புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
29 Posts - 34%
prajai
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
3 Posts - 4%
Jenila
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
jairam
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
7 Posts - 5%
prajai
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
2 Posts - 1%
viyasan
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_m10 திரவுபதி அம்மன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரவுபதி அம்மன் ஆலயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 1:39 pm


திரவுபதி ஆலயம் திரவுபதியின் கதை :


 திரவுபதி அம்மன் ஆலயம் 7d020d84-0efe-47e5-9876-0d5d59156c9b_S_secvpf

பஞ்சபாண்டவர்களின் மனைவியான திரவுபதி, இவள் தெய்வமானது எப்படி?. பாஞ்சால தேசத்து மன்னன் துருபதன் நல்லாட்சி செய்து வந்தான். இருப்பினும் அவனுக்கு வாரிசு இல்லை. எனவே அவன் தனக்கு வாரிசு வேண்டியும், துரோணரை அழிப்பதற்காகவும் ஒரு பெரிய யாகம் செய்தான். அந்த யாகத்தில் 'துஷ்டத்துய்மன்' என்ற மகனும் திரவுபதியும் தோன்றினார்கள்.

திரவுபதி முற்பிறவியில் நளாயினியாகப் பிறந்தவள். மறுபிறவியில் காசி ராசனுக்கு மகளாப் பிறந்து சிவபெருமானை எண்ணி தவம் மேற்கொண்டாள். அவளது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான் அவள் முன்தோன்றி என்ன வரம் வேண்டும், எனக் கேட்க, அவள் 'பதிம்தேஹி' என தன்னையும் மறந்து ஐந்து முறை கூறினாள்.

சிவபெருமானின் வாக்கினால் துருபத மன்னன் நடத்திய வேள்வித் தீயில் திரவுபதியாக உருக்கொண்டாள். அவள் நடத்திய சுயம்வரத்தில் அர்ச்சுனனை மணந்தாள். பஞ்சபாண்டவர்கள் குந்தியிடம், 'கனி கொண்டு வந்துள்ளோம்' எனக் கூற, குந்தியும் திரும்பிப்பாராது 'பகிர்ந்து உண்ணுங்கள்' எனக் கூறினாள்.

கனிக்குப் பதிலாக திரவுபதி இருப்பதைக் கண்ட குந்தி தேவி பதறினாள். அவள் முன் தோன்றிய நாரதர், 'திரவுபதி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தாள். அந்த தவத்தின் பலனாக ஐந்து சிவகணங்களும் இப்போது அவளுக்கு கணவர்களாக வாய்த்துள்ளனர்' என்று விளக்கினார்.

திரவுபதியும் ஐவரையும் சிவசக்தியாக மணந்து பராசக்தி அரவான்யாக வாழ்ந்தாள். தவிர, பாரதப் போர் நடந்து கொண்டிருந்த போது கண்ணன் பஞ்ச பாண்டவர்களுக்கு திரவுபதி காளியின் வடிவமே என உணர்த்தினார். தருமர் சூதாடி திரவுபதியை இழந்தார். துச்சாதனன் துரியோதனனின் உரை கேட்டு திரவுபதியின் சேலையை துகிலுரிந்தான்.

சினம் கொண்ட திரவுபதி கவுரவர்களை வென்ற பின்னரே தன் கூந்தலை முடித்துக் கொள்வதாக சபதம் செய்தாள். இப்படி தெய்வீக சக்தியாகவும், உதாரணப் பெண்மணியாகவும் வாழ்ந்த திரவுபதிக்கு தமிழ் நாட்டில் பல இடங்களில் ஆலயங்கள் அமைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

அரவான் இப்படிப்பட்ட ஒரு ஆலயம் தான் திருக்கோலக்காவில் உள்ள திரவுபதி ஆலயம். நாகை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே இரண்டு கி.மீ தொலைவில்  உள்ளது இந்த திரவுபதி அம்மன் ஆலயம். திருஞான சம்பந்தர் பொற்றாளம் பெற்ற தலம் திருக்கோலக்கா. இங்குதான் உள்ளது இந்த திரவுபதி அம்மன் ஆலயம்.

அழகிய கண்கவர் ஆலயமாகத் திகழும் இந்த ஆலயத்திற்கு 1995-ம் ஆண்டு குட முழுக்குத் திருவிழா நடை பெற்றது. பழுதடைந்த இந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்து கடந்த 26.5.08-ல் மறுபடியும் குடமுழுக்கு திருவிழாவை நடத்தியுள்ளனர்.

இங்கு கருவறையில் விரித்த கூந்தலுடன் காட்சி அளிக்கிறாள் திரவுபதி. இந்த ஆலயத்தில் வைகாசி மாதத்தில் காப்பு கட்டி ஆண்டு தோறும் திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது.

30 நாட்கள் மகாபாரத உபன்யாசம் நடைபெறுகிறது. திருவிழாவின் கடைசி நாளன்று துரியோதனன் வதமும், திரவுபதி கூந்தல் முடிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர் நடைபெறும் தீமிதித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 1:40 pm


கோவிலின் அமைப்பு :


கோவிலின் உள்ளே நுழைந்ததும் உள்ள மகா மண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இடது புறம் வழிகாட்டி பிள்ளையார் திருமேனியும் வலதுபுறம் கிருஷ்ணன் திருமேனியும் உள்ளன. வலது புறம் தென் திசையைப் பார்த்த நிலையில் துர்க்கையம்மன் சிலை உள்ளது.

அதையடுத்து கோபம் தணிந்து கூந்தல் முடிந்த திரவுபதி தலையில் கிரீடத்துடன் காட்சி தருகிறாள். இடதுபுறம் வடக்கு திசையைப் பார்த்த நிலையில் தலை மட்டும் உள்ள அரவான் சிலை உள்ளது. பொதுவாக திரவுபதி ஆலயங்களில் அரவான் உருவம் இருப்பது வழக்கம்.

யார் இந்த அரவான்?. அர்ச்சுனனுக்கும் உலூபியான நாகக் கன்னிக்கும் பிறந்தவன் தான் அரவான். அரவான் பிறப்பிலேயே 32 லட்சணங்கள் பொருந்தியவன். எதிர் ரோமம் கொண்டவன். துரியோதனன் போரில் வெற்றியை கொள்வது எப்படி என்று ஜோதிடத்தில் வல்லவனான சகாதேவனிடம் கேட்டான்.

அதற்கு சகாதேவன், 'நீ முதலில் மகாகாளிக்கு 32 லட்சணங்களும் எதிர் ரோமம் உடையவனும், அர்ச்சுனனின் மைந்தனுமான அரவானைப் பலியிட்டால் போரில் வெற்றி கொள்ளலாம்' என கூறினான்.

துரியோதனனும் சகுனியின் ஆலோசனையின் பேரில் தந்திரமாக அரவானிடம் சென்று, 'நாங்கள் போரில் வெற்றி பெற வருகின்ற அமாவாசை அன்று நீ எங்களுக்கு நரபலியாகி உதவ வேண்டும்' என்று கேட்க, தனது பெரிய தந்தையின் வார்த்தைகளை தட்ட முடியாது அரவான் சரியென சம்மதித்தான்.

அத்துடன் 'அமாவாசை வரை என் மேனி பின்னமாகாமல் இருந்தால் கண்டிப்பாக வருகிறேன்' என்று உறுதி கூற, துரியோதனனும் மகிழ்வோடு திரும்பினான். அரவான் தன்னைப் பலியிடும்படி பகைவருக்கு வாக்கு கொடுத்துவிட்டதை அறிந்த கண்ணன் அமாவாசைக்கு முன் தினமாகிய சதுர்த்தசி ஆகிய இன்றே அமாவாசை வரட்டும் என்று கூற, சதுர்த்தசி அமாவாசையாக மாறியது.

'இன்று கவுரவர்களுக்கு முன்னே நாம் நரபலி கொடுத்துவிட வேண்டும். இல்லையேல் போர்களத்தில் நாம் அவர்களை வெல்ல முடியாது. 32 லட்சணங்களும் பொருந்திய என்னையோ அல்லது அரவானையோ நரபலி கொடுத்தே ஆக வேண்டும். அதற்கு நான் தயார்' என்று கண்ணன் கூற, அனைவரும் பதறி நின்றனர்.

உடனே அரவான், 'துரியோதனன் கேட்டதால் நான் நரபலிக்கு உடன்பட்டேன். அமாவாசை வந்த பின்பும் அவனைக் காணவில்லை. எனவே உங்களுக்காக பலியாக நான் உடன்படுகிறேன்' என்று கூறியதுடன் மேலும் ஒரு வரம் கேட்டான். 'என்னைப் பலியிட்டாலும் என் தலைக்கு எப்போதும் உயிர் இருக்க வேண்டும்.

அத்துடன் சாகும் முன் ஒரு பெண்ணை நான் மணமுடிக்க அருள வேண்டும்' என்று கண்ணனிடம் வரம் கேட்டான். கண்ணனும் 'அதன்படியே ஆகட்டும்' என்றார். அடுத்த நாள் இறந்து போகக் கூடிய ஒருவரை எந்தப் பெண் மணக்க முன் வருவாள்?. எனவே, கண்ணனே, பெண் உருகொண்டு அரவானை மணந்தார்.

திரவுபதி சொன்னபடி, அரவான் காளியின் முன் முறைப்படி தானே தன் உடலின் உறுப்புகளை அறுத்து பலி கொடுத்தான். தலை துண்டிக்கப்பட்டும் துன்பம் சிறிதும் இல்லாமல் மலர்ந்த முகத் தோடு நின்றான். போர்களத்தில் அரவான் பலியானதும் கண்ணன் விதவைக் கோலம் பூண்டு பின் தன் உண்மை உருவைப் பெற்றார்.

ஆணாகிய கண்ணன் பெண்ணாக மாறியதால் அரவாணிகள் (திருநங்கைகள்) தங்களை கண்ணன் அவதாரம் என்று இன்றும் கருதுகிறார்கள். அரவான் கண்ணனிடம் வரம் பெற்றபடி அரவானின் உடல் மட்டும் அழிய தலை மட்டும் உயிர் பெற்றது.

மறுநாள் துரியோதனன் வந்து அரவானைக் கண்டபோது, அரவானின் தலை அவனுடன் உரையாடியது. 'என் உடல் பின்னமாகாமல் இருந்தால் களபலியிட நான் உடன்படுவேன். ஆனால் இப்போது பின்னமாகி விட்டேன். நேற்றே அமாவாசை என்று கூறி என் தந்தை என்னை காளிக்கு பலியிட்டுவிட்டார்' என்று அரவான் கூற, துரியோதனன் ஏமாற்றத்துடன் திரும்பினான்.

அரவான் தலை காண்பதற்கு முகமூடி போன்ற தலையுடன், நீண்ட அகன்ற மீசையுடன், நீண்ட சிங்க பற்களுடனும், தலையில் நாக கீரிட அமைப்புடனும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உருவத்தை தான் அரவானாகவும் கூத்தாண்ட வராகவும் மக்கள் வழிபடுகின்றனர்.

திரவுபதி கோவில்களில் அரவானின் தலை உருவையும், கூத்தாண்டவர் கோவிலில் அரவானின் முழு உருவையும் வைத்து வழிபடுகின்றனர். தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதில் திரவுபதி அம்மனுக்கு நிகரில்லை என்பது நிஜமே.

மாலைமலர்

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Tue Nov 19, 2013 2:32 pm

30 நாட்கள் மகாபாரத உபன்யாசம் நடைபெறுகிறது. திருவிழாவின் கடைசி நாளன்று துரியோதனன் வதமும், திரவுபதி கூந்தல் முடிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர் நடைபெறும் தீமிதித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
எங்கள் ஊரிலும் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது சிறிய ஊர் என்பதால் 5 வருடங்கல்லு ஒரு முறை திருவிழா நடைபெறும் (அதிக பொருட்செலவில் நடக்கும் திருவிழா என்பதால் 5 வருடங்களுக்கு ஒருமுறைதான் நடை பெரும்). 30 நாட்கள் மகாபாரத உபன்யாசம் நடைபெறுகிறது. திருவிழாவின் கடைசி நாளன்று துரியோதனன் வதமும், திரவுபதி கூந்தல் முடிக்கும் வைபவமும் நடைபெறும்.தினமும் மகாபாரத காட்சிகள் கூத்து கலைஞ்சர்களால் நாடகமாக நடித்து காட்டுவார்கள்,30 நாலும் ஒருனலக்கு ஒரு தலைப்பின் கீழ் உபன்யாசமும் அதையே இரவில் நாடகமாகவும் கிராமமக்கள் புரிந்துகொள்ளும்படி இரண்டும் நடக்கும்
என்னால் இப்போது அந்த நிகழ்சிகளை காண நகரவாழ்க்கையில் வைபிலை என்றாலும் 30 நாளில் ஒருனலவது சென்று பார்த்துவிட்டு வருவேன் என் மகனுக்கு மகாபாரத கதை மற்றும் கதாபாத்திரங்களை சொல்லிகொடுபதர்க்கு உதவியாக இருக்கும் .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 3:21 pm

எந்த ஊர் திரு ரகுராம்!

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Tue Nov 19, 2013 4:37 pm

எனது ஊர் மழுவங்கரனை மேல்மருவத்தூரில் இருந்து 3 கி மீ தொலைவில் உள்ளது நான் இப்போது சென்னையில் வசிக்கிறேன்.
மற்றும் எனது பெயரை இரகுராமன் என்றுதான் எழுதுவேன் ஈகரை நண்பர்களும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்,பெயர்சொல்லில் ர,ல வுக்கு முன்னால் இ போடுவது மரபு இதில் இ சைலென்ட் eg : இராமன் , இலங்கை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக