புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
3 Posts - 3%
prajai
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
3 Posts - 3%
manikavi
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%
Baarushree
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
214 Posts - 42%
heezulia
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
18 Posts - 4%
sugumaran
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
6 Posts - 1%
manikavi
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
4 Posts - 1%
prajai
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
தை மாத ராசி பலன்கள் ! Poll_c10தை மாத ராசி பலன்கள் ! Poll_m10தை மாத ராசி பலன்கள் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தை மாத ராசி பலன்கள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:03 pm

மேஷம்: வளைந்து கொடுக்கத் தெரியாததால் சில வாய்ப்புகளை நழுவவிட்ட வர்களே! தன்மானம், சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் தருப வர்களே! நெற்றி யடியாகப் பேசும் நீங்கள், அன்பு காட்டினால் அடிப்பணிந்து வருவீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் கடந்த ஒருமாத காலமாக 9ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களுக்கும் தந்தையாருக்கும் கருத்து மோதல்களை கொடுத்து வந்தார். செலவினங்களையும், அலைச்சல்களையும் தந்தார். அப்படிப்பட்ட சூரியன் இப்போது 10வது வீட்டில் பலமாக அமர்வதால் தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.

10ம் வீட்டில் அமர்ந்து கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளை கொடுத்து வந்த சுக்கிரன் இந்த மாதம் முழுக்க வக்ரமாகி 9ல் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் குறையும். அடிக்கடி பழுதான வாகனம் சீராகும். வீடு பாராமரிப்புச் செலவும் குறையும். மின்னணு, மின்சார சாதனங்களை புதிதாக வாங்குவீர்கள். ஆனால், ராசிக்கு 7ம் வீட்டில் சனி அமர்ந்து கண்டகச் சனி நடைபெறுவதாலும், ராகு 7ல் நிற்பதாலும் மனைவிக்கு அறுவை சிகிச்சை வந்துபோகும்.

சிறுசிறு விபத்துகள் ஏற்படும். மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். அரசியல்வாதிகளே! புதிய பொறுப்புகளை தலைமை உங்களை அழைத்துத் தரும். கோஷ்டிப் பூசலை தவிர்க்கப் பாருங்கள். தொகுதி மக்களிடையே நெருக்கமாவீர்கள். மாணவர்களே! விடைகளை எழுதிப் பாருங்கள். அவ்வப்போது வகு ப்பறையில் அரட்டைப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். கன்னிப் பெண்களே! முக்கிய முடிவுகள் எடுத்து செயல்படுவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களை தவிர்ப்பீர்கள். நல்லவர்கள் அறிமுகமாவார்கள். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

புதன் 10ல் தொடர்வதால் வியாபாரத்தில் புதுத் தொடர்புகள் கிடைக்கும். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். அயல்நாட்டில் இருப்பவர்கள் மூலமாக ஆதாயம் உண்டு. புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். பழைய பங்குதாரருடன் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அவர்களிடம் தொழில் ரகசியங்களையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கமிஷன், புரோக்கரேஜ், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்யோகத்தில் உங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிட்டும். தொல்லை கொடுத்து வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரியால் உற்சாகமடைவீர்கள். சிலருக்கு வேறு நல்ல வாய்ப்புகளும் வரும். கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் கூடி வரும். படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டை தீரும். ஆழ்குழாய் கிணறு மூலமாக தண்ணீர் வசதி பெருகும்.

ராசியான தேதிகள்: ஜனவரி 15, 16, 21, 22, 23, 24, 30, 31 பிப்ரவரி 1, 2, 10, 12

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 25ந் தேதி மாலை 5 மணி முதல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் எதிலும் பொறுமையுடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருக்காட்டுப்பள்ளியில் அருள்பாலிக்கும் அக்னீஸ்வரரை தரிசியுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:03 pm

ரிஷபம்: நெற்றியில் சுருக்கம் விழுந்தாலும் இதயத்தை இளமையாக வைத்திருப்பவர்களே! தொடங்கிய வேலையை முடிக்கும் வரை தூங்காத வர்களே! பணப்பற்றை விட, நாட்டுப் பற்று, மொழிப் பற்று அதிகமுள்ளவர்களே! ராஜ கிரகங்களான குருவும், சனியும் சாதகமாக இருப்பதால் செல்வாக்கு கூடும். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5ல் நிற்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. உங்களுடைய ராசிநாதன் சுக்கிரன் வக்ரமடைந்து 8ல் மறைந்திருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும்.

தவிர்க்க முடியாத செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படும். உடல் அசதி, சோர்வு, காய்ச்சல், சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல் வரக்கூடும். ஆனால், சுக்கிரன் 2ம் வீட்டை பார்த்துக் கொண்டிருப்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உங்களின் சுகாதிபதியான சூரியன் 9ம் வீட்டில் நிற்பதால் தந்தையாருக்கு உடல் நலக் குறைவு ஏற்படும். ஆனால், புதனும் 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தந்தையாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். கேது 12ல் மறைந்திருப்பதால் அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள்.

அரசியல் வாதிகளே! தலைமையுடன் இருந்த மோதல் நீங்கும். தலைமைக்கு நெருக்கமாக இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொகுதி மக்களின் விசேஷங்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். மாணவர்களே! மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும்.

வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத் துணை அமையும். உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப தொழிலை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். உணவு, ஏற்றுமதி-இறக்குமதி, வாகனம், கட்டிட வகைகளால் லாபமடைவீர்கள். வெளிமாநிலத்தை சார்ந்தவர்கள் மூலமாக புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். வேலையாட்கள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.

உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் ம த்தியில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும். உயரதிகாரி உங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். விரும்பியபடி இடமாற்றம் கிடைக்கும். கூடுதல் சலுகைகளும் பெறுவீர்கள். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். கலைத்துறையினரே! புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள். விவசாயிகளே! மகசூல் பெருகும். பூச்சித் தொல்லை, எலித் தொல்லை நீங்கும். தடைகள் அகன்று வளர்ச்சிப் பாதையில் செல்லும் மாதமிது.

ராசியான தேதிகள் : ஜனவரி 16, 17, 18, 20, 23, 24, 26 பிப்ரவரி 2, 3, 4, 5, 12

சந்திராஷ்டம தினங்கள் : ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம் : திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள திருச்செந்துறை சந்திரசேகரசுவாமியை தரிசித்து வாருங்கள். உழவாரப் பணியில் ஈடுபடுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:04 pm

மிதுனம்: சோர்ந்து வரும் சொந்த- பந்தங்களின் வேடந்தாங்கல்களே! நெருக்கடி நேரத்திலும் தன்னம்பிக்கை தளரா தவர்களே! மாறுபட்ட சமூதாயப் பார்வை உள்ள வர்களே! சுற்றியிருப்பவர்கள் சுகப்பட தன் தேவைகளை சுருக்கிக் கொள்பவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரன் வக்ரமாக இருந்தாலும் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் பிரச்னைகளையும், சிக்கல்களையும் தீர்ப்பதற்கான மனோபலம் கிடைக்கும். கேது லாப வீட்டில் தொடர்வதால் ஷேர் மூலமாக பணம் வரும்.

கடைசி நிமிஷத்தில் பணத்தேவை பூர்த்தியாகும். உங்கள் ராசிக்குள் குரு அமர்ந்து ஜென்ம குரு தொடர்வதாலும் வக்ரமடைந்திருப்பதாலும் தூக்கம் குறையும். சுக ஸ்தானமான 4ம் வீட்டில் 6ம் வீட்டாதிபதி செவ்வாய் நிற்பதால் அடிவயிற்றில் வலி, உஷ்ணக் கட்டி வந்து நீங்கும். பூர்வ புண்ய ஸ்தானமான 5ல் சனியும், ராகுவும் நிற்பதால் புதிய முயற்சிகள், முதலீடுகளெல்லாம் செய்வதற்கு முன்பாக யோசிப்பது நல்லது. திடீர் முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். உங்களுடைய ராசிக்கு 8ல் சூரியனும், புதனும் மறைந்து நிற்பதால் வி.ஐ.பிகளின் ஆதரவால் சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள்.

அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம். வழக்குகளை சந்திக்க வேண்டி வரும். சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தொகுதி மக்களை மறக்காதீர்கள். மாணவர்களே! ஒருமுறை படித்தால் மட்டும் போதாது. அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. வேதியியல் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கன்னிப் பெண்களே! நண்பர்கள் விவகாரத்தில் கவனமாக இருங்கள். நண்பர்களிடம் உயர்கல்வி சம்பந்தமான விஷயங்களை விவாதிப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

கல்யாணம் தள்ளிப் போகும். போட்டித் தேர்வுகளில் சற்றே பின்னடைவு ஏற்படும். கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாட்களுக்கு அதிகமாக முன்பணம் தர வேண்டாம். விலை உயர்ந்த ஜூவல்லரி, பைனான்ஸ் தொழிலில் இருப்பவர்கள் சின்னச் சின்ன நஷ்டங்களை சந்திக்க வேண்டி வரும். பங்குதாரர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்த கடன் உதவி கிடைக்கும்.

கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும். வளைந்து கொடுத்துப் போக கற்றுக் கொள்ளுங்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. வெகுளித்தனமாகப் பேசி விமர்சனத்திற்கு உள்ளாகாதீர்கள். கலைத்துறையினரே! இழந்த வாய்ப்பை மீண்டும் பெறுவீர்கள். விவசாயிகளே! எலித் தொல்லையால் மகசூல் குறையும். தவறான உரங்களைப் பயன்படுத்தாதீர்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 17, 18, 19, 20, 26, 27, 28 பிப்ரவரி 4, 5, 6, 7

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: சென்னை - சிங்கப்பெருமாள் கோவில் எனும் தலத்தில் அருள்பாலிக்கும் பாடலாத்ரி நரசிம்மரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:40 pm

கடகம்: மரத்தடியில் பிறந்தாலும் மாநிலத்தை ஆள நினைப்பவர்களே! முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபித்துக் காட்டுபவர்களே! குழுவாக செயல்படுவதை விரும்புபவர்களே! சூரியனும், புதனும் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். சுக்கிரன் வக்ரமாகி உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் நிற்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினாலும் தவறாகப் புரிந்து கொள்வார்கள்.

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4ம் வீட்டில் பாவ கிரகங்கள் அமர்ந்திருப்பதால் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும். வாழ்க்கையே பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். கவலைப்படாதீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 3ம் வீட்டில் நிற்பதாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதாலும் பிரச்னைகளை கடக்க நல்ல வழி கிடைக்கும். உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவதன் மூலமாக ஆழ்மனதில் ஒரு அமைதி நிலவும்.

பிள்ளைகள் சில நேரங்களில் பொறுப்பாகவும், சில சமயங்களில் எரிச்சலூட்டும் வகையிலும் செயல்படுவார்கள். நீங்கள் நடுநிலையாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகளே! உங்கள் குடும்ப பிரச்னைகள் வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் அதை தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள். மாணவர்களே! கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் கடைசி வரிசையில் உட்கார வேண்டாம்.

சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள். தேர்வு நெருங்குகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கன்னிப் பெண்களே! கல்யாணம் கூடி வரும். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வியிலும் முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம். கூட்டுத் தொழிலை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.

பெட்ரோ-கெமிக்கல், உணவு வகைகள் ஆதாயம் தரும். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களுடைய திறமை மீது அதிகாரி நம்பிக்கை வைப்பார். இடமாற்றம் சாதகமாக இருக்கும். விவசாயிகளே! பணப்பயிர் மூலமாக ஆதாயமடைவீர்கள். பழுதாகிக் கிடந்த பம்பு செட்டை மாற்றுவீர்கள். கலைத்துறையினரே! சுய விளம்பரத்தை விட்டு விட்டு யதார்த்தமான படைப்புகளை தரப் பாருங்கள். விரைந்து செயல்படுவதால் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 19, 20, 21, 22, 24, 28, 29, 30 பிப்ரவரி 6, 9.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்: கன்னியாகுமரி அம்மனை வெள்ளிக் கிழமையன்று தரிசியுங்கள். தாயை இழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:41 pm

சிம்மம்: வானத்தில் பறந்தாலும் பூமியில் திரியும் கோழியை குறி வைக்கும் பருந்தைப்போல் எப்போதும் லட்சியத்தை விட்டு விலகாதவர்களே! சுதந்திர தாகம் உடைய நீங்கள், அதிகாரத்திற்கு அஞ்ச மாட்டீர்கள். கடந்த ஒரு மாத காலமாக 6ம் வீட்டில் அமர்ந்திருந்த சுக்கிரனும். 5ம் வீட்டில் நின்றிருந்த சூரியனும் உங்களை நிம்மதியில்லாமல் செய்தார்கள். எங்கு சென்றாலும் எதிர்ப்புகளும், இழப்புகளும், ஏமாற்றங்களையும் சந்தித்தீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்காமல் போனது. குடும்பத்திலும் பிரச்னைகள் வந்தது.

ஆனால், அப்படி உங்களை அவஸ்தைப்படுத்திய உங்கள் ராசிநாதன் சூரியன் 6ம் வீட்டில் இந்த மாதம் முழுக்க நீடிப்பதால் சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுக்கிரன் வக்ரமானாலும் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மகனுக்கு இருந்து வந்த கோபம் குறையும். வாகனப்பழுது நீங்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 2ம் வீட்டில் நிற்பதால் பணத் தட்டுப்பாடு அதிகமாகும். யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான் வலுவாக நிற்பதால் உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு, மனை அமையும்.

அரசியல்வாதிகளே! தலைமை உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். மாணவர்களே! உங்களுடைய நினைவாற்றல் கூடும். தேர்வுகளில் மதிப்பெண் அதிகரிக்கும். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். கன்னிப் பெண்களே! காதல் பிரச்னையால் துவண்டிருந்த நீங்கள் தெளிவாவீர்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புது வேலையில் சேருவீர்கள்.

ராகுவும், சனியும் 3ம் வீட்டில் நீடிப்பதால் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். புதிதாக முதலீடுகள் செய்வீர்கள். பெரிய திட்டங்கள் நிறைவேறும். புத்த மதம் பரவியிருக்கும் நாடுகளால் ஆதாயமடைவீர்கள். வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலர் அதிக பரப்பளவுள்ள இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பங்குதாரர்கள் வளைந்து கொடுப்பார்கள். வேலையாட்களும் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் நிலவி வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். கௌரவக் குறைவான சம்பவங்களெல்லாம் நீங்கும். இழந்த மரியாதையை மீண்டும் பெறுவீர்கள். இழந்த சலுகைகளும் கிடைக்கும். இடமாற்றம் திருப்திகரமாக இருக்கும். புது வேலைக்கும் முயற்சி செய்வீர்கள். புது வேலையும் சாதகமாக அமையும். விவசாயிகளே! கரும்பு மற்றும் மரப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். நிலத்தகராறு சுமுகமாகும். கலைத்து றையினரே! முடங்கிக் கிடந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். அதிரடித் திட்டங்கள் தீட்டி அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 14, 22, 23, 24, 25, 30, 31 பிப்ரவரி 1, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 3, 4 மற்றும் 5ந் தேதி காலை 10 மணி வரை எதிர்பார்த்தவை தாமதமாக முடியும்.

பரிகாரம்: சங்கரன்கோவிலில் அருளும் கோமதி அம்பிகையை தரிசித்து வாருங்கள். தந்தை இழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:41 pm

கன்னி: எதிர்மறை எண்ணங்களுடன் வருபவர்களை ஆற்றுப் படுத்தி நேர்வழியில் கொண்டு செல்பவர்களே! பனியா, வெயிலா என்று பார்க்காமல் என்கடன் பணி செய்து கிடப்பதே என்று இடைவிடாமல் உழைப் பவர்களே! உங்களின் தன, பாக்யாதிபதியும், பிரபல யோகாதிபதியுமான சுக்கிரன் வக்ரமாக இருந்தாலும் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. பழைய பிரச்னைகள், சிக்கல்களை தீர்க்க வழி கிடைக்கும். ராசியிலேயே செவ்வாய் நிற்பதால் ரத்தத்தில் இரும்புச் சத்து குறையும். நோய் எதிர்ப்பு சக்தியும் உடலில் குறையும்.

சூரியன் 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து கவலைகள் வந்துபோகும். ஆனால், புதன் 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். கேது 8ல் மறைந்திரு ப்பதால் பயணங்கள் அதிகமாகும். கனவுத் தொல்லையும் வந்துபோகும். தெரிந்தே சிலரிடம் ஏமாறுவீர்கள். சந்தேகத்தாலும், பழைய பிரச்னைகளாலும் கணவன்-மனைவிக்குள் பிரிவு வரக்கூடும். பிள்ளைகள் முன்னிலையில் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்.

அரசியல்வாதிகளே! மக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கட்சித் தலைமையும் உங்களுடைய சாதனைகளை அங்கீகரிக்கும். கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மாணவர்களே! டி.வி. பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் எல்லாம் படித்து முடித்து விட்டோம் என்று நினைக்காதீர்கள். மறதி அதிகமாகும். பாடங்களின் கடினமான பகுதிகளை எழுதிப் பார்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேறுவீர்கள். திருமண விஷயத்தில் இப்போது அவசரம் வேண்டாம்.

வெளிமாநிலம், மாவட்டத்தில் வேலை கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராகுங்கள். வியாபாரத்தில் ரியல் எஸ்டேட், இரும்பு, வாகனம், துரித உணவுகளால் லாபமடைவீர்கள். பழைய பாக்கிகளும் ஓரளவு வசூலாகும். கோபப்பட்ட பங்குதாரர் அனுசரணையாக நடந்து கொள்வார். கடை வாடகை அதிகமாகிக் கொண்டே போகிறதே கடன் ஏதாவது வாங்கி சொந்த இடம் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வருவீர்கள். வேலையாட்களின் விடுப்பால் நீங்கள் இறங்கி வேலை செய்ய வேண்டியது வரும். உத்யோகத்தில் குரு 10ல் தொடர்வதால் ஒரு நிலையற்றபோக்கு காணப்படும்.

விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். ஆனாலும், சுக்கிரன் 10ம் வீட்டை பார்த்துக் கொண்டிருப்பதால் மேலதிகாரியில் ஒருவர் உங்களை எதிர்த்தாலும் மற்றொருவர் உங்களை ஆதரிப்பார். சக ஊழியர்களும் உங்களுடைய சங்கடங்களை புரிந்துகொண்டு உதவுவார்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லையால் மகசூல் குறையும். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே! சம்பளபாக்கி கைக்கு வரும். சக கலைஞர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும். விரைந்து செயல்பட்டு வெற்றிகளை வசமாக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 14, 15, 16, 17, 24, 25, 26, 27, 29 பிப்ரவரி 3, 4, 11, 12

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 5ந் தேதி காலை 10 மணி முதல் 6 மற்றும் 7ந் தேதி மாலை 5 மணி வரை பயணங்களின்போது கவனம் தேவை.

பரிகாரம்: கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் நரசிங்கம்பேட்டை எனும் தலத்தில் நரசிம்மரால் பூஜிக்கப்பட்ட சுயம்புநாதரை தரிசித்துவிட்டு வாருங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:42 pm

துலாம்: யார்க்கும் அஞ்சாமல் அடிமனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே செய்து சாதிப்பவர்களே! மனசாட்சியை முக்கிய சாட்சியாக நினைப் பவர்களே! மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்களே! உங்களு டைய ராசிக்கு 9ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியை பார்த்துக் கொண்டிருப் பதால் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி காணும் சக்தி கிடைக்கும். ஏழரைச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். என்றாலும் ராகுவும் ராசிக்குள் நிற்பதால் அவ்வப்போது குழம்புவீர்கள்.

கோபப்படுவீர்கள். தள்ளிப்போன வாய்ப்புகளை நினைத்து சங்கடப்படுவீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் வக்ரமாகி 3ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்புகள் வரும். எல்லோரும் உங்களை குறை கூறுவார்கள். உங்களின் பாக்யாதிபதியான புதன் 4ம் வீட்டில் வலுவாக நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்பிருக்கிறது. பாதகாதிபதியான சூரியன் 4ம் வீட்டில் நிற்பதால் தாயாருடன் மனத்தாங்கல் வரும். செவ்வாய் 12ல் மறைந்திருப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளால் பணப் பற்றாக்குறை ஏற்படும்.

அரசியல்வாதிகளே! செல்வாக்கு கூடும். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமாவீர்கள். எதிர்க் கட்சியினரை உங்களின் சாதூர்யமான பேச்சால் மடக்குவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழடைவீர்கள். மாணவர்களே! கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களை தவிர்த்து விடுங்கள். டி.வி. பார்க்கும் நேரத்தை குறையுங்கள். பெற்றோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். காதல் விவகாரத்தில் தெளிவு பிறக்கும். போட்டித் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வரன் அமையும். வியாபாரம் சூடுபிடிக்கும். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புது வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்களின் புதிய முடிவுகளை வரவேற்பார்கள். அரசாங்கத்தாலும் வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, மருந்து வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

ஆனால், ஜென்மச் சனி நடைபெறுவதால் எதிர்ப்புகளும் ஒருபக்கம் இருந்து கொண்டேயிருக்கும். குரு சாதகமாக இருப்பதால் அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் அல்லது வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். விவசாயிகளே! பூச்சித் தொல்லையை கட்டுப்படுத்துவீர்கள். தண்ணீர் வசதி பெருகும். கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகளால் உற்சாகமடைவீர்கள். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். காத் திருந்து காய் நகர்த்தும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 17, 18, 19, 20, 26, 27, 28, 29 பிப்ரவரி 3, 4, 5, 6.

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 7ந் தேதி மாலை 5 மணி முதல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இனந்தெரியாத கவலைகள் வந்துபோகும்.

பரிகாரம்: திண்டிவனம் எனும் தலத்தில் அருள்பாலிக்கும் திந்திரிணீஸ்வரரை தரிசித்து வாருங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று இய ன்றளவு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:42 pm

விருச்சிகம்: விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பிக்கையுடன் போராடி முதலிடத்தைப் பிடிப்பவர்களே! பிறரை மகிழ்வித்து மகிழ்பவர்களே! மனித நேயம் உள்ளவர்களே! நெருக்கடி நேரத்திலும் பதட்டப்படாதவர்களே! 3ம் வீட்டில் முடங்கிக் கிடந்த சுக்கிரன் வக்ரமாகி இந்த மாதம் முழுக்க உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பணப் பற்றாக்குறை நீங்கும். எதிர்பாராத வகையில் பணம் வரும். கடந்த ஒருமாத காலமாக 2ல் அமர்ந்து குடும்பத்தில் குழப்பங்களையும், பணப் பற்றாக்குறையையும், பார்வைக் கோளாறையும் கொடுத்து வந்த சூரியன் இந்த மாதம் முழுக்க 3ம் வீட்டில் அமர்வதால் தைரியம் கூடும்.

தடுமாற்றம் நீங்கும். இரண்டு, மூன்று முறை முயன்று முடியாத காரியங்களெல்லாம் முதல் முயற்சியிலேயே முடியும். வேலைதேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால் பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களுடைய தன-பூர்வ புண்யாதிபதியான குரு 8ல் மறைந்திருப் பதால் திடீர் செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற பழமையான புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்தி பிரார்த்தனையை நல்ல விதத்தில் முடிப்பீர்கள்.

ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் தொடர்வதால் தன்னம்பிக்கை பெருகும். சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். அரசியல்வாதிகளே! பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகாக்கள் மத்தியில் மரியாதை கூடும். மாவட்டப் பொறுப்புகளை கூடுதலாக நீங்கள் பார்க்க வேண்டி வரும். கட்சித் தலைமைக்கும் நெருக்கமாவீர்கள். மாணவர்களே! உங்களுடைய படைப்புத் திறன் அதிகரிக்கும். மந்தம், மறதி விலகும். நண்பர்களுடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் முன்னேறுவீர்கள்.

வேலை கிடைக்கும். நேர்முகத் தேர்வு, போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவீர்கள். காதல் கசந்து இனிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். லாபம் அதிகரிக்கும். தள்ளிப்போன புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழ் பெற்ற நிறுவன த்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வீர்கள். வேலையாட்களிடம் நிலவிய கோபம் நீங்கும். நல்ல வேலையாட்கள் வருவார்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் வெளிமாநில வேலையாட்களால் நிம்மதி உண்டாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல் நீங்கும்.

வேலைச்சுமை இருந்தாலும் மற்றொரு பக்கம் உங்கள் உழைப்பிற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். சிலருக்கு திடீர் வெளிநாட்டு வாய்ப்புகளும் கூடி வரும். விவசாயிகளே! ஊடு பயிர், மாற்றுப் பயிர் மூலமாக ஆதாயமடைவீர்கள். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். கலைத்துறையினரே! எதிர்பார்த்து ஏமாந்துபோன வாய்ப்புகள் இப்போது கூடி வரும். வசதி வாய்ப்புகள் தடையில்லாது கூடும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 19, 20, 21, 22, 28, 29, 30 பிப்ரவரி 5, 6.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 14, 15 மற்றும் பிப்ரவரி 10, 11, 12ந் தேதி மதியம் 2 மணி வரை அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: சென்னை - பிராட்வேயில் அமைந்துள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவுக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:42 pm

தனுசு: பூவைப்போல் புன்சிரிப்பும் மெல்லிய மனசும் கொண்ட நீங்கள் சில நேரங்களில் புயலாக சீறிப் பாய்ந்து புரட்சி செய்வீர்கள். ஒற்றுமையே உயர்வு தரும் என்பதை உணர்த்துவீர்கள். ராஜதந்திரிகளான நீங்கள் சமயோஜித புத்தியால் சாதிப்பவர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்திருந்த சூரியன் இப்போது உங்கள் ராசியை விட்டு விலகியதால் முன்கோபம் விலகும். அவசரப்பட்டு கடுமையாகப் பேசினீர்களே இனி சாந்தமாவீர்கள். ஆனாலும் சூரியன் 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கண்வலி வந்து நீங்கும்.

இருசக்கர வாகனத்தை இயக்கும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். 2ம் வீட்டில் அமர்ந்திருந்த சுக்கிரன் வக்ரமாகி உங்கள் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் அழகு, இளமை கூடும். உங்களுடைய ராசிநாதனான குரு ராசியைப் பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் 10ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சமூதாயத்தில் அந்தஸ்து உயரும். குழந்தை இல்லையே என வருந்தியவர்களுக்கு பிள்ளை பாக்யம் கிடைக்கும். வேலைதேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.

முன்பணம் கொடுத்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திர பதிவு செய்வீர்கள். அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சக மாணவர்கள் மதிப்பார்கள். கன்னிப் பெண்களே! உங்களின் நட்பு வட்டம் விரியும். வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வாழ்க்கைத்துணையும் அமையும். பெற்றோரின் பேரன்பில் மகிழ்வீர்கள்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. கடையை விரிவுபடுத்துவீர்கள். புது முதலீடு செய்வீர்கள். புது ஒப்பந்தங்களும் வரும். பழைய நிறுவனங்களை காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த முரண்பாடு நீங்கும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். சனியும், ராகுவும் சாதகமாக இருப்பதால் சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வியாபார சங்கத்தில் பதவிகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்களுடைய ஆளுமைத்திறன் பாராட்டி பேசப்படும்.

உங்களின் கடின உழைப்பை மூத்த அதிகாரிகள் உணர்வார்கள். புது பொறுப்புக்கும், பதவிக்கும் உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். கலைத்துறையினரே! சின்னச் சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். பிரபல கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். விவசாயிகளே! தண்ணீர் பிரச்னை தீரும். பக்கத்து நிலத்தையும் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். பொறுமையோடு சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 14, 15, 21, 22, 23, 24 பிப்ரவரி 1, 2, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 16, 17, 18ந் தேதி மாலை 6 மணி வரை மற்றும் பிப்ரவரி 12ந் தேதி மதியம் 2 மணி முதல் பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும்.

பரிகாரம்: சென்னை, திருவள்ளூர் அருகேயுள்ள தக்கோலம் தட்சிணாமூர்த்தியை தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 9:43 pm

மகரம்: நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன்வைத்த காலை பின் வைக்காமல் முடித்துக் காட்டுபவர்களே! தராதரம் அறிந்து பழகும் சிறந்த நிர்வாகிகளே! அதிகாரப் பதவி வந்தாலும் ஆணவப் படாமல் அடக்கமாக சாதிப் பவர்களே! உங்களின் பாக்யாதிபதி புதன் உங்கள் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் செலவுகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் வக்ரமாகி 12ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள்.

உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் இருக்கும் குரு உங்களை அலைக்கழிப்பார். மனதில் ஒருவிதமான கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சட்டத்திற்குப் புறம்பான வகையில் எந்த உதவிகள் கிடைத்தாலும் அதை நீங்கள் மறுத்துவிடுவது நல்லது. ராசிக்கு 9ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். ஆனால், அவர்களால் செலவுகளும் இருக்கும். தந் தையாரின் உடல்நிலை பாதிக்கும். உங்களுடைய ராசிநாதனான சனிபகவான் ராகுவுடன் சேர்ந்திருந்தாலும் கேந்திரபலம் பெற்று காணப்படுவதால் எதிர்ப்புகள், பிரச்னைகளை சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! எதிர்ப்புகள் ஆங்காங்கே இருக்கும். தொகுதி மக்களிடையே சலசலப்புகளும் வரும். கோபப்படாமல் அமைதியாக மக்களை எதிர்கொள்வது நல்லது. தலைமைக்கு கட்டுப்படுங்கள். மாணவர்களே! சந்தேகத்தை மறைக்காதீர்கள். உடனுக்குடன் வகுப்பாசிரியரிடம் கேட்டு தீர்த்துக் கொள்ளுங்கள். கன்னிப் பெண்களே! நண் பர்களால் மகிழ்ச்சி உண்டு. ஆனால், உயர்கல்வியில் மதிப்பெண் குறையும். எனவே, கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது. வேலை கிடைப்பது கொஞ்சம் தாமதமாகும். காதல் விவகாரங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். விளம்பர யுக்திகளை கையாளு வீர்கள். வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தை அறிந்து கொள்வீர்கள். உணவு, மருந்து, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும். ஆனால், உங்களின் விடாமுயற்சியையும், கடின உழைப்பையும் மூத்த அதிகாரி பாராட்டாவிட்டாலும் அதற்குமேலே இருக்கும் உயரதிகாரி மதிப்பார், உங்களை புரிந்து கொள்வார்.

சக ஊழியர்களுடன் சலசலப்புகள் வரக்கூடும். கலைத்து றையினரே! படைப்புகளை வெளியிடுவதில் தன்மானத்தை யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப்போய் சில வாய்ப்புகளைப் பெற்று படைப்புகளை வெளியிட்டு வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளே! தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வழி பிறக்கும். அடகிலிருக்கும் நகையை மீட்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். புதிய திட்டங்கள் தீட்டி உழைப்பால் உயரும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜனவரி 14, 15, 16, 24, 25, 26, 27 பிப்ரவரி 3, 4, 5, 6, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 18ந் தேதி மாலை 6 மணி முதல் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அருள்பாலிக்கும் வேதாரண்யேஸ்வரரை தரிசித்து வாருங்கள். சொந்த ஊர் கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக