புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
74 Posts - 45%
heezulia
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
68 Posts - 41%
mohamed nizamudeen
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
6 Posts - 4%
prajai
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
6 Posts - 4%
jairam
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
2 Posts - 1%
Jenila
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
111 Posts - 51%
ayyasamy ram
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
74 Posts - 34%
mohamed nizamudeen
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
10 Posts - 5%
prajai
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
8 Posts - 4%
Jenila
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
2 Posts - 1%
jairam
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நமக்கும் கடமையுண்டு! Poll_c10நமக்கும் கடமையுண்டு! Poll_m10நமக்கும் கடமையுண்டு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கும் கடமையுண்டு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 13, 2013 9:37 pm

உலகிலுள்ள எல்லா வளர்ச்சி அடைந்த நாடுகளும், தங்களது சரித்திரப் பின்னணியையும், கலாசார அடையாளங்களையும், புராதனச் சின்னங்களையும் பாதுகாத்து, வெளிநாட்டினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டித் தங்களது வரலாற்றுச் சிறப்புகளை நிலைநிறுத்தத் தயங்குவதில்லை. பல ஐரோப்பிய நாடுகளின் புராதனச் சின்னங்கள் ஏழெட்டு நூற்றாண்டுகள் பழமையானவை, அவ்வளவே. சில கோட்டைகளும், மாதா கோவில்களும்தான் அவர்களால் காட்ட முடிகிற சரித்திரச் சான்றுகள். ஆனால், அந்த சரித்திரச் சான்றுகளை அவர்கள் பாதுகாத்துப் பராமரிக்கும் விதமும், அவைகளைப் பற்றிய விவரங்களைப் புத்தகங்களாகவும், சுற்றுலாப் பயணிகள் எடுத்து செல்லும் விதத்திலான நினைவுப் பொருள்களாகவும் விற்பனைச் செய்து பெருமை தட்டிக் கொள்வதும், எந்த அளவுக்கு அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை பறைசாற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

உலகிலேயே மிகப் பழமையான சரித்திரத்தை உடைய நமது இந்தியாவின் நிலைமை மெச்சிக் கொள்ளும்படியாக இல்லை. தென்னிந்தியாவிலுள்ள பல ஆலயங்களையும், அஜந்தா, எல்லோரா குகைச் சிற்பங்களையும், மாமல்லபுரம் குடவரைக் கோவில்களையும், நாம் இன்னும் முழுமையான பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் உள்படுத்தவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவற்றைப் பற்றிய குறிப்புகளும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தரப்படும் கையேடுகளும்கூட கவர்ச்சிகரமாகவும் முறையாகவும் தயாரிக்கப்படவில்லை என்பதை நினைக்கும்போது, எந்த அளவுக்கு நாம் நமது பெருமைகளை உதாசீனப்படுத்துகிறோம் என்பது தெரிகிறது.

இப்படிப்பட்ட நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, மத்திய கணக்குத் தணிக்கை குழு அதிகாரியின் அறிக்கை வெளிவந்திருக்கிறது. இந்தியத் தொல்லியல் துறை பற்றிய தலைமைக் கணக்குத் தணிக்கை குழு அதிகாரியின் அறிக்கை எந்த அளவுக்கு அந்தத் துறை, அரசால் வழங்கும் நிதியை முறைகேடாக வீணாக்குகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

ஏறத்தாழ 5000 ஆண்டு அறியப்பட்ட சரித்திரப் பின்னணியுடைய இந்தியாவில் எண்ணிலடங்காத நினைவுச் சின்னங்களும், பாதுகாத்துப் பராமரிக்கப்பட வேண்டிய சரித்திரச் சான்றுகளும் பரந்து கிடக்கின்றன. அவ்வப்போது அகழ்வாராய்ச்சிகள் மூலம் பல புதிய சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்தியத் தொல்லியல் துறையிடம், அதன் கண்காணிப்பில் எத்தனை நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்கிற தகவல்கூட இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? பல அறிவிக்கப்பட்ட பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள் காணாமல் போயிருக்கின்றன என்றால் அதை என்னவென்று சொல்வது? தலைமைக் கணக்குத் தணிக்கை குழு அதிகாரியின் அறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டுகள் இவை.

பழமையான பல கலைப் பொக்கிஷங்கள், பட்டியலில் காணப்படுகின்றன. ஆனால், களவு போயிருக்கின்றன. சில சரித்திரச் சின்னங்களே காணாமல் போயிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒன்று, அவை ரியல் எஸ்டேட்காரர்களால் கட்டடம் கட்ட இடித்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன அல்லது சரியான பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழுந்து அழிந்திருக்கின்றன. வேடிக்கை என்னவென்றால், இந்தியத் தொல்லியல் துறை, அந்தச் சின்னங்களின் பராமரிப்புக்கான செலவை மட்டும் கணக்கெழுதி வந்திருக்கிறது...!

இல்லாத நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் நிதி ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள். நமது திருமலை நாயக்கர் மகால் போன்ற பல சரித்திரச் சின்னங்கள், போதிய பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் சீரழிந்து வருகின்றன. அதைப் பாதுகாக்க வேண்டிய இந்தியத் தொல்லியல் துறையோ, கவலைப்படாமல் இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறது கணக்குத் தணிக்கை அறிக்கை.

தலைமைக் கணக்குத் தணிக்கை குழு அதிகாரிகளின் அறிக்கையின் முக்கியக் குற்றச்சாட்டு, இந்தியத் தொல்லியல் துறை, சரித்திரச் சின்னங்களைப் பராமரிக்கும் பாதுகாப்புத் திட்டத்தை நவீனப்படுத்தி வகுக்கவில்லை என்பது. காலனிய ஆட்சி வகுத்த பாதையில்தான் இப்போதும் அந்தத் துறை செயல்படுகிறது. மத்திய அரசின் கலாசார அமைச்சகமும் சரி, நமது பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாப்பதிலும், இந்தியத் தொல்லியல் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலும் அக்கறை செலுத்தாமல் இருப்பதுதான் இதன் அடிப்படைக் காரணம்.

பாரம்பரியப் பெருமைகளை, சரித்திரச் சான்றுகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் செய்யும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, நமக்கும் உண்டு. பொதுமக்கள் அக்கறை செலுத்தவோ, கவலைப்படவோ தயாராக இல்லாத நிலையில், அதற்கு ஒதுக்கப்படும் நிதியாதாரங்கள் அதிகாரிகளால் ஒதுக்கப்படுகின்றன. அரசு விழித்துக் கொள்கிறதோ இல்லையோ, நாம் விழித்துக் கொண்டாக வேண்டும். பாரம்பரியச் சின்னங்கள் இந்தியாவின் சொத்து. நமது சொத்து. அவை அழிந்துவிடலாகாது!
நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக