புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
47 Posts - 51%
heezulia
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
37 Posts - 40%
T.N.Balasubramanian
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
239 Posts - 48%
ayyasamy ram
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
12 Posts - 2%
prajai
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
jairam
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_m10கவலைப்பட்டாக வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைப்பட்டாக வேண்டும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 27, 2014 5:52 pm

நிலப்பரப்பு என்று எடுத்துக் கொண்டால், 3,287,263 சதுர கி.மீ. விஸ்தீரணத்துடன் உலகின் ஏழாவது பெரிய நாடு இந்தியா. உலகத்தின் மொத்த நிலப்பரப்பில் 2.4% என்பதுடன், உலக மக்கள் தொகையில் 16.7% பேர் வாழும் பிரதேசம் இது. ஏறத்தாழ 120 கோடி மக்கள் தொகையுடன் அடுத்த 15 ஆண்டுகளில் சீனாவை முந்திக் கொண்டு உலகின் அதிக மக்கள்தொகை உள்ள நாடாக நம்நாடு மாறக்கூடும்.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 2007-08 இருந்து 2010-11 வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் விவசாய சாகுபடிக்கான நிலப்பரப்பு 7,90,000 ஹெக்டேர் குறைந்திருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கியமான காரணங்கள் மூன்றுதான். முதலாவது, விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும், சாலைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றப்படுவது. இரண்டாவது காரணம், பாசன வசதி அல்லது பாசனத்திற்கான மின்சார வசதி இல்லாமல் இருப்பது; மூன்றாவது, விவசாயத் தொழிலாளர்கள் குறைந்து விட்டிருப்பது.

2007ஆம் ஆண்டில் தேசிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் கொள்கை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதன்படி மத்திய வேளாண் அமைச்சகம் குறைந்து வரும் வேளாண் நிலப்பரப்பைத் தடுப்பதற்குப் பல வழிமுறைகளை சுட்டிக்காட்டியது. விவசாயம் என்பது மாநிலங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள உரிமை என்பதால், மத்திய அமைச்சு வழிகாட்டத்தான் முடியுமே தவிர, மாநிலங்கள்தான் அதை செயல்படுத்தியாக வேண்டும்.

மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, விவசாய நிலப்பரப்பை அதிகரிக்க ஐந்து மாநிலங்கள் மட்டும்தான் போதிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், அஸ்ஸாம், கோவா, சிக்கிம் ஆகிய மூன்று மாநிலங்களும் தங்களது விவசாய நிலப்பரப்பு சுருங்கிவிடாமல் பார்த்துக் கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மணிப்பூர், மிஜோரம், ஜம்மு காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் ஆகியவை தவிர, விவசாய நிலப்பரப்பை அதிகரித்திருக்கும் ஒரே ஒரு மாநிலம் குஜராத் மட்டுமே. மிக அதிகமாக விவசாய நிலப்பரப்பு குறைந்திருக்கும் மாநிலம் ஹரியாணா. ரியல் எஸ்டேட் வளர்ச்சியால் பாசன வசதியுடன் கூடிய ஏறத்தாழ 65,000 ஹெக்டேர் மூன்று சாகுபடி விளைநிலங்கள் ஹரியாணாவில் குடியிருப்புகளாக மாறிவிட்டிருக்கின்றன என்கிறது அரசின் அறிக்கை.

முடிந்தவரை விளைநிலங்கள் வேறு உபயோகங்களுக்காக மாற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும்; குறிப்பாக, பலதரப்பட்ட சாகுபடிகளையும் மேற்கொள்ளத்தக்க விதத்தில் பாசன வசதியுடன் கூடிய விளைநிலங்களின் பயன்பாடு மாற்றப்படக்கூடாது; பாசன வசதியுடன் கூடிய விளைநிலங்களை அரசேகூடத் தனது சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்கிறது மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதல். யார் கேட்கிறார்கள்? கடந்த நான்கு ஆண்டுகளில் 4,06,000 ஹெக்டேர் விவசாய நிலம் ரியல் எஸ்டேட்களாகவும், சாலைகளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. 3,84,000 ஹெக்டேர் விவசாயம் செய்யப்படாமல் தரிசாக விடப்பட்டிருக்கிறது. அவை விரைவிலேயே ரியல் எஸ்டேட்டாக மாற்றப்படக்கூடும்.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், நெல் சாகுபடிக்கான விவசாய பரப்பளவு, 20,60,000 (2001-02) ஹெக்டேரிலிருந்து, 19,04,000 (2011-12) ஹெக்டேராகக் குறைந்து விட்டிருக்கிறது. தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி சோளம் சாகுபடிப் பரப்பளவு 3,17,000 ஹெக்டேரிலிருந்து 1,98,000 ஹெக்டேராகவும், கம்பு 1,25,000 ஹெக்டேரிலிருந்து வெறும் 47,000 ஹெக்டேராகவும், கேழ்வரகு 1,25,000 ஹெக்டேரிலிருந்து 63,000 ஹெக்டேராகவும் 2001-02லிருந்து 2011-12 வரையிலான பத்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. இது தவிர, சிறு தானியங்கள் பயிரிடப்படும் மொத்த சாகுபடிப் பரப்பு, மேலே குறிப்பிட்ட பத்து ஆண்டுகளில் 27,66,000 ஹெக்டேரிலிருந்து 25,42,000 ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

பயிர் சாகுபடி செய்யும் நிலப்பரப்பு குறைந்து விட்டிருப்பதால் உணவு உற்பத்தி கணிசமாகக் குறைந்து விட்டதா என்றால், இப்போதைக்கு இல்லை. சொல்லப்போனால் உணவு தானிய உற்பத்தி 230.8 மில்லியன் டன்னிலிருந்து (2007-08), 255.4 மில்லியன் டன்னாக 2012-13இல் அதிகரித்திருக்கிறது. இதற்குக் காரணம், அளவுக்கு அதிகமாக கையாளப்படும் ரசாயன உரங்களும், நவீன விதைகளும். இப்படியே போனால், மண் முற்றிலுமாக வீணாகி, எந்தவித சாகுபடிக்கும் பயனில்லாத தரிசு பூமியாகிவிடுமே, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமா?

ஏற்கெனவே, இந்திய நிலப்பரப்பில் 22% பாசன வசதியே இல்லாத தரிசு நிலம். இந்த நிலையில் பாசன வசதியுள்ள விவசாய நிலங்களையும் சாலைகளாகவும், தொழிற்சாலைகளாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றிவிட்டால், அடுத்த வேளை உணவுக்கு நாம் கப்பலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுவிடக் கூடும்.

அதனால்... நாம் கவலைப்பட்டாகத்தான் வேண்டும்! (தினமணி தலையங்கம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக