புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_m10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10 
64 Posts - 50%
heezulia
பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_m10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_m10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_m10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_m10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_m10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_m10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_m10பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 12:08 pm


‘மோடியை முன்னிறுத்தியுள்ளதால், இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு, 200 சீட்டு களுக்கு மேல் கிடைக்கும். காங்கிரஸ் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும்’ என, பத்திரிகையாளர் சோ தெரிவித்தார்.

அதிரடி சந்திப்புகள் மூலம், தமிழக அரசியலில் திடீர் திருப்பங்களுக்கு காரணகர்த்தாவாக இருப்பவர் சோ. சமீபத்திய அவரது சந்திப்பு, முதல்வர் ஜெயலலிதாவுடன் நடந்தது.

அது ஏற்படுத்திய விவாதமும், பரபரப்பும் ஓயாத நிலையில், `தினமலர்' நாளிதழுக்கு நேற்று அவர் அளித்த சிறப்பு பேட்டி:

மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் என்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக, 2009ல் இருந்தே நான் இதை வற்புறுத்தி வருகிறேன். பல முறை எழுதியும், பேசியும் இருக்கிறேன். ‘எலக்சன் இஷ்யூ, எலக்சன் இஷ்யூ... என்று சொல்கின்றனர்.மோடி வந்தால், அவர் தான் இஷ்யூ’ என, எழுதினேன்.போலி மதச்சார்பின்மை பற்றி பேசி, ஓட்டு வாங்குவதற்காக, மதச்சார்பற்றவர் என்ற வேஷம் போடுபவர்கள் தான், மோடி வரக்கூடாது என, பிரச்னையை பெரிதாக்குகின்றனர்.ஏன் மோடி வரக் கூடாது என்று இவர்கள் சொல்கின்றனர் என்ற கேள்வி எழும். அது பா.ஜ.,வுக்கு மிகவும் சாதகமாக அமையும். இந்த கருத்தை நான், எங்கள் பத்திரிகையின், இரண்டு ஆண்டு விழாக்களில் பேசியிருக்கிறேன்.

காங்கிரஸ் தரப்பில், அடுத்த தலைமையாக, ராகுலை முன்னிலைப்படுத்துகின்றனர். மோடி – ராகுல் ஒப்பிட்டால் யார் சிறந்தவர்?

ஒப்பிடுவதற்கு விஷயமே இல்லை. நிர்வாகத் திறன், உழைப்பு, ஊழலற்றத்தன்மை, துணிவு, பேச்சுத் திறன் என, பல முகங்களை கொண்ட மோடியுடன், இவற்றில் எதுவுமே இல்லாத ராகுலை எப்படி ஒப்பிடுவது. சம்பந்தமே இல்லாமல், இரண்டு பேரையும் ஒப்பிடுவது போல் ஆகி விடும்.

மோடி பங்கேற்ற திருச்சி மாநாட்டில், கட்டணம் கொடுத்து ஆன்–லைனில் முன்பதிவு செய்து கலந்து கொண்டிருக்கின்றனரே, அது பற்றி?

இந்தளவுக்கு பணம் கொடுத்து, பெரும்பாலான மக்கள் வருகின்றனர் என்பது பெரிய விஷயம். பணம் கொடுத்து, இப்படி பொதுக் கூட்டத்துக்கு வருவதன் மூலம், மக்களுக்கு ஒரு ஈடுபாடு உண்டாகும். பொதுக் கூட்டத்தை விடுங்கள்; நேற்று மும்பை விமான நிலையத்தில், மோடியை வரவேற்க வந்த கூட்டத்தை, ‘டிவி’யில் காட்டினர்; எவ்வளவு கூட்டம்!

திருச்சி கூட்டத்தில் மோடி பேச்சு எடுபடாமல் போய் விட்டதாக, ஒரு தரப்பில் குறை சொல்லப்படுகிறதே?

எனக்கு இந்தி தெரியாது. ஆனால், அவர் பேசிய விதமும், ஆவேசமும், அதற்கான மொழியாக்கமும் அவரது பேச்சில் விஷயம் இருப்பதை காட்டியது.

மத்திய அரசின் குறைகளை அவர் எடுத்துச் சொன்ன விதத்தில், அவரது அனுபவமும் திறமையும் பளிச்சிட்டது.

தமிழக விவகாரங்கள் பற்றி பேசாதது, ஒரு குறை தானே?

வேறு எங்கும் அவர் மாநில அரசியல் பேசியதாக தெரியவில்லையே. டில்லியில் மட்டும், ஷீலா தீட்ஷித் அரசை பற்றி ஓரிரு வார்த்தை பேசிஇருக்கிறார்; அதுவும் பெரிதாக இல்லை.தேசிய பிரச்னைகளில் மட்டுமே அவர் கவனம் செலுத்துகிறார் என, கருதுகிறேன்.




பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 12:10 pm


யோசனை சொல்வதில்லை:

சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதாவை நீங்கள் சந்தித்தீர்கள். மோடியின் தூதராக போய் பார்த்ததாக, வெளியில் பேசப்படுகிறதே?

மோடியின் தூதராக போனதாக, நீங்கள்தான் சொல்கிறீர்கள். நான் யார் தூதரும் அல்ல; யாருக்கும் தூது போகவும் இல்லை. மோடி ஒன்றும் ஜெயலலிதாவிடம் தூது போகும்படி சொல்லவும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவும், மோடி பற்றி பேச வேண்டும் என்று, என்னை அழைக்கவும் இல்லை.நானும், முதல்வரும் அடிக்கடி இல்லாவிட்டாலும், அவ்வப்போது சந்திப்பது உண்டு; அதுபோன்ற சந்திப்பு தான் அது.

பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்வது பற்றி ஆலோசனை சொன்னதாக தகவல்...

நீங்கள் நினைப்பது போல், நான் அவர்களுக்கு யோசனை சொல்வது கிடையாது. அவர்களுக்கு அது தேவையும் கிடையாது. அதற்கு, என்னை விட திறமை, அறிவு, அனுபவம் பெற்ற அதிகாரிகள் நிறைய பேர் இருக்கின்றனர்.

மோடி என்றதும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதாக பேசப்படுகிறதே?

யார் எதிர்பார்த்தது; பத்திரிகைகள் தான் எதிர்பார்த்தன. கூட்டணி ஏற்படுவதற்கான சூழ்நிலையே வரவில்லையே. எந்த கட்சியும் கூட்டணி பற்றி இன்னும் தீர்மானம் செய்யவில்லையே. இங்கு மட்டுமல்ல; எந்த மாநிலத்திலும் கூட்டணி முடிவாகவில்லை.ஆனால், இதுபோன்ற யூகங்களை கிளப்பி விடுகின்றனர்.

அப்படியானால், அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணிக்கு, 'சான்ஸ்' இருக்கிறதா?

எந்த கட்சியும் கூட்டணி பற்றி முடிவு செய்யாதபோது, இன்னும் அதற்கான சான்ஸ் இருப்பதாகவே கருதுகிறேன்.

தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் மூன்றாவது அணி அமையலாம் என்ற பேச்சு அடிபடுகிறதே?

அது, அந்த அணி எப்படி அமைகிறது என்பதை பொறுத்தது. மூன்றாவது அணி எப்போதுமே, முதல் அணியாக வந்ததில்லை.

அப்படி அமைந்தால் எப்படி இருக்கும்?

மோடி எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்; பா.ஜ.,வுக்கு எந்தளவுக்கு ஆதரவு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.நிச்சயம் தேசிய அளவில் மோடிக்கு வரவேற்பு இருக்கிறது. அது தமிழ்நாட்டில் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.சில மாநிலங்களில் மோடிக்கு ஆதரவுஅதிகம் இருக்கலாம்; சிலவற்றில் குறைவாக இருக்கலாம். கூட்டணி சேர்வதற்கு முன், இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தி.மு.க.,எந்தப்பக்கம்? தி.மு.க.,வும் பா.ஜ., பக்கம் போக வாய்ப்பிருக்கிறதா?

இதுவரை எந்த கூட்டணி என்பதை முடிவு செய்யவில்லை என்று கருணாநிதியும் சொல்லி இருக்கிறாரே? கருணாநிதி, பா.ஜ., பக்கம் போக மாட்டார் என்றே நம்புகிறேன். பா.ஜ.,வும் அதை விரும்பாது என்று, நினைக்கிறேன். காங்கிரசுடன் போகும் நிலைமையே அவருக்கு ஏற்படும். அதுமட்டுமல்ல; வேறு சில கட்சிகளுடன் கூட்டு சேரும் வாய்ப்பும் கருணாநிதிக்கு இருக்கிறது.

இந்த தேர்தலில் தேசிய அளவில், காங்கிரசுக்கு எந்தளவுக்கு ஆதரவு கிடைக்கும்?

தமிழகத்தில் காங்கிரசுக்கு எந்தளவுக்கு ஆதரவு இருக்கிறதோ, அதே அளவுக்கு தான் தேசிய அளவிலும் கிடைக்கும். இங்கே, நான்காவது இடம் தான் கிடைக்கும். தேசிய அளவிலும், நான்காம் இடத்துக்கு தள்ளப்படலாம். மூன்றாவது இடத்துக்கு அந்த கட்சி முன்னேறினால், அதுவே அக்கட்சிக்கு பெரிய வெற்றியாக இருக்கும்.

அப்படியென்றால், இரண்டாவது இடம் யாருக்கு?

மாநில கட்சிகளுக்கு கிடைக்கலாம்.




பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 12:11 pm


ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெறும். டில்லியில் ஆம் ஆத்மி கட்சியினால், ஓரளவுக்கு ஓட்டுகள் பிரியலாம். பத்திரிகைகள் சொல்வதுபோல், பெரிய சக்தியாக, அந்த கட்சி வராது.

இந்த முடிவுகள், லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்குமா?

நிச்சயமாக எதிரொலிக்கும்

.தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சியை பிடிக்க, மோடி பிரசாரம் கை கொடுக்குமா?

அதை இப்போது சொல்ல முடியாது. எப்படியும் 200 சீட்டுகளுக்கு மேல் கிடைக்கும்.

ஜெயலலிதா ஆசை:

ஒவ்வொரு தேர்தலிலும், உங்களது, 'ரோல்' கண்டிப்பாக இருக்கும். இந்த முறை என்ன, 'ரோல்'?

ஒவ்வொரு முறையும் என்று சொல்ல முடியாது; சில முறை எனது பங்களிப்பு இருந்திருந்தாலும், இந்த முறை தேறுமா என்பது தெரியவில்லை. கட்சிகளே முனைப்பு காட்டாதபோது, நான் என்ன செய்துவிட முடியும்.

ஜெயலலிதாவுக்கும் பிரதமர் ஆசை இருப்பதாக தெரிகிறதே, அதற்கு வாய்ப்பு வருமா?

பா.ஜ.,- காங்கிரஸ் கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்ற முடியாத நிலை வந்தால், மாநில கட்சிகளின் தயவில் ஆட்சி அமைக்கும் முயற்சி நடக்கும். அப்போது வேண்டுமானால், ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு வரலாம். என்னை பொறுத்தவரையில், அதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. மேலும், மோடி ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை பொறுத்து சூழ்நிலை அமையும்.

ஜெயலலிதாவின் பிரதமர் ஆசை நியாயமானதா?

அவருக்கு அந்த ஆசை இருப்பதாக, நீங்கள்தான் சொல்கிறீர்கள். அது, தேர்தல் முடிவுகள் வரும்போது தெரியும். மோடி பிரதமராக வராவிட்டால், அந்த இடத்துக்கு தகுதியானவர் ஜெயலலிதா தான் என்று, எங்கள் பத்திரிகை ஆண்டு விழாவில் நான் பேசியிருக்கிறேன்.

தேசிய அளவில் மூன்றாவது அணி அமைந்து, ஆட்சியை பிடிக்க முடியுமா?

காங்கிரஸ் -- பா.ஜ., அல்லாத கட்சிகள் எல்லாம் சேர்ந்து மூன்றாவது அணி அமைத்து விட முடியாது.

மம்தா – மாயாவதி, சந்திரபாபு நாயுடு – ஜெகன் மோகன் ரெட்டி, ஜெயலலிதா – கருணாநிதி ஆகியோரால் எப்படி ஓரணியில் இடம் பெற முடியும்.

காங்கிரஸ் அரசு மீது குவியும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து?

இதுவரை இவ்வளவு பெரிய ஊழல்கள் நடந்தது இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஊழலில் சாதனை படைத்துள்ளனர். ஊழலை மறைக்க முயல்வது மட்டுமல்ல; ஊழல்வாதிகளை காப்பாற்றுவதிலும் கடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.அதற்காக, சி.பி.ஐ.,- மத்திய தணிக்கை துறையான சி.ஏ.ஜி., போன்ற அமைப்புகளை எல்லாம் பல
வீனப்படுத்தும் நடவடிக்கைகளும் நடக்கின்றன.

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்களை, பதவி பறிப்பில் இருந்து காப்பாற்ற, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து இருக்கிறதே?

சட்ட ரீதியாக அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தண்டனை பெற்றவர், அப்பீல் செய்து, அதில் வெற்றி பெற்று விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்குள், அவரது பதவியை பறித்து, இடைத்தேர்தல் நடத்தி, வேறு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு விடுகிறார் என்றால், பதவி பறிப்புக்கு ஆளானவருக்கு எப்படி நியாயம் கிடைக்கும்.எனவே அவசர சட்டமே அனாவசியமானது அல்ல; ஆனால், அது அவசர அவசரமாக கொண்டு வந்தது தான் அனாவசியம்.

`அந்த சட்டத்தை கிழித்தெறிய வேண்டும்' என, ராகுல் காட்டமாக கூறிஇருக்கிறாரே?

அவர் வேண்டாம் என்று சொன்னதை மீறி, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கும் என, நினைக்கிறேன். அந்த கோபத்தில் அவர் பேசிஇருக்கிறார். ஆனால், கட்சியின் துணை தலைவராக இருப்பவர் ஆவேசமாக பேசியிருக்கக் கூடாது.

இலங்கை தமிழர் பிரச்னை, இந்த தேர்தலில் எதிரொலிக்குமா?

இலங்கை தமிழர் பிரச்னையை முன்வைத்து, மக்கள் எப்போதும் ஓட்டு போட்டது இல்லை. அப்படி செய்திருந்தால், வைகோ தான் முதல்வர் பதவியில் இருந்திருக்க வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர், விஜயகாந்த் பற்றி...?

எதிர்க்கட்சி தலைவர் என்பது சாதாரண விஷயமல்ல. அதில் இருந்து கொண்டு, அவர் தனது கட்சியை வளர்ப்பதாக தெரியவில்லை.இவ்வாறு, சோ கூறினார்.

தினமலர்




பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 04, 2013 1:11 pm

சோ சோ ன்னு பெய்ர மழையில இந்த சோ நனைஞ்சிட்டாரே, காய்ச்சல் ஏதாவது வந்துட போவுது.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Oct 04, 2013 1:12 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி  காங்க்ரஸ்க்கு 4 வது இடமா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 1:13 pm

மாணிக்கம் நடேசன் wrote:சோ சோ ன்னு பெய்ர மழையில இந்த சோ நனைஞ்சிட்டாரே, காய்ச்சல் ஏதாவது வந்துட போவுது.
சோ, சிறந்த அரசியல் ஆய்வாளர்!



பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 04, 2013 5:12 pm

போக போகத் தெரியும்...!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக