by தாமு on Thu Nov 05, 2009 8:27 am
மூலிகை மருத்துவத்தால் உலகத் தமிழர்களின் நல வாழ்வுக்கு நம் சித்தர்களின் மூலிகை மருத்துவத்தை தொடர்கிறேன், "அதிகாலை. காம் பார்க்க பார்க்க என் நோயெல்லாம் பறந்து போச்சு" என்பதே இனி உலகத் தமிழர்களின் பேச்சு.
எல்லா நோய்க்கும் நான் சொல்லும் மருந்துகள் உலகம் முழுவதும் எங்கும் எளிதில் கிடைக்கும். அதிக இரத்த கொதிப்பு, அரிப்பு, ஆஸ்துமா, இடுப்பு வலி, ஈஸ்னோபிலியா, உடல் நடுக்கம், ஒல்லியான உடல், ஓயாத இதயவலி ஆகியவற்றை நாம் சீரகம், மிளகு, கடுகு, சுக்கு, திப்பிலி, பூனைக்காலி, எலுமிச்சை, வேப்பம்பட்டை, ஓமம், இஞ்சி, பப்பாளி, கருஞ்சீரகம் கொண்டு குணப்படுத்திக் கொள்ளலாம். 1990 முதல் கடந்த இருபது ஆண்டுகளாக பலருக்கும் சொல்லி, குணமான அனுபவ மருந்துகளையே தெரிவிக்கின்றேன்.
அம்மை, இளம்பிள்ளை வாதம் ஆகியவற்றை வராமல் தடுத்து விட்டோம் எனபது ஒரு புறம் இருக்க., சர்க்கரை நோய்கள், இதய நோய்கள், எய்ட்ஸ், மனநோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருப்பது அபாய அறிவிப்பாகும். பாரம்பரியம், உணவுமுறைகள் சுற்றுச்சூழல் பாதிப்பால் வரும் நோய்களுள், சர்க்கரை நோயானது பாரம்பரியத்தால் வருவதாகும். அப்பா, அம்மா, தாத்தா பாட்டி என பாரம்பரியத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர் ஒருபுறம், நவீன ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வெள்ளைச் சீனி என உணவு முறையால் பாதிக்கப்பட்டோர் மறுபுறம்.
கேரளா மாநிலம் போல் கணையக் கற்களால் சர்க்கரைநோய் வந்தோரும் உள்ளனர். காளாஞ்சகப் படை (சோரியாசிஸ்) என்ற செதில் உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டு சர்க்கரைநோய் வந்தோரும் உள்ளனர். பல்வேறு நோய்களுக்கு அதிக அளவில் ரசாயன மருந்துகள் உண்டு அதனால் சர்க்கரைநோய் வந்தவர்கள் உள்ளனர்.
இந்நோய்க்கு தொடர்ந்து ரசாயன மருந்துகளை ஆண்டுக் கணக்கில் உண்ண படிப்படியாக அதிக இரத்தக் கொதிப்பு, வெண்தழும்பு, ஆண்மைக் குறைவு, மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, எலும்புகள் மென்மையாதல், பார்வைக் குறைவு போன்ற பல நோய்கள் வர வாய்ப்புள்ளது. உரிய உணவுக் கட்டுப்பாட்டோடு இருக்க, இந்நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
சித்தர் தேரையர், சொல்லியுள்ள நோயணுகா விதிப்படி நடக்க வேண்டும். நம் அன்றாட உணவில் கசப்பு, துவர்ப்பு, உட்பட ஆறு சுவைகளும் இடம் பெற வேண்டும். வாரம் ஒரு முறை அகத்திக்கீரை, வாழைத் தண்டு சாப்பிட வேண்டும்.
நாம் சாப்பிடும் உணவானது அரை வயிறாகவும், தண்ணீர் கால் பாகமாகவும், வெற்றிடம் கால் பாகமாகவும் இருக்க வேண்டும்.இனிப்புகளை அளவோடு உண்ண வேண்டும். இயற்கை இனிப்பான பனை வெல்லம், பனங்கற்கண்டு, தூள் சர்க்கரை பயன்படுத்த வேண்டும்.
நோய் தடுப்பு :
சர்க்கரைநோய் வராமல் தடுக்க முடியுமா? முடியும், திருவள்ளுவர் நடையில் கூறுவதென்றால்,
"பெடுமருந்து திரிபலா தின்றிட தடுக்கும்
பெடுமருந்து நீரிழிவு புற்றாகும்"
ஆண்டு தோறும் தை முதல் நாள் தொடங்கி நாற்பது நாட்கள் மட்டும் இம்மருந்தை சாப்பிட நீரழிவு நோய் தாக்காமல் தடுத்துக் கொள்ளலாம்.
1. கடுக்காய் தூள் 1 கிராம்
2. நெல்லி முள்ளி வற்றல்தூள் 1 கிராம்
3. தான்றிக்காய் தூள் 1 கிராம்
4. பெடுமருந்து இலைப் பொடி 2 கிராம்
இவைகளை ஒன்றாகக் கலந்து தினசரி மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது போல் பல தடுப்பு மருந்துகளை நம் சித்தர்கள் அன்றே சொல்லியுள்ளார்கள். ஆடி அம்மாவாசையில் மதிய உணவில் சேரும் ஆதண்டை வற்றல் மன நோய்கள் தாக்காமலும், விநாயக சதுர்த்தியில் பூவரச இலையில் வைத்து செய்யும் மோதகம், கொழுக்கட்டையை சாப்பிட தோல் நோய்கள் தாக்காமலும் தடுத்துக் கொள்ளலாம். கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையில் வாழ்பவர்கள் வெப்பத்தினால் ஏற்படும் நோய்களைத் தடுக்க வாரம் இருமுறை எண்ணை குளியல் செய்ய வேண்டும். சளித் தொந்தரவு உள்ளோர் தும்பை பூ தைலம் தடவி இள வெந்நீரில் குளிக்க வேண்டும்.
சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க
1. வெந்தயம் - 300 கிராம்
2. ஓமம் - 30 கிராம்
இவைகளை லேசாக வறுத்து தூளாக்கி தினசரி காலை, மாலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் (5 கிராம்) சாப்பிடவும். அதிக அளவில் சர்கரையுள்ளோர் காலை மாலை ஆவாரம்பூ சுவை நீர் குடிக்கவும்.
மிக அதிக அளவில் சர்க்கரை உள்ளோர் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாகற்காய் சூப் மற்றும் மதிய உணவில் பாகற்காய் சேர்க்கவும். காலை கேழ்வரகு உணவும், மதியம் அரைக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை, குறிஞ்சான் கீரை, கரிசாலைக் கீரை சாதத்தோடு சேர்க்கவும். இரவு கோதுமை உணவு சாப்பிடவும். இரவில் சிறுநீர் அடிக்கடி வருவது கட்டுப்படும், மர்ம உறுப்புகளின் புண் ஆறும்; இரத்தக் குழாய் அடைப்பு தடுக்கப்படும். சுறுசுறுப்பு ஏற்படும்.
வெந்தயம்வேம்பு பஞ்சாங்கம் நாற்பது நாள் சாப்பிட கணையத்திலுள்ள லங்கர்கன் திட்டுகள் புதிப்பிக்கப்பட்டு இன்சுலின் இயற்கையாக சுரக்கும் நிலை ஏற்படும். வேம்பு பஞ்சாங்கம் பொடிக்குள் வாழைப்பழத்தை வைக்க, நாற்பது நாட்களில் வாழைக்காயாக மாறும் அதிசயம் ஏற்படும்.
அடுத்த மருத்துவ குறிப்பின் அதிசயம் "ஆஸ்துமா விரட்டும் விதை"
நன்றி - மருத்துவர் லயன்.க.கோ.மணிவாசகம்