புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_m10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10 
69 Posts - 52%
heezulia
கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_m10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_m10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_m10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_m10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_m10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_m10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_m10கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்.. Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கை சொல்லும் பாடம்...தினமணி தலையங்கம்..


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jul 12, 2013 2:21 pm

உலகத்தையே ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்த அந்தத் துயரச் சம்பவம் முடிந்து 26 நாள்களாகிவிட்டன. வீறுகொண்டு எழுந்த கங்கை சீறிப் பாய்ந்து, கேதார்நாத்திலிருந்து ஹரித்வார் வரையிலுள்ள நமது புனித யாத்திரையைப் பலரின் இறுதி யாத்திரையாக்கிய இயற்கைப் பேரிடர், உலக சரித்திரத்தின் பக்கங்களில் இதுவரை கண்டறியாத பேரழிவாகப் பதிவாகி இருக்கிறது.
கங்கையின் கோர தாண்டவம் எப்பேற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள, அங்கே நேரில்போய்ப் பார்த்தால்தான் தெரியும். இன்னமும்கூட நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்பதைப் பார்த்தால் மட்டும்தான் புரிந்துகொள்ள முடியும்.
சுனாமியின்போதும், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின்போதும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை, தாங்கள் இழந்து நிற்கும் உடமைகளையும், உறவுகளையும் பற்றிய தகவல்களைச் சொல்ல பலர் இருந்தனர். உயிரை இழக்காமல் தப்பியவர்கள் இதயத்தை உலுக்கும் சோகங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. அதற்குக்கூட இடம் வைக்கவில்லை கங்கையின் சீற்றம்.
கேதார்நாத் அவலத்தைச் சுற்றிலுமுள்ள பகுதிகளிலிருந்து சடலங்களை அகற்றும் பணி இன்னும் முடிந்தபாடில்லை. எடுக்க எடுக்க சடலங்கள் வந்துகொண்டே இருப்பதாகக் கூறுகிறார்கள். மழைவேறு பெய்து கொண்டிருப்பதால், நெருங்கவே முடியாத அளவுக்குப் பிண நாற்றம் வேறு. இதற்கிடையில் ராணுவத்தினரும், ராமகிருஷ்ண மடத்தின் தொண்டர்களும், பாபா ராம்தேவின் சீடர்களும் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மனித குலத்தின் சார்பில் நாம் அவர்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்தத் தலையங்கம் எழுதும் இந்த நிமிடம் வரை இன்னும் பல கிராமங்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டரில் உணவுப் பொட்டலங்களும், தண்ணீரும் கிடைப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. அப்படிப்பட்ட பகுதிகள் மட்டுமே நூறுக்கும் மேல் என்கிறார்கள் ராணுவத்தினர்.
உத்தர காசிக்குப் பிறகு சாலைகள் புதிதாகப் போடப்படுகின்றன. பத்ரிநாத், ஸ்ரீநகர், கோவிந்த்காட், கேதார்நாத் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. சாலைகள் எங்கே இருந்தன என்பதைக்கூடக் கண்டறிய முடியாமல் நிலச்சரிவுகள் ஏற்பட்டு விட்டதால், புதிதாகத்தான் சாலைகள் போட்டாக வேண்டும் என்கிற நிலைமை.
ஹரித்வார் வரையிலான கங்கையின் இரு கரைகளிலுமாக வாழ்ந்து வந்த குடும்பங்கள் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் என்று கருதப்படுகிறது. எரிவாயு உருளை நுகர்வோராக 60,000 குடும்பங்கள் இருந்திருக்கின்றன. கங்கையின் இரு கரைகளிலும் உள்ள அந்த ஒன்றரை லட்சம் குடும்பங்களும் இப்போது இல்லை. அங்கே வீடுகள் இருந்ததற்கான சுவடு கூட இல்லை. வீட்டிற்கு நான்கு பேர் என்று எடுத்துக் கொண்டால் மடிந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் உத்தரகண்ட் பேரழிவு பற்றிய நிஜ நிலைமை!
÷சுவாமி சிவானந்தாவின் தெய்வ நெறிக் கழகத்தைச் சேர்ந்த துறவி ஒருவர், "60 ஆண்டுகளுக்கு முன்னால் ரிஷிகேசத்திற்கு நான் இளைஞனாக வந்தபோது இருந்த கங்கையை இப்போது பார்க்கிறேன்' என்று கூறியதன் பின்னால் இருக்கும் உண்மையை உணர முடிகிறது. பல அப்பாவிகள் உயிரிழந்திருக்கிறார்கள்தான். ஆனால் அவர்கள் கங்கையால் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
÷கடந்த 60 ஆண்டுகளாக, கங்கையின் இரு கரைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்த வண்ணம் இருந்திருக்கின்றன. அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லோருமே இந்த ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள். கங்கையை ஆக்கிரமித்து, ஆற்றுப் படுகையில் விடுதிகளும், வணிக வளாகங்களும் கட்டப்பட்டன. அதைப் பார்த்து, அப்பாவிப் பொதுமக்களும் விதிமுறைகளை மீறியும், அனுமதி பெறாமலும் கட்டடங்களை எழுப்பினர். வீடுகள் அமைத்துக் குடியிருக்க முற்பட்டனர். கங்கையும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, இனியும் வாளாவிருந்தால் இவர்கள் என்னை ஓடையாக்கி விடுவார்களோ என்று பயந்து விட்டிருக்கலாம்.
அளவுக்கு மீறி கங்கையின் பொறுமை சோதிக்கப்பட்டபோது, சீறிப் பார்த்தது கங்கை. கங்கையின் இரு கரைகளிலும் இருந்த குடும்பங்கள் கொத்துக் கொத்தாக ஜல சமாதி அடைந்துவிட்டனர். மனசாட்சி என்கிற ஒன்று இருந்தால், அவர்களது மரண ஓலம் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் வாழ்நாள் முழுக்க உறங்கவிடாது!
கங்கையின் கரையில் மட்டுமா ஆக்கிரமிப்புகள்? இந்தியாவிலுள்ள எல்லா நதிகளும் ஓடைகளாக அல்லவா மாறிவிட்டிருக்கின்றன. ஓடைகள் காணாமலே அல்லவா போய்விடுகின்றன. ஏரிகள், குளங்கள் என்று எல்லா நீராதாரங்களும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவே... அங்கே எல்லாம் குடியிருப்புகளை எழுப்பி இருக்கிறோமே...
விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்கள் நிலநடுக்கத்தில் சரிந்து விழுந்தால், பாதிக்கப்படப் போவது அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ, குடியிருப்புகளைக் கட்டிய அல்லது வணிக வளாகங்களின் உரிமையாளர்களான வியாபாரிகளோ அல்ல... அப்பாவிப் பொதுமக்கள்!
இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு, ஏரிகள், குளங்கள் போன்றவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்படக்கூடாதா? விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் எதுவாக இருந்தாலும், யாருடையதாக இருந்தாலும் இடித்து எறியக்கூடாதா?
இயற்கையைச் சீண்டினால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு கங்கையின் சீற்றம். புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 12, 2013 2:57 pm

இயற்கயை நாம் அழிக்க முற்பட்டால் நிச்சயம்
இயற்கை நமை அழித்துவிடும் என்பது நிதர்சனம்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக