புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்ச் செல்வங்கள் - சொல்
Page 1 of 1 •
தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் - தினமணி
சொல் - 1
'சொல்' என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. "நெல்' என்பது ஒரு பொருள். சொல் "நெல்' என்னும் பொருள் தருதலைப் புலமையாளரும் கண்டனர்; பொதுமக்களும் கண்டனர்.
நெற்பயிர் கதிர் வாங்குவதற்குக் கருக்கொள்கிறது. அக் கருக்கொண்ட நிலை "சூல்' என்பதாம். நெற்பயிர் சூல் கொண்ட நிலையில், பசும்பாம்பு போல் தோன்றுகிறதாம். உற்றுப் பாருங்கள் உண்மையில் வியப்பு தோன்றும்! என்ன அருமையான உவமை எனப் பாராட்டத் தோன்றும். சூல் முதிர்ந்து கதிர் வெளிப்பட்டுத் தலை நிமிர்ந்து நிற்கிறது! அப்படி நிற்பது பண்பில்லாச் செல்வர் செருக்குப் போல் உள்ளதாம். பின்னர் பால் பிடிக்கிறது நெல்லில்; பால் முதிர்ந்து மணி பிடிக்கிறது. படிப்படியே தலை சாய்கிறது; மணி நன்றாக முற்றிய நிலையில் முழுவதாக வளைகிறது. அது, கல்வியும் பண்பும் நிறைந்த மாந்தரைப் போல் திகழ்கிறது! இவ்வாறு கூறும் நூல் சிந்தாமணி!
மணி முற்றிய கதிருக்கு எதிரேயும், மணி முற்றிய ஒரு கதிர்! காற்று அடித்தலால் இரண்டு கதிர்களும் இணைந்து எழுகின்றன. அக்காட்சி மெய்யடியார் ஒருவரை ஒருவர் கண்டு தலைதாழ்ந்து வணங்குவது போல் உள்ளதாகக் காட்டும் பெரியபுராணமாம் திருத்தொண்டர் புராணம்!
நெல் என்று எதனைச் சொல்வோம்?
பால், மணியாகாமல் கருத்துப் போதல், கருக்காய்! அரை மணியாகி நின்று விட்டது, அரைக்காய்! மணியே இல்லாதது - பொய்யாக நெல்போல் தோன்றுவது, பொய்க்கு (பொக்கு), பதர். பதடி என்பதும் அது.
"பயனில்லாச் சொல்லைச் சொல்பவனைப் பாராட்டுபவனை பயனுள்ள மகன் என்று சொல்லாதே! மக்கள் வகையிலே பிறந்த
பதர் என்று சொல்வாயாக' என்பதைத் திருவள்ளுவர்,
""பயனில் சொல் பாராட்டு வானை மகளெனல்
மக்கட் பதடி எனல்'' என்றார்.
மணி உள்ளதே நெல் என்பது போல், பயனுள்ள சொல்லைச் சொல்பவனே மகன் என்றும், பயனற்ற சொல்லைச் சொல்பவனும் அதைப் பாராட்டுபவனையும் மகனாகத் தோற்றம் தந்தாலும் அவன் மகனாகான்! மக்களில் பதராவன் என்றார். "மகன்' என்றது மகளுக்கும்தான் என்பது இலக்கணம்.
ஒரு நாள் ஒருவருக்குப் பயன் இல்லாமல் வீணாகக் கழிந்தது. அதனை அவர் "பதடி வைகல்' என்றார். அவர்க்குரிய பெயர் காணப்படாமையால், அவர் பாடிய பாடலில் கண்ட "பதடி வைகல்' என்பது "பதடி வைகலார்' என்று பெயரிட்டு வழங்கினர். சங்கச் சான்றோர் அவர்.
மணியுள்ளதே நெல் எனப்படுவது போல், பொருள் உள்ளதே "சொல்' எனத் தமிழர் இலக்கணம் கண்டனர். பொருளில்லாத - காரணம் இல்லாத எந்தச் சொல்லையும் அவர்கள் சொல்லவில்லை. ஆதலால், ""எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே'' என்றார் தொல்காப்பியர்.
தொடர்வோம்...
சொல் - 1
'சொல்' என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. "நெல்' என்பது ஒரு பொருள். சொல் "நெல்' என்னும் பொருள் தருதலைப் புலமையாளரும் கண்டனர்; பொதுமக்களும் கண்டனர்.
நெற்பயிர் கதிர் வாங்குவதற்குக் கருக்கொள்கிறது. அக் கருக்கொண்ட நிலை "சூல்' என்பதாம். நெற்பயிர் சூல் கொண்ட நிலையில், பசும்பாம்பு போல் தோன்றுகிறதாம். உற்றுப் பாருங்கள் உண்மையில் வியப்பு தோன்றும்! என்ன அருமையான உவமை எனப் பாராட்டத் தோன்றும். சூல் முதிர்ந்து கதிர் வெளிப்பட்டுத் தலை நிமிர்ந்து நிற்கிறது! அப்படி நிற்பது பண்பில்லாச் செல்வர் செருக்குப் போல் உள்ளதாம். பின்னர் பால் பிடிக்கிறது நெல்லில்; பால் முதிர்ந்து மணி பிடிக்கிறது. படிப்படியே தலை சாய்கிறது; மணி நன்றாக முற்றிய நிலையில் முழுவதாக வளைகிறது. அது, கல்வியும் பண்பும் நிறைந்த மாந்தரைப் போல் திகழ்கிறது! இவ்வாறு கூறும் நூல் சிந்தாமணி!
மணி முற்றிய கதிருக்கு எதிரேயும், மணி முற்றிய ஒரு கதிர்! காற்று அடித்தலால் இரண்டு கதிர்களும் இணைந்து எழுகின்றன. அக்காட்சி மெய்யடியார் ஒருவரை ஒருவர் கண்டு தலைதாழ்ந்து வணங்குவது போல் உள்ளதாகக் காட்டும் பெரியபுராணமாம் திருத்தொண்டர் புராணம்!
நெல் என்று எதனைச் சொல்வோம்?
பால், மணியாகாமல் கருத்துப் போதல், கருக்காய்! அரை மணியாகி நின்று விட்டது, அரைக்காய்! மணியே இல்லாதது - பொய்யாக நெல்போல் தோன்றுவது, பொய்க்கு (பொக்கு), பதர். பதடி என்பதும் அது.
"பயனில்லாச் சொல்லைச் சொல்பவனைப் பாராட்டுபவனை பயனுள்ள மகன் என்று சொல்லாதே! மக்கள் வகையிலே பிறந்த
பதர் என்று சொல்வாயாக' என்பதைத் திருவள்ளுவர்,
""பயனில் சொல் பாராட்டு வானை மகளெனல்
மக்கட் பதடி எனல்'' என்றார்.
மணி உள்ளதே நெல் என்பது போல், பயனுள்ள சொல்லைச் சொல்பவனே மகன் என்றும், பயனற்ற சொல்லைச் சொல்பவனும் அதைப் பாராட்டுபவனையும் மகனாகத் தோற்றம் தந்தாலும் அவன் மகனாகான்! மக்களில் பதராவன் என்றார். "மகன்' என்றது மகளுக்கும்தான் என்பது இலக்கணம்.
ஒரு நாள் ஒருவருக்குப் பயன் இல்லாமல் வீணாகக் கழிந்தது. அதனை அவர் "பதடி வைகல்' என்றார். அவர்க்குரிய பெயர் காணப்படாமையால், அவர் பாடிய பாடலில் கண்ட "பதடி வைகல்' என்பது "பதடி வைகலார்' என்று பெயரிட்டு வழங்கினர். சங்கச் சான்றோர் அவர்.
மணியுள்ளதே நெல் எனப்படுவது போல், பொருள் உள்ளதே "சொல்' எனத் தமிழர் இலக்கணம் கண்டனர். பொருளில்லாத - காரணம் இல்லாத எந்தச் சொல்லையும் அவர்கள் சொல்லவில்லை. ஆதலால், ""எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே'' என்றார் தொல்காப்பியர்.
தொடர்வோம்...
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சொல் - 2
' சொல்' என்பது "நெல்' எனப் பொருளுடையது என்று கண்டோம். சொல்லாகிய நெல்லின் அரிசியால் ஆக்கப்பட்டது "சொன்றி' என்றனர். பொதுமக்கள் "சோறு' என வழங்கினர். புலமையாளர்களும் சோறு என்பதையும் ஏற்றுக்கொண்டனர்.
யானைக்குத் தந்தம் இருப்பதை நாம் அறிவோம். தந்தம் என்பது அதன் கடைவாயில் அமைந்த கோரைப் பல்லே. யானை போலவே தொல் பழமையான நாளில் பன்றிக்கும் கோரைப் பல் இருந்தது என்று தொல்லியல் ஆய்வாளர் சொல்வர். அதனைப் "பன்றி' என்னும் பெயரே வெளிப்படுத்துகிறது. பல் - பன் - பன்றி. இதனோடு, சொல் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பார்த்தால்,
சொல் - சொன் - சொன்றி என்பது விளங்கும்.
நல் - நன் - நன்றி என்பதையும் காணலாம்.
பாண்டியன் நெடுஞ்செழியன், ""கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று'' என்றான்; வழக்காடிய கண்ணகியாரிடம்! கோறல் - கொல்லுதல். கொல்லுதல் "கோறல்' எனப்பட்டது. "கோறுதல்' என்பதும் அது. கொல் என்பதன் வழியே "கோறு' என்பது போல், சொல் என்பதன் வழியே "சோறு' அமைந்தது.
வரகரிசிச் சோறு. தினையரிசிச் சோறு, குதிரை வாலியரிசிச் சோறு, கம்பரிசிச் சோறு என்பவை வழக்கில் வந்தன. சோறு போல் தோற்றம் தரும் கள்ளி, கற்றாழை ஆகியவற்றின் உள்ளீடாகிய செதும்பு, சோறு எனவும் வழங்கப்பட்டது. கள்ளிச் சோறு, கற்றாழஞ் சோறு என்பவை சோறு போன்ற தோற்றத்தால் ஏற்பட்டவை.
சொல் வழியாக வந்த சொன்றி, சோறு என்பவை இன்று நேற்று வந்தவை அல்ல. நம் பழந்தமிழ் நூல்களில் பல்கால் இடம்பெற்ற சொற்களாகும்.
""நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி''
(பெரும்பாண்-131)
"குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றி''
(மேலது-193)
""பல சொன்றி உண்டு'' (மதுரைக்-212-213)
""புன்புல வரகின் சொன்றி'' (புறம்-197)
""சோறுவாக்கிய கொழுங்கஞ்சி'' (பட்டினப்-44)
""சோறகு குமிசி'' (பெரும்பாண்-366)
""சோறிடு சாலை'' (மதுரைக் -395 நச்.)
""சோறுபடுக்கும் தீ'' (புறம்-20)
""ஏற்றுக உலையே ஆக்குக சோறே'' (புறம்-172)
சொன்றியும் சோறும் பாடு புகழ் பெற்ற பழநாள் சொற்கள் என்பது காண்க!
தொடர்வோம்...
' சொல்' என்பது "நெல்' எனப் பொருளுடையது என்று கண்டோம். சொல்லாகிய நெல்லின் அரிசியால் ஆக்கப்பட்டது "சொன்றி' என்றனர். பொதுமக்கள் "சோறு' என வழங்கினர். புலமையாளர்களும் சோறு என்பதையும் ஏற்றுக்கொண்டனர்.
யானைக்குத் தந்தம் இருப்பதை நாம் அறிவோம். தந்தம் என்பது அதன் கடைவாயில் அமைந்த கோரைப் பல்லே. யானை போலவே தொல் பழமையான நாளில் பன்றிக்கும் கோரைப் பல் இருந்தது என்று தொல்லியல் ஆய்வாளர் சொல்வர். அதனைப் "பன்றி' என்னும் பெயரே வெளிப்படுத்துகிறது. பல் - பன் - பன்றி. இதனோடு, சொல் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பார்த்தால்,
சொல் - சொன் - சொன்றி என்பது விளங்கும்.
நல் - நன் - நன்றி என்பதையும் காணலாம்.
பாண்டியன் நெடுஞ்செழியன், ""கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று'' என்றான்; வழக்காடிய கண்ணகியாரிடம்! கோறல் - கொல்லுதல். கொல்லுதல் "கோறல்' எனப்பட்டது. "கோறுதல்' என்பதும் அது. கொல் என்பதன் வழியே "கோறு' என்பது போல், சொல் என்பதன் வழியே "சோறு' அமைந்தது.
வரகரிசிச் சோறு. தினையரிசிச் சோறு, குதிரை வாலியரிசிச் சோறு, கம்பரிசிச் சோறு என்பவை வழக்கில் வந்தன. சோறு போல் தோற்றம் தரும் கள்ளி, கற்றாழை ஆகியவற்றின் உள்ளீடாகிய செதும்பு, சோறு எனவும் வழங்கப்பட்டது. கள்ளிச் சோறு, கற்றாழஞ் சோறு என்பவை சோறு போன்ற தோற்றத்தால் ஏற்பட்டவை.
சொல் வழியாக வந்த சொன்றி, சோறு என்பவை இன்று நேற்று வந்தவை அல்ல. நம் பழந்தமிழ் நூல்களில் பல்கால் இடம்பெற்ற சொற்களாகும்.
""நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி''
(பெரும்பாண்-131)
"குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றி''
(மேலது-193)
""பல சொன்றி உண்டு'' (மதுரைக்-212-213)
""புன்புல வரகின் சொன்றி'' (புறம்-197)
""சோறுவாக்கிய கொழுங்கஞ்சி'' (பட்டினப்-44)
""சோறகு குமிசி'' (பெரும்பாண்-366)
""சோறிடு சாலை'' (மதுரைக் -395 நச்.)
""சோறுபடுக்கும் தீ'' (புறம்-20)
""ஏற்றுக உலையே ஆக்குக சோறே'' (புறம்-172)
சொன்றியும் சோறும் பாடு புகழ் பெற்ற பழநாள் சொற்கள் என்பது காண்க!
தொடர்வோம்...
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சொல் - 3
சொல்லின் ஆட்சி வழக்கில் எப்படியெல்லாமோ விளங்குகின்றது. ""அவரைப் பார்த்தேன்; வாய் திறந்து ஒரு சொல்கூடச் சொல்லவில்லை. அவ்வளவு செருக்கு'' - என்று பழி சொல்வதில்லையா? இதனால் பண்பாட்டின் சின்னம் சொல் என்பது புலப்படும்.
""நீங்கள் ஒரு சொல் சொன்னாலும் போதும்; கட்டாயம் நடந்துவிடும்'' - என்பதில் சொல்வாக்கின் செல்வாக்குப் புலப்படும்.
""ஒரு சொல் சொல்லி வைக்கவும்; இல்லையானால் நடப்பதே வேறு'' - என்பதில் கண்டிப்பும் எச்சரிப்பும் புலப்படும்.
""ஒரு சொல்லுக்குச் சொன்னேன்'' - என்பதில் சும்மா, ஒரு பேச்சுக்கு என்பது சொல்லின் பொருளாதல் விளங்கும்.
""பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே; பல் உடைபடுவதும் சொல்லாலே'' என்பதில் புகழும் இகழும் தருவது சொல் என்பது விளக்கமாகின்றது.
"சொற்றுணை' என்பது மிக உயர்ந்த துணையாம். பேசாக்குழந்தை எனினும் பேச்சுத் துணையாக விளங்குதல் கண்கூடு. பேச்சுத் துணையும், துயர்த்துணையுமாக இருந்த தோழமையர் பழ நாளில் "உசாத்துணை' என்றும், "அசாத்துணை' என்றும் வழங்கப்பட்டனர். உசாவுதல் - கலந்து பேசுதல்; அசாவுதல் - அயர்வு, சோர்வு.
இறைவனையே சொல் வடிவாகக் கண்டது தமிழ் நெறி. இறைவனைச் சொற்றுணையாகக் கண்டார் நாவுக்கரசர். அவரையே தமிழுலகம் "சொற்கோ', "சொல்லின் வேந்தர்', "நாவரசர்' எனப் பலவாறு கண்டது.
அருணகிரியார் சந்தத்தில் மகிழ்ந்த புலமை உலகம் "வாக்கிற்கு அருணகிரி' என்றது. புதுப் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில் ஒரு பேச்சுத் துணை வேண்டும். கட்டாயம் வேண்டும். அவள் தன்னை ஒத்த அல்லது இளைய வயதினளாகவும் இருக்க வேண்டும். அக்குடும்பத்தின் உறுப்பாகவும் வழிமுறைக் காப்பாகவும் இருத்தல் வேண்டும். அவளே இருபாலும் நலம் சேர்ப்பவளாம். அவள் தன் கணவனின் தங்கையாம். நங்கை என்பாளும் அவள். அதனால், அவளை மக்கள் நாத்துணையாள் (நாத்தினாள்) என்றனர். அது பழந்தமிழ்ச் சொல்லின் சிதைந்த வடிவு. ""நாத்தூண் நங்கை'' என்பார் இளங்கோவடிகள்.
"இறைவன் சொல்லாக இருந்தான்; அவனோடு சொல் இருந்தது' என்பது விவிலியம்.
""இறைவன் சொல்; இறைவி சொல்லின் பொருள்'' என்பது தமிழ் நெறி. சொல் என்பதற்கு வியப்பான ஒரு பொருள் "கள்' என்பது. அதனைச் "சொல் விளம்பி' என்பது, கட்குடியர் சொல்வது. சொல்லக் கூடாதவற்றை யெல்லாம் மதுவைக் குடித்தால் கூறிவிடுவான்! அப்பொருள், காவல் துறைக்கு வாய்த்த அரும் பெரும் பொருள், துப்புத் துலக்க!
--------------*****************----------------
சொல்லின் ஆட்சி வழக்கில் எப்படியெல்லாமோ விளங்குகின்றது. ""அவரைப் பார்த்தேன்; வாய் திறந்து ஒரு சொல்கூடச் சொல்லவில்லை. அவ்வளவு செருக்கு'' - என்று பழி சொல்வதில்லையா? இதனால் பண்பாட்டின் சின்னம் சொல் என்பது புலப்படும்.
""நீங்கள் ஒரு சொல் சொன்னாலும் போதும்; கட்டாயம் நடந்துவிடும்'' - என்பதில் சொல்வாக்கின் செல்வாக்குப் புலப்படும்.
""ஒரு சொல் சொல்லி வைக்கவும்; இல்லையானால் நடப்பதே வேறு'' - என்பதில் கண்டிப்பும் எச்சரிப்பும் புலப்படும்.
""ஒரு சொல்லுக்குச் சொன்னேன்'' - என்பதில் சும்மா, ஒரு பேச்சுக்கு என்பது சொல்லின் பொருளாதல் விளங்கும்.
""பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே; பல் உடைபடுவதும் சொல்லாலே'' என்பதில் புகழும் இகழும் தருவது சொல் என்பது விளக்கமாகின்றது.
"சொற்றுணை' என்பது மிக உயர்ந்த துணையாம். பேசாக்குழந்தை எனினும் பேச்சுத் துணையாக விளங்குதல் கண்கூடு. பேச்சுத் துணையும், துயர்த்துணையுமாக இருந்த தோழமையர் பழ நாளில் "உசாத்துணை' என்றும், "அசாத்துணை' என்றும் வழங்கப்பட்டனர். உசாவுதல் - கலந்து பேசுதல்; அசாவுதல் - அயர்வு, சோர்வு.
இறைவனையே சொல் வடிவாகக் கண்டது தமிழ் நெறி. இறைவனைச் சொற்றுணையாகக் கண்டார் நாவுக்கரசர். அவரையே தமிழுலகம் "சொற்கோ', "சொல்லின் வேந்தர்', "நாவரசர்' எனப் பலவாறு கண்டது.
அருணகிரியார் சந்தத்தில் மகிழ்ந்த புலமை உலகம் "வாக்கிற்கு அருணகிரி' என்றது. புதுப் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில் ஒரு பேச்சுத் துணை வேண்டும். கட்டாயம் வேண்டும். அவள் தன்னை ஒத்த அல்லது இளைய வயதினளாகவும் இருக்க வேண்டும். அக்குடும்பத்தின் உறுப்பாகவும் வழிமுறைக் காப்பாகவும் இருத்தல் வேண்டும். அவளே இருபாலும் நலம் சேர்ப்பவளாம். அவள் தன் கணவனின் தங்கையாம். நங்கை என்பாளும் அவள். அதனால், அவளை மக்கள் நாத்துணையாள் (நாத்தினாள்) என்றனர். அது பழந்தமிழ்ச் சொல்லின் சிதைந்த வடிவு. ""நாத்தூண் நங்கை'' என்பார் இளங்கோவடிகள்.
"இறைவன் சொல்லாக இருந்தான்; அவனோடு சொல் இருந்தது' என்பது விவிலியம்.
""இறைவன் சொல்; இறைவி சொல்லின் பொருள்'' என்பது தமிழ் நெறி. சொல் என்பதற்கு வியப்பான ஒரு பொருள் "கள்' என்பது. அதனைச் "சொல் விளம்பி' என்பது, கட்குடியர் சொல்வது. சொல்லக் கூடாதவற்றை யெல்லாம் மதுவைக் குடித்தால் கூறிவிடுவான்! அப்பொருள், காவல் துறைக்கு வாய்த்த அரும் பெரும் பொருள், துப்புத் துலக்க!
--------------*****************----------------
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|