ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி

View previous topic View next topic Go down

வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி

Post by சிவா on Mon Mar 23, 2009 3:22 am

ஒரு நாட்டில் தந்திலன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான்.

தந்திலன் செல்வச் செழுமையும், சிறந்த அறிவும், நல்ல தகுதியும் பெற்றவனாக இருந்தான். மக்களிடமும் அவனுக்கு நன்மதிப்பு இருந்தது.

அந்த நாட்டின் மன்னரிடம் நல்ல செல்வாக்கையும், பேராதரவையும் பெற்ற அவன் மன்னருடைய கருவூலத்துக்கும் அதிகாரியாக இருந்தான்.

ஒரு நாள் தந்திலன் தன்னுடைய மகள் திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்தினான்.

திருமணத்துக்கு மன்னரும் - அரசியாரும் முக்கிய விருந்தினராக வந்து சிறப்பித்தனர்.

தந்திலனின் அழைப்பை ஏற்று அரசாங்க அதிகாரிகளும், சிப்பந்திகளும், பொது மக்களும் திருமண விழாவுக்கு திரளாக வந்திருந்தனர்.

திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் அரண்மனையைப் பெருக்கிச் சுத்தப்படுத்தும் பணியாளனான கோரபன் என்பவனும் வந்திருந்தான்.

அவன் தன்னைப் போன்ற சிப்பந்திகளுக்கென ஒதுக்கபட்ட ஆசனத்தில் அமராமல் அமைச்சர்கள் போன்ற அந்தஸ்துமிக்கவர்களுக்காகப் போடப்பட்டிருந்த ஆசனம் ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டான்.

அதைக் கண்ட தந்திலன் கோரபனிடம் சென்று அவனுக்கு உரிய ஆசனத்தில் சென்று அமருமாறு கேட்டுக் கொண்டான்.

கோரபன் தான் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்திருக்க மாட்டேன் என்று வீம்புக்காக அடம் பிடித்தான்.

நியாயமாகப் பல தடவை சொல்லியும் கோரபன் கேட்காததால் தந்திலன் தன் ஏவலாளரை விட்டு பலாத்காரமாக ஆசனத்தைவிட்டுக் கிளப்பி வெளியே துரத்திவிட்டான்.

அந்தக் காட்சியைக் கண்டு திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கைகொட்டிச் சிரிக்கலானார்கள்.

கோரபனுக்கு அவமானமாகப் போய்விட்டது. தன்னைப் பலர் முன்னிலையில் கேவலப் படுத்திய தந்திலனை எவ்விதமாவது பழி வாங்கித் தீருவது என்று மனத்திற்குள் தீர்மானித்து அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மறுநாள் அதிகாலையில் கோரபன் அரண்மனையைப் பெருக்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான்.

மன்னரின் படுக்கை அறையைச் சுத்தம் செய்ய வந்தவன் உள்ளே மன்னன் மட்டும் படுக்கையிலிருந்து எழாமல் அரைத் தூக்கத்திலிருப்பதைக் கவனித்தான்.

படுக்கையறையின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யும் போது மன்னன் காதில் விழும் வகையில் அவன் கீழ்க்கண்டவாறு முனகிக் கொண்டான்.

இந்த தந்திலனை மன்னர் எவ்வளவு தூரம் நம்பி அரண்மனைக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்கிறார். ஆனால் அந்த மூடனோ மன்னருடைய பெருந்தன்மைக்கு இழுக்கு தேடும் விதத்தில் மகாராணியாரை மானபங்கப்படுத்த முயலுகிறான் என்ன கேவலம்.

இந்தச் சொற்கள் மன்னரின் காதில் தெளிவாக விழவே அவர் திடுக்கிட்டு எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டு கோரபனை அழைத்தான்.

கோரபன் வந்து பணிந்து நின்றான்.

இப்போது என்ன சொன்னாய் ? என்று மன்னன் கேட்டான்.

எஜமான் நான் ஒன்றும் சொல்லவில்லையே. நேற்று இரவு சற்று அதிகமாக மது அருந்திவிட்டேன். இன்னும் சரியாக மயக்கம் தெளியவில்லை. ஒரு அரைகுறை மது போதையில் ஏதாவது உளறினேனோ என்னவோ * நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் எசமான் மன்னிக்க வேண்டும் என்று தந்திரமாகக் கூறினான்.

மன்னர் கோரபனை அனுப்பி விட்டார். ஆனால் அவன் சொன்ன விஷயங்கள் அவர் மனத்தைக் குடையத் தொடங்கின.

அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் செல்ல தந்திலனுக்கு மன்னவர் உரிமையளித்திருந்தார். ஆகவே அந்தப்புரத்திற்குச் சென்று தந்திலன் தமது மனைவியைச் சந்திப்பதுகூட சாத்தியந்தான்.

ஏதோ நடக்காமலா கோரபன் அந்தச் தகவலைச் சொல்லியிருக்க முடியும் என்று மன்னர் கொதிப்படைந்தார்.

தந்திலன் மீது அவருக்கு கடுங்கோபம் ஏற்பட்டது. அதே சமயம் தமது மனைவியைப் பற்றியும், அவநம்பிக்கை எண்ணங்கள் அவர் மனத்தில் அலைமோதத் தொடங்கின.

பெண்களை ஒருபோதும் நம்பக்கூடாது என்று முன்னோர் தெரியாமலா சொல்லி வைத்தார்கள்.

பெண்கள் எப்போதும் சஞ்சல சுபாவம் உள்ளவர்கள் தானே.

கணக்கு வழக்கின்றி விறகைப் போட்டுக் கொண்டிருந்தாலும் நெருப்புக்குத் திருப்தி ஏற்படுவது இல்லை. ஆயிரக்கணக்கில் ஆறுகள் சென்று கலந்தாலும் கடலுக்கு நிறைவு ஏற்படாது. கோடிகணக்கில் உயிர்களை அபகரிப்பினும் யமனுடைய மனது நிறைவு பெறுவது இல்லை. இதே போல் எத்தனை ஆடவர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டாலும் பெண்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படாது போலும்.


தன் மனைவி தன்னை மட்டுமே காதலிக்கிறாள் என்று மனப்பூர்வமாக நம்புகின்ற ஒருவனைப் போல முட்டாள் உலகத்தில் இருக்கவே முடியாது.

மன்னர் இவ்வாறெல்லாம் எண்ணியெண்ணி மனம் நொந்து நிம்மதி இழந்தார்.

உடனே தனது காவலர்களை விளித்து இனி தந்திலன் அரண்மனைக்கு வந்தால் அவனை உள்ளே பிரவேசிக்க அனுமதிக்காதீர்கள் என்று உத்தரவு போட்டு விட்டார்.

மறுநாள் காலை வழக்கப்படி தந்திலன் அரண்மனைக்கு வந்தபோது காவலர்கள் அவனை சற்றே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர்.

என்ன காரணம் ? என்று திடுக்கிட்டவனாக தந்திலன் கேட்டான்.

காரணம் எங்களுக்கு தெரியாது. உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார். அவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும் என்று காவலர்கள் கூறி விட்டனர்.

தந்திலன் என்ன யோசித்தும் தாம் மன்னர் மனம் நோகச் செய்த குற்றம் என்ன என்று விளங்கவில்லை.

நாம் என்ன தவறு செய்தோம் என மனக்குழப்பத்தோடு திரும்பத் திரும்ப யோசித்த வண்ணம் அரண்மனை வாசலிலேயே சற்று நேரம் நின்றான்.

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: வம்பை விலைக்கு வாங்கிய அரண்மனை அதிகாரி

Post by சிவா on Mon Mar 23, 2009 3:23 am

அப்போது அந்தப் பக்கமாக வந்த கோரபன் தந்திலனை நோக்கி ஏளனமாக நகைத்து, ஐயோ
பாவம், மன்னர் உங்களை அவமானப்படுத்தி மனம் நோகச் செய்துவிட்டார் போலும் *
ஆமாம் மனம் வேதனையடையத்தான் செய்யும். அன்று திருமண வீட்டிலே பலர்
முன்னிலையிலே என்னை அவமானப்படுத்திய போது கூட என் மனம் எவ்வளவோ
வேதனைப்படத்தான் செய்தது. தலைவிதியே என்று சகித்துக் கொண்டேன்.
நீங்களும் அதே மாதிரி சகித்துக் கொள்ள வேண்டியதுதான் என்றான்.

தந்திலனுக்கு இப்போது தான் விஷயம் பளிச்சென விளங்கியது.

தன்னைப் பழிவாங்குவதற்காக கோரபன் திட்டமிட்டு மன்னரிடம் ஏதோ கலகமூட்டியிருக்கிறான் என்று யூகித்துக் கொண்டான்.

அப்போதுதான் தந்திலனுக்குச் சில உலகியல் உண்மைகள் விளங்கின.

முட்டாளாக இருந்தாலும், இழி குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும், கேவலமான
வேலை செய்பவனாக இருந்தாலும் அரண்மனையில் பணி புரிபவனை அலட்சியம் செய்யக்
கூடாது. அவனையும் மதித்து - அவனுக்கு தக்க மரியாதையைக் கொடுத்தாக
வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மன்னரிடமோ கலகமூட்டி பழி வாங்கி
விடுவார்கள்.

கோரபனை எவ்விதமாவது சரி கட்டினாலொழிய என்மீது மன்னருக்கு இருக்கும் மனக்கசப்பு மாறாது.

இவ்வாறு எண்ணியவாறு தந்திலன் தனது இல்லம் சென்றடைந்தான்.

உடனே தனது பணியாளர்களை அனுப்பி கோரபனை அழைத்து வரச் செய்தான்.

கோரபன் வந்ததும் அவனை வரவேற்று உபசரித்து, கோரபா திருமணத்தன்று உன்னை
அவமானப்படுத்தியது தவறு என் மனத்தில் பட்டது. ஆட்களை விட்டு உன்னைத்
தேடிக்கொண்டு வரச் சொன்னேன். உன்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நடந்து
போனதை மனத்தில் வைத்துக் கொள்ளாதே என்று கூறி தந்திலன் உயர்ந்த ஆடை
அணிகளும், மற்றும் பொன்னும் பொருளுமாக அன்பளிப்பு தந்து அனுப்பி வைத்தான்.

மறுநாள் காலை கோரபன் அரண்மனையில் மன்னரின் படுக்கை அறை பக்கமாகப் பெருக்கி
சுத்தம் செய்துக் கொண்டிருந்தபோது உள்ளே அறைக்குள் படுக்கையில் இருந்த
மன்னர் காதில் விழும் வண்ணம் கீழ்கண்டவாறு முனகினான்.

வர வர மன்னரின் நடவடிக்கைகள் சகிக்கவே முடியவில்லையே. நேற்று மலம்
கழித்துக் கொண்டிருக்கும் அதே சமயம், ஒரு தட்டில் உணவையும் வைத்துக்
கொண்டு சாப்பிட்டாரே * என்ன அசிங்கம் *

மன்னரின் செவியில் கோரபன் சொன்ன சொற்கள் தெளிவாக விழுந்தன.

கோரபனை அழைத்தார்.

கோரபன் அறைக்குள் வந்து அடக்க ஒடுக்கமாக கைகட்டி நின்றான்.

இப்போது ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாயே அது என்ன ? என்று கேட்டார்.

நான் ஏதோ சொன்னேனா ? அப்படி ஒன்றும் இல்லையே. ஒருவேளை நேற்று இரவு சற்று
அதிகமாக மது அருந்திவிட்டேன். மயக்கம் இன்னும் தெளியவில்லை போதை
மயக்கத்தில் ஏதாவது உளறினேனோ என்னவோ என்று சாதுரியமாகப் பதிலளித்தான்.

உண்மையிலேயே மது போதையில்தான் கோபரன் சற்று முன் உளறியிருக்க வேண்டுமென்று மன்னருக்குத் தெளிவாகத் தோன்றியது.

அப்படியானால் அன்றொரு நாள் தந்திலனைப் பற்றியும், தனது மனைவியைப்
பற்றியும் இவன் கூறியவை மது போதை உளறவாகத்தான் இருக்க வேண்டும் என்று
மன்னர் நினைத்தார்.

குடிகாரன் பேச்சை நம்பி அன்பும் பண்பும் போன விஷயங்களைப் பொருட்படுத்த
வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு பழையபடி அவனுக்கு முழு அதிகாரமும் வழங்கி
சிறப்புச் செய்தான்.

தந்திலனும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் பெற்றுத் தனது அலுவல்களை வழக்கம் போலக் கவனிக்கத் தொடங்கினான்.

பெரியோரிடத்தில் நெருக்கமான உறவும், ஆதரவும் கிடைத்துவிட்டது என்பதற்காக யாரையும் கேவலப்படுத்தக்கூடாது

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum