புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிதுர் தோஷம் போக்கும் சிவன்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
First topic message reminder :
பிதுர் தோஷம் போக்கும் சிவன்
ஜனவரி 24,2014,12:10 IST
முன்னோர் கடனை சரிவர தீர்க்காதவர்கள் வணங்க வேண்டிய சிவன், காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள யோகலிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரர் கோயிலில் இதற்கான பரிகாரம் செய்து கொள்ளலாம்.
தல வரலாறு: சிவபக்தனான ராவணனைக் கொன்றதால், ராமனுக்கு பிரம்மஹத்திதோஷம் உண்டானது. தந்தையான தசரதருக்கு செய்ய வேண்டிய பிதுர்கடனும் அவருக்கு இருந்தது. பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிதுர்கடன் நிறைவேற்றாததால் ஏற்பட்ட சிரமங்கள் நீங்கவும், அவர் சிவபெருமானை வேண்டினார். அதன்பின், காஞ்சிபுரத்தில் இந்திரனால் உருவாக்கப்பட்ட சர்வதீர்த்தக் குளக்கரையில், பிதுர்க்கடனாக தசரதருக்கு தர்ப்பணம் செய்தார். சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
அவருக்கு "ராமநாத சுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. ராமனோடு வந்த சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சேநயர் ஆகியோரும் ஆளுக்கு ஒரு சிவலிங்கத்தை காஞ்சியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சீதாதீஸ்வரர், லட்சுமணீஸ்வரர், அனுமந்தீஸ்வரர் என பெயர் சூட்டப்பட்டது. இதன் பின் சிவன் அவர்களுக்கு யோகவடிவில் காட்சியளித்தார். அவரே "யோகலிங்கேஸ்வரர்' என்ற பெயர் பெற்றார்.
தோஷ நிவர்த்தி தலம்: இக்கோயில் சிறந்த தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. முன்னோருக்கு முறையான திதி, தர்ப்பணம் செய்யாமல் இருந்தால் முன்னோர் சாபம், பிதுர்தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால், திருமணத்தடை, குழந்தையின்மை, உடல்நலக்குறைவு போன்ற சிரமங்கள் வரலாம். இங்குள்ள யோகலிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரர், ஆஞ்சநேயரை வழிபட இந்தக் குறைபாடு நீங்குவதோடு, முன்னோர் ஆசியால் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இங்கு திருப்பணி நடந்து வருகிறது. பிப். 9ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் திருப்பணியில் பங்கேற்கலாம்.
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, அரக்கோணம் ரோட்டில் 2 கி.மீ.,
போன்: 97895 27982.
பிதுர் தோஷம் போக்கும் சிவன்
ஜனவரி 24,2014,12:10 IST
முன்னோர் கடனை சரிவர தீர்க்காதவர்கள் வணங்க வேண்டிய சிவன், காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள யோகலிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரர் கோயிலில் இதற்கான பரிகாரம் செய்து கொள்ளலாம்.
தல வரலாறு: சிவபக்தனான ராவணனைக் கொன்றதால், ராமனுக்கு பிரம்மஹத்திதோஷம் உண்டானது. தந்தையான தசரதருக்கு செய்ய வேண்டிய பிதுர்கடனும் அவருக்கு இருந்தது. பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிதுர்கடன் நிறைவேற்றாததால் ஏற்பட்ட சிரமங்கள் நீங்கவும், அவர் சிவபெருமானை வேண்டினார். அதன்பின், காஞ்சிபுரத்தில் இந்திரனால் உருவாக்கப்பட்ட சர்வதீர்த்தக் குளக்கரையில், பிதுர்க்கடனாக தசரதருக்கு தர்ப்பணம் செய்தார். சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
அவருக்கு "ராமநாத சுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. ராமனோடு வந்த சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சேநயர் ஆகியோரும் ஆளுக்கு ஒரு சிவலிங்கத்தை காஞ்சியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சீதாதீஸ்வரர், லட்சுமணீஸ்வரர், அனுமந்தீஸ்வரர் என பெயர் சூட்டப்பட்டது. இதன் பின் சிவன் அவர்களுக்கு யோகவடிவில் காட்சியளித்தார். அவரே "யோகலிங்கேஸ்வரர்' என்ற பெயர் பெற்றார்.
தோஷ நிவர்த்தி தலம்: இக்கோயில் சிறந்த தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. முன்னோருக்கு முறையான திதி, தர்ப்பணம் செய்யாமல் இருந்தால் முன்னோர் சாபம், பிதுர்தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால், திருமணத்தடை, குழந்தையின்மை, உடல்நலக்குறைவு போன்ற சிரமங்கள் வரலாம். இங்குள்ள யோகலிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரர், ஆஞ்சநேயரை வழிபட இந்தக் குறைபாடு நீங்குவதோடு, முன்னோர் ஆசியால் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இங்கு திருப்பணி நடந்து வருகிறது. பிப். 9ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் திருப்பணியில் பங்கேற்கலாம்.
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, அரக்கோணம் ரோட்டில் 2 கி.மீ.,
போன்: 97895 27982.
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
லட்சுமி கடாட்சம் பெருகட்டும்!
லட்சுமி கடாட்சம் பெருக, புரட்டாசி சனியன்று ஏத்தாப்பூர் லட்சுமி கோபாலரைத் தரிசித்து வாருங்கள்.
தல வரலாறு: பார்வதியின் தந்தை தட்சன், தன் மகள் பார்வதியையும், மருமகன் சிவனையும், அழைக்காமல் யாகம் நடத்தினான். அங்கு சென்று நியாயம் கேட்கப் போவதாக பார்வதி கூறினாள். அதைத் தடுத்தார் சிவன். ஆனால், அம்பாள், அங்கு சென்றுவிட்டாள். வருத்தமடைந்த சிவன், அம்பாளை பிரிந்து பூலோகம் வந்தார். ஒரு வில்வமரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். கணவன் தனித்து இருந்ததை அறிந்த அம்பாள் தன் அண்ணன் மகாவிஷ்ணுவுடன் பூலோகம் வந்தாள். சிவனை வணங்கி மன்னிக்கும்படி வேண்டினாள். மகாவிஷ்ணு தன் தங்கைக்காக சிவனிடம் பரிந்து பேசிசமரசம் செய்தார். கோபம் தணிந்த சிவன், அம்பாளை ஏற்றுக் கொண்டதோடு, அங்கே லிங்க வடிவிலும் எழுந்தருளினார். விஷ்ணுவும் அவருக்கு அருகிலேயே தங்கிவிட்டார். சிவபெருமான் சாம்ப மூர்த்தீஸ்வரர் என்ற பெயரில், பெருமாள் கோயில் அருகில் உள்ள மற்றொரு கோயிலில் இருக்கிறார்.
சிறப்பம்சம்: சேலம் வட்டாரத்திலுள்ள சிவனின் பஞ்சபூத தலங்களில் இது நீர் தலம். மன்னன் ஒருவன் சிவனுக்கு கோயில் கட்டியபோது இவ்விடத்தில் தானும் குடியிருப்பதாக பெருமாள் கனவில் தெரிவித்தார். எனவே, மன்னர் இவ்விடத்தில் பெருமாளுக்கும் தனியே கோயில் கட்டினார். மூலஸ்தானத்தில் லட்சுமி கோபாலர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மகாவிஷ்ணு விரும்பி தங்கிய இடமென்பதால் இத்தலத்தில் மகாலட்சுமி அரூபலட்சுமியாக (உருவம் இல்லாமல்) அருளுகிறாள். இதனால் சுவாமி "லட்சுமி கோபாலர்' எனப்படுகிறார். இங்கு வேண்டினால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
சமாதான தலம்: பிரிந்திருந்த சிவனையும், அம்பிகையையும் சேர்த்து வைப்பதற்காக மகாவிஷ்ணு இத்தலத்தில் அவர்களிடம் சமரசம் பேசினார். இதன் அடிப்படையில் இன்றுவரையிலும் இக்கோயில் பிரச்னைகளால் பிரிந்திருக்கும் கணவன், மனைவியரை சேர்த்து வைக்க உறவினர்கள் சமாதானம் பேசுகிறார்கள். மேலும், இங்கு திருமண நிச்சயம் செய்து பின் திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வர் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
கோயில் அமைப்பு: பிரகாரத்தில் வேதவல்லி தாயார் தனிச்சந்நிதியில் இருக்கிறாள். இங்குள்ள ஆஞ்சநேயரை "அருள்தரும் ஆஞ்சநேயர்' என்கின்றனர். இவர் தனது வாலை தலை மீது வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரகாரத்தில் ஆழ்வார்கள் சந்நிதி இருக்கிறது. இத்தல பெருமாளை "சமாதானம் செய்த பெருமாள்' என்கின்றனர். இவருக்கு மேல் உள்ள மூலஸ்தான விமானம் "திராவிட விமானம்' எனப்படுகிறது. திருமணத்தடை நீங்க தாயாருக்கு திருமஞ்சனம் செய்து வணங்குகின்றனர்.
இருப்பிடம்: சேலத்திலிருந்து ஆத்தூர் ரோட்டில் புத்திரகவுண்டன் பாளையம் 30 கி.மீ., இங்கிருந்து பிரியும் ரோட்டில் 4 கி.மீ., தூரத்தில் ஏத்தாப்பூர்.
திறக்கும் நேரம்: காலை 9.30- 12, மாலை 5- இரவு 8.
போன்: 04282 270 210.
லட்சுமி கடாட்சம் பெருக, புரட்டாசி சனியன்று ஏத்தாப்பூர் லட்சுமி கோபாலரைத் தரிசித்து வாருங்கள்.
தல வரலாறு: பார்வதியின் தந்தை தட்சன், தன் மகள் பார்வதியையும், மருமகன் சிவனையும், அழைக்காமல் யாகம் நடத்தினான். அங்கு சென்று நியாயம் கேட்கப் போவதாக பார்வதி கூறினாள். அதைத் தடுத்தார் சிவன். ஆனால், அம்பாள், அங்கு சென்றுவிட்டாள். வருத்தமடைந்த சிவன், அம்பாளை பிரிந்து பூலோகம் வந்தார். ஒரு வில்வமரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். கணவன் தனித்து இருந்ததை அறிந்த அம்பாள் தன் அண்ணன் மகாவிஷ்ணுவுடன் பூலோகம் வந்தாள். சிவனை வணங்கி மன்னிக்கும்படி வேண்டினாள். மகாவிஷ்ணு தன் தங்கைக்காக சிவனிடம் பரிந்து பேசிசமரசம் செய்தார். கோபம் தணிந்த சிவன், அம்பாளை ஏற்றுக் கொண்டதோடு, அங்கே லிங்க வடிவிலும் எழுந்தருளினார். விஷ்ணுவும் அவருக்கு அருகிலேயே தங்கிவிட்டார். சிவபெருமான் சாம்ப மூர்த்தீஸ்வரர் என்ற பெயரில், பெருமாள் கோயில் அருகில் உள்ள மற்றொரு கோயிலில் இருக்கிறார்.
சிறப்பம்சம்: சேலம் வட்டாரத்திலுள்ள சிவனின் பஞ்சபூத தலங்களில் இது நீர் தலம். மன்னன் ஒருவன் சிவனுக்கு கோயில் கட்டியபோது இவ்விடத்தில் தானும் குடியிருப்பதாக பெருமாள் கனவில் தெரிவித்தார். எனவே, மன்னர் இவ்விடத்தில் பெருமாளுக்கும் தனியே கோயில் கட்டினார். மூலஸ்தானத்தில் லட்சுமி கோபாலர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மகாவிஷ்ணு விரும்பி தங்கிய இடமென்பதால் இத்தலத்தில் மகாலட்சுமி அரூபலட்சுமியாக (உருவம் இல்லாமல்) அருளுகிறாள். இதனால் சுவாமி "லட்சுமி கோபாலர்' எனப்படுகிறார். இங்கு வேண்டினால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
சமாதான தலம்: பிரிந்திருந்த சிவனையும், அம்பிகையையும் சேர்த்து வைப்பதற்காக மகாவிஷ்ணு இத்தலத்தில் அவர்களிடம் சமரசம் பேசினார். இதன் அடிப்படையில் இன்றுவரையிலும் இக்கோயில் பிரச்னைகளால் பிரிந்திருக்கும் கணவன், மனைவியரை சேர்த்து வைக்க உறவினர்கள் சமாதானம் பேசுகிறார்கள். மேலும், இங்கு திருமண நிச்சயம் செய்து பின் திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வர் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
கோயில் அமைப்பு: பிரகாரத்தில் வேதவல்லி தாயார் தனிச்சந்நிதியில் இருக்கிறாள். இங்குள்ள ஆஞ்சநேயரை "அருள்தரும் ஆஞ்சநேயர்' என்கின்றனர். இவர் தனது வாலை தலை மீது வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரகாரத்தில் ஆழ்வார்கள் சந்நிதி இருக்கிறது. இத்தல பெருமாளை "சமாதானம் செய்த பெருமாள்' என்கின்றனர். இவருக்கு மேல் உள்ள மூலஸ்தான விமானம் "திராவிட விமானம்' எனப்படுகிறது. திருமணத்தடை நீங்க தாயாருக்கு திருமஞ்சனம் செய்து வணங்குகின்றனர்.
இருப்பிடம்: சேலத்திலிருந்து ஆத்தூர் ரோட்டில் புத்திரகவுண்டன் பாளையம் 30 கி.மீ., இங்கிருந்து பிரியும் ரோட்டில் 4 கி.மீ., தூரத்தில் ஏத்தாப்பூர்.
திறக்கும் நேரம்: காலை 9.30- 12, மாலை 5- இரவு 8.
போன்: 04282 270 210.
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
பிள்ளை வரம் தரும் வெள்ளிக்காப்பு!
ஆகஸ்ட் 27,2013,12:35 IST
நாராயணதீர்த்தருக்கு கிருஷ்ணராக காட்சிஅளித்த பெருமாள், தஞ்சாவூர் அருகிலுள்ள வரகூரில் அருள்பாலிக்கிறார். இவரிடம் வேண்டி வெள்ளிக்காப்பு அணிந்து கொண்டால் பிள்ளைவரம் விரைவில் கிடைக்கும்.
தல வரலாறு: நாராயணதீர்த்தர் என்ற மகான் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். பல தலங்களையும் வழிபட்ட அவர், நடுக்காவேரி என்னும் இடத்திலுள்ள விநாயகர் கோயிலில் இரவில் தங்கினார். கனவில் தோன்றிய திருமால், ""நாளை காலையில் எழுந்ததும் யாரைக் காண்கிறாயோ அவரைத் தொடர்ந்து செல். வயிற்று வலி குணமாகும்,'' என்று அருள்புரிந்தார். காலையில் கண்விழித்ததும் ஒரு வெள்ளைப் பன்றி (வராகம்) கண்ணில் பட்டது. தீர்த்தரும் பின்தொடர்ந்தார். அது பூபதிராஜபுரம் லட்சுமிநாராயணர் கோயிலுக்குள் சென்று மறைந்தது. அவரும் அங்கிருந்த பெருமாளை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். வராகவடிவில் பெருமாள் வந்த தலம் என்பதால் "வரகூர்' என பெயர் பெற்றது. பழமையான இந்தக்கோயில் முதலாம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்டது.
பாமாவின் விருப்பம்: நாராயணதீர்த்தர், வரகூரில் தங்கியிருந்த காலத்தில் திருமால் கிருஷ்ணராக காட்சியளித்தார். அவருடன் ருக்மணி, சத்தியபாமாவும் வந்திருந்தனர். அப்போது சத்தியபாமா தீர்த்தரிடம், "" கிருஷ்ணாவதாரத்தில் கோபியருடன் நடத்திய லீலைகளைப் பாடுங்கள்,'' என வேண்டுகோள் விடுத்தார். தீர்த்தரும் மகிழ்ந்து,"ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற பாடலைப் பாடினார். நாராயண கவிராயர் என்பவர் இத்தலத்தில் "ஸ்ரீகிருஷ்ண சிக்யோத்ஸவம்' என்ற பிரபந்தம் பாடியுள்ளார். சிக்யோத்ஸவம் என்றால் "உறியடி உற்ஸவம்'.
வெங்கடேசர் கோயில்: வரகூரில் மூலவர் லட்சுமிநாராயணர். உற்ஸவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள். உற்ஸவர் பெயரையே கோயிலுக்கு சூட்டியுள்ளனர். அர்த்தமண்டபத்தின் மேல்தளத்தில், வராகர், நாகர் சிலைகள் உள்ளன. மூலவரே பிரதானம் என்பதால் பரிவார மூர்த்திகள் இல்லை. மாட்டுப்பொங்கல், கிருஷ்ண ஜெயந்தி, வராக, கூர்ம, நரசிம்ம, பலராமர் ஜெயந்தி விழாக்கள் நடக்கின்றன.
மூலிகை பிரசாதம்: துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், கிராம்பு, ஜாதிக்காய் கலந்த பொடி பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்கு "துளசி மூலிகைப்பொடி' என்று பெயர். சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதயநோய், தோல் சம்பந்தப்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்க வழிபட்டு மூலிகைப் பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.
முதல்மாத சம்பளம்: நன்கு படித்திருந்தும் தகுதியான வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் வரகூர் கோயிலுக்கு வருகின்றனர். அதற்கு நன்றிக்கடனாக முதல் மாத சம்பளத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். வரகூரை சுற்றியுள்ள பகுதியில்
இந்த வேண்டுதல் வழக்கில் உள்ளது. இதன் மூலம் பணி, சம்பள உயர்வு போன்றவை விரைவில் உண்டாகும் என்பது நம்பிக்கை.
வெள்ளிக்காப்பு: குழந்தை இல்லாத தம்பதியர், பெருமாளின் பாதத்தில் வெள்ளி காப்பு வைத்து அதையே அணிந்து கொள்கின்றனர். குழந்தை பிறந்தபின், குழந்தையோடு வந்து காப்பை பெருமாளிடம் சமர்ப்பிக்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு: தீர்த்தருக்கு லட்சுமி நாராயணர் கிருஷ்ணராக காட்சியளித்ததால் இங்கு கிருஷ்ணஜெயந்தி சிறப்பாக நடக்கிறது. அப்போது "கிருஷ்ணலீலா தரங்கிணி' பாடல்களைப் பாடுவர். அங்கப்பிரதட்சணம் செய்வர். பெருமாளின் கையில் இருக்கும் வெள்ளிக்குடத்தில் செல்வவளம் பெருக வேண்டி பக்தர்கள் வெண்ணெய் நிரப்புவர். பத்து நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி
விழா நடக்கும்.
உறியடியோ கோவிந்தா: கிருஷ்ணஜெயந்தி பல்லக்குபவனியில் குறிப்பிட்ட வீட்டில் சிறுவர்களை அடைத்து விடுவர். அவர்கள் ""உறியடியோ கோவிந்தா'' என கூச்சலிட்டு கதவைத் திறக்கும்படி வேண்டுவர். ஆயர் பாடியில் கிருஷ்ணரைக் காணாமல் தவித்த பசு, கன்றுகள் கதறியதை நினைவூட்டும் விதத்தில் இது செய்யப்படுகிறது. இரவில் உறியடி கிருஷ்ணராக, பெருமாள் கையில் கம்புடன் வாய்க்கால் மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். 32 தீவட்டிகள் ஏற்றியதும் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. போட்டியில் வெல்பவருக்கு முறுக்கு, சீடை, பணமுடிப்பு தரப்படும். மறுநாள் ருக்மணி கல்யாணம் நடக்கிறது.
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ., திருவையாறிலிருந்து 15 கி.மீ.,
போன்: 94428 52145.
ஆகஸ்ட் 27,2013,12:35 IST
நாராயணதீர்த்தருக்கு கிருஷ்ணராக காட்சிஅளித்த பெருமாள், தஞ்சாவூர் அருகிலுள்ள வரகூரில் அருள்பாலிக்கிறார். இவரிடம் வேண்டி வெள்ளிக்காப்பு அணிந்து கொண்டால் பிள்ளைவரம் விரைவில் கிடைக்கும்.
தல வரலாறு: நாராயணதீர்த்தர் என்ற மகான் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். பல தலங்களையும் வழிபட்ட அவர், நடுக்காவேரி என்னும் இடத்திலுள்ள விநாயகர் கோயிலில் இரவில் தங்கினார். கனவில் தோன்றிய திருமால், ""நாளை காலையில் எழுந்ததும் யாரைக் காண்கிறாயோ அவரைத் தொடர்ந்து செல். வயிற்று வலி குணமாகும்,'' என்று அருள்புரிந்தார். காலையில் கண்விழித்ததும் ஒரு வெள்ளைப் பன்றி (வராகம்) கண்ணில் பட்டது. தீர்த்தரும் பின்தொடர்ந்தார். அது பூபதிராஜபுரம் லட்சுமிநாராயணர் கோயிலுக்குள் சென்று மறைந்தது. அவரும் அங்கிருந்த பெருமாளை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். வராகவடிவில் பெருமாள் வந்த தலம் என்பதால் "வரகூர்' என பெயர் பெற்றது. பழமையான இந்தக்கோயில் முதலாம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்டது.
பாமாவின் விருப்பம்: நாராயணதீர்த்தர், வரகூரில் தங்கியிருந்த காலத்தில் திருமால் கிருஷ்ணராக காட்சியளித்தார். அவருடன் ருக்மணி, சத்தியபாமாவும் வந்திருந்தனர். அப்போது சத்தியபாமா தீர்த்தரிடம், "" கிருஷ்ணாவதாரத்தில் கோபியருடன் நடத்திய லீலைகளைப் பாடுங்கள்,'' என வேண்டுகோள் விடுத்தார். தீர்த்தரும் மகிழ்ந்து,"ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற பாடலைப் பாடினார். நாராயண கவிராயர் என்பவர் இத்தலத்தில் "ஸ்ரீகிருஷ்ண சிக்யோத்ஸவம்' என்ற பிரபந்தம் பாடியுள்ளார். சிக்யோத்ஸவம் என்றால் "உறியடி உற்ஸவம்'.
வெங்கடேசர் கோயில்: வரகூரில் மூலவர் லட்சுமிநாராயணர். உற்ஸவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள். உற்ஸவர் பெயரையே கோயிலுக்கு சூட்டியுள்ளனர். அர்த்தமண்டபத்தின் மேல்தளத்தில், வராகர், நாகர் சிலைகள் உள்ளன. மூலவரே பிரதானம் என்பதால் பரிவார மூர்த்திகள் இல்லை. மாட்டுப்பொங்கல், கிருஷ்ண ஜெயந்தி, வராக, கூர்ம, நரசிம்ம, பலராமர் ஜெயந்தி விழாக்கள் நடக்கின்றன.
மூலிகை பிரசாதம்: துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், கிராம்பு, ஜாதிக்காய் கலந்த பொடி பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்கு "துளசி மூலிகைப்பொடி' என்று பெயர். சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதயநோய், தோல் சம்பந்தப்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்க வழிபட்டு மூலிகைப் பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.
முதல்மாத சம்பளம்: நன்கு படித்திருந்தும் தகுதியான வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் வரகூர் கோயிலுக்கு வருகின்றனர். அதற்கு நன்றிக்கடனாக முதல் மாத சம்பளத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். வரகூரை சுற்றியுள்ள பகுதியில்
இந்த வேண்டுதல் வழக்கில் உள்ளது. இதன் மூலம் பணி, சம்பள உயர்வு போன்றவை விரைவில் உண்டாகும் என்பது நம்பிக்கை.
வெள்ளிக்காப்பு: குழந்தை இல்லாத தம்பதியர், பெருமாளின் பாதத்தில் வெள்ளி காப்பு வைத்து அதையே அணிந்து கொள்கின்றனர். குழந்தை பிறந்தபின், குழந்தையோடு வந்து காப்பை பெருமாளிடம் சமர்ப்பிக்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு: தீர்த்தருக்கு லட்சுமி நாராயணர் கிருஷ்ணராக காட்சியளித்ததால் இங்கு கிருஷ்ணஜெயந்தி சிறப்பாக நடக்கிறது. அப்போது "கிருஷ்ணலீலா தரங்கிணி' பாடல்களைப் பாடுவர். அங்கப்பிரதட்சணம் செய்வர். பெருமாளின் கையில் இருக்கும் வெள்ளிக்குடத்தில் செல்வவளம் பெருக வேண்டி பக்தர்கள் வெண்ணெய் நிரப்புவர். பத்து நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி
விழா நடக்கும்.
உறியடியோ கோவிந்தா: கிருஷ்ணஜெயந்தி பல்லக்குபவனியில் குறிப்பிட்ட வீட்டில் சிறுவர்களை அடைத்து விடுவர். அவர்கள் ""உறியடியோ கோவிந்தா'' என கூச்சலிட்டு கதவைத் திறக்கும்படி வேண்டுவர். ஆயர் பாடியில் கிருஷ்ணரைக் காணாமல் தவித்த பசு, கன்றுகள் கதறியதை நினைவூட்டும் விதத்தில் இது செய்யப்படுகிறது. இரவில் உறியடி கிருஷ்ணராக, பெருமாள் கையில் கம்புடன் வாய்க்கால் மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். 32 தீவட்டிகள் ஏற்றியதும் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. போட்டியில் வெல்பவருக்கு முறுக்கு, சீடை, பணமுடிப்பு தரப்படும். மறுநாள் ருக்மணி கல்யாணம் நடக்கிறது.
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ., திருவையாறிலிருந்து 15 கி.மீ.,
போன்: 94428 52145.
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
செல்வம் தரும் ஐஸ்வர்ய முருகன்
ஆகஸ்ட் 21,2013,12:19 IST
காஞ்சிப்பெரியவர் அருள் வாக்கின்படி வளமான வாழ்வு அளிக்கும் ஐஸ்வர்ய முருகன் எழுந்தருளிய தலம், சென்னையிலுள்ள குமரன்குன்றம்.
தல வரலாறு: பல ஆண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் குன்று மட்டும் இருந்தது. ஒருசமயம் இங்கு வந்த காஞ்சிப் பெரியவர், பிற்காலத்தில் முருகன் கோயில் உண்டாகும் என அருள்வாக்கு வழங்கினார். சில காலம் கழித்து பக்தர்கள் சிலர், மலைப்பகுதியை சீர்படுத்திய போது வேல் ஒன்றைக் கண்டனர். அதை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பிற்காலத்தில் முருகன் கோயில் கட்டப்பட்டது. முருகனுக்கு "சுவாமிநாதர்' என பெயர் சூட்டப்பட்டது.
புத்தாண்டு படிபூஜை: குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் இத்தலம் "குமரன் குன்றம்' எனப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டின் போது, இங்குள்ள 120 படிகளுக்கு பூஜை நடத்தப்படும். அப்போது, முருகன் ஊஞ்சல் சேவை நடக்கும். திருநீர்மலை, திரிசூலம் ஆகிய தலங்களுக்கு நடுவில் இக்கோயில் உள்ளது. மலை அடிவாரத்தில் சித்திவிநாயகர், இடும்பன் சந்நிதி உள்ளன.
ஜெயம் தரும் காளி: இங்குள்ள அம்பாள், "ஜெயமங்கள மாகாளி' என அழைக்கப்படுகிறாள். வேண்டுபவர்களுக்கு வெற்றியும் (ஜெயம்), மங்களமும் தருபவள் என்பதால் இப்பெயர் வழங்கப்படுகிறது. பவுர்ணமியில் காளிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
வெள்ளியம்பலம்: மலைப்பாதையில், சுந்தரேஸ்வரர் கோயில் இருக்கிறது. இங்கு சிவன் வடக்கு நோக்கி, கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் இருக்கிறார். லிங்கத்தின் பாணத்தில் சிவனின் முழு உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அம்பாள் மீனாட்சிக்கும் சந்நிதி உள்ளது. இங்கு நடராஜர், இடக்காலை ஊன்றி, வலக்காலை தூக்கியபடி காட்சி தருகிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி என்பதால், நடராஜர் மதுரையில் காட்சி தருவது போல வெள்ளியம்பலமாக தோற்றமளிக்கிறார். சிவசக்தி அம்சமான சிவனின் வலது பாதம், சிவனுக்குரியதாக கருதப்படுகிறது. எனவே இங்கு நடராஜரை "தன்பாதம் தூக்கிய நடராஜர்' என்கின்றனர்.
ஐஸ்வர்ய முருகன்: மூலஸ்தானத்தில் சுவாமிநாதர், கையில் தண்டம் வைத்து பாலனாக காட்சி தருகிறார். இவரது பீடத்திலும், சந்நிதி எதிரிலும் யானை வாகனம் இருக்கிறது. உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். மலையில் வற்றாத குமார தீர்த்தம் உள்ளது. ஆடி, தை கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுவாமி, கிரிவலம் வருகிறார். இங்கு முருகன் குபேர திசையான வடக்கு நோக்கி இருப்பதால், "ஐஸ்வர்ய முருகன்' என போற்றப்படுகிறார். இவரை வணங்கினால் செல்வவளம் பெருகும்.
இருப்பிடம்: சென்னை தாம்பரத்தில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் குரோம்பேட்டை சென்று, அங்கிருந்து 1 கி.மீ., சென்றால் கோயில்.
திறக்கும் நேரம்: காலை 6.30- 11, மாலை 4.30- இரவு 8.30.
போன்: 044 - 2223 5319.
ஆகஸ்ட் 21,2013,12:19 IST
காஞ்சிப்பெரியவர் அருள் வாக்கின்படி வளமான வாழ்வு அளிக்கும் ஐஸ்வர்ய முருகன் எழுந்தருளிய தலம், சென்னையிலுள்ள குமரன்குன்றம்.
தல வரலாறு: பல ஆண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் குன்று மட்டும் இருந்தது. ஒருசமயம் இங்கு வந்த காஞ்சிப் பெரியவர், பிற்காலத்தில் முருகன் கோயில் உண்டாகும் என அருள்வாக்கு வழங்கினார். சில காலம் கழித்து பக்தர்கள் சிலர், மலைப்பகுதியை சீர்படுத்திய போது வேல் ஒன்றைக் கண்டனர். அதை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பிற்காலத்தில் முருகன் கோயில் கட்டப்பட்டது. முருகனுக்கு "சுவாமிநாதர்' என பெயர் சூட்டப்பட்டது.
புத்தாண்டு படிபூஜை: குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் இத்தலம் "குமரன் குன்றம்' எனப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டின் போது, இங்குள்ள 120 படிகளுக்கு பூஜை நடத்தப்படும். அப்போது, முருகன் ஊஞ்சல் சேவை நடக்கும். திருநீர்மலை, திரிசூலம் ஆகிய தலங்களுக்கு நடுவில் இக்கோயில் உள்ளது. மலை அடிவாரத்தில் சித்திவிநாயகர், இடும்பன் சந்நிதி உள்ளன.
ஜெயம் தரும் காளி: இங்குள்ள அம்பாள், "ஜெயமங்கள மாகாளி' என அழைக்கப்படுகிறாள். வேண்டுபவர்களுக்கு வெற்றியும் (ஜெயம்), மங்களமும் தருபவள் என்பதால் இப்பெயர் வழங்கப்படுகிறது. பவுர்ணமியில் காளிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
வெள்ளியம்பலம்: மலைப்பாதையில், சுந்தரேஸ்வரர் கோயில் இருக்கிறது. இங்கு சிவன் வடக்கு நோக்கி, கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் இருக்கிறார். லிங்கத்தின் பாணத்தில் சிவனின் முழு உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அம்பாள் மீனாட்சிக்கும் சந்நிதி உள்ளது. இங்கு நடராஜர், இடக்காலை ஊன்றி, வலக்காலை தூக்கியபடி காட்சி தருகிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி என்பதால், நடராஜர் மதுரையில் காட்சி தருவது போல வெள்ளியம்பலமாக தோற்றமளிக்கிறார். சிவசக்தி அம்சமான சிவனின் வலது பாதம், சிவனுக்குரியதாக கருதப்படுகிறது. எனவே இங்கு நடராஜரை "தன்பாதம் தூக்கிய நடராஜர்' என்கின்றனர்.
ஐஸ்வர்ய முருகன்: மூலஸ்தானத்தில் சுவாமிநாதர், கையில் தண்டம் வைத்து பாலனாக காட்சி தருகிறார். இவரது பீடத்திலும், சந்நிதி எதிரிலும் யானை வாகனம் இருக்கிறது. உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். மலையில் வற்றாத குமார தீர்த்தம் உள்ளது. ஆடி, தை கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுவாமி, கிரிவலம் வருகிறார். இங்கு முருகன் குபேர திசையான வடக்கு நோக்கி இருப்பதால், "ஐஸ்வர்ய முருகன்' என போற்றப்படுகிறார். இவரை வணங்கினால் செல்வவளம் பெருகும்.
இருப்பிடம்: சென்னை தாம்பரத்தில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் குரோம்பேட்டை சென்று, அங்கிருந்து 1 கி.மீ., சென்றால் கோயில்.
திறக்கும் நேரம்: காலை 6.30- 11, மாலை 4.30- இரவு 8.30.
போன்: 044 - 2223 5319.
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
நியாயத்தைப் பேசுங்க!
ஆகஸ்ட் 21,2013,12:16 IST
நியாயம் தவறி பேசுபவர்களும், நியாயத்துக்குப் புறம்பாக தீர்ப்பளிப்பவர்களும் பாம்பாகப் பிறந்து சிரமப்படுவார்கள் என்பதை உலகுக்கு உணர்த்த, காஞ்சிபுரத்திலுள்ள ஒரு தலத்தில் திருமால் எழுந்தருளினார். இவரை அனந்தபத்மநாபர் என்பர். தோல்நோய் உள்ளவர்கள் இங்கு சென்று வருவது சிறப்பு.
தல வரலாறு: பொய் சொன்னால் மனிதனுக்கு என்னாகும் என்பதை உணர்த்தும் வகையில் திருமால் ஒரு லீலையை நிகழ்த்த விரும்பினார். ஒருசமயம், கைலாயத்தில் ஒருமுறை சிவனும், பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார். விளையாட்டுக்கு நடுவராக இருந்து வெற்றி பெற்றது யார் என்று சொல்லும் பொறுப்பை ஏற்றார். விளøயாட்டில் பார்வதி வென்றாள். ஆனால், போட்டியில் சிவன் வென்றதாகக் கூறிவிட்டார். தன் சகோதரரே இப்படி சொல்லிவிட்டாரே என வருத்தமடைந்தாள் பார்வதி.
கடவுளாகவே இருந்தாலும் பொய் பேசினால், அவர் அதற்குரிய தண்டனையை அடைந்து தீர வேண்டும் என்பதன் அடிப்படையில், தவறான தீர்ப்பு வழங்கிய திருமால், பிளவுபட்ட நாக்குடன் பாம்பாக மாறும்படி சபித்தாள். சாபவிமோசனமாக,பூலோகத்தில் முக்தி தலமாக விளங்கும் காஞ்சிபுரம் சென்று சிவனைப் பூஜித்தால் சாபம் நீங்கும். பிளவுபட்ட நாக்கு ஒன்றாகி பாம்பு வடிவம் மறையும்,'' என்றாள். அதன்படி, திருமாலும் காஞ்சிபுரத்தில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். அவரே, அனந்தபத்மநாபர் என்னும் திருநாமத்துடன் சயனகோலத்தில் லட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கிறார். சிவன் லிங்கவடிவில் மகாகாளேஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். மூவரும் ஒரே சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு.
விநாயகரும், முருகனும் சந்நிதியின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். காஞ்சிபுரத்திலுள்ள நவக்கிரக தலங்களில் இது கேதுவுக்குரியதாக திகழ்கிறது. பூமியில் புதையுண்டு கிடந்த இக்கோயிலைப் பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப்பெரியவர் புதுப்பித்து திருப்பணி செய்தார். பலமுறை அவர் வழிபட்டதோடு, பக்தர்களுக்கு ஆசியும் அளித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் செயல்படுகிறது. இது பாம்பு தொடர்புடைய கோயில் என்பதால், தோல், வாய்,நாக்கு, தொடர்பான நோயுள்ளவர்கள், அடிக்கடி தொண்டையில் வலி வந்து பேச சிரமப்படுகிறவர்கள் நோய் நீங்க அனந்த பத்மநாபரை வேண்டலாம். இங்கு வருபவர்கள் காஞ்சிபெரியவர் அதிஷ்டானம் சென்றும் வழிபடுவர்.
திருவிழா: வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, அனந்தபத்மநாப விரதம்
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., பெரியகாஞ்சிபுரம் அன்னதானக்கூடம் சாலைத்தெரு (சந்தர்ப்பணை) பின்புறம்
திறக்கும்நேரம்: காலை 7- 10, மாலை 5- 6
போன்: 044 2722 4236.
ஆகஸ்ட் 21,2013,12:16 IST
நியாயம் தவறி பேசுபவர்களும், நியாயத்துக்குப் புறம்பாக தீர்ப்பளிப்பவர்களும் பாம்பாகப் பிறந்து சிரமப்படுவார்கள் என்பதை உலகுக்கு உணர்த்த, காஞ்சிபுரத்திலுள்ள ஒரு தலத்தில் திருமால் எழுந்தருளினார். இவரை அனந்தபத்மநாபர் என்பர். தோல்நோய் உள்ளவர்கள் இங்கு சென்று வருவது சிறப்பு.
தல வரலாறு: பொய் சொன்னால் மனிதனுக்கு என்னாகும் என்பதை உணர்த்தும் வகையில் திருமால் ஒரு லீலையை நிகழ்த்த விரும்பினார். ஒருசமயம், கைலாயத்தில் ஒருமுறை சிவனும், பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார். விளையாட்டுக்கு நடுவராக இருந்து வெற்றி பெற்றது யார் என்று சொல்லும் பொறுப்பை ஏற்றார். விளøயாட்டில் பார்வதி வென்றாள். ஆனால், போட்டியில் சிவன் வென்றதாகக் கூறிவிட்டார். தன் சகோதரரே இப்படி சொல்லிவிட்டாரே என வருத்தமடைந்தாள் பார்வதி.
கடவுளாகவே இருந்தாலும் பொய் பேசினால், அவர் அதற்குரிய தண்டனையை அடைந்து தீர வேண்டும் என்பதன் அடிப்படையில், தவறான தீர்ப்பு வழங்கிய திருமால், பிளவுபட்ட நாக்குடன் பாம்பாக மாறும்படி சபித்தாள். சாபவிமோசனமாக,பூலோகத்தில் முக்தி தலமாக விளங்கும் காஞ்சிபுரம் சென்று சிவனைப் பூஜித்தால் சாபம் நீங்கும். பிளவுபட்ட நாக்கு ஒன்றாகி பாம்பு வடிவம் மறையும்,'' என்றாள். அதன்படி, திருமாலும் காஞ்சிபுரத்தில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். அவரே, அனந்தபத்மநாபர் என்னும் திருநாமத்துடன் சயனகோலத்தில் லட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கிறார். சிவன் லிங்கவடிவில் மகாகாளேஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். மூவரும் ஒரே சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு.
விநாயகரும், முருகனும் சந்நிதியின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். காஞ்சிபுரத்திலுள்ள நவக்கிரக தலங்களில் இது கேதுவுக்குரியதாக திகழ்கிறது. பூமியில் புதையுண்டு கிடந்த இக்கோயிலைப் பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப்பெரியவர் புதுப்பித்து திருப்பணி செய்தார். பலமுறை அவர் வழிபட்டதோடு, பக்தர்களுக்கு ஆசியும் அளித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் செயல்படுகிறது. இது பாம்பு தொடர்புடைய கோயில் என்பதால், தோல், வாய்,நாக்கு, தொடர்பான நோயுள்ளவர்கள், அடிக்கடி தொண்டையில் வலி வந்து பேச சிரமப்படுகிறவர்கள் நோய் நீங்க அனந்த பத்மநாபரை வேண்டலாம். இங்கு வருபவர்கள் காஞ்சிபெரியவர் அதிஷ்டானம் சென்றும் வழிபடுவர்.
திருவிழா: வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, அனந்தபத்மநாப விரதம்
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., பெரியகாஞ்சிபுரம் அன்னதானக்கூடம் சாலைத்தெரு (சந்தர்ப்பணை) பின்புறம்
திறக்கும்நேரம்: காலை 7- 10, மாலை 5- 6
போன்: 044 2722 4236.
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
வாசல் பார்த்த நந்தி
ஆகஸ்ட் 14,2013,12:08 IST
பொதுவாக சிவாலயங்களில் நந்தி சிவனை நோக்கியிருக்கும். ஆனால், வேலூர் அருகிலுள்ள திருவல்லம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் சிவனின் எதிரில் உள்ள நந்தி சிவனை நோக்காமல், வாசலை நோக்கி திரும்பி இருப்பது அதிசயம்.
தல வரலாறு: திருவல்லத்தில் வாழ்ந்த அர்ச்சகர் ஒருவர், அருகிலுள்ள கஞ்சன் மலையிலிருந்து சுவாமி அபிஷேகத்திற்கு தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம். அந்த மலையில் இருந்த கஞ்சன் என்ற முரடன், அவருக்கு தொல்லை கொடுத்து வந்தான். அர்ச்சகர் இறைவனிடம் முறையிடுவார். ஈசன் தன் வாகனமான நந்தியிடம் அந்த முரடனை அடக்குமாறு கட்டளையிட்டார். நந்தி அரக்கனை எட்டு பாகங்களாக கிழித்து போட்டது. இருந்தாலும், சாகாவரம் பெற்றிருந்த அந்த முரடன், நந்தியின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டான். அவன் மீண்டும் வருகிறானா என்பதை கண்காணிக்கும் வகையில், நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பினார். பின், அவன் சிவனிடம் சரணடைந்து மோட்சம் பெற்றான்.
தலப்பெருமை: முழு முதற்கடவுளான விநாயகர் "அம்மையப்பன் தான் உலகம்', "உலகம் தான் அம்மையப்பன்' என உலகிற்கு அறிவித்த தலம் திருவல்லம். அம்மையப்பரை விநாயகர் "வலம்' வந்ததை உணர்த்துவதால், திருவலம்' என்றாகி, நாளடைவில் திருவல்லம்' ஆயிற்று.இங்குள்ள தல விநாயகர் "கனிவாங்கிய பிள்ளையார்' எனப்படுகிறார். அதற்கேற்றாற் போல் துதிக்கையில் மாங்கனியை வைத்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
தன் வாகனமான மூஞ்சுறுவின் மீது அமர்ந்திருப்பது காண்பதற்கரிய சிறப்பம்சமாகும். முருகனுக்கும், விநாயகருக்கும் சிவன் வைத்த போட்டியில் வென்ற விநாயகர் ஞானப்பழத்துடன் இத்தலத்தில் வந்து அமர்ந்ததாக வரலாறு. எனவே, இவரை வணங்குவோர் பிறப்பற்ற நிலையை அடைவர். இத்தல முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார். சுவாமி சன்னதியின் வலது பக்கம் தொட்டி போன்ற அமைப்பில் ஜலகண்டேஸ்வரர் என்னும் பாதாளேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். மழை வேண்டி இவருக்கு வழிபாடு செய்யப்படுகிறது. சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களுள் இதுவும் ஒன்று.
சனகர் சமாதி: வில்வநாதீஸ்வரருக்கு நேர் எதிரில் நந்திக்கு நடுவில் தட்சிணாமூர்த்தியின் சீடரான சனகரின் சமாதி உள்ளது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் நிவர்த்தியாகும் என்பர். சிவானந்த மவுன குரு சுவாமி இங்குள்ள பலா மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து இறைவனின் அருள் பெற்றுள்ளார். இவருக்கு கோயில் அருகேதனி மடம் உள்ளது. கஞ்சன்மலையிலுள்ள சுயம்புலிங்கங்களுக்கு பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க, வில்வநாதீஸ்வரர், தைப்பொங்கல் கழித்த 3ம் நாள், கஞ்சனின் உடலுறுப்புகள் விழுந்த எட்டு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு எழுந்தருளி, கஞ்சனுக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
கோயில் அமைப்பு: 5 ஏக்கர் நிலப்பரப்பில் 7 நிலை ராஜகோபுரம், மூன்று பிரகாரம் என பிரமாண்டமான கோயிலாக விளங்குகிறது. அம்மன் வல்லாம்பிகை நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். சுமார் 1500 வருடங்கள் பழமையான இத்தலத்தில் தலவிருட்சமாக
வில்வமும், தீர்த்தங்களாக நீலாநதியும், கவுரியும் உள்ளன. இத்தல இறைவனை அப்பரும், சம்பந்தரும் தங்களது தேவாரப்பாடலில் பாடி உள்ளனர். உள் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், பெருமாள், சுப்பிரமணியர், சகஸ்ரலிங்கம், மீனாட்சிசுந்தரர், பைரவர், சூரியன், பாதாளேஸ்வரர் சந்நிதிகளும், கிழக்கு நோக்கி மிகப்பெரிய நந்தியும் காட்சியளிக்கின்றன.
பிரசாத மகிமை: சிவனின் பெயர் வில்வநாதீஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது. இதை சாப்பிட்டால் மந்த புத்தி நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தோல் நோய் நீங்கும், ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் : வேலூரிலிருந்து ராணிப்பேட்டை செல்லும் வழியில் 16 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 6.30 -12, மாலை 4 - இரவு 8.
போன்: 0416 223 6088.
ஆகஸ்ட் 14,2013,12:08 IST
பொதுவாக சிவாலயங்களில் நந்தி சிவனை நோக்கியிருக்கும். ஆனால், வேலூர் அருகிலுள்ள திருவல்லம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் சிவனின் எதிரில் உள்ள நந்தி சிவனை நோக்காமல், வாசலை நோக்கி திரும்பி இருப்பது அதிசயம்.
தல வரலாறு: திருவல்லத்தில் வாழ்ந்த அர்ச்சகர் ஒருவர், அருகிலுள்ள கஞ்சன் மலையிலிருந்து சுவாமி அபிஷேகத்திற்கு தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம். அந்த மலையில் இருந்த கஞ்சன் என்ற முரடன், அவருக்கு தொல்லை கொடுத்து வந்தான். அர்ச்சகர் இறைவனிடம் முறையிடுவார். ஈசன் தன் வாகனமான நந்தியிடம் அந்த முரடனை அடக்குமாறு கட்டளையிட்டார். நந்தி அரக்கனை எட்டு பாகங்களாக கிழித்து போட்டது. இருந்தாலும், சாகாவரம் பெற்றிருந்த அந்த முரடன், நந்தியின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டான். அவன் மீண்டும் வருகிறானா என்பதை கண்காணிக்கும் வகையில், நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பினார். பின், அவன் சிவனிடம் சரணடைந்து மோட்சம் பெற்றான்.
தலப்பெருமை: முழு முதற்கடவுளான விநாயகர் "அம்மையப்பன் தான் உலகம்', "உலகம் தான் அம்மையப்பன்' என உலகிற்கு அறிவித்த தலம் திருவல்லம். அம்மையப்பரை விநாயகர் "வலம்' வந்ததை உணர்த்துவதால், திருவலம்' என்றாகி, நாளடைவில் திருவல்லம்' ஆயிற்று.இங்குள்ள தல விநாயகர் "கனிவாங்கிய பிள்ளையார்' எனப்படுகிறார். அதற்கேற்றாற் போல் துதிக்கையில் மாங்கனியை வைத்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
தன் வாகனமான மூஞ்சுறுவின் மீது அமர்ந்திருப்பது காண்பதற்கரிய சிறப்பம்சமாகும். முருகனுக்கும், விநாயகருக்கும் சிவன் வைத்த போட்டியில் வென்ற விநாயகர் ஞானப்பழத்துடன் இத்தலத்தில் வந்து அமர்ந்ததாக வரலாறு. எனவே, இவரை வணங்குவோர் பிறப்பற்ற நிலையை அடைவர். இத்தல முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார். சுவாமி சன்னதியின் வலது பக்கம் தொட்டி போன்ற அமைப்பில் ஜலகண்டேஸ்வரர் என்னும் பாதாளேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். மழை வேண்டி இவருக்கு வழிபாடு செய்யப்படுகிறது. சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களுள் இதுவும் ஒன்று.
சனகர் சமாதி: வில்வநாதீஸ்வரருக்கு நேர் எதிரில் நந்திக்கு நடுவில் தட்சிணாமூர்த்தியின் சீடரான சனகரின் சமாதி உள்ளது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் நிவர்த்தியாகும் என்பர். சிவானந்த மவுன குரு சுவாமி இங்குள்ள பலா மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து இறைவனின் அருள் பெற்றுள்ளார். இவருக்கு கோயில் அருகேதனி மடம் உள்ளது. கஞ்சன்மலையிலுள்ள சுயம்புலிங்கங்களுக்கு பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க, வில்வநாதீஸ்வரர், தைப்பொங்கல் கழித்த 3ம் நாள், கஞ்சனின் உடலுறுப்புகள் விழுந்த எட்டு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு எழுந்தருளி, கஞ்சனுக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
கோயில் அமைப்பு: 5 ஏக்கர் நிலப்பரப்பில் 7 நிலை ராஜகோபுரம், மூன்று பிரகாரம் என பிரமாண்டமான கோயிலாக விளங்குகிறது. அம்மன் வல்லாம்பிகை நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். சுமார் 1500 வருடங்கள் பழமையான இத்தலத்தில் தலவிருட்சமாக
வில்வமும், தீர்த்தங்களாக நீலாநதியும், கவுரியும் உள்ளன. இத்தல இறைவனை அப்பரும், சம்பந்தரும் தங்களது தேவாரப்பாடலில் பாடி உள்ளனர். உள் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், பெருமாள், சுப்பிரமணியர், சகஸ்ரலிங்கம், மீனாட்சிசுந்தரர், பைரவர், சூரியன், பாதாளேஸ்வரர் சந்நிதிகளும், கிழக்கு நோக்கி மிகப்பெரிய நந்தியும் காட்சியளிக்கின்றன.
பிரசாத மகிமை: சிவனின் பெயர் வில்வநாதீஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது. இதை சாப்பிட்டால் மந்த புத்தி நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தோல் நோய் நீங்கும், ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் : வேலூரிலிருந்து ராணிப்பேட்டை செல்லும் வழியில் 16 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 6.30 -12, மாலை 4 - இரவு 8.
போன்: 0416 223 6088.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான தொகுப்பு ரவி பொறுமையாக படித்தேன் , ரொம்ப ரொம்ப நன்றி !
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|