணிக்கம் தாகூருக்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொகுதியில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி இருக்கும் என்பதே உண்மை. அ.தி.மு.க-வுக்கு போக வேண்டிய வாக்குகளை கணிசமாக இவர் பிரிப்பார் என்கிறார்கள்.
தீப்பெட்டித் தொழிலாளர்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் குறிப்பிட்ட வாக்கு வங்கி உண்டு. தீண்டாமை ஒழிப்பு, சமூகப் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடும் கம்யூனிஸ்ட்களுக்குக் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

கடைசிகட்ட நிலவரப்படி, டெல்லிக்கு கிளம்பத் தயாராகிறார் வைகோ!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:11 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Ramanathapuram
 
இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு தமிழக மீனவர்கள் உள்ளாகி பரபரப்பு செய்திகளில் அடிக்கடி இடம் பிடிக்கும் தொகுதி ராமநாதபுரம்.

வாழ்வாதாரத்தை இழந்து வாடும் லட்சகணக்கான மீனவர்கள், வானம் பார்த்த பூமியை நம்பியிருக்கும் விவசாயிகள், அடுத்த வேளை உணவுக்காகப் போராடும் நெசவாளர்கள், பிரச்னைகளுக்கு மத்தியில் வாழும் தலித்துகள்... இதுதான் ராமநாதபுரம் தொகுதியின் நிலைமை.

முக்குலத்தோர், தலித்துகளுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இஸ்லாமிய வாக்குகளை நம்பி அன்வர்ராஜாவை களம் இறக்கியிருக்கிறது அ.தி.மு.க. இங்கு  தீர்க்கப்படாத சிக்கல்கள் ஏராளம். இதனால் அன்வர்ராஜா சந்தித்து வரும் பிரச்னைகளும் தாராளம். கடந்த முறை 20 மாதங்கள் மாநில அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு உருப்படியான திட்டங்களைக் கொண்டுவரவில்லை என்கிற குறை மக்களிடம் இருக்கிறது. தொண்டர்களிடம் நெருங்கிப் பழகாதது, யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் எந்த சமயத்திலும் பாக்கெட்டை காலியாகவே வைத்திருப்பது கட்சியினரை முகம் சுழிக்க வைக்கிறது.

இதுபோதாது என்று முதுகுளத்தூர் தொகுதியில் நிலவிவரும் கடும் குடிநீர் தட்டுப்பாடு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மீதான கோபம், தேவர் குருபூஜையின்போது அரசு விதித்த கட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்ட முக்குலத்து மக்களின் எதிர்ப்பு, அதனை சரிசெய்ய நினைத்து தங்கக் கவசம் வழங்கியதன் மூலம் தலித் சமூகத்தினரிடையே எழுந்துள்ள கோபம் என அன்வர்ராஜாவுக்கு எதிரான ஓட்டுகள் வரிசை கட்டி நிற்கின்றன.

மு.க.அழகிரியால் வசைபாடப்பட்ட முகம்மது ஜலீல் இந்தத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர். கூட்டணி பலத்தாலும் பண பலத்தாலும் வாக்குகளை கவர்ந்துவிட முடியும் என்பது இவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை. அழகிரி ஆதரவாளர்களின் வாக்குகள் இவருக்கு எதிராக மாறும் என நினைத்திருந்த வேளையில், ரித்தீஷ் அ.தி.மு.க-வுக்கு தாவியதால், வெறுப்படைந்த கட்சிக்காரர்கள் மீண்டும் ஜலீலுக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளனர்.

அ.தி.மு.க-வுக்கு கிடைக்க வேண்டிய முக்குலத்தோர் வாக்குகளைக் கணிசமாக தேசிய பார்வர்டு ப்ளாக் வேட்பாளரான பி.டி.அரசகுமார் பிரிப்பதுவும் ஜலீலுக்கு கூடுதல் தெம்பு.

காங்கிரஸ் வேட்பாளரான திருநாவுக்கரசர், தனது நீண்ட கால ஆதரவாளர்களை நம்பியே களமாடுகிறார். இதுதவிர, பி.ஜே.பி-யின் குப்புராமு கூட்டணி பலத்தையும் முக்குலத்தோர் மற்றும் யாதவ சமுதாய வாக்குகளையும் நம்பியிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான உமாமகேஸ்வரி பிரிக்கும் வாக்குகளும் அ.தி.மு.க-வின் அன்வர்ராஜாவின் கணக்கில் இருந்தே கழிக்கப்பட வேண்டும்.

இந்தக் கணக்குகளை வைத்துப் பார்த்தால், ராமநாதபுரத்தில் ஜலீல் கொடி உயரப் பறக்கிறது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 22, 2014 4:11 pm

40 தொகுதிகளின் நிலவரம் - Page 4 Tutucurian
ஆற்றுமணல் கொள்ளை, தாது மணல் அள்ளும் விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை என எப்போதும் தகித்துக்கொண்டிருக்கும் தொகுதி, தூத்துக்குடி. இந்தத் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி என ஆறு முனை போட்டி நிலவுகிறது.

அ.தி.மு.க அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்கிறார் வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி. வழக்கறிஞரான இவர், தொகுதி மக்களிடம் அறிமுகம் இல்லாதவர். இவருக்கு சீட் கொடுத்ததால், கட்சியினர் மேற்கொள்ளும் உள்குத்து வேலைகள் இவருக்கு எதிராக இருக்கின்றன. ஆனால், இதை எல்லாம் மீறி இந்தத் தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு இவருக்கு ப்ளஸ்.

தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரான பெரியசாமியின் மகன் ஜெகன் களம் இறக்கப்பட்டு இருக்கிறார். தனது மகனை எப்படியாவது ஜெயிக்க வைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பெரியசாமி தீவிரமாக களம் இறங்கியிருக்கிறார். முக்கியப் பிரமுகர்களை சந்திப்பது, அதிருப்தியில் இருக்கும் மாற்றுக் கட்சியினரைக் 'கவனித்து’ உள்குத்து வேலைகளைச் செய்ய ஊக்குவிப்பது, சொந்த கட்சிக்குள் நிலவும் குழப்படிகளைத் தீர்த்துவைப்பது என அவர் செய்யும் பஞ்சாயத்துகள் ஜெகனை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. தொகுதிக்குள் இருக்கும் தலித் வாக்கு வங்கி, சிறுபான்மையினர் வாக்குகளுடன் கட்சியின் வாக்குகளும் சேரும்போது வெற்றி சுலபமாகி, தனது மகனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவிட முடியும் என்பது பெரியசாமியின் நம்பிக்கை. ஆனாலும், சொந்தக் கட்சியைச்  சேர்ந்தவரான அனிதா ராதாகிருஷ்ணன் பிரசாரக் களத்தில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அத்துடன், சிட்டிங் எம்.பி-யான ஜெயதுரை தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கிறார். இதெல்லாம் அவருக்கு மைனஸ்.

பி.ஜே.பி. கூட்டணி பலத்துடன் ம.தி.மு.க-வின் சார்பில் களம் இறங்கியிருக்கும் ஜோயல், தொகுதிவாசிகளுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். ஆற்று மணல் கொள்ளை, ஸ்டெர்லைட் பிரச்னை என எந்தப் போராட்டக் களமாக இருந்தாலும், முன்னணியில் ம.தி.மு.க. இருந்தது.  தி.மு.க-வின் எதிர்ப்பு அணியினரின் வாக்குகள் தனக்கே கிடைக்கும் என நம்புகிறார். கூட்டணி பலமும், மோடி அலையும் தன்னை கரை சேர்க்கும் என்பது இவரது நம்பிக்கை. தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் ம.தி.மு.க. வலுவான செல்வாக்குடன் இருப்பதும் இவருக்கு பலம்.

காங்கிரஸ் சார்பில் ஏ.பி.சி.வி.சண்முகம், சி.பி.ஐ. சார்பில் மோகன்ராஜ் ஆகியோரும் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார்கள். ஆம் ஆத்மியில் களம் இறங்கும் புஷ்பராயனுக்கு மீனவ கிராமங்களில் செல்வாக்கு அமோகமாக உள்ளது. அவர்களின் வாக்குகளில் கணிசமானவற்றை இவர் கைப்பற்றுவார்.

இப்படி வாக்குகள் பிரிந்துகிடக்கும் சூழலில், தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தத் தொகுதியில் பம்பரம் சுழல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகிறது!

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக