புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
3 Posts - 2%
bala_t
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
1 Post - 1%
prajai
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_m10கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 26, 2014 4:09 pm

பிரச்சினைகளைத் தீர்க்க எளிய வழி!

மனித வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள்! பிரச்சினைகளே இல்லாத ஒருவர் இனிமேல்தான் பிறக்க வேண்டும்! இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டு, சமாளித்து அவைகளைத் தூள்தூளாக்கிக் காற்றோடு பறக்கவிடுவதற்கான வழிகளை மகரிஷிகளும், தேவர்களும், ஞானிகளும் காட்டியுள்ளனர். யாகம் செய்தல் போன்ற கடினமான, அனைவராலும் எளிதில் செய்யமுடியாத வழிகள் போன்றவை ஒருபுறம் இருக்க, அனைவரும் எளிதில் பின்பற்றிச் சொல்லக்கூடிய ஏராளமான ஸ்தோத்திரங்களை அவர்கள் அருளிச் செய்துள்ளனர்.

ரிக்வேதம் உள்ளிட்ட நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ராமாயணம், மஹாபாரதம், பதினெட்டுப் புராணங்கள் ஆகியவற்றில் உள்ள நூற்றுக்கணக்கான ஸ்தோத்திரங்களில் விருப்பத்திற்கு உகந்தவற்றை ஓதினால் தீராத பிரச்சினைகளே இல்லை! இது தவிர ஆங்காங்கு பாரத தேசம் முழுவதும் அவ்வப்பொழுது அவதரித்துள்ள மகான்கள் இயற்றிய துதிகளும் அவர்களே கூறிய பலன்களைத் தப்பாது தரும்.

ஸ்தோத்திரம் என்றால் என்ன?

ஸ்துதி என்பது இறைவனின் குணபாவங்களை வியந்து, புகழ்ந்து பாடிப் பரவுவதாகும். சந்தமும் சொற்களும் துள்ளிக் குதித்து விளையாட ஸ்தோத்திரங்களின் பொருள் நம்மை உருக்கி உன்னத நிலைக்கு ஏற்றும். 'ஸ்து' என்ற தாதுவிலிருந்து தோன்றிய ஸ்தவம் மற்றும் ஸ்தோத்திரம் ஆகிய இரண்டிற்கும் சிறிய வேறுபாடு உள்ளது. ஸ்தோத்திரம் என்பது பலனைக் குறித்துச் செய்யப்பட்டு, அந்தப் பலனைப் பூர்வமாக முன்பு அடைந்தவர்களைப் போல அதைத் துதிப்பவர்களும் அடைய உதவுவதாகும். ஸ்தவம் என்பது பாவத்தைப் பிரதானமாகக் கொண்டதாகும். அது யாரைத் துதிப்பதற்காகச் செய்யப்பட்டதோ அந்தத் துதியையே பிரதானமாகக் கொண்டது.

ஸ்தோத்திரம் தரும் பலன்கள்

இப்படிப்பட்ட ஸ்தோத்திரம் அல்லது ஸ்தவம் (விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம், குமார ஸ்தவம் போன்ற எண்ணற்றவை) ஆகியவற்றின் மகிமை எல்லையற்றது. சொல்லுக்கு அப்பாற்பட்டது! பல பிரம்மாண்டமான விபத்துக்களிலிருந்தும் உயிர் காக்கும் வல்லமை பெற்றவை இவை! கஜேந்திரன் செய்த ஸ்துதியால் ஆதிமூலமே நேரில் தோன்றி கஜேந்திரனைக் காத்த கதையை நாடு அறியும். அதே போல உத்தரை காப்பாற்றப்பட்ட சம்பவமும் திரௌபதி செய்த ஸ்தோத்திரத்தால் அவள் மானம் காப்பாற்றப்பட்ட கதையும் பக்தர்கள் மனம் கவர்ந்தவை.

பீஷ்மரால் துதிக்கப்பட்ட விஷ்ணு சஹஸ்ரநாமம், அகஸ்தியரால் அருளப்பட்ட ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் போன்ற நூற்றுக்கணக்கான ஸ்தோத்திரங்களிலிருந்து அவரவர் மனோபாவத்திற்குத் தக்கபடியும், அவரவரது பிரச்சினைக்கு ஏற்றபடியும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடியும் உகந்தவற்றை எளிதில் தேர்ந்தெடுக்க முடியும். குந்தியின் மனோபாவம் சற்று விசித்திரமானது! குந்தி செய்த குந்தி ஸ்தோத்திரம், அவரைக் கஷ்டங்களிலிருந்து தொடர்ந்து காப்பாற்றி வந்த கிருஷ்ணனைக் கஷ்டமே வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டவில்லை. மாறாகத் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் வேண்டினார்! இந்த விபத்துக்கள் ஒவ்வொரு அடியிலும் அவருக்கு ஏற்பட வேண்டுமாம்! ஏன் இப்படி ஒரு விசித்திர ஆசை அவருக்கு? அப்படி விபத்து வந்தால் கிருஷ்ண தரிசனம் உடனே அவருக்குக் கிடைத்து விடுமாம்! பக்தையைக் காப்பாற்றப் பரந்தாமன் ஓடி வந்துதானே ஆக வேண்டும்! அதுமட்டுமின்றி அந்தத் தரிசனங்கள் அவரைப் பிறக்காமல் முக்தி அடையச் செய்து விடுமாம். கஷ்டங்களை ஒரேயடியாகத் தீர்க்க வழி கண்ட குந்தி ஸ்தோத்திரம் அவரைப் போன்றே அபூர்வமான மனநிலை உடையவர்களுக்கு உகந்த ஒன்று.

(விபத: சந்து ந: ஷச்சத்தத்ர ஜகத்குரோ)
பவதோ தர்சனம் யத்ஸ்யாத் அபுனர்பவ தர்சனம்

(ஓ, ஜகத்குரு! ஒவ்வொரு படியிலும் எப்போதும் எங்களுக்கு விபத்துக்கள் வரட்டும்! இதனால் உனது தரிசனம் கிடைக்கும். இது அடுத்த பிறவி அடையாதபடி எங்களைக் காக்கும்)

ஸ்தோத்திரத்தின் முதல் பலன் - அது மன அழுக்குகளை நீக்கி மனதைச் சுத்தமாக்கும். (விமலா மதிம்!). ஹ்ருதய சுத்தம் ஏற்படும். ஸ்தோத்திரம் செய்வதால் பாவ சுத்தி, ஹ்ருதய சுத்தி, க்ரியா சுத்தி (செயலில் தூய்மை), சரீர சுத்தி, குல சுத்தி, வாக்கு சுத்தி ஆகியவை ஏற்படுகின்றன. பாவ சுத்தியும் ஹ்ருதய சுத்தியும் மிகப் பவித்ரமானவை. துக்க நிவர்த்தி, எல்லையற்ற அமைதி, நிம்மதி, யாருக்கும் துன்பம் நினைக்காத மனம், இறைவனின் பாதாரவிந்தங்களில் ஈடுபாடு, பூஜையில் நம்பிக்கை, இகத்தில் சுகம் ஆகிய இவற்றோடு இறுதியாக மோட்சமும் தர வல்லவை ஸ்தோத்திரங்கள்!

ஸ்தோத்திரங்கள் எங்கே கிடைக்கும்? ராமகிருஷ்ண மிஷன் வெளியீடு, 476 ஸ்தோத்திரங்கள் அடங்கிய பழைய நூலான ஸ்தோத்திர ரத்னாஹர், கோரக்பூர்-கீதா பிரஸ் வெளியீடுகள் ஆகியவற்றில் முக்கிய ஸ்தோத்திரங்கள் உள்ளன. இவற்றால் உடனடிப் பலன் பெற முடியும்.

மொழியைக் கடந்த துதிகள்

ஸ்தோத்திரங்களை சமஸ்கிருதத்தில் மட்டும் தான் சொல்ல வேண்டுமா? இல்லை, இல்லை, இல்லை என்று ஆணித்தரமாக நமது மகான்கள் கூறி உள்ளனர். மறைத்து வைக்கப்பட்டுள்ள வேத ரகசியங்களை நாலாயிரத் திவ்ய பிரபந்தமாக ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ளனர். இதைக் கேட்டவாறே தமிழ் பிரபந்தங்களுக்குப் பின்னே திருமால் உற்சவ மூர்த்தியாகச் செல்ல வேதியரால் ஓதப்படும் வேதம் அவனைத் தேடிப் பின்னே வருகிறது!

அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பதிகங்களைப் பாடி அருளிய போதே அதன் பலன்களைத் தெளிவாகப் பதிக இறுதியிலேயே சொல்லி விடுகின்றனர். ஒரு பெரிய அதிகாரத் தோரணையுடன் "அரசாள்வர், ஆணை நமதே!" என்று ஞானசம்பந்தர் சொல்லும்போது, நமக்கு பக்தியுடன் கூடிய வியப்பு மேலிடுகிறது. அருணகிரிநாதரோ முருகனின் சுட்டித்தனமான இயல்பை வெட்டவெளிச்சமாகத் தன் திருப்புகழில் கூறி விடுகிறார். "எண்டிசை திகழும் புகழ் கொண்டவன், வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்" (சருவும்படி எனத் தொடங்கும் திருப்புகழில்).

நவக்கிரக தோஷங்களைப் போக்க வல்லது ஞானசம்பந்தர் அருளிய 'வேயுறு தோளிபங்கன்' பதிகம். அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் 'நாள் என் செயும், எனை நாடி வந்த கோள் என் செயும்' என்று பாடி முருக பக்தியில் நம்மைத் திடம் கொள்ளச் செய்கிறார். தசரதன் செய்த சனி ஸ்தோத்திரமோ சிறியதாக இருந்தாலும் சனீஸ்வரனைப் ப்ரீதி செய்து ஏராளமான நலன்களை வாரி வழங்கும் அதிக பலனைத் தருவதில் பெரிய ஸ்தோத்திரமாக விளங்குகிறது. இன்னும் வியாசர் அருளிய நவக்ரஹ ஸ்தோத்திரம், பீஷ்ம ஸ்தோத்திரம், துருவ ஸ்தோத்திரம், ப்ரஹ்லாத ஸ்தோத்திரம், கணேச ஸ்தோத்திரம் என இந்தப் பட்டியல் முடிவில்லாத ஒன்றாக நீள்கிறது.

சிவபிரானை நம் கடனாளியாக்க ஒரு வழி

பிறவாதிருக்க வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை மறவாதிருக்க வேண்டும் என்ற மனப்பாங்கை வளர்க்க அனுதினமும் அவரவர்க்கு விருப்பமான ஸ்தோத்திரங்களைச் சொல்வதே வெற்றிக்கு வித்திடும் அடிப்படையான வழியாகும்.

இறுதியாக ஒரு விஷயம்! அற்புதமான பூவுலகத்தில் மனித வாழ்க்கையைக் கொடுத்த சிவனையே நாம் கடனாளியாக்க முடியுமாம்! அதுவும் நீண்ட ஸ்தோத்திரங்களைக் கூடச் சொல்ல வேண்டாமாம். வழி என்ன பார்ப்போமா? விருத்தாசல புராணத்தில் வரும் செய்யுள் இது:-

"திருத்தமாய் ஒருத்தன் செவிப்புலன் கேட்பச்
சிவசிவ என்றிடில் பனை மேல்
இருத்திய இடி போல் எரிந்திடும் பாவம்
இறப்பொடு பிறப்பெல்லாம் இரியும்
ஒருத்தன் வாயார சிவ என முக்கால்
உரைத்திடில் ஓருரை அதற்குக்
கருத்தன் வாழ் பதத்தில் இருத்திடும், இரண்டும்
கடவுள் மேல் கடன்களாய் நிற்கும்"

சிவ சிவ சிவ என மூன்று தரம் சொன்னால் முதல் சிவ நமக்குச் சிவபதத்தைத் தந்து விடும், மீதி இரண்டு சிவ ஸ்துதியும் நமக்கு சிவன் தர வேண்டிய கடன்களாய் நிற்குமாம்! இதே போல ராம என்ற இரண்டெழுத்தின் அற்புத மகிமையைக் கம்பன் கூறக் கேட்போம்:-

"நன்மையும் செல்வமும் நாளு நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்"

துதிகளைச் செய்வோம்! துயரில்லா வாழ்வு பெறுவோம்!

ராம ராம ராம! சிவ சிவ சிவ!!

நன்றி : ஞான ஆலயம் செப்டம்பர் 2007

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக