புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 4%
prajai
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
manikavi
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
Rutu
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
216 Posts - 42%
heezulia
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
manikavi
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
prajai
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_m10 பிரம்மன் - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரம்மன் - திரை விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 22, 2014 4:41 am

 பிரம்மன் - திரை விமர்சனம் C828f6ff-42ea-4a7d-ad23-fad7b194a0c4_S_secvpf

நடிகர் : சசிகுமார்
நடிகை : லாவண்யா திரிபாதி
இயக்குனர் : சாக்ரடீஸ்
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
ஓளிப்பதிவு : ஜோமோன் டி ஜான் / பைசல் அலி

சிறு வயதிலிருந்தே சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகின்றனர் சசிகுமாரும், அவருடைய நெருங்கிய நண்பரான நவீன் சந்திராவும். இதில் நவீன் சந்திரா மட்டும் சென்னையில் சென்று பெரிய இயக்குனராகிவிடுகிறார்.

சசிகுமார் கோயம்புத்தூரிலேயே ஒரு பழைய தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். இதே தியேட்டரில் இவருடைய நண்பன் சந்தானமும் ஆபரேட்டராக பணிபுரிகிறார். நஷ்டத்துடன் இயங்கும் அந்த தியேட்டரை கஷ்டப்பட்டு நடத்தி வரும் சசிகுமார், ஒருநாள் நாயகி லாவண்யா பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார். இந்நிலையில், நாயகியின் அண்ணனையே தனது தங்கைக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால், இருவரும் நெருங்கி பழக வாய்ப்பு அதிகமாகிறது.

இருவரும் காதலித்து வரும் நிலையில், ஒருநாள் தியேட்டருக்கு வரிகட்ட வேண்டிய சூழ்நிலை வருகிறது. அதை கட்ட சசிகுமாரிடம் பணம் இல்லை. அதனால், சென்னையில் பெரிய இயக்குனராக இருக்கும் தனது நண்பனிடம் சென்று உதவி கேட்கலாம் என்று சென்னை கிளம்பி வருகிறார்.

சென்னைக்கு வரும் சசிகுமாருக்கு எதிர்பாராத விதமாக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. முற்றிலும் அனுபவமே இல்லாத சசிகுமாருக்கு சூரி உதவி செய்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய நண்பனான நவீன் சந்திரா தன்னுடைய கதையை படமாக எடுக்க விரும்புகிறான் என்று தெரிந்ததும் தனது நண்பனுக்காக அந்த கதையை விட்டுக் கொடுக்கிறார் சசி.

நண்பனுக்காக விட்டுக்கொடுத்த மகிழ்ச்சியில் சொந்த ஊர் திரும்பும் சசிகுமாருக்கு அங்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. தனது காதலியான லாவண்யாவுக்கும், நண்பன் நவீன் சந்திராவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விடுகிறது. நட்புக்காக தனது காதலையும் துறக்கிறார் சசி.

நட்புக்காக இயக்குனர் கனவு, காதல், தியேட்டர் என எல்லாவற்றையும் இழந்த சசிகுமாரின் வாழ்க்கை என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

இதுவரையிலான படங்களில் கிராமத்துப் பாணியில் நடித்து வந்த சசிகுமார் இந்த படத்தில் நகரத்துவாசியாக வருகிறார். படம் முழுக்க துறுதுறுவென நடித்திருக்கிறார். காதல், நகைச்சுவை, அடாவடி என அனைத்து அம்சங்களையும் சிறப்பாக செய்திருக்கிறார். தனது முந்தைய படங்களைப்போல இப்படத்திலும் நட்புக்கே முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார். ஆனால், நட்புக்காக கிடைக்கிற பணத்தையெல்லாம் விட்டுக்கொடுப்பது கொஞ்சம் ஓவர்தான்.

நாயகி லாவண்யா அழகாக இருக்கிறார். சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழியில் இன்றைய இளைஞர்கள் விழுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். நடிப்பிலும் ஓகேதான். தமிழில் ஒரு ரவுண்டு வரலாம்.

முதல்பாதியை கலகலப்பாக நகர்த்தத சந்தானம் மிகவும் உதவியிருக்கிறார். இவரது ஒன்லைன் காமெடி சூப்பர். இரண்டாம் பாதியில் சென்னை வரும் சசியுடன் சூரி சேர்ந்துவிடுகிறார். சினிமாவில் வாய்ப்பு தேடுபவராக வரும் சூரியும், சசியும் சேர்ந்து செய்யும் அலப்பறை இரண்டாம் பாதியை கலகலக்க வைக்கிறது.

ஒரே படத்தில் ஆசை, காதல், நட்பு, தியாகம் என எல்லாவற்றையும் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சாக்ரடீஸ். ஆனால், அதை திரைக்கதையில் சரியாக சொல்ல தடுமாறியிருக்கிறார். இன்றைய தியேட்டர்களின் நிலைமையை அழகாக எடுத்துக் கூறியதற்காக பாராட்டலாம். அதேபோல், சசிக்கும், தியேட்டருக்கும் உண்டான பிணைப்பை அழகாக காட்டியிருக்கிறார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் ஓகே ரகம்தான். ஜோமோன் டி ஜான் ஒளிப்பதிவில் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன.

மொத்தத்தில் ‘பிரம்மன்’ மாற்றம் தேவை.

மாலைமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 22, 2014 4:43 am

சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

வெயில் பட ஹீரோ மாதிரி இந்தப்பட ஹீரோவும் சினிமா தியேட்டரில் தன் வாழ்க்கையை தேடுபவர் தான். அந்த சாயல் வராமல் இருக்க தாவணிக்கனவுகள் பின்பாதி சாயலை மிக்ஸ் பண்ணி எம்.சசிகுமாரின் பிராண்ட் நட்பு, காதல், தியாகம் எல்லாவற்றையும் சேர்த்தால் பிரம்மன் கதை ரெடி.

ஹீரோ பழைய சினிமா தியேட்டரை லீசுக்கு எடுத்து ஓட்டிட்டு இருக்கார். தியேட்டர்ல கூட்டமே வர மாட்டேங்குது. புதுப்படம் தர மாட்டேங்கறாங்க, பழைய படத்துக்கு மக்கள் வர மாட்டேங்கறாங்க. 5 லட்சம் ரூபாய் கடன் ஆகிடுச்சு. சின்ன வயசுல சினிமாக்கனவோட இருந்த சக நண்பன் இப்போ சினிமாவுல புகழ் பெற்ற இயக்குநர்.அவரை சந்திச்சா உதவி கிடைக்கும்னு சென்னை கிளம்புறார்.

சென்னையில எதிர்பாராத விதமா ஹீரோவுக்கு, இயக்குநர் ஆகும் வாய்ப்பே கிடைச்சுடுது. அவரோட கதையை நண்பனுக்காக விட்டுத்தர்றார். காதலியையும் விட்டுத்தர தயார் ஆகறார். கடைசி வரை தான் யார்னு நண்பன் கிட்டே சொல்லவே இல்லை. உண்மை தெரிஞ்ச நண்பன் என்ன முடிவெடுக்கிறான் என்பதே கதை.

இதுவரை கிராமிய மனம் கமழும் படங்களிலேயே நடிச்சு வந்த எம்.சசிகுமார் முதன் முறையாக தைரியமாக நகர கதைக்கு மாறி இருக்கார். பெருசா மாற்றம் தெரியல. தங்கச்சி செண்ட்டிமெண்ட், அம்மா, அப்பாவிடம் பாசம் காட்டுவது அக்மார்க் எம்.ஜி.ஆர் பார்முலாக்கள் வழக்கம் போல் உண்டு. நண்பன் சம்பந்தப்பட்ட வசனங்களுக்கு தியேட்டரில் கை தட்டல் அள்ளுது (இன்னும் எத்தனை நாளுக்கு இதை வெச்சே ஓட்டுவாரோ..?). டூயட் காட்சிகளில் ராஜூ சுந்தரத்தின் தயவில் யதார்த்தமான, கண்ணை உறுத்தாட நடன அசைவுகள். முதன் முறையா பாரீன் லொக்கேசன்ல ஆட்டம்.

ஹீரோயின் புதுமுகம் லாவண்யா த்ரிவேதி. இவர் 2006ல் மிஸ் உத்தர்காண்ட் ஆக தேர்வானவர். மாடலிங்க் துறையில் கொடி கட்டிப்பறந்தவர், சிக் ஷாம்புவின் மாடல். 2012 ல் தெலுங்குப்படத்தில் அறிமுகம் ஆனவர். இஷா கோபிகர் முக அழகு சாயல், தமன்னாவின் முக பாவனைகள் இரண்டையும் கலந்து கட்டி அடித்த நீள் வட்ட நிலா முகம் . பிரமாதமாக நடிக்கா விட்டாலும் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என பட்சி சொல்லுது (இந்த பட்சிக்கு வேலையே இருக்காதா? எப்போ பாரு எதையாவது சொல்லிட்டே இருக்குமா?) இவருக்கு கண்களும், உதடுகளும் சின்னதாக இருந்தாலும் ரசிக்க வைக்கும் நளினங்கள் தான்.

படத்துக்கு பலம் சேர்க்கும் சந்தானம் படத்தின் கதையோடு ஒன்றிய காமெடி செய்கிறார். மொத்தப்படத்திலும் 24 ஜோக்ஸ் தான் சொல்றார் என்றாலும் அப்ளாஸ் அள்ளுறார் .

சூரி, பின் பாதி கதையில் தான் வர்றார். வழக்கம் போல் ஓவராக மொக்கை போடாமல் சுமாராக மொக்கை போடுகிறார்.

எம் சசிகுமார்-ன் நண்பராக வரும் நான் ஈ புகழ் சுதீப் ஒரு கல்லூரியின் கதை ஆர்யா மாதிரி பாடி லேங்குவேஜில் அடக்கி வாசிக்கிறார்.

படத்தில் வசனம் செம ஷார்ப். பின் பாதி திரைக்கதையில் தான் தடுமாறி விட்டார்கள். செயற்கையான சம்பவங்கள், வலிந்து திணிக்கப்பட்ட நண்பன் செண்ட்டிமெண்ட், காதலியை விட்டுத்தரும் ஒட்டாத தியாகம் எடுபடவில்லை. ஆனாலும் சந்தானம் காமெடிக்காகவும், எம்.சசிகுமாருக்காகவும் ஒரு முறை பார்க்கலாம்.

சி.பி.கமெண்ட்: ''பிரம்மன்'' - நேர்த்தியான முன் பாதி, சந்தானம் காமெடி, செயற்கையான நம்ப முடியாத பின் பாதி, நச் வசனம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 22, 2014 4:45 am

ஒட்ட வெட்டிய முடி, வெட்டாமல் விட்ட தாடி என, மிகச் சாதாரண தோற்றத்துடன், திறமையை மட்டும் மூலதனமாக வைத்து,  திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும் முன்னணிக்கு வந்தவர் சசிகுமார்.

அவரது முதல் படம் ‘சுப்பிரமணியபுரம்” படத்தில் நட்பின் ஒரு கோணத்தைக் காட்டி வெற்றி பெற்றவர் தொடர்ந்து தனது ஒவ்வொரு படத்திலும் நட்பின் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டி அவற்றையும் வெற்றிப் படங்களாக மாற்றிக் காட்டியிருக்கின்றார்.

அந்த வரிசையில் “பிரம்மன்” படத்திலும் தனது பால்ய நண்பனுக்காக -அவனது வெற்றிக்காக தனது புகழையும் ஏன் காதலியையும் கூட தியாகம் செய்யும் சிறந்த நண்பனாக வந்து மீண்டும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கின்றார் சசிகுமார்.

படத்தின் கதை

நவீன யுகத்தில் தமிழகத்தின் ஊர்களில் – அந்த ஊரின் மக்களோடும் வாழ்க்கையோடும் இரண்டறக் கலந்துவிட்ட திரையரங்கங்களின் சோக முடிவு ஏற்கனவே ‘வெயில்’ படத்தில் விரிவாகக் காட்டப்பட்ட ஒன்றுதான் என்றாலும் இந்தப் படத்திலும் அப்படிப்பட்ட ஒரு திரையரங்கத்தைப் பின்னணியில் வைத்து நகைச்சுவைத் தோரணங்களைக் கட்டியிருக்கின்றார்கள்.

கூடவே சந்தானத்தின் கலாய்ப்பும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா? சசிகுமாரும் சந்தானமும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் – அதோடு சேர்ந்து வளரும் சசிகுமாரின் காதல், அவரது குடும்பப் பின்னணி, தங்கை பாசம், தங்கையின் காதல் என முதல் பாதித் திரைக்கதை விரிகின்றது.

இரண்டாவது பாதியில், வரி கட்ட முடியாமல் மூடப்படும் நிலைமைக்கு ஆளாகும் திரையரங்கைக் காப்பாற்ற சென்னைக்கு படையெடுக்கின்றார் சசிகுமார். அந்தத் திரையரங்கை வைத்து சினிமா கற்று, புகழ் பெற்ற சினிமா இயக்குநராக விளங்கும் தனது பால்ய நண்பனைப் பார்த்து உதவி கேட்க முயற்சிகள் எடுக்கின்றார்.

பிரிந்து போன தனது பால்ய நண்பனைக் கண்டுபிடிக்கும் சசிகுமார், ஏற்கனவே புகழின் உச்சத்தில் திரைப்பட இயக்குநராக இருக்கும் அவனுக்குத் தெரியாமலேயே அவன் மேலும் புகழ் பெறவும் வாழ்க்கையில் முன்னேறவும் உதவிகள் புரிகின்றார். இந்த இடத்தில்தான் இயக்குநரின் மாறுபட்ட சிந்தனையோடு திரைக்கதையும் சூடுபிடிக்கின்றது.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நண்பனிடம் தன்னை யாரென்று சொல்லாமலேயே அவனுக்கென்று சில தியாகங்கள் செய்கின்றார் சசிகுமார். இறுதியில் தனது காதலியையே தியாகம் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது அவரது முடிவு என்ன, அவரது நண்பன் அவரை எப்படிக் அடையாளம் கண்டு கொள்கின்றான் என்பதையெல்லாம் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

முக்கால் வாசிப் படத்திற்குப் பின்னர் சசிகுமாரின் வழக்கமான நட்பு முகத்திற்கு இன்னொரு கோணத்தில் இயக்குநர் சாக்ரடீஸ், திரைக்கதை வடிவம் கொடுத்து பாராட்டு பெறுகின்றார்.

படத்தின் பலம்


சென்னை செல்லும் சசிகுமாருக்குப் பொருத்தமான நண்பன் கதாபாத்திரமாக, துணை இயக்குநராக வாய்ப்பு தேடி அலையும் சூரியைப் பொருத்தி படத்தின் பின்பாதியிலும் நகைச்சுவைப் பகுதிக்கு சாமர்த்தியமாக செழுமையேற்றியிருக்கின்றார் இயக்குநர் சாக்ரடீஸ்.

சந்தானத்துக்கு இணையான நகைச்சுவையை தனது சினிமா அலம்பல்கள் மூலம் காட்டியிருக்கின்றார் சூரி. ஆனால் சந்தானமும் சூரியும் சந்திப்பது போன்ற காட்சிகள் இறுதிவரையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதாநாயகி லாவண்யா திரிபாதி, முன்னாள் உத்தரகாண்ட் மாநில அழகியாக அழகிப் போட்டியில் வெற்றி பெற்றவராம். அதனால் அழகாகவும் இருக்கின்றார். டப்பிங் குரல் என்பது தெளிவாகத் தெரிகின்றது. தொடர்ந்து கவனம் செலுத்தினால் வாய்ப்புகள் கிடைக்கலாம்.

பால்ய நண்பனாக வரும் புதுமுகம் நவீன் சந்திராவும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கின்றார்.

படத்தின் முன்பாதியில் வரும் சசிகுமாரின் தங்கையின் காதல் படலமும் சிரிப்பை வரவழைக்கின்றது. நெக்லஸ் பார்த்ததும் தங்கை மனம் மாறுவதும், தாலி கட்டும் நேரத்தில் அபூர்வ ராகங்கள் ரஜினிகாந்த் பாணியில் பழைய காதலன் திருமண மண்டபத்தில் நுழைவதும் கலகலப்பூட்டுகின்றது. ஏதோ பரபரப்பாக நடைபெறப் போகின்றது என எதிர்பார்த்தால் அதையும் நகைச்சுவையாக முடித்து வைத்திருக்கின்றார் இயக்குநர்.

படத்தின் பின்பாதியில் காட்டப்படும் சினிமா தயாரிப்பு காட்சிகள் யதார்த்தத்தோடு படமாக்கப்பட்டிருக்கின்றது. சசிகுமாரின் சினிமாக் கதையை தயாரிப்பாளர்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது இயக்குநரின் திறமைக்கு சான்று.

படத்தின் பலவீனங்கள்

சசிகுமாரை சில காட்சிகளில் வழக்கமான ஹீரோவாகவும், வெளிநாட்டுப் பாடல்களோடும் காட்ட முற்பட்டிருப்பது செயற்கைத் தனமான திணிப்பாகத் தெரிகின்றது. கதையோடும் ஒட்டவில்லை.

பாடல் காட்சிகளில் சசிகுமாரை, அவரது காலணி, முகம் என தனித்தனியாக  ஹீரோத்தனமாக காட்ட முற்பட்டிருக்க வேண்டியதில்லை. அப்படியெல்லாம் காட்டப்படாமலேயே முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் அவர் என்பதை அவரும் அவரை வைத்து இயக்குபவர்களும் மறந்துவிடாமல் இருப்பது நல்லது.

வெளிநாட்டு பனிப்பிரதேச பாடல்களில் கூட சசிகுமாரோடு நான்கு ஆண்கள் ஆடுவதை இன்னும் எத்தனை படங்களில் காட்டிக் கொண்டிருக்கப் போகிறார்களோ? சசிகுமார் நீங்களுமா?

முதல் காட்சிகளில் சில கதாபாத்திரங்கள் பற்றியும், சில சம்பவங்கள் பற்றியும் சசிகுமார் விவரிப்பது போரடிப்பதோடு, ஏற்கனவே அவை பல படங்களில் நாம் பார்த்த காட்சிகளாகவும் இருக்கின்றன.

திரையரங்கை வாடகைக்கு எடுத்து வெற்றிகாண முயலும் சசிகுமாரை தந்தையாக வரும் பட்டிமன்றம் புகழ் கு.ஞானசம்பந்தன் பாராட்டாமல் ஒவ்வொரு காட்சியிலும் திட்டுவதும் பொருத்தமானதாக இல்லை.

படத்தின் சண்டைக் காட்சிகள் கூட வேண்டுமென்றே திணிக்கப்பட்டதுபோல் தெரிகின்றன. அதிலும் ஆந்திராவில் சசிகுமார் நண்பர்களோடு தெலுங்குப் படம் பார்க்கும் போது ஏற்படும் சர்ச்சையால் இடம்பெறும் சண்டை தேவையில்லாத திணிப்பு.

படத்தின் தலைப்பு பொருத்தமில்லாத ஒன்று என்றாலும், அதனை வலுக்கட்டாயமாக இறுதிக்காட்சியில் சசிகுமாரின் நண்பன் கூறுவதாக அமைத்திருப்பதிலும் செயற்கைத்தனம் மிளிர்கின்றது.

படத்தின் மற்ற சிறப்பம்சங்கள்

கொஞ்ச காலம் காணாமல் போன பத்மப் பிரியா ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக, பெருத்த உடம்புடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.

சில வித்தியாச நகைச்சுவைகள் குபீர் சிரிப்பை வரவழைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கல்லூரி விரிவுரையாளரிடமே விளக்கம் சொல்லி சசிகுமார் காதல் கடிதம் கொடுப்பது ரசிக்கும்படி இருக்கின்றது. அழகான விரிவுரையாளரிடம் சந்தானமும் கடிதம் கொடுப்பதும் நல்ல கலாய்ப்பு.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்பு தெலுங்குப் படத்தை ஞாபகப்படுத்துகின்றது. சில பாடல்களில் சசிகுமாருக்கு பொருந்தாத பின்னணிப் பாடகரைப் போட்டுப் பரிட்சை செய்து பார்த்திருக்கின்றார்கள்.

இருந்தாலும், தொடர்ந்து நட்பின் பல்வகைப் பரிமாணங்களைத் தனது திரைப்படங்களில் பரிமாறி வரும் சசிகுமாருக்காகவும், வித்தியாச திரைக்கதைக்காகவும், நகைச்சுவைக் காட்சிகளுக்காகவும் ‘பிரம்மனை’ தைரியமாக திரையரங்குக்குச் சென்று பார்க்கலாம்!

-இரா.முத்தரசன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Feb 22, 2014 2:38 pm

மிக தெளிவான விமர்சனங்கள். நன்றி அண்ணா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 22, 2014 4:22 pm

படம் விறுவிறுப்பு இன்றி இழு இழுன்னு இழுத்துச்சு




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 22, 2014 7:17 pm

பிரம்மன் திரைப்படத்தை ஆன்லைனில் பார்க்க:

இங்கு அழுத்தவும்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 23, 2014 12:04 am

விமர்சன தகவலுக்கு   பிரம்மன் - திரை விமர்சனம் 1571444738   பிரம்மன் - திரை விமர்சனம் 1571444738   பிரம்மன் - திரை விமர்சனம் 1571444738




 பிரம்மன் - திரை விமர்சனம் M பிரம்மன் - திரை விமர்சனம் U பிரம்மன் - திரை விமர்சனம் T பிரம்மன் - திரை விமர்சனம் H பிரம்மன் - திரை விமர்சனம் U பிரம்மன் - திரை விமர்சனம் M பிரம்மன் - திரை விமர்சனம் O பிரம்மன் - திரை விமர்சனம் H பிரம்மன் - திரை விமர்சனம் A பிரம்மன் - திரை விமர்சனம் M பிரம்மன் - திரை விமர்சனம் E பிரம்மன் - திரை விமர்சனம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 03, 2014 10:58 pm

 பிரம்மன் - திரை விமர்சனம் OUdGgW6pTAq6seCKC8Xd+aa8d4124ae8658cb129889c12ec1d0bf_L
-
  பிரம்மன் - திரை விமர்சனம் 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக