புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமா என்றொரு அக்கா!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அலுவலக வேலையாகச் சென்னைக்குப் போகிறேன் என்று பெரியப்பாவிடம் சொன்னது தப்பாகப் போய்விட்டது.
"ரமாவைப் போய்ப் பார்த்துவிட்டு வா' என்று சொல்லி விட்டார்.
இன்றைக்கு நான் வளர்ந்து ஆளாகி விட்டேன் என்றாலும் பெரியப்பாவின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேச முடியது. அப்பாவே இன்றுவரை பேசியதில்லை.
பெரியப்பா கிராமத்துக் கூட்டுக் குடும்பத் தலைவர்.
பெரியப்பா என்னைப் புலிப்பால் கொண்டு வரச் சொல்லி இருக்கலாம். கடினமாக இருந்தாலும் செய்து விடலாம். ரமாவைப் போய் பார்ப்பது அதைவிடக் கடினம்.
மனசு கரித்தது.
பஸ்ஸில் ஏறி ஓரத்து சீட்டில் உட்கார்ந்து கையசைத்த போதும் மறக்காமல், "ரமாவைப் பார்த்து விட்டு வா' என்றார்.
"சரி' என்றேன்.
"அட்ரஸ் இருக்கில்லே?'
"டைரியில் குறிச்சி வச்சிருக்கேன்'
"நான் வறேன்'
நகர்ந்தார். பஸ்ஸும்.
சாலையோர மரங்களைப் போல், மனிதர்களைப் போல் மனதும் பின்னோக்கி ஓடியது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. ஸ்டெல்லா டீச்சர் சர்ச்சுக்குப் போன கையோடு வீட்டுக்கு வந்தாள்.
அப்பொழுது நான் பதின்மூன்று வயது பாலு.
"குட்மார்னிங், டீச்சர்'
"உன்னைப் பார்க்கத்தாண்டா வந்தேன். படிக்கிறியா, விளையாடறியா?'
"படிக்கிறேன் டீச்சர்.'
அதற்குள் உள்ளேயிருந்து ரமா வந்தாள்.
"வாங்க... டீச்சர், உட்காருங்க!'
டீச்சரும், ரமாவும் உட்கார்ந்து கொண்டார்கள்.
"எங்கே டீச்சர், இவ்வளவு தூரம்?'
"சர்ச்சுக்குப் போயிட்டு வர்றேன்.. வழியில உங்களையெல்லாம் பார்த்துட்டுப் போகலாமன்னு...'
"ரொம்ப சந்தோஷம். பாலு, உள்ளே போய் காபி கொண்டு வரச் சொல்லு.'
"அதெல்லாம் எதுக்கும்மா?' என்றாள் டீச்சர்.
"பரவாயில்லை. இருக்கட்டும். ரவி எப்படி படிக்கிறான்.'
காபிக்குச் சொல்லிவிட்டு வந்த நான் ஒரு ஓரமாய் நின்றேன்.
"உன் தம்பிகள்லே ரவி ஆவரேஜ்தான்! பாலுதான் இன்டலிஜென்ட்...'
"ரவிதான் என் தம்பி. பாலு எங்க சித்தப்பா பிள்ளை.'
ரமாவின் அந்தப் பதில் என் மனசை அறைந்தது.
டீச்சருக்கும் எப்படியோ இருந்திருக்க வேண்டும். வேறு விஷயங்களைப் பேசி விட்டுப் போய் விட்டார்கள்.
பஸ் ஏர்-ப்ரேக்கில் அதிர்ந்து நின்றது.
பின் மண்டை சீட்டில் மோதி வலித்தது.
நிறைய பேர் என்னைப்போலவே இடித்துக் கொண்டார்கள்.
"நீ சாவறதும் இல்லாம் என்னையும் வம்பில் இழுத்து விட்டுடுவியேடா, கபோதி. சைக்கிள்லே ஏறிட்டேன்னா மண்ல எறங்க மாட்டியோ' என்று திட்டிக் கொண்டே டிரைவர் வண்டியை மீண்டும் ஓட்டினார்.
நிறைய பேர் வலிதாங்க முடியாமல் மண்டையைத் தடவிக் கொண்டு அரற்றினார்கள்.
எனக்கு மண்டை மரத்துப் போய்விட்டது.
அதுவும் ரமாவின் உபயம்தான்!
"டேய் ரவி, தட்டை ஒழுங்கா கழுவணுண்டா. இதோ பாரு, நீ கழுவின தட்டுல சரியாவே பத்து போகலை!'
"உன் வேலையைப் பார்த்துக்கினு போடா'
.........................................
"ரமாவைப் போய்ப் பார்த்துவிட்டு வா' என்று சொல்லி விட்டார்.
இன்றைக்கு நான் வளர்ந்து ஆளாகி விட்டேன் என்றாலும் பெரியப்பாவின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேச முடியது. அப்பாவே இன்றுவரை பேசியதில்லை.
பெரியப்பா கிராமத்துக் கூட்டுக் குடும்பத் தலைவர்.
பெரியப்பா என்னைப் புலிப்பால் கொண்டு வரச் சொல்லி இருக்கலாம். கடினமாக இருந்தாலும் செய்து விடலாம். ரமாவைப் போய் பார்ப்பது அதைவிடக் கடினம்.
மனசு கரித்தது.
பஸ்ஸில் ஏறி ஓரத்து சீட்டில் உட்கார்ந்து கையசைத்த போதும் மறக்காமல், "ரமாவைப் பார்த்து விட்டு வா' என்றார்.
"சரி' என்றேன்.
"அட்ரஸ் இருக்கில்லே?'
"டைரியில் குறிச்சி வச்சிருக்கேன்'
"நான் வறேன்'
நகர்ந்தார். பஸ்ஸும்.
சாலையோர மரங்களைப் போல், மனிதர்களைப் போல் மனதும் பின்னோக்கி ஓடியது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. ஸ்டெல்லா டீச்சர் சர்ச்சுக்குப் போன கையோடு வீட்டுக்கு வந்தாள்.
அப்பொழுது நான் பதின்மூன்று வயது பாலு.
"குட்மார்னிங், டீச்சர்'
"உன்னைப் பார்க்கத்தாண்டா வந்தேன். படிக்கிறியா, விளையாடறியா?'
"படிக்கிறேன் டீச்சர்.'
அதற்குள் உள்ளேயிருந்து ரமா வந்தாள்.
"வாங்க... டீச்சர், உட்காருங்க!'
டீச்சரும், ரமாவும் உட்கார்ந்து கொண்டார்கள்.
"எங்கே டீச்சர், இவ்வளவு தூரம்?'
"சர்ச்சுக்குப் போயிட்டு வர்றேன்.. வழியில உங்களையெல்லாம் பார்த்துட்டுப் போகலாமன்னு...'
"ரொம்ப சந்தோஷம். பாலு, உள்ளே போய் காபி கொண்டு வரச் சொல்லு.'
"அதெல்லாம் எதுக்கும்மா?' என்றாள் டீச்சர்.
"பரவாயில்லை. இருக்கட்டும். ரவி எப்படி படிக்கிறான்.'
காபிக்குச் சொல்லிவிட்டு வந்த நான் ஒரு ஓரமாய் நின்றேன்.
"உன் தம்பிகள்லே ரவி ஆவரேஜ்தான்! பாலுதான் இன்டலிஜென்ட்...'
"ரவிதான் என் தம்பி. பாலு எங்க சித்தப்பா பிள்ளை.'
ரமாவின் அந்தப் பதில் என் மனசை அறைந்தது.
டீச்சருக்கும் எப்படியோ இருந்திருக்க வேண்டும். வேறு விஷயங்களைப் பேசி விட்டுப் போய் விட்டார்கள்.
பஸ் ஏர்-ப்ரேக்கில் அதிர்ந்து நின்றது.
பின் மண்டை சீட்டில் மோதி வலித்தது.
நிறைய பேர் என்னைப்போலவே இடித்துக் கொண்டார்கள்.
"நீ சாவறதும் இல்லாம் என்னையும் வம்பில் இழுத்து விட்டுடுவியேடா, கபோதி. சைக்கிள்லே ஏறிட்டேன்னா மண்ல எறங்க மாட்டியோ' என்று திட்டிக் கொண்டே டிரைவர் வண்டியை மீண்டும் ஓட்டினார்.
நிறைய பேர் வலிதாங்க முடியாமல் மண்டையைத் தடவிக் கொண்டு அரற்றினார்கள்.
எனக்கு மண்டை மரத்துப் போய்விட்டது.
அதுவும் ரமாவின் உபயம்தான்!
"டேய் ரவி, தட்டை ஒழுங்கா கழுவணுண்டா. இதோ பாரு, நீ கழுவின தட்டுல சரியாவே பத்து போகலை!'
"உன் வேலையைப் பார்த்துக்கினு போடா'
.........................................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரவி சுத்த சோம்பேறி. சாப்பிட்ட தட்டைக் கூடச் சரியாகக் கழுவவில்லை. அதனால்தான் சொன்னேன்.
அதுகூட இப்பொழுதென்றால் சொல்லியிருக்க மாட்டேன். சின்ன வயசின் பரபரப்பில் சொல்லி விட்டேன்.
குடும்பத் தூணின் பிள்ளையென்பதை அவனும் அலட்சியமான பதிலில் நிரூபித்து விட்டான்.
விஷயம் அதோடு நின்றிருந்தால் கூட பரவாயில்லை.
எங்கள் பேச்சு ரமாவின் காதில் விழுந்து விட்டது.
உள்ளறையிலிருந்து வந்தாள்.
"டேய் பாலு, உன் தட்டைக் காட்டுடா!'
எனக்கு வியர்த்தது. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தது.
"குடுடா'
பிடுங்கி இப்படியும், அப்படியுமாக திருப்பித் தேடினாள்.
கிடைத்து விட்டது - ஒற்றை பருக்கை.
"ஏண்டா, நீயே தட்டை ஒழுங்கா கழுவலை. நீ என்னடா அவன் தப்பைக் கண்டுபிடிக்கிறது?'
"இல்லேக்கா வந்து.. வந்து... நான் ஒழுங்காதான் கழுவினேன். எப்படியோ ஒரே ஒரு...'
"நங்'கென்று தலையில் இறங்கிய வலி உடம்பு முழுவதும் உறுத்தியது.
பேச்செல்லாம் நின்று போக கண்ணே கரைந்து போக அழுதேன் - துளியும் சத்தமில்லாமல்.
சத்தம் போடக்கூடாதென்பது ரமாவின் கண்டிஷன்.
சத்தமாக அழுதால் நான் ஓயும் வரை அவள் ஓயாமல் குட்டுவாள்.
அவளை இப்பொழுது போய்ப் பார்க்க வேண்டும்.
ரமா வீட்டிலிருந்தவரை இளவரசி மாதிரி இருந்தவள், அவள் வைத்ததுதான் சட்டம்.
பெரியப்பாவின் பிரிய மகள் என்பதால் எவரும் எதிர்க்க மாட்டார்கள்.
தெருவை அடைத்துப் பந்தல் போட்டுத்தான் அவள் திருமணம் நடந்தது.
புகுந்த வீடு போன பிறகு அவளை அவ்வப்பொழுது வீட்டு விசேஷங்களில் பார்த்ததுதான்!
படிப்பை முடித்து வேலைக்குப் போன பிறகு குடும்பத்திலிருந்தே தனித்திருந்ததால் ரமாவைப் பார்க்க வேண்டிய அவசியம் இதுவரை இல்லாமலிருந்தது. இப்பொழுது ஏற்பட்டு விட்டது.
வீட்டை அடைந்தபொழுது வாசலில் நின்றிருந்த ரமாவின் நாத்தனார் என்னைப் பார்த்துவிட்டு சட்டென்று உள்ளே போனாள்.
உள்ளே நுழைந்தேன்.
நகரின் கட்டட நெரிசலில் குறுகிப் போன வீடு, அகலத்தில் ஒடுங்கி இருந்தது.
நடுக்கூடத்தில் உட்கார்ந்திருந்த ரமாவின் மாமியார் கண்ணுக்கு மேலே கையை வைத்து உறுத்துப் பார்த்துக் கொண்டே "யாரது?' என்றாள்.
"நான் பாலு.'
"பாலுன்னா?'
உறவை ஞாபகப்படுத்த வேண்டிய சங்கடத்தில் நான். உள்ளறையிலிருந்து தூக்கிச் செருகிய புடைவையும் துடைத்துக் கொண்ட கையுமா வந்தது... ரமாதான்!
இளைத்து, அழகு குன்றி, கன்னத்தில் கவலைக் குழியுடன் இருந்தாள்.
ரமாவின் கணவர் கைநிறைய சம்பாதிக்கிறவர் தான்!
என்றாலும், பெரிய குடும்பி, தம்பி, தங்கைகளென்று வாழ்க்கையைப் பங்குகொள்ள நிறைய பேர்.
எப்போழுதோ ஒருமுறை பெரியப்பா, "ரமாவை வசதி குறைவா இருந்தாலும் பரவாயில்லேன்னு பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பமாகப் பார்த்துக் கொடுத்திருக்கலாம்' என்று நொந்து கொண்டது இப்பொழுது நினைவு வந்தது.
"வா பாலு'
"யார் ரமா, இந்தத் தம்பி.'
"என் தம்பிதான் அத்தை, பாலு'
"அடடே, இப்பத்தான் ஞாபகம் வருது, உங்க சித்தப்பா பிள்ளை இல்லே.'
"ஆமாம்.'
"உட்காருப்பா.'
உட்கார்ந்து கொண்டேன்.
"ரமா, தம்பிக்குக் காஃபி கொண்டு வா.'
"பாலு காஃபி, டீயெல்லாம் சாப்பிட மாட்டான். ஹார்லிக்ஸ் போட்டு எடுத்துட்டு வரேன்.' - அன்புடன் என் தோளைப் பிடித்து அழுத்தி விட்டுச் சொன்னாள்.
"ஊர்ல எல்லாரும் சௌக்கியமா...?' என்று மாமி சம்பிரதாய விசாரணைகளைத் தொடங்கினாள்.
ரோபோ மாதிரி எதையோ சொல்லிக் கொண்டிருந்தேன்.
மனசெல்லாம் அந்தக் கேள்விதான்!
ரமாவா இவள்... "என் தம்பிதான், அத்தை. பாலு' என்று சொல்பவள் ரமாவா? ஹார்லிக்ஸ் போட்டு எடுத்துட்டு வரேன் என்று பரபரப்பாய்ச் சொல்பவள் ரமாவா?
எப்படி மாறிப் போனாள்?
யோசித்ததில் புகுந்த வீட்டின் அழுத்தங்கள் ரமாவை இப்படி மாற்றியிருக்கும் என்று புரிந்தது.
பட்டை தீட்டினால் வைரம். புடம் போட்டால் தங்கம். அனுபவப்பட்டால்தானே மனிதர்கள்?
ரமாவை இனி அக்கா என்று கூப்பிடும் பொழுது அது வெறும் சம்பிரதாயமாக இருக்காது.
நன்றி - மங்கையர் மலர் - போளூர் ஆர். வனஜா
அதுகூட இப்பொழுதென்றால் சொல்லியிருக்க மாட்டேன். சின்ன வயசின் பரபரப்பில் சொல்லி விட்டேன்.
குடும்பத் தூணின் பிள்ளையென்பதை அவனும் அலட்சியமான பதிலில் நிரூபித்து விட்டான்.
விஷயம் அதோடு நின்றிருந்தால் கூட பரவாயில்லை.
எங்கள் பேச்சு ரமாவின் காதில் விழுந்து விட்டது.
உள்ளறையிலிருந்து வந்தாள்.
"டேய் பாலு, உன் தட்டைக் காட்டுடா!'
எனக்கு வியர்த்தது. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தது.
"குடுடா'
பிடுங்கி இப்படியும், அப்படியுமாக திருப்பித் தேடினாள்.
கிடைத்து விட்டது - ஒற்றை பருக்கை.
"ஏண்டா, நீயே தட்டை ஒழுங்கா கழுவலை. நீ என்னடா அவன் தப்பைக் கண்டுபிடிக்கிறது?'
"இல்லேக்கா வந்து.. வந்து... நான் ஒழுங்காதான் கழுவினேன். எப்படியோ ஒரே ஒரு...'
"நங்'கென்று தலையில் இறங்கிய வலி உடம்பு முழுவதும் உறுத்தியது.
பேச்செல்லாம் நின்று போக கண்ணே கரைந்து போக அழுதேன் - துளியும் சத்தமில்லாமல்.
சத்தம் போடக்கூடாதென்பது ரமாவின் கண்டிஷன்.
சத்தமாக அழுதால் நான் ஓயும் வரை அவள் ஓயாமல் குட்டுவாள்.
அவளை இப்பொழுது போய்ப் பார்க்க வேண்டும்.
ரமா வீட்டிலிருந்தவரை இளவரசி மாதிரி இருந்தவள், அவள் வைத்ததுதான் சட்டம்.
பெரியப்பாவின் பிரிய மகள் என்பதால் எவரும் எதிர்க்க மாட்டார்கள்.
தெருவை அடைத்துப் பந்தல் போட்டுத்தான் அவள் திருமணம் நடந்தது.
புகுந்த வீடு போன பிறகு அவளை அவ்வப்பொழுது வீட்டு விசேஷங்களில் பார்த்ததுதான்!
படிப்பை முடித்து வேலைக்குப் போன பிறகு குடும்பத்திலிருந்தே தனித்திருந்ததால் ரமாவைப் பார்க்க வேண்டிய அவசியம் இதுவரை இல்லாமலிருந்தது. இப்பொழுது ஏற்பட்டு விட்டது.
வீட்டை அடைந்தபொழுது வாசலில் நின்றிருந்த ரமாவின் நாத்தனார் என்னைப் பார்த்துவிட்டு சட்டென்று உள்ளே போனாள்.
உள்ளே நுழைந்தேன்.
நகரின் கட்டட நெரிசலில் குறுகிப் போன வீடு, அகலத்தில் ஒடுங்கி இருந்தது.
நடுக்கூடத்தில் உட்கார்ந்திருந்த ரமாவின் மாமியார் கண்ணுக்கு மேலே கையை வைத்து உறுத்துப் பார்த்துக் கொண்டே "யாரது?' என்றாள்.
"நான் பாலு.'
"பாலுன்னா?'
உறவை ஞாபகப்படுத்த வேண்டிய சங்கடத்தில் நான். உள்ளறையிலிருந்து தூக்கிச் செருகிய புடைவையும் துடைத்துக் கொண்ட கையுமா வந்தது... ரமாதான்!
இளைத்து, அழகு குன்றி, கன்னத்தில் கவலைக் குழியுடன் இருந்தாள்.
ரமாவின் கணவர் கைநிறைய சம்பாதிக்கிறவர் தான்!
என்றாலும், பெரிய குடும்பி, தம்பி, தங்கைகளென்று வாழ்க்கையைப் பங்குகொள்ள நிறைய பேர்.
எப்போழுதோ ஒருமுறை பெரியப்பா, "ரமாவை வசதி குறைவா இருந்தாலும் பரவாயில்லேன்னு பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பமாகப் பார்த்துக் கொடுத்திருக்கலாம்' என்று நொந்து கொண்டது இப்பொழுது நினைவு வந்தது.
"வா பாலு'
"யார் ரமா, இந்தத் தம்பி.'
"என் தம்பிதான் அத்தை, பாலு'
"அடடே, இப்பத்தான் ஞாபகம் வருது, உங்க சித்தப்பா பிள்ளை இல்லே.'
"ஆமாம்.'
"உட்காருப்பா.'
உட்கார்ந்து கொண்டேன்.
"ரமா, தம்பிக்குக் காஃபி கொண்டு வா.'
"பாலு காஃபி, டீயெல்லாம் சாப்பிட மாட்டான். ஹார்லிக்ஸ் போட்டு எடுத்துட்டு வரேன்.' - அன்புடன் என் தோளைப் பிடித்து அழுத்தி விட்டுச் சொன்னாள்.
"ஊர்ல எல்லாரும் சௌக்கியமா...?' என்று மாமி சம்பிரதாய விசாரணைகளைத் தொடங்கினாள்.
ரோபோ மாதிரி எதையோ சொல்லிக் கொண்டிருந்தேன்.
மனசெல்லாம் அந்தக் கேள்விதான்!
ரமாவா இவள்... "என் தம்பிதான், அத்தை. பாலு' என்று சொல்பவள் ரமாவா? ஹார்லிக்ஸ் போட்டு எடுத்துட்டு வரேன் என்று பரபரப்பாய்ச் சொல்பவள் ரமாவா?
எப்படி மாறிப் போனாள்?
யோசித்ததில் புகுந்த வீட்டின் அழுத்தங்கள் ரமாவை இப்படி மாற்றியிருக்கும் என்று புரிந்தது.
பட்டை தீட்டினால் வைரம். புடம் போட்டால் தங்கம். அனுபவப்பட்டால்தானே மனிதர்கள்?
ரமாவை இனி அக்கா என்று கூப்பிடும் பொழுது அது வெறும் சம்பிரதாயமாக இருக்காது.
நன்றி - மங்கையர் மலர் - போளூர் ஆர். வனஜா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|